” நேற்று ராத்திரி வந்து ஒரு கொய்யாப் பழம் வேணுன்னு கேட்டேனே …”

பரமாசார்யா காஞ்சி மடத்துல இருக்கற சமயத்துல அவரை தரிசனம் பண்ண பல ஊர்கள்ல இருந்தும் நிறையப்பேர் தினமும் வருவா. அதுவும் விசேஷ நாள்னா கேட்கவே வேண்டாம். கூட்டம் திமிலோகப்படும். மடத்து சிப்பந்திகள் இங்கேயும் அங்கேயுமா நின்னுண்டு வரிசையை கட்டுப்படுத்திண்டு இருப்பா.

20683_671948076266709_3512172854606087227_n.jpg  

ஒரு சமயம் மகரசங்கராந்தி அன்னிக்கு அதே மாதிரி ஆயிரக்கணக்கானபேர் பெரியவாளை தரிசனம் பண்றதுக்காக மடத்துல குவிஞ்சிருந்தா! அனுமார் வால் மாதிரி நீண்டு இருந்த வரிசையை, மடத்து சிப்பந்திகள் கிரமப்படுத்தி, உள்ளே அனுப்பிண்டு இருந்தா.

அந்த கூட்டத்துல ஒரு தம்பதி நின்னுண்டு இருந்தா. அவாளைப் பார்த்தாலே முகம் முழுக்க ஏதோ ஒரு சோகம் நிரந்தரமா அப்பிண்டு இருக்கறது தெரிஞ்சது. ஆமையா நகர்ந்துண்டு இருந்த வரிசை கொஞ்சம் வேகமா நகராதா, சீக்கிரமா ஆசார்யாளை தரிசிக்க மாட்டோமாங்கற ஏக்கம் அப்பப்போ அவாகிட்டே எட்டிப் பார்க்கறதையும் உணர முடிஞ்சது.

கூட்டம் நகர, நகர நேரமும் சேர்ந்து நகர்ந்து உச்சிக்காலத்தை நெருங்கித்து. அந்த சமயத்துல அந்தத் தம்பதிகள் கிட்டே ஏதோ ஒர பரபரப்பு தொத்திண்டுது. ரெண்டுபேரும் எதையோ முணுமுணுத்துக்கறதும், குறுக்குல போயாவது பெரியவாளை தரிசிக்க ஏதாவது வழி இருக்குமான்னு அங்கேயும் இங்கேயுமா எட்டி எட்டிப் பார்க்கிறதுமா நிலைகொள்ளாம தவிச்சாங்க.

அந்த சமயத்துல அங்கே இருந்த மடத்து சிப்பந்தி, அவாளை ஒழுங்கா நில்லுங்கோ… இப்படி நகர்ந்து நகர்ந்து மத்தவாளுக்கு இடைஞ்சல் பண்ணாதீங்கோன்னு மென்மையா சொன்னார்.

சட்டுன்னு தன்னோட கையில் இருந்த மஞ்சப்பையை உயர்த்தி அந்த சிப்பந்திகிட்டே காட்டினார் அந்த ஆசாமி. “பெரியவா எங்கிட்டே கேட்டதை எடுத்துண்டு வந்திருக்கோம். அவர் பிட்சாவந்தனத்துக்கு போறதுக்கு முன்னால குடுத்துடணும்னு தான் பரபரப்பா இருக்கோம். நீங்க கொஞ்சம் தயசு வைச்சா, கொஞ்சம் முன்னால போய் அவர்கிட்டே குடுத்துடறோம்..’ சொன்னார்.

அவர் காடிடன பைக்கு உள்ளே உருண்டையா ஏதோ இருக்கறது தெரிஞ்சுது. “என்ன கூட்டம் நெறைய இருக்கறதால சுலபமா பார்க்கறதுக்கு வழி தேடறேளா… பெரியவா கேட்டதை எடுத்துண்டு வந்திருக்கோம்னு சொல்லி ஏமாத்தப்பார்க்கறேளா? அதெல்லாம் விடமுடியாது..’ கண்டிப்பாகவே சொன்னார் மடத்து சிப்பந்தி.

“இல்லை.. பொய் சொல்லலை… ஆசார்யா நேத்து எங்க ரெண்டுபேரோட கனவுலயும் வந்து கேட்டார்! அதனாலதான் இந்தக் கொய்யாப்பழத்தை எடுத்துண்டு வந்திரக்கோம்!’ கெஞ்சலா சொன்னா, அந்த தம்பதி.

“யார்கிட்டே கதைவிடறேள்? பெரியவா ஒரு வார்த்தை சொன்னா வண்டிவண்டியா பழத்தைக் கொண்டு வந்து குவிக்க பல பெரிய மனுஷா தயாரா இருக்கா. அப்படி இருக்கறச்சே.. அவர் உங்ககிட்டே கேட்டாரா? அதுவும் கனவுல வந்து இந்த ஒரே ஒரு கொய்யாப்பழத்தை

எடுத்துண்டு வரச்சொன்னாராக்கும்?

வழியில சாப்பிடறதுக்கு வாங்கி வைச்சதை பெரியவா கேட்டான்னு சொல்லிட்டு முன்னால போகலாம்னு பார்க்கறேளோ?’ முன்னால பின்னால இருந்த யாரோ குரல் எழுப்பினா.

அவ்வளவுதான், பேசாம தலையைக் குனிஞ்சுண்டு நின்னுட்டா அந்த தம்பதி. “அவர்தானே கேட்டார்? அதை எப்ப வாங்கிக்கணும்னு அவருக்கே தெரியும்.. நாம் ஏன் அவசரப்படணும்?’ மெதுவா முணுமுணுத்தார் அந்தப் பெண்மணி.

ஆச்சு, மெதுவா நகர்ந்து நகர்ந்து பெரியவாளை அந்தத் தம்பதி தரிசிக்கிற முறை வந்தது. ஆம்படையானும், பொண்டாட்டியுமா ஆசார்யா கால்ல விழுந்தா, பிரசாதத்தை வாங்கிக்கறதுக்காக கையை நீட்டினா.

பிரசாதத்தைக் குடுக்கறக்கு பதிலா, “என்னைப் பார்த்ததும் வந்த வேலையை மறந்துட்டியா? நேத்து ராத்திரி வந்து ஒரு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டேனே.. கொண்டு வந்தியோ?’ பெரியவா கேட்க, எல்லாரும் அதிர்ந்துபோனா. அவா பொய் சொல்றதா குரல் எழுப்பினவா தலையை குனிஞ்சுண்டா.

