” மாட்டு வண்டி போகாத ஊருக்கும் உன் பாட்டு வண்டி போகுமே அய்யா … “

ஜூன்  24   இன்று  கவியரசு கண்ணதாசன்  பிறந்த நாள் …  அவரைப்  பற்றிய  நினைவலைகள்  சில ….இன்றைய “தினமலர்”  நாள் இதழில்

படித்தேன் … அது  உங்கள் பார்வைக்கும்  இப்பொழுது …

 நடராஜன்

‘நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை…
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லை…’
தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத ‘கிளாசிக்’ பாடல்களின் ‘கிங் மேக்கர்’.

‘கவியரசர்’ என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனுக்கு இறைவன் அளித்த வாழ்நாள் 54 ஆண்டுகள் மட்டுமே.’மாட்டு வண்டி போகாத ஊரிலும் உன் பாட்டு வண்டி போகுதடா…’ என பாராட்டும் அளவிற்கு சினிமா பாடல்களை தன் எழுத்து ஏணியில் ஏற்றி ஊர் முழுதும் உலா வந்த அந்த காவிய
புத்தகம் பிறந்த தினம் இன்று. வருடங்கள் கடந்தாலும் நினைவிலும், செவியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் கவியரசரின் நினைவுகளை அவருடன் நெருக்கமானவர்கள் இதோ பகிர்ந்து கொள்கிறார்கள்….

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

விசாலாட்சி, கண்ணதாசன் மகள் : அப்பாவிற்கு தெய்வ பக்தி அதிகம். அவர் சந்தித்த அனுபவங்களை தான் பாடலாய் தந்தார். பிசியான பாடலாசியராக இருந்தாலும் குடும்பத்தார் மீது அலாதி பிரியம் கொண்டவர். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை வைத்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். என் அம்மாவுக்காக ‘தாைழயாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா…’ போன்ற பாடல்களை எழுதினார். ‘பூ முடிப்பாள் இந்த பூங்குழலி… புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி…’ பாடலை என் அக்காக்கள் திருமணத்திலும், என் திருமணத்திலும் பாடச் சொல்லி அருகில் நின்று அவரும் பாடுவார்.பாசமலர் பாடலில் வரும் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம்தென்றலே..’ என்ற வரிகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். மறைந்தாலும் கண்ணதாசனின் மகள் என்ற பெருமையை என் தந்தை அளித்திருக்கிறார். பொன்னம்மாள் கண்ணதாசன் அறக்கட்டளை மூலம் அவர் நினைவாக உதவிகள் செய்து வருகிறோம்.

இரண்டு மனம் வேண்டும்

சொ.சொ.மீ.சுந்தரம், கண்ணதாசனின் கவியரங்க நண்பர்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினேன். 1976ல் மதுரையில் நடந்த கவியரங்கத்தில் என் பேச்சை கேட்டு பாராட்டிய கண்ணதாசன், சொ.சொ.மீ., சுந்தரம் என்பது ‘சொல்லுக்கு சொல் மீறும் சுந்தரம்’ என பாராட்டினார். கவியரங்கங்களில் தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்தார். கண்ணன் மீது அவருக்கு கொள்ளை பிரியம். எங்கு வந்தாலும் நன்கு உறங்குவது அவருக்கு மிகவும் பிடிக்கும். புதுச்சேரி கம்பன் கழகம் நடத்திய கவியரங்கத்திற்கு சென்ற போது 9.30க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு 9.15 வரை அவர் வரவில்லை. அதன் செயலாளர் அருணகிரி, தமிழாசிரியர் ஒருவரை அழைத்து கண்ணதாசனை அழைத்து வரும் வரை இறைவணக்கம் பாடுமாறு கூறிச் சென்றார். ஒரு விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனை கண்டுபிடித்து எழுப்பிய போது ‘துாங்கிவிட்டேன் அருணகிரி… வாருங்கள் செல்லலாம்’ என முகத்தை துடைத்துவிட்டு ஒரு ‘கப்’ காபியோடு மேடையேறியவர் தன் பேச்சில் அத்தனை பேரையும் கட்டிப்போட்டார். அந்த கூட்டத்தில் தனக்கு பிடித்த இரு பாடல்களை அவர் பாடினார். ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்… நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று…’ என்று பாடி முடிக்க அங்குள்ள அனைவர் கண்ணிலும் கண்ணீர்.’பார்த்தேன் நினைத்தேன் பக்கம் வர துடித்தேன்… உனைத் தேன் என நான் நினைத்தேன்…’ என தொடங்கி ‘முடித்தேன் ஒரு துளி விடாமல் குடித்தேன்…’ என மற்றொரு பாடலை பாடி அவர்களின் சோகத்தை போக்கினார். மது அருந்தும் போது தான் கண்ணதாசன் பாடல் எழுதுவார் என பலரும் நினைக்கின்றனர். அது தவறு. மது இருக்கும் போது அவரிடம் பாடல் வராது, பாடல் வரும் போது அவரிடம் மது இருக்காது. ‘மருதமலை மாமணியே முருகைய்யா… தேவரின் குலம் காக்கும் வேலய்யா…’ என்ற பாடலை எழுதியதற்காக சின்னப்பதேவர் ‘பிளாங் செக்’ ஒன்றை கண்ணதாசனுக்கு வழங்கினார். வறுமையில் இருந்தாலும் தன் உதவியாளர் கண்ணப்பனை அழைத்த கண்ணதாசன், ‘இந்த காசோலையை கண்ணாடி போட்டு மாட்டு; இது தான் என் பெருமைக்கு எடுத்துக்காட்டு’ என்று கூறினார்.’நான் இந்திய ஜனாதிபதி போல் சம்பாதிக்கிறேன்… அதே நேரத்தில் இந்தியா போல் கடன் வாங்குகிறேன்…’ எனக்கூறுவார்.திரைப்பட பாடல்களை மட்டும் வைத்து கண்ணதாசனை மதிப்பிடக்கூடாது. அவை அல்லாது கவியரங்கம், இசை, பேச்சு என கண்ணதாசனின் திறமைகளை அருகில் இருந்த பார்த்தவர்களின் நானும் ஒருவன்.

