” மகா கவி பாரதியார் , பாரீஸ் வெள்ளம் பற்றி எழுதிய ஒரு பதிவு “…பாரதி பிறந்த நாளில் ஒரு நினைவலை…

நன்றி: சீனி. விசுவநாதனின் “கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ – அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை – 4.

சமீபத்தில் சென்னையைத் தாக்கிய பெருமழையைவிடக் கடுமையான மழையால் 1910-இல் பிரெஞ்சு நாட்டு தலைநகர் பாரீஸ் பாதிக்கப்பட்டது. 1910 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பாரீஸை மூழ்கடித்த அந்த வெள்ளம் குறித்து, இப்போதுபோலத் தகவல் தொலைத்தொடர்பு வசதி எதுவும் இல்லாத நிலையிலும் மகாகவி பாரதியார் தனது விஜயா (14.02.1910), இந்தியா (19.02.1910) இதழ்களில்
விவரமாக எழுதியிருக்கிறார். அன்றைய மொழி நடையை மாற்றாமல், பாரதியாரின் பிறந்த தினமான இன்று அதை மறுபதிவு செய்கிறோம். நூறாண்டுகளுக்கு முன்பு பாரீஸ் எதிர்கொண்ட சோதனைகள்

பலவற்றையும் இப்போது சென்னையும் எதிர்கொண்டது என்பதுதான் வியப்பு – ஆசிரியர்.

நமக்குச் சென்ற வாரம் தபால் மூலமாகக் கிடைத்த கடிதங்களாலும் பத்திரிகைகளாலும் பாரீஸ் வெள்ளத்தைக் குறித்து, பின் எழுதும் விபரங்கள் வந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாகச் சேன் நதியில் பிரவாகம் அதிகரித்துச் சுற்றுப்பக்கங்களிலெல்லாம் பரவிவந்தது. பூமிக்குள் இருப்புப்பாதை போட்டு ரயில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுரங்கவழிகளில் முதல்முதல் தண்ணீர் நிறைந்து அவ்வழியாக ரயில் வண்டிகள் ஓட்ட முடியாமல் நிறுத்தப்பட்டன.
பிறகு வெளிரோட்டுகளில் பரவி, பாரீஸில் பள்ளமாக இருக்கும் பாகங்களிலெல்லாம் நீர் தங்கிவிட்டது. குதிரை வண்டிகள் வெகு கஷ்டத்தோடு தெருக்களில் இங்குமங்குமாகப் போய் கடைசியில் தண்ணீர் அதிகரிக்கவே வண்டிகளின் நடமாட்டமேயில்லாமல் போய்விட்டது. டிராம் வண்டிகளும் மேடான தெருக்களில்தான் ஓடிக்கொண்டிருந்தன.
வரவரத் தண்ணீர் அதிகரிக்கவே அநேக தெருக்களில் டிராம் வண்டிகூடச் செல்ல முடியவில்லை. கேதோர்úஸ என்னும் பாகத்திலிருந்த ரயில்வே ஸ்டேஷன் தண்ணீரில் முக்கால் முழுகிவிட்டபடியால் அந்தப் பக்கத்து ரயில் வண்டி ஓடவே யில்லை.
எங்கெங்கு பார்த்தாலும் தெருக்களில் சுமார் 20 அடி தண்ணீர் நிறைந்திருந்தபடியால் சிறு படகு மூலமாகத்தான் ஜனங்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். வெள்ளம் அதிகமாகும் என்று நன்றாகத் தெரிந்தபொழுதே பாரீஸ் பட்டணத்து முக்கிய போலீஸ் உத்தியோகஸ்தரான (Prefect de Police) ஷெர்புர், பிரெஸ்ட், தொன் கெர்க்கலே முதலிய துறைமுகங்களுக்குத் தந்தி கொடுத்து சிறு படகுகளைத் தகுந்த மனிதர்களோடு வரவழைத்தார். பாரீஸிலுள்ள படகுகளும் இவைகளும்தான் இப்போது தெருக்களில் நடமாடுவதற்கு உபயோகப்படுகின்றன.

அநேக தெருக்களில் தண்ணீர் முதல் மாடி வரைக்கும் வந்துவிட்டிருக்கிறது. அந்த வீட்டுக்குள் செல்ல வேண்டியவர்கள் படகுகளின் மேல் மாடியிலிருக்கும் ஜன்னலண்டை போய், அதற்குள் நுழைந்து உள்ளே குதிக்க வேண்டியதாயிருக்கிறது. அநேக வீடுகளில் ஜனங்கள் ஜன்னல் வழியாக அடிக்கடி போய்வருவதற்குத் தகுந்த சாரம் கட்டி வைத்திருக்கிறார்கள். வீட்டுக்குக் கீழ்பாகத்திலிருந்த ஆடு, மாடு, குதிரை முதலிய மிருகங்கள், பக்ஷி வகைகளெல்லாம் அடியோடு நாசமாய்விட்டன. இவைகளின் சவங்கள் தண்ணீரில் மிதந்து கிடக்கின்றன.
ழார்தென் தேப்ளாந்த் என்னுமிடத்திலிருக்கும் உயிர் மிருகங்களெல்லாம் தண்ணீர் தங்குவதினால் கஷ்டப்படுகின்றன. கூண்டிலிருக்கும் பாம்புகளும் கரடிகளும் தத்தளிக்கின்றன. ஆனால், அங்கு சீக்கிரத்தில் நீர் வடிந்து விடும்.
தின்பண்டங்களின் விலை வெள்ளத்தினால் அதிகமாய் விடவில்லை. படகில் ஏறிப்போய் வீடுகளில் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூபாயிக்கு ஆறு காசு விகிதம் விலை உயர்த்தப்பட்டது. சில பாகங்களில் ரொட்டி சுடுபவர்கள் அடுப்புகளில் தண்ணீர் நிறைந்துவிட்டபடியால் தண்ணீர் எட்டாத இடங்களிலிருக்கும் ரொட்டிக் கிடங்குக்காரர்கள் தங்கள் அடுப்பில் ரொட்டி தட்டிக் கொள்ளும்படி இவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். வெளியில் எப்பொழுதும் பனி பெய்துகொண்டே இருந்தது.
ராணுவ உத்தியோகஸ்தர்களும், ராணுவச் சேவகர்களும் ஓச்சல் ஒழிவில்லாமல் ஜனங்களுக்கு ஓர் ஆபத்தும் நேரிடாவண்ணம் இரவும் பகலும் இங்குமங்கும் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஓர் ஆஸ்பத்திரியில் தண்ணீர் வரக் கண்டு அங்கிருந்த நோயாளிகளை யெல்லாம் மெதுவாக எடுத்துக்கொண்டு தகுந்த இடத்தில் கொண்டுபோய் விட்டார்கள்.
வெள்ளத்தினால் பெருத்த கஷ்டம் பாரீஸில் ஒரு பாகமாகிய ஆல்போர்வீல் என்னுமிடத்தில்தான். அங்கு தண்ணீர் சுமார் 25 அடி ஆழம் வரைக்கும் தங்கிற்று. அங்கு சுமார் 18,000 பேர்கள் தண்ணீரால் சூழப்பட்டுத் தம்தம் வீடுகளை விட்டு வெளியில் வர முடியவில்லை. இவ்விடத்தில் அநேக படகுகள் சென்று சுமார் 9,000 ஜனங்கள் வரைக்கும் மேல் ஜன்னல்கள் வழியாக இறங்கச்செய்து தப்பித்து விட்டனர். மற்றவர்கள் அங்கிருக்கும் ùஸாத்துகளைக் காக்கும் பொருட்டு வெளியில் செல்ல ஒப்புக்கொள்ளவில்லை. தங்களுக்கு என்ன கஷ்டம் நேர்ந்தாலும் தாங்கள் அங்கே யிருப்பதாகப் பிடிவாதம் செய்கிறார்கள்.

