Phrases to Avoid in a Professional and formal emails….

 

Writing professional and formal e-mails isn’t as easy and straightforward as it seems.

It can sometimes go horribly wrong.

Many people don’t realise that the phrases they use can take on different, sometimes unintended, meanings in the workplace, especially when interacting with crucial clients and senior people in the company.

Having a professional bearing is good, but having professional communicative skills is far more important.

Here are some phrases you should avoid using in your e-mails, unless you want to come across as unprofessional, and perhaps even rude, to the recipient:

1. “I don’t know”

The phrase ‘I don’t know’ is the pinnacle of unprofessionalism as it conveys that the writer is bluntly washing their hands away from the work at hand and is not even willing to find a solution to it.

The ideal phrase should be: “I will get back to you on that subject matter/issue/topic” or “That is exactly what we are looking to resolve/find out/figure out.”

You are certainly not expected to know everything, but reassure the other person over the mail that you will find out what is needed or that you are working towards finding out what you don’t know.

Doing this helps you come across as an efficient and hardworking professional.

2. “Is that okay?”

When you have to follow up, discuss or enquire about a particular issue that you don’t know about, you certainly need the time to do so.

Asking the person if “that is okay” can put them off. If the person replies that it’s not okay, it will make the conversation unproductive and it heads nowhere. Not only does it make you look unprofessional, but it also makes it seem like you are sloppy at your job.

When you know that a particular matter will not be possible or needs time, it’s right to form a crisp reply and end it there without any further words. If the person is not comfortable with the decision, then run it though your boss and respond accordingly.

3. “I am the *designation title*”

Whether you have a junior-level title or a senior-level title, it’s arrogant to start an e-mail with such a sentence.

If you have a junior-level designation, it is better not to include it at all because it comes across as brash and superficial to potential clients and higher management.

4. “Hey”

Never begin an e-mail with the word ‘hey’.

It is far too casual for a professional setting and gives the reader the impression that you are a random person who has appeared form nowhere.

A better way to introduce yourself is by saying “Hello” or “I am *name* from *name of department *.”

It inspires more confidence and gives the impression that you were invited to be included in this conversation.

5. “Thanks”

Anything less than a ‘Thank you’ is righteously believed to be either sarcastic or flippant. The word ‘thanks’ is slightly harsh as well.

Refrain from using it even verbally in the office environment.

6. “That’s fine.”

‘Fine’ is a word that can be interpreted in many ways. It could mean fine in the manner of quality, or it could mean the work is average and not better.

So, instead of confusing the reader with a colloquial term, it is better and more professional to be specific in all the words you use.

Instead of “fine”, say “that is/was a good effort” or “that is/was not up to the mark.”

7. “I’m sorry.”

Saying “I’m sorry” sounds offhand and almost like you don’t mean it at all.

Always keep in mind that when you need to apologise, it is better done in person.

However, if you have to type it out in an e-mail before that, say something like “My sincere apologies for the inconvenience, let us make it up to you by *doing something else*.”

Always apologise and follow it up with a small service that you can extend to the other party with a genuine intention.

8. “Extremely”, “Enormously”, and “Exceptionally”

Avoid using adverbs like these in professional e-mails should be fact-based and not express emotion or emphasise a feeling.

For instance, when you want to say “I’m extremely busy this week,” instead say, “I have a tight schedule this week.”

9. “I’m exhausted.”

While we all know you are bound to get tired after working long hours, saying it in an e-mail is like telling people that you can’t manage your work life.

Successful people know how to work hard and work smart.

10. “!!!!!????”

Exclamation points will be the death of your professional image in a work environment.

Do not use or overuse them at all if you can help it. It looks very childlike, and using them could send mixed signs to the receiver.

Exclamation points are used when you want to tone up your virtual voice or say something in an authoritative manner.

While you may think that you sound like a proactive and efficient individual, it just may happen that you come across as pompous and rude.

Mean well, write smart and sound sincere, and things will work in your favour.

Source…..www.rediff.com

Natarajan

காவியம் படைத்த கனவு நாயகன் கலாம் முதலாண்டு நினைவஞ்சலி….

 

1931: தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவில் அப்துல் கலாம் பிறந்தார்.

gallerye_021857771_1572606

1954: திருச்சி புனித ஜோசப் கல்லுாரியில் பி.எஸ்சி., இயற்பியல் பட்டம் பெற்றார்.

 

1960: சென்னை எம்.ஐ.டி., கல்லுாரியில் ‘ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்’ பட்டம் பெற்றார்.

 

1960: டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.

 

1969: இஸ்ரோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார்.

 

1980: கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் ரோகிணி செயற்கைக்கோளை,

 

‘எஸ்.எல்.வி.,- 3’ ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவினர். இதன் மூலம்

 

உலகின் பார்வையை இந்தியா மீது திருப்பினார்.

 

1980-90: ஒருங்கிணைந்த ஏவுகணை தயாரிப்பு திட்டத்தின் கீழ், அக்னி மற்றும் பிருத்வி ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

1981: பத்ம பூஷன் விருது பெற்றார்.

 

1990: பத்ம விபூஷன் விருது பெற்றார்.

 

1992 – 99: டி.ஆர்.டி.ஓ., அமைப்பின் செயலராகவும், பிரதமரின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார்.

 

1997: நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது பெற்றார்.

 

1998: பொக்ரான் அணுஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இதன் மூலம் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது.

 

1999: அப்துல் கலாம் எழுதிய அவரது சுயசரிதை புத்தகம் ‘அக்னி சிறகுகள்’

 

ஆங்கிலத்தில் வெளியானது.

1999 – 2001 : பிரதமர் வாஜ்பாயின் முதன்மை அறிவியல் ஆலோசகராக பணியாற்றினார்.

 

2002: நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

 

2007: ஜனாதிபதி பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.

 

2007: திருவனந்தபுரத்தில் இஸ்ரோவால், தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் முதல் வேந்தராக பொறுப்பேற்றார்.

 

2007-15 : ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின், பல்வேறு பல்கலைக்கழங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.

 

2015: மேகாலயாவில் மறைந்தார்.

பொன்மொழிகள்

 

* கனவு காணுங்கள் அவற்றை நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும். என்னால் முடியும்… நம்மால் முடியும்… இந்தியாவால் முடியும் என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

 

* முதல் வெற்றியுடன் ஓய்வு எடுத்து விடாதீர். ஏனெனில் இரண்டாவது முயற்சியில்

 

தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என விமர்சிப்பர்.

 

* மழை வந்தால் பறவைகள் எல்லாம் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும். ஆனால் கழுகு மட்டும் வித்தியாசமாக சிந்தித்து, மேகத்துக்கு மேலே பறந்து மழையில் இருந்து தப்பிக்கும்.

 

* அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமை கிடையாது. ஆனால் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்பு கிடைக்கிறது.

 

* வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.

 

* நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.

 

* உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு, மேலே மேலே பறந்து செல்லுங்கள்.

