communication
விநாச காலம் விபரீத புத்தி….!!!
ஒரு பக்கம் சுவாதி, நந்தினி, வினுப்பிரியா கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் பீதியூட்டிக் கொண்டிருக்க மறுபக்கம் பெரிதாக கவனம் பெறாத இரண்டு சம்பவங்கள் மேலும் கவலை அளிக்கின்றன. ஒன்று கிரிக்கெட் பந்தை எடுத்துத் தராத காரணத்தால் 25 வயது அண்ணன் 16 வயதுத் தம்பியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்ததில் தம்பி நினைவு தப்பிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்,காவல்துறை தம்பியின் உயிரிழப்புக்கு காரணமான அண்ணனை கைது செய்திருக்கிறது இது நமது தமிழ்நாட்டில் உடையார்பாளையத்தில் நிகழ்ந்த துர்சம்பவம்.
மற்றொன்று அண்டை மாநிலமான ஆந்திராவின் பஞ்சாரா ஹில்ஸில் பள்ளி மாணவர்கள் இருவருக்கிடையே நிகழ்ந்தது. தனியார் பள்ளி ஒன்றின் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் ஒன்றாம் வகுப்பு மாணவனை அவனது அடிவயிற்றின் கீழ் பகுதியில் சரமாரியாக அடித்ததில் பாதிப்படைந்த சிறுவன் தொடர் சிகிச்சைக்குப் பின் குடல்பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த ஒரு வாரத்தில் ஓரிரு நாட்கள் இடைவெளியில் நடந்து முடிந்தவை.
இவை இரண்டிலும் நம்மை அச்சுறுத்தும் விஷயம் ஒன்றே! அண்ணனே சொந்த தம்பியை அடித்துக் கொல்வதும், தொடக்கப் பள்ளியைக் கூடத்தாண்டாத சிறுவன் ஒருவன் ஆத்திரத்தில் அவனை விட சிறியவன் ஒருவனை சாகும் அளவுக்கு அடித்துத் துன்புறுத்துவதும் என்ன விதமான மனநிலை?! இங்கே குற்றவாளி யார்? அந்த இளைஞனா? சிறுவனா? அல்லது அவர்களின் வளர்ப்பு முறையா?
சாமானிய மனிதர்களுக்கு எப்போதாவது காலருகில் ஊறும் சிறு பூராணை அடித்துக் கொல்வதே உளவியல் ரீதியாகப் பெரும்பாடாக இருக்கிறது. உயிர்க்கொலை என்பது எப்பேற்பட்ட கொடூரம்! அறிந்தோ அறியாமலோ அந்த கொடூரத்தை நிகழ்த்திய பின் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் அறியாத வயது அந்தச்சிறுவனுக்கு என்று எடுத்துக் கொண்டாலும் 25 வயது இளைஞனுக்குமா அறியாத வயது! மொத்தத்தில் மனித உயிரின் நேசமதிப்பீடுகளை பற்றி கொஞ்சமும் சிந்தனை இல்லாமல் இப்படிச் செய்ய முடிவது ’விநாச காலம் விபரீத புத்தி’ என்று தான் கூறமுடியும்.
இப்படியான விபரீதங்களுக்கு முதல் காரணம் பின்விளைவுகளை பற்றிய யோசனையின்மை. அடுத்த காரணம் பொறுப்பின்மை மூன்றாவதாக சுயநலம் மட்டுமே பேணிக்கொள்ள வழிகாட்டும் வளர்ப்பு முறை. இந்தச் சம்பவங்களின் பின்புலனாக இத்தனை காரணம் இருக்கிறது. இவற்றையெல்லாம் சரி செய்து கொள்ள யார் சொல்லித் தரக்கூடும்?! பெற்றோர்களும் ஆசிரியர்களும் தானே முதல் வரிசையில் இருக்கிறார்கள்.பிறகு தானே இந்த சமூகம் வருகிறது.
பெற்றோர்களாகிய நாம் என்ன செய்கிறோம்? விளையாடும் குழந்தைகள் விளையாட்டின் நடுவே சண்டையிட்டுக் கொண்டு வந்து புகார் கூறினால் எத்தனை பெற்றோர் நடுநிலைத் தன்மையில் அந்த விஷயத்தை கையாள்கிறோம்?! உண்மையைச் சொல்வதென்றால் ‘யாராவது உன்னை அடித்தால் பதிலுக்கு நீயும் அடி என்றோ’ ‘திட்டினால் நீயும் திட்டு’ என்றோ தான் இப்போதெல்லாம் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வழிநடத்துகிறார்கள். இல்லையேல் இத்தனை வன்முறைக்கு அவசியமென்ன?
