” நான் தான் அவனைத் திருட சொன்னேன் ….!!! “

Source: Dinamalar dated 29 April 2014  & http://www.periva.proboards.com

natarajan

 

ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாமிட்டிருந்தார்.

ஒருநாள் இரவில், தேவகோட்டையில் இருந்து, ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஏகமாய் சத்தம் கேட்க, பெரியவர் அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, “”வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா…” என்றவர், அவரை நிறுத்தி, “”அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா,” என்றார்.

அவரும் விசாரித்து வந்தார்.

“சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிடவில்லையாம்,’ என்றார்.

“”ராமச்சந்திரா! வெளியே பூஜைக்கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப்போய் பெட்டியைத் திறந்து, அதிலுள்ள பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போய், அவர்களிடம் கொடு. நாளை அபிஷேகத்திற்காக தயிர், பால் வைத்திருப்பார். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், அவர்களை சாப்பிட வை. பிறகு, சந்தடி செய்யாமல், சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விடு,” என்று சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டார்.

மறுநாள் விடிந்தது. மேலூர் ராமச்சந்திர அய்யர் கட்டுப்பெட்டியை திறந்தார். உள்ளே பழம், தயிர், பால் எதுவும் இல்லை. அவருக்கு கோபம் வந்து விட்டது.

“”எந்த திருட்டுப்பயலோ, ராத்திரி மறுசாவி போட்டு பெட்டியைத் திறந்து, பழங்களை எடுத்துப் போயிருக்கிறான்,” என்று மிகவும் சத்தமாகக் கத்தினார்.

அப்போது, பக்கத்து ரூமில் தான் பெரியவர் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து, “”அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,” என்றார்.

அய்யர் அலறாத குறை தான். “”பெரியவா! மன்னிச்சுடுங்கோ” என்று அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

பூஜைக்கான பொருள் என்றாலும், அவசரம் கருதி, அது மக்களின் பசி தீர்க்க உதவுமானால், அதற்கே முதலிடம் என்ற கொள்கையுடைய மகாசுவாமிகள், கருணாமூர்த்தியாக நம் கண்முன் இன்றும் காட்சி தருகிறார்.

” தமிழில்தான் பேசணும் …தமிழ் பேச்சை மறக்க கூடாது …”

 



நடு வயது தம்பதிகள். நான்கு குழந்தைகள். எல்லாம் நவீன ஆடை – அலங்காரம்; நவீனத் தோற்றம். பெண் குழந்தைகளுக்கு கழுத்து வரை மட்டும் கூந்தல் – எல்லையோர செடிகளை, இடுப்பளவு உயரத்துக்கு மேல் வளராதபடி கத்திரிகோலால் வெட்டி விட்ட மாதிரி; நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாடியது. கான்வென்ட் படிப்பு.

பெரியவா, அந்த குழந்தைகளை தன் அருகில் வரச்சொன்னார்கள். வந்தன. “பேரென்ன? எங்கே படிக்கிறே? என்று விசாரணையாய் உரையாடல்.

குழந்தைகள் ரொம்ப சகஜமாகி விட்டன; உற்சாகமாக, தயக்கமில்லாமல் பதில் சொல்லி கொண்டிருந்தன.

அருகில் இருந்த பழத்தட்டை காட்டி, ‘யாருக்கு என்ன பழம் வேணுமோ எடுத்துக்கலாம்’ என்று சொன்னர்கள்.

குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம்.

Thanks – என்று சொல்லிவிட்டு பழங்களை எடுத்துகொண்டன.

பெரியவா சொன்னார்கள்” “ஒரு request நான் சொன்ன கேட்பேளா?”

ஒரே குரலில், “Oh yes! certainly we will do” என்று குழந்தைகள் கூறின.

‘வெளி இடத்திலே, பள்ளிகூடத்திலே அல்லது வேறு மனுஷ்யாளிடத்தில் பேசறபோது இங்கிலீஷ்லே பேசு. உங்க வீட்டிலே, அப்பா – அம்மா, சுவமிகளா இருக்கிற நான்; அப்புறம், பகவான் இவாளிடம் தயவு பண்ணி தமிழிலே தான் பேசணும். தமிழ் தாய்மொழி. தாய் தான் முதல் கடவுள். தமிழ் பேச்சை மறக்க கூடாது.”

குழந்தைகள். ‘இனிமே அப்பா – அம்மா , குரு, தெய்வத்துகிட்டே தமிழிலேயே பேசறோம். Promise!’ என்றன.

