” சொன்னது நீதானா …விசுவே …” !!!

மகாபாரத கர்ணன் தொடங்கி, நட்புக்கு பலரை உதாரணம் சொல்வார்கள். தமிழ்த் திரையுலகில் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், கவிஞர் கண்ணதாசனும்.

இவர்களது கூட்டணியில் உரு வான பல பாடல்களின் பின்னணியில் சுவாரஸ்யங்கள் உண்டு. பாடல் கம்போஸிங் செய்யும்போது, யார் முதலில் வருகிறாரோ, அவர் லேட்டாக வருபவர் மீது செல்லமாக கோபப்படுவார். அந்தக் கோபத்தின் விளைவு, அருமையான பாடல் பிறக்கும்.

இப்படித்தான், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்கான பாடல் கம்போஸிங் நடந்தபோது, எம்எஸ்வி, இயக்குநர் ஸ்ரீதர், பாடகி சுசீலா எல்லோரும் ஆஜராகி இருக்க, கண்ணதாசன் வரவில்லை. நேரம் ஆக ஆக எம்எஸ்வி-க்கு கோபம். கவிஞரைப் பற்றி கடிந்துகொண்டார். லேட்டாக வந்த கவிஞரிடம் பாடலுக்கான சூழலை ஸ்ரீதர் சொல்ல, நான்கைந்து பல்லவிகளை எழுதிக் கொடுத்தார். இயக்குநருக்கு திருப்தி இல்லை.

அப்போது அங்கிருந்த ஒருவர், கவிஞரை எம்எஸ்வி கடிந்துகொண் டது பற்றி அவரது காதில் போட்டு விட்டார். அதைக் கேட்டு கவிஞர் கோபப்படவில்லை. ‘விசு, நீயா அப்படி பேசினாய்’ என்று சிரித்த படியே கேட்டுவிட்டு, தனக்கே உரிய பாணியில் ‘சொன்னது நீதானா சொல்.. சொல். என் விசுவே..’ என்று ராகமாக பாட, டக்கென்று பிடித் துக் கொண்டார் ஸ்ரீதர். ‘இதுதான் நான் எதிர்பார்த்தது’ என ஸ்ரீதர் சொல்ல, அந்த வரிகளையே பல்லவியாக்கி பாட்டை எழுதினார் கண்ணதாசன்.

‘சொன்னது நீதானா.. சொல்.. சொல்.. என் உயிரே.’

என்ற அந்தப் பாடல் பெண்களின் கண்களில் நீரை வரவழைத்தது.

அதேபோல, ‘பெரிய இடத்துப் பெண்’ படத்துக்கான பாடல் கம் போஸிங்.. இந்த முறை கண்ண தாசன் முன்னதாக வந்துவிட, எம்எஸ்வி வீட்டில் அயர்ந்து தூங்கிவிட்டார். லேட்டாக எழுந்த எம்எஸ்வி, அவசரம் அவசரமாக கிளம்பி செட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அங்கே கவிஞர் இல்லை. ஒரு பேப்பரில் 2 வரிகளை மட்டும் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தார்.

‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா’

தன்னை குறித்துதான் கவிஞர் இவ்வாறு எழுதி வைத்துவிட் டுப் போயிருக்கிறார் என்பது எம்எஸ்வி-க்கு புரிந்தது. ஆனாலும், அந்த வரிகளை கொஞ்சமும் மாற்றாமல் அதையே பல்லவியாக போட்டு பாட்டெழுதித் தருமாறு கேட்க, கவிஞரும் கோபத்தை மறந்து பாட்டை எழுதித் தந்தார்.

இப்படி, கண்ணதாசனுக்கும் தனக்குமான நட்பைப் பற்றியும் தங்களது கூட்டணியில் உருவான பாடல்களின் பின்னணி குறித்தும் பல மேடைகளில் எம்எஸ்வி-யே சொல்லி கண்கலங்கியுள்ளார்.

Source….www.tamil.thehindu.com
Natarajan

பெருந்தலைவர் காமராஜர் … எளிமையின் சிகரம் …மக்களில் ஒருவர் …

மக்களில் ஒருவர்

1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளன்று முதல்வர் பொறுப்பையேற்கப் புறப்பட்டார் காமராஜ். திருமலைப் பிள்ளை வீதி திமிலோகப்பட்டது. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்று வெளியே வந்து 2727 என்ற காரில் ஏறினார்.

திடீரென முன்னாலிருந்த காவலர் வண்டியிலிருந்து “சைரன்” என்ற மிகுவொலி எழுந்தது. புறப்பட்ட காரை நிறுத்தச் சொன்னார். முன்னாலிருந்த வண்டியிலிருந்த காவல் துறை அதிகாரியை அழைத்தார். “அது என்னையா சத்தம்?” காமராஜ்.

“ஐயா, இது முதலமைச்சர் செல்லும் போது போகுவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னால் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ஓமந்தாரையா, குமாரசாமிராஜா ஐயா, ராஜாஜி ஐயா எல்லோர் காலத்திலுமிருந்து வருகிற சம்பிரதாயம்” என்றார் காவல்துறை அதிகாரி. “இதோ பாருங்க… இதுக்கு முன்னால இந்த சம்பிரதாயமெல்லாம் இருந்திருக்கலாம்… எனக்கு இதெல்லாம் வேண்டாம்னேன். சத்தம் போடாமப் போங்க” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்த கோடம்பாக்கம் பெருவீதி – நுங்கம்பாக்கம் பெரு வீதி சந்திப்பில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவலர் இவர் சென்ற வண்டியை நிறுத்தி பின் இவரது வண்டி செல்ல அனுமதியளித்தார். ஆனால் அவர் காருக்கு முன் நின்ற காவல்துறை மேலதிகாரிகளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன். ஆனால் காமராஜரோ அந்த நடுத்தெருக் காவாலரின் கடமையாற்றலைக் கண்டு உள்ளம் புளகித்தார்.

காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும் போதுதான் காவலருக்கு விஷயமே புரிந்தது. நடு நடுங்கிப் போனார். முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமெ என்று பத்றிப்போனார். காவல்துறை மேலதிகாரிகளின் சினத்துக்கு ஆளாகி விட்டோமே என கலங்கினார்.

அன்று மாலை காமராஜர் வீடு திருப்பியபோது கலவரத்துடன் வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்ட காவலரை தட்டிக்கொடுத்த காமராஜ் அவரது கடமை உணர்வை பாரட்டியபோது தான் காவலரின் உள்ளம் சாந்தியுற்றது.

காமராஜ் முதலமைச்சராக இருந்தவரை அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வண்டிகள் ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களில் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டார்.

அரசியல்

1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை முதல்வராக பணியாற்றிய காமராஜர் எளிமையின் சின்னமாக விளங்கினார்.

வீண் விளம்பரங்களை வெறுத்த காமராஜர், கிராம மக்கள் நலனில் பெரிதும் அக்கரை காட்டினார். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தானே சுற்றுப்பயணம் செய்து கிராம பிரச்சனைகளை நேரில் கண்டறிந்தார். அதனை நீக்க புத்தம் புதிய செயல் திட்டங்களை தீட்டினார்.

கல்விக்கண் கொடுத்தவர்

ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.

“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.

“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?

உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.

“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.

“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.

“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.

உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.

எளிமையின் சிகரம்

அரசியல் தலைவர்கள் பொதுமக்களின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் மறுபதிப்பாகவும் வாழ வேண்டும். அரசியல்வாதிகளின் எளிமையான தோற்றம் அவர்களை மக்களோடு சமப்படுத்தும்.

பகட்டும் படோபாவமும், ஆடம்பரமும் அகங்காரமும் மன்னர்களிடம் இருந்து அதனாலேயே அழிந்தார்கள். இன்று மக்களை வழி நடத்தும் அரசியல்வாதிகளும் அதே தவற்றைச் செய்யலாமா?

இந்த மனோபாவத்தை மாற்றும் மனிதனாக எளிமையாய் வாழ்ந்து அரசியலில் எளிமையின் சிகரமாய் பரிணமித்தவர்தான் பாரதப் பெருந்தலைவர்.

இந்தியாவில் வேட்டி சட்டைப்போடும் எத்தனையோ அரசியல் தலைவர்கள் வெளிநாடு போகும்போது மட்டும் கோட்டு சூட்டு போட்டு கோலம் செய்கிறார்கள். இது மண்ணின் மகத்துவத்தை மட்டும் மறைப்பதில்லை. நம்மையும் அது அந்நியப்படுத்திவிடுகின்றது.

1953 ல் பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது.

எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார்.

தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார்.

அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார்.

டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான்.

இதை உணர்ந்த வேங்கடராஜுலு நாயுடு அவர்கள் காமராஜ் அவர்களுக்கு மலாயாவில் இருந்து ஒரு கடிதம் எழுதினார்.

கடித்த்தின் கருத்து இதுதான். ‘ஜெனரல் டெம்ப்ளர் கண்டிப்பானவர், ஆடைப்பாதி, அலங்காரம் மீதி என்னும் குணம் உடையவர். எனவே தாங்கள் அவரைச் சந்திக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து ஒரு கோட் தைத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்வதாக’ எழுதியிருந்தார்.

வேங்கடராஜுலுக்கு பயம்.’தலைவர் வந்தும் ஜெனரல் டெம்ப்லரைச் சந்திக்க செல்ல வேண்டும். காமராஜ் தனது வழக்கப்படி கைத்தறி ஆடைகளோடு வந்துவிடக்கூடாது’ -என்று மனம் வருந்தினார்.

டெம்ப்ளர் சாதாரண உடைகளை உடுத்தி இருப்பவர்களை மிகச் சாதாரணமாகவே மதித்து வெளியில் அனுப்பிவிடுவார். எனவே வேங்கடராஜுலு மனம் வருந்தியதில் உண்மை இருக்கிறது.

காமராஜ் வரும் விமானத்தை எதிர்பார்த்து கோலாலம்பூர் குதூகலித்தது. இந்தியத் தலைமகனைக் காண எங்கெங்கு பார்த்தாலும் தலைகள்!

வேங்கடராஜுலு சந்தேகப்பட்டது போலவே நடந்துவிட்டது.

விமானத்தை விட்டு காமராஜ் எப்போதும் போலவே வேட்டி சட்டையுடன் வெளிவந்ததைக் கண்டு கலங்கினார் அமைப்பாளர்.

எப்போதும் போல் சாதாரணமாக கதர் வேஷ்டி, சட்டை, துண்டுடன் தலைவர் தன் தாயகத்தை உடையில் சுமந்துபோய் உள்ளத்தைக் காட்டிக்கொண்டிருந்தார்.

அழைத்த வேங்கடராஜுலு அகம் நொந்தார். இனி தலைவர்பாடு கமிசனர்பாடு என்று நினைத்தவாறே தலைவர் கமிஷனரிடம் அழைத்துப்போனார். எப்படியோ தலைவரை எதிர்ப்பார்த்த ஜெனரல் எளிமையாகப் பார்த்ததும் அசந்துபோனார்.

