” சுப்‌பா ராவ் …. மறக்கப்பட்ட ஒரு மா மேதை … “

சுப்பாராவ் சுப்பாராவ்

இந்திய அறிவியல் மேதை ஒருவர் புறக்கணிக்கப்பட்டதன் துயர வரலாறு!

அண்மையில் ஒரு கருத்தரங்கில் எல்லாப்ரகத சுப்பாராவைப் பற்றி ஓர் அமெரிக்க விஞ்ஞானி குறிப்பிட்டபோது அங்கிருந்த பலர், ‘யாரது?’ என்று கேட்டார்கள். அப்போது எழுந்த எனது வருத்தத்தின் விளைவே இந்தக் கட்டுரை.

ஆந்திரத்தில் உள்ள பீமாவரத்தில் 12.1.1895-ல் பிறந்தார் சுப்பா ராவ். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தந்தை இறந்ததால், படிப்பில் கவனம் செல்லவில்லை. என்றாலும், ஏதாவது பெரிய சாதனைகளைச் செய்து பெயரும் புகழும் பெற வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. தனது 13-வது வயதில் காசிக்குப் போய் வாழைப்பழ வியாபாரம் செய்து நிறையப் பணம் சம்பாதிக்க முயற்சி செய்தார்.

ஆனால், அவருடைய தாயார் அவரைத் திரும்ப அழைத்துவந்து, சென்னையில் ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். ஒருவழியாக மூன்று படையெடுப்புகளுக்குப் பின் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார் சுப்பா ராவ். நண்பர்களும் கஸ்தூரி சூரியநாராயண மூர்த்தி என்ற உறவினரும் பண உதவி செய்ததால் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பிற்பாடு, அந்த உறவினரின் மகளைத் திருமணமும் செய்துகொண்டார்.

பட்டம் இழந்தார்

காந்தியின் விதேசிப் பொருள் பகிஷ்கரிப்புப் போராட்டத்தால் கவரப்பட்டு, கதர் துணியாலான கோட்டுகளை அணிந்து, கல்லூரிக்கு வரத் தொடங்கினார். அவருக்கு அறுவையியல் துறை ஆசிரியராக இருந்த பிராட்ஃபீல்டுக்கு அது அதிருப்தியைத் தந்தது. தேர்வுகளில் சுப்பா ராவ் சிறப்பாக விடையளித்திருந்தபோதிலும் அவருக்கு எம்.பி.பி.எஸ். பட்டம் கிடைக்க விடாமல் தடுத்து, எல்.எம்.எஸ். என்ற கீழ்நிலைச் சான்றிதழை வழங்கச் செய்துவிட்டார். அடுத்து, சுப்பா ராவ் சென்னை மருத்துவ சேவை அரசுப் பணியையும் பெற விடாமல் பிராட்ஃபீல்ட் முட்டுக்கட்டை போட்டார்.

சென்னையில் இருந்த டாக்டர் லட்சுமிபதியின் ஆயுர்வேதக் கல்லூரியில் உடற்கூறியல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார் சுப்பா ராவ். ஆயுர்வேத மருந்துகளின் நோய் தீர்க்கும் திறன்களால் கவரப்பட்ட சுப்பா ராவ், மேலைநாட்டுப் பகுப்பாய்வு முறைகளில் பரிசோதித்து ஆயுர்வேதத்தை நவீனப்படுத்த முனைந்தார்.

உயிரி வேதியியலில் பட்டம்

ராக்ஃபெல்லர் கல்விக்கொடைத் திட்டத்தின் உதவியுடன், இந்தியாவுக்கு வந்திருந்த ஓர் அமெரிக்க மருத்துவருடன் தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பு அவருடைய மனதை மாற்றியது. அறக்கொடை ஒன்றின் ஆதரவையும் மாமனாரின் பண உதவியையும் பெற்று சுப்பா ராவ் 1922-ம் ஆண்டு அக்டோபர் இறுதியில், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகருக்குப் போய்ச் சேர்ந்தார்.

