” முருகன் திருவிளையாடல்…அருணகிரிநாதர்-வில்லிப்புத்தூரார் மோதல் ..!!!”

முருகன் புகழைக் கூறும் திருப்புகழ் முதலான நவமணி நூல்களை இய்ற்றியருளியவர் அருட்கவி அருணகிரிநாதர். ஒருமுறை அவர், மஹாபாரதத்திற்குத் தமது அற்புத வாக்கால் உரை எழுதிய வில்லிபுத்தூராரைச் சந்திக்க நேர்ந்தது. பெரும் புலவரான வில்லிபுத்தூராரைக் கண்டு புலவர் சமூகமே நடுங்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது. காரணம் அவர், தன்னுடன் வாது செய்து தோற்ற புலவர்களின் காதுகளைக் குறடு கொண்டு தோண்டும் வழக்கத்தைக் கையாண்டு வந்தார். அவரது செருக்கை அடக்க திருவுளம் கொண்ட முருகன், ஒரு திருவிளையாடலை நிகழ்த்த முடிவு செய்தான்.அருணகிரியாரை, வில்லிபுத்தூராருடன் கவிதைப் போட்டியில் மோதவைப்பதென்றும், தோற்றவர் காதை, மற்றவர் அறுத்துவிடலாம் எனவும் முடிவாயிற்று.

Arunagirinathar

ருணகிரிநாதர், போட்டிக்காகப் பாடவேண்டி இருந்ததால், கடினமான தமிழ் நடையைக் கொண்ட ‘கந்தர் அந்தாதி’ எனும் நூலை இயற்றத் துவங்கினார்.வில்லிபுத்தூராரும் உடனுக்குடன் உரை கூறலானார் .53 செய்யுட்கள் இவ்வாறு நிறைவுற்றபின் மேலும் எப்படிப் பாடினால் அவரை மடக்கலாம் என்று அருணகிரியார் முருகனை எண்ணித் துதித்து நின்ற போது, ‘த’கர வர்க்க எழுத்துக்களை மட்டுமே வைத்து அடுத்த செய்யுளைப் பாடுமாறு முருகன் எடுத்துக் கொடுத்தான்.அந்தச் செய்யுள் பின்வருமாறு:

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

உயிர் போகும் காலத்தில், முருகன் அடியிணை பெறும் கருணையைத் தரக்கேட்டு அருணகிரியார் பாடிய மேற்குறிப்பிட்ட 54ஆம் பாடலுக்கு உரை கூற முடியாது தவித்தார் வில்லிபுத்தூரார்! தம் தோல்வியை அவர் ஒப்புக்கொண்டதும், அருணை முநிவர் தாமே அப்பாடலுக்கு உரை செய்தார்.அத்துடன் மொத்தம் நூறு பாடல்களைப் பாடி நூலை நிறைவு செய்தார்.ஆனால் வில்லிபுத்தூராரின் காதை அறுக்க ஒப்புக்கொள்ளவில்லை நம் கருணை முநிவர். ‘.இனியும் இது போன்ற இழிவுச் செயல்களில் ஈடுபடக்கூடாது.’ என்று அறிவுரை கூறியதோடு அவர் கையிலிருந்த குறடாவைப் பிடுங்கி வீசி எறிந்தார் என்பது வரலாறு.

கந்தர் அந்தாதிப் பாடல்கள் அனைத்துமே, சி,சீ,செ,சே,த,தீ,தெ,தே எனும் எட்டு எழுத்துக்களை மட்டுமே கொண்டு துவங்குகின்றன. 27 பாடல்களில் திருச்செந்தூரைப் பற்றிய குறிப்புகள் வருவதால், செந்தூரில் இது பாடப்பட்டிருக்கலாம் என்பதும், திருவண்ணாமலைக் கோவிலிலுள்ள யானை திறை கொண்ட விநாயகரையும், உண்ணாமுலை அம்மையையும் காப்புச் செய்யுட்களில் துதித்துள்ளபடியால் இது ஒரு வேளை திருவண்ணாமலையில் பாடப்பட்டிருக்கலாம் என்பதும் ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

கந்தர் அந்தாதி பற்றிய குறிப்புகள் மற்ற சில நூல்களிலும் வருவதை, திருப்புகழ் உரை ஆசிரியர் டாக்டர் வ.சு.செங்கல்வராயப்பிள்ளையவர்கள் மேற்கோள் காட்டியுள்ளார்.

