படித்ததில் பிடித்தது… சிரிப்பொலி !!!

நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.

‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான்.

சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன்.

மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது.

‘சே….இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே’ என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம் அவனுள் தொற்றியது. இன்று மதியம் இவன் பார்த்த இறந்து போன ஒரு குழந்தையின் சவ ஊர்வலம் வேறு நினைவிற்கு வந்து அவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.

நடையை இன்னும் வேகமாக்கினான். திடீர் என்று ஒரு குழந்தையின் சிரிப்பொலி மிக அருகில் கேட்டது. ஒரு வித கலக்கத்துடன் ‘மதியம் பார்த்த சவ ஊர்வலத்தையே நினைத்துக்கொண்டு நடந்ததால் பிரம்மையாக இருக்கும்’ என்று நினைத்தபடி சிறிது நேரம் நின்றான்.

இப்போது சிரிப்பொலியை காணோம். மறுபடியும் நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். மீண்டும் அதே குழந்தையின் சிரிப்பு சத்தம். இவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான். கூடவே வந்தது அந்த சத்தமும். ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.

“என்னங்க…. சீக்கிரமே கடையை அடச்சுட்டீங்க போல”

“மழை வேற… கரண்டும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அதான் நேரத்தோட அடச்சுட்டேன்”

“அதாங்க…. வரும்போது மெழுகுவர்த்தி வாங்கி வரச் சொல்லலாம்ன்னு உங்களுக்கு போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை. ஏன் போன கடையிலேயே வச்சுட்டு வந்துட்டீங்களா?”

“இல்லையே நனைஞ்சாலும் நனைஞ்சுரும்ன்னு பையில்தான் இருக்கு. நீ போன் அடிக்கவே இல்லையே”

“நான் அடிச்சேன் உங்களுக்கு விளங்கல போல….”

“இல்ல… நீ போன் போடவே இல்ல… நான் பக்கத்துலதான வச்சுருந்தேன்.”

“இல்லைங்க காலையில நம்ம பய உங்க போன எடுத்து என்னவோ பண்ணிட்டு இருந்தான். அதான் ஏதும் ஆச்சோ… எதுக்கும்… நீங்க போன எடுத்து பாருங்க தெரியும்.”

“அப்பா நான் ஒண்ணும் பண்ணல. ரிங் டோன் தான் மாத்திவச்சேன்” என்றான் அவன் மகன்.

“எதுக்கும் இப்ப ஒரு தடவ போன் போடு. பாத்திடலாம்.”

போன் அடித்தாள். அங்கே ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி.

Keywords: கதை, நகைச்சுவை, சிரிப்பொலி, ரிலாக்ஸ்
Topics: சமூகம்|

 

source::::: THE HINDU…TAMIL

Natarajan

Some Silly “Hoax” Mails that Took us For a Ride !!!

 

The Internet is a treasure chest of amazing finds. At times, you come across certain images and pieces of information that truly blows your mind. But another thing about the Internet is that not everything you find in there is really true. Here are 10 hoaxes that found their way to ‘believability’ thanks to the internet.

1. A photo that went viral on Facebook with the title, “India during Diwali.”

Fact:
This message went viral in India on the occasion of Diwali. The message came with a picture showing the satellite image of the Indian map during the day, followed by the same during the night, appearing bright and colorful throughout. However, the message was a hoax. The image in question is put up by National Geophysical Data Center of the National Oceanic and Atmospheric Administration, USA and is actually a composite satellite view of India at night, showing the change in night illumination during the period 1992-2003. Satellite data from the year 1992 is shown in blue color, 1998 green colored, and that in 2003 is colored red. This stunning composite satellite image of India at night was developed by NASA so as to illustrate the increasing population of India over the years.
 

2. The Indian three headed snake.

snake

Fact:
This picture showing a live three headed snake on an Indian road started circulating on many social networking websites. The message that comes with the picture states that it is a beautiful creation of nature. The story however, is a hoax. The three headed snake picture is not real, it is a photoshopped one.

