படித்ததில் பிடித்தது ….”அலமாரியில் பழுப்பேறிக் கிடந்த சத்திய சோதனை”

சமீப காலமாக அலமாரியில் பழுப்பேறிக் கிடக்கும் நூல்களை தேடித்தேடி படிப்பதென்பது எனது வழக்கமாகியிருக்கிறது. அதில், ‘படித்து முடித்துவிட்டேன்!’ என்ற இறுமாப்புடன் முடிவு கட்டிவிட்ட புத்தகங்கள் பல கைக்கு கிடைத்து திரும்ப ஒரே மூச்சில் வாசித்து முடித்துள்ளேன். அவை படிக்காத புத்தகங்கள் வரிசையிலேயே கைகோர்த்து நிற்க வெட்கி தலைகுனிந்து போகிறேன்.

ராகுல சாங்கிருத்தியானனின் வால்காவிலிருந்து கங்கை வரை, வெ.சாமிநாதசர்மா மொழிபெயர்ப்பு கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, எங்கெல்ஸின் குடும்பம், தனிச்சொத்து, அரசு, கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், வனவாசம் என பலவற்றை படித்து பிரமித்துப் போவதோடு, வெட்கி தலைகுனிந்தும் போகிறேன்.

மறுவாசிப்பு என்பது புதிய பயணம், நேற்று புரியாதவை, இன்று புரிகின்றன. இன்று புரியாதது நாளை புரியக்கூடும் என்ற உணர்வை இது உணர்த்தாமல், நேற்று வரை அறியவில்லை, புரியவில்லை, புலப்படவேயில்லை என்ற நிலையை இன்றைய வாசிப்பு அனுபவம் ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் இன்று அலமாரியில் தேடியபோது மிகவும் பழுப்பேறி ஒரு புத்தகம். கனமான பைண்ட் செய்யப்பட்ட அட்டை போட்டும் பின் அட்டை கிழிந்து சில பக்கங்கள் காணாமல் போயிருந்தது. அந்த புத்தகம் சத்தியசோதனை.

நான் 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பு அடியெடுத்து வைத்த 14 வயது பிராயம் அது. கோவை மாவட்டத்தில் உள்ள காந்தி அமைதி நிறுவனம் 15 நாட்கள் காந்திய சிந்தனை வகுப்புகளை நடத்தி விட்டு, தொடர்ந்து, மாணவ-மாணவிகளுக்கு ஒரு கட்டுரை போட்டியை மாவட்ட அளவில் நடத்தியது. அதில் நான் எழுதிய கட்டுரை முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ‘சத்திய சோதனை!’ நூல் பரிசாக வழங்கப்பட்டது. அதை வழங்கியது காந்தி அமைதி நிறுவன நிறுவனர் எஸ்.பி.சடகோபால்.

சத்திய சோதனையை அந்த வயதில் பலமுறை படிக்க முயற்சித்துள்ளேன். ஒரு முறை முழுசாக படித்தும் முடித்துவிட்டேன். அதெல்லாம் 20 வயதுக்குள் முடிந்து விட்டது. இப்போது எடுத்து புரட்டுகிறேன். மலைப்பாக இருக்கிறது.

 

13 வயதில் தனக்கு மணமான விஷயம் குறித்து 3-வது அத்தியாயத்தில் குறிப்பிடும்போது மலைப்பை ஊட்டி விடுகிறார் காந்தியடிகள். அது இப்படி நீளுகிறது.

‘நாங்கள் சகோதரர்கள் மூவர். மூத்தவருக்கு முன்னாலேயே திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது சகோதரருக்கும், எனக்கும், என் பெரியப்பா மகன் ஒருவருக்கும் ஒரே சமயத்தில் திருமணம் செய்து வைத்துவிடுவது என்று பெரியவர்கள் முடிவு செய்து விட்டார்கள். இப்படி முடிவு செய்ததில் எங்களுடைய நன்மையை குறித்தோ, எங்கள் விருப்பத்தை பற்றியோ அவர்களுக்கு சிந்தனையே இல்லை. அவர்கள் சவுகரியத்தையும் சிக்கனத்தையும் மாத்திரமே பற்றிய விஷயம் அது.

இந்துக்களின் கல்யாணம் என்றால் சாதாரண விஷயம் அன்று. பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் விவாகத்தினாலேயே நாசத்தை தேடிக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் சொத்தை வீணாக்குகிறார்கள். காலத்தையும் வீணாக்குகிறார்கள். ஆடைகள் தயாரிப்பது, நகைகள் செய்வது, விருந்துகளுக்கு வேண்டிய திட்டங்கள் போடுவது என்ற வகையில் முன்னேற்பாடுகளுக்கே பல மாதங்கள் ஆகி விடுகின்றன.

விருந்து பட்சணங்கள் தயாரிப்பதில், அளவிலும், வகையிலும், ஒவ்வொருவரும் மற்றவரை விஞ்சி விட வேண்டும் என்று முயல்கிறார்கள். பெண்களுக்கு குரல் நன்றாக உள்ளதோ இல்லையோ, ஏகக் கூப்பாடு போட்டு பாடுகிறார்கள். நோய்வாய்ப்படவும் செய்கிறார்கள்; அண்டை வீட்டுக்காரர்கள் அமைதியோடு இருக்க முடியாதபடியும் செய்து விடுகிறார்கள்.

இத்தகைய கூச்சல் குழப்பங்களையும், விருந்து இலைகளில் மிஞ்சியதையும், குப்பைகளையும், மற்றும் சகல ஆபாசங்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களும் சகித்துக் கொள்கிறார்கள். ஏனெனில் தாங்களும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டிய ஒரு சமயம் வரும் என்பது அவர்களுக்கும் தெரியும். இந்த தொல்லைகளெல்லாம் ஒரே சமயத்தில் தீர்ந்து போவது எவ்வளவோ நல்லது என்று என் பெரியோர்கள் எண்ணினர்.

இப்படி செய்தால் செலவும் குறைவாக இருக்கும். ஆடம்பரமும் அதிகமாக இருக்கும். மூன்று தடவைகளில் செலவழிப்பதற்கு பதிலாக ஒரே தடவையில் செலவிடுவதனால் பணத்தையும் தாராளமாக செலவிடலாம். என் தந்தைக்கும் பெரியப்பாவுக்கும் வயதாகி விட்டது. அவர்கள் விவாகம் செய்து வைக்கவேண்டியிருந்த கடைசிக் குழந்தைகள் நாங்கள். தங்கள் கடைசிகாலத்தில் சந்தோஷமான காரியத்தை செய்துவிட்டு போவோமே என்றும் அவர்கள் எண்ணியிருக்கக்கூடும்!’ இப்படி ஹேஸ்யங்கள் ததும்ப விவரணைகள் கூடிச் செல்கிறது. திருமணம் முடிந்த பிறகு அந்த முதல் இரவு குறித்து இப்படி சொல்கிறார்.

எதுவுமே அறியாத இரண்டு குழந்தைகள், எந்த சிந்தனையும் இல்லாமல் வாழ்க்கையில் தாமே குதித்தன. முதல் இரவில் நான் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை என் அண்ணன் மனைவி எனக்கு முழு போதனை செய்திருந்தார். என் மனைவியை அப்படி தயார் செய்திருந்தவர் யார்? என்பது எனக்கு தெரியாது. அதைப்பற்றி அவளிடம் கேட்டதும் இல்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டபோது ஒரே நடுக்கம்தான். சொல்லிக் கொடுத்திருந்த பாடம் ஒரு துளியும் அப்போது உதவவில்லை. இத்தகைய காரியங்களில் உண்மையில் எந்த விதமான போதனையும் அவசியமில்லை. ஜன்மாந்தர வாசனைகளே எல்லாவிதமான யோசனைகளையும் அனாவசியமானவை என்று ஆக்கி விடக்கூடியவை. நாளடைவில் ஒருவரையாருவர் அறிந்து கொண்டோம். ஆனால், கணவன் என்ற அதிகாரத்தை நான் உடனே மேற்கொண்டுவிட்டேன்!’

லெளகிக வாழ்க்கையிலிருந்து அரசியல் வாழ்க்கை வரை படிக்கப் படிக்க, காந்தியின் உள் மனதில் இருந்து காந்தியத்தின் தத்துவச்சுவடுகள் எப்படியெல்லாம் உருவாகியிருக்கும். உலகமே போற்றத்தக்க அளவில் அது வளர்ந்ததன் உள்வெளிப்பாடுகளையும், அரிச்சந்திரனையும், சிரவணனையும் வரலாற்று புருஷர்கள் என்று அறியாமையில் மூழ்கி அந்தப் பாத்திரங்களாகவே தன்னை கற்பிதம் கொண்டு வாழ்ந்த காந்தியை படிக்கும் போது ஒவ்வொரு உன்னதர்களும் தம் வாழ்க்கையை காந்திக்குள்ளிருந்து தரிசிக்க முடிகிறது.

