The village that gave India its new ISRO chief…..DR.Sivan

A humble son of a farmer who studied in local government run schools, in Tamil medium, is the new head of India’s premier space agency.

Dr K Sivan was born in Sarakkalvilai in Kanyakumari district in 1957. His father was a farmer, and Dr Sivan is the first graduate in the family.

By all accounts, his is an unusual story.

A young Sivan studied in government schools in his native village till the 5th standard, and completed his schooling in neighbouring Valankumaravilai, all in Tamil medium. Later, he graduated from the S T Hindu College in Nagercoil.

He then graduated from the Madras Institute of Technology in aeronautical engineering in 1980 and completed his master’s in aerospace engineering from the Indian Institute of Science, Bangalore, in 1982.

That year he joined ISRO on its Polar Satellite Launch Vehicle project, towards which he contributed in mission planning, design, integration and analysis. He has held various responsibilities during his stint in ISRO, finally going on to head India’s space agency.

At ISRO, he completed his PhD in aerospace engineering from IIT-Bombay, in 2006.

Dr Sivan, who takes over from Dr A S Kiran Kumar on Monday, January 15, for a three-year term, is only the second rocket scientist after G Madhavan Nair to head ISRO.

MAGE: Dr Sivan’s family home in Sarakkalvilai village. He comes here regularly to attend family functions and for the Bhadrakali Amman puja. Photograph: A Ganesh Nadar/Rediff.com

Sarakkalvilai falls on the outskirts of Nagercoil, which is the headquarters of Kanyakumari district, Tamil Nadu. All of a sudden this small village has become the centre of attraction for people near and far, thanks to its famous son.

“Take the next right and it is at the end of the road,” says a villager, and as you reach the house you realise it is as unpretentious as the man who grew up there.

Dr Sivan’s sister-in-law Saraswathi lives in the family house with her daughter. “My eldest daughter got married five months ago and Sivan had come for the function,” she says, her eyes glowing with happiness.

Since the announcement about his appointment, people have been coming in droves to congratulate her, and her face beams with pride.

“I was married 30 years ago into this family and at that time he was already working for ISRO in Thiruvananthapuram. He used to live in a lodge then. He comes home for festivals and family functions,” says Saraswathi.

The conversation is interrupted when former Tamil Nadu Congress president Kumari Ananthan lands up with a dozen supporters to congratulate her.

One of the men who comes along with Ananthan hands her a book with the message, “Please give it to him when he comes next.” Another hands her a monthly magazine.

“He comes here every year for the Badrakali Amman puja which takes place in April-May,” adds his sister-in-law.

“He comes with his family, offers prayers and leaves the same day. He always comes for all family functions. When he is with the family he is always smiling and joking. He never calls, but his wife calls regularly and keeps in touch with us,” Sarawathi says.

“He was a class topper from school to college,” says Dr Sivan’s uncle who lives in the house opposite.

“He was a brilliant student and never went for tuitions or private classes. His father used to pluck mangoes and young Sivan used to go to the market to sell it. He was a helpful child,” the uncle adds.

The school Dr Sivan studied at is also opposite the family house. The retired PT master there recalls him clearly. “He was five years my junior in school, I remember him as a very quiet boy.”

“I too was five years his junior,” another villager pipes in. “You know the final exams used to come during harvest time. His father used to be in the field while Sivan sat on the lower branch of a tree with his books, studying, keeping one eye on the harvest, and run if his father called. He was always studying.”

“When Sivan and I were in school we had a very good headmaster,” the villager adds. “That headmaster planted many trees in the school compound and made every class in charge of a few trees. In the morning, when we came to school, the first thing we did was to water the trees and only after that did we attend school.”

“Kanyakumari is basically an agricultural district,” an elderly villager points out. “Apart from coir, there was no industry here. We all survived on farming. It’s rich fertile soil and there is plenty of water. Paddy, bananas, coconuts, mangoes, rubber is grown here.”

“Sivan was exceptional,” the elderly gent adds, “while he helped his father in the field he continued studying every free moment.”

“As there was only a primary school here we went to nearby Valankumaravilai for our SSC (Class 10). Those days there was no 12th standard. As there was no bus facility we walked.”

A colleague from ISRO, who retired a decade ago and did not want to be named for this feature, recalls, “He (Sivan) would go home only to sleep. He is extremely hard-working and totally focused on his work. He was not only the first graduate from his family, he was also the first graduate from his village.”

FILE PHOTO::: New Delhi: Renowned scientist K. Sivan has been appointed as the new Chairman of ISRO, by the Appointments Committee of the Cabinet on Wednesday, January 10, 2017. PTI Photo **                                                

“He is a disciplined taskmaster,” says D Karthikesan, former director of the ISRO Propulsion Complex in Mahindragiri, Tamil Nadu.

“He likes to keep everything on schedule and works with a deadline,” adds Karthikesan. “If he thinks there is a problem somewhere he will go and talk to the people actually working on the project, and never limit himself to seniors in the organisation.”

“Though he is a hard taskmaster,” the former ISRO scientist points out, “he is also extremely generous and always looks after the welfare of the people working under him. So people work hard for him.”

“He is a bold decision-maker,” says Karthikesan. “Where others may hesitate wondering if it would work or not, he will say it will work and will do it.”

“Though he followed the schedule strictly,” adds Karthikesan, “he also made sure that all parameters are met at every stage. Whether it is quality or safety, he made sure every parameter was up to the mark before proceeding, and yet kept a tight schedule.”

Dr Sivan has two sons. The elder one has finished his BTech, the younger son is in college.

The school Dr Sivan studied in was built over 60 years ago. “We need to pull it down and build another,” says a villager. A government-run school, the land was given free by Dr Sivan’s uncle.

The village still does not have a bus service, a fact the villagers highlighted to Kumari Ananthan, the Congress politician. Nor does it have a middle, high or higher secondary school.

K Sivan’s ascent bears an uncanny resemblance to another ISRO scientist who was born in a fishing village in Ramanathapuram, also in Tamil Nadu.

That scientist, of course, went on to become the most beloved President this Republic has had.

Source….A.Ganesh Nadar in http://www.rediff.com

Natarajan

புத்தம் புது பூமி வேண்டும்… நித்தம் ஒரு வானம் வேண்டும்!

உலகமே கொண்டாடுகிற ஒருநாள் என்றால், அது, ஜனவரி, 1ம் நாள் தான். புத்தாண்டு என்றால், புதிய நாட்கள் மட்டும் பிறப்பதில்லை; புதிய உலகம் பிறக்கிறது. ஆண்டு பிறப்பு என்றாலே,
ஆங்கில ஆண்டின் ஜனவரி, 1ம் தேதியை தான் குறிப்பிடுகிறோம்.

