The Incredible Story of a Village in Kerala That Gave up Alcohol… For Chess!

In the midst of the recent debate surrounding prohibition in the southern Indian state of Kerala, maybe it’s time once again to talk about the tiny village of Marottichal in Puthur Gram, Thrissur.

In the 60s and 70s, the village had a serious problem with locally-brewed liquor. Too many villagers both brewed toddy and were addicted to it. Over time, this became a source of local suffering. Slowly but surely, though, the villagers realised that the deep rifts caused in their community because of alcohol needed to be healed. In a move that goes to show the extent of their determination (and desperation) to be rid of alcohol, they convinced excise officials to raid their village and put a stop to the brewing.

Often, when the focus of an addiction is removed, the addict simply replaces the object his devotion with another.

How delightful then, that what the residents of Marottichal chose to put their heart in was, of all things — chess.

kerala village chess

mage for representation only. Source: Wikipedia

Over 40 years ago, when the villagers were struggling to cope with the aftermath of their alcoholism, it just so happened that a young man called C. Unnikrishnan was intensely fascinated by Bobby Fischer — the American who became the youngest chess Grandmaster at the at of 16.

After he came across an article about Fischer in a magazine, Unnikrishnan was hooked. He started attending coaching classes to learn chess, then decided that the game was too special to remain a private pleasure; it needed to be popularised. He started giving free lessons at his home to villagers both young and old. Since then, he has trained over 600 people. Today, he runs a restaurant where people can come at any time and play chess.

In a 2012 article, Unnikrishnan had said to The Hindu, “Chess is my passion. Once I start playing, I forget everything. It’s kind of an addiction.”

Funny that he would choose that word.

Today, 90 percent of the residents of Marottichal are chess players. This passion cuts across gender and age — here men and women, children and grandparents all play intense games of chess against each other with equal fervour.

Viswanathan Anand, Grandmaster and five time World Chess Champion, has congratulated the villagers’ effort “to create a rare distinction in the field of chess”. Their prodigious love of the game has also found a place in a 2013 Malayalam movie, August Club.

Source…..Vandita Kapoor in  www.the betterindia.com

Natarajan

 

 

தை பிறந்தால் வழி பிறக்கும்….!!!

பொங்கல் திருநாளை, மகர சங்கராந்தியன்று கொண்டாடுகின்றனர். காரணம், அன்று தான், மகர ராசியில் நுழைகிறான் சூரியன். சங்கராந்தியை, சங்+கராந்தி என, பிரித்து பொருள் காண வேண்டும். ‘சங்’ என்றால், நல்ல முறை; ‘கிராந்தி’ என்றால், மாறுதல்! கிராந்தி என்ற சொல்லே, கராந்தி என மருவியுள்ளது. ‘சங்கராந்தி’ என்ற சொல்லுக்கு, நல்ல முறையிலான மாற்றம் என்று பொருள்.
பொதுவாக, தை மாதம் முதல் தேதியில், மகர சங்கராந்தி வரும். இந்நாளில், வடதிசை பயணத்தை துவக்குகிறது சூரியன். வடக்கு திசையை, ‘குபேர திசை’ என்பர். இதனால் தான், தை முதல், ஆனி வரையுள்ள ஆறு மாதங்களை சுப மாதங்களாக கருதி, திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் செய்கிறோம்.
ஒருசமயம், குந்திபோஜன் என்ற மன்னனின் அரண்மனைக்கு வந்தார் துர்வாச முனிவர். அவர், அங்கு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். அவருக்கு பணிவிடை செய்ய, தன் மகள் குந்தியை அனுப்பி வைத்தான் குந்திபோஜன்.
முனிவருக்கு முறையாக பணிவிடைகளை செய்து, அவரது ஆசியைப் பெற்றாள் குந்தி. முக்காலமும் உணர்ந்த முனிவரான துர்வாசர், வருங்காலத்தில் குந்தியின் கணவன் பாண்டுவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதை, தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். அதனால், மகப்பேறு அளிக்கும், ‘புத்திர லாபம்’ எனும் மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
அந்த மந்திரத்தின் தன்மையை சோதித்துப் பார்க்க விரும்பிய குந்தி, சூரிய பகவானை மனதில் எண்ணி, மந்திரத்தை ஜெபித்தாள். அடுத்த நிமிடம் அவள் முன் தோன்றிய சூரிய பகவான், தன் அம்சமாக ஆண் குழந்தையை, அவளுக்கு அளித்தார். அப்பிள்ளையே கொடை வள்ளல் என்று போற்றப்பட்ட கர்ணன்!
குழந்தை இல்லாத தம்பதியர், இப்பொங்கல் நாளிலிருந்து அடுத்த பொங்கல் வரை தொடர்ந்து சூரியோதய வேளையில் சூரிய வழிபாடு செய்தால், குழந்தை பிறக்க வாய்ப்புண்டு; இதற்காக விரத நியமங்கள் எதுவும் தேவையில்லை.
சூரியனுக்குரிய வாகனம் குதிரை; அதற்கு, ‘சப்தா’ என்று பெயர். ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன. மாதம் ஒருமுறை ராசி விட்டு ராசி மாறி சஞ்சாரம் செய்வது சூரியனின் தொழில். இதனாலேயே இவர், குதிரையை வாகனமாகக் கொண்டுள்ளார்.
சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நாளே, தமிழ் மாத பிறப்பாக உள்ளது.
உலகிலுள்ள உயிர்களுக்கு உணவளிக்கும் கடமை சூரியனிடமே உள்ளது. இதனால் தான், உழவர்கள் அறுவடை முடிந்ததும் கிடைக்கும் முதல் நெல்லை, குத்திய பச்சரிசியால் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து நன்றி தெரிவிக்கின்றனர்.
இந்த தை மாதத்தில், சூரிய பகவான் நம் அனைவருக்கும் நல்வழி காட்டட்டும்!

Source……..

தி.செல்லப்பா  in http://www.dinamalar.com

Natarajan

 

“கம்பீரப் பார்வையும் சிலிர்த்து நிற்கும் திமிலும்: தமிழக மாட்டினங்களின் மரபும் பெருமையும்”

நம்ம ஊர் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அடுத்த கணம் நம் மனதில் தோன்றி மறைபவை துள்ளி ஓடும் காளைகளே. அவை எதுவும் சாதாரணக் காளைகள் அல்ல, கம்பீரப் பார்வையும் மேலெழுந்த திமிலுடனும் சிலிர்த்து நிற்கும் காங்கேயம் காளைகள்.

