” A Mother is a Single Strongest Force in Nature and in Family…”

Happy Mother’s Day!

A mother is not just a word, it is, perhaps, the single strongest force in nature, and in family. There is always something special about the bond between a mother and child, the effortless love without condition, the interest they always show, the softness they get in their eyes sometimes as they look at their kids.Even in nature, few animals would survive without their mothers. As human we have so much to say in thanks to our mothers, these great quotes hardly do them justice.

mother's day quotes and animals

All that I am, or hope to be, I owe to my angel mother.
– Abraham Lincoln

mother's day quotes and animals

When your mother asks, ‘Do you want a piece of advice?’ it is a mere formality. It doesn’t matter if you answer yes or no. You’re going to get it anyway.
– Erma Bombeck

mother's day quotes and animals

When you are a mother, you are never really alone in your thoughts. A mother always has to think twice, once for herself and once for her child.
– Sophia Loren

mother's day quotes and animals

It is not until you become a mother that your judgment slowly turns to compassion and understanding.
– Erma Bombeck

mother's day quotes and animals

A mother’s arms are made of tenderness and children sleep soundly in them.
– Victor Hugo

mother's day quotes and animals

My mother’s love has always been a sustaining force for our family, and one of my greatest joys is seeing her integrity, her compassion, her intelligence reflected in my daughters.
– Michelle Obama

mother's day quotes and animals

Yes, Mother. I can see you are flawed. You have not hidden it. That is your greatest gift to me.
– Alice Walker

mother's day quotes and animals

For me, nothing has ever taken precedence over being a mother and having a family and a home.
– Jessica Lange

mother's day quotes and animals

Children are the anchors of a mother’s life.
– Sophocles

mother's day quotes and animals

The heart of a mother is a deep abyss at the bottom of which you will always find forgiveness.
– Honore de Balzac

mother's day quotes and animals

Biology is the least of what makes someone a mother.
– Oprah Winfrey

mother's day quotes and animals

An ounce of mother is worth a pound of clergy.
– Rudyard Kipling

mother's day quotes and animals

There is nothing in the world of art like the songs mother used to sing.
– Billy Sunday

mother's day quotes and animals

My mother gave lots of good advice and had a lot to say. As you get older, you realize everything she said was true.
– Lenny Kravitz

mother's day quotes and animals

My doctor told me I would never walk again. My mother told me I would. I believed my mother.
– Wilma Rudolph

mother's day quotes and animals

My mother protected me from the world and my father threatened me with it.
– Quentin Crisp

mother's day quotes and animals

Happy is the son whose faith in his mother remains unchallenged.
– Louisa May Alcott

mother's day quotes and animals

A mother is a mother still, The holiest thing alive.
– Samuel Taylor Coleridge

mother's day quotes and animals

Be able to confide your innermost secrets to your mother and your innermost fears to your father.
– Marilyn vos Savant

mother's day quotes and animals

Proving I’m a good mother is the one achievement I’m most proud of. It’s brought out the best in me.
– Sheena Easton

mother's day quotes and animals

Whatever else is unsure in this stinking dunghill of a world a mother’s love is not.
– James Joyce

mother's day quotes and animals

Because I am a mother, I am capable of being shocked: as I never was when I was not one.
– Margaret Atwood

mother's day quotes and animals

What a mother sings to the cradle goes all the way down to the coffin.
– Henry Ward Beecher

mother's day quotes and animals

The babe at first feeds upon the mother’s bosom, but it is always on her heart.
– Henry Ward Beecher

mother's day quotes and animals

For when a child is born the mother also is born again.
– Gilbert Parker

mother's day quotes and animals

As a mother, you have that impulse to wish that no child should ever be hurt, or abused, or go hungry, or not have opportunities in life.
–  Annie Lennox

mother's day quotes and animals

Career is important, but nothing really supersedes my roles as a mother.
– Halle Berry

Source….www.ba-bamail.com

Natarajan

கிருஷ்ணாவின் பயணம்: பாடம் கற்றுத் தரும் ஆந்திர மக்கள்…

அழகுற காட்சியளிக்கும் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான படித்துறை. படங்கள்:க.ஸ்ரீபரத்

அழகுற காட்சியளிக்கும் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான படித்துறை. படங்கள்:க.ஸ்ரீபரத்

ஊத்துக்கோட்டை டூ ஸ்ரீசைலம்

– எஸ்.சசிதரன்

தமிழக எல்லைப் பகுதியான ஜீரோபாயின்டிலிருந்து கடந்த 27-ம் தேதி பயணத்தைத் தொடங்கினோம். காலை 7.30 மணி அளவில் அங்கு அடைந்தபோது, தமிழகத்துக்கு தெலுங்கு கங்கை கால்வாயில் தண்ணீர் கொஞ்சமாக வந்துகொண்டிருந்தது. அங்கிருந்து, கால்வாயைத் தொடர்ந்தபடி காளஹஸ்தி அருகே சென்றபோது, சில இடங்களில் தண்ணீர் ஆந்திரப் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

இதுகுறித்து தெலுங்கு கங்கை திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அணையில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும்போது நீரோட்டம் குறைவதால், சிறிதளவு நீர் தாழ்வான பகுதிகளில் பின்னோக்கி ஓடுவது இயல்பே’ என்று விளக்கமளித்தனர், பின்னர், பயணத்தைத் தொடர்வதற்கான வழியைப் பற்றி தெளிவாக விளக்கினர்.

