” “பரப்ரும்மம் செய்யும் இந்தப் புன்னகையின் பொருள் அந்தப் பரப்ரம்மத்திற்கே வெளிச்சம்…”

பெரியவாளின் முகமலரில் தவழும் இந்த ஸ்வானுபவமான புன்னகையின் பின்னணி என்ன ?

 

PeriavaPunnagai.jpg

நமது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, சிறிது நேரம் பயணம் செய்து பார்க்கலாமா?

‘விநாயகுனி’ என்ற தியாகைய்யரின் மத்யமாவதி ராகக் கீர்த்தனையை, அய்யர்வாள் எந்த

சந்தர்ப்பத்தில் பாடியிருப்பார் என்ற கேள்வியைக் கணபதி அண்ணாவிடம் கேட்ட பெரியவாளுக்கு

(“நீங்க எழுத்தாளர்கெளெல்லாம் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுவேளே அது மாதிரி நீயும்

உன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஏதானும் தோண்றதா பாரேன்”)

அகிலாண்டேஸ்வரியையும் அருமைப் பிள்ளை பிள்ளையாரையும் இணைத்து ஒரு விளக்கத்தைத்

தர, பெரியவா சொல்லுகிறார், “ஒன் குதிரை தேவலாம்போலத்தான் இருக்கு. எனக்கு என்னமோ

வேறே மாதிரி தோண்றது; எனக்கு எல்லாமே அம்பாள்தான்; அதுவும் காமாக்ஷி என்றால்

இன்னும் அதிகமாகவே ஒரு பக்தி……” என்று தொடங்கி, அய்யர்வாள் காஞ்சிக்கு வந்து

காமாக்ஷியைத் தரிசனம் செய்தபொழுது அங்கு இருக்கும் அத்தனை பிள்ளையார் சிலைகளையும்

பார்த்துவிட்டு, அவர் என்னவெல்லாம் நினைத்தார், எப்படி இப்படி ஒரு ஸாஹித்யத்தை

இயற்றினார் என்று பெரிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, கணபதி அண்ணாவைப் பார்த்துக்

கேட்கிறார், “ ஒன் குதிரை தேவலாமா, என் குதிரை தேவலாமா ?”; அதற்கு கணபதி அண்ணா,

“உங்க குதிரைதான் உசந்த அராபியக் குதிரை, என் குதிரை வெறும் பொய்க்கால் கழுதை..”

என்று பதிலளித்தபொழுது, அதை ரசித்து செய்த புன்னகையோ?

அல்லது….

வேலூர் அருகில் ஒரு கிராமத்தில் இருந்து வந்திருந்த பக்தர்,—-கிராமஃபோன் இசைத் தட்டில்

தான் அடிக்கடி கேட்டு, அதை மனனம் செய்த, ‘விநாயகுனி..’ என்ற அந்தப் பாட்டை

எப்படியாவது பெரியவா முன்னில் பாடிக்காட்ட வேண்டும் என்ற தாகத்தோடு, கையில் காசு

சேரும் வரைக் காத்திருந்து இப்பொழுது வந்திருக்கிறார் அந்த ‘அப்பாவி’ பக்தர்—- பெரியவாளை

தரிசித்தபின் அவர் அனுமதி பெற்று, அந்தப் பாட்டை—-ராகத்தைக் கொலை செய்து, தாளத்தில்

தப்பு செய்து, ஸாஹித்யத்தை சிதைத்துப்——பாடிக் காண்பிக்கும் பொழுது, கணபதி அண்ணா அங்கு

போய்ச் சேருகிறார். அவருக்குக் கோபமும், ஏளனமும் ஒருங்கிணைந்து வருகிறது; அப்பொழுது,

பெரியவா கேட்ட பல கேள்விகளுக்கு அந்த ‘அப்பாவி’ சொன்ன பதில்களைக் கேட்டு, அந்த

பதில்களின் மூலம் வெளிப்பட்ட அந்த ‘அப்பாவி’யின் எல்லையில்லாத பெரியவா பக்தியைக்

கண்டு நாணி அவர்மேல் அன்பு பெருகிட, பெரியவா அந்த பக்தரிடம் ‘காமாக்ஷி’யைத் தெரியுமா

என்று கேட்க, அதற்கு, “பெரிவா! எனக்குக் காமாக்ஷியைத் தெரியாது……பெரியவாளைத்தான்

தெரியும்….” என்று அவர் சொன்ன பதிலைக் கேட்டு விகசித்தப் புன்னகையோ இது ?

அல்லது….

‘மைத்ரீம் பஜத’ பாட்டையும் அதைச் செய்த பெரியவாளையும் தரக்குறைவாக விமரிசனம் செய்து

வந்திருந்த ஒரு கடிதத்தைக் கணபதி அண்ணாவிடம் கொடுத்துப் படிக்குமாறு பெரியவா சொல்ல,

அதைப் படித்த கணபதி அண்ணாவின் ரத்தம் கொதிக்க, அவருடைய ‘ரியாக்ஷனை’க் கண்டு

“அவர் எழுதிய விமரிசனத்தில் நியாயம் இருக்கிறது…” என்று பெரியவா விளக்கம் தந்தபொழுது

செய்த புன்னகையோ?

அல்லது….

வேதம் படிக்கின்ற பாலகர்கள், ஒவ்வொரு வியாழனன்றும் பெரியவாளிடம் வந்து தாங்கள்

கற்றதை அவரிடம் ஓதிக் காட்டிய பொழுது அந்த மகிழ்ச்சியில் விளைந்த புன்னகையோ?

கணபதி அண்ணாவின் கற்பனைக் குதிரையே பொய்க்கால் கழுதை எனும்பொழுது

நம்முடையதெல்லாம் குழந்தைகள் உட்கார்ந்து ஆடும் மரப் பொம்மைக் குதிரைதான். கற்பனை

இதற்கு மேல் போகாது !

பரப்ரும்மம் செய்யும் இந்தப் புன்னகையின் பொருள் அந்தப் பரப்ரம்மத்திற்கே வெளிச்சம்!

ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !

Source……….www.periva.proboards.com

Natarajan

 

 

 

 

” யார் பெரிய பெருச் சாளி ….”?

ஶ்ரீகுருப்யோ நம

“மடத்துல இருந்து இந்தப் பழத்தைத் திங்கறவா பெருச்சாளின்னா. எல்லாரையுமு் விட நானில்லையோ பெரிய பெருச்சாளி.”-பெரியவா

தஞ்சாவூர் பக்கம் இருந்த பிரபலமான டாக்டர் ஒருவர் காஞ்சிபுரத்துக்கு வர்ற சமயத்துல எல்லாம் மடத்துக்கும் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுப் போறதை வழக்கமா வச்சுண்டு இருந்தார். அவர் வர்றச்சே எல்லாம் ரொம்ப வெலை ஒசத்தியான ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை (அந்தக்காலத்துல அதெல்லாம் பணக்காரா மட்டுமே சாப்பிடற பழங்களா இருந்தது) வாங்கிண்டு வந்து கூடையோட பெரியவாகிட்டே சமர்ப்பிச்சுட்டுப் போவார்.

ஒருசமயம் பரமாசார்யா, கும்பகோணத்துக்கு பக்கத்துல இருந்த ஒரு கிராமத்துல முகாமிட்டிருந்ததை தெரிஞ்சுண்டு அங்கேயே அவரை தரிசனம் பண்ண வந்தார் அந்த டாக்டர். வர்றச்சே வழக்கம் போலவே பெரிய கூடையில் நிறைய பழங்களை எடுத்துண்டு வந்தார்.

அவர் வந்த நேரம் மடத்துல கைங்கர்யம் பண்ற ஒருத்தர், முகாமோட வாசல்ல நின்னுண்டு இருந்தார். டாக்டர் பெரியவா தரிசனத்துக்கு வழக்கமா வர்றவர்ங்கறதால அவரை அடையாளம் தெரிஞ்சுண்டு, வாங்கோன்னு கூப்பிட்டார்.

கொஞ்ச நேரம் அவர்கிட்டே பேசிண்டு இருந்த டாக்டர், ‘நான் வர்றச்சே எல்லாம் பெரியவாளுக்குன்னு ஆசையா பழங்களை வாங்கிண்டு வர்றேன். ஆனா அதை மடத்துல இருக்கற பெருச்சாளிகளும் சாப்பிடறதா தெரியறது. பெருச்சாளிகள் எல்லாம் இந்தப் பழக்கூடைய நெருங்காத படிக்கு நீங்கதான் பத்திரமா வைக்கணும். அதோட, இந்தப் பழங்கள் எல்லாத்தையும் பெரியவாளுக்கே குடுக்கணும். இது என்னோட ஆசை!’ அப்படின்னு அவர்கிட்டே சொல்லி, பழக்கூடையை அவர்கிட்டேயே ஒப்படைச்சார்.

மடத்துக்கு கைங்கர்யம் பண்றவருக்கு டாக்டர்கிட்டே என்ன சொல்றதுன்னு தெரியலை. அதனால், ‘ஆகட்டும் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டு, பழக்கூடையை வாங்கி உள்ளே வைச்சுட்டார்.

உள்ளே வந்து பெரியவாளை தரிசனம் பண்ணினார் டாக்டர். மெல்லிசா ஒரு சிரிப்பை உதிர்த்த பரமாச்சார்யா, அவருக்கு பிரசாதத்தை குடுத்தார். பவ்யமா அதை வாங்கிண்ட டாக்டர், ‘பெரியவா, உத்தரவு தரணும். நான் புறப்படறேன்’ அப்படின்னார்.

‘என்ன அவசரம்? இன்னும் ஒரு ரெண்டு மூணு மணி நேரம் இருந்து வந்த வேலையை முடிச்சுட்டுதான் போயேன்’ அப்படின்னார் ஆச்சார்யா.

டாக்டருக்கு ஒண்ணும் புரியலை. ‘வந்தது, பெரியவாளை தரிசனம் பண்ணணும்னு, அந்த வேலை முடிஞ்சுடுத்து அப்புறம் வேற என்ன வேலை இருக்கு?’ புரியலைன்னாலும் பரமாசார்யா சொன்னதை தட்ட முடியாம, ‘சரி உங்க உத்தரவுப்படியே செய்யறேன்!’ என்று அந்தப் பக்கமா உள்ளே போய் உட்கார்ந்துண்ட்டுட்டார்.

கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் ஆகியிருக்கும். தனக்குப் பக்கத்துல நின்னுண்டு இருந்த ஒரு சீடன்கிட்டே, ‘நீ உள்ளே போய் அந்த டாக்டரை அழைச்சுண்டு வா. அதோட, அவர் பழக்கூடை ஒண்ணைக் கொணடு வந்து கொடுத்திருக்கார். அதை எடுத்துண்டு, அதை வாங்கி வைச்சவரையும் கூட்டிண்டு வா!’ அப்படின்னார்.

எல்லாருக்கும் ஆச்சரியம். டாக்டர், பெரியவாளை தரிசனம் பண்ணினப்போ பழக்கூடை பத்தி எதுவும் சொல்லலை. அவர் கொண்டு வந்து குடுத்ததும், ஒருத்தர் அதை வாங்கிவைச்சதும் பெரியவாளுக்கு எப்படித் தெரியும்னு எல்லாரும் யோசிச்சுண்டு இருக்கறச்சயே, டாக்டர் அங்கே வந்து நின்னார்.

பின்னாலேயே பழக்கூடையை எடுத்துண்டு, அதை வாங்கிவைச்சவரும் வந்து நின்னார்.

தனக்கு முன்னால அந்தப் பழக்கூடையை வைக்கச் சொன்ன பெரியவா, டாக்டரை ஒரு நிமிஷம் உத்துப் பார்த்தார்.