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் சேர்ந்து, வெப்பமண்டல நோய் மருத்துவத்தில் டிப்ளமா பட்டம் பெற்றார். அதன் பின்னர், மருத்துவத் தொடர்பில்லாத உயிரி வேதியியல் பயின்றார். அடுத்து, அதே பள்ளியில் ஓர் இளநிலை ஆசிரியராகச் சேர்ந்தார். அவருக்கு உயிரி வேதியியலில் ஆர்வம் மேலிட்டு, அத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். திசுக்களிலும் உடல் திரவங்களிலும் பாஸ்பரஸின் செறிவை அளவிட ஓர் உத்தியை சுப்பா ராவ் கண்டுபிடித்தார். சில குறிப்பிட்ட வளர்சிதை மாற்றக் கோளாறுகளைக் கண்டறிய அவருடைய உத்தி இன்றளவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. தசைச் செயல்பாடுகளில் பாஸ்போ கிரியேட்டின் அடினோசைன் டிரைபாஸ்பேட் ஆகியவற்றின் பங்குபற்றி அவர் கண்டுபிடித்த விவரங்கள் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் உயிரி வேதியியல் பாடநூல்களில் இடம்பிடித்திருக்கின்றன.

அவருடைய ஆய்வு வழிகாட்டியாக இருந்த சைரஸ் ஃபிஸ்கி, சுப்பா ராவின் பங்களிப்பை மறைத்து அதற்கான பெருமையைத் தனதாக்கிக்கொண்டார். அதன் காரணமாக, சுப்பா ராவுக்கு ஹார்வர்ட் பள்ளியில் நிரந்தரமான பணி கிடைக்காமல் போயிற்று.

பாஸ்பரஸ் கொள்கை தவறு

அடுத்து, சுப்பா ராவ் பாஸ்பரஸின் வளர்சிதை மாற்றத்தைப் பற்றி ஆய்வு செய்தார். அதற்கு முன்பே ஆர்ச்சிபால்ட் ஹில், ஆட்டோ மெயர்ஹாஃப் என்ற இரு ஆய்வர்கள் அதை ஆராய்ந்து ஒரு கொள்கையை உருவாக்கி, அதற்காக 1922-ம் ஆண்டில் நோபல் பரிசையும் வென்றிருந்தார்கள். சுப்பா ராவ் அந்தக் கொள்கை தவறானது என்று நிரூபித்தார். அதன் காரணமாக உயிரி வேதியியல் ஆய்வு வட்டாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. சுப்பா ராவின் கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் கிடைப்பதும் தாமதமாயிற்று.

தசைகளுக்குத் தேவையான ஆற்றல் பாஸ்போ கிரியேட்டின், அடினோசைன் டிரைபாஸ்பேட் ஆகியவற்றிலிருந்தே கிடைக்கிறது என்று சுப்பா ராவ் நிரூபித்தார். அதற்கான பெருமையையும் ஃபிஸ்கியே தனதாக்கிக்கொண்டார். எனினும், அவருடைய சக ஆய்வர்களுக்கு சுப்பா ராவின் பங்களிப்பு தெரிந்தேயிருந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சுப்பா ராவுக்குப் பயிற்சியும் உறைவிடமும் அளித்தபோதிலும் அவருக்குத் தேவையான ஆய்வக வசதிகளை வழங்கவில்லை. இதனால் மனம் கசந்த சுப்பா ராவ், அங்கிருந்து விலகி லெடர்லி ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார்.

கீமோதெரபியின் முன்னோடி

அங்கு அவர் வைட்டமின்களைப் பற்றியும் நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பற்றியுமான ஆய்வுகளில் பங்கேற்றார். பன்றியின் கல்லீரலிலிருந்து ஃபோலிக் அமிலத்தைப் பிரித்தெடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார். அடுத்து ஒரு நுண்ணியிரிக் கரைசலை நொதிக்க வைத்து, அதிலிருந்து ஃபோலிக் அமிலத்தைப் பிரித்தெடுக்கச் செலவு குறைவான ஒரு முறையை உருவாக்கினார். அதையடுத்து வேதிமுறையில் ஃபோலிக் அமிலத்தைச் செயற்கையாக உற்பத்தி செய்யும் முறையையும் கண்டுபிடித்தார்.

