Message For the Day…” Remember that God is Omnipresent everywhere…”

Love can be cultivated through two methods: Always consider the faults of others, however big, to be insignificant and negligible. Always consider your own faults, however insignificant and negligible, to be big, and feel sad and repentant. Through this path, you avoid developing bigger faults and defects and acquire the virtues of brotherliness and forbearance. Next, whatever you do, with yourself or with others, do it remembering that God is omnipresent. He sees and hears and knows all. Remember that God hears every word; discriminate between the true and the false and speak only the truth. Discriminate between right and wrong and do only the right. Endeavour every moment to be aware of the omnipotence of God. The body is the temple of the individual, so whatever happens in that temple is the concern of the individual. So too, the world is the body of the Lord, and all that happens in it, good or bad, is His concern.

Sathya Sai Baba

” The Best Management Lesson I Have Learned….” See What Dr. Kalam Says …

l2007012512178

IndiaKnowledge@ Wharton : Could you give an example, from your own experience, of how leaders should manage failure?

Kalam: Let me tell you about my experience. In 1973 I became the project director of India’s satellite launch vehicle program, commonly called the SLV-3. Our goal was to put India’s “Rohini” satellite into orbit by 1980. I was given funds and human resources — but was told clearly that by 1980 we had to launch the satellite into space. Thousands of people worked together in scientific and technical teams towards that goal.

By 1979 — I think the month was August — we thought we were ready. As the project director, I went to the control center for the launch. At four minutes before the satellite launch, the computer began to go through the checklist of items that needed to be checked. One minute later, the computer program put the launch on hold; the display showed that some control components were not in order. My experts — I had four or five of them with me — told me not to worry; they had done their calculations and there was enough reserve fuel. So I bypassed the computer, switched to manual mode, and launched the rocket. In the first stage, everything worked fine. In the second stage, a problem developed. Instead of the satellite going into orbit, the whole rocket system plunged into the Bay of Bengal. It was a big failure.

That day, the chairman of the Indian Space Research Organization, Prof. Satish Dhawan, had called a press conference. The launch was at 7:00 am, and the press conference — where journalists from around the world were present — was at 7:45 am at ISRO’s satellite launch range in Sriharikota [in Andhra Pradesh in southern India]. Prof. Dhawan, the leader of the organization, conducted the press conference himself. He took responsibility for the failure — he said that the team had worked very hard, but that it needed more technological support. He assured the media that in another year, the team would definitely succeed. Now, I was the project director, and it was my failure, but instead, he took responsibility for the failure as chairman of the organization.

The next year, in July 1980, we tried again to launch the satellite — and this time we succeeded. The whole nation was jubilant. Again, there was a press conference. Prof. Dhawan called me aside and told me, “You conduct the press conference today.”

I learned a very important lesson that day. When failure occurred, the leader of the organization owned that failure. When success came, he gave it to his team. The best management lesson I have learned did not come to me from reading a book; it came from that experience.

What a wonderful leader!

Source::::::: http://www.mastegg.com

Natarajan

Innocent Joy and Magic of Childhood …!!!

The Innocent Joy & Magic of Childhood

Joseph Chilton Pearce, a British author, once said: “Play is the only way the highest intelligence of humankind can unfold.” Playing is an ingrained behavior shared by all mammals. Playing expand the mind and imagination, it trains the muscles and instincts, and it adds copious amounts of joy to our lives. Just looking at these kids playing all around the world made me want to go outside and run in the sun.

Indonesia
Kids Around the World

Kids Around the World

Kids Around the World

Kids Around the World

Burkina Faso 

Kids Around the World

Estonia 

Kids Around the World

Ghana 

Kids Around the World

Peru 

Kids Around the World

Ethiopia 

Kids Around the World

 

India 

Kids Around the World

Kids Around the World

Kids Around the World

Italy

Kids Around the World

Myanmar 

Kids Around the World

Israel 

Kids Around the World

Romania

Kids Around the World

Thailand

Kids Around the World

Kids Around the World

Kids Around the World

Uganda 

Kids Around the World

South Africa 

Kids Around the World

Kids Around the World

Vietnam 

Kids Around the World

Tajikistan 

Kids Around the World

Russia

Kids Around the World

Kids Around the World

Kids Around the World

U.S.A.

Kids Around the World

Source:::::www.ba-bamail.com

Natarajan

 

” Go Back to the Year 90s…” !!!

Everyone talks about how technology has taken over our lives and about how it has its downsides, despite having made our lives easy. And I’d have to say, it holds quite a bit of truth.

So, if you’re feeling tired of all the advanced, digital life you’re leading, you could always try going old school for a bit, and take yourself back to simpler times. Here are a few things you could do that might seem simple, but are guaranteed to have a big impact in transporting you back in time.

 Send a letter to a loved one and start a long conversation

 

 

B1

Tell them about your day, week, and subsequently about your life in general, without the help of any other mode of communication.

