Image of the Day…Soyuz Spacecraft Ready to be Launched on March 28…

The Soyuz TMA-16M spacecraft is seen after having rolled out by train to the launch pad at the Baikonur Cosmodrome, Kazakhstan, Wednesday, March 25, 2015. NASA astronaut Scott Kelly and Russian cosmonauts Mikhail Kornienko and Gennady Padalka of the Russian Federal Space Agency (Roscosmos) are scheduled to launch to the International Space Station in the Soyuz at 3:42 p.m. EDT, Friday, March 27 (March 28, Kazakh time). As the one-year crew, Kelly and Kornienko will return to Earth on the Soyuz TMA-18M in March 2016.

Most expeditions to the space station last four to six months. By doubling the length of this mission, researchers hope to better understand how the human body reacts and adapts to long-duration spaceflight. This knowledge is critical as NASA looks toward human journeys deeper into the solar system, including to and from Mars, which could last 500 days or longer.

More: A Year in Space

Image Credit: NASA/Bill Ingalls 

source:::: http://www.nasa.gov

Amazing Art By an Artist Who Can Not See …

Painting with Textures

In 2001, John Bramblitt lost his eyesight after an epileptic episode. Shortly after, Bramblitt started painting in a most interesting way: By using textured paint, John can tell where he painted and what, allowing him to virtually “see” the painting. The resulting paintings are a thing of beauty, rivaling and even surpassing art created by artists with perfect sight.

Blind Art

 

Blind Art

Blind Art

Blind Art

Blind Art

Blind Art

Blind Art

Blind Art

Blind Art

About the Artist:

In this Art Therapy Video from Veria Living, Blind Artist John Bramblitt began to lose his eyesight when he was just 11 years old, but you wouldn’t know it by looking at his work. He uses a special fabric paint that leaves raised lines on the canvas so he can track his progress. For colors, he says each color of paint has a different feel. He knows the colors by touch. Believe it or not, John says the world’s a much more colorful place now that he’s blind.

Source:::: ba-bamail.com and You Tube

Natarajan

Message For the Day…” One has to get guided by ‘Shastras’ For attaining Peace and Liberation…”

The almanac (calendar) might indicate that ten units of rain will fall, but even if the daily sheet on the calendar is folded ten times and squeezed, not a drop of rain can be extracted. The purpose of the calendar is not to give rain but only to give information about rain and its quantity; its pages do not contain the ten units of rain which is there only in the clouds above. So too, the scriptures (shastras) can only give information about doctrines, axioms, rules, regulations, and duties. The sublime characteristics of the Vedas, the Upanishads, and scriptures are that they give instruction in the methods of attaining peace and liberation. But they aren’t saturated with these essences of bliss; one can’t collect the essences by squeezing the texts. One has to discover the path, direction, and goal as described in them, and then tread the path, follow the direction, and reach the goal. 

Sathya Sai Baba

 

Thought For the Day….

           Beautiful Thoughts for a Beautiful Life

Life would be perfect if… 
anger had a STOP button
Mistakes had a REWIND button
Hard times had a FORWARD button
and Good Times a PAUSE button  
The bird asked the bumblebee:
You work so hard to make the honey and humans just take it away, doesn’t it make you feel bad?
No,” said the bee, “because they will never take from me the art of making it.” 
What stands behind us and what stands before us are tiny matters compared to what is within us.
The happiness of our lives depends on the quality of our thoughts. But the quality of our thoughts depends on the people in our lives. 
We receive a lot of unconditional love when we’re born.
We receive a lot of unconditional respect when we die.
We just need to learn how to handle the between. 
Remind this to all those you love! 
Source::::::::: input from a friend of mine
Natarajan

” சொல்லு ..ராம ராமா …சிவ சிவா …”