ஃபோலிக் அமிலம் ரத்த சோகைக் கோளாறைக் குணப்படுத்த உதவும். சிட்னி ஃபார்பர் என்ற ஆய்வருடன் சேர்ந்து மித்தோட்ரெக்சேட் என்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்கினார். புற்றுநோய்க்கான கீமோதெரபிக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட வேதி மருந்து அதுவே. இன்றளவும் அது பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் (W.H.O.) யானைக்கால் வியாதியைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஹெட்ராசான் என்ற மருந்தையும் சுப்பா ராவ் கண்டுபிடித்தார்.

மண் மாதிரிகளின் சேகரம்

இரண்டாம் உலகப் போர் முடிந்து, ஊர் திரும்பிக்கொண்டிருந்த அமெரிக்கப் படை வீரர்களைத் தாம் சென்ற இடங்களில் இருந்தெல்லாம் மண் மாதிரிகளைச் சேகரித்து வருமாறு லெடர்லி ஆய்வகம் கோரியது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட பல்லாயிரம் மண் மாதிரிகளிலிருந்து சுப்பாராவும் பெஞ்சமின் டுக்கர் என்ற தாவரவியல் நிபுணரும், நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் பெற்ற கிருமிகளையும் பூஞ்சைகளையும் பிரித்தெடுத்தனர். அவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மண் மாதிரிகளை அதுவரை எந்த ஆய்வர்களும் பகுப்பாய்வு செய்ததில்லை என்ற வகையில், அது ஒரு உலக சாதனை என்று பாராட்டப்பட்டது.

குழந்தைகளைக் காத்தவர்

குழந்தைகளைப் பீடிக்கும் லூகோமியா ரத்தப்புற்று நோயைக் குணப்படுத்தும் எதிர்ஃபோலிக் அமிலம் ஒன்றை சுப்பா ராவ் உருவாக்கியதன் மூலம், பல குழந்தைகளை மரணத்திலிருந்து மீட்க உதவியிருக்கிறார்.

இவ்வளவு சாதனைகளைச் செய்த பின்னரும், சுப்பா ராவ் எல்லாப் பெருமையும் சக ஆய்வர்களுக்கே என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார். அதன் காரணமாக, அவருக்கு ஏராளமான வருமான வாய்ப்புகள் கைநழுவிப்போயின. அவருக்கு வியாபார சாமர்த்தியமே கிடையாது என்று ஒரு காப்புரிமை வழக்கறிஞர் சலித்துக்கொண்டார். எனினும், மருத்துவ அறிஞர்கள் எல்லோருமே அவரது பங்களிப்பை அங்கீகரித்தார்கள். சுப்பா ராவுடன் பணியாற்றியவரான ஜார்ஜ் ஹிட்சிங்ஸ் 1988-ம் ஆண்டில் ஜெர்ட்ரூட் எலியான் என்பவருடன் உடலியக்கவியலுக்கான நோபல் பரிசைப் பங்கிட்டுக்கொண்டவர். சுப்பா ராவின் கண்டுபிடிப்புகளை ஃபிஸ்கி மறைத்துவைத்ததன் காரணமாக, அவர் கண்டு

பிடித்து வைத்திருந்த பல நியூக்ளியோடைடு வகைச் சேர்மங்களைப் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிதாகக் கண்டுபிடிக்க நேர்ந்தது என்று ஹிட்சிங்ஸ் புலம்பியிருக்கிறார். சுப்பா ராவின் தன்னலமற்ற இந்தக் குணமே, நோபல் பரிசை அவர் வெல்லும் வாய்ப்புகளை இழக்கச் செய்தது. நோபல் பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் ஸ்டாக்ஹோம் கரோலின்ஸ்கா ஆய்வுக் கழகத்தில் பேராசிரியராக இருந்த எரிக் ஜோர்ப்ஸ், மருத்துவ வேதியியல் களத்தில் முக்கியமான சாதனைகளைப் படைத்தவர்களில் ஒருவர் சுப்பா ராவ் எனப் புகழ்கிறார்.