‘சென்னை’ என, பெயர் மாற்றம் செய்த, 1995ம் ஆண்டு வரை, சித்திரைத் திங்கள் முதல் நாளைத்தான், ஆண்டின் முதல் நாளாக கொண்டாடினர். ஆனால், அதன் பிறகான கொண்டாட்டங்களின் வண்ணங்கள் மாறி விட்டன. ஆயினும், வரலாற்றுக் குறிப்புகள் உட்பட, எல்லாரும் பொதுவாக அறிந்து கொள்ளக் கூடிய வகையில், அனைத்து நிகழ்வுகளையும், ஆங்கில ஆண்டு, மாதம் மற்றும் தேதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே குறித்து வைக்கிறோம்.
நம் வயதை கணக்கிடும் போது, நாம் பிறந்த ஆங்கில ஆண்டை மனதில் வைத்து, தற்போது நடக்கும் ஆண்டு வரை எண்ணி, நம் வயதைச் சொல்கிறோம். அதனால், ஆண்டின் துவக்கம் என்பது, ஜனவரி, 1ம் தேதி தான் துவங்குகிறது என கொள்வதில் தவறில்லை.
வரவேற்பு
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு நிகரான ஆரவார கொண்டாட்டங்கள், புத்தாண்டிலும் இப்போது நிகழ்கின்றன. புதிய ஆண்டை வரவேற்பதற்காகவும், புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்காகவும், மிக மகிழ்வோடு கொண்டாடும் ஒரு பண்டிகை, ஆண்டின் முதல் நாள் கொண்டாட்டம் தான்!முதல் நாள் இரவே, ஆட்டம், பாட்டம் என, கொண்டாட்டம் துவங்கி விட்டாலும், பெரும்பாலான மக்கள், ஒரு பழக்கத்தைக் கடைபிடித்து
வருகின்றனர்.
முதல் நாள் இரவு, வீட்டில் நிலைக் கண்ணாடி முன், தட்டில் பல வகையான பழங்கள், பணம், காசுகள், நகைகள் போன்றவற்றை, அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவர்.காலையில் துாக்கம் கலைந்து, அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பர்; இதனால், ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என, நம்பப்படுகிறது. இதை, ஆரம்பத்தில் சித்திரைத் திங்கள் முதல் நாள் அன்று தான் கடைபிடித்தனர்.
புது ஆண்டு பஞ்சாங்கம் வாங்கி வந்து, பெரியவர்கள் மூலம் பஞ்சாங்கப் பலனை கேட்பதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது. வாழ்த்துகள் சொல்லிக் கொள்வதிலும், கேக் வெட்டுவதிலும், நாளை முதல் இப்படி தான் என, சபதம் எடுத்துக் கொள்வதிலும் தான், கொண்டாட்டங்கள் இருக்கின்றன என்பது வாடிக்கையாகிப் போனது.
புது ஆண்டு பிறப்பது, நம் வாழ்வை இன்னும் திட்டமிட்டு, கடந்த ஆண்டு செய்த தவறுகளை திருத்தி, வாழ்வை மேலும் சிறப்பாக்கி கொள்வதற்குத் தானே தவிர, இப்படி வரைமுறையில்லாமல் கொண்டாடி மகிழ்வதற்கு அல்ல. ஜனவரி, 1ம் தேதியை, ‘உலக குடும்ப நாள்’ என, அறிவித்து கொண்டாடி வருகின்றனர்.
உலகிற்கு, கூட்டுக் குடும்ப வாழ்க்கையை கற்று தந்தது இந்தியா தான். ஆனால், அந்த அளவிற்கு கலாசாரம், பழமைவாதம் நிரம்பிய இந்தியாவில், குடும்ப உறவுகள் பற்றிய அருமை தெரியாமல், உலக குடும்ப தினம் கொண்டாடும் அளவிற்கு வந்து விட்டோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என, பெரும் கூட்டமாக கடந்த நுாற்றாண்டு வரை வாழ்ந்துள்ளோம்.இப்படி, உறவு முறைகள் தெரியாமல், அவர்களின் அருமையும், வாழ்ந்த வரலாறும் தெரியாமல், இன்றைய இளைய சமுதாயம், நட்புகளும், பழகியவர்களுமே, தங்களுக்கு முக்கியமானவர்கள் என, இருப்பதால் தான், பெரும் சிக்கல்கள் சமூகத்தில் எழுகின்றன.
பல சமூக சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணங்களே, அன்பு, பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், பெரும்பாலான குழந்தைகள் வளர்வதும், முதியோர் இல்லங்கள் அதிகரித்ததும் ஆகும்.
கோவில்களை இரவு, 9:00 மணிக்கு நடை சார்த்தி, அதிகாலை, 4:30க்கு திறக்கும் வழக்கம் என்பது, ஆகம விதிப்படி என்றாலும், அறிவியல்படி நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. இரவு வேளையில், ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால், இப்படி நேரக் கட்டுபாட்டைக் கொண்டு வந்தனர். புத்தாண்டு நாளில், அதுவும், இந்த மார்கழி மாதத்தில், அதிகாலையில் கோவிலுக்குச் சென்று, ஆண்டவனை தரிசிப்பதே நல்லது.
கிறிஸ்தவம்
ஆங்கிலப் புத்தாண்டு என்பது, தமிழர்களால் மட்டுமின்றி, வேறு இனத்தவர்களாலும் கொண்டாடப்படும் முக்கிய நாளாக உள்ளது. ஆனால், ‘ஆங்கிலப் புத்தாண்டு என, ஜனவரி 1ம் தேதியைக் கொண்டாடுவது, கிறிஸ்துவ மதம் தொடர்பானது’ என, சொல்வோரும் உண்டு.ஐரோப்பாவில், கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த நடுக்காலப்பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள், ஆண்டின் ஆரம்ப நாளாக, டிசம்பர், 25 – இயேசுவின் பிறப்பு, மார்ச் 1 மற்றும் 25 – இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு அல்லது உயிர்ப்பு ஞாயிறு போன்ற முக்கிய கிறிஸ்தவ திருவிழா நாட்களைத்தான் தேர்ந்தெடுத்தன.
ஜனவரி, 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறுவதும் மிகத்தவறு. ஆங்கிலேயர்கள் அதைக் கண்டுபிடிக்கவுமில்லை; அதை அமல்படுத்தவும் இல்லை. அதுபோல், ஏன் இந்த தேதியை ஆங்கிலப் புத்தாண்டு என்று கூற வேண்டும் எனச் சிந்திக்கவோ அல்லது எதிர்கேள்வி கேட்பதோ கூட இல்லை.’இந்நாளை ஒரு விழாவைப்போல் கொண்டாடுவது, இந்தியாவின் வேத கலாசாரம் கிடையாது’ என்றும் கூறி வருகின்றனர்.
இப்படி செய்வது, இந்து தர்மத்திற்கு எதிரானது என்ற வாதத்தை ஏற்க இயலாது. அதே நேரத்தில், நம் பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு எதிராக, அந்தக் கொண்டாட்டம் அமைந்துவிடக்கூடாது என்பதையும், மனதில் கொள்ள வேண்டும்.எந்த கருத்துகள் எப்படி இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், நம் மக்கள், கோவில்களில் காத்திருந்து, புது ஆண்டில் இறை தரிசனத்தை பெற, கூட்டம் கூட்டமாக செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
விருப்பம்
நகைக்கடை, ஜவுளிக்கடை, சினிமா தியேட்டர்கள், கடற்கரை போன்ற இடங்களில், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் முடியாது. எந்த வசதியும் இல்லாத கிராமப்புறங்களில் கூட, புத்தாண்டு அன்றைக்கு மட்டுமாவது, கோலாகலமாக இருப்பதை, மக்கள் விரும்புகின்றனர்.
கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், கிராமத்திலும், நகரத்திலும் கூட, கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என, நன்றாகவே இருந்தது.
ஆனால், மாறி வரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி, இவற்றின் தாக்கம், மெல்ல மெல்ல நம்மையும் மாற்றி விட்டது என்றே சொல்லலாம்.ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகள், தங்களது சொந்த காலண்டர்படி உள்ள ஆண்டு பிறப்பையும், சிறப்பாக கொண்டாடுகின்றன; ஆங்கில புத்தாண்டையும் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்.
எனவே, ஜனவரி 1ம் தேதியை, போதையோடு, நண்பர்களோடு கொண்டாடுவதை நிறுத்தி, ஏதாவது ஒரு உருப்படியான காரணத்துடன், உற்றார் உறவினர்களுடன், குடும்பத்துடன் நாம் கொண்
டாடுவதுடன், நம், சொந்த புத்தாண்டு தினத்தையும் கொண்டாட முயற்சிக்க வேண்டும்.
வருட துவக்கத்தில் நல்லது ஒன்றை தீர்மானமாக எடுத்து, நம்முடன் இருக்கும் தீயது ஒன்றை விட்டு விட வேண்டும். நாம் நல்லவற்றை யோசித்து, நல்லவற்றை செய்தால் மட்டுமே, இது சாத்தியப்படும் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாள் இரவு, வண்ணமய கொண்டாட்டம், பலரது வாழ்க்கையை இருட்டாக்கி விடாமல் அமைத்துக் கொள்வது அவசியம்.
எவ்வாறு கோள்களின் இயக்கம், அதன் சுற்றுப்பாதையை விட்டு விலகுவதில்லையோ, அதுபோல், மனிதனின் வாழ்வானது, சமூகத்தை சார்ந்தே அமையும். அச்சமூகத்துடனான மனிதனுடைய உறவு பலப்பட, பாலமாக அமைவது, அன்பு மட்டுமே.
அதற்கு, ஒவ்வொரு மனிதனும், மானுட சமுத்திரத்தில் ஐக்கியமாவதால் மட்டுமே சாத்தியப்படும். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை, நாம் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், ஏழைகள் என, பகிர்ந்து கொள்வதாக தீர்மானித்துக் கொள்ளலாமே. நம் சந்தோஷம், நம்முடன் மட்டும் முடிந்து விட்டால், அதில் எந்த ஒரு திருப்தியும் இல்லை. நம் மகிழ்வு, மற்றவர்களுக்கும் பகிரப்பட வேண்டும்; அதுதான் உண்மையான மகிழ்வு என்பது, எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்.
அதனால் தான், ஜனவரி, 1ம் தேதியை, ‘உலக குடும்ப நாள்’ என தீர்மானித்து, அன்று பகிர்தலுக்கும், அமைதிக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர்.
எந்த சிறப்பு தினம் என்றாலும், குடும்பத்தில், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதையே, நம் மக்கள் விரும்பினர்.குடும்பத்துக்குள் பிரச்னைகள் இருக்கலாம்; ஆனால், காட்டிக்கொள்ள விரும்பியதில்லை. கொண்டாட்டம் என்பது வெளியில் கொண்டாடுவது மட்டுமில்லை என்பதை உணர வேண்டும். ஒரு குடும்பம் என்பது, சண்டை சச்சரவோடு இருக்கும்; ஆனால், பாகுபாடு இருக்காது. ஷாப்பிங் மால், பார்ட்டி கிளப், தியேட்டர், பார்க், பீச் இதையெல்லாம் தாண்டி, நிறைய சந்தோஷங்களையும், நன்மைகளையும் கொண்டாட, குடும்ப வாழ்க்கையை நினைவூட்டும் தினம், இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குடும்ப மரம்
‘பேமிலி ட்ரீ’ எனப்படும், ‘குடும்ப மரம்’ என்பது, குடும்ப நபர்களின் பரம்பரையை குறிக்கும் அட்டவணை. இதை கொடி வழி என்றும் சொல்லலாம்; இது, மரத்தின் அமைப்பை, தலைகீழாக, மூதாதையர் முதல், பேரன் வரை பரம்பரை நபர்களின் குடும்ப மூலத்தின் வரலாற்றை காட்டுகிறது.இதில் குடும்ப நபர்களின் பெயர், புகைப்படம், பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய தேதி மற்றும் தொடர்பு குறிப்புகள் இருக்கும். இதை, தாய்வழி உறவு முறை, தந்தைவழி உறவு முறை, கணவன், மனைவி, மகன், மகள் மணவழிக் குடும்பம் என, உறவு முறைகளை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
ஒருவரது தாய், தந்தை, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரர் ஆகியோர், உயிரியல் முறையில் தொடர்பானவர்கள்; இவர்களுடைய உறவுகள், ரத்த உறவு எனப்படுகிறது. ‘உலக குடும்ப தினம்’ ஆண்டுதோறும் ஜனவரி 1ம் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.இன்று அமைதியையும், மகிழ்ச்சியையும், உறவுகளோடு, நட்புகளோடு பகிர்ந்து கொள்ளவதற்கான நாளாக, இது அமைந்துள்ளது. இன்று, அன்பானவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து, உணவை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வர்.
முக்கியமாக, உணவு தேவை என்ற நிலையில் இருக்கும் மக்களுடன், அதை பகிர்ந்துண்டு மகிழ்வர். அமைதியையும், மகிழ்ச்சியையும், மணி ஓசையை எழுப்பியும், முரசொலித்தும், இந்த உலகை பத்திரமாய் காப்பதாய் கொண்டாடுவர். இந்த ஒரு நாள் உலக குடும்ப தினம் மூலம், உலகம் முழுவதும் அமைதியாய் இருக்க பிரார்த்திப்பர்.
வாரியாரின் புத்தாண்டு சிந்தனை
உழைப்பால் உயர்ந்திடுங்கள்!
* வாழ்வில் உயர்ந்திட வேண்டுமானால், தேனீ போல உழைக்கும் மனிதராக மாறுங்கள். சுறுசுறுப்புடன் எப்போதும் நற்செயலில் ஈடுபடுங்கள்

