” “பரப்ரும்மம் செய்யும் இந்தப் புன்னகையின் பொருள் அந்தப் பரப்ரம்மத்திற்கே வெளிச்சம்…”

பெரியவாளின் முகமலரில் தவழும் இந்த ஸ்வானுபவமான புன்னகையின் பின்னணி என்ன ?

 

PeriavaPunnagai.jpg

நமது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, சிறிது நேரம் பயணம் செய்து பார்க்கலாமா?

‘விநாயகுனி’ என்ற தியாகைய்யரின் மத்யமாவதி ராகக் கீர்த்தனையை, அய்யர்வாள் எந்த

சந்தர்ப்பத்தில் பாடியிருப்பார் என்ற கேள்வியைக் கணபதி அண்ணாவிடம் கேட்ட பெரியவாளுக்கு

(“நீங்க எழுத்தாளர்கெளெல்லாம் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுவேளே அது மாதிரி நீயும்

உன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஏதானும் தோண்றதா பாரேன்”)

அகிலாண்டேஸ்வரியையும் அருமைப் பிள்ளை பிள்ளையாரையும் இணைத்து ஒரு விளக்கத்தைத்

தர, பெரியவா சொல்லுகிறார், “ஒன் குதிரை தேவலாம்போலத்தான் இருக்கு. எனக்கு என்னமோ

வேறே மாதிரி தோண்றது; எனக்கு எல்லாமே அம்பாள்தான்; அதுவும் காமாக்ஷி என்றால்

இன்னும் அதிகமாகவே ஒரு பக்தி……” என்று தொடங்கி, அய்யர்வாள் காஞ்சிக்கு வந்து

காமாக்ஷியைத் தரிசனம் செய்தபொழுது அங்கு இருக்கும் அத்தனை பிள்ளையார் சிலைகளையும்

பார்த்துவிட்டு, அவர் என்னவெல்லாம் நினைத்தார், எப்படி இப்படி ஒரு ஸாஹித்யத்தை

இயற்றினார் என்று பெரிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, கணபதி அண்ணாவைப் பார்த்துக்

கேட்கிறார், “ ஒன் குதிரை தேவலாமா, என் குதிரை தேவலாமா ?”; அதற்கு கணபதி அண்ணா,

“உங்க குதிரைதான் உசந்த அராபியக் குதிரை, என் குதிரை வெறும் பொய்க்கால் கழுதை..”

என்று பதிலளித்தபொழுது, அதை ரசித்து செய்த புன்னகையோ?

அல்லது….

வேலூர் அருகில் ஒரு கிராமத்தில் இருந்து வந்திருந்த பக்தர்,—-கிராமஃபோன் இசைத் தட்டில்

தான் அடிக்கடி கேட்டு, அதை மனனம் செய்த, ‘விநாயகுனி..’ என்ற அந்தப் பாட்டை

எப்படியாவது பெரியவா முன்னில் பாடிக்காட்ட வேண்டும் என்ற தாகத்தோடு, கையில் காசு

சேரும் வரைக் காத்திருந்து இப்பொழுது வந்திருக்கிறார் அந்த ‘அப்பாவி’ பக்தர்—- பெரியவாளை

தரிசித்தபின் அவர் அனுமதி பெற்று, அந்தப் பாட்டை—-ராகத்தைக் கொலை செய்து, தாளத்தில்

தப்பு செய்து, ஸாஹித்யத்தை சிதைத்துப்——பாடிக் காண்பிக்கும் பொழுது, கணபதி அண்ணா அங்கு

போய்ச் சேருகிறார். அவருக்குக் கோபமும், ஏளனமும் ஒருங்கிணைந்து வருகிறது; அப்பொழுது,

பெரியவா கேட்ட பல கேள்விகளுக்கு அந்த ‘அப்பாவி’ சொன்ன பதில்களைக் கேட்டு, அந்த

பதில்களின் மூலம் வெளிப்பட்ட அந்த ‘அப்பாவி’யின் எல்லையில்லாத பெரியவா பக்தியைக்

கண்டு நாணி அவர்மேல் அன்பு பெருகிட, பெரியவா அந்த பக்தரிடம் ‘காமாக்ஷி’யைத் தெரியுமா

என்று கேட்க, அதற்கு, “பெரிவா! எனக்குக் காமாக்ஷியைத் தெரியாது……பெரியவாளைத்தான்

தெரியும்….” என்று அவர் சொன்ன பதிலைக் கேட்டு விகசித்தப் புன்னகையோ இது ?

அல்லது….

‘மைத்ரீம் பஜத’ பாட்டையும் அதைச் செய்த பெரியவாளையும் தரக்குறைவாக விமரிசனம் செய்து

வந்திருந்த ஒரு கடிதத்தைக் கணபதி அண்ணாவிடம் கொடுத்துப் படிக்குமாறு பெரியவா சொல்ல,

அதைப் படித்த கணபதி அண்ணாவின் ரத்தம் கொதிக்க, அவருடைய ‘ரியாக்ஷனை’க் கண்டு

“அவர் எழுதிய விமரிசனத்தில் நியாயம் இருக்கிறது…” என்று பெரியவா விளக்கம் தந்தபொழுது

செய்த புன்னகையோ?

அல்லது….

வேதம் படிக்கின்ற பாலகர்கள், ஒவ்வொரு வியாழனன்றும் பெரியவாளிடம் வந்து தாங்கள்

கற்றதை அவரிடம் ஓதிக் காட்டிய பொழுது அந்த மகிழ்ச்சியில் விளைந்த புன்னகையோ?

கணபதி அண்ணாவின் கற்பனைக் குதிரையே பொய்க்கால் கழுதை எனும்பொழுது

நம்முடையதெல்லாம் குழந்தைகள் உட்கார்ந்து ஆடும் மரப் பொம்மைக் குதிரைதான். கற்பனை

இதற்கு மேல் போகாது !

பரப்ரும்மம் செய்யும் இந்தப் புன்னகையின் பொருள் அந்தப் பரப்ரம்மத்திற்கே வெளிச்சம்!

ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !

Source……….www.periva.proboards.com

Natarajan

 

 

 

 

” யார் பெரிய பெருச் சாளி ….”?

ஶ்ரீகுருப்யோ நம

“மடத்துல இருந்து இந்தப் பழத்தைத் திங்கறவா பெருச்சாளின்னா. எல்லாரையுமு் விட நானில்லையோ பெரிய பெருச்சாளி.”-பெரியவா

தஞ்சாவூர் பக்கம் இருந்த பிரபலமான டாக்டர் ஒருவர் காஞ்சிபுரத்துக்கு வர்ற சமயத்துல எல்லாம் மடத்துக்கும் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுப் போறதை வழக்கமா வச்சுண்டு இருந்தார். அவர் வர்றச்சே எல்லாம் ரொம்ப வெலை ஒசத்தியான ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை (அந்தக்காலத்துல அதெல்லாம் பணக்காரா மட்டுமே சாப்பிடற பழங்களா இருந்தது) வாங்கிண்டு வந்து கூடையோட பெரியவாகிட்டே சமர்ப்பிச்சுட்டுப் போவார்.

ஒருசமயம் பரமாசார்யா, கும்பகோணத்துக்கு பக்கத்துல இருந்த ஒரு கிராமத்துல முகாமிட்டிருந்ததை தெரிஞ்சுண்டு அங்கேயே அவரை தரிசனம் பண்ண வந்தார் அந்த டாக்டர். வர்றச்சே வழக்கம் போலவே பெரிய கூடையில் நிறைய பழங்களை எடுத்துண்டு வந்தார்.

அவர் வந்த நேரம் மடத்துல கைங்கர்யம் பண்ற ஒருத்தர், முகாமோட வாசல்ல நின்னுண்டு இருந்தார். டாக்டர் பெரியவா தரிசனத்துக்கு வழக்கமா வர்றவர்ங்கறதால அவரை அடையாளம் தெரிஞ்சுண்டு, வாங்கோன்னு கூப்பிட்டார்.

கொஞ்ச நேரம் அவர்கிட்டே பேசிண்டு இருந்த டாக்டர், ‘நான் வர்றச்சே எல்லாம் பெரியவாளுக்குன்னு ஆசையா பழங்களை வாங்கிண்டு வர்றேன். ஆனா அதை மடத்துல இருக்கற பெருச்சாளிகளும் சாப்பிடறதா தெரியறது. பெருச்சாளிகள் எல்லாம் இந்தப் பழக்கூடைய நெருங்காத படிக்கு நீங்கதான் பத்திரமா வைக்கணும். அதோட, இந்தப் பழங்கள் எல்லாத்தையும் பெரியவாளுக்கே குடுக்கணும். இது என்னோட ஆசை!’ அப்படின்னு அவர்கிட்டே சொல்லி, பழக்கூடையை அவர்கிட்டேயே ஒப்படைச்சார்.