அடுத்து, சிற்றூர்கள் வழியாக நெல்லூர் மாவட்டம், வெங்கடகிரியை அடைந்தோம். அங்கு விவசாயிகளைச் சந்தித்துப் பேசினோம். தொடர்ந்து, ராப்பூர் வழியாக, சென்னையில் இருந்து 152 கிமீ தொலைவில் உள்ள சென்னைக்கு தண்ணீர் திறக்கப்படும் கண்டலேறு பிரதான நீர்போக்கிக்கு சென்றோம். கண்டலேறு அணையில் பழைய மதகுகளை மாற்றிவிட்டு, மின்விசை மதகுகளை அமைக்கும் பணி நடந்துவந்தது.

கண்டலேறுவில் இருந்து திறக்கப் படும் நீர், சில கிமீ தொலைவில் உள்ள இயற்கையாக அமைந்த சிறிய நீர்த்தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து தான், சாய்கங்கா கால்வாய் தொடங்கு கிறது. கண்டலேறு நீர்த்தேக்கத்தில் குறைந்தபட்ச தண்ணீர் திறந்துவிடும் அளவைக் காட்டிலும் இருப்பு குறைவாக இருந்ததால், சென்னைக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கரையையொட்டி அமைந்த சிறிய சாலையில் ஆதிருபள்ளி கிராமத்தைக் கடந்தோம். அங்குதான், கண்டலேறு நீர்த்தேக்கப் பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அரசு வீடுகளைக் கட்டித் தந்துள்ளது.

இரவில் நெல்லூரில் தங்கினோம். காலையில், மலைப்பாங்கான பகுதி களைக் கடந்து கண்டலேறுவிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள கலுவாய் என்ற நகருக்கு அருகில் பிரம்மாண்டமாக, இரு மலைகளுக்கு நடுவில் அழகாக அமைந்துள்ள சோமசீலா அணையை அடைந்தோம். ஸ்ரீசைலத்திலிருந்து வரும் கிருஷ்ணா நீர், மசீலாவை அடைந்து, அதன்பிறகு கண்டலேறுவுக்குச் செல்கிறது.

சிறிய ஊர்கள் வழியாக, கடப்பா மாவட்டத்துக்குள் நுழைந்தோம். கடப்பாவுக்கு சற்று தொலைவில் உள்ள பத்வேலில் தேநீர் அருந்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சற்று பெரிய ஊரான தெலுங்கு கங்கை கால்வாய் அருகில் அமைந்துள்ள புரொதொட்டூரில் தங்கினோம்.

மறுநாள் காலையில் அஹோபிலம் நோக்கிப் பயணம். அடர்ந்த வனப்பகுதியில் அஹோபிலம் வழியாகக் கடக்கும் கால்வாய்ப் பகுதியைப் பார்ப்பதற்கு சற்று மிரட்சியாக இருந்தது. அங்கிருந்து நந்தியால் வழியாக வெளுகோடு நீர்போக்கியைப் பார்த்துவிட்டு, ஸ்ரீசைலம் வனப் பகுதியினூடே பயணம் தொடங்கியது. மிக ரம்மியமான காட்சிகள். இருந்தாலும் ஆங்காங்கே புலி படங்களைப் பார்த்தபோது லேசாக கிலி ஏற்பட்டது. வழியில், ஒய்.சேர்லபள்ளி என்ற மலைகிராமத்தில், தேநீர் அருந்த நிறுத்தியபோது, அரசு பள்ளிக்கூடத்தை பார்க்கமுடிந்தது. தேநீர்க்கடைக்காரர் கூறுகையில், பள்ளிகள் இருந்தாலும் அங்கு வசிக்கும் மக்கள் தேன் எடுப்பது போன்ற வேலைகளிலே ஆர்வம் காட்டுவதாக வருத்தப்பட்டார். புலியால் இதுவரை பிரச்சினை எதுவும் இல்லை என்றார்.

பின்னர், அங்கிருந்து, கீழ் ஸ்ரீசைலம் எனப்படும் தோர்னாலா நகருக்கு வந்தோம். அங்கிருந்து ஐதராபாத், ஒங்கோல் நகரங்களுக்குச் சாலை பிரிகிறது. இங்குதான் மலைவாழ் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். அங்கிருந்து, ஸ்ரீசைலம் சென்று சேர இரவாகிவிட்டது.

மறுநாள் காலை, ஸ்ரீசைலம் அணையின் பின்பகுதிக்குச் சென்றோம். பல நூறு படிகளைக் கடந்து கீழே சென்றால் கிருஷ்ணா கரையை அடையலாம். சுற்றுலாத் துறை படகில் அணைக்கு அருகில் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அணையின் ஒரு பகுதி தெலங்கானாவுக்குச் சொந்தம். அங்கிருந்து அணையின் முகப்பைப் பார்வையிட 15 கிமீ சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. அணையின் முகப்பைப் பார்த்துவிட்டு, பயண நினைவுகளை அசைபோட்டபடியே ஒங்கோல் நோக்கிப் புறப்பட்டோம். அங்கிருந்து, காலையில் நெல்லூருக்குப் புறப்பட்டு மாலையில் புழல் நீர்த்தேக்கத்தை அடைந்தபோது, அந்த ஏரி ஏற்கெனவே வரப்பெற்றிருந் கிருஷ்ணா நீரால் நிரம்பி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 5 நாட்களில் நாங்கள் மேற்கொண்ட 1400 கிமீ பயணம் இனிதாய் அமைந்தது.

பாடம் கற்றுத் தரும் ஆந்திர மக்கள்

– டி.செல்வகுமார்

சென்னையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை பயணம் செய்தபோது அடர்ந்த காடுகள், குக்கிராமங்கள், கிராமங்கள், சிறிய நகரங்கள், நகர்ப்புறம் வழியாக கிருஷ்ணா கால்வாயை மட்டுமல்லாமல், அதை யொட்டி வாழும் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வாழ்க்கை முறைகளையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கண்ணுற்ற பல விஷயங்கள் ஆச்சரியப்பட வைத்தன.