‘எனக்கு என்ன வயசு ஆகறதுன்னு நோக்கு தெரியுமோ.. அறுபதைத் தாண்டியாச்சு. பழம் ஒடம்புக்கு நல்லதா இருக்கலாம். ஆனா, இத்தனையையும் நான் ஒருத்தனே சாப்பிட்டா அது எந்த மாதிரி ஹானி பண்ணும்னு டாக்டரான நோக்கே தெரியுமோல்லியோ… அப்படி இருக்கறச்சே ‘இதை எந்தப் பெருச்சளியும் தின்னுடாம பார்த்துக்கணும்னு அவர்கிட்டே சொன்னியே அது நியாயமோ? மடத்துல இருந்து இந்தப் பழத்தைத் திங்கறவா பெருச்சாளின்னா. எல்லாரையுமு் விட நானில்லையோ பெரிய பெருச்சாளி.’

சொன்ன மகாபெரியவா, கொஞ்சம் நிறுத்தினார். இதுக்குள்ளே டாக்டருக்கு உடம்பெல்லாம் குப்னு வேர்த்து முகமெல்லாம் வெளுத்துடுச்சு. தான் பேசினது தப்புன்னு புரிஞ்சுண்டதால அவர் கை, காலெல்லாம் லேசா நடுங்கவும் ஆரம்பிச்சுது.

‘நீ ரொம்ப பதட்டப்படாதே… நான் உன்னை மட்டும் சொல்லலை. இங்கே வர்றவா பலரும் உன்னை மாதிரிதான். அவா தர்ற எல்லாத்தையும் நானே சாப்பிடணும்ங்கறதுதான் அவாளோட அவா! ஆனா அது முடியுமோ? மொதல்ல நான் ஒரு சன்யாசிங்கறதையே எல்லாரும் மறந்துடறா. எனக்கு எதுக்கு இத்தனை பழமும் பொருளும்? இதெல்லாம் அநாவசியமில்லையோ!

அப்புறம் ஏன் இதையெல்லாம் நான் வாங்கிக்கறதா பாவனை பண்ணிக்கறேன்னா, இங்கே மடத்துல எத்தனையோ நல்ல காரியங்கள் நடத்தப்படறது, அதுக்கெல்லாம் பொருள் வேறும். குழந்தைகளையும் பொண்டாட்டியையும் விட்டுட்டு, மடமே கதின்னு வந்து எத்தனையோ பேர் இங்கேயே இருந்து கைங்கரியம் செஞ்சுண்டிருக்கா. அவாளுக்கெல்லாம் சாப்பிடறதுக்காவது நான் ஏதாவது பண்ணியாகணும். இந்த மடத்தைப் பராமரிக்க வேண்டியது என்னோட பொறுப்பில்லையோ! சன்யாசியான எனக்கு அதைச் செய்யறதுக்கு ஏது வருமானம்? உங்கள மாதிரியானவா தர்றதுதானே? அதைவைச்சு தானே நான் இவாளுக்கு ஏதாவது செய்யணும்? அப்புறம் இவா சாப்பிடக்கூடாதுன்னு நினைச்சா அது எப்படி முடியும்?

நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை நன்னா புரிஞ்சுக்கணும். நீங்க ஒரு பொருளை ஒருத்தருக்குக் குடுத்துட்டா, அதுக்கப்புறம் அது அவாளோடதுன்னு ஆயிடும். அதுக்கு நீங்க பாத்யதை கொண்டாட முடியாது. அதை அவர் என்ன பண்ணணும்கறதை அவரேதான் தீர்மானிக்கணும். அப்படித்தான் செய்யணும்னு நீங்க கன்ட்ரோல் பண்ண முடியாது. அப்படித்தான் நீங்க எனக்காகத் தர்றதுகம், அதெல்லாம் மத்தவாளுக்கும் பிரயோஜனப்படற மாதிரி செய்யறதுதான் சன்யாசியான என்னோட கடமை. நீங்க ஆசைப்படற மாதிரி நானே எல்லாத்தையும் அனுபவிக்கணும்கறது சாத்யப்படவே படாது!’

சொன்ன பெரியவா, டாக்டர் தந்திருந்த பழக்கூடையில இருந்து ஒவ்வொரு பழமா எடுத்து தான் உட்கார்ந்துண்டு இருந்த இடத்துக்குப் பக்கத்துல இருந்த ஜன்னல் வழியா வெளியில வீச ஆரம்பிச்சுட்டார்.

பதறிப்போய்ட்டார் டாக்டர். பெரியவா ஏத்துக்காதது மட்டுமல்லாமல், பழத்தை தூக்கி வேற எறியராறே… பெரியவாளே எல்லாத்தையும் சாப்பிடணும்னு ஆசைப்பட்டது அவ்வளவு பெரியதப்பா? அப்படின்னு மனசுக்குள்ளே நினைச்சு திகைச்சு நின்னவர், மனசுக்குள்ளே ஏதோ தோணினவரா, வேகமா போய், அந்த ஜன்னல் பக்கமா வெளியில எட்டிப் பார்த்தார்.

அவர் முகம் ஜன்னல் பக்கமா வெளியில தெரிஞ்ச விநாடி, ‘சாமீ! நீங்க குழந்தை குட்டியோட, நோய் நொடியில்லாம ஆரோக்யமா நீண்டகாலம் இருக்கணும். எங்களுக்கு இவளோ நல்ல பழங்களைக் குடுத்த நீங்க மவராசனா இருக்கணும்!’ அப்படின்னு கோரசா குரல் எழும்பித்து வெளியில இருந்து.

என்னன்னு பார்த்தா, பத்துப் பதினைஞ்சு நரிக்குறவக் குடும்பம் குழந்தைகளோட நின்னுண்ணு, ஜன்னல் பக்கமா வந்து விழற பழங்களை எல்லாம் பிடிச்சு சேகரிச்சுண்டு இருந்தா. அவாள்லாம், அந்த டாக்டர்தான் தங்களுக்காக பழங்களை வீசி எறியறதா நினைச்சுண்டு அவரை வாழ்த்த ஆரம்பிச்சா!

மறுபடியும் மகாபெரியவாளைப் பார்த்தார் டாக்டர்

‘என்ன பார்க்கறே? அவாளுக்கெல்லாம் இவ்வளவு நல்ல பழஙகளைத் தர்றதுக்கு யாருக்காவது மனசு வருமா? இப்போ நீ குடுத்ததா நினைச்சு சந்தோஷமா எடுத்துண்டு போறாளே, அவாளோட மூஞ்சைப் பார்த்தியோ, எத்தனை ஆனந்தம் அதுல தெரியறது? அந்த மாதிரியான சந்தோஷத்தை மத்தவாளுக்குத் தர்றதுதான் பரமேஸ்வரனுக்கு ப்ரீதி தெரியுமோ..!

நம்பளால முடிஞ்சதை மத்தவாளுக்குத் தரணும்னு நினைக்கணும். கிடைக்கற எல்லாத்தையும் நாமளே அனுபவிக்கணும்னு நினைக்கறதும், நாம நினைச்சமாதிரிதான் எல்லாமே நடக்கணும்னும் நினைக்கறது தப்பு புரிஞ்சுதோ?

இனனொரு முக்கியமான விஷயம்… நீ ஆசைப்பட்ட மாதிரியே மடத்துல இருக்கற எந்தப் பெருச்சாளியும் அந்தப் பழத்தைத் திங்காம பார்த்துண்டாச்சு… போதுமோ?’

மகாபெரியவா சொல்லி முடிக்க, அப்படியே சாஷ்டாங்கமா அவர் காலடியில விழுந்தார் டாக்டர். பரமாசார்யா உபதேசம் பண்ணின பாடத்தைப் புரிஞ்சுண்டுட்டேன்னு சொல்லாம சொல்ற மாதிரி, அவர் கண்ணுல இருந்து நீர் வழிஞ்சு பெருகித்து.

தப்பை உணர்ந்துட்டாலே மன்னிப்புக் கிடைச்சுடும்கறதை உணர்த்தற மாதிரி அவரை எழுந்திருக்கச் சொல்லி, இன்னொருதரம் பிரசாதம் தந்து, ‘அவா வாழ்த்தின மாதிரியே மகாராஜனா இரு’ன்னு ஆசிர்வதிச்சு அனுப்பினார் மகாபெரியவா.

எந்த தெய்வம் தன்னோட நைவேத்யத்தை தானே சாப்பிட்டிருக்கு? அதெல்லாம் தன்னோட பக்தனுக்குக் கிடைக்கணும்கறதுதானே கடவுளோட எண்ணம்? அப்படின்னா, தனக்குக் கிடைக்கறதெல்லாம் தேவை உள்ள மத்தவாளுக்கேன்னு நினைச்ச பரமாசார்யாளை நடமாடம் தெய்வம்னு எல்லாரும் சொன்னது வாஸ்தவமான உண்மைதானே.

Featured Image -- 18848

 

 

 

 

 

 

 

 

 

Source…..input from a friend of mine

Natarajan

” Maha Periva Establishes Supremacy of Gayathri …. Gayathri establishes Supremacy of Maha Periva! What a complimentary Divine gesture!! “

Gayathri Rajagopal  thro periva.proboards.com
“Maha Periva 
Establishes Supremacy of Gayathri 
Gayathri establishes Supremacy of Maha Periva! 
What a complimentary Divine gesture!! “

I have narrated many of my miracles of Maha Periva through my weekly post through Periva Forum. Some of them are breath taking and many of them are beyond science and perception. I narrate below one such miracle of Maha Periva, which will definitely make you feel, out of the world. The miracle happened on 23 November 2015.

Periva instructed me, to start chanting Gayathri Mantram of 108 per day. Subsequently, Periva instructed me to increase 300 per day. Again, after few days, Periva ordered me to chant 500 per day. Though, I found it difficult to comply the instructions of Maha Periva, I was sure that Periva’s instructions will have some pregnant meaning and definite purpose and hence, I used to follow the instructions, without any second thought. I started chanting 500 Gayathri Mantram per day.

I could understand that Periva was definitely having a specific purpose for his instructions to me, which I realized at the end of this post. Again, Maha Periva instructed me, to chant Gayathri Mantram 1000 per day. I was not worried about this impossible task of chanting 1000 per day. This, I am mentioning because I have to manage the entire house in spite of my ailment of paralytic stoke. Even, recovery from stoke is because of Maha Periva only. The regular readers of my articles know the entire divine clinical process of Maha Periva and how Periva executed his divine treatment in my recovery.

A week gone and Maha Periva very gently and softly gave me the assignment to chant 2000 Gayathri Mantram per day. You all know how I pleaded Periva by expressing my difficulties and how my plea was handled by Periva and made me to chant successfully 2000 Gayathri Mantram per day. My blind perception of chanting so much per day was disproved by Maha Periva by making me to focus my thoughts, concentration, and conviction only on Gayathri chanting.

Yes! I was successful in chanting 2000 per day within my manageable time schedule. I was comfortable, till Maha Periva gave me further instruction to chant 3500/-Gayathri Mantram per day. I never allowed a stone unturned and was towards this Himalayan task of Chanting Gayathri Mantram 3500/- per day starting from 4.30 in the morning. It continues even today.

O.K. but what is the connection between Gayathri Mantram and cancer?

As I was chanting 3500 Gayathri Mantram every day, one day I, could not chant comfortably because on my left cheek there was a boil inside the wall of the cheek which gave me trouble in chanting Gayathri. Immediately, my wife took me to a dentist for treatment. Doctor was of the opinion that sample of the boil should be sent for biopsy test for suspected cancer detection. However doctor with the help of another dental surgeon removed the boil and put multiple stitches to close the wound.

Myself and my wife were shocked and unmoved for some time. We have returned home and maintained absolute silence for some time. With eyes full of tears, I started chanting Gayathri Mantram without interruption, with pain. Night, before retiring for bed, I went to Maha Periva and cried by asking him why these things are happening only to me? I asked further that if you know that I am going to get cancer then

Why did you call me and bless me with an apple and kumkum, when there was such a huge crowd in 1993?

 Why did you recover me from my paralytic stoke?

 Why did you make me a busy man from the status of “vegetable on the cot?

 Why did you bring back and restore all my lost respect and reputation?

