மகாகவி பாரதியாரின் சகோதரருடன் ஒரு சந்திப்பு !!!

1984ம் ஆண்டு.
“பாரதியார் பிறந்தநாள் வரப் போவுதே.. என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டார்கள் திருநெல்வேலி வானொலி நிலைய நண்பர்கள்.
நான் யோசித்தேன்.
“இந்த தடவை கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்யலாமே…’ என்று யோசனை கூறினார் ஒரு நண்பர்.
“வித்தியாசமா…ன்னா…?’
“பாரதியாரை நேரில் பார்த்தவர்கள், அவரோடு பழகியவர்கள், இப்படிப் பட்டவர்களை நேரிலே சந்தித்துப் பேசி… அதையெல்லாம் தொகுத்துக் கொடுக்கலாமே…!’
“நல்ல யோசனைதான். இருந்தாலும் பாரதியாரோடு பழகியவர்கள் இந்தக் காலத்திலே இன்னும் யார் இருக்கப் போகிறார்கள்?’
“என்ன சார் அப்படிச் சொல்லிபுட்டீங்க.. பாரதியாரின் தம்பி இருக்காரே… அவரைப் போய்ப் பார்க்கலாமே…!’ என்றார் டி.கே.ஆர். (நண்பர் தெ.கு.இராமச்சந்திரன் அப்போது எங்களோடு வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொணிடருந்தார். அவரை எல்லோரும் செல்லமாக டி.கே.ஆர். என்றுதான் அழைப்பது வழக்கம்)
“பாரதியாரின் தம்பியா?’ என்றேன் ஆச்சரியத்தோடு.
“ஆமாம். சி. விஸ்வநாத ஐயர்!’ என்றார் டிகேஆர்.
“எங்கே இருக்கார்?’
“மானாமதுரையிலே இருக்கார். அந்த ஊர் பள்ளிக் கூடத்துலே தலைமை ஆசிரியரா ரொம்ப காலம் இருந்தார். இப்ப ரிட்டையர் ஆகி அந்த ஊரிலேயே தான் இருக்கார்.’
“இப்ப அவருக்கு வயது என்ன இருக்கும்?’
“அது… வந்து 88 க்கும் மேலே இருக்கும் இருந்தாலும் இந்த வயசுலேயும் நல்லா சுறுசுறுப்பாக இருக்கார்.’
இவ்வளவு விவரங்களும் தெரிந்து கொண்ட பிறகு சும்மா இருக்க முடியுமா?
அலுவலகத்தில் முறையான சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு ஒலிப்பதிவுக் கருவிகளோடு நானும் நண்பர்களும் புறப்பட்டோம்.
மானாமதுரையில் எதிரே வந்த ஒருவரை நிறுத்தி வழிகேட்டோம்.
“அதோ.. அந்தப் பாலத்தை தாண்டி அடுத்த பக்கம் போங்க… வாசலிலே கம்பி போட்டிருக்கும். அந்த வீடுதான்.’
வீட்டுக்கு முன்னால் எங்கள் கார் போய் நின்றது.
வாசல்புறம் நின்றிருந்த ஒருவரிடம் நாங்க வந்திருக்கின்ற விவரத்தைச் சொன்னோம்.
உடனே அவர் எங்களை அழைத்துக் கொண்டு மரப்படிகளின் வழியாக மாடிக்குச் சென்றார்.
அங்கே அந்தப் பெரியவரை – மகாகவி பாரதியின் சகோதரரைச் சந்தித்தோம்.
அன்போடு எங்களை வரவேற்று அமரச் செய்தார். உபசரித்தார். உயரே சுவரில் பழங்காலத்துப் படங்கள் நிறைய மாட்டப்பட்டிருந்தன. அந்தக் காலத்துப் பாரதியின் படங்களை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.
கொஞ்ச நேரத்தில் பேட்டி தொடங்கியது.
வெளியுலகத்துக்குத் தெரியாத நிறைய விவரங்களை அவர் சொன்னார்.
“எங்க அப்பா சின்னசாமி ஐயர்… அவருக்கு இரண்டு மனைவிகள்…’
முதல் மனைவி லட்சுமி அம்மா… அந்த லட்சுமி அம்மாளின் மகன்தான் பாரதி.
பாரதிக்கும் அஞ்சு வயசு ஆவதற்குள்ளே தாயார் இறந்துவிட்டார்.
அதுக்கப்புறம் இரண்டரை வருஷம் கழிச்சி சின்னசாமி ஐயர் வள்ளியம்மாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். வள்ளியம்மாளின் பிள்ளை தான் நான். அதாவது எனக்கும் பாரதிக்கும் அப்பா ஒருவர் தான் அம்மாதான் வேறு.
“உங்களுக்கு வேறு சகோதரர்கள் சகோதரிகள்…’
“எனக்கு மூத்த சகோதரி ஒருத்தர் உண்டு. லட்சுமின்னு பேரு.. எட்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க இறந்து போயிட்டாங்க’
“பாரதி கூட நீங்க இருந்த நாள்கள்… இப்ப உங்களாலே ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?’
“பாரதி சென்னையிலே இருந்தார் இல்லையா…?’
“திருவல்லிக்கேணியிலே தானே…’
“அதுக்கும் முன்னாடி மயிலாப்பூரிலே இருந்தார். சித்திரைக்குளம் கீழவீதியும் தெற்குவீதியும் சேர்ற இடம். அங்கே இருந்து தெற்கே போற ஒரு சின்ன தெரு. அங்கே ஒரு பெரிய வீட்டுலே நாங்க குடியிருந்தோம்.
அப்ப நான் மயிலாப்பூர் பி.எஸ்.ஹைஸ்கூல்லே இரண்டாவது பாரம் (ஏழாம் வகுப்பு) படிச்சிக்கிட்டிருந்தேன். அதுக்குப்புறம்தான் திருவல்லிக்கேணியில் பெரிய தெருவுக்குப் போனோம். (வீரராகவ முதலி தெரு)
அதுக்கப்புறம் நல்லதம்பி முதலி தெருவிலேயும் இருந்தோம். அந்தச் சமயம் நான் திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூல்லே படிச்சேன்.
1918க்கு அப்புறம் அவர் கடையத்துலேயும் எட்டயபுரத்திலேயும் மாறி மாறி இருந்தார். அப்பல்லாம் நானும் அவர் கூடவே இருந்தேன்.’
“பாரதியார் உங்களைப் பத்தி பேசினது எழுதினது ஏதாவது ஞாபகப்படுத்திச் சொல்ல முடியுமா?’
சிறு பிள்ளைகளைப் போல ஆர்வத்தோடு அவரை விசாரித்தோம்.
“ஞானரதம்-ங்கற நூல்லே மண்ணுலகம்-ன்னு ஒரு பகுதி. அதுல எழுதியிருக்கிறதெல்லாம். நாங்க நல்லதம்பி முதலி தெரு வீட்டுலே தங்கியருந்தப்போ கிடைச்ச அனுபவங்கள். அதிலே அவர் என்னைப் பத்தி எழுதியிருக்கிறதைப் பாருங்க!’ என்று சொல்லி ஒரு வாரப் பத்திரிகையை எடுத்து எங்களிடம் கொடுத்தார். அதில் அந்தப் பகுதியை எடுத்துப் போட்டிருந்தார்கள். அதில் பாரதியார் எழுதியிருக்கிற வாசகங்கள் இவை:
“22ம் தேதி தம்பிக்குப் பாடசாலைச் சம்பளம் கொடுக்க வேண்டிய நாள். நான் காரியாலயத்திலிருந்து பணம் கொண்டு வந்து வைக்க மறந்து விட்டேன். நான் சுதேசிய விஷயத்தில் பாடுபடுவதில் பொருட்டாக என்னை எப்பொழுதும் கவனித்து வரும்படியாக ராஜாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் என் தம்பியிடம் செய்த சம்பாஷணையில் “உம்முடைய அண்ணனது சிநேகிதரான இன்னவரை ராஜாங்கத்தார் பிடிக்கப் போகிறார்கள்’ என்ற மங்கள சமாசாரம் சொல்லிவிட்டுப் போனதாகத் தம்பி சொன்னார்.’
“பாரதியார் பாடல்கள் இயற்றுவது மட்டுமல்லாமல் அவற்றைப் பாடவும் செய்வாராமே?’
“1920ல் நாங்க திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் இருந்தப்ப வ.வே.சு. ஐயர் ஒரு நாள் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் பாரதி “அண்ணா, இன்று ஒரு பாட்டு இயற்றியிருக்கிறேன் கேட்கிறீர்களா?”ன்னார்.
“ம்… சொல்லுங்க!’ன்னார் வ.வே.சு. ஐயர்.
உடனே பாரதி பாட ஆரம்பித்தார்.
காயிலே புளிப்பதென்ன?
கண்ணபெருமானே – நீ
கனியிலே இனிப்பதென்ன
கண்ணபெருமானே
அந்தச் சமயம் அவர் அதைக் கம்பீரமா பாடறப்போ நானும்கூட இருந்துகேட்டேன். மறக்க முடியாத அனுபவம்
“பாரதி நூற்றாண்டு விழா ரஷ்யாவுலே கொண்டாடப் போறாங்களாமே கேள்விப்பட்டீங்களா?’
“ஆமாம்… அதுலே வந்து கலந்துக்கணும்னு அந்த அரசாங்கமே என்னை அழைச்சிருக்கு.’
“போக போறீங்களா?’
“மனசுல ஆசை இருக்கு.. உடம்புல பலம் இல்லை’ என்று சொல்லி லேசாக சிரிக்கிறார்.
“அப்படின்னா…?’
“நான் வர்றதுக்கு என் உடம்பு இடம் கொடுக்காதுன்னு அவங்ககிட்டே சொல்லிட்டேன்’
நீண்ட நேரம் நிறைய விஷயங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட்டோம். தள்ளாத வயதிலும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
அதற்கு அடுத்த வருடமே நான் சென்னை வானொலி நிலையத்துக்கு மாற்றலாகி வந்துவிட்டேன்.
இங்கு வந்த பிறகு ஒருநாள் நண்பர் ஒருவரிடம் நான் பாரதியின் தம்பியை பேட்டி கண்ட விஷயத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தேன்.
“சந்தர்ப்பம் கிடைச்சா, இன்னொரு முறை மானாமதுரைக்கு போய் அந்தப் பெரியவரைப் பார்த்துட்டு வரலாம்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்!’ என்றேன்.
அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “உனக்கு விஷயம் தெரியாதா?’ என்றார்.
“என்ன?’ என்றேன்.
“அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் காலமாகி விட்டதாக உறவினர்கள் சிலர் மூலமாகக் கேள்விப்பட்டேன்’
நான் ஒரு நிமிடம் மௌனமாகி… பிறகு யோசித்தேன்.
“எத்தனை பெரியவர்கள் இந்த உலகத்தில் வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமல் வாழ்ந்துவிட்டுப் போய் விடுகிறார்கள்.’

