Message For the Day…” No One can conceal anything from God …HE is Everywhere…”

Embodiments of Divine Love! The Lord pervades everything in the cosmos with His myriad feet, hands, eyes, faces and ears. But not recognizing this fact, people imagine themselves to be the doer and indulge in all kinds of speculation and self-praise. The Lord sees everything. No one can conceal anything from Him. He dwells within and outside every living being. Hence nothing can be hidden from Him. God is present in all beings in one and the same form. Although living beings vary in appearance from each other, God’s presence is consistent. The Sun shines over the water in the lake, in a well, in a vessel, in a river or over the ocean – it is reflected in many ways but the Sun is one. So too, God is one and the same in all beings. There is no one in the world nearer to you than the Divine.   

Sathya Sai Baba

In This Village No House has Front Doors… Not Even Banks … !!!

In This Village, Nobody has Front Doors. Not Even the Bank.

A family gathers outside their house in Shani Shignapur village in Ahmednagar, Maharashtra. (Agence France-Presse photo)

SHANI SHINGNAPUR:  Members of the Gade family proudly show off a stash of rupees kept in an unlocked tin barrel in their bedroom, despite their home not having a front door.

In Shani Shingnapur village in Maharashtra, residents see little need for such security, thanks to their belief in special protection from the Hindu deity Shani.

As farmers trundle the roads in bullock carts piled high with sugarcane, they pass rows of homes bearing empty door frames — a village tradition that goes back for generations.

“Years ago, Shani came in the dreams of devotees and told them you don’t need to put any doors on your homes,” housewife Jayashree Gade told news agency AFP.

“He said: ‘I will protect you’. That’s why we don’t have any doors.”

According to legend, an iron and stone slab washed up in a nearby river during a flood more than 300 years ago, and began oozing blood when cattle herders poked it with a stick.

In a vision to a villager later that night, the slab was revealed to be an idol of Shani, and today it stands in an open square adorned with garlands of flowers, drawing crowds of pilgrims.

Shani, who is believed to be manifested in the planet Saturn, is considered so mighty that his shrine cannot be kept under a shelter — and he will not let thieves in the village of open homes go unpunished.

Some villagers said they put loose panels against their door frames at night, but only to keep out wild animals.

Similarly, the local branch of state-owned UCO Bank prides itself on its “lockless” status. Although money is kept in a strongroom, the front of the building has just a glass door with no lock, to avert stray dogs

“We have no trouble,” said bank official Nagender Sehrawat, gesturing to the queue of customers when asked if they were happy with the arrangement.

Shani Shingnapur’s reputation has been somewhat dented in recent years by reports of a few thefts. In 2010, a visitor from the North complained that cash and valuables worth 35,000 rupees  were taken from a vehicle.

According to a pamphlet handed out at the shrine, Shani Shingnapur is not just free from theft but from all sinful behaviour, a “model village” in contrast to the corrupt outside world.

“Professional robbers, thieves, dacoits, non-vegetarians, drunkards, never come here,” the pamphlet confidently stated.
“If they come, they behave like gentlemen.”

Story First Published: January 06, 2015 10:48 IST
SOURCE::::www.ndtv.com
Natarajan
Jan 6 2015

It may look like Snow covered Alps… But ….

Incredibly deceiving images of what can easily be mistaken for snow-covered Australian mountains have been released.

But do not be fooled. Instead, what the pictures really show are stunning pyramids of plain, white salt.

These were taken five years ago, when Emma Phillips was on a mission to find the perfect location for her final assignment to wrap up her photography course.

Her vision was to capture images of an industrial location near the city of Melbourne but this proved to be quite an arduous process.

Instead, she left her hometown and spent two months in the Nullabor Plain out in the Western Australian desert.

There she came across an abandoned salt refinery and found exactly what she was looking for

Read more: http://www.dailymail.co.uk/news/article-2898419/Eerie-pictures-abandoned-salt-middle-desert.html#ixzz3O2Lq00bg

Incredibly deceiving images of what can easily be mistaken for mountains of snow have been released by Melbourne-based photographer Emma Phillips

For the first time, the photographer has published the photos in her book 'Salt' which shows the vastly treeless landscape of the Nullabor Plain

During her time in the desert, she paid a visit to an abandoned salt refinery and found the perfect location for her final assignment

The whole experience was 'desolate, eerie and beautiful', the 25-year-old told Daily Mail Australia

For the first time, the photographer has published the photos in her book ‘Salt’ which shows the vastly treeless landscape of the Nullabor Plain.

