Message for the Day…” Faith in God Should never Waver…”

Sathya Sai Baba

You may have immense faith in God. But from time to time, the power of Maya may undermine this faith. So be vigilant. In Mahabharata even staunch devotees of Krishna like Dharmaraja and Arjuna displayed hesitancy in following the advice of Krishna and had to be reminded of their duty through Bhishma and Draupadi respectively. Faith in God should never waver. In no circumstance should anyone go against the injunctions of the Divine. Whatever worship one may offer, however intensely one may meditate, if one transgresses the commands of the Lord, these devotional practices become futile. The reason is that the Lord has no selfish objectives or goals. It is out of small-minded, narrow and selfish motives that people choose to act against the sacred and noble commandments of the Lord. Even small acts of transgression may in due course assume dangerous proportions.

Message for the Day…” HE is Omnipresent…You are an embodiment of Divinity…”

God is infinite. It is impossible to measure Him or compare Him with anything, for there is no ‘other’ to compare. He is omnipresent. The Vedas declare, “He is One alone without a second“ (Ekam eva Advitiyam). The Divine willed: “I am One; I shall become many”(Ekoham Bahusyaam). By His Will God manifested Himself in the many. All religions have accepted this truth. The Bible declares: “God created man in His own image.” Thus from the One, the manifold cosmos emerged. With the growth of knowledge, the animal nature in man has diminished and he has been able to develop and refine his culture. As the saying goes, Divine appears in human form (Daivam maanusha rupena). Hence do not consider yourself as a mere product of Nature, a creature of the senses and the physical elements. You are an embodiment of Divinity.

Sathya Sai Baba

Message for the Day…. ” Don’t Forget the Truth that there is a Higher Power which is Driving You…”

Sathya Sai Baba

In the twilight of dusk, one mistakes a thick rope for a snake. When the place is lit, only rope remains – the snake was never there. A momentary delusion caused the appearance of the snake and the absence of the rope. This phenomenon is called Maya. Maya makes you imagine the presence of what is not there and believe in the existence of that which is nonexistent. The combined power ofPrakriti, Avidya and Maya (Phenomenal world, Ignorance and Delusion) makes people forget their true nature. People often imagine that they accomplished many things, and believe that all their achievements are entirely due to their own efforts and capabilities. They forget the truth that there is a higher power which is the driving force for action as well as the results thereof! This is the effect of delusion (bhrama). To help get rid of this delusion and enable one to comprehend the inherent divine nature, the ancients suggested prayers.

 

” ஆய கலைகள் 64 …எண் 9 ன் தத்துவமும் மகத்துவமும் …”

ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா!

1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13. சிற்ப சாத்திரம்
14. வைத்திய சாத்திரம்
15. உருவ சாத்திரம்

16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுரபாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரமம்
23. வீணை
24. வேணு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அத்திரப்பரீட்சை
28. கனகபரீட்சை
29. ரத பரீட்சை
30. கசபரீட்சை
31. அசுவபரீட்சை
32. ரத்திரனப்பரீட்சை
33. பூமிபரீட்சை
34. சங்ககிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகரூடணம்
37. உச்சாடணம்

38. விந்து வேடணம்
39. மதன சாத்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. ரசவாதம்
43. காந்தருவவாதம்
44. பைபீலவாதம்
45. கவுத்துக வாதம்
46. தாது வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாயப் பிரவேசம்
51. ஆகாய கமணம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிசயம்
54. இந்திரசாபம்
55. மகேந்திரசாபம்
56. அக்கினித்தம்பம்
57. சலத்தம்பம்
58. வாயுத்தம்பம்
59. நிட்டித்தம்பம்
60. வாக்குத்தம்பம்

61. சுக்கிலத்தம்பம்
62. கன்னத்தம்பம்
63. கட்கத் தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்

……………..

ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
**************************************************
9ன் சிறப்பு தெரியுமா?
எண்களில் விசேஷமான
எண்ணாக கருதப்படுவது
ஒன்பது.
அந்த எண்ணில்
நீண்ட வாழ்வு எனும்
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக்
முதலான நாடுகளும்
9-ஆம் எண்ணை
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன.
புத்த மதத்தில்,
மிக முக்கியமான
சடங்குகள் யாவும்
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும்.
தங்கம், வெள்ளி மற்றும்
பிளாட்டினத்தின்
சுத்தத்தை 999 என்று
மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!

