படித்து ரசித்தது … அப்புசாமி …சீதாப் பாட்டி !!!

அப்புசாமி மட்டும் தீவிர கட்சி தொண்டனாக இருந்திருந்தால், நிச்சயமாக மனைவி சீதாவின் புகைப்படத்தை எல்லா செய்தித்தாள்களிலும் குறைந்தபட்சம் அரை பக்கத்துக்காவது போட்டு, ‘ஒலி கொடுத்த தெய்வமே… ஒப்பில்லா மணியே… மொபைல் கொடுத்த ஜெகதீஸ்வரியே… நீயே என் இல்லத்தரசி; நீயே என் மொபைலரசி…’என்று வாழ்த்துப்பா பாடி, இவண், உன் ஊழியனும், கணவனுமான மொபைல்சாமி என்று புகழ்மாலை சூட்டியிருப்பார்.
பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிற அளவுக்கு அவருக்கு வசதி இல்லாததால், பூசலார் நாயனார் மனசுக்குள்ளேயே இறைவனுக்கு கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்தது மாதிரி, மனைவியை பலவாறு தோத்திரம் செய்து, அனைத்து பத்திரிகைகளிலும் மானசீகமாக போட்டோவை வெளியிட்டு, ‘மொபைல் வழங்கிய செல்லம்மா        என் சீதை! வெந்த உள்ளத்தை சொந்த செல்லு கொடுத்து, ரணம் ஆற்றிய குணமே! உன் கருணையே மறவேன் தாயே…’ என்று தன் மனசுக்கு தோன்றிய வசனத்தையெல்லாம், மனைவி மீது மானசீக மாக கொட்டி மகிழ்ந்தார்.
ஒரு சாண் வயிறு வளர்க்க, பல சாண் நீளத்துக்கு புகழ்வது தான் மரபாகி விட்டது. ஓர் ஆறங்குல நீள மொபைல் போன் வாங்கி கொடுத்ததற்குத்தான் மனைவியை புகழ்ந்து கொண்டாடுகிறார் அப்புசாமி.
‘உங்க பிறந்த நாள் பிரெசன்ட்டாக என்ன வேண்டும்; உங்கள் சாய்ஸ்…’ என்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, சீதா பாட்டி மரியாதைக்கு ஒரு வார்த்தை கேட்டதும், ‘டகா’லென்று பிடித்துக் கொண்டார்.
‘சீதே… நீ போற வர்ற இடத்திலெல்லாம் கையில வெச்சிக்கிட்டே பேசறீயே… அது மாதிரி எனக்கும் ஒரு மொபைல்போனு வாங்கி குடு; என் ஆயுசுக்கும், ஏன் அவசியமானா ஆயுசு முடிஞ்சுட்டாக் கூட ஆவியா இருந்து உன்னை வாழ்த்திக்கிட்டிருப்பேன். இதுதான் என்னோட இறுதி ஆசை…’ என்று அவர் சொன்னது சீதாப்பாட்டியின் மனசை, ‘டச்’ செய்து விட்டது.
‘ஒய் டு யு டாக் ரப்பிஷ்; வாயை போய் வாஷ் செய்யுங்க…’ என்று செல்லமாக கடிந்து, பிறந்த நாளன்று அவருக்கு ஒரு மொபைல் போன் வாங்கித் தந்தாள்.
அது வந்ததிலிருந்து அப்புசாமி, ‘சொல்லின் செல்வர்’ மாதிரி, ‘மொபைலின் செல்வர்’ ஆகி விட்டார்.
பாட்டி காரில் போய்க் கொண்டிருக்கும் போது, வீட்டிலிருந்து அப்புசாமி கூப்பிட்டு நலம் விசாரிப்பார்.
கழகக் குரலாக இருக்கும் என்று பாட்டி அவசரமாக எடுத்து காதில் வைத்தால், அரை நிமிஷத்துக்கு முன் பேசிய கணவர் அப்புசாமி, ‘ஹி ஹி… சீதே… எப்படி இருக்கே… கார் ஓட்டிகிட்டுயிருக்கியாக்கும்; இப்போ எந்த இடத்திலே இருக்கே…’ என்று நிமிடத்துக்கு நிமிடம், அவள் இருக்குமிடத்தை விசாரிப்பார்.
‘பனகல் பார்க் பக்கமா… ‘பசுபசு’ன்னு கொத்தமல்லி இருக்கும்; ஒரு கட்டு வாங்கி போட்டுண்டு வா…’ என்று உத்தரவிடுவார்.
‘இங்கே மழை தூறுது, துணியெல்லாம் எடுத்து மடிச்சு வெச்சுட்டேன்; ஆமாம்… பட்டுப்புடவய இன்னிக்கே அயர்ன் செய்ய கொடுத்துடட்டுமா… மணி, ௩:௦௦ ஆகுது… அவன் பாட்டுக்கு வண்டிய தள்ளிகின்னு போயிட்டான்னா…ஹிஹிஹி… எதுக்கு கேட்கிறேன்னா…’
‘ப்ளீஸ்…’ என்று அலறும் சீதாபாட்டி, ‘முதல்ல போனை, ‘கட்’ செய்யுங்க; மொபைலில் பேசறீங்க ஜாக்கிரதை; உங்க இடியாடிக் அரட்டைக்கெல்லாம் நான் தான் பில் கட்டணும்…’ என்பாள்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு காரியம் நடந்து விட்டது. டிரைவ் செய்து கொண்டே மொபைலில் பேசியதற்காக சீதாப்பாட்டியை, ஒரு சார்ஜண்ட் மடக்கிவிட்டான். ஆன் த ஸ்பாட் ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டே தீருவேன் என்று சார்ஜ்ஷீட்டை கூட எடுத்து விட்டான்.
சீதாப்பாட்டி தான் ஒரு ஆனரரி மாஜிஸ்திரேட்டாக இருந்ததை, விசிட்டிங் கார்டை எடுத்துக் காட்டி கூறியதால், ஒரு சலாமடித்து அபராதம் விதிக்காமல் விட்டு விட்டான் சார்ஜண்ட்.
‘இனிமேல் நெவர் யூஸ் யுவர் மொபைல்; ஐ ஸே…’ என்று கடுமையாக எச்சரித்து வைத்தாள் பாட்டி. ஆனால் அவள் ஆணை, அப்புசாமியின் ஆவலுக்கு அணையிட முடியவில்லை.
பாத்ரூமில் இருந்து, நண்பர் ரசகுண்டு வேலை செய்யும் ஓட்டலுக்கு போனைப் போட்டு, ‘சப்ளையர் ரசகுண்டு இருக்காரா?’ என்று கேட்பார். ‘அவரு டூட்டியிலே இருக்கார்…’ என்று முதலாளி கடுகடுத்தால், ‘அர்ஜெண்டா கூப்பிடுங்க சார்; அவுங்க அம்மாவ ஜெனரல் மருத்துவமனையிலே சேத்திருக்கு…’ என்பார்.
ரசகுண்டு லைனில் வருவதற்கு ஐந்து நிமிடமாவது ஆகும்.
