In This Village No House has Front Doors… Not Even Banks … !!!

In This Village, Nobody has Front Doors. Not Even the Bank.

A family gathers outside their house in Shani Shignapur village in Ahmednagar, Maharashtra. (Agence France-Presse photo)

SHANI SHINGNAPUR:  Members of the Gade family proudly show off a stash of rupees kept in an unlocked tin barrel in their bedroom, despite their home not having a front door.

In Shani Shingnapur village in Maharashtra, residents see little need for such security, thanks to their belief in special protection from the Hindu deity Shani.

As farmers trundle the roads in bullock carts piled high with sugarcane, they pass rows of homes bearing empty door frames — a village tradition that goes back for generations.

“Years ago, Shani came in the dreams of devotees and told them you don’t need to put any doors on your homes,” housewife Jayashree Gade told news agency AFP.

“He said: ‘I will protect you’. That’s why we don’t have any doors.”

According to legend, an iron and stone slab washed up in a nearby river during a flood more than 300 years ago, and began oozing blood when cattle herders poked it with a stick.

In a vision to a villager later that night, the slab was revealed to be an idol of Shani, and today it stands in an open square adorned with garlands of flowers, drawing crowds of pilgrims.

Shani, who is believed to be manifested in the planet Saturn, is considered so mighty that his shrine cannot be kept under a shelter — and he will not let thieves in the village of open homes go unpunished.

Some villagers said they put loose panels against their door frames at night, but only to keep out wild animals.

Similarly, the local branch of state-owned UCO Bank prides itself on its “lockless” status. Although money is kept in a strongroom, the front of the building has just a glass door with no lock, to avert stray dogs

“We have no trouble,” said bank official Nagender Sehrawat, gesturing to the queue of customers when asked if they were happy with the arrangement.

Shani Shingnapur’s reputation has been somewhat dented in recent years by reports of a few thefts. In 2010, a visitor from the North complained that cash and valuables worth 35,000 rupees  were taken from a vehicle.

According to a pamphlet handed out at the shrine, Shani Shingnapur is not just free from theft but from all sinful behaviour, a “model village” in contrast to the corrupt outside world.

“Professional robbers, thieves, dacoits, non-vegetarians, drunkards, never come here,” the pamphlet confidently stated.
“If they come, they behave like gentlemen.”

Story First Published: January 06, 2015 10:48 IST
SOURCE::::www.ndtv.com
Natarajan
Jan 6 2015

It may look like Snow covered Alps… But ….

Incredibly deceiving images of what can easily be mistaken for snow-covered Australian mountains have been released.

But do not be fooled. Instead, what the pictures really show are stunning pyramids of plain, white salt.

These were taken five years ago, when Emma Phillips was on a mission to find the perfect location for her final assignment to wrap up her photography course.

Her vision was to capture images of an industrial location near the city of Melbourne but this proved to be quite an arduous process.

Instead, she left her hometown and spent two months in the Nullabor Plain out in the Western Australian desert.

There she came across an abandoned salt refinery and found exactly what she was looking for

Read more: http://www.dailymail.co.uk/news/article-2898419/Eerie-pictures-abandoned-salt-middle-desert.html#ixzz3O2Lq00bg

Incredibly deceiving images of what can easily be mistaken for mountains of snow have been released by Melbourne-based photographer Emma Phillips

For the first time, the photographer has published the photos in her book 'Salt' which shows the vastly treeless landscape of the Nullabor Plain

During her time in the desert, she paid a visit to an abandoned salt refinery and found the perfect location for her final assignment

The whole experience was 'desolate, eerie and beautiful', the 25-year-old told Daily Mail Australia

For the first time, the photographer has published the photos in her book ‘Salt’ which shows the vastly treeless landscape of the Nullabor Plain.

The whole experience was ‘desolate, eerie and beautiful’, the 25-year-old told Daily Mail Australia.

She was particularly impressed with the way ‘the buildings seemed to disappear and the way the salt shimmered in the sun’.

About 18 images have been published in ‘Salt’, which is available online.