* சிரித்த முகத்துடனும், நேர் கொண்ட பார்வையுடனும் நடை போடுங்கள். இனிமையும், நன்மையும் தரும் சொற்களையே பேசுங்கள்

* இளகிய தங்கத்தில், நவரத்தினம் ஒட்டிக் கொள்வதைப் போல, மனம் பக்தியில் ஒன்றினால், இறையருள் கிடைத்து விடும்

* குடும்பம் எனும் மரத்தில், மனைவி வேராகவும், கணவன் அடிமரமாகவும் இருக்க வேண்டும். அதில், அன்பு எனும் இலைகள் வளர்ந்து, ஒற்றுமை எனும் கனியைப் பறிக்க வேண்டும்

* கீழ்நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கி எரியும் தீப்பிழம்பு போல, எந்த சூழலிலும், உயர்ந்த சிந்தனை மட்டுமே உள்ளவராக செயல்படுங்கள்

* சுறுசுறுப்புடன் பணியாற்றுங்கள். வளைந்து நிமிர்ந்து வேலை செய்வதால், உடல் பலத்தோடு, அறிவுத் தெளிவும் உண்டாகும்

* நல்லவர்களைத் தேடிச் சென்று பழகுங்கள்; அவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை, வாழ்வில் கடைபிடியுங்கள்.

* குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, காலை அல்லது மாலையில் கடவுளைத் தினமும் வழிபடுவதால், எல்லாவித நன்மையும் உண்டாகும்

* ஆடம்பர வழிபாட்டை கடவுள் விரும்புவதில்லை; பக்தியோடு கொடுக்கும் எளிய பூவும், நீருமே அவருக்குப் போதுமானது.
செய்து தான் பார்ப்போமே!

