செம்பரம்பாக்கம் ஏரியும் சென்னை வெள்ளமும்….

அடுத்தடுத்து விமர்சனங்கள்.. அடுக்கடுக்காய் கேள்விகள்..

*

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எப்போது அதிக அளவில் உபரி நீரை வெளியேற்றுவது என்பதில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும், இதுவே சென்னையின் வெள்ளப் பாதிப்புகளை அதிகமாக்கி விட்டது என்றும் பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது.

குறிப்பாக டிசம்பர் 1-ம் தேதி இரவு வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அன்று காலை நிலவரப்படி வெறும் 900 கன அடி மட்டுமே வெளியேற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி பிரதானமாக எழுப்பப்படுகிறது.

நவம்பர் 30, டிசம்பர் 1-ம் தேதி வாக்கில் கனமழை பெய்யக் கூடும் என உள்நாட்டு வானிலை ஆய்வு மையங் களும், சர்வதேச வானிலை நிறுவனங் களும் எச்சரிக்கை செய்தன. எனினும் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத காரணத்தால் செம்பரம்பாக்கம் அணையின் நீர் அளவை கையாள்வதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அணை நீர்மட்ட நிலவரம்

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. சென்னை குடிநீர் வடிகால் வாரிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி ஏரியின் நீர் இருப்பு வெறும் 228 மில்லியன் கன அடி மட்டுமே. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் அடுத்த பத்து நாட்களிலேயே மூன்று மடங்கு அதிகரித்து, நவம்பர் 10-ம் தேதி 791 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உயர்ந்தது.

அதன் பிறகு பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது. குறிப்பாக நவம்பர் 16-ம் தேதி வினாடிக்கு 9 ஆயிரத்து 717 கனஅடி, மறுநாள் 17-ம் தேதி 12 ஆயிரத்து 31 கன அடி என்ற அளவுக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் அணையின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. நவம்பர் 1-ம் தேதி 228 மில்லியன் கன அடி மட்டுமே இருந்த நீர் இருப்பு 17-ம் தேதி 3 ஆயிரத்து 197 மில்லியன் கன அடி என்ற அளவுக்குத் தண்ணீர் பெருகியது.

இதன் காரணமாக முதல் நாள் வரை வினாடிக்கு வெறும் 64 கன அடி வரை மட்டுமே வெளியேற்றப்பட்ட உபரி நீர் 17-ம் தேதி திடீரென 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அதன் பிறகு அணையின் நீர் இருப்பை 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மேல் இருக்குமாறு பொதுப் பணித் துறையினர் பராமரித்து வந்தனர். நவம்பர் 25-ம் தேதி வினாடிக்கு 5 ஆயிரத்து 629 கனஅடி நீர்வரத்து இருந்த போது 5 ஆயிரம் கன அடியும், நவம்பர் 28-ம் தேதி 610 கன அடி நீர் வந்தபோது, 500 கன அடியும் வெளியேற்றினர். அதாவது ஏரிக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப வெளியேற்றும் நீரின் அளவையும் பராமரித்தனர்.

இதற்கிடையே நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மிகக் கனத்த மழை பெய்யக் கூடும் என்ற வானிலை எச்சரிக்கை அறிவிப்புகள் வந்து கொண்டே இருந்தன. இந்த நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய ஏரிகள் முழுவதும் நிரம்பி இருந்தன. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைப் போலவே மழை பொழிந்தால் அந்த ஏரிகளில் இருந்து வினாடிக்குப் பல்லாயிரக்கணக்கான கனஅடி வீதத்தில் உபரி நீர் வெளியேறும் என்பதும், அவை யாவும் சென்னைக்குள்தான் புகும் என்பதும் எதார்த்தம். ஆகவே, அதே நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் பெரிய அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டால் பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் என்பதும் நிச்சயம்.

ஆனால் இந்த ஆபத்தைச் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் கணிக்கத் தவறிவிட்டனர் என்பதே இப்போது பிரதான விமர்சனமாகக் கூறப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரிய இணையதளத் தகவல்களின்படி, நவம்பர் 29-ம் தேதி வினாடிக்கு 570 கன அடி, நவம்பர் 30-ம் தேதி வினாடிக்கு 600 கன அடி என்ற அளவிலேயே நீர் வெளியேற்றம் இருந்துள்ளது.

பெரும் மழை பெய்த டிசம்பர் 1-ம் தேதி கூட முதலில் வினாடிக்கு 900 கன அடி என்ற அளவில் மட்டுமே நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஏரிக்கான நீர் வரத்து அதிகரிக்கவே, அதன் பிறகு வெளியேற்றும் நீரின் அளவையும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதி அதிகபட்சமாக 29 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

நவம்பர் 30-ம் தேதியே மழை தொடங்கிவிட்ட போதிலும் செம்பரம் பாக்கம் அணையிலிருந்து அதிக அளவு உபரி நீரை வெளியேற்றாததன் காரணம் என்ன என்பதுதான் இப்போது விவாதத்துக்குரிய கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்துப் பொதுப் பணித் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

ஓர் அணையிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு நீரை வெளியேற்ற வேண்டும் அல்லது எவ்வளவு வரை நீரை தேக்கி வைத்திருக்கலாம் என்பதைத் துறைத் தலைவர்களாக இருக்கக் கூடிய ஐஏஎஸ் அதிகாரிகளால் கணிக்க இயலாது. பல ஆண்டு காலம் தொடர்ந்து அந்தந்தப் பகுதியிலேயே பணியாற்றி வரும் பொதுப்பணித் துறையின் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களால்தான் அதனைத் தீர்மானிக்க முடியும். அந்தந்தப் பகுதியில் பெய்யும் மழையின் அளவு, அணைக்கு வரும் நீர்வரத்து, அன்றைய நீர்மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த அளவுக்கு நீரை அணையில் வைத்திருக்கலாம் மற்றும் எவ்வளவு உபரி நீரை வெளியேற்றலாம் என்பதை அவர்களால் தெளிவாகக் கணிக்க முடியும். இவ்வாறு அவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்தும் நடைமுறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கிறது.

ஆனால் அண்மைக் காலங்களில் இந்தப்போக்கு மாறியுள்ளது. சிறிய அணைகளில் கூட எவ்வளவு நீர் வெளியேற்ற வேண்டும் என்பதை உயர் அதிகாரிகளின் உத்தரவைப் பெற்றுச் செயல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மக்களுக்கு அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் செம்பரம்பாக்கம் அணையிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு உபரி நீரைத் திறக்க வேண்டும் என்பது அணையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் பொறியாளர்களுக்கும், அங்குள்ள களப்பணியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்காக அவர்கள் காத்திருக்க நேர்ந்ததாலேயே முன்னதாகவே அதிக அளவில் உபரி நீரைத் திறக்காமல், திடீரெனப் பெருமளவு உபரி நீர் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு கூறப்படுவது உண்மையாக இருப்பின், சென்னையின் வெள்ளப் பாதிப்புகளுக்கு இவைதான் முக்கிய காரணம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

குடிநீருக்காக தேக்கப்பட்டதா?.

சென்னையில் கடந்த ஜூன், ஜூலை தொடங்கி, நவம்பர் முதல் வாரம் வரை கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. டிசம்பர் 1-ம் தேதி 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கும் மேல் இருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் நவம்பர் 1-ம் தேதி வெறும் 228 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருந்தது. இதிலிருந்தே நவம்பர் முதல் வாரம் வரை எந்த அளவுக்குக் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சென்னைக்குக் குடிநீர் விநியோகம் செய்யச் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மிகவும் கஷ்டப்பட்டனர். ஒருகட்டத்தில் மழை வேண்டிப் பல கோயில்களில் வருணப் பகவானுக்குப் பூஜைகள் கூடச் செய்தனர்.

இந்தச் சூழலில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட குடிநீர் தரும் ஏரிகளில் இருந்து அதிக அளவுக்கு உபரி நீரை வெளியேற்ற வேண்டாம் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டதாகவும் கூறப்படு கிறது. ஒருவேளை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போலக் கனமழை பெய்யாமல் போய்விட்டால், குடிநீருக் காகத் தேக்கி வைத்திருக்கும் பெருமளவு தண்ணீரை வீணாக்கி விடக் கூடாதே என்ற அச்சத்துடன் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அடுத்த நான்கைந்து மாதங்களில் வரப்போகும் சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது எனக் கருதி, அதிக அளவு உபரி நீரைத் தக்க சமயத்தில் வெளியேற்ற அதிகாரிகள் தயங்கினார்களா என்ற கேள்வியும் உள்ளது.

ஆக, காரணங்கள் எதுவாயினும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நேரத்தில் 29 ஆயிரம் கன அடி அளவுக்கு உபரி நீர் திறக்கப்பட்டது சென்னையின் வெள்ளப் பாதிப்புகளுக்கு ஒரு காரணமாகி விட்டது.