முதலில் நாம் நமது குழந்தைகளுக்கு எந்தச் செயலுக்கும் பின்னான விளைவுகளை பற்றி கற்றுக் கொடுத்தே வளர்க்க வேண்டும். ‘நீ உன் வகுப்பு ஆசிரியரை, தோழனை, நண்பர்களை அல்லது நீ இருக்கும் சூழலை வெறுக்கிறாயா? ஏன்? எதற்கு? என்று யோசித்து அதை நேர்மறையாக மாற்றிக் கொள்ள வழி இருக்கிறதா என்று பார். அவர்கள் மேலுள்ள வெறுப்பை மாற்றவே முடியாது எனும் போது அடுத்த கட்டத்தைப் பற்றி எங்களிடம் கலந்து ஆலோசி. உடனடி வெறுப்போ,கோபமோ நிரந்தரத் தீர்வாகாது, உனக்காக நாங்கள் எப்போதும் உடனிருக்கிறோம் என்பதை மறந்து விடாதே’ எனும்படியான மனஉறுதியை நம் குழந்தைகளிடம் பதியச்செய்ய வேண்டும்.
இன்றைய தனிக்குடும்ப கலாச்சாரத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இப்படியான மனஉறுதி நிச்சயம் தேவைப்படுகிறது. பல வீடுகளில் வேலைக்குப் போகும் பெற்றோர் வீடு திரும்பும் வரை குழந்தைகள் வேலையாட்களுடன் தனித்து விடப்படும் சூழல் நிலவுவதால் தன்னிஷ்டமாய் முடிவெடுக்கும் குழந்தைகள் பெருகி வரும் காலம் இது. அவர்களுக்குத் தேவை வேலையாள் இல்லை பொறுப்பான ஒரு கண்காணிப்பாளர். கண்காணிக்கும் வேலையை பெற்றோரை விட, நயமாக திறம்பட வேறு யாரால் செய்ய முடியும்? ஆகவே நம் குழந்தைகளின் செயல்களுக்கு பொறுப்பேற்க கடமைப்பட்டுள்ள நாம் மட்டுமே அவர்களின் செயல்களைக் கண்காணிக்கவும் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறக்கக் கூடாது.
அடுத்ததாக பொறுப்பின்மை; பொறுப்பு என்ற சொல்லை தமிழில் நாம் பல விதங்களில் பல பதங்களில் பயன்படுத்துகிறோம் .பொறுப்பு என்பது வெறும் சொல் மட்டுமே அல்ல அது ஓர் உணர்வு. உதாரணமாக மேல்மாடியில் இருந்து கொண்டு கீழ் நோக்கி குப்பையை விட்டெறிந்தால் குப்பை கீழே இருப்பவர்களின் தலையைப் பதம் பார்க்கும் என்று உணர்வது தான் பொறுப்பு. இந்தப் பொறுப்புணர்வு இருந்திருந்தால் அன்புக்குரிய சகோதரனை 25 வயது இளைஞன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றிருக்க மாட்டான்.முதலில் இந்த உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?! நமக்குள் கேட்டுக் கொண்டாக வேண்டிய கேள்வி இது. இப்படியான உணர்வு நமக்குள் இருந்திருந்து அதை நமது குழந்தைகளுக்கு வலியுறுத்தி இருந்தால் குழந்தைகள் அர்த்தமற்ற விபரீத செயல்களில் ஈடுபட வாய்ப்பே இல்லை.