பெரியவா முகத்தில் கோடி சூர்ய பிரகாசம். மகா பண்டிதர்களுடன் அத்வைத விசாரம் பண்ணும்போது பளீரிடும் ஒளியை காட்டிலும் நூறு மடங்கு பிரகாசம்! 

source:::: http://www.periva.proboards.com

natarajan

Real Photography Using A Film Camera !!!

 

Surreal Photography Using Only a Film Camera.

Oleg Oprisco has loved fairy-tales and other-worldly stories all her life. As a photographer, living in Lviv, Ukraine, she creates surreal images. But unlike many other surreal artists, she doesn’t use any digital manipulation, indeed, she uses nothing but an old film camera.  That means all you see in these photos is real, and had to be set up. These days, digital photography has diminished the use of ‘setting up a shot’ like this, and it’s a shame, because in my opinion it comes out beautifully.
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera
beautiful photography $50 camera

source::::: ba-ba mail site

natarajan

” ஒன்று உனக்கு , இன்னொன்று உன் குழந்தைக்கு …” !!!

 



1971-ஆம் வருடம். மகா பெரியவாள் தஞ்சையில் முகாம். நாள்தோறும் கல்யாணம் வைபோகம் தான்!.

சாரி சாரியாக (ஆமாம், புடவை புடவையாக தான்) பெண்கள்.

சுவாசினீ பூஜை என்ற திருநாள் அன்றைக்கு.

சுமங்கலிகளுக்கு காமாட்சி அம்மன் திருவுருவம் பொறித்த பொற்காசு ஒன்றை, ஒவ்வொருவருக்கும் அருளுகிறார் பெரியவாள். புடவை தலைப்பை நீட்டி, இரு நுனிகளையும் இரு கைகளால் பிடித்துகொண்டு, அந்த அம்மன் காசை அருளாளரிடமிருந்து பெற்று கொண்டு நகர்ந்து செல்கிறார்கள் மாதரிசிகள்.

அந்த பெண்மணியின் புடவை தலைப்பிலும் பொற்காசு வந்து விழுகிறது. நகர்ந்து சென்று கையில் எடுக்கிறார் – பார்கிறார் – வியக்கிறார்.

இரண்டு காசுகள்…!

என்ன அதிர்ஷ்டம்! இரண்டு பொற்காசுகள்…!

தாமாகவே வந்தவை. திருடினேனா என்ன…? வேறு யாருக்கும் தெரியும்…?

மங்கையர் திலகத்துக்கு மாசுபடியாத மனம்.

பெரியவாளிடம் வந்து, அடக்க ஒடுக்கமாக நின்றார்.

“என்ன?” என்று ஒரு பார்வை, பெரியவாளிடமிருந்து.

“என் புடைவையில் இரண்டு காசு வந்திருக்கு.. எல்லோருக்கும் ஒண்ணுதானே ..? அதான்.. இன்னொண்ணை…” 

பெரியவாள் திருவதனத்தில் மந்தகாசம் மலர்ந்தது.

“ஒண்ணு உனக்கு.. இன்னொண்ணு உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு..!

அட, அப்படியா?

நான் கருவுற்றிருப்பதை பெரியவாளிடம் யாரும் சொல்லவில்லையே… பெரியவாள் எதிரில் அரைவிநாடி நேரம்தானே நின்றிருப்பேன்…

அப்புறம் என்ன?

ஏழு மாதங்களுக்கு பின் இரட்டை குழந்தைகள்.

அம்மணியின் பேறு காலம் பெரும் பேறு காலம்!

குழந்தைகளுக்கு கர்ப்பவாசம், சொர்கவாசம்!

கணேச – சுப்பராமன்களான இரட்டையர்க்கு, பெரியவாள் தான் உலகம்.

பால சந்யாசி ஆதிசங்கரர், சுவர்ண நெல்லிகனிகளை வரவழைத்து கொடுத்தார். மகா பெரியவாள் தம் கையாலேயே பொற்காசுகளை வழங்கினார்கள்.

சோடை போவார்களா, மக்கள்?

சொக்க தங்கமாக, ஞான ஞாயிற்றின் புகழ் பரப்புனர்கலாக பணி செய்து கொண்டிருகிறார்கள், இன்றைக்கும்.

source:::: http://www.periva.proboards.com

natarajan

” குழப்பம் வேண்டாம் ….இனிமேல் கவலை இல்லை … “

 



காஞ்சி சங்கர மடத்தில், ஒரு மாலை வேளை…மகா பெரியவரைத் தரிசிக்க ஏகக்கூட்டம் கூடியிருந்தது.

