” சாமிக்கு முன்னால் வயலின் வாசிக்கணும் …”

10600402_692002067556343_6810811369719414739_n.jpg

மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும்

பக்தி உண்டு. பெரியவாளை, அல்லாவாகவும்

கிறிஸ்துவாகவும் கண்டதாகக் கூறும்

இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும் ஏராளம்.

1989-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி.

ஒரு முஸ்லீம் அன்பர்,தன்னுடைய மகனை-

குலாம் தஸ்தகீர் – கையைப் பிடித்து

அழைத்துக்கொண்டு வந்தார் ஸ்ரீ மடத்துக்கு.

சட்டையைக் கழற்றிவிட்டு சுவாமிகளை

நமஸ்கரித்தார்கள்.

‘என்னோட மகன்,வயலின் வாசிக்கிறான்.

ஒரு போட்டியில் கலந்துக்கப் போறான்.

பெரியவங்க ஆசி வேணும்…சாமிக்கு

முன்னாலே வயலின் வாசிக்கணும்….’

அனுமதி கிடைத்ததும், பார்வையில்லாத

குலாம் தஸ்தகீர் வாசிக்கத் தொடங்கினான்.

பெரியவாள் கண்களை மூடிக்கொண்டு ரசித்தார்கள்.

பின்னர், அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்து,

‘பையனுக்கு யாரிடம் சிட்சை’ என்றும்

கேட்டறிந்தார்கள்.

தஸ்தகீரின் தகப்பனார்க்கு உணர்ச்சிபூர்வமான

தவிப்பு, நெஞ்சு,கெஞ்சியது.

‘சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக்

கொடுக்கணும்..’ என்று சொல்லியே விட்டார்!.

தொண்டர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

இது என்ன பிரார்த்தனை?

ஆசீர்வாதம் கேட்டால் போதாதோ?…

முஸ்லீம் இதயத்தில் பரிசுத்தம் இருந்தது.

பெரியவாள், ஒரு சிஷ்யருக்கு ஜாடைகாட்டி,

அந்த வயலினை வாங்கிக்கொண்டு வரச் சொல்லி

தன் அருட்கரத்தால் தொட்டுக் கொடுத்தார்கள்.

பார்த்துக் கொண்டிருந்தவர்கள், வெண்ணையாய்

உருகிப் போனார்கள்.

இரண்டு வேஷ்டிகளும்,மாம்பழங்களும்

பிரசாதமாகக் கொடுக்கச் சொன்னார்கள், பெரியவா.

மதம் கடந்த கருணை, பெரியவாளுக்கு.

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8439/#ixzz3NnKx0mQe

“அவர்கள் இருக்கும் இடத்துக்கு நாம் ஏன் போனோம்…” ? !!!

ஒரு நாள் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி திருவண்ணாமலை மலையில் ஒரு தனி வழியே ஏறும் போது அவரது கால் ஒரு பெரிய குளவிக் கூட்டில் பட்டு விட்டது. உடனே குளவிகள் ‘புஸ்’ஸென்று எழுந்து கோபத்துடன் அந்தக் காலையே பலமாகக் கொட்டின. திரும்பத் திரும்ப குளவிகள் கூட்டமாக வந்து அவரது காலைப் பதம் பார்த்தன. பகவான் நடந்த களைப்புடன் அங்கேயே உட்கார்ந்து, ஆம், ஆம் நன்றாகக் கொட்டுங்கள். இந்தக் கால் தானே உங்கள் கூட்டைக் கலைத்தது. அதனால் நன்றாகக் கொட்டுங்கள். அது வருந்தட்டும்!” என்று சொல்லி சாந்தமாயிருந்தார். அந்தக் குளவிக் கூட்டம் ஆத்திரம் தீர அவரது கால் சதையைத் துளைத்துக் கொட்டி விட்டுத் திரும்பிச் சென்றது. வலியைப் பொறுத்துக் கொண்டு ஆசிரமம் திரும்பினார் ஸ்ரீரமணர். பொறுமை, பொறுமை, இதனினும் பொறுமை ஏது?

ஆசிரமவாசிகள் பதறிப் போய் பகவானைக் கேட்க, ஆம்… அவர்கள் இருக்கும் இடத்திற்கு நாம் போனோம். அவர்களைத் துன்புறுத்த நமக்கு பாத்தியமில்லை!” என்று புன்னகையுடன் கூறினார்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE:::: Balhanuman Blog @ wordpress.com

Natarajan

 

” திருப்பாவை , திருவெம்பாவை தெரியுமா …” ?

திருப்பாவை- திருவெம்பாவை பத்தி தெரியுமா?”

நன்றி-சக்தி விகடன் & பால ஹனுமான்.

ஒருநாள், பிரதோஷம் மாமா மடத்துக்குச் செல்லும்போது, திருவரத ஓதுவார் என்பவரும் தெருவில் தன் பரிவாரங்கள் புடைசூழ வந்தாராம். வழிநெடுக, தேவார- திருவாசகப் பாடல்களைப் பாடிக்கொண்டும், ‘நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!’ என்று கோஷம் இட்டுக்கொண்டும் ஓதுவாரும் அவருடன் வந்தவர்களும் வர, பிரதோஷம் மாமாவுக்குச் சின்னதாக ஒரு வருத்தம். அவர், ‘அருணாசல சிவ’ எனும் நாமத்தைச் சொல்லியபடியே வருவது வழக்கம். ஆனால், அன்றைக்கு ஓதுவார் பாடியதால், அவர் சொல்வது தடைப்பட்டது.

ஸ்ரீரமணரிடம் அதீத ஈடுபாடுகொண்ட பிரதோஷம் மாமா, ஸ்ரீரமணர் அருளிய ‘அருணாசல சிவ’ எனும் திருநாமத்தை, எல்லோரையும் சொல்லச் சொல்வார். அதேபோல், ஓதுவார் உட்பட அங்கிருந்தவர்களிடம், ‘அருணாசல சிவ’ என்று சொல்லும்படி வலியுறுத்தினார். அதேநேரம் மனதுள் ஒரு எண்ணம்… ‘நமசிவாயமும் அருணாசல சிவமும் வேறு யார்? மகாபெரியவாள்தானே?!’

அனைவரும் மடத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசித்தனர். ஓதுவார் விடைபெற்றுச் சென்ற சிறிது நேரத்தில், ‘ஓதுவார் எங்கே?’ என்று கேட்டார் காஞ்சி மகான். அங்கிருந்தவர்கள், ஓதுவார் சென்றுவிட்டதைத் தெரிவித்தனர். உடனே, பிரதோஷம் மாமாவை அழைத்துப் புத்தகம் ஒன்றைக் கொடுத்த மகாபெரியவர், ”இந்தப் புத்தகம் எந்த வருஷம் வெளியானதுன்னு ஓதுவாரைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு வா!” என்றார். அந்தப் புத்தகம், திருவாசகம்!