இதற்குத் தகுந்தாற்போல் இந்த ஆபத்து காலத்தில் அநேக அபாஷ் என்னும் திருடர்கள் இருட்டில் படகு போட்டுக் கொண்டு போய் காலி வீடுகளையும், கொஞ்சம் பேர்களிருக்கும் வீடுகளையும் கொள்ளையடிக்கிறார்கள்.
இந்தக் கொள்ளைக்காரர்களைப் பிடித்து நியாயஸ்தலத்தில் விசாரணைக்குக் கொண்டுவருவது இப்பொழுது அசாத்திய மாகையால், அவர்களை உடனே தண்டிக்கப் பின்வரும் விளம்பரத்தை அதிகாரிகள் செய்திருக்கிறார்கள்.
“”அனுதாபமே காட்டக்கூடாது. ஆல்போர்வீலிலும் அதைச் சுற்றியிருக்கும் வீடுகளிலும் ராணுவச் சேவகர்கள் காபந்து செய்து வருகிறார்கள். அவர்களுக்குக் கொடுத்திருக்கும் கண்டிப்பான உத்தரவானது “கொள்ளை யடிக்கும்’ அபாஷ்களை உடனே சுட்டுவிட வேண்டியது”. இவ்வளவு கண்டிப்பான உத்தரவில்லாவிட்டால் அச்சமயத்தில் பந்தோபஸ்து செய்வது கஷ்டம்.
ஷான்ஸ்எலிúஸ என்னுமிடத்திலும் சிறிது தண்ணீர் ஏறிக்கொண்டு வருகிறது. அங்கிருக்கும் ஜனங்கள் மண்ணினாலும், சிமெண்ட் சுண்ணாம்புகளினாலும் சுவர் போட்டுத் தண்ணீரைத் தடுத்துக் கொண்டு வருகிறார்கள். லூவர் என்னும் அரண்மனைக்கு ஓர் ஆபத்தும் நேரிடாவண்ணம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த பாரீஸ் நகரத்தார் எப்பொழுதும் தங்கள் புன்சிரிப்பை விட்டுவிடுகிறதில்லை. தெருக்களில் படகுகள் போகும்பொழுது பார்த்து சிரித்த முகத்துடன் “”இந்தக் காட்சியைக் காண நாம் வெனிஸ் நகரம் போகவேண்டுமென்றிருந்தோம்; அது இங்கேயே வந்துவிட்டபடியால் நாம் இனி அங்கு போக வேண்டியதில்லை” என்கிறார்கள்.
வெள்ளத் தண்ணீர் ஊரெல்லாம் பரவி, குடிக்கும் நீரைக் கெடுத்துவிட்டபடியால் ஜனங்களெல்லோரும் தண்ணீரைக் காய வைத்துக் குடிக்க வேண்டுமென்றும், கறிகாய்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடும்படியும் அதிகாரிகள் விளம்பரம் செய்திருக்கிறார்கள். நீர் வடிந்த உடனே வீட்டுக்குள் போவதாயிருந்தால் அங்கு அடைந்திருக்கும் சேறை நன்றாக வாரிவிட்டு சுண்ணாம்பு பூசி பிறகு வாசம் செய்யும்படி கேட்டுக்கொள்ளுகிறார்கள்.