மடத்துக்கு கைங்கர்யம் பண்றவருக்கு டாக்டர்கிட்டே என்ன சொல்றதுன்னு தெரியலை. அதனால், ‘ஆகட்டும் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டு, பழக்கூடையை வாங்கி உள்ளே வைச்சுட்டார்.

உள்ளே வந்து பெரியவாளை தரிசனம் பண்ணினார் டாக்டர். மெல்லிசா ஒரு சிரிப்பை உதிர்த்த பரமாச்சார்யா, அவருக்கு பிரசாதத்தை குடுத்தார். பவ்யமா அதை வாங்கிண்ட டாக்டர், ‘பெரியவா, உத்தரவு தரணும். நான் புறப்படறேன்’ அப்படின்னார்.

‘என்ன அவசரம்? இன்னும் ஒரு ரெண்டு மூணு மணி நேரம் இருந்து வந்த வேலையை முடிச்சுட்டுதான் போயேன்’ அப்படின்னார் ஆச்சார்யா.

டாக்டருக்கு ஒண்ணும் புரியலை. ‘வந்தது, பெரியவாளை தரிசனம் பண்ணணும்னு, அந்த வேலை முடிஞ்சுடுத்து அப்புறம் வேற என்ன வேலை இருக்கு?’ புரியலைன்னாலும் பரமாசார்யா சொன்னதை தட்ட முடியாம, ‘சரி உங்க உத்தரவுப்படியே செய்யறேன்!’ என்று அந்தப் பக்கமா உள்ளே போய் உட்கார்ந்துண்ட்டுட்டார்.

கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் ஆகியிருக்கும். தனக்குப் பக்கத்துல நின்னுண்டு இருந்த ஒரு சீடன்கிட்டே, ‘நீ உள்ளே போய் அந்த டாக்டரை அழைச்சுண்டு வா. அதோட, அவர் பழக்கூடை ஒண்ணைக் கொணடு வந்து கொடுத்திருக்கார். அதை எடுத்துண்டு, அதை வாங்கி வைச்சவரையும் கூட்டிண்டு வா!’ அப்படின்னார்.

எல்லாருக்கும் ஆச்சரியம். டாக்டர், பெரியவாளை தரிசனம் பண்ணினப்போ பழக்கூடை பத்தி எதுவும் சொல்லலை. அவர் கொண்டு வந்து குடுத்ததும், ஒருத்தர் அதை வாங்கிவைச்சதும் பெரியவாளுக்கு எப்படித் தெரியும்னு எல்லாரும் யோசிச்சுண்டு இருக்கறச்சயே, டாக்டர் அங்கே வந்து நின்னார்.

பின்னாலேயே பழக்கூடையை எடுத்துண்டு, அதை வாங்கிவைச்சவரும் வந்து நின்னார்.

தனக்கு முன்னால அந்தப் பழக்கூடையை வைக்கச் சொன்ன பெரியவா, டாக்டரை ஒரு நிமிஷம் உத்துப் பார்த்தார்.

‘எனக்கு என்ன வயசு ஆகறதுன்னு நோக்கு தெரியுமோ.. அறுபதைத் தாண்டியாச்சு. பழம் ஒடம்புக்கு நல்லதா இருக்கலாம். ஆனா, இத்தனையையும் நான் ஒருத்தனே சாப்பிட்டா அது எந்த மாதிரி ஹானி பண்ணும்னு டாக்டரான நோக்கே தெரியுமோல்லியோ… அப்படி இருக்கறச்சே ‘இதை எந்தப் பெருச்சளியும் தின்னுடாம பார்த்துக்கணும்னு அவர்கிட்டே சொன்னியே அது நியாயமோ? மடத்துல இருந்து இந்தப் பழத்தைத் திங்கறவா பெருச்சாளின்னா. எல்லாரையுமு் விட நானில்லையோ பெரிய பெருச்சாளி.’

சொன்ன மகாபெரியவா, கொஞ்சம் நிறுத்தினார். இதுக்குள்ளே டாக்டருக்கு உடம்பெல்லாம் குப்னு வேர்த்து முகமெல்லாம் வெளுத்துடுச்சு. தான் பேசினது தப்புன்னு புரிஞ்சுண்டதால அவர் கை, காலெல்லாம் லேசா நடுங்கவும் ஆரம்பிச்சுது.

‘நீ ரொம்ப பதட்டப்படாதே… நான் உன்னை மட்டும் சொல்லலை. இங்கே வர்றவா பலரும் உன்னை மாதிரிதான். அவா தர்ற எல்லாத்தையும் நானே சாப்பிடணும்ங்கறதுதான் அவாளோட அவா! ஆனா அது முடியுமோ? மொதல்ல நான் ஒரு சன்யாசிங்கறதையே எல்லாரும் மறந்துடறா. எனக்கு எதுக்கு இத்தனை பழமும் பொருளும்? இதெல்லாம் அநாவசியமில்லையோ!

அப்புறம் ஏன் இதையெல்லாம் நான் வாங்கிக்கறதா பாவனை பண்ணிக்கறேன்னா, இங்கே மடத்துல எத்தனையோ நல்ல காரியங்கள் நடத்தப்படறது, அதுக்கெல்லாம் பொருள் வேறும். குழந்தைகளையும் பொண்டாட்டியையும் விட்டுட்டு, மடமே கதின்னு வந்து எத்தனையோ பேர் இங்கேயே இருந்து கைங்கரியம் செஞ்சுண்டிருக்கா. அவாளுக்கெல்லாம் சாப்பிடறதுக்காவது நான் ஏதாவது பண்ணியாகணும். இந்த மடத்தைப் பராமரிக்க வேண்டியது என்னோட பொறுப்பில்லையோ! சன்யாசியான எனக்கு அதைச் செய்யறதுக்கு ஏது வருமானம்? உங்கள மாதிரியானவா தர்றதுதானே? அதைவைச்சு தானே நான் இவாளுக்கு ஏதாவது செய்யணும்? அப்புறம் இவா சாப்பிடக்கூடாதுன்னு நினைச்சா அது எப்படி முடியும்?

நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை நன்னா புரிஞ்சுக்கணும். நீங்க ஒரு பொருளை ஒருத்தருக்குக் குடுத்துட்டா, அதுக்கப்புறம் அது அவாளோடதுன்னு ஆயிடும். அதுக்கு நீங்க பாத்யதை கொண்டாட முடியாது. அதை அவர் என்ன பண்ணணும்கறதை அவரேதான் தீர்மானிக்கணும். அப்படித்தான் செய்யணும்னு நீங்க கன்ட்ரோல் பண்ண முடியாது. அப்படித்தான் நீங்க எனக்காகத் தர்றதுகம், அதெல்லாம் மத்தவாளுக்கும் பிரயோஜனப்படற மாதிரி செய்யறதுதான் சன்யாசியான என்னோட கடமை. நீங்க ஆசைப்படற மாதிரி நானே எல்லாத்தையும் அனுபவிக்கணும்கறது சாத்யப்படவே படாது!’

சொன்ன பெரியவா, டாக்டர் தந்திருந்த பழக்கூடையில இருந்து ஒவ்வொரு பழமா எடுத்து தான் உட்கார்ந்துண்டு இருந்த இடத்துக்குப் பக்கத்துல இருந்த ஜன்னல் வழியா வெளியில வீச ஆரம்பிச்சுட்டார்.

பதறிப்போய்ட்டார் டாக்டர். பெரியவா ஏத்துக்காதது மட்டுமல்லாமல், பழத்தை தூக்கி வேற எறியராறே… பெரியவாளே எல்லாத்தையும் சாப்பிடணும்னு ஆசைப்பட்டது அவ்வளவு பெரியதப்பா? அப்படின்னு மனசுக்குள்ளே நினைச்சு திகைச்சு நின்னவர், மனசுக்குள்ளே ஏதோ தோணினவரா, வேகமா போய், அந்த ஜன்னல் பக்கமா வெளியில எட்டிப் பார்த்தார்.