ஆந்த்ராவைச் சேர்ந்த ஒரு சம்ஸ்க்ருத பண்டிட் ஒருவர் பெரியவாளை தர்சனம் பண்ண தஞ்சாவூர் அருகில் ஒரு கிராமத்துக்குப் போனபோது, சந்த்ரமௌலீஸ்வரர் சன்னிதியில் தீப நமஸ்காரம் நடந்து கொண்டிருந்தது. அது முடிந்ததும் அங்கு வந்திருந்த மாணவர்களைப் பார்த்து,

“எல்லாரும் ராம,ராமா…சிவ, சிவா…ன்னு சொல்லுங்கோ!” என்று சொல்லிவிட்டு குறிப்பாக ஒரு பையனைப் பார்த்து,

“சொல்லு! ராம,ராமா….சிவ சிவா!” என்றார். பையன் விழித்தான்! பக்கத்தில் இருந்தவர் பெரியவாளிடம்,

“பெரியவா….அவன் ஊமை…பொறவிலேர்ந்தே !…”

“அதுனால என்ன? அவன் சொல்லட்டும்…சொல்லுடா கொழந்தே! ராம,ராமா…சிவ சிவா….” என்று பரம பாக்யம் செய்த அந்த குழந்தைக்கு பெரியவா திருவாக்கால் நாமோபதேசம் வந்ததும்……

“ராம,ராமா…..சிவ சிவா…..” பிறவி ஊமை அழகாக பகவானின் நாமத்தை சொன்னது!

அதைக்கண்ட சம்ஸ்க்ருத பண்டிதர் “எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாதோ, எந்த மஹானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ, அந்த சந்த்ரிகா மௌளீயான என் குருநாதனை நமஸ்கரிக்கிறேன்” என்ற அழகாகப் பொருள்படும் ஸ்லோகத்தை சம்ஸ்க்ருதத்தில் தக்ஷணமே கல்பித்துப் பாடினார். அதுதான் முதன்முதலாக அவர் மனஸில் ஸ்புரித்த ஸ்லோகமாம்!
————————————
“குரு” என்ற ஈரெழுத்து “ராம” நாமத்துக்கு சரி நிகர் சமானம்.குரு என்றால் இருளைப் போக்குபவர் என்ற அர்த்தமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் ஆழ்ந்து பார்த்தால், கு, ரு என்ற இரண்டெழுத்துமே எழுதும் போதே மேலே இடது பக்கம் ஆரம்பித்து, வலமாக சுழித்து, கடைசியில் ஆரம்பித்த மேல் ஸ்தானத்துக்கே சென்று முடியும். இது ‘குரு’ என்ற மிக உன்னதமான சொல்லுக்கு தமிழ் செய்த நமஸ்காரம்.

சத்குருவின் திருவடிகளை சிந்திப்பவர், அவ்வளவு ஏன்? சத்குருவின் கடாக்ஷத்தில் விழுந்தவர்கள் மேன்மையைத்தான் அடைவர் என்று உணர்த்துகிறது.

அதே போல், சத்குருவானவர், தன்னுடைய உயர்ந்த ஸ்தானத்திலிருந்து [ஆத்மஸ்வரூபம்] இறங்கி, பொய், புரட்டைத் தவிர எதுவும் தெரியாத அல்லது தெரிந்தும் அலக்ஷியமாக கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கெக்கே பெக்கே என்று அலையும் நம்மை மாதிரி ஜீவன்களை [ஈ, எறும்பும் இதில் அடங்கும்] யானை தன் தும்பிக்கையால் வழிப்பது போல், ஒரே வழியாக வழித்து, வாரி சுருட்டி எடுத்துக் கொண்டு போய், மேலே தன் ஸ்வரூபத்தில் சேர்த்துக் கொண்டு விடுவார். அல்லது அல்லாக்காகத் தூக்கி பகவானின் சரணத்தில் போட்டு விடுவார். யாருக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் குருவே தெய்வம்; இதில் நம்முடைய அடம், அஹம்பாவம் எதுவுமே செல்லுபடியாகாது. ஒழுங்காக ஒத்துழைத்தால் [அவர் சொன்னபடி நடந்தால்] நம்முடையது உண்மையான ஸுகஜீவனம்; இல்லாவிட்டாலும் அவர் எப்படியும் நம்மை சுருட்டி இழுத்துக் கொண்டுதான் போகப்போகிறார். அடம் பிடித்தால், நமக்குத்தான் படு கஷ்டம்.