 Why you should save me from severe paralytic stroke by giving treatment at Uttarakhand by make me paying just a paltry money of Rs.5/- against the assumed bill of     Rs.5, 00,000/-.

 Why you should make me to feel that I am travelling safely in your laps though I was travelling in an ambulance during midnight at an altitude of 10000 feet plus at     Himalayas?

 Why did you make me to chant 3500 Gayathri per day in spite of my stoke, which is an impossible task even for a healthy person.

 I asked “Maha Periva”, what is the answer for all my above questions? Even if I have to be affected by cancer because of my karma, please give me peaceful soul     departure because I am prepared for any eventuality. As long as you are with me, I am not worried even for my death.”

As I was very tired because of extreme shock of cancer clubbed with continuous crying with pond of tears, I slept at the feet of Maha Periva without my conscious.

At about 4 ‘o clock in the morning, I could realize that Maha Periva was communicating with me as usual which I give below in his own words.”

Periva “You asked me so much of questions. Understand one thing that every person is facing some problem in the world. You are not the only person who is suffering. However I did so much for you as you listed, but at same time are you not confident that you will be saved by me from this cancer threat also. You go to doctor and you will know, why I was constantly insisting for Gayathri chanting. Even if the report confirms your cancer, I will take care of you in such a way that the cancer does not grow further”

The communication stopped.

On 23rd November 2015, I went to Doctor to receive the report and doctor’s opinion on the report .I was waiting in the waiting hall for my turn to come.

Finally, at about 7.00 P.M. we were called and doctor said that the report confirms cancer. I had my shock of my life and my blood was running cold.

But doctor continued further that the cancer was detected at very early stage and I give below the doctor’s points one by one for your kind reference:

Cancer was detected very early.

 The boils with inner tissues were removed without any traces.

 Type of cancer is “Verrucous Carcinoma”

 I am really lucky enough because this type of cancer does not grow further hence no need for any radio therapy or chemo therapy is required.

 This type of cancer is called “lucky cancer” which affects one in few lakhs.

 Finally doctor confirmed that this is a benign type of cancer and it will not grow further.
“Confirmation,

I am no more a cancer patient  
I am just like a normal person,  

I can lead my life. “

 

How, Maha Periva is Right?

1. Maha Periva insisted me to chant Gayathri Mantram which enabled me to detect pain while chanting and led to cancer detection at an early stage.

2. Periva said even it is cancer it will not grow further and you can be as usual. Doctor’s report and opinion proved that Periva translated his own statement as reality.

3. Periva’s answers to all my questions were proved right.

It is once again confirmed that ,

Periva is Omnipresent 
Omni potent and 
Omniscient 
**** 

I have translated Periva’s communication in my own words, within my limited knowledge and capacity. Every letter and words are a well woven fabric of my feelings. I am sure the fabric of Rajagopal and the fragrance of Maha Periva will give you enormous confidence in leading your life and facing the problem.

Hara Hara Shankara Jaya Jaya Shankara 

 

Source…..Gayathri Rajagopal in http://www.periva.proboards.com

Natarajan

 

 

” கலிபோர்னியா ….பெயர் வந்த காரணம் ….”

கலிஃபோர்னியா பேர் வந்த காரணம்”

“கலிஃபோர்னியா” என்ற இடத்துக்குப் பெயர்க் காரணம்

சொல்கிறார் பெரியவா

246400_479182102136836_1433845875_n.jpg

கபில முனிவர் இருந்த இடம் அது. இவர் தவம் பண்ணிக்

கொண்டிருக்கையில் இக்ஷ்வாகு வம்சத்து சகரர் என்னும் அரசர் அச்வமேத யாகம் செய்தார். இந்த யாகத்தைச் செய்ய வேண்டுமென்றால்,முதலில் ஒரு குதிரையை எல்லா தேசங்களுக்கும் அனுப்புவார்கள்.

அதை எந்த அரசனாவது பிடித்துக் கட்டிப் போட்டால் அவனுடன் யுத்தம் செய்து வென்று, பிறகு எல்லோரும் பாராட்ட இந்த யாகம் செய்யப்படும். பொதுவாக எல்லா அரசர்களும் வம்பு செய்யாமல் அந்தக் குதிரைக்குரிய கப்பம் செலுத்திவிட்டு அரசனைச் சக்ரவர்த்தி என்று ஒப்புக்கொண்டு விடுவார்கள்..

ஆனால் இந்த யாகத்துக்கு முதலில் இந்திரன்தான் தடங்கல் செய்வான். ஏனெனில் நூறு அஸ்வமேத யாகம் செய்து விட்டால் இந்திர பதவி ஒருவனுக்குக் கிடைத்துவிடும். தனது பதவி பறி போகாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வது இந்திரன் வழக்கம். எனவே அவன் சகரர் விட்ட குதிரையைப் பிடித்துக் கொண்டு போய் பாதாள உலகில்

கபிலர் தவம் செய்யும் ஆஸ்ரமத்தில் கொண்டு யாருக்கும் தெரியாமல் கட்டிவிட்டான்.

அதைத் தேடிக்கொண்டு வர சகரன் தன் நூறு

பிள்ளைகளையும் அனுப்பவே, அவர்களும் எப்படியோ கபிலாச்ரமம் வந்து சேர்ந்து, கபிலர்தான் பிடித்துக் கட்டிவிட்டதாக நினைத்து அவரிடம் சண்டைக்குப் போனார்கள். அதனால் கோபங்கொண்ட கபிலர் ஒரு முறை முறைத்தார். அவ்வளவுதான்! அங்கு வந்த நூறு பேரும் சாம்பலாகிப் போனார்கள். இது சகரனுக்குத் தெரிந்து அவன் சென்று கபிலரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அசுவமேத யாகம் செய்து முடித்தானென்பது ராமாயண முன்கதையில் தெரிகிறது.

அந்தக் கபிலாரண்யம்தான் “கலிஃபோர்னியா” என்று திரிந்து விட்டது.

சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLAND என்று அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLAND எனப்படுகிறது.

Read more: http://periva.proboards.com/thread/10771/#ixzz3u924MPSd

Source………..www.periva.proboards.com

Natarajan

HAPPY DEEPAVALI….

OM SSRI GURUPYO NAMAHA.RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA

தீபாவளி
இந்துக்களின் தலையாய பண்டிகை இது. இந்தியா முழுவதிலுமுள்ள மக்கள் –

ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி வெகு உற்சாகமாகத் தீபாவளி

கொண்டாடுகின்றனர். பண்டிகை கொண்டாடும் முறையில்தான், மாநிலத்திற்கு

மாநிலம் சில வேறுபாடுகள் காணப்படும்.

தீபாவளி- தீபங்களின் வரிசை என்ற பெயருக்கேற்ப வட இந்தியாவில்

மக்கள் தங்கள் வீடுகளில் பளிச்சென்று விளக்கேற்றிக் கொண்டாடுவர். ஞானம்

என்ற விளக்கொளியால் மனத்தின் உள்ளே குடிகொண்டுள்ள அஞ்ஞானம் என்ற

இருளை விரட்டியடிப்பது என்பது தத்துவம். பொய் பித்தலாட்டம் வஞ்சனை

முதலிய அரக்க குணங்களை ஞான ஒளியால் வெளியேற்றி அக ஒளிபெற உதவும்

பண்டிகை, தீபாவளி.

நரகாசுரன் எனும் அரக்கனைக் கண்ணன் வதம் செய்ததையட்டி அமைந்த

பண்டிகை என்பது புராண வரலாறு. தேவர்களும் மனிதர்களும் கொடிய

அரக்கனாம் நரகாசுரனால் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாகித் துன்புற்றனர்.

தேவர்களின் தலைவனான இந்திரன் பகவான் கிருஷ்ணனிடம் முறையிடவே,

கிருஷ்ணன் நரகாசுரனுடன் போர்புரிய சத்தியபாமாவுடன் புறப்படுகிறார்.

சத்தியபாமா இப்போரில் சக்தியின் அவதாரமாகச் செயல்பட்டாள் என்பது

குறிப்பிடத்தக்கது. நரகாசுரன் என்ற தீய சக்தி கண்ணன் – சத்தியபாமாவினால்

அழிக்கப்பட்ட மக்கள் அசுரனின் கொடுமையினின்றும் விடுபட்ட நாளையே

தீபாவாளியாக கொண்டாடுகிறோம்.

தீபாவளி அன்று விடியற்காலையே எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து,

புனித நீராடுவதை கங்கா ஸ்நானம் என்று கருதுகிறோம். இப்பண்டிகை நாளில்

எண்ணெயில் லட்சுமியும், நம் வீட்டுத் தண்ணீரில் கங்கையும் பிரசன்னமாகின்றனர்

என்பது ஐதிகம், வீட்டுக் கிணற்றின் நீரிலோ அல்லது குழாயில் வரும் நீரிலோ

கூட தீபாவளியன்று நீராடினால் புனித கங்கையில் நீராடிய பலன் கிட்டும் என்பது

ஆன்றோர் வாக்கு. அதனால்தான் இப்பண்டிகையன்று நீராடிப்புத்தாடை உடுத்து,

இறைவனைத் துதித்து இனிப்புப் பண்டங்கள் புசித்து மகிழ்ந்த பின்னர் அக்கம்

பக்கத்தில் வசிக்கும் உற்றார் உறவினரிடம், கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று

விசாரிக்கிறோம். பகவத் கீதா கிஞ்சித் அதீதா, பகவத் கீதையில் சிறிதளவு, ஒரே

ஒரு சுலோகம் மட்டுமாவது படித்தால போதும், கங்கா ஜல லவகணிகா பீதா –

கங்கை நீரில் ஒரு திவலை அருந்தினாலும் போதும், ஸக்ருதபியேன முராரி

ஸமர்ச்சா – விஷ்ணுவின் நாமத்தை வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை சொன்னாலும்

போதும் – பரலோக பயம் நீங்கும், மக்கள் பேரின்பமாகிய மோட்சம் அடைவது

உறுதி. இமய மலையிலிருந்து பெருகிவரும் அலக்நந்தா, மந்தாகினி, பாகீரதி,

என்னும் நதிகள் கங்கை எனப் பெயர் பூண்ட புண்ணிய நதிகள் மக்கள் அதில்

விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அன்னை பவானியின் பூஜையாக

வங்காளத்திலும், தாம்பூலத் திருநாளாக மகாராஷ்டிர மாநிலத்திலும்

கொண்டாடப்படும் இப்பண்டிகை, குஜராத்தில் குபேர பூஜையாக புதுக்கணக்குத்

நாடெங்கும் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

திருமணமான முதல் ஆண்டு வரும் மலை திபாவளியன்று

மாப்பிள்ளையைக் கோலமிட்ட மணையில் உட்கார வைத்து ‘கௌரீ கல்யாணமே,

வைபோகமே’ என்று மாமியார் பாடித் தலையில் எண்ணெய் வைப்பது தமிழ்

நாட்டவர் பழக்கம். பட்டாசு கொளுத்துவதன் மூலம் ஆயிரமாயரம் குடும்பங்கள்

பிழைக்கவும் இந்த திபத்திருநாள் வழிவகுக்கிறது. புத்தாடை உடுத்தும் வழக்கம்

நம்மிடையே இருப்பதால் நெசவுத் தொழிலும் செழிக்கிறது.

இப்பெருநாளில் இந்துக்கள் மட்டுமின்றிப் பிற மதத்தவரும் தங்கள்

வீட்டுப்பிள்ளைகளக்குப் பட்டாசும், ஏன் புத்தாடையும் கூட, வாங்கிக் கொடுத்த

மகிழ்கின்றனர்.

தீபாவளியன்று தொடங்கும் தீப அலங்காரம் கார்த்திகைப் பண்டிகை வரை

நீடிக்கிறது. தென் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் அகல் விளக்கு ஏற்றி வரிசை

வரிசையாக வைத்து அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

தீப மங்கள ஜோதி நமோ நம:

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
SOURCE:- SRI KANCHI KAMAKOTI PEEDAM .org

Read more: http://periva.proboards.com/thread/10532/deepavali#ixzz3r2Q7tXFE

Natarajan

 

” யார் பாக்யசாலிகள் ?….”