அவர் முகம் ஜன்னல் பக்கமா வெளியில தெரிஞ்ச விநாடி, ‘சாமீ! நீங்க குழந்தை குட்டியோட, நோய் நொடியில்லாம ஆரோக்யமா நீண்டகாலம் இருக்கணும். எங்களுக்கு இவளோ நல்ல பழங்களைக் குடுத்த நீங்க மவராசனா இருக்கணும்!’ அப்படின்னு கோரசா குரல் எழும்பித்து வெளியில இருந்து.

என்னன்னு பார்த்தா, பத்துப் பதினைஞ்சு நரிக்குறவக் குடும்பம் குழந்தைகளோட நின்னுண்ணு, ஜன்னல் பக்கமா வந்து விழற பழங்களை எல்லாம் பிடிச்சு சேகரிச்சுண்டு இருந்தா. அவாள்லாம், அந்த டாக்டர்தான் தங்களுக்காக பழங்களை வீசி எறியறதா நினைச்சுண்டு அவரை வாழ்த்த ஆரம்பிச்சா!

மறுபடியும் மகாபெரியவாளைப் பார்த்தார் டாக்டர்

‘என்ன பார்க்கறே? அவாளுக்கெல்லாம் இவ்வளவு நல்ல பழஙகளைத் தர்றதுக்கு யாருக்காவது மனசு வருமா? இப்போ நீ குடுத்ததா நினைச்சு சந்தோஷமா எடுத்துண்டு போறாளே, அவாளோட மூஞ்சைப் பார்த்தியோ, எத்தனை ஆனந்தம் அதுல தெரியறது? அந்த மாதிரியான சந்தோஷத்தை மத்தவாளுக்குத் தர்றதுதான் பரமேஸ்வரனுக்கு ப்ரீதி தெரியுமோ..!

நம்பளால முடிஞ்சதை மத்தவாளுக்குத் தரணும்னு நினைக்கணும். கிடைக்கற எல்லாத்தையும் நாமளே அனுபவிக்கணும்னு நினைக்கறதும், நாம நினைச்சமாதிரிதான் எல்லாமே நடக்கணும்னும் நினைக்கறது தப்பு புரிஞ்சுதோ?

இனனொரு முக்கியமான விஷயம்… நீ ஆசைப்பட்ட மாதிரியே மடத்துல இருக்கற எந்தப் பெருச்சாளியும் அந்தப் பழத்தைத் திங்காம பார்த்துண்டாச்சு… போதுமோ?’

மகாபெரியவா சொல்லி முடிக்க, அப்படியே சாஷ்டாங்கமா அவர் காலடியில விழுந்தார் டாக்டர். பரமாசார்யா உபதேசம் பண்ணின பாடத்தைப் புரிஞ்சுண்டுட்டேன்னு சொல்லாம சொல்ற மாதிரி, அவர் கண்ணுல இருந்து நீர் வழிஞ்சு பெருகித்து.

தப்பை உணர்ந்துட்டாலே மன்னிப்புக் கிடைச்சுடும்கறதை உணர்த்தற மாதிரி அவரை எழுந்திருக்கச் சொல்லி, இன்னொருதரம் பிரசாதம் தந்து, ‘அவா வாழ்த்தின மாதிரியே மகாராஜனா இரு’ன்னு ஆசிர்வதிச்சு அனுப்பினார் மகாபெரியவா.

எந்த தெய்வம் தன்னோட நைவேத்யத்தை தானே சாப்பிட்டிருக்கு? அதெல்லாம் தன்னோட பக்தனுக்குக் கிடைக்கணும்கறதுதானே கடவுளோட எண்ணம்? அப்படின்னா, தனக்குக் கிடைக்கறதெல்லாம் தேவை உள்ள மத்தவாளுக்கேன்னு நினைச்ச பரமாசார்யாளை நடமாடம் தெய்வம்னு எல்லாரும் சொன்னது வாஸ்தவமான உண்மைதானே.

Featured Image -- 18848

 

 

 

 

 

 

 

 

 

Source…..input from a friend of mine

Natarajan

” If the world looks at me and says, you can do nothing,’ I look back at the world and say ‘I can do anything’.”

Srikanth Bolla (pictured below) is standing tall living by his conviction that if the “world looks at me and says, ‘Srikanth, you can do nothing,’ I look back at the world and say ‘I can do anything’.”

 

Srikanth Bolla

When he was born, neighbours in the village suggested that his parents smother him.

It was better than the pain they would have to go through their lifetime, some said.

He is a “useless” baby without eyes… being born blind is a sin, others added.

Twenty-three years later, Srikanth Bolla is standing tall living by his conviction that if the “world looks at me and says, ‘Srikanth, you can do nothing,’ I look back at the world and say ‘I can do anything’.”

Srikanth is the CEO of Hyderabad-based Bollant Industries, an organisation that employs uneducated disabled employees to manufacture eco-friendly, disposable consumer packaging solutions, which is worth Rs 50 crores.

He considers himself the luckiest man alive, not because he is now a millionaire, but because his uneducated parents, who earned Rs 20,000 a year, did not heed any of the ‘advice’ they received and raised him with love and affection.

“They are the richest people I know,” says Srikanth.

Underdog success story

What is it about stories like Srikanth’s that so inspire and fill one with hope?

Could it be the multiple zeroes after a dollar sign or the belief that you and I can achieve similar success if we set our minds and hearts to it?

Underdog success stories touch a raw nerve. After all, everyone faces adversity, they dream, and they work hard.

It is another matter that only a few cross the threshold of limits set by society.

In Srikanth’s case, it is his sheer tenacity that shines through the dark clouds of his misfortune.

Being born blind was just one part of the story. He was also born poor. And you know what that means in a society like ours.

In school, he was pushed to the back bench and not allowed to play.

The little village school had no way of knowing what inclusion meant.

When he wanted to take up science after his class X, he was denied the option because of his disability.

All of 18, Srikanth not only fought the system but went on to become the first international blind student to be admitted to the prestigious Massachusetts Institute of Technology (MIT) in the US.

As author Paulo Coelho says, “We warriors of light must be prepared to have patience in difficult times and to know the Universe is conspiring in our favour, even though we may not understand how.”

Today, Srikanth has four production plants, one each in Hubli (Karnataka) and Nizamabad (Telangana), and two in Hyderabad (Telangana). Another plant, which will be one hundred percent solar

operated, is coming up in Sri City, an integrated business city in Andhra Pradesh, 55 kms from Chennai.

Angel investor Ravi Mantha, who met Srikanth about two years ago, was so impressed with his business acumen and vision for his company that he not only decided to mentor him but also invested in Srikanth’s company.

It was a small, tin-roof shack in an industrial area near Hyderabad. There were eight employees and three machines under the shed. I expected him to talk about how he wanted to make a social impact, but was surprised by the business clarity and technical knowhow in someone so young,” Ravi says.

They are raising $2-million (around Rs 13 crores) in funding and have already raised Rs 9 crores.

According to Ravi, his personal goal is to “take the company to IPO.”

A vision to build a sustainable company with a workforce comprising 70 percent people with disability is no mean task.

“Srikanth’s vision is inbuilt in the company. It is not just a lip service to CSR,” adds Ravi.

Isolation a big curse

“The isolation of differently-abled people starts at birth,” Srikanth said in his first public speech on the INKTalks stage in Mumbai last month. According to him, “Compassion is a way of showing someone to live; to give someone an opportunity to thrive and make them rich. Richness does not come from money, it comes from happiness.”

When Srikanth was growing up, his father, a farmer, would take him to the fields but the little boy couldn’t be of any help.

His father then decided that he might as well study.

“In my parent’s entrepreneurship model, I was a failure. In entrepreneurship, we have a lean business model where we evaluate an enterprise and say how quickly it fails.”

Since the nearest school in his village was five kilometres away, he had to make his way there mostly on foot. He did this for two years.

“No one acknowledged my presence. I was put in the last bench. I could not participate in the PT class.

That was the time in my life I thought I was the poorest child in the world. It was not because of lack of money but because of loneliness.”

When his father realised that the child was not learning anything, he admitted Srikanth to a special needs school in Hyderabad.

The boy thrived in the compassion he was shown there. He not only learnt to play chess and cricket but excelled in them. He topped his class, even embracing an opportunity to work with late President Dr APJ Abdul Kalam in the Lead India project.

But none of this mattered much because Srikanth was denied admission to the science stream in class XI.

He cleared the Andhra Pradesh class X state board exams with over 90 percent marks, but the board said he could only take Arts subjects after that.