அவசர அவசரமா, மஞ்சப்பையில இருந்த கொய்யாப் பழத்தை எடுத்து நீட்டினார் அந்த ஆசாமி. ஆசார்யா தன் பக்கத்துல இருந்த சீடரைப் பார்த்தார். அதோட அர்தத்தை புரிஞ்சுண்ட அந்த சீடர் சட்டுன்னு ஒர மூங்கில் தட்டை நீட்டி அந்தப் பழத்தை வாங்கி, கொஞ்சம் ஜலம் விட்டு அலம்பிட்டு ஆசார்யா பக்கத்துல வைச்சார்.

கனிஞ்சிருந்த அந்தக் கனியை கனிவோட எடுத்து பெரியவா மென்மையா ஒரு அழுத்து அழுத்தினார்.

கிருஷ்ணரோட கால் படறதுக்காவே காத்துண்டு இருந்த யமுனை அவரோட பாதம் பட்டதும் பட்டுனு விலகி வசுதேவருக்கு வழிவிட்ட மாதிர, பரமாசார்யாளோட கரம் படறதுக்காகவே காத்துண்டு இருந்த மாதிரி அந்தக் கொய்யாப்பழம் சட்டுன்னு இரண்டு விள்ளலா பிளந்துண்டுது.

அடுத்து யாருமே எதிர்பார்க்காதபடி, செவேல்னு இருந்த அந்தப் பழத்துல ஒரு பாதியை அப்படியே வாயில போட்டுண்டுட்டார், பெரியவா. இனனொரு பாதியை அந்தத் தம்பதிகிட்டே கொடுத்தார். “நீயும் உன் ஆம்படையாளும் சாப்பிடுங்கோ.. எதை நினைச்சு ஏங்கறேளோ அது கிடைக்கும்!’ ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்.

எல்லாருக்கும் இப்போ அந்த தம்பதிமேல தனி மரியாதை வந்துது. எது மேலயுமே பற்றோ ஆசையோ வைக்காத ஆசார்யா, இவா கொண்டு வந்த பழத்தை வாங்கி, உடனே சாப்பிடறார். மீதியை பிரசாதமாவும் தர்றார்னா, இவா எவ்வளவு பெரிய பாக்யம் பண்ணியிருக்கணும்னு பேசிண்டா.

அவா செஞ்ச பாக்யம் என்ன? பெரியவா அவாளுக்குத் தந்த வரம் என்னங்கறது, சரியா ஒரு வருஷம் கழிச்சு அதே தம்பதி மறுபடியும் ஆசார்யாளை தரிசனம் பண்ண வந்தப்போ தெரிஞ்சுது. ஆமா, இப்போ அவா கையில, பிறந்து ஒண்ணு ரெண்டு மாசமே ஆன குழந்தையும் இருந்துது. தழுதழுப்போட குழந்தையை பெரிவா காலண்டையில போட்டுட்டு ரெண்டுபேரும் நமஸ்காரம் பண்ணினா.

“என்ன உங்க கோரிக்கை நிறைவேறிடுத்தா?’ கேட்கலை மகா பெரியவா.. அவரோட புன்னகையே அதை எல்லாருக்கும் உணர்த்தித்து.

ஆசையே இல்லாத மகான், ஆசையா கேட்கறாப்புல ஒரு கொய்யாப்பழத்தைக் கேட்டு, அதையே ஆசிர்வாதமா தந்து அந்தத் தம்பதியோட ஆசையை பூர்த்தி செஞ்சிருக்கார்னா, அவரை பகவானோட அவதாரம்னுதானே சொல்லணும்

Read more: http://periva.proboards.com/thread/9707/#ixzz3gPdJELlL

” பறித்ததா ….கொறித்ததா …” ?

கட்டுரையாளர்-இந்திரா சௌந்தரராஜன்.

பறித்ததா, கொறித்ததா?’ என்று பெரியவர் கேட்ட கேள்வியில் இலக்கிய நயம் மட்டுமில்லை. இதயத்தின் நயமும் இருந்தது என்பது போகப்போக விளங்கத் தொடங்கியது. கடலையை முறத்தில் வைத்து எடுத்து வந்த அந்த நபர், பெரியவர் முன் திணறியபடி நின்றார். பின் அந்த கடலையை வயலில் உள்ள எலி வளைகளில் இருந்து எடுத்து வந்ததை மிகுந்த பயத்துடன் கூறினார்.

பெரியவர் முகத்தில் மெல்லிய சலனம்.

ஒரு துறவிக்கு ஆசையே கூடாது. அது அற்ப கடலைப்பயிர் மீதுதான் என்றாலும், அதிலும் சில சமயங்களில் இது போல சோதனைகள் ஏற்பட்டு விடுகின்றன.

எலி ஒரு பிராணி! வளைகளில் கடலைகளை சேமித்து வைத்துக் கொண்டு, அறுவடைக்குப் பிறகான நாட்களில், அது அதைச் சாப்பிட்டே உயிர் வாழ்ந்தாக வேண்டும். வயலுக்கு சொந்தக்காரனுக்கு வேண்டுமானால், அது எலியுடைய கள்ளத்தனமாக இருக்கலாம். அதற்காக எலிகளுக்கு பாஷாணம் வைத்து கொல்லவும் முற்படலாம். ஆனால், அன்பே வடிவான துறவி, எலியை ஒரு கள்ளப் பிராணியாகவா கருதுவார்? அதிலும், எலி எனப்படுவது கணபதியாகிய பிள்ளையாரின் வாகனம். அவரை வணங்கும்போது, நம் வணக்கம் எலிக்கும் சேர்த்துத்தான் செல்கிறது. இப்படி, வணங்கவேண்டிய ஒரு ஜீவனின் சேமிப்பில் இருந்து எடுத்து வந்திருந்த கடலையை பெரியவரால் சாப்பிட முடியவில்லை. மாறாக அந்த மனிதரிடம்,இதை எந்த வளையில் இருந்து எடுத்துண்டு வந்தீங்க? அந்த இடம் ஞாபகம் இருக்கா?” என்றுதான் கேட்டார். அவரும் ஆமோதித்தார். அடுத்த சில நிமிடங்களில், ஒரு முறத்தில் அந்த கடலையோடும் இன்னொரு முறத்தில் வெல்லப் பொரியோடும் அந்த இடத்துக்கு பெரியவரே போய் நின்றதுதான் ஆச்சரியம்.

