Tarr Steps: An Ancient ‘Clapper Bridge’ in Somerset…

In the lonely moors of Devon and in other upland areas of the United Kingdom, the ancient people had built stone bridges by placing large flat slabs of stones over piles of stones, without mortar or cement, to cross narrow streams. These bridges are called clapper bridges. The name is derived from the Anglo-Saxon word “cleaca” which means “bridging the stepping stones”, suggesting that the first clapper bridges might have been stone slabs laid across the top of existing stepping stones. Most clapper bridges were built during the medieval times, although some of them age much much more.

tarr-steps-3

Photo credit: j.e.mcgowan/Flickr

 

One of the most famous clapper bridge is Tarr Steps, located in the Exmoor National Park, in Somerset, across the River Barle. It is also the longest clapper bridge in Britain with 17 spans and measuring 55 meters in length.The bridge lies very low in the water, less than a meter over the river’s normal water level. Over the last century, the river has silted so much that during flood it often flows over the stones. Several times in recent years, the slabs of stones, which weigh up to two tons each, have been washed up to 50 meters downstream. The bridge was repaired each time.

The age of Tarr Steps is unknown with several theories claiming that it dates from the Bronze Age, but others put them around 1400 AD. According to local legend, the Devil himself built it so that he could sunbath on. A more elaborate story says that the Devil never fully completed building the bridge, because his apron strings broke and he dropped the stones he was carrying. The Devil then denounced destruction on the first creature to venture across, so the villagers sent a cat across. The poor creature was torn to pieces. The parson then crossed the bridge without harm, and traded insults with the Devil.

The Tar Steps has been a tourist attraction for at least two hundred years.

tarr-steps-1

Photo credit: James Morley/Flickr

tarr-steps-2

Photo credit: Matt Neale/Flickr

tarr-steps-4

Photo credit: Exmoor NP/Flickr

tarr-steps-8

Photo credit: lee roberts/Flickr

Sources: Wikipedia / Theaa.com / www.everythingexmoor.org.uk

Source……www.amusingplanet.com
Natarajan

“கம்பீரப் பார்வையும் சிலிர்த்து நிற்கும் திமிலும்: தமிழக மாட்டினங்களின் மரபும் பெருமையும்”

நம்ம ஊர் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அடுத்த கணம் நம் மனதில் தோன்றி மறைபவை துள்ளி ஓடும் காளைகளே. அவை எதுவும் சாதாரணக் காளைகள் அல்ல, கம்பீரப் பார்வையும் மேலெழுந்த திமிலுடனும் சிலிர்த்து நிற்கும் காங்கேயம் காளைகள்.

எந்தச் சந்தேகமும் இல்லாமல் காங்கேயம் காளை, நம் மண்ணின் பெருமிதம்தான். காங்கேயம் மட்டுமின்றி உம்பளச்சேரி, புளியகுளம், பர்கூர் மலை மாடு, தேனி மலை மாடு போன்றவையும் நம் மரபின் பெருமைகளைத் தூக்கிப் பிடிப்பவையே. தமிழ் மண்ணின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஆறு மரபார்ந்த மாட்டினங்களில் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.

மற்ற உள்ளூர் மாட்டினங்களின் நிலையும் மகிழ்ச்சி யடைய வைக்கும் நிலையில் இல்லை. நம்முடைய மாட்டினங்கள் வேகமாக அழிந்துவருவதற்கு, அவற்றின் பெருமைகள் சரியாக உணரப்படாததே முக்கியக் காரணம். உள்ளூர் மாட்டினங்களின் இனப்பெருக்க நடைமுறைகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு ஒருபுறம் கண்மூடித்தனமாக எதிர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் காலம்காலமாகக் கிடைத்துவந்த ஆதரவையும் பராமரிப்பையும் வேகமாக இழந்துவரும் உள்ளூர் மாட்டினங்கள் அழிவை நோக்கி நகர்ந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் காங்கேயம் அருகே குட்டப்பாளையத்தில் செயல்பட்டுவரும் சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி, நம் மாடுகளின் பெருமைகளை பகிர்ந்துகொள்கிறார்:

காங்கேயம்: கம்பீரமும் அழகும்

ஆங்கிலேய கவர்னர் ஒருவர் காங்கேயம் அருகேயுள்ள பழையக்கோட்டை கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, ராவ் பகதூர் சர்க்கரை மன்றாடியாரின் பண்ணையில் இருந்த காங்கேயம் காளைகளைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பண்ணையின் அழகு’ (Beauty of the farm) என்று அவற்றை பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப் பலராலும் பாராட்டப்பட்ட காங்கேயம் மாட்டினமே, தமிழக மாட்டினங்களின் தாய் இனம்.

 

காங்கேயம் காளைகள் சாதாரணமாக 4,000-5,000 கிலோ வண்டிபாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை. எந்தக் காலநிலையையும் சமாளித்து வாழும் திறன் பெற்றவை, உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து வாழக்கூடியவை. எல்லாம் நன்றாக இருக்கும் சூழ்நிலையில் மட்டுமல்லாமல் கடுமையான வெயில், பஞ்ச காலத்திலும் நொடித்துப் போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை.

காங்கேயம் மாட்டினம் என்றாலே காளைகள் மட்டும்தான் என்று நம்புகிறோம். பால் கொடுக்கும் பசுக்களும் காங்கேயம் வகையில் உண்டு. இறைச்சி உண்ணும் நம்முடைய பண்பாட்டில் பாலுக்கான தேவை அதிகமாக இல்லாததால், உழைப்புக்குப் பெயர் பெற்ற காளைகளே பிரபலமடைந்தன.

நமது உள்ளூர் மாட்டினங்கள் உழைப்புக்காகவே பெரிதும் அறியப்பட்டவை. ஆனால், ‘வெள்ளைப் புரட்சி’க்குப் பிறகு உழைக்கும் காளைகளைத் தாழ்வாகப் பார்க்கும் குணம் உருவாகி, இன்றைக்கு அந்தப் பார்வை பெரிதாகப் பரவலாகிவிட்டதே உள்ளூர் மாட்டினங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.

தமிழகத்தில் 1990-ல் 11 லட்சத்து 74 ஆயிரம் காங்கேயம் மாடுகள் இருந்தன. 2000-ல் அது நான்கு லட்சம் மாடுகளாகக் குறைந்து, 2015-ல் ஒரு லட்சம் மாடுகள்கூட இல்லை என்று சொல்லும் நிலைக்குச் சரிந்திருக்கின்றன.

