காவியம் படைத்த கனவு நாயகன் கலாம் முதலாண்டு நினைவஞ்சலி….

 

1931: தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவில் அப்துல் கலாம் பிறந்தார்.

gallerye_021857771_1572606

1954: திருச்சி புனித ஜோசப் கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் பட்டம் பெற்றார்.

 

1960: சென்னை எம்.ஐ.டி., கல்லுாரியில் ‘ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்’ பட்டம் பெற்றார்.

 

1960: டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.

 

1969: இஸ்ரோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார்.

 

1980: கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் ரோகிணி செயற்கைக்கோளை,

 

‘எஸ்.எல்.வி.,- 3’ ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவினர். இதன் மூலம்

 

உலகின் பார்வையை இந்தியா மீது திருப்பினார்.

 

1980-90: ஒருங்கிணைந்த ஏவுகணை தயாரிப்பு திட்டத்தின் கீழ், அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

1981: பத்ம பூஷன் விருது பெற்றார்.

 

1990: பத்ம விபூஷன் விருது பெற்றார்.

 

1992 – 99: டி.ஆர்.டி.ஓ., அமைப்பின் செயலராகவும், பிரதமரின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார்.

 

1997: நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது பெற்றார்.

 

1998: பொக்ரான் அணுஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இதன் மூலம் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது.

 

1999: அப்துல் கலாம் எழுதிய அவரது சுயசரிதை புத்தகம் ‘அக்னி சிறகுகள்’

 

ஆங்கிலத்தில் வெளியானது.

1999 – 2001 : பிரதமர் வாஜ்பாயின் முதன்மை அறிவியல் ஆலோசகராக பணியாற்றினார்.

 

2002: நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

 

2007: ஜனாதிபதி பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.

 

2007: திருவனந்தபுரத்தில் இஸ்ரோவால், தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் முதல் வேந்தராக பொறுப்பேற்றார்.

 

2007-15 : ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின், பல்வேறு பல்கலைக்கழங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.

 

2015: மேகாலயாவில் மறைந்தார்.

பொன்மொழிகள்

 

* கனவு காணுங்கள் அவற்றை நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும். என்னால் முடியும்… நம்மால் முடியும்… இந்தியாவால் முடியும் என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

 

* முதல் வெற்றியுடன் ஓய்வு எடுத்து விடாதீர். ஏனெனில் இரண்டாவது முயற்சியில்

 

தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என விமர்சிப்பர்.

 

* மழை வந்தால் பறவைகள் எல்லாம் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும். ஆனால் கழுகு மட்டும் வித்தியாசமாக சிந்தித்து, மேகத்துக்கு மேலே பறந்து மழையில் இருந்து தப்பிக்கும்.

 

* அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமை கிடையாது. ஆனால் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்பு கிடைக்கிறது.

 

* வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.

 

* நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.

 

* உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே பறந்து செல்லுங்கள்.

 

* உன் ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனெனில் கையே இல்லாதவனுக்கும் எதிர்காலம் உள்ளது.

 

* ஜனாதிபதி, விஞ்ஞானி என பன்முக மனிதராக இருந்த அப்துல் கலாம், தேசப்பற்று மிக்கவராக இருந்தார். இந்தியாவின் மிகப் பெரும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயை தனது ‘ரோல் மாடலாக’ கொண்டு செயல்பட்டார்.

கலாமுக்கு மரியாதை

 

கலாம் மறைவுக்குப் பின் பல்வேறு மாநில அரசுகளும், அவரது பெயரை சூட்டி மரியாதை அளித்துள்ளன.

 

* டில்லியில் உள்ள அவுரங்கசீப் சாலை, அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம்.

 

* ஒடிசாவில் உள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு, அப்துல் கலாம்

 

தீவு என பெயர் மாற்றப்பட்டது.

 

* கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் சூட்டியுள்ளது.

 

* உத்தர பிரதேசத்தில் செயல்படும் உ.பி., தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்துள்ளது.

 

* டில்லி அரசு ‘மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் கல்விக்கடன்’ திட்டத்துக்கு, அப்துல் கலாம் பெயரை சூட்டியுள்ளது.

 

* தமிழக அரசு அப்துல் கலாம் பிறந்த தினத்தை ‘இளைஞர் எழுச்சி தினமாக’ அறிவித்தது. மேலும் அறிவியல் துறையில் சாதிப்பவர்களுக்கு அவரது பெயரில் விருது ஒன்றையும் வழங்குகிறது.

