When Chennai Fought Back – Heart-Warming Stories of Selflessness and Courage…

Sanjeev Sekhar had some heart-warming experiences when he was in Chennai during the rains – incidents that broke several stereotypes and left a deep impression on him. Here is a look at 12 such people and events he came across, that changed his outlook forever.

The popular images of Chennai’s unity in the face of adversity, of various religious groups working together, and of volunteers wading through deep waters to rescue people, would have been imprinted in your mind by now – thanks to the media. But there were some occurrences that could not be covered by the media. They just rose to the challenge in small and big ways, and quite unintentionally, smashed many stereotypes in the process.

Here are some of those stories – incidents that I experienced, and people that I had the privilege of meeting, who left a deep impression on me:

1. Geethapriya and Sareetha – The Women Who Stood Strong in the Face of Crisis:

Geethapriya and her core team

Geethapriya and her core team

Geethapriya, a recent acquaintance, converted the parking area in her apartment into a food-making, packing and distribution centre and ran it with the efficiency of a world class manufacturing unit. It started off as a small operation with her friends Yogesh, Kavitha, Malli, Karthikeyan, Sangeetha, Uday and Satish – dispatching 500 basic food packets containing biscuits, buns and water on December 1. And the initiative grew immensely by the end of the week. On December 6 alone, she and her team that had increased to 30 members, made and dispatched close to 15,000 food packets including rice and roti meals. The final count for the week exceeded 30,000 meals.

And Geetha managed it all with a smile.

The food assembly line

The food assembly line

When they fell short of raw materials, she didn’t hesitate to use her own money to keep the supply going.

 

Geethapriya with the full team

Geethapriya with the full team

Another lady from my neighbourhood, Miss Sareetha, converted her apartment area into a warehouse and dispatch centre. By December 5, her apartment, H110, was the byword for emergency food supplies.

With the able assistance of her core team including Raghul, Ajay and Gokulraj, Miss Sareetha ensured that supplies were not wasted or procured by hoarders.

To give you a faint idea of their achievement, the final count for just rotis, parottas and idlis that were dispatched was 1.5 lakh, 50,000 and 2.5 lakh respectively.

cr4 (1)

The H110 team

Both these ladies and their respective teams had a formal account and audit process for all foods distributed and areas that they went to. One can only imagine the countless number of affected people who benefited from their actions.

2. The Three Guys Who Put Their Adventurous Spirit to Use:

cr5

Raghul, Ajay and Gokulraj have always embraced adventure and the great outdoors. As fitness and cycling enthusiasts, they love pushing their limits. But they never thought that their passion would be tested for a greater purpose.

On December 1, when it dawned upon them that the rains had turned into a disaster of epic proportions, they swiftly set out to rescue stranded people. Their physical prowess was aided by their native intelligence as they prepared a makeshift raft and reached stranded citizens. When searching for food sources, a Facebook post led them to apartment H110 and Miss Sareetha. The rest is history.

Over the span of that dreadful week, this untiring team coordinated rescue and relief operations from H110 using cycles, boats and old school swimming. In trying conditions, this team passed the Iron Man test with flying colours.

3. The Food-People who Thought beyond their Bottom Line:

Without thinking about their profits and losses, star rated restaurants, small scale hotels, and even road side food vendors opened their kitchens to provide tonnes of free food. Business can sometimes be about something other than profits.

4. These Two Generous Uncles:

On December 5, I was desperately running short of fuel and cash in hand. I managed to find a working ATM and stood last in a long line. Two friendly middle-aged men standing in front of me noticed the stuff in my car and asked general questions about what I was doing. I was the last to enter the ATM and was lucky enough to be able to withdraw cash. On stepping out, I found that they were still there. “In case the ATM had run out, we thought we will give you a Rs. 1,000 each. That should at least get you enough fuel to keep running,” they said. So much for the stereotypical penny-pinching middle-class uncle who cares only about his filter coffee and arm chair political analysis – they stood out like bosses that day.

5. My amazing Colleagues:

My office had a fair bit of water logging. Many computers and documents were damaged. With the worst not yet over, the whole office team turned up on December 5, and painstakingly cleaned the office to salvage the remaining computers. If it wasn’t for them, we would not have been able to resume work immediately. Some of them had been impacted directly by the rains, and I didn’t expect anyone to turn up. Yet they did. Loyalty counts for a lot more than privileged backgrounds and fancy degrees. Such stalwarts as colleagues and employees are a blessing to any organization.

6. The Selfless Givers:

cr6

Vel Arumugam, a gentleman from Erode, purchased 1,000 blankets and rode an overnight bus to Chennai, sitting in the driver’s cabin due to lack of seats. I got his contact through a relief WhatsApp group and was lucky to receive 100 blankets. I had never met this person before. Talk about trust and kindness from a total stranger.

He, along with Miss Vijayalakshmi, India’s first lady chess grandmaster, conducted relief operations in the city. The phrase ‘Young Indian’ has received a negative twist in the last few weeks due to a political scandal. Take a look at these people mentioned above – this is the ‘Young India’ we must celebrate, project and harness.

7. The Local Biker Gang That Was Full of Surprises:

The situation worsened by the morning of December 6. I stopped for a tea break at my favourite haunt – the ubiquitous Cheta Chai Shop. A bunch of burly looking guys were fervently discussing relief operations that they were planning for the day. I identified them as the local biker gang.

Over the years, I had always wondered (admittedly in a mildly condescending manner) whether they had a real job. All they ever seemed to do was go on road trips or endlessly sip tea and smoke cigarettes for hours together. Knowing that any contact could be useful at that point, I reached out to them and exchanged information.

An hour later, my car that was loaded with food, blew a tyre. And one phone call later, the very same team came to my aid, loaded their SUV with all the food and zipped off to the target area, Siruseri that was 80 km away from their planned destination. So the tough guys, Lakshminarayanan, Ajith, Bharath and Rajashekar – “jobless” or not, sure have a heart of gold. When the chips were down, these men turned out to be rebels with a cause.

8. The Actress Who Didn’t Care About Being Noticed:

Ramya, a media personality and actor, constantly worked the phones and used her contacts and popularity to collect endless food supplies and water. Was she covered by the media? No. Did she take advantage of the situation to make it a photo – op? No. She just did what she had to and truly wanted to do. No frills, no scenes.

9. Those Outside the Country & Attached to Their Roots:

An NRI friend took a day off from work to collect and filter information received through various social networks, and kept ground level volunteers posted on genuine distress calls. Another US based friend organized blankets and mosquito coils and had them dispatched to Chennai from a city in North India. Yes, they left for greener pastures. But that didn’t stop caring for their first home.

10. From Bangalore With Love:

Folks from Bangalore used their access to control rooms in Bangalore and Chennai to disseminate verified information to ground level volunteers. Is Bangalore a cooler city than Chennai? Is Karnataka selfish for its stand on the Cauvery issue? Well, I don’t know about all that. On a citizen level, our neighbours were there for us when we needed them the most.

11. The Man Who Set an Example:

cr7

Michael Hubert is an elderly man who runs an NGO for children. The flood waters inundated his house and he had to shift base to stay safe. In spite of his own situation, Mr. Hubert, who walks with the aid of crutches due to a recent spinal surgery, headed out to offer solace and relief materials to victims who had lost it all. More than the relief material itself, it was the human touch provided by a man who clearly wasn’t keeping well himself, that moved people. When it came to looking out for lesser privileged people, Mr Hubert literally walked the talk.

12. WhatsApp to the Rescue:

Finally, every WhatsApp group had turned into an info-centre. There were repetitions and outdated posts too, but these were outnumbered by the timely leads on availability of supplies and the overall result was positive. We can wish away social media for all its evils, but when tragedy struck, the memes and gossip posts gave way to conduits for a higher purpose.

I chose to highlight these incidents and people as they are from various walks of lives, professions, strata of society, geographical locations, age groups and time zones. Take these incidents and people and multiply them a few thousand folds – you will get the answer as to how Chennai fought back. It is ironical that our parliament was having a debate on the idea of India. If the Delhi-centric media had turned their cameras this way a little earlier, the visuals would’ve given that debate some answers. When the state machinery was floundering and sincere efforts were being politicized and derailed by party hoodlums, it was these citizens who gave life to that machinery. Every one of them turned into a nut, bolt, cog and gear, working synchronously to keep the machinery going.

Now that the city is limping back to normalcy, I am sure we will get back to our bickering ways, highlighting our differences and playing blame games. We are humans. And that’s just how humans are. To expect a permanent Utopian society is a foolishly romantic notion. But the events of that week hinted at the possibility of such a selfless society. For now, we can take great comfort in knowing that such a possibility exists.

Kudos to the people near and far who created this possibility.

– Sanjeev Sekhar

Source…..www.rediff.com

Natarajan

” The Man who led Chennai’s Rescue Effort …”

Soldiers join the resuce operations in Chennai

IMAGE: Soldiers join the rescue efforts in Chennai. Photograph: MoD/Twitter

‘Coordination between our 50 teams, each with a strength of 45 men, played a key role in rescuing flood-affected people in Chennai. In all, we succeeded in rescuing over 20,000 people.’

‘The NDRF, an exclusive dedicated standalone multi-disciplinary disaster response force, is the only one of its kind in the world.’

NDRF chief O P Singh on how his organisation helped rescue and relief in flood-ravaged Chennai.

NDRF chief O P Singh

National Disaster Response Force Director General O P Singh refuses to be drawn into any controversy regarding the unprecedented release of over 29,000 cusecs of water from the Chembarambakkam reservoir on the night of December 1, without having alerting the state government, the police or the power utility services.

Water experts believe this release was the main reason for the floods that devastated Chennai with the situation being made worse by the heavy rainfall.

Singh,  is a 1983 cadre Indian Police Service officer. As head of the NDRF he was responsible for the rescue of nearly 50,000 civilians during the disastrous flooding of Sringar in September last year. His organisation’s work during the Nepal earthquake earlier this year was much appreciated by the governments of Nepal and India. The NDRF was formed by an Act of Parliament in September 2014.

He spoke exclusively to Rashme Sehgal for Rediff.com

You had 50 NDRF teams working night and day to rescue people through this crisis. What has the NDRF learning curve been from this?

What we witnessed in Chennai is the phenomenon of urban flooding. It is very different from rural floods or floods in semi-urban areas. Its special feature is that as water levels start to rise, the water begins to flow in a very swift manner. This kind of urban flooding we are witness to can be described as a very recent phenomena.

We witnessed it in Mumbai ten years ago. Jammu and Kashmir was our first experience of intense urban flooding.

How did you go about tackling the situation in flood-hit Chennai?

We are the only official disaster response team in the country. We have a strength of 12 batallions of 15,000 men drawn from the Central Reserve Police Force, the Indo-Tibetan Border Police, the Border Security Force and the Central Industrial Security Force who join us for a period of deputation lasting five years.

The first two years are spent providing them very intensive and highly professional training in how to handle disaster situations in different areas, whether it be the collapse of structures, search and rescue, deep underwater diving, underwater communication, medical first responder and also how to deal with biological, radiological and nuclear emergencies.

Coordination between our 50 teams, each with a strength of 45 men, played a key role in rescuing the flood-affected people in Chennai.

In all, we succeeded in rescuing over 20,000 people.

If you spend two years training them, then why should they revert back to their earlier cadre three years later? Doesn’t all this intensive training go waste by this kind of reversion?

That is a very valid question. If you permanently keep them (in the NDRF) then they might lose their motivation. We are thinking of keeping them for a longer period and are considering the possibility of extending their deputation from five to ten years.

We are also looking at a possibility of allowing 12 per cent of our force to be kept in the NDRF on a permanent basis.