Here is a wonderful sketch of Periva’s Viswaroopa Darisanam and an article about His Holiness presented by our respected moderator Sri anusham163

யார் பாக்யசாலிகள் ?

இதோ இந்த நடமாடும் தெய்வம், காலை 3 மணிக்கு விழிப்பது முதல் இரவு 11 மணிக்கு உறங்கச் செல்லும் வரை அவர் கூடவே இருந்து, அவர் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்து, ‘என் கடன் பணி செய்திருப்பதே’ என்றிருந்த நூற்றுக்கணக்கான அணுக்கத் தொண்டர்கள் அந்த பாக்யசாலிகள்.

அவர், தம் பொற்பாதங்கள் பதித்து, ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து இப்புண்ணிய பூமியை மேலும் புனிதமடையச் செய்த போது, தாமும் அவர் கூடவே நடந்து, பசி, தாகம் களைப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, அவர் பணியே செய்து கோடி புண்ணியங்களைப் பெற்ற அந்த அணுக்கத் தொண்டர்களே அந்த மாபெரும் பாக்யசாலிகள்.

வேதங்களையும் சாஸ்த்ரங்களையும் நன்கு கற்றறிந்து, அந்த ப்ரத்யக்ஷ தெய்வம் ஒவ்வொரு வருஷமும் நடத்திய ஆகம, சில்ப, விஸ்வ பாரத, வேத சாஸ்த்ர சதஸுகளில் பங்கேற்று அவர் தந்த சம்மானங்களைப் பெற்ற அந்த வேத விற்பன்னர்களே அந்த பாக்யசாலிகள்.

அவருடன் மிக நெருங்கிப் பழகி, அவருடன் சம்பாஷித்து, தர்க்கம் செய்து அவர் அனுக்ரஹத்தால், அவரைப் பற்றிய அரிய விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட, ரா. கணபதி, பரணீதரன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்களும் சில்பி போன்ற ஓவிய விற்பன்னர்களுமே அந்த பாக்யசாலிகள்.

‘எத்தனை பேர் தன்னை தரிசனம் செய்ய வந்தாலும், அத்தனை பேருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கி விட்டே பிக்ஷைக்குச் செல்வார்’ என்ற உறுதியான நம்பிக்கையுடன், ‘க்யூ’ வில் காத்திருந்து, அவர் வழங்கும் தீர்த்தப் பிரசாதத்தைப் பெற்ற பின்பே செல்லும், லக்ஷக்கணக்கான பக்தர்களே அந்த பாக்யசாலிகள்.

‘வேதம் காக்கப்படவேண்டும்’ என்ற உன்னதமான குறிக்கோளுடன் நாடெங்கும் நிறுவச் செய்த வேதபடசாலைகளில் படித்து, தாம் கற்றவற்றை, அந்த தெய்வத்திடம் ஓதிக் காண்பித்து, விலைமதிபற்ற அவருடைய அனுக்ரஹத்தையும் சன்மானங்களையும் பெற்ற அந்தப் பால் மணம் மாறாத பாலகர்களே அந்த மஹாபாக்யசாலிகள்.

லௌகீக வாழ்வில் தமக்கு நேர்ந்த எண்ணற்ற துயர்களை, இந்தத் துயர் துடைக்கும் பெம்மானிடத்தில் கொட்டி அழுது, அவருடைய அன்பையும், ஆதரவான சொற்களையும் கேட்டு மனசு லேசாகிச் சென்ற, லக்ஷோப லக்ஷம் பக்த கோடிகளே அந்த பாக்யசாலிகள்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த பாக்யசாலிகளில் நானும் ஒருவனாக இருக்கக் கொடுத்து வைக்கவில்லையே என்ற தாபம் தீரும் வரை அந்த பாக்யசாலிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்; அவர்களுடைய அநுபவங்களைப் படித்து, கண்களில் நீர் பெருக நம் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம்.

தாபமும் தீராது; கண்ணீரும் நிற்காது.

மஹாபெரியவா திருவடிகள் சரணம் !

Read more: http://periva.proboards.com/thread/10436/sri-anusham163#ixzz3qBcC8ZY4

Source…..www.periva.proboards.com

Natarajan

 

“ஒரு சாப்பாட்டு ராமனுக்கு உபதேசம்” ….

periyava_vikatan_cover_73.jpg
(மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வெள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக் கலந்த பிறகு மேலே தொடர எதுவுமில்லை.)

கட்டுரையாளர்-கணேச சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஃபேஸ்புக் மலரும் நினைவுகள் 29-10-2012

“எல்லோரும் ‘ஈகோ’வுடன் பிறக்கிறார்கள்.அதுதான் ஆரம்பம் அதையே முதலில் சாப்பிடும் ‘தானோடு’சேர்ந்த குழம்பு காட்டுகிறது.பலவிதமாகக் குழம்புவதால் பிடிக்காமல் போகும் வாழ்க்கையே மனசு தெளிந்து விட்டால்,பிடித்துப் போகிறது. ரசமாகி இருக்கிறது. அதனால் பிறக்கும் ஆனந்தம்-இனிமை இவைதான் பாயசம்,பட்சணம். இனிமையையே அனுபவித்துக் கொண்டிருந்தால் திகட்டிவிடுமே! அதற்கு மேல் போய் பிரும்மானந்தத்துடன் லயிக்க வேண்டாமா?

அதுதான் ‘மோர்’ அந்த நிலை சாஸ்வதமானது.

பாலை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து தயிர்,வெண்ணெய், நெய் என்று ஏதாவது மாறுதல் வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வெள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக் கலந்த பிறகுமேலே தொடர எதுவுமில்லை.

மோர் சாதம் முடிந்த பின் இலையை எடுத்துவிட்டு எழுந்திருக்க வேண்டியதுதான்!”

இப்படியாக மிகப் பெரிய விஷயத்தை ஒரு சாப்பாட்டு ராமனுக்கு மிக எளிமையாக உபதேசித்துவிடுகிறார் மகா பெரியவர்.

Read more: http://periva.proboards.com/thread/10459#ixzz3qBb7H9Lc

Source…..www.periva.proboards.com

natarajan

“அழகா, சின்னதா கொலு வெச்சு, மனஸார 9 நாளும் அம்பாளுக்கு பூஜை பண்ணினாலே போறும்…சுண்டல் பண்ணனும்னு கூட அவஸ்யமில்ல .. “

                                 ஜய ஜய சங்கர
                                 ஹர ஹர சங்கர

காவேரிக் கரையில் உள்ள மண், மக்கள், ஆடு மாடு அத்தனையுமே செழிப்புதான் !

கும்பகோணம், திருச்சி அதைச் சுற்றிய க்ராமங்கள்…..ப

சுமையை வாரித் தெளித்திருக்கும்.


இந்த மாதிரி ஒரு அழகான, பசுமையான க்ராமம்தான் களத்தூர் !


அந்த ஊரில் உள்ள துர்க்கா பரமேஶ்வரியின் கோவில் மிகவும் அழகானது. சிறிய கோவில் என்றாலும், பூஜைக்கு குறைவில்லாமல் இருந்தது. 

அந்தக் கோவிலின் தர்மகர்த்தா அம்பாளின் கைங்கர்யமே வாழ்வாகக் கொண்டவர். மிக மிக நல்ல மனுஷ்யன். நவராத்ரி வந்துவிட்டால், கோவிலா, வீடா என்று போட்டி போட்டுக் கொண்டு அம்பாளுக்கு ஒன்பது நாளும் அலங்காரம், நைவேத்யம், என்று ஏகமாக செலவழித்து அப்படிக் கொண்டாடுவார். 

அண்டா அண்டாவாக சுண்டலும், இனிப்பும் ஒரு பக்கம் தயாராகி, நைவேத்யமாகி, ப்ரஸாதமாகி அக்கம்பக்கம் இருக்கும் க்ராமங்களில் இருந்தெல்லாம் பசியோடு வருபவர்களுடைய குக்ஷியில் போய்ச் சேரும்.

தர்மகர்த்தாவுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். ஐந்து பிள்ளைகள்; மூணு பெண்கள். ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகவில்லை. கடைக்குட்டியான ரமணி ரொம்பச் சின்னப் பையன். நாம் எல்லாருமே பிறக்கும் போதே, பிடரியில் மஹிஷவாஹனனை உட்கார வைத்துக் கொண்டுதானே பிறக்கிறோம்? 

அந்த ஜன்மத்தில் வந்த பந்தபாஶங்களை அறுத்து, இருப்போர், போனவர் எல்லாரையும் நிலைகுலையச் செய்து, அடுத்த பிறவியில் தள்ளும், பாஶக் கயிற்றை, எந்த க்ஷணத்தில் நம் கழுத்தில் இறுக்குவான் என்பதே தெரியாதே ! 

மஹிஷாஸுர மர்த்தினியான லலிதாம்பிகையின் அம்புஜ ஶரணங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், அவளுடைய இடது கரத்தில் உள்ள பாஶமானது, மஹிஷவாஹனனின் பாஶக் கயிற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றி, பிறவா பெருநிலையை அனாயாஸமாக அளித்துவிடுமே !

தர்மகர்த்தா இப்படித்தான் ‘பட்’டென்று ஒரு க்ஷணத்தில் காலமாகிவிட்டார் ! கட்டாயம் துர்க்கையின் மலரடியில் புஷ்பமாகப் போய்ச் சேர்ந்திருப்பார். பாவம். குடும்பமே நிலைகுலைந்தது ! ஆனால், அவர் மனைவி, எட்டு குழந்தைகளை தன் பொறுப்பில், அந்த அம்பாளே விட்டிருப்பதாக நினைத்தாள். தர்மகர்த்தா உயிரோடு இருக்கும்போது, “ஒங்காத்துப் பொண்ணுதான் எங்காத்து நாட்டுப்பொண்” என்று பேசியவர்கள், அவர் போனதும், வசனமும் அவரோடு போச்சு ! என்பதாக காணாமல் போனார்கள். 

கொஞ்சமும் மனஸை தளரவிடாமல்,வீட்டிலிருந்த அண்டான், குண்டான் கொஞ்ச நஞ்சமிருந்த தங்கம், வெள்ளி, பித்தளை ஸாமான்களை விற்றுக் காஸாக்கி, தன்னுடைய ஶக்திக்கு ஏற்றவாறு மூன்று பெண்களுக்கும் எளியமுறையில் கல்யாணம் செய்து வைத்தாள். பையன்கள் நாலு பேரையும் காலேஜ் வரை படிக்க வைத்தாள்.

பையன்களில் மூத்தவன் காலேஜ் முடித்ததும், “அம்மா! இனிமே நீயும், தம்பிகளும் என்னோட பொறுப்பு !…” என்று சொல்லுவதாக கனவெல்லாம் கண்டாள். அது கனவில்தான் முடிந்தது ! 
படிப்பை முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு, அந்த குச்சு வீட்டில், அம்மாவின் ஏழ்மைக் கைகள், அன்போடு போட்ட மோர் ஸாதத்தை, அதிலுள்ள அன்பின் ருசி அறியாமல், வேண்டா வெறுப்பாக ஸாப்பிட்டுக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்ததோ இல்லையோ, ‘நீயாச்சு! உன் பிள்ளைகளாச்சு !’ என்று ‘டாடா’ காட்டிவிட்டு எங்கோ சென்றுவிட்டான் ! தன் வாழ்க்கையை தான் பார்த்துக் கொண்டான்.

அண்ணாவுக்கு ஏற்ற தம்பிகளாக, தர்மத்தை கடைப்பிடித்தது ஸ்ரீராமனின் தம்பிகள்தான் !

இப்போது, கலியில், அண்ணாவைப் போல் ‘அதர்மத்தை’ கடைப்பிடித்து, அவன் போன மாதிரியே, அம்மாவையும், கடைசி தம்பி ரமணியையும் அதோகதியாக்கிவிட்டு, மற்ற மூன்று பிள்ளைகளும் நடையைக் கட்டினர்!