நவம்பர் 17-ம் தேதி செம்பரம்பாக்கத் திலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டபோது அடையாற்றில் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் டிசம்பர் 1-ம் தேதி இரவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற ஏரிகளில் இருந்து அடையாற்றுக்கு சுமார் 40 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் வந்து கொண்டிருந்த நேரத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட 29 ஆயிரம் கன அடி உபரி நீரும் அதனுடன் சேர்ந்து கொண்டதால் பாதிப்புகள் அதிகமாயின.

ஆகவே, இனியாவது துல்லியமான நீர் மேலாண்மை என்பதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதுவே எதிர்காலத்தில் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளைக் குறைக்க உதவியாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Source…..வி.தேவதாசன் ….www.tamil.thehindu.com

Natarajan

” ஈஸ்வர், அல்லா தேரே நாம்…” ” இந்தியாவிலா சகிப்புத்தன்மை இல்லை….?”

நான்கு நாள்களாக கழுத்தளவு வெள்ளத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவிட்டு, கால்களில் சேற்றுப் புண்களுடனும், கண்களில் கெஞ்சும் தூக்கத்துடனும், புரசைவாக்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவாபாரதி தலைமை அலுவலகத்துக்கு வருகிறார் ஜீவானந்தம், “ஸ்வயம் சேவக்’ எனப்படும் லட்சக்கணக்காண ஆர்.எஸ்.எஸ்-ஸின் தன்னார்வலர்களில் ஒருவர்.
“சில மணிநேரமாவது தூங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாமே…?’ என அவரைப் பார்த்துப் பரிவுடன் கேட்கிறார் அந்த அமைப்பின் மருத்துவ உதவி ஒருங்கிணைப்பாளர் கே.சீனிவாசன். தான் அணிந்திருக்கும் சட்டையில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளை சுட்டிக்காட்டி, “சேவை மூலமாக பண்பாடு, அதன் மூலமாக சமத்துவம். அதற்குப் பிறகுதான் தூக்கம். எனது சகோதர, சகோதரிகள் பேரழிவில் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, என்னால் நிம்மதியாக எப்படித் தூங்க முடியும்?’ – அமைதியாகக் கேட்கிறார் ஜீவானந்தம்.
ஆர்.எஸ்.எஸ். என்றால் மதத் தீவிரவாத அமைப்பாகத்தான் பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், இந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள், இரவு பகலாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள், சேவைகளைத் தொடர்கிறார்கள்.
“காவித் தீவிரவாதிகள் என்றார்கள், கொடியவர்கள் என்றார்கள். ஆனால், அவர்கள்தான் வெள்ளத்திலிருந்து என்னை மீட்டார்கள்’ – சொல்லும்போதே மன்சூரா பேகத்துக்கு குரல் தழுதழுக்கிறது. “அம்மா, உதவி செய்யும் வாய்ப்பைக் கொடுத்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’ எனக் கையெடுத்து வணங்குகிறார் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் பசுபதி.
நாங்கள் விளம்பரத்தை நாடி ஓடுவதில்லை. ஏதாவது ஒரு பத்திரிகையிலாவது எங்கள் மீட்புப் பணிகள் சம்பந்தமான தகவல்கள் இடம் பெற்றனவா…?’ – கேட்கிறார் ஆர்.எஸ்.எஸ். பிரசாரக் எனப்படும் முழுநேர ஊழியர் முருகன்.

ராம.ராஜசேகர் – ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாநில “சேவா பிரமுக்’. அந்த அமைப்பின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் சேவைப் பணிகளுக்கு இவர்தான் ஒருங்கிணைப்பாளர். “கடந்த மாதத்தில் மட்டுமே சென்னையில் மூன்று முறை பலத்த மழை பெய்தது. முதல் மழை பெய்தபோதே நிவாரணப் பணிகளை ஆரம்பித்து விட்டோம். டிசம்பர் மாதம் முதல் தேதி கனமழை, வெள்ள அபாயம் என சேதி வந்தபோது சேலத்தில் இருந்தேன். அன்றிரவே, ரயிலைப் பிடித்து, சென்னை வந்தேன். என்றாலும், யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால், நான் வருவதற்கு முன்னதாகவே குறைந்தபட்சம் நூறு இடங்களில் எங்கள் தொண்டர்கள் மீட்புப் பணிகளை ஆரம்பித்து விட்டனர். சக மனிதர்கள் பாதிக்கப்படுவதை எந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டனாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாருடைய கட்டளைக்கும் காத்திருக்காமல், தாங்களாகவே பணிகளை ஆரம்பித்து விடுவார்கள். இதைத்தான் எங்கள் இயக்கம் சொல்லிக் கொடுத்திருக்கிறது’ என்று பெருமையாகச் சொல்கிறார் ராம.ராஜசேகர்.
வில்லிவாக்கத்தில் தள்ளுவண்டிகளை வைத்துக் கொண்டு மார்பளவு வெள்ளத்தில் நின்றவாறு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். வடபழனியில், இரண்டு டிரம்களை கயிற்றின் மூலமாக இணைத்து மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். வளசரவாக்கத்தில், லாரி டயர்களைக் கொண்டு மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். சென்னையில் மட்டும் சுமார் 8 ஆயிரம் மக்களை வெள்ளத்திலிருந்து இவர்கள் மீட்டுள்ளனர் என்பது வெளியே தெரியவராத தகவல்.

புரசைவாக்கத்தில் முதல் மையத்தை அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 2-ஆம் தேதி ஆரம்பித்தோம். அதற்கு முன்னதாகவே, சென்னையின் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிறு மையங்களை அமைத்து விட்டனர். குரோம்பேட்டை, மணலி, வில்லிவாக்கம், கே.கே.நகர் என 17 இடங்களில் சேவா மையங்களை அமைத்துள்ளோம். அவற்றின் கீழ் பல துணை சேவை மையங்கள் உள்ளன. ஒவ்வொரு சேவா மையத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குச் சொந்தமான பள்ளிகள், ஆதரவாளர்களின் மண்டபங்கள், வீடுகள் எல்லாமே ஏதோ வகையில் சேவா மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இப்படியாக சென்னையில் மட்டுமே 83 இடங்களில் சேவைகளை ஒருங்கிணைத்துள்ளோம். மூன்று நாள்களுக்கு ஒரு தடவை, இந்த மையங்களில் உள்ளவர்கள் புரசைவாக்கத்தில் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம்’ என்கிறார் ராம.ராஜசேகர்.
ஓட்டேரியில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் தெருவில் மார்பளவு வெள்ளத்தில் மிதந்தபடி சென்று வீடு வீடாக உணவு கொடுக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். மாடியில் இருந்து இறங்கிவரும் ஒரு மூதாட்டி, “வெள்ளத்திலும் வீடு தேடி வந்து உணவு கொடுக்கும் நீங்கள் நல்லா இருக்கோணும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்.
வில்லிவாக்கம், சிட்கோ நகரில் தள்ளுவண்டியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களிடம் தனது மனைவி, குழந்தைகளைக் கொடுத்து “இவர்களை பத்திரமாக மீட்டுத் தாருங்கள். நான் அடுத்த படகில் வருகிறேன்’ என்று ஒரு முஸ்லிம் சகோதரர் கூறுகிறார்.

மீட்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு கிடைப்பதையும் இவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். வெள்ள பாதிப்புக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 50 இலவச மருத்துவ முகாம்களை நடத்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முகாமிலும், ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயன் பெற்று வருகிறார்கள். சேற்றுப் புண்ணுக்கான மருந்தில் இருந்து, பிளீச்சிங் பவுடர் வரைக்கும், குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் இருந்து பெண்களுக்குத் தேவையான பிரத்யேக பொருள்கள் வரைக்கும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் மருத்துவ முகாம்களில் கிடைக்கின்றன. அந்தந்தப் பகுதியில் வசிக்கும் மருத்துவர்கள் தாங்களாக முன்வந்து மருத்துவ சிகிச்சை அளிப்பதையும், நூற்றுக் கணக்கான மக்கள் முகாமுக்கு வந்து மருந்துகளை வாங்கிச் செல்வதையும் பார்த்தோம்.

சைதாப்பேட்டையில் இருக்கிறது செட்டித் தோட்டம் என்ற எளியவர்கள் வாழும் பிரதேசம். இயற்கையின் சீற்றத்தில் சிக்கிச் சின்னாபின்னமான இப்பகுதியில் நுழைபவர்களைக் குடலைப் பிடுங்கும் துர்நாற்றம்தான் வரவேற்கிறது. அங்கே, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த பல நூறு இளைஞர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 3,000 அடித்தட்டு மக்கள் வாழும் இங்கே, முழு நேர மீட்புப் பணிகளையும், துப்புரவுப் பணிகளையும் இவர்கள்தான் செய்கிறார்கள்.
“ஏழைகளின் பாதையில் குறுக்கிடும் எல்லாவற்றையும் களைவதுதான் எமது நோக்கம்’ எனச் சிரித்தவாறு சொல்கிறார் ரவூப். இவர் பெங்களூரில், பிரபல மென்பொருள் நிறுவனமொன்றில் உயர் பதவியில் இருக்கிறார். இவரின் நண்பர் வசீம் அக்ரம், பல் மருத்துவர். இவர்கள் அனைவருமே, எந்த விதமான முகச்சுளிப்பும் இல்லாமல், குடலைப் புரட்டும் துர்நாற்றத்துக்குள்ளும் இறங்கி “தனி ஒருவ’னாக வேலை பார்க்கிறார்கள். வெள்ளம் அடித்துவிட்டுச் சென்ற குப்பைக் கூளங்களை, தொழில் முறை வழக்குரைஞரான முகமது யூசுப், தனது கைகளால் அள்ளிச் சுத்தம் செய்கிறார்.