The whole experience was ‘desolate, eerie and beautiful’, the 25-year-old told Daily Mail Australia.

She was particularly impressed with the way ‘the buildings seemed to disappear and the way the salt shimmered in the sun’.

About 18 images have been published in ‘Salt’, which is available online.

SOURCE:::: http://www.dailymail.co.uk

Natarajan

6 Jan 2015

 

ரமணர் வாழ்வில்…. சுவையான நிகழ்ச்சிகள்…Part 6

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

திருவண்ணாமலை கிரிவலத்தை பகவான் எப்போதும் ஊக்குவித்தார். உடல் நலம் குன்றியவர்கள்,முதியவர்கள் கூடகிரிவலம் செல்வதை ரமணர் தடுத்ததில்லை. ‘‘அமைதியாக இறைவனை நினைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள்’’என்றே அவர் கூறுவார். அனைவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து இறைவனின் ஆசியைப் பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். பகவானும் பல முறை கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலையைச் சுற்றி வருவது பற்றி ஒரு உண்மைக் கதையையும் பகவான் பக்தர்களிடம் சொல்வார்.கதையின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் அவர் சொன்னதேயில்லை.அந்த க்ளைமாக்ஸை பகவானின் அனுக்ரஹத்துடன் நான் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறேன்.

திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
ஏன்?

கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.

பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.

ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.

அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.

ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.

அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.

இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.

ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.

ஆமாம். அது என்ன தெரியுமா?

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்? ஓர் இளைஞன்.

ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்!

எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.கால்கள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெல்லாம் சொல்லிக் கொண்டதும் இல்லை.தட்சிணாமூர்த்தியின் அம்சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?நம் குரு தேவரும் அப்படித்தான்.

அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான். இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!

கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்?

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE::::: http://www.balanuman.wordpress.com

Natarajan

Message For the Day…” What is the True Devotion to God … ” ?

In ancient times, sages who performed severe penance to realise the Ultimate Reality, experienced Him and declared that the Supreme Lord is beyond Tamas. This means, to experience the Lord we must get rid of our Tamo-guna (the darkness of ignorance). The Lord is beyond the veil of Tamas. When the veil is removed, the Lord can be seen. If one is filled with Tamo-guna from head to foot, how can they experience God? You have a mountain of desires in your heart; you offer a petty coconut to the Lord! Is this love? Is this devotion? No! It is not the way to pray to the Lord. To seek a favour is not prayer at all. On the contrary, the person filled with selfless love will accomplish anything in life, and is ever ready to make any sacrifice. You are God. Get rid of your body consciousness, and you will realise your Divinity. Develop the qualities of love and sacrifice.

Sathya Sai Baba

Here is One Puzzle Link Which will Simply Floor You …. !!!

It is truly amazing… you will like it …

> Think any Famous Person in your mind and click on the link.!!!

> Don’t know how it works, but simply awesome..!!
> Try this, it’s amazing, couldn’t believe it, the guy who made this quiz
> must be one of the most logically brilliant puzzles !!!
> ​
>http://en.akinator.mobi/personnages/jeu