“Was it because I was born blind? No. I was made blind by the perceptions of the people.”

Having been denied the opportunity, Srikanth decided to fight for it.

“I sued the government and fought for six months. In the end, I got a government order that said I could take the science subjects but at my ‘own risk’. ”

Thus not ‘risking’ anything to chance, Srikanth did whatever he could to prove them wrong.

He got all the textbooks converted to audio books, worked day and night to complete the course and managed to secure 98 percent in the XII board exams.

Fortune favours the brave

Sometimes, life mimics a steeplechase. Especially when it comes to those it has big plans for.

It did not give Srikanth enough time to bask in his victory when it threw another spanner in the works. He applied for IIT, BITSPilani, and other top engineering colleges, but did not get a hall ticket.

Instead, “I got a letter saying ‘you are blind, hence you are not allowed to apply for competitive exams.’ If IIT did not want me, I did not want IIT either. How long can you fight?”

He chose his battles carefully and did his homework searching the Internet to find the best engineering programme for someone like himself. He applied to schools in the US and got into the top four — MIT, Stanford, Berkeley, and Carnegie Mellon.

He went to MIT (with a scholarship) as the first international blind student in the school’s history.

It wasn’t easy adjusting to life there, but by and by he started to do well.

Towards the end of his bachelor’s course when the ‘what next’ question came up, it brought him back to where he had started.

“Many questions bothered me. Why should a disabled child be pushed to the back row in the class? Why should the 10 percent of the disabled population of India be left out of the Indian economy?

Why can’t they make a living like everyone else with dignity?”

He decided to give up the ‘golden’ opportunity in corporate America and came back to India in search of answers to his questions. He set up a support service platform to rehabilitate, nurture and integrate differently-abled people in society.

“We helped about 3000 students in acquiring an education and vocational rehabilitation. But then I thought what about their employment? So I built this company and now employ 150 differently-abled people.”

Good always rebounds

Entrepreneur bravehearts like the warriors of Paulo Coelho always find one unflinching support, an anchor to keep them afloat. In Srikanth’s case, it is his co-founder Swarnalatha.

“She was his special needs teacher in school. She has been his mentor and guide through all these years. She trains all the employees with disabilities at Bollant thereby creating a strong community where they feel valued,” says Ravi, adding, “Srikanth is a true source of my inspiration. He is not only my young friend and protégé but is also my mentor who teaches me daily that anything is possible if you set your mind to it.”

The boy who was born blind is today showing many the path to real happiness.

He says his three most important life lessons are: “Show compassion and make people rich. Include people in your life and remove loneliness, and lastly, do something good; it will come back to you.”

Lead image: Kind courtesy INKTalks

source….Dipti Nair in http://www.rediff.com

Natarajan”

” நிமிடக் கட்டுரை – சென்னையைப் பாதுகாத்த பக்கிங்காம்…”

சென்னையின் கால்வாய்களையும் ஆறுகளையும் இணைத்துச் சமன்படுத்திவந்த பக்கிங்காம் கால்வாய் மட்டும் உயிர்ப் போடு இருந்திருந்தால் சென்னை இன்று நீரில் தத்தளித்திருக்காது.

1801-ல் வெளிவந்த மெட்ராஸ் கெஜட் அறிவிப்பின்படி சென்னையைச் சுற்றியுள்ள ஓடைகளை இணைக்க எண்ணூரிலிருந்து சென்னை வரை ஒரு கால்வாய் கட்டத் திட்டமிடப்பட்டது. பிறகு ஆந்திராவின் காக்கிநாடா பகுதியிலிருந்து தமிழகத்தின் விழுப்புரம் வரை பறந்து விரிந்த மிக நீண்ட கால்வாயாக அது கட்டப்பட்டது. இன்று சென்னையை முட்டித்தள்ளும் ஆறுகளும் ஏரிகளும் அன்று பக்கிங்காம் கால்வாய்க்குக் கட்டுப்பட்டிருந்தன. உதாரணத்துக்கு, கூவத்தையும் அடையாறையும் இணைக்கும் ஆற்று வழிப்பாதை இருந்தது.

கோதாவரி ஆற்றோடும் கிருஷ்ணா நதியோடும் கைகோத்த இந்த பக்கிங்காம் கால்வாயில் 1890-களில் வணிகப்பொருட்களை உற்சாகமாகப் பல படகுகள் சுமந்து சென்றன என்று ‘இந்தியன் பால்ம்’ என்னும் புத்தகத்தில் பால் ஹைலாந்த் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பின்னாளில் எதிர்பாராத வெள்ளத்தினாலும் வறட்சியினாலும் பக்கிங்காம் கால்வாய் வழி வணிகம் தடைபட்டுப்போனது என்பது தெரியவருகிறது.

இதேபோன்று, சென்னையின் மழை நிலவரம் குறித்து 64 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் விவரங்களை 1832-ல் வெளியிட்டார் ஆர்தர் காட்டன். இதன்படி சென்னையில் மழை வரத்து சீராக இல்லாமல் ஏற்றம் இறக்கத்தோடு மாறி மாறிப் பொழிவதாகக் குறிப்பிட்டுள்ளார். 1827-ல் 88.41 அங்குலம் வரை சென்னையில் மழை பொழிந்திருக்கிறது. ஆனால் 1831-ல் 44.35 அங்குலமாக அது குறைந்திருக்கிறது. 1832-ல் வெறும் 18.45 அங்குலம் மட்டுமே பொழிந்திருக்கிறது. அடுத்த ஆண்டில் 37.11 அங்குலமாகத் திடீரெனப் பெருகியிருக்கிறது.

இவ்வாறாகச் சென்னையின் மழை நிலவரம் ஏற்ற இறக்கத்தோடு இருப்பதால் இப்பகுதிக்கான நீர் மேலாண்மை கண்ணும் கருத்துமாகத் திட்டமிடப்பட வேண்டும் என தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். சென்னையின் நீர் மேலாண்மையில் பக்கிங்காம் கால்வாய் முக்கியப் பங்குவகித்தது என்பதற்கான பதிவுகளும் காணப்படுகின்றன. பழுதடையாமல் இருந்தவரை கொள்திறன் ஒரு நொடிக்கு 5,600 கன அடி நீரைக் கொள்திறனாகக் கொண்டிருந்தது.

ஆனால் சென்னையின் ஏரிகளுக்கும் பிற நீர்நிலைகளுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் பக்கிங்காம் கால்வாய்க் கான முக்கியத்துவமும் மறைந்துபோனது. 1900 மே 10-ல் வெளியான

`தி இந்து’ ஆங்கில நாளிதழின் கட்டுரை ஒன்றில் இது துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு பக்கிங்காமின் அருமை அறிந்து மீண்டும் காக்கிநாடா முதல் புதுச்சேரி வரை அதன் நீர் படுகையைச் செப்பனிட்டு தேசிய நீர்வழிப் பாதையை அமைக்க 2008-ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்தக் கனவுத் திட்டம் மெய்ப்படவில்லை. சென்னையின் இன்றைய அவல நிலையைப் பார்த்த பிறகாவது விடிவு காலம் பிறக்குமா?

– ‘தி பிஸினஸ் லைன்’
தமிழில் சுருக்கமாக: ம. சுசித்ரா

Source….ஜி. நாகா ஸ்ரீதர்….www.tamil.thehindu.com

Natarajan

B.K.S.Iyengar…” Founder of Iyengar Yoga “… His 97th Birth Anniversary on 14 Dec 2015…

Today is the 97th birth anniversary of B.K.S. Iyengar, one of India’s most prominent Yoga teachers.

And Google is celebrating with a brilliant, animated doodle – featuring a series of Yoga positions.

google1

The founder of “Iyengar Yoga”, Bellur Krishnamachar Sundararaja Iyengar is known for popularising Yoga around the world. “Iyengar Yoga”, which is taught in more than 70 countries today, is a form of Yoga focusing on the correct alignment of the body with the help of straps, wooden blocks, etc. It is said that even at the age of 95, he could perform all the asanas – from headstands to vertical splits. He died on Aug. 20, 2014, from heart and renal failure.

Here are five things to know about this legend.

1. He was born in a very poor household:

Iyengar1

Source: Wikipedia

B.K.S. Iyengar was born in a poor family in Kolar District of Karnataka, on Dec 14, 1918. His father was a school teacher and he was the 11th of 13 children in the family. Only 10 of those children survived. Living through a very unhealthy childhood, Iyengar had to face many diseases like malaria, tuberculosis, typhoid fever, and also general malnutrition at a very young age.