காமராஜரை வெறுக்கவில்லை. மாறாக தலைவரிடம் தனியே இருந்து பல மணி நேரம் பேசினார் ஜெனரல் டெம்ப்ளர் அவர்கள். பேசி முடித்து தலைவரை வழியனுப்ப வந்தவர்களிடம் ஜெனரல் அவர்கள் காமராஜர் அவர்களின் எளிமை மிகவும் பிடித்துப்போனது’ என்று கூறி எளிமையை சிகரத்தில் ஏற்றினார்.

இன்றோ ஒருநாள் கூத்துக்காக ஒன்பது ஜோடி கோட் சூட் தைத்து ஒரு முறை மட்டுமே மகிழ்கிறார்கள் அரசியல்வாதிகள்.

அதன் பின் ஒரு முறை ரஷ்யா செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தபோதும், தனக்காகத் தைத்தகோட் சூட்டையே வேண்டாம் என உதறிவிட்டு அதே எளிய உடையுடனே சென்று வந்தார்.

ரஷ்யா குளிர் அதிகம் உடைய நாடு. இருந்தும் தோளில் ஒரு துண்டைப் போட்டுவிட்டு எப்போதும்போல் எதார்த்தமாக ஒரு வேஷ்டி சட்டையை அணிந்து வெற்றியோடு திரும்பி வந்தார் தலைவர்.

இந்தப் பயணத்துக்காக தைத்து தலைவர் அணியாத ஆடைதான் அவரது நினைவகத்தில் நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளது. எங்கும் இவர் அணிந்த ஆடை என்று காட்சிக்கு வைப்பதைதான் பார்த்திருக்கின்றோம். ஆனால் – இது ரஷ்யா செல்ல தொண்டர்களால் தைத்துக் கொடுக்கப்பட்ட ஆடை , இதை தலைவர் அணிய மறுத்துவிட்டார்.’ என்ற செய்தியுடன் அவ்வாடை காட்சியில் வைக்கப்பட்டுள்ளது உலகிலேயே நமது அரசியல் தலைவனின் நினைவிடத்தில் மட்டுந்தான்.

இவ்விதம் எளிமையின் திருவுருவமாய்த் தோன்றி எளிமையின் சிகரமாக வாழ்ந்து இன்றைய அரசியல்வாதிகளுக்கு விளக்காக வாழ்ந்த பெருந்தலைவரின் இவ்வரிய வாழ்க்கை எல்லோரும் படிக்க வேண்டிய பாடமாகும்.

Source…..www.perunthalaivar.org

Natarajan

Technologies Come and Go…But Few Remain Forever !!!

Technologies come and go, but some become so integral a part of our lives that they linger on, often with us not even being aware of their extended existence. From the look of it, they might appear to be misfits in today’s touch and wireless age, but they are still around. For a purpose. We list the what and the why.

1.Pagers

 

Pager

Some might think pagers were almost immediately killed with the arrival of mobile phones; what you might not know is that pagers are still in use. Pagers use radio frequency to transmit messages and although no longer in wide usage; they are preferred in applications like restaurants, hospitals, retail stores, etc. Emergency responders such as hospitals or fire fighters use pagers because they offer connectivity even when there are network outages or disruptions in communication. The digital token you get when you place an order at some restaurants is also a type of pager that tells you when the food’s ready.

2. Walkie-Talkie 

Image: Shutterstock

From the early cup and string version to the more conventional handheld transreceiver version, walkie talkies were first developed during the Second World War and unsurprisingly, are in use even today. From military personnel to students when handling university events, walkie talkies are a reliable mode of communication in places where phones can be cumbersome.

3. Typewriter

Image: Shutterstock

This one piece of technology has helped many a great literatures see the light of the day. Developed first in 1860s, typewriters may seem too archaic in the tablet world today, but other than giving a great retro appeal, they are still in use. Law offices, prisons, music studios or even as a replacement to your keyboard; typewriters are still there, albeit fading.

4. Floppy Disks

Image: Shutterstock

Yes, these age-old coaster-like storage devices are ‘still’ in use too. Ironically, the US government still uses floppy disks with federal data stored on them. Despite the floppy disks being an extinct technology, some of the US government agencies still scan documents on to a computer and save them on floppy disks. As a result, the computers too ought to be equally outdated. Although the Obama administration is gradually embracing the newer technology, the old data is so huge in size that it isn’t easy to migrate all of that onto the new ‘hack-prone’ systems.

5. Dot matrix printers

Image: Shutterstock

Remember the sound of these printers? They have been around for long and are still used to print something as basic as your shopping bills to something as confidential as your first ATM PIN number. As the dot matrix printers can generate multi-part forms between carbon paper, it still has uses in banks, warehousing, shipping, retail shops or departments where multiple copies of the form are required.

6. Vinyl records

 

Image: Reuters

Other than being an absolutely admired item in the list of true music aficionados, vinyl records are still used by disc jockeys or DJs to learn the basics of ‘scrubbing’. While many of the popular DJ artists prefer the digital records as they are easier to play and experiment with; those who still want to learn the skill to perfection, prefer the old-school vinyl records. These offer a far richer and cleaner audio experience than the present-day digital formats. Recently, Nielsen Music released its mid-2015 report which showed a clearer picture of the vinyl records- sales were up 38 per cent year-to-date. That says it all.

Source….Deepali Moray in http://www.ibnlive.com

Natarajan

 

” தெய்வம் பேசுமா ….” ?

“தெய்வம் பேசுமா?”

(வழி காட்டின மஹா பெரியவா.)

சொன்னவர்-மணக்கால் ராமன்.
11062732_966708246695949_3966038563901324568_n.jpg

வலையில் படித்த தகவல்.