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்


கவிஞர் முத்துலிங்கம்:
 மதுரை மாணிக்கத் தமிழை, கோடம்பாக்கத்திற்கு கூட்டி வந்த பெருமை கண்ணதாசனுக்கு உண்டு. இலக்கியப் புலவர்கள் இலக்கியத்தில் இயம்பாமல் விட்ட நுணுக்கமான கருத்துக்களை, சினிமாவில் தீட்டியவர். இலக்கிய சாற்றை பிழிந்து, திரைப்பாடலில் தந்தவர்.பாவமன்னிப்பில், ‘சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்…,’ துவங்கும் பாடலில், ‘காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்,’ என்ற சரணம், எனது நம்பிக்கையை உயர்த்திய வரிகள்.’மயக்கமா, தயக்கமா? மனதிலே குழப்பமா?…, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு,’- கண்ணதாசனின் பாடல் வரிகள் கவிஞர் வாலிக்கு நம்பிக்கையூட்டி, திரைப்பாடல்கள் எழுதவைத்தவை.கண்ணதாசன் கவிதை மட்டுமின்றி, உரைநடையில் புதிய நடையாக சிறு வாக்கியங்களாக சீர்திருத்தி எழுதியது அகவற்பா போல் இருக்கும். ‘வனவாசம்’ சிறந்த முன்னுதாரணம். அதற்கு ஈடான உரைநடை இலக்கியம், இலக்கிய உலகில் இல்லை.எம்.ஜி.ஆருக்கு ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘தங்கத்தில் முகமெடுத்து…,’பாடல் எழுதினேன். ‘நன்றாக இருந்தது’ என கண்ணதாசன் பாராட்டினார்.முதன்முதலாக நான், கண்ணதாசன், கங்கை அமரன் இணைந்து ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திற்கு பாடல் எழுதினோம். ‘மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ…,’ பாடலை நானும், ‘கோயில் மணி ஓசைதனை கேட்டதாரோ…,’ பாடலை கண்ணதாசன், ‘பூவரசம் பூ பூத்தாச்சு…’பாடலை கங்கை அமரனும் எழுதினோம்.கண்ணதாசனிடம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் அதிபர் டி.ஆர்.ராமண்ணா, ‘நீங்கள்
இயற்றிய மாஞ்சோலை கிளிதானோ’ பாடல் நன்றாக உள்ளது. இதுபோல், எனது படத்திற்கு ஒரு பாடல் எழுத வேண்டும்,’ என்றாராம். கண்ணதாசன்,’அதை நான் இயற்றவில்லை. முத்துலிங்கம் எழுதியது. அவருக்கு, சந்த நடையில் நன்றாக எழுதவரும். அவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்,’ என்றாராம். எத்தனை கவிஞர்களுக்கு இப்படி பெருந்தன்மை இருக்கும்.அனைத்திலும் கண்ணதாசன் வெற்றி பெற்றாலும், அவர் தோற்ற இடம் அரசியல். நெப்போலியனுக்கு ‘வாட்டர்லுா’ போல, கண்ணதாசனுக்கு அரசியல்தான் ‘வாட்டர்லுா’. ஒரு கவிஞன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் கண்ணதாசன். ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம். இருந்தாலும், ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை,’ என்ற அவரது பாடல் வரிகள் அவருக்குப் பொருந்தும்.

Source::::Dinamalar… Tamil Daily  June 24

Natarajan

 

” காலத்தின் தூண்கள் கோவில் தேர்கள்…”

 

பொங்கியெழும் ஜனத்திரள் சமுத்திரத்தின் நடுவே, மனிதத் தலைகளைத் தாண்டி பிரம்மாண்டமான கலைப்பொருளாக அசைந்தாடி வரும் தேரைக் கண்டு ரசிக்கும் கண்கள் பாக்கியம் செய்தவை. கலாச்சாரம், பக்தி ஆகியவற்றுடன் பிரமிப்பூட்டும் கலைநுட்பங்களைக் கொண்டவை கோயில் தேர்கள்.

தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் ஆயிரக் கணக்கான தேர்கள் உள்ளன. மாசிமகம், ஆடிப்பூரம், பங்குனி மாதம், தைப் பூசம், சித்திரை மாதம், மார்கழி உற்சவம் போன்ற பல நிகழ்ச்சிகளில் நான்கு வீதிகளிலும் தேரோட்டங்கள் நடைபெறுவது பல ஊர்களில் இன்றும் வழக்கமாக உள்ளது. பிரம்மாண்டமான திருவாரூர் ஆழித்தேர், கும்பகோணம் சாரங்க பாணி கோயில் தேர், வில்லிபுத்தூர் பெருமாள் கோயில் தேர் போன்ற பல தேர்களை வடகயிற்றால் இழுத்துச் செல்பவர்களின் முகத்தில்தான் எத்தனைப் பிரகாசம்!