– தென்கச்சி கோ. சுவாமிநாதன்  in “KALAIMAGAL ”  TAMIL MONTHLY 

Natarajan

பாரதி: வெடித்து அணைந்த விண்மீன்…

சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம். தனது குறுகிய வாழ்நாளுக்குள் எவ்வளவு செய்திருக்கிறார் பாரதி. கவிதைகள் மட்டும்தான் அவரது சாதனை என்று இன்றைய தலைமுறையினர் பலர் நினைக்கக்கூடும். கிட்டத்தட்ட, கவிதைகளுக்கு நிகரான சாதனையை பாரதி உரைநடையிலும் செய்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், அவருடைய இதழியல் பணி மகத்தான வீச்சுடையதாகவும் இருந்திருக்கிறது. சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா போன்றவை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பாரதி பணியாற்றியிருக்கிறார். வேறு சில பத்திரிகைகளில் பங்களிப்பும் செய்திருக்கிறார். தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘இந்தியா’ இதழில், தென்னிந்தியப் பத்திரிகைகளிலேயே முதன்முறையாகக் கருத்துச்சித்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிக்கு உண்டு. சமூகத்துடன் ஊடாடுவதற்கு இதழியலையும் பாரதி மிகவும் திறமையாகக் கையாண்டார். அரசாங்கத்தின் தடை, பொருளாதாரக் காரணங்கள் போன்றவற்றால் ஒவ்வொரு பத்திரிகையும் முடக்கப்பட்டாலும் உடனடியாக வேறொரு பத்திரிகையில் எப்படியும் கால்பதித்து விடுவார். அந்த அளவுக்கு அவரது இதழியல் தாகம் தணியாததாக இருந்திருக்கிறது. அதனால்தான், பத்திரிகை தொடங்குவது குறித்துத் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘சொத்தை விற்றேனும்’ பணம் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்.

கவிதைகள், உரைநடை, இதழியல் எழுத்துக்கள் என்று பாரதியை எழுத்து சார்ந்த மனிதராக மட்டுமே பார்த்துவிட முடியாது. தான் வாழ்ந்த காலத்தில் மகத்தான புரட்சியாளராக பாரதி இருந்திருக்கிறார். இந்து மதத்தில் ஈடுபாடுடையவராக இருந்தாலும், சாதிப் பிரிவினைகளையும் தீண்டாமைக் கொடுமையையும் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புணர்வைத் தனது வாழ்க்கை முறையிலும் செயல்படுத்திக் காட்டினார். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பாகுபாடு பார்க்காமல் பழகுதல், அவர்கள் வீட்டில் உணவருந்துதல் போன்ற பழக்கங்களைத் தான் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், பிறரையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். இந்தச் செய்கைகளெல்லாம் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதேபோல், மத வேற்றுமையும் பாராதவர் பாரதி. அவருக்கு இஸ்லாமிய, கிறித்தவ நண்பர்கள் உண்டு. 1920-ல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று பொட்டல் புதூரில் அங்குள்ள இஸ்லாமிய மக்களிடையே இஸ்லாம் மார்க்கத்தின் பெருமையைப் பற்றி பாரதி பேசியதோடல்லாமல், தான் எழுதிய ‘அல்லா… அல்லா… அல்லா!’ என்ற பாடலையும் பாடிக்காட்டியிருக்கிறார்.

எப்பாடுபட்டாவது இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்று தவிப்புடன் போராடியவர்களில் பாரதிக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. இந்தத் தவிப்பின் பிரதிபலிப்புதான் மிதவாதம், தீவிரப்போக்கு ஆகிய இரு வழிகளில் தீவிரப்போக்கை பாரதி தேர்ந்தெடுத்தது. விடுதலைபெற்ற இந்தியாவை, தீண்டாமை போன்ற பிரச்சினைகள் ஒழிந்த இந்தியாவை வாழ்த்திப் பாடும் முதல் பாடகனாக, தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய பெருங்கனவு. நாடு விடுதலை பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டாலும்கூட, ஏதோ ஒரு முன்னெச்சரிக்கை உணர்வால் மேற்குறிப்பிட்ட லட்சிய பாரதத்தை வரவேற்று முன்கூட்டியே பாடல்களைப் பாடிவிட்டுப் போயிருக்கிறார்.