தனியார் ஆபீஸில் தன்னுடைய பதினெட்டாவது வயஸில், shorthand, typewriting, SSLC certificates உடன் வேலைக்கு சேர்ந்து, ஐம்பத்தெட்டாவது வயஸில் retire ஆகி வீட்டில் உட்கார்ந்தார் ஒரு பக்தர்.

அவர் வஹித்த பதவி, அவருக்கு ஏகப்பட்ட பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் குடுத்திருந்தாலும், அவருடைய உள் மனஸில் வெறும் சூன்யமாகவே இருந்தது. வேலை, வேலை என்று உயிரைக் குடுத்து உத்யோகம் பார்த்ததில், “நான் யார்?” என்று அரை நிமிஷம் கூட சிந்திக்காமல் விட்டுவிட்டார்.

அதன் பலன்? retire ஆனதும், அத்தனை நாள் மாங்கு மாங்கென்று எந்தக் கம்பெனிக்காக உழைத்தாரோ, அந்த routine, நண்பர்கள்,எல்லாமே ஒரு நொடியில், ஒரு பிரிவுபசார பார்ட்டியோடு அவரை விட்டுத் தள்ளிப் போய்விட்டன!

பெற்ற பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் கல்கத்தாவில் இருந்தார்கள். அங்கேயெல்லாம் போனால், போய் இறங்கின அன்று இருக்கும் மரியாதையும் உபசரிப்பும், நாலு நாளைக்கு மேல் நீடித்தால், அது அவர் செய்த பாக்யம்!

பிள்ளை நல்ல உத்தியோகம்; ரொம்ப நல்லவன்; ஆனால், என்ன ப்ரயோஜனம்? மாட்டுப்பெண்ணும் நல்லவள்தான்…. யாருக்கு? பிள்ளைக்கு!

பெற்றவர்களை ஒதுக்கி விட்டு, பிள்ளையை மட்டும் தன்னுடைய குடும்பமாக நினைப்பவள்; பிறந்த வீட்டார் மேல் அபரிமிதமான கரிசனம்.

இப்படி இருக்கும் வீட்டில் தான் போய் அதிக நாட்கள் தங்கினால், இப்போதிருக்கும் பேச்சு வார்த்தை கூட அறுந்து போய்விடும் என்று தயங்கினார்.

யார் வழி காட்டுவார்கள்? “நீனே அநாத பந்து” என்று பெரியவாளுடைய திருவடியில் வந்து விழுந்தார்.

மனசுக்குள், எங்கே போவது? யாருடன் தங்குவது? ஜன்மாவை கடைத்தேற்றிக் கொள்ளாமல் ஐம்பத்தெட்டு வருஷம் கோட்டை விட்டாச்சு !…. என்று ஒரே குழப்பம்.

எதுவுமே பேசாமல் நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு ஓரமாக நின்றார். பெரியவா அவரைப் பார்த்தார்….. உடனே அருகில் வந்து மிகவும் பவ்யமாக, “பெரியவா அநுக்ரஹத்ல அனேகமா எல்லா க்ஷேத்ரங்களும் தர்ஸனம் பண்ணிட்டோம். போனவாரம் தலைக்காவேரி போயிட்டு, அப்டியே காவேரிப்பூம்பட்டிணம் போய்ட்டு வந்தோம்…”

காவேரி உற்பத்தி ஸ்தானத்லயும், சங்கமத்துலேயும் ரொம்ப குறுகலாத்தானே இருக்கு?”

“ஆமா…..”

“காவேரி, ரொம்ம்…ம்ப அகலமா இருக்கற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?”

“அகண்ட காவேரி”

“அது எங்க இருக்கு?”

“திருச்சி பக்கத்ல …”

“அந்த ப்ரதேசத்துக்கு என்ன பேரு?”

பக்தர் முழித்தார்!…..

“மழநாடு…ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?”

“எங்க தாத்தா சொல்லுவார்”

காவேரி தீரம்தான் மழநாடு; ரொம்ப ஆசாரக்காரா இருந்த நாடு; ஒன்னோட தாத்தா இருந்த எடம்”

பக்தருக்கு இதெல்லாம் எதுவுமே தெரியவில்லை. நெளிந்தார்.

ஆஹா! அடுத்து பெரியவா, இவர் எதுவும் சொல்லாமலேயே, இவருடைய குழப்பத்தை தீர்த்து வைத்தார்!

“திருச்சில ஜாகை வெச்சுக்கோ!

தெனமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்…. இப்டியா தர்சனம் பண்ணிண்டு இரு!”

“தெய்வம் பேசுமா?”…என்று சந்தேஹம் வருபவர்களுக்கு, இதோ! தெய்வம் பேசுகிறது! என்று உண்மையான மஹான்கள் முன்னால் கொண்டு போய் நிறுத்தி விடலாம்.

கண்களில் நன்றிக் கண்ணீரோடு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவா சொன்னபடி திருச்சியில் ஜாகை பார்க்கச் சென்றார்.

மலைக்கோட்டை தெருவில் அம்சமான வீடும் கிடைத்தது!

பெரியவா சொன்னபடி தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டபடியால் கட்டாயம் “வீடு பேறும்” கிடைக்கும்

Read more: http://periva.proboards.com/thread/9665/#ixzz3fmFpAShV

Source….www.periva.proboards.com

Natarajan

221B…. Baker Street and Sherlock Holmes ….