அமெரிக்காவின் சையனமிட் ஆய்வகம் தான் கண்டுபிடித்த பூஞ்சை ஒன்றுக்கு சுப்பா ராவின் பெயரைச் சூட்டியுள்ளது. சுப்பா ராவ் 1948 ஆகஸ்ட் 9-ம் நாள் நியூயார்க்கில் காலமானார். அப்போது அவருக்கு 53 வயதுதான். “டாக்டர் சுப்பா ராவைப் பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்கக் கூடும். ஆனால், அவர் வாழ்ந்ததால்தான் நீங்கள் இன்று உயிருடன், தேக நலத்துடன் வாழ்கிற வாய்ப்பு கிட்டியிருக்கிறது. நீங்கள் இன்னும் பல காலம் உயிர் வாழ்வதற்குக்கூட அவர் காரணமாக இருக்கக்கூடும்” என்று டோரன் ஆன்ட்ரிம் என்னும் மருத்துவ நிபுணர் 1950, ஏப்ரல் மாதத்திய ‘ஆர்கோசை’ என்ற சஞ்சிகையில் எழுதியிருக்கிறார்.

– கே.என். ராமசந்திரன்,
பேராசிரியர், ஓய்வு

SOURCE::::  www.tamil.thehindu.com.
Natarajan
Jan 12 2015

ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்…பிள்ளையாருக்கு வாழைப்பழம் , அணிலுக்கு முந்திரிப்பருப்பு …”

கே.என்.சாஸ்திரி என்பவர் ரமணரைப் பார்க்கப் போகும்போது கையில் ஒரு சீப்பு வாழைப்பழம் கொண்டுபோனார். போகும் வழியில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குப் போனார். சீப்பிலிருந்து பழத்தைப் பிய்த்தெடுக்காமலே சாஸ்திரி ஒரு பழத்தை மட்டும் அங்கிருந்த பிள்ளையாருக்கு மனதாலே நிவேதனம் செய்தார்.

இறுதியில் அவர் பகவானைப் பார்த்து பழங்களைக் கொடுத்தார். அங்கிருந்த ஒரு சாது பழச்சீப்பை குகைக்குள் வைப்பதற்காக எடுத்துப் போகும் நேரம் பகவான் ‘ஒரு நிமிஷம், பிள்ளையாருக்குக் கொடுத்த பழத்தை நாம எடுத்துக்கலாம்’ என்று சொல்லி ஒரு பழத்தை வாங்கிக் கொண்டதும் சாஸ்திரியார் வியந்து போனார். எது தெரியாது பகவானுக்கு?

 

ஆச்ரமத்தின் கூடத்தில் இருக்கும் கட்டிலில் ஸ்ரீ ரமணர் சாய்ந்து அமர்ந்திருந்தார். வழக்கமாக அந்த நேரத்தில் வருகின்ற அணிற்பிள்ளைகள் வந்தன. சிறிதும் பயமின்றி ஸ்ரீ ரமணரின் மேனியில் ஏறியும் இறங்கியும் விளையாடின. ஸ்ரீ ரமணர் தமது அருகிலிருந்த டப்பாவைத் திறந்து பார்த்தபோது, அன்று முந்திரிப் பருப்புக்குப் பதிலாக அதில் வேர்க்கடலை இருந்தது. தினந்தோறும் அணில்கள் ஸ்ரீ ரமணரின் கையிலிருந்து முந்திரிப் பருப்பை வாங்கி உண்ணும். அவரே ஊட்டவும் செய்வதுண்டு.

இன்று வேர்க்கடலையை அவர் ஊட்டியதும் அணிற்பிள்ளைகள் அதை ஏற்க மறுத்தன. அது மட்டுமில்லாமல் முந்திரி கிடைக்காத கோபத்துடன் ‘கீச் கீச்’சென்று கத்திக் கொண்டே தாவித் தாவி அவருடைய உடம்பில் ஏறின. “வேர்க்கடலையைச் சாப்பிடுங்கள்” என்று குழந்தையைக் கெஞ்சுவதுபோல ஸ்ரீ ரமணர் அணிற் பிள்ளைகளைக் கொஞ்சினார். அவையோ தொட மறுத்தன. முந்திரிப்பருப்பு வேண்டும் என்பதுபோல அடம் பிடித்தன. ஸ்ரீ ரமணர் சமையலறையிலிருந்து முந்திரி இருந்தால் கொண்டு வருமாறு தொண்டர் கிருஷ்ணசாமியிடம் கூறினார்.

