ஒன்றல்ல… பல கலாம்கள் உருவாக வேண்டும் : இன்று கலாம் நினைவு தினம்…

 

ஒருவர் சிறந்த ஆசிரியராக, அரசியல்வாதியாக, அறிஞராக, அமைச்சராக, வணிகராக,

விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்றால், முதலில் அவர் சிறந்த மனிதராக இருக்க வேண்டும். நல்ல மனிதனாக இல்லையென்றால், யாரும் என்னவாக இருந்தும்

பயனில்லை.

kalam2

மறைந்த ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், எல்லா வகையிலும் ஒரு சிறந்த மனிதர் என்பதுபோல, ஒரு சிறந்த புத்தகமும் கூட. உலகில் பலரும், இந்தியாவில் கிட்டத்தட்ட

எல்லோரும் படித்திருக்கிற திறந்த புத்தகம் அவர். இந்தியர் ஒருவர் இந்திய மக்கள் அனைவராலும் அறியப்பட்டிருப்பதும், அன்பு பாராட்டப்பட்டிருப்பதுவுமான அரிய மனிதர் என்றால், காந்தியடிகளுக்குப் பிறகு அனேகமாக அப்துல் கலாம் மட்டுமே. அப்துல் கலாமின் குடும்பம் சற்று வசதியான குடும்பம்தான் என்றாலும், பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கலம்

செலுத்துகிற தொழில் நசியவே வறுமை சூழ்ந்து கொள்கிறது. கலாம் அவர்கள் படிக்கவும் வேண்டும், கொஞ்சம் பொருள் தேடவும் வேண்டும் என்ற இரண்டு கடமைகளை ஏற்க வேண்டியதாகிறது. செய்தித்தாள்களை வீடு வீடாக வினியோகிக்கிற வேலை.வெட்கமோ, விரக்தியோ இல்லாமல் வியர்வை சிந்துகிறார். அவருடைய உழைப்பும் தீர்க்க தரிசனமும் அவரை ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும், ஜனாதிபதியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும், தலைமுறை பலவற்றிற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் தன்னை உருவாக்கிக் கொள்ள உதவியுள்ளன. குழந்தைகள் கலாமை கொண்டாடியதற்குக் காரணமே அவர் குழந்தைகளைக் கொண்டாடியது தான். ஜனாதிபதியாக அவர் பணியாற்றியபோது தம் மாளிகையில் சனிக்கிழமை தோறும் ஏறத்தாழ 250 மாணவ மாணவியரைச் சந்தித்து அளவளாவி மகிழ்வார். குழந்தைகளோடு குழந்தையாக குழந்தை மனமே வேண்டும். அது அப்துல் கலாமிடம் நிரம்பவே உண்டு. ஒருமுறை இந்தியாவிலுள்ள எட்டு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி இன மாணவ, மாணவிகளை அவர் சந்தித்தார். ‘நீங்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்கள்’ என்றபோது 9ஆம் வகுப்பு மாணவன் ஸ்ரீகாந்த், ‘நான் ஒரு மாற்றுத் திறனாளி. இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளி ஜனாதிபதியாக நான் அமர விரும்புகிறேன்’ என்றதும், அந்த மாணவனின் நம்பிக்கையைப் பாராட்டி மகிழ்ந்தார் கலாம்.

அவரின் எண்ணற்ற கவிதைகளை நாம் வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஜனாதிபதி மாளிகையில் கவிஞர்கள் பலரை அழைத்து கவுரவித்திருக்கிறார். வாலி, அப்துல் ரகுமான், வைரமுத்து போன்ற பல கவிஞர்கள் அவரோடு கைகுலுக்கியும், அவரது கவிதைகளைக் கேட்டும் மகிழ்ந்துள்ளனர்.கலாம் ஓய்வு பெற்ற பிறகு ஒரு நாள் அவரை டில்லியில் நானும் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கமும் சந்தித்தோம். ‘வெளிச்ச மலர்கள்’ என்ற என் கவிதைத் தொகுப்பை அவருக்குத் தந்தேன். அதில் ஒரு கவிதை,

‘காந்தி மீண்டும்

பிறக்க வேண்டும்,

ராட்டையோடு அல்ல

ஒரு சாட்டையோடு’

இவ்வரிகளைப் பலரும் பாராட்டிய மகிழ்ச்சியில் நானி ருந்தேன். ஆனால் அப்துல் கலாமோ,

‘ராட்டையோடு இருக்கிறவரைதான் அவர் காந்தி… சாட்டை இருந்தால் அவர் காந்தியாக

முடியாது,’ என்று மெல்லிய குரலில் சொன்னபோது அதுவும் எனக்கு சரியாகப்பட்டது. கவித்துவம் இருந்தால்தான் இப்படிக் கருத்துரைக்க முடியும். அடுத்தவர் உணர்வுகளை

மதிப்பதில் கலாமுக்கு நிகர் கலாம்தான். ஒரு சிலிர்ப்பூட்டும் நிகழ்ச்சி. அப்துல் கலாம் அவர்களோடு 70 விஞ்ஞானிகள் பணியாற்றினர். அவர்களுள் ஒரு விஞ்ஞானி ஒருநாள் மாலை சற்றுச் சீக்கிரமாக வீடு திரும்ப அனுமதி பெற்றிருந்தார். ஆனால் இரவு மணி 8.30 வரை ஆய்வு முடியவில்லை. அவர் விடைபெறுமுன் அக்குழுவின் தலைவர் அப்துல் கலாமிடம் சொல்லச் சென்றபோது, கலாம் அறையில் இல்லை. மாலையில் குழந்தைகளைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போகவிருந்த அவர் குழந்தைகளை ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்வோடு வீடு திரும்பிய போது ஓர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. கலாமே மாலை அந்த விஞ்ஞானியின் வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போயிருக்கிற

விவரத்தை அறிந்து சிலிர்க்கிறார். தன்னுடைய விஞ்ஞானியின் ஆராய்ச்சிக்கு இடையூறு செய்யாமலும், அவருடைய குழந்தைகளை ஏமாற்றாமலும் நடந்துகொண்டது கலாமின் சிறந்த பண்பாகப் பலரது மனதில் பதிந்தது. செய்தொழில் வேற்றுமைகூட அறியாத சிறந்த மனிதரான அப்துல் கலாம், ஒருமுறை கேரளா ராஜ்பவனில் நடந்த தமக்கான பாராட்டு விழாவுக்கு தன்னுடைய விருந்தினர்களாக சாலையோரத்தில் செருப்பு தைக்கிற ஒரு தொழிலாளியையும், சிறு உணவு விடுதி நடத்தும் ஒருவரையும் அழைக்கக் கூறினார். இருவருமே கலாம்