SOURCE:::: INPUT FROM A FRIEND OF MINE

Natarajan

Jan 6 2015

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி ….சில சுவையான தகவல்கள் …

1947-ம் ஆண்டு ஆகஸ்ட்  15ம் நாள்.
திருவண்ணாமலை ஆசிரமத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது.
அன்று பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள், பகவானை தரிசனம் செய்தார்கள்.
ரமண மகரிஷி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே ஒரு குரங்கு எட்டிப் பார்த்தது.  அன்றுதான் பிறந்தது போல் இருந்த ஒரு குட்டியையும் அது வைத்திருந்தது. குட்டி, தாயை இறுகப் பற்றிக் கொண்டு, அச்சத்துடன் இருந்தது.
தாய்க்குரங்கு,  உள்ளே வரவேண்டும் என்று முயற்சித்தது. உள்ளே இருந்த பக்தர்கள்,அந்தக் குரங்கை விரட்டினார்கள்.குரங்கு பயந்து ஓடி அங்குமிங்கும் அலை பாய்ந்தது.
பகவான், குரங்கை விரட்டியவர்களைப் பார்த்தார். “அதை ஏன் துரத்துகிறீர்கள்? அது இங்கே என்னிடம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறது. தன் இளம் குழந்தையை எனக்குக் காட்டுவதற்காக வருகிறது. அது தவறா என்ன? உங்களுக்குக் குழந்தை பிறந்தால் என்னிடம் காட்டுவது இல்லையா? அப்படிக் கொண்டு வரும்போது யாராவது உங்களைத் தடுத்தால் எப்படி இருக்கும்? நீங்கள் குழந்தையைக் கொண்டு வரலாம். குரங்கு கொண்டு வரக்கூடாதா? இது என்ன நியாயம்?’’ என்றார்.
பக்தர்கள் குரங்குக்கு வழிவிட, அது குஷியாக உள்ளே வந்து, தன் குட்டியை பகவானிடம் பெருமையாக, சந்தோஷமாகக் காட்டிற்று. பகவான் அதன் முதுகை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தார்.
அது மட்டும் அல்ல, ஆசிரம நிர்வாகிகளிடம், “சுதந்திர தினம் என்பதால் எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.நம்முடைய தோழர்களாகிய குரங்குகளுக்கு விருந்து ஒன்றும் இல்லையா? அவர்களை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் எல்லாம் இப்போது வந்தீர்கள். அந்தக் காலத்தில் இந்தக் குரங்குகள்தான் எனக்கு நண்பர்கள். அப்போது இவர்களைப் பார்த்திருக்க வேண்டும். எல்லாம் இவர்கள் ராஜ்ஜியம்தான்!’’ என்றார்.
அப்புறம் என்ன? மளமளவென குரங்குகளுக்கும் தடபுடலாக விருந்து தயார் ஆயிற்று.
நீங்களே சொல்லுங்கள்.உலகத்திலேயே சுதந்திர தினத்தன்று குரங்குகளுக்கும் விருந்து வைத்த மகான்கள் யாராவது உண்டா? பகவான் ரமண மகரிஷியைத் தவிர!
ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். மனதில் யார் உனக்கு அமைதியை ஏற்படுத்துகிறாரோ, அவரையே உன் குருவாக ஏற்றுக் கொள்!
–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
ஒரு நாள், ரமணாஸ்ரமத்தில் நல்ல கூட்டம். ஹால் நிரம்பி வழிந்தது.
அப்போது ஒருவர், அந்த ஊரில் உள்ள மோசமான ரௌடி ஒருவன் இறந்துவிட்ட தகவலை நண்பர்களிடம் தெரிவித்தார்.

இறந்தவன் மிகவும் கெட்டவன். பெரிய திருடன். மது அருந்திவிட்டு எதிர்ப்பட்டவர்களையெல்லாம் தாக்கும் குணம் உள்ளவன். அவனைப் பற்றி அனைவருக்குமே தெரியும் என்பதால் ஹாலில் சலசலப்பு ஏற்பட்டது.

