Message For the Day…” Have You Ever Calculated What You Have Given back to the Society …” ?

Those, who are trying to build the human community on a foundation of wealth (dhana), are building on sand; those who seek to build it on the rock of righteousness (dharma) are the wise. Every person consumes specific quantities of food and many even calculate the calories consumed and burnt. Just think for a moment: Have you ever calculated what you have given back to the society that helps you live and enjoy in the world? You must transform the food into service, either to serve your best interests or for the well-being of the society. Mere feeding and care of the body is profitless, for the body is just a container. When the spark of Divinity leaves the body, it becomes a corpse. No one will even keep the corpse for more than a few hours. People will avoid the sight and smell of a dead body; it is disgusting. Never be your own enemy nor be a burden on anyone.

Sathya Sai Baba

” மஹா கணபதிக்கு நன்னா கண் திறந்தாச்சு …”

 

 

 

 

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்….. தஞ்சாவூர் ,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார். ஸ்வாமிகள் . வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு அருளாசி வழங்கினார். பழம், கல்கண்டு ஆகியவற்றைப் பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.

மதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி “பூர்ணகும்ப” மரியாதையுடன் ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும் ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம். சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே அமர்ந்துகொண்டார் . அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்தார் . பிறகு, “பெரியவங்ககிட்ட ஒண்ணு பிரார்த்திக்கிறோம் . நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து, பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம். சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்….கருண பண்ணணும்!” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

குதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், “கோயில் எங்கே இருக்கு?” என வினவினார்.

பஞ்சாயத்துத் தலைவர், “இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு.வந்து அருள் பண்ணணும்!” என்றார்.

ஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார். மேளதாள -பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள் பிரவேசித்தார் . கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று
இருந்தது . வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம், “கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆயிடுத்தோ?” என்று கேட்டார்.

” இன்னும் ஆகலீங்க சாமி” என்றார் தலைவர்.

” அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே…ஏன் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தலே?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.

பஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.; “எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு வர்றன்னிக்கு , ‘அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்’னு மதுரையைச் சேர்ந்த சில பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க! அதனாலதான் காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்!”

ஆச்சார்யாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். இரண்டு நிமிஷம் கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.

” அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே! கணபதி கண்ணத் திறந்து நன்னா பாத்துண்ருக்காரே…இனிமே கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள் பார்த்து பண்ணிடுங்கோ.”

உடனே பஞ்சாயத்துத் தலைவர், “இல்லீங்க சாமி! கண் தொறக்கிற சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி! நீங்க இப்படி சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே..” என்று குழம்பினார்.

ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, “இது நானா சொல்லலே! கணபதி கண்ணைத் திறந்து நன்னா “ஸ்பஷ்டமா” பார்த்துண்ருக்கார். சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ! காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே” என்று கூறினார் . குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியோடு காத்திருந்தனர்.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை வரவழைத்தனர் .அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம் தெரிவிக்கப்பட்டது .

சிற்பியும் அடித்துச் சொன்னார்; “இல்லீங்க ஸ்வாமி..இன்னும் விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச் செதுக்கின நான்தானே தொறக்கணும்..இன்னும் அது ஆவுலீங்க..” மூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து கை கட்டி நின்றார் சிற்பி.

மீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள் “மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு! அவர் சந்தோஷமா பாத்துண்டிருக்கார் . இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே. சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..
க்ஷேமம் உண்டாகும்” என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப் புறப்பட்டுவிட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது. ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பினர்,அத்தனை பேரும்.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை’ கூடியது . ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார். “ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா விஷயங்களும் தெரிஞ்சுடும்.இருந்தாலும் எங்கையால் நான் இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு தெரியலே .நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பா கவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க…. இப்ப என்ன பண்றது?”

அங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன் ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்.

அவனைப் பார்த்த தலைவர், “தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே? என்ன விஷயம்?” என்று கேட்டார்.