இது ஜோசியம் இல்லை; இந்த ஆண்டு முழுவதும் நாம் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்; பரிகாரங்கள். செய்து தான் பார்ப்போமே…

மேஷம் – பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்
ரிஷபம் – ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்
மிதுனம் – தானத்திலேயே சிறந்த மற்றும் அவசியமான ரத்த தானம் செய்யுங்கள்
கடகம் – வயதானவர்களுக்கு கம்பளி வாங்கித் தாருங்கள்
சிம்மம் – ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்;கூடவே அன்னதானம் செய்யுங்கள்
கன்னி – கட்டட தொழிலாளர்களுக்கு முடிந்த வரை உதவுங்கள்
துலாம் – முதியோர் இல்லங்களுக்குச் சென்று, இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
நண்பர்கள், உறவினர்களையும் உதவி செய்ய வையுங்கள்
விருச்சிகம் – அருகிலுள்ள கோவில் திருப்பணிகளில் பங்கேற்று, முடிந்த பொருள்
உதவியும் செய்யுங்கள்
தனுசு – கோவில் உழவாரப்பணிகளில் ஈடுபடுங்கள்
மகரம் – சாலையோரம் வாழ்பவர்களுக்கு ஆடைகள், உணவு பொருள் வாங்கிகொடுங்கள்.
கும்பம் – மரக்கன்று நட்டு, அவற்றை பராமரியுங்கள்
மீனம் – புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு உங்களால்முடிந்த சேவையை செய்யுங்கள்.

இந்த ராசிக்காரர்கள் இவற்றை மட்டும்தான் செய்ய வேண்டும் என கணக்கிடாமல், எல்லாருக்கும் நல்லவற்றை செய்ய ஆரம்பிப்போம். நாளும், கோளும் நல்லதாகவே நமக்கு அமையும்.

ஜனவரி பெயர் காரணம்

ஜனவரி என்ற பெயர், ரோமானிய மன்னர் ஜனசின் பெயரிலிருந்து வந்தது. ரோமன் இதிகாசத்தில் துவக்கங்களின் கடவுளாக காணப்பட்ட, ஜானஸ்லானுரியஸ் என்ற கடவுளின் பெயரே, ‘கிரிகோரியன்’ காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்படுகிறது.

Source….www.dinamalar.com

Natarajan

 

வீண் செலவு இல்லாத ஒரு திருமணம் …! Waste less Destination Wedding Plan …

 

1.. என் ஆதரவு ” டெஸ்டினேஷன் வெட்டிங் பிளானுக்கு “
2. பழக்கம் வழக்கம் என்று சொல்லி லட்சம் பல செலவு செய்து தங்கள் பகட்டு , பணம்
   செல்வாக்கு என்ன என்று ஊருக்கு காட்டும் வழக்கமான திருமணத்தில் மணமகனும்
   மணமகளும் வெறும் காட்சி பொம்மைகளே ! அக்னி சாட்சியாக நடக்கவிருக்கும்
   மண நாளுக்கு முந்தைய தினமே இந்த இரண்டு ” பொம்மைகளை ” வைத்து அவர்
   பெற்றோர்  நடத்தும் “பொம்மலாட்டம்” அவர் செல்வாக்கை வெளிச்சம் போட்டுக்
   காட்டும் ஒரு விளம்பர படம் ! ஆதலால் , என் வாக்கு “வேஸ்ட் லெஸ்  டெஸ்டினேஷன்
   வெட்டிங் பிளானுக்கு ” மட்டுமே !
3. இன்றைய திருமணத்தில் தவிர்க்கப் பட வேண்டிய குறைகள் சில ..
   1. ஆடம்பர திருமண அழைப்பிதழ்
   2. ஆடம்பர ஆடை  அணிகலன்கள்
   3. ஆடம்பர விருந்து
   4. பகட்டு மேடை அலங்காரம் , மின் விளக்கு அலங்காரம்
   5. மெல்லிசை நிகழ்ச்சி  என்னும் பெயரில் திருமண மண்டபமே அதிரும்
      அதிர்வலைகள் !
   6.வாழ்த்து கூற விரும்பும் விருந்தினர் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ..
     வயது முதிர்ந்த தம்பதியரும் வரிசையில் நிற்கும் அவலம் !
   பின்பற்றப் பட வேண்டிய நிறைகள் சில …
   1. மங்கள  இசை
   2. மென்மையான மண மாலைகள்
   3. வேத மந்திர  உச்சாடனம் … அவரவர்  மதம், குல வழக்கம்  மனதில் கொண்டு
   4. ஹோமம் , அக்னி சாட்சி …அவரவர்  மதம் , குல வழக்கப் படி
   5. அவரவர் குடும்ப பெரியவர் மற்றும் முக்கிய உறவினர் முன்னிலை …
   6. எளிய சிறப்பு உடை …எளிமையான குடும்ப விருந்து …
4.  வரவேற்பு , இரவு விருந்து  என்னும் பெயரில் வீணடிக்கப்படும் வறட்டு ஜம்ப செலவு
    பணத்தை , “வருங்கால சேமிப்பு வைப்பு நிதியாக ” மாற்றி மணமக்களுக்கு திருமண
    பரிசாக கொடுக்கலாமே !
5. என்னுடைய புதிய ” டெஸ்டினேஷன் வெட்டிங் ” மற்றும் ” வேஸ்ட் லெஸ் வெட்டிங் “
   திட்டம் .
   1. மணமகன் , மணமகள் வழியில் நீண்ட  திருமண வாழ்க்கை  ..பொன் விழா
      வைர விழா கண்ட முதிய அனுபவம் மிகுந்த தம்பதியர் இல்லத்தில்
      நடக்க வேண்டும் ஒரு ” டெஸ்டினேஷன் வெட்டிங் ” .
   2. இலட்சிய தம்பதியர் முன்னிலையில் அவர்கள் ஆசியுடன் நடக்கும்
      ஒரு திருமணம் புது மண தம்பதிக்கு தாங்களும்  அந்த
      லட்சிய தம்பதி போல வாழ்க்கை நடத்திக் காட்ட வேண்டும் என்னும்
      ஆசை விதையை அவர் மனதில் விதைக்கும் .
   3. இல்லத்தில் நடக்கும் இனிய மண விழா என்பதால் முக்கிய உறவுகள்
      தவிர மற்றவருக்கு இணைய தள நேரலை மூலம் திருமண நிகழ்வு
      மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளப் படும் .
    4. திருமண வாழ்த்து சொல்ல விரும்பும் மற்ற சுற்றமும் , நட்பும்
       திருமண இணைய தளத்தில் தங்கள் மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்
      பதிவு செய்வர் .
    5. திருமண பரிசு கொடுக்க விரும்பும் அன்பர்கள் திருமண இணைய
       தளத்தில் அறிவிக்கப் பட்டு உள்ள  மணமக்களின் வங்கி கணக்கில்
       செலுத்த அன்பு வேண்டுகோள் … பரிசு காசோலையும் அனுப்பும் வசதி !
    6. பரிசு விபரமும் திருமண இணைய தளத்தில் பதிவு செய்யப் பட்டு விடும் .
    7. வாழ்த்துக்கும் , பரிசுக்கும் நன்றி இணைய தளத்திலோ அல்லது
       அவரவர் மின் அஞ்சல் மூலமாகவோ  தெரிவிக்கப்படும் .
    8. இனிய மண நாள் நிகழ்வு புகைப் படங்கள் தொகுப்பு  மற்றும்
       ஒளிநாடா (வீடியோ ) திருமண இணைய தளத்திலேயே பதிவேற்றப்பட்டு
       வேண்டும் சமயம் பார்த்து மகிழவும்  மற்றும் சுற்றம் நட்புடன்  பகிர்ந்து
       கொள்ளவும் வழி வகுக்கும் .
    9. இந்த மாதிரி ” டெஸ்டினேஷன் மற்றும் வேஸ்ட் லெஸ் வெட்டிங் ” மணமக்களின்
       சந்ததியருக்கும் ஒரு நல்ல முன் மாதிரி ஆகும் !
    10. ஒரு நல்ல ஆரம்பம் …அதுவே அந்த குடும்பத்தின் பழக்கமாகவும்
        வழக்கமாகவும் மாறிட இது ஒரு நல்ல வாய்ப்பு !
The above input sent by me to the Tamil Daily Dinamani  in response to a Contest announced by them a fortnight back  has secure Second Prize in the contest.
Source …www.dinamani.com dated 27th Dec 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…” சேர்த்து வைத்த கனவு “