“நல்ல வேளை போய்த் தொலைந்தான். எவ்வளவு பெரிய பாவி அவன்’’ என்றார் ஒருவர்.
‘‘கொடுங்கோலன். அப்பாவிகளை அடித்து மிரட்டுவான் அந்தக் கயவன்’’ என்றார் மற்றொருவர்.
‘‘அவன் குணக்கேடன். அடிக்கடி சிறைக்குச் செல்பவன்’’ என்று வெறுப்புடன் ஒருவர் சொன்னார்.
‘‘பக்தர்களிடம் கூட அவன் வழிப்பறி செய்வான்’’ என்றார் ஒரு பெண்மணி.
இப்படியாக ஹால் முழுக்க அவனை எல்லோரும் திட்டிக்கொண்டும், சபித்துக் கொண்டும் இருந்தார்கள்.
அத்தனை பேரும் ஒரு வழியாகப் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார் பகவான். அவருக்கும் அந்தத் திருடனைப் பற்றித் தெரியும் என்பதால் அவர் ஏதாவது  சொல்வாரா என்று பக்தர்கள் எதிர்பார்த்தார்கள்.
பகவான் ரமணர் வாய் திறந்து முதல் முறையாக அவனைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசினார்.
அவர் பேசியது என்ன?
‘‘அவன் ரொம்ப துப்புரவான மனிதன். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை குளிப்பானே!’’
இவ்வளவுதான் அவர் சொன்னது. எத்தனை பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை பகவான் இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
மற்றவர்களிடம் உள்ள குறைகளைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே கவனியுங்கள். அப்போதுதான் நீங்கள்  சந்தோஷமாக இருப்பீர்கள் என்று 100 பக்கம் எழுத வேண்டிய ஒரு விஷயத்தை பத்தே வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதுதான் பகவான்.
எல்லோரிடமும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் நாம் பார்க்கக் கற்றுக் கொண்டால் சண்டையோ, சச்சரவோ, பொறாமையோ, எரிச்சலோ நம்மை நெருங்குமா என்ன?
மெரிக்காவிலிருந்து சில வெள்ளைக்காரர்கள், பகவானை தரிசிப்பதற்காக திருவண்ணாமலை ஆசிரமத்துக்கு வந்தார்கள்.
ரமணரிடம் பல ஆன்மிக சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள். அவர்களில் துடுக்குத்தனம் கொண்ட ஒருவரும் இருந்தார்.
அந்த வெள்ளைக்காரர், பகவானைப் பார்த்து, “இஷ்ட தெய்வம் என்று சொல்கிறார்களே, அப்படி ஒருவர் உண்டா?’’ என்று கேட்டார்.
அதற்கு பகவான், “ஆம். ஈஸ்வரன் இருக்கிறானே’’ என்றார்.
அந்த அமெரிக்கர் சற்றுக் கிண்டலாக, “என்ன? கண், மூக்கு, காது, கை, கால் இவற்றோடா?’’ என்று கேட்டார்.
”ஆம். அதில் என்ன தவறு? உங்களுக்கு அந்த அங்கங்களெல்லாம் இருக்கும் போது, கடவுளுக்கு இருக்கக் கூடாதா?’’ என்று பகவான் பதில் சொன்னார்.
உடனே அந்த வெள்ளைக்காரர் சிரித்தார்.“இந்துக்களின் நூல்களில் கடவுளுக்கு இப்படி கை, கால் என்று அவயவங்கள் இருக்கின்றன என்று எழுதியிருப்பதைப் படிக்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது!’’
பகவான் அந்த அமெரிக்கரையே உற்றுப் பார்த்தார்.“அப்படியா? அப்படியானால் உங்களுக்கும் கை, கால் போன்ற அங்கங்கள் எல்லாம் இருக்கின்றனவே,அவற்றைப் பார்த்தால் உங்களுக்கு ஏன் சிரிப்பு வரவில்லை?’’ என்று கேட்டார்.
உடனே அருகில் உள்ளவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.
அந்த அமெரிக்கர் தலை குனிந்தார். அவமானத்தால் அல்ல. சரியான பதில் தனக்குக் கிடைத்ததே என்ற நன்றிப் பெருக்கால்.
SOURCE::::: input from a friend of mine
 Natarajan

Image of the Day…Full Moon Day Today !!!

Full moonrise by Mohamed Laaifat Photographies in Normandy, France.Full moonrise, above, by Mohamed Laaifat Photographies in Normandy, France.

Tonight, the moon is full. This full moon falls on January 5, 2015 at 4:53 Universal Time. Although the moon turns full at the same instant worldwide, the clock time – and possibly the date – differs by time zone. For the mainland United States, the moon reaches the crest of its full phase on this Sunday evening on January 4 at 11:53 p.m. EST, 10:53 p.m. CST, 9:53 p.m. MST or 8:53 p.m. PST.

The January 2015 full moon is the first full moon after the December 21 solstice. In North America, we often this full moon the Wolf Moon, Old Moon or Moon After Yule.

Astronomically speaking, the moon is full at the moment that it’s most opposite the sun in its orbit (180o from the sun in celestial or ecliptic longitude). For general reference, however, we can say the moon is full all night tonight, lighting up the nighttime from dusk until dawn.