‘என்னடா ரசம்… ரொம்ப வேலையா? உங்க முதலாளி என்ன ரொம்பதான் அலட்டிக்கிறான்… இன்னிக்கு பீச்சுக்கு வர்றியா? பீமனையும் தள்ளிகிட்டு வா; முடிஞ்சா எதுனா மிக்ஸர், பக்கோடா அமுக்கிக்கின்னு வா… ஏண்டா துடிக்கிறே? உங்க முதலாளி என்ன தலைய வாங்கிடுவானா…’ இந்தத் தினுசில் சாவகாசமாகப் பேசுவார்.
மாதத்துக்கு அறுநூறு ரூபாய் கட்டியது போக, சீதாப்பாட்டி இப்போது அப்புசாமி வீணாகக் கூப்பிடும் கால்களுக்கும் சேர்த்து, ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் கட்ட வேண்டியிருந்தது.
மொபைலை ஒரு வினாடியும் பிரியாது, செல்லுகிற இடமெல்லாம் எடுத்துக் கொண்டே போவார் அப்புசாமி. நடந்து கொண்டே பேசுவார்; குளித்துக் கொண்டே, ஏன் தூங்கிக் கொண்டே கூடப் பேசுவார். ‘என் குறட்ட சத்தம் கேட்டியா… ஹஹஹ! சிம்ம கர்ஜனை மாதிரி இல்லே? சீதாக் கிழவி இது ஒண்ணுத்துக்கு தான் என்கிட்ட பயப்படறா…’ என்று ரசகுண்டிடம் பேசி பெருமைபடுவார்.
குரங்குகிட்ட கொடுத்த வாழைப்பழத்தைப் பிடுங்குவதை விட, அப்புசாமியிடம் தந்த மொபைலைப் பறிப்பது படு கடினமான வேலை என்பதை உணர்ந்தாள் சீதாப்பாட்டி.
நைசாக அவரிடமிருந்து மொபைலை வாங்கி, உள்ளே யிருக்கிற சிம் கார்டை கழற்றிக் செயலிழக்கச் செய்து விடலாமென்று பார்த்தாள். ஆனால், மொபைலை இரவும், பகலும் இருபத்து நாலு மணி நேரமும், நல்ல பாம்பு மாணிக்கத்தைப் பாதுகாக்கிற கதையாக, ஆட்டோ பயணி மீட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போல மொபைல் போன் நினைவாகவே இருந்தார்.
”பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு பொன்மொழி உண்டு; அது சரியாகியிருக்கு,” என்றாள் சீதாப்பாட்டி.
”என்னை பிச்சைக்கார நாயி என்கிறே… அப்படித்தானே?” என்று சீறினார் அப்புச்சாமி.
”ஏறக்குறைய,” என்றாள் சீதாப்பாட்டி.
அந்த வார்த்தை, அப்புசாமியின் ரோஷப் பகுதிகளில், ஏவுகணையாக பாய்ந்தது.
”இனிமேல் என் மொபைலுக்காக நீ, ஒரு பைசா கூட தரத் தேவையில்லடி; மொபைலுக்காக நான் வண்டி இழுத்தோ, சென்ட்ரல் ஸ்டேஷனிலே போய் லைசன்ஸ் இல்லாத போர்ட்டராக உழைத்தோ, கட்சி ஊர்வலங்களிலே கலவரத் தொண்டனாகக் கலந்து கொண்டோ சம்பாதிக்கிறேண்டி,” என்றார்.
”வெல்கம்; ஆம்பிளையா இருந்தா முதல்ல அதைச் செய்யுங்க.”
அப்புசாமியிடம் ரோஷத் தீயை மூட்டிவிட்டு, ஷாப்பிங்குக்குப் புறப்பட்டு விட்டாள் சீதாபாட்டி.
சென்ட்ரல் ஸ்டேஷன்; சதாப்தி ரயிலை பிடிக்க போகும் பெங்களூரு கும்பல் விடியற்காலையில் விரைந்து கொண்டிருந்தது.
வித்தவுட் யூனிபார்மில் இருந்த அப்புசாமி, ”சார் சார்… லக்கேஜு சார்… மூட்டை முடிச்சு அம்மணி, குடுக்கறதக் கொடுங்க; போணி பண்ணுங்க தாயி,” என்று பயணிகளிடமும் ஓடி ஓடி, வேட்பாளர் ஓட்டுக்குக் கெஞ்சுவது போல் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
”யோவ் பெரீயவரே…” என்று, இரும்புக்கரம் ஒன்று அப்புசாமியின் தோளைப் கப்பென்று பற்றியது. சிவப்பு உடையும், லைசன்ஸ் பட்டையும் அணிந்த அதிகார பூர்வமான கொழுத்த போர்ட்டர்!
”எடுமே கையை.”
”ஏய்யா பெரிசு… நாங்க இங்கே உட்காந்திருக்கிறவங்க ௌல்லாம் புய்யனுங் களா… மரியாதியா ஏரியாவக் காலி செய்துட்டு ஓடிரு.”
”ஓடாட்டி…”
”மவனே… கிராஸ் செய்யாதே, கிழிஞ்சு பூடுவே! ஒரு எலும்பு கூட வேலைக்கு ஒதவாது.”
”மேலே கைய வெச்சிப்பாரு.”
”போடாங்க சொன்ட்டி! கையை வைக்கற தென்ன… தூக்கி தண்டவாளத்திலேயே கடாசிடுவோம்.”
”தைரியமிருந்தா செய்யி! முதல் அடி என்னுதா இருக்கட்டும்,” என்று கூறிய அப்புசாமி, போர்ட்டரை ஓங்கி ஒரு குத்து விட்டார்.
தன் பலத்தையும், சட்ட மீறுதலையும் கொஞ்சமும் எண்ணிப் பார்க்காமல், உரிமம் பெற்ற போர்ட்டரிடம் அவர் காட்டிய வீரம், சில நிமிட நேரமே நீடித்தது.
போர்ட்டர் ஒரு, ‘ப்ரீ கிக்’கொடுத்தான் அப்புசாமிக்கு.
இலவச இணைப்பாக மூக்கில் ஒரு குத்து; ‘ஹா’வென்று மல்லாந்தார் அப்புசாமி. சக போர்ட்டர்களும் அப்புசாமிக்கு தங்களாலான உதைகளைத் தந்தனர்.
கும்பல் கூடிவிட்டது; அப்புசாமி நினைவு இழக்கும் முன் மொபைலில் வீட்டு எண்ணை அழுத்தி, ”சீ… சீ… சீதே… இங்கே சென்ட்ரல் ஸ்டேஷன், சதாப்தி நான் நான்… சமாதி…போர்ட்டர் அடிச்சி… ரத்தம் வெள்ளம்… நீ வா…”எனத் தட்டுத்
தடுமாறி சொல்லி    முடித்தார்.
அப்புசாமியின் மூக்கு மேல், பெரிய பிளாஸ்திரி போட்டிருந்தது; டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.