திருவனந்தபுரத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியபோது பழகியவர்கள். எந்த நிலையிலும் யாரையும் நினைவில் வைத்துக் கொள்கிறவர் கலாம்.வாரணாசியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டபோதுகூட அவருக் கென்று போடப்பட்ட சிறப்பு இருக்கையில் துணைவேந்தரை அமரக் கேட்க, அவர் மறுக்க எல்லோருக்கும் ஒரே மாதிரியான இருக்கை போடப்பட்ட பிறகே விழா தொடங்க இசைவு தெரிவித்தார். உயரம் என்பது வாழ்க்கையில் எல்லோர்க்கும் வரும். பெரும் பாலான உயரங்கள் பிற காரணங்களால் அல்லது புறக்காரணங்களால் அமையும். பெரும்பாலான உயரங்கள் பிறரால் எனும்போது விழுவதும் அவர்களாலேயே நிகழும். ஆனால் உயர்வு என்பது நம்மிடமே நிரந்தரமாக இருக்கும். உயர்வு என்பது பண்பு நலன்களால் வருவது. அப்துல் கலாம் அவர்கள் தமது பேராற்றலால் உயரமும் பார்த்தவர், பண்பு நலன்களால் தமக்கு உயர்வும் சேர்த்துக் கொண்டவர். இப்படி ஒருவரிடம் உயரமும், உயர்வும் இருப்பது அபூர்வம்.கலாம் மீளாத் துயிலில் ஆழ்ந்தபோது உலகமே மீளாத் துயரில் ஆழ்ந்தது. யாரும் அழைக்காமலும் அறைகூவல் விடுக்காமலும்

தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ராமேஸ்வ ரத்தில் மக்கள் வெள்ளம் திரண்டு, கடலையே வியக்க வைத்தது. இந்திய விஞ்ஞானம் ஒரு சிறந்த விஞ்ஞானியை இழந்திருக்கிறது. இந்திய அறிவியல் கல்வி ஒரு நல்ல ஆசிரியரை இழந்திருக்கிறது.

இந்திய ஆட்சி ஒரு மேன்மையான ஜனாதிபதியை இழந்திருக்கிறது, நமது மாணவர் சமுதாயம் தமது வழிகாட்டியை இழந்திருக்கிறது. மொத்தத்தில் இந்தியா ஒரு மாமனிதரை இழந்திருக்கிறது. அதிகமாகக் கூட வேண்டாம், இன்னும் நாலைந்து ஆண்டு களேனும் அவர் தன்னுடைய நீண்ட நித்திரையைத் தவிர்த்திருந்தால் இந்தியா 2020ஐயும் பார்த்துப் பூரித்திருப்பார்.

ஒன்றல்ல பல அப்துல் கலாம்கள் அவர் ஊக்குவித்த உன்னதமா(ன)ணவர்களிலிருந்து உயர்ந்துவர அவரே அதற்குரிய உரத்தையும், திறத்தையும் தெளித்து நல்ல விதைகளாய் நம்பிக்கையைத் துாவியிருக்கிறார். ஒன்றல்ல… பல கலாம்கள் உருவாக வேண்டும். அதுதான்

அவருக்கு நாம் செலுத்துகிற சிறந்த அஞ்சலி.

Source…..-ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் in http://www.dinamalar.com

Natarajan

 

இங்கிவரை யாம் பெறவே…..A.P.J. Abdul Kalam ….

kalam2

 

மானுடம் சூன்யம் ஆவதற்கோ, வெற்றிடம் ஆவதற்கோ காலம் என்றும் அனுமதித்ததில்லை. நிலைகெட்டிருக்கும் சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்கென்று, அவ்வப்போது அருட்தூதுவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே, எனையிந்த யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் என வள்ளலாரும் இதனை உறுதிப்படுத்துகின்றார். மகாகவி பாரதியும் எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தர் இந்த நாட்டில் என அழுத்தம் திருத்தமாக உரைக்கின்றார். வள்ளலார் வந்த வழியிலும், பாரதி நடந்த பாட்டையிலும் தொடர்ந்து நடந்தவர்தாம், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

காலம் காலமாக இந்திய மக்கள் புண்ணியத்தைத் தேடி இராமேசுவரத்திற்கு வந்தனர். ஆனால், வைய மக்கள் கால்கள் நோகக்கூடாதென்று, புண்ணியமே ஒரு முடிவெடுத்து 15.10.1931 அன்று, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் என்னும் வடிவத்தில் இந்த மண்ணுக்கு வந்து சேர்ந்தது.

கலாமின் குடும்பம், பற்றாக்குறையின் கைகளில் பட்டுவாடா செய்யப்பட்டதால், எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே புளியங்கொட்டைகளைப் பொறுக்கி விற்று (இரண்டாவது உலகப்போர் நடந்த காலம்) ஓரணா சம்பாதித்ததையும், பின்னர் வீட்டுக்கு வீடு தினமணி செய்தித்தாள் போட்டதையும் அவரே கீழ்வருமாறு வருணிக்கிறார். “பத்திரிகைகளில் தினமணிக்கு ஏக கிராக்கி. என் அண்ணன் சம்சுதீன் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்கு முன்பு அதிலுள்ள படங்களைப் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொள்வேன். யுத்தம் பற்றிய செய்திகளை எல்லாம் எனக்கு ஜலாலுதீன் சொல்லுவார். பிறகு நான் அதைப்பற்றி தினமணியின் செய்தித்தாள்களில் படித்துப் பார்ப்பேன். இராமேசுவரத்தில் இரயில்கள் நிற்பதை திடீரென்று நிறுத்திவிட்டார்கள். இராமேசுவரம் இருப்புப் பாதையில், ஓடும் இரயிலிலிருந்து பத்திரிகைகளைக் கட்டுக்கட்டாக வீசுவார்கள். நான் அவற்றை எல்லாம் பிடித்து வாங்கி, அண்ணன் சம்சுதீனிடம் சேர்ப்பேன். அண்ணனிடம் வாங்கியதுதான் என் முதற் சம்பளம்’ என்பதாகச் சுய சரிதையில் விவரித்துள்ளார். பழமையை மறவாதவர்கள், என்றும் தம் நிலையில் தாழ மாட்டார்கள் என்பதற்குக் கலாம் அவர்களின் வாழ்க்கை, ஓர் உரைகல்.

கலாம் உயர்நிலைப் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்திருந்தாலும், உயராய்வுக்கு (எம்.ஐ.டி.) வருகின்றபோது அவருக்குச் சோதனைகள் காத்திருந்தன. வெற்றிப்படிகளில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளில், மலர்களைக் காட்டிலும் முட்களே அதிகமாக இருந்தன. எம்.ஐ.டி.யில் முதுநிலை ஆய்வுத் திட்டம் ஒன்றைப் பெற்று, அதற்குக் கிடைத்த உதவித் தொகையில்தான், அவருடைய எதிர்காலம் நகர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் அவருடைய ஆய்வின் வளர்ச்சியைப் பார்வையிட்ட பேராசிரியர், “கலாம், உன்னுடைய அறிக்கை எனக்கு நிறைவைத் தரவில்லை. நாளை காலைக்குள் ஒரு விமானத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் விவரித்துக்காட்டும் வரைபடத்தை வரைந்து தராவிட்டால், உன்னுடைய உதவித்தொகை நிறுத்தப்படும்’ என்ற ஏவுகணையை ஏவிவிட்டுப் போய்விட்டார்.

எல்லையில்லாத மன நெருக்கடிக்கு ஆளானாலும் ஒரு பழைய கவிதையைத் தேடிப்பிடித்துப் படித்தார். “உனது எல்லா நாட்களிலும் தயாராய் இரு. எவரையும் சம உணர்வோடு சந்தி. நீ பட்டறைக் கல்லானால், அடி தாங்கு. நீ சுத்தியானால் அடி’ எனும் கவிதை நாடி நரம்புகளை அக்கினியாய் முறுக்கேற்றியது. மறுநாள் அப்பணியைச் செவ்வனே முடித்துத் தந்து, மேற்பார்வையாளரின் பாராட்டையும் பெற்றார். எது அவரைக் காயப்படுத்தியதோ, அதுவே அவரைச் சகாயப்படுத்தவும் செய்தது.