 

* ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை மையத்துக்கு, அப்துல் கலாம் பெயரை மத்திய அரசு

 

இன்று சூட்டுகிறது.

 

* பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் வேளாண்மை கல்லுாரிக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது.

புதுவை அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது.

 

கடைசி நிமிடத்திலும்

 

கலாம் தன் கடைசி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்கு காரில் பயணம். மேற்கொண்டார். அப்போது அவரது பாதுகாப்பிற்காக, பாதுகாப்பு வீரர்கள் நின்றபடி பின்தொடர்ந்து வந்தனர்.

 

அதைப்பார்த்த கலாம், அவரை தயவு செய்து அமரச் செய்யுங்கள் என்றார். இது வழக்கமான பாதுகாப்பு நடைமுறைதான் என எடுத்துச் சொல்லியும் கலாம், கேட்க வில்லை. கடைசியில் அவர், நான் அந்த பாதுகாவலரை சந்திக்க வேண்டும் என்றார்.

 

ஐ.ஐ.எம்., சென்றதும் அந்த பாதுகாப்பு வீரரை சந்தித்த அப்துல் கலாம், ‘நன்றி இளைஞனே. என்னால் தானே உனக்கு இந்த கஷ்டம். சோர்ந்து விட்டாயா? எதாவது சாப்பிடுகிறாயா? எனக்காக

 

1 மணி நேரம் நின்று கொண்டு வந்தாயே நன்றி இளைஞனே என்றார். அந்த பாதுகாவலருக்கு பேச வார்த்தை வரவில்லை.

 

‘சார்… உங்களுக்காக நான் 1 மணி நேரம் அல்ல… 6 மணி நேரம் கூட நின்று கொண்டே வருவேன் என்று பதிலளித்தான். கலாமின் இப்படிப்பட்ட மனிதநேய செயல்களால் தான் அவர், இன்றும் மக்களால் விரும்பப்படுகிறார்.

Source……www,dinamalar.com

Natarajan

 

ஒன்றல்ல… பல கலாம்கள் உருவாக வேண்டும் : இன்று கலாம் நினைவு தினம்…

 

ஒருவர் சிறந்த ஆசிரியராக, அரசியல்வாதியாக, அறிஞராக, அமைச்சராக, வணிகராக,

விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்றால், முதலில் அவர் சிறந்த மனிதராக இருக்க வேண்டும். நல்ல மனிதனாக இல்லையென்றால், யாரும் என்னவாக இருந்தும்

பயனில்லை.

kalam2

மறைந்த ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், எல்லா வகையிலும் ஒரு சிறந்த மனிதர் என்பதுபோல, ஒரு சிறந்த புத்தகமும் கூட. உலகில் பலரும், இந்தியாவில் கிட்டத்தட்ட

எல்லோரும் படித்திருக்கிற திறந்த புத்தகம் அவர். இந்தியர் ஒருவர் இந்திய மக்கள் அனைவராலும் அறியப்பட்டிருப்பதும், அன்பு பாராட்டப்பட்டிருப்பதுவுமான அரிய மனிதர் என்றால், காந்தியடிகளுக்குப் பிறகு அனேகமாக அப்துல் கலாம் மட்டுமே. அப்துல் கலாமின் குடும்பம் சற்று வசதியான குடும்பம்தான் என்றாலும், பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கலம்