உடனே அந்தப் பையன் “தலைவரே! கோயில் விநாயகர் சிலை பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியும்..சொல்லலாங்களா?” என்று கேட்டான் பவ்யமாக.

” ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!” என்று மிக ஆர்வம் காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருந்தது.

பையன் பேச ஆரம்பித்தான்; “ஐயா தலைவரே! எனக்கு தெரிஞ்ச உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி [ஆச்சார்யாள்] ‘புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு’னு சொல்லிட்டுப் போனது மெய்தாங்க! எப்படீன்னா ஒரு பத்து நாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில் நேரமுங்க.இதோ ஒக்காந்துருக்காரே ..புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா.. இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலை பண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ண தொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும்,சுத்தியையும் எடுத்துக்கிட்டு ,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.

” இதோ பாருங்கடா! எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத் தொறப்பாருன் ‘ன்னு சொல்லிகிட்டே,’புள்ளையாரே,கண்ணத்தொற… புள்ளையாரே ,கண்ணத் தொற!’னு அவனும் சொல்லி, எங்களையும் ஒரக்க சொல்லச் சொல்லி, “டொக்கு..டொக்குனு” உளிய புள்ளயாரின் ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்..”புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு “னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம்.இந்த விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு….எங்களை மன்னிச்சுருங்க.”

பிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர் கண்களில் நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில் ஆழ்ந்தது . சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச் சிறுவனை அழைத்து விசாரித்தது. விநாயகருக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரை விழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார். மிக அழகாக “நேத்ரோன் மீலனம்” [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில் பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள். அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர்.
அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது; “புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமா தெரிஞ்சுண்டுட்டேளோல்லியோ ? போங்கோ….போய் சீக்கிரமா கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே க்ஷேமம் உண்டாகும்.”

சிரித்தபடியே கை தூக்கி ஆசிர்வதித்தது அந்த நடமாடும் தெய்வம்.

Source….www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4379/#ixzz3dteiSv2E

Message for the Day…” How to control Greed, Anger, and Similar Negative Qualities …” ?

Look at the crane; it walks about pretty fast in water. But while walking, it cannot catch fish. When it wants to catch fish, the very same crane becomes quiet and stands motionless. So also, if you proceed with greed, anger, and similar negative qualities, you can never secure the fish of truth (sathya), righteousness (dharma), and peace (shanti). With any spiritual practice you observe, please add the practice of uninterrupted remembrance of the Lord’s precious name (namasmarana). Only then can you master the natural attributes of greed, anger, etc. All the scriptures (sastras) teach but this one key lesson! Since the Lord is the universal goal and this journey of life has Him as the destination for each and every one of you, keep Him constantly in your view and subdue the mind, which makes you wander from the path.

Sathya Sai Baba

Message For the Day…” Be Kind with all your Kin…”

Just as the body is the house you live in, the world is the body of God. An ant biting the little finger of your foot is able to draw your attention to the spot, and you react to the pain, making an effort to remove the tiny enemy. You must similarly feel the pain, misery, or joy or elation, wherever it is evinced in the entire land; you must make an effort to protect the land from the enemy, however remote may be the place where the enemy has presented himself. Be kind with all your kin. Expand your sympathies, serve others who stand in need to the extent of your skill and resources. Do not fritter away your talents in profitless channels. Respect for the parents, who started you in life and brought you into this world which has enabled you to gather such a vast and varied treasure of experience, is the first lesson that Dharma teaches. Gratitude is the spring which feeds that respect.