ஜனங்களுக்கு இப்பொழுது நேர்ந்திருக்கும் விபத்தில் உதவி புரியும் பொருட்டு அநேக கனவான்கள் நன்கொடை செய்திருக்கிறார்கள். பத்திராதிபர்கள் மூலமாக நன்கொடை ஜனவரி மாதம் 28-ந் தேதி வரைக்கும் சேர்த்தனுப்பியது 1036302 பிராங்குகள். நன்கொடை செய்ய வேண்டியவர்கள் கீழ்க்கண்டிருக்கும் விலாசத்திற்கு அனுப்பலாம்.
Le Syndicat, 37, Rue Chateaudun, Paris.
நேற்றைய வரையில் பாரீஸ் வெள்ளத்தைக் குறித்து வந்த தந்திகளை யெல்லாம் நமது தந்திப் பத்தியில் பிரசுரித்திருக்கிறோம். பின்னிட்டு வந்த தந்திகளால் பாரிஸின் நிலைமை மெத்தப் பயங்கரமாய் இருக்கின்றது. úஸன் ஆற்றில் இன்னும் வெள்ளம் அதிகரித்து வருகிறது. அனேக வாராவதிகளின் கைப்பிடிச் சுவர்களுக்கு மேல் சில அடி உயரம் வெள்ளம் ஓடுகிறது. மழை ஓய்ந்தபாடில்லை. இராக் காலங்களில் பனிக்கட்டிப் புசலடிக்கிறது. பகலில் அந்தப் பனிக்கட்டிகள் உருகி ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கிறது. இந்தப் பனிக்கட்டிக் காற்று மழையால் இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் பல தந்திகள் தடைபடுத்தப்பட்டிருக்கின்றன.
பிஸ்கே வளைகுடாக் கடலில் இந்தப் பனிப்புசல் அடித்ததால் ஒரு பிரெஞ்சு டார்பிடோ படகு கரையின் பேரில் மோதி விட்டது. அதிலிருந்தவர்கள் உயிர் பிழைத்தார்கள். இஸ்பானியா, பிரான்ஸு துறைமுகங்களில் பல படகுகள் முழுகிப் போய்விட்டன.
பாரீஸ் நகரத்தில் ஜனங்களுக்கு இன்றுவரையில் சுகமாகவே ஆகாரம் கிடைத்து வந்தது. உணவுகள் ரயில் மார்க்கமாயும் படகு மார்க்கமாயும் வந்து கொண்டிருந்தன. இப்பொழுது வெள்ளம் அதிகமாய் பரவிப் பூமியை மூடிவிட்டபடியால் உணவுகளைப் பாரீஸுக்குள் கொண்டுபோக அஸாத்தியமாய் விட்டது. ரூ – தே – தொமீனிக் எனும் பாரீஸ் நகரத்தின் ஒரு பாகத்தில் ஜனங்கள் சென்ற புதன்கிழமை முதல் ஆகாரமில்லாமல் வெள்ளத்தால் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
ஆகார விஷயமாக முதல் கலகமும் உண்டாய் விட்டது. பவுபோர்க் டெம்பில் எனும் ஒரு பாகத்தில் உணவின் விலையை உயர்த்திய இரண்டு ரொட்டிக் கிடங்குகள் பசியால் பீடிக்கப்பட்டு நிராசையாய் இருந்த ஜனங்களால் கொள்ளை யடிக்கப்பட்டன. ஐந்து வெடிகள் கலகக்காரர்களின் பேரில் ஒரு ஜன்னல் வழியாய்ப் பிரயோகிக்கப்பட்டன. ஒரு ஸ்திரீ காயமடைந்தாள்.

உணவுப் பொருள்கள் விலை யதிகமாய் விட்டபடியால் ஊரெங்கும் குழப்பமாய் இருக்கிறது. கலகங்கள் எங்கே நடக்கிறதோ என்று அதிகாரிகள் பயப்படுகிறார்கள். úஸன் கரையோரத்தில் போட்டிருந்த ஆர்லியன்ஸ் இருப்புப் பாதை இடிந்து விழுந்து போய்விட்டது. ஜனங்களின் துக்கம் சொல்லி முடியாது.
ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குத் தர்ம சாப்பாடு போட்டு தர்மத்திற்கு இடம் தரப்பட்டிருக்கிறது. தொத்துக் கொள்ளை வியாதி எங்கே உண்டாய் விடுகிறதோ என்ற பயம் இன்னும் அதிகரித்து வருகிறது. சாக்கடைக ளெல்லாம் எல்லாப் பாகத்திலும் உடைத்துக் கொண்டு ஓடுகின்றன.
மழை இன்னும் விட்டபாடில்லை. வானமே ஓட்டையாய் விட்டதுபோல் பொழிந்து கொண்டே இருக்கிறது. ஒரு வியாபாரமாவது நடைபெறவே யில்லை. தங்கள் தங்கள் காரிய ஸ்தலத்திற்குப் போக ஒருவருக்கும் ஸரிப்படவே யில்லை. காரிய ஸ்தலங்களுக்குப் போகலாமென்றால் வெள்ளத்தால் தடை.
அதையும் தாண்டிக் கொண்டு போனால் எந்த நிமிஷத்தில் புசல் மழையினால் வெள்ளம் அதிகப்பட்டுவிட்டால் வீட்டிலுள்ள பெண்டு பிள்ளைகளுக்கு அபாயம் வந்து விடுகிறதோ அல்லது அவர்களை உயிர் தப்ப வைத்து அப்பால் கொண்டு போவது அஸாத்தியமாய் விடுகிறதோ என்று இதே ஸதா எல்லாருக்கும் கவலையாய் இருக்கிறது.
பாரீஸில் நடுப்பட்டணம் வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெரிய ஏரிபோல் காணப்படுகிறது. சரித்திரங்களிலும் தற்காலத்திலும் பிரஸித்தி பெற்ற பல கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டு விட்டது.
பிளாஸ் தெ-லா கொன்கொர்து, ஷான்ஸ் எலிúஸ இவற்றின் கோபுர வாசல்களைப் பலமாக மண், கல் முதலியவைகள் போட்டு அடைத்து விட்டார்கள். ùஸன்த் லொஜோ எனும் பாகமானது பலமான ஒரு பகுதி சேனையாட்களால் காக்கப்பட்டு வருகிறது. சில தெருக்களில் வெள்ளம் பெருகுவதும் குறைவதுமாய் இருக்கிறது. வீடுகளெல்லாம் இடிந்து விழுந்து கொண்டும் விழுந்து விடும்போலும் இருக்கின்றன.
ஸ்ரீ மகா நெப்போலியன் சேனா வீரர்களில் காயம் பட்டவர்களுக்காகக் கட்டிவைத்த ஒத்தேல் – தெùஸன் வலித் என்னும் கட்டிடத் தருகில் தெருக்களில் ஏழடி ஜலம் நிறைந்திருக்கிறது.