வளை துவாரத்துக்கு முன்னாலே, அங்கிருந்து எடுத்ததோடு கொண்டு வந்திருந்த வெல்லப்பொரியையும் வைத்து விட்டு, மன உருக்கமுடன் அவர் பிரார்த்தனை செய்யவும், உள்ளிருக்கும் எலிகள் வெளியே தைரியமாய் வந்து, பெரியவர் படைத்த விருந்தை அனுபவிக்கத் தொடங்கின!

சூழ்ந்து நின்ற நிலையில் பார்த்த வர்களுக்கெல்லாம் ஒரே பரவசம். மெய்சிலிர்ப்பு!

‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம் சொல்லாமல் சொல்லி விட்டதே!

இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட நான், இதை ஒரு மிஸ்ட்ரியாக கருதுவதா, இல்லை மிக சகஜமான ஹிஸ்டரியாக எடுத்துக் கொள்வதா என்பதில் சற்று குழம்பிப் போனேன்.

பெரியவரைத் தவிர, எவராலும் இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்த முடியாது என்றும் நம்பினேன். இப்படி ஒரு கருணையை ஒரு தெரு நாயிடமும் அவர் காட்டிய சம்பவம் ஒன்றையும், இதைத் தொடர்ந்து நான் அறிய நேரிட்டது.

துறவிகள் வருடத்துக்கு ஒருமுறை, ஒரு நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரதம் எனும் விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு. என்னதான் அது பொன்னாகவே இருந்தாலும், அதை துலக்கத் துலக்கத் தான் அதன் பிரகாசம் அதிகரிக்கும்.

துறவிகள் விஷயத்தில் இப்படிப்பட்ட விரதங்களும் அப்படித்தான்! மகா பெரியவரும் ஒரு கிராமத்தில் தங்கி, இந்த விரதத்தை மேற்கொண்டார்கள். இதனால் தவசிவமானது அந்த கிராமத்தைச் சுற்றிலும் பரவிடும். அதன் விளைவுகளை காலத்தால்தான் நாம் உணர முடியும்.

எவ்வளவோ பெரிய அறிஞர்களும், ஞானிகளும் மின் விளக்குக்குக்கூட விதியில்லாத கிராமப்புறங்களில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். அவர்களின் பிறப்புக்கு பின்னாலே, துறவியர்கள் மேற்கொள்ளும் இப்படிப்பட்ட தவசிவங்கள் பெரிதும் காரணங்களாய் உள்ளன.

பெரியவர் அந்த கிராமத்தில் விரத மிருந்த சமயம், தினப்படி பூஜைகள் மற்றும் சம்பிரதாய சடங்குகளும் குறைவின்றி நடந்தன. முடிவில் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அன்று பங்கேற்றவர்களுக்கும் மடத்திலேயே போஜனம் அளிக்கப்படும். அதை பிரசாதமாக கருதி உண்பது சான்றோர் வழக்கம்.

ஊருக்குப் பொதுவான தர்மத்தால் வந்த அன்னம் அது. மந்திரம் சேர்ந்து சாப்பிடக் கிடைப்பது ஒரு விசேஷம். அதைச் சாப்பிடப் போய், ஒரு துளி ரத்தம் அதனால் நமக்குள் பெருகினாலும் அது போதும். உடம்பால் இன்றைய வாழ்க்கை முறையில் நமக்கு ஏற்படும் தோஷங்கள் அடிபட்டுப் போய்விடும்.

இந்த அன்னத்துக்காக ஒரு தெருநாய் கூட தவமிருந்ததுதான் விந்தை! தினமும் மதியம் எல்லோரும் சாப்பிட்ட உடன், எடுத்து எறியப்படும் எச்சில் இலைகளைத் தேடிச் சென்று, அந்த நாய் சாப்பிடத் தொடங்கிவிடும். இலையைப் போடச் செல்லும்போதே பாய்ந்துவரும். குலைக்கும். அதன் பசி அதற்கு!

இந்த சப்தம் தினமும் பெரியவர் காதிலும் விழுந்தது. அதன் பசிக்குரல், அவர் மனத்தை உருக்கிவிட்டதாம். அப்போது, ஒரு தையல் இலையில் அவர் சாப்பிட ஒரு கைப்பிடி அவலோ, இல்லை உப்பில்லாத தயிரன்னமோ அவருக்கும் அளிக்கப்படுவது வழக்கம். தனக்கு தரப்பட்ட அந்த இலைப் பிரசாதத்தை, அப்படியே குலைக்கும் நாய்க்கு வைக்கச் சொல்லிவிட்டார் பெரியவர். அதற்கும் சோறு வைக்கச் சொல்லாமல், தன் சோற்றையே அவர் தரச் சொன்னதன் பின்னே, பல நுட்பமான விஷயங்கள் ஒளிந்துள்ளன.

நாயின் குலைப்பு பசி உணர்வை பெரியவருக்கு உணர்த்துகிறது. இதை வெல்வது கடினம். இந்த பாழாப்போன பசி, எச்சில் இலை என்றுகூட பார்க்காமல் நாயைத் தூண்டுகிறது.

இதுதான் மனிதர்களையும் ஆட்டிப் படைக்கிறது. இதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள், ‘ஒரு சாண் வயிறே இல்லாட்டா – இந்த உலகத்தில் ஏது கலாட்டா?’ என்று பாடவும் காரணமாகிறது.

இதை வெற்றி கொள்ளாமல், துறவை வெற்றி கொள்வதும் கடினம் என்பதுதான், அவர் உணர்ந்த, உணர்த்த விரும்பிய உண்மை.

பெரியவர், தன் இலையையே தரவும், ஆடிப்போன மடத்து ஊழியர்கள், அதன்பின் நாய்க்கு முதலில் உணவு வைத்துவிட்டு, பிறகுதான் போஜனத்தை தொடங்கினர்.

அதன்பின், பெரியவர் முன் இலை வைக்கும்போது நாய் குலைக்கவில்லை. அந்த ஒரு நாயின் பசிக்கு வழி செய்தாகி விட்டது. ஆனால், உலகத்தில் கோடி கோடி உயிர்கள்… ஒரு உயிரும் உணவில்லை என்று வருந்தக்கூடாதே…?

Read more: http://periva.proboards.com/thread/9687/#ixzz3g9D8AVVn

Source…www.periva.proboards.com

Natarajan

 

 

பெருந்தலைவர் காமராஜர் … எளிமையின் சிகரம் …மக்களில் ஒருவர் …

மக்களில் ஒருவர்

1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.

திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். “அது என்னையா சத்தம்?” காமராஜ்.

“ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்” என்றார் காவல்துறை அதிகாரி. “இதோ பாருங்க… இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி – நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி பின் இவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். ஆனால் அவர் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன். ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவாலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் புளகித்தார்.

காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமெ என்று பத்றிப்போனார். காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே என கலங்கினார்.

அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜ் அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தியுற்றது.

காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார்.

அரசியல்

1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை முதல்வராக பணியாற்றிய காமராஜர் எளிமையின் சின்னமாக விளங்கினார்.

வீண் விளம்பரங்களை வெறுத்த காமராஜர், கிராம மக்கள் நலனில் பெரிதும் அக்கரை காட்டினார். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தானே சுற்றுப்பயணம் செய்து கிராம பிரச்சனைகளை நேரில் கண்டறிந்தார். அதனை நீக்க புத்தம் புதிய செயல் திட்டங்களை தீட்டினார்.

கல்விக்கண் கொடுத்தவர்

ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.

“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.

“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?

உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.

“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.

“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.

“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.

உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.

எளிமையின் சிகரம்

அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் மறுபதிப்பாகவும் வாழ வேண்டும். அரசியல்வாதிகளின் எளிமையான தோற்றம் அவர்களை மக்களோடு சமப்படுத்தும்.

பகட்டும் படோபாவமும், ஆடம்பரமும் அகங்காரமும் மன்னர்களிடம் இருந்து அதனாலேயே அழிந்தார்கள். இன்று மக்களை வழி நடத்தும் அரசியல்வாதிகளும் அதே தவற்றைச் செய்யலாமா?

இந்த மனோபாவத்தை மாற்றும் மனிதனாக எளிமையாய் வாழ்ந்து அரசியலில் எளிமையின் சிகரமாய் பரிணமித்தவர்தான் பாரதப் பெருந்தலைவர்.

இந்தியாவில் வேட்டி சட்டைப்போடும் எத்தனையோ அரசியல் தலைவர்கள் வெளிநாடு போகும்போது மட்டும் கோட்டு சூட்டு போட்டு கோலம் செய்கிறார்கள். இது மண்ணின் மகத்துவத்தை மட்டும் மறைப்பதில்லை. நம்மையும் அது அந்நியப்படுத்திவிடுகின்றது.

1953 ல் பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது.

எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார்.

தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார்.

அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார்.

டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான்.

இதை உணர்ந்த வேங்கடராஜுலு நாயுடு அவர்கள் காமராஜ் அவர்களுக்கு மலாயாவில் இருந்து ஒரு கடிதம் எழுதினார்.

கடித்த்தின் கருத்து இதுதான். ‘ஜெனரல் டெம்ப்ளர் கண்டிப்பானவர், ஆடைப்பாதி, அலங்காரம் மீதி என்னும் குணம் உடையவர். எனவே தாங்கள் அவரைச் சந்திக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து ஒரு கோட் தைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்வதாக’ எழுதியிருந்தார்.

வேங்கடராஜுலுக்கு பயம்.’தலைவர் வந்தும் ஜெனரல் டெம்ப்லரைச் சந்திக்க செல்ல வேண்டும். காமராஜ் தனது வழக்கப்படி கைத்தறி ஆடைகளோடு வந்துவிடக்கூடாது’ -என்று மனம் வருந்தினார்.

டெம்ப்ளர் சாதாரண உடைகளை உடுத்தி இருப்பவர்களை மிகச் சாதாரணமாகவே மதித்து வெளியில் அனுப்பிவிடுவார். எனவே வேங்கடராஜுலு மனம் வருந்தியதில் உண்மை இருக்கிறது.

காமராஜ் வரும் விமானத்தை எதிர்பார்த்து கோலாலம்பூர் குதூகலித்தது. இந்தியத் தலைமகனைக் காண எங்கெங்கு பார்த்தாலும் தலைகள்!

வேங்கடராஜுலு சந்தேகப்பட்டது போலவே நடந்துவிட்டது.

விமானத்தை விட்டு காமராஜ் எப்போதும் போலவே வேட்டி சட்டையுடன் வெளிவந்ததைக் கண்டு கலங்கினார் அமைப்பாளர்.

எப்போதும் போல் சாதாரணமாக கதர் வேஷ்டி, சட்டை, துண்டுடன் தலைவர் தன் தாயகத்தை உடையில் சுமந்துபோய் உள்ளத்தைக் காட்டிக்கொண்டிருந்தார்.

அழைத்த வேங்கடராஜுலு அகம் நொந்தார். இனி தலைவர்பாடு கமிசனர்பாடு என்று நினைத்தவாறே தலைவர் கமிஷனரிடம் அழைத்துப்போனார். எப்படியோ தலைவரை எதிர்ப்பார்த்த ஜெனரல் எளிமையாகப் பார்த்ததும் அசந்துபோனார்.

காமராஜரை வெறுக்கவில்லை. மாறாக தலைவரிடம் தனியே இருந்து பல மணி நேரம் பேசினார் ஜெனரல் டெம்ப்ளர் அவர்கள். பேசி முடித்து தலைவரை வழியனுப்ப வந்தவர்களிடம் ஜெனரல் அவர்கள் காமராஜர் அவர்களின் எளிமை மிகவும் பிடித்துப்போனது’ என்று கூறி எளிமையை சிகரத்தில் ஏற்றினார்.

இன்றோ ஒருநாள் கூத்துக்காக ஒன்பது ஜோடி கோட் சூட் தைத்து ஒரு முறை மட்டுமே மகிழ்கிறார்கள் அரசியல்வாதிகள்.

அதன் பின் ஒரு முறை ரஷ்யா செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தபோதும், தனக்காகத் தைத்தகோட் சூட்டையே வேண்டாம் என உதறிவிட்டு அதே எளிய உடையுடனே சென்று வந்தார்.

ரஷ்யா குளிர் அதிகம் உடைய நாடு. இருந்தும் தோளில் ஒரு துண்டைப் போட்டுவிட்டு எப்போதும்போல் எதார்த்தமாக ஒரு வேஷ்டி சட்டையை அணிந்து வெற்றியோடு திரும்பி வந்தார் தலைவர்.