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை சென்றடைந்தபோது, தமிழக எல்லைப் பகுதியில் கண்டலேறு பூண்டி கால்வாய் (கிருஷ்ணா கால்வாய்) சில இடங்கள் சிதைந்தும், குப்பை மண்டியும் கிடந்தன.

ஆனால், அங்கிருந்து ஆந்திர மாநிலத்துக்குள் நுழைந்ததும் சற்று வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் ஒரு இடத்தில்கூட பிளாஸ்டிக் குப்பை இல்லை. மக்கள் துணிகள், பாய்களை துவைக்கவும் இல்லை.

நெல்லூர் மாவட்டம் ராப்பூர் அருகில் வீட்டுக்கு அருகே கிருஷ்ணா கால்வாயில் ஓடினாலும், அங்கு துணிகளைத் துவைக்காமல், சற்றுத் தொலைவில் உள்ள கை பம்பில் நீர் பிடித்து பெண்கள் துணி துவைத்ததனர்.

கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் பகுதியிலும், வறண்டு கிடக்கும் இடங்களிலும் கால்வாய் கட்டமைப்பு உடைந்தோ, சிதைந்தோ இல்லை. தண்ணீர் ஓடும் இடத்தில் தெளிந்த நீரோடைபோல பளிச்சென காட்சியளிக்கிறது கால்வாய். ஆந்திர அரசும், அம்மாநில மக்களும் கண் இமைபோல கிருஷ்ணா கால்வாயைப் பேணிப் பாதுகாப்பது வியப்பாக இருந்தது.

ராப்பூர் அருகே கிருஷ்ணா கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்த நீர்த்தேக்கமும் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது. அந்தளவுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி பராமரிக்கப்படவில்லை. பொதுப்பணித் துறையின் முறையான கண்காணிப்பும் இல்லை.

ஆந்திரத்தில் கிருஷ்ணா கால்வாயின் பக்கவாட்டில் மட்டுமல்லாமல், அடிப்பகுதியிலும் கான்கிரீட் போட்டிருப்பதால் தண்ணீர் துளியும் உறிஞ்சப்படாமல் வேகமாக ஓடி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கால்வாயின் பக்கவாட்டில் மட்டும் கான்கிரீட் போட்டிருக்கிறார்கள்.

கால்வாயை சுத்தமாகப் பராமரிப்பது குறித்து கிராம மக்கள் சிலரிடம் கேட்டபோது, “கர்னூல், கடப்பா மாவட்டங்கள் மிகவும் வறண்ட பகுதிகள். தெலுங்கு கங்கை திட்டம் நிறைவேற்றப்பட்டு கிருஷ்ணா நதி நீர் வந்த பிறகே எங்கள் பகுதியில் விவசாயம் நடக்கிறது. தண்ணீரை ஒருபோதும் வீணாக்கவோ, அசுத்தம் செய்யவோ மாட்டோம்” என்றனர்.

மழைநீரை உயிர் நீராகக் கருதி, அதைச் சுமந்து வரும் கிருஷ்ணா கால்வாயை பேணிப் பாதுகாத்து வரும் ஆந்திர மக்களை மெச்சலாம்.

பெத்த ஓட்டல்.. மஞ்ச்சி ஓட்டல்..

– சி.கணேஷ்

கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு வரும் பாதை வழியாக பயணம் புறப்பட்ட எங்களுக்கு இருந்த ஒரே பயம், ஆந்திர உணவுதான், மிளகாய் காரம். நினைத்துப் பார்க்கும்போதே உடலே எரிந்தது. எனினும், மனதை தேற்றிக் கொண்டு புறப்பட்டோம்.

காலையில் ஆந்திர எல்லை ஊத்துக்கோட்டைக்கு சென்று ஜீரோ பாயின்ட் பகுதியை பார்த்துவிட்டு பெரியபாளையத்தில் காலை உணவை முடித்தோம்.

மதிய உணவுக்காக நெல்லூர் மாவட்டம் ராப்பூர் சென்று, பலரிடம் விசாரித்துத் தேடி அங்கு பிரபலமாக பேசப்படும் ‘பிரண்ட்ஸ் மெஸ்’சை அடைந்தோம். அங்கிருந்து, பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் உணவகம் தேடுவதற்காக நாங்கள் பயன்படுத்திய வாசகம்தான் ‘பெத்த ஓட்டல்..மஞ்ச்சி ஓட்டல்..’

கண்டலேறு அருகில் பாதுகாப்பான தங்குமிடம் இல்லாததால், சற்று தொலைவில் உள்ள நெல்லூ ருக்குச் சென்று ‘மஞ்ச்சி’ ஓட்டலில் தங்கி, முரளி கிருஷ்ணா ஓட்டலில் இரவு உணவை முடித்தோம்.

மறுநாள், சோமசீலா நீர்த்தேக்கத்தை பார்த்துவிட்டு புறப்படும்போது பழங்கள்தான் மதிய உணவாகின. அதன்பிறகு, கடப்பா மாநிலம் புரதொட்டூர் சென்றோம். திலகா உணவகத்தில் இரவு உணவை முடித்தோம். மறுநாள் முழுவதும் ஸ்ரீசைலத்தில் சென்றது. சென்ற இடங்களில் எல்லாம் ‘பெத்த ஓட்டல்..மஞ்ச்சி..’ ஓட்டல் வாசகத்தை சொல்ல நாங்கள் மறக்கவில்லை.

பாசத்தையும் பக்தி உணர்வையும்..