எண்ணி பத்து நிமிடத்தில் ஒரே மூச்சில் ஏழெட்டு அத்தியாயங்கள் படித்து முடித்து விட்டேன். என்ன ஆச்சர்யம். அப்போதுதான் இன்று காந்தி பிறந்த நாள் என்பதை உணர்ந்து கொள்கிறேன். நேற்று வரை, சற்று முன்வரை கூட காந்தி ஜெயந்தி என்று புத்திக்கு தெரிந்தாலும், இந்த புத்தகத்தை எடுக்கும்போதும் அறியாமல் வாசிக்கும்போதும் நிச்சயமாக காந்தியின் பிறந்தநாள் என்று உணராமலே கையிலெடுத்திருந்தேன் என்பது சத்தியமான உண்மை.

அப்படித்தான் பல விஷயங்கள் உணராமலே திட்டமிட்டது போல நடந்துவிடுகின்றன. காந்தியும், இந்த சத்தியசோதனை புத்தகம் எனக்கு பரிசாக கிடைத்ததும் அப்படித்தான். அதில் இன்றளவும் என்னை கையை பிடித்துக் கொண்டு ஓடிவரும் நேர்மையான எழுத்தும் இதற்குள்ளிருந்து புறப்பட்டதுதான். நதிமூலம், ரிஷிமூலம் என்பார்களே. அதுபோல எனக்கான எழுத்து மூலத்தின் பிதாமகர் காந்தி.

ஒண்டிப்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும்போது என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தோழன் சிவராஜ் பள்ளி இலக்கிய விழா கட்டுரை போட்டியில் கலந்து கொள்கிறான் என்று அறிந்து தமிழம்மா பழனியம்மா ஆசிரியையிடம் நானும் பெயரைக் கொடுத்ததும், காந்தியடிகளின் இளமைப்பருவம் என்ற தலைப்பிலான கட்டுரையில் தோன்றிற் புகழொடு தோன்றுக என்ற குரலை ஆரம்பத்தில் எழுதி காந்திக்கு ஒப்பீடு காட்டி எழுதத் துவங்கியதும், அந்தப் போட்டியில் சிவராஜ் 3 ம் பரிசும், நான் 2ம் பரிசும் பெற்றதும் நினைவிற்கு வருகிறது.

அந்த போட்டிப் பரிசளிப்புவிழா பள்ளியில் நடந்த மாணவர் போராட்டத்தில் தள்ளிப்போனதும், கடைசியில் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சியில் நான் பெற்ற கட்டுரை போட்டி பரிசுக்கு வழக்கம் போல் அளிக்கும் புத்தகப்பரிசு இல்லாமல் வெறும் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டதில் மனம் கலங்கிப்போனதும் நினைவில் ஆடுகிறது.

அப்போதிருந்து எப்போதும், எங்கே கட்டுரைப் போட்டி என்றாலும் அதில் கலந்து கொள்வதும், காந்தி குறித்த தலைப்பு என்றால் அதில் ஓடோடிச் சென்று கரைந்து போவதும் அடிக்கடி நிகழ்ந்த ஒன்று. அப்படித்தான் காந்தி அமைதி நிறுவனம் நடத்திய காந்திய சிந்தனை வகுப்புகளில் தொடர்ந்து இரண்டு வருடம் கலந்து கொண்டு அவர்கள் நடத்திய கட்டுரைப்போட்டியில் பங்கேற்றதும் நடந்தது.

அந்த காந்திய சிந்தனை வகுப்பு நிறைவுவிழாவிலேயே போட்டி முடிவு அறிவிப்பும், பரிசளிப்பும். போட்டி அறிவிப்புக்கு முன்னதாக காந்தி அமைதி நிறுவன தலைவர் சடகோபன் முன்பு குட்டி, குட்டியாய் இரண்டு புத்தகங்கள். அதன் மீது இரண்டு குட்டி புத்தகங்களுக்கும் தலைவன் போல் பெரிய புத்தகமாய் இந்த சத்திய சோதனை.

10 பைசா, 12 பைசா கொடுத்து ராணியும், குமுதமும் வாங்கவே வக்கில்லாத காலத்தில் 10 ரூபாய் மதிப்புள்ள சத்தியசோதனை. தடியான புத்தகம். பரிசு பெரும்போது என்ன பெருமை? அது எனக்கே எனக்கே கிடைக்காதா சொக்கா? என்ற ஏக்கம். அதே போல் பரிசு அறிவிக்கப்படுகிறது. முதல் பரிசு எஸ்.வேலுச்சாமி என்று அறிவிக்கிறார் அறிவிப்பாளர். நூற்றுக்கணக்கானோர் கூடியிருக்கும் அவையில் ‘வேலுச்சாமி’ என்று யாருமில்லை.

ஒண்டிப்புதூர் அரசு மேல் நிலைப்பள்ளி, 11ம் வகுப்பு ஆங்கில வழியம் படிக்கும் வேலுச்சாமி என்று திரும்ப அறிவிப்பு. நான் தயங்கித் தயங்கி எழுந்திருக்கிறேன். நெஞ்சம் முழுக்க பட,படப்பு. வேலுச்சாமி என்று வேறுயாரும் இருந்து விடக்கூடாதே என்ற எதிர்பார்ப்பு. ஐயா, நான் வேலாயுதசாமி. எஸ்.வேலாயுதசாமி. அது என் கட்டுரையான்னு பாருங்க. கட்டுரைப் போட்டியில் பரிசுக்குரிய கட்டுரையை திரும்ப எடுத்து ஆராய்கிறார்கள்.

அதோ! எனது கட்டுரைதான். முத்துமுத்தான கையெழுத்தில். காந்தி வழி என்ற தலைப்பு ஹெச் பென்சிலில் அழகழகாய்.. ‘அந்த கட்டுரை என்னுதுதான் ஐயா..!’ படபடக்க நான் குரலை வெளிப்படுத்திய வேளை, பரிசு தரும் தலைவர் உச்சி மோந்து கொள்கிறார்.

புத்தகத்தோடு எழுதி ஒட்டப்பட்டிருந்த சான்றிதழில் ‘வேலுசாமி’ என்ற பெயரில் இருந்த ‘லு’ வை தனது பேனாவினால் அடித்துவிட்டு, ‘லாயுத’ ஆகிய எழுத்துக்களை ஏரோ மார்க் போட்டு மேலே எழுதி, என் கையில் சத்தியசோதனை புத்தகம் அளிக்கப்படுகிறது.

அரங்கு கொள்ளாத கைதட்டல். காந்தியுடனான அந்த கைகோர்ப்பும், அதற்கு கிடைத்த கைதட்டலும், மறுபடியும் திருத்தப்பட்டு சுருக்கப்பட்ட பெயரும்தான் இன்று என் எழுத்துக்கும், பத்திரிக்கை தொழிலுக்கும், இரண்டுக்குள்ளும் மூழ்கி நிற்கும் அர்ப்பணிப்புக்கும் மூலக்காரணியாக விளங்கியிருக்கிறது என்பதை இந்த புத்தகத்தின் வாசத்தில் உணரும்போது என் மனம் லேசாகி போவதை தவிர்க்க முடிவதில்லை.

Source………கா.சு.வேலாயுதன்………www.tamil.the hindu.com

Natarajan

இளைஞர்களுக்கு வழிகாட்டிய இருவர்….

இருக்கும் வரை இருமிவிட்டு, இறந்தபின்னே இடுகாட்டுக் கரையான்களுக்கு இரையாகி மறையும் மனிதர்களுக்கு மத்தியில், வரலாறாகவே வாழ்ந்து விட்டுப் போகிற மனிதர்கள்
உன்னதமானவர்களாய் உலகத்தாரால் மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் விழிகள் வழிகாட்டும் மொழிகளாய் மற்றவர்களுக்கு அனுதினமும் அறிவுரைகளைத் தந்துகொண்டே இருக்கின்றன. சங்கடங்கள் சாமரம் வீசினாலும் அவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.
காந்தியும், காமராஜரும் சிரமத்தின் மீதேறி சிகரத்தை அடைந்த மகத்தான வாழ்ந்துகாட்டிகள். எளிமையான, பயன்மிகுந்த வாழ்க்கையால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.உலகப் போர்களால் உருக்குலைந்துபோன உலகிற்கு அகிம்சை என்கிற அமுதத்தை அள்ளித்தந்த வள்ளல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திஜியும், காந்திய நெறியில் வாழ்ந்து, காந்தியாகவே வாழ்ந்து காந்தி ஜெயந்தி அன்றே கண்ணயர்ந்த கர்மவீரர் காமராஜரும் இன்றைய இளையோரின் இணையற்ற வழிகாட்டிகள்.