When Sir Arthur Conan Doyle first began writing Sherlock Holmes stories back in the late 19th century, 221B Baker Street didn’t exist. While Baker Street itself existed, and still exists today, the numbers on the street back when Doyle wrote the Sherlock Holmes novels and when Holmes was supposed to reside there (1881 to 1904 according to Doyle’s original stories) only went into the hundreds. It would seem that Doyle intentionally picked an address that didn’t exist.

This all changed in the 1930s when the street numbers in London were rejigged and reallocated to make things a little more streamlined. During the reallocation, a recently constructed building for the Abbey Road Building Society (aka Santander), known as “Abbey House” was awarded all of the odd numbers between 219 and 229.

Because the address 221 Baker Street now existed, all of the mail that fans across the world had inexplicably sent to Holmes not knowing that he didn’t exist, now had a place to be delivered. It’s noted that as soon as the bank began trading from the building on March 18, 1932, they were inundated with dozens of letters addressed to Holmes. While most of the letters were basically just fan mail or nice messages wishing the detective well, the bank were surprised to find a decent number of people who’d written to ask for Holmes’ help.

Now you’re probably thinking that a large, faceless corporation like a bank would have dismissed these letters as an annoyance and have them shredded or something, but that didn’t happen. Instead, the bank went out and hired someone to serve as “Sherlock Holmes’ personal secretary” and charged them with reading and responding to the mail. Rather than sending a stock reply on bank stationary explaining that Sherlock Holmes wasn’t real, this secretary would write back explaining that Holmes had retired to go live in the country and raise bees on a farm in South Downs in Sussex.

Fans of Sherlock Holmes may recognise this as being where Arthur Conan Doylehimself claims the detective went in his twilight years in the short stories, The Lion’s Mane, The Blanched Soldiers and His Last Bow. Needless to say, Abbey National did their homework when it came to staying consistent with Holmes’ back story. According to Nikki Capar, who worked as Holmes’ secretary in the 1980s, she’d also sometimes write back to fans as Sherlock Holmes using quotes from the aforementioned stories, often telling fans that she (Holmes) had “given myself up entirely to that soothing life of Nature for which I had so often yearned during the long years spent amid the gloom of London.”

As it turned out, the bank quite enjoyed the attention of sharing their address with one of London’s most famous fictional residents, so much so that they had a small plaque commissioned to sit outside the building and on their 150th anniversary even paid for the creation of a bronze statue that currently sits outside the Baker Street entrance to the tube.

Sherlock-holmes-museum

In 1990, though, things turned a little sour when the Sherlock Holmes museum opened nearby and suddenly decided that they should be the only ones who were allowed to open Sherlock Holmes’ fan mail. Although the museum was located between 237 and 241 Baker Street, they argued that as an authority on Sherlock Holmes, there were better equipped to deal with his correspondence than a billion dollar company with virtually unlimited resources that had been doing an admirable job at exactly that for about five decades straight. The museum even put a plaque outside their building declaring that the museum was the real home of Sherlock Holmes.

The courts didn’t agree and they ruled in favour of the bank, since, well, they did technically own 221 Baker Street and it wasn’t their fault that people kept sending letters there to a guy who didn’t exist. The museum fought this decision for over a decade until 2002, when the bank, which was then known as Abbey National, moved its headquarters to nearby Triton Square.

By this point, Westminster council had grown pretty sick of dealing with the issue and when the bank moved, they granted the museum exclusive rights to use theaddress 221B Baker Street, even though the museum itself still resided between 237 and 241 Baker Street.

The museum is still there today.

Source….www.today i found out .com

natarajan

 

” Lost and Found….$ 1 Note… What Made this Gentleman to Cry Over the Find…” ?

WHEN Peter Bilello took his granddaughter to Subway, he found something he thought was lost forever. And for a moment, it felt like he had his wife back.

The 86-year-old Italian immigrant lives alone in Hartford, Connecticut, after the death of his wife Grace from cancer in November.

Seven years ago, in 2009, Mr Bilello came up with a completely random romantic thought: The two of them would each sign a $1 note and he would keep the notes in his wallet forever.

“I don’t know why that happened to come into my mind,” he told WTNH. “And I said, this dollar is going to be in my wallet forever.”

The note at the centre of a modern-day romantic tale.

The note at the centre of a modern-day romantic tale. Source: Supplied

Perhaps the idea came from an innate fear that Grace would not be around for much longer.

In 2001, she was diagnosed with cancer, she had an operation, chemotherapy and radiation, only to have the cancer return three years later.

About a year after signing the notes, he accidentally spent them shopping.

“I don’t know where I used the two dollars. I came home and told my wife … ‘Grace, I made a big mistake today. … I’m never going to see (the dollars again),’” he complained to her.

Peter is happy to have the note back. Source: WTNH. Once upon a time. Source: WTNH.

Peter is happy to have the note back. Source: WTNH.Source: Supplied

After Grace’s death, Mr Bilello cherished his many memories and photos of the woman he married half a century ago — after knowing her for just 40 days. But the dollar note, it seemed, was lost forever.

Then a few weeks ago, Mr Bilello took his granddaughter Ashley out for a sandwich. He handed her a $10 note and she returned with his change, three $1 bills.

To his utter astonishment, one of them had his wife’s signature, “Grace B”, on it.

“I said, ‘Oh my god, Ashley, look.’ We started to cry,” Mr Bilello said. “We were so happy to get the dollar back. I never thought I’d get that dollar back.”

“It’s a miracle to get it back after five years,” he said. “Who knows how many million people got that dollar in their hands.”

At first his granddaughter was sceptical of its authenticity, but when the pair returned home, she matched it up against old letters and believes it to be true.

As for Mr Bilello, he credits one person for the incredibly unlikely return of the note: Grace herself.

And for the second time in his life, he has vowed to hold onto the currency for good. “Nobody’s gonna get that dollar anymore,” he said.