அப்போது, அவரது பார்வையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் தென்பட்டார்.

அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், தனக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த ராமு என்ற இளைஞரை அழைத்து, “”கியூவிலே பதினைந்தாவது ஆசாமியா நிக்கிறானே ஒரு புள்ளையாண்டான்! அவன் சைசுக்கு சரியா இருக்கிறாப்லே ஒரு சட்டை, பேண்ட்துணி வாங்கிட்டு வா! அதுக்குரிய பணத்தை ஆபீசிலே வாங்கிண்டு போ! பக்கத்திலே இருக்கிற முதலியார் ஜவுளிக்கடையில் துணி எடுத்துண்டு வா!” என்றார்.

ராமுவுக்கு பெரியவர் ஏன் இப்படி சொல்கிறார் என்ற விபரம் புரியவில்லை. ஆனாலும், 15 நிமிடங்களுக்குள் துணிமணியுடன் வந்து நின்றார். துணிமணிகளைப் பார்த்த பெரியவர், “”பேஷ்! பேஷ்! நன்னா இருக்குடா!” என்று பாராட்டி விட்டு, “”நீ உடனே போய், ஒரு மூங்கில் தட்டில் நெறயபழங்கள், பூர்ண பலம் (மட்டைத் தேங்காய்) எல்லாம் எடுத்து வச்சுண்டு, இந்த துணிமணிகளை அதுமேலே வச்சுடு. நான் சொன்னேன்னு சொல்லி, மடத்து மேனேஜர் கிட்டே 6250 ரூபாயை ஒரு கவர்ல போட்டு, அதையும் தட்டுலே வச்சுடு. என்ன பண்ணணுங்கிறதே அப்புறமா சொல்றேன்!” என்றார்.

இதற்குள் அந்த இளைஞர் சுவாமிகள் முன் வந்து விட்டார். பெரியவர் அவனை ஏறிட்டுப் பார்த்தார். ராமுவை அழைத்து, “”அந்த மூங்கில் தட்டை அவன் கையிலே கொடு.

அந்தப் பையனுக்கும், அவன் குடும்பத்துக்கும் நான் பூர்ண ஆசிர்வாதம் பண்றதா சொல்லு,” என்று இன்முகத்துடன் கட்டளையிட்டார்.

அதன்படி, தட்டை அவன் கையில் ராமு கொடுக்க, அவன் குழப்பத்துடன் நின்றான்.

“”ராமு! அவன் ரொம்ப குழம்பியிருக்கான். குழப்பம் ஏதும் வேண்டாம். அவன் வீட்டிலே பணத்தை பத்திரமா ஒப்படைக்கச் சொல்லு!” என்றார் பெரியவர்.

இளைஞரும் ஏதும் புரியாமல் தட்டுடன் கிளம்பி விட்டார்.

அவரைப் போல குழம்பி நின்ற ராமுவிடம் பெரியவர்,””ராமு! ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. அப்போ, நம்ம மடத்துக்கு ரொம்ப சிரமமான காலம். அப்போ, ஒரு ஆறுமாசம் நான் வடதேசத்துக்கு யாத்திரை கிளம்பினேன். மடத்து வாசலுக்கு வந்தேன். எதிர்த்தாப்புலே ஒரு செட்டியார் மளிகைக்கடை வச்சிருந்தார். மடத்துக்கு அங்க தான் மளிகை சாமான்கள் பற்று வரவு கணக்கு. வாசல்ல என்னைப் பார்த்ததும், செட்டியார் வேகமா ஓடி வந்தார்.

“என்ன செட்டியார்வாள்! சவுக்கியமா? வியாபாரம் எல்லாம் எப்படி போகுதுன்னு விசாரிச்சேன்! அவர் வாயைப் பொத்திண்டு பவ்யமா, “சுமாரா போறது சுவாமி! கஷ்டமாத்தான் இருக்கு! பெரியவா வடதேசம் போவதாவும், திரும்ப அஞ்சாறு மாசம் ஆகும்னும் சொன்னாங்க!’ என்று மென்னு விழுங்கினார். பிறகு, “நாலஞ்சு மாசமா மடத்து மளிகை பாக்கி அப்படியே நிலுவைல இருக்கு! எனக்கும் கஷ்டம்! அதனாலே, உங்ககிட்ட குறையைச் சொல்லிக்கிறேன்,’ என்றார்.