ஸ்ரீசைலத்தில் இருந்து ஆந்திர மக்களின் சகோதர பாசத்தை சென்னைக்கு சுமந்து வரும் கிருஷ்ணா நதி நீர், பல ஆன்மிகத் தலங்களைக் கடந்து பூண்டியை அடைகிறது.

ஸ்ரீசைலம்:

இங்கிருந்துதான் தமிழத்துக்கான கிருஷ்ணா நீர், கால்வாயில் திறந்துவிடப்படுகிறது. இது ஆன்மிகத் தலம் மட்டுமின்றி, சுற்றுலாத்தலமும்கூட. இங்கு ஸ்ரீமல்லிகார்ஜூனர் கோயில் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணா நதி நீர் சேரும் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கப் பகுதியில் கங்கை மாதா வந்து சென்றதாக ஐதீகம் இருப்பதால், இப்பகுதி பாதாள கங்கை என அழைக்கப்படுகிறது.தவிர, அக்கம்மா தேவி குகையும் ஆன்மிகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

நந்தியால்:

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம், நந்தியால் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் நந்தியால் மகாநந்தீசுவரர் கோயில் உள்ளது. நாட்டில் உள்ள முக்கியமான 9 நந்தி கோயில்களில் பிரதானமான மகாநந்தி இங்கு உள்ளது.

அஹோபிலம்:

நந்தியாலுக்கு முன்பாக 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது அஹோபிலம். நரசிம்மர் வீற்றிருக்கும் இக்கோயில், கீழ் அஹோபிலத்தில் உள்ளது. இதுபோன்ற பல குடைவரை கோயில்கள் மேல் அஹோபிலம் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.

காளஹஸ்தி:

கிருஷ்ணா கால்வாய், சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி அருகில் கடந்து செல் கிறது. இறுதியாக கல்வாய் வந்து முடியும் இடம் பூண்டி நீர்த்தேக்கம். பூண்டி நீர்த்தேக்கம் 1943-ம் ஆண்டு கட்டப்படுவதற்கு முன் இப்பகுதியில் திருவலம்புதூர் என்ற பகுதி இருந்தது. இங்கு ஊன்றீசுவரர் என்ற சிவன் கோயில் இருந்தது. நீர்த்தேக்கம் கட்டுவதற்காக கோயில் அப்புறப்படுத் தப்பட்டு தற்போது பூண்டி நகர்ப் பகுதியில் அமைந் துள்ளது. நாயன்மார்களில் முக்கியமானவரான சுந்தரரால் பாடப்பெற்ற தலம் இது.

வனச் சரணாலயங்கள்..

கிருஷ்ணா கால்வாய், வரும் வழிநெடுகில் பல இடங்களில் அடர்ந்த காடுகளைக் கடக்கிறது. கிருஷ் ணாநீர் கடந்து வரும் ஸ்ரீசைலத்தில் நாகார்ஜூன சாகர் ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. கிருஷ்ணா நதி நீர், தென் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நல்லமலை வனப் பகுதியில் 130 கிமீ ஊடுருவி வருவது குறிப்பிடத்தக்கது. தவிர, ஸ்ரீசைலம் வன விலங்கு சரணாலயமும் இப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும், நந்தியால் அருகே வெளுகோடு காப்புக்காடு பகுதியும் அமைந்துள்ளது. இதில் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நினைவாக, ஒய்எஸ்ஆர் ரெட்டி ஸ்மிருதி வனம் என்ற பல்லுயிர் பூங்கா அமைந்துள்ளது. இங்கு வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆத்மகூர்- வெளுகோடு சாலையில் இந்த வனப்பகுதி அமைந்துள்ளது.

வியக்க வைத்த ஆந்திர சாலைகள்

– வி.சாரதா

ஆந்திரத்தில் கிருஷ்ணா கால்வாய் வழியாக பயணம் செய்தபோது, சாலைகளின் தரத்தைப் பார்த்து வியப்பு மேலிட்டது.

குக்கிராமங்களைக் கடந்து சென்ற சாலைகள் அனைத்தும் தரமானவையாக இருந்தன. சில சிற்றூர்களில் 12 அடி அகலமே சாலைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், குண்டு குழிகளற்று, மேடு பள்ளங்கள் இல்லாமல் பராமரிக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் சாலைப் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருவதையும் பார்த்தோம்.

வறட்சி, நீர்த் தட்டுப்பாடு காரணமாக குடிநீர் வசதி இல்லாத இல்லாத கிராமங்களையும் தார்சாலை கொண்டு நகரப் பகுதிகளுடன் இணைத்திருந்தனர். பேருந்துகள் அனைத்தும் தரமானவையாக, குறிப்பாக இருபுறங்களிலும் கதவுகளுடன் இருந்ததைக் காண முடிந்தது.

எல்லா கிராமங்களிலும் டிராக்டர் போக்குவரத்து அதிகமாக இருந்தது. விவசாய உற்பத்திப் பொருட்களை நகரங்களுக்கு எடுத்துச் செல்ல அணுகு சாலைகளும், டிராக்டர்களும் விவசாயிகளுக்குப் பேருதவியாக உள்ளன. தெலுங்கு கங்கை கால்வாய்களை ஒட்டி சில இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் கால்வாய் நீரோட்டத்தை பார்வையிட்டபடி பயணித்தோம்.

ஆந்திர மக்களின் அன்பு..

தெலுங்கு கங்கை திட்டத்தின் கரையில் அமைந்த விவசாய கிராமங்களின் ஊடாக பயணம் மேற்கொள்ளவேண்டுமெனில், தமிழகத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வழக்கமாகத் தேர்ந்தெடுக்கும் பொதுவான வழித்தடங்களில் செல்ல முடியாது. நாங்கள் சென்ற வாகனம் பல இடங்களில் வனப் பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த நல்லமலா காடுகள் அவற்றில் குறிப்பிடத்தக்கது.