பாரதியை நம் நாடு உரிய வகையில் கெளரவித்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் உண்மை. தேசப்பற்றையும் சுதேசி உணர்வையும் வடிவமைத்ததில் தேசத்தின் எந்தத் தலைவருக்கும் நிகராகப் பங்குவகித்த பாரதி, இறுதியில் தமிழகத்துக்கு மட்டுமே உரியவராகப் பார்க்கப்பட்டவரானார். தமிழகத்தால் மட்டுமே தற்போது கொண்டாடப்படுகிறார். தாகூரின் புகழை இந்திய அளவில் பரப்பவும் நிலைநாட்டவும் இந்திய அரசும் மேற்கு வங்க அரசும் எவ்வளவோ திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. இதற்கெல்லாம் தாகூர் தகுதி வாய்ந்தவர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், தாகூருக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய பாரதி போன்றவர்களும் கெளரவப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

சமீபத்தில் பாரதியின் படம் பொறித்த நாணயம் வெளியிடப்பட வேண்டும் என்று எழுந்த சிறிய கோரிக்கையை, ‘பொருத்தமான காலம் இதுவல்ல’ என்று கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஒரு நாணயத்துக்கே பாரதிக்கு இந்தப் பாடு! இந்தப் போக்கு இந்திய அரசுக்கு அழகல்ல. தேசத் தலைவர்கள், தேச உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமைகள் போன்றோர் விஷயங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து கவனம் கொடுக்கப்பட்டு மற்றவர்கள் நிராகரிக்கப்படுவது முறையல்ல.

‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்றார் பாரதி. அப்படி உயிர்த்துடிப்பு கொண்ட ஒரு சொல்லாகத் தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவர். அந்தச் சொல்லின் பெயர் ‘உத்வேகம்’, 100 ஆண்டுகள் கடந்தும் ஒளிவீசிக்கொண்டிருக்கும் உத்வேகம் அது.

source::::The Hindu…Tamil… Editorial Tribute to  Subramania Bharathi  on his Birthday today…11 dec.

 

“Big Ben” …Well Known Name …Not Known Facts !!!

 

big-benIf you’ve ever been to London, or even seen a picture of London, you’ve probably seen the giant clock tower at the corner of the Palace of Westminster. This tower is one of London’s major icons, ranking right up there with red double-decker buses, the London Eye, and Platform 9 ¾.

Contrary to popular belief, the clock tower itself is not named “Big Ben”.  Rather, it is named “Elizabeth Tower”, after Queen Elizabeth II; named such during her Diamond Jubilee (the 2012 60th anniversary of her accession to the throne).  Before that, it was just called “Clock Tower”. So why is it so often called “Big Ben”?  That is due to the great bell inside the tower that chimes the hour out and goes by that name.  Over time this has morphed into many calling the clock tower itself that even today, despite the recent, very public, name change.

So how did “Big Ben”- the great bell- get its name? People seemed to be in the habit of nicknaming giant bells and Big Ben was one of the biggest in the world and the largest in the British Isles at the time of its casting, so certainly name-worthy. The origin of Big Ben’s name is probably rooted in Sir Benjamin Hall. Hall was reportedly a large man (6 ft. 4 in. or 1.93 m, with a girth to match) and was the first Commissioner of Works, affectionately known as “Big Ben.”

On the side of the great bell there was also supposedly the inscription “Sir Benjamin Hall MP Chief Commissioner of Works” in his honor, so the workers and others took to calling the bell “Big Ben”.

If you’re wondering why that text is not inscribed there anymore (if it ever truly was), it’s because the current Big Ben is not the original. The original bell actually cracked before the clock itself was even installed in the tower (more on this later).  As to why the name supposedly was inscribed on the first and not the second bell, the reason often given is that Sir Hall was no longer the Chief Commissioner when the second bell was cast.  In addition, different founders were used to cast the second bell, so they may not have felt inclined to put the inscription on.

As there is little documented evidence on the origin of the name “Big Ben”, we can’t say for 100% certainty that it was named after Sir Benjamin Hall.  Another possibility that has been proposed is that it was named after Benjamin Caunt, a very popular heavyweight boxing champion in the 1850s, who was also nicknamed “Big Ben”.

Yet another popular theory is that it was named in 1857 during a sitting of the House of Commons. At some point someone, tired of the long meeting over the naming of the great bell, just shouted “Why not call it Big Ben?” as a joke while Sir Benjamin Hall was talking.  However, if such a thing actually happened, there should be Parliament records of this, but there is not. Thus, it’s thought the original Hall inscription story is more likely; though in both that story and the Parliament story, it was named after Sir Hall who was integrally connected with the building of the tower, clock, and bells.

As to why the clock tower was built in the first place, in 1834, a fire destroyed the Palace of Westminster—then the seat of the British government—leaving only a few parts of the palace standing. The next year, with reconstruction well on its way, Parliament opted to include a clock tower in the redesign. It wasn’t the first clock tower that the parliament buildings had seen. The first one was built between 1288 and 1290 and contained a bell known as “Great Edward” or “Great Tom.” A second tower, containing the first public chiming clock in England, replaced the first in 1367. In 1707, that tower was demolished because it had fallen into disrepair. Instead of replacing the tower with another, a sundial was put up in its place.

After the fire, Sir Charles Barry’s design for the new Houses of Parliament was chosen out of 97 designs submitted for consideration- his design didn’t originally include a clock tower. He added one in 1836 and later drew up a detailed design with the help of Augustus Pugin. Pugin was never recognized by Barry for supplying the design for the clock, despite Pugin saying, “I never worked so hard in my life as for Mr. Barry for tomorrow I render all the designs for finishing his bell tower & it is beautiful…”

The tower was Pugin’s last design. In 1852, before work on the tower was completed, Pugin suffered a breakdown. He was unable to speak coherently or recognize his family, and died several months later despite attempted therapy. He was only forty years old and never knew how famous his last design would become.

Construction on the tower began September 28, 1843. It was built from the inside out so that scaffolding couldn’t be seen by passers-by.

Besides Pugin’s work, Sir Charles Barry also sought additional help when it came to the actual clock mechanism itself. He chose Benjamin Lewis Vuillamy, who was the Queen’s clockmaker, to work on a design, though other clockmakers were also brought in to give their advice and opinions. In 1846, a competition was held to see who would build the clock, but some amazingly tough standards- for the age- were set by the Astronomer Royal, Sir George Airy. Airy stated that the clock needed to strike the hour within one second’s accuracy, and the performance of the clock was to be telegraphed to the Greenwich Observatory twice daily.  This harsh criteria caused seven years of delay.

When Edward John Dent was finally appointed to build the clock in 1852, he found that the tower was too small for the initial clock design. This caused further delays and alterations had to be made to the tune of £100 (adjusted for inflation by average earnings, that’s about £69,000 today). To top it all off, after finally getting construction underway, Dent died the next year and his stepson had to take over. The clock was finally finished in 1854, costing a total of £2500 to make.

The clock’s delay didn’t end up mattering very much, as the clock tower itself had suffered delays as well. The clock wasn’t actually installed until 1859. During the two-year wait, modifications were made to meet the Astronomer Royal’s standards. For instance, Edmund Beckett Denison invented a “Double Three-Legged Gravity Escapement” for the clock which made sure that the pendulum wasn’t affected by wind or other external factors putting pressure on the clock’s hands. Also known as the Grimthorpe Escapement, this revolutionary invention is still used on many clocks throughout the world today.

When the clock was finally installed in April 1859, it didn’t work. The original cast iron hands were too heavy to keep time and had to be replaced by lighter copper hands. At last, on May 31, 1859, the clock began successfully keeping time. But the tower wasn’t yet completed—it also needed a bell.

Like the rest of the features of the tower, the great bell also suffered delays. The first great bell was cast in 1856 and hung in the New Palace Yard where it was tested every day. On October 17, 1857, as mentioned previously, a crack over a metre long appeared on the bell. Fingers were pointed, but no one fessed up. Because the original bell casters—the Warners—asked for too much to replace the bell, the Whitechapel Foundry got the job for the replacement. The second bell weighed 2.5 tonnes less than the first (13.5 tons instead of 16), but it was still so large that it took thirty hours to winch it up to the belfry in the tower.