செலுத்துகிற தொழில் நசியவே வறுமை சூழ்ந்து கொள்கிறது. கலாம் அவர்கள் படிக்கவும் வேண்டும், கொஞ்சம் பொருள் தேடவும் வேண்டும் என்ற இரண்டு கடமைகளை ஏற்க வேண்டியதாகிறது. செய்தித்தாள்களை வீடு வீடாக வினியோகிக்கிற வேலை.வெட்கமோ, விரக்தியோ இல்லாமல் வியர்வை சிந்துகிறார். அவருடைய உழைப்பும் தீர்க்க தரிசனமும் அவரை ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும், ஜனாதிபதியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும், தலைமுறை பலவற்றிற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் தன்னை உருவாக்கிக் கொள்ள உதவியுள்ளன. குழந்தைகள் கலாமை கொண்டாடியதற்குக் காரணமே அவர் குழந்தைகளைக் கொண்டாடியது தான். ஜனாதிபதியாக அவர் பணியாற்றியபோது தம் மாளிகையில் சனிக்கிழமை தோறும் ஏறத்தாழ 250 மாணவ மாணவியரைச் சந்தித்து அளவளாவி மகிழ்வார். குழந்தைகளோடு குழந்தையாக குழந்தை மனமே வேண்டும். அது அப்துல் கலாமிடம் நிரம்பவே உண்டு. ஒருமுறை இந்தியாவிலுள்ள எட்டு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி இன மாணவ, மாணவிகளை அவர் சந்தித்தார். ‘நீங்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்கள்’ என்றபோது 9ஆம் வகுப்பு மாணவன் ஸ்ரீகாந்த், ‘நான் ஒரு மாற்றுத் திறனாளி. இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளி ஜனாதிபதியாக நான் அமர விரும்புகிறேன்’ என்றதும், அந்த மாணவனின் நம்பிக்கையைப் பாராட்டி மகிழ்ந்தார் கலாம்.

அவரின் எண்ணற்ற கவிதைகளை நாம் வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஜனாதிபதி மாளிகையில் கவிஞர்கள் பலரை அழைத்து கவுரவித்திருக்கிறார். வாலி, அப்துல் ரகுமான், வைரமுத்து போன்ற பல கவிஞர்கள் அவரோடு கைகுலுக்கியும், அவரது கவிதைகளைக் கேட்டும் மகிழ்ந்துள்ளனர்.கலாம் ஓய்வு பெற்ற பிறகு ஒரு நாள் அவரை டில்லியில் நானும் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கமும் சந்தித்தோம். ‘வெளிச்ச மலர்கள்’ என்ற என் கவிதைத் தொகுப்பை அவருக்குத் தந்தேன். அதில் ஒரு கவிதை,

‘காந்தி மீண்டும்

பிறக்க வேண்டும்,

ராட்டையோடு அல்ல

ஒரு சாட்டையோடு’

இவ்வரிகளைப் பலரும் பாராட்டிய மகிழ்ச்சியில் நானி ருந்தேன். ஆனால் அப்துல் கலாமோ,

‘ராட்டையோடு இருக்கிறவரைதான் அவர் காந்தி… சாட்டை இருந்தால் அவர் காந்தியாக

முடியாது,’ என்று மெல்லிய குரலில் சொன்னபோது அதுவும் எனக்கு சரியாகப்பட்டது. கவித்துவம் இருந்தால்தான் இப்படிக் கருத்துரைக்க முடியும். அடுத்தவர் உணர்வுகளை

மதிப்பதில் கலாமுக்கு நிகர் கலாம்தான். ஒரு சிலிர்ப்பூட்டும் நிகழ்ச்சி. அப்துல் கலாம் அவர்களோடு 70 விஞ்ஞானிகள் பணியாற்றினர். அவர்களுள் ஒரு விஞ்ஞானி ஒருநாள் மாலை சற்றுச் சீக்கிரமாக வீடு திரும்ப அனுமதி பெற்றிருந்தார். ஆனால் இரவு மணி 8.30 வரை ஆய்வு முடியவில்லை. அவர் விடைபெறுமுன் அக்குழுவின் தலைவர் அப்துல் கலாமிடம் சொல்லச் சென்றபோது, கலாம் அறையில் இல்லை. மாலையில் குழந்தைகளைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போகவிருந்த அவர் குழந்தைகளை ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்வோடு வீடு திரும்பிய போது ஓர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. கலாமே மாலை அந்த விஞ்ஞானியின் வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போயிருக்கிற

விவரத்தை அறிந்து சிலிர்க்கிறார். தன்னுடைய விஞ்ஞானியின் ஆராய்ச்சிக்கு இடையூறு செய்யாமலும், அவருடைய குழந்தைகளை ஏமாற்றாமலும் நடந்துகொண்டது கலாமின் சிறந்த பண்பாகப் பலரது மனதில் பதிந்தது. செய்தொழில் வேற்றுமைகூட அறியாத சிறந்த மனிதரான அப்துல் கலாம், ஒருமுறை கேரளா ராஜ்பவனில் நடந்த தமக்கான பாராட்டு விழாவுக்கு தன்னுடைய விருந்தினர்களாக சாலையோரத்தில் செருப்பு தைக்கிற ஒரு தொழிலாளியையும், சிறு உணவு விடுதி நடத்தும் ஒருவரையும் அழைக்கக் கூறினார். இருவருமே கலாம்