கிராண்ட் விலியர்ஸ் எனும் பெரிய அணைக்கட்டு உடைத்துக் கொண்டு அந்தப் பாகமெல்லாம் அநேக மைல் விஸ்தீர்ணமுள்ள ஒரு பெரிய ஏரிபோல் காணப்படுகிறது. ஜனங்களில் பெரும்பாலர் ஓடி உயிர் தப்பி விட்டார்கள். மற்றவர்கள் வெளியே போக முடியாமல் தங்கள் வீட்டிலேயே அடைபட்டிருக்கிறார்கள்.
பிளாஸ் – தெ – லோபேராவிலும், புல்வார்ட் – தெ – காப்புஸன்னிலும் வெள்ளம் சற்று தணிந்திருக்கிறது. ஆனால் விளக்குக் கம்பங்களும் மரங்களும் சில கட்டிடங்களும் விழுந்து கொண்டே இருக்கின்றன. பிரதான நகர சுரங்கக் குழாய் இருப்புப்பாதை யுள்ளிருந்து பேரிரைச்சலுடன் ஜலம் வெளியே வந்து விழுந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு நாசகரமான வெள்ளத்திற்கும் காரணம் என்னவென்றால் இதுவரையிலும் இல்லாத அவ்வளவு விசேஷமாய் பனிக்கட்டியுடன் இடைவிடாமல் மழை பெய்ததுதான்.
இந்த விபத்தால் கஷ்டப்படுகிறவர்களின் ஸஹாயத்திற்காகக் கிறிஸ்தவர்களின் பரமாசிரியரான மஹாகனம் பொருந்திய போப் என்பவர் ஒரு பெருந்தொகையான பணம் ஸஹாயம் செய்திருக்கிறார். லண்டன் மேயரும் ஒரு ஸஹாய நிதி ஏற்படுத்தி இருக்கிறார். இதற்குப் பிரிட்டிஷ் சக்கரவர்த்தி 1000 கினியும் அவருடைய பத்னி அலக்ஸாண்டிரா சக்ரவர்த்தினி 1000 பவுனும் நன்கொடையளித்தனர் என்று கேட்டு ஸந்தோஷிக்கிறோம்.
இந்தியாவிலும், வைஸிராய் முதலானவர்களும், ஸ்வதேச சிற்றரசர்களும், கனதனவான்களும் முக்கியமாய் நமது புதுவை, காரைக்கால், ஏனாம், மாஹி, சந்திரநாகூர் வாஸிகளும் ஒரு பெரிய நிதி சேர்த்து இந்தக் கஷ்ட நிலையில் பிரான்ஸு ஜனங்களுக்கு உதவி செய்தால், ரொம்ப மஹோபகாரமாய் இருக்கும். பிரான்ஸின் தலைநகரான கீர்த்தி பெற்ற பாரீஸின் பெருவெள்ள அபாய நிலைமையை இம்மட்டுடன் கருணைக் கடலான கடவுள் நிறுத்துவாராக! நமது ஆலயங்களில் இந்தக் கஷ்ட நிவாரணத்திற்காக அவரவர்கள் கடவுளைத் தொழுது பிரார்த்திப்பாராக!

Source…..www.dinamani.com

Natarajan

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?….

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.

விளை நிலங்களில் வீடுகளை கட்டியதால் பலர் வெள்ளத்தில் சிக்கினர்

 

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிறிய சாலைகள் கூட வெள்ள நீரில் மூழ்கியுள்ளன

சென்னை மட்டுமல்லாமல் டில்லி,கொல்கத்தா, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என அந்த மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வெள்ள நீர் எந்த அளவுக்கு தேங்கியிருந்தது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்

சென்னை,மும்பை போன்ற பெரு நகரங்களில் போதுமான வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல், திட்டமிடாத வகையில் நகரம் வளர்ந்து கட்டிடங்கள் கட்டப்படுவதால், வெள்ளம் ஏற்பட்டதும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது என சுனிதா நரெயன் கூறுகிறார்.

இப்படியான அதிவேக நகரமயமாக்கல்கள், இயற்கை வடிகால்களை அழித்துள்ளன என்றும், சென்னை போன்ற நகரங்கள் இதன் தாக்கத்தை இப்போது உணர்ந்துள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

.Image copyrightbbctamil
Image caption…வடிகால்கள் சரியாக பராமரிக்கப்படாததால் அடையாறில் வெள்ளம் ஏற்பட்டது

 

சென்னை தனது இயற்கை வடிகால் வசதிகளை பராமரிக்கத் தவறியுள்ளது எனவும் சி எஸ் இ அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

கடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன என்றும் சுனிதா நரெயின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னர் ஏரிகள் இருந்த இடங்களில் வீடுகளை கட்டியவர்களின் நிலை இதுதான்

நீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது எனவும் அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

பாரிஸில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு நடைபெற்று வரும் வேளையில், இப்படியான விஷயங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள பல சுரங்கப் பாதைகளில் நீரின் அளவு குறையவில்லை

நீர்நிலைகள் எப்படி சீரழிந்து போயுள்ளன என்பதற்கு போரூர் ஏரி ஒரு உதாரணம் எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நீர்நிலைகள், நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், வெள்ளம் ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

ஈரநிலப்பகுயில் எப்படி கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன எனும் கேள்விக்கு ஒருநாளும் பதில் கிடைத்தது இல்லை எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நிலங்கள் நகர நிலச் சட்டங்களின் கீழ் மிகவும் அரிதாகவே பதியப்படுகின்றன எனவும், அதன் காரணமாக பலருக்கு அது தெரியவருவதில்லை எனவும் சுனிதா நரெயின் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

நீர்நிலைகளின் கரையோரங்களில் இருந்தவர்களின் நிலை மிகவும் மோசமானது.

