” சுப்‌பா ராவ் …. மறக்கப்பட்ட ஒரு மா மேதை … “

சுப்பாராவ் சுப்பாராவ்

இந்திய அறிவியல் மேதை ஒருவர் புறக்கணிக்கப்பட்டதன் துயர வரலாறு!

அண்மையில் ஒரு கருத்தரங்கில் எல்லாப்ரகத சுப்பாராவைப் பற்றி ஓர் அமெரிக்க விஞ்ஞானி குறிப்பிட்டபோது அங்கிருந்த பலர், ‘யாரது?’ என்று கேட்டார்கள். அப்போது எழுந்த எனது வருத்தத்தின் விளைவே இந்தக் கட்டுரை.

ஆந்திரத்தில் உள்ள பீமாவரத்தில் 12.1.1895-ல் பிறந்தார் சுப்பா ராவ். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தந்தை இறந்ததால், படிப்பில் கவனம் செல்லவில்லை. என்றாலும், ஏதாவது பெரிய சாதனைகளைச் செய்து பெயரும் புகழும் பெற வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. தனது 13-வது வயதில் காசிக்குப் போய் வாழைப்பழ வியாபாரம் செய்து நிறையப் பணம் சம்பாதிக்க முயற்சி செய்தார்.

ஆனால், அவருடைய தாயார் அவரைத் திரும்ப அழைத்துவந்து, சென்னையில் ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். ஒருவழியாக மூன்று படையெடுப்புகளுக்குப் பின் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார் சுப்பா ராவ். நண்பர்களும் கஸ்தூரி சூரியநாராயண மூர்த்தி என்ற உறவினரும் பண உதவி செய்ததால் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பிற்பாடு, அந்த உறவினரின் மகளைத் திருமணமும் செய்துகொண்டார்.

பட்டம் இழந்தார்

காந்தியின் விதேசிப் பொருள் பகிஷ்கரிப்புப் போராட்டத்தால் கவரப்பட்டு, கதர் துணியாலான கோட்டுகளை அணிந்து, கல்லூரிக்கு வரத் தொடங்கினார். அவருக்கு அறுவையியல் துறை ஆசிரியராக இருந்த பிராட்ஃபீல்டுக்கு அது அதிருப்தியைத் தந்தது. தேர்வுகளில் சுப்பா ராவ் சிறப்பாக விடையளித்திருந்தபோதிலும் அவருக்கு எம்.பி.பி.எஸ். பட்டம் கிடைக்க விடாமல் தடுத்து, எல்.எம்.எஸ். என்ற கீழ்நிலைச் சான்றிதழை வழங்கச் செய்துவிட்டார். அடுத்து, சுப்பா ராவ் சென்னை மருத்துவ சேவை அரசுப் பணியையும் பெற விடாமல் பிராட்ஃபீல்ட் முட்டுக்கட்டை போட்டார்.

சென்னையில் இருந்த டாக்டர் லட்சுமிபதியின் ஆயுர்வேதக் கல்லூரியில் உடற்கூறியல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார் சுப்பா ராவ். ஆயுர்வேத மருந்துகளின் நோய் தீர்க்கும் திறன்களால் கவரப்பட்ட சுப்பா ராவ், மேலைநாட்டுப் பகுப்பாய்வு முறைகளில் பரிசோதித்து ஆயுர்வேதத்தை நவீனப்படுத்த முனைந்தார்.

உயிரி வேதியியலில் பட்டம்

ராக்ஃபெல்லர் கல்விக்கொடைத் திட்டத்தின் உதவியுடன், இந்தியாவுக்கு வந்திருந்த ஓர் அமெரிக்க மருத்துவருடன் தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பு அவருடைய மனதை மாற்றியது. அறக்கொடை ஒன்றின் ஆதரவையும் மாமனாரின் பண உதவியையும் பெற்று சுப்பா ராவ் 1922-ம் ஆண்டு அக்டோபர் இறுதியில், அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகருக்குப் போய்ச் சேர்ந்தார்.

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் சேர்ந்து, வெப்பமண்டல நோய் மருத்துவத்தில் டிப்ளமா பட்டம் பெற்றார். அதன் பின்னர், மருத்துவத் தொடர்பில்லாத உயிரி வேதியியல் பயின்றார். அடுத்து, அதே பள்ளியில் ஓர் இளநிலை ஆசிரியராகச் சேர்ந்தார். அவருக்கு உயிரி வேதியியலில் ஆர்வம் மேலிட்டு, அத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். திசுக்களிலும் உடல் திரவங்களிலும் பாஸ்பரஸின் செறிவை அளவிட ஓர் உத்தியை சுப்பா ராவ் கண்டுபிடித்தார். சில குறிப்பிட்ட வளர்சிதை மாற்றக் கோளாறுகளைக் கண்டறிய அவருடைய உத்தி இன்றளவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. தசைச் செயல்பாடுகளில் பாஸ்போ கிரியேட்டின் அடினோசைன் டிரைபாஸ்பேட் ஆகியவற்றின் பங்குபற்றி அவர் கண்டுபிடித்த விவரங்கள் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் உயிரி வேதியியல் பாடநூல்களில் இடம்பிடித்திருக்கின்றன.