யாருக்கு என்ன கஷ்டம் வந்தால் நமக்கென்ன? நாம் சவுகரியமாக இருக்கிறோமா அது போதும் என்று மட்டுமே நினைக்கும் மனப்பான்மை சுயநலமானது. குழந்தைகளிடம், இளைஞர்களிடம் இந்த மனப்பான்மை வளர்ந்தால் அது ’வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு’. இன்றைய பெரும் விபரீதங்கள் பலவற்றிற்கு இந்த சுயநல மனப்பான்மையே அடிப்படை என்றால் பொய்யில்லை.ஆகவே கூடுமான வரையில் பெற்றோர்களும் சரி ஆசிரியர்களும் சரி தமது மாணவர்களிடையே பொறுப்புணர்வையும், பொதுநலத்தையும் வளர்த்தெடுத்தே ஆகவேண்டும்
முன்பெல்லாம் அரசுப் பள்ளிகளில் நடுநிலைப் பள்ளி பிரிவில் ஒவ்வொரு நாளின் கடைசி வகுப்பிலும் நீதிக்கதைகள் போதிக்கப்பட்டன; இப்போதும் நீதிக்கதைகள் ’ஃலைப் ஸ்கில்’ என்ற பெயரில் பாடத்திட்டத்தில் உண்டு. ஆனால் இதை ஆசிரியர் தானே வகுப்பில் கதையாக எடுத்துச் சொல்லி மாணவர்களுடனான சுவாரசியமான கலந்துரையாடலுடன் வகுப்பு முடிகிறதா என்றால் அது சந்தேகத்திற்கிடமானது. இந்தப் புத்தகங்களை மாணவர்கள் தாங்களே படித்துக் கொள்ள வேண்டியது தான் எனும் நிலை.
பெரும்பான்மை மாணவர்கள் நீதிக்கதைகளைப் படிப்பதாக தெரியவில்லை. அவர்கள் பாடங்களைப் படிப்பதோடு போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் ஆறாம் வகுப்பிலிருந்தே ஐ,ஐ,டி நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்புகள் என்று ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் நெட்ஒர்க் என்று தான் மனம் போகிறதே தவிர போதுமான வாசிப்பு பழக்கம் இல்லை என்பதே நிஜம்.
படிப்பு முக்கியம் தான் ஆனால் அதை விட முக்கியம் பண்பு. அதை நீதிக்கதைகளால் மட்டுமே போதிக்க முடியும் எனில் பள்ளிகள் அதற்காக ஒவ்வொரு நாளும் தனி வகுப்புகளை நடத்தினாலும் தவறில்லையே. ஒன்று பள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் வீட்டிலிருந்து ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு இரவையும் நமது புராண, இதிகாச, பஞ்ச தந்திர, ஜாதக நீதிக்கதைகள் கதைகள் மூலம் குழந்தைகளுக்கான அருமையான இரவாக நாம் ஏன் மாற்றக்கூடாது? இதிகாசங்களும் புராணங்களும் சிலருக்கு நம்பிக்கை தரவில்லை எனில் தவறே இல்லை காலத்திற்கு ஏற்றவாறு புதிய நீதிக்கதைகளை நாமே ஏன் உருவாக்கக் கூடாது?!
அதற்கெல்லாம் நேரமில்லை எனில் நஷ்டம் நமக்குத் தான் எல்லோருக்கும் அவரவர் வேலை பெரிதே, ஆனால் இந்த நாட்டுக்கும் நமது வீட்டிற்கும் பொறாமை, காழ்ப்புணர்ச்சி, குரோதம், தீவிரவாதம் போன்ற நஞ்சு ஊட்டப்படாத மனம் கொண்ட இளம் சமுதாயத்தினர் தேவை எனில் நாம் அவர்கள் நலனுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும்.
தனிமை உணர்வும், நல்லது எது? கெட்டது எது? எனும் பாகுபாடு காணமுடியா குழப்பமும் குழந்தைகளை அணுகாமல் அவர்களைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை ஆசிரியர்கள் அவர்களுக்குத் துணை நிற்பார்களாக!
Source……..By கார்த்திகா வாசுதேவன் in http://www.dinamani.com
Natarajan
” ஹைகூ: தமிழ்க் கவிதையின் கம்பீரம்…” !!!
“ஹைகூ ஒவ்வொன்றும் ஒரு தனிவார்ப்பு, பிசிறில்லாத சிறுசிற்பம், அலாதியான அழகு, கம்பீரம்” என ஹைகூ கவிதையின் திறத்தினைப் பறைசாற்றுவார் கவிஞர் தமிழ்நாடன். தமிழ்க் கவிதை உலகில் புதுக்
கவிதை அமைத்துத் தந்த தோரண வாயில் வழியாக 1984ல் தொடங்கிய ஹைகூ பயணம், இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வாழையடி வாழையெனப் புதுப்புதுக் கவிஞர்கள் தோன்றி, ஹைகூவின் வளர்ச்சிக்குத் தங்களின் பங்களிப்பினை நல்கி வருகின்றனர்.
