வாரம் ஒரு கவிதை…” அழுத கண்ணீர் ” …

 

அழுத கண்ணீர் …
………………
.
தங்கத் தலைவர் மூவர் வங்கக் கடலோரம் துயில்  கொண்டாரே !
அலை கடலோரம் அமைதியாய் உறங்கும் தங்கள்
தலைவருக்கு விடை கொடுக்க திரண்ட அன்பு மக்கள்
வடித்த கண்ணீர்,  கடலையும் கண்ணீர் கடல் ஆக்கியதோ ?
நெஞ்சை அடக்கும் துக்கத்துடன் தொண்டர் பலர்  வடித்த
 கண்ணீர்,  வர வைத்ததே கண்ணீரை பலர் கண்ணிலும் !
அழுத கண்ணீர் கண்டு  தானும் அழுத மக்களில் நானும் ஒருவன் !
மாண்டவர்  மீண்டு  வருவதில்லையே என்று
மனம் பொங்கி தினம் தினம் கடல் வடிக்கும்
கண்ணீர்தானோ  தரை தொட்டு செல்லும் கடல் அலைகள் ?

வாரம் ஒரு கவிதை…” பணத்தின் மறு பக்கம் “

 

பணத்தின்  மறுபக்கம் …
…………………….
செல்லாத பணம் இது ..வேண்டாம் இது எனக்கு இனிமேல்!
தன்  மதிப்பு இழந்த பணம் வெற்று  காகிதமானதே ஒரே நாளில் !
நன் மதிப்புடன்  வாழ்ந்த மனிதர் பலர் விதியால் தன் பொருள்
இழந்து அவர் வாழ்வின் மறுபக்கம் காணும்  சோகம்
பார்த்து  மனம் கலங்கியதுண்டு  நான் ! ஒரே ஒரு
வரியால்  தன் மதிப்பை இழக்கும்  வரை பணத்துக்கும்
தெரியாது அதன் மறுபக்கம் என்ன என்று …!
பணத்தின் மறுபக்கம் என்ன என்று  பார்க்கும் மனிதனுக்கு புரிய வேண்டும்
அவன் வாழ்வின்  மதிப்பு  அவன் சேர்க்கும் பணத்தால் அல்ல என்று !
Natarajan
7th Dec 2016

வாரம் ஒரு கவிதை… ” புதையல் ” !

 

புதையல்
……….
கையில் இருக்கும் பொருளின் மதிப்பு தெரியாது நமக்கு
அது மண்ணுக்குள் புதையும் வரை … உறவுகளும்
இதில் அடங்கும் !  அன்பும் ஆதரவும்  தேடும்
முதியோரை உனக்கு கிடைத்த  புதையலாக
நினைத்து அரவணைத்தால் வேறு  எந்த ஒரு புதையலையும்
தேடி என்றும் அலைய வேண்டாம் தம்பி நீ !
காலம் மாறும்!  காட்சியும் மாறும்!  நீயும் ஒரு
புதையலாக தெரிய வேண்டும் ஒரு நாள் உன் பிள்ளைக்கு!..இந்த
புதையல் மட்டும் மண்ணில்  புதையாமல் வளர வேண்டும்
ஒரு மரமாக உன் வீட்டில் என்றும் ! புதையல் மரம்
துளிர்த்து தளிர்த்து வளர விதைத்திடு ஒரு விதை  நீ இன்று !
Natarajan
http://www.dinamani.com  dated 28th Nov 2016

வாரம் ஒரு கவிதை…” செல்லாக் காசு ” !!!

 

செல்லாக் காசு
………….
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம் ஒரே ஒரு சொல்லால் செல்லாக் காசானதே !
பார்த்து நடந்து கொள்  தம்பி …புரிந்து கொள்ளவேண்டும்  நீ …
செல்வாக்கு ஒருவனுக்கு அவன் சேர்த்து வைக்கும் பணத்தால் அல்ல என்று !
 சுத்தமான  சொல்வாக்கு தரும் உனக்கு ஒரு தனி செல்வாக்கு !
கறை  படியா கரமும் நெறிபிறழா வாழ்வு முறையும் சேர்த்து வைக்கும்
உனக்கு எங்கும் என்றும்  செல்லுபடியாகும் ஒரு செல்வாக்கை !
காசு பணம் செல்லாது நாளை முதல் என்று சொல்ல முடியும் ! ஆனால் மாசற்ற
செல்வாக்கு செல்லாது இனிமேல் என்று சொல்ல முடியுமா யாரும் ?
யோசிக்க வேண்டும் நீ…  தம்பி !
Natarajan
http://www.dinamani.com  dated 21st Nov 2016

Image of the Day… Amazing Photo of Super Moon on 14th Nov 2016 !!!