அவருடைய ஆய்வு வழிகாட்டியாக இருந்த சைரஸ் ஃபிஸ்கி, சுப்பா ராவின் பங்களிப்பை மறைத்து அதற்கான பெருமையைத் தனதாக்கிக்கொண்டார். அதன் காரணமாக, சுப்பா ராவுக்கு ஹார்வர்ட் பள்ளியில் நிரந்தரமான பணி கிடைக்காமல் போயிற்று.

பாஸ்பரஸ் கொள்கை தவறு

அடுத்து, சுப்பா ராவ் பாஸ்பரஸின் வளர்சிதை மாற்றத்தைப் பற்றி ஆய்வு செய்தார். அதற்கு முன்பே ஆர்ச்சிபால்ட் ஹில், ஆட்டோ மெயர்ஹாஃப் என்ற இரு ஆய்வர்கள் அதை ஆராய்ந்து ஒரு கொள்கையை உருவாக்கி, அதற்காக 1922-ம் ஆண்டில் நோபல் பரிசையும் வென்றிருந்தார்கள். சுப்பா ராவ் அந்தக் கொள்கை தவறானது என்று நிரூபித்தார். அதன் காரணமாக உயிரி வேதியியல் ஆய்வு வட்டாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. சுப்பா ராவின் கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் கிடைப்பதும் தாமதமாயிற்று.

தசைகளுக்குத் தேவையான ஆற்றல் பாஸ்போ கிரியேட்டின், அடினோசைன் டிரைபாஸ்பேட் ஆகியவற்றிலிருந்தே கிடைக்கிறது என்று சுப்பா ராவ் நிரூபித்தார். அதற்கான பெருமையையும் ஃபிஸ்கியே தனதாக்கிக்கொண்டார். எனினும், அவருடைய சக ஆய்வர்களுக்கு சுப்பா ராவின் பங்களிப்பு தெரிந்தேயிருந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சுப்பா ராவுக்குப் பயிற்சியும் உறைவிடமும் அளித்தபோதிலும் அவருக்குத் தேவையான ஆய்வக வசதிகளை வழங்கவில்லை. இதனால் மனம் கசந்த சுப்பா ராவ், அங்கிருந்து விலகி லெடர்லி ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார்.

கீமோதெரபியின் முன்னோடி

அங்கு அவர் வைட்டமின்களைப் பற்றியும் நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பற்றியுமான ஆய்வுகளில் பங்கேற்றார். பன்றியின் கல்லீரலிலிருந்து ஃபோலிக் அமிலத்தைப் பிரித்தெடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார். அடுத்து ஒரு நுண்ணியிரிக் கரைசலை நொதிக்க வைத்து, அதிலிருந்து ஃபோலிக் அமிலத்தைப் பிரித்தெடுக்கச் செலவு குறைவான ஒரு முறையை உருவாக்கினார். அதையடுத்து வேதிமுறையில் ஃபோலிக் அமிலத்தைச் செயற்கையாக உற்பத்தி செய்யும் முறையையும் கண்டுபிடித்தார்.

ஃபோலிக் அமிலம் ரத்த சோகைக் கோளாறைக் குணப்படுத்த உதவும். சிட்னி ஃபார்பர் என்ற ஆய்வருடன் சேர்ந்து மித்தோட்ரெக்சேட் என்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்கினார். புற்றுநோய்க்கான கீமோதெரபிக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட வேதி மருந்து அதுவே. இன்றளவும் அது பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. உலக சுகாதார நிறுவனத்தால் (W.H.O.) யானைக்கால் வியாதியைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஹெட்ராசான் என்ற மருந்தையும் சுப்பா ராவ் கண்டுபிடித்தார்.

மண் மாதிரிகளின் சேகரம்

இரண்டாம் உலகப் போர் முடிந்து, ஊர் திரும்பிக்கொண்டிருந்த அமெரிக்கப் படை வீரர்களைத் தாம் சென்ற இடங்களில் இருந்தெல்லாம் மண் மாதிரிகளைச் சேகரித்து வருமாறு லெடர்லி ஆய்வகம் கோரியது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட பல்லாயிரம் மண் மாதிரிகளிலிருந்து சுப்பாராவும் பெஞ்சமின் டுக்கர் என்ற தாவரவியல் நிபுணரும், நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் பெற்ற கிருமிகளையும் பூஞ்சைகளையும் பிரித்தெடுத்தனர். அவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மண் மாதிரிகளை அதுவரை எந்த ஆய்வர்களும் பகுப்பாய்வு செய்ததில்லை என்ற வகையில், அது ஒரு உலக சாதனை என்று பாராட்டப்பட்டது.

குழந்தைகளைக் காத்தவர்

குழந்தைகளைப் பீடிக்கும் லூகோமியா ரத்தப்புற்று நோயைக் குணப்படுத்தும் எதிர்ஃபோலிக் அமிலம் ஒன்றை சுப்பா ராவ் உருவாக்கியதன் மூலம், பல குழந்தைகளை மரணத்திலிருந்து மீட்க உதவியிருக்கிறார்.