அக்கிளிதான்- வில்லிபுத்தூரான் செவியின் மேலரிவாள்
பூட்டியன்று வல்லபத்தின் வாது வென்று வந்ததுகாண்”

-தணிகை உலா

“எதிரும் புலவன் வில்லி தொழ எந்தை உனக்கந்தாதி சொல்லி ஏழைப்புலவர் செவிக் குருத்தோடெறியுங் கருவி பறித்தெறிந்தே”
-திருமலைமுருகன்

பிள்ளைத்தமிழ் அருணகிரியாரின் கருணைத் திறத்தை எண்ணியே ‘கருணைக்கு அருணகிரி’ என்று கூறும் வழக்கும் எழுந்தது என்கிறார் டாக்டர் பிள்ளையவர்கள்.

ஒரு தென்னைமரத்திலிருந்து பறித்தெடுத்த தேங்காயுள்ளிருக்கும் சுவைமிக்க இளநீரைப் பருகுவதற்காக நாம் மேற்கொள்ளும் சிரமங்கள் எத்தனையோ; அதேபோலத்தான் கடினமான கந்தர் அந்தாதி பதப்பிரிவு கண்டு அயர்ந்துவிடக் கூடாது.அதன் ஆழம் வரைச் சென்று, பொருட்செறிவை அனுபவித்துணர்ந்து, பிறர்க்கு கற்பித்தும் வரும் திருப்புகழ் அடிமை திரு. சு.நடராஜன் போன்ற ஆன்றோரின் உதவியுடன் நாமும் பொருளுணர்ந்து கற்று கந்தர் அந்தாதியை மனனம் செய்வோமேயானால் ஒரு அருட்கவிதையைக் கற்ற நிறைவு நமக்குக் கிட்டும் என்பதில் ஐயமேதுமில்லை.

பி.கு ‘அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதி’ பாடி வில்லிபுத்தூராரைத் திகைக்கவைத்த அருணை முநிவரின் 54ஆவது அந்தாதிச் செய்யுளின் பதப்பிரிவும் பொருளும் பின்வருமாறு:

திதத்த தத்தித்த திதி தாதை தாத திதத்த தத்தித்த எனும் தாள வரிசைகளைத் தனது நடனம் மூலம் நிலைபெறச் செய்யும் உனது தந்தையாம் பரமசிவனும்

Arunagiri worships Lord Murugan who had just rescued him from certain death by suicide

தாத மறைகிழவோனாகிய பிரமனும்

துத்தி தத்தி தா தித தத்து அத்தி புள்ளிகள் உடைய படம் விளங்கும் பாம்பாகிய ஆதிசேஷனின் முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று ஆனால் அலைகள் வீசுகின்ற திருப்பாற்கடலைத் தனது வாசஸ்தலமாகக் கொண்டு

ததி தித்தித்ததே து ஆயர்பாடியில், தயிர் மிக இனிப்பாக உள்ளதே என்றுகூறி அதை மிகவும் வாரி உண்ட திருமாலும்

துதித்து இதத்து ஆதி – அதை மிகவும் வாரி உண்ட திருமாலும் போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியான மூலப்பொருளே!

தத்தத்து அத்தி தத்தை தாத தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவசேனையின் தாசனே!

திதே துதை பல தீமைகள் நிறைந்ததும்

தாது ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்

அதத்து உதி மரணம்-பிறப்பு இவற்றோடு கூடியதும்

தத்து அத்து ஆபத்துக்கள் நிறைந்ததுமாகிய

அத்தி தித்தி – எலும்பை மூடி இருக்கும் தோல்பை ஆகிய இந்த உடம்பு

தீ தீ அக்னியால் தகிக்கப்படும்

திதி அந்த அந்திம நாளில்

துதிதீ இவ்வளவு நாட்களாக உன்னைத் துதித்து வந்த என் புத்தி

தொத்ததே உன்னுடன் ஐக்கியமாகி விட வேண்டும்.