ஆறுமாதம் கழித்து வந்து பார்த்தால் கடை பூட்டியிருந்துச்சு! விசாரித்ததிலே, செட்டியார் மூணு மாசத்துக்கு முன்னாடி திடீர்னு காலகதி அடைஞ்சுட்டதா சொன்னா! அவரோட மனுஷாள்ளாம் எங்கே இருக்கான்னும் தெரியலே. அதற்கப்புறம் பாக்கி எவ்வளவுன்னு தெரிஞ்சு வச்சுண்டேன்! எண்ணூத்தி எழுபத்தஞ்சு முக்கால் ரூவா! அந்த பாக்கியை இன்னைக்கு தான் வட்டியும் முதலுமா தீர்த்து வச்சேன்! அந்த பையன் வேறு யாருமில்லே!

செட்டியாரோட பிள்ளை வயித்து பேரன். தாத்தாவுக்கு சேர வேண்டியதை, பேரன் கிட்ட அசலும் வட்டியுமா சேர்ப்பித்தாச்சு!

இனிமே கவலை இல்லை!” என்றார்.

பெரியவர் செய்த இந்த கைங்கர்யம் நம் எல்லாருக்கும் ஒரு பாடம். யாருக்காவது கடன் கொடுக்க இருந்து, அவருக்கு கொடுக்க இயலாமல் போனால், அவர்களின் வாரிசைத் தேடிப்பிடித்து கொடுத்து விட வேண்டும்.   

 

source::::www.periva.proboards.com

natarajan

When Madras First Voted !!!

 

S Satyamurti

S Satyamurti

Chennai has just voted, along with the rest of Tamil Nadu. Waiting for the results may be a good time to think of the first mass-based election – in 1937, when over 35 million or about 25 per cent of the adult population voted in all British-ruled provinces of India, for the local legislatures. In Madras Presidency, that meant elections to the newly created Madras Legislative Assembly.

Our city was the capital of this vast Presidency, which extended from Andhra to Kanyakumari and so the atmosphere was electric. Adding to the excitement was the Congress party, contesting elections for the first time. Leading the campaign effort was S Satyamurti, veteran freedom-fighter, lawyer, theatre personality, patron of music and a magnificent orator. Under Satyamurti, the campaign was to be a colourful one.

He had for long been using theatre and (from 1931) film artistes, to attract crowds for his public meetings. In the 1937 campaign he was to press them once again into service. Chief among these were KB Sundarambal and ‘Avvai’ TK Shanmugam. Those were polls when in place of symbols, each party was identified by a ballot box of a certain colour and the voter had to push his paper into the box of his/her choice. The Congress party was assigned the colour yellow. At each public meeting, Sundarambal and Shanmugam would sing song hits from their plays and when a sizeable crowd had collected, would speak about the Congress. Then Sundarambal would wax eloquent on the good and auspicious qualities of turmeric and therefore the colour yellow. They would then depart after asking everyone assembled to vote for the yellow box. The Devadasi campaigner Tanjavur Kamukannammal would give the colour a different twist. She would speak about snuff and then ask everyone to vote in the ‘snuff box’! A special gramophone record containing the songs of Sundarambal and Musiri Subramania Iyer along with Congress appeals carried the message into households.

Such was the Congress juggernaut that some opposing candidates opted to withdraw rather than fight the polls. The first unopposed return to the Assembly was announced a month before the election – a certain K Kamaraj Nadar (!!) was declared elected from the Sattur-Aruppukottai rural constituency.

Those were days when newspapers could get away by being blatantly partisan (or patriotic depending on how you looked at it). The Hindu, carried a headline instructing its readers to “Fill the Yellow Boxes”. “Voters should require little persuasion at this time of the day to vote for the Congress,” it said. On the eve of polling day (February 14) NS Varadachari, a Congress candidate, was roughed by hired thugs in the Triplicane area. The Hindu carried a column on this and also had a photograph of Varadachari leading a procession, with bandaged head!

The results, when announced on February 24, were well worth the effort. The Congress had cornered 74 per cent of the seats in the Assembly, the best performance by the party anywhere in India.

Keywords: hidden histories columnS SatyamurtiMadras voting

SRIRAM.V in The Hindu …MetroPlus

natarajan

முள்ளும் குறடும் ….முருகன் கருணை …!!!