மனித ஆத்மாக்களுக்கு மத்தியிலே மகாத்மாவாக மாற அவர் என்ன செய்தார்? கர்மமே கண் என்று லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் இன்றும் துாயஆட்சியாளராய் நினைத்துப் பார்க்கப்படுகிறாரென்றால் காரணம் என்ன?

கைதவறி கீழே விழுந்த பாதரசம் எப்படி எந்த அழுக்கோடும் ஒட்டாமல் உருண்டோடுமோ, அதுபோல் இந்த இரு தலைவர்களும் உலகியல் வாழ்க்கையோடு ஒட்டிஒட்டாமல் வாழ்ந்தவர்கள். மனத்துக்கண் மாசுஇல்லாமல் வாழ்தலையே அனைத்து அறமாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். இருவரும் அனுபவங்களால், வாழ்வை ஆராதனை செய்தவர்கள். இந்திய நாட்டின் விடுத்தலைக்காகப் பல நாட்கள் சிறையிலேயே கழித்தவர்கள் இருவரும்.
எளிமையான தலைவர்கள் விளம்பரத்திற்கு ஆசைப்படாத எளிமையான தலைவர்களாக இருவரும் திகழ்ந்தார்கள். 1901ல் ஒரு மாநாட்டிற்காக காந்தி, கல்கத்தா வந்திருந்தார். மாலையில் மாநாடு தொடங்க இருந்த இடத்தைக் காலையில் பார்வையிடச் சென்றார்.
அந்த மைதானம் குப்பையும் கூளமுமாயிருந்தது. ஒன்றும் பேசாமல் காந்திஜி துடைப்பத்தைக் கையில் ஏந்தி மைதானத்தைத் துாய்மைசெய்யத்தொடங்கினார்.
தஞ்சை மாவட்டச் சுற்றுப்
பயணம் மேற்கொண்ட காமராஜர் ஒரு பழைய கோவிலுக்குள் சென்றார், உடன் இருந்தவர்களிடம் “ இதை யார் கட்டுனான்னு கேட்டேன்” என்றார். யாருக்கும் தெரியவில்லை, சட்டென்று மேலே எரிந்துகொண்டிருந்த குழல்விளக்கைக் காட்டி, ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இந்தக்கோயிலே கட்டுன மவராசன் யாருன்னு தெரியல… அதுல டியூப் லைட் போட்ட மவராசன் பேரு பெயிண்டுல எழுதியிருக்குன்னேன்” என்று சிரித்தபடிச் சொல்லியவாறே காமராஜர் வெளியே வந்துவிட்டார்.
பதவியை விரும்பா பண்பாளர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, எந்த ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க மறுத்தார் காந்தி. இரண்டு முறை பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தபோதும் ஏற்காமல் சாஸ்திரியையும், இந்திராகாந்தியையும் பிரதமராக்கி அழகுபார்த்த தலைவர் காமராஜர். “பதவியைத் தேடி நாம் போனால் பதவிக்குப் பெருமை, பதவி நம்மைத் தேடிவந்தால் நமக்குப்பெருமை” என்று அடிக்கடிக் கூறியவர் கர்மவீரர் காமராஜர்.
பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி கறுப்பர் என்ற காரணத்தால் டர்பன் நீதிமன்றத்தில் தலைப்பாகையோடு வாதாட அனுமதி மறுக்கப்பட்டது. அதைக் கடுமையாக எதிர்த்து, அந்த நீதிமன்றத்தை விட்டுவெளியேறினார். முதல் வகுப்புப் பயணச் சீட்டோடு பிரிட்டோரியாவுக்குப் பயணித்தவரை நிறவெறியோடு வெள்ளையர்கள் துாக்கி எறிந்தபோது பட்ட ரணத்தை இந்தியநாட்டின் சுதந்திரத்திற்காகப் பயன்படுத்தினார். ராட்டையையே சாட்டையாக்கி அந்நியரை நாட்டைவிட்டு ஓடச்செய்த மகாத்மா, மதுரையில் தன் ஆடைகளை மாற்றித் தமிழ்நாட்டு விவசாயிகள் உடுத்தும் மிக எளிய உடைக்கு மாறினார். மகாத்மாவின் கொள்கைகளில் கவரப்பட்டு காமராஜர் வாழ்நாள் முழுக்க கதராடையையே உடுத்தினார்.
மனிதநேயச் செல்வர்கள் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் மனிதநேயநெறியை இருவரும் தம் வாழ்வின் அறமாகக் கொண்டவர்கள். பள்ளிக்குச் செல்லும் வயதில் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், காமராஜரைப் பெரிதும் பாதித்ததன் விளைவாக, உலகம் போற்றும் மதியஉணவுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
சம்பரானில் கஸ்துாரிபாவோடு பயணித்துக்கொண்டிருந்தபோது அழுக்கு உடையோடு குழந்தைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை காந்திஜி பார்க்கிறார். “கஸ்துாரிபா… இவர்கள் அழுக்கோடு மாற்று உடை இல்லாமல் இருப்பது உனக்கு உறுத்தவில்லையா?
நீ ஏன் இவர்களை நீராடவைத்து துாய்மையான உடையணிவித்து பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது?” என்று கேட்டார். காந்திஜி சொன்னபடி வாழ்க்கை முழுக்க கஸ்துாரிபா செய்தார்.
சத்தியசோதனை மேற்கொண்டவர்கள் மகாத்மாவுக்கு முகஸ்துதி பிடிக்காது. “நாம் சேவை செய்யத்தானே பிறந்திருக்கிறோம் இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?” என்று அடிக்கடி சபர்மதி ஆஸ்ரமத்திற்கு வருவோரிடம் கூறுவார்.
காமராஜரும் அப்படியே வாழ்ந்தார். யாரேனும் தன்னைப் பாராட்டிப் பேசினால், “நிறுத்துனேன்… என்னைப் புகழ்ந்து பேசும் நேரத்திலே நல்ல காரியம் எதையாவது செய்யலாமேனேன்” என்பார். முதலமைச்சரானதும் பாதுகாப்புக்கு தன் காருக்கு முன் சைரன் வைத்த கார் சென்றதை விரும்பாதவர்.
இருவரும் சிறுவயதில் தந்தையை இழந்து தாயாரின் அன்பில் வளர்ந்தவர்கள். இருவரும் சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள். அந்நிய ஆடைகளை மறுத்து காலம் முழுக்க கதராடை அணிந்தவர்கள். எளிமையானவர்கள், பழகுவதற்கு இனிமையானவர்கள், நேர்மையானவர்கள். தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு, தன் அன்னை தேசம் பாழ்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தங்களையே சுதந்திர வேள்வியில் உருக்கி ஊற்றியவர்கள். அவர்கள் வழியை நம் விழிகள் நோக்கட்டும். இந்த தேசத்தை நேசித்த அவர்கள் வழியில் நம் இளையோர் பயணம் நடக்கட்டும்.

Source……-முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி,
in http://www.dinamalar.com

Natarajan

 

” We Are not Special…But Limited Edition …”

We, the people born between 1940-1970…are the  blessed ones…We are the awesome people… Our life  is a living proof……….
>
>
> 👉We were never treated like  a pack of animals to carry  our books to school.
>
> 👉While playing and riding bicycle, we never bothered to  wear helmets.
>
>  👉After school time we played until its dusk but never  watched t-world (TV) by locking up ourselves in a room.
>
> 👉We played only with our real friends, not  with NET friends.
> 👉 If we ever felt thirsty, we used to drink tap water but  never searched for bottled water.
>
> 👉We never got ill even after sharing the same juice with  four friends.
>
> 👉We were never put on weight even after eating plate full > of sweets and rice everyday.
>  👉Nothing happened to our feet even after roaming bare  foot.
>
> 👉We never used any health supplements to keep ourselves  healthy.
>
>  👉We used to create our own toys and play with them.
>
>  👉Our parents were not rich, they never ran behind money  and wealth. They just searched for and gave only love.. not  any worldly materials.
>
>  👉We stayed nearby to them so that they can communicate  with us. Just one word by them was enough to communicate.  hence we never required any mobile phones to communicate.
>
>  👉We never visited doctor when we got ill but the doctor  visited us during our illness.
>
>  👉We never used to share our emotions just by  emoticons inmobile phones.
>
>  👉We used to listen to the truth and voice of our  conscience and used to write those things only in the  letters, hence we never used to change our words.
>
>
>  👉We never had cellphones, DVDs, Play stations, XBoxes,  video games, Personal computers, internet, chat but we had  many real friends.