தொண்டர் சிறிதளவு முந்திரியைக் கொண்டுவந்து கொடுத்தார். “இவ்வளவுதான் இருக்கிறதா ?” என்றார் ஸ்ரீ ரமணர். தொண்டர், “பாயசத்திற்குப் போடணும்னு கொஞ்சம் வைத்திருக்கிறது” என்றார்.

“இந்தக் குழந்தைகள் எப்படி தவிக்கின்றன. போ போ. பாயசத்திற்கு முந்திரி போடணும்னு கட்டாயமில்லை” என்று ஸ்ரீ ரமணர் கோபமாகக் கூறியதும் தொண்டர் சமையலறையிலிருந்த முந்திரி முழுவதையும் கொண்டு வந்து கொடுத்தார். ஸ்ரீ ரமணர் ஆசையுடன் ஊட்ட, அணிற்பிள்ளைகள் சந்தோஷக்குரல்களுடன் உண்டபோது, ஸ்ரீ ரமணரின் வதனத்தில் கருணையொளி வீசியது.

மறுநாளே சென்னையிலிருந்து வந்த பக்தர் ஒருவர் ஸ்ரீ ரமணரிடம் இரண்டு பெரிய பொட்டலங்களில் முந்திரிப்பருப்பு கொண்டுவந்து, “அணிற்பிள்ளைகளுக்கு அளிப்பதற்காகவே கொண்டு வந்தேன்” என்றார். ஸ்ரீ ரமணர் அணிற்பிள்ளைகளுக்குத் தேவையானது கிடைத்ததில் ஆனந்தம் அடைந்தார்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

SOURCE:::: http://www.balhanuman.wordpress.com

Natarajan

Jan 12 2015

Image of the day… Awesome Video of A Plane Crossing SUN …!!!

 

Talk about being in the right place at the right time! Noel Keating tried all last year to capture video of a plane crossing the sun. On January 3, 2015, he did it!

EarthSky Facebook friend Noel Keating captured this cool video of a plane crossing the face of the sun on January 3, 2015. He wrote:

I saw the plane way off in the distance, and I did what I normally do. I used the vapor trail of the plane to guide a line across the sky towards the sun to see it if would line up. This one did :)! As the plane got closer to the sun, I couldn’t see it any more so I just viewed it through the Camera LCD display … boy, was I happy when it passed by the solar disc with all the sunspots in clear view.

SOURCE::::: http://www.earthsky.org and You Tube

Natarajan

Jan 12 2015

Message For the Day…”Spend Your Time in Pursuing Noble Tasks…”

Avoid spending precious time in useless pursuits and be ever vigilant. Engage the senses of perception and action, and the body in congenial but noble tasks to keep them busy. There should be no chance for sloth (tamas) to creep in. And, every act must promote the good of others. While confining oneself to activities that reflect one’s natural duties (swa-dharma), it is possible to sublimate them into spiritual practices for the body and the senses. You must also withdraw from sensory objects. This implies having a state of mind that is beyond all dualities that agitate and affect, such as joy and grief, liking and disliking, good and bad, praise and blame. Such common experiences one encounters can be overcome or negated by means of spiritual exercises or intellectual inquiry. Endeavour to escape from the opposites and dualities, and attain balance and stability.

Sathya Sai Baba

Image of the Day…Liftoff of SpaceX Resupply Mission to the International Space Station …

SpaceX’s Falcon 9 rocket lifts off from Space Launch Complex 40 at Cape Canaveral Air Force Station carrying the Dragon resupply spacecraft to the International Space Station. Liftoff was at 4:47 a.m. EST on Saturday, Jan. 10, 2015. The commercial resupply mission will deliver 3,700 pounds of scientific experiments, technology demonstrations and supplies, including critical materials to support 256 science and research investigations on the space station.

