” Home is Where the Address Proof is… “

I came to live in Chennai 14 years ago with Rs. 40,000 of my father’s hard-earned money, which remained concealed throughout the train journey in a special pocket sewn onto my vest by my mother (at that time, electronic transfer of money was unheard of and ATMs were almost non-existent).

 I was aware that landlords in Chennai usually demand 10 months’ rent in advance; and I had no one to turn to except my father, who nursed an unexplained fondness for the city and was happy to help his son settle down there.

 It took me about 10 days to find a house to my liking. By then the bundle of notes had thinned down to almost half. But fortunately for me, the landlord asked for only five months’ rent as deposit. With whatever little money was left after paying the broker, I bought a mattress and a pillow and — on February 1, 2001 — moved into Kamakoti Flats on Murugesan Street in T. Nagar. I formally became a resident of Chennai, with an address of my own.

 Kamakoti Flats has been my home ever since. This piece, needless to say, is being written in the building, in the same silence of the night that gave me company for 14 years. But by the time it appears in print, I would have moved out to another street nearby. The ‘packers and movers’ arrive tomorrow morning.

I am suddenly facing an identity crisis. Countless articles may have appeared under my byline; my name may appear on the spines of three books; but my identity is invalid without an ‘address proof’. For nearly every basic requirement in life — from opening a bank account to buying life insurance to getting a phone connection, not to mention applying for a loan — you need to prove that you reside in a certain address; and now that I am moving out of the address that had served as the proof of my identity for 14 years, I will have to start from scratch.

 And all this while, I toiled night after night, believing that I was building an identity for myself.

Keywords: Writer’s block columnlife in Chennai

SOURCE::::  BISHWANATH GHOSH  in http://www.thehindu.com

Natarajan

கொண்டையா ராஜு: காலண்டர் ஓவியங்களின் பிதாமகன் …

காலையில் எழுந்தவுடன் காலண்டர் பார்க்கும் பழக்கம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் இருந்தது. இப்போது படுக்கைக்கு அருகிலேயே செல்பேசியில் நாள், நேரம், நட்சத்திரம் எல்லாம் பார்த்துக்கொள்கிறோம். காலண்டர்களில் நாள் கிழமை பற்றிய தகவல்கள் ஒருபுறம் இருந்தாலும், பரவசப்படுத்தும் பக்தி ஓவியங்கள்தான் நம் நினைவில் பதிந்திருக்கின்றன. காலண்டர் தயாரிப்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது சிவகாசி நகரம் என்றால், காலண்டர் ஓவியக் கலையை வளர்த்தெடுத்தது கொண்டையா ராஜு போன்ற மிகச் சிறந்த கலைஞர்கள்தான்.

ரமணரைத் ‘திருத்தியவர்’ 

கொண்டையா ராஜு

கொண்டையா ராஜு சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் பயின்றவர். 1918-ம் ஆண்டு மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1920-வாக்கில் தனிமையை நாடி திருவண்ணாமலை சென்று, ரமணாஸ் ரமத்தில் பிற சீடர்களுடன் சேர்ந்து பிச்சை எடுத்து பிரம் மச்சாரியாக ஆசிரமத்தில் வாழ்ந்துவந்தார். அப்போது ஒரு அன்பர், ரமணரின் முழு உருவப் படத்தை பெரிய அளவில் வரைந்து எடுத்துவந்து அவரிடம் காட்டினார். படத்தில் ஏதோ குறையிருக்கிறது என்றார் ரமணர். அருகிலிருந்த கொண்டையா ராஜு, “ஸ்வாமிகள் அனுமதித்தால் அதை நான் சரிசெய்கிறேன்” என்றார். “உனக்கு ஓவியம் வரையத் தெரியுமா?” என்று ரமணர் கேட்க, ஓரளவுக்குத் தெரியும் என்று தன்னடக்கத்துடன் கூறிய ராஜு படத்தை நன்றாகத் திருத்தி அழகுபடுத்தினார். அந்தப் படத்தைப் பார்த்த ரமணர், “இவ்வளவு கலைத் திறமை கொண்ட உனக்கு ஆசிரமத்தில் என்ன வேலை? உன் கலையால் உலகம் பயனடைய வேளை வந்துவிட்டது” என்று கூறி ஆசிர்வதித்து ஆசிரமத்திலிருந்து அனுப்பி வைத்தார்.

அந்தச் சமயத்தில் ஆசிரமத்துடன் தொடர்பில் இருந்த நகராட்சித் தலைவர் ராமசாமி ஐயர் மூலம், மதுரையைச் சேர்ந்த நாடக சபை உரிமையாளர் டி.என். பழனியப்பப் பிள்ளை, நாடக சீனுக்கான திரைச்சீலை ஓவியராக ராஜுவை அமர்த்திக்கொண்டார். அந்த நாடக கம்பெனி தமிழகம், இலங்கை முழுவதும் பயணம் செய்து நாடகம் நடத்தியது. பிறகு, அந்த கம்பெனி நொடித்துப்போய்விட்டது. 1942-ல் கோவில்பட்டியில் தங்கினார் ராஜு. தன்னை நம்பிவந்த சீடர்களையும் வளர்க்க, தேவி ஆர்ட் ஸ்டுடியோ என்ற கலைக்கூடத்தை நிறுவி, உள்ளூர் கோயில் அம்மன்களை வரைந்து வெளியிடலானார். இந்து புராண காவிய மரபையொட்டி கடவுளர் படங்களை வரைந்த ராஜா ரவிவர்மாவின் மரபில், ராஜுவும் கடவுளர்களை அழகிய ஓவியங்களாக வரைந்தார். காவியக் காட்சிகளும் அவரது ஓவியத் திறமையால் உயிர்கொண்டன. மக்களிடம் அவரது ஓவியங்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது.

தன்னுடைய சீடர்களைப் பிள்ளைகளாகக் கருதினார். டி.எஸ். சுப்பையா, ராமலிங்கம், டி.எஸ். மீனாட்சி சுந்தரம், டி.எஸ். அருணாசலம், செண்பகராமன் சீனிவாசன் ஆகியோர் அவருடைய சீடர்கள். ஒவ்வொருவரும் தனித்தனி பாணியை உருவாக்கிக்கொண்டனர்.