அனுமதி கோரி மனுக்கள் வரும்போது மேலோட்டமாக நிலங்களை மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள், அதிலுள்ள நீராதாரங்களைப் பார்ப்பதில்லை, எனவே பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன எனவும் சி எஸ் இயின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

பல வீடுகளின் கீழ் தளங்கள் முழுவதும் நீர் புகுந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

 

சாலைகளில் ஓடும் நீர் முற்றாக வடிய பல நாட்களாகலாம் எனக் கருதப்படுகிறது

மனிதர்களால் உருவாக்கப்படும் வடிகால் அமைப்புகள், ஒருநாளும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை தமது ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஏரிகள் முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதால் பல முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின.

 

உதாரணமாக, நகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

புறநகர் பகுதிகளில் வீடுகளைக் கட்டும்போது நில ஆவணங்கள் கவனமாகப் பார்க்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன

 

கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 1,218 மிமீ மழை பெய்துள்ளது.

இது சராசரியாக ஆண்டொன்றுக்கு கிடைக்கும் மழையின் அளவைவிட மூன்று மடங்கானது.

Source….www.bbc.com.tamil    Photos Credit …bbc tamil

Natarajan

 

The Floating Forest of Homebush Bay, Sydney….

The affluent suburb of Homebush Bay on the south bank of the Parramatta River, in the inner west of Sydney, was once the dumping ground for a large range of industrial wastes including a few decommissioned ships. Private companies would pay a monthly fee to the Maritime Services Board, and tow in vessels that had outlived their useful lives in order to break them up to salvage steel and parts that could be reused. Ship-breaking operations began in 1966, but ended prematurely before all the ships moored in the bay could be broken down. At least four ships’ hull and the remains of several barges and smaller vessels are still visible in Homebush Bay. These are protected under the historic Shipwrecks Act, 1976 which applies to all shipwrecks over seventy five years old. One of the most photogenic shipwreck in Homebush Bay is that of SS Ayrfield.

ss-ayrfield-homebush-bay-4

Photo credit: Rodney Campbell/Flickr

SS Aryfield began its life as SS Corrimal at Grangemouth Dockyard Company, United Kingdom in 1911. It was a steel-hulled, single screw, steam collier of 1,140 tons and 70 meters in length. SS Corrimal was purchased by the Commonwealth Government and used to transport supplies to American troops stationed in the Pacific region during WWII. In 1950, it was sold to Bitumen and Oil Refineries Australia Pty Ltd and in 1951 sold to the Miller Steamship Company Ltd and renamed Ayrfield. The ship was decommissioned in 1972, and sent to Homebush Bay for breaking-up.

The shipbreaking yard ceased operation before SS Aryfield could be torn apart. Now abandoned and lying in the shallow waters of Homebush Bay, the ship has become home to a lush green, miniature floating forest.

ss-ayrfield-homebush-bay-1

Photo credit: Brent Pearson/Flickr

ss-ayrfield-homebush-bay-2

Photo credit: Rodney Campbell/Flickr

ss-ayrfield-homebush-bay-3

Photo credit: Steve Dorman/Flickr

ss-ayrfield-homebush-bay-5

Photo credit: Gafa Kassim/Flickr

ss-ayrfield-homebush-bay-7

Photo credit: Tina Reynolds/Flickr

ss-ayrfield-homebush-bay-8

Photo credit: Travis Chau/Flickr

Sources: Afloat.com / Wikipedia

Source….www.amusingplanet.com

Natarajan

” WHAT IS A KUDO, AS IN “KUDOS TO YOU”….?

First, it should be noted that “kudos” is not the plural form of “kudo”, so a “kudo” was once technically nothing. However, because so many people in the last century, mainly in the United States, have thought kudos was plural, in some dictionaries today “kudo” is considered a valid word meaning the same thing as kudos (yet another word created via back-formation).

To answer your question, kudos in English means:

1) Praise / Accolades

2) Credit for one’s achievements

The word “kudos” comes from the Greek κῦδος (kudos), meaning “glory” or “fame”.  The “-os” ending in Greek typically indicates a singular noun and is supposed to be pronounced like “-ose”, rather than “-oze”, as many Americans usually pronounce it, “koo-doze”, or as a lot of British people tend to pronounce it “-oss”, “cue-doss”.

The word made its way into English around the late 18th century / early 19th century, meaning pretty much the same thing as it means today.  The first documented instance of the “singular” word “kudo” didn’t pop up until 1926.

Source….www.today i foundout.com

Natarajan

The Amphitheatre of El Jem….

The Amphitheatre of El Jem is located in the town of El Jem or Thysdrus, as it was known in Roman time, in central Tunisia. Modeled after the famous Colosseum of Rome, this impressive monument is one of the most accomplished examples of Roman architecture of an amphitheatre, almost equal to that of the Colosseum itself. It has a seating capacity of 30,000 people, stands 36 meters high, and has a diameter of nearly 150 meters. Only the great Colosseum in Rome and the ruined theatre of Capua are larger.

 

The Amphitheatre of El Jem was built in the early 3rd century under proconsul Gordian, and was mainly used for gladiator shows and small chariot races. In those times, Thysdrus was an important center of olive oil manufacturing which was exported in huge quantities.

amphitheatre-of-el-jem-6

Photo credit: Agnieszka Wolska/Wikimedia

The amphitheatre is free standing, built entirely of sandstone blocks, with no foundations. Its facade comprises three levels of arcades of Corinthian or composite style. The amphitheater is the only one in the world, with the Colosseum of Rome, still have an intact facade with three levels of galleries. Inside, the monument has conserved most of the supporting infrastructure for the tiered seating. The wall of the podium, the arena and the underground passages are practically intact.

Until the 17th century, the amphitheatre remained more or less whole. From then on its stones were used for building the nearby village of El Djem and transported to the Great Mosque in Kairouan. During the struggles between the Ottomans and the Turks in Byzantine period, the amphitheater became a fortress and a place of refuge for the rebels.