SOURCE:::: http://www.dailymail.co.uk

Natarajan

6 Jan 2015

 

ரமணர் வாழ்வில்…. சுவையான நிகழ்ச்சிகள்…Part 6

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

திருவண்ணாமலை கிரிவலத்தை பகவான் எப்போதும் ஊக்குவித்தார். உடல் நலம் குன்றியவர்கள்,முதியவர்கள் கூடகிரிவலம் செல்வதை ரமணர் தடுத்ததில்லை. ‘‘அமைதியாக இறைவனை நினைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள்’’என்றே அவர் கூறுவார். அனைவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து இறைவனின் ஆசியைப் பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். பகவானும் பல முறை கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலையைச் சுற்றி வருவது பற்றி ஒரு உண்மைக் கதையையும் பகவான் பக்தர்களிடம் சொல்வார்.கதையின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் அவர் சொன்னதேயில்லை.அந்த க்ளைமாக்ஸை பகவானின் அனுக்ரஹத்துடன் நான் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறேன்.

திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
ஏன்?

கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.

பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.

ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.

அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.

ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.

அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.

இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.

ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.

ஆமாம். அது என்ன தெரியுமா?

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்? ஓர் இளைஞன்.

ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்!

எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.கால்கள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெல்லாம் சொல்லிக் கொண்டதும் இல்லை.தட்சிணாமூர்த்தியின் அம்சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?நம் குரு தேவரும் அப்படித்தான்.

அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான். இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!

கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்?

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE::::: http://www.balanuman.wordpress.com

Natarajan

ரமணர் வாழ்வில்…. சுவையான நிகழ்ச்சிகள்…Part 5

முழு தியான நிலை என்பது கிணற்றில் கயிற்றால் கட்டித் தொங்கும் குடம் (தோண்டி) போன்றது. குடத்தில் உள்ள தண்ணீர் (மனம்),கிணற்றில் குடம் அமிழும்போது கிணற்று நீருடன் (ஆன்மா)ஒன்று கலந்து விடுகிறது. ஆனாலும் குடத்தில் நிரம்பிய நீரோ, கயிற்றின் (அகந்தையின்) மற்றொரு நுனியால் வெளியே இழுக்கப்பட்டுவிடும்.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்தபோது கண் பார்வை இல்லாத ஒரு பாட்டி,தினமும் தட்டுத் தடுமாறி யார் உதவியுடனாவது மலை ஏறி வந்து, பகவானுக்கு ஏதாவது அன்புடன் தருவாள்.

அன்றைய தினம், பாட்டி பகவானுக்கு மிகவும் பிடித்த அரிசிப் பொரியைக் கொண்டு வந்தாள்.ரமண மகரிஷியும் அதை அன்புடன் பெற்றுக் கொண்டு, “பாட்டி, உனக்கோ முடியவில்லை. கண் பார்வையும் இல்லை. எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வருகிறாய்?’’என்று வினவினார்.

அந்தப் பாட்டி, “பகவானே, உங்களை தரிசனம் செய்யத்தான் வருகிறேன்’’ என்றாள்.

”நீதான் என்னைப் பார்க்க முடியாதே? கீழேயிருந்தே என்னை நினைத்துக் கொள்ளக் கூடாதா?’’ என்றார் பகவான்.

”பகவானே, என்னால் உங்களைப் பார்க்க முடியாதுதான். ஆனால் உங்கள் அருட்பார்வை என் மீது விழுமே.அந்த பாக்கியத்துக்காகத்தான் நான் தினமும் வருகிறேன்’’ என்றாள் பாட்டி.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE:::: http://www.balhanuman.wordpress.com