இவ்வளவு சாதனைகளைச் செய்த பின்னரும், சுப்பா ராவ் எல்லாப் பெருமையும் சக ஆய்வர்களுக்கே என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார். அதன் காரணமாக, அவருக்கு ஏராளமான வருமான வாய்ப்புகள் கைநழுவிப்போயின. அவருக்கு வியாபார சாமர்த்தியமே கிடையாது என்று ஒரு காப்புரிமை வழக்கறிஞர் சலித்துக்கொண்டார். எனினும், மருத்துவ அறிஞர்கள் எல்லோருமே அவரது பங்களிப்பை அங்கீகரித்தார்கள். சுப்பா ராவுடன் பணியாற்றியவரான ஜார்ஜ் ஹிட்சிங்ஸ் 1988-ம் ஆண்டில் ஜெர்ட்ரூட் எலியான் என்பவருடன் உடலியக்கவியலுக்கான நோபல் பரிசைப் பங்கிட்டுக்கொண்டவர். சுப்பா ராவின் கண்டுபிடிப்புகளை ஃபிஸ்கி மறைத்துவைத்ததன் காரணமாக, அவர் கண்டு

பிடித்து வைத்திருந்த பல நியூக்ளியோடைடு வகைச் சேர்மங்களைப் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிதாகக் கண்டுபிடிக்க நேர்ந்தது என்று ஹிட்சிங்ஸ் புலம்பியிருக்கிறார். சுப்பா ராவின் தன்னலமற்ற இந்தக் குணமே, நோபல் பரிசை அவர் வெல்லும் வாய்ப்புகளை இழக்கச் செய்தது. நோபல் பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் ஸ்டாக்ஹோம் கரோலின்ஸ்கா ஆய்வுக் கழகத்தில் பேராசிரியராக இருந்த எரிக் ஜோர்ப்ஸ், மருத்துவ வேதியியல் களத்தில் முக்கியமான சாதனைகளைப் படைத்தவர்களில் ஒருவர் சுப்பா ராவ் எனப் புகழ்கிறார்.

அமெரிக்காவின் சையனமிட் ஆய்வகம் தான் கண்டுபிடித்த பூஞ்சை ஒன்றுக்கு சுப்பா ராவின் பெயரைச் சூட்டியுள்ளது. சுப்பா ராவ் 1948 ஆகஸ்ட் 9-ம் நாள் நியூயார்க்கில் காலமானார். அப்போது அவருக்கு 53 வயதுதான். “டாக்டர் சுப்பா ராவைப் பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்கக் கூடும். ஆனால், அவர் வாழ்ந்ததால்தான் நீங்கள் இன்று உயிருடன், தேக நலத்துடன் வாழ்கிற வாய்ப்பு கிட்டியிருக்கிறது. நீங்கள் இன்னும் பல காலம் உயிர் வாழ்வதற்குக்கூட அவர் காரணமாக இருக்கக்கூடும்” என்று டோரன் ஆன்ட்ரிம் என்னும் மருத்துவ நிபுணர் 1950, ஏப்ரல் மாதத்திய ‘ஆர்கோசை’ என்ற சஞ்சிகையில் எழுதியிருக்கிறார்.

– கே.என். ராமசந்திரன்,
பேராசிரியர், ஓய்வு

SOURCE::::  www.tamil.thehindu.com.
Natarajan
Jan 12 2015

ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்…பிள்ளையாருக்கு வாழைப்பழம் , அணிலுக்கு முந்திரிப்பருப்பு …”

கே.என்.சாஸ்திரி என்பவர் ரமணரைப் பார்க்கப் போகும்போது கையில் ஒரு சீப்பு வாழைப்பழம் கொண்டுபோனார். போகும் வழியில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குப் போனார். சீப்பிலிருந்து பழத்தைப் பிய்த்தெடுக்காமலே சாஸ்திரி ஒரு பழத்தை மட்டும் அங்கிருந்த பிள்ளையாருக்கு மனதாலே நிவேதனம் செய்தார்.

இறுதியில் அவர் பகவானைப் பார்த்து பழங்களைக் கொடுத்தார். அங்கிருந்த ஒரு சாது பழச்சீப்பை குகைக்குள் வைப்பதற்காக எடுத்துப் போகும் நேரம் பகவான் ‘ஒரு நிமிஷம், பிள்ளையாருக்குக் கொடுத்த பழத்தை நாம எடுத்துக்கலாம்’ என்று சொல்லி ஒரு பழத்தை வாங்கிக் கொண்டதும் சாஸ்திரியார் வியந்து போனார். எது தெரியாது பகவானுக்கு?

 

ஆச்ரமத்தின் கூடத்தில் இருக்கும் கட்டிலில் ஸ்ரீ ரமணர் சாய்ந்து அமர்ந்திருந்தார். வழக்கமாக அந்த நேரத்தில் வருகின்ற அணிற்பிள்ளைகள் வந்தன. சிறிதும் பயமின்றி ஸ்ரீ ரமணரின் மேனியில் ஏறியும் இறங்கியும் விளையாடின. ஸ்ரீ ரமணர் தமது அருகிலிருந்த டப்பாவைத் திறந்து பார்த்தபோது, அன்று முந்திரிப் பருப்புக்குப் பதிலாக அதில் வேர்க்கடலை இருந்தது. தினந்தோறும் அணில்கள் ஸ்ரீ ரமணரின் கையிலிருந்து முந்திரிப் பருப்பை வாங்கி உண்ணும். அவரே ஊட்டவும் செய்வதுண்டு.