“எமது சக மனிதர்கள் துன்பப்படும்போது எப்படித்தான் வாய்மூடி மௌனியாகப் பார்த்துக் கொண்டிருப்பது?’ எனக் கேட்டு அமைதியாகப் புன்னகைக்கிறார் ஹாஜா கனி, த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர். வரலாறுகாணாத இந்த வெள்ளத்தில் த.மு.மு.க.வினர் ஆற்றிய பணிகள் அளப்பரியன.
கடந்த மாதம் 15-ஆம் தேதி, முதல் கட்ட மழை தொடங்கியபோதே த.மு.மு.க. மாணவர் அணியினர் களத்தில் இறங்கி எந்தெந்த இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்பதை சர்வே எடுத்து அதை அறிக்கையாகத் தயார்செய்து, தாம்பரம் நகராட்சியிடம் கொடுத்ததுள்ளனர். 16-ஆம் தேதியன்றே சுமார் 30 பேர் வரைக்கும் பயணிக்கக் கூடிய படகொன்றை கோவளத்தில் இருந்து தருவித்து, இரவும் பகலுமாக ஓட்டி அன்று மட்டுமே சுமார் ஆயிரம் பேரை த.மு.மு.க. தொண்டர்கள் மீட்டுள்ளனர். எந்த ஓய்வும் இல்லாமல், இரவு பகலாக இவர்களின் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. மீட்புப் பணிகளில் ஈடுபட்ட முன் அனுபவங்களும், பயிற்சிகளும் இருந்ததால் இலகுவாக இயங்கக் கூடியதாக இருந்தது என்கிறார்கள் த.மு.மு.க. தொண்டர்கள்.
“முடிச்சூர் பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்து முப்பதே நாளான பச்சிளம் குழந்தையுடன் ஒரு குடும்பம் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வந்தன. மிகுந்த சிரமங்களுக்கிடையில் அந்தப் பகுதிக்கு சென்றோம். பெருமழை. மின்சாரம் இல்லாமல், அந்தப் பிரதேசமே கும்மிருட்டாக இருந்தது. கரண்ட் கம்பிகளைப் பிடித்து எம்மை சமநிலைப்படுத்தியவாறு சென்று அவர்களை மீட்டோம். அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகமும், அந்தத் தாயின் பரிதவிப்பும் இன்னும் கண்களில் நிற்கிறது. சக மனிதர்களுக்கு உதவுவதைத்தானே இஸ்லாம் போதிக்கிறது…’ – கண்களில் அமைதியுடன் பேசுகிறார் யாகூப்.
பெரியார் சமத்துவபுரம், முடிச்சூர் சாலை, கிஷ்கிந்தா ஆகிய பகுதிகளில் த.மு.மு.க.வினர் பெருமளவு மீட்புப் பணிகளை மேற்க்கொண்டுள்ளனர். சென்னையிலுள்ள அத்தனை பள்ளிவாசல்களும், மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக பாரபட்சமின்றி திறந்து விடப்பட்டன. சாதி, மத பேதமின்றி அனைவருமே அங்கு தங்க அனுமதிக்கப்பட்டனர். தாம்பரம் பகுதியில் மட்டுமே சுமார் 3,000 பேரை இவர்கள் மீட்டுள்ளனர் என்பது அதிசயிக்கவைக்கும் புள்ளி விபரம்தான்.

தாவூத் மியாகான். காயிதே மில்லத்தின் பேரன். இந்த வெள்ளக் காலத்தில் இவர் செய்தவை அளப்பரிய பணிகள்தான். மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியை மையமாக வைத்து இவர்கள் சுமார் 1,000 பேருக்கு உணவளித்து வருகிறனர். அந்தக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர். கூடவே, வீட்டுக்குத் தேவையான சமையல் பாத்திரங்களையும் வழங்கி வருகிறார்கள். பல இடங்களில் பிரதான வீதிகளில் மட்டுமே மீட்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக செம்மஞ்சேரியின் உட்புறமாக, உணவில்லாமல், வெள்ளத்தில் தவித்த பல நூறு குடும்பங்களை மீட்டுள்ளனர். 2,500 லிட்டர் ஆரோ பிளாண்டை மக்களுக்காக திறந்துவிட்டு மக்களின் துயரைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முஸ்லிம் சகோதரர்களால் மீட்டு வரப்பட்டு, தாம்பரம் பேபி பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் பேருக்கு துறைமுகச்செல்வி என்பவர் மூன்று வேளையும் உணவு கொடுக்க முன்வந்தார். முஸ்லிம் அமைப்புகளுக்கும், துறைமுகச் செல்விக்குமான தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் தாம்பரம் இன்ஸ்பெக்டர் ஆல்வின் ராஜ்.
சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜமியத் உலமாயே ஹிந்த் அமைப்பின் சார்பில் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 80,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை 15,000 உணவுப் பொட்டலங்களும், வில்லிவாக்கம், திருநின்றவூர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை 3,648 உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன. இது தவிர 10,000 குடும்பங்களுக்கு போர்வை, பாத்திரங்கள், உணவுப் பொருள்கள் கொண்ட பெரிய பைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நந்தனம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, முத்தமிழ் நகர், பொழிச்சலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,800 பைகளில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோட்டூர்புரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. புரசைவாக்கம் பெரிய மசூதியின் சார்பில் 30,000 உணவுப் பொட்டலங்களும், பாத்திரங்கள், ஆடைகள் கொண்ட பெரிய பைகள் 3,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் சகிப்புத்தன்மை இருக்கிறதா? என்பது தொடர்பாக நாம் நடத்திவரும் வீண் விவாதங்களுக்கான பதில் இந்தச் சம்பவங்களிலேயே ஒளிந்துள்ளது. இந்தியாவிலா சகிப்புத்தன்மை இல்லை….?

Source……..By -அருளினியன்  in http://www.dinamani.com

Natarajan

 

” உலகம் அழிந்துபோகாததற்கு இவர்கள்தான் காரணம்…”

சென்னை மழை வெள்ளத்தின் தாண்டவம் இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்வதற்குள் அநேகமாக சென்னையில் இருந்த அனைவரும் இந்தப் பேரிடருக்குள் சிக்கிக்கொண்டு தள்ளாடினோம்; தள்ளாடிக்கொண்டிருக்கிறோம்; தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறோம், முற்றிலும் வீழ்ந்துபோய்விடவில்லை. இதற்குக் காரணம் மழை, வெள்ளத் தாண்டவத்தின் உக்கிரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மனிதநேயத்தைக் காட்டியவர்கள்தான்.

பெரிய பெரிய விஷயத்துக்கெல்லாம் போகத் தேவையில்லை. மழை ஓய்ந்த பிறகு, நீரின் முற்றுகையில் நான்கு நாட்கள் தவித்த பிறகு நண்பர் ஒருவர் மடிப்பாக்கத்தில் மூழ்கிய தனது வீட்டிலிருந்து அலுவலகத்துக்குக் கிளம்பி நடந்துவந்துகொண்டிருக்கிறார். அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பின்னால் ஒரு கார் வந்து நிற்பதுபோல் தோன்றியிருக்கிறது. திரும்பிப் பார்த்தால் காரிலிருந்து யாரோ ஒருவர் இறங்கிச் செல்வது தெரிந்திருக்கிறது. நண்பர் மேற்கொண்டு தன் வழியைப் பார்த்து நடந்து சென்றிருக்கிறார். கார் ஹாரன் சத்தம் கேட்டிருக்கிறது. நண்பர் ஓரமாக நடக்க முயன்றிருக்கிறார். அவரைச் சற்றுக் கடந்து பக்கவாட்டில் வந்து நின்றிருக்கிறது கார்.

கார்காரர் காரின் ஜன்னலை இறக்கிவிட்டுப் பாதசாரி நண்பரை அழைத்து “எங்கே போகணும் சொல்லுங்க, இறக்கிவிடுகிறேன்” என்றிருக்கிறார். நண்பருக்கு பேச்சே வரவில்லை. காருக்குள் ஏறிப் பின்சீட்டில் அமர்ந்துகொள்கிறார். நம்மிடம் இந்தச் சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டபோது நண்பர் இப்படிச்சொன்னார், “இதுபோன்ற ஒரு உதவியை இதற்கு முன் செய்தது ஒரு மீன்பாடி வண்டிக்காரர்தான். நடு இரவில் குழந்தைகள் மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றுவிட, என்ன செய்வதென்று நின்றுகொண்டிருந்தபோது அந்த வழியே வந்த மீன்பாடிக்காரர் தானாகவே வந்து, என்ன விஷயம் என்று கேட்டு உதவி செய்தார். அடித்தட்டு மக்கள் எப்போதும் அப்படித்தான். அதில் எந்த அதிசயமும் இல்லை.