2. But Yoga changed his Life:

Iyengar5

Source: www.judithjonesyoga.co.uk

He was only 15 when B.K.S. Iyengar’s brother-in-law, Tirumalai Krishnamacharya, asked him to move to Mysore to improve his health by practising Yoga. Tirumalai Krishnamacharya is often referred to as “the father of modern yoga”. That was the turning point for Iyengar, whose health steadily improved. At the age of 18, Krishnamacharya sent him to Pune to teach Yoga to people.

3. And then he went out to teach the world:

Iyengar2

Photo Credit: Wystan/Flickr

It was in Pune that the Yoga teacher met the famous violinist, Yehudi Menuhin. This meeting was the beginning of Iyengar’s journey from being an Indian yoga teacher, to an international guru. Menuhin used to complain that he was unable to sleep properly, and was suffering from muscular aches. But with the help of Yoga, he was able to overcome his health problems. Being highly impressed by the guru, Menuhin invited him to Switzerland in 1954. This was followed by Iyengar’s visits to the US and the rest of Europe as well. He came up with the idea of teaching yoga to groups, and encouraged women to take up Yoga even during pregnancy.

“The West knows yoga because of Iyengar. He developed a style of yoga for ordinary people. He introduced simple props and aids like ropes, blankets, wall to facilitate people to make it easy for the masses,” Yogi Santatmananda Saraswati of Swami Dayananda Ashram, Rishikesh, said at the time of his death.

4. And to teach many famous personalities:

Iyengar4

Photo Credit: Gaurav Mishra/Flickr

B.K.S. Iyengar is known to be the teacher of many famous people like Yehudi Menuhin, Sachin Tendulkar and Queen Elizabeth of Belgium. It is said that Queen Elizabeth of Belgium learned his trademark sirsasana headstand at the age of 80. His other devotees and students include novelist Aldous Huxley, actress Annette Bening and designer Donna Karan.

5. He collected several awards and authored many books too:

Iyengar3

Photo Credit: Chris Drumm/Flickr

He was awarded the Padma Shri in 1991, the Padma Bhushan in 2002 and the Padma Vibhushan in 2014. B.K.S. Iyengar published his first book called Light on Yoga in 1966, which became an international best-seller. He has authored a total of 14 books.

Source….Tanaya Singh in http://www.the betterindia.com

Natarajan

படித்து ரசித்த கவிதை… ” தோற்கிறோம் தினம்தோறும் செடிகளை தோப்பாக எண்ணி…”

என்ன நடந்தது?

வந்தது ஓரிடம்
வாழ்ந்ததும் ஒரேயிடம்
எல்லாமும் எங்கள் ஏழு பேர் தான்
என எண்ணியிருந்தேன்…
இருபது வயது வரை!

அண்ணன் என்றும்
தங்கை என்றும் அறியாமல்
ஒருவர் மீது மற்றொருவர்
உருண்டு, புரண்டு, அடித்து, பிடித்து…
வாயில் உள்ளதை பிடுங்கி உண்டு
வந்ததை எல்லாம் வாங்கித் தின்று
எப்படி எல்லாம் வாழ்ந்தோம் அன்று…
இப்போது இல்லையே அப்போது போல்!

அண்ணன் எங்கோ ஒரு ஊரில்
தம்பி எங்கோ தனியாக
சண்டையோ, சச்சரவோ இல்லை
எனினும் இல்லையே அப்போதைய அன்பு!

நண்பர்களிடம் பல மணி நேரம் பேச்சு
குழந்தைகளுடன் நாள் முழுக்க கூத்து
பேசிப் பேசியே போரடிக்கிறோம்
அண்ணன், தம்பியிடம் அப்படியில்லையே…
இப்படி இருந்ததில்லையே அப்போது!

கும்பலாக குளியல்; ஒன்றாகத் தூக்கம்
தலை வார ஒரே அழுக்கு சீப்பு…
ஒரே தலையணையில் ஐந்து தலைகள்!

விழித்து பார்த்தால்…
தம்பியின் காலோ என் தலையில்
தங்கையின் கையோ என் வயிற்றில்
ஒன்றாக அமர்ந்து களேபர சாப்பாடு…
வீட்டில் ஒரே கூப்பாடு
மறந்து போனதே எவ்வாறு…

அன்பை விதைத்த
ஆசை தங்கையையும்
அடித்தாலும் ஓடி வந்து
அணைக்கும் தம்பியையும்
கதை சொல்லி தூங்க
வைத்த அக்காவையும்
பார்த்து பல வாரங்களாயிற்று…
தூக்கி வளர்த்த அவளின் குழந்தைகளையோ
பார்க்கவும் நேரமில்லை இப்போது!

அம்மா, அப்பா இருந்தும்
நாங்கள் ஏன் தனித்தனி மரங்களாய்…
பணம் இருந்திருந்தால்
ஒன்றாய் இருந்திருப்போமோ…
இப்போது அது இருக்கத் தானே செய்கிறது
ஆனாலும் எண்ணம் இல்லையே ஏன்…

இதுதான் வாழ்க்கை பயணமா…
அப்படியானால் ஒன்றாக ஏன் பிறந்தோம்
வெவ்வேறு தாய்க்கு பிறந்திருக்கலாமே!
அம்மா சொல்லியிருக்கிறாள்…
அவளுடையது கூட்டுக்குடும்பமாம்
நாங்கள் மட்டும் எப்படி தனித் தனியானோம்…

என்னுடன் என் மகன்
அண்ணனுடன் அவன் மகள்
தங்கையோ தன் மகனுடன்
அடுத்த மாநிலத்தில் அக்கா!

அனைவரும் முன் போல்
ஒன்றாய் வாழ வாய்ப்பில்லையா…
அதற்கு எங்களுக்கு மனமில்லையா?
அது பற்றி யோசிக்கவில்லையா…

தனிமரம் தோப்பாகாது என தெரிந்தும்
தோப்புகளை உருவாக்க முயற்சித்து
தோற்கிறோம் தினம்தோறும்
செடிகளை தோப்பாக எண்ணி!

மீண்டும் ஒன்றாக பிறக்கத் தான் முடியுமா?
மனமிருந்தால் இப்போது
ஒன்றாக வாழ முடியும்
இதன் பிறகாவது முயற்சிப்போமே!

அ.சுருளியப்பன், நெல்லை…in . http://www.dinamalar.com

Natarajan

” கலிபோர்னியா ….பெயர் வந்த காரணம் ….”

கலிஃபோர்னியா பேர் வந்த காரணம்”

“கலிஃபோர்னியா” என்ற இடத்துக்குப் பெயர்க் காரணம்

சொல்கிறார் பெரியவா

246400_479182102136836_1433845875_n.jpg

கபில முனிவர் இருந்த இடம் அது. இவர் தவம் பண்ணிக்

கொண்டிருக்கையில் இக்ஷ்வாகு வம்சத்து சகரர் என்னும் அரசர் அச்வமேத யாகம் செய்தார். இந்த யாகத்தைச் செய்ய வேண்டுமென்றால்,முதலில் ஒரு குதிரையை எல்லா தேசங்களுக்கும் அனுப்புவார்கள்.

அதை எந்த அரசனாவது பிடித்துக் கட்டிப் போட்டால் அவனுடன் யுத்தம் செய்து வென்று, பிறகு எல்லோரும் பாராட்ட இந்த யாகம் செய்யப்படும். பொதுவாக எல்லா அரசர்களும் வம்பு செய்யாமல் அந்தக் குதிரைக்குரிய கப்பம் செலுத்திவிட்டு அரசனைச் சக்ரவர்த்தி என்று ஒப்புக்கொண்டு விடுவார்கள்..

ஆனால் இந்த யாகத்துக்கு முதலில் இந்திரன்தான் தடங்கல் செய்வான். ஏனெனில் நூறு அஸ்வமேத யாகம் செய்து விட்டால் இந்திர பதவி ஒருவனுக்குக் கிடைத்துவிடும். தனது பதவி பறி போகாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வது இந்திரன் வழக்கம். எனவே அவன் சகரர் விட்ட குதிரையைப் பிடித்துக் கொண்டு போய் பாதாள உலகில்

கபிலர் தவம் செய்யும் ஆஸ்ரமத்தில் கொண்டு யாருக்கும் தெரியாமல் கட்டிவிட்டான்.