தனியார் நர்சிங் ஹோமில் சவுகரியமான படுக்கையில், இதமான ஏர்கண்டிஷனுடன் படுத்திருப்பதை உணர்ந்தார் அப்புசாமி. அருகே, ஆவி பறக்கும் சூப்புடன் காத்திருந்தாள் சீதாப்பாட்டி. அந்த ஆவி தன்னுடையதா, சூப்புடையதா என்று சந்தேகமாகப் பார்த்து, மூக்கைத் தடவிக் கொண்டார் அப்புசாமி. மூக்கு இருந்த இடத்தில் ஒரு ஸ்பீடு பிரேக்கர்!
” சீதே… சீதே… என் மூக்கு…” அலறினார்.
”ஒய் த ஹெல்… நீங்க ஸ்டேஷனுக்கெல்லாம் போயி…” என்று அனுதாபப்பட்டாள் சீதாபாட்டி.
”சீதே… ரோஷமில்லாமல் நூறாண்டு வாழறதவிட, ரோஷத்தோடு சில மணி நேரம் வாழ்ந்தாலும் போதும்ன்னு தோணினது. ஆண்டவன் கொடுத்த கை, கால் உழைக்கறதுக்கு இருக்கு; அதான், மூட்டை தூக்கத் துணிஞ்சிட்டேன்!
”மூக்கு தேவலையானதும் லைசன்ஸ் பட்டை வாங்கிட்டு முழு நேரப் போர்ட்டராக வேலை செய்யப் போறேன். என்னுடைய மொபைலுக்காக நான் உழைக்கத் தீர்மானிச்சுட்டேன்; நீ என் கண்ணைத் திறந்துட்டே. அந்த பாவி போர்ட்டர் மூக்கை உடைச்சுட்டான். ஆனால், நான் என் மொபைலுக்காக உழைக்கப் போறத எந்த மக்கள் சக்தி வந்தாலும் சரி, மகேசன் சக்தி வந்தாலும் சரி இனி தடுக்க முடியாது; என் உயிரைக் கொடுத்தாவது மொபைலைக் காப்பேன்,”என்று சூளுரைத்தார்.
”உங்க மொபைல் பக்தியைப் பாராட்டறேன்; ஆனா, உங்க மொபைல்…” என்று திணறினாள் சீதாப்பாட்டி.
”ஐயோ சீதே… என் மொபைல் எங்கே?” என்று கேட்டவர், அவசரமாகத் தன் இடுப்பின் பக்கவாட்டுப் பகுதி, சுற்றுப்பகுதி என எல்லா இடங்களையும் சோதித்தார்.
வேறு ஏதேதோ தட்டுப்பட்டது; மொபைல் மட்டும் கிடைக்கவில்லை. ”என் மொபைல்… என் மொபைல்…” என்று பதட்டமானார் அப்புசாமி.
”பதட்டப்படாதீங்க டியர்; மனசைத் திடப்படுத்திக்கங்க. உங்க மொபைல்…”
”சீதே… என்னாச்சி என் மொபைலுக்கு… எங்கே என் மொபைல்?”
”எனக்கு மொபைல விட நீங்கதான் முக்கியம்,” கைக்குட்டையை உதடுகளில் ஒத்தி, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினாள் சீதாப்பாட்டி.
”சீதே… இன்னாடி இழவு சொல்றே?”
”உங்க மொபைலக் கொடுத்துத்தான் உங்கள மீட்டு வந்தேன். நீங்க மோதினது சாதாரண ஆள் கிடையாது; போர்ட்டர்ஸ் யூனியன் தலைவரோட! பெரிய இடத்துலே மோதிட்டீங்க, விவகாரம் போலீஸ் வரைக்கும் போயிடும் போலிருந்தது. அதுதான், அவன் இத பெரிசுபடுத்தாம இருக்க என்ன செய்றதுன்னு பாத்தேன்… நூறு இருநூறுக்கு காம்ப்ரமைஸ் ஆகிறவனா தெரியல; மொபைல் உங்க ஜிப்பா பையிலே இருந்துச்சா… சட்டுன்னு ஒரு ஐடியா பிளாஷ் ஆச்சு… ‘இந்தாப்பா போர்ட்டர்… இதப் பெரிசு படுத்தாதே… சாரோட மொபைல வெச்சுக்கோ’ன்னு சொல்லி குடுத்துட்டேன். உங்கள அவங்க கிட்டயிருந்து மீட்டு வர எனக்கு வேற வழி தெரியல; சென்ட்ரல் ஸ்டேஷன் பூராவும், ‘ஜே ஜே’ன்னு போர்ட்டர் கும்பல்… உங்களை அடிப்பேன், வெட்டுவேன், குத்துவேன்னு… நீங்க மயக்கம் போட்டு விழுந்திருந்ததால், யு ஆர் நாட் அவேர் அப் த சீன்!”
”சீதே… மொபைலை அவனுக்குத் தாரை வாத்துட்டேயேடி… இது அக்கிரமம்டி,” என்று அலறினார் அப்புசாமி.
”சாரி மை டியர்; யூ ஆர் மோர் ப்ரிஷியஸ் தென் யுவர் மொபைல்,” என்றாள் சீதாபாட்டி அமைதியாக.
அப்புசாமி உடம்பு குணமாகி வீடு வந்து சேர்ந்து சில நாட்களாயிற்று.
”ஹூம்… நடுவிலே வந்தது நடுவிலே போய்ட்டது. வரும்போது என்ன கொண்டு வந்தோம்… போகும்போது என்ன கொண்டு போகப் போகிறோம்; இது என்னதுதான்னு உலகத்திலே எதையும் எண்ண முடியாது. நேத்தைக்கு வேறொருத்தனது; இன்னிக்கு இன்னொருத்தனது; நாளைக்கு அது வேறொருத்தனது ஆகும்.”
துக்கம் கேட்க வந்த நண்பன் ரசகுண்டுவிடம், வேதாந்தியாகி, அங்கலாய்த் தார் அப்புசாமி.
ரசகுண்டு சொன்னான்… ”தாத்தா… நேத்துகூட உங்க மொபைலுக்கு போன் செய்தேன்; அது எங்கியோ இருக்கு. ஆனால், ரீச்சபிள் இல்லன்னு பதில் வர்றது. அணைச்சு வெச்சிருக்காங்களோ என்னவோ,” என்றவன், ”இப்ப போன் செய்றேன் பாருங்க,” என்று லேண்ட – லைன் தொலைபேசி பட்டனை தட்டினான்.
‘கிணு கிணுங்… கிணு கிணுங்!’ என்ற சன்னமான ஓசை, சீதாபாட்டியின் காட்ரெஜ் பீரோவுக்குள்ளிருந்து கேட்டது.
”அடியே கிழவி, போர்ட்டர்கிட்டே என் மொபைலை கொடுத்துட்டேன்னு சொன்னதெல்லாம் பொய்யா… பாவி… பாவி,”என்றார்.
சீதாபாட்டி சிரித்துக் கொண்டே, ”உங்க மொபைலை நீங்க எனக்கு பிௌட்ஜ் செய்திருக்கிறதா நினைச்சுக்குங்க. உங்க மூக்கு வைத்தியத்துக்கு செலவான மூவாயிரம் ரூபாய, மாசம் டென் ருபீசோ, ட்வென்ட்டி ருபீசோ உங்க மன்த்லி பேட்டாவிலிருந்து கொடுத்துக் கழிச்சி முடிச்சதும், உங்க மொபைல உங்களுக்கு தந்துடறேன்,” என்று சொல்லி, அவர் பதிலைத் தெரிந்து கொள்ள விரும்பாமல், கட்சி அலுவலகத்துக்கு புறப்பட்டாள்.