ஆனால், மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தானாக லிஃப்ட் கொடுக்கும் அதிசயத்தை நிகழ்த்தியது இந்த மழை, வெள்ளம்தான். காரில் உட்கார்ந்த பிறகுதான் உணர்ந்தேன், எனக்கு முன்னாலும் அவர் ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்து இறக்கி விட்டிருக்கிறார்.”

காரில் லிஃப்ட் கொடுப்பது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம். ஆனால், இந்த மழை, வெள்ளம் சமூகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாய்ந்து, அதன் உள்ளே புதைந்துபோயிருந்த பரிவுணர்வையெல்லாம் எந்த அளவுக்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பதற்கு ஒரு பருக்கை பதம் இது.

சிறிய அளவில் இப்படியென்றால் பெரிய அளவில் எத்தனையோ பேர் என்னவெல்லாமோ செய்து, ஏதும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களையெல்லாம் குற்றவுணர்வு கொள்ளவும் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் முகமற்றவர்கள். அதாவது, சமூகத்தால் அறியப்படாதவர்கள் என்பதுதான் மகத்தான செய்தி. உதவி செய்ய வந்தவர்களின் முகத்தில் மனிதம் என்ற ஸ்டிக்கரைத் தவிர வேறு ஏதும் ஒட்டப்பட்டிருக்கவில்லை என்பதை நாம் கவனித்தாக வேண்டும். முகம் தெரிந்த மனிதர்களுக்குச் சளைக்காமல் முகம்தெரியாத மனிதர்கள் எத்தனையோ பேர் எவ்வளவோ உதவிகளைச் செய்து தமிழக, இந்திய மக்களை மட்டுமல்ல உலகத்தினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.

அடையாறுக்குப் பக்கத்தில் மழை, வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப் பட்டிருக்கும் பகுதியொன்றில் ஒருவர் தனது முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, பெரிய பாத்திரத்தில் சூடாகப் பால் காய்ச்சிக்கொண்டு, தண்ணீரில் கவனமாக நடந்துசென்று சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் விநியோகித்திருக்கிறார். அவர் யார் என்ன என்று கேட்டதற்கு, “அதெல்லாம் முக்கியமில்லாத விஷயம், நான் போய் இன்னும் பால் எடுத்துவருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். மனிதத்துக்கு சாதி, மதம், மொழி மட்டுமல்ல முகமும் கிடையாது என்பதை அவர் நிரூபித்துவிட்டிருக்கிறார்.

இதுவரை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவராத தியாகம் அடுத்த நபருடையது. இன்னொரு நண்பர் சொன்ன தகவல். சாலையை மூழ்கடித்த வெள்ளத்தில் காரில் அவர் போய்க்கொண்டி ருந்தபோது ஒரு முஸ்லீம் பெரியவர் நடுச் சாலையில் கையில் ஒரு செடியைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறார். இறங்கி என்னவென்று விசாரித்த அந்த நண்பருக்குக் கண்கலங்கிவிட்டது.

சாலையின் அந்த இடத்தில் ஒரு குழி ஏற்பட்டுவிட்டது என்றும், யாரும் அதற்குள் விழுந்துவிடக் கூடாது என்பதால் அடையாளத் துக்காகச் செடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்றும் அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். ஊன்றிவிட்டு நீங்கள் போயிருக்கலாமே என்று நண்பர் கேட்டதற்கு, ஓடும் நீரில் செடி நிற்க மாட்டேன் என்கிறது, அதனால்தான் அதைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்று அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல நண்பர்களே, அடுத்து வரும் விஷயம் தான் நம்மை மிக மிக அற்பர்களாகவும், அந்த முஸ்லீம் பெரியவரை மகாத்மாவாகவும் ஆக்குகிறது.

நண்பரிடம் அந்தப் பெரியவர் இப்படிச் சொல்லியிருக்கிறார், ‘கடந்த நான்கு மணி நேரமா நான் இப்படி நின்னுக்கிட்டிருக்கேன். யாராச்சும் பார்த்துக்குவாங்கனு அப்படியே விட்டுட்டுப் போவ மனசே வரல.”

அந்தப் பெண்மணியின் வீட்டை வெள்ளம் முழுவதுமாக மூழ்கடித்துவிட்டது. கணவர், குழந்தைகளெல்லாம் எங்கெங்கோ தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அலுவலகம் ஒன்றில் துப்புரவுப் பணியைச் செய்துவருபவர் அவர். எல்லாவற்றையும் இழந்திருக்கும் நிலையில் அப்படியே சும்மா இருந்துவிட முடியுமா? பிழைப்பு நடத்தியாக வேண்டுமல்லவா! அலுவலகம் வந்துகொண்டிருக்கிறார்.

வேலை முடிந்த பின் எங்கே செல்வீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, “வீட்டுக்குத்தான்” என்று பதில் வந்தது. இந்த நிலையில் வீட்டுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டால், “பாவங்க, ஏழு தெருநாய்களுக்கு நான்தான் சோறு போட்டு வளக்குறேன். நான் இல்லாட்டி அதுங்க அவ்வளவுதான். அதுங்களுக்காக நான் அங்க போய்த்தானே ஆவணும்.”

அதே போல் ஹிப்ஹாப் தமிழன் பகிர்ந்துகொண்ட செய்தி இது: “வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம்-ஆர்.ஏ.புரம் பகுதிக்கு நடுவில்தான் இருக்கிறது எங்கள் அலுவலகம். 5 நாட்களாக இங்கு மின்சாரமோ தொலைத்தொடர்போ இல்லாததால் என்ன நடக்கிறது என்றுகூட தெரிந்துகொள்ள முடியாத சூழல். நாங்கள் வசிக்கும் தெருவில் மட்டும் நீர் தேக்கம் சற்று குறைவு.

சரி தப்பித்துவிட்டோமே, கிளம்பிவிடலாமா என நினைத்துத் தெருமுனைக்குச் சென்றால், எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணிப்பெண் விஜயா அக்கா ஒரு பெரிய பாத்திரத்தில் தன்னிடம் இருந்த அனைத்துப் பொருள்களையும் சமைத்துக்கொண்டிருக்கிறார். “தம்பி ஏரியா பூரா தண்ணிபா, நம்ம ஸ்டூடியோல இருக்குற தண்ணி கேனை எடுத்துக் குடுத்துறலாமா” எனக் கேட்கிறார். இதில் அவர் மகளுக்கு 1 வாரமாக டைஃபாய்டு வேறு. செருப்பால் அடித்ததுபோல் இருந்தது. யார் இவர்? எதற்காக இந்தச் சமூகத்திற்கு இவ்வளவு செய்ய வேண்டும்? இதில் நாம் வேறு கோவை கிளம்பிவிடலாமா என யோசித்திருக்கிறோமே. ச்சீ என்று தோன்றியது.’

இவர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகத்தாலும் தினசரி சூறையாடப்பட்டுக்கொண்டிருக்கும் வாழ்வு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பெண்களுடையது. ஆனால், அந்த நிலையிலும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் ஒரு நாள் பட்டினி கிடந்து சென்னைக்கு நிவாரணமாக ஒரு லட்சம் அனுப்பியிருக்கிறார்கள். சமூகத்தால் கொஞ்சம் கூட பொருட்படுத்தப்படாதவர்கள் நரிக்குறவர் இன மக்கள். இந்நிலையில் அவினாசியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் வெள்ள நிவாரணத்துக்காக 100 பாய்களை வழங்கியிருக்கிறார்கள்.

இருப்பவர் கொடுப்பதைவிட இல்லாதவர்கள் கொடுப்பது அளவில் எவ்வளவு சிறிதானாலும் மதிப்பில் கோடி கோடி மடங்கு உயர்ந்தது என்பதைப் பாலியல் தொழிலாளிகளும் நரிக்குறவர்களும் நிரூபித்திருக்கிறார்கள். எல்லோருக்குள்ளும் ‘மகாத்மா’ குணம் உறைந்திருக்கிறது. ஆனால், அதை உசுப்பிவிட்டு உயிர் கொடுத்திருப்பது இவர்கள் மட்டும்தான். ஆகவே, இவர்களை ‘மகாத்மாக்கள்’ என்று அழைப்பதில் எந்தத் தவறுமில்லை.

சென்னை வீழ்ந்துபோகாததற்கு மட்டுமல்ல, உலகம் இன்னும் அழிந்துபோகாததற்கும் இந்த மகாத்மாக்கள்தான் காரணம். ஏனென்றால், இன்னொரு மகாத்மா இப்படிச் சொல்லியிருக்கிறார்: “இன்று உலகில் எண்ணற்ற மக்கள் உயிரோடிருக்கிறார்கள் என்றால் அதன் பொருள், உலகம் தொடர்வது ஆயுத பலத்தினால் அல்ல. மாறாக உண்மை அல்லது அன்பு ஆகியவற்றின் பலத்தினால்தான் என்று பொருள். இத்தனை யுத்தங்கள் நடந்த பின்னரும் உலகம் அழியவில்லை என்பதே இந்த சக்திகளின் மறுக்க முடியாத வெற்றி.”