இந்த தெய்வீக கந்தர் அந்தாதி செய்யுட்களை பதப்பிரிவுடனும் பொருட்செறிவுடனும் இந்த இணைய.

தளத்திலேயே கேட்டு மகிழுங்கள்.   www.murugan.org

SOURCE:::: Chitra Murthy in  www.murugan.org

Natarajan

Message For the Day…” You Should Not Pray to God Seeking this Favour or that ….”

The one who is filled with love has great peace of mind, is pure at heart and is unruffled by any adverse circumstances, failures or losses. This fortitude is derived from love of the Lord, and it endows one with self-confidence. Self-confidence generates an immense internal power. Everyone has to develop this power to experience the bliss of the Self (Atma-Ananda). Love should be free from feelings of expectation of any return or reward. Love which arises out of a desire for something in return is not true love. Utterly selfless and motiveless love should be developed. This is the bounden duty of all. You should not pray to God seeking this favour or that, for your vision is limited. None of you can fathom what immensely precious, Divine and magnificent treasures lie when you secure the treasure-house of Divine Grace. 

Sathya Sai Baba

Message For the Day…” Treat Everyone as Your Own and Desist Causing Harm to Anybody…”

All of you have a whole set of animals within: the dog, the fox, the ass, and the wolf. You must choose to suppress the tendencies of all these beasts and encourage the human qualities of love and friendship to shine. Above all, begin the cultivation of virtues; that is more important and beneficial than mere book-learning. This will give real Ananda (bliss); that is the essence of all knowledge, the culmination of all learning. Treat everyone as your own and even if you cannot do them any good, desist from causing them any injury. Light the lamp of love inside the niche of your heart and the nocturnal birds of greed and envy will fly away, unable to bear the light. An unbending person is infected with egoism of the worst type; Love (Prema) makes you humble, it makes you bend and bow when you see greatness and glory. Use that capacity and derive the best advantage out of it.

Sathya Sai Baba

 

” ஸ்ரீ மஹாலக்ஷ்மி கடாக்ஷம் …

காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கூரம் என்ற கிராமத்தில், தன் மனைவி ஆண்டாளுடன் வாழ்ந்து வந்தவர் கூரத்தாழ்வார். ராமாநுஜரை விட ஏழு ஆண்டுகள் மூத்தவரான கூரத்தாழ்வாருக்கு இரட்டையராகப் பிறந்த இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் பராசர பட்டர்; அடுத்தவர் வியாச பட்டர்.

இந்த கூரத்தாழ்வார் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால், எல்லாவிதமான ஐஸ்வர்யங் களையும் பெற்றிருந்தார். தாம் பெற்ற அந்த ஐஸ்வர்யத்தைக் கொண்டு, வருகின்ற பாகவதர்க்கெல்லாம் ததியாராதனம் (சாப்பாடு போட்டு) செய்வித்து அனுப்புவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளுமே இந்த ததியாராதன வைபவம் நடைபெறும். தங்கத்தினால் ஆன அவருடைய வீட்டுக் கதவுகளில் தங்க மணி, வெண்கல மணி போன்றவை பொருத்தப்பட்டிருக்குமாம்.

ஒருநாள் இரவு பத்தரை மணிக்கு, காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பெருமாளும் தாயாரும் பள்ளியறைக்கு எழுந்தருளி, கோயிலின் நடைகூட சாத்தப்பட்டுவிட்டது. அப்போது எங்கேயோ கதவு சாத்தப்படும் ஓசையும், அதனால் ஏற்பட்ட மணியோசையும் பள்ளியறையில் இருந்த பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் கேட்டது.

மணியோசையைக் கேட்ட பெருந்தேவி தாயார், ”யாருடைய வீடோ ரொம்பப் பெரிய தாக இருக்கும் போலிருக்கிறது. ரொம்ப பணக்காரராக இருப்பார் போலிருக்கிறது. அவர் வீட்டு வாசல் கதவை இவ்வளவு தாமதமாக மூடுகிறாரே. நாமே நம்முடைய உற்ஸவம் எல்லாம் முடிந்து கதவை சாத்திக்கொண்டோம். ஆனால், இன்னும் யாரோ ஒருவர் இதுவரை ததியாராதனம் செய்துவிட்டு, இப்போதுதான் கதவை சாத்துகிறாரே. அவர் யாராக இருக்கும்” என்று வரதராஜ பெருமாளிடம் கேட்கிறார்.