The pair married 51 years ago.

The pair married 51 years ago. Source: Supplied

Source…www.news.com.au

Natarajan

Watch this Couple Travel 60 Years into the Future….!!!

 

Using the power of makeup, a couple travels 60 years into the future.

In this tearjerker, a soon-to-be-wed couple takes a seat in the makeup chair. They’re not prepping for their wedding, but rather the rest of their lives– using stage makeup and prosthetics, a team of artists showed what the happy couple would look like as they aged. It’s pretty emotional– the couple gets a “preview” of their lives as 40-year-old parents, 60-year-old retirees, and an elderly man and woman having spent their whole lives together. The whole experiment ends with much emotional crying and vow-writing. It’s sappy and wonderful.

Source: Field Day  and http://www.you tube.com

Natarajan

” தண்டனை யாருக்கு …ஒரு சுவராஸ்யமான உண்மை சம்பவம் …” !!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான வாயில். 20.11.13 அன்று முப்பது லாரிகள் அதன் முன்பு அணி வகுத்து நிற்கின்றன. “”கேட் முன் நிறுத்தாதே…” பாதுகாவலர்கள் கத்திக் கொண்டே வருகிறார்கள்.

லாரி டிரைவர்களில் ஒருவர், “”இல்லை… இந்த லாரியில் உள்ளவை உங்கள் முகவரிக்குத்தான் வந்திருக்கின்றன” என்றார்.

அதே நேரம், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வருகிறது. பேசியவர் சாம்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி குவான் கியூன்:

“”உங்களுக்கு நாங்கள் தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் 30 லாரிகளில் அனுப்பியிருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள்”.

திகைத்துப் போகிறார் டிம் குக்.

கொரிய நிறுவனமான சாம்சங் 100 கோடி டாலரை(ரூ.6200 கோடி) அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் காப்புரிமை வழக்கு ஒன்றில் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராகத்  தீர்ப்பளித்தது. அதுதான் சாம்சங் நிறுவனம் தர வேண்டிய நஷ்ட ஈடு. அதற்கு எதற்கு முப்பது லாரிகள்?

பாதுகாவலர்கள் லாரிகளில் வந்தது என்ன? என்று பார்த்தார்கள்.

30 லாரிகளிலும் சில்லறைக் காசுகள்!

5 சென்ட் நாணயங்களாக மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். அபராதத் தொகையை அனுப்பி வைத்திருக்கிறார்கள்!

இவற்றை எப்படி எண்ணுவது? முப்பது லாரி சில்லறைகளையும் எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது? இவ்வளவு சில்லறைகளையும் எந்த வங்கியிலும் போட்டு வைக்க முடியாதே! ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் தலையைப் பிய்த்துக் கொண்டு நின்றார்கள்.

அபராதம் கட்டும் அளவுக்கு சாம்சங் நிறுவனம் செய்த தவறு என்ன?

ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் நிறுவன போன்களில் உள்ள தொழில்நுட்பத்தைக் காப்பி அடித்து சாம்சங் நிறுவன போன்கள் தயாராகின்றன என்பதே குற்றச்சாட்டு. இல்லையில்லை எங்களைத்தான் ஆப்பிள் நிறுவனம் காப்பி அடித்துவிட்டது என்பது சாம்சங் நிறுவனத்தின் பதில் குற்றச்சாட்டு.

கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிகளை மீறிவிட்டதாகத் தீர்ப்பளித்து, அபராதமும் விதித்தது நீதிமன்றம்.

”எல்லா ஸ்மார்ட்போனும் செவ்வக வடிவத்தில்தான் இருக்கும். செவ்வக வடிவத்துக்கு எல்லாம் காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டு, யாரும் அந்த சைஸில் போன் தயாரிக்கக் கூடாது என்று சொல்வது அநியாயம்” என்று சாம்சங் நிறுவனம் வாதிட்டாலும், நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. அதனையொட்டிதான் அபராதம். என்றாலும், அபராத பணத்தைக் கட்டித்தானே ஆக வேண்டும்?

தான் தண்டனைக்குட்பட்டாலும், ஆப்பிள் நிறுவனத்துக்கும் தண்டனை அளிக்க சாம்சங் நிறுவனம் நினைத்தது.

விளைவு?

30 லாரிகளில் சில்லறைக் காசுகள்……

Source….www.dinamani.com

Natarajan

” இதோ அந்த அம்மா லக்ஷ போஜனம் செய்திருக்கா ….பல லக்ஷ தீபம் போட்டிருக்கா …”

“ஏதோ ஒரு கோயிலில் லக்ஷதீபம் போட, நீ திரவியம்

கொடுத்திருக்கே. லக்ஷம் தீபத்துக்கு எண்ணெய் – திரி

போட்டு உன்னால் ஏற்றவே முடிந்திருக்காது”

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஓர் ஏழைப் பாட்டி.பெரியவாளிடம் அபார பக்தி.

கையிலிருந்த சொற்ப பணத்தைக் கொண்டு மிகவும்

சிக்கனமாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருந்தாள்.

மடி ஆசாரம் பார்ப்பாள். ஏராளமான பக்தி.

தினமும் பெரியவர் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்வாள்.

கோலம் போடுவாள். தீபம் ஏற்றி வைப்பாள்.

இரண்டு புடவைகள் தான் அவளுடைய ஆஸ்தி.இன்னொரு

புடவை வாங்கக் கூட அந்தப் பாட்டியிடம் பொருளில்லை.