அங்கு புலிகள் நிறைந்த காப்புக்காடுகளையும் கடக்க வேண்டியிருந்தது. குக்கிராமங்களினூடேயும், நகரங்களினூடேயும் வழித்தடத்தை விசாரித்தபடியே பயணத்தைத் தொடர்ந்தோம். தமிழகத்திலிருந்து வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் என்பதை அறிந்தபோது, மக்கள் மிகுந்த கனிவுடனும் இன்முகத்துடனும் எங்களை வரவேற்றனர். அறியாத வழித்தடங்களை விசாரித்தபோது மகிழ்ச்சியுடன், தயக்கமின்றி உதவினர். தமிழகத்தின் பல கிராமங்களில் நிலவும் நட்புணர்வு, ஆந்திர கிராமங்களிலும் நி லவியது.

தெலுங்கு கங்கை கால்வாய் என்று கேட்டால் “மதராஸ் கால்வாய்தானே?” என்று மகிழ்ச்சியுடன் எதிர்க் கேள்வி கேட்டார்கள். சென்னை மாநகரத்துக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய் அதுதான் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது. பெரிய நகருக்கு தண்ணீர் தருகிறோம் என்ற

பெருமிதமும் அவர்கள் கண்களில் தெரிந்தது. யாரிடமும் வெறுப்பு இல்லை.

தமிழில் பேசி உதவுவதற்கும் பலர் முயன்றார்கள். பருவமழை பொய்த்துப் போயிருந்ததால் கிராமங்கள் வறண்டிருந்தன. ஆயினும், அவர்களது அன்பில் வறட்சி யில்லை.

Source…..’தி இந்து’ குழுவினர் in http://www.tamil.thehindu.com
Natarajan

படித்து ரசித்தது …” கட்டாய வசூல் கூடாது …”!!!

பரந்தாமன் எழுதிய, ‘ராஜாஜி நூற்றுக்கு நூறு’ நூலிலிருந்து:
இரண்டாம் உலகப் போரின் போது, ஆங்கில ஏகாதிபத்தியம், தன் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளிடமிருந்து உணவாக, பொருட்களாக மற்றும் பல வகையிலும் ஆதரவு திரட்டியது போல, இந்தியாவிலும் திரட்டியது. இப்பணியில், ஆங்கிலேய அதிகார வர்க்கம் வெளிப்படையாகவே ஈடுபட்டிருந்தது.
ராஜாஜியை பின்பற்றக்கூடிய தலைவர்களுள் ஒருவர், யுத்த நிதி வசூலை வெளிப்படையாக எதிர்த்துப் பேசியதன் மூலம், ‘ஜெர்மனிக்கு ஆதரவாக இருந்தார்…’ என்று குற்றம் சாட்டி, அவர் மீது வழக்கு தொடுத்தனர். ஆங்கிலேய அதிகாரிகள். அவர், அவ்வழக்கை எதிர்த்து, இரு வழக்கறிஞர்களை நியமித்த ராஜாஜி, ‘அரசுக்கு எதிராக ஜெர்மானியர்களை ஆதரித்து பேசினார் என்று சொல்வது சரி அல்ல; இது, அதிகாரிகளின் கற்பனை. மக்களாக வலிய வந்து, போர் நிதி தருவதை அவர் தடுக்கவில்லை; அவர் எதிர்த்ததெல்லாம், மக்களிடம் கட்டாயமாக வசூலிப்பதை தான்…’ என்று, அவர்களுக்கு பேச சொல்லி யோசனை தந்தார்.
இது, சாதாரண வாதம் போல தெரிந்தாலும், அவரது மதிநுட்பமும், ஆழ்ந்த சட்ட அறிவும், அதிகாரிகளை இதில் சிக்க வைத்து விட்டது. அவர் எதிர்பார்த்தபடியே அதிகாரிகள் மாட்டிக் கொண்டனர்.
அரசு சட்ட நிபுணர்களோ, ‘கட்டாய போர் நிதி வசூலிக்கவில்லை; பணமோ, பண்டமோ, மக்களாக விரும்பி முன் வந்து வழங்க வேண்டும் என்று தான் அரசு அறிவித்திருந்தது…’ என்று வாதிட்டனர். இப்படி அவர்கள் பதில் சொல்வர் என்று எதிர்பார்த்த ராஜாஜி, அதற்கு ஒரு பதிலையும் வழக்கறிஞர்களுக்கு சொல்லி தந்திருந்தார்.
அதன்படி வழக்கறிஞர்கள், ‘எல்லா அதிகாரங்களையும், தன்னகத்தே கொண்டுள்ள ஆட்சி, சாதாரணமாக வேண்டுகோள் விடுப்பது கூட, மறைமுகமாக கட்டாயத்தில் சேர்ந்தது தான். மக்கள், அதை சர்க்கார் உத்தரவாகத் தான் எடுத்துக் கொள்வர்…’ என்று கூறி,
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும், கோலொடு நின்றான் இரவு – என்ற திருக்குறளைச் சொல்லி,
‘மனித சஞ்சாரமில்லாத காட்டு வழியே, ஒரு மனிதன், தனியாக மூட்டையோடு வருகிறான்; எதிரில், கையில் வேலோடு வருபவன், ‘அந்த மூட்டையை கொடு…’ என்று அதிகாரமாக கேட்டாலே போதும், ‘கொடுக்காவிட்டால் வேலால் குத்துவேன்…’ என்று சொல்லத் தேவையில்லை. என்பதுதான் இக்குறளின் விளக்கம்…’ என்றதும், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Source……..www.dinamalar.com

Natarajan

Power of One Rupee…

Students get the accumulated amount at the end of the year. Photo: Special Arrangement

Students get the accumulated amount at the end of the year. Photo: Special Arrangement

Lions Club of Central Chennai has been giving Re. 1 to every student at Brinda Primary School to reduce the dropout rate and absenteeism, reports K. Sarumathi.