பெருமாள், சிவன் கோயிலுக்கு ஏற்ப பத்து தாளம் எனும் தசதாள அளவிலான தேர்கள், நவதாளம் எனப்படும் ஒன்பது தாளத்தில் செய்யப்பட்ட அம்மன் கோயில் தேர்கள், பஞ்ச தாளம் எனப்படும் ஐந்து தாளத்தில் குறுகிய வடிவில் செய்யப்படும் விநாயகர் கோயில் தேர்கள் என்று விதவிதமான தேர்களைப் பவனிவரச் செய்து இன்றும் அழகுபார்ப்பவர்கள் தமிழர்கள். கோயில் தேர்களுக்கென்றே படிகளுடன் கூடிய தேரேற்றுக் கூடங்களும் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

அலங்கரிக்கும் அதிசயங்கள்

தேரைச் சுற்றி நான்கு புறமும் ஆடும் அசைந்தாடிகள், நான்கு முகப்பிலும் வாச மாலைகள், சுவாமிக்கு மேல் விதான ஓவியங்கள், தேர்களின் எட்டுப் புறமும் பட்டங்கள், சிவ வைஷ்ணவக் கொடிகள், எல்லாவற்றுக்கும் மேலாகக் கூம்பிய வடிவில் கலசம் போன்ற துணிகளால் ஆன கலங்கரி ஓவியத் துணிகள், தேரை இழுத்துச் செல்வது போன்ற வடிவில் மூங்கிலால் உருவாக்கப்பட்ட குதிரைகள் என்று தேருக்குத் தெய்வீகக் களை சேர்க்கும் விஷயங்கள் பார்க்கத் திகட்டாதவை.

தேர்களின் நான்கு வெளிப்புறத்திலும் சித்திர வேலைப்பாடுகள் அழகு சேர்க்கும். வைணவத் தேராக இருந்தால் பெருமாளின் தசாவதாரங்களைக் காட்டும் மரச் சிற்பங்களும், சிவன் கோயில் தேர்களாக இருந்தால் சிவபுராணக் கதைகள், சிவத்தொண்டர்களான 63 நாயன்மார்களின் கதைகளைச் சித்தரிக்கும் அழகிய மரச் சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கும். அவற்றைக் காணும் வெளிநாட்டுப் பயணிகளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்ப்பதே தனி அழகு.

பிரான்ஸைப் பின்பற்றலாமே!

தேரோட்டம் முடிந்த பிறகு, தேரின் அத்தனை அலங்காரங்களையும் பிரித்து, இரும்புத் தகடுகளால் தேரை முழுவதுமாக மறைத்துப் பயணிகள் பார்க்க இயலாமல் கோயில் அதிகாரிகள் மூடிவிடுகின்றனர். இதனால் தோ்த் திருவிழா முடிந்த மற்ற நாட்களில், இதனைப் பார்க்க வரும் பயணிகளால் அவற்றின் கலை அழகைக் காண இயலாமல் போய்விடுகிறது.

100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கலைப் பொருட்கள், கட்டிடங்கள் போன்றவற்றை பிரான்ஸ் நாட்டினர் திறந்தவெளி அருங் காட்சியகம் எனும் முறையில் இன்றும் பாதுகாத்துவருகின்றனர்.

தமிழகத்திலோ 350 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த 100-க்கும் மேற்பட்ட தேர்கள் சிதிலம் அடைந்தும், கேட்பாரற்றுக் கிடப்பதும் வேதனை யளிக்கிறது. இவற்றைப் புத்தாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், அழகிய நிலையில் உள்ள தேர்களை, தேரோட்டத்துக்குப் பிறகு மக்கள் அவற்றின் கலை அழகைக் கண்டுகளிக்கும்படியாகத் திறந்தவெளி அருங்காட்சியமாக வைக்கலாம். ஏனெனில், தேர் ஓடினால் மட்டுமல்ல, நின்றாலும் அழகுதான்!

– தேனுகா, கலை விமர்சகர், தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com

” கப்பி காரில் சவாரி …” மலரும் நினைவுகள் !!!

 

ஓவியம்: முத்து

ஓவியம்: முத்து

நண்பர் ஒருவர் சொன்னார்: ‘‘இப்போ இருக்கிற குழந்தைகள்லாம் அதிசயமா எதையுமே பார்க்க மாட்டேங்குறாங்க, கேட்க மாட்டேங்குறாங்க” என்று. அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. எல்லாமே கணினியில், தொலைக்காட்சியில் இன்றைய குழந்தைகளின் விழிகளின் முன் விரிந்துவிடுகின்றன. ஆனால், இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பு அண்ணாந்து பார்த்து ரசித்த பொருட்களில் பலவற்றைக் காலம் தன் சுருக்குப் பையில் போட்டு எங்கோ தூர வீசியெறிந்துவிட்டது.

தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற சிற்றூர் அது. ஒரு காலைவேளை. நாங்கள் பள்ளியில் இருந்தோம். நாங்கள் என்பது – அப்பாகுண்டு, மணிவண்ணன், நட்டு, என்னையும் சேர்த்த நால்வர் அணி. ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக்கொண்டு ரயில் வண்டியாய் காலம் எங்களை நகர்த்திய நாட்கள் அவை.

உடைந்த பாதி பிளேடை வாயில் வைத்து மோர்சிங் வாசித்துக்கொண்டிருந்த நட்டுவின் காதில் அப்பாகுண்டு ஏதோ கிசுகிசுக்க, அது மெல்ல நகர்ந்து எங்கள் காதுக்கு வந்தபோது எங்களால் வகுப்பில் உட்காரவே முடியவில்லை.