3. “UNESCO declares Indian National Anthem as best in the world.”

Fact: 
This story was very widely circulating through emails, blogs and social networking sites. The message claiming that the Indian national anthem “Jana gana mana..” was selected as the best in the world by UNESCO was never heard of or confirmed by any kind of news or media reports. If the story was factual, it would have definitely received wide attention from the media. If the UNESCO released such a statement, it would be readily available on their official website, which is no where to be seen. India Today wrote to UNESCO to get clarity on these stories and got a confirmation message from UNESCO that these messages were indeed a hoax.

4.Indian woman gives birth to 11 kids at once!

Fact:
The photograph which shows 11 new born babies along with hospital staff was accompanied by a message claiming that an Indian woman gave birth to all of them in a single delivery, and considers it as God’s miracle. 6 out of the 11 babies were reported to be twins. The photograph is genuine, but the story is a hoax. The photograph actually shows 11 kids born to different mothers on 11.11.11 at the 21st Century Hospital & Test Tube Baby Center in Surat, India. The doctors and hospital staff together with the new born babies took photographs and shared it as an interesting achievement on 11.11.11.

5. Pictures showing the excavation site of a giant human skeleton.

 

Fact:
Many versions of this story were circulating through emails along with these pictures of giant human skeletons. The news related to this story appeared in the media in countries like India, Bangladesh etc. However, all these versions were false. The pictures depicting giant human skeletons are actually a part of image manipulation contest conducted by worth1000.com.

6. Hanuman Gadha found during an excavation in Sri Lanka.

 

Fact:
This picture claims to show the Hindu God Hanuman’s Gadha (mace), supposedly discovered during an excavation in Sri Lanka. Other versions said it is the world’s largest Gada of Veer Hanuman discovered in Gujarat. The claims are not true. It actually shows a 45 feet Gada replica  for installation on a 125-foot-high Hanuman statue on the outskirts of Indore, India on the occasion of Hanuman Jayanti (birthday) on 25 April 2013. (As quoted in Hindustan Times epaper.)

7. Bhagat Singh was hanged on the 14th of February, Valentine’s Day.

Fact:
This hoax was a  rather unfortunate and disrespectful mis-interpretation of Bhagat Singh’s biography. Bhagat Singh was arrested following the 1929 Assembly bomb throwing incident. Fearing civil agitation, the then Viceroy of India Lord Irwin set up a special tribunal called the Privy Council to speed up his trail process. An Indian defence committee in Punjab appealed against the Privy Council, which was again dismissed by the  Judge Viscount Dunedin. After the rejection, the then Congress party president Madan Mohan Malviya filed a mercy appeal before Lord Irwin on 14 February 1931, but even that did not work, and Bhagat Singh was hung on 23 March 1931 at 7:30 pm in Lahore jail along with fellow freedom fighters Rajguru and Sukhdev.

8. “Important message from Delhi Police: Frooti can contain HIV.”

Fact:
This story broke on Facebook walls and Whatsapp chats all over India. A supposed warning from the Delhi Police warned consumers that a worker from the “Frooti Company” was HIV positive and had added his blood to the drink mix. It also claimed that the story had been reported by NDTV. As you can guess, the whole thing was a hoax. Both the Delhi Police and NDTV denied the ridiculous story. Besides one can’t even get AIDS through “infected” food.

9.A mysterious tree sighted in Nalgonda, Andhra Pradesh, India.



Fact:
The messages showed pictures of a tree with mysterious wooden carvings of various animals like crocodiles, monkeys, snakes, spiders and others; claiming that it is a ‘Baobab’ tree that has the largest trunk in the world. The message stated that this mysterious tree was found near a hermitage in the dense forests of Nalgonda, Andhra Pradesh, India. The truth? There was no mysterious tree or hermitage. This was in fact an art work in Disney Land.


Sourced from: hoaxorfact.com

 

natarajan

” ஊனத்தை கிண்டல் செய்யும் சில ஈனப் பிறவிகளுக்கு … ”

கேலி பேசி வாங்கிக் கட்டாதீர்!