காஞ்சிபுரத்தைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை என்றிருந்த பிரதோஷம் மாமா,மகானின் கட்டளையை நிறைவேற்ற சென்னை செல்லவேண்டிய நிலை. சென்னையில் ஓதுவாரைத் தேட, ஒரு துணை தேவையாக இருந்தது. தன் மீது அன்பு கொண்டிருந்த அன்பர் ஒருவரை உதவிக்கு அழைக்க நினைத்தார். அன்ப ரைச் சந்திக்கும் பொருட்டு, தான் ஏற்கெனவே வேலை பார்த்த அலுவலகத்துக்குச் சென்றார்.ரிடையர்டு ஆனபிறகு இவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை.

மாமாவைப் பார்த்ததும், அங்கிருந்த வேறொரு நண்பர், ”ஆச்சரியமா இருக்கு சார்! கடிதம் எழுதிப்போட்டு உங்களை வரச்சொல்லணும்னு நினைச்சுட்டிருந்தேன். உங்களுக்குச் சேர வேண் டிய அரியர்ஸ் பணம் ஆயிரம் ரூபாய்க்கும் மேலே வந்திருக்கு. நீங்க இன்னிக்கு வரலேன்னா, திரும்பவும் அக்கவுன்ட்ஸ் செக்ஷனுக்கே போயிருக்கும். அப்புறம் வாங்கறது கொஞ்சம் கஷ்டம்தான்!” என்றார்.

அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. இந்தத் தொகை கிடைப்பதற்கு, மகாபெரியவா சிறிதாக விளையாடி, அருளியிருக்கிறார் எனச் சிலிர்த்தார் பிரதோஷம் மாமா.

ஆனால், இத்தோடு முடியவில்லை ஆச்சரியம்!

பிறகு, சென்னையில் அந்த ஓதுவாரைக் கண்டுபிடித்து, நூல் வெளியிடப்பட்ட விவரத்தைக் கேட்க, ‘தெரியாது’ என்று ஓதுவார் சொல்ல, வேறு சிலர் மூலமாக விவரங்களைச் சேகரித்துக்கொண்டு, மடத்துக்குச் சென்றார் பிரதோஷம் மாமா. அங்கே, இவர் கூறியதையெல்லாம் செவிமடுத்த மகாபெரியவா, திருவாசகப் புத்தகத்தை நீட்டி, ”முதல்லேருந்து சில பக்கங்களைப் படி” என்றார்.

புத்தகத்தை வாங்கிப் பிரித்ததும், ஆடிப் போனார் பிரதோஷம் மாமா. எடுத்ததும், ‘நமசிவாய வாழ்க!’ என்று துவங்கும் சிவ புராணம்தான் தென்பட்டது.

‘அருணாசல சிவனும் நமசிவாயமும் வெவ்வேறல்ல’ என்பதைப் பிரதோஷம் மாமாவுக்கு சூசகமாக உணர்த்தி விட்டார் மகாபெரியவா!

திருப்பாவை- திருவெம்பாவை பற்றிய சம்பவம் ஒன்றையும் தெரிவித்தார் அகிலா கார்த்திகேயன்.

அது 1949-ஆம் வருடம். மகாபெரியவா திருவிடை மருதூரில் இருந்தார். ஆச்சி அம்மையார் ஒருவர், தினமும் புத்தகம் ஒன்றை எடுத்து வந்து,பெரியவாளுக்கு முன்னே பாடிவிட்டுச் செல்வார். ஒருநாள் ராமமூர்த்தி என்பவரிடம், ”அந்த அம்மையார் பாடற திருப்பாவை- திருவெம்பாவை பத்தி தெரியுமா?” என்று கேட்டார் பெரியவா.

அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. உடனே அவரை, தேவராஜ பாகவதர் என்பவரிடம் அனுப்பி, ‘திருப்பாவை- திருவெம்பாவைப் பாடல்களை வெளியில் பாடச் சொன் னால், எல்லாரும் பாடுவார்களா?’ என்று கேட்டு வரச் சொன்னார். ராமமூர்த்தியும் பாகவதரைச் சந்தித்தார். அவரோ, ”இந்தப் பாட்டுக்கள் யாருக்குத் தெரியும்? ஒருத்தரும் பாடமாட்டாங்க” என்று சொல்லிவிட்டார்.

இதை அப்படியே வந்து மகாபெரியவாளிடம் தெரிவித் தார் ராமமூர்த்தி. உடனடியாக திருப்பாவை- திருவெம்பாவை மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்காஞ்சி மகான்!

மார்கழி பிறந்ததும் ராமமூர்த்தி என்பவரையும் கண்ணன் எனும் அன்பரையும் அழைத்து, கையில் விளக்கும் புத்தகமுமாக யானையின் மீது உட்கார்ந்தபடி, ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி திருக்கோயிலின் நான்கு வீதிகளிலும், திருப்பாவை- திருவெம்பாவை பாடல்களைப் பாடும்படி உத்தரவிட்டார். பிறகு, பெரியவாளின்ஆசியுடன், திருப்பாவை- திருவெம்பாவை மாநாடும் சிறப்புற நடைபெற்றது.

அதையடுத்து, சங்கீதக் கச்சேரிகளிலும் திருப்பாவை- திருவெம்பாவைப் பாடல்களையும் வித்வான்கள் பாடத் துவங்கினர். கி.வா.ஜ. போன்ற தமிழறிஞர்கள், இந்தப் பாடல்களை விளக்கிச் சொற்பொழிவாற்ற ஆரம்பித்தனர். அதுமட்டுமா? அப்போதைய இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக இருந்த உத்தண்டராமன் என்பவரிடம், ”மார்கழியில், எல்லாக் கோயில்களிலும் திருப்பாவை- திருவெம்பாவை மாநாடு நடத்த ஏற்பாடு செய்யுங்கள்” என்று அருளினார்மகாபெரியவா.

அதே போல், சுவாமிகளின் உத்தரவை சிரமேற்கொண்ட டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி, அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் போன்றவர்கள், திருப்பாவை- திருவெம்பாவை பாடல்களைப் பாடிப் பரப்பினார்கள்!