இதிகாசம் மற்றும் புராணங்களில், தெய்வமே மனிதர்களுக்கு உதவி செய்து, துயரத்தில் இருந்து காப்பாற்றியதாக படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.
‘அதெல்லாம் அந்தக் காலம்; இப்ப அதெல்லாம் நடக்காது; இது கலிகாலம்’ என்ற எதிர்மறையான புலம்பலும் உண்டு.
தெய்வத்திற்கு, காலக் கணக்கோ எல்லையோ கிடையாது. தெய்வம் என்றும் நின்று அருள் புரியும்.
கலியுகத்தில், அதுவும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஒருவருக்காக, முருகப் பெருமான் நடத்திய அருளாடல் இது.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பாம்பன் ஸ்வாமிகள். இவர், கனவிலும், நனவிலும் முருகனைத் தரிசித்தவர்.
ஒரு நாள் அவர், தென்னந்தோப்பிற்குள் நடந்து கொண்டிருந்தார். கடும் வெயில், தலைக்கு மேலே சூரியன் சுட்டது. தரையோ, கீழிருந்து கால்களைத் தாக்கியது.
கடும் வெயிலில் நடந்து கொண்டிருந்த பாம்பன் சுவாமிகளின் காலில், முள் தைத்து விட்டது. சுவாமிகள் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே, தரையில் இருந்த கொதிப்பும் அவரைத் துன்புறுத்தியது.
முள் குத்திய காலைத் தூக்கி, தொடையின் மீது மல்லாத்தி வைத்து, முள்ளைப் பிடுங்க முயற்சித்தார். ஆழமாகவும், முழுமையாகவும் பதிந்திருந்த முள்ளை, பிடுங்க முடியவில்லை.
கையால் அசைக்க அசைக்க, ரத்தம் வந்து, வலி தான் அதிகமாயிற்றே தவிர, முள்ளை எடுக்க முடியவில்லை.
‘முருகா இந்த முள்ளைப் பிடுங்கும் போதே, இவ்வளவு வலிக்கிறதே… உடம்பில் இருந்து, உயிரைப் பிடுங்கும் போது, எவ்வளவு வலி இருக்கும்…’ என்று, கண்ணீர் சிந்தினார் பாம்பன் சுவாமிகள். கண்ணீர் முள்ளின் மீது விழுந்தது.
அதன் காரணமாக, முள், சற்று நெகிழ்ந்து கொடுத்தது. முள்ளைப் பிடுங்கி எறிந்து விட்டு, சுவாமிகள் திரும்பி விட்டார்.
இந்த விஷயத்தை சுவாமிகள், யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், அடியார் மனம் வருந்த, ஆறுமுகன் பொறுப்பாரா!
அன்றிரவே, தச்சு வேலை செய்யும் ஒருவர் கனவில், கந்தக் கடவுள் தோன்றி, ‘என் அடிமையான அந்த இளைஞனுக்கு, நீ ஒரு பாதக்குறடு (மரத்தாலான பாதுகைகள்)செய்து கொடு…’ என்று, கட்டளையிட்டார்.
மறுநாள், தச்சு வேலை செய்பவர், முருகப் பெருமானின் உத்தரவுப்படியே பாதக்குறடுகள் செய்து வந்து, பாம்பன் சுவாமிகளிடம் தந்து, முருகப் பெருமானின் உத்தரவையும் கூறினார்.
பாம்பன் சுவாமிகளுக்கு மெய் சிலிர்த்தது; அவர், முருகனின் கருணையை எண்ணி உருகினார்.
அடியார்கள் மனம் வருந்த, ஆண்டவன் பொறுக்க மாட்டார் என்பதை, விளக்கும் நிகழ்ச்சி இது. 


பி.என்.பரசுராமன்   IN dINAMALAR….Vara malar…

natarajan

 

 

சுவை தேடி: கும்பகோணம் டிகிரி காபி !!!

 

 

குடகு மலையில் தோன்றித் தஞ்சைக்கு ஓடிவந்த காவிரி கூடவே காபி மீதான காதலையும் கொண்டுவந்து சேர்த்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. தஞ்சை நகரின் எந்தவொரு ஹோட்டலிலும் காபியின் சுவைக்குக் குறைந்தபட்ச உத்திரவாதம் உண்டு. வீட்டுக்கு வந்த விருந்தினரை வரவேற்று உபசரிக்கையில் காபியா, டீயா என்று கேட்பது வழக்கமில்லை. காபி ஸ்ட்ராங்கா வேணுமா லைட்டா வேணுமா என்பதுதான் பொதுவான கேள்வியாக இருக்கும். பால் இல்லாத வேளைகளில் வரக் காப்பியைத் (பால் கலக்காத காபி) துணையாகக் கொள்வதும் உண்டு.