You need to remember that this is an exclusive dedicated standalone multi-disciplinary disaster response force. It is the only one of its kind in the world. They focus only on disasters and nothing else.

When there are no disasters, we spend our time trying to empower the community because the community is the first responder to a disaster. We also interact closely with the police, the fire brigade and also provide training to organisations like the NCC (National Cadet Corps), the National Service Scheme and the home guards. We are capable of reaching a disaster within 20 minutes.

Were you able to reach Chennai within 20 minutes of the flood occurring?

In Chennai, our 50 teams flew in from Bhatinda, Guwahati, Patna and Pune. We had already pre-positioned some teams around Chennai and were receiving regular reports from the Indian Meteorological Department.

You had pre-positioned your teams around Chennai prior to the massive flooding?

We had four teams that had been pre-positioned. We had teams in Cuddalore and Kanchipuram and had two teams in Puducherry. Within two to three hours of being informed about the heavy rainfall and about the release of water from the reservoir, our local battalion stationed in Ernakulam was there.

What were the immediate steps you took?

Our first steps were on how to evacuate the people who were marooned. We had to put them in boats and take them to a safer location. For that we needed divers, life jackets and boats.

In some areas there was eight to nine feet of water. Chennai airport was submerged in eight to nine feet of water. Several localities were completely submerged.

The second major problem we faced was the breakdown of power resulting in a major communication failure. People’s mobile phones had gone dead. There was also the apprehension was of people getting electrocuted.

The other problem we faced that even though people were marooned, they were not willing to leave their homes.

Why was that? Did people feel that in their absence, their homes would get looted?

People living in ground floor houses agreed to get evacuated, but those living on the first floor moved to the second floor and then onto the roof.

The settlements along the banks of the river Adyar which were all low lying areas, saw huge amounts of water collect there. Our teams found it very difficult to navigate these areas.

More than 300 people died in these floods.

A large number of these deaths took place in some hospitals because of the power failure. The ICU units in the hospitals were affected because of the lack of power.

Our 50 teams were using Quick Deployable Antennae (for satellite communications) which is a portable system and can be used both in the digital and analogue mode. But this QDA is an internal system that can be used only by us.

But on our helpline, we were getting information via SMS, e-mails and Whatsapp, and also from television channels. I was stationed in Chennai and constantly telling my response team to reach the area from where the alert had been sounded. I was acting as a link between the victim and the parent or others.

Obviously, during the flood, people were on edge, they had become nervous and very jittery. I had to keep assuring the public. It was a huge challenge to communicate and reach out to the people especially since the power facilities were down.

But our men were working round the clock. I would like to cite the example of one rescue mission that my men undertook of a woman called Deepthi who was in her final stages of pregnancy and living in the Ramapuram area. Two NDRF sub-inspectors Bijumon and Satish reached out to her in a boat, but could not load her onto a boat.

She had to finally be rescued by a chopper. The two jawans helped her climb onto a water tank from where they helped her climb her onto an IAF helicopter being flown by a team led by Wing Commander Simon and Squadron Leader Venkatraman.

The lady gave birth the next day to two twin girls and her father Mohan Raj sent me a letter commending the work done by the NDRF and hoping his twin grand-daughters would join the NDRF one day.

The NDRF received praise in Chennai, but the NDRF received criticism for its rescue operation work during the floods that hit Kashmir last year.

No, I don’t think so. The terrain of Srinagar is completely different from the terrain of Chennai. Srinagar is an extremely mountainous area. The Jhelum river had spilled over and mixed with the Dal Lake and the entire area looked like a vast sea.

The current there was very sharp and we had to use choppers. The flood water ended up dividing the old Srinagar city from the Dal Lake area. Our teams ended up rescuing 50,000 people in the operation.

Chennai used to be a dry city. But the incessant rain, unregulated construction and the release of a huge amount of water from the Chembarambakkam reservoir caused this deluge.

To go back to my earlier question, what is your learning from this deluge?

I believe we have to strengthen our response measures to meet disasters. But the long-term strategies would be to pay much greater attention to prevention and mitigation strategies. These will involve flood mapping and satellite imagery. But most important, we need to pay much greater attention to regulate development in our cities.

To take the example of Chennai, which as a city can be divided into three parts. No new construction must be allowed in the vulnerable parts of the city. The state government must take strong measures in this. I believe after witnessing two major floods that all urban construction must be regulated.

In terms of mitigation strategies, we need to construct water channels to drain out the water. More important, we need to revive the water channels that have been destroyed. We need to take very strong steps on this score.

Cities must develop resilience to face heavy rain and for that we need to take institutional measures to ensure that there can be no encroachment on marshlands, our traditional tanks and lakes that have shrunk must be restored and all the waterways that had been constructed to drain excess water must also be restored to ward off future threats.

Source…….Rashme Sehgal in http://www.rediff.com

Natarajan

” நிமிடக் கட்டுரை – சென்னையைப் பாதுகாத்த பக்கிங்காம்…”

சென்னையின் கால்வாய்களையும் ஆறுகளையும் இணைத்துச் சமன்படுத்திவந்த பக்கிங்காம் கால்வாய் மட்டும் உயிர்ப் போடு இருந்திருந்தால் சென்னை இன்று நீரில் தத்தளித்திருக்காது.

1801-ல் வெளிவந்த மெட்ராஸ் கெஜட் அறிவிப்பின்படி சென்னையைச் சுற்றியுள்ள ஓடைகளை இணைக்க எண்ணூரிலிருந்து சென்னை வரை ஒரு கால்வாய் கட்டத் திட்டமிடப்பட்டது. பிறகு ஆந்திராவின் காக்கிநாடா பகுதியிலிருந்து தமிழகத்தின் விழுப்புரம் வரை பறந்து விரிந்த மிக நீண்ட கால்வாயாக அது கட்டப்பட்டது. இன்று சென்னையை முட்டித்தள்ளும் ஆறுகளும் ஏரிகளும் அன்று பக்கிங்காம் கால்வாய்க்குக் கட்டுப்பட்டிருந்தன. உதாரணத்துக்கு, கூவத்தையும் அடையாறையும் இணைக்கும் ஆற்று வழிப்பாதை இருந்தது.

கோதாவரி ஆற்றோடும் கிருஷ்ணா நதியோடும் கைகோத்த இந்த பக்கிங்காம் கால்வாயில் 1890-களில் வணிகப்பொருட்களை உற்சாகமாகப் பல படகுகள் சுமந்து சென்றன என்று ‘இந்தியன் பால்ம்’ என்னும் புத்தகத்தில் பால் ஹைலாந்த் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பின்னாளில் எதிர்பாராத வெள்ளத்தினாலும் வறட்சியினாலும் பக்கிங்காம் கால்வாய் வழி வணிகம் தடைபட்டுப்போனது என்பது தெரியவருகிறது.

இதேபோன்று, சென்னையின் மழை நிலவரம் குறித்து 64 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் விவரங்களை 1832-ல் வெளியிட்டார் ஆர்தர் காட்டன். இதன்படி சென்னையில் மழை வரத்து சீராக இல்லாமல் ஏற்றம் இறக்கத்தோடு மாறி மாறிப் பொழிவதாகக் குறிப்பிட்டுள்ளார். 1827-ல் 88.41 அங்குலம் வரை சென்னையில் மழை பொழிந்திருக்கிறது. ஆனால் 1831-ல் 44.35 அங்குலமாக அது குறைந்திருக்கிறது. 1832-ல் வெறும் 18.45 அங்குலம் மட்டுமே பொழிந்திருக்கிறது. அடுத்த ஆண்டில் 37.11 அங்குலமாகத் திடீரெனப் பெருகியிருக்கிறது.

இவ்வாறாகச் சென்னையின் மழை நிலவரம் ஏற்ற இறக்கத்தோடு இருப்பதால் இப்பகுதிக்கான நீர் மேலாண்மை கண்ணும் கருத்துமாகத் திட்டமிடப்பட வேண்டும் என தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். சென்னையின் நீர் மேலாண்மையில் பக்கிங்காம் கால்வாய் முக்கியப் பங்குவகித்தது என்பதற்கான பதிவுகளும் காணப்படுகின்றன. பழுதடையாமல் இருந்தவரை கொள்திறன் ஒரு நொடிக்கு 5,600 கன அடி நீரைக் கொள்திறனாகக் கொண்டிருந்தது.

ஆனால் சென்னையின் ஏரிகளுக்கும் பிற நீர்நிலைகளுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் பக்கிங்காம் கால்வாய்க் கான முக்கியத்துவமும் மறைந்துபோனது. 1900 மே 10-ல் வெளியான

`தி இந்து’ ஆங்கில நாளிதழின் கட்டுரை ஒன்றில் இது துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு பக்கிங்காமின் அருமை அறிந்து மீண்டும் காக்கிநாடா முதல் புதுச்சேரி வரை அதன் நீர் படுகையைச் செப்பனிட்டு தேசிய நீர்வழிப் பாதையை அமைக்க 2008-ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்தக் கனவுத் திட்டம் மெய்ப்படவில்லை. சென்னையின் இன்றைய அவல நிலையைப் பார்த்த பிறகாவது விடிவு காலம் பிறக்குமா?

– ‘தி பிஸினஸ் லைன்’
தமிழில் சுருக்கமாக: ம. சுசித்ரா

Source….ஜி. நாகா ஸ்ரீதர்….www.tamil.thehindu.com

Natarajan

” இப்போது சொல்லுங்கள், அடையாறு ஆறா, சாக்கடையா?…”

சற்று ஆறுதலாக இருக்கிறது. மறைமலையடிகள் பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் மக்கள் ஆர்வமாகப் பார்த்துச் சொல்கிறார்கள்: “அடையாத்துல எவ்ளோ தண்ணீ!”

சென்னையில் மூன்று ஆறுகள் ஓடுகின்றன. அடையாறு, கூவமாறு, கொசஸ்தலையாறு. ஏராளமான கால்வாய்கள் குறுக்கிலும் நெடுக்கிலும் வெட்டுகின்றன. ஆனால், சென்னைவாசிகளுக்கு சாலையில் எந்த நீர்நிலை குறுக் கிட்டாலும் அதற்கு ஒரே பெயர்தான். கூவம். அதுவும் ஆற்றின் பெயராக விளிக்கப்படுவது இல்லை. சாக்கடைக்கான மறுபெயர்.

ஆறு அமைதியாக ஓடும்போது ஆறாக அதை நாம் பார்ப்பதில்லை. அது தன் இயல்பைக் கொஞ்சம் ஆவே சமாக வெளிப்படுத்தும்போது அதன் பெயரைச் சரியாக உச்சரிக்கிறோம்: ஆறு.

வெள்ளத்துக்கான அடிப்படைக் காரணம்

பத்து நாட்கள் கழித்தும் சென்னை வெள்ளத்துக்கான அடிப்படைக் காரணம் தொடர்பான விவாதங்கள் முடிந்த பாடில்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் நொடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதைப் பற்றியும் ஆற்றங் கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளைச் சுட்டியுமே பெரும்பாலான விவாதங்கள் போகின்றன.

மனித நாகரிகத்தின் வளர்ச்சியே நதிக்கரையை ஒட்டி அமைந்ததுதான். ஆற்றங்கரையோரத்தில் வீடுகள் இருப் பதைப் பிரச்சினை என்று கூறுவது, கடற்கரையோரத்தில் கடலோடிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசுவதற்குச் சமமானது. நீர் எங்கேயோ பிழைப்பு அங்கே, வாழ்வும் அங்கே.