தமிழக மாட்டினங்களின் தாய் இனம், காங்கேயம் என்று கூறப்படுவதற்குக் காரணம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட காங்கேயம் மாடுகள், அந்தந்த பகுதிக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டதால் பின்னர் தனித்தனி மாட்டினங்களாகப் பரிணமித்துள்ளன.

வாழிடம்: கொங்கு, கோவை, கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகள்.

தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.

உம்பளச்சேரி: உறுதிமிக்க கால்கள்

உம்பளச்சேரி மாடுகள் குட்டையானவை என்றாலும், கால்கள் மிகவும் உறுதியானவை. காவிரி பாசனப் பகுதி வயல்களில் உழ வேண்டுமென்றால், ஆழமான சேற்றில் மாடுகள் இறங்கியாக வேண்டும். அதற்கு ஏற்ப சிறந்த தகவமைப்பைப் பெற்றவை உம்பளச்சேரி மாடுகள். நன்கு உழக்கூடிய இவை, தஞ்சை டெல்டா பகுதியில் பரிணமித்தவை.

வாழிடம்: தஞ்சை, திருவாரூர், நாகை எனப்படும் பழைய தஞ்சை மாவட்டம்.

பர்கூர் மலை மாடு: கெட்டியான குளம்புகள்

இதற்கு செம்மறை என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த மாட்டினத்தின் பாதங்களை வலுப்படுத்துவதற்கு லாடம் அடிக்கத் தேவையில்லை. அவற்றின் குளம்பே லாடத்தைப் போல கெட்டியாகவும் உறுதியாகவும் இருக்கும். காட்டில் அதிகம் மேயக்கூடிய மாட்டினம் இது. மத்திய அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டத்தைத் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் இன்னும் சட்டமாக ஏற்றுக்கொண்டு அறிவிக்காததால், இந்த மாட்டை வைத்திருக்கும் பழங்குடிகள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். வயலில் பட்டி போடுவதற்காக இந்த மாட்டினம் அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

வாழிடம்: ஈரோடு, அந்தியூர் 

புளியகுளம்: நிலம் காக்கும் பட்டி மாடு

புளியகுளம் மாட்டின் பெயரே ‘பட்டி மாடு’தான். ‘நிலம் தரிசாதல் அதிகரித்துவருகிறது என்றும், அதைத் தடுக்கும் சக்தி ஆடு-மாடு பட்டி போடுதலில் அடங்கியிருக்கிறது’ என்றும் குறிப்பிடுகிறார் ஸிம்பாப்வே சூழலியலாளர் ஆலன் சேவரி. ஒரு வயலில் ஒரு நாள் இரவு முழுக்க ஆடு அல்லது மாடுகளைப் பட்டிபோட்டுத் தங்கவைப்பதால் அவற்றின் சிறுநீர், புளுக்கை, சாணம் போன்றவை நிலத்தில் விழும்.

இயற்கையான, இந்த உடனடி உரம் மூலம் நிலம் வளமாகும். புளியகுளம் மாடு பட்டிபோட்டால் மூன்று ஆண்டுகளுக்கு உரம் தேவையில்லை என்கிறார்கள். பட்டி போடுபவருக்கு ஒரு மாட்டுக்கு ரூ. 10-ம், ஆட்டுக்கு ரூ. 5 ம் கிடைக்கிறது. கேரளப் பகுதியில் இயற்கை வேளாண் முறையில் மேற்கொள்ளப்படும் திராட்சை சாகுபடிக்குப் புளியகுளம் மாடுகளே பேருதவி புரிந்துவருகின்றன. ஜல்லிக்கட்டிலும் இந்த மாட்டினம் அதிகமாக ஈடுபடுத்தப்படுகிறது.

வாழிடம்: புளியகுளம், சிவகங்கை, பழைய மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகள். தேனி பகுதியில் இருப்பது தேனி மலை மாடு.

காங்கேயம் பசு (பெண் மாடு) கன்றுடன் - காங்கேயம் காளையுடன் கார்த்திகேய சிவசேனாபதி

காங்கேயம் பசு (பெண் மாடு) கன்றுடன் – காங்கேயம் காளையுடன் கார்த்திகேய சிவசேனாபதி

பர்கூர் மலையினக் காளை

பர்கூர் மலையினக் காளை

கம்பீரம் நிறைந்த காங்கேயம் காளை

கம்பீரம் நிறைந்த காங்கேயம் காளை

வண்டியிழுக்கும் உம்பளச்சேரி காளைகள்

வண்டியிழுக்கும் உம்பளச்சேரி காளைகள்

புளியகுளம் மாடுகள்

புளியகுளம் மாடுகள்

தொடர்புக்கு: 04257 294234, 96295 28888
‘தி இந்து’ 2016 பொங்கல் மலரில் வெளியாகியுள்ள படத்தொகுப்பின் ஒரு பகுதி

Source……தொகுப்பு: ஆதி  in http://www.tamil.thehindu.com

Natarajan

ஜனவரி 8 1994….பெரியவா மஹா சமாதி அடைந்த நாள் …

1994 ஜனவரி 8 ஆம் தேதி ஐயன் மஹா சமாதி அடைந்த பின், வெளி வந்த ஆனந்த விகடனில், அப்போது தொடராக வந்து கொண்டிருந்த ‘அன்பே அருளே’ கட்டுரையின் 8 ஆவது அத்தியாயம். ஸ்ரீ பரணீதரன் மாமா அவர்கள் கைவண்ணம்…

சாக்கியர் கூத்தை பற்றி தொடர்வதற்குள் ஒரு பிரளய கால ஊழிக்கூத்தே நடந்து முடிந்து விட்டது.

நூற்றாண்டு பிறந்த தின வைபவமாக கடந்த மே மாதம் கனகாபிஷேக காட்சியருளி, கோடிக்கணக்கான பக்தர்களின் நெஞ்சங்களை குளிர்வித்த பெரியவா, ஒரே நொடியில் தமது சரீர உடையை உதறிவிட்டு நம் கண்ணிலிருந்து மறைந்து விட்டார்.

1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி – சனிக்கிழமை பிற்பகல் 2.58 மணிக்கு துவாதசியன்று பெரியவா மகா சமாதி அடைந்து விட்ட செய்தி ஊரெங்கும், நகரங்கள் என்றும், கிராமங்கள் தோறும், நாடு முழுவதும், உலகம் பூராவும், எட்டி விடுகிறது. கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்கள் பதறி துடித்தன. கண்ணீர் பொங்கி பொங்கி பெருகியது. பாசத்தை வளர்த்து கொண்டு விட்ட பக்தர்கள் குமுறி குமுறி அழுதார்கள்.