Sathya Sai Baba

Message For the Day…” Need of Spiritual Discipline for Experiencing the Divine Bliss..”

f a person is ill or if his mind is immersed in something else, the taste of food cannot be grasped. So also, if the heart is full of ignorance (tamas) or is wayward, no joy can be experienced even if one is engaged in remembrance of the Lord, devotional singing, recitation of the name, or meditation. The tongue will be sweet as long as there is sugar on it. Likewise, if the pillar of light called devotion continues to burn in the corridor of the heart, there will be no darkness. A bitter thing on the tongue makes the whole tongue bitter. Similarly when greed and anger enter the heart, the brightness disappears, darkness dominates the scene, and one becomes the target of countless griefs and losses. Therefore, those who aspire to attain the holy presence of the Lord must acquire certain habits, disciplines, and qualities. The usual ways of life won’t lead to God. They have to be somewhat modified by means of spiritual discipline.

Sathya Sai Baba

ரமலான் நோன்புத் தொடக்கம்: இறையாற்றல் பெருகும் ரமலான்…

மக்காவுக்கு வெளியே இருந்தது ‘நூர்’ மலை. அதில் ஒரு குகை. ‘ஹிரா’ என்பது அதன் பெயர். அதை நோக்கி நபிகள் சென்று கொண்டிருந்தார். கையில் சிறிது உணவு மற்றும் குடிநீர். பார்வையோ பாதையில் பதிந்திருக்க நினைவுகளோ மக்காவாசிகளைச் சுற்றி வட்டமிட்டவாறு இருந்தன. அந்த நினைப்பால் இதயம் கனத்து வலித்தது. தொலைவில் ‘கஅபா’ இறையில்லம் தெரிந்தது.

மனம் முள்ளில் சிக்கிக்கொண்ட மலராய் வலிக்க.. மனக்குரலோ உதடுகளை அசைத்து, “இறைவா! நேர்வழி காட்டுவாயாக!” என்று தவத்தில் லயித்திருந்தது. அது ரமலான் மாதத்தின் பின்னிரவு நேரம். இன்னும் சில மணித்துளிகளில் பொழுது புலர்ந்துவிடும்.

இந்நிலையில், சட்டென்று குகை இருட்டின் திரையைக் கிழித்துக் கொண்டு ஒளிக்கற்றைகளின் பிரகாசப் பேரொளி கண்களைக் கூசச் செய்தது. அந்தக் குகையின் ஏகாந்த அமைதியைக் கலைத்தவாறு ஒளிமலர்கள் கோடிகோடியாய்ப் பூத்தன. வானவர் தலைவர், ஜிப்ரீல் அங்கு தோன்றி அவரது திருவாயிலிருந்து “ஓதுவீராக!” என்ற திருக்குர்ஆனின் முதல் வசனம் இறைவனின் அருளாய் இறங்கிய நன்னாள் அது.

இதுவரை ஏற்படாத குகை அனுபவத்தில் பாதிக்கப்பட்ட நபிகள், பதறியவராய் வீட்டுக்குச் சென்றவர் தம் அன்பு மனைவியிடம், “போர்த்துங்கள்..! போர்த்துங்கள்!” என்கிறார்.

அதன்பின் சில நாள் வெறுமையில் கழிய, ஒரு நாள் மீண்டும் அதே போன்றதொரு சம்பவம். “போர்த்தி மூடி உறங்குபவரே! எழும்! எச்சரிக்கை செய்யும்; உம் இறைவனின் மேன்மையை!” என்று சமூகத்திற்கு அறவழி போதிக்கப் பணித்தது.

இப்படி நபிகளார் மூலமாய் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமே ரமலான்.

அம்மாதத்தைக் குறித்து திருக்குர்ஆன், “ரமலான் மாதம் எத்தகையது என்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், மேலும், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே, இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும்.”

நோன்பு ஏன் நோற்கப்படுகிறது?

நோன்பின் மூலமாக இறையச்சமுடையோராய் மாறிவிடக் கூடும் என்று இதற்கு திருக்குர்ஆன் விளக்கமளிக்கிறது.

முட்புதர்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் வழிப்போக்கன் தன்னுடலை ஒடுக்கிக்கொண்டு நடப்பதைப் போல, உலகில் ஒழுக்க வரம்புகளைப் பேணி எச்சரிக்கையுடன் வாழ்வதற்கான ஒரு மாதப் பயிற்சிக் காலம் அது.

