Message for the Day….” What is the Path to Freedom and Happiness…”

Some people hold the opinion that being employed is bondage, while sitting at home without any specific work is freedom! This is a sign of lack of intelligence. When employed in a job, one obeys their superiors. In the same way, being at home, can anyone escape the demands and compulsions of the family? Even when you are amidst your friends, can you avoid the necessity of acting according to their fancy? Hence, understand that all life is a prison; the differences are merely in the types of imprisonment! You will feel it this way as long as the attitude of identifying yourself with the body is there. On the other hand, the liberated ones will trample down their egoism, discriminate sensual pleasure from real happiness, and perform their duties. They will use duty (Karma) as an aid to help in the destruction of the ego. This is the path to freedom and happiness.

Sathya Sai Baba

Message for the Day…” All of us Will have to Leave this world Empty-Handed …”

Sathya Sai Baba

Though Alexander the Great conquered most parts of the world, he could not take with him even an iota of the property he won. He left the world with empty hands. To demonstrate this truth to the world, he instructed his ministers to take his dead body in a procession through the streets of his capital keeping both his hands in a raised position pointing the sky. When the ministers asked him the reason for this strange request, Emperor Alexander replied, “I conquered several countries, accumulated great wealth and controlled a vast army; yet, I am going back with empty hands – demonstrate this truth to everyone.” You may spend a lot of time struggling to acquire a lot of wealth. Yet, not even a handful of earth will come along when you leave the body. Hence at least now accept the fact that you are Divine, and strive to appreciate the same Divinity in everyone around you.

Message for the Day…” Cultivate Faith in Righteousness as the core of Your Personality…”

No other person can bind you; you do it yourself! You choose to become bound, straying away from the righteous (dharmic) path. If faith in God’s omnipresence is deep-rooted, you would become aware that He is within you and you will choose to be free. For that faith to grow, you must grasp the Divine (Atmic) bliss firmly. The reality of the Divinity (Atma) is the bedrock, that is the incontrovertible wisdom (nishchitha-jnana). Without that foundation, you will easily become the target of doubt, despair, and delusion. Therefore, first endeavour to be free. That is to say, as a prerequisite to successful living, cultivate faith in righteousness (dharma) as the core of your personality, and then learn and practise the discipline necessary to reach down to that core. When you acquire that qualification, you can engage fully in worldly activities, following the prescribed right conduct (dharma). Thus you transform yourself to be a moral individual (dharma-purusha).

Sathya Sai Baba

இதோ ஒரு அரிய சந்தர்ப்பம்…..