Natarajan

ரமணர் வாழ்வில் …. சுவையான நிகழ்ச்சிகள்…Part 4

சிலந்திப் பூச்சி,எப்படி தன் வாயிலிருந்து வெளியில் நூலை நூற்று, மறுபடியும் தன்னுள் இழுத்துக் கொள்கிறதோ அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து உலகத்தைத் தோற்றுவித்து, மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக் கொள்கிறது.
–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
திருவண்ணாமலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்திருக்கும் விரூபாட்ஷி குகையில் பகவான் பல வருடங்கள் இருந்தார்.அப்போது குகைக்கு வெளியே, மலைச் சரிவு அருகில் ஒரு பாறை இருந்தது. அதன் மேல் பகவான் தினமும் அரை மணி நேரம் அமர்ந்திருப்பார்.அங்கே உட்கார்ந்துதான் தினமும் பல் துலக்குவார்.
கடும் பனியாக இருந்தாலும் சரி, கொட்டும் மழையாக இருந்தாலும் சரி, பகவான் அந்தப் பாறையில் அமர்வதை தவறவிட்டதே இல்லை..
பக்தர்களுக்கு இது வியப்பாக இருந்தது. “பகவானே, மழை, பனியில் கூட ஏன் பாறையில் போய் அமர்கிறீர்கள்.உடம்பு சுகம் இல்லாமல் போய்விடாதா? குகைக்குள் இருந்தபடியே பல் தேய்த்தால் என்ன?’’ என்று துணிந்து ஒருவர் கேட்டுவிட்டார்.
பகவான் கேள்வி கேட்டவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.”கீழே மலையடிவாரத்தில் சௌபாக்கியத்தம்மாள் என்று வயதான பெண்மணி ஒருத்தி குடியிருக்கிறாள். அவள் தினமும் இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போய்தான் உணவருந்துவாள்.ஒரு நாள் அவள் வரவில்லை. ஏன் வரவில்லை என்று மறுநாள் கேட்டேன். “வயசாச்சு சாமி. மலையேறி வர முடியல. உடம்பு முடியல. ஆனா உங்களைத் தரிசனம் செய்யாம எப்படி இருக்கறதுன்னு தவிச்சபடியே மலை மேலே பார்த்தேன். அந்தக் காலை நேரத்துலதான் நீங்க வெளியில இருக்கற பாறை மேல உட்கார்ந்து இருந்தீங்க. கீழே இருந்தபடியே உங்களைவிழுந்து கும்பிட்டேன் சாமி’’ன்னு கண் கலங்கினா.
பாவம், வயசான காலத்துல அவளால எப்படி மலையேறி வரமுடியும்? அதனாலதான் அவளுக்காக தினமும் காலையில் இந்தப் பாறையில் உட்கார்ந்துக்கறேன். மழை, பனி எதுவா இருந்தாலும் அந்த வயசான அம்மா ஏமாந்துடக் கூடாதே? பாவம், அவ அண்ணாந்து பாத்துக்கிட்டிருப்பாளே. அதான்’’ என்றார் பகவான்.
நீங்களே சொல்லுங்கள். யாரோ ஒரு ஏழை பக்தைக்காக பல வருடங்கள் தினமும் அரை மணி நேரம் ஓர் பாறையில் அமர்ந்திருந்த ஓர் அளவற்ற கருணை கொண்டவரை, ரமணரைத் தவிர உலகம் எங்காவது கண்டிருக்கிறதா?
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
Natarajan

Message For the Day…” What is the True Devotion to God … ” ?

In ancient times, sages who performed severe penance to realise the Ultimate Reality, experienced Him and declared that the Supreme Lord is beyond Tamas. This means, to experience the Lord we must get rid of our Tamo-guna (the darkness of ignorance). The Lord is beyond the veil of Tamas. When the veil is removed, the Lord can be seen. If one is filled with Tamo-guna from head to foot, how can they experience God? You have a mountain of desires in your heart; you offer a petty coconut to the Lord! Is this love? Is this devotion? No! It is not the way to pray to the Lord. To seek a favour is not prayer at all. On the contrary, the person filled with selfless love will accomplish anything in life, and is ever ready to make any sacrifice. You are God. Get rid of your body consciousness, and you will realise your Divinity. Develop the qualities of love and sacrifice.

Sathya Sai Baba

Here is One Puzzle Link Which will Simply Floor You …. !!!

It is truly amazing… you will like it …

> Think any Famous Person in your mind and click on the link.!!!

> Don’t know how it works, but simply awesome..!!
> Try this, it’s amazing, couldn’t believe it, the guy who made this quiz
> must be one of the most logically brilliant puzzles !!!
> ​
>http://en.akinator.mobi/personnages/jeu

SOURCE:::: INPUT FROM A FRIEND OF MINE

Natarajan

Jan 6 2015

Image of the Day… Super Moon !!!

What most call a Blue Moon isn't blue in color. It's only Blue in name. This great moon photo from EarthSky Facebook friend Rebecca Lacey in Cambridge, Idaho.