அகண்ட காவிரி முக்கொம்புக்கு வரும்போது கடல்போலக் காட்சி தரும். சர்வ சாதாரணமாக ஆற்றில் நொடிக்கு 4 லட்சம் கன அடிகள் போகும். இருபுறங்களிலும் குடியிருப்புகள் உண்டு. மன்னார்குடியில் காவிரியின் கிளைநதியான பாமணியாற்றங்கரையில் வரிசையாக வீடுகள் அமைந்த தெரு சஞ்சீவிராயன்கோயில் தெரு. வீடுகளின் கொல்லைப்புற வாசலைக் கடந்து பத்தடி எடுத்துவைத்தால், ஆறு. எவ்வளவு வெள்ளம் போனாலும் கொல்லை வாசலை நீர் தொட்டதில்லை. பிரச்சினை ஆற்றை ஒட்டி வாழ்தலில் அல்ல. ஆற்றில் ஓடும் தண்ணீரின் அளவிலும் அல்ல. ஆறு ஆறாக இருக்கிறதா என்பதில் இருக்கிறது; நீளம், அகலம், ஆழம் எல்லாவற்றிலும். குறிப்பாக, கரைகள் எப்படி இருக்கின்றன என்பதில் இருக்கிறது.

கரை என்று ஒன்று இருக்கிறதா?

மழை நாட்களில் காவிரிக் கரையோரக் கிராமங்களைக் கதிகலங்க வைக்கும் சொல் கரையுடைப்பு. ஆறு தூர்வாரப்பட்டு, இரு மருங்கிலும் குவிக்கப்படும் மண்தான் கரை. இது பிற்காலத்தில் உருவான முறை என்று சொல்வார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். “அந்தக் காலத்துல ஆறு-குளங்களைத் தோண்டினா மண்ணை எடுத்து ஊருக்குள்ள போடுவாங்க. ஊருங்கிறதே அப்படிதான் உருவானுச்சு. ஒருகட்டத்துக்கு மேல ஊருக்குள்ள மண்ணு போடுற பழக்கம் போயி கரையை ஒட்டியே குவிக்குற பழக்கமாயிடுச்சு” என்பார்.

இப்படி உருவான மேடு-பள்ளம்தான் புதிய வார்த்தைகளை உருவாக்கின என்பார் பேராசிரியர் தங்க.ஜெயராமன். “ஊரில் மேடாகப்பட்ட பகுதியில் மேட்டுக்குடிகள் வசிக்கும் இடம் நத்தம். மேடாக்கப்படாத இடம், இன்னும் சொல்லப்போனால், ஒருபுறம் மேடாக்கப்பட்டதால், மறுபுறம் பள்ளமாகும் பகுதி பள்ளக்கால்; ஊரில் இடம் கிடைக்காத, சாதி/பொருளாதாரரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான வசிப்பிடமாக அது மாறிவிட்டது” என்பார் ஜெயராமன்.

வெள்ளம் பொங்கும்போது இயல்பாகவே பள்ளத்தை யொட்டிய கரையில் அழுத்தம் அதிகம் இருக்கும். போதாக் குறைக்கு, இந்தப் பக்கமுள்ளவர்கள் எங்கே தம் பக்கக் கரை உடைத்துவிடுமோ என்ற அச்சத்தில், அந்தப் பக்கக் கரையைத் தட்டிவிடும்போது அங்கே கரையுடைப்பு நடக்கும்.

இயற்கையாகவோ, செயற்கையாகவோ இப்படிக் கரை உடைத்துக்கொள்ளாமல் இருக்க, ராக்கண் விழித்து கண் காணிப்பதும் ஆயிரக் கணக்கில் மண் மூட்டைகள் தயாரித்து கரையைப் பலப்படுத்துவதும் கிராமங்களில் இன்றைக்கும் நடைமுறையில் உள்ள வழக்கங்களில் ஒன்று.

ஆக, ஆதிக் கரைகளும் இன்றைய கரைகளும் ஒன்றல்ல. கிராமத்துக் கரைகளும், நகரத்துக் கரைகளும் ஒன்றல்ல. பொதுவாக, இன்றைய காலகட்டத்துக்கு, விவசாயம் இல்லாத பகுதிகளில் ஆற்றின் இருமருங்கிலும் வலுவான கான்கிரீட் சுவர்களை அமைத்து, வருஷா வருஷம் தூர்வாரி, அகழும் மண்ணை கான்கிரீட் கரைகளுக்கு அப்பால் போடுவதே உத்தமமான வழி.

கரையா, அப்படியென்றால்?

சென்னை வெள்ளம் தொடர்பான விவாதங்களில் ஒரு முக்கியமான விஷயம் விடுபடுவதாகத் தோன்றுகிறது. சென்னையில் ஆறுகளுக்குக் கரைகளே கிடையாது பல இடங்களில். அடையாற்றங்கரையோரத்தில் பல இடங்களில் கரையும் தரையும் ஒன்று. காவிரியில் வெள்ள நாட்களில் பொதுப்பணித் துறை லஸ்கர்கள் லட்சக் கணக்கில் மண் மூட்டைகளைத் தயாரித்து கரைகளை வலுப்படுத்துவது இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது. அடையாற்றில் வெள்ளத்தின்போது அப்படியான செயல்பாடுகளையெல்லாம் ஒரு இடத்தில்கூடக் காணோமே ஏன்? அடிப்படை ஒன்றுதான். அரசே சென்னையின் ஆறுகளை ஆறுகளாக மதிப்பதில்லை.

வெட்கக்கேடு அரசியல்

சுமார் 70 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட சென்னையில் இதுவரை 5.87 லட்சம் குடியிருப்புகளுக்கே கழிவுநீர் வெளியேற்ற வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. இன்னும் 15% குடியிருப்புகளுக்கு, கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடியிருப்புகளுக்குக் கழிவுநீர் வெளியேற்றக் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என்பதை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் இந்த ஒரு லட்சம் குடியிருப்புகளின் கழிவுநீரும் எங்கே போகிறது? சென்னை ஆறுகளில்!

சென்னையின் நீர்வழித்தடங்களில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர், ஆறுகளில் திறந்துவிடப்படுவதை அரசே அனுமதிக்கிறது. சென்னையின் நீர்வழித்தடங்களில் கூவமாற்றில் 105 இடங்களிலும் பக்கிங்ஹாம் கால்வாயில் 183 இடங்களிலும் அடையாற்றில் 49 இடங்களிலும் கழிவுநீர் கலப்பதை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இதை அயோக்கியத்தனம் என்று எழுதினால் அந்த வார்த்தை வெட்கப்படும். ஆனால், இது குறித்த குற்றவுணர்வு ஏதும் இல்லாத அதிகார வர்க்கம்தான் மழையின் மீதும், வெள்ளம் மீதும், ஆற்றின் மீதும் பழியைப்போட்டு விவாதம் செய்கிறது!

எந்தத் துணிச்சலில் அவர்கள் பேசுகிறார்கள்? மக்களுக்கு எதுவும் தெரியாது; கேள்வி கேட்க ஆள் கிடையாது எனும் துணிச்சல். ஒரு பொறுப்புணர்வுள்ள குடிமகராகக் கேள்வி கேட்கும் முன், நம் பக்கம் உள்ள ஒரு பெருந்தவறை நாம் திருத்திக்கொள்ள வேண்டும் என்பேன். சென்னையில், ஒரு நாளைக்கு 65 கோடி லிட்டர் கழிவுநீர் உற்பத்தி ஆகிறது.

தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் ஊரில் இவ்வளவு நீர் பயன்படுத்தப்படுவதும் வெளியேற்றப்படுவதும் அநியாயம்.கழிவுநீர்க் குழாயில் கழிவுநீரோடு திடப்பொருட்களையும் சேர்த்து வெளியேற்றுவது அதைவிடவும் அக்கிரமம். சுமார் 3,650 கிமீ நீளத்துக்குச் சென்னையில் கழிவுநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு நாளும் அவை அடைப்பைச் சந்திக்கின்றன.

மல-ஜலம் நீங்கலாகக் கழிவுநீரில் ஒரு சோற்றுப் பருக்கைகூடச் செல்லக் கூடாது. ஏனென்றால், ஒரு வீட்டிலிருந்து ஒரு பருக்கை எனக் கொண்டாலும் 7 லட்சம் குடியிருப்புகளிலிருந்து 7 லட்சம் பருக்கைகள் இந்தக் கழிவுநீர் குழாய்களில் வந்து சேரும். அனுதினமும் நாம் எவற்றை யெல்லாம் கொட்டிக்கொண்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். எல்லாம் ஆறுகளை நோக்கியே செல்கின்றன.

சென்னையில் வெள்ளத்தின் வேகம் கொஞ்சம் மட்டுப்பட்ட மறுநாள் அடையாற்றில் ஒரு பிடி நீரை அள்ளிப்பார்த்தேன். காவிரிக்கும் அடையாற்றுக்கும் பெரிய வித்தியாசங்கள் தெரியவில்லை. ஒருவாரம் கழித்து இப்போது பார்க்கும்போது தண்ணீர் மீண்டும் கருப்பாக ஆரம்பித்திருக்கிறது. வாழவைக்கும் ஊர் இதற்கு மேலும் நாசமாக விடக்கூடாது.

மாற்றத்தை நம்முடைய சமையலறைக்கும் கொண்டுவர வேண்டும். முதலில் நம் வீட்டுக் குழாய்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம். அடுத்து, ரிப்பன் மாளிகையை நோக்கிப் புறப்படுவோம்!

-சமஸ், in http://www.tamil.thehindu.com
தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

Natarajan”

” மனித நேயம் ” …. ஒரு புதுக் கவிதை !

“மனித  நேயம்”
…………..
இயற்கை அன்னையின் சீற்றத்தில் பொங்கியது
ஆறும் , ஏரியும்  மட்டுமா ?
மனித நேயமும்  சேர்ந்துதானே !
பிரளய நேரத்தில் பிற மொழி மக்களும் நெருங்கிய
உறவாக மாறி  தங்கள் கரம் நீட்டி பல இன்னுயிர்
காக்க ….காரணம்…   இன்னமும் இம்மண்ணில் வற்றாமல்
ஊறும்  மனித நேயம் !
இது எம் மதம் அது உம் மதம் என பேதம் பார்க்காமல்
எம்மதமும் சம்மதம் …”அதுவே என் வேதம் இனி” என
நம்மை சொல்ல வைத்ததும் … நம் உயிர் காத்த வேற்று மத
மனிதநேயம் !
வீடிழந்த   மக்களை  தேடி அழைத்து நம் வீட்டில் தங்க
இடம் கொடுத்து  உன்ன உணவும் நாம் கொடுத்த அந்த தருணம்
நம்முள் தூங்கி விட்ட மனித நேயத்தை நாமே   தட்டி எழுப்ப ,
இயற்கை நமக்கு கொடுத்த ஒரு அரிய  வாய்ப்பு !
இயற்கையின் சீற்றத்தில் பொங்கி வழிந்த இந்த மனித நேயம்
இனி  என்றும்
மங்காமல்,வற்றாமல் ஒரு ஜீவ நதியாகவே  தங்கி ஓடவேண்டும் நம்முள்!
This Kavithai of mine has been published in Dinamani as  Vaasagar Kavithai under the caption ” Kavimani “…. in http://www.dinamani .com on 14 dec 2015
Natarajan

” ஃபேஸ்புக்கின் ரமணன்: ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான்!”

பிரதீப் ஜான்

பிரதீப் ஜான்

தமிழக மக்களுக்கு எப்படி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் பிரபலமோ, அதற்கு சற்றும் குறையாமல் சமூக வலைதளங்களில் தமிழக நெட்டிசன்களின் முக்கிய வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான்!

‘தமிழ்நாடு வெதர்மேன்’ அண்மைக்காலமாக அதிகம் பின்தொடரப்பட்ட ஃபேஸ்புக் பக்கம் இது. இதன் சொந்தக்காரரான வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான். மழைப்பொழிவின் மீது தனக்கு ஏற்பட்ட தீரா ஆர்வத்தை விவரிக்கிறார்.