 

சேர்த்து வைத்த கனவு…
———————–
காணலாம் கனவு …நீ ..தம்பி.! சேர்த்து வைக்க மட்டும் அல்ல
உன் கனவு ! கனவு நனவாக நீ கட்ட வேண்டும் ஒரு
படிக்கட்டு ..திட்டமிட்டு நீ தாண்டவேண்டும் படிகள் அத்தனையும் !
பெரிதாக யோசி என்று சும்மாவா சொன்னார்கள் நம்
ஆன்றோர்  சான்றோர் ! வானமே உனக்கு எல்லை !
விண்ணில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டிய  நீ
இந்த மண்ணில் ஒரு வட்டத்தில் மட்டும் சுழல வேண்டுமா ?
தன் கூடுதான் தன் உலகம் என்று ஒரு பறவை நினைத்தால்
இந்த மண்ணிலிருந்து விண்ணில்  அது பறப்பது எப்படி ?
சிறகடித்து பறக்கும் அந்த பறவையைப் பார்த்து நீ
கற்றுக்கொள்  தம்பி..இந்த மண்ணில் மட்டும் அல்ல
விண்ணிலும் வெற்றிக் கொடி நாட்டப் பிறந்தவன் நீ என்று !
உன் கனவு எல்லாம் நனவாக வேண்டுமே அல்லாமல்
சேர்த்து வைத்து மறக்க அல்ல  உன் கனவு !  பார்த்து
நடக்க வேண்டும் தம்பி நீ ! கடக்க வேண்டும் தடைக்
கற்களையும் உன் வெற்றிப் படிகளாக்கி !
வானமே உனக்கு எல்லை …இல்லை உனக்கு
எதுவும் தொல்லை என்று நடுவில் !
My Tamilkavithi in www. dinamani.com  dated 10th Sep 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை …” நீதியைத் தேடி …” !!!

 

நீதியைத் தேடி …
——————
 ஒரு நதியின் நீருக்காக நீதி  தேடி ஓடிய எங்கள்
 ஓட்டம் ஒயவில்லயே இன்னும் ! மீண்டும் ஒரு
 ஓட்டம் ..நாங்கள் ஓடுகிறோம் உன்னைத்
 தேடி நீதி தேவதையே ! இந்த ஓட்டம்
 எங்கள் நாட்டு மாட்டின் ஓட்டத்தைத்
 தடுக்க நினைக்கும் ஒரு கூட்டத்தின்
 கொட்டம் அடக்க !…ஒரே குரலில்
 கேட்கிறோம் ஒன்றே ஒன்று மட்டும்
 உன்னிடம் நீதி தேவதையே !
 “இழைக்கப்பட்ட அநீதி அழிக்கப்பட்டால்
  கிட்டும் ஒரு சரியான நீதி எங்களுக்கு “
 நீதி தேடி மீண்டும் உன் கதவு தட்டும்
 காலம் இனி வேண்டவே வேண்டாம்
 எங்களுக்கு நீதி தேவதையே !
 நம்புகிறோம் நாங்கள் உன்னை !
 வெல்வது நீயாக இருக்கட்டும் ..உன்
 வெற்றியில் தழைத்து செழிப்பது எங்கள்
 நாட்டுக் காளை இனமாகட்டும் ! எங்கள்
 ஆவினம் குலம் தழைக்க நீ பெறும் வெற்றி
 எங்கள் தமிழ் தாய்  உள்ளம் குளிரும் வெற்றி !
 நீதி தேடி நாங்கள் ஓடியது   போதும் ! நியாயம்
 இருக்கும் இடம் தேடி நீ ஓடி வா நீதி தேவதையே !
K.Natarajan

வாரம் ஒரு கவிதை…” சுனாமி சுவடுகள் ” …

 

ஆழிப்  பேரலை  இங்கு பதித்த சுவடுகள் என்றும் 
அழியாத வடுக்கள் அன்றோ ! ஆண்டு பன்னிரண்டு 
ஆனாலும் மறக்க முடியுமா  அந்த நாளை இன்றும் ?
சுனாமியின் சுவடுகளில் கால் பதித்து  மரம் பல பலி 
கொண்டு ஒரு நகரின் வாழ்வு  முடக்கி " வார்தா "
ஆடிய ஆட்டம் ஆழிப் பேரலையின் மற்றுமொரு 
அவதாரமா ?  பஞ்ச பூதங்கள் வரிசை கட்டி கொஞ்சமும் 
இரக்கம் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக   அசுர ஆட்டம் போடுவது  
ஏன்  இந்த இசை  விழா மாதத்தில் மீண்டும்  மீண்டும் ?
வசை பாடவில்லை நான் உங்களை பஞ்ச  பூதங்களே! 
அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உங்கள் மீது !
எங்களைக் காக்கும் தாய் அல்லவா நீங்க ...பிள்ளைகள் 
எங்களை நீங்க தண்டித்தது போதும் ...உங்க அடிகளின் 
வடுக்கள் கட்டாயம் தடுக்கும் எங்களை உங்கள் கண்டிப்பான 
நெறி முறை  விதி முறை  மீறாமல் இனிமேல் ! நம்புங்க எங்க வாக்கை !
நம்பி எங்களை வழி நடத்துங்க ஒரு தடங்கல்  இல்லா 
பாதையில் நாங்கள்   எங்கள் பாத  சுவடு பதிக்க

Natarajan

www.dinamani.com ---26th Dec2016

 

படித்து ரசித்தது ….நீங்களும் படித்து ரசிக்க …!

 

மீனாட்சி அம்மாள்: சமையல் குறிப்புகளின் முன்னோடிக் கலைஞர்!

samayal_3062043f

இது என்ன அநியாயம்? சமையல் கலையைப் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்ள வேண்டுமா? சமையல், பெண்களின் இயல்பான குணங்களில் ஒன்று என்றுதானே நினைத்திருந்தோம். சமையல் தெரியாத பெண்களும் இருக்கிறார்களா என்று அதிர்ந்துபோனார்கள் அன்றைய மக்கள். 70 ஆண்டுகளுக்கு முன்பு சொப்பு வைத்து விளையாடும் பருவத்திலேயே சிறுமிகள், சமையலைக் கற்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிச் சமையலைக் கற்றவரில் ஒருவர்தான் மீனாட்சி அம்மாள்.