 

SOURCE:::: www. nasa.gov

Natarajan

JAN 11 2015

ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்….” அணில் போல இருங்க …எலி போல வேண்டாம் …”

பகவான் ரமணர் உரைகேட்கப்
பக்தர் இருந்தார் அமர்ந்தபடி
அகமும் முகமும் மலர்ந்தபடி
அருளுரை சொன்னார் கனிந்தபடி
அணில்போல் இருங்கள்; தவறில்லை!
ஆனால் எலிபோல் கூடாது!
மணிமொழி இதனை உதிர்த்தபடி
மவுனமானார் நம் ரமணர்!
காரணம் வேண்டிப் பக்தர்கள்
காத்துக் கொண்டே இருந்தார்கள்
பூரண ஞானி விடைசொன்னார்
புன்னகை ஒன்றைத் தந்தபடி!
உண்ணும் அணிலைப் பாருங்கள்;
உண்டது போதும் என உணர்ந்தால்
கொண்ட கனியை அதன்பின்னர்க்
கொறிப்பதில்லை; ஓடிவிடும்;
ஆனால் எலியோ பதுக்குவதில்
ஆசை கொள்ளும்; மறுபடியும்
தானாய் வந்து பொருள்தேடும்
தனக்கு மீறிச் சேர்த்துவிடும்
போதும் என்ற மனம் இன்றிப்
பொருளைச் சேர்க்கக் கூடாது
நீதி இதுதான், எனச்சொல்லி
நிறுத்தி அருளினார் ரமணமுனி!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!  
Natarajan
Jan 11 2015

Message For the Day…” Role of Sports and Music in our Health and Happiness.. “

It must be recognised that sports and music have been designed to confer health and happiness on man. Physical fitness and mental health are equally important. Together with the gross physical body everyone has a subtle body (sukshma sarira). Take good care of your subtle body by performing spiritual exercises which will help you to realize the Divine. True education consists in the acquisition of good qualities, cultivation of good thoughts, truthfulness, devotion, discipline and dedication to duty. Sports and games enable you to acquire these qualities, and they impart a healthy body, mind and joy. Three unique benefits can be derived from sports and games: team spirit, mutual understanding and joy. Even if people speak different languages and differ in their habits and cultures, through the field of sports you can easily build a common bond, and share a spirit of camaraderie. Hence sports and games should be encouraged.   

Sathya Sai Baba

 

ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்…. காஞ்சி பெரியவரும் , ரமணரும்….

ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா. பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.

ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க. அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!

 

காஞ்சிப் பெரியவரும் ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!

பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!  

SOURCE:::: http://www.balhanuman.wordpress.com

நடராஜன்

Jan 10 2015

Message For the Day…” Direct Your Senses Using Buddhi …”

People have three chief instruments for uplifting themselves: intelligence, mind, and senses. When the mind gets enslaved by the senses, you get entangled and bound. The same mind, when regulated by the intellect, can make one aware of one’s reality (Atma). The mental power gained from spiritual practice must be directed to turn the mind away from wrong paths. Direct your senses using the principle of intelligence (buddhi), and release them from the hold that the mind has on them. The mind (manas) is a bundle of thoughts, a complex of wants and wishes. As soon as a thought, desire or wish raises its head from the mind, the intellect (buddhi) must probe its value and validity — is it good or bad, will it help or hinder, where will it lead or end. If the mind does not submit to this probe, it will land itself in deep trouble. If the mind obeys your intelligence, your spiritual progress will be accelerated.    

Sathya Sai Baba

 

Quotable Quotes… ” We Are Nothing Without Each other … “

 

Beautiful Lines for Every Group

”Alone I can ‘Say’ but
together we can ‘talk’.

‘Alone I can ‘Enjoy’ but
together we can
‘Celebrate’.

‘Alone I can ‘Smile’ but
together we can ‘Laugh’.

That’s the BEAUTY of
Human Relations.

We are nothing without
each other.

Stay Connected!!.  

 

SOURCE:::: Input From a Friend of Mine

Natarajan

Jan 10 2015