மழையை மட்டுமே பார்த்த நம்மில் பலரும் அதி கனமழை, பெருமழை போன்றவற்றை சந்தித்துவிட்டோம். ‘எல் நினோ’ என்றால் என்னவென்று கூகுள் தேடலை தொடங்கிவிட்டோம். செய்தி சேனல்களில் கடைசியாக சொல்லப்பட்ட வானிலை முன்னறிவிப்பு பிரைம் டைம் ஸ்டோரியாகிவிட்டது. செய்தித்தாளில் உள்பக்கத்தில் கட்டம் கட்டி வைக்கப்பட்டிருந்த வானிலை நிலவரம் பேனர் செய்தியாகிவிட்டது. பெருமழை பெரிய மாற்றங்களை செய்துவிட்டுச் சென்றிருக்கிறது.

இந்நிலையில், சென்னையை பெருமழை புரட்டிப்போட்ட காலகட்டத்தில் தொடர்ந்து வானிலை அறிவிப்புகளை பகிர்ந்து வெளிநாட்டு ஊடகங்கள் சில ஏற்படுத்திய பீதியை நீக்கி அசராமல் பணியாற்றிக் கொண்டிருந்தார் பிரதீப் ஜான்.

யார் அந்த பிரதீப் ஜான், இளம் வயதில் கவிதைக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தும் மழையை எப்படி இவர் வேறு கோணத்தில் பார்க்கத் துவங்கினார்?

1996 ஜூன் மாதம். பிரதீப் ஜானின் வாழ்க்கையை மாற்றியது வானிலை மாற்றம். தொடர்ச்சியாக மூன்று நாட்களில் சென்னையில் 700 மி.மீ மழை பெய்திருந்தது. சாலைகளில் வெள்ளம் பாய்ந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கிப்போயினர். நகரமே முடங்கியது.

இவையெல்லாம் நடந்தபோது பிரதீப் ஜானுக்கு வயது 14. மழையின் காரணமாக பிரதீப்பை வீட்டை விட்டே வெளியேறக்கூடாது என முடக்கினர் பெற்றோர். வெற்று சிந்தனையை விரட்ட பால்கனியில் தஞ்சம் புகுந்தார் பிரதீப். அந்த நொடியில் இருந்து அடுத்த 36 மணி நேரத்தை அங்கேயே செலவழித்தார்.

அந்த அனுபவத்தை விவரித்த பிரதீப் (33), “அந்த 36 மணி நேரமும் மழை என்னை முற்றிலுமாக ஆட்கொண்டிருந்தது. மழை கம்பிகள் தற்காலிக குட்டைகளை நிமிடத்துக்கு நிமிடம் பெரியதாக்கிக் கொண்டிருந்தன. என்னால் மழைப்பொழிவின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அனுபவம் இளைப்பாறுதல் தருவதாகவும் அழகியல் சார்ந்ததாகவும் இருந்தது” என்றார்.

தற்செயலாக ஏற்பட்ட அந்த அனுபவத்துக்குப் பின்னர் மழைப்பொழிவை பதிவு செய்வதை பிரதீப் சிரத்தையுடன் செய்யத் தொடங்கினார். அகும்பே, ஹல்லிகல், சிரபுஞ்சி, குட்டியாடி, சின்ன கல்லார், தலக்காவிரி மற்றும் பிற இடங்களில் பிரதீப் மழைப் பொழிவை பதிவு செய்து கண்காணித்து வருகிறார். நாடு முழுவதும் எப்போது எந்தப் பகுதியில் பெருமழை பெய்தது என்றால் கணிணியை சொடுக்காமல் கண் இமைக்கும் நேரத்தில் தன் ஞாபக சக்தியை தட்டிவிட்டுச் சொல்கிறார்.

இந்தியன் வெதர் மேன், வேகரீஸ் ஆஃப் வெதர், கீ வெதர் போன்ற பல்வேறு வானிலை முன்னறிவிப்பு இணையதளங்களுக்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

“வானிலையை கணிப்பது நேர விரயம், மிகவும் கடினமானது. இதை ஏன் செய்கிறாய் எனப் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை வானிலையை கணிப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது என்னுடைய பேரார்வம்” என்கிறார் பிரதீப்.

ஆர்குட்டின் தீவிர விசிறியாக இருந்த பிரதீப் 2012-ல் தான் ஃபேஸ்புக்கில் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கினார். ‘தமிழ்நாடுவெதர்மேன்’ (Tamilnaduweatherman) என்ற அந்த பக்கத்துக்கு இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் வெறும் 1000 லைக்குகள் மட்டுமே இருந்தது. ஆனால், நவம்பர் மழை மக்களை வானிலை முன்னறிவிப்புகளை தேடி அலையவிட்டதில் அவரது ஃபேஸ்புக் பக்கத்துக்கு 64,000 லைக்குகள் கிடைக்கச் செய்துள்ளது.

இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் அண்மையில் சென்னை வானிலை தொடர்பாக இவர் பதிந்த நிலைத்தகவல் 2 லட்சம் பேரைச் சென்றடைந்துள்ளது. சாலைகளில் மழை வெள்ளம் கரை புரள அவரது ஃபேஸ்புக் இன்பாக்ஸில் குறுஞ்செய்திகள் வெள்ளம் புகுந்தது. “என் வீட்டில் நான் இருக்கலாமா? இப்போது திருமணத்தை நடத்தலாமா? என் கணவர் வேலைக்குச் செல்லலாமா? என பல்வேறு கேள்விகள் அவருக்கு வந்தன.

பெருமழையினால் சென்னை தத்தளித்த நாட்களில் எல்லாம் பிரதீப் தூக்கம் தொலைத்து வானிலையை கண்காணித்துக் கொண்டிருந்திருக்கிறார். கனமழை எச்சரிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மெனக்கெட்டுக் கொண்டிருந்தார். என்னதான் தொலைக்காட்சிகளில் வானிலை முன்னறிவிப்புகள் வந்து கொண்டிருந்தாலும் ‘தமிழ்நாடுவெதர்மேன்’ ஃபேஸ்புக் பக்கத்தை நாடுவோர் குறையவில்லை. சென்னையில் ஆயிரக் கணக்கில் வானிலை வலைப்பதிவர்கள் இருந்தாலும் பிரதீப்பின் கணிப்பு தனித்துவத்துடன் பளிச்சிட்டது. அதற்கான காரணத்தை பிரதீப் கூறும்போது, “வானிலை முன்னறிவிப்புகளில் நான் தொழில்நுட்ப வார்த்தைகளை புகுத்துவது இல்லை. மக்களுக்கான தேவை எவ்வளவு மழை பெய்யும், அதனால் வெள்ளம் ஏற்படுமா என்பது மட்டுமே. அவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தை ஜாலங்களில் அக்கறை இல்லை என்பதை புரிந்து கொண்டேன்” என்றார்.

சென்னை தத்தளித்த வேளையில் துல்லிய கணிப்பை தர துடித்துக் கொண்டிருந்த பிரதீப்புக்கு சவாலாக இருந்தது கருமேகம் அல்ல சில ஜோதிடர்களின் ஆதாரமற்ற கணிப்புகளும், சமூக வலைதளங்களில் பரப்பிவிடப்பட்ட பஞ்சாங்க கணிப்புகளுமே. அந்த பீதியிலிருந்து மக்களை வெளிக்கொணரும் சமூக பொறுப்பு பிரதீப்புக்கு இருந்துள்ளது.

அந்த பொறுப்பைப் பற்றி பிரதீப் விவரிக்கும்போது, “வானிலை முன்னறிவிப்புகளை தரும் சிலர் சிஎஃப்எஸ் என்று சொல்லப்படும் கிளைமேட் ஃபோர்காஸ்ட் சிஸ்டம் என்ற நீண்ட நாட்களுக்கான தரவுகள் அடிப்படையில் கணிப்புகளை வெளியிடுகின்றனர். அதன் அடிப்படையில் அடுத்த மாதம் மழை பெய்யும் என்ற கணிப்புகளைக் கூறுகின்றனர். ஆனால், அவை துல்லியமானது அல்ல. ஏனெனில் வானிலை என்பது அன்றாடம் உருமாறும் தன்மை கொண்ட நிகழ்வு.

வானிலை ஆய்வு மையமும் முன்னறிவிப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்குகின்றன. ஆனால், அவர்கள் இதுவரை ஃபேஸ்புக் பக்கத்தையோ, ட்விட்டர் பக்கத்தையோ பிரத்யேகமாக உருவாக்கவில்லை. எனவே, அண்மையில் பெய்த பெருமழை குறித்த தகவல்களைப் பெற மக்கள் இணையத்தை நாடினர். இந்த தருணத்தில்தான் வானிலை வலைப்பதிவர்கள் மக்களுக்கு அருமருந்தாகிவிட்டனர். மக்களுடன் இடைவிடாத தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதால் என்னைப் போன்ற வானிலை ஆர்வலர்கள் மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டனர். மக்களின் நம்பிக்கை என்னை நெகிழ வைத்துள்ளது. இப்போது எனக்கான பொறுப்பும் கூடியிருக்கிறது” என்றார்.

டிசம்பர் 1, 2 வெள்ளம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாக பிபிசி வெதர் மற்றுமொரு எச்சரிக்கையைப் பதிவு செய்தது. ஏற்கெனவே பிபிசி கணித்த 50 செ.மீ மழையளவில் கிட்டத்தட்ட 49.4 செ.மீ மழை தாம்பரத்தில் பதிவானதால் பிபிசி கணிப்பை புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சிலர் வீடுகளை காலி செய்யத் தொடங்கினர். செய்வதறியாது பலர் திகைத்து நின்றனர். அந்த வேளையில்தான் பிரதீப் பிபிசி கணிப்பு தவறு என்று விளக்கத்துடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிலைத்தகவலை பதிவு செய்தார். அவர் சொன்னபடியே வறண்ட வானிலை தொடர்வதால் அவரது கணிப்பின் மீதான நம்பகத்தன்மை மேலும் அதிகரித்துள்ளது.

“பிபிசி-க்கு வானிலையை கணித்துச் சொன்னவர் என்னைப் போல் ஒருவரே. நாம் எதைப் பார்க்கிறோமோ அதையே அவர்களும் பார்க்கின்றனர். முன்னறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் சற்று பொறுமை காக்க வேண்டியது அவசியம் என அவர்கள் தெரிந்திருக்கவில்லை. மேலும், இத்தகைய முன்னறிவிப்பு பாதிக்கப்பட்ட மக்களை உளவியல் ரீதியாக எவ்வித உளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. உள்ளூர் வானிலை நிலவரத்தை நன்கு அறிந்திருந்த என்னைப் போன்ற வானிலை ஆர்வலர்கள் யாரும் பீதியடையவில்லை. எங்களுக்குத் தெரிந்திருந்தது சென்னையில் இனி கனமழைக்கு வாய்ப்பில்லை என்பது” என பிரதீப் அவரது ஃபேஸ்புக்கில் பதிர்ந்திருந்தார்.

வானிலை மீது காதல் கொண்ட பிரதீப் படித்தது என்னவோ கணினி அறிவியல். ஏன் என்று வினவினால் பெற்றோர் நிர்பந்தம் என்கிறார். பின்னாளில் பங்குச் சந்தை மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்றிருக்கிறார். தற்போது தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதியத்தில் (Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited) இணை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது இந்தப் பணி வானிலையை கணிப்பதில் கூடுதல் புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் அவரது மனதில் நிறைந்திருப்பது வானிலை ஆர்வம் மட்டுமே. அப்படி என்றால் நீங்கள் ஏன் வானிலை மையத்தில் பணி புரியவில்லை என்ற கேள்விக்கு, “நான் அதற்கான பட்டப்படிப்பை படிக்கவில்லை. அதுமட்டுமல்லாது அங்கு பணியில் சேர்ந்தால் எனது கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க வாய்ப்பிருந்திருக்காது” என்றார்.