எந்தச் சந்தேகமும் இல்லாமல் காங்கேயம் காளை, நம் மண்ணின் பெருமிதம்தான். காங்கேயம் மட்டுமின்றி உம்பளச்சேரி, புளியகுளம், பர்கூர் மலை மாடு, தேனி மலை மாடு போன்றவையும் நம் மரபின் பெருமைகளைத் தூக்கிப் பிடிப்பவையே. தமிழ் மண்ணின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஆறு மரபார்ந்த மாட்டினங்களில் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.

மற்ற உள்ளூர் மாட்டினங்களின் நிலையும் மகிழ்ச்சி யடைய வைக்கும் நிலையில் இல்லை. நம்முடைய மாட்டினங்கள் வேகமாக அழிந்துவருவதற்கு, அவற்றின் பெருமைகள் சரியாக உணரப்படாததே முக்கியக் காரணம். உள்ளூர் மாட்டினங்களின் இனப்பெருக்க நடைமுறைகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு ஒருபுறம் கண்மூடித்தனமாக எதிர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் காலம்காலமாகக் கிடைத்துவந்த ஆதரவையும் பராமரிப்பையும் வேகமாக இழந்துவரும் உள்ளூர் மாட்டினங்கள் அழிவை நோக்கி நகர்ந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் காங்கேயம் அருகே குட்டப்பாளையத்தில் செயல்பட்டுவரும் சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி, நம் மாடுகளின் பெருமைகளை பகிர்ந்துகொள்கிறார்:

காங்கேயம்: கம்பீரமும் அழகும்

ஆங்கிலேய கவர்னர் ஒருவர் காங்கேயம் அருகேயுள்ள பழையக்கோட்டை கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, ராவ் பகதூர் சர்க்கரை மன்றாடியாரின் பண்ணையில் இருந்த காங்கேயம் காளைகளைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பண்ணையின் அழகு’ (Beauty of the farm) என்று அவற்றை பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப் பலராலும் பாராட்டப்பட்ட காங்கேயம் மாட்டினமே, தமிழக மாட்டினங்களின் தாய் இனம்.

 

காங்கேயம் காளைகள் சாதாரணமாக 4,000-5,000 கிலோ வண்டிபாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை. எந்தக் காலநிலையையும் சமாளித்து வாழும் திறன் பெற்றவை, உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து வாழக்கூடியவை. எல்லாம் நன்றாக இருக்கும் சூழ்நிலையில் மட்டுமல்லாமல் கடுமையான வெயில், பஞ்ச காலத்திலும் நொடித்துப் போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை.

காங்கேயம் மாட்டினம் என்றாலே காளைகள் மட்டும்தான் என்று நம்புகிறோம். பால் கொடுக்கும் பசுக்களும் காங்கேயம் வகையில் உண்டு. இறைச்சி உண்ணும் நம்முடைய பண்பாட்டில் பாலுக்கான தேவை அதிகமாக இல்லாததால், உழைப்புக்குப் பெயர் பெற்ற காளைகளே பிரபலமடைந்தன.

நமது உள்ளூர் மாட்டினங்கள் உழைப்புக்காகவே பெரிதும் அறியப்பட்டவை. ஆனால், ‘வெள்ளைப் புரட்சி’க்குப் பிறகு உழைக்கும் காளைகளைத் தாழ்வாகப் பார்க்கும் குணம் உருவாகி, இன்றைக்கு அந்தப் பார்வை பெரிதாகப் பரவலாகிவிட்டதே உள்ளூர் மாட்டினங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.

தமிழகத்தில் 1990-ல் 11 லட்சத்து 74 ஆயிரம் காங்கேயம் மாடுகள் இருந்தன. 2000-ல் அது நான்கு லட்சம் மாடுகளாகக் குறைந்து, 2015-ல் ஒரு லட்சம் மாடுகள்கூட இல்லை என்று சொல்லும் நிலைக்குச் சரிந்திருக்கின்றன.

தமிழக மாட்டினங்களின் தாய் இனம், காங்கேயம் என்று கூறப்படுவதற்குக் காரணம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட காங்கேயம் மாடுகள், அந்தந்த பகுதிக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டதால் பின்னர் தனித்தனி மாட்டினங்களாகப் பரிணமித்துள்ளன.

வாழிடம்: கொங்கு, கோவை, கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகள்.

தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.

உம்பளச்சேரி: உறுதிமிக்க கால்கள்

உம்பளச்சேரி மாடுகள் குட்டையானவை என்றாலும், கால்கள் மிகவும் உறுதியானவை. காவிரி பாசனப் பகுதி வயல்களில் உழ வேண்டுமென்றால், ஆழமான சேற்றில் மாடுகள் இறங்கியாக வேண்டும். அதற்கு ஏற்ப சிறந்த தகவமைப்பைப் பெற்றவை உம்பளச்சேரி மாடுகள். நன்கு உழக்கூடிய இவை, தஞ்சை டெல்டா பகுதியில் பரிணமித்தவை.

வாழிடம்: தஞ்சை, திருவாரூர், நாகை எனப்படும் பழைய தஞ்சை மாவட்டம்.

பர்கூர் மலை மாடு: கெட்டியான குளம்புகள்

இதற்கு செம்மறை என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த மாட்டினத்தின் பாதங்களை வலுப்படுத்துவதற்கு லாடம் அடிக்கத் தேவையில்லை. அவற்றின் குளம்பே லாடத்தைப் போல கெட்டியாகவும் உறுதியாகவும் இருக்கும். காட்டில் அதிகம் மேயக்கூடிய மாட்டினம் இது. மத்திய அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டத்தைத் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் இன்னும் சட்டமாக ஏற்றுக்கொண்டு அறிவிக்காததால், இந்த மாட்டை வைத்திருக்கும் பழங்குடிகள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். வயலில் பட்டி போடுவதற்காக இந்த மாட்டினம் அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

வாழிடம்: ஈரோடு, அந்தியூர் 

புளியகுளம்: நிலம் காக்கும் பட்டி மாடு

புளியகுளம் மாட்டின் பெயரே ‘பட்டி மாடு’தான். ‘நிலம் தரிசாதல் அதிகரித்துவருகிறது என்றும், அதைத் தடுக்கும் சக்தி ஆடு-மாடு பட்டி போடுதலில் அடங்கியிருக்கிறது’ என்றும் குறிப்பிடுகிறார் ஸிம்பாப்வே சூழலியலாளர் ஆலன் சேவரி. ஒரு வயலில் ஒரு நாள் இரவு முழுக்க ஆடு அல்லது மாடுகளைப் பட்டிபோட்டுத் தங்கவைப்பதால் அவற்றின் சிறுநீர், புளுக்கை, சாணம் போன்றவை நிலத்தில் விழும்.