சமீபத்தில், மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பார்வை தெரியாத பெரியவர் ஒருவர், டி.எம்.எஸ்., குரலில், பழைய பாடல்களை, அசத்தலாய் பாடி, கையேந்தி வந்தார். அவரது குரல் வளத்தில் சொக்கிப்போன பயணிகள், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என, அவரவர் விருப்பம்போல் வழங்கினர்.
அப்போது, போதையிலிருந்த சில இளைஞர்கள், ‘ஹலோ பிளைண்ட்… இந்த பாட்டை, எந்த, ‘கிளையன்டுக்கு டெடிகேட்’ செய்ய விரும்புறீங்க…’ என, கேட்டு, அவரைக் கலாய்த்தனர்.
இதைக் கேட்ட அந்த பெரியவர், ‘ஊனத்தை கிண்டல் செய்யும், சில ஈனப்பிறவிகளுக்கு, ‘டெடிகேட்’ செய்ய விரும்புறேன்…’ என, நெத்தியடியாக கூற, கூனிக் குறுகிப்போன அந்த இளைஞர்கள், ‘கப்சிப்’ ஆகி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, ‘எஸ்கேப்’ ஆகிவிட்டனர்.
மாற்றுத் திறனாளிகளை, பரிகாசம் செய்ய, எப்படித்தான் இவர்களுக்கு மனம் வருகிறதோ?

— சுமதி பாபு, சென்னை. in Dinamalar.. Varamalar

natarajan

படித்ததில் பிடித்தது …” திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும் …” !!!

 

திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும்……

பன்னிரண்டு மணி வெயில். நடக்கும்போது தார் உருகிய ரோடு காலைக் கொப்புளிக்க வைக்கிறதே. கண்களில் நீர் மல்குகிறது. ஏன்? வெயில் அனலாய் சுட்டெரிக்கும்போது கண் கூசுகிறதே அதனால் தான். அந்த காலத்தில் குடை ரொம்ப பேர் உபயோகிக்க மாட்டார்கள். மேல்துண்டை தலையில் சுற்றிக்கொண்டு வெயிலில் நடப்போம். தலைப்பாகை அல்லது தலப்பா என்று சொல்வோமே அது. இப்போது வெயிலில் தலையில் தலப்பா இல்லே. கடைகள் தான் ”தலப்பா கட்டி” க் கொண்டிருக்கிறது. மரமே கிடையாது. நிழலே கிடையாது. நடக்கவே இடம் இல்லையே. டீசல் பெட்ரோல் மணம் மூச்சு விடமுடியாமல் திக்கு முக்காடச் செய்ய, அரை அங்குலத்தில் ஒரு லாரி, பேருந்து மேலே பட்டு நசுக்காமல் தப்பி, எதிரில் வருவோரை இடித்து, நகர்வது ரொம்ப வழக்கமாகிவிட்டதே.

வெயிலுக்கு ஒரு குளிர்ந்த சோடா குடிக்க ஒரு கடையில் நின்ற போது ஒரு புத்தகம் தலைக்கு மேல் தொங்கி விற்பனைக்கு காத்திருந்தது. சோடாவின் விலைக்காக நூறு ரூபாய்த்தாளை நீட்டினபோது கடைக்காரர் அளித்த விரோத பார்வை மேலே தாக்கியதால், தொங்கிய புத்தகம், சில்லறை மாற்ற, கை மாறியது. அந்த புத்தகம் ஒரு சில ஆலய விவரங்களை உள்ளே கொண்டிருந்தது. அவற்றில் கண் செல்லும்போது என்ன ஆச்சர்யம், சில்லறை மாற்ற வாங்கிய புத்தகத்தின் பக்கங்கள் என் மனத்தையே மாற்ற, ”பக்கம்” என்னை பக்குவப்படுத்தியதே!!.

நான் இப்போது நிற்கும் திருவல்லிக்கேணி இப்படியா இருந்தது ஒருகாலத்தில் என்று அறிந்தேன். புத்தகம் அப்படி என்ன சொல்லியது?