“நான் காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன் சரி பார்க்கும் முதல் விஷயம் வானிலை. நான் கண் அயர்வதற்கு முன் கடைசியாக அப்டேட் செய்யும் விஷயமும் வானிலையே” என்கிறார் புயலை பின்தொடரும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்.

அவரது வானிலை பேரார்வத்தின் வெளிப்பாடாக சென்னையில் கடந்த 2010-ல் லைலா புயல் நிலை கொண்ட போது இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது வலைப்பதிவை அப்டேட் செய்திருக்கிறார். வங்கக் கடலில் ஏதாவது புயல் நிலைகொண்டால் அவரது கண்களில் தூக்கம் இமை கடந்து விடுகிறது.

“வானிலை முன்னறிவிப்புகளை அப்டேட் செய்வதற்காக அன்றாடம் அலுவலகத்துக்கு கால தாமதாக சென்ற நாட்களும் உண்டு. ஆனால், இப்போதெல்லாம் என் மகனை பள்ளியில் விட வேண்டியிருப்பதால் காலை நேரத்தில் வானிலையுடன் உறவாடும் நேரம் குறைந்துவிட்டது. இரவிலும் அப்படித்தான் என் மனைவி திட்டினால் லேப்டாப்பை மூடி வைத்துவிட்ட வேறு வேலை செய்வது போல் சால்ஜாப்பு செய்துவிட்டு பின்னர் அவர் தூங்கியவுடன் மீண்டும் வானிலையை கவனிப்பேன்” என புன்னகை பூக்கிறார் பிரதீப் ஜான்.

தமிழ்நாடு வெதர்மேனின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் – https://www.facebook.com/tamilnaduweatherman

-தமிழில்: பாரதி ஆனந்த்

Source…. ரவீனா ஜோசப்..in http://www.tamil.thehindu.com

Natarajan

செம்பரம்பாக்கம் ஏரியும் சென்னை வெள்ளமும்….

அடுத்தடுத்து விமர்சனங்கள்.. அடுக்கடுக்காய் கேள்விகள்..

*

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எப்போது அதிக அளவில் உபரி நீரை வெளியேற்றுவது என்பதில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும், இதுவே சென்னையின் வெள்ளப் பாதிப்புகளை அதிகமாக்கி விட்டது என்றும் பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது.

குறிப்பாக டிசம்பர் 1-ம் தேதி இரவு வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அன்று காலை நிலவரப்படி வெறும் 900 கன அடி மட்டுமே வெளியேற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி பிரதானமாக எழுப்பப்படுகிறது.

நவம்பர் 30, டிசம்பர் 1-ம் தேதி வாக்கில் கனமழை பெய்யக் கூடும் என உள்நாட்டு வானிலை ஆய்வு மையங் களும், சர்வதேச வானிலை நிறுவனங் களும் எச்சரிக்கை செய்தன. எனினும் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத காரணத்தால் செம்பரம்பாக்கம் அணையின் நீர் அளவை கையாள்வதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அணை நீர்மட்ட நிலவரம்

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. சென்னை குடிநீர் வடிகால் வாரிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி ஏரியின் நீர் இருப்பு வெறும் 228 மில்லியன் கன அடி மட்டுமே. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் அடுத்த பத்து நாட்களிலேயே மூன்று மடங்கு அதிகரித்து, நவம்பர் 10-ம் தேதி 791 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உயர்ந்தது.

அதன் பிறகு பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது. குறிப்பாக நவம்பர் 16-ம் தேதி வினாடிக்கு 9 ஆயிரத்து 717 கனஅடி, மறுநாள் 17-ம் தேதி 12 ஆயிரத்து 31 கன அடி என்ற அளவுக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் அணையின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. நவம்பர் 1-ம் தேதி 228 மில்லியன் கன அடி மட்டுமே இருந்த நீர் இருப்பு 17-ம் தேதி 3 ஆயிரத்து 197 மில்லியன் கன அடி என்ற அளவுக்குத் தண்ணீர் பெருகியது.

இதன் காரணமாக முதல் நாள் வரை வினாடிக்கு வெறும் 64 கன அடி வரை மட்டுமே வெளியேற்றப்பட்ட உபரி நீர் 17-ம் தேதி திடீரென 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அதன் பிறகு அணையின் நீர் இருப்பை 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மேல் இருக்குமாறு பொதுப் பணித் துறையினர் பராமரித்து வந்தனர். நவம்பர் 25-ம் தேதி வினாடிக்கு 5 ஆயிரத்து 629 கனஅடி நீர்வரத்து இருந்த போது 5 ஆயிரம் கன அடியும், நவம்பர் 28-ம் தேதி 610 கன அடி நீர் வந்தபோது, 500 கன அடியும் வெளியேற்றினர். அதாவது ஏரிக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப வெளியேற்றும் நீரின் அளவையும் பராமரித்தனர்.

இதற்கிடையே நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மிகக் கனத்த மழை பெய்யக் கூடும் என்ற வானிலை எச்சரிக்கை அறிவிப்புகள் வந்து கொண்டே இருந்தன. இந்த நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய ஏரிகள் முழுவதும் நிரம்பி இருந்தன. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைப் போலவே மழை பொழிந்தால் அந்த ஏரிகளில் இருந்து வினாடிக்குப் பல்லாயிரக்கணக்கான கனஅடி வீதத்தில் உபரி நீர் வெளியேறும் என்பதும், அவை யாவும் சென்னைக்குள்தான் புகும் என்பதும் எதார்த்தம். ஆகவே, அதே நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் பெரிய அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டால் பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் என்பதும் நிச்சயம்.

ஆனால் இந்த ஆபத்தைச் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் கணிக்கத் தவறிவிட்டனர் என்பதே இப்போது பிரதான விமர்சனமாகக் கூறப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரிய இணையதளத் தகவல்களின்படி, நவம்பர் 29-ம் தேதி வினாடிக்கு 570 கன அடி, நவம்பர் 30-ம் தேதி வினாடிக்கு 600 கன அடி என்ற அளவிலேயே நீர் வெளியேற்றம் இருந்துள்ளது.

பெரும் மழை பெய்த டிசம்பர் 1-ம் தேதி கூட முதலில் வினாடிக்கு 900 கன அடி என்ற அளவில் மட்டுமே நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஏரிக்கான நீர் வரத்து அதிகரிக்கவே, அதன் பிறகு வெளியேற்றும் நீரின் அளவையும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதி அதிகபட்சமாக 29 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

நவம்பர் 30-ம் தேதியே மழை தொடங்கிவிட்ட போதிலும் செம்பரம் பாக்கம் அணையிலிருந்து அதிக அளவு உபரி நீரை வெளியேற்றாததன் காரணம் என்ன என்பதுதான் இப்போது விவாதத்துக்குரிய கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்துப் பொதுப் பணித் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

ஓர் அணையிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு நீரை வெளியேற்ற வேண்டும் அல்லது எவ்வளவு வரை நீரை தேக்கி வைத்திருக்கலாம் என்பதைத் துறைத் தலைவர்களாக இருக்கக் கூடிய ஐஏஎஸ் அதிகாரிகளால் கணிக்க இயலாது. பல ஆண்டு காலம் தொடர்ந்து அந்தந்தப் பகுதியிலேயே பணியாற்றி வரும் பொதுப்பணித் துறையின் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களால்தான் அதனைத் தீர்மானிக்க முடியும். அந்தந்தப் பகுதியில் பெய்யும் மழையின் அளவு, அணைக்கு வரும் நீர்வரத்து, அன்றைய நீர்மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த அளவுக்கு நீரை அணையில் வைத்திருக்கலாம் மற்றும் எவ்வளவு உபரி நீரை வெளியேற்றலாம் என்பதை அவர்களால் தெளிவாகக் கணிக்க முடியும். இவ்வாறு அவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்தும் நடைமுறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கிறது.

ஆனால் அண்மைக் காலங்களில் இந்தப்போக்கு மாறியுள்ளது. சிறிய அணைகளில் கூட எவ்வளவு நீர் வெளியேற்ற வேண்டும் என்பதை உயர் அதிகாரிகளின் உத்தரவைப் பெற்றுச் செயல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மக்களுக்கு அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் செம்பரம்பாக்கம் அணையிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு உபரி நீரைத் திறக்க வேண்டும் என்பது அணையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் பொறியாளர்களுக்கும், அங்குள்ள களப்பணியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்காக அவர்கள் காத்திருக்க நேர்ந்ததாலேயே முன்னதாகவே அதிக அளவில் உபரி நீரைத் திறக்காமல், திடீரெனப் பெருமளவு உபரி நீர் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு கூறப்படுவது உண்மையாக இருப்பின், சென்னையின் வெள்ளப் பாதிப்புகளுக்கு இவைதான் முக்கிய காரணம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

குடிநீருக்காக தேக்கப்பட்டதா?.

சென்னையில் கடந்த ஜூன், ஜூலை தொடங்கி, நவம்பர் முதல் வாரம் வரை கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. டிசம்பர் 1-ம் தேதி 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கும் மேல் இருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் நவம்பர் 1-ம் தேதி வெறும் 228 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருந்தது. இதிலிருந்தே நவம்பர் முதல் வாரம் வரை எந்த அளவுக்குக் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சென்னைக்குக் குடிநீர் விநியோகம் செய்யச் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மிகவும் கஷ்டப்பட்டனர். ஒருகட்டத்தில் மழை வேண்டிப் பல கோயில்களில் வருணப் பகவானுக்குப் பூஜைகள் கூடச் செய்தனர்.

இந்தச் சூழலில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட குடிநீர் தரும் ஏரிகளில் இருந்து அதிக அளவுக்கு உபரி நீரை வெளியேற்ற வேண்டாம் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டதாகவும் கூறப்படு கிறது. ஒருவேளை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போலக் கனமழை பெய்யாமல் போய்விட்டால், குடிநீருக் காகத் தேக்கி வைத்திருக்கும் பெருமளவு தண்ணீரை வீணாக்கி விடக் கூடாதே என்ற அச்சத்துடன் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அடுத்த நான்கைந்து மாதங்களில் வரப்போகும் சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது எனக் கருதி, அதிக அளவு உபரி நீரைத் தக்க சமயத்தில் வெளியேற்ற அதிகாரிகள் தயங்கினார்களா என்ற கேள்வியும் உள்ளது.

ஆக, காரணங்கள் எதுவாயினும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நேரத்தில் 29 ஆயிரம் கன அடி அளவுக்கு உபரி நீர் திறக்கப்பட்டது சென்னையின் வெள்ளப் பாதிப்புகளுக்கு ஒரு காரணமாகி விட்டது.

நவம்பர் 17-ம் தேதி செம்பரம்பாக்கத் திலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டபோது அடையாற்றில் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் டிசம்பர் 1-ம் தேதி இரவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற ஏரிகளில் இருந்து அடையாற்றுக்கு சுமார் 40 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் வந்து கொண்டிருந்த நேரத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட 29 ஆயிரம் கன அடி உபரி நீரும் அதனுடன் சேர்ந்து கொண்டதால் பாதிப்புகள் அதிகமாயின.

ஆகவே, இனியாவது துல்லியமான நீர் மேலாண்மை என்பதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதுவே எதிர்காலத்தில் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளைக் குறைக்க உதவியாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Source…..வி.தேவதாசன் ….www.tamil.thehindu.com

Natarajan

” ஈஸ்வர், அல்லா தேரே நாம்…” ” இந்தியாவிலா சகிப்புத்தன்மை இல்லை….?”