காபி பொடியைப் பொறுத்தவரை கம்பெனி தயாரிப்புகளைவிடவும் தேவையான அளவுகளில் சிக்கரி கலந்து அரைத்துக்கொடுக்கும் உள்ளூர்க் கடைகளுக்கே முன்னுரிமை. சுருக்கமாகச் சொன்னால், தஞ்சைப் பகுதியே ஆனந்தக் கசப்புக்கு அடிமையான பிரதேசம். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும்கூட காபிக்கென்று புகழ்பெற்ற உணவகங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தஞ்சாவூருக்கும் காபிக்கும்தான் அதிக நெருக்கம். மாவட்டம் முழுவதற்குமான காபி பெருமையைத் தற்போது கும்பகோணமே தட்டிப் பறித்துக்கொண்டு போய்விட்டது. கோயில் நகரம், அங்கு கூடுகின்ற சுற்றுலாப் பயணிகள் என்ற காரணங்களையெல்லாம் தாண்டி கும்பகோணத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது பஞ்சாபிகேச அய்யர் நடத்திய லெட்சுமி விலாஸ் என்ற காபிக் கடையால்தான். காபிக்குத் தேவைப்படும் பாலுக்காக அவர் பதினைந்து பசு மாடுகளைப் பராமரித்து வந்தார். அதனால் அந்தக் கடைக்குப் பசும்பால் காபிக்கடை என்ற பெயரும்கூட உண்டு.

முதல் தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் என்பதால் காபி அருந்துவது தமிழகக் கலை இலக்கிய ரசனையின் ஒரு பகுதியாகவும் ஆகிவிட்டது. தி. ஜானகிராமன் தனது கதாபாத்திரங்களை நுரைத்து மணத்த “கும்மாணம்” காபியை உள்ளம் குளிரக் குடிக்க வைத்து மனநிறைவை அடைந்திருக்கிறார். தஞ்சை ப்ரகாஷ் தனது வடிகால் வாரியம் என்ற கதையில் காபி போடும் செய்முறையை வாசகர்களுக்கு விளக்கி உதவியிருக்கிறார். கறந்த பசும்பாலில் தண்ணீர் கலக்காமல் ஆடை படராமல் தயாரிக்கிற காபிக்குத்தான் டிகிரி காபி என்ற முதல் மரியாதை. பாலுக்கு இணையான முக்கியத்துவம் காபி டிக்காஷனைத் தயாரிப்பதற்கும் உண்டு.

நூறு கிராம் அளவுள்ள காபிக் கொட்டைகளைப் பதமான சூட்டில் வறுத்து அரைத்தெடுக்கையில் அது எண்பது கிராம் வர வேண்டும். அந்தக் காபிப்பொடியிலிருந்து டிக்காஷன் வடித்தெடுக்க இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். காபிப் பொடியிலிருந்து இரண்டாவது தடவை டிக்காஷன் வடிக்கக் கூடாது. டிக்காஷனைப் பாய்லரில் வைத்து சூடு காக்க வேண்டும். காபி கலக்கும்போது முதலில் சர்க்கரையை இட்டு அதன்மீது டிக்காஷனை ஊற்றி அதற்கும் மேலாகத் தேவையான அளவில் பாலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். எங்கேயும் எப்போதும் பாக்கெட் பால் என்றாகிவிட்ட பிறகு டிகிரி காபி என்று பெயர் சொல்வதில் இப்போது எந்தப் பொருத்தமும் இல்லை.

கடையில் பாய்லரும் பித்தளை டவராக்களும் இருந்தால் மட்டும் டிகிரி காபி ஆகிவிடாது. ஆனாலும் தேசிய நெடுஞ்சாலையின் வழியெல்லாம் கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயர்ப் பலகைகளைப் பார்க்காமல் பயணிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

source:::: The Hindu….Tamil

natarajan

 

 

How Krishnans Brought Wimbledon Home …!!!

 

 

Ramanathan Krishnan and Lalitha Krishnan at their natural grass court patterned on those at Wimbledon. Photo : R Ravindran.

 

 

The English championship is two months away and fans are making plans to be there. But the first family of Indian tennis has other ideas

No sprightly girls and boys to chase the yellow balls. No linesmen to yell out calls. No electronic board to flash the scores. But superlative matches are played every day at this grass court, where tall trees fill in for spectators.

These ‘matches’ defy the humdrum order of time, space and sequence. One moment, an iceberg-cool Borg and a fiery McEnroe are locked in a nail-biting tie-breaker. In the next, Ashe gets the better of Connors with a clever mix of slice and spin. Then come Nadal and Federer fighting a war of attrition, which is followed by an emotion-soaked final where a kind Duchess of Kent offers her shoulder to a teary-eyed Jana Novotna, disconsolate after her loss to Steffi Graf.