முதல் காலண்டர்

சிவகாசி அச்சகத்தார் முதலில் கொண்டையா ராஜுவைத் தொடர்புகொண்டபோது, விருதுநகர் அம்பாள் காபி நிறுவனத்துக்காக முதலில் தயாரானது மீனாட்சி திருக்கல்யாணம். கொண்டையா ராஜுவின் பெயரில் வரையப்

பட்டிருந்தாலும் வரைந்தவர் ராமலிங்கம். அவருடைய சீடர்கள் தங்களுடைய படங்களுக்கு அவருடைய பெயரை முதலில் எழுதி, பிறகு தங்களுடைய பெயரை இணைப் பதை மரபாக வைத்திருந்தனர். கே. மாதவன் சமூகக் காட்சிகளையும் தமிழர் பண்பாட்டையும் சித்தரிக்கும் ஓவியங்களை வரைந்து அச்சிட்டார்.

வடக்கத்திய ஓவியர்கள் முல்காவுங்கர், பண்டிட் ராம்குமார் சர்தர் போன்றவர்களின் வருகை காலண்டர் உலகில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. திரைப்பட நிறுவனங்களில் கலை இயக்குநர்களாக வேலை பார்த்த இந்த ஓவியர்கள் உருவாக்கிய காலண்டர்கள் புதிய தனித்துவத்துடன் விளங்கின. கண்ணைக் கவரும் வண்ணங்களில், புதிய கோணங்களில் கடவுள்கள், மோனோடோன் காலண்டர்கள் என்று காலண்டர்களை உருவாக்கினார்கள். வடக்கத்திய ஓவியர்களின் பாணி, கோவில்பட்டி காலண்டர் ஓவியங்களில் புதிய உருமாற்றத்தைக் கொண்டுவந்தது.

குறிப்பிட்ட சில கம்பெனிகள் காலண்டருக்கெனத் தனி தெய்வங்கள், கோயில் தெய்வங்கள் என வெளியிட்டுவந்தன. பெங்களூர் கணேஷ் பீடி கம்பெனி பிள்ளையாரின் திரு விளையாடல் காட்சிகளையும், பெங்களூர் எம்.ஜி.பிரதர் லாரி கம்பெனி ராகவேந்தர் படங்களையும், நல்லி சில்க்ஸ் பெண் சக்தி தெய்வங்களையும், மேட்டூர் கெமிக்கல்ஸ் கம்பெனி புதிய புதிய கோயில்களுக்குச் சென்று வரலாற்று விவரங்களுடன் அந்த ஊர் தெய்வங்களையும், ஏ.பி.டி. பார்சல் சர்வீஸ் கம்பெனி அனுமன் படத்தையும், கிரைப் வாட்டர் கம்பெனி கிருஷ்ணன் உருவங்களைத் தாங்கி காலண்டர் படங்களை வெளியிட்டுவந்தன.

லட்சுமி, பிள்ளையார்…

பல்வேறு கலைஞர்களின் வருகையில் பின்னணிக் காட்சிகள், வண்ணங்கள் மட்டுமே மாறி வந்தன. எனினும், யாரும் லட்சுமி சேலையை வெள்ளையாகவோ, சரஸ்வதி சேலையை வெள்ளையின்றி வேறு நிறத்திலோ தீட்ட வில்லை. காரணம், ஐதீகம் குறித்த நம்பிக்கை. குறிப்பாக, கோவில்பட்டி வகை கலைஞர்கள் ஐதீகம் குறித்து மிகுந்த கவனம் கொண்டவர்கள்.

காலண்டர் யுகத்தின் ஆரம்பத்தில் அதிகம் காணப்பட்ட முருகன் இடத்தை, பிள்ளையார் பிடித்துக்கொண்டார். நாளாக நாளாக லட்சுமி பிரதானமாகச் சித்தரிக்கப்பட்டார். வெங்கடாசலபதி, தீபாவளி பூஜை படங்கள், முருகன், மதுரை மீனாட்சி, காமாட்சி அம்மன் படங்கள் போன்றவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. பின்வந்த காலங்களில் அந்தந்த ஆண்டுகளில் அதிகம் பேசப்பட்ட தலைவர்கள், சம்பவங்களை வைத்து காலண்டர்கள் வெளிவந்தன.

1980-களில் கொண்டையா ராஜு பாணி ஓவியக் கலை குறித்தான ஆய்வு ஒன்றின் மூலம் அவரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆய்வாளர் ஸ்டீபன். எஸ். இங்க்லீஸ். சிவகாசியில் அச்சிட்டுத் தயாரிக்கப்பட்ட பழைய காலத்து காலண்டர் படங்கள் அனைத்தும் ஸ்டீபன் இங்க்லீஸின் முயற்சியால் கனடா நாட்டு அருங்காட்சியகத்தில் அரிய பெட்டகமாக இன்றும் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

வெறுமனே ரசனைக்காக மட்டுமன்றி அன்றாட வாழ்வின் ஒரு அம்சமாக, பின்னணியாக இடம்பிடித்தவை காலண்டர் ஓவியங்கள். தொழில்நுட்பம் அழித்துக்கொண்டிருக்கும் அந்த ஓவிய மரபை நினைத்து மனம்குமுறும் யாரும் கொண்டையா ராஜுவை நினைத்து ஒரு கணம் பெருமூச்சு விடாமல் இருக்க மாட்டார்கள். அதுதான் கொண்டையா ராஜுவுக்குச் செலுத்தப்படும் உயர்ந்தபட்ச மரியாதை!

– ரெங்கையா முருகன், ‘அனுபவங்களின் நிழல் பாதை’ என்ற நூலின் ஆசிரியர். தொடர்புக்கு:murugan_kani@yahoo.com

தகவல், ஓவியங்கள் தந்து உதவியவர்: மாரீஸ்

SOURCE::::TAMIL.THEHINDU.COM
Natarajan

” சென்னை சாஃப்ட் வேர் என்ஜினீயர் அன்று …தென்னை விவசாயம் இன்று …” !!!

  • விவசாயி மருதமுத்து, அவரது மனைவி வாசுகி. படம்: என்.தங்கரெத்தினம்

இயற்கை விவசாய தென்னந்தோப்பு (உள்படம்) விவசாயி மருதமுத்து, அவரது மனைவி வாசுகி. படம்: என்.தங்கரெத்தினம்

விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் இன்றைய சூழலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இப்போது விவசாயத்துக்குத் திரும்பியுள்ளார்.

அதுவும் இயற்கை வேளாண் முறையின்மூலம் லட்சங்களைக் குவிக்கும் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் மருதமுத்து.

இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்து தென்னை சாகுபடி செய்தால் ஒரு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என்பதை இவர் நிரூபித்துள்ளார். பட்டதாரி ஆசிரியரான தனது மனைவியுடன் கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயமும் லாபகரமான தொழில்தான் என்பதை நிரூபித்துள்ளார்.

திண்டுக்கல் அருகே தவமடையில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் இயற்கை முறையில் தனது மனைவி வாசுகியுடன் இணைந்து தென்னை, ரோஜா, சம்பங்கி மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்.

தனது அனுபவத்தைப் பற்றி அவர் கூறியது: “ஒவ்வொருஇளைஞர்களிடம் விவசாயி என்ற உள்ளுணர்வு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதைத்தட்டி எழுப்பினால் அவன் விவசாயியாகி விடுவான். சென்னையில் சாஃப்ட் வேர்இன்ஜினியராக லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை.

ஓய்வே இல்லாமல் ஓடிய நகர்ப்புற வாழ்க்கை மீது எனக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டியது. இந்தத் தொழிலை விட்டால் அடுத்து விவசாயம்தான் என்னுடைய தேர்வாக இருந்தது. அன்றாடம் விவசாயிகள் தற்கொலைனு வரும் செய்திகள் என்னை மிரட்டின. விவசாயித்தில் கால் அனாகாசு கூட மிஞ்சாதுப்பா என்று பலர் கூறினர்.

இயற்கை விவசாயம் என்றதும்,அதுவெல்லாம் நம்ம நிலத்தில் சாத்தியமில்லைனு பயமுறுத்தினர். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்தது. சொந்த ஊரில் 9 ஏக்கர் நிலம் வாங்கினேன். விவசாயம் செய்யத் தொடங்கினேன். படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்காமல் விவசாயம் செய்ய வந்துட்டான்னு என்னை ஏளனம் செய்யாதவர்களே கிடையாது.

இன்று அவர்களே என்னிடம், என்ன பயிர் செய்யலாம், என்ன ரகம் பயிரிடலாம் என ஆலோசனை கேட்கின்றனர்.அந்த அளவுக்கு என்னுடைய தோட்டத்தில் இயற்கை முறையில் பயிரிட்ட தென்னை, சம்பங்கி, கால உணவு பயிர்களை ஒவ்வொன்றிலும் கைநிறைய வருமானம்கிடைக்கிறது.

கூலி வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்வதில்லை. நானும்,எனது மனைவியுமே நாற்று நடுவோம். தண்ணீர் பாய்ச்சுவோம். அறுவடை செய்வோம். மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்வோம். பெருமைக்காக சொல்லவில்லை. என்னை பார்த்து 100 இளைஞர்கள் விவசாயத்திற்கு வரனும்னு நினைச்சேன். இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 20, 30 படித்தவர்கள் விவசாயம்செய்கின்றனர். இது என்னுடைய இயற்கை விவசாயத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.

திண்டுக்கல்லில் கடந்த 4 ஆண்டாக மழையே இல்லை. மாவட்டத்தில் 60 சதவீதம்தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. ஆனால், என்னுடைய தோட்டத்தில் ஒரு தென்னமரம் கூட பட்டுப் போகவில்லை. மொத்தம் 250 தென்னை மரங்கள் வைத்துள்ளேன். ஒரு மரத்தில் சாதாரணமாக 40 காய் கிடைக்கிறது. மாதம் 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இவ்வளவுக்கும் தண்ணீரே பாய்ச்சுவதில்லை.

பராமரிப்பு செலவே இல்லை. அதற்குக் காரணம், இயற்கை விவசாயம் முறையில் செய்த நடவுமுறை. 4-க்கு 4 அடி என்ற அளவில் குழி தோண்டி, அதில் கப்பி மணல் கொட்டினேன். மாட்டு சாணம், சிறுநீரை அடி உரமாக போட்டு தென்னை மரக்கன்றுகளை நட்டேன். தென்னை மரம் அதிக தண்ணீரை ஈர்க்கும். கப்பி மணல் போட்டதால் மழைக் காலத்தில் தண்ணீரை ஈர்த்து வைத்துக் கொண்டு 3 முதல் 6 மாதம் வரை மரத்திற்கு தண்ணீர் கொடுக்கிறது. ஒரு தென்னை மரத்தின் வயது 80 ஆண்டு.

மனிதனின் சராசரி ஆயுள் 60 ஆண்டு. இயற்கை விவசாயத்தில் தென்னை மரங்களைப் பயிரிட்டால் ஒரு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். 60 சென்ட் நிலத்தில் சம்பங்கி பயரிட்டுள்ளேன். இதிலும் ஆண்டுக்கு ரூ. 5.50 லட்சம் வருமானம்கிடைக்கிறது. செலவு போக மாதம் 30 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. என்னுடையஅடுத்த இலக்கு ரோஜா. இப்போதுதான் ரோஜாவை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்துள்ளேன். இதிலும் நிச்சயம் ஜெயிப்போம்” என்றார் நம்பிக்கையுடன்.

அவருடைய அனுபவங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 9787642613 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Sundar Pichai Takes Control of Key Google Products….

In a major move by Google CEO Larry Page, Sundar Pichai, the Google executive responsible for Android, Chrome, and Google Apps will now also be seen looking after other key Google products, according to recode.net.

 

Page had sent out a memo to the staff on Friday on the change in the leadership of certain areas of Google’s business.

Pichai will be in charge of research, search, maps, Google+, commerce and ad products, and infrastructure, apart from his existing responsibilities. Six executives for Google’s newly added products who were directly reporting to Page will now be reporting to Pichai.

According to recode.net, this move was taken due to Page’s concern that Google may become less innovative as time progressed. Page believes that it would reduce bottleneck and he will be free to be able to expand existing business. It would help him focus on the ‘bigger picture’, reported recode.net.

For Pichai who’s initial role was to manage Chrome and later the OS and a line of netbooks, this new responsibility is a big accomplishment.

His previous promotion was in March 2012 when he took control of Google Apps and later in March 2013, when Android too came his way.

According to recode.net, Pichai is known to be ‘well-liked exec is seen as an ambassador and partnership maker’. However it adds that this move does not mean he is being considered as Google’s heir apparent.

Pichai is an Indian citizen born in Chennai in 1972. He joined Google 2004. Before that he worked at Applied Materials and at McKinsey & Co.

He is an alumnus of the Wharton School at the University of Pennsylvania, Stanford University and the Indian Institute of Technology Kharagpur.