At last, on July 11, 1859, Big Ben rang out for the first time. Unfortunately, in September of that year, a crack appeared in the bell again. This time supposedly because the hammer used to strike it was approximately two times the maximum weight the original bell founder specified for the bell.  This crack caused the great bell to remain silent for a few years. However, in 1863, Airy came up with a solution: turn the bell so that the hammer struck a different spot, make the hammer lighter, and cut a small square in the bell so that the crack wouldn’t spread. His solution worked, and to this day, the same cracked “Big Ben” sits in the belfry, ringing away on the hour.

source:::::today i foundout.com

natarajan

” Sri Hari …Sri Hari… Sri Hari ” ….

 

Source: In the Presence of the Divine
Narratives of Experiences with Maha Periyaval Volume 1
Translated by: Sujatha Vijayaraghavan

Every day when Sri Maha Periyaval got up in the early hours of the morning he would chant, “ Sri Hari, Sri Hari !”

A college student noticed this. Periyaval had sacred ash on his forehead, rudraksa around his neck, which were signs of Saivism. But here he was chanting the name of Sri Hari. What is this?

The boy questioned Maha Periyaval himself. A vaidik who was nearby scolded the boy. “You must not question Periyaval in this manner.”

Maha Periyaval spoke with a laugh. “ Don’t scold the boy. Let him voice his doubt. I will answer him.”

The boy repeated his question. Sri Maha Periyaval gave the boy an explanation. “ Creation, preservation and destruction are the three-fold tasks. Visnu is the preserver. From the moment we wake up, till we go to bed we perform a number of tasks. We must pray to Hari, Visnu, to be with us so that all work done during the day is successful and well-done. Bhagavan Krishna is called an ‘ Idayya’, which means the one who does the job in between creation and destruction. In the evening it is our tradition to offer prayers to Paramesvara.”

The boy was very satisfied.

 
Shared by சந்திரமௌளி

பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மகா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது, ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மகா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.

ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிட்சை அளித்து வழிபடுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார், அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக் கொண்டனர்.

மறு நாள் காலை. ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார். என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.

அவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், ”சாஸ்திரிகளே… நீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து முத்திராதிகாரிதானே? ஒரு நாளைக்கி உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ? வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்!” என்றார்.

உடனே என் தந்தையார், ”நானும் அத கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக் கிழமையே வெச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும்?” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.
காரியஸ்தர் சிரித்தபடியே, ”சொல்றேன்… மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர்ற செலவு. எல்லாம் முடிஞ்சு, ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சே… உங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை)… அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவா செலவு புடிக்கும்! உங்க ஊர்ல வசூல் ஆயிடுமோல்லியோ?” என்று கேட்டார்.

சற்றும் தயங்காமல், ”பேஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், ”அது சரி… மத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் கேட்டார்.
”ஐநூறுலேர்ந்து ஆயிரம் வரை பண்றா” என்றார் காரியஸ்தர். தகப்பனார் யோசனையில் ஆழ்ந்தார். சற்று நேரத்தில் ஆச்சார்யாளை தரிசித்த நாங்கள், அவரை நமஸ்கரித்து எழுந்தோம். என் தந்தையார் பிக்ஷா வந்தன விஷயத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.

”பேஷா நடக்கட்டுமே” என்று அனுக்கிரகித்த ஸ்வாமிகள், ”ஏகதேசம் (தனியாக) பண்றாப்ல நம்மூர்ல நிறைய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காளோ?” என்று வினவினார்.

உடனே என் தகப்பனார் குரலை தாழ்த்தி, ”மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரகிக்கணும்” என வேண்டினார். புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.

ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் 30 வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. 400 ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும்
ஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக, மொத்த வசூல் 500 ரூபாய்! பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.

இனி, பெரியவாளின் பாத சமர்ப்பணைக் குத்தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்’ என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை. அன்றிரவு அவர், சரியாகவே தூங்கவில்லை.
வெள்ளிக்கிழமை! ஆச்சார்யாளைத் தரிசிக்கச் சென்றோம். சத்திரத்து வாயிலில்- கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். கூட்டம் அலை மோதியது. நாங்கள், சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக… ஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கை கூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. ‘பாத சமர்ப்பணை ஐநூறுக்கு என்ன பண்ணப் போகிறோம்?!’ என்கிற கவலை அவருக்கு.
திடீரென்று ஒரு கருணைக் குரல்: ”சந்தானம்! கிட்ட வாயேன்… ஏன், அங்கேயே நின்னுண்டிருக்கே?” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.
”என்ன சந்தானம்… நேத்திக்கு நீ கண்ணுல படவே இல்லியே! ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியோ?” என்று வினவினார் ஸ்வாமிகள்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லே பெரியவா. ஞாயித்துக் கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷா வந்தனம் பண்றமோல்லியோ… அது விஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், ”அது சரி சந்தானம்… லௌகிகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ?!” என சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத் தயங்கினார் என் தகப்பனார்.

அவர் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்… ஸ்வாமிகள் எதையோ புரிந்து கொண்டவர் போல, ”ஒண்ணும் கவலைப்படாதே! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கறபடியே நடக்கும்!” என வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார்.

திடீரென, ”ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நெறய ஜலம் போறதோ… தெரியுமோ ஒனக்கு?” என்று கேட்டார். ‘காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார்?’ என்று அனைவரும் குழம்பினர்.

”போயிண்டிருக்கு பெரியவா” என்றார் தகப்பனார். பெரியவா விடவில்லை: ”அது சரி! நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே?” ”ஒரு வாரம் முன்னாடி பெரியவா!”- என் தகப்பனார் பதில் சொன்னார். ”அதிருக்கட்டும்… இப்ப ஜலம் போயிண்டிருக்கோ… தெரியுமோ?” – இது பெரியவா. உடனே அருகிலிருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, ”இன்னிக்குக் காத்தால நான் காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறது பெரியவா” என்றார்.

ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை. ”சுமாரா போறதுன்னா… புரியலியே! அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியானு எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, ”சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளக்கி விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதானு பாத்துண்டு வந்து சொல்லு!” என்று கூறிவிட்டு, ‘விசுக்’கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்!

‘தான் காவிரியில் ஸ்நானம் பண்ணிவிட்டு வருவதற் காகத்தான், இவ்வளவு விவரங்களையும் பெரியவா கேட்கிறார் போலும்’ என்று எண்ணியபடியே ஊர் திரும்பினோம்.
சனிக்கிழமை! பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும் தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: ”நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்லதான் ஜலம் போறது! பெரியவாகிட்ட போய் சொல்லணும்.”
தொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார் என் தந்தையார். திடீரென கரையிலிருந்து, ”சாஸ்திரிகளே! கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ… புண்ணியமுண்டு!” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர், ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!

சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தட்சணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.

அவர் சொல்ல ஆரம்பித்தார்: ”எனக்கும் பூர்வீகம் மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர்தான். அப்பா வழி தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருத்துவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்கே ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட் டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திரமௌலீஸ்வர ஸ்வாமிதான் எங்க குலதெய்வம். ‘நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா’னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்குக் கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி!” என்றவர், ”ஆமா சாஸ்திரிகளே! ரயிலை விட்டு எறங்கி வர்றச்சே பார்த்தேன். நிறையப் பேர் மடிசாரும் பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளே… இங்கே என்ன விசேஷம்?” என்று கேட்டார்.

ஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம் விவரித் தார். அவருக்கு பரம சந்தோஷம்.

”கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்மூர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்ப்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக் கோங்கோ” என்ற படி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் 500 ரூபாய்!

”நான் போயிட்டு வரேன் சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், ”ஒங்க நாமதேயம் (பெயர்)?” என்று கேட்டார்.
அவர் சொன்ன பதில்: ”சந்திரமௌலீ!”
இருவரும் பிரமித்து நின்றோம்.