‘பெரியவா என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டாளே…’

‘திடீர்ன்னு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரே…’

‘இனிமே பெரியவாளை தரிசனம் பண்ண முடியாதே..அந்த கருணை வடிவத்தை காண முடியாதே…அன்பு சிரிப்பை பார்க்க முடியாதே… அமுத பேச்சை கேட்க முடியாதே…’

அப்பா அம்மா போனப்ப ஆறுதலுக்கு, பெரியவா கிட்டே ஓடி வந்தேன். இப்ப பெரியவாளே போயிட்டாளே யாருகிட்டே போவேன்?

‘பெரியவாளுக்கு முன்னாலே நான் போயிடணும் ன்னு பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தேன். என்னாலே யாருக்கு என்ன பிரயோஜனம்?

பெரியவா இருந்தா உலகத்துக்கே க்ஷேமமாச்சே…’

‘நான் கொடுத்து வெச்சவன் சார், பெரியவா மௌனவிரதம் ஏற்பதற்கு முன்னே ஒரு நாள் தரிசனத்துக்கு போயி இருந்தேன். நிறைய பேசினார் அமோகமா அனுக்கிரகம் பண்ணினா…இப்படியே பேசாம ரொம்ப நாள் உக்காந்திருப்பார் ன்னு நெனைச்சனே… மோசம் போயிட்டேனே…’

‘பெரியவாளை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாதே..நாற்பது வருஷமா பெரியவா கூட இருந்து தொண்டு பண்ணினேன்…எவ்வளவு பேசி இருக்கா…ஒரு தரம் என்னை கோவிச்சிண்டுட்டா…ஏண்டா, உன்னை ரொம்ப கோவிச்சிண்டுட்டேனா? வருத்தமா இருந்ததா ன்னு அடுத்த நிமிஷமே குழந்தை மாதிரி விசாரிச்சாளே…எப்பு கோவிச்சிக்க இப்ப பெரியவா இல்லியே…’

‘பெரிய எசமான் உள்ளே படுத்துண்டு இருக்காங்க ன்னு ஒரு தைரியம் இருந்துதுங்க. எட்டி பார்த்தா அவங்க இருக்க மாட்டாங்களே…’

‘தெய்வம் என்னை தனியா விட்டுட்டு போயிடுச்சுங்க…உலகமே இருளோன்னு இருக்குதே..’

இப்படி பல்வேறு தரப்பட்ட பக்தர்கள் கதறி கதறி தீர்த்துவிட்டனர். தன் தாய், தந்தை, குழந்தை, நெருங்கிய உறவினர் இவர்களை இழந்து விட்டவர்கள் போல் என்னிடம் தேம்பி தேம்பி அழுதனர். என் சொந்த துயரத்தை உள்ளடக்கி பொங்கிய கண்ணீரை தேக்கி நிறுத்தி, அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றிக்கொண்டு இருந்தேன்.

என்னால் தேற்ற முடியாமல் போனது அந்த ஆறு வயது சிறுமியைத்தான்.

‘எனக்கு மூணு வயசு இருக்கறப்போ பெரியவா கல்கண்டு கொடுத்தா. அதுக்கப்பறம் பெரியவாளை நான் பார்க்கவே இல்லை. அழைச்சிண்டு போ ன்னு அப்பா கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அழைச்சிண்டு போகலே. இப்போ சாமி கிட்டே போயிட்டாரே.நான் இனிமே பெரியவாளை எப்படி பார்க்கிறது?’ என்று அந்த சிறுமி கண்கலங்கிய போது, எப்படி தேற்றுவது என்று கலங்கி போனேன் நான்.

ஜனவரி முதல் தேதியன்று பத்து நிமிடங்கள் மட்டுமே பெரியவா தரிசனம் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு பொது தரிசனமே இல்லை. உடல்நிலை சரியில்லை. வைத்தியர்கள் அருகிலேயே இருந்து தேவையான சிகிச்சைகள் அளித்து கொண்டு இருந்தார்கள்.

8-ஆம் தேதி சனிக்கிழமை அன்று உடல் நிலை தேறியது. ஈச்சங்குடியில் வாங்கியுள்ள பெரியவாளின் பூர்வாச்ரம தாயாரின் இல்லத்தில் வைப்பதற்காக தயாரான அப்பா அம்மா படங்கள் அவரிடம் காட்டப்பட்டது. அதை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தார்.

பாலுவிடம், ‘நீ கலவை பார்த்திருக்கியோ அங்கே போயிருக்கியோ?’ என்று கேட்டிருக்கிறார்.

எதற்கு திடீர் என்று கலவையை நினைத்துக்கொண்டாரோ?

யாரோ ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். ‘சௌக்கியமா இருக்கேளா?’ என்று உரத்த குரலில் கேட்டிருக்கிறார்.

‘பெரியவாளோட பழைய குரல் மாதிரி இருந்தது. எங்களுக்கெல்லாம் ஆச்சிரியமாக போய்விட்டது…’ என்றார் திருக்காளாவூர் ராமமூர்த்தி.

‘பிரும்ம ஸ்ரீ சாஸ்த்ரிகள்’ என்று பெரியவா பெயரிட்ட வேதபுரியை பார்த்து ‘கையில் என்ன?’ என்று கேட்டாராம். ‘பெரியவாளோட மரக்குவளை…அலம்ப எடுத்துண்டு போறேன்…’ என்று பதில் கூறி விட்டு போயிருக்கிறார்.

பெரியவா சாதாரணமாக இருப்பதை அறிந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிக்ஷையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். பிறகு படுக்க வைத்து இருக்கிறார்கள். அரை நொடியில்…அனாயாசமாக அப்போது மணி 2.58…

அல்லும் பகலும் ஒவ்வொரு கணமும் கண்ணிமை போல் பாதுகாத்து வந்த திவ்ய சரீரத்தை பார்த்து கதறி தீர்த்து விட்டார்கள் அந்த புண்ணியசாலிகள். மஹா சுவாமிகளுக்கு கைங்கர்யம் செய்தவர்கள் அத்தனை பெரும் பாக்கியசாலிகள். யார் பெயராவது விட்டு போய் விடுமோ என்பதால் அவர்களது பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.

அன்று மதியம் இரண்டரை மணி அளவில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பால சுவாமிகளுடன் தாம்பரம் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று வர, பெரியவாளிடம் உத்தரவு பெற்று சென்றதை கண் கலங்கியவாறு கூறினார். சென்னைக்கு செய்தி சென்று, தாம்பரத்தை அடைவதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டு, இரு சுவாமிகளும் மாலை ஐந்து மணியளவில் ஸ்ரீ மடத்துக்கு வந்திருக்கிறார்கள்.