Day and night sides of Earth at the instant of the January 2015 full moon (2015 January 5, at 4:53 UTC) Image credit: Earthview

Elsewhere around the world, the moon reaches the crest of its full phase at different times on the clock. Looking at the worldwide map above, you can see that the full moon comes at midnight in South America and northeastern North America, at sunrise in Africa and the Middle East and at noon in eastern Asia. All these places will see a full-looking moon lighting up the sky tonight from dusk until dawn.

But to see the moon at the instant of full moon, the moon has to be above your horizon on the nighttime side of the world.

In both the Northern and Southern Hemispheres, the January sun – unlike the January full moon – rises south of due east and sets south of due west. In the Northern Hemisphere, these far-southern risings and settings of the sun give us the short days of winter. South of the equator, the same far-southern sunrises and sunsets bring long summer days. Meanwhile, the full moon lies opposite the sun, mirroring the sun’s place in front of the backdrop stars for six months hence.

And that’s why tonight’s moon – like the sun in summer – will follow a high path across the sky as seen from the northern part of the globe – and a low path as seen from the southern.

This January full moon rises north of due east around sunset, climbs highest in the sky around midnight and sets north of due west around sunrise.

Bottom line: Watch the full moon shine from sundown to sunup on the night of January 4, 2015.

SOURCE::: http://www.earthsky.org

Natarajan

” சில சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக…”

வாழ்க்கையில் நமக்குத் தெரிந்த சில விஷயங்களை நாம் மறந்து விடுவதுண்டு. அதனை நினைவு படுத்தும் வகையில்தான் இந்த கட்டுரை உங்களுக்காக.

நாம் செய்ய மறந்த, செய்யாத, கவனிக்காத விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

நாம் சிரிப்பதால் நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தி குறைகிறது. அதே சமயம், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகளின் பலம் கூடுகிறது.

6 வயதாகும் ஒரு குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு 300 முறை சிரிக்குமாம். ஆனால் நம்மைப் போன்ற பெரியவர்கள் ஒரு நாளைக்கு 15 முதல் 100  முறை தான் சிரிக்கிறோமாம். சிலர் அது கூட சிரிக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஒவ்வொரு முறை நாம் தும்மும் போதும், நம் மூளையில் உள்ள ஒரு செல் உயிரிழக்கிறது.

நமது இடது நுரையீரல், வலது நுரையீரலை விட சிரியதாக அமைந்திருக்கும். அதற்குக் காரணம், இடது பக்கம், இதயத்துக்கு இடம் விடுவதற்காக.

மனிதனின் இறப்புக்குப் பிறகும், தலைமுடியும், நகமும் வளரும்.

உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்தாலும், உடலில் ரத்தம் பாயாத பகுதி ஒன்று உள்ளது. அதுதான் நமது கண்ணில் உள்ள விழிப்படலமான கார்னியா. இதற்கு தேவையான ஆக்ஸிஜனை நேரடியாக காற்றில் இருந்தே பெற்றுக் கொள்கிறது.

நமது உடலில் ஏதேனும் சிறிய காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் முன்பு எல்லாம் நமது எச்சிலைத் தடவுவார்கள். உண்மையிலேயே, நமது எச்சிலுக்கு காயத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவும், தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கவும் சக்தி உள்ளது.

நாம் சிரிக்கும் போது முகத்தில் உள்ள 14 தசைகள் வேலை செய்கின்றன. முகம் சுளிக்கும் போது 43 தசைகள் வேலை செய்கின்றன. எனவே எப்போதும் சிரித்துக் கொண்டிருப்போம்.

உடலில் ஏற்படும் வலிகளை நம் நரம்புகள் மூளைக்குக் கொண்டு செல்வதால் தான் நம்மால் வலியை உணர முடிகிறது. ஆனால் மூளையில் ஏற்படும் பிரச்னைகளை மூளையால் உணர முடியாது. மூளைக்கு ஏற்படும் வலியை மூளைக்கு சொல்லும் ஒரு விஷயம் இல்லவே இல்லை. அதனால் மூளையில் ஏற்படும் ஒரு பாதிப்பினால் நமக்கு உடனடியாக வலி ஏற்படுவதில்லை. மூளையில் ஏற்படும் காயங்கள் அல்லது பாதிப்பு எப்போது மூளையின் திசு, நரம்பு அல்லது ரத்த நாளங்களுக்கு பரவுகிறதோ அப்போதுதான் நமக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்படுகிறது.