 

* உன் ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனெனில் கையே இல்லாதவனுக்கும் எதிர்காலம் உள்ளது.

 

* ஜனாதிபதி, விஞ்ஞானி என பன்முக மனிதராக இருந்த அப்துல் கலாம், தேசப்பற்று மிக்கவராக இருந்தார். இந்தியாவின் மிகப் பெரும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயை தனது ‘ரோல் மாடலாக’ கொண்டு செயல்பட்டார்.

கலாமுக்கு மரியாதை

 

கலாம் மறைவுக்குப் பின் பல்வேறு மாநில அரசுகளும், அவரது பெயரை சூட்டி மரியாதை அளித்துள்ளன.

 

* டில்லியில் உள்ள அவுரங்கசீப் சாலை, அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம்.

 

* ஒடிசாவில் உள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு, அப்துல் கலாம்

 

தீவு என பெயர் மாற்றப்பட்டது.

 

* கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் சூட்டியுள்ளது.

 

* உத்தர பிரதேசத்தில் செயல்படும் உ.பி., தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்துள்ளது.

 

* டில்லி அரசு ‘மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் கல்விக்கடன்’ திட்டத்துக்கு, அப்துல் கலாம் பெயரை சூட்டியுள்ளது.

 

* தமிழக அரசு அப்துல் கலாம் பிறந்த தினத்தை ‘இளைஞர் எழுச்சி தினமாக’ அறிவித்தது. மேலும் அறிவியல் துறையில் சாதிப்பவர்களுக்கு அவரது பெயரில் விருது ஒன்றையும் வழங்குகிறது.

 

* ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை மையத்துக்கு, அப்துல் கலாம் பெயரை மத்திய அரசு

 

இன்று சூட்டுகிறது.

 

* பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் வேளாண்மை கல்லுாரிக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது.

புதுவை அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது.

 

கடைசி நிமிடத்திலும்

 

கலாம் தன் கடைசி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்கு காரில் பயணம். மேற்கொண்டார். அப்போது அவரது பாதுகாப்பிற்காக, பாதுகாப்பு வீரர்கள் நின்றபடி பின்தொடர்ந்து வந்தனர்.

 

அதைப்பார்த்த கலாம், அவரை தயவு செய்து அமரச் செய்யுங்கள் என்றார். இது வழக்கமான பாதுகாப்பு நடைமுறைதான் என எடுத்துச் சொல்லியும் கலாம், கேட்க வில்லை. கடைசியில் அவர், நான் அந்த பாதுகாவலரை சந்திக்க வேண்டும் என்றார்.

 

ஐ.ஐ.எம்., சென்றதும் அந்த பாதுகாப்பு வீரரை சந்தித்த அப்துல் கலாம், ‘நன்றி இளைஞனே. என்னால் தானே உனக்கு இந்த கஷ்டம். சோர்ந்து விட்டாயா? எதாவது சாப்பிடுகிறாயா? எனக்காக

 

1 மணி நேரம் நின்று கொண்டு வந்தாயே நன்றி இளைஞனே என்றார். அந்த பாதுகாவலருக்கு பேச வார்த்தை வரவில்லை.

 

‘சார்… உங்களுக்காக நான் 1 மணி நேரம் அல்ல… 6 மணி நேரம் கூட நின்று கொண்டே வருவேன் என்று பதிலளித்தான். கலாமின் இப்படிப்பட்ட மனிதநேய செயல்களால் தான் அவர், இன்றும் மக்களால் விரும்பப்படுகிறார்.

Source……www,dinamalar.com

Natarajan

 

இங்கிவரை யாம் பெறவே…..A.P.J. Abdul Kalam ….

kalam2

 

மானுடம் சூன்யம் ஆவதற்கோ, வெற்றிடம் ஆவதற்கோ காலம் என்றும் அனுமதித்ததில்லை. நிலைகெட்டிருக்கும் சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்கென்று, அவ்வப்போது அருட்தூதுவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே, எனையிந்த யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் என வள்ளலாரும் இதனை உறுதிப்படுத்துகின்றார். மகாகவி பாரதியும் எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தர் இந்த நாட்டில் என அழுத்தம் திருத்தமாக உரைக்கின்றார். வள்ளலார் வந்த வழியிலும், பாரதி நடந்த பாட்டையிலும் தொடர்ந்து நடந்தவர்தாம், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

காலம் காலமாக இந்திய மக்கள் புண்ணியத்தைத் தேடி இராமேசுவரத்திற்கு வந்தனர். ஆனால், வைய மக்கள் கால்கள் நோகக்கூடாதென்று, புண்ணியமே ஒரு முடிவெடுத்து 15.10.1931 அன்று, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என்னும் வடிவத்தில் இந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தது.

கலாமின் குடும்பம், பற்றாக்குறையின் கைகளில் பட்டுவாடா செய்யப்பட்டதால், எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே புளியங்கொட்டைகளைப் பொறுக்கி விற்று (இரண்டாவது உலகப்போர் நடந்த காலம்) ஓரணா சம்பாதித்ததையும், பின்னர் வீட்டுக்கு வீடு தினமணி செய்தித்தாள் போட்டதையும் அவரே கீழ்வருமாறு வருணிக்கிறார். “பத்திரிகைகளில் தினமணிக்கு ஏக கிராக்கி. என் அண்ணன் சம்சுதீன் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்கு முன்பு அதிலுள்ள படங்களைப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொள்வேன். யுத்தம் பற்றிய செய்திகளை எல்லாம் எனக்கு ஜலாலுதீன் சொல்லுவார். பிறகு நான் அதைப்பற்றி தினமணியின் செய்தித்தாள்களில் படித்துப் பார்ப்பேன். இராமேசுவரத்தில் இரயில்கள் நிற்பதை திடீரென்று நிறுத்திவிட்டார்கள். இராமேசுவரம் இருப்புப் பாதையில், ஓடும் இரயிலிலிருந்து பத்திரிகைகளைக் கட்டுக்கட்டாக வீசுவார்கள். நான் அவற்றை எல்லாம் பிடித்து வாங்கி, அண்ணன் சம்சுதீனிடம் சேர்ப்பேன். அண்ணனிடம் வாங்கியதுதான் என் முதற் சம்பளம்’ என்பதாகச் சுய சரிதையில் விவரித்துள்ளார். பழமையை மறவாதவர்கள், என்றும் தம் நிலையில் தாழ மாட்டார்கள் என்பதற்குக் கலாம் அவர்களின் வாழ்க்கை, ஓர் உரைகல்.