Source…….www.tamil.thehindu.com

Natarajan

” வெள்ளத்தில் தனியார்மயம்: இது என் அனுபவம்….”

மழையில் பல சாயங்கள் வெளுக்கின்றன. அதில் தனியார்மயமும் ஒன்று. இது என் அனுபவம். டிசம்பர் 2 இரவு திருச்சியில் ஒரு பெற்றோரிடமிருந்து தகவல் வருகிறது, “எங்களுடைய மகளும் வேறு சில பெண்களும் ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிக்கொண்டுள்ளனர். கைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. வசிக்கும் வீட்டின் முதல் மாடியில் மின்சார வசதியற்ற நிலையில் இருக்கின்றனர்” என்று.

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் நான் புறப்பட்டேன். உதவிக்கான பொதுத் தொலைபேசிகள்கூடச் செயலிழந்திருந்தன. முதலில் ஆவடிக்கும் அங்கிருந்து கோயம்பேட்டுக்கும் சென்றபோதுதான் திருவான்மியூர், தாம்பரம் பகுதிகளுக்குப் பேருந்து சேவையே கிடையாது என்று தெரிந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, “சிறப்புப் பேருந்து இருக்கிறது, மதுரவாயில் உள்சுற்றுவட்டப் பாதை வழியாகச் செல்லும். தாம்பரம் தவிர வேறு எங்கும் நிற்காது” என்று கூறினர். பிறகு தாம்பரம் சென்றபோது, ‘அந்தப் பகுதியில் கழுத்தளவு நீர் இருக்கிறது, உங்களால் போக முடியாது’ என்று எம்.டி.சி. நேரக்காப்பாளர் தெரிவித்தார். மாற்றுவழி என்ன என்று கேட்டபோது, இங்கிருந்து கிண்டி சென்று அங்கிருந்து திருவான்மியூர் செல்லலாம் என்றார். கிண்டியிலிருந்து திருவான்மியூருக்குத் தனியார் வேன்கள்தான் சென்றன.

திருவான்மியூர் பஸ் நிலையம் அருகிலேயே தண்ணீர் பெருக்கு. அங்கிருந்த காவலர்களை அணுகியபோது, அவர்களும் அங்கெல்லாம் போக முடியாது என்றே தெரிவித்தனர். அச்சம் அதிகரித்தது. பிறகு, சரக்கேற்றும் மினி லாரியில் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் வரை செல்லலாம் என்று கூறினர். அந்த மினி லாரியில் ஏறி அடுத்த தெரு திரும்பியதும் தொடை அளவுக்குத் தண்ணீர் பாய்ந்தது. அந்த லாரி அதற்கு மேல் செல்லாது என்று கூறிவிட்டனர். அங்கிருந்து மற்றொரு மினி லாரியில் ஒக்கியம் துரைப்பாக்கம் சென்றேன். அந்தப் பெண்கள் தங்கியிருந்த பகுதிக்குச் செல்லவே முடியாது, கழுத்தளவு தண்ணீர் என்றே அங்கும் அச்சமூட்டினர். இதற்குள் மதியம் 2 மணியாகிவிட்டது. துணிந்து அந்த இடத்துக்கே சென்றாகிவிட்டது. கரும் பச்சை நிறத்தில் பாசி பிடித்த தண்ணீரிலிருந்து கொப்புளங்கள் வந்தன. அதிலிருந்து மெல்ல ஒரு தலையும், பிறகு தோளும், பிறகு உருவமும் வெளிப்பட்டது. அவர் ஒரு இளைஞர். “இங்கிருந்து 4-வதாக இருக்கும் வீட்டிலிருந்தே இந்த நிலையில் வருகிறேன். நீங்கள் போக வேண்டிய இடம் இன்னும் உள்ளே பள்ளத்தில் இருக்கிறது, எப்படிப் போவீர்கள்?” என்றார். எனக்கு நீச்சலும் தெரியாது. அந்தக் குடியிருப்பின் இன்னொரு பகுதிக்குச் சென்றேன்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மணி 3.20 ஆகிவிட்டது. வானம் கறுக்கத் தொடங்கியது. மீண்டும் மழை வந்தால் நீர்மட்டம் உயர்ந்துவிடும். என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நீரில் இறங்க ஆரம்பித்தேன். முதலில் முழங்கால், பிறகு தொடை, அதன் பிறகு வயிறு, பின் மார்பு வரை தண்ணீர் ஏறியது. கையில் ரொட்டி, பழங்களைப் பையில் போட்டு எடுத்துச் சென்றிருந்தேன். அது தலையில்.

தண்ணீர் மேலே ஏற ஏற, நீரில் இறங்கியபோது நல்ல வேளையாக இரு இளைஞர்கள் டிரம் படகுடன் வந்தார்கள். “பெரியவரே மூழ்கிடாதீங்க. நாங்க அழைத்துச் செல்வோம்” என்றவர்கள் என்னை அதன் மீது ஏற்றினார்கள். இரு டிரம்களைக் கயிறுகளால் பிணைத்துக் கட்டி மறுபக்கத்தில் மரப்பலகை இருக்கையைப் பொருத்தியிருந்தனர். டிரம் நிலையாக மிதப்பதற்கு அதனுடன் ஒரு ஸ்டூலையும் சேர்த்துக் கட்டியிருந்தனர். இந்த டிரம் படகைத் தயாரிக்க அவர்கள் எங்கே கற்றார்கள் என்று வியப்பாக இருந்தது. இளைஞர்கள் இருவரும் ஜெயின் கல்லூரி மாணவர்கள். குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். வீடு மூழ்கியிருந்தது. கார் நிறுத்தும் போர்டிகோ படித்துறையாகப் பயன்பட்டது.

நான் தேடிச் சென்ற வீட்டில் 3 பெண்கள் மாடியில் இருந்தனர். பெண்களையும் என்னையும் அதே படகில் ஏற்றிக்கொண்டு வந்து கரை சேர்த்தனர். கண்களில் கண்ணீருடன் கையசைத்து அவர்களிடமிருந்து விடைபெற்றோம். வழியில் மேலும் 2 பெண்கள் சேர்ந்துகொண்டனர். பெரம்பூரில் ஒருவர் சகோதரருடன் வீடு போய்ச் சேர்ந்தார். பிறகு, வந்த வழி திரும்பிப் பயணமாகி வீடு வந்து சேர்ந்தோம். இரவு 10 மணி. கதை இதோடு முடியவில்லை. இனிதான் முக்கிய கட்டம்.

இரு நாட்களுக்கும் மேல் தண்ணீருக்கு நடுவில் சிக்கி, மின்சாரம் இல்லாததால் வெளியே தொடர்புகொள்ளாமல் இருந்த 4 இளம்பெண்களும் குளித்து, இரவு உணவு உண்டு, தங்களுடைய கைபேசிகளை உயிர்ப்பித்து அலுவலகம் உட்பட எல்லோரிடமும் தாங்கள் பத்திரமாக இருக்கும் தகவல்களை அனுப்பினார்கள். பெண்களின் வீட்டிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்து ஐந்து நிமிடங்கள் இருக்காது. அவர்கள் அலுவலகத்திலிருந்து ஒரு தகவல் செல்பேசியில் வந்தது. “வாழ்த்துகள். நீங்கள் இனி சென்னையில் அவதிப்பட வேண்டாம். நாளையே பெங்களூரு சென்றுவிடுங்கள். நாளையே வேலையைத் தொடர வேண்டும்!”

நான்கு பெண்களும் “ஊருக்குப் போய்ப் பெற்றோரைப் பார்த்துவிட்டு இரு நாட்கள் ஓய்வுக்குப் பின் திரும்புகிறோம்” என்றதற்கு, “ஏற்கெனவே வேலைகள் கெட்டுவிட்டன; தாமதித்தால் ஐதராபாத் செல்ல வேண்டியிருக்கும்” என்பதே மறுமொழி. பெண்கள் நால்வரும் மறுநாள் அதிகாலையே பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்கள்.

தனியார்மயம் தொடர்பாக நிறையப் பேசுகிறோம். கடந்த ஒரு வாரமாக நான் கேள்விப்படும் தனியார் நிறுவனக் கதைகள் பல கண்ணீர்விட வைக்கின்றன. தனியார்மயத்துக்கு மூளை என்னவோ நிறையத்தான் வேலை செய்கிறது; இதயம்தான் இறுகிப்போய்க் கிடக்கிறது!

– ரங்காச்சாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

Source….www.tamil.thehindu.com

Natarajan

How two IAF pilots saved the day….

In a precarious mission, Wing Commander Charles Simon and Squadron Leader S Venkatramanan and crew rescued a woman in the final stage of pregnancy from atop a water tank in Chennai. She delivered twins the next day!