நெல்லை சு.முத்துவின் பார்வையில்,
“மூன்றடிச் சொற்செட்டுநேரடி அனுபவ வெளிப்பாடு
மூன்றாவது அடி மின்தாக்கு”
– என்னும் மூன்று பண்புகளும் பொருந்தியதே சிறந்த ஹைகூ கவிதை. பாடுபொருளாலும் பாடும்முறையாலும் சிறந்து விளங்கும் ஒரு சில ஹைகூ
கவிதைகள் குறித்து காண்போம்.
விலகி இருக்கும் மனித உறவுகள்
‘வெறுங்கை என்பது மூடத்தனம் – விரல்கள் பத்தும் மூலதனம்’
என்னும் எழுச்சி மிகு வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. அவரது உடன்பிறப்பு மலர்மகன். அவரும் ஒரு சிறந்த மரபுக் கவிஞர் ஆவார். ‘தொடர்பு எல்லைகளுக்கு அப்பால்…’ என்பது அவர் வெளியிட்டுள்ள ஹைகூ
கவிதை தொகுப்பு. அதில் இடம் பெற்றுள்ள ஹைகூ இது: “ தொடர்பு எல்லைக்கு அப்பால் -உறவுகள்”
இன்று உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் மனிதனால் தொடர்பு கொள்ள முடிகின்றது. தொடர்பியல் அந்த அளவிற்கு இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தொடர்பு எல்லைக்குள் வாழும் மனித உறவுகளோ விலகி இருக்கின்றன.
குடும்ப உறுப்பினர்கள் இடையே இடைவெளியும் விரிசலும் மிகுந்து காணப்படுகின்றன என்பதை நயமாகப் பதிவு செய்துள்ளார் மலர்மகன். இல்லற வாழ்வின் பதிவு
இல்லற வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமானால், கணவன்–மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்காக மற்றவர் விட்டுக் கொடுத்துப் போவது தான் முக்கியம். ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்னும் ஆன்றோர் அமுத மொழி. தங்கம் மூர்த்தி நகைச்சுவை உணர்வுடன் இல்லற வாழ்வின் இன்றியமையாத பக்கம் குறித்து இங்ஙனம் பாடியுள்ளார்:
“பட்டிமன்றம் முடிந்துதாமதமாய் வீடு திரும்பினேன்
வழக்காடு மன்றம்”
கள்ளங்கரவு கொஞ்சமும் இல்லாத – சூதுவாது சிறிதும் அறியாத – வஞ்சமோ சூழ்ச்சியோ துளியும் தெரியாத – குழந்தைகள் உலகினைப் பற்றிய அற்புதமான ஹைகூ கவிதைகளின் தொகுப்பு வசீகரனின் ‘குட்டியூண்டு.’ கவிதைத் தொகுப்பின் தலைப்பிலேயே கவித்துவம் கொலுவிருக்கக் காண்கிறோம். குழந்தைகள் உலகினை நடப்பியல் பாங்கில் வசீகரன் உள்ளது உள்ளபடி படைத்துக் காட்டியுள்ள ஹைகூ:
“ தனித்து நின்ற குழந்தையிடம்யார்நீ என்றதும் சொன்னது:
‘எங்க அப்பாவுக்கு நான் பொண்ணு!’”
ஹைகூவின் உயிர்ப் பண்பு
ஹைகூவுக்கு வலிமையையும் வனப்பையும் சேர்ப்பது அதன் ஈற்றடியே. இதனை, ‘படுத்துக் கொண்டே படித்தேன், துாக்கி நிறுத்தியது, ஹைகூவின் கடைசி வரி’ என ஹைகூ வடிவிலேயே படம்பிடித்துக் காட்டுவார் தெ.வெற்றிச்செல்வன்.
“ சுதந்திர தினம்மனதிற்குள் துக்கம்வந்தது ஞாயிற்றுக்கிழமை”
சுந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வந்தால், ஒரு நாள் விடுமுறை அல்லவா இல்லாமல் போகும்? மனத்திற்குள் துக்கம் பொங்கி வராதா என்ன? என்கிறார் கவிஞர் நவதிலக். இல்லாவிட்டால் கவிஞர் மீராவும் காதலியைக் குறித்து, ‘கிழமைகளில் அவள் ஞாயிறு’ என்று பாடி இருப்பாரா? தமிழனின் விடுமுறை மோகத்தினை மென்மையாகச் சாடும் கவிதை இது!