Source:::::பாக்கியம் ராமசாமி  in Dinamalar.com 

Natarajan

Northern Origins of a Southern Temple…

The Kamakala Kameswarar Temple in Triplicane.

The Kamakala Kameswarar Temple in Triplicane.

What is startling is that a family belonging to the Kayasth community,

which had its origins in present day Uttar Pradesh, built it.

Have you heard of Raja Hanumantha Lala Lane in Triplicane? If not, you would not have heard of the Kamakala Kameswarar Temple either. Historically, it is relatively recent, dating perhaps to the 1850s. What is startling is that a family belonging to the Kayasth community, which had its origins in present day Uttar Pradesh, built it.

The Nizams of Hyderabad had a tradition of employing Hindu Kayasths in the administration. The Nawabs of Arcot followed the same practice. Among the confidential munshis or secretaries of Nawab Mohammad Ali Wallajah (1749-1795) was Makhan Lal Khirat. When the ruler built the Big Mosque in Triplicane, it was this trusted aide who composed the chronogram for it, which is enshrined above the mihrab — the niche that indicates the direction of the Holy Kaaba. It is perhaps the only instance in the world, of a Hindu’s work adorning a mosque — a true illustration of the city’s secular character.

Makhan Lal was given the honorific of Rai Raja by the Nawab. A branch of the family, titled the Junior Line, was stationed in Hyderabad, where it managed the properties of the Arcot family in that city. The Senior Line, which remained in Madras, was headed after Makhan Lal by his son Rai Raja Tekam Chand Bahadur. The Junior Line was contrary to its name; it was the more powerful one, given its proximity to the Nizams of Hyderabad. By the 1850s, the branches were headed by cousins — both having the same name of Ishwar Das. The Madras one, Tekam Chand’s son, was born on 13 June, 1826. He was given the titles of Rai Raja and Dayavant Bahadur, while his cousin in Hyderabad was styled Rajwant Bahadur.

Both sides of the family came to grief in 1855, when the British terminated the rule of the Nawabs. The Hyderabad cousin fared better for he was taken into the service of the Nizam, styling himself thereafter as Ishwar Das Walajahi. The Madras Ishwar Das did not fare badly either. That he was clearly not wanting in wealth is evident from the British Government thanking him in 1890 for his public services and recognising the titles conferred on him by the Nawabs.

Rai Raja Ishwar Das Lala Dayavant Bahadur as he liked to be referred to lived off Pycrofts Road (now Bharati Salai) where a street is named after him. A parallel street is Raja Hanumantha Lala Lane, taking its name from a kinsman. It was in this street that Ishwar Das built a temple for Kamakala Kameswarar, installing a white Shiva Linga in it. Following his death in the late 1890s, his son Lakshmi Chand took over the management.

In 1924, Lakshmi Chand filed for insolvency and the temple’s administration came under the control of the Hindu Religious and Charitable Endowments Board of the Government in 1926.

With that its ‘localisation’ began, including the legend that it is ‘at least 800 years old’! It bears no trace of its Kayasth origins.

Keywords: Kamakala Kameswarar TempleTriplicaneChennaiRaja HanumanthaLala LaneNawabs of Arcot

Source:::::  SriRam .V in The Hindu.com

Natarajan

101 வயது பொம்மை ஆஸ்பத்திரி !!!…@ Sydney , Australia…

பெரும்பாலான கடைக்காரர்கள் வாடிக்கையாளர் கண்ணீர் விடுவதை விரும்பமாட்டார்கள். ஆனால் சிட்னியைச் சேர்ந்த பொம்மைகள் மருத்துவமனை ஊழியர்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களின் கண்ணீர்தான் அவர்களது பணிக்கான நற்சான்றிதழ்.

நாள்தோறும் லட்சக்கணக்கில் பொம்மைகள் உற்பத்தி செய்யப்படும் இந்நாட்களில் பொம்மைகளைப் பழுதுபார்க்கும் இடங்கள் குறைந்துவிட்டன.

“பொம்மைகளைப் பொறுத்தவரை நாங்கள் எல்லா ரிப்பேர்களையும் சரிசெய்கிறோம்” என்கிறார் 67 வயது ஜியாஃப் சாப்மன். இவருடைய தந்தை தொடங்கிய டால் ஹாஸ்பிடலில் இவர்தான் தற்போது சீப் சர்ஜன் இன்சார்ஜ்.

கரடி பொம்மைகள், ஆடும் குதிரைகள், கார் பொம்மைகள் என இதுவரை இந்த மருத்துவமனையில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் உயிர்பெற்றுள்ளன. இந்த மருத்துவமனைக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து குழந்தைகள்தான் வாடிக்கையாளர்கள்.

“ஒரு வளர்ந்த மனிதனின் அளவிலேயே தத்ரூபமாக இருக்கும் பொம்மையை நாங்கள் சரிசெய்துள்ளோம். 12 அடி நீள முதலையும் எங்களிடம் வந்துள்ளது. அதுவும் பொம்மைதான்” என்கிறார் சாப்மன். இவர்களிடம் சிகிச்சைக்கு வரும் பொம்மைகளின் முடி மற்றும் கண்களில்தான் அதிகப் பழுது ஏற்படுவதாகக் கூறுகிறார் சாப்மன்.

சரிசெய்த பொம்மைகளை பொக்கிஷங்களைப் போலக் கருதிப் பிரியத்துடன் பெற்றுச் செல்லும் வாடிக்கையாளர்களின் மனநிறைவில்தான் இந்தப் பொம்மை மருத்துவமனை ஊழியர்களின் மகிழ்ச்சியே அடங்கியிருக்கிறது. சில வாடிக்கையாளர்கள் நெகிழ்ந்து அழுதேவிடுவார்களாம்.

“ஆண்கள், பெண்கள் ரெண்டு பேருமே பொம்மைகளைக் கொண்டுவருவார்கள். டெடி கரடிகளுடன் வரும் ஆண்களும் இருக்கிறார்கள்” என்கிறார் சாப்மேன்.

தெற்கு சிட்னியின் பரபரப்பான புறநகர் தெருவில் உள்ள இந்த பொம்மைக் கடையில் பணியாளர்கள் பொம்மைகளின் உடைந்த விரல்கள், தலைகள், கண் சாக்கெட்டுகள் சரிபார்க்கப்படுகின்றன. குழந்தைகளின் சேட்டை, நாய் தாக்குதல், சகோதர யுத்தங்களால் பாதிக்கப்பட்ட பொம்மைகள் அவை.