1958-இல் விமானப் படையில் விமானியாகப் பணியாற்ற வேண்டும் எனும் எண்ணத்தில் டேராடூனுக்கு நேர்முகத்திற்குச் (இண்டர்வியூ) செல்லுகிறார். தெருவரைக்கும் வந்த நல் வாய்ப்பு, வாசற்படியை மிதித்தவுடன் கதவைச் சாத்திக் கொண்டது. எட்டு இடங்களுக்கு இவர் ஒன்பதாவதாக இடம் பெற்றதுதான் காரணம்

என்றாலும், சோர்வடையாமல் ரிஷிகேசத்திலுள்ள சிவானந்தர் ஆசிரமத்திற்குள் நுழைகிறார். அங்கு அவர் பெற்ற அனுபவத்தை, “கங்கையில் நீராடி ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடன் அதிர்வலைகளின் வலுவான தாக்கத்தை உணர்ந்தேன். கருணை பொங்கும் முகத்தோடும், ஊடுருவிப் பார்க்கும் விழிகளோடும் புத்தரைப் போலக் காட்சியளித்த சுவாமி சிவானந்தரிடம் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னுடைய முஸ்லிம் பெயர், அவரிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. நான் வாயைத் திறப்பதற்கு முன்பே, என் துயரத்தின் மூலக் காரணம் பற்றி வினவினார்’ என விவரிப்பதிலிருந்து, கோபுரங்களுக்கு வேற்றுமைகள் தெரிவதில்லை என்ற உண்மையை அறியலாம்.

கலாம் 1981-இல் பத்மவிபூஷண் விருது பெற்று, இராமேசுவரத்திற்குள் நுழைகிறார். மசூதி தெருவில் ஜலாலுதீன் அவரை வரவேற்று நிற்கிறார். பள்ளி வாழ்க்கையில் கற்பித்த பட்சி லட்சுமண சாஸ்திரிகள் கலாமின் நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்குகிறார் தொடர்ந்து அருட்தந்தை சாலமன் புனித சிலுவையை ஏந்தி ஆசீர்வதிக்கின்றார். மேலும், கலாம் தம்முடைய வெற்றிக்குக் காரணமானவர்களாக மூன்றுபேரை அடிக்கடி சொல்லுவார். (1) விக்ரம் சாராபாய், (2) சதீஷ் தவன், (3) பிரம்ம பிரகாஷ். 40 பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டயங்களையும், பாராட்டுக்களையும் பெற்றபோதெல்லாம், தம்மைச் செதுக்கிய சிற்பிகளை அவர் மறந்ததே இல்லை

ஆலமரத்தின் கிளைகள் வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டே போனாலும், அதன் விழுதுகள் பூமியை நோக்கித்தான் பயணிக்கும். அதுபோல கலாம் அவர்கள் ஏவுகணை உலகத்திலும், ராக்கெட் உலகத்திலும் விண்ணளவு புகழ் பெற்றாலும், அவருடைய இதயம் அடித்தளத்து மக்களை நோக்கித்தான் கசித்து கொண்டிருந்தது. 2020-இல் குடிதண்ணீர் பஞ்சமில்லாத தேசத்தை உருவாக்க வேண்டுமென்று, தண்ணீரைத் தேசியமயமாக்க வேண்டும் என்றார்.

கலாம் வாழ்க்கையில் மகத்தான மாறுதலை ஏற்படுத்தியது, சுவாமிஜி பிரமுக் அவர்களுடைய தரிசனம் ஆகும். (பாப்ஸ் சுவாமிநாராயண் சம்பிரதாய ஆசிரமத்தின் குருநாதர்). நிவேதிதாவின் தரிசனம் மகாகவி பாரதியிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அந்த மாற்றத்தை பிரமுக் சுவாமிஜியின் தரிசனம், கலாமிற்குத் தந்தது எனலாம். அக்குருஜியே தம் வாழ்க்கையின் முடிந்த முடிவான குருஜி எனக் கலாம் எழுதுகின்றார். அக்குருநாதரைக் கலாம் 14 ஆண்டு கால இடைவெளியில் எட்டுமுறை சந்தித்து ஆத்ம விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார். கலாம் எழுதிய கடைசி நூல்: ‘The Transcendence : My Spiritual Experiences with Pramuk Swamiji’  என்பதாகும். பாரத ரத்னா கலாம் தம் மறைவுக்கு ஒரு மாதத்திற்கு முன் எழுதப்பட்ட நூல் இது.

27.07.2015 அன்று ஷில்லாங் நிர்வாகவியல் உயராய்வு மையத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட மறைவு, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரு பூகம்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிம்பொனிக் சக்கரவர்த்தி பீத்தோவன் எப்படித் தம்முடைய பியானோவில் தலை வைத்தபடி மறைந்தாரோ, அப்படித்தான் கலாம் மாணவர்கள் மத்தியில் தலை சாய்த்தார். வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போட்ட ஒரு மாமனிதரின் மறைவை, உலகத்தின் அத்தனைச் செய்தித்தாள்களும் கண்ணீரால் அச்சிட்டன. தமக்கென்று ஒரு தொலைக்காட்சிப் பெட்டிகூட இல்லாதவரின் மரணத்திற்கு அத்தனைத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் அழுது தீர்த்தன. அவரால் அனுதினமும் மீட்டப்பட்ட வீணை, விதவை ஆயிற்று. பெருந்தலைவர்களின் மறைவுக்கு டெல்லியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மக்கள், முதல்முறையாக இராமேசுவரத்தை நோக்கி பயணித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, “தம்முடைய அறிவியல் சாதனைகளின் மூலம் இந்தியாவை மிக உயரமான இடத்திற்கு அழைத்துச் சென்றவர் கலாம். அவரது மறைவு ஓர் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்’ என்றார்.

அவருடைய மறைவைக் கண்ணீரில் மட்டும் கரைத்துவிடாமல், நிலைத்து நிற்கக் கூடிய ஓர் அஞ்சலியைச் செலுத்தியது, தமிழக அரசு. அவருடைய பிறந்த நாளாகிய அக்டோபர் 15-ஆம் தேதியை இளைஞர்களின் மறுமலர்ச்சி நாளாக அறிவித்தது. வியத்தகு சாதனைகளை நிகழ்த்தும் இளைஞர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூபாய் ஐந்து லட்சம், ஒரு சவரன் தங்கத்துடன் வழங்கப்படும். காற்றுள்ளவரை, இராமேசுவரம் கடற்கரை மணல் இருக்கும்வரை, இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம் எனும் கீதம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

Source…..By பேராசிரியர் தி. இராசகோபாலன் in http://www.dinamani.com

Natarajan

வாரம் ஒரு கவிதை …” திருமண நாள் ” …!!!