19 வயதில் திருமணம். 22 வயதில் கணவரை இழந்தார். தனியாளாகக் கைக்குழந்தை, மச்சினர், மாமியார் என்று குடும்பத்தைப் பராமரித்துவந்தவர், சமையலிலும் பிரமாதப் படுத்தினார். மீனாட்சி அம்மாளின் கைப்பக்குவத்துக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் இருந்தது. இந்தியாவின் வெவ்வேறு பாகங்களில் பரவியிருந்த அவரது உறவினர்கள், மீனாட்சி அம்மாளிடம் சமையல் குறிப்புகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் சளைக்காமல் எழுதிக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

இவரது உறவினர் கே.வி.கிருஷ்ண சாமி ஐயர், இப்படி ஒவ்வொருவருக்கும் சமையல் குறிப்பு எழுதிக் கொடுப்பதற்குப் பதில், ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் எல்லோருக்கும் பயன்படுமே என்று ஆலோசனை வழங்கினார். மீனாட்சி அம்மாளும் புத்தகம் எழுதினார். சமையல் புத்தகம் என்றதும் பலரும் இதை யார் வாங்கப்போகிறார்கள் என்று கிண்டல் செய்தார்கள். பதிப்பகங்கள் எதுவும் புத்தகம் வெளியிட முன்வரவில்லை. தானே புத்தகத்தைக் கொண்டுவர முடிவு செய்தார் மீனாட்சி அம்மாள். தன் நகைகளை விற்றார். தானே புத்தகத்தைப் பதிப்பித்தார்.

1951-ம் ஆண்டு தமிழின் முன்னோடி சமையல் புத்தகம், ‘சமைத்துப் பார்’ வெளிவந்தது. புத்தகத்துக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று மீனாட்சி அம்மாளே எதிர்பார்க்கவில்லை. புத்தகம் குறித்துப் பலரும் சிலாகித்துப் பேச ஆரம்பித்தனர். விற்பனை பெருகியது. திருமணமாகி வெளிநாடு செல்லும் பெண்கள், விசாவை மறந்தாலும் மீனாட்சி அம்மாள் புத்தகத்தை மறக்கவில்லை. ஐந்தே ஆண்டுகளில் தன் புத்தக வருமானத்தை வைத்து, மயிலாப்பூரில் ஒரு வீட்டை வாங்கினார் மீனாட்சி அம்மாள்.

மிளகாய்த் தூள், சாம்பார்ப் பொடி என்று சொன்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்குவத்தில் வைத்திருப்பார்கள். அவற்றால் மீனாட்சி அம்மாளின் சுவையைக் கொடுக்க முடியாது. அதனால் பொடி வகைகள் எல்லாவற்றையும் சேர்த்து அடுத்த புத்தகத்தைக் கொண்டுவந்தார். அதற்கும் அமோக வரவேற்பு! விழாக்கள், திருமணம் போன்றவற்றுக்கு எப்படித் தயாராவது, பண்டிகைக் கால உணவுகள் போன்ற பல விஷயங்களை வைத்து, அவர் மறைவுக்குப் பின்பு மூன்றாவது புத்தகம் வெளிவந்தது.

அதற்குப் பிறகு சமையல் புத்தகங்களைப் பலரும் எழுத ஆரம்பித்தனர். விதவிதமான சமையல் புத்தகங்கள் வெளிவந்தன. சைவச் சமையல், அசைவச் சமையல், வட்டாரச் சமையல், கிராமத்துச் சமையல், மாநிலச் சமையல், அயல்நாட்டுச் சமையல், மைக்ரோவேவ் சமையல், சிறுதானியச் சமையல் என்றெல்லாம் தினுசு தினுசாக உணவு வகைகள் உருவாகிக்கொண்டும், புத்தகங்கள் வெளிவந்துகொண்டும் இருக்கின்றன.

இன்றளவும் ‘சமையல் புத்தகமா?’ என்று இளக்காரமாகப் பார்க்கப்பட்டாலும் விற்பனையில் முதலிடம் சமையல் புத்தகங்களுக்குத்தான். சமையல் குறிப்புகளை இணைப்புப் புத்தகங்களாக வழங்கும்போது பத்திரிகைகளின் விற்பனை கணிசமாக அதிகரிப்பதால் சமையலுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துவருகிறார்கள். தொலைக்காட்சி, யூ டியூப், ஃபேஸ்புக் என்று சமையல் கலை அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்துவருகிறது. அதே போல மீனாட்சி அம்மாளின் புத்தகங்களும் மாற்றத்தை ஏற்று, நவீனமாகிக்கொண்டே வருகின்றன.

மீனாட்சி அம்மாள் காலத்தில் கூட்டுக் குடித்தனமாக இருந்தனர். ஒரு வீட்டில் ஏராளமானவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்ப அளவுகளை அவர் கொடுத்திருக்கிறார். கொட்டைப் பாக்கு அளவு புளி, குழிக் கரண்டி எண்ணெய், ஓர் ஆழாக்கு அரிசி போன்ற பதங்கள் எல்லாம் இப்போது வழக்கில் இல்லை. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கான அளவுகள், தற்காலத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்தி, புத்தகங்களை நவீனப்படுத்தி, கொண்டுவந்திருக்கிறார் அவரது பேத்தி ப்ரியா ராம்குமார்.

“சமைத்துப் பார் ஆங்கிலத்தில் வெளிவந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ், ஆங்கிலம் தவிர, மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் புத்தகங்கள் கொண்டுவந்தோம். நாங்கள் விளம்பரம் எதுவும் செய்வதில்லை. வாங்கிப் பயன்படுத்தியவர்களின் வாய்மொழி மூலமாகவே 65 ஆண்டுகளாக விற்பனையில் முன்னிலையில் இருக்கின்றன. இதுவரை 45 பதிப்புகளைக் கண்டுவிட்டன. அடுத்து மின்புத்தகங்களாகக் கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறோம்” என்கிறார் ப்ரியா ராம்குமார்.

“சித்திரம், சிற்பம், சங்கீதம் போல சமையலும் உயரிய கலை. பல வண்ணங்களைக் குழைத்து, அற்புதமான சித்திரத்தைத் தீட்டுவது போல பல பொருட்களைச் சேர்த்து, பக்குவப்படுத்தி, ஒப்பற்ற உணவுப் பண்டத்தை உருவாக்குகிறார்கள் சமையல் கலை வல்லுனர்கள்” என்று சொன்ன மீனாட்சி அம்மாள், சமையல் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பதிப்பாளராwகவும் வெற்றி பெற்று, பிறருக்கும் வழிகாட்டியிருக்கிறார்.

மனிதர்களுக்குப் பசியும் ருசிக்கான தேடுதலும் இருக்கும் வரை சமையல் கலைக்கான தேவையும் இருந்துகொண்டே இருக்கும். காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டுவரும் மீனாட்சி அம்மாளின் புத்தகங்கள், இன்னும் பல தலைமுறை களுக்குச் சமையல் கலையைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்!