கலாம் உயர்நிலைப் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்திருந்தாலும், உயராய்வுக்கு (எம்.ஐ.டி.) வருகின்றபோது அவருக்குச் சோதனைகள் காத்திருந்தன. வெற்றிப்படிகளில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளில், மலர்களைக் காட்டிலும் முட்களே அதிகமாக இருந்தன. எம்.ஐ.டி.யில் முதுநிலை ஆய்வுத் திட்டம் ஒன்றைப் பெற்று, அதற்குக் கிடைத்த உதவித் தொகையில்தான், அவருடைய எதிர்காலம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் அவருடைய ஆய்வின் வளர்ச்சியைப் பார்வையிட்ட பேராசிரியர், “கலாம், உன்னுடைய அறிக்கை எனக்கு நிறைவைத் தரவில்லை. நாளை காலைக்குள் ஒரு விமானத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் விவரித்துக்காட்டும் வரைபடத்தை வரைந்து தராவிட்டால், உன்னுடைய உதவித்தொகை நிறுத்தப்படும்’ என்ற ஏவுகணையை ஏவிவிட்டுப் போய்விட்டார்.

எல்லையில்லாத மன நெருக்கடிக்கு ஆளானாலும் ஒரு பழைய கவிதையைத் தேடிப்பிடித்துப் படித்தார். “உனது எல்லா நாட்களிலும் தயாராய் இரு. எவரையும் சம உணர்வோடு சந்தி. நீ பட்டறைக் கல்லானால், அடி தாங்கு. நீ சுத்தியானால் அடி’ எனும் கவிதை நாடி நரம்புகளை அக்கினியாய் முறுக்கேற்றியது. மறுநாள் அப்பணியைச் செவ்வனே முடித்துத் தந்து, மேற்பார்வையாளரின் பாராட்டையும் பெற்றார். எது அவரைக் காயப்படுத்தியதோ, அதுவே அவரைச் சகாயப்படுத்தவும் செய்தது.

1958-இல் விமானப் படையில் விமானியாகப் பணியாற்ற வேண்டும் எனும் எண்ணத்தில் டேராடூனுக்கு நேர்முகத்திற்குச் (இண்டர்வியூ) செல்லுகிறார். தெருவரைக்கும் வந்த நல் வாய்ப்பு, வாசற்படியை மிதித்தவுடன் கதவைச் சாத்திக் கொண்டது. எட்டு இடங்களுக்கு இவர் ஒன்பதாவதாக இடம் பெற்றதுதான் காரணம்

என்றாலும், சோர்வடையாமல் ரிஷிகேசத்திலுள்ள சிவானந்தர் ஆசிரமத்திற்குள் நுழைகிறார். அங்கு அவர் பெற்ற அனுபவத்தை, “கங்கையில் நீராடி ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடன் அதிர்வலைகளின் வலுவான தாக்கத்தை உணர்ந்தேன். கருணை பொங்கும் முகத்தோடும், ஊடுருவிப் பார்க்கும் விழிகளோடும் புத்தரைப் போலக் காட்சியளித்த சுவாமி சிவானந்தரிடம் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னுடைய முஸ்லிம் பெயர், அவரிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. நான் வாயைத் திறப்பதற்கு முன்பே, என் துயரத்தின் மூலக் காரணம் பற்றி வினவினார்’ என விவரிப்பதிலிருந்து, கோபுரங்களுக்கு வேற்றுமைகள் தெரிவதில்லை என்ற உண்மையை அறியலாம்.

கலாம் 1981-இல் பத்மவிபூஷண் விருது பெற்று, இராமேசுவரத்திற்குள் நுழைகிறார். மசூதி தெருவில் ஜலாலுதீன் அவரை வரவேற்று நிற்கிறார். பள்ளி வாழ்க்கையில் கற்பித்த பட்சி லட்சுமண சாஸ்திரிகள் கலாமின் நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்குகிறார் தொடர்ந்து அருட்தந்தை சாலமன் புனித சிலுவையை ஏந்தி ஆசீர்வதிக்கின்றார். மேலும், கலாம் தம்முடைய வெற்றிக்குக் காரணமானவர்களாக மூன்றுபேரை அடிக்கடி சொல்லுவார். (1) விக்ரம் சாராபாய், (2) சதீஷ் தவன், (3) பிரம்ம பிரகாஷ். 40 பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டயங்களையும், பாராட்டுக்களையும் பெற்றபோதெல்லாம், தம்மைச் செதுக்கிய சிற்பிகளை அவர் மறந்ததே இல்லை

ஆலமரத்தின் கிளைகள் வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டே போனாலும், அதன் விழுதுகள் பூமியை நோக்கித்தான் பயணிக்கும். அதுபோல கலாம் அவர்கள் ஏவுகணை உலகத்திலும், ராக்கெட் உலகத்திலும் விண்ணளவு புகழ் பெற்றாலும், அவருடைய இதயம் அடித்தளத்து மக்களை நோக்கித்தான் கசித்து கொண்டிருந்தது. 2020-இல் குடிதண்ணீர் பஞ்சமில்லாத தேசத்தை உருவாக்க வேண்டுமென்று, தண்ணீரைத் தேசியமயமாக்க வேண்டும் என்றார்.

கலாம் வாழ்க்கையில் மகத்தான மாறுதலை ஏற்படுத்தியது, சுவாமிஜி பிரமுக் அவர்களுடைய தரிசனம் ஆகும். (பாப்ஸ் சுவாமிநாராயண் சம்பிரதாய ஆசிரமத்தின் குருநாதர்). நிவேதிதாவின் தரிசனம் மகாகவி பாரதியிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அந்த மாற்றத்தை பிரமுக் சுவாமிஜியின் தரிசனம், கலாமிற்குத் தந்தது எனலாம். அக்குருஜியே தம் வாழ்க்கையின் முடிந்த முடிவான குருஜி எனக் கலாம் எழுதுகின்றார். அக்குருநாதரைக் கலாம் 14 ஆண்டு கால இடைவெளியில் எட்டுமுறை சந்தித்து ஆத்ம விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார். கலாம் எழுதிய கடைசி நூல்: ‘The Transcendence : My Spiritual Experiences with Pramuk Swamiji’  என்பதாகும். பாரத ரத்னா கலாம் தம் மறைவுக்கு ஒரு மாதத்திற்கு முன் எழுதப்பட்ட நூல் இது.

27.07.2015 அன்று ஷில்லாங் நிர்வாகவியல் உயராய்வு மையத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட மறைவு, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு பூகம்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிம்பொனிக் சக்கரவர்த்தி பீத்தோவன் எப்படித் தம்முடைய பியானோவில் தலை வைத்தபடி மறைந்தாரோ, அப்படித்தான் கலாம் மாணவர்கள் மத்தியில் தலை சாய்த்தார். வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போட்ட ஒரு மாமனிதரின் மறைவை, உலகத்தின் அத்தனைச் செய்தித்தாள்களும் கண்ணீரால் அச்சிட்டன. தமக்கென்று ஒரு தொலைக்காட்சிப் பெட்டிகூட இல்லாதவரின் மரணத்திற்கு அத்தனைத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் அழுது தீர்த்தன. அவரால் அனுதினமும் மீட்டப்பட்ட வீணை, விதவை ஆயிற்று. பெருந்தலைவர்களின் மறைவுக்கு டெல்லியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மக்கள், முதல்முறையாக இராமேசுவரத்தை நோக்கி பயணித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, “தம்முடைய அறிவியல் சாதனைகளின் மூலம் இந்தியாவை மிக உயரமான இடத்திற்கு அழைத்துச் சென்றவர் கலாம். அவரது மறைவு ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்’ என்றார்.