 

திருமண நாள்
………….
முதல் திருமண நாள் …என்ன  பரிசு வாங்கலாம்?
எப்படி கொண்டாடலாம் அந்த நன்னாளை ?
கணவனுக்கும்  மனைவிக்கும் விடை தெரியா  கேள்வி !
முடிவே  இல்லாத விவாதம் விடிய விடிய !
விடிந்தது காலை .. தொடர்ந்தது  மீண்டும் விவாதம் !
பக்கத்து வீட்டு தம்பதியிடம் யோசனை கேட்டால் என்ன !
ஒரு சிறு பொறி தட்டியது மனதில் ! “எங்களுக்கும் இன்று திருமண
நாள்! … பொன்விழா ஆண்டு  நிறைவு !  … ஐம்பது ஆண்டு இனிய
இல்லற  வாழ்வே  இறைவன் தந்த  அரிய பரிசு எங்களுக்கு !
குறை ஒன்றுமில்லா ஒரு நிறைவான போதுமென்ற மனம்…
இதுவும் அந்த இறைவன் அருளிய வரமே  எங்களுக்கு !
உங்கள் இல்லற வாழ்வும் நல்லறமாக இனிதே செழித்து வளர
எங்கள் நல்லாசிகள் உண்டு உங்களுக்கு !
வாழ்க  வளமுடன்.. வளர்க நலமுடன் …வாழ்க பல்லாண்டு “
வாழ்த்தினார்   பெரியவர் !
வாழ்வின் அர்த்தம் புரிந்தது …வாழ்க்கையை  ஆரம்பித்தவருக்கு !
Natarajan
My Tamil Kavithai in http://www.dinamani.com dated 25th July 2016

WHY “HANK” IS SHORT FOR “HENRY,” WHY “COLONEL” IS PRONOUNCED “KERNEL,” AND WHY WE SAY “STAT” WHEN WE WANT SOMETHING DONE QUICKLY

 

Why “Hank” is Short for “Henry”

This is thought to be thanks to the one time popular suffix “-kin,” which is also how “Jack” originally derived from the name “John.” Specifically, the suffix “-kin,” simply indicated “little,” so Robin Hood’s “Little John” would have been aptly named “Jockin,” which later gave rise to “Jenkin,” then “Jakin,” and then “Jack,” with the former forms literally meaning “Little John.”

Similarly, we have “Little Henry” becoming “Henkin,” which later gave rise to “Hankin,” which was then shortened to just “Hank.”

Why “Colonel” is Pronounced “Kernel”

Believe it or not, “colonel” was pronounced more or less the way it originally looked when it was introduced to English. The spelling changed over time to “colonel”, while the pronunciation stayed the same as it was before.

“Colonel” ultimately derives from the Latin “columna,” meaning “pillar.” This gave rise to the Old Italian “compagna colonnella,” meaning “little-column company.”  This, in turn, gave us the rank of “colonnello” -the leader of a column.

Other nations adopted this ranking giving us the Middle French “Coronel.” This was pronounced pretty much like it looks at first, then later slurred down to “Kernel” by the English, but using the same spelling.

However, starting with the French around the 1540s, the spelling was changed back closer to the Italian spelling, which gave us “Colonel” in French.

Within a few decades, the English also followed suit and by the mid-seventeenth century, “colonel” was the most common way to spell the word in English. At that time, the common pronunciation was mixed between the older “kernel” and the new “colonel,” with the former winning out in the end, despite the way it’s spelled.

Why We Say “Stat” When We Want Something Done Quickly

This may seem odd at first glance. After all, common usage of “stat” outside of these instances is referring to statistics. In this case, though, “stat” is not short for “statistics,” but rather is from the Latin “statim,” meaning “immediately” or “at once.”

The first references of the practice of shortening “statim” to “stat” came to us from physicians in the nineteenth century, with the first known documented instance of this appearing in Lessons on Prescriptionsby W.H. Griffith (1875).

Bonus Facts:

  • Another interesting nickname derivation is how we got “Dick” from “Richard.” This is another one of those “knee bone connected to the thigh bone” type progressions. Due to people having to write everything by hand, shortened versions of Richard were common, such as ‘Ric’ or ‘Rich’. This in turn gave rise to nicknames like ‘Richie’, ‘Rick’, and ‘Ricket’, among others. People also used to like to use rhyming names. Thus, someone who was nicknamed Rich might further be nicknamed Hitch. Thus, Richard -> Ric -> Rick gave rise to nicknames like Dick and Hick around the early 13th century.
  • “Wiki” as used in “Wikipedia,” means “quick.” Howard G. Cunningham, the developer of the first wiki which was launched in 1995 called “WikiWikiWeb,” upon his first visit to Hawaii was informed by an airport employee that he needed to take the “wiki wiki” bus between the airport’s terminals. Not understanding what the person was telling him, he inquired further and found out “wiki” means “quick” in Hawaiian; by repeating the word, it gives additional emphasis and thus means “very quick.” He later decided to use this as the name for his new web platform.
  • It should also be noted that the proper pronunciation of “wiki” is technically “we-key”, rather than “wick-ee”. However, given the popularity of the mispronunciation of the word, Cunningham and others have long since stopped trying to correct people on the matter.

Source….www.today i foundout.com

Natarajan

Kabali: Rajinikanth is still the only boss of Tamil cinema…!!!

_314ef876-4e6c-11e6-a5f1-138dd21979a8

If you live in Chennai and aren’t familiar with the frenzy surrounding Rajinikanth’s films, July 22 might come as a shock to you. The undisputed superstar of southern cinema is ready to enthrall his fans with his new film, Kabali, on Friday.

There’s no stopping Rajinikanth even at 65. Though his last two films – Lingaa and Kochadaiyaan – didn’t hit the bull’s eye at the box office, he is ready to reinvent himself. Probably the only superstar in the world who isn’t afraid of showing his balding head, Rajinikanth is a people’s man. From setting up retirement funds for his director friends to obliging politicians, he has done it all. And now his fans are ready to pay the star back for his courtesies.

With a fifteen-minute role in Apoorva Raagangal (1975), Rajinikanth launched a scintillating career that was to become synonymous with charisma, magic and miracles. The tricks learnt during his stint with the Karnataka State Transport Corporation turned Shivaji Rao Gaekwad aka Rajinikanth into the actor every fan of Tamil cinema was waiting for. With that style, that ruggedness, that majestic gait and that enchanting persona, things had little choice but to fall in place. By now, we have heard and read so much about the man that we almost believe Rajinikanth was born to be a superstar.

His Hindi films didn’t work, and even if they did, somebody else ended up taking the limelight. But then, he was not the same man then. Had the movies been released today, many of them would have crossed the Rs 100-crore mark. The things Rajinikanth can do naturally, contemporary stars cannot hope to achieve even with the help of technically adept camera crews and state-of-the-art editing softwares.

The recently released Robot (Enthiran) was also successful in Hindi. Shivaji the Boss and Chandramukhi are shown regularly on some film channels, and nobody objects to him romancing the likes of Shriya Sharan, Aishwarya Rai Bachchan, Deepika Padukone and Sonakshi Sinha. In fact, some die-hard fans would go to the extent of saying that these heroines can’t match up to Rajinikanth’s dancing, screen presence and looks.

Research scholars could do entire projects on the reasons behind Rajinikanth’s mass popularity in North India, a region where he hasn’t done any ‘original’ film since Bulandi in 2000. And, mind you, those who remember Bulandi do so only for this man and how Anil Kapoor copied him in the second half. In case you’re trying to remember, his name was Gajraj Thakur in the film.

Rajinikanth was initially all about jokes of the ‘Chuck Norris’ kind, but everything turned into respect for the thespian before anybody even realised it. Be it his pictures with ailing children or be it his photographs from the sets of his films, he always comes across as a genuine person. His personal life reflects the same. Unlike some other Southern superstars, who used stardom to destroy their own superstar status, Rajinikanth’s never entangled into any controversy that was personal. Whenever he spoke for a cause or about something political, he cared to keep his personal away from it.