Make use of your old landline, and call someone on theirs

 

Make someone a mixed tape or a CD with all their favourite songs…

To make it better, put old songs in them, exclusively.

Listen to music with your old walkman/CD man

B5

Carry all your favourite cassettes and CDs, and change them when necessary. :D

Spot an ice-cream cart, and relish on some yummy ice-cream

B7

They’re surely going to be around children’s parks. Enjoy an ice-cream cone in a children’s park! :D

 Go to a cyber cafe close by, and spend an hour surfing the net on a PC

Some of the computers might even still have Windows XP. :D

 

 Pay a visit to your old school, and reminisce

Who knows, you might end up meeting some old teachers there.

 

 Fix an old radio at home….

B10

And listen to a few cassettes after you do. :)

 

Check the time- not on your phone, but on your wrist watch, for a week

B13

There still are a lot of us who wear watches, but not all of us really use it to tell the time. Take an entire week and just go by the time of your watch, and soak in the feeling of not constantly checking your phone for every little thing.

Even if time flies by, there are these little things we’ll have that we can go back to whenever we feel like everything is changing. Change is good, but going back to what it was before once in a while is great. :)

Source::::: http://www.storypick.com

Natarajan

 

பெற்றோர் போற்றுதும்! …

நாம் ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் பெற்றோராகிறோம் என்றாலும், அந்த நேரத்தில் நம்மைப் பெற்றோரை நினைத்துப் பார்க்கும் போதுதான் அவர்கள் பட்ட கஷ்டம் நமக்குப் புரிகிறது. வாழ்க்கையில் வயது கூடக் கூட பாசமும் பயமும் பக்குவமும் அதிகரிக்கும் என்பது பொதுவான விதி. தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தங்களுடைய நிகழ்காலத்தின் சுமைகளைத் தாங்கும் உறவுகள் தாய், தந்தையைத் தவிர வேறு உண்டா? வாழ்க்கையில் எத்தனையோ வளர்ச்சிகளைப் பிள்ளைகளுக்கு உரித்தாக்கி அவற்றைக் கண்ணாரக் கண்டு மகிழ்வோர் பெற்றோர் மட்டுமே.

அறிவியல் வளர்ச்சி மனிதனை ஆகாயம் வரை உயர்த்தி விட்டது. அந்த அபார வெளிச்சத்தில் உறவு, பந்தம், பாசம், நேசம் அன்பு எல்லாம் பொசுங்கிப் போய் விட்டன. மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மரித்துப் போய் விட்டது. ஆனால், இன்றளவும் அதற்கு விதி விலக்காக இருப்பது பெற்றோர் – பிள்ளைகள் உறவு மட்டும்தானே. தாயும், தந்தையும் தன் பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் எந்த அறிவியலால் பிரிக்க முடியும்?

பிள்ளைகள் உதட்டில் புன்னகையைப் பார்த்தால் பரவசப்படுவதும், கண்களில் கலக்கத்தைக் கண்டால் ஓடி வந்து தாங்கிப் பிடிப்பதும் ஈன்றெடுத்த தாயும், பேணி வளர்த்த தந்தையும்தானே.

உணவு – உடை – பண்பாடு – கலாசாரம் எல்லாம் மாறிப் போனாலும், தலைமுறைகளைக் கடந்தும் மாறாதவை அன்னையின் அன்பும் தந்தையின் பாசமும்தான். அந்தத் தூய்மையான அன்பிலும் கலப்படமில்லாத பாசத்திலும் திளைத்த பிள்ளைகள், தங்கள் பெற்றோரைக் கொண்டாட வேண்டாமா? விழா எடுத்து மகிழ வேண்டாமா? பெற்றோரைக் கொண்டாடப் பிள்ளைகளுக்குக் காரணம் தேவையில்லை என்றாலும், சமூகம் சில காரணங்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது. மணி விழா, முத்து விழா, வைர விழா, அறுபதாண்டு விழா, எண்பதாண்டு விழா என, ஏதாவது ஒரு பெயரில் விழா எடுக்கலாம். பெயர் முக்கியமல்ல; பெற்றோரைப் போற்றுவதே முக்கியம்.

அடுத்த பிறவியிலும் இவர்களுக்கே மகனாகவோ, மகளாகவோ பிறக்க வேண்டும் என்று மனமுருகி வேண்ட வேண்டும். பெற்றோரின் மறைவுக்குப் பிறகு அவர்களுக்கு நினைவு நாள் கடைப்பிடிப்பது இவற்றையெல்லாம் விட, பெற்றோர் வாழும் போதே அவர்களைப் போற்றிக் கொண்டாட வேண்டும். காரணம், பெற்றோரைப் போற்றிக் கொண்டாடுவோரே நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவராவர்.