 

The lights around the moon are street lights and there is a tree in front of the moon like veins on moon….!!!

Photo Credit  by Senthil Natarajan , Brisbane , Australia

Photograph taken by him on the night of Super Moon Day …14 Nov 2016

Source…Facebook post of Senthil Natarajan

Natarajan

 

15094496_10154788090699630_1663026486696801254_n

வாரம் ஒரு கவிதை …”வழி தவறிய பயணங்கள் ” !!!

 

 “வழி தவறிய பயணங்கள்”
………………………………………………………..
வழி தவறிய பயணம் நெறி தவறி தொடர்ந்தால்  அது
செல்லாத காசுக்கு சமம் !..சொல்லாமல் சொல்லும் அது உன் வாழ்க்கை
ஒரு செல்லாத காசு என்று …! பகிர்ந்து உண்ணும் பண்பும்  நலிந்தோரிடம்
அன்பு காட்டும் மனமும் இல்லாத ஒருவன் வாழ்க்கை பயணம்
கரை சேர்க்காது அவனை ஒரு நாளும் ! நெறிமுறை எதுவும்
இல்லாத வாழ்வும் கறை படிந்த கரங்கள் சேர்க்கும் பணமும்
தரை தட்ட வைக்கும் அவன்  வாழ்க்கை பயணக் கப்பலை !
வாழ்க்கை பயணத்தில் கரை சேர வழி பல உண்டு …ஒரு
வழி தவறினாலும்  நெறி பிறழாமல் ஒருவன்  தொடரும்
பயணம் சேர்க்கும்  செல்வாக்கு அவன் வாழ்வுக்கு !
Natarajan
http://www.dinamani.com  dated 14th Nov 2016

வாரம் ஒரு கவிதை …” பட்டதாரி ” !!!

 

பட்டதாரி …
………..
பட்டங்கள் பலப் பல …வாங்கிய பட்டம் தேனாய் இனிக்கும் பட்டதாரிக்கு  வேலை
ஒன்று  கட்டாயம் கிடைத்தால் ! வேலை  இல்லாவிட்டால் “வேலையில்லா “
என்னும் ஒரு புதிய பட்டம் மட்டும் கிடைக்கும்  அந்த பட்டதாரிக்கு !
சட்டம் ஒன்றும் இல்லையே பட்டம் வாங்கினால் வேலை உண்டு என்று !
சட்டம்  படித்த  பட்டதாரிக்கே  வேலை இல்லையே இன்று !
“வேலையில்லா பட்டதாரி” என்னும் ஒரு  வட்டத்தில் சுழலாமல்
திட்டம் போட்டு தன்  கையே தனக்கு உதவி என ஒரு தொழில்
செய்ய நீ முனையும் நேரம்  “வேலையில்லா ” பட்டதாரி உன்
வாழ்வில் ஒரு நல்ல நேரமாக மாறும் !
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்  கவலை உனக்கு
இல்லை இனி என ஒத்துக்கொள் என்னும் ஆன்றோர்
வாக்கு  இன்றும்  பொய்யா வாக்குதான் ! மறவாதே இதை நீ
தம்பி ! உனக்கு ஒரு வேலை நீ தேடுவதை விடுத்து “செயலி “
எத்தனை  எத்தனை  “செயல் ” படுத்த முடியும் உன்னால்   என்று
சற்றே மாற்றி யோசி தம்பி ! மாறலாம் நீ  ஒரு தொழில் முனைவோனாக !
உன் கணினியும்  கைபேசியுமே  உனக்கு மூலதனம் ! உன் தொழில்
நுட்ப அறிவும்  , “செயலி ” உருவாக்கும்  திறனும் மாற்றும்
உன்னை,  நீ  பலருக்கு வேலை கொடுக்கும் தொழில் பட்டதாரியாக !
வேலை இல்லா  பட்டதாரி இல்லை இங்கு இனிமேல் என்னும் ஒரு
நாளை மலர செய்வதே இனி உன் வேலை ! மாற்றி யோசிக்கும்
யாருக்கும் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் உண்டு கட்டாயம் !
Natarajan
8th nov 2016

வாரம் ஒரு கவிதை… ” பட்டாசு சத்தம் ” !