What is the value of a rupee? A lot, if you ask Hari Narayanan, project coordinator of the Lions Club of Central Chennai.

When he read an article on how the Municipal Corporation of Thane checked the dropout rate in municipal schools in the region by distributing Re. 1 to every student every day, Narayanan was immediately attracted to the idea. He thought of replicating the method in Chennai Schools.

“The Thane Municipality was my inspiration and when I put forth the idea to other members of Lions Club of Central Chennai, they were more than happy to start the project,” he says. However, getting the go-ahead from the Corporation, they knew, would be almost impossible. Therefore, they selected a primary school run by the Gopalapuram Educational Society for poor children. At the Brinda Primary School, this initiative has been going on for seven years now.

“Most of these children are sons and daughters of maids, daily wage earners and others engaged in menial jobs. Through this small incentive, it has been ensured that these children attend school regularly,” says Malarvalli, the school principal, who is is going to retire this year, after 32 years in service. To start with, the programme was aimed at only girl students. “Though these children were given free uniforms and book and nourishing meals, they were hardly interested in coming to school. Also girls were held back for taking care of chores at home on most days. When we announced the project, parents ensured they sent their daughters to school every day. We have a fall in the dropout rate as well as absenteeism,” says Narayanan.

Though intake of students has been quite low in this school in Class 1, the management is happy that it is able to carry on with minimum dropouts.

“We want the school to survive for those who can’t afford English education and we want students to continue finishing their primary schooling here. That is the idea behind the initiative,” he says.

Regular attendance has also meant improvement in studies for these children. “Under the ABL method, they are assessed every day. Since they take fewer days off they are able to score better and learn more. Our teachers are totally dedicated as well. They have gone from door to door asking parents to send their wards to this school and benefit from the initiative,” says Malarvalli.

Seeing the popularity of the initiative, parents of boys also approached the Lions Club asking them to give their sons a similar incentive. “For four years now, even boys in the school are getting the amount for attendance,” says Narayanan.

Depending on the number of days they come to school, the accumulated amount is presented to the students at the end of the year in a grand function where parents are also invited. The club has also invested in some infrastructural development of the school such as laying new pavements, creating toilets and installing an RO plant for safe drinking water.

Source….K.Sarumathi in http://www.the hindu.com

Natarajan

This one is For you Mom…..

We’d invited you, our dear readers to share pictures of you and your mother. Here are few responses from the readers..

Priyanka Kumar and her mother.

This is Angshuman Sengupta with his mother when he was all of six months old in 1970.

Ghali Srinivasarao shares this picture of her and her son Phanindra taken some 30 years ago!

Source….www.rediff.com

Natarajan

Message For the Day…” Understand the ‘Brahman’ Phenomenon…”

It is an arduous process for people to become aware of the ‘One’ that is their core. The gross body is the product of the food consumed. But within, there is a subtler force, an inner vibration named vital air (prana). The mind(manas) within is subtler still, and deeper and subtler than the mind is the intellect (vijnana). Beyond the intellect, people have in them the subtlest sheath of spiritual bliss (ananda). When one delves into this region of spiritual bliss, the reality, the Brahman or the One can be experienced. That awareness is indeed the most desirable. In the Taittiriya Upanishad, while teaching his son Bhrigu the Brahman phenomenon, Varuna says, “Son!Brahman cannot be seen through the eyes. Know that Brahman is that which enables the eyes to see and the ears to hear. He can be known only through extreme yearning in a cleansed mind and concentrated thought. No other means can help.”

Sathya Sai Baba

Message For the Day…” What is Ultimate…” ?

In Taittiriya Upanishad, Varuna directed his son Bhrigu to enter upon spiritual exercises that would ultimately reveal the Truth. Brighu, with full faith in his father’s words, immersed himself in concentrated spiritual practices. When he returned and declared what he had come to know, that food was Brahman, his father told him that his answer was not right. So Brighu continued the spiritual practices and came back with deeper answers, that Prana or vital air is Brahman, then the Mind, and later that the Intellect (Vijnana) is. But each time he was sent back by his father to search deeper. After undergoing a fifth course of spiritual practices, he became aware that spiritual bliss (ananda) was Brahman. Brighu stayed in the bliss of that awareness and never needed to consult his father again. The father then, himself sought Bhrigu, and congratulated him and said, “Son! You have merged in that vision.” Every being must march on to the goal, from food to bliss.

Sathya Sai Baba

Image of the Day…

Mammatus clouds at sunset, over Idaho

Mammatus clouds can appear ominous. But, in a way that’s so common in nature, their dangerous aspect goes hand in hand with a magnificent beauty.

View larger. | Mammatus clouds at sunset submitted by Andrew Ashton in Nampa, Idaho.  Thanks, Andrew!

Andrew Ashton in Nampa, Idaho submitted this beautiful shot, which I believe he captured earlier this week. The pouch-like protrusions hanging from the undersides of these clouds are called mammatus clouds.

One interesting aspect of mammatus clouds is that they’re formed by sinking air. Most clouds are formed by rising air. They typically indicate stormy weather, but, contrary to myth, they don’t continue extending downward to form tornados.