SOURCE::::  http://www.dnaindia.com/

Natarajan

 

Indian American DR. Subra Suresh Honoured…

A top Indian American scientist who heads the prestigious Carnegie Mellon University, will be inducted into the Institute of Medicine (IOM) in recognition of his research into cell mechanics related to malaria, blood diseases and certain types of cancer.

Subra Suresh, would be one of the only 16 living Americans to be elected to all three national academies – IOM, National Academy of Sciences and National Academy of Engineering.

Suresh is the first Carnegie Mellon (CMU) faculty member to hold membership in all three academies.

Before becoming president of CMU last year, he served as director of the National Science Foundation(NSF), a USD 7-billion independent government science agency charged with advancing all fields of fundamental science, engineering research and education.

He has also been elected a fellow or honorary member of all the major materials research societies in the United States and India.

Suresh received his Bachelor of Technology degree from the Indian Institute of Technology, Madras, a master’s degree from Iowa State University and Doctor of Science degree from MIT.

Following postdoctoral research at the University of California, Berkeley, and the Lawrence Berkeley National Laboratory, he joined the faculty of engineering at Brown University in December 1983.

He joined MIT in 1993 as the R P Simmons Professor of Materials Science and Engineering and served as head of MIT’s Department of Materials Science and Engineering during 2000-2006.

In 2011, Suresh was awarded the Padma Shri.

Source:::::Economic Times

Natarajan

” மெட்ராஸ்லே இப்போ மழை பெய்கிறதா…? “

ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரைத் தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லாமல், பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில் பெரியவாளைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார மாதிரி!

மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வர்ஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா இடத்திலும் விதண்டாவாதம் பண்ணும் ஆஸாமிகள் இருக்கத்தானே செய்வார்கள்? அந்த சபையிலும் ஒருவர் திடீரென்று எழுந்தார்………..

” நீங்க அந்த ஸ்வாமிகள் மழையை பெய்ய வெச்சார்….ன்னு சொல்லறீங்களே! அது நெஜம்னா…….இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?”

கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது.

பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்போதும், கேட்கும்போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு “கத் கத”மான பரவஸ நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள் ! உள்ளிருந்து பேச வைப்பதும் அவர்தானே?

“ஏன் பெய்யாது? பெரியவாளோட அனுக்ரகத்தால இன்னிக்கு நிச்சியமா மெட்ராஸ்ல மழை பெய்யும்!” அழுத்தந்திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார். அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர,” ஒரு வேளை மழை பெய்ய லேன்னா.?………. பெரியவாளோட பேருக்கு ஒரு களங்கம் வந்துடுமே! நாராயணா! அனாவஸ்யமா இப்பிடி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி இருக்க வேண்டாமோ……….” என்று உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!

ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார்…….. ….மழை வருகிறதா? என்று பார்க்க!

பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்? அங்கே காஞ்சிபுரத்தில் பெரியவா சுமார் ஒரு மணிநேரம் ஜபத்தில் இருந்தார். மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்…………

“ஏண்டா?…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா?”

சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்! ஆம். மெட்றாஸ் முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது! மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!

அந்த விதண்டாவாதி, ஒன்று……….மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்!

யார் கண்டது?

SOURCE:::: WWW.PERIVA.PROBOARDS.COM

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/1619/surrender#ixzz3Gb30iTFz

தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம் ….

பக்தவத்சலம் பிறந்த நாள்: 09.10.1897

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தலைவர்களுள் பக்தவத்சலமும் ஒருவர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் பிறந்தது புரட்டாசி உத்திரட்டாதியில். 90 ஆண்டுகள் வாழ்ந்தவரோடு இறுதி 13 ஆண்டுகள் எனக்குப் பழக்கமுண்டு. அது எனக்கு மீண்டும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தது போலாயிற்று. அன்றைய தலைவர்களோடு இன்றைய தலைவர்களை வைத்துப் பார்த்தால், பகல் சுருங்கி இரவு கவிந்ததாகத் தெரியும்.

பக்தவத்சலம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலுமே நல்ல புலமையையும் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டை யும் கொண்டிருந்தார். “எனது தமிழாசிரியர் உ. வே. சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்” என்பார்.

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர்

முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன் 1978-ல் பக்தவத்சலத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில், “பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும் என்னும் உண்மையை வாழ்ந்து காட்டுபவர் பக்தவத்சலம்” என்று சொல்லியிருந்தார் அளகேசன்.

சென்னை ராஜாஜி மண்டபத்தில் 1987 மார்ச் 13-ம் நாள் பக்தவத்சலத்துக்கு நினைவுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசும்போது, “மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மனிதர். ஆனால், விமர்சனம் அவரை வருத்தாது” என்றார் கேரளத்தின் முன்னாள் ஆளுநர் பா. ராமச்சந்திரன். பக்தவத்சலத்தின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையையும் சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடிய இரு குறிப்புகளாக இவற்றைச் சொல்லலாம்.

சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு பக்தவத்சலம்தான் இலக்கணம். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் பக்தவத்சலம் வல்லவர் என்றும் சொல்வார்கள். கேள்வி களுக்குச் சட்டமன்றத்தில் ராஜாஜி பதில் சொல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், பதில் சொல்லும்படி தன்னைத்தான் அவர் தூண்டுவார் என்று சொல்லி, ராஜாஜி தன்மேல் வைத்த நம்பிக்கையைக் குறித்து பக்தவத்சலம் பெருமைப்பட்டுக்கொள்வார்.

மாற்றுக் கட்சியானாலும் நண்பர்தான்

அந்நாட்களில் பக்தவத்சலத்தின் பிறந்த நாளன்று காலையிலேயே வீட்டுக்கு வந்து, அவருக்கு நேரில் வாழ்த்து சொல்பவர்கள் பட்டியல் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பட்டியலில் முக்கியமானவர் திமுக தலைவர் கருணாநிதி. அப்படி வருபவரை அங்கு கூடியிருக்கும் பக்தவத்சலத்தின் நண்பர்கள் சற்று நேரம் உரையாற்றச் சொல்லி அவர் பேசுவதை ஆர்வமாகக் கேட்பார்கள். சொந்த ஊரிலிருந்த தனது பூர்வீக வீட்டை ஒரு நூலகமாக மாற்ற கருணாநிதி முடிவெடுத்தபோது, அதைத் திறந்துவைக்க அவர் அழைத்ததும் பக்தவத் சலத்தைத்தான். பக்தவத்சலம் சந்தோஷமாகச் சென்று திறந்துவைத்தார். பக்தவத்சலத்தின் கடைசிக் காலத்தில், மதுரையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தார் பி.டி.ராஜன். “இந்தத் தள்ளாத வயதில், உடல் நலமும் சரியில்லாத நிலையில், மதுரைக்குச் செல்ல வேண்டாம்” என்று எவ்வளவோ கூறினார்கள் பக்தவத்சலத்தின் உடனிருந்தோர். எதையும் பொருட்படுத்தாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தனக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவரின் பிறந்த நாள் விழாவுக்கு காரிலேயே சென்று, விழாவில் உரையாற்றிவிட்டுத் திரும்பினார் பக்தவத்சலம்.