நம்மில் எத்தனை பேர் நம்முடைய பிறந்த நாள், திருமண நாள் மற்றும் பண்டிகை நாள்களில் நமது பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறோம்? கட்சித் தலைவர்கள், திரைப்பட நடிகர்களின் கால்களில் கூச்சப்படாமல் விழுபவர்கள் கூட, பெற்றோர் காலில் விழுவதற்குக் கூச்சப்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள்.

ஒரு கையை நீட்டி எந்தப் பொருள்களும் கொடுக்கக் கூடாது. அந்தக் கையை மறு கையால் பிடித்துக் கொண்டே கொடுக்க வேண்டும். பெரியவர்கள் முன்பாக கால் மேல் கால் போட்டபடியோ, கால் ஆட்டியபடியோ உட்காரக் கூடாது.

பிறந்த நாள், பண்டிகைக் காலங்களில் பெற்றோர் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும். கோயிலுக்குப் போகும் போதும் பெரியவர்களைப் பார்க்கப் போகும்போதும் வெறுங்கையுடன் போகக் கூடாது. இவற்றையெல்லாம் பின்பற்றிப் பார்த்தால்தான் அருமை புரியும். தமிழர் பண்பாடே இப்படி என்றால் தமிழர்கள் பெற்றோரைப் பராமரிக்கும் விதம் எப்படி இருக்க வேண்டும்.

இது போன்ற நல்ல விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி நம்மை வாழ்க்கையில் வழி நடத்த அனுபவம் மிக்க நமது பெற்றோரால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட பெற்றோரைப் போற்றி வாழ்ந்தால் நம் வாழ்க்கை இனிதாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

source::: மன்னை பாஸ்கர், சென்னை. in http://www.dinamani.com

Natarajan

” பையனுக்கு புத்தி சொல்லலாம் …இப்போ உனக்குதான் சொல்லணும் …” !!!

பெரியவா எல்லாம் அறிந்தவர் என்பதற்கு இன்னொரு நிகழ்ச்சி.

மூலம்——-மஹாபெரியவாள் தரிசன அனுபவங்கள்—–ஆறாம் தொகுதி

சொன்னவர்——ஸ்ரீமடம் பாலு மாமா.

தொகுத்தவர்—–டி.எஸ்.கோதண்டராம சர்மா.

பதிப்பகம்——வானதி பதிப்பகம்.

நவநீதசோரன்.

சந்தானராமன், பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு தன்னுடைய பூர்வீகம், பெயர் போன்ற விவரங்களைச் சொன்னார்.

“நீ நவநீதசோரநன்தானே?”

சந்தானராமனுக்கு ஒரே திகைப்பு!.

“ஆமாம்”

“இப்போ எங்கே இருக்கே? என்ன பண்றே? பத்னி, குழந்தைகள்…?”

“டில்லியிலே இருக்கேன். பெரிய உத்யோகம், மனைவி, குழந்தைகள் சௌக்கியம்…”

பெரியவாள் அணுக்கத் தொண்டர்களைப் பார்த்தார்கள்.

“இவன் கதை தெரியுமோ?”

‘தெரியாது’ என்று எல்லோரும் தலையாட்டினார்கள்.

பெரியவா கதை சொன்னார்கள்.

“சந்தானராமன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பையன். பெற்றோர்கள் படு சிக்கனம். குழம்பு, ரஸம், மோர்—–அவ்வளவுதான் தினமும்.

பத்து வயதுப் பையன், மற்றப் பையஙன்கள் போண்டா, வடை, பஜ்ஜி, தோசை, இட்லி என்றெல்லாம் சாப்பிடுவதைப் பார்க்கும்போது, ஏங்கிப்போவான்.

நாக்குச் சபலத்தைத் தீர்த்துக்கொள்ளணுமே?…

வழி கண்டுபிடித்தான்.

அப்பாவின் சட்டைப்பையில் கைவிட்டான். நிறைய காசுகள் இருந்தன. ஒரு அணா( இன்றைய 12 பைசா) மட்டும் எடுத்துக்கொண்டான். ஒரு வடை—ராமு ஐயர் காப்பி கிளப்பில்!

மறுநாள் ஓர் அணா——–பஜ்ஜி!

அடுத்த நாள் ஓர் அணா—போண்டா.

இவன் அப்பாவுக்கு சந்தேகம் தட்ட ஆரம்பித்தது. ‘பையில் காசு குறைகிறமாதிரி இருக்கே…’

ஒருநாள் கையும் களவுமாக அகப்பட்டுக்கொண்டான், சந்தானராமன்.

வழக்கம்போல் பெரியவா தரிசனத்துக்கு வந்தார்கள் அந்தக் குடும்பத்தினர்.

தகப்பனார், பெரியவாளிடம் முறையிட்டார்.

“…பையன் திருட ஆரம்பிச்சுட்டான். இப்பவே இப்படி இருந்தால், பிற்பாடு திருட்டுப் பழக்கம் வந்துடுமோன்னு கவலையாயிருக்கு…பெரியவா புத்தி சொல்லணும்….”