What does a full supermoon look like? Astronomers say you can’t really detect any difference with your eye between a supermoon and any ordinary full moon. This great moon photo is from EarthSky Facebook friend Rebecca Lacey in Cambridge, Idaho.

 

SOURCE::: http://www.earthsky.org

Natarajan

Jan 6 2015

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி ….சில சுவையான தகவல்கள் …

1947-ம் ஆண்டு ஆகஸ்ட்  15ம் நாள்.
திருவண்ணாமலை ஆசிரமத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது.
அன்று பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள், பகவானை தரிசனம் செய்தார்கள்.
ரமண மகரிஷி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே ஒரு குரங்கு எட்டிப் பார்த்தது.  அன்றுதான் பிறந்தது போல் இருந்த ஒரு குட்டியையும் அது வைத்திருந்தது. குட்டி, தாயை இறுகப் பற்றிக் கொண்டு, அச்சத்துடன் இருந்தது.
தாய்க்குரங்கு,  உள்ளே வரவேண்டும் என்று முயற்சித்தது. உள்ளே இருந்த பக்தர்கள்,அந்தக் குரங்கை விரட்டினார்கள்.குரங்கு பயந்து ஓடி அங்குமிங்கும் அலை பாய்ந்தது.
பகவான், குரங்கை விரட்டியவர்களைப் பார்த்தார். “அதை ஏன் துரத்துகிறீர்கள்? அது இங்கே என்னிடம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறது. தன் இளம் குழந்தையை எனக்குக் காட்டுவதற்காக வருகிறது. அது தவறா என்ன? உங்களுக்குக் குழந்தை பிறந்தால் என்னிடம் காட்டுவது இல்லையா? அப்படிக் கொண்டு வரும்போது யாராவது உங்களைத் தடுத்தால் எப்படி இருக்கும்? நீங்கள் குழந்தையைக் கொண்டு வரலாம். குரங்கு கொண்டு வரக்கூடாதா? இது என்ன நியாயம்?’’ என்றார்.
பக்தர்கள் குரங்குக்கு வழிவிட, அது குஷியாக உள்ளே வந்து, தன் குட்டியை பகவானிடம் பெருமையாக, சந்தோஷமாகக் காட்டிற்று. பகவான் அதன் முதுகை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தார்.
அது மட்டும் அல்ல, ஆசிரம நிர்வாகிகளிடம், “சுதந்திர தினம் என்பதால் எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.நம்முடைய தோழர்களாகிய குரங்குகளுக்கு விருந்து ஒன்றும் இல்லையா? அவர்களை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் எல்லாம் இப்போது வந்தீர்கள். அந்தக் காலத்தில் இந்தக் குரங்குகள்தான் எனக்கு நண்பர்கள். அப்போது இவர்களைப் பார்த்திருக்க வேண்டும். எல்லாம் இவர்கள் ராஜ்ஜியம்தான்!’’ என்றார்.
அப்புறம் என்ன? மளமளவென குரங்குகளுக்கும் தடபுடலாக விருந்து தயார் ஆயிற்று.
நீங்களே சொல்லுங்கள்.உலகத்திலேயே சுதந்திர தினத்தன்று குரங்குகளுக்கும் விருந்து வைத்த மகான்கள் யாராவது உண்டா? பகவான் ரமண மகரிஷியைத் தவிர!
ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். மனதில் யார் உனக்கு அமைதியை ஏற்படுத்துகிறாரோ, அவரையே உன் குருவாக ஏற்றுக் கொள்!
–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
ஒரு நாள், ரமணாஸ்ரமத்தில் நல்ல கூட்டம். ஹால் நிரம்பி வழிந்தது.
அப்போது ஒருவர், அந்த ஊரில் உள்ள மோசமான ரௌடி ஒருவன் இறந்துவிட்ட தகவலை நண்பர்களிடம் தெரிவித்தார்.

இறந்தவன் மிகவும் கெட்டவன். பெரிய திருடன். மது அருந்திவிட்டு எதிர்ப்பட்டவர்களையெல்லாம் தாக்கும் குணம் உள்ளவன். அவனைப் பற்றி அனைவருக்குமே தெரியும் என்பதால் ஹாலில் சலசலப்பு ஏற்பட்டது.