இயற்கையான, இந்த உடனடி உரம் மூலம் நிலம் வளமாகும். புளியகுளம் மாடு பட்டிபோட்டால் மூன்று ஆண்டுகளுக்கு உரம் தேவையில்லை என்கிறார்கள். பட்டி போடுபவருக்கு ஒரு மாட்டுக்கு ரூ. 10-ம், ஆட்டுக்கு ரூ. 5 ம் கிடைக்கிறது. கேரளப் பகுதியில் இயற்கை வேளாண் முறையில் மேற்கொள்ளப்படும் திராட்சை சாகுபடிக்குப் புளியகுளம் மாடுகளே பேருதவி புரிந்துவருகின்றன. ஜல்லிக்கட்டிலும் இந்த மாட்டினம் அதிகமாக ஈடுபடுத்தப்படுகிறது.

வாழிடம்: புளியகுளம், சிவகங்கை, பழைய மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகள். தேனி பகுதியில் இருப்பது தேனி மலை மாடு.

காங்கேயம் பசு (பெண் மாடு) கன்றுடன் - காங்கேயம் காளையுடன் கார்த்திகேய சிவசேனாபதி

காங்கேயம் பசு (பெண் மாடு) கன்றுடன் – காங்கேயம் காளையுடன் கார்த்திகேய சிவசேனாபதி

பர்கூர் மலையினக் காளை

பர்கூர் மலையினக் காளை

கம்பீரம் நிறைந்த காங்கேயம் காளை

கம்பீரம் நிறைந்த காங்கேயம் காளை

வண்டியிழுக்கும் உம்பளச்சேரி காளைகள்

வண்டியிழுக்கும் உம்பளச்சேரி காளைகள்

புளியகுளம் மாடுகள்

புளியகுளம் மாடுகள்

தொடர்புக்கு: 04257 294234, 96295 28888
‘தி இந்து’ 2016 பொங்கல் மலரில் வெளியாகியுள்ள படத்தொகுப்பின் ஒரு பகுதி

Source……தொகுப்பு: ஆதி  in http://www.tamil.thehindu.com

Natarajan

inspiring lessons to be learnt from street food vendors……….

Before starting a new company, perhaps you should visit your nearest food stall for some quick inspiration. Here’s why.

As I travel across Bangalore and other cities attempting to discover interesting street food and local eateries, I am often struck by the creativity, innovation, and business sensibilities that some of the owners exhibit.

From humble tea stalls catering to actors and politicians to trained fine dine chefs, many owners bring extensive knowledge and an inspiring spirit of entrepreneurship to their eateries.

Here are some of these inspiring stories and what they’ve taught me.

#1. Don’t let the world dictate what you can do

Sharon Tea Stall

Daniel D’souza, the owner of Sharon Tea Stall in Bangalore, didn’t want to run just another tea stall.

So he decided that there was no reason why the more exotic teas should be available only in fancy tea parlours and out of the reach of an everyday person on the road.

Sharon Tea Stall in Indira Nagar is a full-fledged tea parlour in the garb of a small street-side shack that serves a wide variety of interesting teas.

No wonder then that his clients include actors and politicians from across the state, something he proudly displays through photographs at the tiny stall.

Try stuff that hasn’t been done before even if you’re unsure of succeeding.

#2. Do something unexpected. Then expect it to create stickiness

Simple creative differentiators can be used to transform products from also-rans to pack-leaders, and often a small tweak within existing boundaries can result in starkly different products that are bound to attract attention.

One momo vendor decided that plain white momos are passe.

So she transformed them into colourful bites using natural food extracts from beetroots, carrots and spinach. Now that’s creative!

Momos

3. Where there’s a will, there’s a way

A vendor selling sundal, the popular South Indian snack made with chickpeas, wanted to ensure that the food is both moist and steaming hot. Not an easy task to achieve, given the push-cart he was selling out of.

So he built a simple section below the cart to house a pot of water on a stove. The steam from the boiling water comes up through the holes on the cart platform.

When a customer draws up, he simply spoons the required quantity of sundal onto the holes so that it is infused with steam making it moist and piping hot.

A similar example is of a chicken seekh kebab stand at 27th Main Road, HSR Layout.

Here’s a photo shot of the crank-shaft-operated open grill that he conceptualised to keep the coals fired. Indian jugaad at its best!

Crank shaft operated open grill

#4. Limited variety, unbeatable quality

Just recently, I was introduced to small bhajji or pakora vendor in a popular market in Gandhi Bazaar, Bangalore.

He sells a simple variety of bhajjis made out of capsicum, raw bananas, potatoes and green peppers.

At the cost of pricing his bhajjis 50 per cent above market rate, the vendor, Praveen ensures that he only uses the best vegetables.

Each of the bhajjis is the same size and each vegetable he uses is fresh.

That’s also the case with many other street food vendors — they do not compromise on quality, which explains why they have stayed popular for decades.

#5. Service with a smile, always

Ravi

With the crowds that Ravi’s Gobi van attracts, it could be easy to be a little impatient at times.

But the one thing that regular customers love about Ravi (pictured above), apart from the delectable Chinese fare he churns out of his food van at one corner of the Banashankari BDA complex in Bangalore, is his constant smile and polite demeanour even when he is answering irate customers.

A perfect example of winning service orientation.

#6. Apply existing concepts differently

Who said pizzas are to be eaten only in fancy chains or that soup can be had only at sit-down restaurants?

Kumar, an erstwhile chef with Little Italy, has designed a pizza van which sees regular crowds relishing pizzas and garlic bread.

Meanwhile Vallarmati serves three different soups everyday complete with condiments, from her simple soup cart in HSR Layout, Bangalore.

#7. Choose a niche and be the expert in it

 

Revathy, a food and nutrition student, realised that street food hardly catered to people with health issues such as diabetes.

So she developed special recipes using sprouts, green gram and bitter gourd

which she retails from her small eatery in Malleshwaram, Bangalore.

Recipes with sprouts

8. Build something that customers love. And then sit back to enjoy it. More is not always better

This was a recurrent theme across Goa where work takes on a different meaning altogether and living a good life is about having the bandwidth to do the things one enjoys and spending time with friends and family.