ஐந்து லட்சம் கொடுத்தால் கல்லூரி

ஐந்து லட்சம் கொடுத்தால் கொடுப்பவர் பெயரால் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்று பக்தவத்சலம் காலத் தில் ஒரு திட்டம் இருந்தது. பெரியார் பார்த்தார், “இது நல்ல திட்டம். ஆனால், பணத்துக்கு நான் எங்கே போவேன்? திருச்சியில் எனக்கு இருக்கும் நிலத்தைத் தருகிறேன். ஒரு கல்லூரி தொடங்குங்கள்” என்று கொடுத்தார். அப்படிப் பிறந்த கல்லூரிதான் திருச்சி ஈ.வெ.ரா. அரசுக் கலைக் கல்லூரி.

தன்னிடம் வரும் எந்தக் கோப்பிலும், அதற்கான முடிவைத் தானே எடுத்து, குறிப்பு அனுப்புவது பக்தவத்சலத்தின் வழக்கம். “ஐரோப்பிய ஐ.சி.எஸ். அதிகாரிகள் நிறைய பேர் என்னிடம் பணியாற்றியிருக் கிறார்கள்; ஆனால், நான் ஒருபோதும் என்ன செய்யலாம் என்கிற முடிவை அவர்களிடம் கேட்டதில்லை” என்று பக்தவத்சலம் ஒருமுறை என்னிடம் கூறினார். கக்கனும் அப்படித்தான். “கக்கனிடமிருந்து ஏதேனும் வந்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும்; எங்களுக்குச் சங்கடம் ஏதும் இருக்காது” என்று முன்னாள் தலைமைச் செயலர் கார்த்திகேயன் சொல்வதுண்டு. ‘பரிசீலித்துப் பார்வைக்கு வைக்கவும்’ என்று மட்டுமே அமைச்சர்கள் குறித்து வைப்பதைத்தானே பின்னாட்களில் பார்க்கிறோம்?

பக்தி பழமைவாதியாக்கிவிடவில்லை

இறைப்பற்றாளர் பக்தவத்சலம். ஆனாலும், பக்தியை எங்கே நிறுத்திவைக்க வேண்டும் என்பதை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நாட்களில், “கோயிலில் இருக்கும் தங்கக் குடங்களை நாட்டுக்குத் தரக் கூடாதா?” என்று கேட்டவர் அவர். கோயில்களுக்கு நிலச்சொத்து ஒத்துவராது. குத்தகை, பண்ணைச் சாகுபடியெல்லாம் பார்த்தாகிவிட்டது. பலனில்லை. காணி நிலத்துக்கு பாரதியார் ஏங்கவில்லையா? ஆண்டவனுக்கே நிவேதனம் என்ப தெல்லாம் அகம்பாவம். எனவே, நான்கு லட்சம் ஏக்கர் கோயில் நிலத்தை வைத்திருப்பவர்களிடமே விற்று முதலீடு செய்து, வட்டிப் பணத்தில் கோயில் களைப் பராமரிக்கலாம் என்பது 1976-ல் அவரது திட்டம். அதற்கு எழுந்த எதிர்ப்புக்கு, மயிலாப்பூர் அகாடமி கூட்டத்தில் பதில் சொன்னார், “நானேதான் நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து கோயில்களுக்கு விலக்களித்தேன். நானேதான் கோயில்களுக்கு நிலச் சொத்து சரிவராது என்றும் சொல்கிறேன்.”

துணியின் இழைகளைப் பிரிக்கலாமா?

இந்திய ஓர்மையில் தளராத நம்பிக்கையுள்ளவர் பக்தவத்சலம். இனவழி அரசியலைக் குறிப்பிட்டு “வடக்கத்தியர் எல்லோரும் ஆரியர்களா? அல்லது பிராமணர்கள் அல்லாத எல்லோரும் திராவிடர்களா? இனங்களும் பண்பாடுகளும் மதங்களும் சாதி களும்கூட கலந்து, நெருக்கி நெய்த துணியாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் இழைகளைப் பிரித்துக் குலைக்க வேண்டாம்” என்றார். “புஷ்கரம், பிருந்தாவனத்தில் உள்ள கோயில்களும் வழிபாடும் காஞ்சிபுரத்தில் உள்ளதுபோல் இருக்கும். ராஜஸ்தானில் நம்மைப் போன்றே பொங்கல் கொண்டாடுவார்கள். முற்கால வரலாற்றில் இந்தப் பிரிவுகள் இருந்திருக்கலாம். பின்னர் எல்லாம் ஒன்றாகிப்போனதும் வரலாறுதானே?” இப்படியெல்லாம் இந்திய ஒற்றுமையை விளக்குவார்.

நான் தனியாக நின்றேன்

காங்கிரஸ் வழியிலான அவரது மொழிக் கொள்கை, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அவர் கையாண்ட விதம், இவை இரண்டையும் குறைகூறுவார்கள். 1965 முதலாகவே மாறிவந்த அரசியல் சூழலை பக்தவத்சலம் கவனமாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் சொல்வார்கள். இந்த விமர் சனங்களுக்கு அவர் பதில் என்னவாக இருந்திருக்கும்?

1950 முதல் 15 ஆண்டுகளுக்கு இந்தியோடு ஆங்கிலமும் தொடர்வதை அரசியல் சாசனம் உறுதி செய்தது. அந்த ஏற்பாடு தற்போது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இருப்பவர்கள் இந்தியில் ஒரு அட்சரம்கூடக் கற்க வேண்டிய கட்டாயம் இல்லை. தமிழகத்தின் இருமொழிக் கொள்கை என்பது மூன்றாவதாக ஒரு மொழியையும் கற்கக் கூடாது என்பதல்ல. 1937-ல் நடந்ததைப் பார்த்திருந்ததால் இங்கே இந்திக்கு மாணவரிடையே ஒரு ஒவ்வாமை இருப்பது தெரிந்தது. எனவே, விரும்பினால் அந்த மொழியைக் கற்கலாம் என்பதாக மட்டுமே இருந்தது. எதற்கும் வழுக்கலாகப் பதில் சொல்லி அறியாத பக்தவத்சலத்தின் பதில் இதுவேதான்.