”வயோதிக வைஷ்ணவர் ஒருவர் திருவல்லிக்கேணி எல்லாம் ஒரு தரம் சுற்றி தான் என்ன பார்த்தேன் என்று ஒரு டயரி எழுதிவைத்தது அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் கண்ணில் பட்டது.

யாரோ ஒருவர் அவரைக் கேட்டிருப்பார் போலும்

”சுவாமி, திருவல்லிக்கேணிக்கு புதிதா?”

”ஆமாம், பல தேசங்களை சென்று பார்த்து வருகிறேன். இந்த புண்ய திவ்ய தேசம் மனதிற்கு ரொம்ப பிடித்திருக்கிறது””

” எப்படி அய்யா இருக்கிறது எங்கள் திருவல்லிக்கேணி, இங்கு என்ன பார்த்தீர்? உமது அபிப்ராயத்தை சொல்லும்”:

”1. அந்த பெரிய கம்சன் வில்லை ஓடித்தவனை, அவன் கொல்ல அனுப்பிய பெரிய மத யானையை கொன்றவனை,, மல்லர்களை அழித்தவனை, அர்ஜுனனுக்கு தேர் ஒட்டிய மகாராஜா பார்த்தனுக்கு சாரதியாக காட்சி தந்ததையும், சிற்றன்னை சொன்ன வாக்கை தட்டாது முடி துறந்த தந்தை சொல் தவறாத ராமனையும் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

2. மாட மாளிகை கூட கோபுரங்கள் உள்ள, ஒப்புமை இல்லாத அழகிய மாதர்கள் வாழும் மயிலாப்பூரில் இருக்கும் திருவல்லிக்கேணியில் என் நந்தகோபன் குமரனைக்கண்டேன்

3. மாய உருவெடுத்த அரக்கி பூதனை ஒரு தாயாக உருவெடுத்து பாலூட்ட வந்தபோது பாலோடு அவள் உயிர் குடித்த பாலக்ரிஷ்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

4.இந்திர விழாவில் தனக்கு மரியாதை செய்யாத ஆயர்குடி மக்கள் மேல் கோபம் கொண்டு இந்திரன் பெரும் வெள்ளம் மழை இடி மின்னல் அனுப்பி அவர்களை எல்லாம் தாக்கச்செய்தபோது மலையைக் குடையாய் பிடித்து காத்த கண்ணனை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

5. பாண்டவர்க்கு தூது சென்ற துவாரகை மன்னன், லக்ஷ்மி மணாளன் நாராயணனான கிருஷ்ணன், என் தந்தை, அம்மான் அவனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

6. கண்ணிழந்த திருதராஷ்ட்ரன் மகன் துச்சாதனன் அபலை திரௌபதியை துகிலுரித்து, அவள் ஆபத் பாந்தவா என்று தீனமாக வேண்ட அவளைக் காத்தவனை, அந்த 100 பேரை இழந்து அவர்கள் மனைவியர்கள் வாட, அவர்கள் பாண்டவர்க்கு இழைத்த தீமைக்கு யுத்தத்தில அர்ச்சுனன் கணக்கு தீர்க்க அந்த அர்ஜுனனின் தேர்ப்பாகனாய் வந்த பார்த்த சாரதியை திருவல்லிக்கேணியில் கண்டேன்.

7.பரதன் சத்ருக்னன் லக்ஷ்மணன் என்று தம்பிகளோடு, ராவணனை வதம் செய்த பிறகு, சீதையோடு பட்டாபிஷேகம் செய்த ராமனை, சூர்ய வம்ச ராஜாராமனை, சூரியனின் கதிர்கள் கூட நுழையமுடியாதபடி மரங்கள், இலைகள் கவிந்து பரவி குளிர்ச்சியாக இருக்கும் தோப்பும் துரவுமாக பச்சை பசேலென்று காட்சியளிக்கும் திருவல்லிக்கேணியை கண்டேன்.

8. எங்கேடா பிரஹலாதா உன் நாராயணன் என்று வெகுண்டு வாளுடன் தூணைச் சிதைத்த இரணியன் முன் நரசிங்கமாக தோன்றிய அழகிய தெள்ளிய சிங்கனைத் திருவல்லிக்கேணியில் கண்டேன்.