👉We used to visit our friend’s home uncalled and  enjoyed food with them. We never had to call them and ask  their permission to visit their home.
>
>  👉Relatives were near to us so our hearts and souls were  happy. Hence we never required any insurance policy.
>
>  👉We may have been in Black and White photos  but you can find good colourful memories in those  photos……..
>
>  🌹🌹🌹🌹Last is the  ultimate🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
>  👉  We are a unique and the most understanding  generation, because we are the last generation who listened  to their parents….  and also the first which have to listen to their children.
>  We are not special, but  LIMITED EDITION

Source…. Input from a friend of mine….

Natarajan

 

” நான் இருக்கேன் ……..”


திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக் குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்றுகொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார். ஓடோடி வந்து பவ்யமாக குனிந்தபடி நின்றார் அவர். உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா?” என்றார். உத்தரவு” என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே, பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும்” என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.

மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் சும்மா இருக்க முடியுமா? வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை விளக்கும் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றில் குங்குமத்தின் பெருமைகளைக் குறித்த தகவல்களைச் சேகரித்தார். குங்குமம் தயாரிப்பு தொடர்பான புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்தார். பின் தயாரிப்பைத் துவக்கினார். நல்ல தரமான குண்டு மஞ்சள், எலுமிச்சை, படிகாரம், வெண்காரம், நல்லெண்ணெய் ஆகியவைதான் குங்குமத் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள். பழந்தயாரிப்புப்படி கைகளாலேயே தயாரிக்கப்பட்ட குங்குமத்தைச் செய்து முடித்ததும் வேங்கட சுப்பிரமணியத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தயாரித்த குங்குமத்தை ஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு மகாபெரியவரைப் பார்க்க கும்பகோணம் விரைந்தார். குங்குமத்தை உள்ளங்கையில் இட்டுப் பார்த்தவுடன் மகாபெரியவரின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. இந்தப் பணியை நீ தொடர வேண்டும்” என்று சைகையிலேயே ஆணையிட்டார். வேங்கட சுப்பிர மணியம் ஸ்ரீவித்யா உபாசகர். அம்பாள் குங்குமப் பிரியை ஆயிற்றே! ஒரு அர்ப்பணிப்போடு குங்குமத் தயாரிப்பில் இறங்கிவிட்டார் வேங்கட சுப்பிரமணியம்.

ஸ குங்கும விலேபனாம் அளிக சும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸ ஸரஸாப பாசாங்குசாம்
அசேஷஜ நமோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸூம பாசுராம் ஜப விதௌ ஸ்மரேத் அம்பிகாம்என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது குங்குமப் பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியை அலங்கரிக்கும் கஸ்தூரி திலகம் இட்டவளும், புன்னகைக்கும் கண்கள் உள்ளவளும், வில், அம்பு, பாசம், அங்குசம் ஏந்தியவளும், எல்லா மக்களையும் தன்பால் ஈர்ப்பவளும், செந்நிற மாலை, ஆடைகள் அணிந்து, செம்பருத்திப் பூ போல ஒளிமயமாக இருப்பவளுமான அம்பிகையை ஜபகாலத்தில் நினைவு கொள்கிறேன் என்பதுதான் இதன் பொருள். அம்பாள் உமைக்கு பல அம்சங்கள். திரிபுரசுந்தரி, காமாட்சி, அபிராமி, பார்வதி, லலிதா என்று பல திருநாமங்கள். ஒவ்வொரு அம்சத்திலும், பல பாக்கியங்களை பக்தர்களுக்கு அள்ளித் தருகிறாள் அம்பாள். எப்போதும் சுமங்கலியாகவே இருப்பவள் லலிதா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுமங்கலியான பெண்ணை பளிச்சென்று வெளிப்படுத்துவது, அவளது நெற்றியில் அலங்கரிக்கும் குங்குமம்தான். ஒரு பெண் தன் திருமணத்தின் போதுதான் குங்குமம் வைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறாள். நெற்றியிலுள்ள குங்குமம், ஒரு பெண்ணின் சுமங்கலித் தன்மையை மட்டும் சொல்வதல்ல. அவளுக்குள் பொதிந்திருக்கும் ஞானத்தையும், ஆற்றலையும் குறியீடாக உணர்த்தும் தன்மையும் கொண்டது. சௌந்தர்ய லஹரியும் லலிதா சகஸ்ரநாமமும் குங்குமத்தின் பெருமைகளை எடுத்து வைக்கின்றன.

சுமார் 5,000 வருடங்களாக, குங்குமம் வைத்துக் கொள்வது என்பது நமது சம்பிரதாயமாக இருந்து வருகிறது என்கிறது ஒரு புராணத் தகவல். இரண்டு இமைகளுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நமது உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏழு சக்கரங்கள் உள்ளன. நமது செயல்கள், சாதனைகள், சாகசங்கள் என்று அனைத்துக்குமே காரணமாக அமைந்தவை இந்தச் சக்கரங்கள். இந்தச் சக்கரங்களின் செயல்பாட்டைத் தூண்டி விடுவதில், முதுகுத் தண்டுக்கு அடிப்பகுதியில் பொக்கிஷமாக இருக்கும் குண்டலினி சக்திக்கு பெரும்பங்கு உண்டு. யோகம், தியானம் போன்றவற்றின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்த ஏழு சக்கரங்களைத் தூண்டி விடலாம். இந்த ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை, நெற்றிப்பொட்டில், புருவங்களின் மத்தியில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்பட காரணமாக அமைவது இந்த ஆக்ஞா சக்கரம் தான். அதைக் குறித்துத்தான் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்கிறோம்.

Read more: http://periva.proboards.com/thread/6421/#ixzz3mmmTHWe0

Source…www.periva.proboards.com

natarajan

” ஓ ….சுவாமிநாதா …நீயா ….எனக்கு என்ன உத்தரவு சொல்லு …”

ஒரு முறை மகா சுவாமிகள் தென் தமிழ் நாட்டில்

யாத்திரை செய்யும்போது இரவு நேரத்தில் அடுத்த
1234201_315112848661397_4724600860700186658_n.jpg
கிராமத்துக்குக் கால்நடைப் பயணமாகப் போக நேர்ந்தது.

அங்கே இரு பிரிவினரிடையே ஜாதிச்சண்டை நடந்து

கொண்டிருந்தது. அதனால் பக்தர்கள் போவதற்குப்

பயப்பட்டார்கள்.

“ஒன்றும் நடக்காது.போகலாம் வாருங்கள்” என்று

கிளம்பி விட்டார் சுவாமிகள். சீடர்கள் பயத்தினால்

நடுங்கியபடி தொடர்ந்து போனார்கள்.

அடுத்த கிராமத்துக்குள் நுழையும் இடத்தில் ஒரு

கூட்டம் அரிவாள்,குண்டாந்தடியுடன் அவர்களைத்

தாக்குவதற்காகக் காத்துக்கொண்டிருந்தது.

அந்தக் கூட்டத்தின் தலைவன் அவர்களை

அமர்த்திவிட்டு மகா சுவாமிகளை நோக்கி வந்தான்.

இரண்டு நிமிடங்கள் ஒரே அமைதி. யாருக்கும்

பயத்தால் வாய் திறந்து பேசக்கூடத் தைரியம்

வரவில்லை. மகா சுவாமிகள் ஒரு புன்னகையுடன்

அவனைப் பார்த்தார்.

“ஓ! சுவாமிநாதா! நீயா? உன் உத்தரவு எதுவானாலும்

நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்” என்று

அங்கேயே கீழே விழுந்து நமஸ்காரம் செய்தான் அவன்.

மற்ற எல்லோருக்கும் ஆச்சரியம்! கூட வந்த கலகக்

கூட்டம் குண்டாந்தடி,அரிவாள் எல்லாவற்றையும்

கீழே போட்டுவிட்டு அந்தந்த இடத்திலேயே

நமஸ்காரம் செய்து வணங்கி நின்றது.

மற்றவர்களிடம் மகா சுவாமிகள் அமைதியாக

“நானும் அவனும் பள்ளிக் கூடத்தில் ஒன்றாகப்

படித்தோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். காரணம் அந்தத்

தலைவன் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்தவன்.