தன் கட்சிக்காரர்களே குறை சொல்வதைப் பற்றிக் கேட்டால், “இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இவர்கள் என்ன செய்தார்கள்? சூழ்நிலையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. நான் தனியாக நின்றேன்” என்பார். சரியா, தவறா என்பதெல்லாம் வரலாற்றுப் பொருளாக விவாதிக்கப்படும். ஆனால், இவர் கட்சியைக் கைவிட மறுத்தார், கட்சி இவரைக் கை விட்டது என்றுதான் எனக்குத் தோன்றியது.

– தங்க. ஜெயராமன்,  in The Hindu…Tamil

ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்,

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

Natarajan

நாளில் மட்டுமா ஒற்றுமை? …. Oct 2 …

வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள். மகாத்மா காந்தி உயரிய வாழ்ந்துகாட்டியாகத் திகழ்ந்தவர். உலகமே அவரை ‘மகாத்மா’ என்று கொண்டாடிய போது சுயசரிதை எழுதித் தன் தவறுகளை மக்கள் முன் வைத்த மகான் அவர். உலகின் தலைசிறந்த தலைவர்களுள் முதன்மையானவராய் நம் தேசப்பிதா திகழ்வதன் காரணம், வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்தவர் அவர் என்பதே. காந்தி வழியில் வாழ்ந்து காந்தியத்தின் உன்னதத்தை உணர்த்தி ‘தென்நாட்டு காந்தி’ என்று
மக்களால் போற்றப்படும் கர்மவீரர் காமராஜர், மகாத்மா போற்றிய புனிதாத்மா.
அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி பிறந்தநாள், அதேநாள் தான் காமராஜர் மறைந்த நாள். நாளில் மட்டுமா ஒற்றுமை? கொள்கையில், தனிமனித வாழ்க்கையில், நேர்மையில் என்று எல்லாவற்றிலும்
ஒற்றுமையோ ஒற்றுமை!
சிறுவயது ஒற்றுமை
காந்தி ராட்டையைச் சாட்டையாக்கி ஆங்கிலேயரை நாட்டைவிட்டு ஓடச்செய்து விடுதலை வேள்விக்குத் தன்னையே தந்தார். அவர் சிறுவயது வாழ்க்கை, சோகங்கள் நிறைந்தது. பதின்மூன்று வயதில் கஸ்தூரிபாயை மணக்கக் காலம் அவரை நிர்பந்திக்கிறது. பதினாறு வயதில் தந்தையை இழந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை உயர்ந்த லட்சியமுள்ள இளைஞனாய் மாற்றியவர் அன்னையார் புத்திலிபாய்தான். பதினெட்டுவயதில் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்திற்கு சென்றபோது தாயாருக்கு தந்த சத்தியத்தின்படி வாழ்நாள் முழுக்கத் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடித்தார்.காமராஜரும் ஆறுவயதில், தந்தைகுமாரசாமி நாடாரை இழக்கிறார். தாயார் சிவகாமி அம்மையாரின் அன்பில் வளர்ந்தார். குழந்தைப் பருவத்தில் காந்தியும், காமராஜரும் தந்தையின் அன்பின்றித் தாயின் அன்பில் வாழக்காலம் பணித்தது.காந்தி பொதுவாழ்க்கையும், அவரது தனி வாழ்க்கையும் ஒளிவுமறைவற்ற உன்னதமான வாழ்க்கையாகத் திகழ்ந்தது. உள்ளத்தில் தூய்மையோடும், செயலில் நேர்மையோடும், பேச்சில் சத்தியத்தோடும், ‘என் வாழ்வுதான் இந்தச்சமூகத்திற்கு நான் விட்டுச்செல்கிற செய்தி’ என்று வாழ்ந்தவர். காமராஜர் அப்பழுக்கற்ற தலைவராக பொதுவாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாக திகழ்ந்தார்.
கூச்சம் கூடிய தலைவர்கள் “ராஜீயத்துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள் நாகரிக உலகத்திற்கு
இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் மகாத்மா பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டத்தினால் நான் எந்தச்சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக நினைவு இல்லை” என்று சத்திய சோதனை நூலுக்கு எழுதிய முன்னுரையில் காந்தி கூச்சத்தோடு எழுதியுள்ளார்.
காமராஜர் முதலமைச்சரான பின்னும் தாய் சிவகாமிஅம்மையாருக்குச் செலவுக்கு ரூ.120 தான் அனுப்பினார். ‘வருகிறவர்களுக்குக் குளிர்பானம் வாங்கித்தரவேண்டும், ரூ.150 தந்தால் நலம்’ என்று தாய்
வேண்டியபோதும் மறுத்தவர் காமராஜர். மகாத்மாவைப்போல், மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்தபோது கூச்சத்தோடு மறுத்து
“என் கடமையச் செய்றதுல பாராட்டு ஏன்னேன்” என்று சொன்னவர் காமராஜர்.
போராட்டமே வாழ்வு உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு சாவு மணியடிக்க காந்தி நடத்திய ௨௪௦ மைல் தண்டி யாத்திரை அவரது மனஉறுதிக்கு சான்று. விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனையாய் அமைந்த மாபெரும் போராட்டத்தை அவர் அகிம்சா வழியில் நடத்திய திறத்தை உலகே வியந்து போற்றியது. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் அவரது தன்னிகரற்ற ஆளுமைக்கு மற்றுமொரு சான்று.காந்தியின் மீதும் அவர் சத்தியாகிரகத்தின் மீதும் அளவு கடந்த பாசம் கொண்ட காமராஜர்,1927ல் நீல்சிலை அகற்றும் போராட்டம் நடத்த மகாத்மாவிடம் அனுமதி வேண்டினார். ஆனால்அரசாங்கமே அச்சிலையை எடுத்துவிட்டதால், அப்போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படவில்லை. 1930 ல் காந்தி அறிவித்த உப்புச்சத்தியாகிரகத்தில் ராஜாஜியோடு வேதாரண்யத்தில்
பங்கேற்று சிறைசென்றார். அறம் பேணிய தலைவர்கள் தனிவாழ்விலும் பொதுவாழ்விலும்
அறத்தைக்கடைபிடிக்க வேண்டும் என்று போதித்த காந்தி, தென்னாப்ரிக்கா சென்று திரும்பியபின் எளிய கதர்வேட்டிக்கு மாறினார். வாரம் ஒருநாள் பேசா விரதம் மேற்கொண்டார். ஆங்கிலேயரின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அண்ணலின் அகிம்சை முன் செயலற்று ஒடுங்கின. ”பிரம்மச்சரியத்தை பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம்” என்று நம்பிய காந்தி இல்லறத்திலும் அதை கடைபிடித்தார். இல்லறத் துறவியாய் வாழ்ந்தார்.காமராஜரும் அப்படித்தான். தாயார் திருமண ஏற்பாடுகள் செய்தபோதும், பொதுவாழ்க்கைக்குப் பிரம்மச்சரியமே ஏற்றது என்று மறுத்து இறுதிவரைத் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்தார். உணவிலும் ஒற்றுமை நாம் உண்ணும் உணவிற்கும் நம் எண்ணத்திற்கும் தொடர்பு உண்டு என காந்தி நம்பினார். ”ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ அது போலவேஆகிறான்” என்று அடிக்கடிச் சொன்னதுண்டு. மிகையான உணவு நோயைக் கொண்டுசேர்க்கும் என்று எண்ணி, வாரத்தில் ஒருநாள் உண்ணா நோன்பினைக் கடைபிடித்துப் புலன்களை அடக்கும் ஆற்றலைப் பெற்றார்.காமராஜர் உணவின் மீது பெரும்பற்றுக் கொண்டவரில்லை. எளிமையான உணவு முறையையே என்றும் அவர் கடைபிடித்தார். சிறு வயது முதலே வறுமையில் வாழ்ந்ததால் சைவஉணவுப்பிரியர், மாதம் முழுக்கக் கத்தரிக்காய் சாம்பார் என்றாலும் முகம்சுளிக்காமல் சாப்பிடமுடிந்தது. பதவி வேண்டாம் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பதவியை நாடாமல் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்டவர் காந்தி. லால்பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்குப்பின் பிரதமராகும் வாய்ப்பு வந்தும்கூட அதை இந்திராகாந்திக்குத் தருவதற்குக் காரணமாய் இருந்தார் காமராஜர் என்பதில் இருவருக்கும் என்ன ஒற்றுமை! இருவரும் என்றும் பதவியைச் சுகமாய் நினைத்தவர்களில்லை.இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்றார் காந்தி. 1957 முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி தரும் பொருட்டுக்கிராமங்கள் தோறும் பள்ளிகள் அமைத்து மதியஉணவு தந்து கல்விக்கண் திறந்த ஒப்பற்ற காந்தியத் தலைவனாகக் காமராஜர் திகழ்ந்தார்.காந்தியின் வாழ்க்கை அகிம்சையை மையமிட்ட மகத்தான வாழ்க்கை என்றால், காமராஜரின் வாழ்க்கை காந்திய வழியில் மக்களை ஆண்ட மகத்தான வாழ்க்கை. மனிதராய் பிறந்து புனிதராய் தன்னைச் செதுக்கிக்கொண்ட மகான் காமராஜர், மகாத்மா பிறந்தநாளைக் கொண்டாடிய நிறைவில் தென்னாட்டுக் காந்தியாகவே தேசப்பிதாவின் ஆத்மாவோடு கலந்து போனார்.-