பெரியவாள் உதடு பிரியாமல் சிரித்தார்கள்.

“பகவான் கிருஷ்ணன் கூட சின்ன வயசில், வெண்ணெய், தயிர், பால் திருடியதாகச் சொல்வார்கள். அதனால் அவனுக்கு, நவநீதசோரன்னே பேர் வந்துடுத்து. உன் பிள்ளை சின்னப்பையன். நாக்கு கிடந்து அலையறது. சகஜம்தானே…. வாய்க்கு ருசியாக பட்சணங்கள் பண்ணிக் கொடுக்கச் சொல்லு. வசதியில்லாத குடும்பமா இருந்தா—–‘அப்பாவைத் தொந்திரவு செய்யாதே; திருடாதே’நன்னு பையனுக்கு புத்தி சொல்லலாம். இப்போ உனக்குத்தான் சொல்லணும். Pocket expense—க்கு அப்பப்போ ஓரணா—-ரெண்டணா கொடு. இனிமேல் திருடமாட்டான். பெரிய உத்யோகம் பார்ப்பான்….
என்று சொல்லி கதையை முடித்தார்கள் பெரியவா.
பெரியவ குரலை ஏற்றி இறக்கி, கைகளை ஆட்டி அசைத்துக் கதை சொன்னதை எல்லோரும் சுவைத்தார்கள்.

‘நவநீதசோரன்’ கண்களில் யமுனை பெருகிக்கொண்டிருந்தது!

Read more: http://periva.proboards.com/thread/2781/mahaperiavas-sarvagnathvam#ixzz3Vob004rL

source:::: http://www.periva.proboards.com

Natarajan

Message For The day… Sri Rama Navami…”Ramayana must be Experienced in the Heart…”

Today is a sacred day to recapitulate the Glory of God and His relationship with human beings. Ramayana is not a story that had an end. You are living it. Ramayana must be experienced in the heart; not investigated as a mental phenomenon. As you go on reading and ruminating, its inner meaning will become clear even as your mind is cleansed. Rama is the son of Dasharatha(one with ten chariots). The ten chariots are the senses, the fiveKarmendhriyaas (sense organs of action) and the fiveJnaanendhriyaas (organs of perception). Sathya, Dharma, Shanthi and Prema are the four children of King Dasharatha. Rama is Sathya; Bharatha is Dharma; Lakshmana is Prema and Shatrughna is Shanthi. Take these great characters from Ramayana as your life’s ideals, your life will be filled with peace and joy.   

Sathya Sai Baba

 

” சொல்லு ..ராம ராமா …சிவ சிவா …”

ஆந்த்ராவைச் சேர்ந்த ஒரு சம்ஸ்க்ருத பண்டிட் ஒருவர் பெரியவாளை தர்சனம் பண்ண தஞ்சாவூர் அருகில் ஒரு கிராமத்துக்குப் போனபோது, சந்த்ரமௌலீஸ்வரர் சன்னிதியில் தீப நமஸ்காரம் நடந்து கொண்டிருந்தது. அது முடிந்ததும் அங்கு வந்திருந்த மாணவர்களைப் பார்த்து,

“எல்லாரும் ராம,ராமா…சிவ, சிவா…ன்னு சொல்லுங்கோ!” என்று சொல்லிவிட்டு குறிப்பாக ஒரு பையனைப் பார்த்து,

“சொல்லு! ராம,ராமா….சிவ சிவா!” என்றார். பையன் விழித்தான்! பக்கத்தில் இருந்தவர் பெரியவாளிடம்,

“பெரியவா….அவன் ஊமை…பொறவிலேர்ந்தே !…”

“அதுனால என்ன? அவன் சொல்லட்டும்…சொல்லுடா கொழந்தே! ராம,ராமா…சிவ சிவா….” என்று பரம பாக்யம் செய்த அந்த குழந்தைக்கு பெரியவா திருவாக்கால் நாமோபதேசம் வந்ததும்……

“ராம,ராமா…..சிவ சிவா…..” பிறவி ஊமை அழகாக பகவானின் நாமத்தை சொன்னது!

அதைக்கண்ட சம்ஸ்க்ருத பண்டிதர் “எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாதோ, எந்த மஹானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ, அந்த சந்த்ரிகா மௌளீயான என் குருநாதனை நமஸ்கரிக்கிறேன்” என்ற அழகாகப் பொருள்படும் ஸ்லோகத்தை சம்ஸ்க்ருதத்தில் தக்ஷணமே கல்பித்துப் பாடினார். அதுதான் முதன்முதலாக அவர் மனஸில் ஸ்புரித்த ஸ்லோகமாம்!
————————————
“குரு” என்ற ஈரெழுத்து “ராம” நாமத்துக்கு சரி நிகர் சமானம்.குரு என்றால் இருளைப் போக்குபவர் என்ற அர்த்தமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் ஆழ்ந்து பார்த்தால், கு, ரு என்ற இரண்டெழுத்துமே எழுதும் போதே மேலே இடது பக்கம் ஆரம்பித்து, வலமாக சுழித்து, கடைசியில் ஆரம்பித்த மேல் ஸ்தானத்துக்கே சென்று முடியும். இது ‘குரு’ என்ற மிக உன்னதமான சொல்லுக்கு தமிழ் செய்த நமஸ்காரம்.