9. நாராயணனுக்கு நதியிலிருந்து அழகிய தாமரை மலரைப்பறித்து சூட்ட ஆற்றில் இறங்கிய யானையின் காலை ஒரு முதலை பிடித்து அதைக்கொல்ல முயற்சி செய்ய, ஆதிமூலமே என்று நாராயணனை வேண்டி அந்த யானை கதற, உடனே கருடாரூடனாக வந்து சுதர்சனச்சக்ரம் ஏவி அந்த முதலையை கொன்று காட்சி தரும், தேன் சொட்டும் மலர்கள் நிரம்பி வழியும், சோலை மிகுந்த, மாட கூட கோபுரங்கள் உயர்ந்த திருவல்லிக்கேணியைக் கண்டேன்.

10 தெளிந்த நீரோடை, தாமரைக் குளங்கள், உயர்ந்த மதில் சுவர்கள் கொண்ட மண்டபங்கள், மாளிகைகள், தொண்டை மண்டல ராஜா அழகுற நிர்மாணித்த மயிலாப்பூர் சேர்ந்த திருவல்லிக்கேணியை கண்ணாறக்கண்டேன் ”

அந்த வைணவர் எழதிய ” டூர் டைரி” பாடல்கள் :
1068:
வில் பெரு விழவும், கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழச்
செற்றவன் தன்னை, புரம் எரி செய்த
சிவன் உறுதுயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
திருவல்லிக் கேணி கண்டேனே.

1069:
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவர் விழுங்கும்
கோதில் இன் கனியை நந்தனார் களிற்றை
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை
அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும், மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே 2.3.2

1070:
வஞ்சனை செய்யத் தாய் உருவாகி
வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலையோடு உயிர் செக உண்ட
நாதனை தானவர் கூற்றை ,
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்து
துதி செய்யப் பெண் உருவாகி
அம சுவை அமுத அன்று அளித்தானை
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.3

1071:
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழாவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆநிரை தளராமல்
எம்பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை
திருவ அல்லிக்கேணி கண்டேனே 2.3.4

1072:
இன்துணை பதுமத்து அலர்மகள் தனக்கும்
இன்பன் நல் புவி தனக்கு இறைவன் ,
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
தனக்கு இறை, மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை
திருவல்லிக் கேணிக் கண்டேனே. 2.3.5

1073:
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு
இளையவன் அணி இழையைச் சென்று ,
எந்தமக்கு உரிமை செய் என, தரியாது
எம்பெருமான்! அருள்! என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம்
பெண்டிரும் எய்தி நூலிழப்ப ,
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே . 2.3.6

1074:
பரதனும் தம்பி சத்ருக்கனும்
இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
ராவணாந்தகனை, எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு ,
குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்,
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.7

1075:
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓராயிரம் நாமம்,
ஒள்ளிய ஆகிப் போத, ஆங்கு, அதனுக்கு ,
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல் விழிப் பேழ்வாய் ,
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை —
திருவல்லிக்கேணிக் கண்டேனே 2.3.8

1076:
மீன அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்று இழிந்த ,
கான் அமர் வேழம் கையெடுத்து அலற,
கரா அதன் காலினைக் கதுவ,
ஆணையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை,
தென் அமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே 2.3.9

1077:
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
மாட மாளிகையும் மண்டபமும்,
தென்னன் தொண்டையர் கோன் செய்ட நல் மயிலைத்
திருவல்லிக்கேணி நின்றானை,
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க்கலிகன்றி,
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்
சுகமினிது ஆள்வர் உலகே 2.3.10