Source….S.Sujatha…in http://www.tamil.thehindu.com

Natarajan

ஏரி காத்த அருண்…….!!!

e_1475133384

சென்னை மாம்பலம்வாசிகளுக்கு மேட்லி சாலை சப்வேவை ஒட்டி இருக்கும் கோதண்டராமர் கோயில் குளம் வெகு பிரபலம். அதன் புகழுக்கு தன் அசுத்தமும் ஒரு காரணம். இப்போதுபோய் பாருங்கள். குப்பைகளும் கழிவுகளும் நீக்கப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு, திடீரென்று புதுப்பொலிவோடு புனிதமும் காக்கப்பட்டுள்ளது. இந்த அசத்தல் மாற்றத்துக்கு அசல் காரணம், 26 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி. கூகுள் நிறுவன வேலையை விட்டுவிட்டு ஏரி, குளங்களைக் காப்பதில் ஒன்பது வருடங்களாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார் அருண். இதற்கெனவே ‘என்விரான்மென்டலிஸ்ட் பௌண்டேஷன் அஃப் இந்தியா’ என்ற அமைப்பை நிறுவியுள்ளார். அவரிடம் பேசினோம்:

மொத்தம் எத்தனை ஏரி, குளங்களை மீட்டிருப்பீர்கள்?
சென்னை, கோவை, ஹைதராபாத், தில்லி, புதுச்சேரி ஆகிய ஊர்களில் மொத்தம் 39 ஏரிகளையும் 41 குளங்களையும் சுத்தப்படுத்தி இருக்கோம். இதை நான் மட்டுமே செய்யலை. என்னோட கிட்டத்தட்ட 900 வாலண்டியர்கள் இருக்காங்க. அவங்கதான் எல்லாத்தையும் செய்யறாங்க…

எப்படி இதையெல்லாம் ஆரம்பிச்சீங்க?
சின்ன வயசிலேர்ந்தே பறவைகள் மீது ஆர்வம் அதிகம். ஆந்திரா பூர்வீகம். ஆனால், சென்னை முடிச்சூரில்தான் வளர்ந்தேன். கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் அழகைப் பார்த்து வளர்ந்தவன். இதற்குக் கீழ்க்கட்டளை ஏரி தான் நீராதாரம். ஏரி நிறைந்து வழியும்போது ஏகப்பட்ட பறவைகளும் மீன்களும் ஆமைகளும் கண்ணில் படும். சின்ன வயதில் பார்த்த காட்சிகள் தற்போது இல்லை. ஏரி இருந்த இடத்தில் குப்பைகள் மண்டிக் கிடக்கின்றன.
இதைச் சுத்தப்படுத்தி மீண்டும் எழில் கொஞ்சும் ஏரியாகப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இயற்கை ஆர்வம் என்னும் முளைவிட்டது. ஹைதராபாத்துல கூகுள் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப்பவே ஒரு ஏரியைத் தூர்வாரினோம். அப்புறம் அதையே ஏன் எல்லா இடங்களிலேயும் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. வேலையை விட்டுட்டு நண்பர்களின் உதவியோடு இதைச் செய்யறேன்.

எப்படி திட்டமிடறீங்க?
ரொம்ப மோசமா இருக்கற ஏரி, குளங்களையோ, ஆக்கிரமிப்பு, கேஸுன்னு இருக்கக்கூடிய இடங்களையோ தொடறதில்லை. தூர்வாரி கிளீன் செஞ்சா காப்பாத்த முடியும்னு தோணக்கூடிய ஏரி, குளங்களை எடுத்துக்கறோம். அதுவும் அந்த நீர்நிலைகளைச் சுத்தி இருக்கிற மக்களே எங்ககிட்ட கேட்டாங்கன்னா உடனடியா எடுத்துக்கறோம்.
முதல்ல நேரா போய்ப் பார்த்துட்டு, என்னவிமான வேலைகள் செய்யணும்னு அசெஸ் பண்ணுவோம். அப்புறம், எங்களோட ஃபேஸ்புக் பேஜ்ல, வெப்சைட்டுல, மொபைல் ஆப்கள்ல புதன்கிழமை தோறும் விவரங்களைப் போட்டுடுவோம். யார் யாரெல்லாம் ஆர்வமாக இருப்பாங்களோ, அவங்க எல்லாரும் அந்தந்த ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க.

வாலண்டியர்களுக்கு என்ன வசதி செய்து தர்றீங்க?
ஒண்ணுமே இல்ல. விருப்பப்படறவங்க தங்களோட சொந்தச் செலவுல நேரே ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க. அவங்களுக்கு முகத்துல போட்டுக்கிற மாஸ்க், கிளவுஸ், சுத்தப்படுத்தத் தேவையான கருவிகள்தான் நாங்க கொடுக்கறோம். உள்ளூர் அதிகாரிகள் கிட்ட சொல்லி, சுத்தப்படுத்தத் தேவையான பர்மிஷனை வாங்கறது மட்டும்தான் எங்க பொறுப்பு.
காலையில் ஏழு மணியிலேருந்து பதினோரு மணி வரை வேலை, பப்ளிசிட்டி இல்லை, சின்சியரா, கௌரவம் பார்க்காமல், சுத்தமான சேவை மனப்பான்மையோட வர்றவங்க மட்டும்தான் இங்கே இருக்காங்க.

யாரெல்லாம் ஆர்வம் காட்டறாங்க?
நிறைய பேருக்கு இதுபோன்ற வேலைகளில் ஈடுபடணும்கற ஆசை இருக்கு. ஸ்கூல், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வராங்க; காக்னிஸண்ட், போர்டு நிறுவன ஊழியர்கள் வராங்க, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வராங்க, நம்ம ஊர், நம்ம தண்ணீர், நாமதான் இதைக் காப்பாத்தணுங்கற உத்வேகத்தோட வருவாங்க. பல பேர், வெளியூர்லேருந்தெல்லாம் கூட வந்து வேலை செய்வாங்க. அவங்களுக்குள்ள அப்படியொரு நட்பும் பந்தமும் ஏற்பட்டுப் போச்சு. ஒவ்வொரு ஸ்பாட்லேயும் சுமார் நாற்பது முதல் ஐம்பது பேர் கூடிடுவாங்க.

வெளியூர், வெளி மாநிலங்கள்ளேயும் வேலை செய்றீங்களா?
ஆமாம், முதல்ல, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஒரே ஒரு ஏரி அல்லது குளத்தை கிளீன் செய்யற வேலையைப் பார்ப்போம். படிப்படியா, இப்போ ஒவ்வொரு ஊர்லேருந்தும் ஆர்வலர்கள் வந்து எங்களோட இணைஞ்சுக்கிட்டாங்க. இப்ப ஞாயிறு மட்டுமல்லாமல் சனிக்கிழமையும் வேலை செய்யறோம். ஒரு ஊர்ல மட்டுமல்ல, ஒரே சமயத்துல பல ஊர்கள்ல வேலை செய்யறோம். இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கறதே எனக்கு முக்கிய வேலை.

அரசு ரீதியான உதவிகள் கிடைக்குதா?
தாராளமா, இதோ இந்த மாம்பலம் குளத்துல ஏராளமான ஆகாயத் தாமரைச் செடிகள். சென்னை மாநகராட்சிதான் லாரிகள் கொடுத்தாங்க, அவங்க தான் எடுத்துக்கிட்டுப் போனால்க. அதேபோல் பல ஊர்கள்ல பஞ்சாயத்துப் போர்டுகள் உதவியிருக்கு. தலைவர்கள் உதவியிருக்காங்க.

கிளீன் பண்ணிட்டு வந்துட்டா மட்டும் போதுமா?
போதாது. அதனாலதான், உள்ளூர் மக்களுடைய உதவியை நாடறோம். அவங்கதான் தொடர்ந்து குப்பை போடாமலும், அசுத்தங்கள் சேராமலும் பார்த்துக்கணும். அதுக்கு என்ன செய்யணும்ங்கறதையும் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கறோம்.