சாப்மேனின் தந்தை

முதலில் ஜெனரல் ஸ்டோர் ஒன்றைத்தான் நிர்வகித்து வந்தார். அக்காலத்தில் ஜப்பானிலிருந்து மொத்தமாக வந்த செல்லுலாய்ட் பொம்மைகள் முழுவதும் பழுதுபட்டு இறக்குமதியானதால், அவற்றைப் பழுதுபார்க்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அவர் உருவாக்கியதுதான் டால் ஹாஸ்பிட்டல்.

இந்த மருத்துவமனையின் சேவைகளுக்கு இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரிய மவுசு ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் பொம்மைகள் இறக்குமதிக்குப் பெரும் தடை இருந்ததால் பழைய பொம்மைகளைச் சரிசெய்து விளையாடுவது தான் குழந்தைகளுக்கான ஒரே வழி.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் எழுபது பணியாளர்கள் ஆறு அறைகளில் பணிபுரிந்ததாக நினைவுகூர்கிறார் சாப்மேன்.

தற்போதைய டால் மருத்துவமனையில் 12 பேர் ஊழியர்களாக உள்ளனர். ஒரு மாதத்திற்கு 200 பொம்மைகள் பழுதுபார்ப்பதற்காக வருகின்றன.

சமீபகாலமாக இந்த மருத்துவமனைக்கு விஜயம் செய்பவர்கள் குழந்தைகளாக முன்பு இருந்த பெரியவர்கள்தான் என்கிறார் சாப்மேன். நடுத்தர வயது மற்றும் முதியவர்கள் தங்கள் குழந்தைப் பருவ நினைவுகளை மீட்பதற்காக பழைய பொம்மைகளைப் பழுதுபார்க்க வருகிறார்கள்.

“அவர்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் அவர்களுக்கு விளையாடுவதற்கு ஒரே ஒரு பொம்மைதான் கிடைத்திருக்கும். ஒவ்வொரு முறை கடைக்குப் போகும்போதும் புதிதுபுதிதாக வாங்கும் வாய்ப்பு இன்றைய குழந்தைகளைப் போல அவர்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை” என்கிறார் சாப்மேன்.

அதனாலேயே பழைய பொம்மைகளைச் சரிசெய்வது இவர்களுக்கு உணர்வுபூர்வமான அனுபவமாக இருக்கிறது.

Source:::Shankar in The Hindu…Tamil
Natarajan

Water ATM … Smile on the Face of Rajasthan Villagers …

 

 

 

An Indian energy major and modern technology have combined to bring about a revolution in two districts of Rajasthan that were infamous due to the scarcity of potable water. Thanks to water ATMs, many otherwise arid villages here have 24X7 access to the COMMODITY at the swipe of a card — at 20 litres for Rs.5.

Under Cairn India’s “Jeevan Amrit Project,” kiosks with reverse osmosis (RO) plants have been installed to provide safe drinking water in villages like Bhakharpur, Kawas, Guda, Jogasar, Aakdada and Baytu to benefit 22,000 people.

“The project is a good example of a PPP model, where Cairn India has partnered with the Rajasthan government’s Public Health Engineering Department (PHED), Tata Projects and the respective village panchayats to provide potable drinking water at the doorsteps of the local community,” Cairn India CSR head Nilesh Jain told IANS.

Rajasthan, with 10.4 percent of the country’s geographical area, 5.5 percent of the population and 18.70 percent of the livestock, has only 1.16 percent of surface water available in the country.

The State is one of the driest in the country. Rainfall is erratic and there is a large variation in its distribution pattern in the State. The average annual rainfall ranges from 100 mm in Jaisalmer to 800 mm in Jhalawar.

At present, 22 RO plants (17 with the swipe facility) catering to drinking water needs of 22,000 villagers on a daily basis are up and running. The project is expected to scale up in the coming years in terms of number of plants and locations. Through this technology, villagers can now get clean drinking water by swiping their smart cards in the machines installed at the plant,” Cairn India general manager (CSR) Ritu Jhingon told IANS.

The cards come with an initial value of Rs.150 and can be recharged for a similar amount. Plans are afoot to also provide Rs.20 recharges.

This makes the dispensers self-sustaining, with the revenue earned used by the village’s water committee to meet the running expenses of the RO plant, such as salary of the operator, electricity and maintenance. The surplus MONEY is used to undertake developmental work in the village.

And to maximise its reach, water from the RO plants is transported to the surrounding dhanis (hamlets) through vehicles at nominal charges (Rs.1 to Rs. 2 extra, as decided by the water committee).

The dispensers are getting increasingly popular among the locals with more and more people purchasing the smart cards.

“Once it was difficult to get water, forget about clean water to drink. Now things have changed. I can, at any time, get clean water for my family,” Ram Pyari, a resident of Kawas village, told IANS.

Such sentiments are echoed by other users, including Ratna Ram, sarpanch of Sawai Padam Singh village, who became a role model after he inspired more than 100 households in his village to utilise safe drinking water and four another village sarpanchs to initiate the “Jeevan Amrit” project in their gram panchyats.

“My father used to regularly take painkillers for a long time as he suffered from severe joint pain. We have been using RO water for six months now, and miraculously my father has stopped taking medicines for the last two months,” Ratna Ram told IANS.

The number of water-borne diseases, such as diarrhoea in children, has also come down. Cases of joint pain caused by high fluoride content in drinking water have also decreased.

Keywords: water ATMsJeevan Amrit Project

SOURCE::: The Hindu

Natarajan

” என் தாய் மீனாக்ஷி …”

 

Writer Indira SoundarRajan Shared his experience in tamil monthly Mangaiyar Malar …

 

1956 இது நான் மண்ணுக்கு வந்த வருடம் 1980 இது நான் மதுரைக்கு வந்த வருடம்!

அதற்குமுன்பு சேலத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்த ஒரு சேலத்துக்காரன் நான். என் பின் வாழ்க்கை மதுரைக்கு இடம் மாறும் என்று நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. டி.வி.எஸ். சுந்தரம் பாசனர்சில் வேலை கிடைக்கப்போய் மதுரைக்குப் புறப்பட்டு வர நேர்ந்தது.

நான் பிறந்த வளர்ந்ததெல்லாம் ஆசாரமான வைணவக் குடும்பத்தில். ஆனாலும் என்னை மதுரைக்கு அனுப்பியபோது என் அப்பா சொன்னது ஒன்றைத்தான்… இன்டர்வியூ அட்டெண்ட் பண்றதுக்கு முந்தி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போ… அப்புறம் மற்ற வேலைகளை கவனி” என்றார். நானும் மதுரை வந்து இறங்கவும் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய ஹோட்டலில் ரூம் போட்டு குளித்து விட்டு முதலில் சென்றது மீனாட்சியம்மன் கோயிலுக்கு தான். அன்று ஆரம்பித்த தொடர்பு இந்த 2014-ல் என் பெண்ணுக்குக் கல்யாணம் செய்யப் போகிறேன்… அதற்கான பத்திரிகையை முதலில் மீனாட்சிக்கே வைக்கும் அளவிற்குத் தொடர்ந்தபடி உள்ளது.