மூளை என்பது 80% தண்ணீரைக் கொண்டதாகும். எனவே தண்ணீர் உடலை விட மூளைக்கு மிக அதிகமாகத் தேவைப்படும். எனவே உங்கள் உடலை தாகம் எடுக்கும் அளவுக்கு வைக்காமல் எப்போதும் தண்ணீர் அருந்திக் கொண்டே இருங்கள்.

உண்ணும் உணவுகளை செரிக்க சுரக்கப்படும் சுரப்பிகளில் இருந்து நமது குடல் பகுதியைக் காப்பதற்காக 3அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடலின் உட்பகுதியில் புதிய லேயர் உருவாகும்.

இதயத்தைப் பொருத்தவரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளதாகவே இருக்கிறது. ஆண்களை விட பெண்களின் இதயம் அதிக முறை துடிக்கிறது. மாரடைப்பு போன்ற நோய்களின் போது பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே முறையான சிகிச்சை பலனளிப்பதில்லை.

நாம் வயிற்றில் உள்ள பல முக்கிய உறுப்புகளை எடுத்து விட்டும் வாழ முடியும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அதாவது, வயிற்றில் உள்ள மண்ணீரல், 75 சதவீத கல்லீரல், 80 சதவீத பெருங்குடல், ஒரு சிறுநீரகம், ஒரு நுரையீரல் என ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு எடுத்து விட்டாலும் ஒரு மனிதன் வாழ முடியும் என்ற அளவுக்கு வந்து விட்டோம்.

ஆனால், இயற்கையோடு பொருந்திய வாழ்க்கை முறையே சுகாதாரமான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை என்பதை உணர்ந்து செயல்படுவோம்..

SOURCE::: http://www.dinamani.com

Natarajan

Jan 4 2015

” சொல்லத் தோணுது….வாய்கள் பேசாது… காதுகள் கேட்காது!…

சென்னை, தியாகராய நகரில் உள்ள ரெங்கநாதன் தெரு...

சென்னை, தியாகராய நகரில் உள்ள ரெங்கநாதன் தெரு…

முன்பெல்லாம் பண்டிகைக் காலங் களில் மட்டும்தான் நகரங்கள் மக்கள் நெருக்கடியில் திணறி மூழ்கும். இப்போது ஒரு குறிப்பிட்ட நாளில்தான் புத்தாடை, தங்க நகை கள் வாங்குவது என்றில்லாமல், நினைத்த நாளில் வாங்கி விடுகிறபடி வாழ்க்கைமுறை மாறிவிட்டது. கிராமத் துக்கும் நகரத்துக்குமான இடைவெளி குறையக் குறைய எல்லாத் தேவை களுக்குமே சிறு நகரத்துக்கும் பெரு நகரத்துக்கும் தேடிப் போவது வழக்க மாகிவிட்டது.

நகரங்களில் இப்போதே இவ்வளவு போக்குவரத்து நெருக்கடி என்றால், மிச்ச காலத்தும் என்ன ஆகப் போகி றதோ தெரியவில்லை. இரண்டு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்பது மாறிப் போய், நான்கு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. அத் துடன், ஒன்றுக்கு இரண்டு வாகனங்கள் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அதை நிறுத்தி வைக்கவோ, ஓட்டிச் செல் லவோதான் இடமில்லை.

100 அடி சாலைகளை 60 அடிகளா கவும், 60 அடி சாலைகளை 40 அடி சாலைகளாகவும் மாற்றுவதில் உலகத்திலேயே நம்மவர்களை யாரும் மிஞ்ச முடியாது. சாலைகளில் நடந்து செல்வதற்கு என்று தனிப் பாதைகள் வேண்டும் என்பதை, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் உணராமல் இருக்கப் போகிறோம்?