Many a popular eatery owner makes a well thought through choice about business hours and expansion keeping this in mind.

The author Maheima Kapur is founder and CEO of Talking Street, a start-up that helps find the best street and local food in different cities. She was earlier with Unilever and Tata, and studied at IIM-B and SSSIHL. She can be followed on Twitter at @maheima

Source……..Maheima Kapur….in http://www.rediff.com

Natarajan

ஜனவரி 8 1994….பெரியவா மஹா சமாதி அடைந்த நாள் …

1994 ஜனவரி 8 ஆம் தேதி ஐயன் மஹா சமாதி அடைந்த பின், வெளி வந்த ஆனந்த விகடனில், அப்போது தொடராக வந்து கொண்டிருந்த ‘அன்பே அருளே’ கட்டுரையின் 8 ஆவது அத்தியாயம். ஸ்ரீ பரணீதரன் மாமா அவர்கள் கைவண்ணம்…

சாக்கியர் கூத்தை பற்றி தொடர்வதற்குள் ஒரு பிரளய கால ஊழிக்கூத்தே நடந்து முடிந்து விட்டது.

நூற்றாண்டு பிறந்த தின வைபவமாக கடந்த மே மாதம் கனகாபிஷேக காட்சியருளி, கோடிக்கணக்கான பக்தர்களின் நெஞ்சங்களை குளிர்வித்த பெரியவா, ஒரே நொடியில் தமது சரீர உடையை உதறிவிட்டு நம் கண்ணிலிருந்து மறைந்து விட்டார்.

1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி – சனிக்கிழமை பிற்பகல் 2.58 மணிக்கு துவாதசியன்று பெரியவா மகா சமாதி அடைந்து விட்ட செய்தி ஊரெங்கும், நகரங்கள் என்றும், கிராமங்கள் தோறும், நாடு முழுவதும், உலகம் பூராவும், எட்டி விடுகிறது. கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்கள் பதறி துடித்தன. கண்ணீர் பொங்கி பொங்கி பெருகியது. பாசத்தை வளர்த்து கொண்டு விட்ட பக்தர்கள் குமுறி குமுறி அழுதார்கள்.

‘பெரியவா என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டாளே…’

‘திடீர்ன்னு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரே…’

‘இனிமே பெரியவாளை தரிசனம் பண்ண முடியாதே..அந்த கருணை வடிவத்தை காண முடியாதே…அன்பு சிரிப்பை பார்க்க முடியாதே… அமுத பேச்சை கேட்க முடியாதே…’

அப்பா அம்மா போனப்ப ஆறுதலுக்கு, பெரியவா கிட்டே ஓடி வந்தேன். இப்ப பெரியவாளே போயிட்டாளே யாருகிட்டே போவேன்?

‘பெரியவாளுக்கு முன்னாலே நான் போயிடணும் ன்னு பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தேன். என்னாலே யாருக்கு என்ன பிரயோஜனம்?

பெரியவா இருந்தா உலகத்துக்கே க்ஷேமமாச்சே…’

‘நான் கொடுத்து வெச்சவன் சார், பெரியவா மௌனவிரதம் ஏற்பதற்கு முன்னே ஒரு நாள் தரிசனத்துக்கு போயி இருந்தேன். நிறைய பேசினார் அமோகமா அனுக்கிரகம் பண்ணினா…இப்படியே பேசாம ரொம்ப நாள் உக்காந்திருப்பார் ன்னு நெனைச்சனே… மோசம் போயிட்டேனே…’

‘பெரியவாளை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாதே..நாற்பது வருஷமா பெரியவா கூட இருந்து தொண்டு பண்ணினேன்…எவ்வளவு பேசி இருக்கா…ஒரு தரம் என்னை கோவிச்சிண்டுட்டா…ஏண்டா, உன்னை ரொம்ப கோவிச்சிண்டுட்டேனா? வருத்தமா இருந்ததா ன்னு அடுத்த நிமிஷமே குழந்தை மாதிரி விசாரிச்சாளே…எப்பு கோவிச்சிக்க இப்ப பெரியவா இல்லியே…’

‘பெரிய எசமான் உள்ளே படுத்துண்டு இருக்காங்க ன்னு ஒரு தைரியம் இருந்துதுங்க. எட்டி பார்த்தா அவங்க இருக்க மாட்டாங்களே…’

‘தெய்வம் என்னை தனியா விட்டுட்டு போயிடுச்சுங்க…உலகமே இருளோன்னு இருக்குதே..’

இப்படி பல்வேறு தரப்பட்ட பக்தர்கள் கதறி கதறி தீர்த்துவிட்டனர். தன் தாய், தந்தை, குழந்தை, நெருங்கிய உறவினர் இவர்களை இழந்து விட்டவர்கள் போல் என்னிடம் தேம்பி தேம்பி அழுதனர். என் சொந்த துயரத்தை உள்ளடக்கி பொங்கிய கண்ணீரை தேக்கி நிறுத்தி, அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றிக்கொண்டு இருந்தேன்.

என்னால் தேற்ற முடியாமல் போனது அந்த ஆறு வயது சிறுமியைத்தான்.

‘எனக்கு மூணு வயசு இருக்கறப்போ பெரியவா கல்கண்டு கொடுத்தா. அதுக்கப்பறம் பெரியவாளை நான் பார்க்கவே இல்லை. அழைச்சிண்டு போ ன்னு அப்பா கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அழைச்சிண்டு போகலே. இப்போ சாமி கிட்டே போயிட்டாரே.நான் இனிமே பெரியவாளை எப்படி பார்க்கிறது?’ என்று அந்த சிறுமி கண்கலங்கிய போது, எப்படி தேற்றுவது என்று கலங்கி போனேன் நான்.

ஜனவரி முதல் தேதியன்று பத்து நிமிடங்கள் மட்டுமே பெரியவா தரிசனம் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு பொது தரிசனமே இல்லை. உடல்நிலை சரியில்லை. வைத்தியர்கள் அருகிலேயே இருந்து தேவையான சிகிச்சைகள் அளித்து கொண்டு இருந்தார்கள்.

8-ஆம் தேதி சனிக்கிழமை அன்று உடல் நிலை தேறியது. ஈச்சங்குடியில் வாங்கியுள்ள பெரியவாளின் பூர்வாச்ரம தாயாரின் இல்லத்தில் வைப்பதற்காக தயாரான அப்பா அம்மா படங்கள் அவரிடம் காட்டப்பட்டது. அதை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தார்.