பின்னர், நேராக சத்திரத்துக்குச் சென்றோம். அங்கே பெரியவா இல்லை. கோவிந்தபுரம் போதேந்திராள் மடத்துக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.

என் தகப்பனார் மடத்துக் காரியஸ்தரிடம் சென்று, ”பெரியவா, காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதானு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், ”பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளே” என முத்தாய்ப்பு வைத்தார். எங்களின் பிரமிப்பு அதிகரித்தது!

ஞாயிற்றுக்கிழமை. பிக்ஷாவந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்கையாக அந்த 500 ரூபாயை வைத்து சமர்ப்பித்தார்.

பழத் தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, ”என்ன சந்தானம்! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ” என்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்

source::::periva.proboards.com

natarajan
Read more: http://www.periva.proboards.com/thread/230/incident-aduthurai#ixzz2mx4OtOCy

Read more: http://www.periva.proboards.com/thread/879/hari-morning?ixzz2mTdLEecc=undefined#ixzz2mx3C8yEk

” சக்கரையம்மா என்னும் பெண் சித்தர் ” …

நமது சுதந்திரப் போராட்ட காலத்தில், சக்கரையம்மா என்ற பெண்சித்தர், வானில் பறவைபோல பறப்பதைப் பலரும் பார்த்து வியந்திருக்கிறார்கள். தமிழறிஞரான திரு.வி.க. தாம் எழுதிய “உள்ளொளி’ என்ற புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
“சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை நான் வசித்த கல்லூரியின் (ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி விடுதி) மாடியில் அவர் பறந்துவந்து நின்றார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா?’
விண்ணில் பறக்கும் சக்தியுடன் திகழ்ந்தாரே, யார் இந்த சக்கரையம்மா…?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த தேவிகாபுரம் என்ற சிற்றூரில் 1854 இல் பிறந்தாள் ஆனந்தாம்பா என்ற தெய்வீக பெண்.
அந்த ஊரில் புகழ்பெற்ற பெரியநாயகி ஆலயம் உண்டு. அந்த ஆலயத்தின் மேற்கு மூலையில், தேவியின் மூல விக்கிரகத்தை தரிசித்தவாறு, மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருப்பாள் சிறுமி ஆனந்தாம்பா.
ஆனந்தாம்பாவாகப் பிறந்திருப்பது யார்? அவள் இந்த உலகத்தப் பெண்ணா, இல்லை வானுலகத்துக்கு உரிமையானவளா? தேவியின் வடிவம் தானா அவள்? அந்த மூல விக்கிரகத்தில் அவள் எதை பார்க்கிறாள்? தன்னைத்தானே தரிசித்துக் கொள்கிறாளா? யார் அறிவார்?
அவளது வீடே கோயிலின் அருகில் தான் இருந்தது! அவள் தந்தை சேஷ குருக்கள் கோயில் அர்ச்சகர்களில் ஒருவர். குருக்களின் புதல்வி என்பதால் ஆலயத்திற்கு அவளால் எப்போது வேண்டுமானாலும் போக முடிந்தது. தியானத்தில் மணிக்கணக்கில் தோய்ந்திருக்கவும் முடிந்தது.
அவள் வயதுடைய சிறுமிகள் பல்லாங்குழியிலும், பாண்டியிலும் பொழுது போக்கிய காலங்களில் அவள் மட்டும் தன் நேரம் முழுவதையும் தியானத்திற்கே அர்ப்பணித்தாள்.
அக்கால வழக்கப்படி, அவளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. கணவன் சாம்பசிவம் 24 வயதுப் பையன். சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் சட்டநாத மடம் என்றொரு மடம் இருந்தது. (கோமளீஸ்வரன் பேட்டை இப்போது புதுப்பேட்டை எனப்படுகிறது). சட்டநாத மடத்தின் உரிமையாளன் அவன்தான். ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்த அவனுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட்டாள் ஆனந்தாம்பா.
ஆனந்தாம்பாவை அவன் ஒரு வேலைக்காரிபோல் நடத்தினான்.
சட்டநாத மடத்தின் அருகில் கோமளீஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் இருந்தது. தற்போதும் கோயில் இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அங்கே போய் சிவன் சன்னதியில் அமர்ந்துகொள்வாள் ஆனந்தாம்பா. பிறந்த வீட்டில் அவளுக்கு அடைக்கலம் தந்தவள் தேவி கோயில் பராசக்தி என்றால் புகுந்த வீட்டில் அடைக்கலம் தந்தவர் சிவபெருமான்!
பெண்பித்துப் பிடித்து பல்வேறிடங்களில் அலைந்த சட்டநாதன் பெருவியாதி பிடிக்கப்பட்டு முப்பத்தைந்தே வயதில் காலமானான். ஆனந்தாம்பாவுக்கு அப்போது வயது இருபது.
அக்கால வழக்கப்படி, அவளுக்கு முடி மழித்து முக்காடு போட்டார்கள். அழகுக் கோலம் அலங்கோலமாக மாற்றப்பட்டதை ஆனந்தாம்பா பொருட்படுத்தவில்லை. அவளுக்கு தன் உடல்பற்றிய பிரக்ஞையே இருந்ததில்லை. கணவன் காலமானது அவளைப் பொறுத்தவரை அவளின் ஆன்மிக வாழ்வுக்கு ஒரு வாய்ப்பே ஆயிற்று.
தேவிகாபுரத்தில் சிறிதுகாலம் இருந்த அவள், அதன்பின் திருவண்ணாமலை அருகே போளூரில் அண்ணன் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். ஆனந்தாம்பா சக்கரையம்மாவாக மாறிய பரிணாம வளர்ச்சி நடந்தது அங்குதான். எண்ணற்ற ஆன்மிக அனுபவங்களை அவளுக்கு வாரி வழஙகியது அவ்வூர்.
அங்கே அருகிலிருந்த நட்சத்திரக் குன்றில் நட்சத்திர குணாம்பா என்ற உயர்நிலைத் துறவினி ஒருவர் வாழ்ந்து வந்தார். நட்சத்திர குணாம்பாவைச் சந்தித்தபின் ஆனந்தாம்பாவின் வாழ்க்கையே மாறிப் போயிற்று. அவளை சிஷ்யையாக ஏற்றார். இறைச்சக்தியைத் தேவி வடிவில் மந்திர ரூபமாக வழிபடும் ஸ்ரீ சக்ர உபாசனையைக் கற்றுத் தந்தார்.
அந்த உபாசனையை மேற்கொண்டதால் தான் பின்னால் ஆனந்தாம்பா ஸ்ரீ சக்ர அம்மா என அழைக்கப்பட்டார். அதுவே பொது மக்களின் வாய்மொழியில் மருவி சக்கரையம்மா ஆயிற்று.
“நான் மீண்டும் சென்னைக்கு, என் புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமே? என குருவான உங்களை இனி அடிக்கடிச் சந்திப்பது எவ்விதம்?’ என்று சக்கரையம்மா உருகிக் கரைந்தபோது குணாம்பா கனிவோடு அவரைப் பார்த்தார்.
“அதுபற்றிக் கவலைப்படாதே’ என்று லகிமா என்ற ஓர் ஆன்மிக ஸித்தி அவருக்கு ஏற்படுமாறு செய்தார். லகிமா என்பது உடலை மிக லேசாக மாற்றிக் கொள்வது. அந்த ஸித்தி அடைந்தவர்களால் விண்ணில் பறக்க முடியும். “இனி எப்போது வேண்டுமானாலும் நீ பறந்துவந்து என்னைப் பார்க்கலாம்’ என அருள்புரிந்தார் குணாம்பா.
மீண்டும் சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் இருந்த தன் புகுந்த வீட்டுக்கு வந்தாள் ஆனந்தாம்பா. மொட்டை மாடி திண்ணையும் அதன் அருகே இருந்த சிறிய அறையும் அவளின் வாசஸ்தங்களாயின.