அவருடைய மறைவைக் கண்ணீரில் மட்டும் கரைத்துவிடாமல், நிலைத்து நிற்கக் கூடிய ஓர் அஞ்சலியைச் செலுத்தியது, தமிழக அரசு. அவருடைய பிறந்த நாளாகிய அக்டோபர் 15-ஆம் தேதியை இளைஞர்களின் மறுமலர்ச்சி நாளாக அறிவித்தது. வியத்தகு சாதனைகளை நிகழ்த்தும் இளைஞர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூபாய் ஐந்து லட்சம், ஒரு சவரன் தங்கத்துடன் வழங்கப்படும். காற்றுள்ளவரை, இராமேசுவரம் கடற்கரை மணல் இருக்கும்வரை, இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம் எனும் கீதம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Source…..By பேராசிரியர் தி. இராசகோபாலன் in http://www.dinamani.com

Natarajan

விநாச காலம் விபரீத புத்தி….!!!

 

ஒரு பக்கம் சுவாதி, நந்தினி, வினுப்பிரியா கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் பீதியூட்டிக் கொண்டிருக்க மறுபக்கம் பெரிதாக கவனம் பெறாத இரண்டு சம்பவங்கள் மேலும் கவலை அளிக்கின்றன. ஒன்று கிரிக்கெட் பந்தை எடுத்துத் தராத காரணத்தால் 25 வயது அண்ணன் 16 வயதுத் தம்பியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்ததில் தம்பி நினைவு தப்பிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்,காவல்துறை தம்பியின் உயிரிழப்புக்கு காரணமான அண்ணனை கைது செய்திருக்கிறது இது நமது தமிழ்நாட்டில் உடையார்பாளையத்தில் நிகழ்ந்த துர்சம்பவம்.

மற்றொன்று அண்டை மாநிலமான ஆந்திராவின் பஞ்சாரா ஹில்ஸில் பள்ளி மாணவர்கள் இருவருக்கிடையே நிகழ்ந்தது. தனியார் பள்ளி ஒன்றின் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் ஒன்றாம் வகுப்பு மாணவனை அவனது அடிவயிற்றின் கீழ் பகுதியில் சரமாரியாக அடித்ததில் பாதிப்படைந்த சிறுவன் தொடர் சிகிச்சைக்குப் பின் குடல்பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த ஒரு வாரத்தில் ஓரிரு நாட்கள் இடைவெளியில் நடந்து முடிந்தவை.

இவை இரண்டிலும் நம்மை அச்சுறுத்தும் விஷயம் ஒன்றே! அண்ணனே சொந்த தம்பியை அடித்துக் கொல்வதும், தொடக்கப் பள்ளியைக் கூடத்தாண்டாத சிறுவன் ஒருவன் ஆத்திரத்தில் அவனை விட சிறியவன் ஒருவனை  சாகும் அளவுக்கு அடித்துத் துன்புறுத்துவதும் என்ன விதமான மனநிலை?! இங்கே குற்றவாளி யார்? அந்த இளைஞனா? சிறுவனா? அல்லது அவர்களின் வளர்ப்பு முறையா?

சாமானிய மனிதர்களுக்கு எப்போதாவது காலருகில் ஊறும் சிறு பூராணை அடித்துக் கொல்வதே உளவியல் ரீதியாகப் பெரும்பாடாக இருக்கிறது. உயிர்க்கொலை என்பது எப்பேற்பட்ட கொடூரம்! அறிந்தோ அறியாமலோ அந்த கொடூரத்தை நிகழ்த்திய பின் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் அறியாத வயது அந்தச்சிறுவனுக்கு என்று எடுத்துக் கொண்டாலும் 25 வயது இளைஞனுக்குமா அறியாத வயது! மொத்தத்தில் மனித உயிரின் நேசமதிப்பீடுகளை பற்றி கொஞ்சமும் சிந்தனை இல்லாமல் இப்படிச் செய்ய முடிவது ’விநாச காலம் விபரீத புத்தி’ என்று தான் கூறமுடியும்.

இப்படியான விபரீதங்களுக்கு முதல் காரணம் பின்விளைவுகளை பற்றிய யோசனையின்மை. அடுத்த காரணம் பொறுப்பின்மை மூன்றாவதாக சுயநலம் மட்டுமே பேணிக்கொள்ள வழிகாட்டும் வளர்ப்பு முறை. இந்தச் சம்பவங்களின் பின்புலனாக இத்தனை காரணம் இருக்கிறது. இவற்றையெல்லாம் சரி செய்து கொள்ள யார் சொல்லித் தரக்கூடும்?! பெற்றோர்களும் ஆசிரியர்களும் தானே முதல் வரிசையில் இருக்கிறார்கள்.பிறகு தானே இந்த சமூகம் வருகிறது.

பெற்றோர்களாகிய நாம் என்ன செய்கிறோம்? விளையாடும் குழந்தைகள் விளையாட்டின் நடுவே சண்டையிட்டுக் கொண்டு வந்து புகார் கூறினால் எத்தனை பெற்றோர் நடுநிலைத் தன்மையில் அந்த விஷயத்தை கையாள்கிறோம்?! உண்மையைச் சொல்வதென்றால் ‘யாராவது உன்னை அடித்தால் பதிலுக்கு நீயும் அடி என்றோ’ ‘திட்டினால் நீயும் திட்டு’ என்றோ தான் இப்போதெல்லாம் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வழிநடத்துகிறார்கள். இல்லையேல் இத்தனை வன்முறைக்கு அவசியமென்ன?

முதலில் நாம் நமது குழந்தைகளுக்கு எந்தச் செயலுக்கும் பின்னான விளைவுகளை பற்றி கற்றுக் கொடுத்தே வளர்க்க வேண்டும். ‘நீ உன் வகுப்பு ஆசிரியரை, தோழனை, நண்பர்களை அல்லது நீ இருக்கும் சூழலை வெறுக்கிறாயா? ஏன்? எதற்கு? என்று யோசித்து அதை நேர்மறையாக மாற்றிக்  கொள்ள வழி இருக்கிறதா என்று பார். அவர்கள் மேலுள்ள வெறுப்பை மாற்றவே முடியாது எனும் போது அடுத்த கட்டத்தைப் பற்றி எங்களிடம் கலந்து ஆலோசி. உடனடி வெறுப்போ,கோபமோ நிரந்தரத் தீர்வாகாது, உனக்காக நாங்கள் எப்போதும் உடனிருக்கிறோம் என்பதை மறந்து விடாதே’ எனும்படியான மனஉறுதியை நம் குழந்தைகளிடம் பதியச்செய்ய வேண்டும்.