வாசகரும் கூட்டுப் படைப்பாளி
‘கவிஞன் இறங்கிக் கொள்ள, வாசகன் அதன் மீது பயணம் தொடர்வான். அதுதான் ஹைகூ’ என்பர் அறிஞர். வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால்,
‘ஹைகூ ஓர் உணர்வு நிலை, வாசகனைக் கவிஞனின் நிலைக்கு உந்தி உயரத் தள்ளும் மிகச் சிறந்த வடிவம் அது.’ இவ்விலக்கணத்திற்குக் கட்டியம் கூறும் பா.உதயகண்ணனின் ஹைகூ…
“காரைத் துடைத்துக்காசு கேட்டான்
எட்டிப் பார்த்தது நாய்”
இங்கே காரைத் துடைத்து விட்டுக் காசு கேட்பது ஒரு குழந்தைத் தொழிலாளி என்று தெளிவாகத் தெரிகிறது. ஆயின், ‘எட்டிப் பார்த்தது நாய்’ என்னும் ஈற்றடியில் இடம் பெறும் ‘நாய்’ என்பது யார்? புதியவர் எவரையேனும் கண்டால் குரைப்பது நாயின் இயல்பு. அது போல், சிறுவனிடம் தனது வெறுப்பை உமிழும் – விரட்டி அடிக்கும் – காரின் உரிமையாளரும் ஒரு வகையில் பார்த்தால் ‘நாய்’ தான்! கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால் கவிதையில் ஆழ்ந்திருக்கும் கவிஞரின் உள்ளம் புலனாகின்றது.
“எவன் கண்பட்டதுவிற்கவே இல்லை
திருஷ்டி பொம்மைகள்”
என்பது வித்தியாசமான பாடுபொருளைத் தன்னகத்தே கொண்ட செ.ஆடலரசனின் ஹைகூ.
‘திருநெல்வேலிக்கே அல்வா’ என்பது போல், ‘திருஷ்டி பொம்மைகளுக்கே’ திருஷ்டியாம்!
காலத்திற்கு ஏற்ற பாடுபொருள்
ஹைகூ கவிதையின் தனித்தன்மை காலத்திற்கு ஏற்ற, குறிப்பாக, இந்த நுாற்றாண்டிற்கே உரிய பாடுபொருட்களைக் கையாளுவதாகும். அவற்றுள் ஒன்று விளைநிலங்கள் இன்று விலைநிலங்கள் ஆகி வரும் கொடுமை ஆகும். பச்சைப் பசேல் எனத் திகழ்ந்த நெல் வயல்கள் எல்லாம், இன்று வானளாவ உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உருமாறிவிட்டன. இதனை ரத்தினச் சுருக்கமான
மொழியில் பதிவு செய்துள்ளது செந்தமிழினியனின் ஹைக்கூ:
“ விளை நிலங்கள்விலை நிலங்களாயினவீடுகள்”
‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது பல்லாண்டு காலமாக அரசியல்வாதிகள் முதலாக தமிழ் ஆர்வலர்கள் வரை அயராது பறைசாற்றி வரும் கொள்கை முழக்கம். ஆயினும், நடைமுறையில் இன்னும் அந்தக் கனவு நனவாகவில்லை. இந்த கசப்பான உண்மையை – அய்யாறு ச.புகழேந்தி ஹைகூ கவிதை ஒன்றில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றாற் போல், காரசாரமாகப் பதிவு செய்துள்ளார்:
“ எங்கும் தமிழ்எதிலும் தமிழ்இல்லை”
வாழ்வியல் பதிவு
எட்டு மணி நேரம் துாங்கும் மனிதன் – எட்டு மணி நேரம் உழைக்கும் மனிதன் – ஒரு நாளில் எத்தனை மணி நேரம் வாழ்கிறான் என்று கேட்டால், அவனால் பதில் சொல்ல முடியாது. இந்த வாழ்வியல் உண்மையைப் பொட்டில் அடித்தாற் போல் எடுத்துரைக்கிறது இ.பரிமளாவின் ஹைகூ ஒன்று:
“ வாழ்நாளில்வாழ்ந்த நாள்?
விரல்களுக்குள்”
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மென்மையான கருணை மனத்துக்குச் சொந்தக்காரர்கள் ஹைகூ கவிஞர்கள். பஞ்சு நெஞ்சு படைத்த அவர்கள், இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளுக்காகக் கூட அழுகின்ற இயல்பினர். இவ் வகையில் நினைவுகூரத் தக்க ரமா ராமநாதனின் ஹைகூ இதோ:
“அடித்துத் துவைக்கமனமில்லை
சட்டையில் பூக்கள்!”