கேள்வி கேட்டவர் யாரென்று தெரிய அவசியமில்லை. பதில் சொன்னவர் நமக்குத்தெரிந்த திருமங்கை ஆழ்வார்.'(நாலாயிர திவ்ய பிரபந்தந்தில் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழியில் 1068-1077 (பத்து) பாசுரங்கள் நான் படித்து மகிழ்ந்தவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த திருவல்லிக்கேணி மாறி ட்ரிப்ளிகேன் ஆகி, மாட மாளிகைகள், கோபுரங்கள் அடுக்கு வீடுகளாகவும், சோலை, மயில், குளம், மரம் செடி கொடி எல்லாம் காணாமல் போய்விட்டது. நல்லவேளை பார்த்தசாரதி ஆலயம் தன்னைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிக்கொண்டதோ தப்பியதோ. யாரோ யாருக்கோ அதை விற்றிருப்பார்கள். திருமங்கை மன்னன் அவர் வர்ணனை எல்லாம் வெறும் ஏட்டில் தான். அதாவது மிஞ்சியதே.

 

  

 

  

 

 


Some Rare Photographs  of the Parthasarathi Temple, at Madras (Chennai), Tamil Nadu, taken by Frederick Fiebig in c.1851. The photograph is one of a series of hand-coloured salt prints by Fiebig. The temple is one of two large temple complexes in Madras and is situated in Triplicane. It dates from the 17th century and is a celebrated sanctuary dedicated to the worship of Vishnu as Parthasarathi, the principal Hindu deity. The temple has two enclosures, which are entered through gopuras on the east and west sides. A gopura is a gateway surmounted by an elaborately carved tower and is found in south Indian temple architecture. This is a view of the west gopura. Little seems to be known about Frederick Fiebig. He was probably born in Germany and became a lithographer (and possibly was also a piano teacher  

 

source:::: Input from a friend of mine & Blog site on Vishnu Temples …divyadesamyatra.blogspot.com/

natarajan

” அச்சம் என்பது மடமையடா …”

Dr .Karthikeyan in The Hindu….Tamil….

புணேவில் உள்ள அந்த வாகன உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலைக்குப் போயிருந்தேன். அங்கு என் தமிழ் நண்பர் மனித வளத்துறை தலைவராக இருக்கிறார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுக்கு மட்டும் நூறு பொறியாளர்களை வேலைக்கு எடுத்து பராமரித்து வருவதாகச் சொன்னார்.

அந்த புனித பசுக்கள்தான் நிறுவனத்தின் எதிர்காலம் என்றும் அவர்களை நிறுவனம் எப்படியெல்லாம் போஷிக்கிறது என்றும் விளக்கினார். அந்த கம்பெனியின் தாயகம் ஜெர்மனி என்பதால் அடிக்கடி அங்கு செல்லும் வாய்ப்பையும் அடுத்த நூற்றண்டின் தொழில் நுட்பத்தை உருவாக்கும் அற்புத வாய்ப்பையும் இவர்கள் பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் சொன்னார்.

தமிழ்நாட்டிலிருந்து எத்தனை மாணவர்களை எடுத்தீர்கள் என்று கேட்டேன். வடக்கில் படித்த தமிழ் மாணவர்கள்தான் தன்னிடம் இருப்பதாகவும், தமிழ் நாட்டுக் கல்லூரிகளிலிருந்து எடுக்க முடியவில்லை என்றும் சொன்னார். ஏன்? அயல் நாட்டினர் பங்கு கொள்ளும் கடைசி கட்ட நேர்காணலில் ஆங்கில அறிவும் தன்னம்பிக்கையும் குறைவாக உள்ளதாக சொல்லி தமிழ் மாணவர்கள் வடிகட்டப்படுவதாகச் சொன்னார். “எல்லாம் தெரிஞ்சும் நம்ம பசங்க தைரியமா வாயை திறந்து ‘இது எனக்குத் தெரியும்’னு பளிச்சுனு சொல்ல மாட்டாங்க!” என்றார்.

வடக்கே உள்ளவர்கள் தெற்கிலிருந்து வருபவர்களை வாயில்லா பூச்சி போல பார்ப்பது நிஜம். அதை நிரூபிக்கும் விதமாக நம் மக்கள் பம்முவதும் நிஜம்தான்!