அதற்கு வரதராஜ பெருமாள் சொல்கிறார்… ”தேவி, அவர்தான் கூரத்தாழ்வார். அவர் நிரம்ப ஐஸ்வர்யம் உள்ளவர். அவருடைய செல்வத்தின் அளவை நம்மால் கணக்கிடவே முடியாது.

ஒவ்வொருநாளும் அவர் எத்தனை பேருக்கு சாப்பாடு போடுவார் தெரியுமா? ஒவ்வொரு
நாளும் காலையில் தொடங்கும் ததியாராதனம் நள்ளிரவு வரை நடைபெறுவது வழக்கம்.”

பெருந்தேவி தாயாரும் வரதராஜ பெருமாளும் இப்படிப் பேசிக்கொண்டது வெளியில் நின்றுகொண்டிருந்த அடியவரின் காதுகளில் விழுந்தது.

காஞ்சிபூர்ணர் என்ற பெயர் கொண்ட அந்த அடியவர், பூவிருந்தவல்லி க்ஷேத்திரத்தைச் சேர்ந்தவர். அவர் தினமும் காஞ்சிபுரத்துக்குச் சென்று வரதராஜ பெருமாளுக்கு திருவாலவட்ட கைங்கர்யம் (விசிறி விசிறுதல்) செய்பவர்.

பெருமாளும் தாயாரும் இப்படி பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட அவர், மறுநாள் கூரத்தாழ்வாரைச் சந்தித்தபோது, ”ஆழ்வாரே, நீர் பெரிய செல்வந்தராமே? நேற்றிரவு உம்முடைய சொத்து மதிப்பை பெரியவர்கள் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்களே” என்று கூறினார். அவர்களைப் பொறுத்தவரை பெரியவர்கள் என்றால், அது காஞ்சி வரதராஜ பெருமாளையும் பெருந்தேவி தாயாரையுமே குறிக்கும்.

இப்படி ஒருவர் நம்மிடம் சொன்னால், நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? பெருமிதத்தால் பூரித்துப்போய் சிரித்துக் கொள்வோம். ஆனால், கூரத்தாழ்வார் என்ன செய்தார் தெரியுமோ?

”அடியேனுக்கு பக்தி உண்டு; பிரேமை உண்டு; வைராக்கியம் உண்டு என்றெல்லாம் பெரியவர்கள் பேசிக்கொள்ளாமல், அடியேனின் ஐஸ்வர்யத்தின் மதிப்பைக் குறிப்பிட்டு எப்போது பேசினார்களோ, அப்போதே அதைத் துறந்துவிட முடிவு செய்துவிட்டேன்” என்று கூறியவராக, தாம் பெற்றிருந்த அத்தனை ஐஸ்வர்யங்களையும் தர்ம ஸ்தாபனங்களுக்கு எழுதி வைத்துவிட்டு, தம்முடைய மனைவி ஆண்டாளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கத்துக்குச் சென்றுவிட்டார்.

அப்படி அவர் செய்ததற்கு காரணம் என்ன தெரியுமோ?

ஒருவன் பெரிய பணக்காரராக இருந்தால், பெருமாள் அவனைக் கைவிட்டுவிடுகிறார். அவன் செல்வத்தை எப்போது துறக்கிறானோ அப்போதுதான் பெருமாளின் அனுக்கிரஹம் அவனுக்குக் கிடைக்கிறது. ‘யஸ்யாதம் அனுக்கிரஹிணம்’ யாரை கடாக்ஷிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேனோ, ‘தஸ்வித்தமராம்யஹா’ அவருடைய சொத்தை நான் உடனே அபகரித்துவிடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.

FullSizeRender (10)

திருமங்கை ஆழ்வார் அஹோபிலம் திருத்தலத்தில் அருள்புரியும் லக்ஷ்மிநரசிம்மனாய் எழுந்தருளி இருக்கும் மாலோல நரசிம்மரை மங்களாசாசனம் செய்யும்போது இப்படி பாடியிருக்கிறார்.

அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க் கோளரியாய் அவுணன்
கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல்வன்துடி வாய் கடுப்ப
சிலைக்கை வேடர்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே.

அஹோபிலத்தில் பெருமாள் தம்மை சேவிக்க வரும் பக்தர்களிடம் இருக்கும் செல்வங்களை எல்லாம், கொள்ளையர்களை அனுப்பி பறித்துக்கொள்வாராம். அவர் ஏன் அப்படி செய்கிறார் தெரியுமோ? அஹோபிலம் புனிதமான க்ஷேத்திரம் ஆயிற்றே. இந்த க்ஷேத்திரத்தைப் பற்றி திருமங்கை ஆழ்வார் ஏன் இப்படி பாடியிருக்கிறார் என்று அதற்கு விளக்கம் சொல்ல வந்த பெரியவாச்சான் பிள்ளைக்கு ஆதங்கம் ஏற்பட்டது. தம்முடைய ஆதங்கத்தை பெருமாளிடம் முறையிட்டார். பெருமாள் அவரை சமாதானப்படுத்துவதுபோல்,

”கையில் பொருளுடன் ஒருவர் என்னை சேவிக்க வரும்போது, பெருமாளுக்கு சமர்ப்பிக்க தன்னிடமும் பொருள் உள்ளது என்ற எண்ணம் தோன்றும். அது அகங்காரத்தைக் குறிக்கும் என்பதால்தான் நான் அந்த பொருளை அபகரித்துக்கொள்கிறேன். அப்போதுதான் அவருக்கு என்னுடைய அருள் கிடைக்கும்”’ என்றாராம்.

இதைத்தான் திருமங்கை ஆழ்வார்,

சிலைக்கை வேடர்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே’ என்று பாடி இருக்கிறார்.

அப்படி என்றால் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால் நாம் பெற்றிடக்கூடிய ஐஸ்வர்யங்களுக்கு மதிப்பே இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? மஹாலக்ஷ்மி கடாக்ஷத்தினால் நாம் பெற்றிருக்கக்கூடிய செல்வங்களை, சாஸ்திரங்களில் சொல்லி இருக்கிற தர்மமுறைப்படி பயன்படுத்தினால், அதே மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால் நாம் பெறக்கூடிய நிறைவான ஐஸ்வர்யமான புருஷார்த்தம் என்கிற மோக்ஷ நிலையை நாம் அடையலாம்.

மஹாலக்ஷ்மி கடாக்ஷத்தினால் நாம் அடைந்திருக்கக் கூடிய செல்வத்தை,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

அன்பு, அறன் இரண்டும் போதும். அவையே இல்வாழ்வில் குணமும் பயனும் தரும்.  (திருக்குறள் புதிய உரை – சுஜாதா)

என்று திருக்குறளில் சொல்லி உள்ளபடி பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற செல்வத்தின் நிறைவான பயனான புருஷார்த்தத்தை அடையமுடியும். அன்பும் அறனும் என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, செல்வத்தைப் பற்றி சொல்லப்படவில்லை. அன்பும் தர்மகுணமும் இருக்கும்போது செல்வமும் இருக்கலாம். ஆனால், செல்வம் வந்துவிட்டால், இந்த அன்பும் தர்ம குணமும் நம்மை விட்டுப் போனாலும் போய்விடும். செல்வம் அதிகம் சேர்ந்துவிட்டாலும் அன்பும் தர்ம குணமும் நமக்கு இருக்க வேண்டும்.

கூரத்தாழ்வார் அப்படிப்பட்ட உயர்ந்த பரிபக்குவ மனநிலையைப் பெற்றிருந்தவர். அதனால்தான் அவர், ‘ஹத்ரி’… முக்குணங்களைக் கடந்தவர் என்று போற்றப்படுகிறார். தர்ம, அர்த்த, காம என்னும் மூன்றையும் துறந்து, மோக்ஷத்தில் மட்டுமே விருப்பம் கொண்டவராக இருந்தபடியால்தான், தாம் பெற்றிருந்த செல்வத்தைக் குறித்து பெருமாளும் தாயாரும் பேசிக்கொண்டதாகக் கேட்ட உடனே, தாம் பெற்றிருந்த செல்வம் அனைத்தையும் துறந்து, ஸ்ரீரங்கத்துக்குச் சென்றுவிட்டார்.