நிறைவாக ஈழத்து அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுவது போல்,
“தமிழ்க் கவிதை என்ற நதி வற்றாது ஓடுகிறது. தமிழை வளப்படுத்துகிறது, தமிழால் வளம் பெறுகிறது.”
அவரது இக் கூற்று இன்றைய ஹைகூ கவிதைக்கும் பொருந்தி வரும்
உண்மையே.- பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரைeramohan@gmail.com
Source….www.dinamalar.com
Natarajan
வாரம் ஒரு கவிதை….” காதல் கொலை ” !
France mints Rs. 65 lakh gold coin with Taj Mahal….!
The world-renowned Monnaie de Paris (Paris Mint) has unveiled a rare work of artistry – a gold coin bearing a Taj Mahal engraving – at their Manhattan showroom. The limited edition gold coin weighs one kilo and is priced at Rs. 65 lakh. Each coin, which is minted in .999 pure gold and measures 37mm in diameter, is the world’s first coin to include 68 hand-set Cartier diamonds. Here’s a look at the limited edition Taj Mahal coin that was issued on November 17, 2010.
A picture taken on November 17, 2010 in Paris, shows the world’s first one-kilo gold coin to feature 68 hand-set Cartier diamonds, bearing a Taj Mahal engraving. The coin is released in a limited edition of only 29 pieces with a price tag of 100,00 euros. The Taj Mahal, built in the 17th Century by Mughal emperor, Shah Jahan, in memory of his third wife, Mumtaz Mahal, has been a symbol of eternal lover for centuries. (Photo: AFP)
In India the collection will be marketed by the Taj Association for Art, Culture and Heritage (TAACH). Walter J. Kole, Chief Numismatist for The Franklin Mint, said the Taj Mahal gold coins offer a unique opportunity to buy a piece of history for any collector who is looking to buy gold.
The Taj Mahal gold coin, especially designed to appeal to specialty collectors, is one of the largest coins of its type in the world.
Founded in 1964, The Franklin Mint is an American icon which is renowned for its innovative design, meticulous attention to detail and creation of the highest-quality collectibles in the world.
The eye-catching coin is housed inside a custom leather display handcrafted by the makers of the finest luggage in the world, Goyard
Source…..www.ndtv.com
Natarajan
மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்…? தெரியுமா உங்களுக்கு ?
மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்?
படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த
நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்!
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?
தமிழ் எழுத்துகளில் –
ரெண்டுசுழி ன என்பதும் தவறு!
மூனுசுழி ண என்பதும் தவறு!
ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)
தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)
இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேர்ந்து சேர்ந்தே வருகிறதப் பாருங்களேன்! இது புரியாம இதுகளை நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)
வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!
(வர்க்க எழுத்து-ன்னா,
சேர்ந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)
இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்)
இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால்
எழுத்துப் பிழையும் குறையும்.
எப்புடீ?
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா…
பக்கத்துல ட இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும்.
ஏன்னா அது டண்ணகரம்.
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா…
பக்கத்துல ற இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.
ஏன்னா அது றன்னகரம்.
என்று புரிந்து கொள்ளலாம்.
Source…..input from Facebook share
Natarajan
Beauty of English Language …!!!
Beauty of English language :
Professor Ernest Brennecke of Columbia is credited with inventing a sentence that can be made to have eight different meanings by placing ONE WORD in all possible positions in the sentence:
“I hit him in the eye yesterday.”
The word is “ONLY”.
The Message:
1. ONLY I hit him in the eye yesterday. (No one else did.)
2. I ONLY hit him in the eye yesterday. (Did not slap him.)
3. I hit ONLY him in the eye yesterday. (I did not hit others.)
4. I hit him ONLY in the eye yesterday (I did not hit outside the eye).
5. I hit him in ONLY the eye yesterday (Not other organs).
6. I hit him in the ONLY eye yesterday (He doesn’t have another eye).
7. I hit him in the eye ONLY yesterday (Not today).
8. I hit him in the eye yesterday ONLY (Did not wait for today).
This is the beauty and complexity of the English language.
Source …facebook share
Natarajan
” அது ஒரு காலம் …” !!!
💥ஒரு காலம் இருந்தது.