ஒன்பது எனும் எண்
இன்னும் மகத்துவங்கள்
கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம்
என்று பெயர்.
நவ என்ற சொல்
புதிய, புதுமை எனும்
பொருள் உடையது.

நவ சக்திகள்:

1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:
1,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி

நவ வீரர்கள்:
1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:
1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.

நவ ரசம்:
1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,

நவக்கிரகங்கள்:
1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது

நவமணிகள்:-

நவரத்தினங்கள்:
1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:
1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்

நவலோகம் (தாது):
1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:
1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:

1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:

1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:
1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின்
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)

1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி,
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:
1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.

நவ நிதிகள்:
1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்

நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம்,

பிரதான விருத்தம்.

1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் :
1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் –
1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் –
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்

நவதுர்க்கா –
1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

நவ சக்கரங்கள் –

நவ சக்கரங்கள் –
1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம்,
3,சர்வ சம்மோகன சக்கரம்,
4,சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,சர்வார்த்த சாதக சக்கரம்,
6,சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் –
1,ஆதிநாதர்,
2,உதய நாதர்,
3,சத்ய நாதர்,
4,சந்தோஷ நாதர்,
5,ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,சித்த சொவ்றங்கி
8,நாதர், மச்சேந்திர நாதர்,
9,குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1,தோல்,
2,ரத்தம்,
3,மாமிசம்,
4,மேதஸ்,
5,எலும்பு,
6,மஜ்ஜை,
7,சுக்கிலம்,
8,தேஜஸ்,
9,ரோமம்

18 புராணங்கள்,
18 படிகள் என அனைத்தும்
9-ன் மூலமாக தான் உள்ளன.

காயத்ரி மந்திரத்தை
108 முறை ஜபிக்க வேண்டும்.
எல்லா தெய்வத்தின்
நாமாவளியும் ஜப மாலையின்
எண்ணிக்கையும்
இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!

புத்த மதத்தினர்
108 முறை மணியடித்து,
புது வருடத்தை வரவேற்றுக்
கொண்டாடுகின்றனர்.
சீனாவில்,
36 மணிகளை
மூன்று பிரிவாகக் கொண்டு,
சு ஸூ எனப்படும்
மாலையைக் கொண்டு
ஜபம் செய்வார்கள்.

ஸ்ரீகிருஷ்ணருக்குப்
பிரியமான மாதம்… மார்கழி.
இது வருடத்தின் 9-வது மாதம்!
மனிதராகப் பிறந்தவன்
எப்படி வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டிய
ஸ்ரீராமபிரான் பிறந்தது,
9-ஆம் திதியான
நவமி நாளில்தான்.

Source….input from a friend of mine….

Natarajan

Message for the Day…”Nothing Untoward can happen Wherever Ganapathi is Present…”

Sathya Sai Baba

Easwara blessed Ganapathi saying, “I have many attributes, but not Your intelligence. Hence, before offering worship to Me, let all people worship You. This is the boon I confer on You.” Easwara is a parent who conferred such an honour of a higher status than His own on His son. Hence Ganapathi represents no commonplace principle. He is the embodiment of all potencies. He is the abode of every kind of intelligence. Nothing untoward can happen wherever He is present. Ganapathi occupies the position of one who is the source of all prosperity. Moreover, when He is invoked before any undertaking, there will be no impediments to its completion. People look upon the Vighneswara festival as some routine affair. But Vighneswara embodies all the forms and all the powers of all the deities. It is not enough to worship Him once a year. We must worship Him always.

” தப்பாமல் வந்து விடு பிள்ளையார் அப்பனே …”

 

pillayaru

தகப்பன் சாமிக்கு அண்ணனே என் அப்பன் பிள்ளையார்

அப்பனே ….அப்பமொடு அதிரசம் அவல் பொரியும்

உன் மனம் மகிழ மோதகமும் தப்பாமல் உனக்கு

நான் தருவேன் அப்பா …..