இந்தப் பயணத்துக்காக தைத்து தலைவர் அணியாத ஆடைதான் அவரது நினைவகத்தில் நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளது. எங்கும் இவர் அணிந்த ஆடை என்று காட்சிக்கு வைப்பதைதான் பார்த்திருக்கின்றோம். ஆனால் – இது ரஷ்யா செல்ல தொண்டர்களால் தைத்துக் கொடுக்கப்பட்ட ஆடை , இதை தலைவர் அணிய மறுத்துவிட்டார்.’ என்ற செய்தியுடன் அவ்வாடை காட்சியில் வைக்கப்பட்டுள்ளது உலகிலேயே நமது அரசியல் தலைவனின் நினைவிடத்தில் மட்டுந்தான்.

இவ்விதம் எளிமையின் திருவுருவமாய்த் தோன்றி எளிமையின் சிகரமாக வாழ்ந்து இன்றைய அரசியல்வாதிகளுக்கு விளக்காக வாழ்ந்த பெருந்தலைவரின் இவ்வரிய வாழ்க்கை எல்லோரும் படிக்க வேண்டிய பாடமாகும்.

Source…..www.perunthalaivar.org

Natarajan

” தெய்வம் பேசுமா ….” ?

“தெய்வம் பேசுமா?”

(வழி காட்டின மஹா பெரியவா.)

சொன்னவர்-மணக்கால் ராமன்.
11062732_966708246695949_3966038563901324568_n.jpg

வலையில் படித்த தகவல்.

தனியார் ஆபீஸில் தன்னுடைய பதினெட்டாவது வயஸில், shorthand, typewriting, SSLC certificates உடன் வேலைக்கு சேர்ந்து, ஐம்பத்தெட்டாவது வயஸில் retire ஆகி வீட்டில் உட்கார்ந்தார் ஒரு பக்தர்.

அவர் வஹித்த பதவி, அவருக்கு ஏகப்பட்ட பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் குடுத்திருந்தாலும், அவருடைய உள் மனஸில் வெறும் சூன்யமாகவே இருந்தது. வேலை, வேலை என்று உயிரைக் குடுத்து உத்யோகம் பார்த்ததில், “நான் யார்?” என்று அரை நிமிஷம் கூட சிந்திக்காமல் விட்டுவிட்டார்.

அதன் பலன்? retire ஆனதும், அத்தனை நாள் மாங்கு மாங்கென்று எந்தக் கம்பெனிக்காக உழைத்தாரோ, அந்த routine, நண்பர்கள்,எல்லாமே ஒரு நொடியில், ஒரு பிரிவுபசார பார்ட்டியோடு அவரை விட்டுத் தள்ளிப் போய்விட்டன!

பெற்ற பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் கல்கத்தாவில் இருந்தார்கள். அங்கேயெல்லாம் போனால், போய் இறங்கின அன்று இருக்கும் மரியாதையும் உபசரிப்பும், நாலு நாளைக்கு மேல் நீடித்தால், அது அவர் செய்த பாக்யம்!

பிள்ளை நல்ல உத்தியோகம்; ரொம்ப நல்லவன்; ஆனால், என்ன ப்ரயோஜனம்? மாட்டுப்பெண்ணும் நல்லவள்தான்…. யாருக்கு? பிள்ளைக்கு!

பெற்றவர்களை ஒதுக்கி விட்டு, பிள்ளையை மட்டும் தன்னுடைய குடும்பமாக நினைப்பவள்; பிறந்த வீட்டார் மேல் அபரிமிதமான கரிசனம்.

இப்படி இருக்கும் வீட்டில் தான் போய் அதிக நாட்கள் தங்கினால், இப்போதிருக்கும் பேச்சு வார்த்தை கூட அறுந்து போய்விடும் என்று தயங்கினார்.

யார் வழி காட்டுவார்கள்? “நீனே அநாத பந்து” என்று பெரியவாளுடைய திருவடியில் வந்து விழுந்தார்.

மனசுக்குள், எங்கே போவது? யாருடன் தங்குவது? ஜன்மாவை கடைத்தேற்றிக் கொள்ளாமல் ஐம்பத்தெட்டு வருஷம் கோட்டை விட்டாச்சு !…. என்று ஒரே குழப்பம்.

எதுவுமே பேசாமல் நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு ஓரமாக நின்றார். பெரியவா அவரைப் பார்த்தார்….. உடனே அருகில் வந்து மிகவும் பவ்யமாக, “பெரியவா அநுக்ரஹத்ல அனேகமா எல்லா க்ஷேத்ரங்களும் தர்ஸனம் பண்ணிட்டோம். போனவாரம் தலைக்காவேரி போயிட்டு, அப்டியே காவேரிப்பூம்பட்டிணம் போய்ட்டு வந்தோம்…”

காவேரி உற்பத்தி ஸ்தானத்லயும், சங்கமத்துலேயும் ரொம்ப குறுகலாத்தானே இருக்கு?”

“ஆமா…..”

“காவேரி, ரொம்ம்…ம்ப அகலமா இருக்கற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?”

“அகண்ட காவேரி”

“அது எங்க இருக்கு?”

“திருச்சி பக்கத்ல …”

“அந்த ப்ரதேசத்துக்கு என்ன பேரு?”

பக்தர் முழித்தார்!…..

“மழநாடு…ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?”

“எங்க தாத்தா சொல்லுவார்”

காவேரி தீரம்தான் மழநாடு; ரொம்ப ஆசாரக்காரா இருந்த நாடு; ஒன்னோட தாத்தா இருந்த எடம்”

பக்தருக்கு இதெல்லாம் எதுவுமே தெரியவில்லை. நெளிந்தார்.

ஆஹா! அடுத்து பெரியவா, இவர் எதுவும் சொல்லாமலேயே, இவருடைய குழப்பத்தை தீர்த்து வைத்தார்!

“திருச்சில ஜாகை வெச்சுக்கோ!

தெனமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்…. இப்டியா தர்சனம் பண்ணிண்டு இரு!”

“தெய்வம் பேசுமா?”…என்று சந்தேஹம் வருபவர்களுக்கு, இதோ! தெய்வம் பேசுகிறது! என்று உண்மையான மஹான்கள் முன்னால் கொண்டு போய் நிறுத்தி விடலாம்.

கண்களில் நன்றிக் கண்ணீரோடு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவா சொன்னபடி திருச்சியில் ஜாகை பார்க்கச் சென்றார்.

மலைக்கோட்டை தெருவில் அம்சமான வீடும் கிடைத்தது!