ஆற்றல் குறைந்துபோன மின்கலத்தை மீண்டும் சக்தி ஏற்றம் செய்வதைப் போல இறையடியானுக்கு இறையச்சம் என்னும் ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளும் பயிற்சிக்கான களமே ரமலான்.

கடைசியில் நோன்பைக் கடைப்பிடித்து இறைக்கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடப்படும் விழாவே ரமலான் எனப்படும் ஈகைத்திருநாள்; ஷவ்வால் மாத முதல் பிறையைக் காணும் நன்னாள்.

அதிகாலையில் விழிப்பது, குறிப்பிட்ட நேரத்திற்குள் உண்டு முடிப்பது, அதிலிருந்து அந்தி சாயும்வரை 12-14 மணி நேரம் உண்ணாமல் பருகாமல், இல்லற இன்பங்களில் ஈடுபடாமல், தீமைகளிலிருந்து விலகி இறை நினைவு களிலேயே லயித்திருப்பது, இரவில் விழித்திருந்து ‘தராவீஹ்’ எனப்படும்.

சிறப்புத் தொழுகையில் திருக்குர்ஆனை முழுவதுமாய் அந்த மாதத்தில் ஓதித் தொழுவது, ரமலானின் கடைசி பத்து நாட்களில் ஓரிரவாக மறைந்திருக்கும், திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட ஆயிரம் மாதங்களைவிடச் சிறப்பான அந்த ஒற்றைப்படை இரவைத் தேடி அதிகமான இறைவணக்கங்களில் ஈடுபடுவது, தனக்கும், தனது குடும்பத்தார்க்கும், தன்னைச் சுற்றி வாழும் சமூக மக்களுக்கும், வசிக்கும் தாய் நாட்டுக்கும் நலன் வேண்டிப் பிரார்த்திப்பது, தவறுகளுக்கு மனம் வருந்து அழுது பாவமன்னிப்பு கேட்பது, தான தர்மங்களில் அதிகம் அதிகமாகச் செலவழிப்பது, நலிந்தவர் துயர் களைவது என்று தொடர்ச்சியான சுழல்வட்டப் பயிற்சிப் பாசறையே ரமலான்.

Source…..இக்வான் அமீர் in http://www.tamil.thehindu.com

Natarajan

Message for the Day…” Your Body is the Temple of God …”

Deho Devalaya – The body is the temple of the Lord. You are going about your daily journey with a temple where God is present in your innermost shrine. The body is not a mass of flesh and bone. It is a medium for sacred vibrations(mantras) which save you when they are meditated upon. The body is a sacred instrument earned after long ages of struggle. It is equipped with reason and emotion, and is capable of being used for deliverance from grief and evil. Honour it as such; keep it in good condition so that it might serve that high purpose. Maintain it even more carefully than the brick and mortar houses you live in, and always preserve the conviction that it is a divine instrument and nothing more. Use it for that pure purpose for which it has been designed and gifted to you. 

Sathya Sai Baba

 

” கிருஷ்ண பரமாத்மா கை விரலால் மலையைத் தூக்கிக் கனமழையைத் தடுத்து நிறுத்தினாரென்றால், நம்முடைய குரு பரமாத்வாவோ கால்விரலால் பூமியை அழுத்தி கனமழையை வருவித்து விட்டார்.!”

1941—ஆம் ஆண்டு சாதுர்மாஸ்யத்தின் போது ஸ்ரீசரணாள் நாகப்பட்டினத்தில் முகாமிட்டிருந்தார். அதனிடையில் ஆடிப்பூரம் வந்தது. வழக்கமாக அப்போது நீலாயதாக்ஷி அம்பாளுக்கு மிகவும் விமரிசையா உத்ஸவம் நடக்கும். ஆனால் அவ்வாண்டு? ஊர் மழை கண்டு எத்தனையோ காலமாகியிருந்த சமயம். சொல்லி முடியா தண்ணீர்ப் பஞ்சம். குளம், குட்டை, கிணறு யாவும் வறண்டு கிடந்தன.