நமக்கு கீழ்வாலக்கமாகப் போகும் குர..ங்கு என்ற வார்த்தை மிகவும் பொருந்தும். கு என்ற எழுத்துக்கு அப்புறம் இரண்டாவது எழுத்தாக ரு அல்லது ர….எதில் சேரப்போகிறோம் நாம்?

“காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்” என்று சொல்லுவார்கள். நமக்கும் “குரு காமாலை” பீடித்து காண்பதெல்லாம் நம் சத்குருவாகத் தெரிந்துணர நம் குருநாதரை வேண்டித் தொழுவோம்.

Read more: http://periva.proboards.com/thread/4390/#ixzz3VRnKJY3X

source:::: http://www.periva.proboards.com

Natarajan

Message For the Day…” 2 Things You Must Forget: The Help You Rendered to Others and the Harm Others have done to You…”

Everyone in this ephemeral and transient world aspires for peace and security. But money, education, position of authority and physical comforts cannot confer peace and security. Peace originates from the heart. You can experience peace and security only when your heart is filled with love. Most people today are bereft of gratitude, which is one of the most essential qualities. They forget the help rendered to them by others. As long as you are alive, you should be grateful for the help you received from others. There are two things you must forget: the help you rendered to others and the harm others have done to you. If you remember the help you rendered, you will always expect something in return. Remembrance of the harm done to you by others generates in you a sense of revenge. Always remember only the help you received from others. The one with these sacred qualities is an ideal human being.

Sathya Sai Baba

Russia wants to Build a Superhighway …Between Russia and Alaska !!!

Siberia

The Trans-Siberia Railway.

A report by the Siberian Times has detailed one of Russia’s more outlandish schemes to date: a super motorway that would connect the eastern border of Russia with Alaska in the United States. The highway would make it possible to drive from the United Kingdom to the US, with help from ferries, tunnels, and trains.

The plan, unveiled at a meeting at the Russian Academy of Science and presented by the head ofRussia Rail Vladimir Yakunin, also calls for a high-speed railway to be built alongside the motorway. Both routes would support new cities and industries created as a result of the construction, the Siberian Times writes.

The development is called the Trans-Eurasian belt Development (TEPR). That name doesn’t sound very catchy, so instead we’re going with the International Road of Russia (IRR). If it were really built, it would mean you could drive (with help from the Eurostar and the Panama Canal) from the top of the UK, say Wick in Scotland, to the very bottom of South America, Cape Horn.

Here’s our rough interpretation of the route (the new railway would help cars hop across the Bering Strait, we think):

RUSSIA

Alongside the train track and road, pipelines for oil and gas and new electricity and water supply lines would be put in place. The network would total around 12,400 miles. The aim is to link Asia with Europe as it would run from the Atlantic to the Pacific.

Cities most people haven’t heard of, such as Yeketerinburg and Irkutsk, would be joined up as a result of the plan.

The road would follow a similar path to the Trans-Siberian railway — but would stretch even further, crossing the Bering Strait to Alaska. It remains unclear what the US would think about that….

Here’s the Trans-Siberian railway:

Siberia
And here’s a Siberian road. It’s part of the Kolyma Highway in a remote part of the country. 

Russia

The Kolyma Highway in Siberia.

Russia sees the project as essential to spurring development within the region, the Siberian Times explains.

Yakunin said at the meeting: “This is an inter-state, inter-civilisation, project. It should be an alternative to the current (neo-liberal) model, which has caused a systemic crisis. The project should be turned into a world ‘future zone’, and it must be based on leading, not catching, technologies.”