‘‘டேய்! நம்ம ரோட்டுக்கு கப்பி கார் வந்திருக் காம்…” என்பதுதான் அந்த ரகசிய சேதி.

சரியாக ஒரு மணிக்கு பள்ளியில் ஒரு மூலையில் தொங்கும் தண்டவாளத் துண்டில் மணியடிக்கப்பட, நாங்கள் மு.ரா.சன்ஸ் மஞ்சப் பையை (அதுதான் அப்போது எங்களின் ‘ஸ்கூல் பேக்’) தோளில் சாய்த்துக்கொண்டு சாலையை நோக்கி ஓடினோம். அய்யனார் சிலை உயரத்துக்குச் சாலையை அடைத்துக்கொண்டு கப்பி கார் நின்றது.

முன்னும் பின்னும் ராட்சஸ இரும்பு ரோலர்களைக் கால்களாகக் கொண்டு பிரம் மாண்டமாக அது நின்றது. அதன் மேலே ஓர் ஆள் உட்கார்ந்திருந்தார். அவர்தான் கப்பி காரின் பாகன். ஊரே அதை அதிசயமாகப் பார்த்தது. நாங்கள் அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தோம். யானையைத் தொட்ட சந்தோஷம்.

ரோடு ரோலரை எங்கள் ஊர்க்காரர்கள் கப்பி கார் என்றார்கள். ரோடு முழுக்க நிரவப்படும் கருங்கல் ஜல்லிகளுக்குக் கப்பிக் கல் என்று பெயர். கப்பிக் கல்லைத் தன் இரும்புப் பாதங்களால் நசுக்கி நகரும் ரோடு ரோலருக்கு கப்பி கார் என்கிற பெயர் எவ்வளவு பொருத்தம்!

கப்பி கார் வந்த நாளில் ஊருக்கே ஒரு திருவிழா முகம் வந்துவிட்டது. ஊரே சாலையில் திரண்டது. நாங்கள் பள்ளிக்கூடத்தை மறந்தோம்.

‘‘டேய்! இது பத்து நாளைக்கு முன்னால திருவாரூர்ல கிளம்புச்சாம். இன்னிக்குத்தான் நம்மூருக்கு வந்திருக்கு” என்று கப்பி காரின் இயந்திரவியலைப் புட்டுப்புட்டு வைத்தான் மணிவண்ணன்.

“அப்படின்னா, இது டெல்லிக்குப் போக எத்தனை மாசம் ஆகும்” என்று நான் விரல் விடாமல் எண்ணிப் பார்த்தேன்.

‘‘எனக்கு கப்பி கார் ஓட்டுற வேலை கெடச்சா போக மாட்டேம்பா. எல்லா காரும் இத முந்திக்கிட்டுப் போயிடும். இது டொடக்கு டொடக்குனு நவுரும்” என்றான் அப்பாகுண்டு.

எங்கள் ரோட்டில் கப்பிக் கல்லை நிரப்பி தார் போட்டு முடிக்கப் பத்து நாட்கள் ஆயின. அங்குலம்அங்குலமாக நகர்ந்து சாலையைச் சமன்படுத்திக் கம்பீரமாக நின்றது கப்பி கார். ஊர்க்காரர்களின் பொழுதுபோக்கே அதை வேடிக்கை பார்ப்பதுதான். அது நின்ற இடத்தில் தற்காலிகமாகப் பட்சணக் கடையும், கடலைக் கடையும் முளைத்திருந்தன. யானையின் முதுகில் சுண்டெலிகள் துள்ளிக் குதிப்பதைப் போல மாலைவேளைகளில் அமைதியாக நிற்கும் கப்பி காரின் மேலே ஏறி நாங்கள் விளையாடுவோம்.

‘‘கப்பி காருக்கு நான்தான் டைவர்” என்றான் நட்டு.

‘‘நான்தான் கண்டக்டரு” என்றேன் நான்.

நாங்கள் கப்பி காருக்கு பக்கத்தில் நிற் பதையே பெருமையாக நினைத்து நின்று கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கூடத்தில் மூணு வருஷமா எட்டாங்கிளாஸிலேயே இருக்கும் சுப்பிரமணி அங்கு வந்தான். மேலும் கீழும் அதைப் பார்த்தவன், அதன் பின்னால் சென்று தம்கட்டித் தள்ளினான். அதுவா நகரும்? என்ன நினைத்தானோ, கப்பி காரின் ரோதையை ஓங்கி உதைத்துவிட்டு, ‘‘இதுக்குத் திருட்டுப் பயலே வர மாட்டான்டா…” என்று சொல்லிவிட்டுப் போனான்.

தூரத்தில் கப்பி காரின் ஓட்டுநர் வருவதைப் பார்த்து நாங்கள் மிரண்டுபோனோம். அருகில் வந்த அவர், ‘‘பயல்களா… வர்றீங்களாடா… ஒரு ட்ரிப் அடிக்கலாம்” என்று அழைத்தார். அவருடன் தொற்றிக்கொண்டோம். எங்களைச் சுமந்தபடி மெல்ல நகர்ந்தது அந்தப் பேரதிசயம். சில நூறு சென்டிமீட்டர் தூரம் போன பிறகு எங்களைக் கப்பி காரிலிருந்து இறக்கிவிட்டார் பாகன்.

அதன் பிறகான காலங்களில் நான் பல நூறு மைல் தூரங்களைக் கடந்துவிட்டேன். என் நினைவின் சாலையில் அந்தக் கப்பி கார் இப்போதும் எங்கள் ஊரைவிட்டுத் தாண்டவே இல்லை!

– மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

” Retirement is the Never Ending Coffee Beak …” !!!

The Retirement Q&A!