திருவனந்தபுரத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியபோது பழகியவர்கள். எந்த நிலையிலும் யாரையும் நினைவில் வைத்துக் கொள்கிறவர் கலாம்.வாரணாசியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டபோதுகூட அவருக் கென்று போடப்பட்ட சிறப்பு இருக்கையில் துணைவேந்தரை அமரக் கேட்க, அவர் மறுக்க எல்லோருக்கும் ஒரே மாதிரியான இருக்கை போடப்பட்ட பிறகே விழா தொடங்க இசைவு தெரிவித்தார். உயரம் என்பது வாழ்க்கையில் எல்லோர்க்கும் வரும். பெரும் பாலான உயரங்கள் பிற காரணங்களால் அல்லது புறக்காரணங்களால் அமையும். பெரும்பாலான உயரங்கள் பிறரால் எனும்போது விழுவதும் அவர்களாலேயே நிகழும். ஆனால் உயர்வு என்பது நம்மிடமே நிரந்தரமாக இருக்கும். உயர்வு என்பது பண்பு நலன்களால் வருவது. அப்துல் கலாம் அவர்கள் தமது பேராற்றலால் உயரமும் பார்த்தவர், பண்பு நலன்களால் தமக்கு உயர்வும் சேர்த்துக் கொண்டவர். இப்படி ஒருவரிடம் உயரமும், உயர்வும் இருப்பது அபூர்வம்.கலாம் மீளாத் துயிலில் ஆழ்ந்தபோது உலகமே மீளாத் துயரில் ஆழ்ந்தது. யாரும் அழைக்காமலும் அறைகூவல் விடுக்காமலும்

தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ராமேஸ்வ ரத்தில் மக்கள் வெள்ளம் திரண்டு, கடலையே வியக்க வைத்தது. இந்திய விஞ்ஞானம் ஒரு சிறந்த விஞ்ஞானியை இழந்திருக்கிறது. இந்திய அறிவியல் கல்வி ஒரு நல்ல ஆசிரியரை இழந்திருக்கிறது.

இந்திய ஆட்சி ஒரு மேன்மையான ஜனாதிபதியை இழந்திருக்கிறது, நமது மாணவர் சமுதாயம் தமது வழிகாட்டியை இழந்திருக்கிறது. மொத்தத்தில் இந்தியா ஒரு மாமனிதரை இழந்திருக்கிறது. அதிகமாகக் கூட வேண்டாம், இன்னும் நாலைந்து ஆண்டு களேனும் அவர் தன்னுடைய நீண்ட நித்திரையைத் தவிர்த்திருந்தால் இந்தியா 2020ஐயும் பார்த்துப் பூரித்திருப்பார்.

ஒன்றல்ல பல அப்துல் கலாம்கள் அவர் ஊக்குவித்த உன்னதமா(ன)ணவர்களிலிருந்து உயர்ந்துவர அவரே அதற்குரிய உரத்தையும், திறத்தையும் தெளித்து நல்ல விதைகளாய் நம்பிக்கையைத் துாவியிருக்கிறார். ஒன்றல்ல… பல கலாம்கள் உருவாக வேண்டும். அதுதான்

அவருக்கு நாம் செலுத்துகிற சிறந்த அஞ்சலி.

Source…..-ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் in http://www.dinamalar.com

Natarajan

 

இங்கிவரை யாம் பெறவே…..A.P.J. Abdul Kalam ….

kalam2

 

மானுடம் சூன்யம் ஆவதற்கோ, வெற்றிடம் ஆவதற்கோ காலம் என்றும் அனுமதித்ததில்லை. நிலைகெட்டிருக்கும் சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்கென்று, அவ்வப்போது அருட்தூதுவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே, எனையிந்த யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் என வள்ளலாரும் இதனை உறுதிப்படுத்துகின்றார். மகாகவி பாரதியும் எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தர் இந்த நாட்டில் என அழுத்தம் திருத்தமாக உரைக்கின்றார். வள்ளலார் வந்த வழியிலும், பாரதி நடந்த பாட்டையிலும் தொடர்ந்து நடந்தவர்தாம், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

காலம் காலமாக இந்திய மக்கள் புண்ணியத்தைத் தேடி இராமேசுவரத்திற்கு வந்தனர். ஆனால், வைய மக்கள் கால்கள் நோகக்கூடாதென்று, புண்ணியமே ஒரு முடிவெடுத்து 15.10.1931 அன்று, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என்னும் வடிவத்தில் இந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தது.