சத்குருவின் திருவடிகளை சிந்திப்பவர், அவ்வளவு ஏன்? சத்குருவின் கடாக்ஷத்தில் விழுந்தவர்கள் மேன்மையைத்தான் அடைவர் என்று உணர்த்துகிறது.

அதே போல், சத்குருவானவர், தன்னுடைய உயர்ந்த ஸ்தானத்திலிருந்து [ஆத்மஸ்வரூபம்] இறங்கி, பொய், புரட்டைத் தவிர எதுவும் தெரியாத அல்லது தெரிந்தும் அலக்ஷியமாக கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கெக்கே பெக்கே என்று அலையும் நம்மை மாதிரி ஜீவன்களை [ஈ, எறும்பும் இதில் அடங்கும்] யானை தன் தும்பிக்கையால் வழிப்பது போல், ஒரே வழியாக வழித்து, வாரி சுருட்டி எடுத்துக் கொண்டு போய், மேலே தன் ஸ்வரூபத்தில் சேர்த்துக் கொண்டு விடுவார். அல்லது அல்லாக்காகத் தூக்கி பகவானின் சரணத்தில் போட்டு விடுவார். யாருக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் குருவே தெய்வம்; இதில் நம்முடைய அடம், அஹம்பாவம் எதுவுமே செல்லுபடியாகாது. ஒழுங்காக ஒத்துழைத்தால் [அவர் சொன்னபடி நடந்தால்] நம்முடையது உண்மையான ஸுகஜீவனம்; இல்லாவிட்டாலும் அவர் எப்படியும் நம்மை சுருட்டி இழுத்துக் கொண்டுதான் போகப்போகிறார். அடம் பிடித்தால், நமக்குத்தான் படு கஷ்டம்.

நமக்கு கீழ்வாலக்கமாகப் போகும் குர..ங்கு என்ற வார்த்தை மிகவும் பொருந்தும். கு என்ற எழுத்துக்கு அப்புறம் இரண்டாவது எழுத்தாக ரு அல்லது ர….எதில் சேரப்போகிறோம் நாம்?

“காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்” என்று சொல்லுவார்கள். நமக்கும் “குரு காமாலை” பீடித்து காண்பதெல்லாம் நம் சத்குருவாகத் தெரிந்துணர நம் குருநாதரை வேண்டித் தொழுவோம்.

Read more: http://periva.proboards.com/thread/4390/#ixzz3VRnKJY3X

source:::: http://www.periva.proboards.com

Natarajan

“இனிக்கும் இலையும் கசக்கும் இலையும்’ !!!

வாகீசக் கலாநிதி கி.வா.ஜ.வுக்கு பல மூலிகைகளைத் தெரியும். உணவில் கீரைகளையும், மூலிகைகளையும் சேர்த்துக் கொண்டால் நோய் வராமல் தடுக்கலாம் என்று அடிக்கடி சொல்வார். இவர் பர்மாவுக்குச் சென்றிருந்தபோது, அன்பர்கள் இவரை சிவத்தலம் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே குன்றின்மேல் “குன்று தோறாடும் குமரன்’ கோயில் உள்ளது. கி.வா.ஜ. குன்றின் மேல் ஏறி முருகனை வணங்கிவிட்டு கீழே இறங்கி வந்தார். அடிவாரத்தில் ஒரு மடம் இருக்கிறது. அங்கே நிறைய செடி, கொடிகள், மூலிகைகள் இருந்தன. இவர் அங்கிருந்த குன்றிமணிக் கொடியில் உள்ள இலையைப் பறித்து ஒருவரிடம் கொடுத்து… “இதை உண்ணுங்கள் இனிக்கும்’ என்றார்.

அந்த அன்பர் அதனை உண்டு “இனிக்கிறது’ என்றார். உடனே இவர் “நீங்கள் அதிலிருந்து இன்னும் இலையைப் பறித்து வாருங்கள். அவற்றையே “கசக்கும் இலை’ ஆக்குகிறேன் என்றார். அனைவருக்கும் வியப்பு. எப்படிச் செய்ய முடியும்? இனிக்கும் இலையைக் கசக்கும் இலை ஆக்க முடியுமா? ஆவலுடன் அன்பர் இலையைப் பறித்து இவர் கையில் கொடுத்தார்.

எல்லோரும் ஆவலாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்… இவர் அந்த இலைகளை இரண்டு கைகளிலும் வைத்துக் கசக்கினார்.