செப்., 28 மகாளய பட்சம் ஆரம்பம்

ஜென்மங்களிலேயே உயர்ந்தது மனித ஜென்மம்; மனித பிறவியில் மட்டுமே நாம் பிறவிப் பிணியில் இருந்து மீள முடியும். ஆனால், பிறந்தால் இறந்தாக வேண்டும், நோயில் சிக்கியாக வேண்டும், கஷ்டங்களை அனுபவித்தே தீர வேண்டும். இதில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லை.
ஒரு சிலர், பணக்காரர்களைப் பார்த்து, அவருக்குள்ள வசதி நமக்கு இல்லையே என, ஏங்குவர். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பணக்காரர்கள் காபியில் சர்க்கரை சேர்த்து குடிக்காதவர்களாக இருப்பர். ஏங்குகிற நீங்களோ, காபி போதாதென்று கேசரியையும் சேர்த்து விழுங்கிக் கொண்டிருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள்… யார் கொடுத்து வைத்தவர்!
மானிடப் பிறவி உயர்ந்தது தான்; அதை தாழ்த்துவது அவரவர் எண்ணங்களும், செயல்களுமே! கோடி ரூபாய் சம்பாதித்தாலும், சாப்பிடப் போவது இரண்டு இட்லி தான் என்ற சிந்தனை மட்டும் இருந்து விடுமானால், நம் பிறவி, அர்த்தமுள்ளதாகி விடும்.
பல பிறவிகளின் புண்ணியத்தால் நமக்கு கிடைத்துள்ளதே மானிடப் பிறவி. இந்தப் பிறவியை நமக்கு வழங்கியவர்கள் நம் பெற்றோர். அந்த பெற்றோரை வழங்கியது அவர்களது பெற்றோர். இப்படியே நம் முந்தைய தலைமுறை விரிவடைந்து கொண்டே செல்கிறது. அந்த தலைமுறையை வணங்கவும், அவர்களது வாழ்த்தைப் பெறவும், ஆண்டில், 15 நாட்கள் மகாளய பட்சம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
‘மகாளயம்’ என்றால், கூட்டமாக வருதல்; புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று நம் முன்னோர், கூட்டமாக நம்மை காண வருவதாக ஐதீகம். அன்று நாம், அவர்களை வரவேற்று தர்ப்பணம் செய்து, அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படைத்து வணங்க வேண்டும். அமாவாசைக்கு முந்தைய, 15 நாட்கள், தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இது ஒன்றும் பெரிய விஷயமல்ல; அவர்கள் பெயரைச் சொல்லி சிறிது எள்ளும், தண்ணீரும் நீர் நிலைகளிலோ, கால் படாத இடங்களிலோ விட்டாலே போதும். புரோகிதர் மூலமாகச் செய்தால் மிகவும் நல்லது. வசதிப்படுவோர் கங்கை, காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களுக்கு ஒரு நாளாவது சென்று தர்ப்பணம் செய்து வரலாம். பெற்றோர் இறந்த திதியன்று புண்ணியத் தீர்த்தங்களுக்கு செல்வது மிகவும் நல்லது. இந்நாட்களில் பசுவுக்கு கீரை, பழம் கொடுக்க வேண்டும். சக்திக்கேற்ப தான தர்மம் செய்யலாம்.
நமக்காக, பெற்றோரும், தாத்தா, பாட்டிகளும் எத்தனையோ தியாகங்களை செய்துள்ளனர். அவர்கள் ஆத்மசாந்தி பெறவும், நம் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கவும், இந்த வழிபாட்டை செய்து வரலாம்.
இந்த ஆண்டு செப்.,28 துவங்கி, அக்.,12 வரை, மகாளய காலம். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டு விடாதீர்கள்!

Source….தி.செல்லப்பா   in http://www.dinamalar.com

natarajan

Message for the Day…” Be Aware that as long as You are attached to Your body,Miseries will continue to haunt You…”

Sathya Sai Baba

When common people say, ‘Idi naa dehamu’ (this is my body), scholars would interpret the expression ‘naa dehamu’ and say, it connotes ‘I am not the body’ (as ‘naa’ means ‘not’). Extending the same logic, it is possible for you to maintain a state of perfect equanimity unaffected by pain and pleasure at all times by affirming, ‘these sorrows and difficulties as well as happiness and pleasure are not mine. I am beyond these dualities.’ When you say, ‘It is my body’ doesn’t it automatically imply, ‘I’ is different from ‘the body’? When you are separate from your body, why should you feel the pain out of it? The truth is, you are unable to overcome the delusion of body attachment and are also unable to bear the pain caused to the body, as you remain at the level of a human being. Be aware that as long as you are attached to the body, sorrows, difficulties and pain will haunt you.

 

” நான் இருக்கேன் ……..”


திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக் குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்றுகொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார். ஓடோடி வந்து பவ்யமாக குனிந்தபடி நின்றார் அவர். உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா?” என்றார். உத்தரவு” என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே, பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும்” என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.

மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் சும்மா இருக்க முடியுமா? வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை விளக்கும் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றில் குங்குமத்தின் பெருமைகளைக் குறித்த தகவல்களைச் சேகரித்தார். குங்குமம் தயாரிப்பு தொடர்பான புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்தார். பின் தயாரிப்பைத் துவக்கினார். நல்ல தரமான குண்டு மஞ்சள், எலுமிச்சை, படிகாரம், வெண்காரம், நல்லெண்ணெய் ஆகியவைதான் குங்குமத் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள். பழந்தயாரிப்புப்படி கைகளாலேயே தயாரிக்கப்பட்ட குங்குமத்தைச் செய்து முடித்ததும் வேங்கட சுப்பிரமணியத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தயாரித்த குங்குமத்தை ஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு மகாபெரியவரைப் பார்க்க கும்பகோணம் விரைந்தார். குங்குமத்தை உள்ளங்கையில் இட்டுப் பார்த்தவுடன் மகாபெரியவரின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. இந்தப் பணியை நீ தொடர வேண்டும்” என்று சைகையிலேயே ஆணையிட்டார். வேங்கட சுப்பிர மணியம் ஸ்ரீவித்யா உபாசகர். அம்பாள் குங்குமப் பிரியை ஆயிற்றே! ஒரு அர்ப்பணிப்போடு குங்குமத் தயாரிப்பில் இறங்கிவிட்டார் வேங்கட சுப்பிரமணியம்.

ஸ குங்கும விலேபனாம் அளிக சும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸ ஸரஸாப பாசாங்குசாம்
அசேஷஜ நமோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸூம பாசுராம் ஜப விதௌ ஸ்மரேத் அம்பிகாம்என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது குங்குமப் பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியை அலங்கரிக்கும் கஸ்தூரி திலகம் இட்டவளும், புன்னகைக்கும் கண்கள் உள்ளவளும், வில், அம்பு, பாசம், அங்குசம் ஏந்தியவளும், எல்லா மக்களையும் தன்பால் ஈர்ப்பவளும், செந்நிற மாலை, ஆடைகள் அணிந்து, செம்பருத்திப் பூ போல ஒளிமயமாக இருப்பவளுமான அம்பிகையை ஜபகாலத்தில் நினைவு கொள்கிறேன் என்பதுதான் இதன் பொருள். அம்பாள் உமைக்கு பல அம்சங்கள். திரிபுரசுந்தரி, காமாட்சி, அபிராமி, பார்வதி, லலிதா என்று பல திருநாமங்கள். ஒவ்வொரு அம்சத்திலும், பல பாக்கியங்களை பக்தர்களுக்கு அள்ளித் தருகிறாள் அம்பாள். எப்போதும் சுமங்கலியாகவே இருப்பவள் லலிதா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுமங்கலியான பெண்ணை பளிச்சென்று வெளிப்படுத்துவது, அவளது நெற்றியில் அலங்கரிக்கும் குங்குமம்தான். ஒரு பெண் தன் திருமணத்தின் போதுதான் குங்குமம் வைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறாள். நெற்றியிலுள்ள குங்குமம், ஒரு பெண்ணின் சுமங்கலித் தன்மையை மட்டும் சொல்வதல்ல. அவளுக்குள் பொதிந்திருக்கும் ஞானத்தையும், ஆற்றலையும் குறியீடாக உணர்த்தும் தன்மையும் கொண்டது. சௌந்தர்ய லஹரியும் லலிதா சகஸ்ரநாமமும் குங்குமத்தின் பெருமைகளை எடுத்து வைக்கின்றன.

சுமார் 5,000 வருடங்களாக, குங்குமம் வைத்துக் கொள்வது என்பது நமது சம்பிரதாயமாக இருந்து வருகிறது என்கிறது ஒரு புராணத் தகவல். இரண்டு இமைகளுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நமது உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏழு சக்கரங்கள் உள்ளன. நமது செயல்கள், சாதனைகள், சாகசங்கள் என்று அனைத்துக்குமே காரணமாக அமைந்தவை இந்தச் சக்கரங்கள். இந்தச் சக்கரங்களின் செயல்பாட்டைத் தூண்டி விடுவதில், முதுகுத் தண்டுக்கு அடிப்பகுதியில் பொக்கிஷமாக இருக்கும் குண்டலினி சக்திக்கு பெரும்பங்கு உண்டு. யோகம், தியானம் போன்றவற்றின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்த ஏழு சக்கரங்களைத் தூண்டி விடலாம். இந்த ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை, நெற்றிப்பொட்டில், புருவங்களின் மத்தியில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்பட காரணமாக அமைவது இந்த ஆக்ஞா சக்கரம் தான். அதைக் குறித்துத்தான் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்கிறோம்.