“தேசிய நீரோட்டத்தில் வடக்கும் மேற்கும் ஆதிக்கம் செய்கின்றன. தெற்கும் கிழக்கும் அடங்கிப் போகின்றன” என்று நண்பர் சொன்னதை ஏற்காமல் இருக்க முடியவில்லை.

தாழ்வு மனப்பான்மை

சேத்தன் பகத் எழுத்துகளும், ஷாருக்கான் படங்களும், மும்பை கம்பெனிகளின் விளம்பரங்களும் நாம் எப்படி பார்க்கப்படுகிறோம் என்பதற்கு சாட்சி. நாம் வாயை திறக்க முடியாததற்கு ஹிந்தி தெரியாதது மட்டும் காரணம் இல்லை. தமிழனின் தாழ்வு மனப்பான்மையும் பெரும் காரணம். தமிழ் தெரியாவிட்டாலும் இங்கு வந்து பிழைப்பவர்களுக்கு இருக்கும் திமிரும் தினவும் நமக்கு இல்லை.

எல்லா காலங்களிலும் படித்து விட்டு வேலைக்கு ஏங்கி நிற்கும் கூட்டமாகத்தான் சுதந்திர இந்தியாவில் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். அதுவும் வெள்ளைச்சட்டைக்குரிய பணிகளோ அல்லது அடித்தள வேலைகளோ அதிகம் பார்த்ததினால் நம்மை ஒரு பொருட்டாக அவர்கள் மதித்ததில்லை. அரசியல், சினிமா, வியாபாரம் என எல்லா துறைகளிலும் நம் அறிவு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிகாரப் பகிர்வு நடக்கவில்லை.

அதேபோல எங்கும் தமிழர் தன்னையும் தன் இனத்தையும் நிலை நிறுத்துவதற்கான வேலையைச் செய்யவில்லை.

வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பு

போர்க் குணம் எல்லாம் புற நானூற்று காலத்துடன் போய் விட்டது. கடைசியாக தமிழன் தானாக சென்று ரத்தம் சிந்தியது ஹிந்தி எதிர்ப்பிற்காக 1965ல். பிறகு கடந்த சுமார் 50 ஆண்டுகளாக வரலாறு மறந்து டி.வி பார்த்துக் கொண்டிருக்கிறான். இங்கு பணி செய்ய, வியாபாரம் செய்ய என சகலத்திற்கும் வெளி மாநிலத்தினர் வந்தாயிற்று. உள்ளுக்குள்ளேயே விலை போகாத தமிழன் வெளியே போய் வேலை பார்ப்பது எவ்வளவு கடினம்?

பேசியதில் கசப்புதான் மண்டியது. நாம் என்ன செய்யலாம் என்று கேட்டேன். “எது படிச்சாலும் நல்லா தைரியமா பேசணும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கற தைரியம் வேணும். நிறைய வெளியே வரணும்” என்றெல்லாம் எழுதுங்க என்றார் நண்பர். இதோ எழுதிவிட்டேன்!

வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்தேன்.

“சென்றிடுவீர் எட்டுத்திக்கும்” என வீர முழக்கம் ஒவ்வொரு கல்லூரியிலும் முழங்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் படித்தபின் ஒரு அயல் நாட்டு மொழியும் ஹிந்தியும் கட்டாயமாக கற்க வேண்டும். கண்டிப்பாக ஒரு வெளி மாநில அனுபவம் அவசியம். குறைந்தது ஒரு வார கல்விச் சுற்றுலாவாவது கூட்டிச் செல்ல வேண்டும். பல கல்லூரிகளில் இது நடப்பதே இல்லை.

விடுமுறை காலத்தில் வெளி மாநிலத்தில் கட்டாயமாக ஒரு பிராஜக்ட் செய்ய வேண்டும் என்று கல்லூரிகள் மாணவர்களை பணிக்க வேண்டும். மாற்று கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் அதே நேரம் நம் கலாச்சாரத்துடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டால் தன்னம்பிக்கை தளர்வதை தவிர்க்க இயலாது.