பாலுவிடம், ‘நீ கலவை பார்த்திருக்கியோ அங்கே போயிருக்கியோ?’ என்று கேட்டிருக்கிறார்.

எதற்கு திடீர் என்று கலவையை நினைத்துக்கொண்டாரோ?

யாரோ ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். ‘சௌக்கியமா இருக்கேளா?’ என்று உரத்த குரலில் கேட்டிருக்கிறார்.

‘பெரியவாளோட பழைய குரல் மாதிரி இருந்தது. எங்களுக்கெல்லாம் ஆச்சிரியமாக போய்விட்டது…’ என்றார் திருக்காளாவூர் ராமமூர்த்தி.

‘பிரும்ம ஸ்ரீ சாஸ்த்ரிகள்’ என்று பெரியவா பெயரிட்ட வேதபுரியை பார்த்து ‘கையில் என்ன?’ என்று கேட்டாராம். ‘பெரியவாளோட மரக்குவளை…அலம்ப எடுத்துண்டு போறேன்…’ என்று பதில் கூறி விட்டு போயிருக்கிறார்.

பெரியவா சாதாரணமாக இருப்பதை அறிந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிக்ஷையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். பிறகு படுக்க வைத்து இருக்கிறார்கள். அரை நொடியில்…அனாயாசமாக அப்போது மணி 2.58…

அல்லும் பகலும் ஒவ்வொரு கணமும் கண்ணிமை போல் பாதுகாத்து வந்த திவ்ய சரீரத்தை பார்த்து கதறி தீர்த்து விட்டார்கள் அந்த புண்ணியசாலிகள். மஹா சுவாமிகளுக்கு கைங்கர்யம் செய்தவர்கள் அத்தனை பெரும் பாக்கியசாலிகள். யார் பெயராவது விட்டு போய் விடுமோ என்பதால் அவர்களது பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.

அன்று மதியம் இரண்டரை மணி அளவில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பால சுவாமிகளுடன் தாம்பரம் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று வர, பெரியவாளிடம் உத்தரவு பெற்று சென்றதை கண் கலங்கியவாறு கூறினார். சென்னைக்கு செய்தி சென்று, தாம்பரத்தை அடைவதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டு, இரு சுவாமிகளும் மாலை ஐந்து மணியளவில் ஸ்ரீ மடத்துக்கு வந்திருக்கிறார்கள்.

துறவியேனும் நாற்பது ஆண்டு கால தொடர்பின் பின்னணியும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நினைவில் அலைமோத ஸ்ரீ ஜெயேந்திரர் நெஞ்சம் குமுறி கண்ணீர் வடித்ததில் வியப்பென்ன? ஒப்புயர்வற்ற குருவின் உபதேசம் பெற்றதற்கும், பிரம்ம ஞானியிடம் பாடம் பயின்றதற்கும், மகானிடம் அறிவுரை கேட்டதற்கும் முற்பிறவியின் நற்பேறு அன்றோ காரணம் என்ற நன்றி கண்ணீர் அல்லவா அது!

அத்தருணம் உள்ளத்தில் எழுந்த சிந்தனைகள் எல்லாம் கூற முடியாமல் துயரமே உருவாக சோகமே வடிவாக அமர்ந்திருந்தாலும் – மறுநாள் நடக்க வேண்டிய சடங்குகளில் தீவிர கவனம் செலுத்தி, பக்தர்களிடம் ஆணைகள் பிறப்பித்துக்கொண்டு இருந்தார்.

பால சுவாமிகள் அங்கும் இங்கும் எங்கும் காணப்பட்டார். ஒரு கணம் தரிசித்து ஆறுதல் பெற காத்திருக்கும் பக்தர்களை சந்தித்தவாறே, தேவையான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தார்.

என்னை கண்டதும் தனியே அழைத்து சென்று, ‘ஏமாந்து போயிட்டோம்…இன்னிக்கு நன்னா தான் இருந்தா. பேசினா, சிரிச்சா, பிக்ஷை பண்ணினா…தைரியமா இருந்தது. தாம்பரம் போயிட்டு வந்துடலாம் ன்னு புறப்பட்டோம்…எதிர்பார்க்காம சேதி வந்தது.’என்று நடந்தவற்றை கூற தொடங்கினார். நடந்து சென்றவாறே ஒருவருக்கு கையசைப்பு, ஒருவரை அருகில் வரசொல்வது, இன்னொருவரை பார்த்து, ‘ஒ, வந்திருக்கேளா?’ என்று கேட்பது. ‘உங்களுக்கு எப்போ தெரியும்?’ என்று பரிவுடன் விசாரிப்பது…’பிருந்தாவன வேலை வேகமா நடந்து கொண்டு இருக்கிறதா?’என்று பார்வையிடுவது… பம்பரமாக சுற்றி சுழன்று கொண்டிருந்தார் பால பெரியவர்.

பக்தர்கள் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது. வேகமாக நகர்ந்த க்யு இரண்டு கிலோ மீட்டர் வரை நீண்டது. வெகு விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவலர்கள் பணி போற்றத்தக்கதாய் இருந்தது.

மேடையில் பெரியவாளின் திருமேனி ஒளிர்ந்து கொண்டு இருந்தது. நான்கு ஆண்டுகளாக நாம் கண்ட தரிசனம். ஒரே ஒரு வித்தியாசம்…எவ்வித அசைவும் இல்லை…மூலவராகிவிட்ட நிலையில், தெய்வீக சாந்நித்யம் நிலவியது. சுற்றிலும் மடத்து சிப்பந்திகள். அவ்வப்போது, இரு சிஷ்ய சுவாமிகளும் வந்து உடனிருந்தார்கள்.

எதிரில் நகர்ந்த க்யூ வில் கும்பிட்டவர்கள், குமுறி அழுதவர்கள், கன்னத்தில் போட்டு கொண்டவர்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள், இஸ்லாமிய பெருமக்கள், கிறிஸ்துவ சகோதர-சகோதரிகள், வெளிநாட்டினர், பல சமயத்தினர், பல மொழியினர் பொது வாழ்வில் பலதுறை சேர்ந்தவர்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், தள்ளாடும் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர்…

ஒரு புறம் ஒலிப்பெருக்கியில் ‘ஜெய ஜெய சங்கர…ஹர ஹர சங்கர…’கோஷம், நாம சங்கீர்த்தனம், பக்தி பாடல்கள், தேவாரம், திருப்புகழ், சகஸ்ர நாம பாராயணம், வேத முழக்கம்…. மேடை நிரம்ப மணம் பரப்பும் மலர் கொத்துக்கள், வாசனை திரவியங்களின் புகை மண்டலம்…தேவலோக சூழ்நிலை…

பன்னிரண்டு மணிக்கு மேல் மகாபிஷேகம் தொடங்கியது. பிரதம சீடர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள், குருவின் திருமேனிக்கு முறைப்படி அபிஷேக, அர்ச்சனைகள் செய்வித்து, தூப தீப கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டது, ஆலயம் ஒன்றில் சிவபூஜை நடைபெற்றது போன்ற உணர்வை தோற்றுவித்தது.