The Russia Rail chief said he estimates the cost of the new venture would be in the trillions. He argued that the project’s economic benefit would outweigh the money spent.

Siberia

Vladimir Fortov, the Head of the Russian Academy of Science, said the scheme is “very ambitious and expensive,” reports the Siberian Times. But he added: “It will solve many problems in the development of the vast region. It is connected with social programs, and new fields, new energy resources, and so on. The idea is that basing on the new technology of high-speed rail transport we can build a new railway near the Trans-Siberian Railway with the opportunity to go to Chukotka and Bering Strait and then to the American continent.”

The Trans-Siberian Railway in Russia, which runs from Moscow to Vladisvostok and stretches across 6,152 miles. It takes seven days to travel.

SOURCE:::: http://www.businessinsider.com.au

Natarajan

” படித்ததில் பிடித்தது ….கவலைப்படாதே செல்லம் …” !!!

கவலைப்படாதடா செல்லம்

கள்ளிப்பாலோ

குப்பத்தொட்டி கலாசாரமோ

நம்மகிட்ட இல்ல…

காக்கைக்கும் தன் குஞ்சு

பொன் குஞ்சுன்னு சொன்ன பகுத்தறிவுள்ள

மனுசங்களுக்குத்தான் அதெல்லாம்..

பட்சி ஜாதி நாம இங்கே பகுத்தறிவாளர பாக்காதீங்க

கா.. கா.. கா.. கா…

source:::::Somasundaram Thirumalaiswamy in http://www.dinamani.com

Natarajan

ஹைக்கூ எழுதும் டீக்கடைக்காரர்……

கோவையைச் சேர்ந்தவர் நா.முத்து. டீக் கடைக்காரர். கவிஞர். சாகித்ய அகாதெமி சார்பில், சிறந்த 100 ஹைக்கூ கவிதை தொகுப்புகளை தேர்ந்தெடுத்ததில் இவரது கவிதைத் தொகுப்பும் ஒன்று.

நா.முத்து 8-ஆம் வகுப்பு வரைதான் படித்தார். படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் அப்பாவுடன் டீக்கடைப் பணியில் சேர்ந்துவிட்டார். ஏன்? படிக்கவில்லை என்று

கேட்டபோது, “”எவ்வளவு புத்தகங்களை வேண்டுமானலும் வாசிப்பேன். ஆனால், மனப்பாடம் செய்து எழுதுவது  எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அதனால் தான் படிக்கவில்லை.

ஆனால், படிக்காதது இப்போது வருத்தமாக உள்ளது” என்கிறார்.

“தலைவர் எழுச்சியுரை, உற்சாகம் தந்தார் சுக்குக் காப்பிக்காரர்’

“நேரம் சரியில்லை கடிகாரக் கடை’ என்பது போன்ற நகைச்சுவை ஹைக்கூ கவிதைகளை அள்ளி வீசுகிறார்.

நகைச்சுவை ஹைக்கூக் கவிதைகளை மட்டுமே மையமாக வைத்து எழுதாமல், சமூக நோக்கிலும் பல ஹைக்கூக் கவிதைகளை எழுதியுள்ளார்.

“ஆயிரம் மரங்கள் மரணம்

ஆறுவழிச் சாலை ஜனனம்

அதில் ஆயிரம் வாகனங்கள் பயணம்

ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு வசனம்

மரம் நடுவோம், மழை பெறுவோம்’

என்கிற கவிதையை கோவை, அவிநாசி சாலையை மையமாக வைத்து எழுதியுள்ளார்.

ஹைக்கூ கவிதையில் ஆர்வம் வரக் காரணம் என்னவென்று கேட்டோம்:

“”நாம் பார்ப்பதெல்லாம் ஹைக்கூ தான். எதைப் பார்த்தாலும் எதாவது சொல்ல வேண்டும் என்கிற முனைப்பு தான் ஹைக்கூ கவிதை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது. எனவே, நான் பார்ப்பதை, யோசிப்பதை தெளிவாக சொல்ல வழிவகுத்தது ஹைக்கூ கவிதை தான்.