கலாமின் குடும்பம், பற்றாக்குறையின் கைகளில் பட்டுவாடா செய்யப்பட்டதால், எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே புளியங்கொட்டைகளைப் பொறுக்கி விற்று (இரண்டாவது உலகப்போர் நடந்த காலம்) ஓரணா சம்பாதித்ததையும், பின்னர் வீட்டுக்கு வீடு தினமணி செய்தித்தாள் போட்டதையும் அவரே கீழ்வருமாறு வருணிக்கிறார். “பத்திரிகைகளில் தினமணிக்கு ஏக கிராக்கி. என் அண்ணன் சம்சுதீன் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்கு முன்பு அதிலுள்ள படங்களைப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொள்வேன். யுத்தம் பற்றிய செய்திகளை எல்லாம் எனக்கு ஜலாலுதீன் சொல்லுவார். பிறகு நான் அதைப்பற்றி தினமணியின் செய்தித்தாள்களில் படித்துப் பார்ப்பேன். இராமேசுவரத்தில் இரயில்கள் நிற்பதை திடீரென்று நிறுத்திவிட்டார்கள். இராமேசுவரம் இருப்புப் பாதையில், ஓடும் இரயிலிலிருந்து பத்திரிகைகளைக் கட்டுக்கட்டாக வீசுவார்கள். நான் அவற்றை எல்லாம் பிடித்து வாங்கி, அண்ணன் சம்சுதீனிடம் சேர்ப்பேன். அண்ணனிடம் வாங்கியதுதான் என் முதற் சம்பளம்’ என்பதாகச் சுய சரிதையில் விவரித்துள்ளார். பழமையை மறவாதவர்கள், என்றும் தம் நிலையில் தாழ மாட்டார்கள் என்பதற்குக் கலாம் அவர்களின் வாழ்க்கை, ஓர் உரைகல்.

கலாம் உயர்நிலைப் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்திருந்தாலும், உயராய்வுக்கு (எம்.ஐ.டி.) வருகின்றபோது அவருக்குச் சோதனைகள் காத்திருந்தன. வெற்றிப்படிகளில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளில், மலர்களைக் காட்டிலும் முட்களே அதிகமாக இருந்தன. எம்.ஐ.டி.யில் முதுநிலை ஆய்வுத் திட்டம் ஒன்றைப் பெற்று, அதற்குக் கிடைத்த உதவித் தொகையில்தான், அவருடைய எதிர்காலம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் அவருடைய ஆய்வின் வளர்ச்சியைப் பார்வையிட்ட பேராசிரியர், “கலாம், உன்னுடைய அறிக்கை எனக்கு நிறைவைத் தரவில்லை. நாளை காலைக்குள் ஒரு விமானத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் விவரித்துக்காட்டும் வரைபடத்தை வரைந்து தராவிட்டால், உன்னுடைய உதவித்தொகை நிறுத்தப்படும்’ என்ற ஏவுகணையை ஏவிவிட்டுப் போய்விட்டார்.

எல்லையில்லாத மன நெருக்கடிக்கு ஆளானாலும் ஒரு பழைய கவிதையைத் தேடிப்பிடித்துப் படித்தார். “உனது எல்லா நாட்களிலும் தயாராய் இரு. எவரையும் சம உணர்வோடு சந்தி. நீ பட்டறைக் கல்லானால், அடி தாங்கு. நீ சுத்தியானால் அடி’ எனும் கவிதை நாடி நரம்புகளை அக்கினியாய் முறுக்கேற்றியது. மறுநாள் அப்பணியைச் செவ்வனே முடித்துத் தந்து, மேற்பார்வையாளரின் பாராட்டையும் பெற்றார். எது அவரைக் காயப்படுத்தியதோ, அதுவே அவரைச் சகாயப்படுத்தவும் செய்தது.