 

குடும்ப வழக்கப்படி தாந்தோணி மலை பெருமாளுக்கு தான் முதல் பத்திரிகை வைக்க வேண்டும். அவர் தான் குலதெய்வம். இருந்தும் மீனாட்சி சன்னிதிக்கே கால்கள் முதலில் சென்றன. அடுத்து பெருமாளிடம் சென்ற போது ‘சாரிப்பா… அம்மாவை அப்புறமான்னு நினைக்க முடியல’ என்று மனதுக்குள் சொன்ன போது பெருமாளும் ‘அதனாலொன்றுமில்லை’ அவள் என் தங்கை தானே?’ என்று சொல்வது போல் தான் இருந்தது.

 

மதுரைக்கு நான் வந்த போது ஒரு தொடக்க எழுத்தாளன் தான். ஒரு சிறுகதை எழுதி அது பிரசுரம் ஆவதற்குள் தாய்வு தீர்ந்து விடும். ஆனால் என் எழுத்தாள கனவுக்கோ வானமே எல்லை.

 

ஒரு சமயம் எனக்கு அதிர்ஷ்டமேயில்லை என்று கருதிக் கொண்டேன். மீனாட்சியைக் கூட்டு சேர்த்துக் கொண்டால் அவள் தயவால் உருப்பட்டு விடலாம் என்று எப்படித் தோன்றியதோ தெரியாது. அதன்பின் அவளோடு கூட்டணி… எழுதி நூறு ரூபாய்சம்பாதித்தால் இருபது ரூபாய் அவளுக்கு என்று!

இந்த கூட்டணிப் பிரார்த்தனை ஓரளவு வேலை செய்தது. தினமும் ஆபீசில் எந்திரங்களுக்கு நடுவில் 10 மணி நேரம் அல்லாடி விட்டு வந்து பேனாவும் பேப்பருமாக உட்கார்ந்து விடுவேன்.

நான் எழுதத் தொடங்கிய நாளில் நல்ல போட்டி இருந்தது. எல்லாவிதமான கதைகளும் வந்தன. நான் பரிசுகளைக் குறி வைத்து எழுதினேன். ‘கலைமகள்’ குறுநாவல் போட்டியில் இருமுறை முதல் பரிசு. ‘அமுத சுரபி’யில் ஒரு முறை, ‘இலக்கியச் சிந்தனை’ விருது ஒரு புறம்… ஆனாலும் சொன்னால் பிறர் உடன் தெரிந்து கொள்ளும் அளவு ஒரு பிரபலத் தன்மை ஏற்படவில்லை. அதை சுஜாதா, ரா.கி.ரங்கராஜன், சாண்டியல்யன், சிவசங்கரி போன்றோர் தங்கள் வசம் வைத்திருந்தனர்.

தமிழ்வாணன் மறையவும் ‘குமுதம்’ ராஜேஷ்குமாரை அவர் இடத்துக்கு வர அனுமதித்தது. பட்டுக்கோட்டையில் இருந்து பிரபாகரும் வலை வீசினர். இவர்களுக்கு நல்ல மீன்களும் சிக்கின. நானும் சில மீன்களைப் பிடித்தேன். எல்லாமே குஞ்சுகள் என்பதால் ஒரு திருப்தி ஏற்படவில்லை. பாரதியார் காளி தேவியிடம் மானசிகமாய்ச் சண்டை போடுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நானும் அதுபோல் போய் சண்டை போட்டேன் மீனாட்சியிடம்!

‘குமரகுருபரனுக்கு ஒரு பெயர் வாங்கித் தந்ததோடு நின்றுவிட்டாயே… என்னைக் கொஞ்சம் கவனிக்க மாட்டாயா? நானெல்லாம் ஜெயித்தால் எது தான் குறைந்து போகும்? நீ பார்த்தாலே போது மாமே… தினம் வருகிறேனே. பார்க்கமாட்டேன் என்றால் எப்படிம்மா’ என்று… எழுத்தாளனாக உயர வேண்டும் என்று என்னைப் போல தவித்தவர்கள் இருக்கவே முடியாது. உழைத்தவர்களும் இருக்க முடியாது. எதுவும் வீண் போகவில்லை என்றே கூறுவேன். 1980ல் மதுரை வாசியான எனக்கு 1988ல் இருந்து கதவுகள் திறக்க தொடங்கின. ஒரு வாய்ப்பைக் கூட நான் வீணாக்கவில்லை.1990-ல் விகடனில் தொடர் எழுதும் வாய்ப்பு அமைந்தது. அதன் வெற்றியே அடுத்தத் தொடரை சில மாதங்களிலேயே பெற்றத் தந்தது. அது மர்ம தேசமாய் தொலைக்காட்சியில் என்னை உயர்த்தியது. இன்று புகுந்த வீடு வரை தொடர்ந்த படியே உள்ளது.

இந்த 2014-ல் திரும்பிப் பார்க்கிறேன். இந்த கட்டுரை எழுதும் இந்த நாளில் 12பத்திரிகைத்தொடர்களுடன் ஒரு தொலைக்காட்சி தொடர், ஒரு திரைப்படம், இது போக மாதம் குறைந்தது நான்கைந்து சொற்பொழிவு, பொதிகையிலும் தொடர் சொற்பொழிவு என்று என் குதிரை ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது.

மதுரையில் நான் கால் வைத்த போது நான் ஒரு சரியான அரைவேக்காடு, இன்று என்னை பன்முகங்களில் உயர்த்தி பக்குவப்படுத்தியிருக்கிறாள் மீனாட்சி. வீடு வாசல் தந்து மனைவி குழந்தைகள் தந்து மாப்பிள்ளையும் வர இருக்கிறார்.

எதை எப்போது தர வேண்டும் என்று எனக்கு தெரியும் என்பது போல் அதை எல்லாம் அவ்வப்போது தந்து ஆதர்ச சக்தியாக விளங்கி வருகிறாள். நிறைய திருவிளையாடல்களும் நிகழ்த்தியிருக்கிறாள். அந்த தெய்விக அனுபவங்களைச் சொன்னால் சிலிர்க்கும்.

நான் மிகுந்த விஞ்ஞான பாதிப்புடைய ஒருவன். என் அனுமானுஷ்ய படைப்புகளின் ஊடே விஞ்ஞானக் கேள்விகளும் நாத்திக வாதமும் நிறையவே இருக்கும். அந்த வகையில் ஒரு பெரும் அலசல் எல்லா விஷயத்திலும் என்னிடம் உண்டு. அந்த அனுபவத்தின் அடித்தளத்தில் இருந்து நான் பக்தியைப் புரிந்து கொண்ட விதம் அதைக் கொண்டு மீனாட்சி என்றும் சக்தியைப் புரிந்து கொண்ட விதத்தை எல்லாம் ஒரு அத்தியாயக் கட்டுரைக்குள் அடைக்க முடியாது.

இறை பக்தி சிலர் வரையில் பயம் சார்ந்தது. சிலர் வரையில் அது ஒரு சுய நலம், இன்னும் சிலர் வரையில் அது மூடத்தனம் அறிவு சார்ந்ததாக அது மாறும் போது நிறைய கேள்விகள் எழும்; அதற்கான விடைகள் நெருடலைத் தரும்.

