Morning Breakfast for my Winged Guests at my Terrace …..

Every Day a  Group of pigeons wait for me to serve Food to them on their Table and Floor . of my Terrace.

On one such day i videographed their presence thro my mobile camera .

May like to see and Share

K.Natarajan

03/06/2019

 

 

 

வாரம் ஒரு கவிதை ….” கண்டெடுப்பின் காலக் குறிப்புகள் “

கண்டெடுப்பின் காலக்  குறிப்புகள்
=================================
கடலில் மட்டும் முத்துக்கள் இல்லை
இந்த மண்ணின் அடியிலும் புதைந்து
கிடக்குது நம் முன்னோர் வடிவமைத்த
நகரமும் கோயிலும் அழகு சிற்பங்களுடன்
காலத்தால் அழியாத அடையாள சின்னமாய் !
எந்த தொழில் நுட்பம்   இருந்தது நம் முன்னோருக்கு
அன்று ? ஆண்டுகள் பல கடந்தும் அவர் பேர்
சொல்லுதே இன்னும் !
கணிணி யுகத்தில் வாழும் நாம்  முறையாக
பதிவு செய்ய வேண்டும் நம் நாட்டின்
அருமை பெருமையை ஒரு பொக்கிஷமாக !
விட்டு செல்ல வேண்டும் நம் பெயர் சொல்லும்
பாத சுவடுகளை இனி வரும் தலை முறை
பின் தொடர்ந்து நடக்க !
இனம் மதம் மொழி தாண்டி நாம் இன்று
பதிக்கும் பாத சுவடு கல்லில் வடித்த சிற்பமாய்
அடையாளம் காட்டும் நம் புனித மண்ணை
ஒரு புதிய பூமியாக என்றென்றும் !
K.Natarajan   in http://www.dinamani.com dated  01/06/2019
01/06/2019

மா வாழை… ஒரு அரிய காட்சி !!!

வாழை மர நட்புக் கரங்களில்  மாங்கனிக்   கொத்து  தன்  இலைகளுடன் …. மாவாழை … ஒரு பசுமையான காட்சி …. உடனே  “கிளிக் ” செய்தேன் என்

அலைபேசி  கேமரா மூலம் …என் வீட்டு  மாடியிலிருந்து !

நடராஜன் K

31/05/2019

 

 

 

 

வாரம் ஒரு கவிதை ….” கண் திறப்பாரா கடவுள் ” ?

கண் திறப்பாரா கடவுள் ?
++++++++++++++++++++++++++
வேண்டாத கடவுள் இல்லை ..செய்யாத பிரார்த்தனை
இல்லை ! கண் திறந்து பார்ப்பாரா கடவுள் ?
பூஜை அறையில் வேண்டி நின்றேன் கடவுளிடம்
இன்று காலை !
இதோ தந்து விட்டார் வரம் என் கடவுள் !
வாட்டர் டேங்கர் என் வீட்டு வாசலில் கொடுக்கிறது
ஒரு குரல் … குழல் இனிதல்ல , யாழ் இனிதல்ல
வாட்டர் டேங்கர் ஒலிப்பானே என் செவிக்கு
தேவ கானம் இன்று !
நாட் கணக்கில் மாதக்கணக்கில் காத்திருந்தேன்
கண் திறந்து விட்டார் கடவுள் இன்று !
நிறைந்தது என் வீட்டு வாட்டர் டேங்க்
மட்டும் அல்ல இன்று!  என் மனதும் தான் !!!
K .நடராஜன்
29/05/2019

வாரம் ஒரு கவிதை …” இழந்தது கிடைக்குமா எனக்கு ? “

 

இழந்தது  கிடைக்குமா  எனக்கு ?
===================================
வீடு இருந்தது… வீட்டை சுற்றி மரம் இருந்தது
மரம் நிறைய பறவைகள் கூட்டுக்குள்ளும்,
மரத்தின் கிளைகளிலும்!!! …வீட்டுக்குள்ளே
கிணறு  இருந்தது … கிணறு நிறைய தண்ணீர்!
வீட்டின் பின்னால் தோட்டம் .  தென்னம்
பிள்ளையும் வீட்டின் பிள்ளைகளோடு
பிள்ளைகளாக !
என் வீடு ,தோட்டம் இருந்த இடம்
இப்போ ஒரு பெரிய அடுக்கு மாடி
குடியிருப்பு ! என் ஒரு வீடு இருந்த
இடத்தில் இருக்கு இப்போ ஒரு நூறு வீடு !
பறவைக்கூடு போல நானும் ஒரு வீட்டுக்குள் !
தொலைத்து விட்டேன் என் பெரிய வீட்டை
கை நிறைய காசு , அடுக்கு மாடி சொகுசு
என்னும் மாய வலையில் சிக்கி !
தாத்தா நான் புலம்புகிறேன் இப்போ
தொலைத்து விட்டேனே ,தெரியாமல்
தொலைத்து விட்டேனே என்று !
என் புலம்பல் கேட்ட பேரன் கேட்டான்
தொலைந்தது என்ன என்று சொல்லுங்க
தாத்தா …நான் தேடி எடுத்துக் கொடுக்கிறேன்
உங்களுக்கு  என் கூகுள்  தேடல் வழியே !
நான் என்ன பதில் சொல்ல என் பேரனுக்கு ?
K.Natarajan
25/04/2019

வாரம் ஒரு கவிதை ….” பார்த்து நடந்து கொள் …தம்பி “

 

பார்த்து  நடந்து கொள் …தம்பி !
+++++++++++++++++++++++++++++++
காசை தண்ணீர் போல செலவு செய்றான் பாரு
இப்படி ஒரு சொல் கேட்டோம் நாம் ஒரு காலம் !
இன்று காசு கொடுத்தாலும் தண்ணீர் இல்லை !
தெரு குழாயில் தண்ணீர் பிடித்து தாகம் தணித்த
காலம் மாறி கையில் வாட்டர் பாட்டிலுடன்
சுற்றுகின்றோம்  இன்று !
தண்ணீரை காசு போல கணக்கு பார்த்து செலவு
செய்யும் காலத்தில் நாம் இன்று !
தண்ணீருக்கு வந்த நிலைமை சுவாசிக்கும்
காற்றுக்கும் வர வேண்டாம் ..தம்பி !
பார்த்து நடந்து  கொள்  தம்பி ..
.
ஒரு வாரத்துக்கு  தேவையான  ஆக்ஸிஜன்
சிலிண்டர் ஒன்று இலவசம் உங்களுக்கு சுவாசிக்க
என்று தேர்தல் நேரத்தில் கட்சிகள் எல்லாம்
அறிவிக்கும் அவலம் நேர வேண்டாம் உன்
காலத்தில் !
பார்த்து நடந்து கொள் …தம்பி நீ !
K .நடராஜன்
17/04/2019