இன்று வேர்க்கடலையை அவர் ஊட்டியதும் அணிற்பிள்ளைகள் அதை ஏற்க மறுத்தன. அது மட்டுமில்லாமல் முந்திரி கிடைக்காத கோபத்துடன் ‘கீச் கீச்’சென்று கத்திக் கொண்டே தாவித் தாவி அவருடைய உடம்பில் ஏறின. “வேர்க்கடலையைச் சாப்பிடுங்கள்” என்று குழந்தையைக் கெஞ்சுவதுபோல ஸ்ரீ ரமணர் அணிற் பிள்ளைகளைக் கொஞ்சினார். அவையோ தொட மறுத்தன. முந்திரிப்பருப்பு வேண்டும் என்பதுபோல அடம் பிடித்தன. ஸ்ரீ ரமணர் சமையலறையிலிருந்து முந்திரி இருந்தால் கொண்டு வருமாறு தொண்டர் கிருஷ்ணசாமியிடம் கூறினார்.

தொண்டர் சிறிதளவு முந்திரியைக் கொண்டுவந்து கொடுத்தார். “இவ்வளவுதான் இருக்கிறதா ?” என்றார் ஸ்ரீ ரமணர். தொண்டர், “பாயசத்திற்குப் போடணும்னு கொஞ்சம் வைத்திருக்கிறது” என்றார்.

“இந்தக் குழந்தைகள் எப்படி தவிக்கின்றன. போ போ. பாயசத்திற்கு முந்திரி போடணும்னு கட்டாயமில்லை” என்று ஸ்ரீ ரமணர் கோபமாகக் கூறியதும் தொண்டர் சமையலறையிலிருந்த முந்திரி முழுவதையும் கொண்டு வந்து கொடுத்தார். ஸ்ரீ ரமணர் ஆசையுடன் ஊட்ட, அணிற்பிள்ளைகள் சந்தோஷக்குரல்களுடன் உண்டபோது, ஸ்ரீ ரமணரின் வதனத்தில் கருணையொளி வீசியது.

மறுநாளே சென்னையிலிருந்து வந்த பக்தர் ஒருவர் ஸ்ரீ ரமணரிடம் இரண்டு பெரிய பொட்டலங்களில் முந்திரிப்பருப்பு கொண்டுவந்து, “அணிற்பிள்ளைகளுக்கு அளிப்பதற்காகவே கொண்டு வந்தேன்” என்றார். ஸ்ரீ ரமணர் அணிற்பிள்ளைகளுக்குத் தேவையானது கிடைத்ததில் ஆனந்தம் அடைந்தார்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

SOURCE:::: http://www.balhanuman.wordpress.com

Natarajan

Jan 12 2015

” இனிக்கும் பொங்கல் இருக்கிறதா அடுத்த தலை முறைக்கு … ” ?

அடுத்த தலைமுறை பொங்கல்!

இரண்டொரு நாட்களுக்கு முன்
தேரில் வருவாள் என எதிர்பார்த்த
என் தைமகள்
காரில் வந்திறங்கி, ஒரு கவிஞனின்
கைபற்றி கதறி அழுததை, கனவில் கண்டேன்!

அடுத்த தலைமுறையின், ‘அபாக்கஸ்’
ஆதிக்கத்தில் அழிந்து போன தமிழனின்
தைத்திருநாள் கொண்டாட்டம்தான் அவள்
அழுகையின் அர்த்தம் எனப் புரிந்தது!

ஏ போக்கத்த அடுத்த தலைமுறையே
கொஞ்சம் போகியை பற்றி கேள்…

வாசலில் மாக்கோலம்… நடுவிலே பூசணிப்பூ
வீடு சுற்றி மா, வேம்பு, ஆவாரம் பூ என
கட்டிய பின், ஊர் திரளும் ஓரிடத்தில்
சொக்கபானை கொளுத்தி,
சொக்கி போய் கொண்டாடிய
அந்த போகிப் பொங்கல் எங்கே?
அது மட்கி மண்ணாகி போனது இங்கே!

ஏ…பர்கர் தின்னும் அடுத்த தலைமுறையே
கொஞ்சம் பொங்கலை பற்றி கேள்…

காப்பு கட்டிய முற்றம்;
திரண்டிருக்கும் குடும்ப சுற்றம்
மூன்று கல் கூட்டி, கரும்பு சோகை கட்டி
மஞ்சள் மாலை இட்டு,
கோலமிட்ட பானை வைத்து,
பொங்கி வரும் பொங்கலை, சிறார்கள்
பொங்கலோ பொங்கல் என கூவி
கும்மாளமிட்ட சர்க்கரை பொங்கல் எங்கே?
வெறும் பர்கர் தான் இங்கே!

ஏ… இன்டர் – நெட்டில் மாட்டி தவிக்கும் அடுத்த தலைமுறையே கொஞ்சம்
மாட்டுப் பொங்கலை பற்றி கேள்…

கண்மாய் கரையில் வைத்து,
கஷ்டப்பட்டு வயலில் உழைத்து
களைத்து போன காளைகளை
குளிப்பாட்டி, கொம்பு சீவி, வர்ணமிழைத்து,
பட்டி கட்டி, பாட்டுப்பாடி கொண்டாடிய
மாட்டுப் பொங்கல் எங்கே?
வெறும் பணநோட்டு மட்டும்தான் இங்கே!