நானும் பயத்தோடு சில காலம், சுய நலத்தோடு சில காலம், மூடமாய் சில காலம் என இதில் லயித்திருக்கிறேன். இப்போது தான் எனக்கு சூட்சமம் மபிடிபட்டுள்ளது. இன்று கோயிலுக்குப் போய் தான் பக்தி புரிய வேண்டும் என்கிற நெருக்கடியில் இருந்து நான் விடுபட்டேன். மானசிகமாய் பக்தி புரிகிறேன்.

அந்த பக்தியோடு முன்போல மீனாட்சியைப் போனோம் தரிசித்தோம் என்று தரிசனமும் செய்ய முடியவில்லை. எங்கோ சிலர் செய்த தவறால் ஒரு தீவிரம் கொழுந்துவிட்டதில் இன்று உடம்பைத் தடவிப் பரிசோதித்த பிறகே உள்ளே விடுகிறார்கள். அதை ஏற்கவும் முடியவில்லை – மறுக்கவும் முடியவில்லை. உள்ளேயும் சொல்லொணாத் தலைகள்… நீண்ண்ண்டவரிசை! அதனால் மானசிகமாய் கோபுரத்தைப் பார்த்து அந்த நாள் நினைப்பில் விழுந்து பூசலார் நாயனார் போல ஆன்ம தரிசனமே செய்கிறேன். எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஒரு சரியான காரண காரியம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்வதில் தான் நம் சிறப்பும் உள்ளது.

ஒரு விஷயத்தை நான் அழுத்தமாய் சொல்வேன் படைப்பாளிகளுக்கு ஒரு பெண் தெய்வம், இஷ்ட தெய்வமாய் அமைவது மிகச் சிறந்தது.

ஆறுதல், அமைதி, ஆனந்தம், ஆராதிப்பு என்று எல்லாமே அவளால் கிடைத்து விடும்.

காளமேகம், காளிதாசன், கம்பன், பாரதி என்று நீளும் பட்டியலே சாட்சி!மங்கையர் மலர்

Writer Indira Soundar Rajan in Mangaiyar Malar

Source::::bahanuman@wordpress.com

Natarajan

Joke of the Day…” This is ridiculous…”!!!

A pipe burst in a doctor’s house. He called a plumber. The plumber arrived, unpacked his tools, did mysterious plumber-type things for a while, and handed the doctor a bill for $600.

The doctor exclaimed, “This is ridiculous! I don’t even make that much as a doctor!.”

The plumber quietly answered, “Neither did I when I was a doctor.”  

Joke a Day.com

Natarajan

Message For the Day…” Reduce Your Wants …Live Simply…”

In a large gathering, people speak many languages. Each person understands only their language, and wants that they should be spoken to in that language. But there is a language of the heart, which all can understand and all would like to hear. That is the language which I speak, the language that goes from My heart to yours. When heart speaks to heart, it is love that is transmitted without any reservation. Trials, turmoil and thrills – these are constant for all of mankind. The responsive heart listens to these with sympathy and answers with love. Everyone is eager to be happy; everyone wants to work less and gain more, give little and get amply, but no one experiments with the other method, that is, wanting less and giving more. Every want is a shackle that hinders movement, and is a drag on the foot. Reduce wants; live simply, that is the way to happiness.

Sathya Sai Baba

An Interesting Personality of Coimbatore !!!

A stickler for keeping accounts, Govindarajulu was also one of the earliest bikers in Coimbatore. Photo: Special Arrangement
A stickler for keeping accounts, Govindarajulu was also one of the earliest bikers in Coimbatore. Photo: Special Arrangement

Govindarajulu kept track and account of every rupee, anna and paisa along

with accompanying invoices or vouchers.

The boy who hated maths while pursuing his education at the ancient Veeraswamy School ended up as a meticulous chronicler of FINANCIAL transactions! And this made M.A.Govindarajulu (1917 – 2009) an important part of the iconic Asoka Betelnut Company for over seven decades. Born to M.K.Ananthapadmanabhan and Rajalakshmi during the end of the Great War, Govindarajulu lost his parents as a toddler. He was brought up by his grand aunt Seethalakshmi Ammal, who brought up a number of her near and dear with enormous love. Even today, the Seethalakshmi Maternity home on Krishnaswamy Road administered by the Coimbatore Corporation continues to serve society.

Coimbatore was one of cities to take advantage of the fall out of the great depression of 1929 and a number of entrepreneurs such as Asoka M.K.Krishna Chetty came up at a meteoric pace. Govindarajulu joined his uncle Krishna Chetty as his Man Friday for accounts and cash management at his betelnut company and performed his job with aplomb for nearly 74 years. He was a workaholic and began work by 6 a.m. Thereafter he would go home for a quick breakfast at 8 a.m. only to return to the office by 8.30 a.m. Except for a brief lunch break for an hour, Govindarajulu worked until 8 p.m. He did not travel much and was wedded to his job.

Those days, Asoka Betelnut Company had nearly 100 sales depots and Govindarajulu would prepare and present a perfect statement of accounts of each one of them by 8.30 a.m. every day to his uncle.

Govindarajulu kept track and account of every rupee, anna and paisa along with accompanying invoices or VOUCHERS. And this was not just at work. He was like this even at home and his wife Saraswathi whom he married in 1937, got used to this.

He maintained separate day books and ledgers for home expenses and INVESTMENTS. He preserved each one of the books until he passed away in 2009.

It is astonishing and inspiring to notice his last journal entry on the 5th of December 2009, barely three days before his demise. Even in the last month of his life, Govindarajulu filed the sales tax returns by the first week itself.

Govindarajulu also maintained the bank pass books and day books of son M.G.Ramkumar, daughter-in-law Jayamma, grand son Gopalakrishna, grand daughter-in-law Vidya and of his great grand children Adarsh and Smriti.

His book entries tell an interesting story of the evolving times. Plus, they have some interesting entries. Such as the one that records the expenses incurred while hosting Kalki Sadasivam and Bharat Ratna M.S.Subbulakshmi; or the one about an expenditure of Rs. 18 towards purchase of grocery for his own wedding! As the rupee, anna and paisa evolve into rupees and paisa in his books, one notices the slow and sure advent of inflation.

Govindarajulu also preserved coins, stamps, letters, invitations and news paper cuttings. He would surprise people by giving them old invitations of weddings of their family members. When the famous hardware store M.S.Manickam and Company, as part of its jubilee celebrations, announced a REWARD to the customers who produced their old sales invoices, Govindarajulu participated in the same and won gold coins for all the first three prizes. Later he gave the coins away to the church patronised by the family of M.S.Manickam and Company.

Incidentally, Govindarajulu was also one of the earliest bikers in Coimbatore.