Welcome to the private grass court at Oliver Road in Mylapore, maintained by Indian tennis’ first family, the Krishnans, as a tribute to Wimbledon. For the Krishnans, this natural grass court, which borrows features from the hallowed courts of Wimbledon, serves as a mind screen to replay and relive the timeless matches from the prestigious English championship. (Also significant is that this court is one of the very few natural grass courts in the country.)

 “Wimbledon is dear to every member of our family. We have followed the championship closely for decades,” says Ramanathan Krishnan, 77 now.

 The Krishnans not only tracked Wimbledon, they also excelled in it — a fact that largely shaped their deep attachment to the championship and also the decision to design a natural grass court patterned on those at Wimbledon. Ramanathan Krishnan is a two-time semi-finalist (1960 and 1961) at Wimbledon and his son Ramesh Krishnan, the winner of the 1979 Wimbledon juniors title and a quarter-finalist in the men’s section in 1986.

 “It was our son Ramesh’s idea to design a Wimbledon-type grass court at our house on Oliver Road. Around four years ago, he came up with this plan and everyone was excited about it. Ramesh got all the necessary information from Wimbledon. My wife Lalitha assisted in executing the project. And when it was done, we knew we had brought Wimbledon home,” declares Ramanathan, who spends the evening hours with Lalitha at this private grass court, both of them merrily parked in broad, deliciously comfortable bamboo chairs.  “When Wimbledon is on, we bring out the television set and watch the matches sitting here,” says Lalitha, 70.

The Krishnans are going to a lot of trouble to make Wimbledon more immediate for themselves: they have put two men, A. Shanmugam and M. Manickam, on the job of maintaining the court. Natural grass court maintenance is costly and cumbersome, the reason we don’t have many of them around.

Notably, this grass court is not used regularly — for ‘real’ matches, that is. “Once in two months, Ramesh, who lives in R.A. Puram, brings some of his friends along for a game,” says Ramanathan.

Besides the love of Wimbledon, there are other sentiments that spur the desire to keep the court in shape and working order. Beneath the grass, lie clayey memories of long practice hours and family bonding. “This was a clay court for well over three decades, before it was turned into a grass court four years ago. We set up the clay court in 1975. It was a training ground for Ramesh,” says Ramanathan.

 “Father would train Ramesh from 10 a.m. to 5 p.m. at this court,” recalls Gowri Krishnan-Tirumurti, Ramanathan’s daughter, who also trained at the court and is the 1982 Indian national juniors champion.

In its clayey days, the court saw five south Indian champions play and practise the sport — T.K. Ramanathan, Ramanathan Krishnan, Ramesh Krishnan, Gowri Krishnan and Shankar Krishnan (a cousin of Ramesh and Gowri). “Just like my dad and brother, Shankar went on to play Davis Cup,” says Gowri.

This private tennis court may have created champions, but its charm lies in the sense of togetherness it has fostered among the Krishnans. “I remember when we would be practising, our mother would sit on the sidelines and peel oranges for us,” says Gowri.

The bonding has extended to the youngest generation. Ramanathan’s grandchildren — Gayathri, Nandita, Bhavani and Vishwajit — are in their twenties and studies have taken some of them away from home; yet, when they visit their grandparents, they love to sit around this clay-turned-grass court. Says Gowri, “Successive generations have learnt many things around this court. Discipline is one of them.”

 And, surely, also what it takes to be a winner.

Keywords: KrishnansWimbledon

 

source:::: The Hindu…

natarajan

 

” நல்லதாப் போச்சு … நீ என்ன பண்றே ? !….”