It’s difficult for big stars to keep away from politics in Tamil Nadu and other South Indian states. The alluring seats of power attract with so much force that one lets go of legacy and jumps on to the favouring tides without thinking much of the people who made them the stars and masters of the local spheres.

We know of other actors who are desperately trying to fit into the shoes of Thalaiva. It’s so in-our-face yet the audience is making these ventures successful. You think it’s happening without Rajinikanth’s unseen help. He may not have asked for it, but the fans know their duty. They simply can’t see Thalaiva going out of prominence. Now, you understand why that Chennai Express song was such a perfect marketing gimmick.

The boss of Tamil cinema is ready to reclaim his throne with Kabali. Will the fans help him this time?

Follow the author at Twitter/@nawabjha

source….

  • Rohit Vats, Hindustan Times, New Delhi …www.hindustantimes.com

Natarajan

விநாச காலம் விபரீத புத்தி….!!!

 

ஒரு பக்கம் சுவாதி, நந்தினி, வினுப்பிரியா கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் பீதியூட்டிக் கொண்டிருக்க மறுபக்கம் பெரிதாக கவனம் பெறாத இரண்டு சம்பவங்கள் மேலும் கவலை அளிக்கின்றன. ஒன்று கிரிக்கெட் பந்தை எடுத்துத் தராத காரணத்தால் 25 வயது அண்ணன் 16 வயதுத் தம்பியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்ததில் தம்பி நினைவு தப்பிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்,காவல்துறை தம்பியின் உயிரிழப்புக்கு காரணமான அண்ணனை கைது செய்திருக்கிறது இது நமது தமிழ்நாட்டில் உடையார்பாளையத்தில் நிகழ்ந்த துர்சம்பவம்.

மற்றொன்று அண்டை மாநிலமான ஆந்திராவின் பஞ்சாரா ஹில்ஸில் பள்ளி மாணவர்கள் இருவருக்கிடையே நிகழ்ந்தது. தனியார் பள்ளி ஒன்றின் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் ஒன்றாம் வகுப்பு மாணவனை அவனது அடிவயிற்றின் கீழ் பகுதியில் சரமாரியாக அடித்ததில் பாதிப்படைந்த சிறுவன் தொடர் சிகிச்சைக்குப் பின் குடல்பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த ஒரு வாரத்தில் ஓரிரு நாட்கள் இடைவெளியில் நடந்து முடிந்தவை.

இவை இரண்டிலும் நம்மை அச்சுறுத்தும் விஷயம் ஒன்றே! அண்ணனே சொந்த தம்பியை அடித்துக் கொல்வதும், தொடக்கப் பள்ளியைக் கூடத்தாண்டாத சிறுவன் ஒருவன் ஆத்திரத்தில் அவனை விட சிறியவன் ஒருவனை  சாகும் அளவுக்கு அடித்துத் துன்புறுத்துவதும் என்ன விதமான மனநிலை?! இங்கே குற்றவாளி யார்? அந்த இளைஞனா? சிறுவனா? அல்லது அவர்களின் வளர்ப்பு முறையா?

சாமானிய மனிதர்களுக்கு எப்போதாவது காலருகில் ஊறும் சிறு பூராணை அடித்துக் கொல்வதே உளவியல் ரீதியாகப் பெரும்பாடாக இருக்கிறது. உயிர்க்கொலை என்பது எப்பேற்பட்ட கொடூரம்! அறிந்தோ அறியாமலோ அந்த கொடூரத்தை நிகழ்த்திய பின் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் அறியாத வயது அந்தச்சிறுவனுக்கு என்று எடுத்துக் கொண்டாலும் 25 வயது இளைஞனுக்குமா அறியாத வயது! மொத்தத்தில் மனித உயிரின் நேசமதிப்பீடுகளை பற்றி கொஞ்சமும் சிந்தனை இல்லாமல் இப்படிச் செய்ய முடிவது ’விநாச காலம் விபரீத புத்தி’ என்று தான் கூறமுடியும்.

இப்படியான விபரீதங்களுக்கு முதல் காரணம் பின்விளைவுகளை பற்றிய யோசனையின்மை. அடுத்த காரணம் பொறுப்பின்மை மூன்றாவதாக சுயநலம் மட்டுமே பேணிக்கொள்ள வழிகாட்டும் வளர்ப்பு முறை. இந்தச் சம்பவங்களின் பின்புலனாக இத்தனை காரணம் இருக்கிறது. இவற்றையெல்லாம் சரி செய்து கொள்ள யார் சொல்லித் தரக்கூடும்?! பெற்றோர்களும் ஆசிரியர்களும் தானே முதல் வரிசையில் இருக்கிறார்கள்.பிறகு தானே இந்த சமூகம் வருகிறது.

பெற்றோர்களாகிய நாம் என்ன செய்கிறோம்? விளையாடும் குழந்தைகள் விளையாட்டின் நடுவே சண்டையிட்டுக் கொண்டு வந்து புகார் கூறினால் எத்தனை பெற்றோர் நடுநிலைத் தன்மையில் அந்த விஷயத்தை கையாள்கிறோம்?! உண்மையைச் சொல்வதென்றால் ‘யாராவது உன்னை அடித்தால் பதிலுக்கு நீயும் அடி என்றோ’ ‘திட்டினால் நீயும் திட்டு’ என்றோ தான் இப்போதெல்லாம் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வழிநடத்துகிறார்கள். இல்லையேல் இத்தனை வன்முறைக்கு அவசியமென்ன?

முதலில் நாம் நமது குழந்தைகளுக்கு எந்தச் செயலுக்கும் பின்னான விளைவுகளை பற்றி கற்றுக் கொடுத்தே வளர்க்க வேண்டும். ‘நீ உன் வகுப்பு ஆசிரியரை, தோழனை, நண்பர்களை அல்லது நீ இருக்கும் சூழலை வெறுக்கிறாயா? ஏன்? எதற்கு? என்று யோசித்து அதை நேர்மறையாக மாற்றிக்  கொள்ள வழி இருக்கிறதா என்று பார். அவர்கள் மேலுள்ள வெறுப்பை மாற்றவே முடியாது எனும் போது அடுத்த கட்டத்தைப் பற்றி எங்களிடம் கலந்து ஆலோசி. உடனடி வெறுப்போ,கோபமோ நிரந்தரத் தீர்வாகாது, உனக்காக நாங்கள் எப்போதும் உடனிருக்கிறோம் என்பதை மறந்து விடாதே’ எனும்படியான மனஉறுதியை நம் குழந்தைகளிடம் பதியச்செய்ய வேண்டும்.

இன்றைய தனிக்குடும்ப கலாச்சாரத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இப்படியான மனஉறுதி நிச்சயம் தேவைப்படுகிறது. பல வீடுகளில் வேலைக்குப் போகும் பெற்றோர் வீடு திரும்பும் வரை குழந்தைகள் வேலையாட்களுடன் தனித்து விடப்படும் சூழல் நிலவுவதால் தன்னிஷ்டமாய்  முடிவெடுக்கும் குழந்தைகள் பெருகி வரும் காலம் இது. அவர்களுக்குத் தேவை வேலையாள் இல்லை பொறுப்பான ஒரு கண்காணிப்பாளர். கண்காணிக்கும் வேலையை பெற்றோரை விட, நயமாக திறம்பட வேறு யாரால் செய்ய முடியும்? ஆகவே நம் குழந்தைகளின் செயல்களுக்கு பொறுப்பேற்க கடமைப்பட்டுள்ள நாம் மட்டுமே அவர்களின் செயல்களைக் கண்காணிக்கவும் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறக்கக் கூடாது.