1958-இல் விமானப் படையில் விமானியாகப் பணியாற்ற வேண்டும் எனும் எண்ணத்தில் டேராடூனுக்கு நேர்முகத்திற்குச் (இண்டர்வியூ) செல்லுகிறார். தெருவரைக்கும் வந்த நல் வாய்ப்பு, வாசற்படியை மிதித்தவுடன் கதவைச் சாத்திக் கொண்டது. எட்டு இடங்களுக்கு இவர் ஒன்பதாவதாக இடம் பெற்றதுதான் காரணம்

என்றாலும், சோர்வடையாமல் ரிஷிகேசத்திலுள்ள சிவானந்தர் ஆசிரமத்திற்குள் நுழைகிறார். அங்கு அவர் பெற்ற அனுபவத்தை, “கங்கையில் நீராடி ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடன் அதிர்வலைகளின் வலுவான தாக்கத்தை உணர்ந்தேன். கருணை பொங்கும் முகத்தோடும், ஊடுருவிப் பார்க்கும் விழிகளோடும் புத்தரைப் போலக் காட்சியளித்த சுவாமி சிவானந்தரிடம் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னுடைய முஸ்லிம் பெயர், அவரிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. நான் வாயைத் திறப்பதற்கு முன்பே, என் துயரத்தின் மூலக் காரணம் பற்றி வினவினார்’ என விவரிப்பதிலிருந்து, கோபுரங்களுக்கு வேற்றுமைகள் தெரிவதில்லை என்ற உண்மையை அறியலாம்.

கலாம் 1981-இல் பத்மவிபூஷண் விருது பெற்று, இராமேசுவரத்திற்குள் நுழைகிறார். மசூதி தெருவில் ஜலாலுதீன் அவரை வரவேற்று நிற்கிறார். பள்ளி வாழ்க்கையில் கற்பித்த பட்சி லட்சுமண சாஸ்திரிகள் கலாமின் நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்குகிறார் தொடர்ந்து அருட்தந்தை சாலமன் புனித சிலுவையை ஏந்தி ஆசீர்வதிக்கின்றார். மேலும், கலாம் தம்முடைய வெற்றிக்குக் காரணமானவர்களாக மூன்றுபேரை அடிக்கடி சொல்லுவார். (1) விக்ரம் சாராபாய், (2) சதீஷ் தவன், (3) பிரம்ம பிரகாஷ். 40 பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டயங்களையும், பாராட்டுக்களையும் பெற்றபோதெல்லாம், தம்மைச் செதுக்கிய சிற்பிகளை அவர் மறந்ததே இல்லை

ஆலமரத்தின் கிளைகள் வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டே போனாலும், அதன் விழுதுகள் பூமியை நோக்கித்தான் பயணிக்கும். அதுபோல கலாம் அவர்கள் ஏவுகணை உலகத்திலும், ராக்கெட் உலகத்திலும் விண்ணளவு புகழ் பெற்றாலும், அவருடைய இதயம் அடித்தளத்து மக்களை நோக்கித்தான் கசித்து கொண்டிருந்தது. 2020-இல் குடிதண்ணீர் பஞ்சமில்லாத தேசத்தை உருவாக்க வேண்டுமென்று, தண்ணீரைத் தேசியமயமாக்க வேண்டும் என்றார்.

கலாம் வாழ்க்கையில் மகத்தான மாறுதலை ஏற்படுத்தியது, சுவாமிஜி பிரமுக் அவர்களுடைய தரிசனம் ஆகும். (பாப்ஸ் சுவாமிநாராயண் சம்பிரதாய ஆசிரமத்தின் குருநாதர்). நிவேதிதாவின் தரிசனம் மகாகவி பாரதியிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அந்த மாற்றத்தை பிரமுக் சுவாமிஜியின் தரிசனம், கலாமிற்குத் தந்தது எனலாம். அக்குருஜியே தம் வாழ்க்கையின் முடிந்த முடிவான குருஜி எனக் கலாம் எழுதுகின்றார். அக்குருநாதரைக் கலாம் 14 ஆண்டு கால இடைவெளியில் எட்டுமுறை சந்தித்து ஆத்ம விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார். கலாம் எழுதிய கடைசி நூல்: ‘The Transcendence : My Spiritual Experiences with Pramuk Swamiji’  என்பதாகும். பாரத ரத்னா கலாம் தம் மறைவுக்கு ஒரு மாதத்திற்கு முன் எழுதப்பட்ட நூல் இது.