சில காலம் கழித்து, ராமமூர்த்தியிடம்… ”அந்த ஆச்சி அம்மையார் பாடின பாட்டுக்களை, யாரும் பாடமாட்டானு சொன்னேளே… இப்ப யாராவது பாடறாளா?” என்று குறுஞ் சிரிப்புடன் கேட்டார் காஞ்சிப் பெரியவா. இதில் நெக்குருகிப் போன ராமமூர்த்தி, ”பெரியவா ஈஸ்வர ஸ்வரூபம். அவா நினைச்சா நடக்காததே இல்லை” என்று சொல்லிச் சிலாகித்தாராம்.

பிறகு ஒருமுறை, தஞ்சாவூரில் யாரிடமோ பேசிக் கொண் டிருக்கும்போது, ”இப்ப திருப்பாவை- திருவெம்பாவைப் பாடல்களை, எல்லா இடத்துலயும் எல்லாரும் பாடறான்னா, அது இவனாலதான்!” என ராமமூர்த்தியைச் சுட்டிக் காட்டிச் சிரித்தாராம்பெரியவா.!

நன்றி – சக்தி விகடன்

Attachments:

1380411_805270559515167_8265340876734836171_n.jpg

SOURCE::::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8375/#ixzz3M4thYdDg

” ஹனுமனுக்கு வடை மாலை , ஜாங்கிரி மாலை ஏன்…? “

ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹபெரியவாளைத தரிசிக்க வந்தார். மனம் குளிரும்வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா,

“என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.

அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது.

இதுகுறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.

“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர்.

“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.

“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள்பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”
பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்: “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமானமிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலைசாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”

பதிலுக்காக மஹபெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.

தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது. கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப்போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடிஇருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.

ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.

சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனைஅடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.

அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம்போல்‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ ,அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள்
அனைத்தும் நிவர்த்திஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்கவேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல்(பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆனவடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.

இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.

வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப்பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே —அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக்
கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.

எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்துகொண்டே இருக்கின்றன.

அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்திவழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, இடி இடியெனச்சிரித்தார் மஹபெரியவா.

பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேகபக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/3209#ixzz3LwvrfFnE

‘பாரதி’ பிறந்த கதை !!!…. பாரதியார் பிறந்த நாள் …11th Dec …

பாரதி பிறந்தநாள் டிசம்பர்: 11

சுப்ரமணிய பாரதியின் அப்பா சின்னசாமி, அந்தக் காலத்திலேயே பருத்தி ஆலை வைச்சிருந்தாரு. எதிர்காலத்தில் தொழிற்பேட்டை ஒன்றை உருவாக்கும் கனவோட இருந்தாரு. மகன் வளர்ந்தவுடன் அந்தத் தொழிற்பேட்டையை கவனித்துக் கொள்வான்னு நினைச்சாரு.

சுப்ரமணியனோட அம்மா ஐந்து வயசுலேயே இறந்து போயிட்டாங்க. அதோட சுப்ரமணியனுக்குப் படிப்புல பெரிசா ஆர்வம் இல்ல. பள்ளிக்கூடம் முடிஞ்ச ஒடனே தோப்பு, தோட்டம்னு சுத்திப் பார்க்கக் கிளம்பிடுவாரு. அப்புறம் அடிக்கடி தாத்தாவோட வீட்டுக்கும் போவாரு. அவரோட தாத்தா இலக்கியம், பாட்டெல்லாம் வாசிச்சுக் காட்டுவாரு. சுப்ரமணியனுக்குத் தமிழ் இலக்கணமும், தமிழ்க் காப்பியங்களும் ரொம்பவும் பிடிச்சிருந்துச்சு.

மற்றொரு பக்கம் பாடத்தைப் படிக்காமல், வீட்டுப் பாடம் செய்யாம பள்ளிக்கூடம் போன சுப்ரமணியனுக்குத் தண்டனை வழங்கினாங்க. “எனக்கு என்ன பிடிக்கிதோ, அதை யாரும் சொல்லித் தர மாட்டாங்களா”ன்னு சுப்ரமணியன் ஏங்கினான்.

சீக்கிரத்திலேயே பார்வையற்ற ஒரு படிப்பாளியைக் கண்டுபிடிச்சு, அவர்கிட்ட கம்ப ராமாயணத்தைக் கத்துக்கிட்டான். அதுக்கப்புறம் சொந்தமாகவே சுப்ரமணியன் தமிழ் இலக்கணம் கத்துக்க ஆரம்பிச்சான்.

ஒரு நாள் சுப்ரமணியனோட நண்பன் ஒருவன் எட்டயபுரம் ராஜாவோட அரண்மனைக்கு அழைச்சுட்டுப் போனான். ஏதாவது ஒரு குறளின் முதல் வார்த்தையையோ அல்லது ஒரு வெண்பாவின் ஒரு பகுதியையோ சொன்னால், சுப்ரமணியன் உடனடியா எஞ்சிய அடிகளைச் சொன்னான். சுப்ரமணியன் நகைச்சுவையா பேசுறதையும் கவிதை சொல்றதையும் எட்டயபுரம் ராஜா ரசிச்சார்.

“இவன் ஒரு குழந்தை மேதை. பெரிய கவிஞன் ஆவதற்கான அறிவு, உங்க மகன்ட்ட இருக்கு”ன்னு சுப்ரமணியனோட அப்பாகிட்ட சொன்னார் எட்டயபுரம் ராஜா.

ஏற்கெனவே சுப்ரமணியன் செஞ்ச விஷயங்கள் பிடிக்காம இருந்த அவனோட அப்பா, தன் மகன் இப்படிக் கவிதையே கதின்னு இருந்துறக்கூடாதுன்னு நினைச்சாரு. அதனால திருநெல்வேலில ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு சுப்ரமணியனை படிக்க அனுப்பினார். அப்படிச் செஞ்சா எல்லாம் மாறிடும்னு அவர் நினைச்சாரு.

அங்கேயும் சுப்ரமணியனோட நகைச்சுவை உணர்வும், கவிதை எழுதுற திறனும் சக மாணவர்கள்கிட்ட பிரபலமாச்சு.

ஒரு நாள் வகுப்பறையில சுப்ரமணியன் கொஞ்சம் கண் அசந்துட்டான். சுப்ரமணியனை எழுப்பி, நடத்துன பாடத்தில இருந்து ஆசிரியர் கேள்வி கேட்டார். சுப்ரமணியனுக்கோ பதில் தெரியல. கோபமடைஞ்ச ஆசிரியர், “மேகம் மழையைப் பொழியறது போல, நீ கவிதை சொல்வேன்னு கேள்விப்பட்டேன். ஆனால், நான் கேட்ட கேள்விக்கு உன்கிட்ட பதிலே இல்லையே”ன்னு கேட்டாரு.