ஏ… தேனும், தினை மாவும் மறந்த அடுத்த தலைமுறையே கொஞ்சம்
காணும் பொங்கலை பற்றி கேள்…

மாட்டை பூட்டி, கூட்டு வண்டி கட்டி, காப்பு தீட்டு
தீர்ந்ததென, தித்திக்கும் பொங்கல் தின்று
மாலை கோவில் சென்று, மனதார வழிபட்டு,
தாவணி கன்னியர் நந்தவனம் சென்று,
பூ பறித்து நடந்து வந்து
மஞ்சள் தண்ணீரை மற்றவர் மேல் ஊற்றி விளையாடிய காணும் பொங்கல் எங்கே?
வெறும் கனவு மட்டும்தான் இங்கே!

விளை நிலத்தை, ‘விலை’ நிலங்களாக்கி
விற்று விட்டு, வீடு மாறி போய் விட்ட
கிராமத்து விவசாயிகளின் ஆங்கிலப் பள்ளியில்
படிக்கும் அடுத்த தலைமுறைக்கு
அந்த பொங்கல் எப்படி தெரியும்
எப்படி விளங்கும்?

தேரில் வரும் தைமகளே காரில் வரும்போது
அடுத்த தலைமுறைக்கு பொங்கல், ‘கல்’லாகி
கொண்டிருப்பதை நினைக்கும் போது
நெஞ்சு கனக்கிறது!

பிஞ்சுகள், பின்னணி தெரியாமல்,
பின்புலத்தை இழந்து,
பிறப்பிடத்தை மறந்து, வேறிடம் குடி பெயர்ந்து,
சிறப்பிடத்தை பெறாமல்
தவிக்கும் இன்னாளில் இனிமை
பொங்கல் இங்கு எங்கிருக்கிறது?

இருந்தாலும் அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்து கூறி மகிழ்வோம்!

இளமுகில் அமுதவன், மஸ்கட்.   in  www.dinamalar.com

Natarajan

Jan 11 2015

ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்….” அணில் போல இருங்க …எலி போல வேண்டாம் …”

பகவான் ரமணர் உரைகேட்கப்
பக்தர் இருந்தார் அமர்ந்தபடி
அகமும் முகமும் மலர்ந்தபடி
அருளுரை சொன்னார் கனிந்தபடி
அணில்போல் இருங்கள்; தவறில்லை!
ஆனால் எலிபோல் கூடாது!
மணிமொழி இதனை உதிர்த்தபடி
மவுனமானார் நம் ரமணர்!
காரணம் வேண்டிப் பக்தர்கள்
காத்துக் கொண்டே இருந்தார்கள்
பூரண ஞானி விடைசொன்னார்
புன்னகை ஒன்றைத் தந்தபடி!
உண்ணும் அணிலைப் பாருங்கள்;
உண்டது போதும் என உணர்ந்தால்
கொண்ட கனியை அதன்பின்னர்க்
கொறிப்பதில்லை; ஓடிவிடும்;
ஆனால் எலியோ பதுக்குவதில்
ஆசை கொள்ளும்; மறுபடியும்
தானாய் வந்து பொருள்தேடும்
தனக்கு மீறிச் சேர்த்துவிடும்
போதும் என்ற மனம் இன்றிப்
பொருளைச் சேர்க்கக் கூடாது
நீதி இதுதான், எனச்சொல்லி
நிறுத்தி அருளினார் ரமணமுனி!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!  
Natarajan
Jan 11 2015

ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்….காவ்யா கண்ட கணபதி முனிவர்…

  

காவ்ய கண்ட கணபதி முனிவர் என்ற மகா பண்டிதர் இருந்தார்.  நினைத்தவுடன் கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர். ஏராளமான நூல்களைக் கற்றவர், எழுதியவர்.  பல மொழிகளைப் பேசும் ஆற்றல் உள்ளவர். கடும் தவம் புரிந்தவர்.  பெரும் புகழ் படைத்தவர்.

அப்படிப்பட்ட பெரிய மனிதருக்கு ஒரு சந்தேகம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது. அதற்கான விடை தேடி அவர் அலையாத இடமில்லை.

1907-ம் ஆண்டு கணபதி முனிவர் திருவண்ணாமலை வந்தார். கிரிவலப் பாதையில் ஒரு மண்டபத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது அவருக்குள் மின்னல் வெட்டியது.  ‘பகவான் அழைக்கிறார்’ என்றது அந்த மின்னல். உடனே எழுந்தார். விடுவிடுவென நடந்தார். அருணாசலேஸ்வரர் வீதி புறப்பாடாகி வந்து கொண்டிருந்தார். நடுச்  சாலையில் இறைவனை விழுந்து நமஸ்கரித்தார்.

தன் நெடுநாள் கேள்விக்கு விடை கிடைக்கப் போகிறது என்று அவருக்குத் தோன்றிற்று.

விடுவிடுவென மலை மீது ஏற ஆரம்பித்தார். நல்ல வெயில் நேரம் அது. எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. விரூபாட்ஷி குகைக்கு வந்துதான் நின்றார்.

குகையின் முன் தாழ்வாரத்தில் பகவான் ரமணர் தனியே அமர்ந்திருந்தார்.
கணபதி முனிவர், ரமணர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். தன் இரு கைகளாலும் பகவானின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுத்தபடியே, ”கற்க  வேண்டிய யாவையும் கற்றேன். வேதாந்த சாஸ்திரங்களையும் பயின்றேன். மனம் கொண்ட மட்டும் மந்திரங்களையும் ஜபித்தேன். ஆனாலும் மனம் அடங்க வழியின்றித்  தவிக்கிறேன். தவம் என்பது யாதென தெரியவில்லை. ஐயனே, உன் திருவடியைச் சரணடைந்தேன்.’’ என்றார்.