இன்றைய தனிக்குடும்ப கலாச்சாரத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இப்படியான மனஉறுதி நிச்சயம் தேவைப்படுகிறது. பல வீடுகளில் வேலைக்குப் போகும் பெற்றோர் வீடு திரும்பும் வரை குழந்தைகள் வேலையாட்களுடன் தனித்து விடப்படும் சூழல் நிலவுவதால் தன்னிஷ்டமாய்  முடிவெடுக்கும் குழந்தைகள் பெருகி வரும் காலம் இது. அவர்களுக்குத் தேவை வேலையாள் இல்லை பொறுப்பான ஒரு கண்காணிப்பாளர். கண்காணிக்கும் வேலையை பெற்றோரை விட, நயமாக திறம்பட வேறு யாரால் செய்ய முடியும்? ஆகவே நம் குழந்தைகளின் செயல்களுக்கு பொறுப்பேற்க கடமைப்பட்டுள்ள நாம் மட்டுமே அவர்களின் செயல்களைக் கண்காணிக்கவும் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறக்கக் கூடாது.

அடுத்ததாக பொறுப்பின்மை; பொறுப்பு என்ற சொல்லை தமிழில் நாம் பல விதங்களில் பல பதங்களில் பயன்படுத்துகிறோம் .பொறுப்பு என்பது வெறும் சொல் மட்டுமே அல்ல அது ஓர் உணர்வு. உதாரணமாக மேல்மாடியில் இருந்து கொண்டு கீழ் நோக்கி குப்பையை  விட்டெறிந்தால் குப்பை  கீழே இருப்பவர்களின் தலையைப் பதம் பார்க்கும் என்று உணர்வது தான் பொறுப்பு. இந்தப் பொறுப்புணர்வு இருந்திருந்தால் அன்புக்குரிய சகோதரனை 25 வயது இளைஞன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றிருக்க மாட்டான்.முதலில் இந்த உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?! நமக்குள் கேட்டுக் கொண்டாக வேண்டிய கேள்வி இது. இப்படியான உணர்வு நமக்குள் இருந்திருந்து அதை நமது குழந்தைகளுக்கு வலியுறுத்தி இருந்தால் குழந்தைகள் அர்த்தமற்ற விபரீத செயல்களில் ஈடுபட வாய்ப்பே இல்லை.

யாருக்கு என்ன கஷ்டம் வந்தால் நமக்கென்ன? நாம் சவுகரியமாக  இருக்கிறோமா அது போதும் என்று மட்டுமே நினைக்கும் மனப்பான்மை சுயநலமானது. குழந்தைகளிடம், இளைஞர்களிடம் இந்த மனப்பான்மை வளர்ந்தால் அது ’வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு’. இன்றைய பெரும் விபரீதங்கள் பலவற்றிற்கு இந்த சுயநல மனப்பான்மையே அடிப்படை என்றால் பொய்யில்லை.ஆகவே கூடுமான வரையில் பெற்றோர்களும் சரி ஆசிரியர்களும் சரி தமது மாணவர்களிடையே பொறுப்புணர்வையும், பொதுநலத்தையும் வளர்த்தெடுத்தே ஆகவேண்டும்

முன்பெல்லாம் அரசுப்  பள்ளிகளில் நடுநிலைப் பள்ளி பிரிவில் ஒவ்வொரு நாளின் கடைசி வகுப்பிலும் நீதிக்கதைகள் போதிக்கப்பட்டன; இப்போதும் நீதிக்கதைகள் ’ஃலைப் ஸ்கில்’ என்ற பெயரில் பாடத்திட்டத்தில் உண்டு. ஆனால் இதை ஆசிரியர் தானே வகுப்பில் கதையாக  எடுத்துச் சொல்லி மாணவர்களுடனான சுவாரசியமான கலந்துரையாடலுடன் வகுப்பு முடிகிறதா என்றால் அது சந்தேகத்திற்கிடமானது. இந்தப் புத்தகங்களை மாணவர்கள் தாங்களே படித்துக் கொள்ள வேண்டியது தான் எனும் நிலை.

பெரும்பான்மை மாணவர்கள் நீதிக்கதைகளைப் படிப்பதாக தெரியவில்லை. அவர்கள் பாடங்களைப் படிப்பதோடு போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் ஆறாம் வகுப்பிலிருந்தே ஐ,ஐ,டி நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்புகள் என்று ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் நெட்ஒர்க் என்று தான் மனம் போகிறதே தவிர போதுமான வாசிப்பு பழக்கம் இல்லை என்பதே நிஜம்.

படிப்பு முக்கியம் தான் ஆனால் அதை விட முக்கியம் பண்பு. அதை நீதிக்கதைகளால் மட்டுமே போதிக்க முடியும் எனில் பள்ளிகள் அதற்காக ஒவ்வொரு நாளும் தனி வகுப்புகளை நடத்தினாலும் தவறில்லையே. ஒன்று பள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் வீட்டிலிருந்து  ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு  இரவையும் நமது  புராண, இதிகாச, பஞ்ச தந்திர, ஜாதக நீதிக்கதைகள் கதைகள் மூலம் குழந்தைகளுக்கான அருமையான  இரவாக நாம் ஏன் மாற்றக்கூடாது? இதிகாசங்களும் புராணங்களும் சிலருக்கு நம்பிக்கை தரவில்லை எனில் தவறே இல்லை காலத்திற்கு ஏற்றவாறு  புதிய நீதிக்கதைகளை நாமே ஏன் உருவாக்கக் கூடாது?!

அதற்கெல்லாம் நேரமில்லை எனில் நஷ்டம் நமக்குத் தான் எல்லோருக்கும் அவரவர் வேலை பெரிதே, ஆனால் இந்த நாட்டுக்கும் நமது வீட்டிற்கும் பொறாமை, காழ்ப்புணர்ச்சி, குரோதம், தீவிரவாதம்  போன்ற நஞ்சு ஊட்டப்படாத  மனம் கொண்ட இளம் சமுதாயத்தினர் தேவை எனில் நாம் அவர்கள் நலனுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும்.

தனிமை உணர்வும், நல்லது எது? கெட்டது எது? எனும் பாகுபாடு காணமுடியா குழப்பமும் குழந்தைகளை அணுகாமல் அவர்களைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை ஆசிரியர்கள் அவர்களுக்குத் துணை நிற்பார்களாக!

Source……..By கார்த்திகா வாசுதேவன் in http://www.dinamani.com

Natarajan

” ஹைகூ: தமிழ்க் கவிதையின் கம்பீரம்…” !!!