The ruins of the amphitheatre were declared a World Heritage Site in 1979. Because of its good acoustics, it hosts the annual Festival international de musique symphonique d’El Jem.

amphitheatre-of-el-jem-7

Photo credit: Cimoi/Wikimedia

amphitheatre-of-el-jem-8\Photo credit: Trsqr/Wikimedia

amphitheatre-of-el-jem-1

Photo credit: Tony Hisgett/Flickr

amphitheatre-of-el-jem-2

Photo credit: Tony Hisgett/Flickr

amphitheatre-of-el-jem-4]

Photo credit: Christopher Rose/Flickr

 

amphitheatre-of-el-jem-5]Photo credit: Amine GHRABI/Flickr

Source….www.amusingplanet.com

Natarajan

 

” Why Do Many Countries’ Names End in “-stan,” …?

Stan, An, and Ish

Denoting that it is a piece of the earth associated with a particular group of people, the suffix -stan simply means “land of.”

An ancient suffix of Persian origins, for many people, particularly in Central Asia, the addition of –stan to the name of their cultural or ethnic group identifies that a certain place belongs to them, e.g., Kazakhstan is the “land of the Kazakhs.”

-Stan‘s roots go even further back than Persia, however, to the Indo-Iranian element, *stanam, which meant both “place” or even more literally, “where one stands.” This old construction is derived from the even earlier Proto-Indo-European root *sta, which also meant “to stand.”

The use of a suffix to denote “land of” is not unique to -stan, however. In English, we often use –land to identify a nation or place, and familiar words include England, Finland, Greenland, Iceland, Ireland, Netherlands, New Zealand, Poland, and Thailand, as well as Maryland and Newfoundland. Other languages use the convention as well, such as the German Deutschland.

Adding –an at the end of country or place names to identify a person’s heritage or ethnicity also traces its origins back to ancient times, and the Proto-Indo-European root *-no-, which meant “pertaining to.” More recently (but still relatively ancient), in Latin this element gave rise to –anus, as in Rōma ‎(“Rome”) → Rōmānus ‎(“Roman”). Over the years this has in turn morphed into our current ending –an, as in American, Mexican and Romanian. Not exclusive to regional references, we also see this nomenclature in many other words like Christus ‎(“Christ”) → christiānus ‎(“christian”).

In addition, in English, this –an is often modified with the addition of an “i,” such as in the aforementioned Romanian and christian, as well as in things like Brazilian, Canadian and Parisian.
And if you’re wondering, the suffix –ish, as in British, comes from the Proto-Germanic suffix *-iska which meant “of the nativity or country of.” It morphed into the Old English –isc before becoming the modern English, Irish, Spanish, etc.

Source…….www.today i foundout .com

Natarajan

அமெரிக்கர் வியந்த தொழில்நுட்பம் – ‘சென்னானேரி’….

குழந்தைகளை நேசிப்பதுபோல ஏரி, குளங்களை நேசித்தவர்கள் நம் முன்னோர்கள். தாங்கள் வெட்டிய ஏரிகளுக்கும், குளங்களுக்கும் பிடித்தமான பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர். மலர்கள் சூழ்ந்த குளங்களை பூங்குளம், அல்லிக்குளம், ஆம்பக்குளம், குறிஞ்சிக்குளம் என்றும், மரங்கள் சூழ்ந்த குளங்களை மாங்குளம், இலுப்பைக் குளம், பலாக்குளம், விளாங்குளம், வாகைக்குளம் என்றும் அழைத்தனர். தெய்வத்தின் பெயர்களிலும் குளங்கள் அழைக்கப்பட்டன.

நீர்நிலைகள் மீது அக்கறையோடு மிகுந்த நேசமும் வைத்திருந்ததால்தான், அதை வெறும் குளம், குட்டை என்று அழைக்காமல் பாசத்தோடு பெயர் வைத்து அழைத்தனர். ஆனால், நவீன தொழில்நுட்பங்களில் முன்னேறிவிட்ட நாம், நமக்கு நினைவு தெரிந்து கடந்த 50 ஆண்டுகளில் ஒற்றைக் குளத்தை யாவது உருவாக்கி பெயர் சூட்டி யிருப்போமா?

ஆற்றின் கால்வாய்கள், வெள்ள நீர் வடிகால்களை எப்படி எல்லாம் சீரழித்தோம் என்று நேற்று பார்த்தோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட அந்த வடிகால் கள். அரிகேசரி ஆறு, வல்லபப் பேராறு, நாட்டாறு, பராக்கிரமப் பேராறு இவை எல்லாம் வைகை ஆற்றுக் கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்ட பெயர்கள். ஆனால், இவை ஆறுகளின் பெயர்கள் அல்ல. வைகையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்களின் பெயர்கள். கால்வாய்களே ஆறுபோல பெரிய அளவில் வெட்டப்பட்டன என்பதை கல்வெட்டுக் குறிப்புகள் உணர்த்து கின்றன.

இவ்வாறாக மொத்தம் 3 வகை கால்வாய்கள் அமைக்கப்பட்டன. முதலாவது, வரத்துக் கால்வாய் (Supply Channel). இவற்றில் வரத்துக் கால்வாய்களின் தொழில்நுட்பம் அபாரமானது. ஆறுகளில் குறிப்பிட்ட வளைவுகளில் மட்டுமே வரத்துக் கால்வாய்களின் தலைப்பகுதி வெட்டப் பட்டன. அப்படி வெட்டும்போது ஆற்றில் இருந்து தண்ணீர் மட்டுமே கால்வாய்க்குள் செல்லும். மணல் புகாமல் தடுக்கப்பட்டது. தவிர, ஆற்றில் நீர்வரத்து குறையும் காலத்தில்கூட தடையின்றி கால்வாய்க்குள் தண்ணீர் சென்றது. இதற்கு இன்றும் உதாரணமாக இருக்கிறது வைகை ஆற்றில் இருந்து வட ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்.