பெரியவா சொன்னபடி தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டபடியால் கட்டாயம் “வீடு பேறும்” கிடைக்கும்

Read more: http://periva.proboards.com/thread/9665/#ixzz3fmFpAShV

Source….www.periva.proboards.com

Natarajan

Message for the Day…”Spiritual Discipline has the’one pointedness’ has its Ultimate aim…”

Sathya Sai Baba

You must be careful even in matters relating to the realisation of God. Whatever inconveniences one may encounter, one must try to carry on spiritual practices without any break or modification in the disciplines. One should not be changing the name that one has loved, cherished and selected for remembrance (smarana).Concentration is impossible if the name is changed once every few days. The mind won’t attain one-pointedness. All spiritual discipline has this one-pointedness as its ultimate aim. Therefore, avoid constant adoption and rejection of names and forms of the Lord. One single name must be used throughout for repetition of the name(japa) and meditation. One has also to get the strong conviction that all the Lord’s names and forms are but the name and form that one is repeating. Your chosen name and form must not give the slightest feeling of dislike or disaffection.

 

” மஹா பெரியவா கையில் ஒரு வேல் …” ஒரு பக்தரின் அனுபவம் …

மகா பெரியவா சரணம்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூர் பனஸ்வாடி ‘வேல் பூஜை அன்பர்கள்’ நடத்திய மூன்றாம் ஆண்டு விழா வைபவத்தில் கலந்து கொண்டு அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் (பெங்களூர் அல்சூர் ஏரி அருகே உள்ள ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் திருமடத்தில்) சொற்பொழிவாற்றினேன்.
இரு தினங்களும் திரளான பக்தர்கள் கூட்டம். இந்த நிகழ்வின் இரண்டாம் நாள் வைபவத்தை என் முகநூலில் பதிவிட்டேன். முருக பக்தர்களது உருக்கமான வரவேற்பும் உற்சாகமும் என்னை நெகிழ்வடைய வைத்து விட்டது.
திங்கள் காலை சென்னை திரும்பினேன். அன்று மதியம் திருச்சியில் உள்ள எனது நண்பர் (மங்கள் ஹோம் பில்டர்ஸ்) திரு முரளி அழைத்தார். அவரது ப்ராஜெக்ட் பூர்த்தி ஆகி, வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர், வேல் ஒன்றை பரிசாக அளித்ததாகச் சொல்லி, எப்படி வழிபட வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.
அவராக அன்பளிப்பாக வந்த வேல் பற்றி என்னிடம் ஏன் கேட்க வேண்டும் என்று நான் யோசித்தேன்.
அடுத்த நாளான இன்று காலை பெரியவா அதிஷ்டானம் தரிசனத்துக்காக காஞ்சிபுரம் சென்றேன். அற்புதமான தரிசனம். அதன் பின் ஓரிக்கை சென்றேன்.
ஓரிக்கை பெரியவா திருச்சந்நிதியில் மூலவர் பெரியவா விக்கிரகத்துக்கு முன்னால் திருப்பாதுகைக்கு அருகில் ஒரு சிறிய பெரியவா விக்கிரமம் (இதுதான் அனுஷத்தின்போது தேரில் வலம் வருமாம்). அவர் தோளில் ஒரு சிறு வேல் சார்த்தி இருந்தார்கள். எனக்கு ஆச்சரியம். இதற்கு முன் இந்த விக்கிரகம் என் கண்ணில் பட்டதும் இல்லை. அதுவும் வித்தியாசமாக வேல்!
சனி மற்றும் ஞாயிறில் பெங்களூரில் வேல் பூஜை அன்பர்கள் வைபவம்.
அடுத்த நாள் திங்கட்கிழமை வேல் பற்றி நண்பர் முரளியின் விசாரிப்பு.
நான்காம் நாள் செவ்வாய்க்கிழமை ஓரிக்கை பெரியவாளிடம் ஒரு வேல்.
எனக்கு ஆச்சரியம். தொடர்ந்து வேல்!
ஓரிக்கையில் பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் திரு கணபதியிடம் ‘என்னது… பெரியவாளிடம் வேல் இருக்கு?’ என்று கேட்டதற்கு, ‘வாங்கோ… பிள்ளையார் சந்நிதிக்கு’ என்று கூட்டிச் சென்று பிள்ளையாரிடமும் ஒரு சிறு வேலைக் காண்பித்தார்.
ஆச்சரியம் விடவில்லை.
எனது வேல் அனுபவங்களை நெகிழ்வுடன் அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
ஓரிக்கை கணபதி சொன்னார்: ‘‘பெரியவா கிட்ட வேல் இருக்கிறது பத்தி பலரும் கேக்கலை. உங்களைக் கேக்க வைக்கறார்.
நீங்க எப்படி வேல் அனுபவங்களைச் சொல்றேளோ, அதுபோல்தான் இங்கும். ஓரிக்கை அடிக்கடி வர்ற ஒரு பக்தர் பழநி செல்வதாகச் சொன்னார். அங்கே ஏதாவது வாங்கிண்டு வரணுமா என்று கேட்டார். பழநிலேர்ந்து வேல் வாங்கிண்டு வாங்கோ. பெரியவாளுக்கு சமர்ப்பிங்கோ’ என்று சொன்னேன்.
பழநியில் தரிசனம் முடிந்து அவருக்கு வேல் வாங்கி இருக்கிறார். வேல் வாங்கி வரும்போது (ஒன்றுக்கு இரண்டு வேல் வாங்கி இருக்கிறார்) அவர் ஓட்டி வந்த கார் மிகப் பெரிய விபத்தை சந்தித்து, காரில் இருந்தவர்களுக்கு எந்த வித சேதமும் இல்லாமல், கார் அப்பளம் ஆகியுள்ளது. ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
விபத்தின் அதிர்ச்சியில் இருந்து கொஞ்சமும் விலகாமல், அந்த பக்தர் சிலிர்ப்புடன் வந்து இந்த இரண்டு வேலையும் இங்கே சமர்ப்பித்தார். ‘இந்த வேல்தான் என்னை காப்பாத்தி இருக்கு’ என்று உருகினார்.
அவர் வாங்கி வந்து சமர்ப்பித்த இரண்டு வேல்களில் ஒன்று பெரியவாளிடம்; இன்னொன்று விநாயகரிடம்.
உங்களையும் வேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏதேனும் முருகன் கோயிலுக்குச் சென்று தரிசிக்குமாறு பெரியவா சொல்றார் போலிருக்கு’’ என்று முடித்தார்.
தரிசனம் முடிந்து டிராவல்ஸ் காரில் தாம்பரம் திரும்பிக் கொண்டிருக்கும்போது வாலாஜாபாத் அருகே முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பெரிதாக எழுதி இருந்த வாசகம்:
சக்தி வேல். கூடவே, வேலின் படம் வேறு!
சுவாமிமலைக்குக் கூடிய விரைவில் பயணப்பட வேண்டும்.
எங்கூர் முருகன். எனக்கு ரொம்பவும் பிடித்த ஸ்வாமிநாதன்… குருஸ்வாமி…
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
Source…..Input from my friend Shri. Swaminathan thro mail
Natarajan

” இதோ அந்த அம்மா லக்ஷ போஜனம் செய்திருக்கா ….பல லக்ஷ தீபம் போட்டிருக்கா …”

“ஏதோ ஒரு கோயிலில் லக்ஷதீபம் போட, நீ திரவியம்

கொடுத்திருக்கே. லக்ஷம் தீபத்துக்கு எண்ணெய் – திரி

போட்டு உன்னால் ஏற்றவே முடிந்திருக்காது”

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஓர் ஏழைப் பாட்டி.பெரியவாளிடம் அபார பக்தி.