பகவான், காவ்ய கண்ட கணபதி முனிவரையே பார்த்தார். ரொம்ப நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஆம். பார்வையிலேயே பதிலை  விளக்கி விட்டு பின்னர்  உபதேசமும் அருளினார்.

”‘நான்’ என்பது எங்கேயிருந்து புறப்படுகிறதோ அதை கவனித்தால் மனம் அங்கே ஒன்றிவிடும். அதுவே தவம்.

ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணும்போது மந்திரத்வனி (ஓசை) எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஒன்றிணைகிறது. கரைந்து போகிறது, அதுதான்  தவம்.’’

கணபதி முனிவரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது, அவரது நெடுநாள் சந்தேகத்துக்கு விடை கிடைத்த திருப்தி. அவரது ஐயங்கள் எல்லாம்  தீர்ந்து விட்டன.

அன்றைய தினம் விரூபாட்ஷி குகையிலேயே பகவானுடன் தங்கிக் கொண்டார் கணபதி முனிவர். அதுவரை பிராமண சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டு வந்த ரமணரை,  ‘பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி’ என்றே அனைவரும் அழைக்க வேண்டும் என்று  அப்போதுதான் சொன்னார் கணபதி முனிவர். ஆமாம்.  ‘மருவிலாக் காட்சிப் பெரியனை  இனிமேல் மகரிஷி என்றே வணங்கிப் பணிக.’ என்று பாடி வணங்கினார். அன்று முதல்தான் பகவான் ரமண மகரிஷி என்ற பெயர் நிலைக்க ஆரம்பித்தது.

ஆமாம். விரூபாட்ஷி குகைதான் அந்தப் பெயரை முதலில் கேட்ட  முதல் இடம். புனித  பூமி.

ஏற்கெனவே புகழ்பெற்ற மனிதராக கணபதி முனிவர் இருந்ததால், அவரது வருகைக்குப் பிறகு, பகவானைக் காண பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. பக்தர்களின்  வினாக்களும் அதிகரித்தன.

அவர்களுக்கு பகவான் அருளிய பதில்களை எல்லாம் தொகுத்து, வட மொழி ஸ்லோகங்களாக அவற்றை அமைத்து எழுதியவர் யார் தெரியுமா?
காவ்ய கண்ட கணபதி முனிவர்தான்.

ரமண கீதை என்ற பெயரில் அற்புதமான நூலாக ஆக்கினார் அவர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

SOURCE:::: http://www.balhanuman.wordpress.com

Natarajan

HAMPI….A Place For Architectural Beauties and Heritage Sites …

If you are seeking an opportunity to virtually transport yourself to the times of kings and their kingdoms, to the times of heroic battles and battlefields and to the times of long forgotten wonders that hand carved this land for you to unravel, then this is the place for you. Furthermore, Hampi is one of the most safest places to be at.

Hampi calls you to witness the eccentric charm of valued monuments, of its beauty, that lies in the ruins of its UNESCO recognized sights. Located at the distance of 341 k.m. from Bengaluru, the easiest way to reach Hampi is either to take a bus or train, which is easily available from major towns and cities.  The nearest railway station is Hospet.

1. Go fancy or go local, it’s totally upto you!

Image source

A five million star hut over a five star hotel. What TO say ?

 

2. Hire a cycle or a bike, maybe?

Image source

This is undoubtedly the cheapest and the most recommenced means of transport. This way you’ll cover all the stretches closely.

 

3. The glorious step well

Image source

Another great architectural beauty  !

 

4. The Virupaksha temple

Image source

Recognized as a UNESCO World Heritage Site, this temple is going to be a delight for your eyes.

 

5. The coracle boats

Image source

Tungabhadra River wouldn’t be the same without coracle boats. You’ll have a great time using them.

 

6. The boulder-strewn landscapes

Image source

Regardless of how much I say, Hampi’s monuments will always possess more charm than the one expressed in words.

 

7. Matanga Hill

Image source

This is one of the most talked about places in Hampi. You just have to be here.

 

8. Vittala temple

Image source

Rediscover your love amid this stone chariot of Vittala Temple.

 

9. Krishna Temple Complex

Image source

The majestic pillars of this temple will leave you mesmerized for longer than usual.

 

10. Bukka’s aqueduct

Image source

Nothing fancy about this place, just some beauty lying unnoticed.

 

11. Farms as seen from Anjaneyadri Hill

Image source

…and you’d wonder! Since when there was so much godliness around?

 

12. Zanana Enclosure

Image source

Numerous intriguing fables took birth here. A secluded place which was left for the royal women.

 

13. Tungabhadra River in Hampi

Image source

Ahuh! What a delight.

 

14. Elephant Stables

Image source

This is one of the least destroyed structures of Hampi. This oblong is demanding you to pay a visit.

 

15. Pampa Sarovar

Image source

This sarovar made to sacred ponds mentioned in the Hindu epics and  scriptures.

 

16. South India Unplugged

Image source

Every shopper’s delight; the markets here, will leave you wanting for more. Just Shop.