Read more: http://periva.proboards.com/thread/6421/#ixzz3mmmTHWe0

Source…www.periva.proboards.com

natarajan

” ஓ ….சுவாமிநாதா …நீயா ….எனக்கு என்ன உத்தரவு சொல்லு …”

ஒரு முறை மகா சுவாமிகள் தென் தமிழ் நாட்டில்

யாத்திரை செய்யும்போது இரவு நேரத்தில் அடுத்த
1234201_315112848661397_4724600860700186658_n.jpg
கிராமத்துக்குக் கால்நடைப் பயணமாகப் போக நேர்ந்தது.

அங்கே இரு பிரிவினரிடையே ஜாதிச்சண்டை நடந்து

கொண்டிருந்தது. அதனால் பக்தர்கள் போவதற்குப்

பயப்பட்டார்கள்.

“ஒன்றும் நடக்காது.போகலாம் வாருங்கள்” என்று

கிளம்பி விட்டார் சுவாமிகள். சீடர்கள் பயத்தினால்

நடுங்கியபடி தொடர்ந்து போனார்கள்.

அடுத்த கிராமத்துக்குள் நுழையும் இடத்தில் ஒரு

கூட்டம் அரிவாள்,குண்டாந்தடியுடன் அவர்களைத்

தாக்குவதற்காகக் காத்துக்கொண்டிருந்தது.

அந்தக் கூட்டத்தின் தலைவன் அவர்களை

அமர்த்திவிட்டு மகா சுவாமிகளை நோக்கி வந்தான்.

இரண்டு நிமிடங்கள் ஒரே அமைதி. யாருக்கும்

பயத்தால் வாய் திறந்து பேசக்கூடத் தைரியம்

வரவில்லை. மகா சுவாமிகள் ஒரு புன்னகையுடன்

அவனைப் பார்த்தார்.

“ஓ! சுவாமிநாதா! நீயா? உன் உத்தரவு எதுவானாலும்

நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்” என்று

அங்கேயே கீழே விழுந்து நமஸ்காரம் செய்தான் அவன்.

மற்ற எல்லோருக்கும் ஆச்சரியம்! கூட வந்த கலகக்

கூட்டம் குண்டாந்தடி,அரிவாள் எல்லாவற்றையும்

கீழே போட்டுவிட்டு அந்தந்த இடத்திலேயே

நமஸ்காரம் செய்து வணங்கி நின்றது.

மற்றவர்களிடம் மகா சுவாமிகள் அமைதியாக

“நானும் அவனும் பள்ளிக் கூடத்தில் ஒன்றாகப்

படித்தோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். காரணம் அந்தத்

தலைவன் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்தவன்.

அவர்களுடைய இமாமை சந்திக்க விரும்பினார்

மகா பெரியவர்கள்.அவர் வந்ததும் குர் ஆனிலிருந்து

சில வரிகளை எடுத்துச் சொல்லி அன்பையும்

சகோதரத்துவத்தையும் இஸ்லாமிய மதம் எவ்வளவு

முக்கியமாகக் கருதுகிறது என்று விளக்கினார்.

அனைவரும் மகிழ்ந்து போனார்கள்.

அன்று கிராமத்தில் சுவாமிகளை ஊர்வலமாக

அழைத்துக் கொண்டு போனார்கள் கிராம மக்கள்.

அவர்களை அடுத்த கிராமத்துக்கு அழைத்துச் சென்று

விட்டு விட்டு, விடை பெற்றுத் திரும்பினார்கள்.