தப்பு என் மீது எது இருந்தாலும் …. நீ

தப்பாமல் என் வீடு வந்து அப்பமெல்லாம் சப்பு கொட்டி

சாப்பிடு அப்பா !!!!! என் அப்பனே பிள்ளையாரப்பா…

இப்போ  என் பேரப்பிள் ளையும்  உனக்காக

சாப்பிடாமல் என்னுடன் காத்திருக்கிறான் உன்னைப்பார்க்க

அப்பனே… தப்பாமல்  நீ வர வேணும் இன்று …

அப்பம், அமுது எல்லாம் என் பேரனுக்கும்  இன்று நீ ஊட்டி , நீயும்

சாப்பிட்டால்  வேறு என்ன பேறு வேண்டும்  எனக்கு ?…அப்பனே

தப்பாமல் வந்து விடு பிள்ளையார் அப்பனே …!!!

 

நடராஜன்

16 செப் 2015

Camp…Brisbane , Australia

 

 

 

ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்!….

வழிபாட்டில் மிகவும் சிறப்பானதும் இன்றியமையாததும்  விநாயகர் வழிபாடே. ஓர் ஊரின் குளக்கரையிலும் ஏரிக்கரையிலும் நம் கண்ணுக்கு  தெரிவது முதலில் விநாயகர் சிலைதான்.

இவ்விநாயகரைப் பற்றிக் கூறும்பொழுது, தன் தாயாரைப் போன்றே மனைவி தனக்கும் வேண்டும் என்பதற்காக, ஏரிக்கரையிலும் குளக்கரையிலும் அவர் காத்திருப்பதாகக் கூறுவர்.

இந்த விநாயகர் வழிபாடும், இவர் தமிழகத்துக்கு வந்த விதமும் ஒரு பெரிய  வரலாற்றைக் கொண்டுள்ளது. இவரை காவல் தெய்வம் என்றும், கானகத் தலைவன் என்றும் குறிப்பர். தலைப்பகுதி யானை முகமும், உடல் பகுதி மனித வடிவமும்  கொண்டு அமைந்த இவரை, விநாயக மூர்த்தி என்றே அழைப்பர்.

முழுமுதற் கடவுள்  விநாயகர். இவர் இல்லாத  ஊரே இல்லையென்று சொல்வது சரியாக இருக்கும். கணபதி என்பதற்குப்  பூதகணங்களின் தலைவன் என்று பொருள். சிற்ப அமைதிப்படி, பதினெட்டுக்கும் மேற்பட்ட உருவ வேற்றுமைகளில் கணபதி காணப்படுகிறார்.

முதலாம் இராசராசனால் எடுக்கப்பட்ட தஞ்சை இராசராசேச்சுரம் எனும் பெரியகோயிலில் காணப்படும் தேவகோட்டச் சிற்பம் – விநாயகர்.

பொதுவாக, கணபதியின் இரண்டு கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருக்கும். அவை,  பாசமும் அங்குசமும் ஆகும்.  இந்த அடையாளங்கள்,  தாருண கணபதி, வீர விக்னேஷ்வர கணபதி, லட்சுமண கணபதி, பிரசன்ன கணபதி, நிருத்த கணபதி  ஆகிய உருவங்களில் காணப்படுகின்றன. இவரை, வேட்டுவர்களின் தலைவன், கடவுள் என்றும் சிலர் குறிப்பர்.

பிரம்ம வைவார்த்த புராணம், கணபதியின் பிற பெயர்களாகக் குறிக்கும்பொழுது  ஏகதந்த, லம்போதரா, சூர்ப்பனா, கஜநான, குகராஜா எனக் குறிக்கின்றது. கணபதி என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளும்பொழுது, முதல் எழுத்து மதிநுட்பத்தையும், இரண்டாம் எழுத்து தடங்கலுக்குப் பாதுகாப்பு அளிப்பவன் என்றும் ஏழைப் பங்காளன் என்றும், பதி என்ற இறுதி எழுத்துகள் இறைவனாகிய பரபிரம்மத்தையும் குறிப்பதாகும்.

கணபதி வரலாறு

விநாயகர் சிற்பத்தை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில், வாதாபியில் இருந்து சிறுத்தொண்டர் கொண்டுவந்த பிறகுதான், விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு வந்தது என்று கருதியதால்தான்,  கணபதியைப் பற்றி பாடும்பொழுது  வாதாபி கணபதியே எனப் பாடினர்.