இதுவரை இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளேன். அதில், “இருக்கு’ என்கிற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, சூழல் சார்ந்த கவிதைப் புத்தகம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. “எடை குறைவாய்’ என்கிற கவிதைத் தொகுப்பை எழுதி வருகிறேன்.

குறும்படங்கள், வீதி நாடகங்கள், கோவை வானொலியில் கவிதைகள் வாசிப்பது, புகைப்படக் கலை, இலக்கியக் கூட்டங்களில் பேசுவது என தற்போது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

பாரதியார் கவிதைகள் மிகவும் பிடிக்கும். “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்பது என் மனதுக்குப் பிடித்த கவிதை. பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போதே உற்சாகமும், தைரியமும் பிறக்கும். எனவே, அவரது கவிதைகளை அதிகம் வாசிப்பேன்.

“நம் பிறப்பு சாதாரணமானதாக இருக்கலாம் ஆனால், நம் இறப்பு ஒரு சரித்திரமாக மாற வேண்டும்’ என்ற வரிகளுக்கேற்ப எவ்வளவு சாதாரணமானவராக இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதைக் கண்டறிந்து செயல்படுத்துவதே அறிவுடைமையாகும் என்பதற்கு சான்று டீக்கடை முத்து.

Source:::::www.dinamani.com

Natarajan

 

லீ: சிங்கப்பூரின் சிற்பி…….மறக்க முடியாத மாமனிதர் …

சிங்கப்பூர் வரலாற்றில், சிங்கப்பூர் என்ற சொல்லோடு பிரித்துப் பார்க்க முடியாததாக இருந்த இன்னொரு சொல் உதிர்ந்திருக்கிறது: லீ குவான் யூ. சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியும் இவரே, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய நேருவும் இவரே!

உலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர். உலகின் மிக நீண்ட காலப் பிரதமர்!

லீயுடன் ஓர் உரையாடல்

உலகம் முழுவதும் லீயைப் பற்றி இரு விதமான பேச்சுகள், மதிப்பீடுகள் உண்டு. அவர் சிங்கப்பூரை வளர்த்தெடுக்க எந்தக் கட்டுப்பாடுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினாரோ, பெரும்பாலும் அதுதான் இந்தப் பேச்சுகள், மதிப்பீடுகளின் மையப்புள்ளி. ஒருமுறை, நான் படித்த சிங்கப்பூர் தேசியக் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக லீ குவான் யூ வந்திருந்தார். அவருடைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் அவரோடு கலந்துரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லீ – சிங்கப்பூர் இரண்டுக்குமான பல்வேறு யூகங்களுக்குப் பதிலாக அமைந்ததோடு, அவருடைய தனித்துவமான அரசியல் – நிர்வாகப் பார்வையையும் வெளிக்காட்டியது அந்த உரையாடல்.

மாணவர்கள் நிறையக் கேட்டோம், எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிங்கப்பூர் – இன்றைய சிங்கப்பூர் பற்றிக் கேட்டபோது, அப்படியே மவுனத்தில் ஆழ்ந்தார். ஒரு இடைவெளிக்குப் பின் பேசினார்: “50 வருடங்களுக்கு முன் இந்தச் சின்ன தீவில் பிழைப்புக்காக வந்து இறங்கியவர்கள்தான் இன்றைய வளர்ந்து நிற்கும் சிங்கப்பூருக்கான திடமான அஸ்திவாரத்தைப் போட்டவர்கள். எந்தெந்த நாடுகளில் இருந்தோ இங்கு வந்திறங்கி, பத்துக்குப் பத்து சதுர அடியில் எட்டுப் பேர் நெருக்கியடித்துக்கொண்டு கிழிந்த உடைகளும், போஷாக்கு இல்லாத உணவும் கொண்டு உயிர் வளர்த்தவர்கள் கொடுத்த உழைப்புதான் இந்த நாட்டுக்கான உரம். இன்று மழை பெய்யும்போது குடை பிடிக்கும் அவசியம் இல்லாமல் சாலை ஓரம் எங்கும் கூரை வேயப்பட்டிருக்கிறது. உலக அரசாங்கங்கள் பாடம் படிக்கும் நவீன சொகுசுப் பேருந்து போக்குவரத்து வசதியை அனுபவிக்கிறோம். இதற்கெல்லாம், முகம் மறந்து போன அந்தப் பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நாம் செலுத்த நன்றி மிச்சம் இருக்கிறது.”