Source…….www.periva.proboards.com

Natarajan

 

 

Message for the Day….” Devotion alone is the means to Realisation…”

Sathya Sai Baba

There is nothing greater in the world than Bhakti (devotion). Once sage Narada demonstrated to his disciples how devotion is greater than anything in the world, including the Divine. While the Divine was greater than the cosmos, which the Lord as Vamana could measure in two steps, the Lord Himself is held in his heart by the devotion of the devotee. Devotion bestows the highest benefits. Devotion alone is the means to Realisation. Devotion alone confers supreme peace. Devotion is the panacea for all ills. Divine love encompasses all sacred acts. To achieve oneness with the Divine, one will have to be prepared to sacrifice everything. It is not easy for anyone to recognise the truth about the Divine. His leelas (miraculous sportive activities) are beyond the grasp of the mind and speech. There is no Veda or Sastra superior to devotion.

 

” சங்கத்தமிழ் மூன்றும் ஆங்கிலமும் தா …” !!!

பிள்ளையார் சுழி!

விநாயகர் சதுர்த்தி-செப்டம்பர் 17-09-2015

மகா சுவாமிகளுடன்…

பரணீதரன்

1922458_1501314900155054_79277391464543733_n.jpg
காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி

யத்னாது கரோமி யதி சாருதரம் கரோமி

பூபால மௌளி மணிமண்டித பாத பீட

ஹே சாகஸாங்கா கவயாமி வயாமி யாமி..!

(பெரியவா சொன்ன கவிதை)

தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் ஒரு மாலை நேரம். ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகளுக்கு வந்தனம் செய்துவிட்டு எழுந்து நின்று, கருணைமுகில் அருள்மழை பொழியக் காத்திருந்தேன்.

”ரமண மகரிஷியைப் பத்தி உலகம் பூராவும் தெரிஞ்சுண்டது. பால் பிரண்டன் அவரைப் பத்தி விவரமா எழுதுனதுக்கு அப்புறம்தான்… தெரியுமோ?”

”மகரிஷியைத் தரிசனம் பண்ணிட்டுத்தான் கப்பல் ஏறணும்னு பால் பிராண்டனைக் கட்டாயப்படுத்தினது பெரியவாதானே…”

”அது இருக்கட்டும்… என்ன சொல்ல வந்தேன்னா, பால் பிரண்டன் ரமணரைப் பார்த்துப் பேசின அனுபவங்களை எல்லாம் இங்கிலீஷ்லே எழுதுனதுக்கு அப்புறம்தானே உலகம் தெரிஞ்சுண்டது. அதுக்கப்புறம்தானே அங்கேயிருந்து நிறையப் பேர் ரமணாச்ரமத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. அவாளும் நிறைய எழுதினா. அதுமாதிரி நம்ம சேஷாத்ரி சுவாமிகளைப் பத்தியும் இங்கிலீஷிலே எழுதினா அங்கே இருக்கிறவாளெல்லாம்கூட தெரிஞ்சுப்பாளேனு எனக்குத் தோண்றது”.

”பெரியவா அனுக்கிரகம் பண்ணினா நான் முயற்சி பண்றேனே”.

”நீ இங்கிலீஷ் என்ன படிச்சிருக்கே?”

”அதிகமா ஒண்ணும் படிச்சதில்லே. ஆனா, இங்கிலீஷ் மேலே எனக்கு ரொம்ப ஆசை. காலேஜ்லே இருந்தப்ப நிறையப் படிப்பேன்..”

”காலேஜ்லே என்ன படிச்சே?”

”பி.காம்”

”மெயின் சப்ஜெக்ட் இல்லை. Non-detail ஸ்டடிதான். ஆனா, லைப்ரரிலேருந்து நிறையப் புத்தகங்கள் எடுத்துண்டு போய்ப் படிப்பேன். அப்போலேருந்தே இங்கிலீஷ்ல எழுதணும்… பேசணும்னு எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு!”

சற்று நேரம் எதையோ யோசிப்பதுபோல் மகா சுவாமிகள் மௌனமாயிருந்தார். நான் காத்திருந்தேன்.