Source…….www.earthsky.org

Natarajan

அரசுப் பள்ளி > ஐ.ஐ.எம். > விப்ரோ – ஒரு நிகழ்கால சாதனைக் கதை…

அரசுப் பள்ளிகள் குறித்து இப்போது பேசினாலே ‘அதெல்லாம் அந்தக் காலக் கதை. சுகமான நினைவுகள். இப்போதெல்லாம் அரசுப் பள்ளிகள் எப்படி இருக்கின்றன என்பது நமக்குத் தெரியாதா?’ என்பது போன்ற விமர்சனங்களே அதிகம் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் நிகழ்கால உதாரணம்தான் எர்நெஸ்டோ திலீபனின் சாதனைக் கதை.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பள்ளியுடன் போராடி, ‘இனியும் தனியார் பள்ளியில் விட்டால் மகனின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்’ என்று அரசுப் பள்ளியில் தங்கள் மகன் எர்நெஸ்டோ திலீபனை சேர்த்தார்கள் அவரது பெற்றோர் காளிதாசனும் கலைச்செல்வியும். கலைச்செல்வி, அரசுப் பள்ளி ஆசிரியை என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.

அந்த அரசுப் பள்ளிதான் திலீபனுக்கு புதிய உலகைத் திறந்து காட்டியது. அந்த அரசுப் பள்ளிதான் இந்திய மாணவர்களின் கனவான ஐ.ஐ.எம்முக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்துச்சென்றது. படிப்பை முடிக்கும் முன்பே ஆறு இலக்க ஊதியத்தில் வேலை கிடைக்கக் காரணமாக அமைந்தது.

இப்போது சென்னையில் விப்ரோ நிறுவனத்தின் வணிக ஆய்வியல் நிபுணராக இருக்கிறார் திலீபன். “கோவையில் பிரபலமான தனியார் பள்ளியில் என்னை சேர்த்தனர். 10-ம் வகுப்பு வரை படித்தேன். ஏனோ தெரியவில்லை பள்ளி செல்லவே அப்போது எனக்குப் பிடிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு வரைக்கும் மக்குப் பிள்ளை நான் – ஆம், பள்ளியில் அப்படித்தான் என்னை அழைத்தார்கள். ரேங்க் பட்டியலில் கடைசியில் இருப்பேன். ஆறாவதுக்கு மேல்தான் ஓரளவு படித்தேன். தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் வறுத்தெடுப்பார்கள், அடிப்பார்கள் என்பதற்காகப் படித்தேன்.

பள்ளியே சிறையானது. காலையில் எட்டரை மணிக்குப் பள்ளிக்குச் சென்றால் சிறப்பு வகுப்புகள் எல்லாம் முடித்துவிட்டு மாலை 7 மணிக்குதான் வீடு திரும்ப முடியும். அரட்டை கிடையாது, விளையாட்டு கிடையாது, முழுக்க முழுக்கப் புத்தகம், நோட்ஸ் இவையே உலகமானது.

‘சொன்னதைச் செய்’

புத்தகத்தைத் தாண்டி எதுவுமே தெரியவில்லை. தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது? பறவை எப்படிப் பறக்கிறது? என்பது போன்ற சிறு பொது அறிவு விஷயங்கள்கூடத் தெரியாது. பள்ளியில் கேள்வி கேட்க முடியாது. ‘சொன்னதைச் செய்’ என்பார்கள். அங்குள்ள ஆசிரியர்களையும் குறை சொல்ல முடியாது என்பதை பின்னாட்களில் உணர்ந்தேன். மதிப்பெண் எடுப்பது தொடர்பாக அவர்களும் நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தில் இருந்தார்கள்.

மொத்தத்தில் பள்ளிப் பிராயத்துக்கே உரிய சுட்டித்தனம் சுத்தமாக இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் பேச்சே குறைந்தது. யாருடனும் சகஜமாக பேச மாட்டேன். பயங்கரக் கூச்சம், தயக்கம், இனம் புரியாத பயம்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பத்தாம் வகுப்புப் பாடம் எடுத்தார்கள். இயந்திரத்தை விட மோசமாக மாறியது வாழ்க்கைச் சூழல். பள்ளிக்கூடம் செல்வதை நினைத்தாலே காய்ச்சல் அடிப்பதுபோல இருந்தது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் என்னை 90.5% மதிப்பெண் எடுக்க வைத்துவிட்டார்கள். பள்ளியில் மூன்றாவது இடம். புகைப் படம் எடுத்தார்கள். செய்தித்தாளில் போட்டார்கள். ஆனால், துளியும் மகிழ்ச்சி இல்லை அப்போது. அந்தப் பள்ளியை விட்டு சென்றால் போதும் என்றாகிவிட்டது. அங்கு செல்லவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தேன்.

தேசிய வங்கியொன்று நடத்தும் பிரபலமான பள்ளியில் இடம் கிடைத்தது. அட்மிஷன் போட்டாயிற்று. அங்கும் கடுமையான கட்டுப்பாடுகள் என்றார்கள். கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல ஆகிவிட்டது. படிப்பே வேண்டாம் என்றேன். என் மனவோட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவர் என் அம்மா. “நீ வாடா, நான் வேலை பார்க்கும் அரசுப் பள்ளியில் உன்னைச் சேர்க்கிறேன்’ என்றார்.

‘அய்யே அரசுப் பள்ளியா? தனியார் பள்ளியே இந்த லட்சணம் என்றால் அரசுப் பள்ளி எப்படி இருக்கும்?’ என்றேன். நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர் என எல்லோரும் ‘உங்களுக்குப் பைத்தியமா? சாதாரணமாக இடமே கிடைக்காது என்று கருதப்படும் தனியார் பள்ளியிலே இடம் கிடைத்திருக்கிறது, போயும் போயும் அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டுமா’ என்று அம்மாவைத் திட்டினார்கள்.