மாறாத வடு

சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்பியவர் லீ. ஒன்றிணைந்த மலேசியாவின் வர்த்தகத் தலைநகராக சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர்.

மலேசியாவுடன் சிங்கப்பூரை இணைக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால், மலேசிய அரசாங்கத்துடன் சரியான உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, கண்கள் கலங்க, தலைகுனிந்து விசும்பியபடி சிங்கப்பூர் -மலேசியப் பிரிவினை அவர் அறிவித்தார். பின்னொரு நாளில், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “1965-ல் சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரிந்த சுதந்திரக் குடியரசாக நான் அறிவித்தேன். நாடு முழுவதும், பலரும் அதைப் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடினர். ஆனால், எனக்கோ தூக்கங்கள் இல்லாத இரவுகளாக, மிகுந்த மன உளைச்சலுடனேயே நாட்கள் கழிந்தன. சிங்கப்பூருக்கு இது வாழ்வா, சாவா பிரச்சினை. ஒரு தனி நாடாக இயங்குவதற்குத் தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் நம்மிடம் கிடையாது. சிங்கப்பூரின் சொத்து, கடல் வணிகத்துக்கு ஏதுவான நமது புவியியல் அமைப்பு மட்டுமே. இருந்தாலும் நமது குறைகள் அனைத்தையும் தகர்த்து, இன்று உயர்ந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம். இதற்கான முழு பாராட்டும், நம் மண் மீது நம்பிக்கைகொண்டு இங்கு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது அயராத உழைப்புமே.”

தன் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொரு சிங்கப்பூர் வாசியையும் அவர், தங்களை வருத்திக்கொண்டு நாட்டைச் செதுக்கிய தியாகிகளாகவே பார்த்தார்.

ஒழுக்கம் மட்டுமே உயர்வு தரும்

19-ம் நூற்றாண்டின் தொடக்கங்களில், சிங்கப்பூர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இயங்கிவந்தது. மற்ற பிரிட்டிஷ் காலனிகளைப் போலவே சிங்கப்பூரும் ஓரளவு வளர்ச்சி கண்டது. இருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான உள்கட்டமைப்பு வசதிகள் அந்தக் காலகட்டத்தில் இல்லை. சொல்லப்போனால், அன்றைய சென்னையின் நிலவரத்தில் அரைப் பங்குகூட இல்லை.

சிங்கப்பூர் விடுதலை பெற்று, லீ குவான் யூ ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கடுமையான சட்டங்கள் பாய்ந்தன. சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி; பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை; போதைப் பொருட்கள் உட்கொண்டாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை – இப்படியான சட்டங்களால் நாடே கிடுகிடுத்துப் போனது. இதனால் பலரது விரோதத்துக்கும் அவப்பெயருக்கும் லீ ஆளாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அதையெல்லாம் அவர் பெரிதாகப் பொருட் படுத்தவில்லை. “நாட்டின் வளர்ச்சிக்குச் சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். அது ஆரம்பத்தில் ஒரு கசப்பான கஷாயமாகத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் அதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அறுவடை செய்வீர்கள்” என்றார்.