துறவியேனும் நாற்பது ஆண்டு கால தொடர்பின் பின்னணியும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நினைவில் அலைமோத ஸ்ரீ ஜெயேந்திரர் நெஞ்சம் குமுறி கண்ணீர் வடித்ததில் வியப்பென்ன? ஒப்புயர்வற்ற குருவின் உபதேசம் பெற்றதற்கும், பிரம்ம ஞானியிடம் பாடம் பயின்றதற்கும், மகானிடம் அறிவுரை கேட்டதற்கும் முற்பிறவியின் நற்பேறு அன்றோ காரணம் என்ற நன்றி கண்ணீர் அல்லவா அது!

அத்தருணம் உள்ளத்தில் எழுந்த சிந்தனைகள் எல்லாம் கூற முடியாமல் துயரமே உருவாக சோகமே வடிவாக அமர்ந்திருந்தாலும் – மறுநாள் நடக்க வேண்டிய சடங்குகளில் தீவிர கவனம் செலுத்தி, பக்தர்களிடம் ஆணைகள் பிறப்பித்துக்கொண்டு இருந்தார்.

பால சுவாமிகள் அங்கும் இங்கும் எங்கும் காணப்பட்டார். ஒரு கணம் தரிசித்து ஆறுதல் பெற காத்திருக்கும் பக்தர்களை சந்தித்தவாறே, தேவையான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தார்.

என்னை கண்டதும் தனியே அழைத்து சென்று, ‘ஏமாந்து போயிட்டோம்…இன்னிக்கு நன்னா தான் இருந்தா. பேசினா, சிரிச்சா, பிக்ஷை பண்ணினா…தைரியமா இருந்தது. தாம்பரம் போயிட்டு வந்துடலாம் ன்னு புறப்பட்டோம்…எதிர்பார்க்காம சேதி வந்தது.’என்று நடந்தவற்றை கூற தொடங்கினார். நடந்து சென்றவாறே ஒருவருக்கு கையசைப்பு, ஒருவரை அருகில் வரசொல்வது, இன்னொருவரை பார்த்து, ‘ஒ, வந்திருக்கேளா?’ என்று கேட்பது. ‘உங்களுக்கு எப்போ தெரியும்?’ என்று பரிவுடன் விசாரிப்பது…’பிருந்தாவன வேலை வேகமா நடந்து கொண்டு இருக்கிறதா?’என்று பார்வையிடுவது… பம்பரமாக சுற்றி சுழன்று கொண்டிருந்தார் பால பெரியவர்.

பக்தர்கள் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது. வேகமாக நகர்ந்த க்யு இரண்டு கிலோ மீட்டர் வரை நீண்டது. வெகு விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவலர்கள் பணி போற்றத்தக்கதாய் இருந்தது.

மேடையில் பெரியவாளின் திருமேனி ஒளிர்ந்து கொண்டு இருந்தது. நான்கு ஆண்டுகளாக நாம் கண்ட தரிசனம். ஒரே ஒரு வித்தியாசம்…எவ்வித அசைவும் இல்லை…மூலவராகிவிட்ட நிலையில், தெய்வீக சாந்நித்யம் நிலவியது. சுற்றிலும் மடத்து சிப்பந்திகள். அவ்வப்போது, இரு சிஷ்ய சுவாமிகளும் வந்து உடனிருந்தார்கள்.

எதிரில் நகர்ந்த க்யூ வில் கும்பிட்டவர்கள், குமுறி அழுதவர்கள், கன்னத்தில் போட்டு கொண்டவர்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள், இஸ்லாமிய பெருமக்கள், கிறிஸ்துவ சகோதர-சகோதரிகள், வெளிநாட்டினர், பல சமயத்தினர், பல மொழியினர் பொது வாழ்வில் பலதுறை சேர்ந்தவர்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், தள்ளாடும் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர்…

ஒரு புறம் ஒலிப்பெருக்கியில் ‘ஜெய ஜெய சங்கர…ஹர ஹர சங்கர…’கோஷம், நாம சங்கீர்த்தனம், பக்தி பாடல்கள், தேவாரம், திருப்புகழ், சகஸ்ர நாம பாராயணம், வேத முழக்கம்…. மேடை நிரம்ப மணம் பரப்பும் மலர் கொத்துக்கள், வாசனை திரவியங்களின் புகை மண்டலம்…தேவலோக சூழ்நிலை…

பன்னிரண்டு மணிக்கு மேல் மகாபிஷேகம் தொடங்கியது. பிரதம சீடர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள், குருவின் திருமேனிக்கு முறைப்படி அபிஷேக, அர்ச்சனைகள் செய்வித்து, தூப தீப கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டது, ஆலயம் ஒன்றில் சிவபூஜை நடைபெற்றது போன்ற உணர்வை தோற்றுவித்தது.

இறுதியாக நான்கு மணியளவில் பிருந்தாவன பிரவேச ஊர்வலம் புறப்பட்டு அருகிலிருந்த மாளிகைக்குள் சென்றது.

வெளியே இருந்தவர்களுக்கு புனித திருமேனியின் கடைசி புண்ணிய தரிசனம் அதுவே

Read more: http://periva.proboards.com/thread/10890/06-01-2016/#ixzz3wZpAMVSV

Source…….www.periva.proboards.com

Natarajan

 

 

 

” Never underestimate your Mother …” !!!

Never underestimate Moms!

Things were going exactly as Srinivasan had feared, his Mother would come in from India and crush his American way of life under her strong South Indian influence. For a genetic scientist like Vasu, as Srinivasan was called by his friends, the only kind of order was disorder. So consumed he was by his research that the world and it’s affairs mattered little to him. When his last girlfriend walked out on him, “Find a girl on planet Srinivasan,” she had screamed as she stomped out.

Now Vasu’s Mother had taken over the administration of the planet. It irritated him, this milk at night and chyawanprash every morning. “Have you been wearing the same pair of Jeans for the past three days?” Mother was beginning her morning interrogation.

Vasu stared at the hot idlis in front of him, the chywanprash to follow and the wardrobe interrogation that had begun. Something snapped in his mind. “Mom I love you and I love that you come all the way from India to take care of me but please don’t fuss over me! It irritates me!  And then I cannot work!”

His Mother did not really care if Vasu was upset, “The idlis are getting cold,” was her matter of fact response.

“You don’t really care, do you Mom?”