Keywords: M.A.GovindarajuluCoimbatorefirstbiker

Source::::Rajesh Govindarajulu in The Hindu.com

Natarajan

அமெரிக்காவில் அனாதையாக இருக்கும் விநாயகர்…

‘உங்களுக்கு மிகவும் பிடித்த கடவுள் யார்?’ என, ஒரு போட்டி நடத்தினால், கண்டிப்பாக பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் விநாயகர் தான் வெற்றி பெறுவார்.முட்டு சந்து முதல் அரச மரத்தடி வரை, ஆரம்ப பள்ளி முதல் ஐ.ஐ.டி., வரை, சண்முகன் வள்ளியை மணக்க உதவியது முதல் நவீன காதல் கதைகள் வரை, எந்த வேலை என்றாலும், அனைவரும் முதலில் வணங்கி, விண்ணப்பம் செய்வது, பிள்ளையாரிடம் தான்.இன்று ஒவ்வொரு வீட்டிலும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, வணங்கப்படும் இவர், ஓரிடத்தில் மட்டும் அனாதையாக நிற்கிறார்.
-எங்கே தெரியுமா?அமெரிக்காவில்…
ஓகியோ மாகாணத்தில் உள்ள டாலிடோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில்.தமிழகத்தின் அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த, ஸ்ரீபுரந்தான் ஊரில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது.
அந்த கோவிலில் இருந்து, 2005ம் ஆண்டு, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கும்பலால் திருடப்பட்ட அந்த விநாயகர் சிலை, 1.5 கோடி ரூபாய்க்கு வேறொருவருக்கு விற்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக, புதுச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனம், 1994 நவம்பர் மாதத்தில், பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்த செப்புத் திருமேனிகளை, புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வைத்திருந்தது.
அயல்நாடுகளில் அருங்காட்சியகங்களில் உள்ள தமிழர் கலைச்செல்வங்கள் பற்றிய தகவல்கள், வரலாறுகளை திரட்டி வரும் இணைய ஆர்வலர்களான நாங்கள், உடனே, புதுச்சேரி, பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டிற்கு சென்று, இதுதொடர்பான புகைப்படங்களை முறையாகப் பெற்றுக் கொண்டோம்.பொதுவாக, அந்த கலை பொருட்கள், எந்த ஆண்டு வாங்கப்பட்டன என்ற விவரம் மட்டுமே, சம்பந்தப்பட்ட அருங்காட்சியகங்களில் இருந்து கிடைக்கும்.
ஸ்ரீபுரந்தான் விநாயகர் கதையிலும் அதுதான் நடந்தது.எனினும் பல தேடல்களுக்கு பின், டாலிடோ அருங்காட்சியகத்தில் உள்ள விநாயகர் சிலை, பார்ப்பதற்கு திருடு போன சிலை போலவே இருப்பது தெரிந்தது.அமெரிக்காவில் வசிக்கும், முகநூல் நண்பர் ஒருவரிடம், ”ஒருமுறை அங்கே நேரில் சென்று படம் எடுத்து தர இயலுமா?” என்று கேட்டேன். அவரும் மெனக்கெட்டு அங்கு சென்று, நல்ல படங்களை எடுத்து அனுப்பினார்.
இரண்டு படங்களையும் ஒப்பிட்டபோது, ஒரு முக்கிய துப்பு கிடைத்தது. பிள்ளையாரின் தும்பிக்கையில், ஒரு சிறிய மரு, இருப்பது, இரண்டு படங்கள் மூலம் உறுதியானது. இந்த சான்று, சிலை திருட்டை உறுதிசெய்தது. கடந்த ஆண்டு, ஜூலை 17ம் தேதி, ‘சிலை திருட்டு பொருளாக இருக்கலாம்; மேலும் விவரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறோம்’ என, அஞ்சல் அனுப்பினோம்.
அஞ்சலில், சென்னை காவல் துறையின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இணையதளத்தில், 2009ம் ஆண்டில் வெளியிடப்பட்ட படங்கள், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின் படங்கள், சிலைகளின் ஒப்பீடு என்று அனைத்து ஆதாரங்களையும் இணைத்து இருந்தோம். அதன் நகலை, காவல்துறைக்கும் அனுப்பி வைத்தோம். ‘இனிமேல், விநாயகர், வீடு திரும்பி விடுவார்’ என, நம்பிக்கையுடன் இருந்தோம்.
ஆனால், அதன்பின்,அருங்காட்சியகத்திடம் இருந்த எந்த பதிலும் இல்லை.காவல்துறையும் ஒன்றும் செய்ய வில்லை. தொடர்ந்து ஏழு மாதங்கள் அவர்களை விடாமல் ‘தொந்தரவு’ செய்தவுடன்,- அருங்காட்சியகம், அதன் இணையதளத்தில், இந்த ஆண்டு பிப்., மாதத்தில், இரு கடிதங்களை வெளியிட்டது.
நாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தவுடனே, அருங்காட்சியகம், இதுகுறித்து இந்திய துாதரகத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை.அதனால், அருங்காட்சியகம் தான் அனுப்பிய கடித பிரதி, இந்திய துாதருக்கு அனுப்பிய கடித பிரதி இரண்டையும், பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிட்டு விட்டது.
அதாவது, ‘நாங்கள் முயற்சி செய்தோம். உங்கள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லை’ என்பதுதான் அதற்கு அர்த்தம்.இந்த சிலை கடத்தில் வழக்கில், போதுமான ஆவணங்கள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஆனாலும், இந்திய அரசு இதில், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே நினைக்கிறோம்.
இது மட்டும் ஒரு சம்பவம் இல்லை. இதுபோன்று, இந்திய கலைப்பொருட்கள், இந்திய மண்ணில் இருந்து திருடப்பட்டு, உலகெங்கிலும், பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் விடப்படுகின்றன.
சிலை கடத்தல் சம்பவங்களும், கடத்தப்பட்டவற்றை மீட்காமல் இருப்பதும், நமது கலைக்கும், ஆன்மிக உணர்வுகளுக்கும், நாமும் நமது அரசும் அளிக்கும் அலட்சிய பார்வையை, புறக்கணிப்பைத் தான், சர்வதேச அளவில், எடுத்துக்காட்டுகிறது.
எங்களை போன்ற ஒரு சில ஆர்வலர்களின் பணியை, அயல்நாட்டவர் எள்ளிநகையாடுகின்றனர். நாங்கள் அதற்காக வருத்தப்படவில்லை.கலைப்பொருட்கள் அவை சிலையாகவோ, மர சிற்பமாகவோ, ஓவியமாகவே, வேலைப்பாடு மிக்க பொருளாகவோ இருக்கலாம் நம் குலதனம்.
டாலிடோ அருங்காட்சியகத்தில் உள்ள, ஸ்ரீபுரந்தான் விநாயகர், அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்குள், நாடு திரும்ப வேண்டும் என்றால், தமிழக மக்கள் ஒருங்கிணைந்து, இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.இனியவாது அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களை, பாதுகாக்க முன்வர வேண்டும். அதைப் பார்த்து அரசு, தானாகவே தனது பணியை செய்ய முன்வரும்.இதற்கிடையில்…எங்கள் பணியும் தொடரும்!
– எஸ்.விஜய்குமார் -(கட்டுரையாளர், தொல்லியல் ஆர்வலர்; சிங்கப்பூரில், தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.)

Source::::dinamalar.com

Natarajan