இரண்டாவது, மறுகால் அல்லது வெள்ள வடிகால் (Surplus Channel). வெள்ளக் காலங்களில் ஏரிகளின் உபரி நீரை கலிங்கல் வழியாக வெளியேற்றும் கால்வாய்தான் மறுகால்வாய். இவற்றின் கொள்ளளவும் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயின் கொள்ளளவும் சமமாக இருக்கும். நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் சரிசமமாக அமைந்து வெள்ளப் பெருக்கை தடுக்க உதவிய தொழில்நுட்பம் இது.

மூன்றாவது, பாசனக் கால் அல்லது கழனிக்கால் (Distribution Channel). ஏரி மடையின் வெளிப்புறத்தில் அமைக்கப் பட்ட இந்த கால்வாய்கள் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பிரித்து விநியோகிக்கப்பட்டது. நிலங்களின் அளவுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இந்த கால்வாய்கள் கண்ணாறு, வதி, பிலாறு என்றெல்லாம் அழைக்கப்பட்டன. இவற்றின் தொழில்நுட்பத்தைக் கண்டு இன்றைய நவீன நீரியல் நிபுணர்களே வியக்கின்றனர்.

நெல் பயிரிடுவதற்கு மிருதுவான நிலம் தேவை. அதற்காக நிலத்தை மிருதுவாக்கவும், சமப்படுத்தவும் அதிக அளவில் நீர் தேக்கப்பட்டது. சில நாட்களுக்குப்பிறகு, அதை உழுது நீரை வடித்து விட்டு, நெற்பயிரை நடுவார்கள். இப்படி வடிக்கும்போது கிடைக்கும் உபரி நீரையும், கூடுதலாக கிடைக்கும் மழைநீரையும் வடிகால் வாய்க்கால் களில் சேகரித்து, அடுத்தடுத்த வயல் களுக்கு விடுவார்கள். இது மிகச் சிறந்த நீர் சிக்கன மேலாண்மை. இதற்கேற்ற மிக நுட்பமான நில மட்ட அளவுகளில் பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.

இதற்கு உதாரணமாக திகழ்ந்தது சென்னானேரி. இது திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி – கள்ளப்பனை கிராமங்களுக்கு இடையே இருக்கிறது. ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியியல் அறிஞர்கள் ச.மா.ரத்னவேல், கள்ளபிரான் ஆகியோர் இந்த ஏரியை நேரில் ஆய்வு செய்து, இதன் தொழில்நுட்பம் பற்றி ஏராளமான குறிப்புகளை எழுதியுள்ளனர்.

ஏரியின் பாசனப் பரப்புகள் மேற்கில் இருந்து கிழக்காக மிதமான சரிவுடனும், தெற்கில் இருந்து வடக்காக கூடுதல் சரிவுடனும் உள்ளன. கால்வாய்கள் வழியாக பாசன நிலங்களுக்கு தண்ணீர் விடப்பட்டபோது தண்ணீர் வேகமாக பாய்ந்து, வளமான மேல் பகுதி வண்டலை அரித்துச் செல்லாதபடி விடப் பட்டன. தெற்குப் பகுதியின் பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் வயலுக்குச் செல்கிறது. வடக்குப் பகுதி யின் வாய்க்கால் உபரிநீரை வடிக்கிறது. இன்றைய நவீன பொறியாளர்களின் கற்பனைக்கு எட்டாத தொழில்நுட்பம் இது.

அமெரிக்க பொறியியல் வல்லுநர் கில்பர்ட் லாவேன் (Gilbert Lavine) தனது ‘Irrigation and Agricultural Development of Asia’ நூலில் மேற் கண்ட தொழில்நுட்பத்தை எப்படி சிலாகிக்கிறார் தெரியுமா?

‘‘மிதமான சாய்வு தளமாக உள்ள நிலப்பரப்பில் மேல் வரிசைப் பயிர்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு முதலில் நீர் பாய்ச்சப்படுகிறது. பிறகு சுழற்சி முறையில், அடுத்த வரிசை களில் அமைந்த பாத்திகளுக்கு படிப் படியாக நீர் அளவைக் குறைத்து பாய்ச்சப்படுகிறது. மேல் பாத்திகளுக்கு ஊற்றப்படும் நீர், கீழ் பாத்திகளுக்கும் வழிந்தோ, கசிந்தோ வரும் என்பதால் நீர் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் எல்லா அடுக்குகளிலும் உள்ள பயிர்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கிறது. எல்லா பாத்திகளுக்கும் சம அளவில் தண்ணீர் பாய்ச்சாமல் தண்ணீரை சிக்கனமாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்த முடிகிறது. மிகவும் சிக்கனமான, பயனுள்ள இந்த நீர் மேலாண்மை வளரும் நாடுகளில்கூட புழக்கத்தில் இல்லை!’’ என்கிறார் அவர்.

ஒரு அமெரிக்கப் பொறியாளருக்கு தெரிந்த அருமை நமக்குத் தெரியாமல் போனதுதான் வேதனை.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சென்னானேரியை பார்க்க பணகுடி கிராமத்துக்கு சென்றோம். ஏரியின் பெயரைச் சொல்லிக் கேட்டால் ஊரில் யாருக்கும் தெரியவில்லை. அப்படி ஒரு ஏரியே இல்லை என்றார்கள்.

கடைசியில், ஜெபக்குமார் என்ற பள்ளித் தலைமை ஆசிரியர், ‘‘சென்னா னேரி என்ற பெயரை எல்லாம் மக்கள் மறந்து பல ஆண்டுகள் ஆகிறது. பராமரிப்பும் இல்லாமல் பாழாகிக் கிடக்கிறது ஏரி’’ என்றார். நம்மை ஏரிக்கு அழைத்துச் சென்று காட்டினார்.

கடல்போல பரந்திருந்தது ஏரி. இப்போது பெய்த மழையில் ஏரி நிரம்பி இருந்தாலும் உள்ளே சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருந்தன.

வெளிநாட்டு பொறியாளர்களையும் வியக்கவைத்த தொழில்நுட்பக் கால்வாய்கள் மண்மூடிப் போய் அனாதையாய்க் கிடந்தன. மதகுகளும் பராமரிப்பின்றிக் கிடந்தன.