இறுதியாக நான்கு மணியளவில் பிருந்தாவன பிரவேச ஊர்வலம் புறப்பட்டு அருகிலிருந்த மாளிகைக்குள் சென்றது.

வெளியே இருந்தவர்களுக்கு புனித திருமேனியின் கடைசி புண்ணிய தரிசனம் அதுவே

Read more: http://periva.proboards.com/thread/10890/06-01-2016/#ixzz3wZpAMVSV

Source…….www.periva.proboards.com

Natarajan

 

 

 

“Periva’s Miracles- Always race with the time-Living example “

Periva’s Miracles- Always race with the time-Living example 

I wish to inform to the members of Periva forum, devotees of Maha Periva and readers of my post that my son, who is at Australia with his family, has reached Chennai after floods on 10th of this month. (December 2015). This is his annual visit to Chennai to take care of us every year.

After a couple of days, my only son Mr.Bharath and his wife Sow. Lakshmi wanted to go out for lunch to some good hotel along with me and my wife. I should make special mention about my small family members and their unmatched character and attitude in a short statement.

 My only son Mr.Bharath, who Exemplify the relation-ship between parents and children and we are fortunate enough to have a son like Bharath.

 My only daughter in law Sow. Lakshmi not only Lakshmi by name but Goddess Lakshmi in real sense to our sweet home.

 We are also blessed with a granddaughter by name Kriti who equals all aishwaryam to our sweet home.

Thanks to Periva’s Grace. 

We all started, on 13th December 2015 (Sunday) after noon at 12.00 Noon and reached a well reputed and posh star hotel. We all had nice time and very good lunch. The occasion was like a get together of our family after two years. All possible selfee were taken and we could reach home at 4.00 P.M. As everyone was tired, we all retired for sleep at 9.00 P.M.

Next day morning, my son got up from sleep and he was not comfortable. He was complaining of nausea and vomiting along with stomach pain. The excruciating pain was escalating every second and he said that that the pain was unbearable and he did not feel like having his Tiffin.

The pain was too much at 8.45 A.M. Myself and my wife were mentally disturbed and we did not know what to do. I am also a paralytic stoke patient and could not go out to reach any doctor. I immediately went to Maha Periva and prayed for my son’s sufferings. I prayed and took some “Vibhuti” from Maha Periva and put some Vibhuthi in my son’s mouth and applied little on his forehead also.

He slept for 10 minitues and exactly at 9.00 A.M. he came to kitchen and asked me to prepare doshas for him. I enquired about his stomach pain and he said that he is relieved of all sufferings including stomach pain. Absolutely, no traces of pain or any sufferings from 9.00 A.M, thanks to Maha Periva for HIS instant reply to my prayer.


I am sure that the experience of mine in my son’s case is a living example for the devotees of Maha Periva. Our faith on Periva never let us down in problems and crisis. Still HE is living among us and take care of devotees at all times.

What a way Maha Periva gave relief to my son. The treatment of Maha Periva is always very much clinical in nature. Even medicines may take some time to give relief or cure a disorder But Maha Periva’s blessings out beat even time.

Periva’s blessings are always  
Racing with the time, 
In serving the devotees needs. 

Read more: http://periva.proboards.com/thread/10884/periva-miracles-race-living-example#ixzz3wZkSJ99X

Source..

Gayathri Rajagopal in http://www.periva.proboards.com

Natarajan

 

Meet Pranav Dhanawde – the kid who scored 1009 runs in one innings !!!

Pranav

His mother Mohini Prashant Dhanavde was in tears when Pranav scored 1000. “I would have never imagined that my son would make a world record. I remember scolding him so that he would concentrate on his studies more than cricket,” she said.

“My next goal is to be selected for under-19,” says 15-year-old Pranav Dhanawde who created a world record by scoring 1009 runs in 323 balls. The match was held between KC Gandhi School and Arya Gurukul School in which the later team scored 52/9 in 14.5 overs and KC Gandhi scored 1465/3 wickets in 94 overs.

The match was part of the under-16 Bhandari Trophy Inter-School Tournament organised by Mumbai Cricket Academy. On the first day, Pranav scored 652 not out in 199 balls and played for 5 hours on Kalyan’s Wayle Nagar’s Union Cricket Academy.

Pranav’s father Prashant Dhanawde who is an auto driver could not contain his joy. “Although I drive an auto, I have never stopped my son from achieving success. Last night when he broke world record by scoring 652, he told me that next day he will score 1000 and he did it,” said Prashant.

“I am fortunate to have parents who have understood my dream and supported me. Yesterday, I had not think about making a world record but as I completed 500 runs, I became more confident. Now, I want to get selected for under-19 team,” said Paranav Dhanavde. Pranav’s coach Harish Sharma said: “He is always focussed and a hard-hitting batsman. He was on 6th position but I decided to make him the opening batsmen and he didn’t prove me wrong.”

“Congrats #PranavDhanawade on being the first ever to score 1000 runs in an innings. Well done and work hard. You need to scale new peaks!” tweeted Sachin Tendulkar. Dhanawade, who opened the innings against Arya Gurukul School, had gone past Arthur Collins’ 628 not out, the previous highest in minor cricket scored in 1899 in England, on Monday. The son of an autorickshaw driver, Dhanawade had also gone past the highest individual score by an Indian in minor cricket, a record previously held by Prithvi Shaw who scored 546 in the Harris Shield in 2013-14.

Source……..www.dnaindia.com

natarajan

South India Looks Spectacular from Space. As Proved by These Tweets from the ISS…..

Selected specially for a year-long mission, American astronaut Scott Kelly has been on the International Space Station (ISS) since March 2015. Early this morning, as the ISS was passing above the Indian coast, he posted some mind-bendingly beautiful photos of South India.

Here it is (here’s what we look like) from space. SPACE, you guys.