அதைத் தேடிக்கொண்டு வர சகரன் தன் நூறு

பிள்ளைகளையும் அனுப்பவே, அவர்களும் எப்படியோ கபிலாச்ரமம் வந்து சேர்ந்து, கபிலர்தான் பிடித்துக் கட்டிவிட்டதாக நினைத்து அவரிடம் சண்டைக்குப் போனார்கள். அதனால் கோபங்கொண்ட கபிலர் ஒரு முறை முறைத்தார். அவ்வளவுதான்! அங்கு வந்த நூறு பேரும் சாம்பலாகிப் போனார்கள். இது சகரனுக்குத் தெரிந்து அவன் சென்று கபிலரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அசுவமேத யாகம் செய்து முடித்தானென்பது ராமாயண முன்கதையில் தெரிகிறது.

அந்தக் கபிலாரண்யம்தான் “கலிஃபோர்னியா” என்று திரிந்து விட்டது.

சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLAND என்று அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLAND எனப்படுகிறது.

Read more: http://periva.proboards.com/thread/10771/#ixzz3u924MPSd

Source………..www.periva.proboards.com

Natarajan

” மகா கவி பாரதியார் , பாரீஸ் வெள்ளம் பற்றி எழுதிய ஒரு பதிவு “…பாரதி பிறந்த நாளில் ஒரு நினைவலை…

நன்றி: சீனி. விசுவநாதனின் “கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ – அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை – 4.

சமீபத்தில் சென்னையைத் தாக்கிய பெருமழையைவிடக் கடுமையான மழையால் 1910-இல் பிரெஞ்சு நாட்டு தலைநகர் பாரீஸ் பாதிக்கப்பட்டது. 1910 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பாரீஸை மூழ்கடித்த அந்த வெள்ளம் குறித்து, இப்போதுபோலத் தகவல் தொலைத்தொடர்பு வசதி எதுவும் இல்லாத நிலையிலும் மகாகவி பாரதியார் தனது விஜயா (14.02.1910), இந்தியா (19.02.1910) இதழ்களில்
விவரமாக எழுதியிருக்கிறார். அன்றைய மொழி நடையை மாற்றாமல், பாரதியாரின் பிறந்த தினமான இன்று அதை மறுபதிவு செய்கிறோம். நூறாண்டுகளுக்கு முன்பு பாரீஸ் எதிர்கொண்ட சோதனைகள்

பலவற்றையும் இப்போது சென்னையும் எதிர்கொண்டது என்பதுதான் வியப்பு – ஆசிரியர்.

நமக்குச் சென்ற வாரம் தபால் மூலமாகக் கிடைத்த கடிதங்களாலும் பத்திரிகைகளாலும் பாரீஸ் வெள்ளத்தைக் குறித்து, பின் எழுதும் விபரங்கள் வந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாகச் சேன் நதியில் பிரவாகம் அதிகரித்துச் சுற்றுப்பக்கங்களிலெல்லாம் பரவிவந்தது. பூமிக்குள் இருப்புப்பாதை போட்டு ரயில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுரங்கவழிகளில் முதல்முதல் தண்ணீர் நிறைந்து அவ்வழியாக ரயில் வண்டிகள் ஓட்ட முடியாமல் நிறுத்தப்பட்டன.
பிறகு வெளிரோட்டுகளில் பரவி, பாரீஸில் பள்ளமாக இருக்கும் பாகங்களிலெல்லாம் நீர் தங்கிவிட்டது. குதிரை வண்டிகள் வெகு கஷ்டத்தோடு தெருக்களில் இங்குமங்குமாகப் போய் கடைசியில் தண்ணீர் அதிகரிக்கவே வண்டிகளின் நடமாட்டமேயில்லாமல் போய்விட்டது. டிராம் வண்டிகளும் மேடான தெருக்களில்தான் ஓடிக்கொண்டிருந்தன.
வரவரத் தண்ணீர் அதிகரிக்கவே அநேக தெருக்களில் டிராம் வண்டிகூடச் செல்ல முடியவில்லை. கேதோர்úஸ என்னும் பாகத்திலிருந்த ரயில்வே ஸ்டேஷன் தண்ணீரில் முக்கால் முழுகிவிட்டபடியால் அந்தப் பக்கத்து ரயில் வண்டி ஓடவே யில்லை.
எங்கெங்கு பார்த்தாலும் தெருக்களில் சுமார் 20 அடி தண்ணீர் நிறைந்திருந்தபடியால் சிறு படகு மூலமாகத்தான் ஜனங்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். வெள்ளம் அதிகமாகும் என்று நன்றாகத் தெரிந்தபொழுதே பாரீஸ் பட்டணத்து முக்கிய போலீஸ் உத்தியோகஸ்தரான (Prefect de Police) ஷெர்புர், பிரெஸ்ட், தொன் கெர்க்கலே முதலிய துறைமுகங்களுக்குத் தந்தி கொடுத்து சிறு படகுகளைத் தகுந்த மனிதர்களோடு வரவழைத்தார். பாரீஸிலுள்ள படகுகளும் இவைகளும்தான் இப்போது தெருக்களில் நடமாடுவதற்கு உபயோகப்படுகின்றன.

அநேக தெருக்களில் தண்ணீர் முதல் மாடி வரைக்கும் வந்துவிட்டிருக்கிறது. அந்த வீட்டுக்குள் செல்ல வேண்டியவர்கள் படகுகளின் மேல் மாடியிலிருக்கும் ஜன்னலண்டை போய், அதற்குள் நுழைந்து உள்ளே குதிக்க வேண்டியதாயிருக்கிறது. அநேக வீடுகளில் ஜனங்கள் ஜன்னல் வழியாக அடிக்கடி போய்வருவதற்குத் தகுந்த சாரம் கட்டி வைத்திருக்கிறார்கள். வீட்டுக்குக் கீழ்பாகத்திலிருந்த ஆடு, மாடு, குதிரை முதலிய மிருகங்கள், பக்ஷி வகைகளெல்லாம் அடியோடு நாசமாய்விட்டன. இவைகளின் சவங்கள் தண்ணீரில் மிதந்து கிடக்கின்றன.
ழார்தென் தேப்ளாந்த் என்னுமிடத்திலிருக்கும் உயிர் மிருகங்களெல்லாம் தண்ணீர் தங்குவதினால் கஷ்டப்படுகின்றன. கூண்டிலிருக்கும் பாம்புகளும் கரடிகளும் தத்தளிக்கின்றன. ஆனால், அங்கு சீக்கிரத்தில் நீர் வடிந்து விடும்.
தின்பண்டங்களின் விலை வெள்ளத்தினால் அதிகமாய் விடவில்லை. படகில் ஏறிப்போய் வீடுகளில் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூபாயிக்கு ஆறு காசு விகிதம் விலை உயர்த்தப்பட்டது. சில பாகங்களில் ரொட்டி சுடுபவர்கள் அடுப்புகளில் தண்ணீர் நிறைந்துவிட்டபடியால் தண்ணீர் எட்டாத இடங்களிலிருக்கும் ரொட்டிக் கிடங்குக்காரர்கள் தங்கள் அடுப்பில் ரொட்டி தட்டிக் கொள்ளும்படி இவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். வெளியில் எப்பொழுதும் பனி பெய்துகொண்டே இருந்தது.
ராணுவ உத்தியோகஸ்தர்களும், ராணுவச் சேவகர்களும் ஓச்சல் ஒழிவில்லாமல் ஜனங்களுக்கு ஓர் ஆபத்தும் நேரிடாவண்ணம் இரவும் பகலும் இங்குமங்கும் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஓர் ஆஸ்பத்திரியில் தண்ணீர் வரக் கண்டு அங்கிருந்த நோயாளிகளை யெல்லாம் மெதுவாக எடுத்துக்கொண்டு தகுந்த இடத்தில் கொண்டுபோய் விட்டார்கள்.
வெள்ளத்தினால் பெருத்த கஷ்டம் பாரீஸில் ஒரு பாகமாகிய ஆல்போர்வீல் என்னுமிடத்தில்தான். அங்கு தண்ணீர் சுமார் 25 அடி ஆழம் வரைக்கும் தங்கிற்று. அங்கு சுமார் 18,000 பேர்கள் தண்ணீரால் சூழப்பட்டுத் தம்தம் வீடுகளை விட்டு வெளியில் வர முடியவில்லை. இவ்விடத்தில் அநேக படகுகள் சென்று சுமார் 9,000 ஜனங்கள் வரைக்கும் மேல் ஜன்னல்கள் வழியாக இறங்கச்செய்து தப்பித்து விட்டனர். மற்றவர்கள் அங்கிருக்கும் ùஸாத்துகளைக் காக்கும் பொருட்டு வெளியில் செல்ல ஒப்புக்கொள்ளவில்லை. தங்களுக்கு என்ன கஷ்டம் நேர்ந்தாலும் தாங்கள் அங்கே யிருப்பதாகப் பிடிவாதம் செய்கிறார்கள்.