Retirement can be a wonderful thing. It sure is a huge change in one’s life, moving from office to home, from keeping hours to keeping yourself busy and having fun. Indeed, retirement has many secrets, which is why it was important for me to ask some ‘hard’ questions about this phase of life.

Question: How many days in a week?
Answer: 6 Saturdays, 1 Sunday

Question: When is a retiree’s bedtime?
Answer: Two hours after he falls asleep on the couch.

Question: How many retirees to change a light bulb?
Answer: Only one, but it might take all day.

Retirement is wonderful. It’s doing nothing
without worrying about getting caught at it
Gene Perret

Question: What’s the biggest gripe of retirees?
Answer: There is not enough time to get everything done.

Question: Why don’t retirees mind being called Seniors?
Answer: The term comes with a 10% discount.

Question: Among retirees, what is considered formal attire?
Answer: Tied shoes.

Question: Why do retirees count pennies?
Answer: They are the only ones who have the time.

‘There’s one thing I always wanted to do before I quit…retire!’
Groucho Marx

Question:
What is the common term for someone who enjoys work and refuses to retire?
Answer: Idiot

Question: Why are retirees so slow to clean out the basement, attic or garage?
Answer: They know that as soon as they do, one of their adult kids will want to store stuff there.

Question: What do retirees call a long lunch?
Answer: Lunch.

I have never liked working.
To me a job is an invasion of privacy
Danny McGorty

Question: What is the best way to describe retirement?
Answer: The never ending Coffee Break.

Question: What’s the biggest advantage of going back to school as a retiree?
Answer: If you cut classes, no one calls your parents.

Question: Why does a retiree often say he doesn’t miss work, but misses the people he used to work with?
Answer: He is too polite to tell the whole truth.

Question: What do you do all week?
Answer: Monday through Friday, nothing; Saturday & Sunday, I rest.

I enjoy waking up and not having to go to work.
So I do it three or four times a day.
Gene Perret

Source:::: ba-ba mail site

Natarajan

படித்து ரசித்தது …” என்னை தெரியவில்லயா … ” ?

இந்தியா, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது, ஒருமுறை காந்திஜி சுயராஜ்ய இயக்கத்தை ஆரம்பித்தார். சுயராஜ்ய மந்திரத்தை கிராமம் கிராமமாகப் போய் சொல்ல வேண்டுமென்று, தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார். அதன்படி நானும், சில கிராமங்களுக்குப் போனேன். அப்படி, ஒரு கிராமத்தில், தண்டோரா அடித்து, ‘கிராம சாவடிக்கு முன் கூட்டம் நடைபெறும்’ என, அறிவித்த பின், குறிப்பிட்ட நேரத்தில், கையில் ஒரு அரிக்கேன் லாந்தருடன் சாவடிக்குப் போய் சேர்ந்தேன்.
அங்கே, ஒரே ஒரு நபர் மட்டுமே வந்திருந்தார். அந்த ஒருவராவது வந்திருக்கிறாரே என்ற நன்றி உணர்ச்சியுடன், பிரிட்டிஷ் சர்க்கார், இந்தியாவில் செய்துவரும் அட்டூழியங்களைப் பற்றி, கேட்பவரின் ரத்தம் கொதிக்கும்படியாக, ஒன்னேகால் மணி நேரம் பிரசங்கம் செய்தேன். பின், நானே வணக்கம் செய்து, உட்கார்ந்திருந்த ஒரே நபரைப் பார்த்து, ‘ஐயா, தங்களின் தேச பக்தி என்னைப் பரவசப்படுத்துகிறது. தாங்கள் யாரோ, எந்த ஊரோ…’ என்றேன்.
அதற்கு அந்த நபர், ‘என்னைத் தெரிய வில்லையா… நான் உம்மை, கோபிசெட்டிப்பாளையத்திலிருந்து, கரூர் வரையில் தொடர்ந்து வந்திருக்கிறேன். நான் சி.ஐ.டி.,காரன்; உம்மைக் கண்காணிப்பதற்காக என்னை அனுப்பியுள்ளனர்…’ என்றார் அவர்.

source:::::DinaMalar ….Sunday VARAMALAR.

Natarajan

” Army of Terracotta Soldiers in a Cave …” !!!

 

The Army of Terracotta Cave!

Most people would be shocked and disgusted to see a head suddenly poppin out of the earth of their private garden and giving them a stare, but in the case of one Chinese farmer, this was the beginning of a huge discovery for all of humanity.

The cave of the terracotta soldiers – which was designated a UNESCO world heritage site – is a subterranean cave containing no less than 7,000 clay , life-sized statues of soldiers, meant to serve the first emperor of China in the afterlife.
terracotta cave
The cave of the terracotta soldiers, located about half an hour’s drive from the city of Xi’an, was discovered completely by accident as a local famer was digging into his land with the goal of building a well, found, to his amazement, a life-sized head made of terracotta (a type of clay) buried in it. It took him 10 years to report his finding, which began a frenzy of digging in the area that took 70,000 workers 36 years to complete. During that time, thousands of clay soldiers were discovered, completing a complete, hand-made army.
terracotta cave
After studying the cave and clay soldiers for many years, researchers found that the cave was created by Ching shaw huang di, the first emperor of Xi’an, as a bid for immortality.
terracotta cave
The emperor, who started his reign in 246 BC when he was but 13 years old, developed the kingdom and set a unified language and writing style. Some, however, maintain that he was a hated tyrant.
terracotta cave
After many assasination attempts, the emperor developed a fear of death and wanted to ensure that even after his death, he’d have enough soldiers to protect him from his enemies. This will led the emperor to spend 11 years building an entire underground city, within stand thousands of clay statues of soldiers and servants who await his command.
terracotta cave
The cave is spread over an area of 16,300 square meters and split into three main areas. It contains over 7000 statues of warriors, with each of the statues having a defined role.
terracotta cave
You’ll find bowmen, commanders, cavalrymen and your average foot soldiers, with each the appropriate garments and weapons. In addition to the soldiers, the emperor enriched his post-death world with dancers, singers, acrobats and many others that will amuse and serve him after death.
terracotta cave
If that’s not enough to impress you, how about the fact that each and every one of the statues has a unique face, with no 2 alike in the whole army. Each has a different face, expression, hair style and other items that separate them from the others.
terracotta cave
terracotta cave
terracotta cave