அடுத்ததாக பொறுப்பின்மை; பொறுப்பு என்ற சொல்லை தமிழில் நாம் பல விதங்களில் பல பதங்களில் பயன்படுத்துகிறோம் .பொறுப்பு என்பது வெறும் சொல் மட்டுமே அல்ல அது ஓர் உணர்வு. உதாரணமாக மேல்மாடியில் இருந்து கொண்டு கீழ் நோக்கி குப்பையை  விட்டெறிந்தால் குப்பை  கீழே இருப்பவர்களின் தலையைப் பதம் பார்க்கும் என்று உணர்வது தான் பொறுப்பு. இந்தப் பொறுப்புணர்வு இருந்திருந்தால் அன்புக்குரிய சகோதரனை 25 வயது இளைஞன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றிருக்க மாட்டான்.முதலில் இந்த உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?! நமக்குள் கேட்டுக் கொண்டாக வேண்டிய கேள்வி இது. இப்படியான உணர்வு நமக்குள் இருந்திருந்து அதை நமது குழந்தைகளுக்கு வலியுறுத்தி இருந்தால் குழந்தைகள் அர்த்தமற்ற விபரீத செயல்களில் ஈடுபட வாய்ப்பே இல்லை.

யாருக்கு என்ன கஷ்டம் வந்தால் நமக்கென்ன? நாம் சவுகரியமாக  இருக்கிறோமா அது போதும் என்று மட்டுமே நினைக்கும் மனப்பான்மை சுயநலமானது. குழந்தைகளிடம், இளைஞர்களிடம் இந்த மனப்பான்மை வளர்ந்தால் அது ’வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு’. இன்றைய பெரும் விபரீதங்கள் பலவற்றிற்கு இந்த சுயநல மனப்பான்மையே அடிப்படை என்றால் பொய்யில்லை.ஆகவே கூடுமான வரையில் பெற்றோர்களும் சரி ஆசிரியர்களும் சரி தமது மாணவர்களிடையே பொறுப்புணர்வையும், பொதுநலத்தையும் வளர்த்தெடுத்தே ஆகவேண்டும்

முன்பெல்லாம் அரசுப்  பள்ளிகளில் நடுநிலைப் பள்ளி பிரிவில் ஒவ்வொரு நாளின் கடைசி வகுப்பிலும் நீதிக்கதைகள் போதிக்கப்பட்டன; இப்போதும் நீதிக்கதைகள் ’ஃலைப் ஸ்கில்’ என்ற பெயரில் பாடத்திட்டத்தில் உண்டு. ஆனால் இதை ஆசிரியர் தானே வகுப்பில் கதையாக  எடுத்துச் சொல்லி மாணவர்களுடனான சுவாரசியமான கலந்துரையாடலுடன் வகுப்பு முடிகிறதா என்றால் அது சந்தேகத்திற்கிடமானது. இந்தப் புத்தகங்களை மாணவர்கள் தாங்களே படித்துக் கொள்ள வேண்டியது தான் எனும் நிலை.

பெரும்பான்மை மாணவர்கள் நீதிக்கதைகளைப் படிப்பதாக தெரியவில்லை. அவர்கள் பாடங்களைப் படிப்பதோடு போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் ஆறாம் வகுப்பிலிருந்தே ஐ,ஐ,டி நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்புகள் என்று ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் நெட்ஒர்க் என்று தான் மனம் போகிறதே தவிர போதுமான வாசிப்பு பழக்கம் இல்லை என்பதே நிஜம்.

படிப்பு முக்கியம் தான் ஆனால் அதை விட முக்கியம் பண்பு. அதை நீதிக்கதைகளால் மட்டுமே போதிக்க முடியும் எனில் பள்ளிகள் அதற்காக ஒவ்வொரு நாளும் தனி வகுப்புகளை நடத்தினாலும் தவறில்லையே. ஒன்று பள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் இல்லையேல் வீட்டிலிருந்து  ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு  இரவையும் நமது  புராண, இதிகாச, பஞ்ச தந்திர, ஜாதக நீதிக்கதைகள் கதைகள் மூலம் குழந்தைகளுக்கான அருமையான  இரவாக நாம் ஏன் மாற்றக்கூடாது? இதிகாசங்களும் புராணங்களும் சிலருக்கு நம்பிக்கை தரவில்லை எனில் தவறே இல்லை காலத்திற்கு ஏற்றவாறு  புதிய நீதிக்கதைகளை நாமே ஏன் உருவாக்கக் கூடாது?!

அதற்கெல்லாம் நேரமில்லை எனில் நஷ்டம் நமக்குத் தான் எல்லோருக்கும் அவரவர் வேலை பெரிதே, ஆனால் இந்த நாட்டுக்கும் நமது வீட்டிற்கும் பொறாமை, காழ்ப்புணர்ச்சி, குரோதம், தீவிரவாதம்  போன்ற நஞ்சு ஊட்டப்படாத  மனம் கொண்ட இளம் சமுதாயத்தினர் தேவை எனில் நாம் அவர்கள் நலனுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும்.

தனிமை உணர்வும், நல்லது எது? கெட்டது எது? எனும் பாகுபாடு காணமுடியா குழப்பமும் குழந்தைகளை அணுகாமல் அவர்களைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை ஆசிரியர்கள் அவர்களுக்குத் துணை நிற்பார்களாக!

Source……..By கார்த்திகா வாசுதேவன் in http://www.dinamani.com

Natarajan

” ஹைகூ: தமிழ்க் கவிதையின் கம்பீரம்…” !!!

 

“ஹைகூ ஒவ்வொன்றும் ஒரு தனிவார்ப்பு, பிசிறில்லாத சிறுசிற்பம், அலாதியான அழகு, கம்பீரம்” என ஹைகூ கவிதையின் திறத்தினைப் பறைசாற்றுவார் கவிஞர் தமிழ்நாடன். தமிழ்க் கவிதை உலகில் புதுக்
கவிதை அமைத்துத் தந்த தோரண வாயில் வழியாக 1984ல் தொடங்கிய ஹைகூ பயணம், இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வாழையடி வாழையெனப் புதுப்புதுக் கவிஞர்கள் தோன்றி, ஹைகூவின் வளர்ச்சிக்குத் தங்களின் பங்களிப்பினை நல்கி வருகின்றனர்.
நெல்லை சு.முத்துவின் பார்வையில்,
“மூன்றடிச் சொற்செட்டுநேரடி அனுபவ வெளிப்பாடு
மூன்றாவது அடி மின்தாக்கு”
– என்னும் மூன்று பண்புகளும் பொருந்தியதே சிறந்த ஹைகூ கவிதை. பாடுபொருளாலும் பாடும்முறையாலும் சிறந்து விளங்கும் ஒரு சில ஹைகூ
கவிதைகள் குறித்து காண்போம்.