மற்றவர்களைப் பார்த்து “இப்போது இது நான் கசக்கும் இலை ஆகி விட்டதல்லவா” என்றார். அனைவரும் சிரித்தனர்.

-“பெரிய மனிதர்கள் அரிய செய்திகள்…’ நூலிலிருந்து.

SOURCE::::: http://www.dinamani.com

Natarajan

லீ: சிங்கப்பூரின் சிற்பி…….மறக்க முடியாத மாமனிதர் …

சிங்கப்பூர் வரலாற்றில், சிங்கப்பூர் என்ற சொல்லோடு பிரித்துப் பார்க்க முடியாததாக இருந்த இன்னொரு சொல் உதிர்ந்திருக்கிறது: லீ குவான் யூ. சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியும் இவரே, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய நேருவும் இவரே!

உலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர். உலகின் மிக நீண்ட காலப் பிரதமர்!

லீயுடன் ஓர் உரையாடல்

உலகம் முழுவதும் லீயைப் பற்றி இரு விதமான பேச்சுகள், மதிப்பீடுகள் உண்டு. அவர் சிங்கப்பூரை வளர்த்தெடுக்க எந்தக் கட்டுப்பாடுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினாரோ, பெரும்பாலும் அதுதான் இந்தப் பேச்சுகள், மதிப்பீடுகளின் மையப்புள்ளி. ஒருமுறை, நான் படித்த சிங்கப்பூர் தேசியக் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக லீ குவான் யூ வந்திருந்தார். அவருடைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் அவரோடு கலந்துரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லீ – சிங்கப்பூர் இரண்டுக்குமான பல்வேறு யூகங்களுக்குப் பதிலாக அமைந்ததோடு, அவருடைய தனித்துவமான அரசியல் – நிர்வாகப் பார்வையையும் வெளிக்காட்டியது அந்த உரையாடல்.

மாணவர்கள் நிறையக் கேட்டோம், எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிங்கப்பூர் – இன்றைய சிங்கப்பூர் பற்றிக் கேட்டபோது, அப்படியே மவுனத்தில் ஆழ்ந்தார். ஒரு இடைவெளிக்குப் பின் பேசினார்: “50 வருடங்களுக்கு முன் இந்தச் சின்ன தீவில் பிழைப்புக்காக வந்து இறங்கியவர்கள்தான் இன்றைய வளர்ந்து நிற்கும் சிங்கப்பூருக்கான திடமான அஸ்திவாரத்தைப் போட்டவர்கள். எந்தெந்த நாடுகளில் இருந்தோ இங்கு வந்திறங்கி, பத்துக்குப் பத்து சதுர அடியில் எட்டுப் பேர் நெருக்கியடித்துக்கொண்டு கிழிந்த உடைகளும், போஷாக்கு இல்லாத உணவும் கொண்டு உயிர் வளர்த்தவர்கள் கொடுத்த உழைப்புதான் இந்த நாட்டுக்கான உரம். இன்று மழை பெய்யும்போது குடை பிடிக்கும் அவசியம் இல்லாமல் சாலை ஓரம் எங்கும் கூரை வேயப்பட்டிருக்கிறது. உலக அரசாங்கங்கள் பாடம் படிக்கும் நவீன சொகுசுப் பேருந்து போக்குவரத்து வசதியை அனுபவிக்கிறோம். இதற்கெல்லாம், முகம் மறந்து போன அந்தப் பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நாம் செலுத்த நன்றி மிச்சம் இருக்கிறது.”

மாறாத வடு

சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்பியவர் லீ. ஒன்றிணைந்த மலேசியாவின் வர்த்தகத் தலைநகராக சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர்.

மலேசியாவுடன் சிங்கப்பூரை இணைக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால், மலேசிய அரசாங்கத்துடன் சரியான உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, கண்கள் கலங்க, தலைகுனிந்து விசும்பியபடி சிங்கப்பூர் -மலேசியப் பிரிவினை அவர் அறிவித்தார். பின்னொரு நாளில், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “1965-ல் சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரிந்த சுதந்திரக் குடியரசாக நான் அறிவித்தேன். நாடு முழுவதும், பலரும் அதைப் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடினர். ஆனால், எனக்கோ தூக்கங்கள் இல்லாத இரவுகளாக, மிகுந்த மன உளைச்சலுடனேயே நாட்கள் கழிந்தன. சிங்கப்பூருக்கு இது வாழ்வா, சாவா பிரச்சினை. ஒரு தனி நாடாக இயங்குவதற்குத் தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் நம்மிடம் கிடையாது. சிங்கப்பூரின் சொத்து, கடல் வணிகத்துக்கு ஏதுவான நமது புவியியல் அமைப்பு மட்டுமே. இருந்தாலும் நமது குறைகள் அனைத்தையும் தகர்த்து, இன்று உயர்ந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம். இதற்கான முழு பாராட்டும், நம் மண் மீது நம்பிக்கைகொண்டு இங்கு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது அயராத உழைப்புமே.”