இதற்குத் தகுந்தாற்போல் இந்த ஆபத்து காலத்தில் அநேக அபாஷ் என்னும் திருடர்கள் இருட்டில் படகு போட்டுக் கொண்டு போய் காலி வீடுகளையும், கொஞ்சம் பேர்களிருக்கும் வீடுகளையும் கொள்ளையடிக்கிறார்கள்.
இந்தக் கொள்ளைக்காரர்களைப் பிடித்து நியாயஸ்தலத்தில் விசாரணைக்குக் கொண்டுவருவது இப்பொழுது அசாத்திய மாகையால், அவர்களை உடனே தண்டிக்கப் பின்வரும் விளம்பரத்தை அதிகாரிகள் செய்திருக்கிறார்கள்.
“”அனுதாபமே காட்டக்கூடாது. ஆல்போர்வீலிலும் அதைச் சுற்றியிருக்கும் வீடுகளிலும் ராணுவச் சேவகர்கள் காபந்து செய்து வருகிறார்கள். அவர்களுக்குக் கொடுத்திருக்கும் கண்டிப்பான உத்தரவானது “கொள்ளை யடிக்கும்’ அபாஷ்களை உடனே சுட்டுவிட வேண்டியது”. இவ்வளவு கண்டிப்பான உத்தரவில்லாவிட்டால் அச்சமயத்தில் பந்தோபஸ்து செய்வது கஷ்டம்.
ஷான்ஸ்எலிúஸ என்னுமிடத்திலும் சிறிது தண்ணீர் ஏறிக்கொண்டு வருகிறது. அங்கிருக்கும் ஜனங்கள் மண்ணினாலும், சிமெண்ட் சுண்ணாம்புகளினாலும் சுவர் போட்டுத் தண்ணீரைத் தடுத்துக் கொண்டு வருகிறார்கள். லூவர் என்னும் அரண்மனைக்கு ஓர் ஆபத்தும் நேரிடாவண்ணம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த பாரீஸ் நகரத்தார் எப்பொழுதும் தங்கள் புன்சிரிப்பை விட்டுவிடுகிறதில்லை. தெருக்களில் படகுகள் போகும்பொழுது பார்த்து சிரித்த முகத்துடன் “”இந்தக் காட்சியைக் காண நாம் வெனிஸ் நகரம் போகவேண்டுமென்றிருந்தோம்; அது இங்கேயே வந்துவிட்டபடியால் நாம் இனி அங்கு போக வேண்டியதில்லை” என்கிறார்கள்.
வெள்ளத் தண்ணீர் ஊரெல்லாம் பரவி, குடிக்கும் நீரைக் கெடுத்துவிட்டபடியால் ஜனங்களெல்லோரும் தண்ணீரைக் காய வைத்துக் குடிக்க வேண்டுமென்றும், கறிகாய்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடும்படியும் அதிகாரிகள் விளம்பரம் செய்திருக்கிறார்கள். நீர் வடிந்த உடனே வீட்டுக்குள் போவதாயிருந்தால் அங்கு அடைந்திருக்கும் சேறை நன்றாக வாரிவிட்டு சுண்ணாம்பு பூசி பிறகு வாசம் செய்யும்படி கேட்டுக்கொள்ளுகிறார்கள்.

ஜனங்களுக்கு இப்பொழுது நேர்ந்திருக்கும் விபத்தில் உதவி புரியும் பொருட்டு அநேக கனவான்கள் நன்கொடை செய்திருக்கிறார்கள். பத்திராதிபர்கள் மூலமாக நன்கொடை ஜனவரி மாதம் 28-ந் தேதி வரைக்கும் சேர்த்தனுப்பியது 1036302 பிராங்குகள். நன்கொடை செய்ய வேண்டியவர்கள் கீழ்க்கண்டிருக்கும் விலாசத்திற்கு அனுப்பலாம்.
Le Syndicat, 37, Rue Chateaudun, Paris.
நேற்றைய வரையில் பாரீஸ் வெள்ளத்தைக் குறித்து வந்த தந்திகளை யெல்லாம் நமது தந்திப் பத்தியில் பிரசுரித்திருக்கிறோம். பின்னிட்டு வந்த தந்திகளால் பாரிஸின் நிலைமை மெத்தப் பயங்கரமாய் இருக்கின்றது. úஸன் ஆற்றில் இன்னும் வெள்ளம் அதிகரித்து வருகிறது. அனேக வாராவதிகளின் கைப்பிடிச் சுவர்களுக்கு மேல் சில அடி உயரம் வெள்ளம் ஓடுகிறது. மழை ஓய்ந்தபாடில்லை. இராக் காலங்களில் பனிக்கட்டிப் புசலடிக்கிறது. பகலில் அந்தப் பனிக்கட்டிகள் உருகி ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கிறது. இந்தப் பனிக்கட்டிக் காற்று மழையால் இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் பல தந்திகள் தடைபடுத்தப்பட்டிருக்கின்றன.
பிஸ்கே வளைகுடாக் கடலில் இந்தப் பனிப்புசல் அடித்ததால் ஒரு பிரெஞ்சு டார்பிடோ படகு கரையின் பேரில் மோதி விட்டது. அதிலிருந்தவர்கள் உயிர் பிழைத்தார்கள். இஸ்பானியா, பிரான்ஸு துறைமுகங்களில் பல படகுகள் முழுகிப் போய்விட்டன.
பாரீஸ் நகரத்தில் ஜனங்களுக்கு இன்றுவரையில் சுகமாகவே ஆகாரம் கிடைத்து வந்தது. உணவுகள் ரயில் மார்க்கமாயும் படகு மார்க்கமாயும் வந்து கொண்டிருந்தன. இப்பொழுது வெள்ளம் அதிகமாய் பரவிப் பூமியை மூடிவிட்டபடியால் உணவுகளைப் பாரீஸுக்குள் கொண்டுபோக அஸாத்தியமாய் விட்டது. ரூ – தே – தொமீனிக் எனும் பாரீஸ் நகரத்தின் ஒரு பாகத்தில் ஜனங்கள் சென்ற புதன்கிழமை முதல் ஆகாரமில்லாமல் வெள்ளத்தால் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
ஆகார விஷயமாக முதல் கலகமும் உண்டாய் விட்டது. பவுபோர்க் டெம்பில் எனும் ஒரு பாகத்தில் உணவின் விலையை உயர்த்திய இரண்டு ரொட்டிக் கிடங்குகள் பசியால் பீடிக்கப்பட்டு நிராசையாய் இருந்த ஜனங்களால் கொள்ளை யடிக்கப்பட்டன. ஐந்து வெடிகள் கலகக்காரர்களின் பேரில் ஒரு ஜன்னல் வழியாய்ப் பிரயோகிக்கப்பட்டன. ஒரு ஸ்திரீ காயமடைந்தாள்.