அக்கருத்துக்கு மாறாக, தமிழகத்தில் காணப்படும் பிள்ளையார்பட்டி  விநாயகர், காலத்தால் கி.பி. ஐந்தாம் நுற்றாண்டைச் சார்ந்தது என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் அதன் சிற்ப அமைதியும் தெளிவுபடுத்துகின்றன. பரஞ்சோதி முனிவருக்கு முன்பே  தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்து வந்துள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

திருச்சி மலைக்கோட்டையின்  கீழே காணப்படும் பல்லவர் காலக் குடவரையில், பாறையில்  செதுக்கப்பட்டுள்ள  விநாயகர் உருவம், பரஞ்சோதி முனிவருக்கு  முன் வந்தது. அதாவது, நரசிம்ம பல்லவரின் தந்தை மகேந்திர பல்லவரின் காலத்தைச் சார்ந்தது.

ஆக, வாதாபி கணபதிக்கு முன்பே தமிழகத்தில் வழிபாட்டில் விநாயகர் இருந்துள்ளார் என்பதற்கு, திருச்சி குடவரையில் காணப்படும் விநாயகர் சான்றாகும். மேலும், சங்க காலச் சோர்களும் கணபதியை வழிபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக, காஞ்சிபுரத்தில் கரிகாலச் சோழப் பிள்ளையார் எனும் கோயில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. இது, கரிகாலச் சோழனால் எழுப்பப்பட்டதாக இருக்கலாம்.

வழிபாட்டில் முதலில் வணங்கப்படும் கடவுள் கணபதிதான். தனிவழிபாடாக இருப்பினும், கோயில் அமைப்பிலும், கணபதியையே முதலில் வழிபாடு செய்வது வழக்கம்.

உற்சவ மூர்த்திகளை அமைக்கும்பொழுது, பஞ்ச மூர்த்திகளை ஊர்வலமாக அமைப்பர். அவற்றிலும்,  விநாயகரே முதன்மை வகிப்பார். இவரை, சிவனின் 24 மூர்த்தங்களில் ஒன்றாகவே கருதுவர். புராணங்களிலும், பாடல்களிலும், நூல்களிலும், கணபதி பாடலையே முதலில் அமைத்து, அவரை வணங்கிய பிறகே  காரியங்களைத் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

முதலாம் இராசேந்திர சோழன், தனது போரினால் பெற்ற வெற்றிப் பரிசாக சாளுக்கிய நாட்டில் இருந்து கொண்டுவந்து, தன்னால் நிறுவப்பட்ட சோழர்களின் இரண்டாவது தலைநகரமான கங்கைகொண்டசோழபுரத்தில் வைத்து வணங்கிய பிள்ளையார்.

‘ஓம், சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் தியாயோத் சர்வ விக்னோப சாந்தேயத்’ – என்று, வைணவர்வளின் விஷ்ணு சகஸ்ரநாமம் துவங்குகிறது. எனவே, முழுமுதல் கடவுளாக கணபதிதான் உள்ளார்.

இலக்கியங்களில் கணபதி

சங்க இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இரண்டும் சிறப்பு பெற்றவை. அவற்றில், கணபதியை நேரடியாக குறிப்பவை எதுவும் இல்லை. இருப்பினும், பத்துப்பாட்டில் முதல் பாடலான திருமுருகாற்றுப்படையில் கணபதி பற்றிய குறிப்பு வருகிறது. ‘ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை’ என்று இருக்கிறது. இந்த ஐங்கரன் குறிப்பை பிற்சேர்க்கை என்பர்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் வந்த இலக்கியங்களிலும், சைவ ஆசாரியர்களும், விநாயகர் துதி பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், அப்பர், இவர்களின் பாடல்களில் விநாயகர் பற்றிய குறிப்புகளைக் காணலாம். நம்பியாண்டார் நம்பி அவர்கள், ‘விநாயகர் திரு இரட்டை மணிமாலை’ என்ற நூலைப் படைத்துள்ளார். சைவ ஆசாரியர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர், நரசிம்ம பல்லவன், பாண்டியன் அரிகேசரி, மாறவர்மன் மற்றும் மகேந்திரவர்மன், ராஜசிம்மன் போன்ற பல்லவ, பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்த காலத்தில் வாழ்ந்தவர்கள்.