 

“ஹைகூ ஒவ்வொன்றும் ஒரு தனிவார்ப்பு, பிசிறில்லாத சிறுசிற்பம், அலாதியான அழகு, கம்பீரம்” என ஹைகூ கவிதையின் திறத்தினைப் பறைசாற்றுவார் கவிஞர் தமிழ்நாடன். தமிழ்க் கவிதை உலகில் புதுக்
கவிதை அமைத்துத் தந்த தோரண வாயில் வழியாக 1984ல் தொடங்கிய ஹைகூ பயணம், இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வாழையடி வாழையெனப் புதுப்புதுக் கவிஞர்கள் தோன்றி, ஹைகூவின் வளர்ச்சிக்குத் தங்களின் பங்களிப்பினை நல்கி வருகின்றனர்.
நெல்லை சு.முத்துவின் பார்வையில்,
“மூன்றடிச் சொற்செட்டுநேரடி அனுபவ வெளிப்பாடு
மூன்றாவது அடி மின்தாக்கு”
– என்னும் மூன்று பண்புகளும் பொருந்தியதே சிறந்த ஹைகூ கவிதை. பாடுபொருளாலும் பாடும்முறையாலும் சிறந்து விளங்கும் ஒரு சில ஹைகூ
கவிதைகள் குறித்து காண்போம்.

விலகி இருக்கும் மனித உறவுகள்

‘வெறுங்கை என்பது மூடத்தனம் – விரல்கள் பத்தும் மூலதனம்’
என்னும் எழுச்சி மிகு வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. அவரது உடன்பிறப்பு மலர்மகன். அவரும் ஒரு சிறந்த மரபுக் கவிஞர் ஆவார். ‘தொடர்பு எல்லைகளுக்கு அப்பால்…’ என்பது அவர் வெளியிட்டுள்ள ஹைகூ
கவிதை தொகுப்பு. அதில் இடம் பெற்றுள்ள ஹைகூ இது: “ தொடர்பு எல்லைக்கு அப்பால் -உறவுகள்”
இன்று உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் மனிதனால் தொடர்பு கொள்ள முடிகின்றது. தொடர்பியல் அந்த அளவிற்கு இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தொடர்பு எல்லைக்குள் வாழும் மனித உறவுகளோ விலகி இருக்கின்றன.
குடும்ப உறுப்பினர்கள் இடையே இடைவெளியும் விரிசலும் மிகுந்து காணப்படுகின்றன என்பதை நயமாகப் பதிவு செய்துள்ளார் மலர்மகன். இல்லற வாழ்வின் பதிவு
இல்லற வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமானால், கணவன்–மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்காக மற்றவர் விட்டுக் கொடுத்துப் போவது தான் முக்கியம். ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்னும் ஆன்றோர் அமுத மொழி. தங்கம் மூர்த்தி நகைச்சுவை உணர்வுடன் இல்லற வாழ்வின் இன்றியமையாத பக்கம் குறித்து இங்ஙனம் பாடியுள்ளார்:
“பட்டிமன்றம் முடிந்துதாமதமாய் வீடு திரும்பினேன்
வழக்காடு மன்றம்”
கள்ளங்கரவு கொஞ்சமும் இல்லாத – சூதுவாது சிறிதும் அறியாத – வஞ்சமோ சூழ்ச்சியோ துளியும் தெரியாத – குழந்தைகள் உலகினைப் பற்றிய அற்புதமான ஹைகூ கவிதைகளின் தொகுப்பு வசீகரனின் ‘குட்டியூண்டு.’ கவிதைத் தொகுப்பின் தலைப்பிலேயே கவித்துவம் கொலுவிருக்கக் காண்கிறோம். குழந்தைகள் உலகினை நடப்பியல் பாங்கில் வசீகரன் உள்ளது உள்ளபடி படைத்துக் காட்டியுள்ள ஹைகூ:
“ தனித்து நின்ற குழந்தையிடம்யார்நீ என்றதும் சொன்னது:
‘எங்க அப்பாவுக்கு நான் பொண்ணு!’”

ஹைகூவின் உயிர்ப் பண்பு

ஹைகூவுக்கு வலிமையையும் வனப்பையும் சேர்ப்பது அதன் ஈற்றடியே. இதனை, ‘படுத்துக் கொண்டே படித்தேன், துாக்கி நிறுத்தியது, ஹைகூவின் கடைசி வரி’ என ஹைகூ வடிவிலேயே படம்பிடித்துக் காட்டுவார் தெ.வெற்றிச்செல்வன்.
“ சுதந்திர தினம்மனதிற்குள் துக்கம்வந்தது ஞாயிற்றுக்கிழமை”
சுந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வந்தால், ஒரு நாள் விடுமுறை அல்லவா இல்லாமல் போகும்? மனத்திற்குள் துக்கம் பொங்கி வராதா என்ன? என்கிறார் கவிஞர் நவதிலக். இல்லாவிட்டால் கவிஞர் மீராவும் காதலியைக் குறித்து, ‘கிழமைகளில் அவள் ஞாயிறு’ என்று பாடி இருப்பாரா? தமிழனின் விடுமுறை மோகத்தினை மென்மையாகச் சாடும் கவிதை இது!

வாசகரும் கூட்டுப் படைப்பாளி

‘கவிஞன் இறங்கிக் கொள்ள, வாசகன் அதன் மீது பயணம் தொடர்வான். அதுதான் ஹைகூ’ என்பர் அறிஞர். வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால்,
‘ஹைகூ ஓர் உணர்வு நிலை, வாசகனைக் கவிஞனின் நிலைக்கு உந்தி உயரத் தள்ளும் மிகச் சிறந்த வடிவம் அது.’ இவ்விலக்கணத்திற்குக் கட்டியம் கூறும் பா.உதயகண்ணனின் ஹைகூ…
“காரைத் துடைத்துக்காசு கேட்டான்
எட்டிப் பார்த்தது நாய்”
இங்கே காரைத் துடைத்து விட்டுக் காசு கேட்பது ஒரு குழந்தைத் தொழிலாளி என்று தெளிவாகத் தெரிகிறது. ஆயின், ‘எட்டிப் பார்த்தது நாய்’ என்னும் ஈற்றடியில் இடம் பெறும் ‘நாய்’ என்பது யார்? புதியவர் எவரையேனும் கண்டால் குரைப்பது நாயின் இயல்பு. அது போல், சிறுவனிடம் தனது வெறுப்பை உமிழும் – விரட்டி அடிக்கும் – காரின் உரிமையாளரும் ஒரு வகையில் பார்த்தால் ‘நாய்’ தான்! கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால் கவிதையில் ஆழ்ந்திருக்கும் கவிஞரின் உள்ளம் புலனாகின்றது.
“எவன் கண்பட்டதுவிற்கவே இல்லை
திருஷ்டி பொம்மைகள்”
என்பது வித்தியாசமான பாடுபொருளைத் தன்னகத்தே கொண்ட செ.ஆடலரசனின் ஹைகூ.
‘திருநெல்வேலிக்கே அல்வா’ என்பது போல், ‘திருஷ்டி பொம்மைகளுக்கே’ திருஷ்டியாம்!