கையிலிருந்த சொற்ப பணத்தைக் கொண்டு மிகவும்

சிக்கனமாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தாள்.

மடி ஆசாரம் பார்ப்பாள். ஏராளமான பக்தி.

தினமும் பெரியவர் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்வாள்.

கோலம் போடுவாள். தீபம் ஏற்றி வைப்பாள்.

இரண்டு புடவைகள் தான் அவளுடைய ஆஸ்தி.இன்னொரு

புடவை வாங்கக் கூட அந்தப் பாட்டியிடம் பொருளில்லை.

ஒரு பக்தர் அரிசிக் குறுணையும்,வெல்லமும்

பெரியவாளிடம் சமர்ப்பிந்திருந்தார்.அவற்றை நல்லபடியாக

விநியோகம் செய்ய வேண்டுமே?

பாட்டிக்கு பெரியவா உத்தரவு போட்டார்கள்.

“காஞ்சிபுரத்தில் உள்ள எல்லா எறும்புப் புற்றுக்களிலேயும்

கொஞ்சம் கொஞ்சம் போட்டுட்டு வா. அரை ஆழாக்கு

வீதம் போடு…” என்றார்கள்.

அந்தப் பாட்டியும் பக்தி சிரத்தையுடன் அலைந்து திரிந்து,

பல எறும்புப் புற்றுகளில் அரிசிக் குறுணையும்,

வெல்லமும் போட்டு விட்டு வந்தாள்.

அந்த வேலை முடிந்ததும் பெரியவா அந்தப் பாட்டியைக்

கூப்பிட்டார்கள்.

பெரிய மாலை போலத் திரிநூல் இருந்தது.

ஒரு டின் நிறைய எண்ணெய் இருந்தது.

“திரிநூலை கட் பண்ணி ஒவ்வொரு கோயிலுக்காகப் போய்,

எவ்வளவு விளக்குக்குப் போட முடியுமோ, அவ்வளவுக்குப்

போடு.ஒவ்வொரு நாளும் இரண்டு,மூன்று கோயில்களுக்குப் போய் விளக்கேற்றினாலும் போதும்” என்றார்கள்.

பாட்டிக்குப் பரம சந்தோஷம். பரம சிரத்தையுடன் நாள்தோறும் சில கோயில்களுக்குச் சென்று பெரியவா உத்தரவை நிறைவேற்றி வந்தாள்.சில நாட்களில் இந்தக் கைங்கரியம் நிறைவு பெற்றது.அந்தச் செய்தியையும் தெரிவித்தாள் பாட்டி.

பாட்டியின் பணிகள் முடிந்த சில நாட்களுக்குப்பின்,

ஒரு பெரிய மனிதர், ஆடம்பரமாக மடத்துக்கு வந்தார்.

பெரிய மனுஷத் தோரணை, அகங்காரம்.

“ஸஹஸ்ரபோஜனம் செய்துட்டு வந்திருக்கேன்.

லட்சதீபம் போட்டிருக்கேன்…..” என்று தற்பெருமை

தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவாளுக்கு அவருடைய அகம்பாவம் புலப்பட்டது.

தர்ம காரியங்கள் செய்துவிட்டு அதைப் பற்றி பேசிக்

கொள்வது புண்ணியத்தைத் தராது. தர்மம் செய்தவருக்கு

நற்பலன்கள் கிடைக்காமல் போய்விடும்.

வினயத்துடன் சொல்லியிருந்தால் பெரியவா

சந்தோஷப்பட்டிருப்பார்கள். ஆனால்,அந்தப்

பெரிய மனிதர் அகம்பாவத்துடன் பேசினார்.

பெரியவா சொன்னார்கள்.

“இங்கே ஒரு பாட்டி இருக்கா. அந்த அம்மா
0023_zpsf9c90622.jpg

லக்ஷபோஜனம் செய்திருக்காள்.

பல லக்ஷதீபம் போட்டிருக்காள்….”

ஆணவப் பணக்காரருக்கு சற்று திடுக்கிட்டது.

‘யார் அந்தப் பாட்டி…அவ்வளவு பெரிய பணாக்காரி?’

என்று தெரிந்து கொள்ள ஆவல் பிறந்தது.

பெரியவா அந்தப் பாட்டியை அழைத்து வரச் சொன்னார்கள்.

“இவள்தான் அவ்வளவு பெரிய உத்தமமான காரியம்

செய்தவள்…”

அழுக்கான கிழிசல் புடவையைக் கட்டிக்கொண்டு

வந்து நின்ற பாட்டியைப் பார்த்து, பெரிய மனிதர்

அயர்ந்து போனார்.பாட்டியின் நெற்றியிலிருந்த

வெள்ளை வெளேரென்ற திருநீற்றுப் பூச்சு,

அவளுடைய இதய சுத்தத்தை விளாக்கினாற்போலிருந்தது.

பெரியவா சொன்னார்கள்.

“ஸர்வ ஜீவனிலும் பகவான் வியாபித்திருக்கிறார்.

பிரும்மா முதல் பிபீலிகம் (எறும்பு) வரை பகவான்

இருக்கிறார். மனுஷ்யாளிடத்திலும் இருக்கிறார்.

“நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கிறாய்.

ஆனால், இந்தப் பாட்டியோ பல லக்ஷம் ஜீவன்களுக்கு

(எறும்புகளுக்கு) ஆகாரம் போட்டிருக்கிறாள்.