விலகி இருக்கும் மனித உறவுகள்

‘வெறுங்கை என்பது மூடத்தனம் – விரல்கள் பத்தும் மூலதனம்’
என்னும் எழுச்சி மிகு வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. அவரது உடன்பிறப்பு மலர்மகன். அவரும் ஒரு சிறந்த மரபுக் கவிஞர் ஆவார். ‘தொடர்பு எல்லைகளுக்கு அப்பால்…’ என்பது அவர் வெளியிட்டுள்ள ஹைகூ
கவிதை தொகுப்பு. அதில் இடம் பெற்றுள்ள ஹைகூ இது: “ தொடர்பு எல்லைக்கு அப்பால் -உறவுகள்”
இன்று உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் மனிதனால் தொடர்பு கொள்ள முடிகின்றது. தொடர்பியல் அந்த அளவிற்கு இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தொடர்பு எல்லைக்குள் வாழும் மனித உறவுகளோ விலகி இருக்கின்றன.
குடும்ப உறுப்பினர்கள் இடையே இடைவெளியும் விரிசலும் மிகுந்து காணப்படுகின்றன என்பதை நயமாகப் பதிவு செய்துள்ளார் மலர்மகன். இல்லற வாழ்வின் பதிவு
இல்லற வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமானால், கணவன்–மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்காக மற்றவர் விட்டுக் கொடுத்துப் போவது தான் முக்கியம். ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்னும் ஆன்றோர் அமுத மொழி. தங்கம் மூர்த்தி நகைச்சுவை உணர்வுடன் இல்லற வாழ்வின் இன்றியமையாத பக்கம் குறித்து இங்ஙனம் பாடியுள்ளார்:
“பட்டிமன்றம் முடிந்துதாமதமாய் வீடு திரும்பினேன்
வழக்காடு மன்றம்”
கள்ளங்கரவு கொஞ்சமும் இல்லாத – சூதுவாது சிறிதும் அறியாத – வஞ்சமோ சூழ்ச்சியோ துளியும் தெரியாத – குழந்தைகள் உலகினைப் பற்றிய அற்புதமான ஹைகூ கவிதைகளின் தொகுப்பு வசீகரனின் ‘குட்டியூண்டு.’ கவிதைத் தொகுப்பின் தலைப்பிலேயே கவித்துவம் கொலுவிருக்கக் காண்கிறோம். குழந்தைகள் உலகினை நடப்பியல் பாங்கில் வசீகரன் உள்ளது உள்ளபடி படைத்துக் காட்டியுள்ள ஹைகூ:
“ தனித்து நின்ற குழந்தையிடம்யார்நீ என்றதும் சொன்னது:
‘எங்க அப்பாவுக்கு நான் பொண்ணு!’”

ஹைகூவின் உயிர்ப் பண்பு

ஹைகூவுக்கு வலிமையையும் வனப்பையும் சேர்ப்பது அதன் ஈற்றடியே. இதனை, ‘படுத்துக் கொண்டே படித்தேன், துாக்கி நிறுத்தியது, ஹைகூவின் கடைசி வரி’ என ஹைகூ வடிவிலேயே படம்பிடித்துக் காட்டுவார் தெ.வெற்றிச்செல்வன்.
“ சுதந்திர தினம்மனதிற்குள் துக்கம்வந்தது ஞாயிற்றுக்கிழமை”
சுந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வந்தால், ஒரு நாள் விடுமுறை அல்லவா இல்லாமல் போகும்? மனத்திற்குள் துக்கம் பொங்கி வராதா என்ன? என்கிறார் கவிஞர் நவதிலக். இல்லாவிட்டால் கவிஞர் மீராவும் காதலியைக் குறித்து, ‘கிழமைகளில் அவள் ஞாயிறு’ என்று பாடி இருப்பாரா? தமிழனின் விடுமுறை மோகத்தினை மென்மையாகச் சாடும் கவிதை இது!

வாசகரும் கூட்டுப் படைப்பாளி

‘கவிஞன் இறங்கிக் கொள்ள, வாசகன் அதன் மீது பயணம் தொடர்வான். அதுதான் ஹைகூ’ என்பர் அறிஞர். வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால்,
‘ஹைகூ ஓர் உணர்வு நிலை, வாசகனைக் கவிஞனின் நிலைக்கு உந்தி உயரத் தள்ளும் மிகச் சிறந்த வடிவம் அது.’ இவ்விலக்கணத்திற்குக் கட்டியம் கூறும் பா.உதயகண்ணனின் ஹைகூ…
“காரைத் துடைத்துக்காசு கேட்டான்
எட்டிப் பார்த்தது நாய்”
இங்கே காரைத் துடைத்து விட்டுக் காசு கேட்பது ஒரு குழந்தைத் தொழிலாளி என்று தெளிவாகத் தெரிகிறது. ஆயின், ‘எட்டிப் பார்த்தது நாய்’ என்னும் ஈற்றடியில் இடம் பெறும் ‘நாய்’ என்பது யார்? புதியவர் எவரையேனும் கண்டால் குரைப்பது நாயின் இயல்பு. அது போல், சிறுவனிடம் தனது வெறுப்பை உமிழும் – விரட்டி அடிக்கும் – காரின் உரிமையாளரும் ஒரு வகையில் பார்த்தால் ‘நாய்’ தான்! கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால் கவிதையில் ஆழ்ந்திருக்கும் கவிஞரின் உள்ளம் புலனாகின்றது.
“எவன் கண்பட்டதுவிற்கவே இல்லை
திருஷ்டி பொம்மைகள்”
என்பது வித்தியாசமான பாடுபொருளைத் தன்னகத்தே கொண்ட செ.ஆடலரசனின் ஹைகூ.
‘திருநெல்வேலிக்கே அல்வா’ என்பது போல், ‘திருஷ்டி பொம்மைகளுக்கே’ திருஷ்டியாம்!

காலத்திற்கு ஏற்ற பாடுபொருள்

ஹைகூ கவிதையின் தனித்தன்மை காலத்திற்கு ஏற்ற, குறிப்பாக, இந்த நுாற்றாண்டிற்கே உரிய பாடுபொருட்களைக் கையாளுவதாகும். அவற்றுள் ஒன்று விளைநிலங்கள் இன்று விலைநிலங்கள் ஆகி வரும் கொடுமை ஆகும். பச்சைப் பசேல் எனத் திகழ்ந்த நெல் வயல்கள் எல்லாம், இன்று வானளாவ உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உருமாறிவிட்டன. இதனை ரத்தினச் சுருக்கமான
மொழியில் பதிவு செய்துள்ளது செந்தமிழினியனின் ஹைக்கூ:
“ விளை நிலங்கள்விலை நிலங்களாயினவீடுகள்”
‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது பல்லாண்டு காலமாக அரசியல்வாதிகள் முதலாக தமிழ் ஆர்வலர்கள் வரை அயராது பறைசாற்றி வரும் கொள்கை முழக்கம். ஆயினும், நடைமுறையில் இன்னும் அந்தக் கனவு நனவாகவில்லை. இந்த கசப்பான உண்மையை – அய்யாறு ச.புகழேந்தி ஹைகூ கவிதை ஒன்றில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றாற் போல், காரசாரமாகப் பதிவு செய்துள்ளார்:
“ எங்கும் தமிழ்எதிலும் தமிழ்இல்லை”

வாழ்வியல் பதிவு

எட்டு மணி நேரம் துாங்கும் மனிதன் – எட்டு மணி நேரம் உழைக்கும் மனிதன் – ஒரு நாளில் எத்தனை மணி நேரம் வாழ்கிறான் என்று கேட்டால், அவனால் பதில் சொல்ல முடியாது. இந்த வாழ்வியல் உண்மையைப் பொட்டில் அடித்தாற் போல் எடுத்துரைக்கிறது இ.பரிமளாவின் ஹைகூ ஒன்று:
“ வாழ்நாளில்வாழ்ந்த நாள்?
விரல்களுக்குள்”
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மென்மையான கருணை மனத்துக்குச் சொந்தக்காரர்கள் ஹைகூ கவிஞர்கள். பஞ்சு நெஞ்சு படைத்த அவர்கள், இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளுக்காகக் கூட அழுகின்ற இயல்பினர். இவ் வகையில் நினைவுகூரத் தக்க ரமா ராமநாதனின் ஹைகூ இதோ:
“அடித்துத் துவைக்கமனமில்லை
சட்டையில் பூக்கள்!”
நிறைவாக ஈழத்து அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுவது போல்,
“தமிழ்க் கவிதை என்ற நதி வற்றாது ஓடுகிறது. தமிழை வளப்படுத்துகிறது, தமிழால் வளம் பெறுகிறது.”
அவரது இக் கூற்று இன்றைய ஹைகூ கவிதைக்கும் பொருந்தி வரும்

உண்மையே.-   பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரைeramohan@gmail.com

Source….www.dinamalar.com

Natarajan

France mints Rs. 65 lakh gold coin with Taj Mahal….!