“நல்ல வேளை போய்த் தொலைந்தான். எவ்வளவு பெரிய பாவி அவன்’’ என்றார் ஒருவர்.
‘‘கொடுங்கோலன். அப்பாவிகளை அடித்து மிரட்டுவான் அந்தக் கயவன்’’ என்றார் மற்றொருவர்.
‘‘அவன் குணக்கேடன். அடிக்கடி சிறைக்குச் செல்பவன்’’ என்று வெறுப்புடன் ஒருவர் சொன்னார்.
‘‘பக்தர்களிடம் கூட அவன் வழிப்பறி செய்வான்’’ என்றார் ஒரு பெண்மணி.
இப்படியாக ஹால் முழுக்க அவனை எல்லோரும் திட்டிக்கொண்டும், சபித்துக் கொண்டும் இருந்தார்கள்.
அத்தனை பேரும் ஒரு வழியாகப் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார் பகவான். அவருக்கும் அந்தத் திருடனைப் பற்றித் தெரியும் என்பதால் அவர் ஏதாவது  சொல்வாரா என்று பக்தர்கள் எதிர்பார்த்தார்கள்.
பகவான் ரமணர் வாய் திறந்து முதல் முறையாக அவனைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசினார்.
அவர் பேசியது என்ன?
‘‘அவன் ரொம்ப துப்புரவான மனிதன். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை குளிப்பானே!’’
இவ்வளவுதான் அவர் சொன்னது. எத்தனை பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை பகவான் இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
மற்றவர்களிடம் உள்ள குறைகளைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே கவனியுங்கள். அப்போதுதான் நீங்கள்  சந்தோஷமாக இருப்பீர்கள் என்று 100 பக்கம் எழுத வேண்டிய ஒரு விஷயத்தை பத்தே வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதுதான் பகவான்.
எல்லோரிடமும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் நாம் பார்க்கக் கற்றுக் கொண்டால் சண்டையோ, சச்சரவோ, பொறாமையோ, எரிச்சலோ நம்மை நெருங்குமா என்ன?
மெரிக்காவிலிருந்து சில வெள்ளைக்காரர்கள், பகவானை தரிசிப்பதற்காக திருவண்ணாமலை ஆசிரமத்துக்கு வந்தார்கள்.
ரமணரிடம் பல ஆன்மிக சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள். அவர்களில் துடுக்குத்தனம் கொண்ட ஒருவரும் இருந்தார்.
அந்த வெள்ளைக்காரர், பகவானைப் பார்த்து, “இஷ்ட தெய்வம் என்று சொல்கிறார்களே, அப்படி ஒருவர் உண்டா?’’ என்று கேட்டார்.
அதற்கு பகவான், “ஆம். ஈஸ்வரன் இருக்கிறானே’’ என்றார்.
அந்த அமெரிக்கர் சற்றுக் கிண்டலாக, “என்ன? கண், மூக்கு, காது, கை, கால் இவற்றோடா?’’ என்று கேட்டார்.
”ஆம். அதில் என்ன தவறு? உங்களுக்கு அந்த அங்கங்களெல்லாம் இருக்கும் போது, கடவுளுக்கு இருக்கக் கூடாதா?’’ என்று பகவான் பதில் சொன்னார்.
உடனே அந்த வெள்ளைக்காரர் சிரித்தார்.“இந்துக்களின் நூல்களில் கடவுளுக்கு இப்படி கை, கால் என்று அவயவங்கள் இருக்கின்றன என்று எழுதியிருப்பதைப் படிக்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது!’’
பகவான் அந்த அமெரிக்கரையே உற்றுப் பார்த்தார்.“அப்படியா? அப்படியானால் உங்களுக்கும் கை, கால் போன்ற அங்கங்கள் எல்லாம் இருக்கின்றனவே,அவற்றைப் பார்த்தால் உங்களுக்கு ஏன் சிரிப்பு வரவில்லை?’’ என்று கேட்டார்.
உடனே அருகில் உள்ளவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.
அந்த அமெரிக்கர் தலை குனிந்தார். அவமானத்தால் அல்ல. சரியான பதில் தனக்குக் கிடைத்ததே என்ற நன்றிப் பெருக்கால்.
SOURCE::::: input from a friend of mine
 Natarajan