ஒருநாள் ஸ்ரீசக்ர உபாசனையில் அவள் பேரொளியால் சூழப்பட்டாள். தானே பரம் பொருளாய் ஒளிவீசுவதுபோல் தோன்றியது அவளுக்கு. அளவற்ற ஆனந்தத்தில் கடகடவென்று சிரிக்கலானாள்.
அவளது ஆன்மிக வளர்ச்சியை அறியாத புகுந்த வீட்டார், கணவன் இறந்ததால் அவளுக்குப் பித்துப் பிடித்துவிட்டதென்று கருதினர்.
அக்காலத்தில் டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் என்ற புகழ்பெற்ற ஒரு மருத்துவர் இருந்தார். ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்தவர். உன்னதமான ஆன்மிகவாதி அவர்.
ஒரு சமயம் ஆனந்தாம்பாவின் சகோதரருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவம் பார்க்க டாக்டர் நஞ்சுண்டராவை அழைத்தார்கள்.
அவர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது மொட்டை மாடியிலிருந்து வித்தியாசமான அந்தச் சிரிப்பின் முழக்கம் கடகடவெனக் கேட்டது. ஆன்மிகவாதியான நஞ்சுண்டராவ் அந்தச் சிரிப்பால் கவரப்பட்டார்.
யார் உரத்துச் சிரிக்கிறார்கள் என்று விசாரித்தார். கணவனை இழந்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட ஆனந்தாம்பா என்ற பைத்தியத்தின் சிரிப்பு அது என்று அலட்சியமாகக் கூறினார்கள் உறவினர்கள்.
ஆனால், அந்த சிரிப்பு அவரை அழைத்ததுபோல் தோன்றியது. மாடியேறிச் சென்றார். முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்ட அமர்ந்திருந்த ஆனந்தாம்பா “மகனே வா!’ என அழைத்தாள்.
தூக்கிவாரிப்போட்டது நஞ்சுண்டராவுக்கு! மனிதர்களுக்கு முதுகில் கண் உண்டா என்ன! மேற்கொண்டு எதுவும் பேசாத ஆனந்தாம்பாளிடம், தானும் எதுவும் பேசாமல் விழுந்த வணங்கிவிட்டு வந்துவிட்டார்.
பின்னொருநாள் கோமளீஸ்வரன் கோயிலுக்குச் சென்றார். ஆலய வாயிலில் அமரந்து கடகடவென்று சிரித்துக் கொண்டிருந்த ஆனந்தாம்பாவை மறுபடி தரிசித்தார். ஒளிவீசும் கண்கள். ஆனந்தாம்பாவின் மேனியிலிருந்து ஓர் அமைதி கலந்த பிரகாசம் பொங்கி வழிவதுபோல் தோன்றியது. நிச்சயம் இவர் பித்துப் பிடித்த பெண்மணி அல்ல என்பதை அவரது அவரது மருத்துவ மனம் உணர்ந்தது.
“ஏன் சிரிக்கிறீர்கள் தாயே?’ என்று பக்தி கலந்த பணிவோடு விசாரித்தார். ஆனந்தாம்பா சிரிப்பை நிறுத்திவிட்டு நஞ்சுண்டராவைப் பார்த்தார்.
“மகனே மனித உடலின் உள்ளே உறைந்திருக்கும் ஆன்மா எப்போதும் ஆனந்தம் நிறைந்தது. இன்ப துன்பங்கள் உடலுக்குத் தானே அன்றி ஆன்மாவுக்கில்லை. நீ உடல் அல்ல. நீ உடலில் உள்ளாய். அவ்வளவுதான். உனது தற்காலிகக் கூடாரமான இந்த உடலைப் பாராமல், கூடாரத்தின் உள்ளே நிரந்தர வஸ்துவாய் வசிக்கும் உன் ஆன்மாவைப் பார்! அப்படிப் பார்க்கத் தொடங்கினால் நிலையான பேரின்பத்தை நீ அடைய முடியும்.’
இந்த வார்த்தைகள் நஞ்சுண்டராவின் உள்ளத்தில் மின்னல் போல் பாய்ந்தன. சொன்ன வார்த்தைகளில் உள்ள பேருண்மை, சொன்னவர் அந்த வார்த்தைகளின் கருத்தை வாழ்வில் அனுசரித்து வாழ்கிறார் என்பதால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்பட்டிருந்த மந்திர சக்தி.
தன் குரு அவரே என உணர்ந்து ஆனந்தாம்பா என்கிற சக்கரையம்மாவைப் பணிந்தார் நஞ்சுண்டராவ்.
பின்னர் சக்கரையம்மா பற்றி வெளியுலகம் அறிய நஞ்சுண்டராவே காரணமானார். அடிக்கடி சக்கரையம்மாவைச் சந்தித்து உரையாடிப் பயன்பெற்று அவர் சக்கரையம்மாவின் சீடராகவே ஆனார். தம் குருவைப் பல திருத்தலங்களுக்கு நஞ்சுண்ட ராவ் அழைத்துச் சென்றார். திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி பரப்பிரும்மத்தையும் ஸ்ரீரமணரையும் சக்கரையம்மா சந்தித்தார். தன்னை ஆசிர்வதிக்குமாறு சக்கரையம்மா ரமணரிடம் கேட்டபோது ரமணர் மலர்ச்சியோடு அவர் ஏற்கெனவே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார்.
1901இல் சக்கரையம்மா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல விரும்பினார். நஞ்சுண்டராவ் அழைத்துச் சென்றார். அப்போது நஞ்சுண்டராவைத் தவிர இன்னும் சிலரும் அவரது சிஷ்யர்களாகியிருந்தார்கள்.
திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னபோது வருத்தத்துடன் தலையாட்டினார் நஞ்சுண்டராவ். தம் குரு தம்மை விட்டு சென்றுவிடுவார் என்பதை அந்த சிஷ்யரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. “வருந்தாதே மகனே! நான் சமாதியில் என்றென்றும் இருந்து அனைவருக்கும் அரும்புரிந்து வருவேன். என் சமாதி இருக்குமிடம் அமைதியின் கோயிலாகத் திகழும்!’ என்று சொல்லிச் சீடரை ஆறுதல் படுத்தினார் குரு.
சொன்னபடியே 1901 பிப்ரவரி 28 ஆம் நாள் சக்கரையம்மா உடல் சட்டையை உதறினார். அவரது பொன்னுடல் அவர் குறிப்பிட்ட இடத்திலேயே சமாதி செய்விக்கப்பட்டது. நஞ்சுண்டராவ், சக்கரையம்மா முன்னர் சொன்ன போதே அந்த நிலத்தை வாங்கியிருந்தாரே?
இப்போதும் சென்னையில் திருவான்மியூரில் உறவுகளைத் துறந்து துறவியான பெண் சித்தர் சக்கரையம்மா, தன் சமாதியில் நிரந்தரமாய் வாழ்ந்துவருகிறார். இறந்தது அவர் குடியிருந்த உடல்தானே? அவர் ஆன்மா தன்னை நாடிவரும் அடியவர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கி வருகிறது.

– திருப்பூர் கிருஷ்ணன்  in Kumudam Bhakti  

Recently a friend of mine took me and my wife Bhavani to the  Samadhi  Mandir of Sakkarai Amma in Thiruvanmiyur. Such a wonderful Koil  with a serene environment that you will like to visit the place  again and again ….One has to see it to believe it ..

natarajan

 

What is Happening to My Newspapers !!!

The morning paper with coffee is a perfect start of the day for many of us and over a century (nearly getting to two centuries), our favourite papers have been evolving all through, trying to please us readers. I’m proud I’m reading the same paper, The Hindu, my grandfather and my father read. I have never swerved in my loyalty when we moved for a few years to Mumbai, my husband and I felt so forlorn that he would go to a special paper dealer and get the previous day’s issue of The Hindu. Perhaps, our paper had not spread its wings as much as it has done today.