சாலைகளில் நான் அதிகமாக கவனிப்பது நடந்து செல்லும் மக் களைத்தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இவர்கள் நடக்க வேண்டியிருக்கிறது. நடந்து செல்பவர்களை ஏளனமாகப் பார்ப்பதும், பயந்து பயந்து அவசர அவசரமாகக் சாலையைக் கடப்பவர்களை வசை மொழியில் திட்டுவதும் நம் ஊரில்தான் பார்க்க முடியும். அதிலும் வேகமாக நடக்க இயலாதவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என இவர்களுக்கெல்லாம் சாலையைக் கடந்து போகக்கூடிய நேரத்தை ஒதுக்கி நாம் முன்னுரிமைத் தருவதில்லை.

விதியை உருவாக்கக் காரணமாக இருப்பவர்களும் நாம்தான். அதை மீறும்போது ஏற்படும் விளைவுகளைக் கண்டு குற்றம் சொல்பவர்களும் நாம் தான். மக்கள் குடியேறுவதற்கு முன் பாகவே, நகரங்கள் உருவாக்கப் படும்போதே… அடிப்படைத் தேவை களையும், நெடுங்காலத் தேவைகளை யும், தொலைநோக்கில் உணர்ந்து திட்டங் களை வரைபவர்கள் வெளிநாட்டினர். அதனால் நடந்து செல்பவர்கள், மிதிவண்டியில் செல்பவர்கள், பெரிய வாகனங்களில் செல்பவர்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பாதை அமைக்கவும், இது குடியிருப்புப் பகுதி, இது வணிக வளாகப் பகுதி என ஒவ்வொன்றையும் முறையாக தனித் தனியாக உருவாக்கவும் அவர்கள் பழகி யிருக்கிறார்கள். இதனால் யாருக்கும் நேரம் விரையமில்லை; விபத்துகள் இல்லை; விரைவாகச் செல்வதால் வெளியேறும் எரிபொருள் மாசுவின் பாதிப்பும் குறைவாக இருக்கிறது. எரிபொருளும் மிச்சமாகிறது.

வெள்ளைக்காரனிடம் இருந்து ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், அவனிடம் உள்ள நல்ல பழக்கங்களைப் பின்பற்ற மறுக்கிறோம். மக்கள் குடி யேறிய பின்தான் இங்கு எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நகரங்களுக்கு நிரந்தரமாகக் குடியேறுபவர்கள் எவ் வளவு பேர்? அவசர அலுவல்கள் காரணமாக நகரத்துக்கு வந்துபோகிறவர் கள் எவ்வளவு பேர்… எனக் கணக் கெடுத்தால், அதிர்ச்சிதான் நேரிடும்!

சிக்கல்கள் உருவாவதற்கு முன்னே இம்மக்களுக்கானத் தேவைகளை அறிந்து திட்டங்கள் தீட்டி, உருவாக்கித் தருவதற்குப் பெயர்தான் அரசாங்கம்! வணிக வளாகப் பகுதிகளாக இருந் தவை, மேலும் மேலும் அடுக்கடுக் கானக் கட்டிடங்களாக அதன் ஆபத் தைப் பற்றி கவலைப்படாமல் உயர்ந்து கொண்டே போவதும், குடியிருப்புப் பகுதிகள் அதன் காரணமாக வணிக வளாகப் பகுதிகளாக மாறிக்கொண்டே போவதும் இனி நிற்கப் போவதில்லை.

30 ஆண்டுகளுக்கு முன்பு நான் திரைப்படக் கல்லூரிப் படிப்பை முடித்து, சென்னை தியாகராய நகர் பகுதியில்தான் 10 ஆண்டு காலம் தங்கியிருந்தேன். அப்போது இருந்த அந்தச் சாலைகளின் அகலங்களும் தெருக்களின் அகலங்களும் அப் படியே இருக்கின்றன. ஆனால், மக்கள் தொகை நெருக்கடியும் கட்டிடங்களின் எண்ணிக்கையும் 100 மடங்கு உயர்ந் திருக்கிறது. இதைவிடக் கூடுதலான எண்ணிக்கையில் அரசுப் பேருந்து களும், 100 மடங்கு வாகனங்களும் அந்த சாலைகளில் சென்று கொண்டிருக் கின்றன. இந்த அளவுக்கு இங்கே நெருக்கடி உருவாக காரணம், அந்த இடம் முழுக்கவும் வணிகப் பகுதிகளாக மாறிக்கொண்டே இருப்பதுதான்.