 

பட்டாசு  சத்தம்
……………
பட்டாசு சத்தத்தில் பறக்க   மறந்தன பறவைகள் …கண்
திறக்காமல் பயந்து  அழுதன    சிறு குழந்தைகள் !
மறக்காமல்  இனிப்பு சுவைத்து வாழ்த்துக்கள் சொன்னது
“பெரிய” மனிதர்கள் நாம் மட்டுமே !  !   ஆனால் …வெடித்த
பட்டாசு சத்தத்தில் நாமும் மறந்தது நமக்கு பட்டாசு கொடுக்கும்
அந்த சிவகாசி சிறாரின்  அவல நிலையை !…வான வேடிக்கை
வெளிச்சத்திலும் நாம் நினைத்துப் பார்க்க   மறந்தது ஒரு சிவகாசி தொழிலாளியின்
இருண்ட   வாழ்க்கையை …!  அது மட்டுமா ?
நீரின்றி வாடும் தன்  நிலம் பார்த்து சத்தம்  போட்டு
அழும் அந்த  உழவனின்  மனக்குமுறலை  மறைத்ததும்
இந்த பட்டாசு சத்தம்தான் !
சுத்தமான காற்று  சத்தமில்லாமல்  தொலைந்து
மறைந்து போனதும் இந்த பட்டாசு  சத்தம் போட்டு
விட்ட கரும் புகையினால்தானே !
தீப ஒளி மட்டும்  ஏற்றி  புத்தாடையுடன் பலகாரமும்  நலிந்தோர்
வீட்டுக் குழந்தைகளுடன்   பகிர்ந்து மகிழும் பண்பை நம் பிள்ளைக்கு
நாம் போதிக்க வேண்டும் ஒரு பால பாடமாக ! இந்த பாடம்
ஒரு நல்ல வித்தாகும் பட்டாசு சத்தமும் புகையும் இல்லா தீபாவளி
திருநாள் ஒருநாள் பூத்து மலர !
Natarajan
http://www.dinamani.com  …on 1st Nov 2016

சஷ்டி கவசம் பிறந்த கதையை தெரிஞ்சுக்கோங்க! …

Source..    Valaiyapettai R. Krishnan in http://www.vikatan.com

Natarajan
உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிந்த பெரும்பாலான இந்து மக்கள் இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் தினமும் ஒலிக்கும் திருமுருகனின் தெய்வீகத் தமிழ்ப்பாடல் அது. படிப்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் மந்திர மறை நூல்! அது என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே!

mur_1_18161

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட…

என்று தொடங்கி கேட்கும் இடங்களிலெல்லாம் நம்மைத் திரும்ப உச்சரிக்கவைக்கும்; உள்ளத்திலும் உடலிலும் அதிர்வு தரும் ஆற்றல் மிக்க அழகு முருகனின் அருந்தமிழ்ப் பாமாலை. அதுதான் அனைவரும் அறிந்த கந்தர் சஷ்டி கவசம். இதனைப் பாடியவர் தேவராய சுவாமிகள் என்னும் அருளாளர். அவர் இக்கவசத்தைப் பாடிய பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

ஒருமுறை, பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் சென்றார் தேவராயர். மலையைச் சுற்றி கிரிவலம் வந்தார். அங்குள்ள மண்டபங்களில் உடல்நோயால் பீடிக்கப்பட்டவர்கள். மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற் றோர் எனப் பலர் அழுவதும் அரற்றுவதும் கண்டு மனம் வருந்தினார். அவர்கள் அனைவரும் நலம்பெற ஞானபண்டிதன் வழிகாட்ட வேண்டும் என்று மனத்தில் உறுதிகொண்டார். பழநியாண்டவர் கோயில் மண்டபத்தில் துயில் கொண்டார். அன்றிரவு அவரது கனவில் பழநியப்பரமன் பிரசன்னமானார்.

mur_2_18409

‘உன் எண்ணம் ஈடேற அருளினோம்.பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகிலுள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு!’’ என்று ஆசியளித்து கந்தவேள் மறைந்தார்.