அவர்களுடைய இமாமை சந்திக்க விரும்பினார்

மகா பெரியவர்கள்.அவர் வந்ததும் குர் ஆனிலிருந்து

சில வரிகளை எடுத்துச் சொல்லி அன்பையும்

சகோதரத்துவத்தையும் இஸ்லாமிய மதம் எவ்வளவு

முக்கியமாகக் கருதுகிறது என்று விளக்கினார்.

அனைவரும் மகிழ்ந்து போனார்கள்.

அன்று கிராமத்தில் சுவாமிகளை ஊர்வலமாக

அழைத்துக் கொண்டு போனார்கள் கிராம மக்கள்.

அவர்களை அடுத்த கிராமத்துக்கு அழைத்துச் சென்று

விட்டு விட்டு, விடை பெற்றுத் திரும்பினார்கள்.

Source…….www.periva.proboards.com

Natarajan

 

 

” சங்கத்தமிழ் மூன்றும் ஆங்கிலமும் தா …” !!!

பிள்ளையார் சுழி!

விநாயகர் சதுர்த்தி-செப்டம்பர் 17-09-2015

மகா சுவாமிகளுடன்…

பரணீதரன்

1922458_1501314900155054_79277391464543733_n.jpg
காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி

யத்னாது கரோமி யதி சாருதரம் கரோமி

பூபால மௌளி மணிமண்டித பாத பீட

ஹே சாகஸாங்கா கவயாமி வயாமி யாமி..!

(பெரியவா சொன்ன கவிதை)

தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் ஒரு மாலை நேரம். ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகளுக்கு வந்தனம் செய்துவிட்டு எழுந்து நின்று, கருணைமுகில் அருள்மழை பொழியக் காத்திருந்தேன்.

”ரமண மகரிஷியைப் பத்தி உலகம் பூராவும் தெரிஞ்சுண்டது. பால் பிரண்டன் அவரைப் பத்தி விவரமா எழுதுனதுக்கு அப்புறம்தான்… தெரியுமோ?”

”மகரிஷியைத் தரிசனம் பண்ணிட்டுத்தான் கப்பல் ஏறணும்னு பால் பிராண்டனைக் கட்டாயப்படுத்தினது பெரியவாதானே…”

”அது இருக்கட்டும்… என்ன சொல்ல வந்தேன்னா, பால் பிரண்டன் ரமணரைப் பார்த்துப் பேசின அனுபவங்களை எல்லாம் இங்கிலீஷ்லே எழுதுனதுக்கு அப்புறம்தானே உலகம் தெரிஞ்சுண்டது. அதுக்கப்புறம்தானே அங்கேயிருந்து நிறையப் பேர் ரமணாச்ரமத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. அவாளும் நிறைய எழுதினா. அதுமாதிரி நம்ம சேஷாத்ரி சுவாமிகளைப் பத்தியும் இங்கிலீஷிலே எழுதினா அங்கே இருக்கிறவாளெல்லாம்கூட தெரிஞ்சுப்பாளேனு எனக்குத் தோண்றது”.

”பெரியவா அனுக்கிரகம் பண்ணினா நான் முயற்சி பண்றேனே”.

”நீ இங்கிலீஷ் என்ன படிச்சிருக்கே?”

”அதிகமா ஒண்ணும் படிச்சதில்லே. ஆனா, இங்கிலீஷ் மேலே எனக்கு ரொம்ப ஆசை. காலேஜ்லே இருந்தப்ப நிறையப் படிப்பேன்..”

”காலேஜ்லே என்ன படிச்சே?”

”பி.காம்”

”மெயின் சப்ஜெக்ட் இல்லை. Non-detail ஸ்டடிதான். ஆனா, லைப்ரரிலேருந்து நிறையப் புத்தகங்கள் எடுத்துண்டு போய்ப் படிப்பேன். அப்போலேருந்தே இங்கிலீஷ்ல எழுதணும்… பேசணும்னு எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு!”

சற்று நேரம் எதையோ யோசிப்பதுபோல் மகா சுவாமிகள் மௌனமாயிருந்தார். நான் காத்திருந்தேன்.

பெரியவா பேசத் தொடங்கினார்: ”ஒரு கதை சொல்றேன். கேளு. போஜராஜானு கேள்விpபட்டிருக்கியோ?”

”கேள்விப்பட்டிருக்கேன்”

”அவனோட ராஜசபையில் பெரிய பெரிய கவிகள்லாம் இருந்தா. அந்த ராஜ்யத்தில் கவிதா ரசனை இல்லாதவாளே கிடையாதுனு சொல்லுவா… ஒரு நாள் ராஜா, மந்திரியைக் கூப்பிட்டு, ‘நம்ம ராஜ்யத்தில் கவிதை பண்ணத் தெரியாதவன் யாராவது இருக்காளானு விசாரிச்சுப்பாரு.. அப்படி ஒருத்தன் இருந்தான்னா அவனை அழைச்சிண்டு வா!’னு சொன்னார். ‘சரி’னு மந்திரியும் ஊர் ஊரா போய்த் தேடிப் பார்த்துட்டு, ‘கவிதை பாடத் தெரியாதவனே இல்லை. ஒரே ஒரு ஏழை நெசவாளி மட்டும், ‘கவிதை எழுத எனக்குத் தெரியாது. ஆனால் எழுதணுங்கற ஆசை இருக்கு!’னு சொன்னான். ‘இதுவரைக்கும் நீ கவிதை ஒண்ணும் எழுதினது இல்லியே?’னு நிச்சயம் பண்ணிண்டு இதோ அழைச்சுண்டு வந்திருக்கேன்’னான்.

போஜராஜா நெசவாளியைப் பார்த்து, ‘நம்ம ராஜ்யத்தில் எல்லாரும் கவி பாடுவாளே.. உனக்குப் பாடத் தெரியாதுன்னு சொன்னியாமே?’ என்று கேட்டார். ஒண்ணும் தெரியாதவன்கூட போஜராஜாவைப் பார்த்தான்னா அவன் மனசுலே கவி பொங்குமாம். ராஜா இப்படிக் கேட்டதும் அந்த நெசவாளி, ‘கவிதை பண்றேன். ஆனா அர்த்தத்தோட அழகாப் பாடத் தெரியாது!’னு முதல் வரிலே சொன்னான். ரெண்டாவது அடியிலே, ‘கொஞ்சம் முயற்சி பண்ணினா நன்னாவே பாடிடுவேன்’னு சொல்லிட்டு, மூணாவது அடிலே மளமளனு அமர்க்களமா ராஜாவைப் புகழ ஆரம்பிச்சுட்டான். என்ன சொன்னான் தெரியுமா, ‘மத்த ராஜாக்களெல்லாம் உன் பாதங்கள்ல விழுந்து வணங்கறப்போ, அவர் கிரீடங்கள்ல இருக்கிற ரத்தினங்களோட சிவப்பு நிறம், உன் பாதங்கள்ல பட்டு அந்தப் பீடமே சிவந்து போற மாதிரி இருக்கு’னு அழகா வர்ணிச்சுட்டான்!

நாலாவது அடிலே, ‘நான் கவி பண்றேன், நெசவு செய்யறேன், போயிட்டு வரேன்’னு கவிதை நயத்தோடு சொன்னபடியே புறப்பட்டுப் போயிட்டான்” என்று சொன்ன பெரியவா, ”நீயும் போயிட்டு வா!” என்று எனக்கு ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

பெரியவா சொன்ன கவிதை இதுதான்…

காவ்யம் கரோமி நஹிசாருதரம் கரோமி

யத்னாது கரோமி யதி சாருதரம் கரோமி

பூபால மௌளி மணிமண்டித பாத பீட

ஹே சாகஸாங்கா கவயாமி வயாமி யாமி..!

ஆங்கிலத்தில் எழுதுவதற்கு குரு எனக்கு ஆசி வழங்கிவிட்டார். குருவருள் பரிணமிக்க, தெய்வத்துணை வேண்டுமல்லவா? அடுத்து விநாயகரிடம் விண்ணப்பித்துக் கொண்டேன்.

அதன் பின்னணியைக் கூற வேண்டுமல்லவா? சின்ன வயதிலிருந்தே என்னுள் ஒரு நெருடல், ‘ஒளவைப் பாட்டி, விநாயகரிடம், பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன். நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று கேட்டது என்ன கணக்கு? நான்கைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு மூன்றைக் கேட்பானேன்? நான்குக்கு ஈடாக நான்கைக் கேட்டிருக்கலாமே?’ என்று என் சின்ன புத்திக்குத் தோன்றியது.