A rare glimpse of beautiful South ! from

Embedded image permalink

  1. Sandy and green on the South coast.

    Embedded image permalink

    1. The Southern tip of and its blue waters.

      Embedded image permalink

      SPECTACULAR.

      Source……..www.the betterindia.com

      Natarajan

” வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் …”

நவராத்ரிக்கு முந்தின வாரம். பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு தம்பதிகள், தங்கள் ஐந்து வயதுக் குழந்தையோடு வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.
“பெரியவாகிட்ட ஒரு ப்ரார்த்தனை… கொழந்தைக்கு விஜயதஸமியன்னிக்கி அக்ஷராப்யாஸம் பண்ணணும்… நவராத்ரி டைம்-ங்கறதால ஆத்தை விட்டு வரது கொஞ்சம் கஷ்டம்… கொழந்தை நன்னா படிச்சு, நன்னா வரணும்…. அதுக்கு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்…”
பெரியவா தன் முன்னால் அப்பா, அம்மாவைப் போலவே கை கூப்பிக் கொண்டு, அம்மாவையும், தன்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்கும் குழந்தையை கடாக்ஷித்தார்…
“பெரியவாளோட திருவாக்கால, கொழந்தைக்கு எதாவுது வார்த்தை சொல்லித் தரணும்….”
“இங்க வா……”
‘ஸரஸ்வதி’ அழைத்தாள்!
“நா…..சொல்றதை திருப்பி சொல்றியா?…”
“சொல்றேன்..உம்மாச்சி தாத்தா!…”
“சொல்லு….வாக்குண்டாம்!…..”
“வாகுந்தாம்…..”
“நல்ல மனமுண்டாம்”
“நல்ல மனமுந்தாம்”
“மாமலராள் ….”
“மாமலரால் ..”
“நோக்குண்டாம்….”
“நோக்குந்தாம்..”
“மேனி…”
“மேனி..”
“நுடங்காது….”
“நுங்காது…”
“பூக்கொண்டு…”
“பூக்கொந்து…”
“துப்பார்….”
“துப்பார்….”
“திருமேனி……”
“தியுமேனி….”
“தும்பிக்கையான் பாதம்”
“தும்பிக்கியான் பாதம்”
“தப்பாமல்…”
“தப்பாமல்”
“சார்வார் தமக்கு….”
“சார்வார் தமக்கு….”
குழந்தைக்கு கொள்ளை ஸந்தோஷம்! உம்மாச்சித் தாத்தா சொன்னதை, தான் அப்படியே ‘கரெக்டாக’ சொல்லிய பெருமை!
“வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது….
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு!…..”
“….ஒனக்கு ஔவைப்பாட்டி தெரியுமா?…”
“தெரியும் தாத்தா!…”
“இது….ஔவைப்பாட்டி பாடினது….தெரியுமோ? தெனோமும் சொல்லு….நன்னா படிப்பே!…”
“செரி…தாத்தா!…”
வாய்க்கு கல்கண்டும், ஞானக்கல்கண்டு மலையிலிருந்து உண்மையான நல்லறிவுக்கு கல்கண்டும், குழந்தைக்கு கிடைத்தது!
அப்போது அங்கே சில தமிழ் அறிஞர்களும் இருந்தார்கள். பெரியவா, ஸமஸ்க்ருதத்தை மட்டுந்தான் போஷிப்பார்; ஆதரிப்பார்; என்ற தவறான கருத்து அப்போது பரவியிருந்ததால், இந்த பெற்றோர் வந்து அக்ஷராப்யாஸம் செய்து வைக்க வேண்டி, பெரியவாளிடம் ப்ரார்த்தனை செய்ததும், அங்கிருந்த தமிழ் அறிஞர்கள் எதிர்பார்த்தது…..
“மூஷிக வாஹன மோதகஹஸ்தா…..” என்ற ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தைத்தான்! ஆனால், அத்தனை மொழிகளுக்கும் ஆதார ஶக்தியான ‘ஸரஸ்வதி’க்கு மொழி பேதம் ஏது?
“வாக்குண்டாம்…..” என்று பெரியவா ஆரம்பித்ததும், அவர்களுக்கு ஆஸ்சர்யம்! ஸந்தோஷம்!
“பெரியவா கொழந்தைக்கு மட்டும் உபதேஸிக்கல……எங்க எல்லாருக்குந்தான் இந்த அருமையான உபதேஸம்! இனிமே எங்க வீடுகள்ளயும், வாக்குண்டாம்-தான் மொதல் பாடம் !…”
உண்மைதான்! இன்றைய கல்வியறிவு “வாக்குண்டாம்……” ஸ்லோகத்தில் சொல்லிய ஏதாவது ஒன்றையாவது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தந்திருக்கிறதா? என்று மூளையை குடைந்து குடைந்து யோஜித்தாலும், “இல்லை” என்றுதான் ஸத்யமான பதிலாக வரும். இது பெரியவா நம் அத்தனை பேருக்குமே அனுக்ரஹித்த அக்ஷராப்யாஸம்!
இந்த புது வர்ஷத்தில், நல்ல, உயர்ந்த ஸத்யமான வார்த்தைகள், நல்ல தர்மங்களை எடுத்துக் கொண்டு கடைப்பிடிக்கும் தாராள மனது, இந்த ரெண்டையும் அனுக்ரஹிக்க “ஜகத்குரு” காட்டிய விக்னேஶ்வர மூர்த்தியின் பாதங்களை பணிவோம். குழந்தைகள் இதை தினமும் சொல்லி வந்தாலே, மனஸும் ஶுத்தமாகும், அதனால் வாக்கும் ஶுத்தமாகும், தெளிந்த நல்லறிவும் உண்டாகும்.
Source…input from a friend of mine
Natarajan

” பீடுடைய மாதம்- மார்கழி!’….

மாதங்களில் நான் மார்கழி என்று மாதவனால் பெருமை பெற்று மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மார்கழி மாதம். தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயனம் என்றும் இரவை தட்சிணாயனம் என்றும் அழைப்பார்கள். இவ்வாறு பார்க்கும்பொழுது மார்கழி மாதம், தேவர்கள் விழிப்பதற்கு ஆயத்தமாகும் விடியற்காலை நேரமாகிறது. அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் என்கிறோம். இந்த மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தெய்வத்தை வணங்கினால் நோய் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கையாகும். அதனாலேயே இம் மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுவது என்பது வழக்கமான நடைமுறையில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஒரு அறிவியல் காரணமும் உண்டு.