ஒரு பக்தர் அரிசிக் குறுணையும்,வெல்லமும்

பெரியவாளிடம் சமர்ப்பிந்திருந்தார்.அவற்றை நல்லபடியாக

விநியோகம் செய்ய வேண்டுமே?

பாட்டிக்கு பெரியவா உத்தரவு போட்டார்கள்.

“காஞ்சிபுரத்தில் உள்ள எல்லா எறும்புப் புற்றுக்களிலேயும்

கொஞ்சம் கொஞ்சம் போட்டுட்டு வா. அரை ஆழாக்கு

வீதம் போடு…” என்றார்கள்.

அந்தப் பாட்டியும் பக்தி சிரத்தையுடன் அலைந்து திரிந்து,

பல எறும்புப் புற்றுகளில் அரிசிக் குறுணையும்,

வெல்லமும் போட்டு விட்டு வந்தாள்.

அந்த வேலை முடிந்ததும் பெரியவா அந்தப் பாட்டியைக்

கூப்பிட்டார்கள்.

பெரிய மாலை போலத் திரிநூல் இருந்தது.

ஒரு டின் நிறைய எண்ணெய் இருந்தது.

“திரிநூலை கட் பண்ணி ஒவ்வொரு கோயிலுக்காகப் போய்,

எவ்வளவு விளக்குக்குப் போட முடியுமோ, அவ்வளவுக்குப்

போடு.ஒவ்வொரு நாளும் இரண்டு,மூன்று கோயில்களுக்குப் போய் விளக்கேற்றினாலும் போதும்” என்றார்கள்.

பாட்டிக்குப் பரம சந்தோஷம். பரம சிரத்தையுடன் நாள்தோறும் சில கோயில்களுக்குச் சென்று பெரியவா உத்தரவை நிறைவேற்றி வந்தாள்.சில நாட்களில் இந்தக் கைங்கரியம் நிறைவு பெற்றது.அந்தச் செய்தியையும் தெரிவித்தாள் பாட்டி.

பாட்டியின் பணிகள் முடிந்த சில நாட்களுக்குப்பின்,

ஒரு பெரிய மனிதர், ஆடம்பரமாக மடத்துக்கு வந்தார்.

பெரிய மனுஷத் தோரணை, அகங்காரம்.

“ஸஹஸ்ரபோஜனம் செய்துட்டு வந்திருக்கேன்.

லட்சதீபம் போட்டிருக்கேன்…..” என்று தற்பெருமை

தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவாளுக்கு அவருடைய அகம்பாவம் புலப்பட்டது.

தர்ம காரியங்கள் செய்துவிட்டு அதைப் பற்றி பேசிக்

கொள்வது புண்ணியத்தைத் தராது. தர்மம் செய்தவருக்கு

நற்பலன்கள் கிடைக்காமல் போய்விடும்.

வினயத்துடன் சொல்லியிருந்தால் பெரியவா

சந்தோஷப்பட்டிருப்பார்கள். ஆனால்,அந்தப்

பெரிய மனிதர் அகம்பாவத்துடன் பேசினார்.

பெரியவா சொன்னார்கள்.

“இங்கே ஒரு பாட்டி இருக்கா. அந்த அம்மா
0023_zpsf9c90622.jpg

லக்ஷபோஜனம் செய்திருக்காள்.

பல லக்ஷதீபம் போட்டிருக்காள்….”

ஆணவப் பணக்காரருக்கு சற்று திடுக்கிட்டது.

‘யார் அந்தப் பாட்டி…அவ்வளவு பெரிய பணாக்காரி?’

என்று தெரிந்து கொள்ள ஆவல் பிறந்தது.

பெரியவா அந்தப் பாட்டியை அழைத்து வரச் சொன்னார்கள்.

“இவள்தான் அவ்வளவு பெரிய உத்தமமான காரியம்

செய்தவள்…”

அழுக்கான கிழிசல் புடவையைக் கட்டிக்கொண்டு

வந்து நின்ற பாட்டியைப் பார்த்து, பெரிய மனிதர்

அயர்ந்து போனார்.பாட்டியின் நெற்றியிலிருந்த

வெள்ளை வெளேரென்ற திருநீற்றுப் பூச்சு,

அவளுடைய இதய சுத்தத்தை விளாக்கினாற்போலிருந்தது.

பெரியவா சொன்னார்கள்.

“ஸர்வ ஜீவனிலும் பகவான் வியாபித்திருக்கிறார்.

பிரும்மா முதல் பிபீலிகம் (எறும்பு) வரை பகவான்

இருக்கிறார். மனுஷ்யாளிடத்திலும் இருக்கிறார்.

“நீ ஆயிரம் பேருக்கு அன்னம் போட்டிருக்கிறாய்.

ஆனால், இந்தப் பாட்டியோ பல லக்ஷம் ஜீவன்களுக்கு

(எறும்புகளுக்கு) ஆகாரம் போட்டிருக்கிறாள்.

“ஏதோ ஒரு கோயிலில் லக்ஷதீபம் போட, நீ திரவியம்

கொடுத்திருக்கே. லக்ஷம் தீபத்துக்கு எண்ணெய் – திரி

போட்டு உன்னால் ஏற்றவே முடிந்திருக்காது. இந்தப்

பாட்டி, பல கோயில்களுக்குப் போயிருக்கிறாள்.

பக்தி சிரத்தையாய் அகல் வாங்கி,எண்ணெய் ஊற்றி,திரி

போட்டு தன் கையாலேயே ஏற்றியிருக்கிறாள்….”

கேட்டுக் கொண்டிருந்த பிரமுகர் தலைகுனிந்தார்.