நான்கு நாள்களாக கழுத்தளவு வெள்ளத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவிட்டு, கால்களில் சேற்றுப் புண்களுடனும், கண்களில் கெஞ்சும் தூக்கத்துடனும், புரசைவாக்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவாபாரதி தலைமை அலுவலகத்துக்கு வருகிறார் ஜீவானந்தம், “ஸ்வயம் சேவக்’ எனப்படும் லட்சக்கணக்காண ஆர்.எஸ்.எஸ்-ஸின் தன்னார்வலர்களில் ஒருவர்.
“சில மணிநேரமாவது தூங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாமே…?’ என அவரைப் பார்த்துப் பரிவுடன் கேட்கிறார் அந்த அமைப்பின் மருத்துவ உதவி ஒருங்கிணைப்பாளர் கே.சீனிவாசன். தான் அணிந்திருக்கும் சட்டையில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளை சுட்டிக்காட்டி, “சேவை மூலமாக பண்பாடு, அதன் மூலமாக சமத்துவம். அதற்குப் பிறகுதான் தூக்கம். எனது சகோதர, சகோதரிகள் பேரழிவில் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, என்னால் நிம்மதியாக எப்படித் தூங்க முடியும்?’ – அமைதியாகக் கேட்கிறார் ஜீவானந்தம்.
ஆர்.எஸ்.எஸ். என்றால் மதத் தீவிரவாத அமைப்பாகத்தான் பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், இந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள், இரவு பகலாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள், சேவைகளைத் தொடர்கிறார்கள்.
“காவித் தீவிரவாதிகள் என்றார்கள், கொடியவர்கள் என்றார்கள். ஆனால், அவர்கள்தான் வெள்ளத்திலிருந்து என்னை மீட்டார்கள்’ – சொல்லும்போதே மன்சூரா பேகத்துக்கு குரல் தழுதழுக்கிறது. “அம்மா, உதவி செய்யும் வாய்ப்பைக் கொடுத்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’ எனக் கையெடுத்து வணங்குகிறார் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் பசுபதி.
நாங்கள் விளம்பரத்தை நாடி ஓடுவதில்லை. ஏதாவது ஒரு பத்திரிகையிலாவது எங்கள் மீட்புப் பணிகள் சம்பந்தமான தகவல்கள் இடம் பெற்றனவா…?’ – கேட்கிறார் ஆர்.எஸ்.எஸ். பிரசாரக் எனப்படும் முழுநேர ஊழியர் முருகன்.

ராம.ராஜசேகர் – ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாநில “சேவா பிரமுக்’. அந்த அமைப்பின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சேவைப் பணிகளுக்கு இவர்தான் ஒருங்கிணைப்பாளர். “கடந்த மாதத்தில் மட்டுமே சென்னையில் மூன்று முறை பலத்த மழை பெய்தது. முதல் மழை பெய்தபோதே நிவாரணப் பணிகளை ஆரம்பித்து விட்டோம். டிசம்பர் மாதம் முதல் தேதி கனமழை, வெள்ள அபாயம் என சேதி வந்தபோது சேலத்தில் இருந்தேன். அன்றிரவே, ரயிலைப் பிடித்து, சென்னை வந்தேன். என்றாலும், யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால், நான் வருவதற்கு முன்னதாகவே குறைந்தபட்சம் நூறு இடங்களில் எங்கள் தொண்டர்கள் மீட்புப் பணிகளை ஆரம்பித்து விட்டனர். சக மனிதர்கள் பாதிக்கப்படுவதை எந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டனாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாருடைய கட்டளைக்கும் காத்திருக்காமல், தாங்களாகவே பணிகளை ஆரம்பித்து விடுவார்கள். இதைத்தான் எங்கள் இயக்கம் சொல்லிக் கொடுத்திருக்கிறது’ என்று பெருமையாகச் சொல்கிறார் ராம.ராஜசேகர்.
வில்லிவாக்கத்தில் தள்ளுவண்டிகளை வைத்துக் கொண்டு மார்பளவு வெள்ளத்தில் நின்றவாறு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். வடபழனியில், இரண்டு டிரம்களை கயிற்றின் மூலமாக இணைத்து மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். வளசரவாக்கத்தில், லாரி டயர்களைக் கொண்டு மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். சென்னையில் மட்டும் சுமார் 8 ஆயிரம் மக்களை வெள்ளத்திலிருந்து இவர்கள் மீட்டுள்ளனர் என்பது வெளியே தெரியவராத தகவல்.

புரசைவாக்கத்தில் முதல் மையத்தை அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 2-ஆம் தேதி ஆரம்பித்தோம். அதற்கு முன்னதாகவே, சென்னையின் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிறு மையங்களை அமைத்து விட்டனர். குரோம்பேட்டை, மணலி, வில்லிவாக்கம், கே.கே.நகர் என 17 இடங்களில் சேவா மையங்களை அமைத்துள்ளோம். அவற்றின் கீழ் பல துணை சேவை மையங்கள் உள்ளன. ஒவ்வொரு சேவா மையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குச் சொந்தமான பள்ளிகள், ஆதரவாளர்களின் மண்டபங்கள், வீடுகள் எல்லாமே ஏதோ வகையில் சேவா மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இப்படியாக சென்னையில் மட்டுமே 83 இடங்களில் சேவைகளை ஒருங்கிணைத்துள்ளோம். மூன்று நாள்களுக்கு ஒரு தடவை, இந்த மையங்களில் உள்ளவர்கள் புரசைவாக்கத்தில் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம்’ என்கிறார் ராம.ராஜசேகர்.
ஓட்டேரியில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் தெருவில் மார்பளவு வெள்ளத்தில் மிதந்தபடி சென்று வீடு வீடாக உணவு கொடுக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். மாடியில் இருந்து இறங்கிவரும் ஒரு மூதாட்டி, “வெள்ளத்திலும் வீடு தேடி வந்து உணவு கொடுக்கும் நீங்கள் நல்லா இருக்கோணும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்.
வில்லிவாக்கம், சிட்கோ நகரில் தள்ளுவண்டியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களிடம் தனது மனைவி, குழந்தைகளைக் கொடுத்து “இவர்களை பத்திரமாக மீட்டுத் தாருங்கள். நான் அடுத்த படகில் வருகிறேன்’ என்று ஒரு முஸ்லிம் சகோதரர் கூறுகிறார்.

மீட்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு கிடைப்பதையும் இவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். வெள்ள பாதிப்புக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 50 இலவச மருத்துவ முகாம்களை நடத்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முகாமிலும், ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயன் பெற்று வருகிறார்கள். சேற்றுப் புண்ணுக்கான மருந்தில் இருந்து, பிளீச்சிங் பவுடர் வரைக்கும், குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் இருந்து பெண்களுக்குத் தேவையான பிரத்யேக பொருள்கள் வரைக்கும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் மருத்துவ முகாம்களில் கிடைக்கின்றன. அந்தந்தப் பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள் தாங்களாக முன்வந்து மருத்துவ சிகிச்சை அளிப்பதையும், நூற்றுக் கணக்கான மக்கள் முகாமுக்கு வந்து மருந்துகளை வாங்கிச் செல்வதையும் பார்த்தோம்.

சைதாப்பேட்டையில் இருக்கிறது செட்டித் தோட்டம் என்ற எளியவர்கள் வாழும் பிரதேசம். இயற்கையின் சீற்றத்தில் சிக்கிச் சின்னாபின்னமான இப்பகுதியில் நுழைபவர்களைக் குடலைப் பிடுங்கும் துர்நாற்றம்தான் வரவேற்கிறது. அங்கே, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த பல நூறு இளைஞர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 3,000 அடித்தட்டு மக்கள் வாழும் இங்கே, முழு நேர மீட்புப் பணிகளையும், துப்புரவுப் பணிகளையும் இவர்கள்தான் செய்கிறார்கள்.
“ஏழைகளின் பாதையில் குறுக்கிடும் எல்லாவற்றையும் களைவதுதான் எமது நோக்கம்’ எனச் சிரித்தவாறு சொல்கிறார் ரவூப். இவர் பெங்களூரில், பிரபல மென்பொருள் நிறுவனமொன்றில் உயர் பதவியில் இருக்கிறார். இவரின் நண்பர் வசீம் அக்ரம், பல் மருத்துவர். இவர்கள் அனைவருமே, எந்த விதமான முகச்சுளிப்பும் இல்லாமல், குடலைப் புரட்டும் துர்நாற்றத்துக்குள்ளும் இறங்கி “தனி ஒருவ’னாக வேலை பார்க்கிறார்கள். வெள்ளம் அடித்துவிட்டுச் சென்ற குப்பைக் கூளங்களை, தொழில் முறை வழக்குரைஞரான முகமது யூசுப், தனது கைகளால் அள்ளிச் சுத்தம் செய்கிறார்.

“எமது சக மனிதர்கள் துன்பப்படும்போது எப்படித்தான் வாய்மூடி மௌனியாகப் பார்த்துக் கொண்டிருப்பது?’ எனக் கேட்டு அமைதியாகப் புன்னகைக்கிறார் ஹாஜா கனி, த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர். வரலாறுகாணாத இந்த வெள்ளத்தில் த.மு.மு.க.வினர் ஆற்றிய பணிகள் அளப்பரியன.
கடந்த மாதம் 15-ஆம் தேதி, முதல் கட்ட மழை தொடங்கியபோதே த.மு.மு.க. மாணவர் அணியினர் களத்தில் இறங்கி எந்தெந்த இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்பதை சர்வே எடுத்து அதை அறிக்கையாகத் தயார்செய்து, தாம்பரம் நகராட்சியிடம் கொடுத்ததுள்ளனர். 16-ஆம் தேதியன்றே சுமார் 30 பேர் வரைக்கும் பயணிக்கக் கூடிய படகொன்றை கோவளத்தில் இருந்து தருவித்து, இரவும் பகலுமாக ஓட்டி அன்று மட்டுமே சுமார் ஆயிரம் பேரை த.மு.மு.க. தொண்டர்கள் மீட்டுள்ளனர். எந்த ஓய்வும் இல்லாமல், இரவு பகலாக இவர்களின் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. மீட்புப் பணிகளில் ஈடுபட்ட முன் அனுபவங்களும், பயிற்சிகளும் இருந்ததால் இலகுவாக இயங்கக் கூடியதாக இருந்தது என்கிறார்கள் த.மு.மு.க. தொண்டர்கள்.
“முடிச்சூர் பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்து முப்பதே நாளான பச்சிளம் குழந்தையுடன் ஒரு குடும்பம் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வந்தன. மிகுந்த சிரமங்களுக்கிடையில் அந்தப் பகுதிக்கு சென்றோம். பெருமழை. மின்சாரம் இல்லாமல், அந்தப் பிரதேசமே கும்மிருட்டாக இருந்தது. கரண்ட் கம்பிகளைப் பிடித்து எம்மை சமநிலைப்படுத்தியவாறு சென்று அவர்களை மீட்டோம். அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகமும், அந்தத் தாயின் பரிதவிப்பும் இன்னும் கண்களில் நிற்கிறது. சக மனிதர்களுக்கு உதவுவதைத்தானே இஸ்லாம் போதிக்கிறது…’ – கண்களில் அமைதியுடன் பேசுகிறார் யாகூப்.
பெரியார் சமத்துவபுரம், முடிச்சூர் சாலை, கிஷ்கிந்தா ஆகிய பகுதிகளில் த.மு.மு.க.வினர் பெருமளவு மீட்புப் பணிகளை மேற்க்கொண்டுள்ளனர். சென்னையிலுள்ள அத்தனை பள்ளிவாசல்களும், மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக பாரபட்சமின்றி திறந்து விடப்பட்டன. சாதி, மத பேதமின்றி அனைவருமே அங்கு தங்க அனுமதிக்கப்பட்டனர். தாம்பரம் பகுதியில் மட்டுமே சுமார் 3,000 பேரை இவர்கள் மீட்டுள்ளனர் என்பது அதிசயிக்கவைக்கும் புள்ளி விபரம்தான்.