27.07.2015 அன்று ஷில்லாங் நிர்வாகவியல் உயராய்வு மையத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட மறைவு, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு பூகம்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிம்பொனிக் சக்கரவர்த்தி பீத்தோவன் எப்படித் தம்முடைய பியானோவில் தலை வைத்தபடி மறைந்தாரோ, அப்படித்தான் கலாம் மாணவர்கள் மத்தியில் தலை சாய்த்தார். வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போட்ட ஒரு மாமனிதரின் மறைவை, உலகத்தின் அத்தனைச் செய்தித்தாள்களும் கண்ணீரால் அச்சிட்டன. தமக்கென்று ஒரு தொலைக்காட்சிப் பெட்டிகூட இல்லாதவரின் மரணத்திற்கு அத்தனைத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் அழுது தீர்த்தன. அவரால் அனுதினமும் மீட்டப்பட்ட வீணை, விதவை ஆயிற்று. பெருந்தலைவர்களின் மறைவுக்கு டெல்லியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மக்கள், முதல்முறையாக இராமேசுவரத்தை நோக்கி பயணித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, “தம்முடைய அறிவியல் சாதனைகளின் மூலம் இந்தியாவை மிக உயரமான இடத்திற்கு அழைத்துச் சென்றவர் கலாம். அவரது மறைவு ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்’ என்றார்.

அவருடைய மறைவைக் கண்ணீரில் மட்டும் கரைத்துவிடாமல், நிலைத்து நிற்கக் கூடிய ஓர் அஞ்சலியைச் செலுத்தியது, தமிழக அரசு. அவருடைய பிறந்த நாளாகிய அக்டோபர் 15-ஆம் தேதியை இளைஞர்களின் மறுமலர்ச்சி நாளாக அறிவித்தது. வியத்தகு சாதனைகளை நிகழ்த்தும் இளைஞர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூபாய் ஐந்து லட்சம், ஒரு சவரன் தங்கத்துடன் வழங்கப்படும். காற்றுள்ளவரை, இராமேசுவரம் கடற்கரை மணல் இருக்கும்வரை, இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம் எனும் கீதம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Source…..By பேராசிரியர் தி. இராசகோபாலன் in http://www.dinamani.com

Natarajan

வாரம் ஒரு கவிதை …” திருமண நாள் ” …!!!

 

திருமண நாள்
………….
முதல் திருமண நாள் …என்ன  பரிசு வாங்கலாம்?
எப்படி கொண்டாடலாம் அந்த நன்னாளை ?
கணவனுக்கும்  மனைவிக்கும் விடை தெரியா  கேள்வி !
முடிவே  இல்லாத விவாதம் விடிய விடிய !
விடிந்தது காலை .. தொடர்ந்தது  மீண்டும் விவாதம் !
பக்கத்து வீட்டு தம்பதியிடம் யோசனை கேட்டால் என்ன !
ஒரு சிறு பொறி தட்டியது மனதில் ! “எங்களுக்கும் இன்று திருமண
நாள்! … பொன்விழா ஆண்டு  நிறைவு !  … ஐம்பது ஆண்டு இனிய
இல்லற  வாழ்வே  இறைவன் தந்த  அரிய பரிசு எங்களுக்கு !
குறை ஒன்றுமில்லா ஒரு நிறைவான போதுமென்ற மனம்…
இதுவும் அந்த இறைவன் அருளிய வரமே  எங்களுக்கு !
உங்கள் இல்லற வாழ்வும் நல்லறமாக இனிதே செழித்து வளர
எங்கள் நல்லாசிகள் உண்டு உங்களுக்கு !
வாழ்க  வளமுடன்.. வளர்க நலமுடன் …வாழ்க பல்லாண்டு “
வாழ்த்தினார்   பெரியவர் !
வாழ்வின் அர்த்தம் புரிந்தது …வாழ்க்கையை  ஆரம்பித்தவருக்கு !
Natarajan
My Tamil Kavithai in http://www.dinamani.com dated 25th July 2016

Joke of the Day….” See that black building over there ….? ” !!!

 

Two vampire bats wake up in the middle of the night, thirsty for blood. One says, “Let’s fly out of the cave and get some blood.”

“We’re new here,” says the second one. “It’s dark out, and we don’t know where to look. We’d better wait until the other bats go with us.”

The first bat replies, “Who needs them? I can find some blood somewhere.” He flies out of the cave.

When he returns, he is covered in blood.

The second bat says excitedly, “Where did you get the blood?”

The first bat takes his buddy to the mouth of the cave. Pointing into the night, he asks, “See that black building over there?”

“Yes,” the other bat answers.

“Well,” says the first bat, glumly, “I didn’t.”….!!!

Source…….www.ba-bamail.com

Natarajan