When people tell me to read news online, I’m still resisting. Can anything replace the comfort of holding the paper and even smelling the fresh scent of the ink and reaching out for it the whole day whenever I’m free to play Sudoku and Crossword? Though we can play these on the Net too, it is never a match for the pleasure of pencil marks I make on the side of the puzzle to guess a correct number or an anagram or two.

In Mumbai, The Times of India also grew familiar to our family as it was important for local events as well. We would stand on the pavement near the paper’s printing press near the Victoria station, now Chhatrapati Shivaji, to get the heady scent that emanates in the surroundings. Have you experienced it? Where is this scent when reading news from the computer?

With the coffee cup in hand, we were able to read the headlines even on a folded paper. Now, this pleasure is denied as the top sheet has a huge advertisement which may not mean anything to us and to turn the paper without spilling coffee, we have to learn juggling!

Really sad to say that the comfort of reading while holding the paper spread out in two hands, especially when you want to shut out your surroundings (I’m sure many men will agree with me!) is slowly being denied to us. Why? The top sheet is cut in half, lengthwise, and it flaps and slips when you try to turn the sheets or fold them, to get the item closer for the ease of reading. It makes us feel clumsy. The latest discomfort is caused by an extra two-inch length of paper jutting out at the edge, making it more difficult to turn the page. By the way, am I the only one complaining?

Another feature, of sticking some free gift on the paper — like a shampoo or a real estate booklet or any other goodies — makes the paper lose balance and get sticky when this ‘gift’ is removed. Of course, I can’t even mention the ad pamphlets which slip out irritatingly. My brother found a use for them as rough paper for market lists and phone messages when one side is blank.

However, all is not negative and all is not lost. Let me not keep whining.

The features suitable children and teens are commendable. As seniors we can learn a lot and also brush up some of our forgotten knowledge. But I am yet to see a feature just for seniors, but what exactly can go into it? We already have health, fitness, politics, history and what-not, covered in detail.

Newspapers are doing a great service to the country by promoting education to the downtrodden, to the unlettered of all age groups and to special needs groups. They are waking us up from stupor and complacency and making us aware of our responsibilities in personal and social lives. Newspapers are the first stop for information and for general knowledge of current affairs. They are not dramatic and distracting like TV news channels.

I am praying for a long life to our newspapers so that my grandchildren can read them too.

Just one request. Do make my paper comfortable to hold while reading. Please!

(The writer’s e-mail: malathimohan00@yahoo.com)

Keywords: morning paper with coffeenewspaper industry

source::::Malathi Mohan  in The Hindu

natarajan

” டைரக்டர் தான் கேப்டன் ஆப் தி ஷிப் “!!! ….சிவாஜியுடன் ஒரு நாள் !!!

மூச்சுக் காற்றின் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது அந்தப் படப்பிடிப்பு அரங்கம். காரணம் சிவாஜி..!

‘என் ஆச ராசாவே’ படத்தில் நாட்டுப்புறக் கலைஞரின் வேடம் என்பதால் ஆசை ஆசையாக சிவாஜி ஒப்புக்கொண்டிருந்தார் என்று செய்தி பரவியிருக்க, சிவாஜி இருக்கும் படப்பிடிப்புத் தளம் பற்றி கட்டுரை எழுதலாம் என்ற ஆசையில் போயிருந்தேன்.

ரகசியம் பேசும் குரலில் டைரக்டர் கஸ்தூரி ராஜா, “லஞ்சுக்குப் பிறகு பேட்டியை வெச்சுக்குவோம். சிவாஜி ஐயா புறப்பட்டு போயிருவார். அதுவரைக்கும் வேடிக்கை பாருங்க” என்று சொல்லிவிட்டார். “சரி… ஆனா, ஷூட்டிங் நடக்கறதை போட்டோ எடுத்துக்கறோம். ப்ளாஷ் வராது. உங்களுக்கு தொந்தரவு இருக்காது” என்று சொல்லிவிட்டுப் புகைப்படக்காரருக்குச் சைகை காட்டினேன். அவர் கேமராமேனுக்கு அருகில் போய் பதுங்கி உட்கார்ந்துகொண்டார்.

ரோஜா தன் முறை மாமனான முரளியைத் தேடி வந்து தடால் புடால் என்று சண்டை போட, அதை சிவாஜியும் மணிவண்ணனும் வேடிக்கை பார்ப்பதுதான் காட்சி!

“ஸ்டார்ட் கேமரா…” என்றார் இயக்குநர். கேமரா ஓடத் தொடங்கியது. ரோஜாவுக்கு மட்டும்தான் வசனம். மற்றவர்கள் அவருடைய வசனத்துக்கு ரியாக்ட் செய்ய வேண்டியது மட்டும்தான். ரோஜா அதிரடியாக உள்ளே நுழைந்து பாத்திரங்களை விசிறி அடித்துவிட்டு வசனங்களைப் பேசி முடிக்க டேக் ஓகேயானது.

எல்லாரும் அவரவர் இடத்தில் போய் உட்கார, ஒருவர் வந்து போட்டோகிராபரிடம், “உங்களை ஐயா கூட்டிட்டு வரச் சொன்னாரு” என்றார். அவர் என்னைப் பார்க்க, நான் “யாரு?” என்றேன். “ஐயாதான்” என்று சொல்ல, போட்டோகிராபர் என்னைத் தள்ளிவிட்டார்.

சிவாஜி மர நிழலில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தார். கண்கள் மூடியிருந்தன. கிராமத்து ஆட்கள் போடும் பனியன் மாடல் சட்டையும், நாலு முழ வேட்டியும்தான் உடை என்றாலும் அதிலேயே ஒரு கம்பீரம் தெரிந்தது. நான் வந்ததை உணர்ந்துவிட்டார் என்பதை மூடிய இமைகளுக்குள் உருண்ட விழிகள் தெரிவித்தன.

“என்னைக் கேட்காமல் தட்சனின் யாகத்துக்குச் சென்றுவர உனக்கு என்ன துணிச்சல்…” என்று திருவிளையாடலில் பார்வதியிடம் கேட்கும்போது சிவபெருமானின் புருவம் மட்டும் உயர்ந்து கேள்விக்குறியாகுமே அப்படிப் புருவம் உயர்த்துவாரோ என்று தோன்றியது.

லேசாகத் தொண்டையைச் செருமலாமா என்று நினைத்தேன். வழக்கமாகப் படப்பிடிப்புத் தளம் பற்றி எழுதச் செல்லும்போது நட்சத்திரங்களோடும் பேசுவது வழக்கம். ஆனால், அப்படி எந்த முயற்சியையும் இங்கே எடுக்கக் கூடாது, படம் பற்றி நானே சொல்லிவிடுகிறேன் என்று கஸ்தூரி ராஜா சொல்லியிருந்தார். ஆனாலும் வலிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படம் பற்றி சிவாஜி கணேசன் என்ன சொல்கிறார் என்பதும் கட்டுரைக்கு வலு சேர்க்கும். சிவாஜியை சந்தித்துப் பேசினேன் என்பது ஒரு நிருபராக எனக்குப் பெருமையாக இருக்கும் என்றும் தோன்றியது.

நான் அவரது அருகாமையில் வந்துவிட்ட அரவம் உணர்ந்து, நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.

“தம்பி, யாரு… என்ன வேணும்? ரொம்ப நேரமா நிக்கறாப்ல இருக்கு… என்னைப் பார்க்கவா வந்தீங்க? ஒரு வார்த்தை கூப்பிட்டுருக்கலாமே…” என்றார். “இல்லே… ஷாட் நடுவுல போட்டோ எடுத்தவங்களை பார்க்கணும்னு சொன்னீங்களாம்…” என்றேன்.