தாவூத் மியாகான். காயிதே மில்லத்தின் பேரன். இந்த வெள்ளக் காலத்தில் இவர் செய்தவை அளப்பரிய பணிகள்தான். மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியை மையமாக வைத்து இவர்கள் சுமார் 1,000 பேருக்கு உணவளித்து வருகிறனர். அந்தக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர். கூடவே, வீட்டுக்குத் தேவையான சமையல் பாத்திரங்களையும் வழங்கி வருகிறார்கள். பல இடங்களில் பிரதான வீதிகளில் மட்டுமே மீட்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக செம்மஞ்சேரியின் உட்புறமாக, உணவில்லாமல், வெள்ளத்தில் தவித்த பல நூறு குடும்பங்களை மீட்டுள்ளனர். 2,500 லிட்டர் ஆரோ பிளாண்டை மக்களுக்காக திறந்துவிட்டு மக்களின் துயரைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முஸ்லிம் சகோதரர்களால் மீட்டு வரப்பட்டு, தாம்பரம் பேபி பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் பேருக்கு துறைமுகச்செல்வி என்பவர் மூன்று வேளையும் உணவு கொடுக்க முன்வந்தார். முஸ்லிம் அமைப்புகளுக்கும், துறைமுகச் செல்விக்குமான தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் தாம்பரம் இன்ஸ்பெக்டர் ஆல்வின் ராஜ்.
சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜமியத் உலமாயே ஹிந்த் அமைப்பின் சார்பில் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 80,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை 15,000 உணவுப் பொட்டலங்களும், வில்லிவாக்கம், திருநின்றவூர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை 3,648 உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன. இது தவிர 10,000 குடும்பங்களுக்கு போர்வை, பாத்திரங்கள், உணவுப் பொருள்கள் கொண்ட பெரிய பைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நந்தனம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, முத்தமிழ் நகர், பொழிச்சலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,800 பைகளில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோட்டூர்புரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. புரசைவாக்கம் பெரிய மசூதியின் சார்பில் 30,000 உணவுப் பொட்டலங்களும், பாத்திரங்கள், ஆடைகள் கொண்ட பெரிய பைகள் 3,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் சகிப்புத்தன்மை இருக்கிறதா? என்பது தொடர்பாக நாம் நடத்திவரும் வீண் விவாதங்களுக்கான பதில் இந்தச் சம்பவங்களிலேயே ஒளிந்துள்ளது. இந்தியாவிலா சகிப்புத்தன்மை இல்லை….?

Source……..By -அருளினியன்  in http://www.dinamani.com

Natarajan

 

” உலகம் அழிந்துபோகாததற்கு இவர்கள்தான் காரணம்…”

சென்னை மழை வெள்ளத்தின் தாண்டவம் இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்வதற்குள் அநேகமாக சென்னையில் இருந்த அனைவரும் இந்தப் பேரிடருக்குள் சிக்கிக்கொண்டு தள்ளாடினோம்; தள்ளாடிக்கொண்டிருக்கிறோம்; தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறோம், முற்றிலும் வீழ்ந்துபோய்விடவில்லை. இதற்குக் காரணம் மழை, வெள்ளத் தாண்டவத்தின் உக்கிரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மனிதநேயத்தைக் காட்டியவர்கள்தான்.

பெரிய பெரிய விஷயத்துக்கெல்லாம் போகத் தேவையில்லை. மழை ஓய்ந்த பிறகு, நீரின் முற்றுகையில் நான்கு நாட்கள் தவித்த பிறகு நண்பர் ஒருவர் மடிப்பாக்கத்தில் மூழ்கிய தனது வீட்டிலிருந்து அலுவலகத்துக்குக் கிளம்பி நடந்துவந்துகொண்டிருக்கிறார். அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பின்னால் ஒரு கார் வந்து நிற்பதுபோல் தோன்றியிருக்கிறது. திரும்பிப் பார்த்தால் காரிலிருந்து யாரோ ஒருவர் இறங்கிச் செல்வது தெரிந்திருக்கிறது. நண்பர் மேற்கொண்டு தன் வழியைப் பார்த்து நடந்து சென்றிருக்கிறார். கார் ஹாரன் சத்தம் கேட்டிருக்கிறது. நண்பர் ஓரமாக நடக்க முயன்றிருக்கிறார். அவரைச் சற்றுக் கடந்து பக்கவாட்டில் வந்து நின்றிருக்கிறது கார்.

கார்காரர் காரின் ஜன்னலை இறக்கிவிட்டுப் பாதசாரி நண்பரை அழைத்து “எங்கே போகணும் சொல்லுங்க, இறக்கிவிடுகிறேன்” என்றிருக்கிறார். நண்பருக்கு பேச்சே வரவில்லை. காருக்குள் ஏறிப் பின்சீட்டில் அமர்ந்துகொள்கிறார். நம்மிடம் இந்தச் சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டபோது நண்பர் இப்படிச்சொன்னார், “இதுபோன்ற ஒரு உதவியை இதற்கு முன் செய்தது ஒரு மீன்பாடி வண்டிக்காரர்தான். நடு இரவில் குழந்தைகள் மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றுவிட, என்ன செய்வதென்று நின்றுகொண்டிருந்தபோது அந்த வழியே வந்த மீன்பாடிக்காரர் தானாகவே வந்து, என்ன விஷயம் என்று கேட்டு உதவி செய்தார். அடித்தட்டு மக்கள் எப்போதும் அப்படித்தான். அதில் எந்த அதிசயமும் இல்லை.

ஆனால், மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தானாக லிஃப்ட் கொடுக்கும் அதிசயத்தை நிகழ்த்தியது இந்த மழை, வெள்ளம்தான். காரில் உட்கார்ந்த பிறகுதான் உணர்ந்தேன், எனக்கு முன்னாலும் அவர் ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்து இறக்கி விட்டிருக்கிறார்.”

காரில் லிஃப்ட் கொடுப்பது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால், இந்த மழை, வெள்ளம் சமூகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாய்ந்து, அதன் உள்ளே புதைந்துபோயிருந்த பரிவுணர்வையெல்லாம் எந்த அளவுக்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பதற்கு ஒரு பருக்கை பதம் இது.

சிறிய அளவில் இப்படியென்றால் பெரிய அளவில் எத்தனையோ பேர் என்னவெல்லாமோ செய்து, ஏதும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களையெல்லாம் குற்றவுணர்வு கொள்ளவும் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் முகமற்றவர்கள். அதாவது, சமூகத்தால் அறியப்படாதவர்கள் என்பதுதான் மகத்தான செய்தி. உதவி செய்ய வந்தவர்களின் முகத்தில் மனிதம் என்ற ஸ்டிக்கரைத் தவிர வேறு ஏதும் ஒட்டப்பட்டிருக்கவில்லை என்பதை நாம் கவனித்தாக வேண்டும். முகம் தெரிந்த மனிதர்களுக்குச் சளைக்காமல் முகம்தெரியாத மனிதர்கள் எத்தனையோ பேர் எவ்வளவோ உதவிகளைச் செய்து தமிழக, இந்திய மக்களை மட்டுமல்ல உலகத்தினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

அடையாறுக்குப் பக்கத்தில் மழை, வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப் பட்டிருக்கும் பகுதியொன்றில் ஒருவர் தனது முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, பெரிய பாத்திரத்தில் சூடாகப் பால் காய்ச்சிக்கொண்டு, தண்ணீரில் கவனமாக நடந்துசென்று சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் விநியோகித்திருக்கிறார். அவர் யார் என்ன என்று கேட்டதற்கு, “அதெல்லாம் முக்கியமில்லாத விஷயம், நான் போய் இன்னும் பால் எடுத்துவருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். மனிதத்துக்கு சாதி, மதம், மொழி மட்டுமல்ல முகமும் கிடையாது என்பதை அவர் நிரூபித்துவிட்டிருக்கிறார்.

இதுவரை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவராத தியாகம் அடுத்த நபருடையது. இன்னொரு நண்பர் சொன்ன தகவல். சாலையை மூழ்கடித்த வெள்ளத்தில் காரில் அவர் போய்க்கொண்டி ருந்தபோது ஒரு முஸ்லீம் பெரியவர் நடுச் சாலையில் கையில் ஒரு செடியைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறார். இறங்கி என்னவென்று விசாரித்த அந்த நண்பருக்குக் கண்கலங்கிவிட்டது.

சாலையின் அந்த இடத்தில் ஒரு குழி ஏற்பட்டுவிட்டது என்றும், யாரும் அதற்குள் விழுந்துவிடக் கூடாது என்பதால் அடையாளத் துக்காகச் செடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்றும் அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். ஊன்றிவிட்டு நீங்கள் போயிருக்கலாமே என்று நண்பர் கேட்டதற்கு, ஓடும் நீரில் செடி நிற்க மாட்டேன் என்கிறது, அதனால்தான் அதைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்று அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல நண்பர்களே, அடுத்து வரும் விஷயம் தான் நம்மை மிக மிக அற்பர்களாகவும், அந்த முஸ்லீம் பெரியவரை மகாத்மாவாகவும் ஆக்குகிறது.

நண்பரிடம் அந்தப் பெரியவர் இப்படிச் சொல்லியிருக்கிறார், ‘கடந்த நான்கு மணி நேரமா நான் இப்படி நின்னுக்கிட்டிருக்கேன். யாராச்சும் பார்த்துக்குவாங்கனு அப்படியே விட்டுட்டுப் போவ மனசே வரல.”

அந்தப் பெண்மணியின் வீட்டை வெள்ளம் முழுவதுமாக மூழ்கடித்துவிட்டது. கணவர், குழந்தைகளெல்லாம் எங்கெங்கோ தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அலுவலகம் ஒன்றில் துப்புரவுப் பணியைச் செய்துவருபவர் அவர். எல்லாவற்றையும் இழந்திருக்கும் நிலையில் அப்படியே சும்மா இருந்துவிட முடியுமா? பிழைப்பு நடத்தியாக வேண்டுமல்லவா! அலுவலகம் வந்துகொண்டிருக்கிறார்.

வேலை முடிந்த பின் எங்கே செல்வீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, “வீட்டுக்குத்தான்” என்று பதில் வந்தது. இந்த நிலையில் வீட்டுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டால், “பாவங்க, ஏழு தெருநாய்களுக்கு நான்தான் சோறு போட்டு வளக்குறேன். நான் இல்லாட்டி அதுங்க அவ்வளவுதான். அதுங்களுக்காக நான் அங்க போய்த்தானே ஆவணும்.”

அதே போல் ஹிப்ஹாப் தமிழன் பகிர்ந்துகொண்ட செய்தி இது: “வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம்-ஆர்.ஏ.புரம் பகுதிக்கு நடுவில்தான் இருக்கிறது எங்கள் அலுவலகம். 5 நாட்களாக இங்கு மின்சாரமோ தொலைத்தொடர்போ இல்லாததால் என்ன நடக்கிறது என்றுகூட தெரிந்துகொள்ள முடியாத சூழல். நாங்கள் வசிக்கும் தெருவில் மட்டும் நீர் தேக்கம் சற்று குறைவு.