காலத்திற்கு ஏற்ற பாடுபொருள்

ஹைகூ கவிதையின் தனித்தன்மை காலத்திற்கு ஏற்ற, குறிப்பாக, இந்த நுாற்றாண்டிற்கே உரிய பாடுபொருட்களைக் கையாளுவதாகும். அவற்றுள் ஒன்று விளைநிலங்கள் இன்று விலைநிலங்கள் ஆகி வரும் கொடுமை ஆகும். பச்சைப் பசேல் எனத் திகழ்ந்த நெல் வயல்கள் எல்லாம், இன்று வானளாவ உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உருமாறிவிட்டன. இதனை ரத்தினச் சுருக்கமான
மொழியில் பதிவு செய்துள்ளது செந்தமிழினியனின் ஹைக்கூ:
“ விளை நிலங்கள்விலை நிலங்களாயினவீடுகள்”
‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது பல்லாண்டு காலமாக அரசியல்வாதிகள் முதலாக தமிழ் ஆர்வலர்கள் வரை அயராது பறைசாற்றி வரும் கொள்கை முழக்கம். ஆயினும், நடைமுறையில் இன்னும் அந்தக் கனவு நனவாகவில்லை. இந்த கசப்பான உண்மையை – அய்யாறு ச.புகழேந்தி ஹைகூ கவிதை ஒன்றில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றாற் போல், காரசாரமாகப் பதிவு செய்துள்ளார்:
“ எங்கும் தமிழ்எதிலும் தமிழ்இல்லை”

வாழ்வியல் பதிவு

எட்டு மணி நேரம் துாங்கும் மனிதன் – எட்டு மணி நேரம் உழைக்கும் மனிதன் – ஒரு நாளில் எத்தனை மணி நேரம் வாழ்கிறான் என்று கேட்டால், அவனால் பதில் சொல்ல முடியாது. இந்த வாழ்வியல் உண்மையைப் பொட்டில் அடித்தாற் போல் எடுத்துரைக்கிறது இ.பரிமளாவின் ஹைகூ ஒன்று:
“ வாழ்நாளில்வாழ்ந்த நாள்?
விரல்களுக்குள்”
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மென்மையான கருணை மனத்துக்குச் சொந்தக்காரர்கள் ஹைகூ கவிஞர்கள். பஞ்சு நெஞ்சு படைத்த அவர்கள், இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளுக்காகக் கூட அழுகின்ற இயல்பினர். இவ் வகையில் நினைவுகூரத் தக்க ரமா ராமநாதனின் ஹைகூ இதோ:
“அடித்துத் துவைக்கமனமில்லை
சட்டையில் பூக்கள்!”
நிறைவாக ஈழத்து அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுவது போல்,
“தமிழ்க் கவிதை என்ற நதி வற்றாது ஓடுகிறது. தமிழை வளப்படுத்துகிறது, தமிழால் வளம் பெறுகிறது.”
அவரது இக் கூற்று இன்றைய ஹைகூ கவிதைக்கும் பொருந்தி வரும்

உண்மையே.-   பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரைeramohan@gmail.com

Source….www.dinamalar.com

Natarajan

வாரம் ஒரு கவிதை….” காதல் கொலை ” !

 

காதல்  கொலை ….
…………….
அந்த சிறு பூவின் இதயத்தில் இல்லை  நீ என தெரிந்தும்  ஒரு
வாள் எடுத்து அந்த மலரின் இதயத்தை நீ பிளந்தது  ஏன் ?
காதல்  என்ன , கடையில் கிடைக்கும் கத்தரிக்காய் என
நினைத்தாயோ ….இல்லை ” நான் ஒரு ஆண் ” என்னும்
இறுமாப்பா  உனக்கு ?
உன் ஆணவ கொலை வெறியால் நசுங்கி பொசுங்கி விட்டதே ஒரு
சின்னஞ்சிறு  மலர்  இன்று …
காதலுக்காக “நான் செய்த ஒரு கொலை” என்று நீ சொல்வாய்!
ஆனால் நீ     வெட்டி சாய்த்தது ஒரு உயிரை மட்டுமல்ல …பலர் கண்
முன்னால் சரிந்து  வீழ்ந்த அந்த இளம் தளிரின் புன்னகை தவழும்
குழந்தை முகம் நினைத்து நினைத்து  தினம்  தினம் மனம் துடிக்கும்
என் போன்ற பலர்   உயிரையும்  சேர்த்துதான் …….
Natarajan

மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்…? தெரியுமா உங்களுக்கு ?

 

மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்?

படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த
நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்!
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

தமிழ் எழுத்துகளில் –
ரெண்டுசுழி ன என்பதும் தவறு!
மூனுசுழி ண என்பதும் தவறு!

ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேர்ந்து சேர்ந்தே வருகிறதப் பாருங்களேன்! இது புரியாம இதுகளை நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!
(வர்க்க எழுத்து-ன்னா,
சேர்ந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்)
இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால்
எழுத்துப் பிழையும் குறையும்.

எப்புடீ?

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா…
பக்கத்துல ட இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும்.
ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா…
பக்கத்துல ற இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.
ஏன்னா அது றன்னகரம்.
என்று புரிந்து கொள்ளலாம்.

Source…..input from Facebook share

Natarajan

” அது ஒரு காலம் …” !!!

 

💥ஒரு காலம் இருந்தது.

💥மனிதாபிமானத்தையும்
மனச்சாட்சியையும்
எம்மில் பெரும்பாண்மையினர்
நேசித்த ஒரு காலம் இருந்தது.

💥கடவுளுக்கு பணிந்த காலம்.
💥சத்தியத்தை மதித்த காலம்.
💥நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
💥வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
💥அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
💥பெண்களை போற்றிய காலம்.
💥நீதியை நிலைநாட்டிய காலம்.
💥நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
💥பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
💥பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.

💥நாடகக்கலை வளர்ந்த காலம்.
💥நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
💥பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
💥சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
💥வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
💥பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
💥பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.

💥ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
💥முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.

💥பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
💥கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
💥கோயில்கள் சேவை செய்த காலம்.
💥மழை தவறாமல் பொழிந்த காலம்.
💥மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
💥ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
💥தண்ணீர் விற்கப்படாத காலம்.
💥வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
💥கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.

💥மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
💥ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
💥பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
💥மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
💥நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
💥இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
💥விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
💥வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.

💥எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
💥மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
💥புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
💥உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
💥மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
💥வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
💥வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.

💥சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
💥வாகன நெரிசல் இல்லாத காலம்.
💥இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
💥அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
💥வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
💥கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
💥வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
💥எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
💥ஊர்கூடி தேர் இழுத்த காலம்.

💥இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத
ஒரு காலமிருந்தது
ஒரு காலமிருந்தது.

💥அது நாங்களெல்லோரும்
அன்பில் திளைத்திருந்த காலம்.

Source….. input from a friend of mine

Natarajan

Few commonly mispronounced words in English … !!!

 

20 commonly mispronounced English words!
In India most of our languages are pronounced differently at various places across our nation with their native slang. 
But very rarely we get info about the correct pronunciation of each word.
You can find 20 common words in this message.

20 commonly mispronounced English words!