சம்பந்தர் பாடிய துதியில் மிகவும் சிறப்பு  வாய்ந்த பாடல் –

‘படியதன் உரு உமைகொள மிக கரியது,
வடிகொடு, தனதடி வழிபடும் அவரிடம்
கடிகண பதிவர அருளினன் மிகு கொடை
வடிவினா; பயில்வலி வல முறை இறையே’

என்பது ஆகும். அப்பர், கணபதியைக் குறிக்கும்பொழுது, விநாயகர், விக்னேஷ்வரர், விக்னவிநாயகர் என்றே குறித்துள்ளார்.

விநாயகன் என்றால் தடைகளை நீக்குபவன். கணேசன் என்றால் தலைவன் என்று பவிஷ்ய புராணம், வாமன புராணம் போன்றவற்றில் விநாயகர் பற்றிய விளக்கத்தைக் காணமுடிகிறது.

நல்லோரைச் செம்மைப்படுத்தும் கருவியாகத் திகழ்பவன்; இத்தகு பெருமை வாய்ந்த விநாயகப் பெருமான், தமிழர்களுக்கு விநாயக சதுர்த்தித் திருநாளில் அனைத்தும் வழங்கி  அருள வேண்டுகிறேன்.  இவன் திருவடிகளை நாமும்  இந்த நன்நாளில் போற்றித் துதிப்போமாக.

Source…..ச.செல்வராஜ், தொல்லியல் துறை…www.dinamani.com

Natarajan

கடவுளைவிட மேலானது நம்பிக்கை! ……

image1.JPG

பெரியவாளோட பரம பக்தர் ஒருவருடைய அனுபவம்…..

டெல்லியில் ஸென்ட்ரல் கவர்ன்மென்ட் உத்யோகம். 1974 ல் காலை ஆபிஸுக்கு வந்து அட்டன்டன்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்து போடப் போனபோது ….எங்கே போடுவது? என்றுகூட தெரியாத அளவு திடீரென்று பார்வை போய்விட்டது! பகவானே!  உடனேயே ஸப்தர்ஜங் ஹாஸ்பிடலுக்கு போய் காண்பித்தார். டாக்டர்களோ கண்ணாடி போட்டால்கூட பார்வை வருவது ஸந்தேஹம் என்று சொல்லிவிட்டனர். உடனே மெட்ராஸுக்கு வந்து அப்போதுதான் ப்ரபலமாகிக் கொண்டிருந்த டாக்டர் பத்ரிநாத்திடம் காண்பித்தார். 
அவர் எல்லா டெஸ்டும் பண்ணிவிட்டு  இது “போட்டோ கொவாகுலேஷன் ” என்று சொல்லிவிட்டார். அதாவது ரெடினாவை ஒரு திரவம்  மறைப்பதால்,உண்டாகும் ஒரு வ்யாதி. ஆபேரஷன் மூலம் அந்த திரவத்தை வற்றச் செய்யலாம். அதோடு ஒரு கண்ணாடியும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

என்ன ஆனாலும் பெரியவா தர்ஶனத்துக்கு அப்பறந்தான்! என்று மனஸை திடப்படுத்திக் கொண்டு, மறுநாள் தேனம்பாக்கத்தில் இருந்த பெரியவாளை தர்ஶனம் பண்ணப் போனார் டெல்லி பக்தர். நல்ல கூட்டம். அங்கே போனதும் இவர் மனஸில் ஒரு ஸங்கல்பம். “பெரியவாளா கூப்டு கேட்டாலொழிய அவர்கிட்ட எதுவும் சொல்லப் போறதில்லே” என்பதே! கிணத்தடியில் உட்கார்ந்திருந்த பெரியவா இவரையும் இவர் குடும்பத்தாரையும் எதுவும் கேட்காமல் ஆஸிர்வாதம் மட்டும் பண்ணினார்.

பக்தரும் குத்து மதிப்பாக பெரியவா இருந்த திசைக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, எதுவும் சொல்லாமல் வந்துவிட்டார். மறுநாள் கண்ணாடியுடன் டாக்டரை பார்க்கப் போனபோது கடைசி பொடி  எழுத்து வரை ஈஸியாக படித்துவிட்டார். டாக்டர் பத்ரிநாத்துக்கோ ஆச்சர்யம்!

“என்  மெடிக்கல் நாலெட்ஜை தாண்டி ஏதோ அதிஸயம் நடந்திருக்கு. ரெட்டினால நேத்திக்கு கசிஞ்சுண்டு இருந்த liquid இன்னிக்கு எப்டியோ ஒங்க ஸிஸ்டத்துக்குள்ள absorb ஆயிருக்கு” என்றார்.