இன்று நேரம் என்பது ஒவ்வொரு வருக்கும் மிக முக்கியமானதாகிவிட்டது. தியாகராய நகரைக் கடக்காமல் சென்னையின் பிற பகுதிகளை அடைய முடியாது. இதே போல்தான் சென்னை நகரம் மட்டுமல்ல; இந்திய நகரங்களின் அனைத்துப் பகுதிகளும் மாறிக்கொண்டு வருகின்றன.

அதுவும் பண்டிகைக் காலங்கள் என்றால் போக்குவரத்தே முடங்கிவிடு கிறது. விபத்து என ஒன்று ஏற்பட்டால் தான் நடவடிக்கைகளும், திட்டங்கள் தீட்டுவதும் இங்கே நடைபெறுகிறது. அதைகூட நீதிமன்றம் செல்லாமல் பெற முடிவதில்லை. ஒருமுறை அங் கிருக்கின்ற கடைகளுக்கு இதுதொடர் பான அதிகாரிகள் சென்று பாருங்கள். ஒரு குண்டுமணி போட்டால்கூட கீழே விழாதபடி காலையிலிருந்து இரவு வரைக்கும் மக்கள் வெள்ளம் திணறிக்கொண்டேயிருக்கிறது. இந்த மக்களெல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்? எதில் வருகிறார்கள்? வாகனங்களை எங்கே நிறுத்துகிறார்கள்? அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இருக்கின்றதா… என கண்காணித்து செய்து தருபவர்கள் யார்?

இப்பகுதிகளில் கும்பகோணம் போன்ற தீ விபத்தோ, சென்னை மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடம் போன்ற கட்டிட விபத்தோ ஏற்படாது என யாராவது உறுதியாக சொல்லிவிட முடியுமா? அவ்வாறு நிகழாது என ஒருவேளை யாராவது சொன்னால்… நீங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்றைக்காவது அதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டால், எவ்வாறு அம்மக் களைக் காப்பாற்றுவீர்கள்?

ரெங்கநாதன் தெரு போன்ற தெருக்களில் தீயணைப்பு வண்டி நினைத்த மாத்திரத்தில் சென்று பாதிப்புக்கு உள்ளாகுபவர்களைக் காப்பாற்றிவிட முடியுமா? சென்று சேர்வதற்குள் தீ விபத்து ஒரு கடையோடு நின்றுவிடுமா?

ஏகப்பட்ட காவல்துறையினரை நிறுத்தி நகைத் திருட்டு, துணித் திருட்டு செய்பவர்களைத்தான் நம்மால் பிடிக்க முடியும். நகரத்தின் தொலை நோக்கு வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு… எந்தெந்த வணிகப் பகுதி கள் போக்குவரத்துக்கும், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கும், மக்க ளின் பாதுகாப்புக்கும் தடையாக இருக் கின்றதோ, அவற்றை இப்போதே கணக்கெடுத்து அகற்றி இடம் மாற்று வதுதானே சரியானதாக இருக்கும். இந்த நகைகளையும், பாத்திரங்களையும், துணிகளையும் எங்கு வைத்தும் விற்கலாமே!

அயல்நாடுகளில் இருப்பது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விற்பனை பகுதியை உருவாக்கி, அவர் களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்து, இவைகளை இடம் மாற்று வது பற்றி முடிவெடுக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டம் இது.

சாலைகளை விரிவுபடுத்தி போக்கு வரத்து நெரிசலை சீராக்காமல், வருகின்ற எல்லா வெளிநாட்டு கார் கம்பெனிகளுக்கும் அனுமதி கொடுத்துக் கொண்டேயிருப்பதும் எந்த வகையில் சரியானது?

மக்கள் கேட்டால்தான் செய்வோம் என பொறுப்பில் இருப்பவர்கள் நினைக்கலாம். இந்த மக்கள் எந்தக் காலத்திலும் எதையும் வாய்த் திறந்து கேட்கவே மாட்டார்கள் என்பது எல்லோருக்குமேத் தெரியும். இருந்தும் எனக்கு சொல்லத் தோணுது!

– இன்னும் சொல்லத் தோணும்
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmailcom. 

SOURCE:::: தங்கர் பச்சான்  IN tamil.thehindu.com

Natarajan

Jan 4 2015