 

17. Rock Climbing

Image source

Two steps up and one step down. That’s how you do it here. Hampi is a highly regarded rock climbing destination.

 

18. Watch as the Sun goes down

Image source

Just breathe and watch the beauty turning its face towards the lunar light.

 

19. Hampi’s Hippie Island

Image source

You always wanted to see that. Always. A part of you that rebelled enough to rebel will find solace here.

 

20. Discover your secret hideout

Image source

For your friends. Just for them.

The architectural aura of Hampi is akin to numerous fantasies. It is sure to take you back to the times of imperial beauty and legacy. Once you’re there, you are bound to get mesmerized amid the ruins.

SOURCE:::: Shewali Tiwari  in www.storypick.com

Natarajan

Jan 8 2015

ரமணர் வாழ்வில்….சுவையான நிகழ்ச்சிகள்…Part 7

அப்படி என்னதான் இருக்கிறது திருவண்ணாமலையில்? கிரிவலம் வருவது எதனால்? என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படித்தாலே போதும்.

படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் எழுந்தது.

அதற்குத் தீர்வு தர, சிவபெருமான் ஓர் ஒளிப் பிழம்பாக, விஸ்வரூபம் காட்டி விண்ணுக்கும் மண்ணுக்கும் பெரிதாய் நின்றார். அன்றைய தினம்தான் சிவராத்திரி.

“என்னுடைய பாதத்தையோ, சிரசையோ யார் முதலில் காண்கிறார்களோ அவர்களே பெரியவர்.’’ என்றார் ஈசன்.

மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதம் காண பாதாளம் நோக்கிப் பாய்ந்தார்.

பிரம்மனோ, தலை காண, அன்னப் பறவையாய் ஆரவாரமாய்ப் பறந்தார்.

காலங்கள் கடந்தன. விஷ்ணுவால் இறைவனின் பாதத்தைக் காண முடியவில்லை.

ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான்தான் மிகப் பெரியவர் என்பதை உணர்ந்த விஷ்ணு, தன் பிழையை உணர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.

பிரம்மா மட்டும் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. யுகம் யுகமாய் சிவனின் தலையிலிருந்து விழுந்து கொண்டிருந்த ஒரு தாழம்பூவின் உதவியுடன், ‘நான் சிவனின்  தலையைக் கண்டுவிட்டேன்’ என்று பொய்யுரைத்தார்.

அப்புறம் என்ன? பொய் சொன்ன பிரம்மாவுக்கு பூவுலகில் பெரிதாய் வழிபாடு எங்கும் இல்லை. தாழம்பூவும் பூஜைக்குப் பயன்படாத மலர் ஆயிற்று.

நெருப்புத்தூணாக, பிரம்மாண்டமாக ஆரம்பமும் முடிவும் கண்டுபிடிக்க முடியாதவாறு பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் காட்சி தந்த இறைவன், பக்தர்களுக்கும் காட்சி தர  வேண்டும் என்பதற்காக, குளிர்ந்து, தன் உருவத்தை உள்ளடக்கி, அருணாசலமாக, திருவண்ணாமலையாக மாறினார்.

எல்லாம் வல்ல சிவபெருமானே இந்தத் திருவண்ணாமலை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

”சூரியனிடமிருந்து சந்திரன் ஒளி பெறுவது போல பூமியில் உள்ள எல்லாத் தலங்களும் இந்தத் திருவண்ணாமலையால் ஒளி பெறுகின்றன. திருவண்ணாமலைதான்  ஓம்காரத்தின் உறைவிடம். ஒளி வெள்ளமாக நான் உரு எடுத்ததை பக்தர்களுக்கு நினைவூட்ட, கார்த்திகை தினத்தில் மலை உச்சியில் தீபமாகக் காட்சி தருவேன். இந்தத்  திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தருவேன்.’’ என்று ஆனந்தமாகக் கூறியிருக்கிறார் சிவபெருமான்.

காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.

எங்கோ திருச்சுழியில் பிறந்த பகவான், திருவண்ணாமலை நாடி வந்த மகத்துவம் புரிகிறதா உங்களுக்கு? அது மட்டும் அல்ல, மனம், அறிவு, ஆன்மா ஆகிய மூன்றும்தான் விஷ்ணு, பிரம்மா, சிவன் என்று உருவகப்படுத்தி  உணர்ந்தால் வாழ்க்கையின் தத்துவம் புரிபடும்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE::::: http://www.balhanuman.wordpress.com

Natarajan

7 Jan 2015

” இட்லிக்கு உண்டோ இணை …. ” !!!

    


The greatness of idlis!During the pre-independence days, an Iyer and a Britisher were travelling by the Howrah Express train, from Madras to Calcutta.  The train left Madras Central railway station at 8 p.m. sharp, and the next morning at 7 a.m., it was at Vijayawada.The Britisher had a sumptuous Spencer’s breakfast, delivered to him by a butler, in livery.  But the Iyer opened the top box of his 4-compartment, steel tiffin carrier, and ate two idlis.Lunch at Waltair station (asVisakhapatnam was then called), was a heavy meal served to the Britisher, by the Railway Refreshment stall.  But the Iyer only opened the second box of his tiffin carrier, pulled out 4 idlis, and ate them with relish.  The Britisher was curious, as to what was happening.  But being a Britisher, kept his stiff-upper-lip posture on.