“போட்டோ எடுத்தது நீங்க இல்லையே தம்பி..? அந்த தம்பி க்ரீம் கலர் சட்டைல போட்டிருந்தாரு” என்றார். திடுக்கென்று இருந்தது.

அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் கேமராவின் இரு பக்கமும் விளக்குகள் வெள்ளமென ஒளியைப் பெருக்கிக்கொண்டிருந்தன. கண்களை விழித்துப் பார்க்கவே கூசும் அளவு வெளிச்சம். அங்கிருந்து பார்த்தால் எதிரே எந்த உருவமும் தெரியாது. ஆனால் அவருக்கு ஆள் மட்டுமல்ல, க்ரீம் கலர் சட்டையும் தெரிந்திருக்கிறது.

நான், “பத்திரிகைக்காக எடுத்தோம். நான் நிருபர்” என்றேன். “அப்படியா… டைரக்டர்கிட்டே பர்மிஷன் வாங்கிட்டீங்களா?” என்றார். “ஆமாம்…” என்றதும், “அப்படின்னா உங்க வேலையை நீங்க செய்திருக்கீங்க. நான்தான் தப்பா நினைச்சுட்டேன். மனசுல வெச்சுக்காதீங்க…” என்றார். எனக்குப் பதறிவிட்டது.

“சார்… நீங்க கேட்டது தப்பில்லை… யதார்த்தமா வரணும்னு நாங்கதான் உங்ககிட்டே சொல்லாம படம் எடுத்துட்டோம்” என்றேன்.

“சரி… டைரக்டர்கிட்டே கேட்கறதுதான் முறை. என்கிட்டே எதுக்கு கேட்கணும்… அவருதான் கேப்டன் ஆஃப் த ஷிப்” என்றபடி கண்களை மூடிக்கொண்டார். நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.

சில நொடிகளில் கண்ணை விழித்தவர், என்ன என்பதுபோலப் புருவத்தை உயர்த்தினார்.

“ஒரு சின்ன சந்தேகம் சார்… ப்ளாஷ்கூட போடலை. எப்படி படம் எடுத்ததை கண்டுபுடிச்சீங்க?”

“சிவப்பா ஒரு பொட்டு வெளிச்சம் தெரிஞ்சுது. சத்தமும் கேட்டுச்சுப்பா. க்ளிக்னு ஒரு சத்தம் கூடுதலா கேட்டுச்சா… அதான். நம்ம பய என்னைக்கு ஷாட்டுல படம் எடுத்திருக்கான்… ஷாட் முடிஞ்சதும் நிக்க வெச்சு போஸ் குடுக்கச் சொல்லித்தான் எடுப்பான். அதான் வேற யாரோ போட்டோ எடுக்காங்கனு தோணுச்சு…”

விர்ரென்று மூவி கேமரா ஓடும் சத்தத்தில், மொத்த பாத்திரங்களையும் ரோஜா உருட்டியதில் எழுந்த சத்தத்தில், அலறும் உச்சக் குரலில் அவர் வசனம் பேசிய சத்தத்தில் க்ளிக் சத்தம் அவருக்கு மட்டும் கேட்கிறது!

கட்டுரையின் தன்மையைச் சொல்லி, “உங்க கதாபாத்திரம் பற்றியும் ஷூட்டிங் அனுபவம் பற்றியும் சொல்லுங்க” என்றேன்.

“அதெல்லாம் நான் பேசப்படாது. நான் இங்க வந்திருக்கறது டைரக்டர் குடுக்கற வசனங்களை பேசறதுக்குதான். உங்க கிட்டே பேசுறதுக்கு இல்லை. நீ சிவாஜி கணேசன்கிட்டே பேட்டி எடுக்கணும்னா அன்னை இல்லத்துக்கு வா” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்களை மூடிக்கொண்டார்.

நான் கடைசிவரையில் நடிகர் திலகம் சிவாஜியை சந்திக்கவே இல்லை!

தொடர்புக்கு cmbabu2000@gmail.com

source ……சி. முருகேஷ்பாபு  in The Hindu …. Tamil…
natarajan

” What Happened in My Birth Year ” !!!

 
The screen is going to fade to black; if you wear glasses, have them on, then follow the instructions below. You’ll be pleasantly surprised with this one… It is interesting………

Type the year only!!

Then click the question (?) mark!

Sit back and enjoy!!

Click the below link :

 

source……..input from a friend of mine

natarajan

நூறு வயது ‘ தபால் தாத்தா ‘ …!!!

ஆர்.பாலசுப்பிரமணியம்

ஆர்.பாலசுப்பிரமணியம்

தனது 100-வது வயதிலும், பார்வைக் குறைபாடு இல்லாமல் நாளிதழை, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கோவையைச் சேர்ந்த தபால் தாத்தா. இந்த வயதிலும், அசாதாரண விஷயங்களையும் சாதாரணமாகச் செய்து வருகிறார்.

கோவை கவுண்டம்பாளையம் பேங்கோதெருவைச் சேர்ந்தவர் ஆர்.பாலசுப்ரமணியம். தபால் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதால், தபால் தாத்தா என்றுதான் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

துருதுரு பார்வை

கடந்த 1914-ஆம் ஆண்டு, நவம்பர் 29-ஆம் தேதி பிறந்த இவர் இன்று 100-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 100-வயது என்றால், படுத்தப் படுக்கை, வீட்டில் உள்ளவர்களை எடுத்ததெற்கெல்லாம் உதவிக்கு அழைத்து அன்பு தொல்லை கொடுப்பார் என நினைக்க வேண்டாம். வீட்டில் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாமல், உற்சாகத்தோடு இளைஞரைப் போல வீட்டில் வலம் வருகிறார்.

இந்து நாளிதழ் மோகம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையத்தில், தபால்காரராகச் சேர்ந்து கோவை ஆர்.எஸ்.புரம் தபால் நிலையத்தில் தபால் அலுவலராக, கடந்த 1973-ம் ஆண்டு 38 ஆண்டு தபால் பணி வாழ்க்கைக்கு விடைகொடுத்தவர். 10-ஆம் வயது முடிவதற்குள் கண்ணாடியுடன் வலம் வரும் சிறுவர்கள் மத்தியில், 100 வயதிலும் தபால் தாத்தா, கண்ணாடி அணியவில்லை. ஆனால், தினமும் வீட்டிற்கு வரும், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழை முதல் பக்கத்தில் இருந்து, கடைசி பக்கம் வரை உள்ள செய்திகளை முழுவதுமாகப் படிப்பதுதான் இவரது தினசரிப் பொழுதுபோக்கு..

கவலை இல்லாத மனிதர்

100 வயதில் இளமை ததும்பும் ரகசியத்தை, அவரது மூத்த மகன் ஜனார்த்தனனிடம் கேட்டபோது, ’’எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். சாப்பாட்டு விஷயத்தில் அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார். தற்போதுகூட, வாரம் இருமுறை சிக்கன் சாப்பிடுகிறார். முட்டை, இனிப்பு என்றால் இப்போது கூடக் கொள்ளை பிரியம். நேரத்துக்குச் சாப்பிட்டு, நேரத்துக்குத் தூங்குவார். பிரத்தியேகமாக உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. 85 வயது வரையிலும் எங்குச் சென்றாலும் சைக்கிளில்தான் செல்வார்’’ என்றார்.

தபால் தாத்தாவிற்கு 3 மகன்கள். கொள்ளுப் பேரன் பேத்தி என்று சுற்றிலும் பலர் இருந்தாலும் அவர் விரும்புவது தனிமையைத்தான். முதுமையின் நண்பன் தனிமை என்பதை உணர்த்தும் விதமாக, நாம் கிளம்புவதற்கு விடை கொடுத்துவிட்டு, எதையோ சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அவருக்கு நூறாவது பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டுப் புறப்பட்டோம்.

source:::::The Hindu…Tamil

natarajan