ரமணி அப்போது ஒன்பதாம் க்ளாஸ் படித்துக் கொண்டிருந்தான். இப்படிப்பட்ட புத்ர ரத்னங்களை படிக்க வைக்க, அம்மாக்காரி வாங்கிய கடனோ கழுத்தை நெரித்தது ! வீட்டில் அவளும், ரமணியும் மட்டுந்தானே! மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு, ஸொல்ப பணத்தில் கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு, மீதியை கடனுக்கு செலுத்தி வந்தாள்.


சிறுவன் ரமணி, பேருக்கேற்றபடி ரமணீயமான குணம். படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூர் மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்து, தன் ஸம்பாத்யத்தையும் அம்மாவின் கடனை அடைக்க குடுத்தான் ! இவர்கள் குடுக்கும் பணம், கடலில் கரைத்த பெருங்காயம் போல், கடன் அடையக் கூடியதாக இல்லை!

கடன்காரர்கள் வாயில் வந்ததைப் பேசும்போது, தன்னுடைய அம்மாவின் நல்லகுணத்துக்கு இப்படியெல்லாம் நடக்கிறதே ! என்று தாங்காமல், அம்மாவின் மடியில் தலையை வைத்துக் கொண்டு அழுதான், குழந்தை ரமணி.

அம்பாளுக்கு எவ்வளவு ஆசை ஆசையாய் செய்திருப்பார் தர்மகர்த்தா !

கைவிடுவாளா அம்பிகை? கஷ்டத்தைக் குடுத்து, மிச்சம் மீதி இருக்கும் கர்மாவை [அதுவே கடைசி பிறவி என்பதால்] கழிக்கவிட்டு, தன்னுடைய அதிரடிக் காருண்யத்தை ஒரேயடியாக சொரிந்து விடுவாளே!

ரமணியின் அம்மாவுக்கு அன்று இரவு ஒரு ஸொப்பனம்…..அதில், கரும்புவில்லுக்கு பதில் கருணை தண்டமேந்திய நம்முடைய பெரியவா அவளிடம், ” ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு அப்றம் நீ……நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே!…..அதோட, என்னையும் மறந்துட்டே! ரமணிய ஒடனே எங்கிட்ட அனுப்பு…” என்றதும், அப்படியே மனஸ் படபடக்க எழுந்து உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள்.
“ரமணி….கண்ணு…..பெரியவா வந்தாடா ஸொப்பனத்ல ! நவராத்ரி கொலு வெக்கணுமாம்…..ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றாடா!..”

“அம்மா…பெரியவா இப்போ எங்கியோ வடக்குல இருக்கார்ம்மா..அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே?….”

இருவருமே இது வெறும் கனவுதான்! என்று துளிகூட ஒதுக்கவில்லை. இருண்ட குகையில் இருப்பவர்களுக்கு, எங்கோ குட்டியாக வெளிச்சம் தெரிந்தால் போறுமே ! விடுவிடுவென்று வெளிச்சத்தை நோக்கி நடையைக் கட்ட வேண்டியதுதானே?

“பெரியவாதானே கூப்டிருக்கா? கவலைப்படாத! அவரே வழி காட்டுவார்…”

விடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஶர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும், அனுஸரணையோடும் இருப்பார்கள்.

“அம்மா….நானும், எங்காத்துக்காரியும் நாளான்னிக்கி நார்த் இண்டியா யாத்ரை கெளம்பறோம். திரும்பி வரதுக்கு எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம். ஒன்னோட ரெண்டு மாஸ வாடகையை ஒங்கிட்ட அட்வான்ஸாவே குடுத்துடறேன்……இல்லேன்னா நீ ரொம்ப ஸ்ரமப்படுவே. இந்தாத்துக்கு வந்தப்றம் எங்களுக்கு மனஸ்ல ஒரு நிம்மதி கெடச்சிருக்கு. அதுனால, கடைசி வரைக்கும், ஒனக்கு வாடகை குடுத்துண்டு, இங்கியேதான் இருக்கப் போறோம் ! செரியா?….” சிரித்துக் கொண்டே பணத்தைக் குடுத்தார்.

கரகரவென கண்ணீர் வழிந்தோட,

“மாமா…..பெரியவா தன்னோட லீலையை ஆரம்பிச்சுட்டார்! இன்னிக்கி காலேலதான் பெரியவா கனவுல வந்து நவராத்ரி கொலு வெக்கச் சொல்லிட்டு, ரமணியை ஒடனே அவர்கிட்ட அனுப்பச் சொன்னா…..பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். பாருங்கோ! ஒங்க மூலமா, அதுக்கும் வழி பண்ணிட்டார் !…எனக்கு, பெரியவா எங்க தங்கியிருக்கான்னு கொஞ்சம் விஜாரிச்சு சொல்றேளா?….”

ஶர்மா மாடியை நோக்கி..”வேம்பு! சித்த கீழ எறங்கி வாப்பா…..” என்றதும்

“இதோ வரேன் சித்தப்பா!…” என்றபடி ஒருவர் அங்கே ஆஜரானார்.

அம்மா….இவன் என்னோட அண்ணா பிள்ளை! ரொம்ப வர்ஷமா, பெரியவாகிட்டயே இருக்கான். மடத்லேயே தங்கிண்டு பெரியவாளுக்கு ஸுஸ்ரூஷை பண்ணிண்டு இருக்கான். என்னிக்காவுது இப்டீ…..ஊர் பக்கம் வருவான். நேத்திக்கித்தான் வந்தான். இன்னிக்கி ஸாயங்காலம் அஞ்சுமணி ட்ரெயின்ல கெளம்பி, பெரியவா இருக்கற எடத்துக்குப் போறான். நீ வேணா…ரமணியை இவனோட அனுப்பி வை! பத்ரமா அழைச்சிண்டு போய் பெரியவாளை தர்ஶனம் பண்ணிவெச்சுட்டு, பத்ரமா திருப்பி அனுப்பி வெக்கச் சொல்றேன்”

அம்மாவும் பிள்ளையும் அழுதே விட்டனர் !

இது, பெரியவா போட்ட அடுத்த “ஆனந்த குண்டு” !

“அனுப்பி வை! “என்றதோடு நிற்காமல், அதற்கான பணத்தை ஏற்பாடு பண்ணி, பந்தோபஸ்து பண்ணி, அழைத்துப் போக தகுந்த துணையையும் முன்னாடியே அனுப்பி வைத்து……

“அதான் பெரியவா…!” என்றார் வேம்பு சிரித்துக் கொண்டே!

பூனா பக்கத்தில் ஒரு சின்ன ஊரில் இருந்த பெரியவாளுடைய முகாமுக்கு வேம்புவோடு போனான் ரமணி. நல்ல கூட்டம் ! 

ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, அந்த ‘க்யூ’வில் ரமணியை நிற்க வைத்துவிட்டு “இங்க பாரு ரமணி ! இப்டியே கூட்டத்தோட போய்ண்டே இரு…ஒன்னோட டர்ன் வரும். பெரியவாகிட்ட, ஒன்னோட மனஸ்ல இருக்கற எல்லாத்தையும் கொட்டிடு! பயப்படாதே…எனக்கு உள்ள வேலையிருக்கு…..பெரியவாளை தர்ஶனம் பண்ணினதும், இங்கியே இரு. நா….வந்து ஒன்னை அழைச்சிண்டு போறேன். பயப்படாதே, என்ன?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

சின்னப்பையனான ரமணிக்கோ அங்கிருந்த கூட்டத்தை கண்டதும், “இந்த ‘க்யூ’ எப்போ நகந்து, எப்போ நா…பெரியவாளைப் பாக்கறது!” என்ற மலைப்போடு, ஏதாவது இண்டு இடுக்கு வழியாக பெரியவாளைப் பார்க்க முடியுமா என்று முயற்சி பண்ணினான். ம்ஹூம்! இவன் குனிந்து, நிமிர்ந்து, குதித்ததுதான் மிச்சம்!

“செரி ….வேம்பு மாமா இங்கியே இருக்கச் சொல்லியிருக்கா. கட்டாயம் பெரியவாளை பாப்பேன்” என்று தனக்குத்தானே முடிவு செய்துகொண்டு “ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர” என்று கண்களை மூடியபடி சொல்லிக் கொண்டிருந்தான்.

யாரோ அவனை லேஸாக தட்டியதும், கண்களைத் திறந்தான்…..

“நீதானே ரமணி? வா….எங்கூட ! பெரியவா ஒன்னைக் கூப்பட்றா !…..”

முழித்தான்!”

இந்த அலைமோதற கூட்டத்ல, பெரியவா என்னை மட்டும் கூப்ட்டாரா?.. “
ரமணிக்கு இது “மூணாவது ஆனந்த குண்டு”


“என்னடா? வேம்பு மாதிரி நானும் பெரியவாகிட்ட கைங்கர்யம் பண்றேன். பெரியவா சொல்லாம, நானா வந்து கூப்டுவேனா? வா…..” என்று சொல்லி, அவனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கூட்டத்தை விலக்கிக்கொண்டு, அவனை பெரியவா முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார், ஒரு பாரிஷதர்.

ஒரு க்ஷணம்! குழந்தை த்ருவனுக்கு முன்னால் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணு ஶங்குசக்ரதாரியாக நின்றபோது அவன் என்ன ஒரு ஸ்திதியில் இருந்தானோ, கிட்டத்தட்ட ரமணியும் பெரியவாளை அவ்வளவு அருகில் தர்ஶனம் பண்ணியதும், அப்படியொரு அநிர்வசநீயமான நிலைக்குத் தள்ளப்பட்டான்.

பெரிய கூட்டத்தில் அம்மாவின் கையைவிட்டு விட்டு, தொலைந்து போன குழந்தை, கதறி அழுது, மறுபடியும் தன் அம்மாவைப் பார்த்ததும், முதலில் சிரிக்காது, ஸந்தோஷப்படாது. மேலும் பலமாக அழும் ! அம்மா,அதைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு, கட்டிக்கொண்டு, தட்டிக் கொடுத்து ஸமாதானம் பண்ணினாலும், அதன் அழுகை ஓய நேரமெடுக்கும்.

இப்போது ரமணி த்ருவனாகவும், கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை போலவும், இரண்டும் கலந்த மனநிலையில், பெரியவாளைப் பார்த்ததும், “பெரியவா!……ஓ!….என்னோட பெரியவா!” என்று வாய்விட்டு அலறிக்கொண்டு, ஸாஷ்டாங்கமாக அவர் முன் விழுந்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்…..

“ரமணி!….அழாதேப்பா…எந்திரு. ஒனக்கு என்னடா கொறை? என்னடா வேணும்?…”

தாயின் குரலைக் கேட்டதும் அழுகை ஜாஸ்தியாகி, திக்கித் திக்கி எல்லாவற்றையும் சொன்னான்.

“பெரியவா……எங்கப்பா தர்மகர்த்தா….அம்பாள்கிட்ட ரொம்ப பக்தியா இருப்பார். திடீர்னு செத்துப் போய்ட்டார்…..என்னோட நாலு அண்ணாக்களையும் அம்மா கஷ்டப்பட்டு படிக்க வெச்சாலும், எங்களை விட்டுட்டு அவாவா பிச்சிண்டு போய்ட்டா பெரியவா…..மூணு அக்காக்களும் கல்யாணம் ஆய்ட்டாலும், சீர், செனத்தி, ப்ரஸவம்ன்னு பிச்சு எடுக்கறா பெரியவா…..