பெரியவா பேசத் தொடங்கினார்: ”ஒரு கதை சொல்றேன். கேளு. போஜராஜானு கேள்விpபட்டிருக்கியோ?”

”கேள்விப்பட்டிருக்கேன்”

”அவனோட ராஜசபையில் பெரிய பெரிய கவிகள்லாம் இருந்தா. அந்த ராஜ்யத்தில் கவிதா ரசனை இல்லாதவாளே கிடையாதுனு சொல்லுவா… ஒரு நாள் ராஜா, மந்திரியைக் கூப்பிட்டு, ‘நம்ம ராஜ்யத்தில் கவிதை பண்ணத் தெரியாதவன் யாராவது இருக்காளானு விசாரிச்சுப்பாரு.. அப்படி ஒருத்தன் இருந்தான்னா அவனை அழைச்சிண்டு வா!’னு சொன்னார். ‘சரி’னு மந்திரியும் ஊர் ஊரா போய்த் தேடிப் பார்த்துட்டு, ‘கவிதை பாடத் தெரியாதவனே இல்லை. ஒரே ஒரு ஏழை நெசவாளி மட்டும், ‘கவிதை எழுத எனக்குத் தெரியாது. ஆனால் எழுதணுங்கற ஆசை இருக்கு!’னு சொன்னான். ‘இதுவரைக்கும் நீ கவிதை ஒண்ணும் எழுதினது இல்லியே?’னு நிச்சயம் பண்ணிண்டு இதோ அழைச்சுண்டு வந்திருக்கேன்’னான்.

போஜராஜா நெசவாளியைப் பார்த்து, ‘நம்ம ராஜ்யத்தில் எல்லாரும் கவி பாடுவாளே.. உனக்குப் பாடத் தெரியாதுன்னு சொன்னியாமே?’ என்று கேட்டார். ஒண்ணும் தெரியாதவன்கூட போஜராஜாவைப் பார்த்தான்னா அவன் மனசுலே கவி பொங்குமாம். ராஜா இப்படிக் கேட்டதும் அந்த நெசவாளி, ‘கவிதை பண்றேன். ஆனா அர்த்தத்தோட அழகாப் பாடத் தெரியாது!’னு முதல் வரிலே சொன்னான். ரெண்டாவது அடியிலே, ‘கொஞ்சம் முயற்சி பண்ணினா நன்னாவே பாடிடுவேன்’னு சொல்லிட்டு, மூணாவது அடிலே மளமளனு அமர்க்களமா ராஜாவைப் புகழ ஆரம்பிச்சுட்டான். என்ன சொன்னான் தெரியுமா, ‘மத்த ராஜாக்களெல்லாம் உன் பாதங்கள்ல விழுந்து வணங்கறப்போ, அவர் கிரீடங்கள்ல இருக்கிற ரத்தினங்களோட சிவப்பு நிறம், உன் பாதங்கள்ல பட்டு அந்தப் பீடமே சிவந்து போற மாதிரி இருக்கு’னு அழகா வர்ணிச்சுட்டான்!

நாலாவது அடிலே, ‘நான் கவி பண்றேன், நெசவு செய்யறேன், போயிட்டு வரேன்’னு கவிதை நயத்தோடு சொன்னபடியே புறப்பட்டுப் போயிட்டான்” என்று சொன்ன பெரியவா, ”நீயும் போயிட்டு வா!” என்று எனக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

பெரியவா சொன்ன கவிதை இதுதான்…

காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி

யத்னாது கரோமி யதி சாருதரம் கரோமி

பூபால மௌளி மணிமண்டித பாத பீட

ஹே சாகஸாங்கா கவயாமி வயாமி யாமி..!

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு குரு எனக்கு ஆசி வழங்கிவிட்டார். குருவருள் பரிணமிக்க, தெய்வத்துணை வேண்டுமல்லவா? அடுத்து விநாயகரிடம் விண்ணப்பித்துக் கொண்டேன்.