But when the scene repeated, during dinner at Berhampur, the Britisher could no longer contain himself, and enquired from the Iyer, ” Sir, what are those white things you have been eating, all along? ”

The Iyer replied, ” Sir, these are called intelligence tablets.   We South Indians, can live on them for days, together. ”

Britisher: ” But how do you make them ? ”

The Iyer went into an elaborate description, of the raw materials and processes, of making idlis.


Britisher : ” Can you please give me a couple of them?  But you need not give them to me free of charge.  I’ll be happy to pay you, whatever price you quote. “
The Iyer thought for a while, and said, “Actually, I have only three more of them left, for        tomorrow morning’s breakfast.  But since I am going to my relative’s place, I can spare them for you.  But they will cost you, 20 Indian Rupees each “.The Britisher paid up immediately, happy that he was so lucky.  The next morning, at the Howrah railway station in Calcutta, as they were about to part ways, the Britisher asked the Iyer, “But tell me sir, are you sure you have told me the entire process, without leaving out any details? “.Iyer replied, “Yes, I told you all the details”.

Britisher: “Then why were those intelligence tablets, so costly?”

The Iyer  replied,”See?!  You ate only 3 of them last night, and they have already started working?!”

SOURCE::::: input from a friend of mine
Natarajan
Bonus ::::  An Instant Kavithai on our Great Idli …. Penned by me when i was 14 years old… Now I am 65 !!!

மதியம் போல் வெண்மை  பொதிய மலை தமிழின் தன்மை

விதி முறையால் சட்டினியும் சாம்பாரும் சார சுவை அளிக்கும்

அந்த இட்டிலுக்கு உண்டோ  இணை  !!!

 நடராஜன்
JAN  7  2015
 

ரமணர் வாழ்வில்…. சுவையான நிகழ்ச்சிகள்…Part 6

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

திருவண்ணாமலை கிரிவலத்தை பகவான் எப்போதும் ஊக்குவித்தார். உடல் நலம் குன்றியவர்கள்,முதியவர்கள் கூடகிரிவலம் செல்வதை ரமணர் தடுத்ததில்லை. ‘‘அமைதியாக இறைவனை நினைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள்’’என்றே அவர் கூறுவார். அனைவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து இறைவனின் ஆசியைப் பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். பகவானும் பல முறை கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலையைச் சுற்றி வருவது பற்றி ஒரு உண்மைக் கதையையும் பகவான் பக்தர்களிடம் சொல்வார்.கதையின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் அவர் சொன்னதேயில்லை.அந்த க்ளைமாக்ஸை பகவானின் அனுக்ரஹத்துடன் நான் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறேன்.

திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
ஏன்?

கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.

பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.

ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.

அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.

ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.

அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.

இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.

ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.

ஆமாம். அது என்ன தெரியுமா?

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்? ஓர் இளைஞன்.

ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்!

எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.கால்கள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெல்லாம் சொல்லிக் கொண்டதும் இல்லை.தட்சிணாமூர்த்தியின் அம்சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?நம் குரு தேவரும் அப்படித்தான்.

அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான். இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!

கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்?

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE::::: http://www.balanuman.wordpress.com

Natarajan

ரமணர் வாழ்வில்…. சுவையான நிகழ்ச்சிகள்…Part 5

முழு தியான நிலை என்பது கிணற்றில் கயிற்றால் கட்டித் தொங்கும் குடம் (தோண்டி) போன்றது. குடத்தில் உள்ள தண்ணீர் (மனம்),கிணற்றில் குடம் அமிழும்போது கிணற்று நீருடன் (ஆன்மா)ஒன்று கலந்து விடுகிறது. ஆனாலும் குடத்தில் நிரம்பிய நீரோ, கயிற்றின் (அகந்தையின்) மற்றொரு நுனியால் வெளியே இழுக்கப்பட்டுவிடும்.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்தபோது கண் பார்வை இல்லாத ஒரு பாட்டி,தினமும் தட்டுத் தடுமாறி யார் உதவியுடனாவது மலை ஏறி வந்து, பகவானுக்கு ஏதாவது அன்புடன் தருவாள்.

அன்றைய தினம், பாட்டி பகவானுக்கு மிகவும் பிடித்த அரிசிப் பொரியைக் கொண்டு வந்தாள்.ரமண மகரிஷியும் அதை அன்புடன் பெற்றுக் கொண்டு, “பாட்டி, உனக்கோ முடியவில்லை. கண் பார்வையும் இல்லை. எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வருகிறாய்?’’என்று வினவினார்.

அந்தப் பாட்டி, “பகவானே, உங்களை தரிசனம் செய்யத்தான் வருகிறேன்’’ என்றாள்.

”நீதான் என்னைப் பார்க்க முடியாதே? கீழேயிருந்தே என்னை நினைத்துக் கொள்ளக் கூடாதா?’’ என்றார் பகவான்.

”பகவானே, என்னால் உங்களைப் பார்க்க முடியாதுதான். ஆனால் உங்கள் அருட்பார்வை என் மீது விழுமே.அந்த பாக்கியத்துக்காகத்தான் நான் தினமும் வருகிறேன்’’ என்றாள் பாட்டி.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE:::: http://www.balhanuman.wordpress.com

Natarajan