தன் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொரு சிங்கப்பூர் வாசியையும் அவர், தங்களை வருத்திக்கொண்டு நாட்டைச் செதுக்கிய தியாகிகளாகவே பார்த்தார்.

ஒழுக்கம் மட்டுமே உயர்வு தரும்

19-ம் நூற்றாண்டின் தொடக்கங்களில், சிங்கப்பூர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இயங்கிவந்தது. மற்ற பிரிட்டிஷ் காலனிகளைப் போலவே சிங்கப்பூரும் ஓரளவு வளர்ச்சி கண்டது. இருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான உள்கட்டமைப்பு வசதிகள் அந்தக் காலகட்டத்தில் இல்லை. சொல்லப்போனால், அன்றைய சென்னையின் நிலவரத்தில் அரைப் பங்குகூட இல்லை.

சிங்கப்பூர் விடுதலை பெற்று, லீ குவான் யூ ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கடுமையான சட்டங்கள் பாய்ந்தன. சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி; பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை; போதைப் பொருட்கள் உட்கொண்டாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை – இப்படியான சட்டங்களால் நாடே கிடுகிடுத்துப் போனது. இதனால் பலரது விரோதத்துக்கும் அவப்பெயருக்கும் லீ ஆளாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அதையெல்லாம் அவர் பெரிதாகப் பொருட் படுத்தவில்லை. “நாட்டின் வளர்ச்சிக்குச் சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். அது ஆரம்பத்தில் ஒரு கசப்பான கஷாயமாகத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் அதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அறுவடை செய்வீர்கள்” என்றார்.

அதுமட்டுமல்லாமல், தெளிவான பொருளாதாரக் கொள்கைகளாலும், முதலீட்டுக் கட்டமைப்புகளாலும் சிங்கப்பூரை என்றென்றைக்கும் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் சொர்க்கமாக மாற்றினார். சமீபத்திய உதாரணம், ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எடுவார்டோ சாவரின், தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டு, சிங்கப்பூர்வாசியாகி இருப்பது.

அரசியலுக்குத் தகுதி தேவையில்லையா?

அரசியல் பதவிகளுக்கு நிறைய தகுதிகள் வேண்டும் என்று நினைத்தவர் லீ. “எதன் அடிப்படையில் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டபோது சொன்னார்: “எந்தப் பதவியும் இல்லாமலே திறனுடன் செயல்படுபவர்களை ‘சைக்கோமெட்ரிக் சோதனைகள்’ வழியாக ஆராய்வதுதான் முதல் பணி. அந்தப் பயிற்சியில் அவர்கள் அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று தேர்வானால், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்தச் சலுகைகளும், பதவி உயர்வுகளும் அளிக்காமல் தத்தமது தொகுதிகளை அவர்கள் எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்போம். முடிவில் அவரவர் திறனுக்கேற்ப அவர்களை இளநிலை அமைச்சர்களாகவோ, அமைச்சராகவோ நியமிக்கிறோம். இத்தனை கடும் சோதனைகளைக் கடந்துவருபவர்கள், பெரும்பாலும் சேவை மனப்பான்மையுடனும், தன்னலம் கருதாச் சமூக அக்கறையுடனும் செயலாற்றக் கூடியவர் களாகவே இருக்கிறார்கள்.”

இப்படித் திறமையான, நேர்மையான அரசியல்வாதியைக் கண்டெடுப்பது, வெறும் முதல்கட்டப் பணி மட்டுமே. அதன் பிறகு, அவர்கள் அதே நேர்வழிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும். “மக்களின் காசுக்கு ஆசைப்படாத அளவுக்கு ஊதியத்தை அரசே அளித்துவிட்டால், அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளியில் கை நீட்ட மாட்டார்கள்” என்பதும் லீயின் நம்பிக்கை களில் ஒன்று. சிங்கப்பூரின் ஆறு முன்னணித் துறைகளில் அதிக ஊதியம் பெரும் முதல் எட்டுப் பேரின் வருமானம் எவ்வளவோ, அதில் மூன்றில் இரண்டு பங்கு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியம். லீயின் நம்பிக்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை.

வாரிசு அரசியலுக்கும் தகுதி தேவை

“பலம் மிக்க அரசியல் குடும்பத்து வாரிசுகள், சமுதாயத்தில் கட்டாயம் உயர்பதவி வகிக்கலாம். ஆனால், அதில் ஒரு தர்மமும் வேண்டும்” என்று சொல்வார் லீ. அவரது மூத்த மகன் லீ சியன் லூங், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 13 வருடங்கள் சிங்கப்பூர் ராணுவத்தில் முறையே பயிற்சி பெற்ற லீ சியன் லூங், 1990-ல் துணைப் பிரதமர் ஆனார். 14 வருடங்கள் கழித்து, 2004-ல் பிரதமர் ஆனார்.