உணவுப் பொருள்கள் விலை யதிகமாய் விட்டபடியால் ஊரெங்கும் குழப்பமாய் இருக்கிறது. கலகங்கள் எங்கே நடக்கிறதோ என்று அதிகாரிகள் பயப்படுகிறார்கள். úஸன் கரையோரத்தில் போட்டிருந்த ஆர்லியன்ஸ் இருப்புப் பாதை இடிந்து விழுந்து போய்விட்டது. ஜனங்களின் துக்கம் சொல்லி முடியாது.
ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குத் தர்ம சாப்பாடு போட்டு தர்மத்திற்கு இடம் தரப்பட்டிருக்கிறது. தொத்துக் கொள்ளை வியாதி எங்கே உண்டாய் விடுகிறதோ என்ற பயம் இன்னும் அதிகரித்து வருகிறது. சாக்கடைக ளெல்லாம் எல்லாப் பாகத்திலும் உடைத்துக் கொண்டு ஓடுகின்றன.
மழை இன்னும் விட்டபாடில்லை. வானமே ஓட்டையாய் விட்டதுபோல் பொழிந்து கொண்டே இருக்கிறது. ஒரு வியாபாரமாவது நடைபெறவே யில்லை. தங்கள் தங்கள் காரிய ஸ்தலத்திற்குப் போக ஒருவருக்கும் ஸரிப்படவே யில்லை. காரிய ஸ்தலங்களுக்குப் போகலாமென்றால் வெள்ளத்தால் தடை.
அதையும் தாண்டிக் கொண்டு போனால் எந்த நிமிஷத்தில் புசல் மழையினால் வெள்ளம் அதிகப்பட்டுவிட்டால் வீட்டிலுள்ள பெண்டு பிள்ளைகளுக்கு அபாயம் வந்து விடுகிறதோ அல்லது அவர்களை உயிர் தப்ப வைத்து அப்பால் கொண்டு போவது அஸாத்தியமாய் விடுகிறதோ என்று இதே ஸதா எல்லாருக்கும் கவலையாய் இருக்கிறது.
பாரீஸில் நடுப்பட்டணம் வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெரிய ஏரிபோல் காணப்படுகிறது. சரித்திரங்களிலும் தற்காலத்திலும் பிரஸித்தி பெற்ற பல கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டு விட்டது.
பிளாஸ் தெ-லா கொன்கொர்து, ஷான்ஸ் எலிúஸ இவற்றின் கோபுர வாசல்களைப் பலமாக மண், கல் முதலியவைகள் போட்டு அடைத்து விட்டார்கள். ùஸன்த் லொஜோ எனும் பாகமானது பலமான ஒரு பகுதி சேனையாட்களால் காக்கப்பட்டு வருகிறது. சில தெருக்களில் வெள்ளம் பெருகுவதும் குறைவதுமாய் இருக்கிறது. வீடுகளெல்லாம் இடிந்து விழுந்து கொண்டும் விழுந்து விடும்போலும் இருக்கின்றன.
ஸ்ரீ மகா நெப்போலியன் சேனா வீரர்களில் காயம் பட்டவர்களுக்காகக் கட்டிவைத்த ஒத்தேல் – தெùஸன் வலித் என்னும் கட்டிடத் தருகில் தெருக்களில் ஏழடி ஜலம் நிறைந்திருக்கிறது.

கிராண்ட் விலியர்ஸ் எனும் பெரிய அணைக்கட்டு உடைத்துக் கொண்டு அந்தப் பாகமெல்லாம் அநேக மைல் விஸ்தீர்ணமுள்ள ஒரு பெரிய ஏரிபோல் காணப்படுகிறது. ஜனங்களில் பெரும்பாலர் ஓடி உயிர் தப்பி விட்டார்கள். மற்றவர்கள் வெளியே போக முடியாமல் தங்கள் வீட்டிலேயே அடைபட்டிருக்கிறார்கள்.
பிளாஸ் – தெ – லோபேராவிலும், புல்வார்ட் – தெ – காப்புஸன்னிலும் வெள்ளம் சற்று தணிந்திருக்கிறது. ஆனால் விளக்குக் கம்பங்களும் மரங்களும் சில கட்டிடங்களும் விழுந்து கொண்டே இருக்கின்றன. பிரதான நகர சுரங்கக் குழாய் இருப்புப்பாதை யுள்ளிருந்து பேரிரைச்சலுடன் ஜலம் வெளியே வந்து விழுந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு நாசகரமான வெள்ளத்திற்கும் காரணம் என்னவென்றால் இதுவரையிலும் இல்லாத அவ்வளவு விசேஷமாய் பனிக்கட்டியுடன் இடைவிடாமல் மழை பெய்ததுதான்.
இந்த விபத்தால் கஷ்டப்படுகிறவர்களின் ஸஹாயத்திற்காகக் கிறிஸ்தவர்களின் பரமாசிரியரான மஹாகனம் பொருந்திய போப் என்பவர் ஒரு பெருந்தொகையான பணம் ஸஹாயம் செய்திருக்கிறார். லண்டன் மேயரும் ஒரு ஸஹாய நிதி ஏற்படுத்தி இருக்கிறார். இதற்குப் பிரிட்டிஷ் சக்கரவர்த்தி 1000 கினியும் அவருடைய பத்னி அலக்ஸாண்டிரா சக்ரவர்த்தினி 1000 பவுனும் நன்கொடையளித்தனர் என்று கேட்டு ஸந்தோஷிக்கிறோம்.
இந்தியாவிலும், வைஸிராய் முதலானவர்களும், ஸ்வதேச சிற்றரசர்களும், கனதனவான்களும் முக்கியமாய் நமது புதுவை, காரைக்கால், ஏனாம், மாஹி, சந்திரநாகூர் வாஸிகளும் ஒரு பெரிய நிதி சேர்த்து இந்தக் கஷ்ட நிலையில் பிரான்ஸு ஜனங்களுக்கு உதவி செய்தால், ரொம்ப மஹோபகாரமாய் இருக்கும். பிரான்ஸின் தலைநகரான கீர்த்தி பெற்ற பாரீஸின் பெருவெள்ள அபாய நிலைமையை இம்மட்டுடன் கருணைக் கடலான கடவுள் நிறுத்துவாராக! நமது ஆலயங்களில் இந்தக் கஷ்ட நிவாரணத்திற்காக அவரவர்கள் கடவுளைத் தொழுது பிரார்த்திப்பாராக!

Source…..www.dinamani.com

Natarajan

The Floating Forest of Homebush Bay, Sydney….

The affluent suburb of Homebush Bay on the south bank of the Parramatta River, in the inner west of Sydney, was once the dumping ground for a large range of industrial wastes including a few decommissioned ships. Private companies would pay a monthly fee to the Maritime Services Board, and tow in vessels that had outlived their useful lives in order to break them up to salvage steel and parts that could be reused. Ship-breaking operations began in 1966, but ended prematurely before all the ships moored in the bay could be broken down. At least four ships’ hull and the remains of several barges and smaller vessels are still visible in Homebush Bay. These are protected under the historic Shipwrecks Act, 1976 which applies to all shipwrecks over seventy five years old. One of the most photogenic shipwreck in Homebush Bay is that of SS Ayrfield.

ss-ayrfield-homebush-bay-4

Photo credit: Rodney Campbell/Flickr

SS Aryfield began its life as SS Corrimal at Grangemouth Dockyard Company, United Kingdom in 1911. It was a steel-hulled, single screw, steam collier of 1,140 tons and 70 meters in length. SS Corrimal was purchased by the Commonwealth Government and used to transport supplies to American troops stationed in the Pacific region during WWII. In 1950, it was sold to Bitumen and Oil Refineries Australia Pty Ltd and in 1951 sold to the Miller Steamship Company Ltd and renamed Ayrfield. The ship was decommissioned in 1972, and sent to Homebush Bay for breaking-up.

The shipbreaking yard ceased operation before SS Aryfield could be torn apart. Now abandoned and lying in the shallow waters of Homebush Bay, the ship has become home to a lush green, miniature floating forest.

ss-ayrfield-homebush-bay-1

Photo credit: Brent Pearson/Flickr

ss-ayrfield-homebush-bay-2

Photo credit: Rodney Campbell/Flickr

ss-ayrfield-homebush-bay-3

Photo credit: Steve Dorman/Flickr

ss-ayrfield-homebush-bay-5

Photo credit: Gafa Kassim/Flickr

ss-ayrfield-homebush-bay-7

Photo credit: Tina Reynolds/Flickr

ss-ayrfield-homebush-bay-8

Photo credit: Travis Chau/Flickr

Sources: Afloat.com / Wikipedia

Source….www.amusingplanet.com

Natarajan

” WHAT IS A KUDO, AS IN “KUDOS TO YOU”….?

First, it should be noted that “kudos” is not the plural form of “kudo”, so a “kudo” was once technically nothing. However, because so many people in the last century, mainly in the United States, have thought kudos was plural, in some dictionaries today “kudo” is considered a valid word meaning the same thing as kudos (yet another word created via back-formation).

To answer your question, kudos in English means:

1) Praise / Accolades

2) Credit for one’s achievements

The word “kudos” comes from the Greek κῦδος (kudos), meaning “glory” or “fame”.  The “-os” ending in Greek typically indicates a singular noun and is supposed to be pronounced like “-ose”, rather than “-oze”, as many Americans usually pronounce it, “koo-doze”, or as a lot of British people tend to pronounce it “-oss”, “cue-doss”.

The word made its way into English around the late 18th century / early 19th century, meaning pretty much the same thing as it means today.  The first documented instance of the “singular” word “kudo” didn’t pop up until 1926.

Source….www.today i foundout.com

Natarajan