Archana Masih/Rediff.com spoke to the pilots about that dramatic day.

IAF pilots C Simon and R Venkatramanan

IMAGE: Wing Commander Charles Simon and Squadron Leader S Venkatramanan rescued the pregnant lady from atop a water tank in flood-ravaged Chennai.

When Wing Commander Charles Simon and Squadron Leader S Venkatramanan launched their Cheetah helicopter from the Tambaram Air Force base on December 3, they had no idea what lay ahead that day.

Chennai had received its worst rainfall in 100 years on December 1-2 and the two Indian Air Force pilots along with several other helicopter pilots had been flying rescue missions from sunrise to sunset since December 1.

In the five days of the Chennai deluge, WinCo Simon and Sqn Ldr Venkat flew 30 sorties and did 36 rescues — but what they did on day 3 was not only unusual and praiseworthy but humanly touching.

With all communication lines broken down, the pilots received instructions from their operational control centre to rescue a young woman in the final stage of pregnancy. She was marooned on the roof of her home.

Armed only with approximate GPS coordinates, the pilots flew out in search of the pregnant woman. But what they encountered was a sea of houses with 10 to 12 people atop each roof.

 

It was the proverbial needle in a haystack kind of situation.

The Air Force men who rescued a pregnant woman in Chennai rains

IMAGE: The pilots with Corporal Arun Singh, left, and Corporal Rahul Kumar, right, who were part of the rescue team.

“We literally flew roof-to-roof in search of her. Since the sound of the chopper drowns all other sounds, we had to communicate in sign language with people on the roofs,” says Wing Commander Simon, a Category-A flying instructor at the IAF’s Flying Instructors School.

The very best of pilots make it to Category-A; they are entrusted with the task of training future instructors.

“There were around 1,000 people on different terraces and it was hard to spot her. We were circling for 10, 15 minutes and it seemed there was no hope of finding her,” adds co-pilot Squadron Leader Venkatramanan, a Chennai native who will complete ten years in the IAF next week.

“I was on the left side of the chopper and looking at every woman if she had a bump,” he says with good humour on the phone from Chennai.

Just then they spotted Deepthi Velchamy, the lady they had set out to rescue. Since her pregnancy would not permit her to be winched up, the pilots indicated that she be brought to the top of the water tank on the terrace.

Some personnel wearing orange overalls, indicative of the National Disaster Relief Force, were also on the terrace. They put Deepthi in a chair and positioned her on the tank.

The pilots, accompanied by Corporals Arun Singh and Rahul Kumar, meanwhile, circled around and made the approach. As WinCo Simon maouvered the chopper, Sqn Ldr Venkat seated on the side of the water tank, provided vital verbal navigation.

“Left… Left… Lower… Steady… Stop… Stop…” Sqn Ldr Venkat’s instructions must have sounded somewhat like this.

The chopper hovered low, its left skid (the Cheetah has sleigh-like landing gear) gently touched the water tank; its right skid was in the air. Deepthi was helped into the aircraft; tears were running down her face.

Sqn Ldr Venkat gestured to her that all would be okay and ten minutes later, they brought her to the Tambaram Air Base, where an Air Force lady gynaecologist awaited her. According to the rules, rescued civilians are flown to the air base and handed over to the civil administration.

It was here that Deepthi revealed that she was due for delivery that day itself and hers was a complicated case. Her medical papers were not with her and she needed to be urgently admitted to the Ramachandran Hospital that was aware of her medical history.

Since the roads were blocked and water-logged, the pilots were given clearance to airlift her to the hospital. At the medical college hospital, WinCo Simon was lucky to find a basketball court to land the chopper.

Deepthi delivered twin girls the following day. With all communication lines down, her request for rescue was conveyed to the authorities by her concerned sister in America.

Overwhelmed by the circumstances, her husband Karthik told the Press Trust of India, ‘I salute these brave men.’

But the two pilots say they are trained for situations like this.

People waiting to be transported at the air base

IMAGE: Stranded people waiting to be transported to safer places from the Tambaram Air Base.

“Hovering with a skid on a rooftop and with limited reference is challenging,” says WinCo Simon who was part of the team that rebuilt the Car Nicobar Air Force base after the 2004 tsunami.

“It was team work of pilots and crew. We are trained for such ops and the IAF is always geared up for any mission as the situation demands.”

The IAF operated 13 helicopters in torrential rain and marginal weather, flying 195 sorties, airlifting 450 stranded people, including women, infants and senior citizens. They rescued some other pregnant women too. Transport aircraft airlifted 30 National Disaster Relief Force teams, five Indian Army columns and also evacuated 770 stranded civilians.

“Personally, it was a very satisfying task, while professionally every helicopter pilot is trained to accomplish these kind of tasks,” says Sqn Ldr Venkat, who has flown rescue ops in Kashmir in the winter snowfall of 2008-2009.

Wing Commander C A Simon and Squadron Leader R Venkatramanan

IMAGE: WinCo Simon, left, has been involved in rescue and relief ops after the 2004 tsunami in Car Nicobar. Sqn Ldr Venkat, right, flew rescue missions in the Kashmir snowfall of 2008-2009.

“Once you are in the cockpit and start flying, you need all your skills and follow the rules. That is what we keep in mind while flying without getting too emotional about what we achieve,” he adds.

Both the pilots have done stints with the UN Peacekeeping Mission in Congo and are the first ones in their families to join the armed forces. They are quite surprised with the interest their mission has elicited, and attribute it to a video that one onlooker shot and uploaded on YouTube.

“My parents were quite thrilled because I am the only one in the family to make to the TV news,” laughs Sqn Ldr Venkat.

After the IAF wound down its ops in Chennai, the two pilots visited the hospital to meet the new mother and twin girls. They carried two bouquets on behalf of Air Chief Marshal Arup Kumar Raha. Since the babies were in the ICU, they could not see them, but were inundated with thank yous from the family.

“Saving somebody’s life is unparalleled,” says Wing Commander Simon, “It is something that will last a lifetime.”

 

Archana Masih / Rediff.com

Source……www.rediff.com

Natarajan

‘People wished to pray and we wanted to help them, that’s all’….

It was a simple gesture of cleaning a temple but this act by a group of Muslim youths went viral on the internet. Members of the Jamaat-E-Islami Hind, who are involved in flood relief work in Tamil Nadu, speak to S Saraswathi.

The sun is out in Chennai and relief and rehabilitation work is on in full swing. Along with the various government agencies, a large number of NGOs have pitched in to provide some comfort to the broken and battered people of Chennai.

Good Samaritans have been out on the streets, wading through the still stagnant and dirty water helping people get back on their feet. However, one beautiful gesture has moved the Chennai-ites.

A bunch of youngsters from the Jamaat-E-Islami Hind, a non-governmental organisation, helped clean two temples and a mosque in the flood ravaged areas of Kotturpuram and Saidapet.

Pictures of the youngsters cleaning the temple went viral on social media. With over 3000 members in Tamil Nadu, this NGO has been hard at work from the first week of November.

Jalaludeen, secretary of the group in Tamil Nadu, explains how it was all part of their work and promises they will not rest until they have done everything they can for the flood victims of Chennai.

“To be very frank, we did not go into the area with any intention of cleaning a particular mosque or temple. Since the rain subsided, our members have been on a cleanliness drive. The entire city is filthy with garbage strewn about in every direction. We noticed that the people were finding it extremely difficult to move about with all the sludge and debris that was left behind by the draining water.

“The stench from the rubbish was overwhelming at places. There is a high risk of infection in the coming weeks, which could be even more dangerous than the floods. These past few days, we have helped clean over 10 different areas like Ennore, Adambakkam, Pulianthope. Kotturpuram, Velachery, Perumbur, Saidapet, Dasamakkan, Kannigapuram and Chindadripet.

“We were in Kotturpuram when we found that two mosques and a temple in the area were in a pathetic condition. There was no pre-plan or motive, nor did we realise we would create such a buzz. People wished to pray and we wanted to help them do it. It was as simple as that.

“Actually, our work has been going on for over a month now. The rains in the first week of November were also bad and even then we helped with the relief work.

During this last week, when it was pouring steadily, we were providing food to the stranded victims. We had made arrangements at one of the mosques for food to be prepared. For four consecutive days, starting Wednesday, we distributed 12,000 packets of food every day.

“But when we realised that more help had arrived and lots of people were also doing the same, we decided to move on with the cleaning work.

“Our work has been organised in a phased manner.

“The second phase will involve distributing books and other stationery to students who have lost everything in the floods.  In the third phase, we will provide some basic cooking utensils to the women. And finally, we also have plans to help them rebuild their homes.

“There is a lot more to be done, and we will not rest until we have done all we can. This is not the first time, nor will it be the last that we have come out in support of people in need.  This is what we do — we help people in need, disaster or otherwise.”

 

S Saraswathi in Chennai

Source……..www.rediff.com

natarajan

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?….

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.