“நேத்திக்கி பெரியவாளை தர்ஶனம் பண்ணினேன்….அவ்வளவுதான்!”

“என்னது? அவ்ளோவ்தானா! அதானே பாத்தேன்! மஹாவைத்யநாதன் ஒங்களுக்கு அனுக்ரஹம் பண்ணினதுக்கப்பறம் வேற யார் treatment குடுக்கணும்?…..” டாக்டர் பத்ரிநாத் பெரியவாளின் பரம பக்தராச்சே! 

அவ்வளவுதான்! பெரியவா என்ற தெய்வத்திடம் நாம் எதுவுமே சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதில்லை, என்ற பேருண்மையை  டெல்லி பக்தர் அன்றே அப்போதே ப்ரத்யக்ஷமாக உணர்ந்தார். ஆனாலும், நம் மனித மனம் ‘குரங்கு’ இல்லையா? பக்தருக்கும் ஒரு ஸந்தேஹம் வந்தது….. “கண் பார்வை வந்தது…ஒருவேளை ரொம்ப நாளானதால, automaticஆ, மங்கின பார்வை தானாவே  சரியாப் போய்டுத்தோ? இது இயற்கையா நடந்ததுதானோ?இதுல, நாமளா பெரியவாளோட கருணை…ன்னு, நடுவுல சொருகிட்டோமோ?” என்று அலைபாய்ந்தது.

‘கல்கி’ இதழில் அவருடைய கண் பார்வை கிடைத்த அனுபவம் வெளியாகியிருந்தது.  அதை படித்துக் கொண்டிருக்கும் ஸமயத்தில்தான் இந்த பாழாப் போன ஸந்தேஹம். இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, மேலே எதையுமே படிக்க முடியாதபடி பார்வை மங்கிவிட்டது! 
“ஈஶ்வரா! என்னை மன்னிச்சுடுங்கோ!பெரியவா! ஸாக்ஷாத் சந்த்ரமௌலீஶ்வரனோட க்ருபையை ஸந்தேஹப்பட்டுட்டேனே! மஹாப்ரபோ! அடியேனோட பார்வையை பிச்சையா போடுங்கோ!” கண்ணீர் வழிய வாய் விட்டு அலறினார்.

அடுத்த க்ஷணம்…….இதோ…..மந்தஹாஸமான புன்னகையோடு தண்ட கமண்டலுவோடு  இவருடைய  அனுபவத்தோடு வெளிவந்த பெரியவாளின் ஜோதிப்  பிழம்பான திவ்யமங்கள ரூபம் இவர் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது.

 
JAYA JAYA SHANKARA  HARA HARA SHANKARA
Source….Input from a friend of mine
Natarajan

Message for the Day…” Ideal time for Developing the Quality of Forbearance { kshama}…”

For spiritual progress kshama (forbearance) is the real basis or foundation. Great people and countries have lost their glory, prestige, and reputation because of the disappearance of Kshama. Without patience and the capacity for forbearance, one becomes spiritually weak. Such weakness leads to bad feelings, undesirable thoughts, and unbecoming actions. This virtue is best cultivated under adverse circumstances, and one must therefore gladly welcome troubles instead of regarding them as unwelcome. Thus times of distress, and an environment of sorrow and misery offer the ideal opportunity for the development ofKshama. However, because of mental weakness and ignorance, we shun painful experiences and distress. You should not be weak; be brave and welcome troubles. Let them come, more the merrier. Only with such a courageous attitude, you would be able to bring out the kshama hidden within you.

Sathya Sai Baba

Message for the Day….”Real Truth and Power are both inside your Heart….”

Sathya Sai Baba

Study of books alone will not enhance your capability; they will merely provide you with superficial or bookish knowledge. This obviously is not enough. Real capability and strength come by tapping the Inner Power latent in you. All that is outside is artificial. Real truth and power are both inside, in your heart. It is the heart that must be strengthened, but, unaware of this fact, people become furiously active in the external world, only to get lost there. There are many types of food catering to the needs of the gross body but what about food for the heart? That food can be obtained only when you turn your head toward God. You must understand the subtle linkages here – food, head, and God. Thus, along with the acquisition of worldly knowledge, you must also give importance to culture and refinement.