எனவே உத்ஸவத்துக்கு யாத்ரீகர்கள் வரவேண்டாமென்றே அறிக்கை விடுவதற்குக் கோவிலதிகாரிகள் எண்ணினர். எனினும் அதற்கு முன் தங்கள் ஊரில் எழுந்தருளியுள்ள மஹானிடம் விண்ணப்பிக்க நினைத்து ஸ்ரீமட முகாமுக்கு ஒருநாள் காலை வேளையில் வந்தனர்.

அவர்கள் குறையிரந்ததை சோகம் என்றே கூறக்கூடிய ஆழுணர்ச்சியுடன் அருள்மூர்த்தி கேட்டுக் கொண்டார். வாய் திறந்து ஏதும் சொல்லவில்லை. சொல்ல அவசியமில்லாமல் அடியோடு முடி அவரது திருவுருவே இரக்கத்தின் உருக்கமாக இருந்தது. மௌனமாகவே பிரசாதம் ஸாதித்து அவர்களை அனுப்பிவிட்டு ஏகாந்தத்திற்குச் சென்று விட்டார்.

அரைமணி ஆனபின் ஆலயத் திருக்குளத்திற்குச் சென்றார். குளமாகவா அது இருந்தது? தள்ளித் தள்ளிச் சில இடங்களில் குளம்படி நீர் தேங்கியிருந்தது தவிர மற்ற இடமெல்லாம் காய்ந்த பூமியாகவோ, சேறாகவோதான் இருந்தது.

தேடித் தேடி ஒரு சிறிய குழியில் தமது சின்னஞ்சிறு ஸ்ரீ சரணங்களை ஸ்ரீசரணர் அழுத்த, சீரார் சேவடி அமிழும் அளவுக்கு—அந்த அளவுக்கே— நீர் சுரந்தது.

ஆச்சரியமாக, தனது அப்பாத நீரையே அவர் சிரஸில் புரோக்ஷித்துக்கொண்டார்!

முகாமுக்குத் திரும்பினார் முனிவர்.

அன்று பகலெல்லாம் கடும் வெயில் காய்ந்தது.

மறுநாள் மதியம் மறுபடி திருக்குளத்திற்குச் சென்றார்..

முன்தினம் கண்ட குளம்படித் தேங்கல்களும்கூட சேறாகவோ, காய்ந்த கட்டி மண்ணாகவேயோ சுவறிக்கிடந்தன!

இன்று திவ்ய ஹஸ்தத்தாலேயே அவற்றிலொரு சேற்றுத்திட்டைச் சுரண்டினார். ஒரு சில துளிகள் நீர் சுரந்தது.

வலப்பாதப் பெருவிரலை அதில் ஐயன் அமிழ்த்த அது போதும் போதாததாக முழுகியது..

திருவிரல் நீரில் நனைந்திருக்க, நனைந்த திருவுள்ளத்தோடு ஐயன் ஆகாயத்தை நிமிர்ந்து நோக்கினார்.

ஈரப்பசையே இல்லாத வெண்மேகங்கள் ஆங்காங்கு மூடியிருந்தாலும் பெரும்பாலும் தெள்ளிய ஒளி நீலமாகவே வானம் விளங்கியது.___கருணா சோக ( கருண ரஸம் என்பதே சோகந்தானே!) மேகம் மூடியுங்கூட, மூடவொண்ணா அகண்ட அமைதி வெளியாக!.

தண்டத்தை இறுகப் பிடித்தவாறே, வானை நோக்கி இரு கரங்களையும் தூக்கி அஞ்சலி செய்தார்.

அருளும் அமைதியும் இனம் பிரிக்க முடியாமல் செறிந்திருந்த மௌனத்துடன் மட முகாமுக்குத் திரும்பினார்.

பிற்பகல் நான்கு மணியளவில் ஈரமற்ற வெண்முகில்கள் குளிர் நீலமாக மாறத்தொடங்கின. வெப்பத்தைச் சமனம் செய்யும் சீதக் காற்றும் மெல்ல வீசலாயிற்று.