“மெத்தப் படித்த ஆசிரியரே, ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க. மேகங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் மழை பொழிகின்றன. நீங்க கேள்வி கேட்கிறதால இல்ல”ன்னு பட்டென்னு பதில் சொன்னான் சுப்ரமணியன். ஆனா, இறுதிப் பரீட்சைல ஃபெயிலான அவன் ஊருக்குத் திரும்பினான்.

இதனால் வருத்தப்பட்ட அவனுடைய அப்பா, எட்டயபுரம் ராஜாவைப் பார்த்து அரசவை பணியில சுப்ரமணியனைச் சேர்த்துவிட்டார். ராஜாவோட நண்பர்கள் சிலருக்கு சுப்ரமணியனைப் பிடிக்கல. அவர்கள்ல ஒருத்தர், “நீங்க பெரிய புத்திசாலி போலத் தெரியுது. ஆனா, பரீட்சைல தோத்துப் போயிருக்கீங்களே” என்று மறைமுகமாகக் கிண்டல் செய்ய ஆரம்பிச்சாரு.

இதனால ரெண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுச்சு. கல்வியைப் பற்றி ஒரு விவாதம் நடத்தலாம்னு முடிவாச்சு. முதல்ல எதிர்த் தரப்பு ஆள் பேசினார். அடுத்ததாகப் பேச ஆரம்பிச்ச சுப்ரமணியன், எல்லோரும் ஆச்சரியப்படுற மாதிரி அற்புதமாகப் பேசினார். அவருடைய வாதம் எதிராளியையும் வசப்படுத்துச்சு.

அந்த விவாதம் முடிஞ்சதும், ஒரு முதிர்ந்த பண்டிதர் எழுந்து சுப்ரமணியன்கிட்ட போனாரு. “நீ உன் வயசை மீறுன புத்திசாலித்தனத்தோட இருக்கிறாய். அதனால், நீ ஒரு பாரதி (அனைத்தும் அறிந்த பண்டிதர்)”ன்னு பட்டம் சூட்டினார்.

அதுக்கப்புறம் சுப்ரமணியனை, எல்லோரும் பாரதின்னே கூப்பிட ஆரம்பிச்சாங்க. உலகம் போற்றும் கவிஞரா மாறின அவர், சுப்ரமணிய பாரதியாராக ஜொலித்தார்.

SOURCE:::: http://www.tamil.the hindu.com
Natarajan

” நீ கபட சந்நியாசி பற்றி கேட்டிருக்கியா …” ?

கபட சந்யாஸி”

“பெரியவா கேட்ட காளிதாஸன் கதை”

10446567_708688765887673_5573865802015963241_n.jpg

சொன்னவர்-ராமகிருஷ்ண தீக்ஷிதர்

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மகாப் பெரியவாளிடம் பொழுது போக்குகளும்

நிறைய உண்டு.

ஒரு தடவை சென்னை திருமங்கலத்திலிருந்து

அம்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தோம்.

வழக்கப்படி, ஸ்ரீ பெரியவாள், மூன்று சக்கர

சைக்கிளைத் தொட்டுக்கொண்டே நடந்து வந்து

கொண்டிருந்தார். நாங்கள் ஏழெட்டுப் பேர்கள்,

உடன் சென்று கொண்டிருந்தோம்.

“நீலகண்டா, நீ கபட ஸந்யாஸியைப்

பார்த்திருக்கியா?”

“இல்லே”

“நாகராஜா….நீ”

“இல்லே..”

ஸ்ரீ பெரியவாள் என்னைப் பார்த்து, ” நீ கபட சந்யாஸியைப்

பற்றிக் கேட்டிருக்கியா?” என்று கேட்டார்.

“கேட்டிருக்கேன்…ராவணன்,அர்ஜுனன்…” என்றேன்.

“அவ்வளவு தானா?”

நான் தயங்கியபடியே, “காளிதாஸன்…” என்றேன்.

“காளிதாஸனா?..அவன் எப்போ கபட சந்யாஸி ஆனான்?..”

“பெரியவாளுக்குத் தெரியும்..பெரியவா சொன்னா,

நாங்க கேட்டுண்டே..நடப்போம்.

“இல்லை..நீயே சொல்லு..”

போஜராஜன் சபையில் ஆஸ்தான வித்வானாக இருந்த

காளிதாஸன், ஒரு நாள், சற்று மரியாதைக்குறைவான

சொல்லைக் கேட்டதும், சபையிலிருந்து வெளியேறி

கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.

போஜனுக்கு, காளிதாஸன் இல்லாமல் பொழுது

போகவில்லை. அவனை எப்படிக் கண்டு பிடிப்பது?

ஒரு செய்யுளின்,முதல் இரண்டு அடிகளை எழுதிப்

பூர்த்தி செய்பவருக்குப் பரிசு கிடைக்கும் என்ற

முரசறைவித்தான்.

ஒரு தாசியின் வீட்டிலிருந்த காளிதாஸன், பரிசு பற்றி

எதுவும் அறிந்திராவிட்டாலும், செய்யுளைப் பூர்த்தி

செய்தான்.போஜனிடம் அந்த வரிகளைக் காட்டினாள் தாசி.

பின்னர்,அவளிடமிருந்து விபரங்கள் பெற்று,மாறுவேஷத்தில்

போஜன் புறப்பட்டுச் சென்றான். ஒரு மரத்தடியில் ஒரு

சந்யாஸியைப் பார்த்தபோது, ‘இவர் காளிதாஸனோ’

என்ற சந்தேகம் வந்தது.

பரஸ்பரம் பேச்சு ஆரம்பமாயிற்று.

துறவி, மாறுவேஷத்திலிருந்த போஜனைப் பார்த்து

“நீங்கள் யார்?” என்று கேட்டார்.

“நான்,போஜனிடம் அடைப்பக்காரனாக இருந்தேன்.

அவர் இறந்ததும், எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை.

வெளியே வந்து விட்டேன்…”

“ஆ!…. என் போஜன் இறந்துவிட்டானா?”

என்று வருந்தி சரம சுலோகம் பாடியதும்,

வேஷக்காரன் கீழே விழுந்து உயிர் விட்டான்.

அவன்தான் போஜன் என்பது சந்தேகமில்லாமல்

தெரிந்துவிடவே, அம்பாளைக் குறித்து,மனமுருகி

சியாமளா தண்டகம் பாடி, “இதோ,போஜன்

எழுந்துவிட்டான்!” என்ற பொருள்பட

இன்னொரு சுலோகம் பாடினான்.