Source: Tom S.  in ba-ba mail site

Natarajan

A Man was Out in the Wild Enjoying the Nature … And Suddenly ….OMG !!!

Are you a nature lover? Me too. I love to go into the wild and watch the animals in their native environment. Although by animals I don’t mean anything that could eat me. ;)

So when Alaskan bear enthusiast Drew Hamilton recently set up camp near the McNeil River to watch the area’s numerous brown bears fish, you can imagine the shock he got when a certain visitor came a little too close for comfort. Here’s a hint. He could eat you!

Drew-Hamilton-Bear-watching-685x301

 

 

 

How scary is that?! One minute you think you’re being careful, staying out of the fray, and observing from a distance. And then… suddenly… OMG. Awesome.

 

Source::::You Tube and Viral nova trending site

Natarajan

 

 

” வில்லேந்திய வேலன் …” !!!

வில்லேந்தியவன் வேலன்…

Muruga with Bow

Murugn with Bow Villudayanpatti

 

ஆன்மீக மாத இதழ் ஞான ஆலயத்தில் மே மாதம் (வைகாசி விசாகம் முருகன் சிறப்பிதழ்) வெளி வந்த ‘வில்லேந்தியவன் வேலனா? இராமனா? என்ற மிகச் சுவையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாலதி ஜெயராமன்.

வில்லேந்தியவன் வேலனா? இராமனா?
(திருமதி உமா பாலசுப்பிரமணியன்)

“சூலம், வாள், தண்டாயுதம், செவ்விய வேல், கோதண்டம் (வில்) இவைகளை அணிந்துள்ள தோள்களையும் அகன்ற அழகிய திருமார்பையும், தூய்மையுள்ள தாளில் அமைந்துள்ள தண்டையையும் நான் காணும்படி, அன்பு கொண்டுள்ள மயிலின் மீது ஏறி என் முன்னே வந்து திருவருள் புரிய வேண்டும்” என்று திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரிநாதர் வேண்டுகிறார்.இப்பாடலிலிருந்து முருகன் கையில் கோதண்டம் இருக்கிறது என்று தெரிகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் மூத்த புலவராக இருந்த நக்கீரரும், திருமுருகாற்றுப் படையில் “வானோர் வணங்கும் வில் தானைத் தலைவா” எனப்
பாடியிருக்கிறார்.

இராமன் என்றாலே வில்லுடன் கூடிய கோதண்ட ராமன்தான் எல்லோர் நினைவுக்கும் வரும்.ஆனால் மேற்கண்ட பாடல்களிலிருந்து முருகனும் வில்லைப் பிடித்தவனாக வில்லேந்திய வேலவனாக விளங்குகிறானே! என்று வியக்கத் தோன்றுகிறது.

வேலவன் வில் ஏந்தியது ஏன்?

முருகன் எப்பொழுது வில்லை ஏந்தினான்? இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மனதில் எழுகின்றன. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் “சுப்பிரமண்ய பராக்ரமம்” என்ற பழம் தமிழ் நூலில், முருகன் வில்லேந்திய காரணம் சுவையாகக் கூறப்பட்டிருக்கிறது.

கங்கையாற்றின் கரையில் ‘சிருங்கிபேரி புரம்’ என்ற ஒரு ஊர். அங்கு வசித்து வந்த வேடர்களின் தலைவன் குகன் ஆவான்.

உருவிலும் உடையிலும், தொழிலிலும், உணவிலும் மென்மை என்பதே அறியாத குகன், அயோத்தியிலிருந்தே சக்ரவர்த்தித் திருமகனான மென்மையான இராமனிடம், அளவு கடந்த அன்பு கொண்டிருந்தான்.

தந்தைக்கு மரியாதை அளித்து, தாய் சொல்லைத் தட்டாது, வனவாசம் செல்லக் காடுகளைக் கடந்து, கங்கையைக் கடக்கும் தருவாயில், இராமனும் வேட்டுவத்தலைவன் குகனும் சந்திக்க நேர்ந்தது.

மறு நாள் கங்கையைக் கடக்க நாவாய் எடுத்து வரச் சொன்னபோது வருத்தமுற்று, இராமனிடம் தான் வைத்திருந்த அன்பினை அழகாக வெளிப்படுத்தினான்.

குகன் சொல்கிறான், “காளத்தி அப்பனது இன்னல் கண்டு, தன் கண்களையே எடுத்து அப்பினான் என் தொல்குல முன்னொருவன். யான் அவ்வாறு செய்ய முடியாத கள்வனாக இருக்கிறேன். ஆதலால் என்னை மிக வெறுத்து நீ அகற்றுகின்றனை போலும்? ஐயனே! இவ்வாறு செய்யலாகாது. கண்ணிடத்து அப்பவல்லன் அல்லேன் ஆயினும், என்னாலான அடிமையைச் செய்யப் பணிந்தருள். நானும் உன்னோடே வருகிறேன்” என்று சொல்ல இராமபிரானும் தன் அருகிலிருந்த சீதைக்கும் தன் தம்பிக்கும் தன் பால் குகன் வைத்திருந்த தீராக் காதலை எடுத்துரைத்தான்.