‘‘ஏரி முழுக்க தண்ணியிருந்தும், என்ன பிரயோசனம்.. பெருசா பாசனம் ஒண்ணும் இல்லீங்க’’ என்று அங்க லாய்த்தார் அங்கு வந்த உள்ளூர்க்காரர்.

எப்படி இருக்கும் பாசனம்? நாம்தான் கண் இருந்தும், பார்வையற்றவர்களாக அல்லவா இருக்கிறோம்!

Source….டி.எல்.சஞ்சீவிகுமார்….www.tamil.thehindu.com

Natarajan

Stunning Black Roses …Beautiful !!!

Turkish Halfeti Roses are incredibly rare. They are shaped just like regular roses, but their color sets them apart. These roses so black, you’d think someone spray-painted them. But that’s actually their natural color.

These stunning black roses would make excellent props in a movie about witches and black magic, or in a heavy-metal video. There’s something extremely attractive about them, in an intense sort of way.

Although they appear perfectly black, they’re actually a very deep crimson color. These flowers are seasonal – they only grow during the summer in small number, and only in the tiny Turkish village of Halfeti. Thanks to the unique soil conditions of the region, and the pH levels of the groundwater (that seeps in from the river Euphrates), the roses take on a devilish hue. They bloom dark red during the spring and fade to black during the summer months.

Halfeti-black-roses

The local Turks seem to enjoy a love-hate relationship with these rare blossoms. They consider the flowers to be symbols of mystery, hope and passion, and also death and bad news. Unfortunately, the black roses of Halfeti are an endangered species. They have been under threat of extinction ever since the residents of the village moved from ‘old Halfeti’ in the 1990s, when the Birecik Dam was constructed.

Old Halfeti and several other villages were submerged under the waters of the Euphrates, when the dam was made. The new Halfeti village was re-built on the grounds of Karaotlak village, merely 10 kilometers from its former location.

Halfeti-black-roses3

This short distance proved fatal for the beautiful black roses. The villagers replanted them in their new gardens, but the flowers didn’t take to their new environment very well. There was a steady decline in the number of black roses grown in the region.

Halfeti-black-roses4

The district officials have made efforts to save the roses. They collected seedlings from village homes and replanted them closer to their original surroundings in greenhouses. They have been doing slightly better, ever since.

Halfeti-black-roses5

Seeing a black rose in full bloom is a once-in-a-lifetime sort of thing. Don’t miss it if you ever happen to be in Turkey during the summer!

Sources: Today’s Zaman, Rocketnews24 ….http://www.odditycentral.com/

Natarajan

” War Horses….”

 

WAR HORSES

These horses were originally bred as “war horses” in the days of
knights and armor. As armor got heavier, bigger horses were needed and the
Friesian almost became extinct. They are back and are one of the most
beautiful horses in stature as well as gait.

What gorgeous animals!! Just watching them becomes an emotional
experience. Can you imagine what it would be like to ride one? Their manes
and tails are the longest that I have seen and I noticed that when
performing on grass, their hoofs do not kick up a divot, as they land flat
footed.

Creatures such as these are what makes this world so special. These
horses are native to the Netherlands . Have your audio on.

Source….Input from a friend of mine and http://www.youtube.com
Natarajan

” I BEFORE E, EXCEPT AFTER C…”……!!!

Jeremy R. asks: Is it true that more words break the I before E rule than follow it? If so, how come this is taught at all?

If you ever want to start a fight among a group of linguists and orthographers, bring up the grammar school rule: “I before E, except after C,” which has been around since at least the mid-19th century. You will likely begin the most sedate and erudite brawl you could ever hope to witness.

First, there are arguments over what exactly the rule should be. Some (like me) were taught what I’m calling the “neighbor [ei] rule”: “I before E, except after in C or words that say “ā” [ei], as in neighbor and weigh.”[1]

Others were given a variation, hereinafter called the “receive [i] rule“: “I before E except after C when the sound is “ee”” [i].

Although not perfect, it appears the latter version makes a better rule (if you’re going to have one), since it has fewer exceptions given that a smaller number of words are brought within its orbit in the first place.

Note that some words fit the first part of both rules:

ie: believe, collie, die and friend

cei: ceiling, deceive and receipt

After that, the list of compliant words (and exceptions) begins to deviate. Consider this list of words that do not violate the receive [i] rule, but do violate the neighbor [ei] rule:

ei: counterfeit, feisty, foreign, kaleidoscope, poltergeist, seismograph, surfeit and their

cie: ancient, deficient, glacier, proficient, society, science and sufficient

ie [ei]: gaiety

Of course, there are some exceptions that violate both rules as well, and these include:

ei: caffeine, leisure, protein, seize and weird[2]

cie: deficiencies and species

All of this leads to another argument: whether or not to have a rule at all.

Some, like Geoffrey K. Pullum (who ascribes to the receive [i] rule, although for him the phoneme is written [i:]), have characterized it as “a very helpful guide to one small point in the hideous mess that is English orthography.”

And others, like Mark Wainwright, have noted that because the “except after C” portion “covers the many derivatives of Latin capio [= “take”] . . . receive, deceit, inconceivable . . . [the] simple rule of thumb is necessary” and efficacious.

Of course, there are those who find the exceptions have swallowed the rule, rendering it useless, and these include the UK’s education department which, in 2009, advised teachers through a document titled, Support for Spelling that: “The I before e except after c rule is not worth teaching [since] it applies only to words . . . which . . . stand for a clear /ee/ sound and unless this is known, [many] words . . . look like exceptions. There are so few words where the ei spelling for the /ee/ sound follows the letter c that it is easier to learn the specific words.”

This point of view finds support in the claim, made on the BBC show QI, that there are 923 words that are spelled cie, and only about 40 or so that are spelled cei, and for those who follow the neighbor [ei] rule, theextreme number of exceptions has rendered the rule “dumb and useless.”

Source…..www.today i foundout.com

Natarajan