விளை நிலங்களில் வீடுகளை கட்டியதால் பலர் வெள்ளத்தில் சிக்கினர்

 

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிறிய சாலைகள் கூட வெள்ள நீரில் மூழ்கியுள்ளன

சென்னை மட்டுமல்லாமல் டில்லி,கொல்கத்தா, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என அந்த மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வெள்ள நீர் எந்த அளவுக்கு தேங்கியிருந்தது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்

சென்னை,மும்பை போன்ற பெரு நகரங்களில் போதுமான வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல், திட்டமிடாத வகையில் நகரம் வளர்ந்து கட்டிடங்கள் கட்டப்படுவதால், வெள்ளம் ஏற்பட்டதும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது என சுனிதா நரெயன் கூறுகிறார்.

இப்படியான அதிவேக நகரமயமாக்கல்கள், இயற்கை வடிகால்களை அழித்துள்ளன என்றும், சென்னை போன்ற நகரங்கள் இதன் தாக்கத்தை இப்போது உணர்ந்துள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

.Image copyrightbbctamil
Image caption…வடிகால்கள் சரியாக பராமரிக்கப்படாததால் அடையாறில் வெள்ளம் ஏற்பட்டது

 

சென்னை தனது இயற்கை வடிகால் வசதிகளை பராமரிக்கத் தவறியுள்ளது எனவும் சி எஸ் இ அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

கடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன என்றும் சுனிதா நரெயின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னர் ஏரிகள் இருந்த இடங்களில் வீடுகளை கட்டியவர்களின் நிலை இதுதான்

நீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது எனவும் அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

பாரிஸில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு நடைபெற்று வரும் வேளையில், இப்படியான விஷயங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள பல சுரங்கப் பாதைகளில் நீரின் அளவு குறையவில்லை

நீர்நிலைகள் எப்படி சீரழிந்து போயுள்ளன என்பதற்கு போரூர் ஏரி ஒரு உதாரணம் எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நீர்நிலைகள், நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், வெள்ளம் ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

ஈரநிலப்பகுயில் எப்படி கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன எனும் கேள்விக்கு ஒருநாளும் பதில் கிடைத்தது இல்லை எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நிலங்கள் நகர நிலச் சட்டங்களின் கீழ் மிகவும் அரிதாகவே பதியப்படுகின்றன எனவும், அதன் காரணமாக பலருக்கு அது தெரியவருவதில்லை எனவும் சுனிதா நரெயின் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

நீர்நிலைகளின் கரையோரங்களில் இருந்தவர்களின் நிலை மிகவும் மோசமானது.

அனுமதி கோரி மனுக்கள் வரும்போது மேலோட்டமாக நிலங்களை மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள், அதிலுள்ள நீராதாரங்களைப் பார்ப்பதில்லை, எனவே பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன எனவும் சி எஸ் இயின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

பல வீடுகளின் கீழ் தளங்கள் முழுவதும் நீர் புகுந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

 

சாலைகளில் ஓடும் நீர் முற்றாக வடிய பல நாட்களாகலாம் எனக் கருதப்படுகிறது

மனிதர்களால் உருவாக்கப்படும் வடிகால் அமைப்புகள், ஒருநாளும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை தமது ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஏரிகள் முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதால் பல முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின.

 

உதாரணமாக, நகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

புறநகர் பகுதிகளில் வீடுகளைக் கட்டும்போது நில ஆவணங்கள் கவனமாகப் பார்க்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன

 

கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 1,218 மிமீ மழை பெய்துள்ளது.

இது சராசரியாக ஆண்டொன்றுக்கு கிடைக்கும் மழையின் அளவைவிட மூன்று மடங்கானது.

Source….www.bbc.com.tamil    Photos Credit …bbc tamil

Natarajan

 

” : I Lost Everything in the #ChennaiFloods but It Still Left Me with Gratitude…”

Our home was destroyed. We were stranded. But wave upon wave of humanity kept our spirits high and our belief in the Indian people afloat.

It was Tuesday morning. I woke up at 6 am, made breakfast and bid goodbye to my husband who left for office at 7:15 am. I was still trying to get my house back in order since the first wave of floods had hit us the week before. The cleaning and washing seemed to be never ending. I started the washing machine and lay down next to my 5-year-old daughter, checking to see if there was anything about the incessant rains in the news. There was nothing – the media seemed to be obsessed with how Aamir Khan had the right to be afraid of living in India, and the twists in the Sheena Bora case.

The rain was still at its peak. At 8 am, I looked outside. The water level had reached the main gate. I knew my maid wouldn’t come now, so I thought I’d clean the dishes first. I had barely done two dishes when I felt the urge to look out again.

The water had touched the porch now.

Chennai

I left the dishes and started putting our clothes in a travel bag. Thankfully, I had the keys to an empty second floor flat. I went upstairs and left our clothes there, then packed the induction cook top, electric kettle, a few utensils, my laptop, a couple of rice and daal packets, and biscuits. After carrying this bag upstairs, I thought I’d wake up my baby and give her breakfast. But by the time I came back to the ground floor, water had started entering the verandah. I woke up my kid, took six bottles of water and her brush and toothpaste, and rushed her to the second floor.

After settling her there, I came back and tried to put as many of our belongings as I could on the beds and on the top shelves of the cupboards. By this time the water was about to enter the house. I thought I’d drag a mattress and a few blankets upstairs but suddenly the power went off. I got worried that my daughter would get scared in the dark, so I just picked up three blankets and rushed to the second floor. Around this time my husband called and said he was leaving office to come back home. His office is an hour away so I was praying that he would reach us safely.

I kept trying to call for help. Taxi services were busy. Rescue teams assured me that they would send help. But none was forthcoming as yet.

Chennai

My daughter was hungry by now. I had raw food but no resources to cook it. I kept standing near the window, waiting for my husband. Suddenly, I saw four young men going through the water on the other side of the road. I thought they were the rescue people sent for me. I called out for help. At first they did not hear me but when they passed by a second time they did. I asked if they were from the rescue team.

“We are not a rescue team ma’am but we will help. Tell us what you want,” said one of them.

These were four unknown boys. I was not sure if I was doing the right thing but I called them in. My husband was stuck in a water wave in the lane next to our house. His phone was not reachable now.

The boys came in. I asked if they could get the gas stove and cylinder to the second floor. Without wasting a second, they started helping me.

Chennai

I gathered more food while they were trying to take the stove upstairs. They also helped me get the drinking water can to the second floor.

After ensuring that my daughter and I were alright, they left, smiling and giggling.

Chennai

The four boys who helped without expecting anything in return – Sagar, Suresh, Jagan and Gopal

The water was rising so fast, that by this time it had reached knee level inside my house. Thankfully, my husband reached home by 2 pm and started rescuing as many of our belongings as he could. Things like the fridge, washing machine, sofa and bed had started floating.

By 5:30 pm, it was so dark that it was impossible to see anything inside the house. We went back up to the second floor, waiting for the rain to stop. But it kept raining…

Next morning.

Chennai

The entire ground floor was under water!

A few families from the ground floor flats had shifted to their neighbours’ homes on the first floor. But this morning they just wanted to get out of there. It was only a matter of a few hours before the water would reach this floor too.

We finally saw a boat at the entrance of our area at 9 am. The boat rescued just one family and went away. People kept whistling, clapping and calling out for help. Later on, I came to know that it was the family of the municipality head of our area. No helplines were working. The next boat came at 1 pm. It did not stop anywhere else but only at a house next to our flats. The family was rescued. We pleaded with the boatman to come back, and he said he would, but never did!

I could see from our terrace that a couple on the terrace behind ours was desperate to leave. I asked them if they were alright and they said they had climbed up to the first floor without any food or water. We started sharing food with them. But water was too limited!

By 5:30 pm it was almost dark and we lost hope of getting any help now. Several helicopters had flown by during the day but food and water had not yet been distributed.

Next morning.

Chennai

The water level was going down. We could see the boundary walls of the ground floor houses now. Our neighbours decided to walk through the water once it came down to hip level. We were in a dilemma whether to do the same but finally decided to go ahead. We were about to leave when a small boat carrying two elderly ladies passed us from the backyard. We called out for help. When we told them that we have a kid with us, they allowed us to get in.

The boat left us till the main road where an ambulance was ready to take people to a government school. All this was being done by an organization called TMMK.

When we asked them where we should go, one of them offered us his own home.

Chennai

We kept looking for hotels and finally got a room in one. Once our family was safe, my husband went back to our area to help others.

In the meantime, my friends were using social media to the fullest extent possible to help me. Some had tagged as many as they could on Twitter. Others had posted my address on Facebook. One friend had even arranged for us to join her relative in his hotel room.

There were friends who kept calling helpline numbers and sending me the same too. My employers ordered food for us, called up the disaster management team, and managed to speak to a boat guy to come rescue us.

All this time, I don’t know why, but I was pretty relaxed. We were happy about all the positive things that were happening with us amongst all the chaos.

Here are 6 lessons I learnt:

Chennai

1. The water level in our area rose so suddenly, not due to rain, but because the canal water had to be opened by the government. We don’t know why this decision was made but perhaps we could have been alerted.