பின், “என் உயிர் போன்றவன் நீ. என் தம்பி, உனக்குத் தம்பி. இந்தச் சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழ்ந்த இடமெல்லாம் உன்னுடையது. நான் உனக்குத் தொழில் செய்யும் உரிமையுடையேன். இனி, நாம் ஐவரானோம்” என்று சமாதானம் கூறி கங்கையைக் கடந்து சென்றான்.

இதற்குப் பிறகு ஆண்டுகள் பல சென்றன. வேடர் தலைவனுக்கோ இராமனைப் பற்றிய தகவல் ஒன்றும் தெரியவில்லை தெற்கே சென்றவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், என்றெல்லாம் தெரிந்து கொள்ள வழியும் இல்லை. குறித்த காலம் வந்துவிட்டதா? இல்லையா எனக் கூடத் தெரியாத நிலை.இதே நினைவாக, இதனையே சிந்தனை செய்து அன்ன ஆகாரம் இன்றி உடல் மெலிந்து உள்ளம் நைந்து உருகி நின்றான் குகன்.

குகனின் துயர் தீர்த்த குமரன்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குகன் படும் துயர் தீர்க்க அவன் வழிபட்டு வந்த கடவுளாகிய முருகப் பெருமான், ஒரு திட்டம் தீட்டினான். தன் மனைவியரான வள்ளியை சீதையாக மாற்றி, தெய்வயானையை லட்சுமணனாக ஆக்கி, வேல் ஏந்திய கையில் வில்லை ஏந்தி, தாமே இராமன் உரு ஏற்று, குகன் கனவில் தோன்றி, “தம்பி, கவலைப்படாதே.
எங்களுக்குக் குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் இருக்கிறது. விரைவில் திரும்பி விடுவோம். கவலையை விடு” எனச் சொல்லி மறைந்து விடுகிறான். குகனும் அன்று முதல் தேறி வந்து இராமன் வருகைக்காகக் காத்திருந்தான்.

ஆனந்தத்தை அருளிய அந்த குகன், அன்று முதல் குகஸ்வாமி மூர்த்தி என்றும், ஆனந்த நாயக மூர்த்தி என்றும் பெயர் பெறுகின்றான். இந்த வரலாற்றைத் திருச்செந்தூர் புராணமும் கூறுகிறது.

சுந்தரச் சிலை யிராமன் தோற்றமும் காட்டி ஞான
முந்திய பிரம்மானந்த சித்தியும் கொடுத்து வேத
மந்திரக் குகஸ்வாமி என்னவும் வாய்ந்தது பேர்
ஆனந்த நாயகன் என்று ஓது நாமமும் குமரன் பெற்றான்.

வில்லேந்திய வேலனை இங்கும் காணலாம்

வில்லேந்திய வேலனை, திருவையாற்றில், ஐயாரப்பன் சன்னதியில் மூல ஸ்தானத்திலேயே தரிசிக்கலாம். வில்லுடையான் பட்டியில் வில்லேந்திய வேலனின் விசேஷ சன்னதி உள்ளது. திருவெண்காட்டை அடுத்த சாய்காட்டில் நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் (வில்லுடன்) வில்லேந்திய வேலன் செப்பு உருவில் திகழ்கிறான். இந்த வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும் பின்னர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளி வந்தான் என்றும் கூறப்படுகிறது.

போர்க்காலத்தில் வில்லேந்தி ஒய்யாரமாக நிற்கும் முருகனை திருப்போரூருக்குச் சென்றால் காணலாம். பிரகாரத்தின் ஒரு கோடியில் மிக கம்பீரமான அழகிய செப்பு வடிவம், ஒரு காலைத் தரையிலும் ஒரு காலை மயிலின் முதுகிலும் ஊன்றி உடல் வளைத்து நிற்பதில் சேனாபதியின் மிடுக்கு தெரிகிறது.

வீரவேல் முருகனுக்கும் வெற்றி வில் இராமனுக்கும் உரியவைகளாயின.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

இக்கட்டுரையை எழுதிய திருமதி உமா பாலசுப்பிரமணியன் அவர்கள் தன் தந்தையார் வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ அவர்களைப் போலவே இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் மிக்கவர். இவர் சென்னையில் பல இடங்களில் திருப்புகழ் பயிற்றுவிக்கிறார். திருப்புகழ் இசைப் பேருரைகள் நிகழ்த்துகிறார். இவர் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகள் பல தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. சிறந்த சமூக ஆர்வலர்.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக!

நன்றி: ஞான ஆலயம்  …. Thro Murugan Bhakti SITE

Natarajan

படித்ததில் பிடித்தது …” மறக்க முடியாத வாரியார் வாக்கு …”

விபுதி மணம்

வாரியாரின் நகைச்சுவை பொதிந்த சொற்ப்பொழிவுகள், கருத்துக்கள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பவை.அப்படிப்பட்ட வாரியாரின் கருத்துக்கள் கொஞ்சம் இங்கே உங்கள் பார்வைக்கு.

‘கம்’ முனு இரு: “கம்முனு சும்மா ஒரு. எல்லாம் தானே நடக்கும்” என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. உண்மையில் “கம்” எனபது

விநாயகரின் பீஜ மந்திரம். “ஓம் கம் கணேசாய நம” எனபதாகும். ‘கம்’ என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்ப்தே இதன் பொருள்.