சரி தப்பித்துவிட்டோமே, கிளம்பிவிடலாமா என நினைத்துத் தெருமுனைக்குச் சென்றால், எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணிப்பெண் விஜயா அக்கா ஒரு பெரிய பாத்திரத்தில் தன்னிடம் இருந்த அனைத்துப் பொருள்களையும் சமைத்துக்கொண்டிருக்கிறார். “தம்பி ஏரியா பூரா தண்ணிபா, நம்ம ஸ்டூடியோல இருக்குற தண்ணி கேனை எடுத்துக் குடுத்துறலாமா” எனக் கேட்கிறார். இதில் அவர் மகளுக்கு 1 வாரமாக டைஃபாய்டு வேறு. செருப்பால் அடித்ததுபோல் இருந்தது. யார் இவர்? எதற்காக இந்தச் சமூகத்திற்கு இவ்வளவு செய்ய வேண்டும்? இதில் நாம் வேறு கோவை கிளம்பிவிடலாமா என யோசித்திருக்கிறோமே. ச்சீ என்று தோன்றியது.’

இவர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகத்தாலும் தினசரி சூறையாடப்பட்டுக்கொண்டிருக்கும் வாழ்வு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களுடையது. ஆனால், அந்த நிலையிலும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் ஒரு நாள் பட்டினி கிடந்து சென்னைக்கு நிவாரணமாக ஒரு லட்சம் அனுப்பியிருக்கிறார்கள். சமூகத்தால் கொஞ்சம் கூட பொருட்படுத்தப்படாதவர்கள் நரிக்குறவர் இன மக்கள். இந்நிலையில் அவினாசியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் வெள்ள நிவாரணத்துக்காக 100 பாய்களை வழங்கியிருக்கிறார்கள்.

இருப்பவர் கொடுப்பதைவிட இல்லாதவர்கள் கொடுப்பது அளவில் எவ்வளவு சிறிதானாலும் மதிப்பில் கோடி கோடி மடங்கு உயர்ந்தது என்பதைப் பாலியல் தொழிலாளிகளும் நரிக்குறவர்களும் நிரூபித்திருக்கிறார்கள். எல்லோருக்குள்ளும் ‘மகாத்மா’ குணம் உறைந்திருக்கிறது. ஆனால், அதை உசுப்பிவிட்டு உயிர் கொடுத்திருப்பது இவர்கள் மட்டும்தான். ஆகவே, இவர்களை ‘மகாத்மாக்கள்’ என்று அழைப்பதில் எந்தத் தவறுமில்லை.

சென்னை வீழ்ந்துபோகாததற்கு மட்டுமல்ல, உலகம் இன்னும் அழிந்துபோகாததற்கும் இந்த மகாத்மாக்கள்தான் காரணம். ஏனென்றால், இன்னொரு மகாத்மா இப்படிச் சொல்லியிருக்கிறார்: “இன்று உலகில் எண்ணற்ற மக்கள் உயிரோடிருக்கிறார்கள் என்றால் அதன் பொருள், உலகம் தொடர்வது ஆயுத பலத்தினால் அல்ல. மாறாக உண்மை அல்லது அன்பு ஆகியவற்றின் பலத்தினால்தான் என்று பொருள். இத்தனை யுத்தங்கள் நடந்த பின்னரும் உலகம் அழியவில்லை என்பதே இந்த சக்திகளின் மறுக்க முடியாத வெற்றி.”

Source…….www.tamil.thehindu.com

Natarajan

” வெள்ளத்தில் தனியார்மயம்: இது என் அனுபவம்….”

மழையில் பல சாயங்கள் வெளுக்கின்றன. அதில் தனியார்மயமும் ஒன்று. இது என் அனுபவம். டிசம்பர் 2 இரவு திருச்சியில் ஒரு பெற்றோரிடமிருந்து தகவல் வருகிறது, “எங்களுடைய மகளும் வேறு சில பெண்களும் ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிக்கொண்டுள்ளனர். கைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. வசிக்கும் வீட்டின் முதல் மாடியில் மின்சார வசதியற்ற நிலையில் இருக்கின்றனர்” என்று.

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் நான் புறப்பட்டேன். உதவிக்கான பொதுத் தொலைபேசிகள்கூடச் செயலிழந்திருந்தன. முதலில் ஆவடிக்கும் அங்கிருந்து கோயம்பேட்டுக்கும் சென்றபோதுதான் திருவான்மியூர், தாம்பரம் பகுதிகளுக்குப் பேருந்து சேவையே கிடையாது என்று தெரிந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, “சிறப்புப் பேருந்து இருக்கிறது, மதுரவாயில் உள்சுற்றுவட்டப் பாதை வழியாகச் செல்லும். தாம்பரம் தவிர வேறு எங்கும் நிற்காது” என்று கூறினர். பிறகு தாம்பரம் சென்றபோது, ‘அந்தப் பகுதியில் கழுத்தளவு நீர் இருக்கிறது, உங்களால் போக முடியாது’ என்று எம்.டி.சி. நேரக்காப்பாளர் தெரிவித்தார். மாற்றுவழி என்ன என்று கேட்டபோது, இங்கிருந்து கிண்டி சென்று அங்கிருந்து திருவான்மியூர் செல்லலாம் என்றார். கிண்டியிலிருந்து திருவான்மியூருக்குத் தனியார் வேன்கள்தான் சென்றன.

திருவான்மியூர் பஸ் நிலையம் அருகிலேயே தண்ணீர் பெருக்கு. அங்கிருந்த காவலர்களை அணுகியபோது, அவர்களும் அங்கெல்லாம் போக முடியாது என்றே தெரிவித்தனர். அச்சம் அதிகரித்தது. பிறகு, சரக்கேற்றும் மினி லாரியில் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் வரை செல்லலாம் என்று கூறினர். அந்த மினி லாரியில் ஏறி அடுத்த தெரு திரும்பியதும் தொடை அளவுக்குத் தண்ணீர் பாய்ந்தது. அந்த லாரி அதற்கு மேல் செல்லாது என்று கூறிவிட்டனர். அங்கிருந்து மற்றொரு மினி லாரியில் ஒக்கியம் துரைப்பாக்கம் சென்றேன். அந்தப் பெண்கள் தங்கியிருந்த பகுதிக்குச் செல்லவே முடியாது, கழுத்தளவு தண்ணீர் என்றே அங்கும் அச்சமூட்டினர். இதற்குள் மதியம் 2 மணியாகிவிட்டது. துணிந்து அந்த இடத்துக்கே சென்றாகிவிட்டது. கரும் பச்சை நிறத்தில் பாசி பிடித்த தண்ணீரிலிருந்து கொப்புளங்கள் வந்தன. அதிலிருந்து மெல்ல ஒரு தலையும், பிறகு தோளும், பிறகு உருவமும் வெளிப்பட்டது. அவர் ஒரு இளைஞர். “இங்கிருந்து 4-வதாக இருக்கும் வீட்டிலிருந்தே இந்த நிலையில் வருகிறேன். நீங்கள் போக வேண்டிய இடம் இன்னும் உள்ளே பள்ளத்தில் இருக்கிறது, எப்படிப் போவீர்கள்?” என்றார். எனக்கு நீச்சலும் தெரியாது. அந்தக் குடியிருப்பின் இன்னொரு பகுதிக்குச் சென்றேன்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மணி 3.20 ஆகிவிட்டது. வானம் கறுக்கத் தொடங்கியது. மீண்டும் மழை வந்தால் நீர்மட்டம் உயர்ந்துவிடும். என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நீரில் இறங்க ஆரம்பித்தேன். முதலில் முழங்கால், பிறகு தொடை, அதன் பிறகு வயிறு, பின் மார்பு வரை தண்ணீர் ஏறியது. கையில் ரொட்டி, பழங்களைப் பையில் போட்டு எடுத்துச் சென்றிருந்தேன். அது தலையில்.

தண்ணீர் மேலே ஏற ஏற, நீரில் இறங்கியபோது நல்ல வேளையாக இரு இளைஞர்கள் டிரம் படகுடன் வந்தார்கள். “பெரியவரே மூழ்கிடாதீங்க. நாங்க அழைத்துச் செல்வோம்” என்றவர்கள் என்னை அதன் மீது ஏற்றினார்கள். இரு டிரம்களைக் கயிறுகளால் பிணைத்துக் கட்டி மறுபக்கத்தில் மரப்பலகை இருக்கையைப் பொருத்தியிருந்தனர். டிரம் நிலையாக மிதப்பதற்கு அதனுடன் ஒரு ஸ்டூலையும் சேர்த்துக் கட்டியிருந்தனர். இந்த டிரம் படகைத் தயாரிக்க அவர்கள் எங்கே கற்றார்கள் என்று வியப்பாக இருந்தது. இளைஞர்கள் இருவரும் ஜெயின் கல்லூரி மாணவர்கள். குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். வீடு மூழ்கியிருந்தது. கார் நிறுத்தும் போர்டிகோ படித்துறையாகப் பயன்பட்டது.

நான் தேடிச் சென்ற வீட்டில் 3 பெண்கள் மாடியில் இருந்தனர். பெண்களையும் என்னையும் அதே படகில் ஏற்றிக்கொண்டு வந்து கரை சேர்த்தனர். கண்களில் கண்ணீருடன் கையசைத்து அவர்களிடமிருந்து விடைபெற்றோம். வழியில் மேலும் 2 பெண்கள் சேர்ந்துகொண்டனர். பெரம்பூரில் ஒருவர் சகோதரருடன் வீடு போய்ச் சேர்ந்தார். பிறகு, வந்த வழி திரும்பிப் பயணமாகி வீடு வந்து சேர்ந்தோம். இரவு 10 மணி. கதை இதோடு முடியவில்லை. இனிதான் முக்கிய கட்டம்.

இரு நாட்களுக்கும் மேல் தண்ணீருக்கு நடுவில் சிக்கி, மின்சாரம் இல்லாததால் வெளியே தொடர்புகொள்ளாமல் இருந்த 4 இளம்பெண்களும் குளித்து, இரவு உணவு உண்டு, தங்களுடைய கைபேசிகளை உயிர்ப்பித்து அலுவலகம் உட்பட எல்லோரிடமும் தாங்கள் பத்திரமாக இருக்கும் தகவல்களை அனுப்பினார்கள். பெண்களின் வீட்டிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்து ஐந்து நிமிடங்கள் இருக்காது. அவர்கள் அலுவலகத்திலிருந்து ஒரு தகவல் செல்பேசியில் வந்தது. “வாழ்த்துகள். நீங்கள் இனி சென்னையில் அவதிப்பட வேண்டாம். நாளையே பெங்களூரு சென்றுவிடுங்கள். நாளையே வேலையைத் தொடர வேண்டும்!”

நான்கு பெண்களும் “ஊருக்குப் போய்ப் பெற்றோரைப் பார்த்துவிட்டு இரு நாட்கள் ஓய்வுக்குப் பின் திரும்புகிறோம்” என்றதற்கு, “ஏற்கெனவே வேலைகள் கெட்டுவிட்டன; தாமதித்தால் ஐதராபாத் செல்ல வேண்டியிருக்கும்” என்பதே மறுமொழி. பெண்கள் நால்வரும் மறுநாள் அதிகாலையே பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்கள்.

தனியார்மயம் தொடர்பாக நிறையப் பேசுகிறோம். கடந்த ஒரு வாரமாக நான் கேள்விப்படும் தனியார் நிறுவனக் கதைகள் பல கண்ணீர்விட வைக்கின்றன. தனியார்மயத்துக்கு மூளை என்னவோ நிறையத்தான் வேலை செய்கிறது; இதயம்தான் இறுகிப்போய்க் கிடக்கிறது!

– ரங்காச்சாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

Source….www.tamil.thehindu.com

Natarajan