மார்கழியில் அதிகாலைப் பொழுதில், (4.30 மணி முதல் 6.00 மணி) வளி மண்டலத்தில் தூய்மையான ஒசோன் படலம் பூமிக்கு மிகத் தாழ்வாய் இறங்கி வருகிறது. ஓúஸôன் என்பது அடர்த்தியான ஆக்ஸிஜனாகும். அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது. ஆகவே அதன் பலனைப் பெற இம்மாதத்தில் பெண்களை காலையில் கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் என்று அறிவியலார் கூறுகின்றனர்.

மார்கழி மாதத்தை சூன்ய மாதம் என்பர். சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும். லௌகீகங்களுக்காக இல்லாமல், ஆன்மீக நிகழ்வுகளுக்காக மட்டுமே என்று இம்மாதத்தை முன்னோர் ஒதுக்கி வைத்தார்கள். நமது உடலையும் உள்ளத்தையும் நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு உரிய மாதம் மார்கழி மாதம். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

சிவபெருமான் உண்ட நஞ்சை அவர் கண்டத்திலேயே தடுத்து, அந்த நஞ்சு அவரைத் தீண்டா வண்ணம் காத்த கார்த்யாயனியை வேண்டி தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரை அன்று விரதமிருக்கிறார்கள். இதையே பாகவதம் மார்கழி மாதத்தில் ஆயர் மகளிர் கார்த்தியாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள் என்றும் கூறுகிறது. கன்னியர் இந்நோன்பிருந்து கார்த்தியாயினி தேவியை வழிபட, தகுந்த கணவன் கிடைப்பான். சுமங்கலிகள் கடைப்பிடித்தால், தம்பதியர் ஒற்றுமை கூடும்.

மார்கழி மாதத்தை, மார்கசீர்ஷம் என்று வடமொழியில் சொல்வர். மார்கம் என்றால், வழி – சீர்ஷம் என்றால், உயர்ந்த – வழிகளுக்குள் தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி.

ஆண்டாள் பொழுது புலர்வதற்குமுன் எழுந்து தமது தோழியர்களை அழைத்து ஆற்றில் நீராடி, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கெüரி தேவியாக பாவித்து, “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி’ பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டு நோன்பு நோற்றாள். அவளுடைய அன்பை உணர்ந்த ஸ்ரீரங்கநாதர், ஆண்டாளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரச் செய்தார். ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை வணங்கி நாகணையை மீதேறி பெருமாளுடன் சேர்ந்து அவருடன் ஒன்றானாள். உண்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை நிச்சயம் அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள். அவள் செய்த நோன்பையே பாவை நோன்பென்று குறிப்பிடுகின்றனர்.

இம்மாதத்தில் வரும் திருவாதிரை விரதம் சைவர்களுக்கு இன்றியமையாதது. மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. பத்தாவது நாளான திருவாதிரை அன்று அதை நிறைவு செய்வார்கள். இவ்விரதம், இவ் வருடம் 26.12.2015 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த மார்கழியில் சிவபெருமானும், ஏனைய தேவர்களும் பூமிக்கு வந்து தவமிருப்பதாக ஐதீகம். சிவபெருமான், சிதம்பரத்தில் நந்தனாரை ஆட்கொண்ட நாள் திருவாதிரைத் திருநாள்! மார்கழித் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானை வழிபடவேண்டும். திருவாதிரை நாளில் உமையம்மை, பதஞ்சலி முனிவர் கண்டு மகிழ, சிவபெருமான் திருநடனம் ஆடினார். தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கி, அவர்களால் ஏவப்பட்ட மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்து, முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தியதே “ஆருத்ரா தரிசனம்’ என்று சொல்லப்படுகின்றது.

அசுர சம்ஹாரத்திற்காக பகவான் பூலோகத்திற்கு மூன்று கோடி தேவர்களுடன் எழுந்தருளிய “வைகுண்ட ஏகாதசி’ இம்மாதம் 21.12.2015 அன்று கொண்டாடப்படுகிறது. கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்னதாக வைகுண்டத்திற்கு சென்றவர் யாருமில்லை என்பதால் வைகுண்ட வாசல் மூடப்பட்டிருந்ததாகவும் பின்னர் வைகுண்ட ஏகாதசி அன்று அது திறக்கப்படுவதாகவும் ஐதீகம். இந்த வைபவத்தை முதன்முதலாக திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் ஏற்படுத்தினார் என்பர்.

மார்கழி மாதம் இருபத்து ஏழாம் தேதி திருப்பாவை 27 ஆம் பாடலில் “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்று தொடங்குகிறது. “பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ என்று 27 ஆம் பாடலில் சொன்னவாறு இன்று எல்லா விஷ்ணு கோயில்களிலும் நெய்வழிய சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து “கூடாரைவல்லி’ என்று விசேஷமாகக் கொண்டாடுவர்.

ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் அனுமன் அவதாரமும் மார்கழியில்தான் நடைபெற்றது. கீதை அருளப்பட்டது மார்கழி வளர்பிறை 11 ஆம் நாளாகிய ஏகாதசி தினத்தில் தான். அன்றைய தினத்தை “கீதா ஜயந்தி’ எனச் சிறப்பிக்கப்படுகிறது. மார்கழிப் பெüர்ணமியன்று “தத்தாத்ரேயர் ஜயந்தி’ தினம். மேலும் தொண்டரடிப்பொடியாழ்வார் பிறந்த மாதமும் மார்கழியே.

மார்கழி மாத வியாழக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜையை ஆண், பெண் இருபாலரும் செய்வர். இதற்கு “குருவார பூஜை’ எனப் பெயர். இப்பூஜை செய்வதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மார்கழியில் விரதம் இருப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது மன வலிமையை வளர்க்கவும் உதவும். இந்த ஒரு மாதத்தை இறை உணர்வுடன் சிரத்தையாய்க் கழித்தால் அதனால் வரும் உன்னத குணங்களும், உடல் மற்றும் மன நலன்களும் நம் வாழ்நாள் முழுவதும் நம்முடனிருக்கும். இந்த வாழ்க்கையை சிறப்பாய் வாழவும், நம் குறிக்கோள்களை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தவும் மார்கழி நமக்குத் துணை செய்யும். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாகவும், வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதமாகவும் முன்னோர் கருதியதாலேயே இதனை “பீடுடைய மாதம்’ என்றனர்.