……பாவம் அம்மா! எங்க போவா பணத்துக்கு? பத்தாததுக்கு பழைய கடனே 80,000 இருக்கு! எங்காத்தை வித்து கடனை அடைக்கலாம்-னா, கஷ்டத்ல விக்கறோம்-ன்னு தெரிஞ்சுண்டு, அடிமாட்டு வெலையா 10,000த்துக்கு  பேசறா! நா…..படிப்பை நிறுத்திட்டு மளிகைக் கடேல வேலை பாக்கறேன்…..
அம்மாவை என்னால ஸந்தோஷமா வெச்சுக்க முடியலியேன்னு இருக்கு பெரியவா……”

அத்தனை வர்ஷங்கள் குழந்தையிலிருந்தே பட்ட கஷ்டத்தை, கொட்டித் தீர்த்து கதறிவிட்டான் !

பொங்கும் பரிவோடு அவனைப் பார்த்த பெரியவா…

அழாதே……கண்ணைத் தொடச்சுக்கோ! நா…..சொல்றதக் கேளு…..

நாலாவது “ஆனந்த குண்டு”….

..இப்போ ஒங்காத்ல கொலு வெக்கறதில்ல ; 
நவராத்ரி பூஜையும் பண்றதில்ல…அப்டித்தானே?”

“அம்மாவுக்கு கனவுல வந்து சொன்னதை ‘ஸத்யம்’-னு நிரூபிச்சுட்டாரே!”
அதிர்ந்து போனான் ரமணி.

“ஆமா…….பெரியவா. அப்பா போனதுக்கப்றம் அம்மா எல்லாத்தையும் நிறுத்திட்டா! வஸதியும் இல்ல…..”

“கொழந்தே!….ஒங்கப்பா பண்ணின மாதிரி தடபுடலா ஊரைக்கூட்டி, அண்டா அண்டாவா சுண்டலும், ஸொஜ்ஜியும் பண்ணி விநியோகம் பண்ண வேணாம். அழகா, சின்னதா கொலு வெச்சு, மனஸார ஒம்போது நாளும் அம்பாளுக்கு பூஜை பண்ணினாலே போறும்! சுண்டல் பண்ணனும்னு கூட அவஸ்யமில்ல….”

என்று சொல்லிக்கொண்டே தன் முன்னால் மூங்கில் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பாக்கெட் கல்கண்டையும், பேரீச்சம் பழத்தையும் தொட்டுவிட்டு, பாரிஷதரை விட்டு ரமணியிடம் குடுக்கச் சொன்னார்.
“ரமணி…..இது ரெண்டையும் அம்மாகிட்ட குடுத்து, நவராத்ரிக்கு அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணச் சொல்லு. நாளன்னிக்கி நவராத்ரி ஆரம்பிக்கறதே! நீ…இன்னிக்கி ஸாயங்காலம் பொறப்டாத்தான், நாளக்கி ஸாயங்காலம் ஊர் போய்ச் சேருவே! மறுநா…காலம்பர கொலு வெக்கறதுக்கு தோதா இருக்கும்…” என்று சொல்லிவிட்டு, பாரிஷதரிடம் ஏதோ சொன்னார்.

அவரும் ரமணியிடம்,

“ரமணி….பெரியவாளை நமஸ்காரம் பண்ணிக்கோ! இந்தா இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்தை எடுத்துக்கோ!…” என்றதும், சின்னப் பையன்தானே! அதே ஜோரில் பெரியவாளிடம், “என்ன பெரியவா இது! ஒங்கள பாக்கணும்ன்னு எவ்ளோவ் ஆசையோட வந்தேன்? நீங்க என்னடான்னா….இன்னிக்கே கெளம்பிப் போயி, ஆத்துல கொலு வெக்கச் சொல்றேளே ! இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரவழைச்சேள்?…” அழுகையும், ஏமாற்றமும் கலந்து லேஸாக ஒரு
பாந்தவ்யமான கோபத்தின் ரேக்குகளை அதன் மேல் பரப்பி, கண்கலங்க கேட்டான்.

அவனைப் பார்த்து லேஸாக புன்னகைத்துவிட்டு, பாரிஷதரிடம் அவனை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார். ப்ரஸாதங்களை எடுத்துக் கொண்டு, அழுகையோடேயே வேம்பு ஐயரிடம் சென்றான். நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டதும் வேம்பு, ரமணியிடம்

“கொழந்தே ரமணி! பெரியவாகிட்ட இப்டியா கேக்கறது? ‘இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரச் சொன்னேள்?’-ன்னு கேட்டியாமே ! 

அந்த “இதுக்குத்தானா” குள்ள எத்தனை ரஹஸ்யங்கள், அர்த்தங்கள் ஒளிஞ்சிண்டு இருக்குன்னு ஒனக்கு மட்டுமில்லடா, யாருக்குமே தெரியாது. பெரியவா சொன்னதோட அர்த்தங்களை போகப் போக நீயே புரிஞ்சுப்ப…..செரி செரி ….ஸீக்ரம் ஸாப்ட்டுட்டு கெளம்பு….பாரு! பெரியவா ஒனக்கு ரெண்டு ஜோடி புது வேஷ்டி ஆஸிர்வாதம் பண்ணிக் குடுத்திருக்கா! “

பெரியவாளுடைய அன்பை, வேம்பு ஐயர் சொல்லச் சொல்ல, இப்பேர்ப்பட்ட பெரியவாளுடன் இருக்க முடியாமல், ஊருக்குப் போகணுமே! என்று அழுது கொண்டே ஸாப்பிட்டுவிட்டு கிளம்பியவனிடம்

“பெரியவா குடுத்த கல்கண்டு பேரீச்சம்பழம், வேஷ்டி எல்லாம் இந்தப் பையில வெச்சிருக்கேன். இந்தா….இதைக் கை செலவுக்கு வெச்சுக்கோ!
[ஒரு கவரில் சில நூறு ரூபாய் நோட்டுக்களை போட்டுக் குடுத்தார்] ரயில்ல ஒன்னை ஏத்திவிட நானே வரேன். ரொம்ப பாக்யஸாலிடா நீ! பெரியவாளோட
முழூ ஆஸீர்வாதத்தையும் அப்டியே அள்ளிண்டுட்டே! இனிமே ஒனக்கு ஒரு கொறையும் வராது. ஒன்னோட ரயில்ல வர்றவர் என்னோட ஸொந்தக்காரர்தான்
…. பெரியவா ஒனக்கு எப்டி பந்தோபஸ்து பண்ணி அனுப்பறார் பாரு! ஒன்னை ஒங்காத்துல அவர் கொண்டு விட்டுடுவார். பெரியவா சொன்னபடி, ஒடன்னே
அம்மாவை கொலு வெக்கச் சொல்லிடு….”

பத்ரமாக ஊர் வந்து சேர்ந்தான். போன ஜோரில் திரும்ப வந்த குழந்தையைக் கண்டதும் அம்மாவுக்கு ஒரே பதைபதைப்பு ! 

“என்னடா ஆச்சு? பெரியவாளைப் பாத்தியா? என்ன சொன்னார்?…..” இப்படியாக ஒரே கேள்வி மயம்!

” அம்மா…அம்மா! பயங்கரக் கூட்டம்! அத்தனை கூட்டத்லயும் என்னை அழைச்சிண்டு வரச் சொல்லி, நன்னா கிட்டக்க தர்ஶனம் பண்ணினேன். நம்மளோட
கஷ்டம் எல்லாத்தையும் அவர்கிட்ட கொட்டித் தீத்துட்டேன்! 

பெரியவாளோடேயே இருந்துட மாட்டேனான்னு இருந்துது…ஆனா, ஆஸ்சர்யம் பாரேன்! ஒனக்கு வந்த கனவு நெஜந்தாம்மா ! பெரியவாளே “நீ ஒடனே ஊருக்கு
போயி, அம்மாகிட்ட நா சொன்னேன்னு, கொலு வெக்கச் சொல்லு ! ஒங்கப்பா இருந்தப்போ பண்ணின மாதிரி, பெருஸ்ஸா ஊரைக் கூட்டி தடபுடல் பண்ணாம,
ஆத்துமட்டோட சின்னதா, அழகா பொம்மைகளை வெச்சு, சுண்டல் கூட வேணாம்…இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்த தெனோமும் கொஞ்சமா அம்பாளுக்கு
நைவேத்யம் பண்ணினாப் போறுன்னுட்டார்’-ம்மா!”

“பெரியவா சொல்லிட்டான்னா வேற என்ன வேணும்? ஒடனே பரண் மேல வெச்சிருக்கே! அந்த கொலுபொம்மைப் பொட்டியை கீழ எறக்கு….அப்டியே அந்த
சின்ன கொலுப்படியையும் எறக்கு… வேற என்னடா சொன்னா? நம்ம கஷ்டத்துக்கு எதாவுது விடிவு பொறக்குன்னாரா ?…

பெரியவாளை பாத்ததுமே ரொம்ப அழுதுட்டேம்மா! எனக்குத் தாங்கல….இத்தனை வர்ஷமா நீயும், நானும் மட்டுந்தான் வாய்விட்டு பேசிண்டோம்…நமக்கு
சொல்லி அழறதுக்குக் கூட யாருமே காது குடுக்கலியேம்மா! அவர் வேற எதுவுமே சொல்லாட்டாலும், எல்லாத்தையும் கேட்டுண்டு, என்னை அழாதேப்பா-னார்ம்மா!
கொலு வெச்சுட்டு ஒம்போது நாளும் அம்பாளுக்கு ஶ்ரத்தையா பூஜை பண்ணச் சொல்லுன்னு மட்டும் சொன்னார்……”

ஸீதையை லங்கையில் தர்ஶனம் பண்ணியதை திரும்பத்திரும்ப சொல்லியும், கேட்டும், ‘போறாது, போறாது’என்பது போல் ஆனந்தமாய் பேசிப் பேசி அனுபவித்த
ஆஞ்சநேயரும், அவருடன் சென்ற வானரக்கூட்டமும் போல், அம்மாவும், பிள்ளையும் பெரியவாளைப் பற்றி பேசித் தீர்த்தபாடில்லை!

பரணில் இருந்து பொம்மைகள் இறக்கப்பட்டு, பெரியவா சொன்ன மாதிரி, நவராத்ரி ஆரம்பித்ததும், வீட்டில் மாக்கோலம் போட்டு, மாவிலைத் தோரணம் கட்டி,
விளக்கை ஏற்றி வைத்து, அம்பிகையை ஶ்ரத்தையாக பூஜித்தாள். கல்கண்டு, பேரீச்சம்பழம் நைவேத்யம். என்னவோ, அத்தனை வர்ஷங்கள் இல்லாத நிம்மதியும்,
லக்ஷ்மிகரமும் அவர்கள் வீட்டிலும், மனஸிலும் புகுந்தது.

“ரமணி, பெரியவா சொன்னதைப் பண்ண ஆரம்பிச்சதுமே நமக்குள்ள ஒரு அமைதி வந்துடுத்து பாத்தியா….!”

அம்மாவுக்கு கிடைத்த நிம்மதி ரமணிக்கு முழுமையாக கிடைக்கவில்லை. 

காரணம்?

“நேத்திக்கி பரண்ல ஏறி கொலுப் பொட்டியை எடுக்கறச்சே…..வேறே எதையோ பாத்தேனே……”
இதே சிந்தனைதான் நிம்மதிக்கு குறுக்கே வந்தது. கிடுகிடுவென்று ஏணியைப் போட்டு, பரணில் ஏறினான்.

அதோ…..மூலையில் ஒரு நசுங்கிப் போன தகரப் பொட்டி!”

அம்மா! இங்க இன்னொரு பொட்டி இருக்கும்மா! அதையும் எறக்கறேன்….எதாவுது பொம்மை இருந்தா அதையும் கொலுல சேத்துக்கலாம்”

அம்மா அதை வாங்கி கீழே வைத்து திறந்தால்……

அதில் பொம்மை இல்லை! ஆனால்…..இதென்ன? ஏதோ பட்டுத் துணியில் சுத்தியிருந்தது!

பயமும் பக்தியும் ஒருசேர, அந்தப் பட்டுத் துணியை மெல்ல பிரித்தால், உள்ளே நாலைந்து ஓலைச்சுவடிக் கட்டுகள்! மஹா அரதப்பழஸு என்பதைப்
பார்த்தாலே புரிந்தது.