அம்மா என்னிடம் கேட்டார், ‘என் மீது நம்பிக்கை இருந்தால் வா. அரசுப் பள்ளி என்றால் என்னவென்று காட்டுகிறேன், அரசு ஆசிரியர்கள் என்றால் யார் என்று காட்டுகிறேன். அரசுப் பள்ளி என்றால் அவமானம் இல்லை என்று காட்டுகிறேன்…’ என்றார். அம்மா அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதை முதல்முறையாகப் பார்த்தேன். அம்மாவுக்காகச் சென்றேன்.

சுற்றுலா வந்ததுபோல் இருந்தது!

கோவை அசோகபுரம் அரசுப் பள்ளி. முதல் நாள்… பையன்கள் கிழிந்த, அழுக்கு சட்டையோடு வருவார்கள், பள்ளிக்கூடம் குப்பையாக இருக்கும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். எல்லாமே நினைத்ததற்கு மாறாக இருந்தது. பெரிய மைதானம். சுற்றிலும் மரங்கள். குறிப்பாக, யாரோடும் பேசலாம், அரட்டை அடிக்கலாம் என்ற சூழல்.

முதல்முறையாக ஐந்தாறு மாணவர்களுடன் அமர்ந்து சாப்பாட்டைப் பகிர்ந்துகொண்டு சாப்பிட்டேன். ஏதோ சுற்றுலாவுக்கு வந்ததுபோல இருந்தது. ஒரு பீரியடில் மணி அடிக்க… ‘எல்லோரும் மைதானத்துக்கு ஓடுங்க’ என்றார்கள். வாழ்க்கையில் முதல்முறையாக மைதானத்தில் ஓடினேன். ‘யாருக்கு என்ன விளையாட்டு பிடிக்கும்?’ என்று கேட்டார்கள். பேட்மின்ட்டன் கற்றேன். அங்கு விளையாடிதான் மாவட்ட அளவில் பரிசுகள் வாங்கினேன்.

சகஜமாகப் பேசவே தயங்கிய நான் பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்குவேன் என்றெல்லாம் ஒருபோதும் நினைத்ததே இல்லை. வினாடி-வினா போட்டி, ராமானுஜம் கணிதப் போட்டி, அறிவியல் கண்காட்சி, தமிழ், ஆங்கிலம் கிளப் போட்டிகள் என அனைத்திலும் பரிசுகள். அந்த ஓர் ஆண்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான ஆண்டு. பாடங்களைக்கூட மாணவர்களை வைத்தே எடுத்தார்கள். அதாவது, கணிதத்தில் முதல் ஸ்டெப் ஆசிரியர் போடுவார்.

இரண்டாவது ஸ்டெப்பை ஒரு மாணவர் சொல்ல ஆசிரியர் போடுவார். மூன்றாவது ஸ்டெப்பை இன்னொரு மாணவர் சொல்லுவார். விளையாட்டாக எல்லாம் கற்றோம். பாடங்களைப் புரிந்துகொண்டு படித்தோம். பன்னிரெண்டாம் வகுப்பில் கொஞ்சம் அக்கறை எடுத்துப் படிக்கச் சொன்னார்கள். அப்போதும்கூட சிறப்பு வகுப்புகள் இல்லை. ஆசிரியர்களிடம் எப்போது வேண்டுமானாலும் தயங்காமல் சந்தேகம் கேட்கலாம். நண்பர்களைப் போல பழகினார்கள். பொதுத்தேர்வில் 90% மதிப்பெண் எடுத்தேன்.

அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதினேன். திருச்சி என்.ஐ.டி-யில் இடம் கிடைத்தது. மாநில அளவிலான நுழைவுத் தேர்வில் கிண்டி – அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அந்த நான்கு ஆண்டுகளும் வேறு ஓர் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தின. அடுத்து, கேட் (CAT) தேர்வு எழுதினேன். தேசிய அளவில் கடும் போட்டி அது. மேகாலய மாநிலம், ஷில்லாங் ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ. படிக்க இடம் கிடைத்தது.

எனது வகுப்பில் ஐ.ஐ.எம்முக்குத் தேர்வான ஒரே மாணவன் நான். அங்கு தேசிய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதச் சொல்லி போட்டிகள் வைத்தார்கள். நான்கு போட்டிகளில் தேசிய அளவில் தங்கம் வென்றேன். படிக்கும்போதே விப்ரோ நிறுவனத்தினரின் முதல் நேர்காணலிலேயே வேலை கிடைத்தது. படிப்பை முடித்த கையுடன் கடந்தாண்டு ஜூன் மாதம் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். இப்போது மற்றுமொரு உலகத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் காரணம் கோவை அசோகபுரம் அரசுப் பள்ளியும் அதன் அத்தனை ஆசிரியர்களும்தான்!” என்று முடித்தார் திலீபன்.

அசோகபுரம் அரசுப் பள்ளியைப் பொறுத்தவரை திலீபன் ஒரு தொடக்கப் புள்ளி! திலீபனைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் வேதியியல் ஆசிரியர் குழந்தைவேல் மகன் நவீன் அங்கு வந்து சேர்ந்தார். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.

திலீபன் இந்தப் பள்ளியில் சேர்ந்த அதே ஆண்டில், தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு முடித்த ஏழு மாணவர்கள் அசோகபுரம் அரசுப் பள்ளியில் வந்து சேர்ந்தனர். இப்போதும் இது தொடர்கிறது. பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் இவர்களின் ஒருங்கிணைந்த நம்பிக்கைதான் அரசுப் பள்ளிகளையும் மேலே மேலே கொண்டுசெல்லும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன!

– டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

Source….www/tamil.thehindu.com

Natarajan