சிறிது பொழுதில் சிறு தூறல்கள் சிதறலாயின.

அப்புறம் அது அடர்ந்து அடர்ந்து அப்படியே அடைமழையாகப் பொழியலாயிற்று!

இரவெல்லாம் பொழிந்தது.

மறுனாள் முழுதும் பொழிந்தது.

அதற்கு மறுநாளும்,ஏன், நான்காம் நாளும்கூட விடாமல் பொழிந்தது.

நிமலனின் அருள் வேண்டுதல் வடிவில் தூண்ட, நீலாயதாக்ஷி நீலவானையே கண்களாகக்கொண்டு கருணா கடாக்ஷப் பெருக்காகப் பொழிந்து தீர்த்தாள்!

நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையே!

என்ற வாதவூரார் வாசகம் மெய்யாயிற்று.

குளம், குட்டை, கிணறு எல்லாம் முட்ட முட்ட நிரம்பின.
ஊர் குளிர, ஊரார் உளம் குளிர உத்ஸவமும் வழக்கத்தைவிட விமரிசையாக நடந்தேறியது. வாடிய நெஞ்சங்களுக்கு வான் கருணை வழங்கிய உத்ஸாகத் தளிர்ப்பே உத்ஸவ விமரிசை வழக்கத்தைவிடக் கூடியதற்குக் காரணம்.

இந்த நிகழ்ச்சிக் கோவையை உடனிருந்து கண்டு உவகையோடு வர்ணிக்கும் செல்லம்மாள்( 1993—ல் பரம பதம் எய்திய நீண்ட காலப் பரம பக்தை) சொல்வாள்: “ கோவில்காரர்கள் யாத்ரிகர் வர வேண்டாமென்று அறிவிப்பு செய்ய நினைத்தார்கள். பெரியவாளோ ஆகாசராஜனையும், வருணபகவானையும் கொண்டு அம்பாள் உத்ஸவக் கல்யாணத்திற்கு அத்தனை பேரும் வருவதற்கு அழைப்பு அனுப்பி விட்டார்! கிருஷ்ண பரமாத்மா கை விரலால் மலையைத் தூக்கிக் கனமழையைத் தடுத்து நிறுத்தினாரென்றால், நம்முடைய குரு பரமாத்வாவோ கால்விரலால் பூமியை அழுத்தி கனமழையை வருவித்து விட்டார்.!”

ஆயினும் கண்ணன் போலத் தெய்வீக மகிமையை வெளிக்காட்டாது ஸ்ரீராமனைப் போல் மானுடமாகவே எளிமை காட்டியவரன்றோ நம் பரம குருநாதன்? அதனால்தான் ஸ்ரீ சரண மஹிமையை மறைத்துக் கரங்களை எளிமையில் குவித்து வானை நோக்கி அஞ்சலி செய்தே மழை வருவித்ததாகக் காட்டினார்

Source….www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/4475/#ixzz3dWiMWcSI

 

Message for the Day…” Resolve This day to engage only in Virtuous Deeds, Good Thoughts,&Good Company…”

God is All-pervading (Sarvavyapi). He loves His devotees (Bhakta-Vatsala). Make your heart the Seat of the Lord. Soil which has veins of mica is valuable, but that which has veins of gold is even more precious. The soil is valued according to the preciousness of the metal in its fold. So too, hearts are evaluated by its contents. Keep God in your hearts; then they will become precious possessions. If God is implanted in the heart, you will see only God everywhere. For,Sarvam Brahmamayam (All is Divine) is a fact. Resolve this day to engage only in virtuous deeds, good thoughts and good company. Let your mind dwell on elevating thoughts. Do not waste a single moment of your waking time in vain boasting or idle gossip or demeaning recreations. While life persists, do good things, speak softly and sweetly, never injure or insult another, serve those in need and keep the image of God ever before the mind’s eye.

Sathya Sai Baba