அது போகட்டும்… வயது ஆக ஆக என்னுள் வேறொரு சந்தேகம் முளைக்கத் தொடங்கியது. ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்றால் என்ன? இயல், இசை, நாடகத் தமிழா அல்லது மூன்று தமிழ்ச் சங்கங்கள் வளர்த்த தமிழா?

இது ஒருபுறம் இருக்கட்டும், ”நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட ‘பழைய நெருடல் கணக்குக்கே வருகிறேன். ஆங்கிலத்தில் எழுத காஞ்சி மகானிடம் ஆசி பெற்ற பிறகும் நூல் எழுத என் ஆங்கில அறிவு போதும் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை. தும்பிக்கையானிடம் சரணடைந்தேன். ஒளவைப் பாட்டியைப் போலவே தா’ எனக் கேட்டுவிட முடிவு செய்தேன். கூடவே, அதை எப்படிக் கேட்பது என்ற பிரச்னை எழுந்தது.

ஒளவைப் பாட்டி நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்ட கணக்கு சிறு வயதிலிருந்தே என் மனதை உறுத்தி வந்ததால் நான்குக்கு நான்கையே கேட்டு கணக்கைச் சீர் செய்துவிடுவது என்று நான் முடிவு செய்தேன். எனவே,

‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலம் செய்

துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் ஆங்கிலமும் தா’

என்று செய்யுளை மாற்றியமைத்துக் கொண்டேன் (ஒளவைப் பாட்டி மன்னிப்பாராக).

இந்த அத்துமீறலுக்கு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆண்டவனைப் பொறுத்தவரை மொழித் தகராறு இருக்க முடியாது; அது நமக்குள்தான். உண்மையான பக்தன். எந்த மொழியில் வேண்டிக் கொண்டாலும் அவன் உள்ளம் பகவானுக்குப் புரியும். அளிக்க வேண்டியதை அளித்து ஆட்கொள்வார்.

ஒரு நாள் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு தைரியமாக எழுதத் தொடங்கினேன். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளைப் பற்றி எழுதுவதற்கு ஜகத்குருவிடம் ஆசி கோரினேன். அதற்கான ஆங்கில அறிவை அருளுமாறு ஆனைமுகத்தானிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்.

ஒரு மகானைப் பற்றி எழுதத் தொடங்கினேன். ஆறுமுகனுக்கு மூத்தவர் ஆறாக அருளிவிட்டார். பத்தாண்டுகளுக்கு முன் ‘Six Mystics of India’ என்ற எனது முதல் ஆங்கில நூல் வெளிவந்தது

Source….Expeience of Bharanidharan  in http://www.periva.proboards.com

Natarajan

” The British Flying Jeep….” !!!

WWII Files: The British Flying Jeep

How many of you science fiction buffs have fantasized about zipping around town in your very own flying car? Sure, a trip in a helicopter or airplane has now become the standard or even mundane mode of long distance travel, but imagine taking your very own flying machine on a trip across town, presumably with The Jetsons’ theme song blasting in the background. With advances in modern technology, it is only a matter of time right? What may surprise you though, is that way back in 1942, twenty years before Americans were meeting George Jetson and marveling at The Jetsons‘ flying car, the British Military actually had their very own flying jeep.

It was right smack in the middle of the Second World War and the military needed to find a way to airdrop more than messages, medical supplies or rations. They wanted to sky dive off-road vehicles to provide transportation for their infantry soldiers and other military personnel. They had previously tested the Hafner Rotachute, a rotor equipped parachute towed by an airplane with the objective of delivering armed soldiers more precisely to the battlefield, and they figured they could apply similar technology to a large vehicle.

So they looked to Raoul Hafner again. Hafner was an Austrian engineer – a contemporary and admirer of Juan de la Cierva, that Spanish pioneer of rotary-winged flight – with a passion for helicopters. Hafner first designed the Rotachute and later conceptualized its spin-off the Hafter Rotabuggy. While both machines used rotor technology, the Rotachute was actually a fabric-covered capsule with room for one pilot and a notch for his weapon with fairing in the rear and an integrated tail. After various modifications, the first successful launch occurred on June 17, 1942 from a de Havilland Tiger Moth. Taking off, the airplane towed the Rotachute on a 300 foot towline and released it at an altitude of 200 feet. A rough landing necessitated further improvements in the form of a stabilizing wheel and fins to improve stability.

hafner_rotabuggy_4In the case of the Rotabuggy the question was how to build a vehicle that they could fly and drop from a height without causing damage. They did some tests using a regular (non-flying) 4×4 wartime jeep- a Willys MB- loaded with concrete and discovered that dropping it from heights up to a pretty impressive 2.35 metres (7.7 ft) could work without damaging the unmodified jeep.

With durable jeep in hand, they then outfitted it with a 40 ft rotor as well as a streamlined tail fairing with twin rudderless fins. For added toughness, they attached Perspex door panels, while stripping it clean of its motor. Inside they installed a steering wheel for the driver and a rotor control for the pilot and other navigational instruments. So visually you had the now-bantamweight jeep in front with two guys inside, a driver and a pilot, a rotor on top and a tail bringing up the rear. Welcome to the Blitz Flying Jeep!

Hafner_Rotabuggy-3In November of 1943, the flying trials started at Sherburn-in-Elmet, near Leeds. The first challenge was how to get the jeep up in the air. As so often happens with first attempts, during the first test flight the jeep literally failed to get off the ground. It ended miserably as they used a lorry to tow the flying jeep but it couldn’t get enough speed to lift the Willys MB airborne. During the second attempt, the jeep was towed by a heavier and more powerful Bentley automobile and it flew, gliding at speeds of reportedly about 45 to 65 mph. Later, they tested the jeep behind an RAF Whitley bomber, managing to achieve an altitude of about 122 meters (approximately 400 ft) in one ten minute flight in September of 1944.

Hafner-Rotabuggy-2While the records show that in the end the Flying Jeep worked very satisfactorily, there is an account of a witness who observed a rather shaken and exhausted pilot emerge to lie down relieved after one terrifying test flight. Apparently it had taken superhuman effort for him to handle the control column on that particular flight, which led to a rather scary, bobbing and weaving, bumpy ride. When the jeep finally dropped safely to the ground, the driver took over. After the vehicle came to a stop, reports say the ensuing silence was protracted, then the pilot was helped out to a spot adjacent to the runway where he lay down to rest and collect himself.

 
Although the Flying Jeep machine was improved with upgraded fins and rotor functionality, perhaps it was just as well that its further development was abandoned after military gliders, like the Airspeed Horsa, that could transport vehicles, were introduced.

Source….www.today i foundout.com

Natarajan

” என்னால் பேச முடியுமா …எழுதுவது வேறு ..பேசுவது வேறு….”

எத்தனையோ விஷயங்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையில் – பத்திரிகைகளில் பணி புரியும்போதும், சொற்பொழிவு துறைக்கு வந்த பிறகும் மிகவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் நடந்திருக்கின்றன… நடந்து வருகின்றன… எல்லாம் நம்மையும் தாண்டிய ஒரு சக்தியின் அருள்தான்!

தெய்வமாகட்டும்; மகான் ஆகட்டும். நமக்கு ஒரு அனுக்ரஹம் இருந்தால்தான், சில நல்லதுகளைப் பண்ண விடும். இல்லாவிட்டால், நாம்பாட்டுக்கு ஏதோ ஒரு வேலையைப் பண்ணிக் கொண்டிருப்போம் – எதைப் பற்றியும் சிந்திக்காமல்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உத்தியோகம்.

கணக்கு எழுதிக் கொண்டிருப்போம். கம்ப்யூட்டர் தட்டிக் கொண்டிருப்போம். ஆட்களை மேய்த்துக் கொண்டிருப்போம். இல்லை நம்மை யாராவது மேய்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், பகவானுக்கே சேவை செய்வது எப்பேர்ப்பட்ட ஒரு உத்தியோகம்.

பகவான் பேரையே சொல்லிக் கொண்டு வாழ்வது, பிழைப்பு நடத்துவது எப்பேர்ப்பட்ட உத்தமமான பணி..

விகடனிலும், திரிசக்தியிலும் சில காலம் இது எனக்கு வாய்த்தது. அதைத் தொடர்ந்து சொற்பொழிவு துறையில்…

திடீரென்று பழைய சம்பவம் ஒன்று என் மனதில் ஏதோ ஒரு ஃப்ளாஷ் பேக் போல் தோன்றும். என் வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை மீண்டும் அசை போட்டால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். அப்படி நிறைய இருக்கு.