SOURCE::::முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி.mahabarathi1974@gmail.com 99521 40275

IN  Dinamalar.com

Natarajan

கல கல என்று கலக்கும் பொம்மை கொலு… நவராத்திரி திருவிழா !!!

ஆன்மிக அர்த்தங்களுக்குள் நுழைந்து அதன் ஆதாரங்களைத் தேடாமல், புராணக் கதைகளுடன் அதை முடிச்சுப் போடாமல், வெறும் பொம்மை விளையாட்டாகவே கற்பித்துக் கொண்டாலும் கூடப் பரவாயில்லை.

நவராத்திரி ஓர் உன்னதமான திருவிழா தான்.

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புதத் தருணம்தான் இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அது மிகையாகாது.

பொம்மைகள் குழந்தைகளுக்கு மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்பதில்லை. பெரியவர்களுக்கும் பிடிக்கும். பிடித்துத்தான் தீர வேண்டும்.

ஆதி சங்கரரின் அன்புக்கு இலக்காகிய ஸ்ரீ மூகாம்பிகையும், ஸ்ரீ ராமானுஜரின் பாசத்திற்கு வசப்பட்ட ராமப்ரியனாகிய மேல்கோட்டை சம்பத்குமாரனும், சத்குரு ஸ்ரீ ராகவேந்திரரை வசப்படுத்திய ஸ்ரீ மூலராமரும், ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை இன்றும் கூட சூடிக்களிக்கின்ற ஸ்ரீ வேங்கடாசலபதியும், நாயன்மார்களும் இன்னும் பலரும் பாடிப்பரவிய தில்லை நடராஜரும் கூட அர்ர்ச்சாவதார மூர்த்திகளாய் விளங்கும் ஆன்மிக பொம்மைகள்தாம்.

இன்று திருமலையில் மட்டுமின்றி, தேசம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகின்ற ஸ்ரீ ஸ்ரீநிவார் திருக்கல்யாணமும் கூட பக்தர்களின் மனம் கவரும் ஓர் உயர்தர ஆன்மீக பொம்மை விளையாட்டுத்தான்.

திருக்கோயில்களில் பிரம்மோத்வ காலங்களில் பல்வேறு பெரிய பொம்மைகளாகிய வாகனங்களிலும், பல்லக்குகளிலும், சிவிகைகளிலும், தேர்களிலும் தெய்வங்களின்  பஞ்சலோக உருவத்தை அமர்த்தி, அலங்கரித்து, வீதிவலம் செய்வித்து, அத்திருக்காட்சியை பக்தர்கள் வணங்கிப் பரவசம் அடைவதும் கூட ஓர் உன்னதமான பொம்மை விளையாட்டுத்தான்.

குழந்தைகள் சிறுவயதில் விளையாடும் பொம்மை விளையாட்டுதான், பெரியவர்களான பின்பு, திருக்கோயில்களில் வருடம் முழுவதும் திருவிழாக்களாகவும், வீடுகளில் வருடத்தில் ஒன்பது நாள் நவராத்திரி பொம்மைக்கொலுவாகவும் பரிணமித்திருக்கிறது என்று நம்புவதற்கு எல்லா நியாயமும் இருக்கின்றது.

பொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளைப் பொறுத்தவரையில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக்காட்டிலும் நீண்ட நாட்கள் கொண்டாடப் படுவதும், அந்தக்கொண்டாட்டத்திற்கென  அதிகமான முன் தயாரிப்புகள் செய்யப்படுவதும் இந்த நவராத்திரிக்கு மட்டும்தான்.

kolu_2பொம்மைக் கொலு வைப்பதற்குச் சில நாட்கள் முன்பாகவே வீடுகளின் மூலை முடுக்களிலெல்லாம் ஒட்டடை அடிக்கப்படுவதும்,  பரணிலிருக்கும்  பெட்டிகளிலிருந்து பொம்மைகள் வெளியே எடுத்துத் துடைத்துச் சுத்தம் செய்யப்படுவதும், கொலுப்படிகள் நிறுவுவதற்கான திட்டமிடுதலும் ஏற்பாடுகளும் நடைபெறுவதும், வண்ணக் காகிதங்களால் தோரணங்கள் அமைத்து வீடு முழுவதும் அலங்கரிக்கப் படுவதும், வசதியிருந்தால் மின்விளக்குகள் கொண்டு அலங்கரிப்பதும் என, பொம்மைக்கொலு வைப்பது ஒரு திருமணத்துக்கு நிகரான உற்சாகச் செயல்பாடல்லவா
வீட்டின் ஆகப்பெரிய வயதான உறுப்பினர்கள் அறிவுறை கூற, அடுத்தநிலை பெரியவர்கள் ஆலோசனை வழங்க, இளைய தலைமுறையினர் அதை நிறைவேற்றப் பாடுபடுவதுமாக, முன்னேற்பாடுகள் பரபரக்கும். விழா தொடங்கிய  பின்பு, அந்த ஒன்பது நாட்களும், உறவினர்களும், தெரிந்தவர்களும் சாரி சாரியாய் வந்து நம் வீட்டுக் கொலுவைப் பார்த்துவிட்டுப் பாராட்டுவதும், கொலு இன்னும் சிறப்பாக மிளிர்ந்திட ஆலோசனைகள் பலவும் சொல்வதுமாக, ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக நகரும்.

வித்தியாசமான கருத்தோட்டங்களைப் பிரதிபலிக்கும் புதிய பொம்மைகளை விலை கொடுத்து வாங்கிக் கொலுவில் வைப்பதும், வருபவர்களுக்கு அதைப் பற்றி விளக்குவதும் கூட ஓர் அற்புத அனுபவம்தான்.

கொலுவைப்பார்க்க வரும் வரும் குழந்தைகள் தங்களது விழிகள் விரிய வியப்பதும், அவர்களில் சிலர், பொம்மைகளைக் கையில் எடுத்துப்பார்க்கத் துடிப்பதும், பெரியவர்கள் அவர்களைத் தடுத்துச் சமாதானம் செய்வதும் பொம்மைக்கொலு வைத்துள்ள வீட்டில் அன்றாடம் அரங்கேறும் அழகிய காவியமாகும். கொலுவுடன் இசையும் சேருமானால் அவ்விடம் கந்தர்வலோகம் ஆகிவிடும்.

அவரவர் வசதிக்கேற்ப, கொலுவைக் காண வருபவர்களுக்குத் தாம்பூலத்துடன் ஏதாவது சிறு பரிசுப்பொருளை வழங்குவதும், குழந்தைகளுக்கு சுண்டல் அல்லது இனிப்புகளை வழங்கி அவர்களை முகம் மலர வைப்பதும், திருமணங்களைத் தவிர்த்து, நவராத்திரி நாட்களில்  மட்டுமே சாத்தியம்.

இதையெல்லாம் விடுங்கள்.

பொம்மைக் கொலுவுக்கென பரணிலிருந்து இறக்கிவைக்கப்படும் பொம்மைகளைப் பார்க்கும் போதே, பள்ளி விட்டவுடன் வீடு திரும்ப ஆவலாகக் குதித்தோடத் தயாராகும் குழந்தைகளைப் பார்ப்பது போல் இருக்கும்.

இது மட்டுமா.
நவராத்திரி முடிந்தவுடன் பழையபடி பொம்மைகளைப் பரணில் ஏற்றும் போது, நெருங்கிய உறவினர்களை வழியனுப்ப இரயிலடியில் நிற்பது போன்ற ஓர் உணர்வு நமக்குள் பீறிடுவதைத் தவிர்க்கவே முடியாது.

அடுத்த நவராத்திரி எப்போது வரும் என்று அந்த பொம்மைகள் நம்மைக் கேட்பது போலவே இருக்கும். ஆம்.பொம்மைகள் நம்முடன் பேசும். நம்பினால் நம்புங்கள். நமக்கும் அவற்றுடன் பேசவேண்டும் போல் இருக்கும். இதுதான் நவராத்திரி பொம்மைக்கொலுவின் சிறப்பு.

kolu_4நம்மில் பலரது வீடுகளில் பொம்மைக்கொலு வைப்பதில்லை. வழக்கமில்லை, வசதியில்லை, இடமில்லை, நேரமில்லை. இப்படிப் பல காரணங்கள்.

காரணம் எதுவாக இருந்தாலும் சரி
கொஞ்சமே கொஞ்சம் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். பொம்மை கொலு வைக்கப் பழகுங்கள். உங்கள் மனசு மகிழ்ச்சியால் நிறையும். உங்களின் உறவு வட்டம் பெரிதாகும். பொம்மைகள் உங்களின் விருந்தினர்கள் ஆகும். உங்களுக்குள்ளிருக்கும் கலையார்வம் மறுபிறவி எடுக்கும். நீங்களும் குழந்தைகளாவீர்கள்.

கொலு வைக்க வசதியோ, வாய்ப்போ இல்லாதவர்கள் நிச்சயம் ஒவ்வொரு நவராத்திரி பண்டிகை அன்றும், ஒவ்வொரு இடங்களில் வைக்கப்படும் கொலுவுக்குச் சென்று பார்த்து ரசிக்கலாம். நிச்சயமாக முக்கியக் கோயில்களில் கொலு வைக்கப்பட்டிருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டியது.

 

SOURCE:::Vanisri Sivakumar in dinamani.com

Natarajan