உண்மையாகவே,போஜன் உயிர் பெற்று எழுந்தான்.

இந்தக் கதையை விளக்கமாகச் சொன்னேன்.

கடைசியில் “இந்த சந்தர்ப்பத்தில் தான் காளிதாஸன்,

சந்யாஸியாகக் கபட நாடகம் ஆடினான்…” என்றேன்.

பெரியவாள்,”ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.

நடந்து வந்த களைப்பே தெரியல்லே!” என்றார்.

அம்பத்தூர் வந்துவிட்டது.

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/8339/#ixzz3LVWMPB7a

” Making Of a Musical Legend …” … M.S Subbulakshmi @ Music Academy !!!

  • M.S. Subbulakshmi gave her first public performance in Madras at a concert organised by the Indian Fine Arts Society on December 28, 1933
    The Hindu

    M.S. Subbulakshmi gave her first public performance in Madras at a concert organised by the Indian Fine Arts Society on December 28, 1933

Despite being a regular in the city’s concert circuit from 1933, earning a slot at the prestigious The Music Academy was not easy for M.S. Subbulakshmi

It was 81 years ago in 1933, when a 16-year-old M.S. Subbulakshmi moved from Madurai to the big city of Madras.

Madras city, up until then, unfamiliar with the young singer, witnessed her first public performance at a concert organised by the Indian Fine Arts Society on December 28, the same year.

Accompanied by T. Gururajappa on the violin and her mother on the veena, Subbulakshmi performed at Saundarya Mahal in George Town.

Despite receiving rave reviews and becoming a regular in the city’s concert circuit, earning a slot at the prestigious The Music Academy was not easy. M.S. had to prove herself before she could stake her claim to the Academy’s stage.

In 1934, M.S. enthusiastically participated in the theory sessions and lecture demonstrations during the Academy’s annual music conference. But, it was only in 1935 M.S. got an opportunity to showcase her talent at the Academy’s annual season.

The Hindu, on January 1, 1935, published a four-line listing of the concert in the ‘Engagements for tomorrow’ column on page 12 of the paper. It read, ‘5.30 p.m.–7.30 p.m. Sri Subbalakshmi of Madura – Vocal, Mr. Sankaranarayana Aiyer – Violin, Hamsa Damayanti – Mridangam…’

The performance proved to be a turning point for M.S., with even The Hindu’s ‘hard-to-please’ music critic K.V. Ramamchandran being impressed.

In a picture of the group of musicians who participated in the music conference, published days after the concert on January 3, 1935, one can spot the adolescent M.S. wedged innocuously between two female artistes.

At the time, the 18-year-old aspiring singer was probably oblivious to the fact that in the years to come, she would become one of the most celebrated cultural icons in the nation.

Therefore, being featured by The Music Academy during the Margazhi season, for the first time in 1935, may have seemed to the young girl, her biggest achievement yet, at that point of time.

Keywords: M.S. SubbulakshmiMusic AcademyCarnatic Music

SOURCE:::: http://www.the hindu.com

Natarajan

திருவண்ணாமலை தீபத்திருவிழா …

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புத  தகவல்கள்…..

  

  

திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.

மூன்று இளையனார்!

இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.

அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.

அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.

காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

ஒன்பது கோபுரங்கள்!

கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.

அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

மலையளவு பயன்!

நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.

கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.

பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.

பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.

அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

தீபத் திருவிழா!

உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.

பரணி தீபம்!

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

மகாதீபம்!

மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக “அண்ணாமலைக்கு அரோஹரா’ எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.

தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.

திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.

லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” 

SOURCE::::: INPUT  from a friend of mine…

NATARAJAN

Top Ten Qualities of Turmeric !!!

Turmeric may be the most effective nutritional supplement in existence.

Many high quality studies show that it has major benefits for your body and brain.

Here are the top 10 evidence-based health benefits of turmeric.

1. Turmeric Contains Bioactive Compounds With Powerful Medicinal Properties

Turmeric is the spice that gives curry its yellow color.

It has been used in India for thousands of years as a spice and medicinal herb.

Recently, science has started to back up what the Indians have known for a long time… it really does contain compounds with medicinal properties (1).

These compounds are called curcuminoids, the most important of which is curcumin.

Curcumin is the main active ingredient in turmeric. It has powerful anti-inflammatory effects and is a very strong antioxidant.

However, the curcumin content of turmeric is not that high… it’s around 3%, by weight (2).

Most of the studies on this herb are using turmeric extracts that contain mostly curcumin itself, with dosages usually exceeding 1 gram per day. It would be very difficult to reach these levels just using the turmeric spice in your foods.

Therefore, if you want to experience the full effects, then you need to take an extractthat contains significant amounts of curcumin.

Unfortunately, curcumin is poorly absorbed into the bloodstream. It helps to consume black pepper with it, which contains piperine… a natural substance that enhances the absorption of curcumin by 2000% (3).

I personally prefer to swallow a few whole peppercorns along with my curcumin supplement, in order to enhance absorption.

Curcumin is also fat soluble, so it may be a good idea to take it with a fatty meal.

 

Bottom Line: Turmeric is high in curcumin, a substance with powerful anti-inflammatory and antioxidant properties. Most studies used turmeric extracts that are standardized to include large amounts of curcumin.

2. Curcumin is a Natural Anti-Inflammatory Compound

Turmeric in Wooden Bowl

Inflammation is incredibly important.

It helps the body fight foreign invaders and also has a role in repairing damage.

Without inflammation, pathogens like bacteria could easily take over our bodies and kill us.

Although acute (short-term) inflammation is beneficial, it can become a major problem when it is chronic (long-term) and inappropriately deployed against the body’s own tissues.

It is now believed that chronic, low-level inflammation plays a major role in almost every chronic, Western disease. This includes heart disease, cancer, metabolic syndrome, Alzheimer’s and various degenerative conditions (4, 5, 6).

Therefore, anything that can help fight chronic inflammation is of potential importance in preventing and even treating these diseases.

It turns out that curcumin is strongly anti-inflammatory, it is so powerful that it matches the effectiveness of some anti-inflammatory drugs (7).

Curcumin actually targets multiple steps in the inflammatory pathway, at the molecular level.

Curcumin blocks NF-kB, a molecule that travels into the nuclei of cells and turns on genes related to inflammation. NF-kB is believed to play a major role in many chronic diseases (8, 9).

Without getting into the gory details (inflammation is extremely complicated), the key takeaway here is that curcumin is a bioactive substance that fights inflammation at the molecular level (10, 11, 12).