‘எப்படியும் இந்த விஷயத்தை இன்று இரவு பதிவு செய்து விட வேண்டும்’ என்று வெளியில் எங்கோ ஒரு ஷூட்டிங்கிலோ, சபாவிலோ இருக்கும்போது தீர்மானம் செய்வேன். வீட்டுக்கு வந்ததும், ஒரு ஆகாரத்தை உள்ளே தள்ளி விட்டு, முகநூல் மற்றும் ஜிமெயிலை கொஞ்ச நேரம் மேய்ந்து விட்டு, ஒரு சில தொடர்களுக்கும், உபன்யாசத்துக்கும் தகவல்களை சேகரித்து வைத்து விட்டுப் படுக்கப் போய் விடுவேன்.

இதை சோம்பேறித்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். 24 மணி நேரத்தில் என்னால் பலதுகளை பண்ண முடியவில்லை.

இருந்தாலும், அவ்வப்போது சில வேளைகளில் பதிவிடுகிறேன்.

அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இன்று மதியம் பெங்களூர் நண்பரும் மகா பெரியவா பக்தருமான திரு கார்த்தி நாகரத்தினம் அவர்கள் எனக்கு நினைவுபடுத்தினார்.

நான் கிட்டத்தட்ட மறந்து விட்டேன். அவர் சொன்ன பிறகுதான் எனக்கு அப்படியே நினைவுக்கு வந்தது.

எப்படி நினைவுபடுத்தினார் தெரியுமா?

மகா பெரியவா சொன்ன பொன்னான ஒரு செய்தியை எனக்கு இன்பாக்ஸில் மெஸேஜ் பண்ணி விட்டு, ‘அண்ணா… நினைவிருக்கா… 2012 அக்டோபர்ல பெங்களூர் வந்தேள்… அப்ப, இந்த உபன்யாசத் துறைக்கு எப்படி வந்தேள்னு சொன்னேளே… இப்ப நான் உங்களுக்கு அனுச்சிருக்கற இந்த பெரியவா வாக்கியத்தையும் படிச்சுப் பாருங்கோ… பெரியவா கருணை புரியும்’ என்றார்.

இத்தகைய ஜனங்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுக்கு விலை இல்லை. ஆத்மார்த்தம் மட்டுமே தெரிகிறது.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

கார்த்தி எனக்கு அனுப்பிய மகா பெரியவா திருவாக்கை இங்கே அப்படியே போட்டிருக்கிறேன். இதைப் படித்து விட்டு, அதன் பின் தொடருங்கள்…

…………………………

“அநுஷ்டானமில்லாதபோது இந்திரியம் ஓடுகிறபடி ஓடவேண்டுமென்று தோன்றுகிறது. ‘ஜனங்கள் இப்படிப்பட்ட சரக்குதான் கேட்கிறார்கள்’ என்று அவர்கள் தலையில் பழியைப் போட்டுவிட்டு, கன்னா பின்னாப் பாட்டுப் பாடுகிறார்கள், புலன் வெறியைத் தூண்டிவிடுகிற ரீதியிலேயே எழுதுகிறார்கள், ஸினிமா எடுக்கிறார்கள், சித்திரம் போடுகிறார்கள். ஜனங்களும் அவர்கள் தலையில் பழியைத் திருப்பிப் போட்டு அவர்கள் இப்படிப்பட்ட சரக்குகளைத்தான் தருவதால் தாங்கள் அதையே எடுத்துக் கொள்ளும்படி இருக்கிறது என்கிறார்கள்.

இதிலே ஜனங்களைவிடக் கலைஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாக இந்தக் கலைகளை அப்யஸித்துக் கொண்டிருக்கிறவர்களுக்குத்தான் அதிகம் பொறுப்பிருக்கிறது. இப்போது கண்டதை எழுதியும், பாடியும், நடித்தும், படம் பிடித்தும் கீர்த்தி, தனம் எல்லாம் ஸம்பாதித்து விடலாம். ஆனால், ‘இத்தனை ஜனங்களைக் கெடுத்ததற்கான தோஷத்தையும் கண்ணுக்குத் தெரியாமல் ஸம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு இதற்காக நாம் ஒருத்தனுக்குப் பதில் சொல்லியாக

வேண்டும்’என்ற நினைப்பு அவர்களுக்கு இருக்க வேண்டும்.

மளிகை ஸாமானில் கலப்படம் பண்ணினால் குற்றம்;குடி தண்ணீரைக் கெடுத்தால் குற்றம் என்றால் நேரே மநுஷ்யனின் ஆத்மாவையே கெடுப்பது இவற்றைவிடக் குற்றம்தானே? கலப்படத்துக்காக தண்டிக்கிறவன் நம் மாதிரி ஒருத்தன்தான். அவனிடமிருந்து தப்பியும் விடலாம். அல்லது லஞ்சம் கொடுத்து ஸரிப்படுத்திடலாம். ஆனால் தன் ஆத்மாவையும் கெடுத்துக் கொண்டு, மற்றவர்களையும் கெடுத்ததற்காக ஒருத்தனைச் சிக்ஷிக்கிறானே, அவனிடமிருந்து தப்பவே முடியாது! அவனை நாம் வசியம் பண்ணிக் கொள்ளவும் முடியாது! இந்த நினைப்பு இருந்து விட்டால் கலைகளில் ஈடுபட்டவர்கள் தப்பு வழிக்குப் போக மாட்டார்கள்.

தெய்வ நினைப்பு, பய பக்தி அநுஷ்டானம் இவை போனதில்தான் அடக்கம் போய்விட்டது; இந்திரியங்களின் வேகம் குறைவதால் ஏற்படுகிற பக்வம் வராமலே போகிறது. இதோடுகூடக் ‘கலைஞர்கள்’ என்று தாங்களாகவே தங்களுக்குக் கௌரவம் கொடுத்துக் கொண்டு பொதுஜனங்களும் அதில் மயங்கி இவர்களைக் கொண்டாடி முகஸ்துதி பண்ணுவதில் அஹம்பாவம் ஜாஸ்தியாகிவிடுகிறது.

பழைய காலத்தில் போல, வித்வான்களைக் கூட்டி ‘அரங்கேற்றம்’ என்று செய்து, அவர்கள் ஒப்புக் கொண்டால்தான் ஒரு புஸ்தகத்தையோ, நாடகத்தையோ பிரசாரம் பண்ணலாம் என்றுமில்லாமல், ‘கருத்து ஸ்வதந்திரம், எழுத்து ஸ்வதந்திரம், பேச்சு ஸ்வதந்திரம்’ என்று வேறு ஏற்பட்டிருப்பதால், எதை வேண்டுமானாலும் ஆடிப் பாடி ஊரை வளைக்கலாமென்று நடந்து வருகிறது.

சின்ன வயதிலிருந்தே மதக் கல்வி, மதாநுஷ்டானங்கள் இருந்தால் தான் ஸாத்விகம் ஏற்படும். அப்போதுதான் எத்தனை ஆட்டம், பாட்டம் இருந்தாலும் அதுகளும் முடிவில் உயர்ந்த ஸாத்விக லக்ஷ்யத்தில் சேர்ப்பதாக இருக்கும். முற்காலங்களில் இப்படித்தானிருந்தது. அநுஷ்டான ஸம்பந்தம் துண்டித்துப் போனபின்தான் ராஜஸ, தாமஸப் போக்குகளையே தூண்டிவிடுவதாக இந்தக் காந்தர்வ கலைகள் ஆகியிருக்கின்றன.”

……………..

கார்த்தி அனுப்பிய செய்தியைப் படித்து விட்டீர்களா?

2012 அக்டோபரில் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக நண்பர்கள் கார்த்தி மற்றும் ஸ்ரீதர் சுவாமிநாதன் என்னை பெங்களூருக்கு அழைத்தார்கள். அப்போதுதான் இந்தத் துறையில் நான் நுழைந்திருந்தேன்.

அப்போது நண்பர்கள் கார்த்தி மற்றும் ஸ்ரீதரிடம், ‘நான் இந்த உபன்யாசத் துறைக்கு வராவிட்டால், தமிழ் தொலைக்காட்சி சீரியல்களுக்கு வசனம் எழுதப் போயிருப்பேன்’ என்று சொன்னேன்.

ஆம்! 2012 ஏப்ரல் வாக்கில் பணியில் இருந்து வெளியே வந்தபோது அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன்.

எழுத்தைத் தவிர, எதுவும் தெரியாது! மீண்டும் பத்திரிகைக்குத்தான் போக வேண்டும் என்று முயற்சித்தேன். ஆனால், சரிவரவில்லை.

அப்போதுதான் என் பத்திரிகைத் துறை நண்பர் ஒருவர், ‘பத்திரிகைகள்ல வேலை செஞ்சது போதும் சுவாமீ… டிவி சீரியல்களுக்கு வசனம் எழுத வாங்க… மாசம் நல்லாவே சம்பாதிக்கலாம்’ என்று புள்ளிவிவரத்துடன் பேசினார்.