If using English properly interests you, and you are afraid you might be mispronouncing some words, you can check this list of commonly mispronounced words…

  1. Cabin: This word for a private office area is often heard mispronounced as kay-bin. It should be pronounced as Cab-in(cab as in taxicab). In offices around the country you can find people at all levels using this massive distortion, but once you get used to the proper spelling it’s an easy transition. 
  2. Data: should be day-ta not daa-taa which is also usually heard in offices. Surprisingly people from the IT sector and database consultants also sometimes also mispronounce this word which is so fundamental to their work.
  3. Dengue: This disease is pronounced as Deng-ee(pronunciation of ‘gee’ as in geese). It is not Deng-goo. People all over the world mispronounce this word – after all it is not indigenous to most of us. But there have been so many cases in India recently (unfortunately) that this is good to know.
  4. Dessert: It is pronounced dizz-urt, (pronunciation of u as in sun). You would order dessert at a restaurant. It sounds different from desert (with one s) which is the pronounced dez-ert (as in Thar desert).
  5. Bowl: It is pronounced bol (rhyming with pole). Not asba-ool which sounds very funny (and in fact sounds too much like bowel).
  6. Truth: It is pronounced true-th and not tru-th (long ‘oo’ not short ‘u’). The same actually goes for the word tooth (it’s not tu-th)
  7. Epitome: The correct pronunciation is ep-i-tummy, instead of what people, and again this is people everywhere, usually end up saying, epi-tome (rhyming with Rome).
  8. Executive: Should be pronounced eggs-eck-uh-tiv, notexe-cute-tiv which is commonly heard. If you especially want to be a top executive at a major corporation – saying this word correctly would seem quite important.
  9. Develop: The correct pronunciation is dih-vel-up, and not as day-vuh-lupp. Extending that to
  10. Pizza: The correct pronunciation is peed-zuh, (peed pronounced as in weed). And not pi-za.
  11. Wednesday: wen’s day is the correct way of saying the name of this day (the D is usually silent).
  12. Opposite: Instead of uh-pose-it it should be pronouncedawp-uh-zit. The emphasis is on the first syllable ‘opp’. The same goes for the word ‘opportunity’ which is notup-port-unity but awp-urt-tune-ity
  13. Biology: Once again, the first syllable ‘bi’ gets emphasis. Where we usually say bio-logy, it is instead more proper to say bai-awe-lojy. Other ‘ology’ words are the same – geology is jee-awe-logy, cosmology is cos-maw-logy, even the made-up word fakeology or phekologyshould be pronounced phek-awe-logy, not pheko-logy.
  14. Monk: It should be pronounced munk (rhyme with drunk). It is often mispronounced mawnk (rhyme with donk from donkey).
  15. Genre: The correct pronunciation has a soft j, like the French say it. jon-ruh, (j is the sound as in vision). It is often mispronounced as jen-ner.
  16. Quote: The correct pronunciation is kwo-te. It is often pronounced as coat.
  17. Salon: It should be pronounced as sa-lawn, (sa as in apple, lon as in John) It is often pronounced as suh-loon which is incorrect.
  18. Police: The correct pronunciation is puh-leece. It is often mispronounced as pu-liss. Like Chulbul Pandey is a pu-liss wallah.
  19. Gauge: The correct pronunciation is gay-j. It is often mispronounced as gauj.
  20. Pronunciation : Ironically, the word ‘pronunciation’ itself is often mispronounced as pro-noun-ciation (the second syllable should be ‘nun‘ not noun).


Interestingly, I read somewhere the only English word understood and used universally across the world is ‘taxi’. I wonder where that came from… but now you know wherever in the world you end up you will always be able to get a taxi.

In the meanwhile if you want to hear any of the pronunciations of these words my favourite website to listen to them is www.howjsay.com, a free online dictionary for English pronunciations.

Source……….input from a friend of mine

Natarajan

Quotable Quotes….”The most beautiful thing is to see a person you love smiling. And even more beautiful is knowing that you are the reason behind it.”

 

All About Relationship- 30 Quotes

1. In life you’ll realize there is a purpose for everyone you meet. Some will test you, some will use you, and some will teach you. But most importantly, some will bring out the best in you.
2. Keep people in your life who truly love you, motivate you, encourage you, enhance you, and make you happy. If you know people who do none of these things, let them go.
3. Too often we underestimate the power of a touch, a smile, a kind word, a listening ear, an honest compliment, or the smallest act of caring – all of which have the potential to turn a life around.
4. The most beautiful thing is to see a person you love smiling. And even more beautiful is knowing that you are the reason behind it.
5. Choose your relationships wisely. It’s better to be alone than to be in bad company.
6. Being alone does not mean you are lonely, and being lonely does not mean you are alone.
7. Fall in love when you’re ready, not when you’re lonely.
8. Love means giving someone the chance to hurt you, but trusting them not to.
9. You know you’ve found true love when you catch yourself falling in love with the same person over and over again.
10. Don’t wait for the right person to come into your life. Rather, be the right person to come to someone’s life.
11. The one who is meant for you encourages you to be your best, but still loves and accepts you at your worst.
12. Never allow someone to be your priority while allowing yourself to be their option.
13. Some relationships are like glass. It’s better to leave it broken, than to hurt yourself more by trying to put it back together.
14. Just because one person doesn’t seem to care for you, doesn’t mean you should forget about everyone else who does.
15. Someone else doesn’t have to be wrong for you to be right.
16. It is okay to be angry. It is never okay to be cruel.
17. Never do something permanently foolish just because you are temporarily upset.
18. Silence is often the loudest cry. Pay attention to those you care about.
19. We don’t always need advice. Sometimes all we need is a hand to hold, an ear to listen, and a heart to understand.
20. It’s not so much what you say that counts, it’ how you make people feel.
21. A silent hug means a thousand words to the unhappy heart.
22. Don’t mess with someone’s feelings just because you’re unsure of yours.
23. True happiness comes from within, not from someone else.
Don’t make the mistake of waiting on someone or something to come along and make you happy.
24. Don’t choose the one who is beautiful to the world, choose the one who makes your world beautiful.
25. If you feel like your ship is sinking, it might be a good time to throw out the stuff that’s been weighing it down
26. Let go of people who bring you down, and surround yourself with those who bring out the best in you.
27. Just because it didn’t last forever, doesn’t mean it wasn’t worth your while.
28. Say what you mean and mean what you say. Don’t expect others to read your mind, and don’t play games with their heads and hearts. Don’t tell half-truths and expect people to trust you when the full truth comes out. Half-truths are no better than lies. And don’t ignore someone you care about, because lack of concern hurts more than angry words.
29. Lies help no one in the long run. So… 1) Don’t say “I love you” if you don’t mean it. 2) Don’t say “I understand” if you have no clue. 3) Don’t say “I’m sorry” if you’re not. 4) Be honest with yourself and your loved ones.
30. Tell the truth, or eventually someone will tell it for you.
Source….unknown….input from a friend of mine
Natarajan