உடனே பரவசத்துடன் எழுந்தார் தேவராயர். ‘‘அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!’’ என்று ஆடிப்பாடி மகிழ்ந்தார். மயில்மேல் வலம் வரும் அயில் வேலனைப் போற்றுவோர்பால் மறலியும் அணுகமாட்டான் என்று முருகன் திருவருளை வியந்து போற்றி பாமாலை சூட்டியருளினார். அதுதான் 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம் என்னும் புகழ்பெற்ற தோத்திரம்.

mur_6_18306

mur_3_18027

பாலதேவராய சுவாமிகள்

கந்தர் சஷ்டி கவசம் பாடிய தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர், அவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை என்றும், அவர் கணக்கர் வேலை பார்த்தவர் என்றும் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.

வீராசாமிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாமல் முருகன் திருவருளால் தேவராயர் பிறந்தார். நன்கு கல்வி கற்று வியாபார நிமித்தமாக பெங்களூரு சென்று அங்கு தமது வணிகத் தொழிலை மேற்கொண்டார். திருவாவடுதுறை ஆதினத்தில் பெரும் புலவராகத் திகழ்ந்த திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பெங்களூர் வந்தபோது தேவராயர் அவரைத் தமது இல்லத்துக்கு அழைத்து உபசரித்து மகிழ்ந்தார்.

பிள்ளையவர்களிடம் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாம் இயற்றிய கவிதைகளை மகாவித்வானிடம் காட்டி பிழை திருத்தம் செய்துகொள்வாராம். தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேட மலை மாலை முதலிய நூல்களை தேவராயர் இயற்றியதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் எழுதியுள்ள மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வரலாற்றில் தேவராயர் அவரது மாணவர் என்பதற்கான குறிப்பு எதுவும் காணப்பெறவில்லை.

mur_4_18407

சஷ்டிக்கவசம் பாடப்பட்டது எந்த ஊரில்?

தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார் என அறிய முடிகிறது. தற்போது அனைவரும் பாராயணம் செய்யும் கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது என்று கூறிகிறார்கள். ஆயினும் இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் ‘பழநிமலையின் மீது’ கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறு  குழந்தை வடிவாகிய முருகப் பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்’ (பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்று பாடியுள்ளார். எனவே இக்கவசம் பழநியில் பாடப்பெற்றது என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றையும், இவ்வரிகளையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.

மேலும் ‘எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய் (156, 157) மைந்தன் என்மீது உன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்! (198, 199) எனைத்தடுத்து ஆட்கொள் எந்தனது உள்ளம் மேவிய வடிவுறும் ‘வேலவா போற்றி’ (227,228) என்ற வரிகள் மூலம் பழநிப் பரமன் ஆட்கொண்டு இக்கவசம் பாட வைத்ததை உறுதியாகக் கூறலாம். இப்பாமாலையை சிரகிரி எனப்படும் சென்னிமலையில் அரங்கேற்றியதாகச் சிலர் கூறுவர். ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் காணப்பெறவில்லை.

mur_5_18101

கவலைகள் தீர்க்கும் கந்தசஷ்டி கவசம்

இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறு முறை ஓதி ஜபம் செய்து திருநீறணிய எல்லா நோயும் நீங்கும்; நவக்கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்வர்; என்றும் இன்பமுடன் வாழ்வர் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் தேவராயர்.
‘சரவணபவ’ எனும் திருநாமம் இந்த கந்தர்சஷ்டி கவசத்தின் மூல மந்திரமாகும். இந்நூலின் முதல், இடை, கடை (1, 16, 162, 237) பகுதிகளில் இந்த மூலமந்திரத்தைப் பொருத்தி இதனைப் பாடியுள்ளார் என்று கருத முடிகிறது. முருகனடியார்கள் அனைவரும் விரும்பிப் படிக்க வேண்டும் என்பதற்காக வள்ளியம்மையாரின் குழந்தையாகிய தேவராயன் இயற்றியதாகக் (கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை) குறிப்பிடுகிறார். கவசத்தின் ஒவ்வோர் அடியும் கந்தசுவாமியின் திருக்கையிலுள்ள வேலைப் போன்றது.
ஞானாசாரியார் ஒருவரின் மூலம் அந்த அடிகளின் உண்மைப் பொருள்களைத் தெளிவாக உணரலாம். உடல், உள்ளம், உயிர் அனைத்துக்கும் வேலே கவசமாக உள்ளது. கந்தர் சஷ்டி கவசம் மந்திர மறை நூல் என்பது, பாராயணம் செய்து பலன் அடைந்தவர்களது அனுபவ உண்மையாகும்.

mur_7_18532

 

 

 

 

படித்து ரசித்தது ….நீங்களும் படித்து ரசிக்க …!