“I care about you Vasu. The work you do is alright. If you don’t do it, someone else will do it.”
“Mom, I am a genetic scientist. I am working on the evolution of man. Theory of evolution, Charles Darwin, have you heard of him? ” Vasu was exasperated with her unwillingness to understand.

His Mother sat down next to him and smiled, “I know Darwin, Vasu. I also know that what you think he discovered, was old news in India.”

“Yeah sure Mom!” Vasu said with sarcasm.

“Well if you are too smart then listen to this,” his Mother countered.” Have you heard of the Dashavatara ? The ten avataras of Vishnu ?” Vasu nodded. “Then let me tell you what you and Mr. Darwin don’t know.

The first avatara was the Matsya avatara, it means the fish. That is because life began in the water. Is that not right ?” Vasu began to listen with a little more attention..

“Then came the Kurma avatara, which means the tortoise, because life moved from the water to the land. The amphibian. So the Tortoise denoted the evolution from sea to land.

Third was the Varaha avatara, the wild boar, which meant wild animals with not much intellect, you call them the Dinosaurs, correct ?” Vasu nodded wide eyed.

“The fourth avatara was the Narasimha avatars, half man and half animal, the evolution from wild animals to intelligent beings.

Fifth was the Vamana avatara, the midget or the dwarf, who could grow really tall. Do you know why that is so ? Because there were two kinds of humans, Homo Erectus and the Homo Sapiens and Homo Sapiens won that battle.” Vasu could see that his Mother was in full flow and he was stupefied.

“The Sixth avatara was Parshurama, the man who wielded the axe, the man who was a cave and forest dweller. Angry, and not social but the seventh avatara was Ram, the first thinking social being, who laid out the laws of society and the basis of all relationships.

The eighth avatara was Krishna, the statesman, the politician, the lover who played the game of the society and taught how to live and thrive in the social structure.

The Ninth avatara,was Balarama the man who rose from Narasimha and found man’s true nature.

And finally, my boy, will come Kalki, the man you are working on. The man who will be genetically supreme.”

The last Avatar is yet to appear, and in many versions of the mythology, the ninth incarnation is mentioned as Lord Buddha. But this is a much later addition done at a time when the concept of Dashavatara was already fully developed.

Vasu looked at his Mother speechless. “This is amazing Mom, how did you.. This makes sense !”

“Yes it does Vasu ! Now have your chyawanaprash ! ”

source……input from a friend of mine
Natarajan

” மஹா விஷ்ணுவும் , கொசுவும் ஒண்ணு …..” !!!

10482143_599228513527816_46027082804070919_n.jpg

ஒரு நாள் மடத்தில் உள்ளவர்களிடம்,” மகா விஷ்ணுவும்

கொசுவும் ஒண்ணு, உனக்குத் தெரியுமா?” என்றார் பெரியவா.

வழக்கம்போல் தானே அந்தப் புதிரையும் விடுவிக்கிறார்.

“விஷ்ணுவின் கையில் சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கு,கொசுவும்

சக்கரமாய் சுற்றிக்கொண்டுதான் இருக்கு.

கெட்டவர்கள் விஷ்ணுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.

கண் வலிக்காரர்கள் கொசுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கி விடுவார்கள். ச்ருதியிடம் விளையாடுபவர்

விஷ்ணு. [ச்ருதி=வேதம்] ச்ருதி முனையில் ஙொய் என்று கத்திக்கொண்டு விளையாடும் கொசு [ச்ருதி=காது]!”

இந்த சிலேடை சொன்னதுக்குக் காரணம் மடத்தோடு

அவர்கள் இருந்த முகாமில் கொசுத்தொல்லை தாங்க முடியாது.

“அனந்தசயனம் பண்ணும் பெருமாள்தான் கொசுன்னு

நினைச்சுண்டேன்னா, பகவத் ஸ்மரணையோடு தூங்கலாம்!” என்று எல்லோரையும் சமாதானம் செய்வாராம்.

இப்படி எந்தக் கஷ்டத்தையும் நகைச்சுவை ததும்ப சரி செய்துவிடும் அழகையும் பெரியவாளிடம் அனுபவிக்க முடியும்.

ஒரு நீண்ட உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளும் கேட்டார். ஒரு வழியாக உபன்யாசம் முடிந்தது.உடனே பெரியவா”சாக்கு கிடைச்சுதுன்னு நன்னா ரொம்ப நேரம் சொன்னயா?”என்றார்: “நீ ஒக்காந்துண்டிருந்தது ஒரு சாக்குமேலே…அந்த சாக்கைச் சொன்னேன்!” என்று தமாஷ் பண்ணினாராம்

Read more: http://periva.proboards.com/thread/10869/#ixzz3wPgbz2Ii

Source ……..www.perivaproboards.com

Natarajan

 

Photos That Prove 2015 Wasn’t The Worst Year After All…!!!

2015 is over, and while many in the media have focused on the negative, readers of Bored Panda know that there were many good things that happened this year. Yes, politicians continue to start new wars, but it’s up to us, regular, everyday people to make the world a better place, and we believe that the stories below prove this to be true.

Entire Neighbourhood Secretly Learns Sign Language To Surprise Deaf Neighbor

Entire Neighbourhood Secretly Learns Sign Language To Surprise Deaf Neighbor

 

Man Buys Turtles From Food Market And Releases Them Back To The Sea

Man Buys Turtles From Food Market And Releases Them Back To The Sea

The Young Guy Sitting Down Was Struggling With His Tie When The Older Gentleman Moved Without Hesitation And Gave Him A Step-By-Step Tutorial

The young guy sitting down was struggling with his tie,

Heart Surgeon Calms Weeping 2-Year-Old Girl Before Heart Operation

Heart Surgeon Calms Weeping 2-Year-Old Girl Before Heart Operation

Turkish Bride & Groom Spend Their Wedding Day Feeding 4,000 Refugees

Turkish Bride & Groom Spend Their Wedding Day Feeding 4,000 Refugees

Donkey Smiles From Ear To Ear After Being Rescued From Flood In Ireland

Donkey Smiles From Ear To Ear After Being Rescued From Flood In Ireland

This Guy Has This Dog, And She Can’t Walk Anymore. So He Takes Her Out For A Walk Every Day In A Wheelchair

This guy has this dog, and she can't walk anymore. So he takes her out for a walk every day in a wheelchair

When A Student’s Baby Started Crying In Class, This Professor Had The Best Response Ever