இப்போதெல்லாம், சமையல் வகுப்புகளை
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன.
சின்னத்திரையில் காட்டுகிறபடி செய்து பார்த்தால்,
கடைசியாக உருவாகும் பண்டத்தை வாயில் வைக்க
முடியுமா.? என்பதே சந்தேகம்.
இல்லாவிட்டால், முருங்கைக்காய் சாம்பார்,
வெண்டைக்காய் பொறியல் என்று, காலம் காலமாக
வருகிற குழம்பு – பொறியல்களையே ஆங்கில வார்த்தைகள்
மிலி அளவுகள் சொல்லி நிகழ்ச்சியை ஒப்பேற்றிவிடுவார்கள்.
பெரியவா, பூர்வாசிரமத்தில் சமையற்கட்டுப் பக்கம்
போனதில்லை; சந்நியாசம் ஏற்றபிறகு அதற்கு அவசியமும்
இல்லாமல் போய்விட்டது. ஆனால் பெரியவாளுடைய
சமையல் பக்குவம் செய்யும் புதுமை முறைகள்
எப்படியோ அத்துபடியாகியிருந்தது.!.
பண்டரிபுரத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம்.
சின்னஞ்சிறு கிராமம். நாலைந்து குடிசைகள் மட்டுமே..
ஒரு பெரிய மரத்தடியில் முகாம்.
பெரியவாளுக்குப் பிட்சை தயார் செய்தபின்,
மிகுதியாக இருந்த சில பொருள்களைக் கொண்டு
ஒருவழியாக எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.
சற்று ஓய்வெடுக்கும் வேளை.
அமர்க்களமாக வந்து இறங்கினார்கள்,இருபது பேர்கள்.
எல்லோரும் சென்னைப் பகுதியிலிருந்து வந்தவர்கள்.
ஸ்ரீமடம் முகாமில், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பிரசாதமாக
அருமையான உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
வந்தவர்கள்.
ஆனால் ஸ்ரீமடம் ஒரு பெரிய மரத்தின் அடியில்
அல்லவா முகாமிட்டிருக்கிறது.
சமைப்பதற்குத் தேவையான பாத்திரங்கள்,
சாமான்கள் கிடையாதே.?.
பரமாசாரியாளுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை!
பசியுடன் வந்திருக்கும் அன்பர்களுக்குச் சாப்பாடு
போட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.
பிரும்மசாரி ராமகிருஷ்ணன் என்று ஓர் அணுக்கத் தொண்டர்
அவரிடம், “எல்லோருக்கும் சமையல் செய்”
என்று உத்திரவும் இட்டார்கள்.
ராமகிருஷ்ணன் கைகளைப் பிசைந்துகொண்டு பரிதாபமாக
நின்றான்.”அடுத்த ஊர் போனதும் சமைத்துப் போடுகிறேனே.?
என்றான்.
ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பது பெரியவாளுக்குப்
புரிந்துவிட்டது.
“அரிசி இருக்கோன்னோ.?”
“இருக்கு.கொஞ்சம் பயத்தம்பருப்பும் இருக்கு.”
(மோர்)..”நல்லதாப் போச்சு.! நீ என்ன பண்றே.? அரிசியைக்
…………..களைஞ்சு, அந்த ஜலத்தைத் தனியா ஒரு பாத்திரத்திலே
………….வெச்சுக்கோ.அந்த ஜலத்தில் கொஞ்சம் உப்புப் போட்டு
………….எலுமிச்சம் பழம் பிழிஞ்சு, நாரத்தை இலையைக்
………….கிள்ளிப் போடு. இதுதான் மோர்.
(ரசம்)..”பயத்தம்பருப்பை வேகவைச்சு-நிறைய ஜலம் விட்டு
…………- அந்தக் கொதிநீரிலே எலுமிச்சம்பழ ரசம் (சாறு)
………….சேர்த்துட்டேன்னா, அதுதான் ரசம்.
(கறி)….”வேகவெச்ச பயத்தம்பருப்பு இருக்கே.? உப்பு போடு
…………..ரெண்டு பச்சைமிளகா கிள்ளிப் போடு.
…………..இதுதான் கறி.!”
எல்லாம் அரைமணியில் ரெடி.அதற்குள், எல்லோருக்கும்
இலை, தண்ணீர் சேகரித்து வைத்தோம்.
சாதம்,பயத்தம்பருப்புக் கறி, ரசம், மோர் -என்று
அறுசுவை டின்னர்.!.”
“சாப்பாடு ஏ ஒன்.!” என்றார் ஒருவர்.
“தேவாமிர்தம்.!” என்றார் இன்னொருவர்.
“இவ்வளவு ருசியான சாப்பாட்டைச் சாப்பிட்டதே இல்லை.!”
என்றார். மற்றொருவர்.
தொண்டர்களாகிய நாங்கள் எங்களுக்குள் சிரித்துக்
கொண்டோம். எல்லாம் பெரியவாள் வாக்கின் ருசி
என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான்.
விருந்தோம்பல் பற்றி, பெரியவாளிடம் பாடம் கற்க வேண்டும்.
அது அட்சய பாத்திரம்.!.

-The inner Light illuminates our minds–  source:::::  input from a friend of mine
  natarajan