In several studies, its potency has compared favorably to anti-inflammatory pharmaceutical drugs… except without the side effects (13, 14).

Bottom Line: Chronic inflammation is known to be a contributor to many common Western diseases. Curcumin can inhibit many molecules known to play major roles in inflammation.

3. Turmeric Dramatically Increases The Antioxidant Capacity of The Body

Turmeric in Bowl and Spoon

Oxidative damage is believed to be one of the mechanisms behind ageing and many diseases.

It involves free radicals, highly reactive molecules with unpaired electrons.

Free radicals tend to react with important organic substances, such as fatty acids,proteins or DNA.

The main reason antioxidants are so beneficial, is that they protect our bodies from free radicals.

Curcumin happens to be a potent antioxidant that can neutralize free radicals due to its chemical structure (15, 16).

But curcumin also boosts the activity of the body’s own antioxidant enzymes (17, 18,19).

In that way, curcumin delivers a one-two punch against free radicals. It blocks them directly, then stimulates the body’s own antioxidant mechanisms.

Bottom Line: Curcumin has powerful antioxidant effects. It neutralizes free radicals on its own, then stimulates the body’s own antioxidant enzymes.

4. Curcumin Boosts Brain-Derived Neurotrophic Factor, Linked to Improved Brain Function and a Lower Risk of Brain Diseases

Young Indian Woman Holding a Plate With Turmeric

Back in the day, it was believed that neurons weren’t able to divide and multiply after early childhood.

However, it is now known that this does happen.

The neurons are capable of forming new connections, but in certain areas of the brain, they can also multiply and increase in number.

One of the main drivers of this process is Brain-Derived Neurotrophic Factor(BDNF), which is a type of growth hormone that functions in the brain (20).

Many common brain disorders have been linked to decreased levels of this hormone. This includes depression and Alzheimer’s disease (21, 22).

Interestingly, curcumin can increase brain levels of BDNF (23, 24).

By doing this, it may be effective at delaying or even reversing many brain diseases and age-related decreases in brain function (25).

There is also the possibility that it could help improve memory and make you smarter. Makes sense given its effects on BDNF levels, but this definitely needs to be tested in human controlled trials (26).

Bottom Line: Curcumin boosts levels of the brain hormone BDNF, which increases the growth of new neurons and fights various degenerative processes in the brain.

5. Curcumin Leads to Various Improvements That Should Lower Your Risk of Heart Disease

Large Wooden Spoon Filled With Turmeric Powder

Heart disease is the biggest killer in the world (27).

It has been studied for many decades and researchers have learned a lot about why it happens.

It turns out that heart disease is incredibly complicated and there are various things that contribute to it.

Curcumin may help reverse many steps in the heart disease process (28).

Perhaps the main benefit of curcumin when it comes to heart disease, is improving the function of the endothelium, which is the lining of the blood vessels.

It is well known that endothelial dysfunction is a major driver of heart disease and involves an inability of the endothelium to regulate blood pressure, blood clotting and various other factors (29).

Several studies suggest that curcumin leads to improvements in endothelial function. One study shows that is as effective as exercise, another shows that it works as well as the drug Atorvastatin (30, 31).

But curcumin also reduces inflammation and oxidation (as discussed above), which are also important in heart disease.

In one study, 121 patients who were undergoing coronary artery bypass surgery were randomized to either placebo or 4 grams of curcumin per day, a few days before and after the surgery.

The curcumin group had a 65% decreased risk of experiencing a heart attack in the hospital (32).

 

Bottom Line: Curcumin has beneficial effects on several factors known to play a role in heart disease. It improves the function of the endothelium and is a potent anti-inflammatory agent and antioxidant.

6. Turmeric Can Help Prevent (And Perhaps Even Treat) Cancer

Cancer is a terrible disease, characterized by uncontrolled growth of cells.

Turmeric Roots and a Jar of Turmeric Powder

There are many different forms of cancer, but they do have several commonalities, some of which appear to be affected by curcumin supplementation (33).

Researchers have been studying curcumin as a beneficial herb in cancer treatment. It can affect cancer growth, development and spread at the molecular level (34).

Studies have shown that it can reduce angiogenesis (growth of new blood vessels in tumors), metastasis (spread of cancer), as well as contributing to the death of cancerous cells (35).

Multiple studies have shown that curcumin can reduce the growth of cancerous cells in the laboratory and inhibit the growth of tumours in test animals (36, 37).

Whether high-dose curcumin (preferably with an absorption enhancer like pepper) can help treat cancer in humans has yet to be tested properly.

However, there is some evidence that it may help prevent cancer from occurring in the first place, especially cancers of the digestive system (like colorectal cancer).

In one study in 44 men with lesions in the colon that sometimes turn cancerous, 4 grams of curcumin per day for 30 days reduced the number of lesions by 40% (38).

Maybe curcumin will be used along with conventional cancer treatment one day. It’s too early to say for sure, but it looks promising and this is being intensively studied as we speak.

Bottom Line: Curcumin leads to several changes on the molecular level that may help prevent and perhaps even treat cancer.

7. Curcumin May be Useful in Preventing and Treating Alzheimer’s Disease

A Pile of Fresh Turmeric Roots

Alzheimer’s disease is the most common neurodegenerative disease in the world and a leading cause of dementia.

Unfortunately, no good treatment is available for Alzheimer’s yet.

Therefore, preventing it from showing up in the first place is of utmost importance.

There may be good news on the horizon, because curcumin has been shown to cross the blood-brain barrier (39).

It is known that inflammation and oxidative damage play a role in Alzheimer’s disease. As we know, curcumin has beneficial effects on both (40).

But one key feature of Alzheimer’s disease is a buildup of protein tangles called Amyloid plaques. Studies show that curcumin can help clear these plaques (41).

Whether curcumin can really slow down or even reverse the progression of Alzheimer’s disease needs to be studied properly (42).

Bottom Line: Curcumin can cross the blood-brain barrier and has been shown to lead to various improvements in the pathological process of Alzheimer’s disease.

8. Arthritis Patients Respond Very Well to Curcumin Supplementation

A Plate Full of Turmeric Powder

Arthritis is a common problem in Western countries.

There are several different types, but most involve some sort of inflammation in the joints.

Given that curcumin is a potent anti-inflammatory, it makes sense that it could help with arthritis. Several studies show this to be true.

In a study of patients with rheumatoid arthritis, curcumin was even more effective than an anti-inflammatory drug (43).

Many other studies have looked at the effects of curcumin on arthritis and noted improvements in various symptoms (44, 45).