When A Students Baby Started Crying In Class, This Professor

Mom Adopts All 4 Of Her Best Friend’s Daughters After She Died Of Brain Cancer

Mom Adopts All 4 Of Her Best Friends Daughters After She Died Of Brain Cancer

This Coffee Shop Lets Stray Dogs Sleep Inside Every Night When The Customers Leave

This Coffee Shop Lets Stray Dogs Sleep Inside Every Night When The Customers Leave

Man Has Heart Attack While Mowing Lawn; Firefighters Finish Mowing Lawn After Saving Him

Man Has Heart Attack While Mowing Lawn; Firefighters Finish Mowing Lawn After Saving Him

These Kids In Canada Tied Coats To Street Poles To Help Homeless Prepare For Winter

These Kids In Canada Tied Coats To Street Poles To Help Homeless Prepare For Winter

Baby Deer Refuses To Leave The Human Who Saved Her Life

Baby Deer Refuses To Leave The Human Who Saved Her Life

Anonymous Spiderman Feeds Homeless At Night, Shows Everyone Can Be A Hero

Anonymous Spiderman Feeds Homeless At Night, Shows Everyone Can Be A Hero

Hungarians Bring Their Shoes To The Budapest Train Station For Arriving Migrants

Hungarians bring their shoes to the Budapest train station for arriving migrants

Soaked Dad Protecting His Schoolboy From Rain Shows What Parenting Is

Soaked Dad Protecting His Schoolboy From Rain Shows What Parenting Is

97-Year-Old Cries Tears Of Joy After She Finally Gets Her High School Diploma

97-Year-Old Cries Tears Of Joy After She Finally Gets Her High School Diploma

This Shop Owner Who Promised To Help Those In Need

This shop owner who promised to help those in need

Quincy’s Been Waiting All Week To Show The Garbage Men His Garbage Truck. But, In The Moment, He Was Overwhelmed In The Presence Of His Heroes

Quincy's been waiting all week to show the garbage men his garbage truck. But, in the moment, he was overwhelmed in the presence of his heroes

Barber Goes Extra Mile To Conquer Autistic Boy’s Fear Of Haircuts

Barber Goes Extra Mile To Conquer Autistic Boys Fear Of Haircuts

This Boy Offering A Bottle Of Water To A Policeman During A Hot Day In Baltimore

This Boy Offering A Bottle Of Water To A Policeman During A Hot Day In Baltimore

Hospital Makes Exception And Allows Couple Married 68 Years To Be Together In Same Room

Hospital Makes Exception And Allows Couple Married 68 Years To Be Together In Same Room

Son With No Arms Spoon-Feeds His Paralyzed Mom Using His Teeth

Son With No Arms Spoon-Feeds His Paralyzed Mom Using His Teeth

103-Year-Old Celebrates Birthday By Dressing Up As Wonder Woman And Volunteering At Senior Center

103-Year-Old Celebrates Birthday By Dressing Up As Wonder Woman And Volunteering At Senior Center

Source….www.boredpanda.com

natarajan

” வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் …”

நவராத்ரிக்கு முந்தின வாரம். பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு தம்பதிகள், தங்கள் ஐந்து வயதுக் குழந்தையோடு வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.
“பெரியவாகிட்ட ஒரு ப்ரார்த்தனை… கொழந்தைக்கு விஜயதஸமியன்னிக்கி அக்ஷராப்யாஸம் பண்ணணும்… நவராத்ரி டைம்-ங்கறதால ஆத்தை விட்டு வரது கொஞ்சம் கஷ்டம்… கொழந்தை நன்னா படிச்சு, நன்னா வரணும்…. அதுக்கு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்…”
பெரியவா தன் முன்னால் அப்பா, அம்மாவைப் போலவே கை கூப்பிக் கொண்டு, அம்மாவையும், தன்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்கும் குழந்தையை கடாக்ஷித்தார்…
“பெரியவாளோட திருவாக்கால, கொழந்தைக்கு எதாவுது வார்த்தை சொல்லித் தரணும்….”
“இங்க வா……”
‘ஸரஸ்வதி’ அழைத்தாள்!
“நா…..சொல்றதை திருப்பி சொல்றியா?…”
“சொல்றேன்..உம்மாச்சி தாத்தா!…”
“சொல்லு….வாக்குண்டாம்!…..”
“வாகுந்தாம்…..”
“நல்ல மனமுண்டாம்”
“நல்ல மனமுந்தாம்”
“மாமலராள் ….”
“மாமலரால் ..”
“நோக்குண்டாம்….”
“நோக்குந்தாம்..”
“மேனி…”
“மேனி..”
“நுடங்காது….”
“நுங்காது…”
“பூக்கொண்டு…”
“பூக்கொந்து…”
“துப்பார்….”
“துப்பார்….”
“திருமேனி……”
“தியுமேனி….”
“தும்பிக்கையான் பாதம்”
“தும்பிக்கியான் பாதம்”
“தப்பாமல்…”
“தப்பாமல்”
“சார்வார் தமக்கு….”
“சார்வார் தமக்கு….”
குழந்தைக்கு கொள்ளை ஸந்தோஷம்! உம்மாச்சித் தாத்தா சொன்னதை, தான் அப்படியே ‘கரெக்டாக’ சொல்லிய பெருமை!
“வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது….
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு!…..”
“….ஒனக்கு ஔவைப்பாட்டி தெரியுமா?…”
“தெரியும் தாத்தா!…”
“இது….ஔவைப்பாட்டி பாடினது….தெரியுமோ? தெனோமும் சொல்லு….நன்னா படிப்பே!…”
“செரி…தாத்தா!…”
வாய்க்கு கல்கண்டும், ஞானக்கல்கண்டு மலையிலிருந்து உண்மையான நல்லறிவுக்கு கல்கண்டும், குழந்தைக்கு கிடைத்தது!
அப்போது அங்கே சில தமிழ் அறிஞர்களும் இருந்தார்கள். பெரியவா, ஸமஸ்க்ருதத்தை மட்டுந்தான் போஷிப்பார்; ஆதரிப்பார்; என்ற தவறான கருத்து அப்போது பரவியிருந்ததால், இந்த பெற்றோர் வந்து அக்ஷராப்யாஸம் செய்து வைக்க வேண்டி, பெரியவாளிடம் ப்ரார்த்தனை செய்ததும், அங்கிருந்த தமிழ் அறிஞர்கள் எதிர்பார்த்தது…..
“மூஷிக வாஹன மோதகஹஸ்தா…..” என்ற ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தைத்தான்! ஆனால், அத்தனை மொழிகளுக்கும் ஆதார ஶக்தியான ‘ஸரஸ்வதி’க்கு மொழி பேதம் ஏது?
“வாக்குண்டாம்…..” என்று பெரியவா ஆரம்பித்ததும், அவர்களுக்கு ஆஸ்சர்யம்! ஸந்தோஷம்!
“பெரியவா கொழந்தைக்கு மட்டும் உபதேஸிக்கல……எங்க எல்லாருக்குந்தான் இந்த அருமையான உபதேஸம்! இனிமே எங்க வீடுகள்ளயும், வாக்குண்டாம்-தான் மொதல் பாடம் !…”
உண்மைதான்! இன்றைய கல்வியறிவு “வாக்குண்டாம்……” ஸ்லோகத்தில் சொல்லிய ஏதாவது ஒன்றையாவது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தந்திருக்கிறதா? என்று மூளையை குடைந்து குடைந்து யோஜித்தாலும், “இல்லை” என்றுதான் ஸத்யமான பதிலாக வரும். இது பெரியவா நம் அத்தனை பேருக்குமே அனுக்ரஹித்த அக்ஷராப்யாஸம்!
இந்த புது வர்ஷத்தில், நல்ல, உயர்ந்த ஸத்யமான வார்த்தைகள், நல்ல தர்மங்களை எடுத்துக் கொண்டு கடைப்பிடிக்கும் தாராள மனது, இந்த ரெண்டையும் அனுக்ரஹிக்க “ஜகத்குரு” காட்டிய விக்னேஶ்வர மூர்த்தியின் பாதங்களை பணிவோம். குழந்தைகள் இதை தினமும் சொல்லி வந்தாலே, மனஸும் ஶுத்தமாகும், அதனால் வாக்கும் ஶுத்தமாகும், தெளிந்த நல்லறிவும் உண்டாகும்.
Source…input from a friend of mine
Natarajan