அதுமட்டுமல்லாமல், தெளிவான பொருளாதாரக் கொள்கைகளாலும், முதலீட்டுக் கட்டமைப்புகளாலும் சிங்கப்பூரை என்றென்றைக்கும் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் சொர்க்கமாக மாற்றினார். சமீபத்திய உதாரணம், ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எடுவார்டோ சாவரின், தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டு, சிங்கப்பூர்வாசியாகி இருப்பது.

அரசியலுக்குத் தகுதி தேவையில்லையா?

அரசியல் பதவிகளுக்கு நிறைய தகுதிகள் வேண்டும் என்று நினைத்தவர் லீ. “எதன் அடிப்படையில் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டபோது சொன்னார்: “எந்தப் பதவியும் இல்லாமலே திறனுடன் செயல்படுபவர்களை ‘சைக்கோமெட்ரிக் சோதனைகள்’ வழியாக ஆராய்வதுதான் முதல் பணி. அந்தப் பயிற்சியில் அவர்கள் அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று தேர்வானால், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்தச் சலுகைகளும், பதவி உயர்வுகளும் அளிக்காமல் தத்தமது தொகுதிகளை அவர்கள் எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்போம். முடிவில் அவரவர் திறனுக்கேற்ப அவர்களை இளநிலை அமைச்சர்களாகவோ, அமைச்சராகவோ நியமிக்கிறோம். இத்தனை கடும் சோதனைகளைக் கடந்துவருபவர்கள், பெரும்பாலும் சேவை மனப்பான்மையுடனும், தன்னலம் கருதாச் சமூக அக்கறையுடனும் செயலாற்றக் கூடியவர் களாகவே இருக்கிறார்கள்.”

இப்படித் திறமையான, நேர்மையான அரசியல்வாதியைக் கண்டெடுப்பது, வெறும் முதல்கட்டப் பணி மட்டுமே. அதன் பிறகு, அவர்கள் அதே நேர்வழிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும். “மக்களின் காசுக்கு ஆசைப்படாத அளவுக்கு ஊதியத்தை அரசே அளித்துவிட்டால், அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளியில் கை நீட்ட மாட்டார்கள்” என்பதும் லீயின் நம்பிக்கை களில் ஒன்று. சிங்கப்பூரின் ஆறு முன்னணித் துறைகளில் அதிக ஊதியம் பெரும் முதல் எட்டுப் பேரின் வருமானம் எவ்வளவோ, அதில் மூன்றில் இரண்டு பங்கு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியம். லீயின் நம்பிக்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை.

வாரிசு அரசியலுக்கும் தகுதி தேவை

“பலம் மிக்க அரசியல் குடும்பத்து வாரிசுகள், சமுதாயத்தில் கட்டாயம் உயர்பதவி வகிக்கலாம். ஆனால், அதில் ஒரு தர்மமும் வேண்டும்” என்று சொல்வார் லீ. அவரது மூத்த மகன் லீ சியன் லூங், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 13 வருடங்கள் சிங்கப்பூர் ராணுவத்தில் முறையே பயிற்சி பெற்ற லீ சியன் லூங், 1990-ல் துணைப் பிரதமர் ஆனார். 14 வருடங்கள் கழித்து, 2004-ல் பிரதமர் ஆனார்.

இளைய மகன் லீ சியன் யாங், ஸ்டான்பர்ட் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவரும் சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றியவர். பின் அந்நாட்டின் புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, பின் அதன் முதன்மை நிறுவனராக உயர்ந்தார். இப்போது சிங்கப்பூர் விமானப் படைத் தலைவர்.