Bottom Line: Arthritis is a common disorder characterized by joint inflammation. Many studies show that curcumin can help treat symptoms of arthritis and is in some cases more effective than anti-inflammatory drugs.

9. Studies Show That Curcumin Has Incredible Benefits Against Depression

Turmeric Roots and Powder

Curcumin has shown some promise in treating depression.

In a controlled trial, 60 patients were randomized into three groups (46).

One group took prozac, another group took a gram of curcumin and the third group took both prozac and curcumin.

After 6 weeks, curcumin had led to improvements that were similar to prozac. The group that took both prozac and curcumin fared best.

According to this (small) study, curcumin is as effective as an antidepressant.

Depression is also linked to reduced levels of brain-derived neurotrophic factor and a shrinking hippocampus, a brain area with a role in learning and memory.

Curcumin boosts BNDF levels, potentially reversing some of these changes (47).

There is also some evidence that curcumin can boost the brain neurotransmitters serotonin and dopamine (48, 49).

 

Bottom Line: A study in 60 depressed patients showed that curcumin was as effective as prozac in alleviating the symptoms of depression.

10. Curcumin May Help Delay Ageing and Fight Age-Related Chronic Diseases

If curcumin can really help prevent heart disease, cancer and Alzheimer’s… then this would have obvious benefits for longevity.

For this reason, curcumin has become very popular as an anti-aging supplement (50).

But given that oxidation and inflammation are believed to play a role in ageing, curcumin may have effects that go way beyond just prevention of disease (51).

SOURCE::::www.authoritynutrition.com

Natarajan

 

” தொகை ரொம்ப பெரிசு …நீ எப்பிடி பண்ணுவே…” ?

பகவானே தன் பக்தர்களோட நேர்லவந்து பேசின சம்பவம் எல்லாம் புராண காலத்துல நிறைய நடந்திருக்கு.
மகாபெரியவாளோட வாழ்க்கைலயும் அப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு. அதுல ஒரு ஆச்சர்யமான சம்பவத்தையும், ஸ்ரீரங்கம் கோயிலைப் பத்தி பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தையும் இப்போ சொல்றேன்.