” யார் மூட்டை தூக்கி …” ?

246400_479182102136836_1433845875_n.jpg
(முன்பு நாம் எல்லோரும் ஒரு விதத்தில் மூட்டை தூக்கிகளாக இருந்ததால்தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன. நாம் செய்கிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச் சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புக் கள் செதோம். அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை வந்திருக்கிறது. இதில் பழைய தப்புகளின் வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை, கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன.

அது போவதற்காகத்தான் குழந்தையாக இருக்கும்போது பள்ளிக் கூடத்துக்குப் போகிறோம். அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந் தினால் போகிறது. )

கல்கியில் வந்த அருள் வாக்கு.

உங்கள் வீடு ஒரு குடும்பம். இதற்கு அப்பாவும் அம்மாவும் தலைவர்கள். உங்கள் குடும்பத்துக்கு நடுவில் பள்ளிக்கூடம் என்கிற ஒரு குடும்பம் இருக்கிறது. உங்களுடன் படிக்கிறவர்களெல்லாம் உங்கள் குடும்பத்தில் உடன் வாழ்கிற சகோதரர்கள் மாதிரி. இந்தப் பள்ளிக் குடும்பத்தின் தலைவர் உபாத்தியாயர் ‘வாத்தியார்’ என்கிற ஆசிரியர். அவரையும் ஓர் அப்பா அம்மாவாக நீங்கள் மதித்து வணங்க வேண்டும்.

பள்ளிக் காலத்தில் உங்கள் கடமை படிப்பது ஒன்றுதான். உங்களுடைய கவனம் முழுவதும் படிப்பதிலேயே இருக்க வேண்டும். மற்ற விஷயங்களிலெல்லாம் நீங்கள் ஈடுபட இது சமயம் அல்ல. வேறு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும்கூட அவற்றையும் நீங்கள் படிப்பு முடிந்த பின்தான் கவனித்து ஈடுபடலாம். ‘இப்போதே எனக்கு அவற்றில் ஈடுபடச் சிறிது சக்தியும், புத்தியும் இருக்கிறதே; எனவே உலகத்துக்கு நல்லது செய்கிற அந்தச் சமாசாரங்களில் இப்போதே பிரவேசிப்பேன்’ என்று போகக்கூடாது.

சின்ன வயசில் உங்கள் உள்ளத்துக்குப் போதிய சக்தி ஏற்படுகிற முன்பே, படிப்பு தவிர மற்ற விஷயங்களை மேற்கொண்டால், உள்ளத்துக்கு வியாதிதான் உண்டாகும்.

ஏற்கெனவே நம் உள்ளத்தில் ஆசை, கோபம் முதலிய பல வியாதிகள் இருக்கின்றன. முன்பு நாம் எல்லோரும் ஒரு விதத்தில் மூட்டை தூக்கிகளாக இருந்ததால்தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன. நாம் செகிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச் சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புக் கள் செதோம். அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை வந்திருக்கிறது. இதில் பழைய தப்புகளின் வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை, கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. அது போவதற்காகத்தான் குழந்தையாக இருக்கும்போது பள்ளிக் கூடத்துக்குப் போகிறோம். அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந் தினால் போகிறது. அதோடு நம் கெட்ட குணங்களும் போக வேண்டும்.

இதற்குப் படிப்பு மட்டும் போதாது. பணிவு வேண்டும். பணிந்து கிடந்தால் கெட்ட குணங்கள் ஓடிப் போகும். தா, தந்தை, ஆசிரியர், தெவம் ஆகியவர்களிடம் பக்தியோடு, படிப்பில் கவனம் செலுத்தி வந்தால் அறிவும் வரும், குணமும் வளரும்.

Read more: http://periva.proboards.com/thread/10842/#ixzz3vxxbQliu

source……www.periva.proboards.com

Natarajan

B.K.S.Iyengar…” Founder of Iyengar Yoga “… His 97th Birth Anniversary on 14 Dec 2015…

Today is the 97th birth anniversary of B.K.S. Iyengar, one of India’s most prominent Yoga teachers.

And Google is celebrating with a brilliant, animated doodle – featuring a series of Yoga positions.

google1

The founder of “Iyengar Yoga”, Bellur Krishnamachar Sundararaja Iyengar is known for popularising Yoga around the world. “Iyengar Yoga”, which is taught in more than 70 countries today, is a form of Yoga focusing on the correct alignment of the body with the help of straps, wooden blocks, etc. It is said that even at the age of 95, he could perform all the asanas – from headstands to vertical splits. He died on Aug. 20, 2014, from heart and renal failure.

Here are five things to know about this legend.

1. He was born in a very poor household:

Iyengar1

Source: Wikipedia

B.K.S. Iyengar was born in a poor family in Kolar District of Karnataka, on Dec 14, 1918. His father was a school teacher and he was the 11th of 13 children in the family. Only 10 of those children survived. Living through a very unhealthy childhood, Iyengar had to face many diseases like malaria, tuberculosis, typhoid fever, and also general malnutrition at a very young age.