இப்படி லீ குடும்பத்து வாரிசுகள் அரசில் கோலோச்சினாலும், யாரும் அவர்களுடைய தகுதியைக் கேள்விக்குள்ளாக்க முடியாது, இந்திய / தமிழக அரசியலைப் போல ‘வாரிசு முறை’ இவர் விஷயத்தில் சர்ச்சை ஆகவில்லை.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

சுமார் 50 ஆண்டுகளாக எதிர்க் கட்சிகளை ஒரு சில தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க விட்டுக்கொண்டிருந்த லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சி, 2011 தேர்தலில் சறுக்கல் களைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் தங்கள் கைவசம் இருந்த முக்கியமான 6 தொகுதிகளை இழந்தது. இதன் தொடர்ச்சியாக, செயற்குழுவைக் கூட்டி, சுயபரிசோதனையில் இறங்கியது லீயின் கட்சி. “இன்றைய இளைஞர்களுக்குத் தங்கள் எதிர்காலம் மீதும், நாட்டின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை உள்ளது. இணையம் வழியாக அவர்கள் பதிவிடும் கருத்துக்கள், நாடாளுமன்றம் வரை ஒலிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். உடனுக்குடன் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த நவீன குரல்களுக்குச் செவிசாய்க்கும் சுறுசுறுப்பான அமைச்சர்களையே தங்கள் பிரதிநிதிகளாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒன்று, கால மாற்றத்துக்கு ஏற்றார்போல் நம்மை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். அல்லது இளைய சமுதாயத்துக்கு வழிவிட்டு, கவுரவமாக நாம் விலகிக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, இதுவரை மக்கள் செயல் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்துவரும் நான், அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்வதாக அறிவிக்கிறேன்” என்று அறிவித்தார் லீ.

தன்னைப் போன்ற மூத்தவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைத் தானே முன்னின்று ஏனையோருக்கு உணர்த்தினார்.

கல்லறையிலிருந்து வருவேன்

தன் மீதான விமர்சனங்கள் மீது – கட்டுப்பாடுகள், சுதந்திரத் தலையீடு, கருத்துச் சுதந்திரம், ஏனைய அரசியல் தலைவர்கள் / கட்சிகள் மீதான கட்டுப்பாடு – பற்றியும் லீ பேசியிருக்கிறார். “தேசத் தலைவர் என்று வந்துவிட்டால், மக்களின் பார்வையும், விமர்சனங்களும் நம் மீது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியான விமர்சனங்களைக் கருத்தில்கொண்டு, ஆட்சிமுறையில் மக்களுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். என் பார்வையில் கருத்துச் சுதந்திரம் அவசியம். எனினும், அது சரியான அளவுகோலில் உரிய எல்லைக்குள் இருப்பதும் அவசியம்.

சிங்கப்பூரை ஆட்சி செய்பவர் எவராக இருந்தாலும், அவரிடத்தில் இரும்பு போன்ற திடம் இருக்க வேண்டும். ஏதோ, வந்தோம் சென்றோம் என்று விளையாட்டாக ஆட்சி செய்துவிட்டுப் போக இது ஒன்றும் சீட்டாட்டம் இல்லை. சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்திருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை, நாளை நான் இறந்த பிறகும், என் நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தல் நேர்ந்தால், கல்லறையில் இருந்தும் எழுந்துவருவேன்!”

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு!

லீக்கு தமிழர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வெளிப்படையாக இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.

“இலங்கை கட்டாயம் ஒரு சந்தோஷமான நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டுத் தமிழர்களும் இருந்துவருகின்றனர். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், திறமையில் தமிழர்களைக் காட்டிலும் பின்தங்கிய சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களைக் கொன்றுவருகின்றனர். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்தவரை நியாயமானதே!

நான் ராஜபக்சவின் சில பிரச்சாரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ‘சிங்கள வெறியர்’ என்றுதான் தோன்றுகிறது. வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யக் கூடியவர் என்று புரிகிறது.

இந்தப் போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிக மானது. அவர்கள் வெகு நாட்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள்” என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருக்கிறார்.

– ஏ. ஆதித்யன்,

சிங்கப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் – எழுத்தாளர்,

இந்தோனேசிய http://www.ayobis.com நிறுவனத்தின் முதன்மை நிறுவனர், தொடர்புக்கு : adi1101990@gmail.com 

Source:::: http://www.tamil.thehindu.com

Natarajan