1983ம் வருஷம் வாக்குல நடந்த சம்பவம் இது. அப்போ மகாராஷ்ட்ரா மாநிலத்துல இருக்கற சதாராவுக்கு விஜயம் பண்ணியிருந்த மகாபெரியவா, அங்கே மஹாகாவ் என்கிற கிராமத்துல தங்கியிருந்தார்.
ரொம்ப எளிமையான இடத்துல ஒரு சின்ன அறை பெரியவா நித்யபடி பூஜை. அனுஷ்டானங்களை செய்யறதுக்கு ஒதுக்கப்பட்டிருந்துது. அதுக்கு கதவுகூடக் கிடையாது. ஒரே ஒரு ஜன்னல் மாத்திரம் இருந்தது. மத்தபடி எல்லாருக்கும் தரிசனம் தரவும் மத்தவா தங்கிக்கவும் மாட்டுக் கொட்டகை ஒண்ணுதான் சுத்தப்படுத்தி ஒதுக்கப்பட்டிருந்தது.
அங்கே ஒருநாள் மகாபெரியவா தினசரி அனுஷ்டான பூஜையை ஆரம்பிச்ச சமயத்துல எங்கே இருந்தோ ஒரு பெரிய கருநாகம் வேகவேகமா வந்து, பெரியவா தங்கியிருந்த அறை வாசலை மறைச்சமாதிரி படத்தை விரிச்சுகிட்டு நின்னு ஆட ஆரம்பிச்சது. எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி! கூடவே பயம்!
உள்ளே பெரியவா மெய்மறந்து பூஜை பண்ணின்டு இருக்கார். கூப்பிட்டுச் சொல்லவும் முடியாது. பாம்பை விரட்டலாம்னா, அதோட உருவமே கிட்டே நெருங்க முடியாத அளவுக்கு பயங்கரமா இருந்துது. என்ன பண்றதுன்னு புரியாம எல்லாரும் தவிச்சுண்டு இருந்த சமயத்துல அந்த பாம்பு மெல்ல நகர்ந்து ஜன்னல்ல ஏறி உள்ளே நுழைங்சு பூஜை பண்ணின்டு இருந்த பெரியவா பக்கத்துல போய் கொஞ்ச நேரம் அப்படியே ஆடாம அசையாம நின்னுது. “புஸ்.. புஸ்’னு அது எழுப்பின் சத்தம் எதிரொலி மாதிரி கேட்டுது. சுத்தி நின்னவாளோட இதயம் லப்டப்னு அதுக்கு ஈக்வலா அதிர்ந்துது. இத்தனை ஆரவாரத்துலயும் பெரியவா முகத்துல துளி சலனம் இல்லை. கருமமே கண்ணா, பூஜை பண்ணிண்டு இருந்தார் அவர்.
எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். வந்த வேலை முடிஞ்சுதுங்கற மாதிரி அந்தப் பாம்பு சரசரன்னு வெளியில வந்து சட்டுன்னு எங்கேயோ போய் மறைஞ்சுடுத்து.
அதுக்கு அப்புறம் ரொம்பநேரம் கழிச்சு, பூஜையை முடிச்சுட்டு எழுந்தார் ஆச்சார்யா. எல்லாரும் பதட்டமும் பரபரப்புமா பாம்பு வந்துட்டு போன விஷயத்தை அவர்கிட்ட சொன்னாங்க. ஆனா, கொஞ்சம்கூட ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லாம எல்லாம் தெரியும்கிற மாதிரி அமைதியா கேட்டுண்டு ஒரு புன்னகை மட்டும் செஞ்சார் பெரியவா.
அவரோட அந்த தெய்வீகச் சிரிப்புக்கு என்ன காரணம்னு அடுத்த நாள் தெரியவந்துது. அன்னிக்கு மத்தியானம் பெரியவாளை தரிசிக்க வந்தவாள்ல இருந்த ரெண்டுபேர் ரொம்பவே பரபரப்பா இருந்தாங்க. அந்த ரெண்டுபேர்ல ஒருத்தர், ரொம்ப பிரபலமான இசையமைப்பாளர், இன்னொருத்தர் தெய்வீக ஓவியர். இசையமைப்பாளர், ஓவியர்கிட்டே பேசறச்சே, பரமாசார்யார்கிட்டே இருந்து ஏதோ உத்தரவு கிடைச்சிருக்கிறதாகவும், அதை நிறைவேத்தறதா வாக்குறுதி தரவே வந்திருக்கிறதாகவும் சொல்லிண்டு இருந்தார். யார் அவங்க, என்ன வாக்குறுதின்னு சொல்றதுக்கு முன்னால ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிடறேன்.
ஸ்ரீரங்கத்துக்கு ராஜகோபுரத் திருப்பணி நடந்துண்டிருந்த காலகட்டம் அது. பதிமூணு நிலைகளோட கம்பீரமா அமைக்கத் திட்டமிட்டிருந்தாங்க. ஆனா, அதுக்கான செலவு ரொம்பவே அதிகமா இருந்துது. ஒவவொரு நிலையையும் கட்ட ஒவ்வொருத்தர் பொறுப்பு ஏற்றுக்கிட்டு இருந்தாங்க. அந்த சமயத்துல ஒர நிலைக்கான செலவை ஏத்துண்டிருந்தவர்கஙளால தவிர்க்க முடியாத காரணத்தால அதை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுது. அதனால, அந்தப் பொறுப்பை வேறயாருக்காவது தரவேண்டிய கட்டாயம் வந்துது. இதையெல்லாம் விளக்கி அப்போ இருந்த ஜீயர் சுவாமிகள் மகாபெரியவாளுக்கு கடிதம் எழுதியிருந்தார். லெட்டர் வந்ததுமே, அந்தப் பொறுப்பை யார்கிட்டே ஒப்படைக்கிறதுன்னு யோசிச்சார் மகாபெரியவா. மடத்துல இருந்தவங்க ஆளுக்கு ஒரு பெரிய மனுஷா பெயரைச் சொன்னாங்க. ஆனா, பெரியவா சினிமாவுல இசைத்துறையில பிரபலமான ஒருத்தர் பேரைத்தான் தேர்ந்தெடுத்தார்.
சரி, ஆளை தேர்ந்தெடுத்தாச்சு, அவர்கிட்டே எப்படிச் சொல்றது? அவர் சம்மதிப்பாரா மாட்டாரா? இப்படி எதுவுமே தெரியாத நிலையில தான், எங்கேயோ ஒரு கிராமத்துல போக்குவரத்துக்கே கஷ்டமான பகுதியில தங்கியிருந்த பெரியவளை தரிசிக்க வந்திருந்தார் மகாபெரியவா தேர்ந்தெடுத்த அதே பிரபலமான இசையமைப்பாளர். வரிசையில் வந்த அவர், பெரியவாளை தரிசிச்சு, நமஸ்காரம் பண்ணினார். எதுவும் சொல்லாம அவரை ஆசிர்வதிச்ச ஆசார்யா, “ராத்திரி நேரமாகப் போறது, இன்னிக்கு இங்கேயே தங்கிட்டு நாளைக்குப் புறப்படுங்கோ!’ அப்படின்னு சொன்னார்.
அன்னிக்கு ராத்திரி வழக்கமான தரிசனமெல்லாம் முடிங்சப்புறம் பெரியவா அந்த ரெண்டு பேரோடயும் பேசிண்டு இருந்தார். அப்போ இசைத்துறை சம்பந்தமா, ஓவியம் சார்ந்ததா, வானத்துல இருக்கிற நட்சத்திரங்களை பத்தின்னு ஏராளமான விஷயங்களை அவாகூட பேசிண்டு இருந்தார் ஆசார்யா. ஆனா, கோபுரம் கட்டவேண்டிய விஷயத்தைப்பத்தி பெரியவா எதுவமே அப்போ சொல்லலை.
மறுநாள், நித்யகர்மா எல்லாம் முடிங்சுது. அந்த ரெண்டுபேரும் பெரியவாளை தரிசிக்க வந்தாங்க. “பெரியவா, என்னை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைக்கப்போறதா ஒரு தகவல் கிடைச்சது. இது என்னோட பாரம் இல்லை. உங்க பாரம்! இதை எப்படி நடத்திக்கணுமோ, அப்படி நீங்களாவே நடத்திப்பீங்கன்னு தெரியும். உங்க கட்டளையை நான் ஏத்துக்கறேன்’ அப்படின்னார், இசையமைப்பாளர்.
“கிட்டத்தட்ட எட்டுலட்சம் ஆகும்கறா. தொகை ரொம்ப பெரிசு. நீ எப்படிப் பண்ணுவே?’ கேட்டரா ஆசார்யா.
“இதுக்குன்னே தனியா ரெண்டு இசை நிகழ்ச்சி நடத்தலாம்னு இருக்கேன். வர்றதை அப்படியே குடுத்துடறேன். நிச்சயமா முடியும்?’
சொன்ன இசையமைப்பாளருக்கு ஆசிர்வாதம் பண்ணி ஒரு மாம்பழத்தைப் பிரசாதமா குடுத்துனுப்பினார் ஆசார்யா.
ரொம்ப சந்தோஷமா புறப்பட்டாங்க அவங்க ரெண்டு பேரும். சொன்னபடியே செஞ்சு முடிச்சார். அந்த இசையமைப்பாளர். ஸ்ரீரங்கம் கோபுரத்தோட ஆறாவது நிலை, அவரோட கைங்கரியமா கட்டப்பட்டுது.
எல்லாம் முடிஞ்சு ஸ்ரீரங்கம் கோபுரம் கட்டி முடிச்சு கும்பாபிஷேகம் நடந்த சமயத்துல மடத்துக்கு பிரசாதம் வந்துது. அன்னிக்கும் ஒரு பாம்போட நடமாட்டம் கண்ணுல பட்டதா எல்லாரும் சொல்லிண்டாங்க. அப்போதான் புரிஞ்சுது, மஹாகாவ்ல பெரியவா பூஜை பண்ணின சமயத்துல பெரிய பாம்பு வந்தது. ஸ்ரீரங்கத்துல இருக்கற அரங்கநாதரே தன்னோட அணையாக இருந்த ஆதிசேஷனை அனுப்பி, தனக்கு வேண்டியதை தானே கேட்டு வாங்கிக்க பெரியவாகிட்டே பேசியிருக்கலாங்கறது.
எல்லாம் சரி, ஸ்ரீரங்கம் கோபுரத்துல ஒரு நிலையை மகாபெரியவா ஆணைப்படி கட்டித்தந்த அந்த இசையமைப்பாளர் யார்? அவர்கூட சேர்ந்து பெரியவாளை தரிசிக்க வந்த ஓவியர் யாருன்னு சொல்லவே இல்லையேன்னுதானே கேட்கறீங்க?
இசைஞானி இளையராஜாவும், தெய்வீக ஓவியர் சில்பியும்தான் அவங்க.

பி. ராமகிருஷ்ணன் in Kumudam Bhakthi 

Natarajan