 

The world-renowned Monnaie de Paris (Paris Mint) has unveiled a rare work of artistry – a gold coin bearing a Taj Mahal engraving – at their Manhattan showroom. The limited edition gold coin weighs one kilo and is priced at Rs. 65 lakh. Each coin, which is minted in .999 pure gold and measures 37mm in diameter, is the world’s first coin to include 68 hand-set Cartier diamonds. Here’s a look at the limited edition Taj Mahal coin that was issued on November 17, 2010.

taj1

A picture taken on November 17, 2010 in Paris, shows the world’s first one-kilo gold coin to feature 68 hand-set Cartier diamonds, bearing a Taj Mahal engraving. The coin is released in a limited edition of only 29 pieces with a price tag of 100,00 euros. The Taj Mahal, built in the 17th Century by Mughal emperor, Shah Jahan, in memory of his third wife, Mumtaz Mahal, has been a symbol of eternal lover for centuries. (Photo: AFP)

In India the collection will be marketed by the Taj Association for Art, Culture and Heritage (TAACH). Walter J. Kole, Chief Numismatist for The Franklin Mint, said the Taj Mahal gold coins offer a unique opportunity to buy a piece of history for any collector who is looking to buy gold.

The Taj Mahal gold coin, especially designed to appeal to specialty collectors, is one of the largest coins of its type in the world.

Founded in 1964, The Franklin Mint is an American icon which is renowned for its innovative design, meticulous attention to detail and creation of the highest-quality collectibles in the world.

The eye-catching coin is housed inside a custom leather display handcrafted by the makers of the finest luggage in the world, Goyard

Source…..www.ndtv.com

Natarajan

” அது ஒரு காலம் …” !!!

 

💥ஒரு காலம் இருந்தது.

💥மனிதாபிமானத்தையும்
மனச்சாட்சியையும்
எம்மில் பெரும்பாண்மையினர்
நேசித்த ஒரு காலம் இருந்தது.

💥கடவுளுக்கு பணிந்த காலம்.
💥சத்தியத்தை மதித்த காலம்.
💥நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
💥வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
💥அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
💥பெண்களை போற்றிய காலம்.
💥நீதியை நிலைநாட்டிய காலம்.
💥நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
💥பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
💥பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.

💥நாடகக்கலை வளர்ந்த காலம்.
💥நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
💥பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
💥சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
💥வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
💥பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
💥பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.

💥ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
💥முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.

💥பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
💥கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
💥கோயில்கள் சேவை செய்த காலம்.
💥மழை தவறாமல் பொழிந்த காலம்.
💥மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
💥ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
💥தண்ணீர் விற்கப்படாத காலம்.
💥வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
💥கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.

💥மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
💥ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
💥பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
💥மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
💥நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
💥இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
💥விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
💥வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.

💥எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
💥மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
💥புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
💥உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
💥மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
💥வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
💥வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.

💥சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
💥வாகன நெரிசல் இல்லாத காலம்.
💥இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
💥அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
💥வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
💥கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
💥வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
💥எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
💥ஊர்கூடி தேர் இழுத்த காலம்.

💥இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத
ஒரு காலமிருந்தது
ஒரு காலமிருந்தது.

💥அது நாங்களெல்லோரும்
அன்பில் திளைத்திருந்த காலம்.

Source….. input from a friend of mine

Natarajan

Quotable Quotes….”The most beautiful thing is to see a person you love smiling. And even more beautiful is knowing that you are the reason behind it.”

 

All About Relationship- 30 Quotes

1. In life you’ll realize there is a purpose for everyone you meet. Some will test you, some will use you, and some will teach you. But most importantly, some will bring out the best in you.
2. Keep people in your life who truly love you, motivate you, encourage you, enhance you, and make you happy. If you know people who do none of these things, let them go.
3. Too often we underestimate the power of a touch, a smile, a kind word, a listening ear, an honest compliment, or the smallest act of caring – all of which have the potential to turn a life around.
4. The most beautiful thing is to see a person you love smiling. And even more beautiful is knowing that you are the reason behind it.
5. Choose your relationships wisely. It’s better to be alone than to be in bad company.
6. Being alone does not mean you are lonely, and being lonely does not mean you are alone.
7. Fall in love when you’re ready, not when you’re lonely.
8. Love means giving someone the chance to hurt you, but trusting them not to.
9. You know you’ve found true love when you catch yourself falling in love with the same person over and over again.
10. Don’t wait for the right person to come into your life. Rather, be the right person to come to someone’s life.
11. The one who is meant for you encourages you to be your best, but still loves and accepts you at your worst.
12. Never allow someone to be your priority while allowing yourself to be their option.
13. Some relationships are like glass. It’s better to leave it broken, than to hurt yourself more by trying to put it back together.
14. Just because one person doesn’t seem to care for you, doesn’t mean you should forget about everyone else who does.
15. Someone else doesn’t have to be wrong for you to be right.
16. It is okay to be angry. It is never okay to be cruel.
17. Never do something permanently foolish just because you are temporarily upset.
18. Silence is often the loudest cry. Pay attention to those you care about.
19. We don’t always need advice. Sometimes all we need is a hand to hold, an ear to listen, and a heart to understand.
20. It’s not so much what you say that counts, it’ how you make people feel.
21. A silent hug means a thousand words to the unhappy heart.
22. Don’t mess with someone’s feelings just because you’re unsure of yours.
23. True happiness comes from within, not from someone else.
Don’t make the mistake of waiting on someone or something to come along and make you happy.
24. Don’t choose the one who is beautiful to the world, choose the one who makes your world beautiful.
25. If you feel like your ship is sinking, it might be a good time to throw out the stuff that’s been weighing it down
26. Let go of people who bring you down, and surround yourself with those who bring out the best in you.
27. Just because it didn’t last forever, doesn’t mean it wasn’t worth your while.
28. Say what you mean and mean what you say. Don’t expect others to read your mind, and don’t play games with their heads and hearts. Don’t tell half-truths and expect people to trust you when the full truth comes out. Half-truths are no better than lies. And don’t ignore someone you care about, because lack of concern hurts more than angry words.
29. Lies help no one in the long run. So… 1) Don’t say “I love you” if you don’t mean it. 2) Don’t say “I understand” if you have no clue. 3) Don’t say “I’m sorry” if you’re not. 4) Be honest with yourself and your loved ones.
30. Tell the truth, or eventually someone will tell it for you.
Source….unknown….input from a friend of mine
Natarajan