அதன் பின்னணியைக் கூற வேண்டுமல்லவா? சின்ன வயதிலிருந்தே என்னுள் ஒரு நெருடல், ‘ஒளவைப் பாட்டி, விநாயகரிடம், பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன். நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று கேட்டது என்ன கணக்கு? நான்கைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு மூன்றைக் கேட்பானேன்? நான்குக்கு ஈடாக நான்கைக் கேட்டிருக்கலாமே?’ என்று என் சின்ன புத்திக்குத் தோன்றியது.

அது போகட்டும்… வயது ஆக ஆக என்னுள் வேறொரு சந்தேகம் முளைக்கத் தொடங்கியது. ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்றால் என்ன? இயல், இசை, நாடகத் தமிழா அல்லது மூன்று தமிழ்ச் சங்கங்கள் வளர்த்த தமிழா?

இது ஒருபுறம் இருக்கட்டும், ”நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட ‘பழைய நெருடல் கணக்குக்கே வருகிறேன். ஆங்கிலத்தில் எழுத காஞ்சி மகானிடம் ஆசி பெற்ற பிறகும் நூல் எழுத என் ஆங்கில அறிவு போதும் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை. தும்பிக்கையானிடம் சரணடைந்தேன். ஒளவைப் பாட்டியைப் போலவே தா’ எனக் கேட்டுவிட முடிவு செய்தேன். கூடவே, அதை எப்படிக் கேட்பது என்ற பிரச்னை எழுந்தது.

ஒளவைப் பாட்டி நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட கணக்கு சிறு வயதிலிருந்தே என் மனதை உறுத்தி வந்ததால் நான்குக்கு நான்கையே கேட்டு கணக்கைச் சீர் செய்துவிடுவது என்று நான் முடிவு செய்தேன். எனவே,

‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலம் செய்

துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் ஆங்கிலமும் தா’

என்று செய்யுளை மாற்றியமைத்துக் கொண்டேன் (ஒளவைப் பாட்டி மன்னிப்பாராக).

இந்த அத்துமீறலுக்கு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆண்டவனைப் பொறுத்தவரை மொழித் தகராறு இருக்க முடியாது; அது நமக்குள்தான். உண்மையான பக்தன். எந்த மொழியில் வேண்டிக் கொண்டாலும் அவன் உள்ளம் பகவானுக்குப் புரியும். அளிக்க வேண்டியதை அளித்து ஆட்கொள்வார்.

ஒரு நாள் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு தைரியமாக எழுதத் தொடங்கினேன். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளைப் பற்றி எழுதுவதற்கு ஜகத்குருவிடம் ஆசி கோரினேன். அதற்கான ஆங்கில அறிவை அருளுமாறு ஆனைமுகத்தானிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்.

ஒரு மகானைப் பற்றி எழுதத் தொடங்கினேன். ஆறுமுகனுக்கு மூத்தவர் ஆறாக அருளிவிட்டார். பத்தாண்டுகளுக்கு முன் ‘Six Mystics of India’ என்ற எனது முதல் ஆங்கில நூல் வெளிவந்தது

Source….Expeience of Bharanidharan  in http://www.periva.proboards.com

Natarajan

Message for the Day…” Place Your Faith in God and do Your duty to the best of your ability…”

Every being is an embodiment of the Divine. True human relationship can grow only when this truth is recognised. The first stage is where you recognise, ‘I am in the Light.’ Next is when you know, ‘The Light is in me,’ and finally you realise, ‘I am the Light.’ ‘I’ represents love and light which connotes Supreme Wisdom (Jnana). When love and light unite, there is Realisation. The path of devotion is easier than the path of wisdom. Love should come from within, not forced from outside. Develop spontaneous love. The attitude of petitioning to God for favours should be given up. Love of God should not be based on quid pro quo, seeking favours in exchange for prayers and offerings to God. Place your faith in God and do your duty to the best of your ability. Saturate yourself with love and share it with all.

Sathya Sai Baba