பெரியவாளிடம் பவ்யமாகவும்,அகங்காரமில்லாமலும்

பேசவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்.பின்னால்

பல பக்தர்கள் வந்து நிற்பதைப் பார்த்து சற்றே நகர்ந்து

இடம் கொடுத்தார்.

சிறிது நேரம் கழித்து, பெரியவாளே அந்தப் பெரிய

மனிதரைக் கூப்பிட்டு, உட்கார வைத்து,பல சமாசாரங்கள்

பேசி, பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.

அடக்கம் கற்றுக்கொண்ட அவர், ஆனந்தமாகத்

திரும்பிச் சென்றார்

Read more: http://periva.proboards.com/thread/9619/#ixzz3f1lxqqsA

Source….www.periva.proboards.com

Natarajan

 

 

 

 

 

 

 

” வாடகை காரில் பயணம் செய்த ஒரு முதல்வர் …” காமராஜர் …

பொ.க.சாமிநாதன் எழுதிய “மூன்று முதல்வர்களுடன்’ நூலிலிருந்து….

காலை 8.30 மணிக்கு மேல் பார்வையாளர்கள் யார் வந்தாலும் அவர்களை முதல்வர் காமராஜர் சந்திப்பது வழக்கம். ஒருநாள் காமராஜரைப் பார்க்க

kdrkamaraj

முன்பின் தெரியாத ஒரு டாக்சி டிரைவர் வந்திருந்தார். “ஒரே கதவு உள்ள “கேசல்’ டாக்சியை வைத்து தான் பிழைத்து வருவதாகவும், அதனால் வண்டியில் ஏற, பயணிகள் மிகவும் சிரமப்படுவதாகவும், இரண்டு கதவுகள் உள்ள “பியட்’ வண்டி கிடைத்தால்தான் நல்லபடியாக தான் வாழ்க்கை நடத்த முடியும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

அந்தக் காலத்தில் “பியட்’ காரை பணம் கொடுத்து உடனே வாங்க முடியாது. அரசு மூலம் கோட்டா பெற வேண்டும். கார் விற்பனையில் ஒருசில சதவீதம் அலுவலர்களுக்கும், எம்.எல்.ஏக்கள் போன்றவர்களுக்கும் ஒருசில சதவீதம் டாக்சி ஓட்டுபவர்களுக்கும் ஒதுக்குவது வழக்கம். அதுபோல தனக்கு ஒதுக்கும்படி அந்த டிரைவர் கேட்டார். அந்த டிரைவரின் பெயர் கந்தசாமி.

முதல்வர் என்னை அழைத்து, “அந்த டிரைவர் சொல்வது உண்மையா? அவர் சொல்லியபடி அவரது வண்டி ஒரே கதவுள்ள வண்டியாக உள்ளதா, அது அவரது வண்டிதானா’ என்று பார்த்து வரச் சொன்னார். நானும் அவ்வாறு பார்த்து, அவர் சொல்வது உண்மையென்று சொன்னேன்.

முதல்வர் காமராஜர் உடனே என்னிடம், “”அவர் கேட்பது நியாயமாகத்தான் இருக்கிறது. உள்துறை செயலரிடம் சொல்லி அவருக்கு ஒரு பியட் கார் ஒதுக்கீடு செய்யும்படி நான் சொன்னதாகச் சொல்லவும்” என்றார்.

சில மாதங்கள் கழித்து அந்த டிரைவர், முதல்வர் வீட்டிற்கு மீண்டும் வந்தார். என்னைப் பார்த்து, “”ஐயா, தங்கள் உதவியாலும் முதல்வரின் உத்தரவுப்படியும் எனக்கு ஒரு பியட் கார் ஒதுக்கீட்டில் கிடைத்துவிட்டது. புது வண்டி வாங்கி வந்துள்ளேன். முதல்வரை இந்த காரில் அமர வைத்து சிறிது தூரமாவது சவாரி செய்ய வேண்டும் என்பது என் ஆசை. முடியுமா?” என்று கேட்டார். நான் “”சிறிது நேரம் பொறுத்திருங்கள். ஐயா கீழே வருவார்கள். அவரிடமே கேளுங்கள்” என்றேன்.

முதல்வர் வந்தவுடன் டிரைவர் அவரிடம் கேட்க, காத்திருந்த பார்வையாளர்களிடம் “”இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு சிறிதும் தயங்காமல், காரில் ஏறிக் கொண்டார் காமராஜர். சிறிது தூரம் பயணம் செய்து அந்த டிரைவரை மகிழ்வித்தார்.

பின்னர் திரும்பி வந்து காத்திருந்த பார்வையாளர்களைப் பார்த்தார். அனைவருக்கும் ஒரே மகிழ்ச்சி. ஒரு முதல்வர் இவ்வளவு எளியவராகப் பழகுகிறாரே என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அந்த டிரைவரும் தான் ஒரு கோட்டையைப் பிடித்த பெருமிதத்தில் மகிழ்ச்சியோடு திரும்பினார்.

முதல்வர் காமராஜர் தான் ஆட்சி செய்த காலம் முழுவதும் சென்னையில் கூட அரசு வாகனத்தைப் பயன்படுத்தவில்லை. “எம்.டி.டி.2727′ என்னும் செவர்லே காரைச் சொந்தமாக வைத்து உபயோகித்து வந்தார். அதேபோல் சென்னையில் தங்குவதற்கும் அரசு கட்டடத்தை உபயோகிக்கவில்லை. வாடகை வீட்டிலேயே தங்கியிருந்தார். தான் இறக்கும்வரை காமராஜர் அந்த வீட்டிலேயே குறைந்த வாடகைக்குத் தங்கியிருந்தார்

Source…blog.dinamani.com

Natarajan