என்னடா ரமணி இது! அப்பா, இத இவ்ளோ பத்ரமா பட்டுத் துணில சுத்தி வெச்சிருக்கான்னா….இது ரொம்ப முக்யமான விஷயமா இருக்குமோ?”

“அம்மா! நா……இன்னிக்கி ஸாயங்கால டிரெயின்ல போயி, பெரியவாகிட்ட இந்த சுவடிகளை பட்டுத் துணியோட குடுத்துட்டு வந்துடறேன்…”

“உங்கள் பாரம் எனதே! ” என்று பெரியவா ஸதா சொல்லிக் கொண்டிருப்பதை, நம்மைப் போலில்லாமல், ரமணியும் அவன் அம்மாவும் கேட்கத் தொடங்கியதால்
, “ஓடு! பெரியவாளிடம்!..” என்று சுவடிகளோடு மறுநாளே பெரியவா முன் ஆஜராகிவிட்டான்!

முதல்முறை வந்தபோது இருந்த அழுகையும், குழப்பமும், பயமும், ஸந்தேஹமும் இந்தத் தடவை ரமணியிடம் இல்லை! அவனுடைய வாழ்வில் ரெண்டு நாளைக்கு
முன்பிருந்த அதே பணமுடைதான் இப்போதும் இருந்தது. பின், எப்படி இந்த அமைதி? தெளிவு?

” நம் ஹ்ருதய குகைக்குள் ஸதா மஹாநடனம் புரிந்து வரும் நம்முடைய மஹா மஹா பெரியவாளை அப்படியே மனஸில் கட்டிக் கொண்டுவிட்டான்,
மார்கண்டேயன் பரமேஶ்வரனை கட்டிக் கொண்டது போல்!”

“என் அப்பன், என் அம்மை இருக்கையில் எனக்கென்ன குறை? பயம்?……ஆனந்தமோ ஆனந்தம் மட்டுமே!”

இது பெரியவா அவனுக்குத் தராமல் தந்த ஸர்வகால ஸஹவாஸ வாக்குறுதியால் வந்த த்ருட விஶ்வாஸம்!

வேறு எதுவுமே இல்லை!

பெரியவா எல்லாருக்குமே இப்படியொரு பாக்யத்தை அருளிக் கொண்டிருக்கிறார். ரமணி பிடித்துக் கொண்டான்! நாம்…?

ரமணி பெரியவா இருந்த இடத்துக்குப் போனபோது, தனியான ஒரு இடத்தில் பெரியவா அமர்ந்திருந்தார். 

சில பாரிஷதர்களைத் தவிர, ஜாஸ்தி கூட்டமே இல்லை!

பெரியவா முன்னால் ஸுமார் 60 வயஸு மதிக்கத்தக்க ஒரு பெரியவர் பவ்யமாக கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். பெரியவாளிடம்
ஏதோ ஸீரியஸ்ஸான விஷயத்தை ப்ரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்.

“ஸரஸ்வதி மஹால்…அங்கெல்லாம் விஜாரிச்சியோ?..”

“எல்லா எடமும் சல்லடை போட்டு சலிச்சாச்சு பெரியவா! இந்தியால இருக்கற famous ஜோஸ்யக்காரா, உபன்யாஸக்காரா, ஏன்?ஆர்க்கியாலஜிகாராளைக் கூட
விடலை பெரியவா! எங்கியாவுது, யார் மூலமாவுது, எதாவுது, தெரியாதான்னு அலைஞ்சாச்சு பெரியவா…..அதை யாரு, எங்க ஒளிச்சு வெச்சிருக்காளா, இல்லே, அதோட அருமை தெரியாம எரிச்சோ, தூக்கியோ போட்டுட்டாளோன்னு ரொம்ப பதட்டமா இருக்கு…. எங்கியாவுது அது இருக்கற சின்ன clue கெடச்சாக்கூட
போறும்! எப்டியாவுது அவா கைல கால்ல விழுந்தாவுது கெஞ்சிக் கூத்தாடி வாங்கிண்டு வந்துடுவேன்…..எத்தன லக்ஷங்கள் ஆனாலும் பரவாயில்ல பெரியவா!
ஆனா, அதோட மதிப்புத் தெரியாம, எங்கியோ ஒரு மூலேல அது மக்கிப் போய்டக்கூடாது…. இதான் என்னோட ப்ரார்த்தனை!….”

கண்களில் வழிந்த கண்ணீரை அவர் துடைத்துக் கொண்டிருக்கும்போதுதான், ரமணி உள்ளே எட்டிப் பார்த்தான்.

பெரியவா அவனைத் திரும்பிப் பார்த்து,

“வாடா! கொழந்தே! வா….வா” என்றதும், ஸரியாகச் சொல்ல வேண்டுமென்றால், தகரடப்பாவும், கையுமாக குதித்துக் கொண்டு ரெண்டே எட்டில் பெரியவா முன்னால் நின்றான். தகரடப்பாவை ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.

“பெரியவா! நீங்க சொன்னமாரியே அம்மா ஆத்துல கொலு வெச்சுட்டா! ஆனா, மேல பரண்ல கொலுப் பொட்டியோட, இந்த தகரடப்பாவும் இருந்துது பெரியவா! பிரிச்சா… “

என்று பேசிக்கொண்டே அவன் தகரடப்பாவை திறந்ததும்,

“ம்ம்….நல்லதாச்சு போ! அந்த டப்பால இருக்கறதை அப்டியே பட்டுத்துணியோட அந்த மாமாகிட்ட குடுத்துடு! ”

இது ஐந்தாம் ஆனந்த குண்டு!

இதுக்குள்ள ஏதோ ஓலைச்சுவடி இருக்கு பெரியவா…… நீங்க படிக்க வேணாமா?…”
என்று கேட்டுக்கொண்டே, பட்டுத்துணியோடு அந்த ஓலைச்சுவடியை அந்த பெரியவரிடம் குடுத்தான். பணிவோடு வாங்கிக் கொண்டார்.”

“நீ…இத்தன வர்ஷமா இந்தியா முழுக்க தேடி அலஞ்சுண்டு இருந்தியே! இதான்…..அது! “

என்னது! அவரோ வாய்விட்டு அழுதேவிட்டார்! 

“ஓ ….பெரியவா! என் தெய்வமே! க்ருபா ஸாகரா! பெரியவாகிட்ட இதப்பத்தி பேசி பத்து நிமிஷம் கூட ஆகல……அதுக்குள்ள இப்டியொரு கருணா வர்ஷமா?
இது கெடைக்கும்னு கனவுல கூட நா…..நெனைக்கல பெரியவா…!”

இந்தக் கொழந்தைக்கு நா….வயஸ்ல பெரியவங்கறதால நமஸ்காரம் பண்ண முடியாத நெலேல இருக்கேன்……”

என்று சொல்லிக்கொண்டே, தன் bag ஐ திறந்து உள்ளேயிருந்ததை அப்படியே எடுத்து பெரியவா முன் இருந்த மூங்கில் தட்டில் வைத்தார், கனகதாரா மாதிரி
கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்!

“பெரியவா…..மஹாப்ரபோ! இன்னதுதான் வெலை-ன்னு நிர்ணயிக்க முடியாத இந்த அபூர்வமான பொக்கிஷத்துக்கு, என்னால முடிஞ்ச சின்ன ஸமர்ப்பணம்…..
அனுக்ரஹம் பண்ணி ஸ்வீகரிச்சுக்க சொல்லணும்…

அழகாக சிரித்துக் கொண்டே….” ஏது? ஒனக்கு ஊருக்கு போய்ச்சேர நடராஜா ஸர்வீஸ்தானா? காலணா வெச்சுக்காம, எல்லாத்தையும் குடுத்துட்டியே!…” என்று
சொல்லிவிட்டு, ரமணியிடம்,

“இதோ பாருடா! நீ குடுத்த ஓலைச்சுவடிக்காக, இந்த மாமா ஒனக்கு ரெண்டுலக்ஷ ரூவா குடுத்திருக்கார்!…. இப்போ நீதான் இவருக்கு ஊருக்குத் திரும்பிப்
போறதுக்கு, டிக்கெட் காஸு குடுக்கணும்! இந்தக் கட்டுலேர்ந்து ஒரு அம்பது ரூவா எடுத்து அந்த மாமாகிட்ட குடுத்துட்டு, அவரை நமஸ்காரம் பண்ணிக்கோ!…”

“ஹா……!! பெரியவா…! நா…ரெண்டுலக்ஷ ரூவா கொண்டுவந்திருக்கேன்னு எப்டி கரெக்டா சொல்லிட்டேள் பெரியவா?…”

கூடவே ரமணியும் கபடில்லாமல் “அதான! எப்டி பெரியவா? எண்ணிப்பாக்காம சொன்னேள்?…”

பெரியவாளிடமிருந்து வெறும் புன்னகைதான் இதற்கு பதிலாக வந்தது!

“செரி செரி ஊருக்கு கெளம்பற வழியைப் பாரு! ஒங்கூட இந்த பணத்தை எடுத்துண்டு வேம்பு மாமாவும் ஊருக்கு வருவார். எல்லாத்தையும் அவர் பாத்துப்பார்.
ரெண்டு பேரும் ஸாப்ட்டுட்டு கெளம்புங்கோ!…”

அனுக்ரஹம் பண்ண மட்டுமே தெரிந்த கரங்களை உயர்த்தி ஆஸிர்வாதம் பண்ணி, ப்ரஸாதம் குடுத்தார்.

ஊருக்கு வந்த மறுநாளே, வேம்பு ஐயரிடம் பெரியவா குடுத்திருந்த instruction படி, 80,000 ரூபாய் கடன், “ப்பூ!…” என்று ஊதித் தள்ளப்பட்டது ! நவராத்ரி ஆரம்பித்த
நாலாம் நாளே, துர்க்கையாக அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, மஹாலக்ஷ்மியாக செல்வத்தையும் அருளிவிட்டாள் அம்பிகையான “ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர” ஸரஸ்வதி ! 

ஶர்மா தம்பதி நல்லபடி யாத்ரை முடித்துக் கொண்டு வந்ததும், ரமணியின் க்ருஹமும் “ஶங்கரா” என்ற நாமத்தைத் தாங்கியபடி புனர்ஜன்மாவை பெற்றது!

வாஸலிலேயே ஒரு பக்கத்தில் நல்ல தரமான மளிகைப் பொருட்களை, ஞாயமான விலையில் விற்க ஆரம்பித்தான் ரமணி!

அவ்வீட்டில், எந்தக் கார்யமுமே, பெரியவா அனுக்ரஹம் என்ற பிள்ளையார் சுழியோடுதான் ஆரம்பிக்கும்!  நல்ல வருமானம்! நல்ல பேர்! பின்னாளில், பெரியவா
சொன்னபடியே, ஶர்மாவின் பெண்ணை ரமணி கல்யாணம் பண்ணிக்கொண்டான்.

கஷ்டமில்லாத, கடனில்லாத வாழ்க்கை, அடிக்கடி பெரியவா தர்ஶனம்!

வேறு என்ன வேண்டும்? பெரியவா சொன்னபடி, தங்கள் வாழ்க்கையின் தேவைகளை எளிமையாக ஆக்கிக்கொண்டு, எதையும் அபரிமிதமாக சேர்த்து வைத்துக்
கொள்ளாமல், பல பேருக்கு அன்னதானம் செய்யும் அளவு, ரமணியின் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், ஸமுத்ரமாகவும்
இருந்தார்.

                                          ஜய ஜய சங்கர
                                           ஹர ஹர சங்கர
​Source…input from a friend of mine

Natarajan

 

 

 

தெய்வத்தின் குரல்: சரஸ்வதிக்கு ஆலயம் இல்லாதது ஏன்?