அடுத்தடுத்த திட்டங்கள்?
ஏற்கெனவே இருக்கிற நகரங்களோடு புதிய ஊர்களிலேயும் ஏரி, குளங்களைச் சுத்தப்படுத்த மக்கள் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. தஞ்சாவூர், வல்லம், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயச் சங்கங்கள் எங்களைக் கூப்பிட்டு இருக்காங்க. அவங்க ஒத்துழைப்போட அங்கே இரக்கிற நீர்நிலைகளைக் காப்பாத்தணும். திருவனந்தபுரம், குறிஞ்சிப்பாடியிலேர்ந்தும் அழைப்பு வந்திருக்கு.

பிரச்னைகளைச் சந்திச்சதில்லையா?
அப்படிச் சொல்லமாட்டேன். அதையெல்லாம் தடைகளா நினைக்கிறதில்ல. பாடங்களா எடுத்துக்கறேன். சமூகத்திலிருந்துதான் மாற்றங்கள் ஏற்படணும். அதுவும் நீர்நிலைகளை அசுத்தப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டியது நம்மோட பொறுப்பு பல பள்ளிகள், கல்லூரிகளுக்கப் போய் இதைப் பற்றிப் பேசறேன். தொண்டர்களின் பலம் கூடக்கூட, இன்னும் பல ஏரிகளையும் குளங்களையும் காப்பாற்ற முடியுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு

ஆர். வெங்கடேஷ்  in http://www.dinamalar.com  based  on  an input from Kalki 

Natarajan

 

படித்து ரசித்தது …” என்னுடன் இருக்கிறார் மகாகவி பாரதி!”

 

TM-6

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆவது நாள் பட்டினப்பாக்கம், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பால் காய்ச்சிக் குடியேறினோம். அடிப்படையில் நானோர் ஓவியன் என்பதால், இல்லத்தின் வரவேற்பறையில் என்னுடைய ஓவியங்கள் அழகுற அமைகின்றன. நான் ஓவியன் என்பதோடு கவிஞனும் என்பதால், வீட்டின் முகப்பில் மகாகவி பாரதியாரின் படத்தை மாட்டுகிறேன்.
புது வீட்டில் குடியேறிய மூன்றாம் நாள் எனக்கோர் வியப்பு! ஆமாம், வீட்டுக்குள் நான் வரைந்த வண்ணப் படங்களும் விழாவில் எடுத்த ஒளிப்படங்களும் சட்டமிட்டு மாட்டியிருக்க, அவற்றை விட்டுவிட்டு, வீட்டின் முகப்பில் அணிசெய்த மகாகவி பாரதியின் படத்திற்குப் பின்புற இடைவெளியில் சிட்டுக் குருவிகள் கூடுகட்டியிருந்தன! அசந்து போனேன் நான்! “”காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடிய கவிஞனின் படத்தின் பின்புற இடைவெளியில் குருவிக்கூடு! அடடா என்ன பொருத்தம்!
இன்னொரு நிகழ்ச்சி… தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒவ்வொரு தளமாக ஏறிச்சென்று கடிதம் கொடுக்க முடியாததால் அஞ்சல் துறையினர், அனைத்து ஊடகங்களின் வாயிலாகவும் ஓர் அறிவிப்பினைச் செய்திருந்தார்கள்:
“குடியிருப்பாளர்கள் அனைவரும் தரைத்தளத்தில், படியேறும் முன்பாகவே, சுவரில் அவரவர்க்கான அஞ்சல் பெட்டிகளைப் பொருத்துதல் நலம் பயக்கும்’ என நயமாகவும் அழுத்தமாகவும் அறிவித்திருந்தார்கள். அதன்படி எங்கள் குடியிருப்பில் இருந்த அனைவரும் அவரவர்க்கான அஞ்சல் பெட்டிகளைச் சுவரில் பொருத்தி விட்டோம்.
ஆச்சரியம் பாருங்கள்! மூன்றாம் நாள். மற்றவர்களின் அஞ்சல் பெட்டிகளை விட்டுவிட்டு, எமது அஞ்சல் பெட்டியில் மட்டும் குருவிகள் கூடு கட்டிவிட்டன! அடடே! எனது பெயரில் “பாரதி’யாரின் பெயரும் இணைந்திருக்கிறதல்லவா! பாரதி என்றாலே குருவிகளுக்குக் கொண்டாட்டந்தான் போலும்! எனக்குச் சிலிர்ப்பாயிற்று. உடனே நான் ஒரு செயலைச் செய்தேன்.
அஞ்சல் பெட்டியின் குருவிக் கூட்டுக்குத் தொல்லை நேராமல் இருக்கவும், அஞ்சல்காரருக்கு வசதியாகவும், அஞ்சல் பெட்டியின் கீழே, ஒரு பையைக் கட்டித் தொங்கவிட்டேன். பெட்டியின் மேற்பகுதியில், ஓர் அட்டையில், “”பெட்டியில் குருவிக் கூடு; அஞ்சலைப் பையில் போடு” என எழுதி மாட்டிவிட்டேன். அதனைப் படித்த அஞ்சல்காரரும் ரசித்துப் புன்னகைத்தார்.
“மகாகவி பாரதி என்னுடன் இருக்கிறார்’ என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன்.2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நானும் என் துணைவியார் திருமதி ராணியும் காசி நகர்ப் பயணம் செல்ல வாய்த்தது. பல இடங்களைப் பார்த்துவிட்டு, 19ஆம் தேதி காலை காசி நகர் போய்ச் சேர்ந்தோம். சுற்றுப் பயணக் குழுவில் எங்கள் பகுதியினர் தங்க வேண்டிய இடம் வேறு. ஆனால், நாங்கள் “அனுமன் காட்’ எனும் தெருவில் உள்ள விடுதியில் வந்து தங்கிவிட்டோம். சுற்றுலா ஏற்பாட்டாளர்களும் “”பரவாயில்லை, இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டனர். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மேல் கங்கையில் நீராடக் கிளம்பினோம்.
வெளியே பக்கத்து வீட்டுத் திண்ணையில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அம்மையார் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம், “”அம்மா! பாரதியார் தன் இளம் வயதிலே காசியிலே இருந்ததா வரலாறுண்டு. அவர் எந்தத் தெருவிலே, எந்தப் பகுதியிலே இருந்தாருன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று பொதுவாகக் கேட்டேன்.
“”தெரியுமே! இதோ, இந்த எதிர்வீட்டில்தான் அவர் இருந்தார். அவரோட ஒன்றுவிட்ட மருமகன்கூட அங்க இருக்கார். டி.என்.கிருஷ்ணன்னு பேரு, போய்ப் பாருங்க” என்று அந்த அம்மையார் கூறியதைக் கேட்டதும் அசந்து போனேன் நான்!
எதேச்சையாக எங்கள் குழு இடம் மாறித் தங்கிடப் போக, அந்த இடத்தின் எதிர் வீடுதான் பாரதியார் தங்கியிருந்த “சிவமடம்’ என்கிற வீடு என்றால்… எப்படி இருக்கும் எனக்கு? “இது ஒரு தற்செயல் நிகழ்ச்சிதான்’ என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அப்படியில்லை; ஆத்மார்த்தமாக பாரதியாரை நேசிக்கும் எனக்கு அப்படிக் கருத முடியவில்லை.
அருவமாக முன்னின்று அவரே எம்மை, அவர் வாழ்ந்த சிவமடத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டதாகவே நம்புகிறேன். ஆமாம், “”என்னுடன் இருக்கிறார் மகாகவி பாரதி!”

Source……….ஓவியக் கவிஞர் அமுதபாரதி in http://www.dinamani.com on Sep 11 2016

Natarajan