வால்ட் மார்ட்’க்கு எதிராக போராட்டங்களை நடத்திய காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், 1000 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனமான ‘டெல்டா மார்ட்’ என்ற நிறுவனத்தைதிறந்திருக்கிறார்கள்.
இயக்குநர்குழு, ஆலோசனைக்குழு, மையக்குழு ஆகிய மூன்று அடுக்கு நிர்வாக முறையை கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்ப வணிகக் காப்பகத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் செயல்படுகிறது.
வேளாண்மைத் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்துதல், மண்வளம் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாத்தல், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மதிப்புக் கூட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளை தருதல், விவசாயி உற்பத்தி செய்யும் பொருளை இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயியே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கியிருக்கிறார்கள்.

“டெல்டா மார்ட்டை நாங்கள் உருவாக்கியதன் நோக்கம், விவசாயிகளிடையே உற்பத்தி செய்கின்ற பொருளை, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக நாங்களே குறைந்த விலையில் நுகர்வோருக்கு கொடுக்க வேண்டுமென்பதே. அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களையும் வெளிமார்க்கெட் விலையைவிட மிகக் குறைவாக கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். ‘நம்மால் முடியும்!’ என்ற தன்னம்பிக்கையை ஒவ்வொரு விவசாயிடமும் உருவாக்கவேண்டும் என்பதும் எங்கள் டெல்டா மார்ட் துவக்கத்தின் முக்கிய நோக்கம்.
இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கின்ற உழவர்கள், தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருளை விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது. சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், விவசாயி இடைத் தரகர்களாலும், அரசுகளாலும் இன்னும் அடிமைப்பட்டுத்தான் கிடக்கின்றான். அதை களைந்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், பிறகு ஒவ்வொரு ஒன்றியத்திலும் நிறுவ திட்டமிட்டிருக்கிறோம்.

விவசாயத்தை மட்டுமே செய்து வந்த விவசாயிகளுக்கு சந்தையை பற்றி தெரியாது. கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருளை, இடைத்தரகர்கள் எப்படியெல்லாம் விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, உற்பத்தி செய்வதோடு சந்தைபடுத்துவதிலும் அவர்களை தேர்ந்தவர்களாக்குவதற்கு இந்த அமைப்பு வழிசெய்யும்.
விவசாயிகள் பிள்ளைகள் விவசாய தொழிலில் ஈடுபடுவதில்லை. காரணம் போதிய வருமானம் இல் லாதது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நவீனத்தன்மை இல்லாததால், ஆர்வம் இல்லாமல் மாற்று வேலைக்கு செல்கிறார்கள். அவர்களையெல்லாம் விவசாயத்தின் பக்கம் திருப்பும் வகையில் இந்த நிறுவனம் விவசாயிகளுக்காகவும், நுகர்வோர்களுக்காகவும் பாடுபடும்” என்கிறார் காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பாண்டியன்.
மற்றொரு செயல் இயக்குநர் பன்னீர்செல்வம் கூறுகையில், “120 விவசாயிகள் தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்யும் பொருட்களை இங்கு விற்பனை செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்களின் பொருட்களை மட்டுமல்ல மற்ற விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களையும் நாங்கள் கொள்முதல் செய்கிறோம். எங்களின் நோக்கம் இடைத்தரகர்கள் இல்லாமல் கொள்முதல் செய்து, உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக லாபம் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

உழவர் சந்தை, மார்க்கெட்டுகளைவிட எங்கள் டெல்டா மார்க்கெட்டில் விலை குறைவாக கிடைக்கும். அதாவது வாழைப்பழ தாரை ரூபாய் 250க்கு விவசாயிகளிடமிருந்து வாங்கும் வியாபாரிகள், அதை விற்பனை செய்யும்போது ஒரு பழம் 5 முதல் 7 ரூபாய் வரை விற்கிறார்கள்.
அதே வாழைப்பழ தாரை டெல்டா மார்க்கெட் விவசாயிடம் ரூ.400 க்கு வாங்கி 5 ரூபாய்க்குள் விற்கலாம். இதில் நுகர்வோருக்கும் லாபம். டெல்டா மார்ட்டுக்கும் லாபம். விவசாயிகளுக்கும் லாபம் தரும்.
அதுதான் எங்கள் டெல்டா மார்ட்டின் நோக்கம். இயற்கை விவசாயம் செய்த தேங்காய் 30 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதே தேங்காயை 20 ரூபாய்க்கு நாங் கள் தருகிறோம். சாதாரண தேங்காய் வெளிமார்க்கெட்டில் 15 ரூபாய் என் றால், எங்களிடம் 12 ரூபாய்க்கு கிடைக்கும்.
இதுமட்டுமில்லாமல் விவசாய இயந்திரங்களை நாங்களே கம்பெனிகளி டமிருந்து வாங்கி, அதை விவசாயிகளிடம் விற்பனை செய்யவும் முயற்சி எடுத்து வருகிறோம். ஒரு டிராக்டரை வாங்கி விற்பனை செய்தால் 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.
இதிலிருந்து கிடைக்கின்ற லாபத்தை, ஆயிரம் உறுப்பினர்களுக்கும் அவர்கள் செலுத்தியிருக்கிற முதலீட்டுக்கு தக்கபடி லாபத்தை பிரித்துக்கொடுப்போம். எங்களின் அடுத்த இலக்கு ஆயிரம் டெல்டா மார்ட்டை டெல்டா மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்பதே” என முடித்தார்.
நலிந்து போன விவசாயத்தின் இருள்படர்ந்த நிலப்பரப்பில் ‘டெல்டா மார்ட்’ என்ற சின்ன ஒளிக்கீற்று தென்படுகிறது. ஆயிரம் விவசாயிகளின் கூட்டு முயற்சி அடுத்த தலைமுறையினரை காக்கட்டும்.
வாழ்த்துவோம் விவசாயிகளை!
– ஏ. ராம்
படங்கள்: கே. குணசீலன்
Source…www.vkalathurseithi.com
Natarajan
























Long before the bonsai art form of creating miniature trees came to Japan, the wealthy in China were perfecting their craft known as “penzai” and “penjing.” The former means “tray plant” and the latter “tray scenery.” It is from the Japanese pronunciation of “penzai” that the word “bonzai” ultimately derives- “bon” meaning “tray-like” and “sai” meaning “planting.” (The Japanese equivalent of penjing is bonkei, meaning “tray landscape.”)