இளைய மகன் லீ சியன் யாங், ஸ்டான்பர்ட் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவரும் சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றியவர். பின் அந்நாட்டின் புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, பின் அதன் முதன்மை நிறுவனராக உயர்ந்தார். இப்போது சிங்கப்பூர் விமானப் படைத் தலைவர்.

இப்படி லீ குடும்பத்து வாரிசுகள் அரசில் கோலோச்சினாலும், யாரும் அவர்களுடைய தகுதியைக் கேள்விக்குள்ளாக்க முடியாது, இந்திய / தமிழக அரசியலைப் போல ‘வாரிசு முறை’ இவர் விஷயத்தில் சர்ச்சை ஆகவில்லை.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

சுமார் 50 ஆண்டுகளாக எதிர்க் கட்சிகளை ஒரு சில தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க விட்டுக்கொண்டிருந்த லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சி, 2011 தேர்தலில் சறுக்கல் களைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் தங்கள் கைவசம் இருந்த முக்கியமான 6 தொகுதிகளை இழந்தது. இதன் தொடர்ச்சியாக, செயற்குழுவைக் கூட்டி, சுயபரிசோதனையில் இறங்கியது லீயின் கட்சி. “இன்றைய இளைஞர்களுக்குத் தங்கள் எதிர்காலம் மீதும், நாட்டின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை உள்ளது. இணையம் வழியாக அவர்கள் பதிவிடும் கருத்துக்கள், நாடாளுமன்றம் வரை ஒலிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். உடனுக்குடன் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த நவீன குரல்களுக்குச் செவிசாய்க்கும் சுறுசுறுப்பான அமைச்சர்களையே தங்கள் பிரதிநிதிகளாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒன்று, கால மாற்றத்துக்கு ஏற்றார்போல் நம்மை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். அல்லது இளைய சமுதாயத்துக்கு வழிவிட்டு, கவுரவமாக நாம் விலகிக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, இதுவரை மக்கள் செயல் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்துவரும் நான், அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்வதாக அறிவிக்கிறேன்” என்று அறிவித்தார் லீ.

தன்னைப் போன்ற மூத்தவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைத் தானே முன்னின்று ஏனையோருக்கு உணர்த்தினார்.

கல்லறையிலிருந்து வருவேன்

தன் மீதான விமர்சனங்கள் மீது – கட்டுப்பாடுகள், சுதந்திரத் தலையீடு, கருத்துச் சுதந்திரம், ஏனைய அரசியல் தலைவர்கள் / கட்சிகள் மீதான கட்டுப்பாடு – பற்றியும் லீ பேசியிருக்கிறார். “தேசத் தலைவர் என்று வந்துவிட்டால், மக்களின் பார்வையும், விமர்சனங்களும் நம் மீது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியான விமர்சனங்களைக் கருத்தில்கொண்டு, ஆட்சிமுறையில் மக்களுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். என் பார்வையில் கருத்துச் சுதந்திரம் அவசியம். எனினும், அது சரியான அளவுகோலில் உரிய எல்லைக்குள் இருப்பதும் அவசியம்.

சிங்கப்பூரை ஆட்சி செய்பவர் எவராக இருந்தாலும், அவரிடத்தில் இரும்பு போன்ற திடம் இருக்க வேண்டும். ஏதோ, வந்தோம் சென்றோம் என்று விளையாட்டாக ஆட்சி செய்துவிட்டுப் போக இது ஒன்றும் சீட்டாட்டம் இல்லை. சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்திருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை, நாளை நான் இறந்த பிறகும், என் நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தல் நேர்ந்தால், கல்லறையில் இருந்தும் எழுந்துவருவேன்!”

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு!

லீக்கு தமிழர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வெளிப்படையாக இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.

“இலங்கை கட்டாயம் ஒரு சந்தோஷமான நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டுத் தமிழர்களும் இருந்துவருகின்றனர். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், திறமையில் தமிழர்களைக் காட்டிலும் பின்தங்கிய சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களைக் கொன்றுவருகின்றனர். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்தவரை நியாயமானதே!

நான் ராஜபக்சவின் சில பிரச்சாரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ‘சிங்கள வெறியர்’ என்றுதான் தோன்றுகிறது. வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யக் கூடியவர் என்று புரிகிறது.

இந்தப் போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிக மானது. அவர்கள் வெகு நாட்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள்” என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருக்கிறார்.

– ஏ. ஆதித்யன்,

சிங்கப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் – எழுத்தாளர்,

இந்தோனேசிய http://www.ayobis.com நிறுவனத்தின் முதன்மை நிறுவனர், தொடர்புக்கு : adi1101990@gmail.com 

Source:::: http://www.tamil.thehindu.com

Natarajan