அவர் சொன்ன தொகையும், விவரித்த விதமும் என்னைக் கவர்ந்தது.

ஒரே ஒரு தர்மசங்கடம் – கடந்த பத்து வருடங்களாக பல கோயில்களுக்கும் மகான்களின் அதிஷ்டானங்களுக்கும் போய் தரிசித்து ஏராளமான ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன்.

திடீரென சீரியல்களுக்கு வசனம் எழுதப் போனால்… என்னை பலவாறு மாற்றிக் கொள்ள வேண்டுமே என்று தயங்கினேன்.

ஆனாலும், ஜீவனம்தான் அவ்வப்போது கண்களை மறைத்தது.

அப்போது மகா பெரியவாளிடம் ஒரே ஒரு கோரிக்கை வைத்தேன். ‘பெரியவா… இத்தனை வருடமா ஆன்மிகத்துல இருந்துட்டேன். நிறைய எழுதிட்டேன். இனி தொடரப் போகிற எனது பணி ஆன்மிகத்துக்கா, டிவி. சீரியல்களுக்கா? நீங்களே முடிவு பண்ணுங்கோ’ என்று வேண்டினேன்.

பெரியவா கண் திறந்தார்.

அடுத்து ஒரு சில நாட்களிலேயே மகா பெரியவாளின் பரிபூரண அருளோடு என் வாழ்க்கைப் பாதை மாறியது.

எழுத்தில் இருந்து பேச்சுக்குப் பாதை திரும்பியது.

என்னால் பேச முடியுமா?

எழுதுவது வேறு. பேசுவது வேறு.

எழுத்து என்றால், திரும்பத் திரும்ப எடிட் செய்து ஒரு கட்டுரையை வெளியிடலாம். ஆனால், பேச்சு அப்படி இல்லை. பேசினால் அது ‘லைவ்’.

பெரியவாதான் இதை சாதித்துக் கொடுத்தார்.

கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த தெய்வம் சத்தியமாக இருந்து என்னைக் காப்பாற்றிய விதம் என் நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும்.

பேசவே தெரியாத ஒருவனை பேசவும் வைக்கிறார்.

கார்த்தி இன்று மதியம் இதைத்தான் சொன்னார்: ‘அண்ணா… சொற்பொழிவுத் துறைக்கு வந்து நேற்றோடு மூன்று வருடம் பூர்த்தி ஆகிறது. இந்த பெரியவா போஸ்ட்டிங்கைப் பார்த்ததும், மூன்று வருடங்களுக்கு முன் பெங்களூரில் நீங்கள் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. எல்லாம் பெரியவா கருணை’

மகா பெரியவா சத்தியம்!

என்னைத் தடம் புரள விடவில்லை.

தன் பணிக்கே பயன்படுத்திக் கொண்டார்.

இன்று எத்தனையோ சேனல்கள், மேடைகள், வெளிநாடுகள் என்றெல்லாம் சென்றாலும், எல்லா புகழும் மகா பெரியவாளுக்கே!

வெகு சாதாரண மக்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுதான் எனக்குப் பெரும் பலம் – ‘சாமீ… எங்களுக்குப் புரியும்படியா எளிமையா சொல்றீங்க… நாங்களும் இப்ப காஞ்சிபுரம் போக ஆரம்பிச்சிருக்கோம்.’

இத்தகைய ஜனங்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுக்கு விலை இல்லை. ஆத்மார்த்தம் மட்டுமே தெரிகிறது.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

Source ….A Mail from my Friend Shri. Swaminathan  to me this Morning…

Natarajan

” ஷேமமா இரு…உன் கடமையை செய் …”

ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. குடும்ப தலைவர், ஒரு ஜோசியரிடம் தன் ஜாதகத்தை கொடுத்து விவரம் கேட்டார். ‘எக்கச்சக்கமா கிரக தோஷம், நவக்ரக ஹோமம், பெரிய அளவிலே செய்வது தான் பரிஹாரம்’.

பெரியவாளுடைய அனுமதியை பெற வந்தார் பக்தர். ‘ஜோசியர் சொன்ன படி நவக்ரக ஹோமம் செய்தால், நல்லது ஏற்படா விட்டாலும், நிச்சயம் கெடுதல் ஏற்படாது’ என்று சிந்தனைக்குரிய ஒரு பதிலை கூறி விட்டார்கள் பெரியவாள்.

பக்தருக்கு குழப்பம். ஹோமம் செய்வதா? வேண்டாமா? பெரியவாளை மறுபடி கேட்கலாம் என்றால், பெரியவா அங்கே இருந்தால் தானே? பதில் சொன்ன உடனேயே, சடக்கென்று புறப்பட்டு அந்த இடத்தை விட்டு போய்விட்டார்கள்.

பக்தர், பெரியவாளின் கைங்கர்யபரர்களிடம் ‘பெரியவா சரியான முடிவு சொல்லலையே?’என்று புலம்பி நச்சரித்தார்.அவருடைய தொல்லை தாங்காமல், ஒரு சிஷ்யர் பெரியவாளிடம் போய் பக்தரின் ஆதங்கத்தை சொன்னார்.

பெரியவா சொன்ன பதில்….

1. எல்லோருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் உண்டு. இவன் வீட்டில் தாத்தா, பாட்டி, இருக்கிறார்கள். அவர்களை சரிவர கவனித்து போஷிக்க வேண்டும். அது முக்கியமான தர்மம்.

2. வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களுக்கு கூடுமானவரையில் தர்மம் செய்யணும்.

3. தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

4. ஏழைகளையும், சமையற்காரர்களையும், தொழிலாளிகளையும் நிந்தனை செய்யகூடாது, பிரியமாக நடத்த வேண்டும். –

இதில் இருந்து, அக்குடும்ப தலைவர் இந்த நற்செயல்களை செய்யவில்லை என்பதை ஊகித்து அறிய முடிகிறது. அந்த சீடர், பக்தரிடம் போய், ‘உங்கள் கடைமைகளை எல்லாம் தவறாமல் செய்து வந்தாலே போதும். குடும்ப கஷ்டம் எல்லாம் போய்விடும். ஹோமம் செய்ய வேண்டிய தேவையே இருக்காது’ என்று பக்குவமாக சொன்னார்.

பக்தருக்கு நெஞ்சில் முள் குத்திற்று. பெரியவாளிடம் மறுபடியும் வந்தார். தன் துஷ்டத்தனங்களை ஒப்பு கொண்டார். ‘பரம்பரையா வந்தது. பெரியவா அனுகிரகத்தாலே, நல்ல வழிக்கு திரும்பணும். சரணாகதி பண்றேன்’.

பெரியவாள் மனம் உருகி போய்விட்டது.

‘க்ஷேமமா இரு’.

அது சரி, அந்த குடும்பத்தின் பரம்பரை இழிகுணங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?

ஸ்வாமியே சரணம்

Source….www.periva.proboards.com

Natarajan

 

 

Dry Weather Reveals Amazing River With Thousands of Shiva Lingas….

Recently, due to dry weather, the water level of the Shalmala river in Karnataka receded, revealing the presence of thousands of Shiva Lingas carved throughout the river bed. Because of these uncountable carvings, the place gets the name “Sahasralinga” (thousand Shiva Lingas).

Sahasralinga has become an important pilgrimage place. On the auspicious day of Mahashivaratri thousands of pilgrims visit Sahasralinga to offer their prayers to Lord Shiva. Each Lingam in the river has a matching carving of Nandi (the Bull carrier of Lord Shiva) facing it.

Shiva Lingas have been worshipped by Hindus for thousands of years. It represents divine power and energy. The worship of Shiva Linga was not confined to India only. Carvings of Shiva Lingas can be found throughout the world in nearly every ancient civilization.

Sahasralinga is a most beautiful place. It is located near Sirsi, in the state of Karnataka. It is on the way to Yellapur from Sirsi, around 17 kms from Sirsi. After Bhairumbe you will have to get down at a bus-stop called Hul Gol bus-stop and walk towards Hul Gol. From the main road it is a distance of around 2 kms.

sahasra-linga-01

sahasra-linga-02

sahasra-linga-03

sahasra-linga-04

sahasra-linga-06

sahasra-linga-07

sahasra-linga-08

sahasra-linga-11

sahasra-linga-12

sahasra-linga-13

sahasra-linga-14

sahasra-linga-16

sahasra-linga-18

sahasra-linga-19

sahasra-linga-20

Source….www.zonnews.com

natarajan