SOURCE:::: Balhanuman’s Blog…http/balhanuman.wordpress.com from 

Natarajan

Message For the Day…” Truth Is the Very Embodiment of God …”

You must become heroes in action. It does not behoove of you to spend your time in idle talk, without involving yourself in some solid work for the benefit of the nation. Bend your body and work hard to attain glory. A seed that is sown in the soil, loses its shape to ultimately become a gigantic tree. That tree yields sweet fruits. Similarly it is only when you destroy your ego and lose your identity, real fruit of your actions come out. Therefore, remove your attachment to your body (dehabhimana) and develop attachment to the country (deshabhimana). Love is a quality permeating every living being. Truth is verily the embodiment of Divinity. It is in you, with you, around you, everywhere, protecting you always, at all times. You need not search for God in some distant place. Truth is the very embodiment of God. Do not ever move away from Truth.

Sathya Sai Baba

Message For the Day…” Everyone Must Preserve to Protect The Practice of Truth…”

A real student is one who contemplates and understands the value of the education being received. Higher knowledge (Vijnana) and Supreme wisdom (Prajnana) are not merely products of education that can be acquired by learning or listening. Everyone can develop these sacred powers through culture and refinement gained through education and consistent practice. What is culture? Culture is the conscious effort put in by every being to achieve a transformation in their daily lives from untruth to truth, from non-conformance to scriptures to conformance to scriptural authority, and from evanescence to eternity. It is a spiritual journey towards Divinity. Human beings are embodiments of truth. Everyone must persevere to protect the practice of Truth (Sathya) and Righteousness (Dharma), which in turn will protect the Universe. If you succeed in doing so, the whole world will enjoy peace and prosperity.

Sathya Sai Baba

Message For the Day…” Spiritual Education is the Need of the Hour …”

Modern education is mere bookish knowledge, confined to what is contained in the texts. Today many are pursuing such secular education only (i.e., value neutral). Secular education alone is not enough. It must be supplemented with spiritual education. Spiritual education has its effect on one’s heart, and is called Educare. Educare means bringing out the latent Divinity, that is hidden in the heart of human beings and establishing it as an ideal to the whole world. Through Educare, you must develop the principle of love and students must follow the path of truth. True education is that which is suffused with truth and love. Secular education is for making a living, whereas spiritual education is for reaching the goal of life. It is the duty of students as well as educators to harmonize the secular education with spiritual education. This is the prime necessity today. 

Sathya Sai Baba

Message For the Day…” What is Liberation ?..Help Ever , Hurt Never … “

Do not find faults with others. If you point an accusing finger at someone, remember three fingers are pointing to you. Wear the ornament of Truth to adorn your neck (Sathyam Kantasya Bhushanam). Charity is the true ornament that make your hands beautiful and elegant (Hasthasya Bhushanam Dhanam). Thus you must sanctify each limb of your body by engaging in sacred activities. Your eyes should look at only sacred things. Do you know what an enormous power is latent in your eyes? There are crores of light rays in them. In olden days, people used to invoke the grace of Sun God to have a better vision. When you performSurya-namaskar (worship of Sun God) and invoke His grace, the light rays in your eyes will become more effulgent and inspire you. People aspire to attain liberation. What is liberation? Help ever, hurt never – that is true liberation. To get rid of attachment (moha) is true liberation (moksha).

Sathya Sai Baba

Message For the Day…” If you hurt others’ Feelings , You will be Hurt , Twice as Much …”

Women should look after their homes diligently and conduct themselves in a pleasing manner. Treat your guests in a cordial manner and to the extent possible. Empathise with those who are in difficulties, comfort and console them with soothing words. Those who talk harsh words are verily demons. If you hurt others’ feelings, you will be hurt twice as much and you cannot escape from the consequences of your actions. Embodiments of Love! These teachings are simple to practice in your daily life. But do not take them lightly – they can confer on you liberation! It is your good fortune (adrishtam) to know them! What is good fortune? A-drishtam is that which cannot be seen. You may not be able to see the results of your noble conduct and meritorious deeds, but they will confer on you all happiness and comforts in due course of time.

Sathya Sai Baba