சரஸ்வதியைப் பற்றி எப்படி நினைக்கிறோம்? பூர்ண பிரம்ம சக்தி என்று நினைக்கிறோமோ இல்லையோ வித்யாதி தேவதை, கலை மடந்தை, அறிவுத் தெய்வமென்று அவளுக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். வெள்ளை வெளேரென்று வீணா, புஸ்தகங்களோடு அவளை நினைத்தாலே சாந்தியாயிருக்கிறது. சரஸ்வதி பூஜை பண்ணுகிறோம்.

அவளைப் பற்றி ஸ்தோத்திரங்கள், மகான்கள் பண்ணியிருப்பது, கம்பர், ஒட்டக்கூத்தர், குமர குருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாகப் பண்ணியிருக்கிறார்கள். அவற்றை ஓதுகிறோம். முத்துஸ்வாமி தீக்ஷிதர் முதலானவர்கள் அவள் மீது செய்திருக்கும் கீர்த்தனங்களைப் பாடுகிறோம். குழந்தையாக ஸ்கூல் போக ஆரம்பிக்கும்போதே அவள்மேல் சுலோகங்கள் சொல்லி பிரியத்துடன் பக்தி பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.

இத்தனை இருந்தாலும், இவ்வளவு ஆயிரம் கோயில் இருந்தும் சரஸ்வதிக்கு ஒன்றையும் காணோம். தமிழ்நாடு பூராவிலும் தஞ்சாவூர் ஜில்லாவில் கூத்தனூர் என்ற ஒரு இடத்தில்தான் சரஸ்வதி ஆலயம் இருக்கிறது. அது ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில். ஒட்டக்கூத்தருடைய ஊர்தான் கூத்தனூர்.

காமகோட்டத்தில், காஞ்சி காமாட்சி ஆலயத்தில் சரஸ்வதிக்கு சந்நிதி உண்டு. ஆனால் அதுகூட பிரம்ம பத்னியான சரஸ்வதி இல்லை என்றும், ராஜ ராஜேச்வரிக்கு மந்த்ரிணியாக இருக்கும் ராஜசியாமளையான மகா சரஸ்வதி என்றும் ஒரு வித்தியாசம் சொல்வதுண்டு. சரஸ்வதிக்கு பிம்பம், சந்நிதியுள்ள மற்ற கோவில்களிலும் அவை முக்கியமான இடம் பெறாமல் ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கின்றன.

மொத்தத்தில், பிரம்மா மாதிரியே சரஸ்வதிக்கும் கோயில் முக்கியத்துவம் இல்லை. ஆனால் பிரம்மாவிடம் ஜனங்களுக்கு விசேஷ பக்தி, மரியாதைகள் இல்லாததுபோல, சரஸ்வதிக்கு இல்லாமலில்லை. அவளை எல்லாரும் நிரம்பப் போற்றி பக்தி செய்கிறோம். படிக்க ஆரம்பிக்கும்போதே கல்வித் தெய்வம் என்று அவளைத் துதிக்கக் கற்றுக் கொடுத்துவிடுவதால், அது பசுமரத்தாணியாக மனசில் பதிந்து என்றைக்கும் அவளிடம் பக்தி நீங்காமலே இருக்கிறது.

நியூஸ் பேப்பர் பாஷையில் சொன்னால், அவள் ‘பாபுலர்’ தெய்வம். பிரம்மா ‘அன்பாபுலர்’ தெய்வம். அன்பாபுலர் தெய்வத்துக்குக் கோயிலில்லை என்றால் அது நியாயம். நல்ல பாபுலாரிடி இருக்கிற தெய்வத்துக்கும் ஏன் அப்படியே இருக்க வேண்டும்?

இங்கேதான் நம்முடைய தேசாசாரம் வருகிறது. பதிவிரத்யம் என்பது நம் தேசாசாரத்தில் ஊறிப்போன விஷயம். பதிவிரதைகள் புருஷனுக்கு இல்லாத எதையும் தாங்கள் அனுபவிக்க மாட்டார்கள். சரஸ்வதி பிரம்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்துகொண்டிருக்கும் பதிவிரதை. அதாவது பிரம்மாவின் நாக்குதான் அவள் குடியிருக்கும் கோயில். அவள் எப்படிப் பதிக்குக் கோயிலில்லாதபோது தான் மட்டும் கோயிலில் குடிகொள்வாள்? அதனால்தான் அவளுக்கும் அவர் மாதிரியே கோயில் இல்லை.

அகத்திலே நாம் கூப்பிட்டால் அவள் வருவாள். தாயாரல்லவா? அதனால் நம் குடும்பத்து மனுஷியாக வருவாள். நமக்கு அறிவு புகட்ட வேண்டிய ட்யூட்டியும் அவளுக்கு இருப்பதால் தனிப்பட்ட முறையில் அகத்துக்கு வருவாள்.

ஆனால் ஊர் உலகத்துக்குப் பொதுவாக அவளைப் பெருமைப்படுத்திக் கோயில் கட்டுவது என்றால், அப்போது பதியை விட்டுவிட்டு, தான் மட்டும் மகிமை கொண்டாடிக்கொள்ள அவள் சம்மதிக்க மாட்டாள்.

அவளுடைய அந்த உத்தம ஸ்த்ரீ குணத்தை மதித்துத்தான் அவளுக்கு ஆலயமில்லாமல் வைத்திருக்கிறது. சக்திகளை வழிபடுவதற்கென்றே நவராத்ரி என்று வைத்துப் பூஜை பண்ணும்போது துர்கா, லட்சுமிகளுடன் அவளும் வந்து சரஸ்வதி பூஜை பெறுவாள். அதோடு சரி. பதியை நீக்கி, பொதுத் தலத்தில் கோயில் என்று வைத்து ஊர் கூடி நித்ய பூஜை, உத்ஸவாதிகள் பண்ணுவதற்கு அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள்.

கோயிலில்லாத கடவுள்

நம் தேசத்தில் இத்தனை ஆயிரம் கோயில்கள் இருந்தும், ஒவ்வொரு கோயிலிலும் ஏகப்பட்ட சந்நிதிகள் இருந்தும் அநேக உத்ஸவாதிகள் நடத்தப்பட்டபோதிலும் பிரம்மாவுக்கு எதுவுமே காணோம். அபூர்வமாக எங்கேயாவது புஷ்கர் மாதிரி ஒரு க்ஷேத்திரத்தில்தான் தேடித் தேடி அவருக்குக் கோயில் பார்க்க முடிகிறது. பிரம்மா கோயில் என்றாலே புஷ்கரைத்தான் இன்று நினைக்கிறார்கள்.

நம்முடைய கும்பகோணத்திலேயே பிரம்மாவுக்குத் தனிக் கோயில் இருப்பது ரொம்பப் பேருக்குத் தெரியவில்லை. காஞ்சீபுரத்திலும் கும்பகோணத்திலும் தடுக்கி விழுந்த இடமெல்லாம் கோயில்கள் என்பார்கள். காஞ்சீபுரத்தில் நாம் ஜென்மாவில் பண்ணுகிறதற்கெல்லாம் கணக்கு எழுதும் சித்திரகுப்தனுக்கு அபூர்வமாகக் கோயில் இருக்கிறதென்றால், கும்பகோணத்தில் ஜென்மாவைத் தரும் பிரம்மாவிற்கு அபூர்வமாகக் கோயில் இருக்கிறது.

திருக்கண்டியூர் என்று திருவையாற்றுக்குக் கிட்டே இருக்கிறது. அது பரமசிவன் பிரம்மாவுக்கு ஆதியில் இருந்த ஐந்து தலைகளில் ஒன்றைச் சேதித்த க்ஷேத்திரம். அங்கே சிவனுக்கு பிரம்மச் சிரக்கண்டீசர் என்றே பேர். அங்கே பிரம்மாவுக்கும் சந்நிதி இருக்கிறது.

கொங்கு நாட்டிலுள்ள த்ரிமூர்த்தி க்ஷேத்ரமான பாண்டிக் கொடுமுடியிலும் இருக்கிறது. சிதம்பரத்தில் பிரம்மாவையே சண்டேச்வரர் என்று சொல்லி, கனக சபையைச் சுற்றி வரும்போது அவருக்கு ஒரு சின்ன கோஷ்டம் காட்டுகிறார்கள். ஆனாலும் இதெல்லாம் சமுத்திரத்தில் ஒரு துளி மாதிரிதான். நம் தலையெழுத்தை எழுதுகிறவரின் தலையெழுத்து இப்படி இருக்கிறது.

– தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

Source….www.tamil.thehindu.com

Natarajan

நவராத்திரி-கொலு-பூஜை-முறை”& கன்னிகா பூஜை”….

12-10-2015 மதியம் 12 முதல் 2 மணிக்குள் கொலு வைக்கலாம் அல்லது மாலை 6 முதல் 9க்குள்ளாக.

13-10-2015 நவராத்திரி ஆரம்பம்.

முதல் நாள்:

1208576_934106069952692_4823586982390101304_n.jpg

மஹா கணபதி பூஜையுடன் தொடங்கி கலச பூஜை செய்து, துர்கையை தியானம் செய்து கலசத்தில் ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம். மஹிஷாஸுரமர்த்தினி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

இரண்டாம் நாள்:

இக்சா சக்தியான துர்கையை துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்து ஸ்ரீ லலிதா திரிசதி, ஸ்ரீ காமாட்சி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

மூன்றாம் நாள்:

துர்கா அஷ்டோத்திர பூஜை. ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்ன மாலா பாராயணம்.

நான்காம் நாள்:

ஸ்ரீமகாலக்ஷ்மியை தியானம் செய்து லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்தல் நல்லது. ஸ்ரீ கனக தாரா ‌ம‌ந்‌திர‌ம், ஸ்ரீ அன்ன பூர்ணாஷ்டகம், அஷ்டலக்ஷ்மி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

எல்லா நாட்களிலுமே பூஜையின் முடிவில் ஸ்ரீ துர்கா லக்ஷ்மி ஸர‌ஸ்வதீப்யோ நம: என்று கூறி மலர்களுடன், குங்குமம், அட்சதை ஆகியவற்றை அம்மாளிடம் சமர்ப்பிக்கவும்.

ஐந்தாம் நாள்:

லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ கனகதாரா ம‌ந்‌திர‌ம், ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகமும் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஆறாம் நாள்:

லக்ஷ்மி அஷ்டோத்திரம் அல்லது மகாலக்ஷ்மி ஸஹ‌ஸ்ரநாம பூஜை செய்தல் சிறப்பானது.

ஏழாம் நாள்:

ஸ்ரீ சர‌ஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து, ஸ்ரீ சாரதா புஜங்க ம‌ந்‌திர‌ம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா முதலியவை பாராயணம் செய்யலாம்.

எட்டாம் நாள்:

சர‌ஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து, ஸ்ரீ தேவி நவரத்னமாலா மற்றும் ஸ்ரீ பவானி புஜங்கம் பாராயணம் செய்யலாம்.

ஓன்பதாம் நாள்:

சர‌ஸ்வதி அஷ்டோத்திரம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் மற்றும் ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் பாராயணம் சிறந்த பலன் தரும்.

கன்னிகா பூஜை

நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்தில் ஆராதனை செய்கிறோம். ஏழு அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை நம் இல்லத்திற்கு அழைத்து அவர்களை அன்னை பாலா திரிபுரசுந்திரியாக பாவித்து நல்விருந்தளித்து, புத்தாடை, அணிகலன்களான வளையல், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் அளிப்பது அம்பிகை பக்தர்களின் வழக்கம்.

முதல் நாளில் ஒரு குழந்தையில் தொடங்கி விஜயதசமி அன்று நவகன்னிகைகளுக்கு மேற்கூறியவாறு உபசாரங்கள் செய்யலாம். அல்லது இப்படி செய்ய இயலாதவர்கள் கடைசி நாளில் ஒன்பது கன்னிகைகளுக்கும் ஒரு சேர விருந்தளித்து ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். இந்த உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு தருவாள்.

Read more: http://periva.proboards.com/thread/10287/#ixzz3oLA22P3H

Source….www/periva.proboards.com

Natarajan