💥மனிதாபிமானத்தையும்
மனச்சாட்சியையும்
எம்மில் பெரும்பாண்மையினர்
நேசித்த ஒரு காலம் இருந்தது.💥கடவுளுக்கு பணிந்த காலம்.
💥சத்தியத்தை மதித்த காலம்.
💥நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
💥வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
💥அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
💥பெண்களை போற்றிய காலம்.
💥நீதியை நிலைநாட்டிய காலம்.
💥நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
💥பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
💥பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.💥நாடகக்கலை வளர்ந்த காலம்.
💥நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
💥பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
💥சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
💥வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
💥பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
💥பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.💥ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
💥முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.💥பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
💥கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
💥கோயில்கள் சேவை செய்த காலம்.
💥மழை தவறாமல் பொழிந்த காலம்.
💥மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
💥ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
💥தண்ணீர் விற்கப்படாத காலம்.
💥வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
💥கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.💥மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
💥ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
💥பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
💥மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
💥நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
💥இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
💥விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
💥வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.💥எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
💥மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
💥புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
💥உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
💥மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
💥வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
💥வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.💥சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
💥வாகன நெரிசல் இல்லாத காலம்.
💥இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
💥அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
💥வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
💥கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
💥வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
💥எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
💥ஊர்கூடி தேர் இழுத்த காலம்.💥இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத
ஒரு காலமிருந்தது
ஒரு காலமிருந்தது.💥அது நாங்களெல்லோரும்
அன்பில் திளைத்திருந்த காலம்.Source….. input from a friend of mine
Natarajan
Few commonly mispronounced words in English … !!!
Quotable Quotes….”The most beautiful thing is to see a person you love smiling. And even more beautiful is knowing that you are the reason behind it.”
1. In life you’ll realize there is a purpose for everyone you meet. Some will test you, some will use you, and some will teach you. But most importantly, some will bring out the best in you.
2. Keep people in your life who truly love you, motivate you, encourage you, enhance you, and make you happy. If you know people who do none of these things, let them go.
3. Too often we underestimate the power of a touch, a smile, a kind word, a listening ear, an honest compliment, or the smallest act of caring – all of which have the potential to turn a life around.
4. The most beautiful thing is to see a person you love smiling. And even more beautiful is knowing that you are the reason behind it.
6. Being alone does not mean you are lonely, and being lonely does not mean you are alone.
7. Fall in love when you’re ready, not when you’re lonely.
8. Love means giving someone the chance to hurt you, but trusting them not to.
9. You know you’ve found true love when you catch yourself falling in love with the same person over and over again.
10. Don’t wait for the right person to come into your life. Rather, be the right person to come to someone’s life.
11. The one who is meant for you encourages you to be your best, but still loves and accepts you at your worst.
13. Some relationships are like glass. It’s better to leave it broken, than to hurt yourself more by trying to put it back together.
14. Just because one person doesn’t seem to care for you, doesn’t mean you should forget about everyone else who does.
15. Someone else doesn’t have to be wrong for you to be right.
16. It is okay to be angry. It is never okay to be cruel.
17. Never do something permanently foolish just because you are temporarily upset.
18. Silence is often the loudest cry. Pay attention to those you care about.
19. We don’t always need advice. Sometimes all we need is a hand to hold, an ear to listen, and a heart to understand.
21. A silent hug means a thousand words to the unhappy heart.
22. Don’t mess with someone’s feelings just because you’re unsure of yours.
23. True happiness comes from within, not from someone else.
24. Don’t choose the one who is beautiful to the world, choose the one who makes your world beautiful.
25. If you feel like your ship is sinking, it might be a good time to throw out the stuff that’s been weighing it down
26. Let go of people who bring you down, and surround yourself with those who bring out the best in you.
28. Say what you mean and mean what you say. Don’t expect others to read your mind, and don’t play games with their heads and hearts. Don’t tell half-truths and expect people to trust you when the full truth comes out. Half-truths are no better than lies. And don’t ignore someone you care about, because lack of concern hurts more than angry words.
29. Lies help no one in the long run. So… 1) Don’t say “I love you” if you don’t mean it. 2) Don’t say “I understand” if you have no clue. 3) Don’t say “I’m sorry” if you’re not. 4) Be honest with yourself and your loved ones.
30. Tell the truth, or eventually someone will tell it for you.