“ஏதோ ஒரு கோயிலில் லக்ஷதீபம் போட, நீ திரவியம்

கொடுத்திருக்கே. லக்ஷம் தீபத்துக்கு எண்ணெய் – திரி

போட்டு உன்னால் ஏற்றவே முடிந்திருக்காது. இந்தப்

பாட்டி, பல கோயில்களுக்குப் போயிருக்கிறாள்.

பக்தி சிரத்தையாய் அகல் வாங்கி,எண்ணெய் ஊற்றி,திரி

போட்டு தன் கையாலேயே ஏற்றியிருக்கிறாள்….”

கேட்டுக் கொண்டிருந்த பிரமுகர் தலைகுனிந்தார்.

பெரியவாளிடம் பவ்யமாகவும்,அகங்காரமில்லாமலும்

பேசவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்.பின்னால்

பல பக்தர்கள் வந்து நிற்பதைப் பார்த்து சற்றே நகர்ந்து

இடம் கொடுத்தார்.

சிறிது நேரம் கழித்து, பெரியவாளே அந்தப் பெரிய

மனிதரைக் கூப்பிட்டு, உட்கார வைத்து,பல சமாசாரங்கள்

பேசி, பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.

அடக்கம் கற்றுக்கொண்ட அவர், ஆனந்தமாகத்

திரும்பிச் சென்றார்

Read more: http://periva.proboards.com/thread/9619/#ixzz3f1lxqqsA

Source….www.periva.proboards.com

Natarajan

 

 

 

 

 

 

 

Message for the Day….” Do Not Waste Money…Do Not Waste Food…Do Not Waste Time…Do Not Waste Energy…Do Not Forget God…”

Sathya Sai BabaI want you to exercise control over five vital things in life. (1) ‘Do not waste money.’ Realize that misuse of money is evil. If you wish to keep a photo of Bhagawan, have only one. Why waste your money on buying too many? (2) ‘Do not waste food.’ Realize that ‘Food is God.’ (3) ‘Do not waste Time.’ Time is God. Time wasted is life wasted. (4) ‘Do not waste energy.’ Understand that when you see, speak, hear, act or think energy is expended. In all these activities do not waste your energies unnecessarily. (5) ‘Do not forget God’, at any moment whatever you may be doing. God is present wherever you may go. He is with you, beside you and around you always. Hence there is no need for you to go to some temple to pray to God. Your heart is your temple. Turn your vision inward and understand the Atmic Principle.

 

” கபிலாரண்யம் ….இப்போ கலிபோர்னியா …” !!!

கட்டுரையாளர்-கணேச சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

30-03-2012ல் போஸ்ட் ஆனது.

கபில முனிவர் இருந்த இடம் அது. இவர் தவம் பண்ணிக்

கொண்டிருக்கையில் இக்ஷ்வாகு வம்சத்து சகரர் என்னும் அரசர்

அச்வமேத யாகம் செய்தார்.

இந்த யாகத்தைச் செய்ய வேண்டுமென்றால்,

முதலில் ஒரு குதிரையை எல்லா தேசங்களுக்கும் அனுப்புவார்கள்.

அதை எந்த அரசனாவது பிடித்துக் கட்டிப் போட்டால் அவனுடன்

யுத்தம் செய்து வென்று, பிறகு எல்லோரும் பாராட்ட இந்த யாகம் செய்யப்படும். பொதுவாக எல்லா அரசர்களும் வம்பு செய்யாமல் அந்தக் குதிரைக்குரிய கப்பம் செலுத்திவிட்டு அரசனைச் சக்ரவர்த்திஎன்று ஒப்புக்கொண்டு விடுவார்கள்.. ஆனால் இந்த யாகத்துக்கு முதலில் இந்திரன்தான் தடங்கல் செய்வான்.

ஏனெனில் நூறு அஸ்வமேத யாகம் செய்து விட்டால் இந்திர பதவி ஒருவனுக்குக் கிடைத்துவிடும்.

தனது பதவி பறி போகாமல் இருக்கும்படிப்

பார்த்துக் கொள்வது இந்திரன் வழக்கம். எனவே அவன் சகரர் விட்டகுதிரையைப் பிடித்துக் கொண்டு போய் பாதாள உலகில்

கபிலர் தவம் செய்யும் ஆஸ்ரமத்தில் கொண்டு யாருக்கும் தெரியாமல்கட்டிவிட்டான். அதைத் தேடிக்கொண்டு வர சகரன் தன் நூறுபிள்ளைகளையும் அனுப்பவே, அவர்களும் எப்படியோ கபிலாச்ரமம்வந்து சேர்ந்து, கபிலர்தான் பிடித்துக் கட்டிவிட்டதாக நினைத்துஅவரிடம் சண்டைக்குப் போனார்கள். அதனால் கோபங்கொண்ட கபிலர் ஒரு முறை முறைத்தார். அவ்வளவுதான்! அங்கு வந்தநூறு பேரும் சாம்பலாகிப் போனார்கள். இது சகரனுக்குத் தெரிந்துஅவன் சென்று கபிலரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அசுவமேத யாகம் செய்து முடித்தானென்பது ராமாயண முன்கதையில்

தெரிகிறது.

அந்தக் கபிலாரண்யம்தான் “கலிஃபோர்னியா” என்று திரிந்து விட்டது.

சாட்சியாக அந்தக் குதிரை கட்டின இடம் இன்றும் HORSE ISLANDஎன்று அழைக்கப்படுகிறது. நூறுபேரும் சாம்பலான இடம் ASH ISLANDஎனப்படுகிறது. இப்படியாகப் பெயர் காரணங்ளை அலசி ஆராய்ந்து

பெரியவா சொன்னால் திகைப்பு அடங்கவே அடங்காது

Read more: http://periva.proboards.com/thread/9584/horse-island-ash#ixzz3eiUQzJd7

Source…www.periva.proboards.com

Natarajan

Message for the Day…” Make Your Conscience Your Guide and Preceptor…”

You come to Puttaparthi to strengthen your relationship with the Divine. Hold on to it firmly. Put into practice at least one thing you learn from here. It is not enough to chant the names of God. God must be installed in the heart. Make your conscience your guide and preceptor. That will promote true devotion. All external paraphernalia will not help you. There are four mottos which all devotees should follow: (1) Avoid bad company (2) Welcome association with good persons (3) Remember always the transient and the permanent, and (4) Ceaselessly engage yourself in meritorious acts. It is through the above that you become good. Remember, the essence of all scriptures is: ‘Help ever; hurt never.’ If the above basic rules are followed, all countries will be happy and peaceful. Like India, every country is a part of the mansion of planet earth. When we have this broad vision, humanity will be one in spirit.

Sathya Sai Baba