2. But Yoga changed his Life:

Iyengar5

Source: www.judithjonesyoga.co.uk

He was only 15 when B.K.S. Iyengar’s brother-in-law, Tirumalai Krishnamacharya, asked him to move to Mysore to improve his health by practising Yoga. Tirumalai Krishnamacharya is often referred to as “the father of modern yoga”. That was the turning point for Iyengar, whose health steadily improved. At the age of 18, Krishnamacharya sent him to Pune to teach Yoga to people.

3. And then he went out to teach the world:

Iyengar2

Photo Credit: Wystan/Flickr

It was in Pune that the Yoga teacher met the famous violinist, Yehudi Menuhin. This meeting was the beginning of Iyengar’s journey from being an Indian yoga teacher, to an international guru. Menuhin used to complain that he was unable to sleep properly, and was suffering from muscular aches. But with the help of Yoga, he was able to overcome his health problems. Being highly impressed by the guru, Menuhin invited him to Switzerland in 1954. This was followed by Iyengar’s visits to the US and the rest of Europe as well. He came up with the idea of teaching yoga to groups, and encouraged women to take up Yoga even during pregnancy.

“The West knows yoga because of Iyengar. He developed a style of yoga for ordinary people. He introduced simple props and aids like ropes, blankets, wall to facilitate people to make it easy for the masses,” Yogi Santatmananda Saraswati of Swami Dayananda Ashram, Rishikesh, said at the time of his death.

4. And to teach many famous personalities:

Iyengar4

Photo Credit: Gaurav Mishra/Flickr

B.K.S. Iyengar is known to be the teacher of many famous people like Yehudi Menuhin, Sachin Tendulkar and Queen Elizabeth of Belgium. It is said that Queen Elizabeth of Belgium learned his trademark sirsasana headstand at the age of 80. His other devotees and students include novelist Aldous Huxley, actress Annette Bening and designer Donna Karan.

5. He collected several awards and authored many books too:

Iyengar3

Photo Credit: Chris Drumm/Flickr

He was awarded the Padma Shri in 1991, the Padma Bhushan in 2002 and the Padma Vibhushan in 2014. B.K.S. Iyengar published his first book called Light on Yoga in 1966, which became an international best-seller. He has authored a total of 14 books.

Source….Tanaya Singh in http://www.the betterindia.com

Natarajan

படித்து ரசித்த கவிதை… ” தோற்கிறோம் தினம்தோறும் செடிகளை தோப்பாக எண்ணி…”

என்ன நடந்தது?

வந்தது ஓரிடம்
வாழ்ந்ததும் ஒரேயிடம்
எல்லாமும் எங்கள் ஏழு பேர் தான்
என எண்ணியிருந்தேன்…
இருபது வயது வரை!

அண்ணன் என்றும்
தங்கை என்றும் அறியாமல்
ஒருவர் மீது மற்றொருவர்
உருண்டு, புரண்டு, அடித்து, பிடித்து…
வாயில் உள்ளதை பிடுங்கி உண்டு
வந்ததை எல்லாம் வாங்கித் தின்று
எப்படி எல்லாம் வாழ்ந்தோம் அன்று…
இப்போது இல்லையே அப்போது போல்!

அண்ணன் எங்கோ ஒரு ஊரில்
தம்பி எங்கோ தனியாக
சண்டையோ, சச்சரவோ இல்லை
எனினும் இல்லையே அப்போதைய அன்பு!

நண்பர்களிடம் பல மணி நேரம் பேச்சு
குழந்தைகளுடன் நாள் முழுக்க கூத்து
பேசிப் பேசியே போரடிக்கிறோம்
அண்ணன், தம்பியிடம் அப்படியில்லையே…
இப்படி இருந்ததில்லையே அப்போது!

கும்பலாக குளியல்; ஒன்றாகத் தூக்கம்
தலை வார ஒரே அழுக்கு சீப்பு…
ஒரே தலையணையில் ஐந்து தலைகள்!

விழித்து பார்த்தால்…
தம்பியின் காலோ என் தலையில்
தங்கையின் கையோ என் வயிற்றில்
ஒன்றாக அமர்ந்து களேபர சாப்பாடு…
வீட்டில் ஒரே கூப்பாடு
மறந்து போனதே எவ்வாறு…

அன்பை விதைத்த
ஆசை தங்கையையும்
அடித்தாலும் ஓடி வந்து
அணைக்கும் தம்பியையும்
கதை சொல்லி தூங்க
வைத்த அக்காவையும்
பார்த்து பல வாரங்களாயிற்று…
தூக்கி வளர்த்த அவளின் குழந்தைகளையோ
பார்க்கவும் நேரமில்லை இப்போது!

அம்மா, அப்பா இருந்தும்
நாங்கள் ஏன் தனித்தனி மரங்களாய்…
பணம் இருந்திருந்தால்
ஒன்றாய் இருந்திருப்போமோ…
இப்போது அது இருக்கத் தானே செய்கிறது
ஆனாலும் எண்ணம் இல்லையே ஏன்…

இதுதான் வாழ்க்கை பயணமா…
அப்படியானால் ஒன்றாக ஏன் பிறந்தோம்
வெவ்வேறு தாய்க்கு பிறந்திருக்கலாமே!
அம்மா சொல்லியிருக்கிறாள்…
அவளுடையது கூட்டுக்குடும்பமாம்
நாங்கள் மட்டும் எப்படி தனித் தனியானோம்…

என்னுடன் என் மகன்
அண்ணனுடன் அவன் மகள்
தங்கையோ தன் மகனுடன்
அடுத்த மாநிலத்தில் அக்கா!

அனைவரும் முன் போல்
ஒன்றாய் வாழ வாய்ப்பில்லையா…
அதற்கு எங்களுக்கு மனமில்லையா?
அது பற்றி யோசிக்கவில்லையா…

தனிமரம் தோப்பாகாது என தெரிந்தும்
தோப்புகளை உருவாக்க முயற்சித்து
தோற்கிறோம் தினம்தோறும்
செடிகளை தோப்பாக எண்ணி!

மீண்டும் ஒன்றாக பிறக்கத் தான் முடியுமா?
மனமிருந்தால் இப்போது
ஒன்றாக வாழ முடியும்
இதன் பிறகாவது முயற்சிப்போமே!

அ.சுருளியப்பன், நெல்லை…in . http://www.dinamalar.com

Natarajan