உலாவ இடமா இல்லை : “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” என்று பாடினார் பாரதியார். அங்கு ஏன் உலாவ வேண்டும்? உலாவ பீச்,பார்க் என்று எத்தனையோ இடம் இருக்கிறதே? அங்கெல்லாம் உலாவுவோம் என்று ஏன் எழுதவில்லை. காரணம், பாரத தேசத்தின் அந்தப்புற எல்லையாக இருக்கிறது பனிமலை. அங்கே இருப்பவர்கள், நாட்டை காக்கும் இராணுவ வீரர்கள். அவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால், பகைவர்கள் நுழைந்து விடுவார்களே.அதனால்தான் வெள்ளிப் பனி மலையில் உலாவிக் கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் பாரதி இப்படி பாடினான்.

வேறுபாடு இல்லா பெண் உலகம் : எல்லா வேறுபாடுகளும் ஆண் உலகிலேயே காணப்படுகின்றன. பெண் உலகுக்கு இந்த வேறுபாடுகள் கிடையாது. ஐயர்,செட்டியார்,நாயுடு, முதலியார் முதலிய ஜாதிப் பெயர்கள் எல்லாம் ஆணின் பெயரை ஒட்டியே வருகின்றன. பெண் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மீனாட்சி அம்மாள், காமாட்சி அம்மாள் என்றுதானே வழங்குகின்றன.

அதிகம் எது? : பாண்டவர்கள் ஐந்து பேர். கவுரவர்கள் நூறு பேர். அந்த காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேரும், கெட்டவர்கள் நூறு பேரும் ஆக இருந்தார்கள். இப்போது கேட்கவா வேண்டும்?

கள் தேவை : கள்ளை குடித்தால்தான் போதை எனபது இல்லை. ‘கள்’ என்று சொன்னாலே பலர் மயங்கி விடுகிறார்கள். “நீ” என்பதற்க்கு பதில் நீங்’கள்’ என்று சொல்லிப்பாருங்கள். எல்லாம் அந்த ‘கள்’ செய்யும் வேலைதான்.

சினிமா: இப்போதைய சினிமாக்களை (கவனியுங்க!) பணம் பண்ணும் சாதனமாக ஆக்கிவிட்டார்கள். சினிமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை இந்த சினிமாக்காரர்கள் சொல்லாமே? ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? நான் ஆயிரம் சொற்பொழிவு நடத்துவதும் சரி, ஒரு நல்ல சினிமா வருவதும் சரி. பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் சமுதாயத்தையும் உருப்படவிடுங்கள்.

பதவி அலைச்சல்: ராமபிரான், ஆட்சியே வேண்டாம் என்று, பெரிய பதவியை துறந்து தந்தை சொல்லைக் கேட்டு காட்டுக்கு போனார். ஆனால், இப்போது சிலர் பிள்ளையார் கோவில் அறங்காவலர் பதவிக்கே அலையாய் அலைகிறார்கள்.

சாமியார் பட்டம்: கலெக்டரிடம் சினேகம் பண்ணுபவனுக்கு மக்கள் மதிப்பு கொடுக்கிறார்கள் அதுபோல, கடவுளிடம் பழகுபவனுக்கும் மக்கள் மதிப்பு கொடுக்கிறார்கள்.ஆனால், தினமும் விபுதி கொடுப்பவனையே சாமியார் ஆக்கி விடுகிறார்களே!.

நாத்திகவாதிகள் வாழ்க: இறைவனை எதிர்த்து பேசி வருவதால், இறைவனின் புகழ் மேலும் வளரும். ஆதலால், இறைவனை எதிர்ப்பவரும் இறைத்தொண்டுதான் செய்கின்றனர். குடையை விரித்து யாரும் சூரியனை மறைத்து விட முடியாது.

கோவில் எதற்கு? : இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், கோவிலில் உள்ள திரு உருவத்தில் விளங்கித் தோன்றுகின்றான். பசுவின் உடம்பில் பாலைப் பெற முயற்சி செய்கின்ற ஒருவன், பசுவின் கொம்பையோ, காதுகளையோ,வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பசுவின் பால் பெற விரும்புவோன், பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப் பெற விரும்புவோன், கோவில் சென்று இறைவன் திருமுன் நின்று வழிப்பட்டு திருவருளைப் பெறுதல் வேண்டும்.

வாரியாரின் அர்த்தமிக்க, அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய வார்த்தை விளையாட்டுகள்தான் மக்களிடம் ஆன்மிகம் எளிதாக சென்றடைய காரணம் என்பது உங்களுக்கு விளங்குகிறது அல்லவா?

தன் குரலை வைத்து ‘மிமிக்ரி” செய்பவர்களை (செய்துவருபவர்களை) பற்றி வாரியார் பின்வருமாறு கூறி இருக்கிறார்.

“என் குரலை நிறைய பேர் “மிமிக்ரி” கிண்டல் பண்ணுகிறார்களே. அதை நான் கிண்டல் என்று சொல்லமாட்டேன். கஷ்டப்பட்டு பயிற்சி செய்து என்னைப் போலவே பேசுகின்றார்களே. அதை எண்ணி ஆச்சரியப்படுவேன். பேசினால் பேசட்டுமே. “முருகா,முருகா” என்று அவர்கள் சொல்லித்தானே ஆக வேண்டும். அது அவர்களுக்குப் புண்ணியம் அல்லவா?

– See more at: http://educationalservice.net/

Source::::Input from a friend of mine

Natarajan