2. When the lady from the balcony opposite ours came out and saw me on the second floor, she exclaimed: “Thank God, you are safe.” She is Tamilian and I am North Indian (as she knows). Yes, Tamilians and North Indians feel happy when they see each other safe!

3. The four young boys who helped me did not know my name, status or religion. Yes, young boys are good people too. And there are still people who will help without expecting anything in return.

4. My husband risked his life to reach us and kept struggling till the end to save our belongings. Yes, though men don’t show their emotions, they can go to any extent to save their families.

5. I have always understood the plight of farmers and tried to help them. But this time, when my house was sinking with all the little things inside it that my husband and I had put together through our efforts in the past seven years, I could feel the pain that a farmer goes through every year his crop is destroyed.

6. When government boats decided to rescue only important people, a common man’s organization came forward to help the needy. Do you know what TMMK stands for? Tamil Nadu Muslim Munnetra Kazagham. They did not ask if we were Hindus or Muslims or Christians. So this whole debate about India being intolerant is just a news and social media creation. During the three days, whenever I switched on my phone to check for important messages, all I saw was that my Hindu, Muslim and Christian friends were equally concerned about me. I did not see any intolerance anywhere.

When actors say they don’t feel safe in our country… I just pity their thinking.

 

Jai Hind!

Source….” My Story ” of a Chennai Resident as reported by  Manabi Katoch in http://www.the betterindia.com

Natarajan

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்…

மனைவி சங்கராந்தியுடன் ஸ்ரீநிவாஸ்

மனைவி சங்கராந்தியுடன் ஸ்ரீநிவாஸ்

கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக் கூட அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் அடக்கிப் போட்டுவிட்டது.

ஸ்ரீநிவாஸ் – தமிழர்கள் அரசியல் அடிமைத்தனத்தை விட்டு தமிழால் முன்னுக்கு வரவேண்டும் என்ப தையே மூச்சாக கொண்டிருந்தவர். வி.எஸ்.என்.எல். நிர்வாகத்துடன் இணைந்து இணையம் வழியாக வும் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட வைத்ததில் பெரும் பங்காற்றியவர். இணையப் பயன்பாடு பணக்காரர்கள், கார்ப் பரேட் முதலாளிகளுக்கு மட்டுமான சொத்து என்பதை தகர்த்து சாமானி யர்களும் அதைப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மென்பொருட் களை அறிமுகம் செய்தவர்.

சைவத் தமிழ்

`தெய்வமுரசு’ ஆன்மிக மாத இதழின் பதிப்பாளராக இருந்த இவர், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராயத்துடன் இணைந்து சைவத் தமிழ் பட்டயப் படிப்பை நடத்தியவர். ஸ்ரீநிவாஸ் இப்போது உயிரோடு இல்லை என்ற செய்தி அவரைச் சார்ந்தவர்களுக்கே கூட தெரியாது. ஆர்ப்பரித்து ஓடிய அடையாற்று வெள்ளம் அவரையும் அவரது மனைவி சங்கராந்தியையும் இணை பிரிக்காமல் இழுத்துச் சென்றுவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்ட இருவரது உடல்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை, பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

ஈக்காட்டுத்தாங்கல் மாஞ் சோலை தெருவில் ஸ்ரீநிவாஸ் வீடு. பக்கத்து தெருவில் அவரது தம்பி கந்தசாமியின் வீடு. அடையாற் றில் வெள்ளம் வந்து கொண்டிருந் ததால் தம்பியின் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடுமோ என்று செவ்வாய்க்கிழமை இரவு முழுக்கத் தூங்காமல் உழன்று கொண்டே இருந்திருக்கிறார் ஸ்ரீநிவாஸ். புதன்கிழமை பொழுது விடிந்ததுமே அலைபேசியில் தம்பியைத் தொடர்புகொண்டவர், அவரை தனது தெரு முனைக்கு வரும்படி சொல்லியிருக்கிறார்.

அப்படிச் சொல்லிவிட்டு தனது வீட்டைவிட்டு இறங்கி தெருவில் இறங்கி நடந்தவரை பேயென பாய்ந்து வந்த வெள்ளம் அதன் போக்கிலேயே இழுத்துச் சென்று விட்டது. இதைப் பார்த்துக் கதறித் துடித்த சங்கராந்தியையும் விட்டு வைக்கவில்லை அடையாற்று வெள்ளம்.

தங்கர் பச்சான் புகழாரம்

தனது நண்பர் ஸ்ரீநிவாஸுடனான தனது நினைவுகளை `தி இந்து’ விடம் பகிர்ந்து கொண்டார் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான். 2004-ல் `தென்றல்’ படம் எடுத்தபோது ஸ்ரீநிவாஸோடு எனக்கு அறிமுகம். தமிழில் குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்த அவர், உலகத்தில் 16 இடங்களில் கோயில்களைக் கட்டி அங்கெல்லாம் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ததுடன், அங்கே தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாகவே (திருமண) மண்டபமும் ஏற்பாடு செய்து தந்தார்.

அவரிடம் உதவி கேட்டு வரும் இளைஞர்களுக்கு தன்னுடைய சர்வதேச தொடர்புகளை வைத்து, இருந்த இடத்தில் இருந்தபடியே வேலை வாய்ப்புகளை அவர் ஏற்படுத்தித் தந்ததைப் பார்த்திருக் கிறேன்.

`தமிழ் வணிகர்களின் முன்னேற்றத்துக்காக’ தமிழ் தொழில்முனைவோர் மையம் என்ற அமைப்பையும் தொழிலில் நலிந்துபோன தமிழர்களுக்கு தோள் கொடுப்பதற்காக ஒரு தனி அமைப்பையும் ஏற்படுத்தியவர் ஸ்ரீநிவாஸ்.

தமிழர்களை அரசியல் அடிமைத் தனத்தில் இருந்து மீட்பதற்காக இந்திய முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் சார்பற்ற அமைப்பை அவரது ஏற்பாட்டில் டிசம்பர் 7-ல் நானும் தமிழருவி மணியன் அண்ணனும் முறைப்படி தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக நிவாஸை எரியூட்டும் கொடு மைக்கு இயற்கை எங்களை ஆட்படுத்திவிட்டதையும், தமிழுக் காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாமனிதருக்கு ஏற்பட்ட இறுதி முடிவு யாருக்குமே தெரியாமல் போய்விட்டதையும் என்னவென்று சொல்வது?’’ வலியுடன் வார்த்தைகளை முடித் தார் தங்கர் பச்சான்.

“தமிழ் எழுத்தில் எண்களைக் கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள்காட்டி, தமிழ் கடிகாரத் துக்கு மொபைல் செயலி உள்ளிட்டவைகளை உருவாக் கிய ஸ்ரீநிவாஸ், பன்னிரு திருமுறை களையும் மொபைலில் படிக்கும் வசதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்குள்ளாக அவருக்கு இப்படியொரு முடிவு ஏற்பட்டுவிட்டது’’ என்று வருத்தப் பட்டுச் சொன்னார் ஸ்ரீநிவாஸின் சகோதரர் கந்தசாமி.\

Source……..குள.சண்முகசுந்தரம் in http://www.tamil.thehindu.com

Natarajan

“சென்னை அழியாது… ஏன்? – ஒரு நெகிழ்ச்சிப் பதிவு”….

செல்வா, ஆதீஸ்வரி தம்பதி

செல்வா, ஆதீஸ்வரி தம்பதி

வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள கோபு சாலையில் வரிசையாக இருக்கின்றன குடிசை வீடுகள். அதில் இரண்டு ஆட்கள் நின்று பேசும் அளவுக்கான உயரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசும் அகலத்தில் ஒரு குடிசை வீடு.

“இது வீடில்லைங்க. எங்க இஸ்திரி கடை. எங்க வீடு தண்ணீல போய்டிச்சி. இப்ப இங்கதான் நாங்க இருக்கோம்” என்கிறார் செல்வா.

“பூனைங்க எல்லாம் உங்களுதா..?”

“ஆமாங்க. நாங்களே வளக்குறோம். இதுங்க நம்ம கொழந்தைங்க மாதிரி” ஆதீஸ்வரி.

“உங்களுக்குக் குழந்தைங்க இருக்கா..?”

“நாலு பேருங்க…” ஆதீஸ்வரி.

“சரி… நீங்களே வீடில்லாம கஷ்டப்படுறீங்க. இப்ப பூனைங்க எல்லாம் தேவையா?” என்று செயற்கைத்தனமாய் கேட்டேன்.

“என்ன பண்றதுங்க… வாயில்லா ஜீவனுங்க. இதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கறதால மனசுல ஒரு சந்தோஷங்க” செல்வா.

பேரிடர் சார்ந்த களப் பணியாற்றுவோரின் பார்வையில் படுகின்ற பல்லாயிரக்கணக்கான நி(நெ)கிழ்வுகளுள் இது ஒற்றைத் துளி.

இன்னும் எத்தனை முறை மழை வந்தாலும் சென்னை ஏன் அழியாது என்பதற்கு வேறு காரணம் வேண்டுமா?

Source…..ந.வினோத் குமார்….www.tamil.thehindu.com

Natarajan