நம் மாணவர்களின் வேலைத்தகுதிக் குறைவு என குறைபடுபவர்கள் இது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

அதேபோல வெளி மாநில, வெளி நாட்டு தமிழ் சங்கங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் நின்று விடாமல் நம் தமிழ் மாணவர்கள் பிற கலாசாரங்களில் வேரூன்ற உதவ வேண்டும். இந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் பயிற்சிகளை நடத்தலாம். அந்த காலத்தில் கோயில் உள்ள ஊர்களில் தன் இன மக்களுக்காக சத்திரம் கட்டி வைத்தார்கள். வரும் விருந்தாளிகளுக்கு உணவு உபசரிப்பு மட்டுமின்றி ஒரு கலாசார பரிவர்த்தனைக்கும் அது வழி செய்யும். அதுபோல இந்த தமிழ் சங்கங்கள் இயங்க ஒரு விரிவான செயல் திட்டமே தீட்டலாம்.

`மினி ஆந்திரா’

மதராஸ் ஐ.ஐ.டி க்குள் ஒரு மினி ஆந்திராவே உண்டு. பல ஐ.டி. கம்பெனிகளில் நிர்வாகம், மனித வளம் போன்ற பிரிவுகளில் கேரள ஆதிக்கம் உண்டு. பல வட நாட்டுத் தலைவர்கள் கொண்ட தென்னாட்டு நிறுவனங்களில் இங்குள்ள பணியாளர்களுக்கு ஹிந்தி வகுப்பு நடக்கிறது. அதுபோல பல நிறுவனங்களில் தமிழ் நாட்டு பணியாளர்கள் (கீழ் நிலைகளில் மட்டுமல்ல!) வேண்டாம் என வெளி மாநிலத்தினரை நாடும் பணி தீவிரமாக நடக்கிறது. இவை எல்லாம் இயல்பாக நடைபெற்றவை அல்ல.

உள்ளுக்குள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வெளியே போகவும் அச்சப்பட்டு நிலை குலைந்து நிற்கிறான் தமிழன். கடாரம் கொண்டான் என்று பெருமையோடு பேசப்பட்ட இனம் இன்று காட்பாடியை தாண்டுவதற்கே தடுமாறிக் கொண்டிருக்கிறது!

gemba.karthikeyan@gmail.com

Keywords: மனித வளம், கார்த்திகேயன், தமிழர்கள், தமிழ் மொழி, மொழி வளம், தாழ்வு மனப்பான்மை, வேலைவாய்ப்பு, நேர்முகத் தேர்வு
Topics: வணிகம்|

source:::: Dr. Karthikeyan in The Hindu …TAMIL

Natarajan

” முடிந்ததா உங்க பிரச்சனை … ” ?

 

வெடித்தது  ஒரு  குண்டு  ….  மடிந்தது  ஒரு இளந்தளிர்  …

இடி  விழுந்தது  ஒரு  குடும்பத்தில் …. சோகத்தில்

முடிந்தது  அவர்தம்   கனவு … சொல்லுங்க  இப்போ …

கொடிய வர்களே …. முடிந்ததா  உங்க  பிரச்சனை

விடியலை  பார்க்காமல்  மடிந்த அந்த   இளம் தளிருடன்  ?

 

நடராஜன்

 

 

 

 

 

 

” பெரியவாவை பார்க்க நாளைக்கு போறீங்களா … ? “

நமஸ்காரம்.

சுவாரஸ்யமான சில அனுபவங்களை உடனுக்குடன் போஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவசர கதியில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவதில், முடியாமல் போகிறது.

அப்படித்தான் சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை வியந்து வியந்து பார்த்தேன். நெகிழ்ந்து நெகிழ்ந்து போனேன். ஆன்மிக அன்பர்கள் அதைப் படிக்க வேண்டும் என்று பதிவிட விரும்பினேன். ஆனால், நேரம் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது இதைப் பதிவிடுவதற்கு பெங்களூரு மகா பெரியவா அத்யந்த பக்தர் திரு. கார்த்தி நாகரத்தினம் புண்ணியம் கட்டிக் கொண்டார். தேங்க்ஸ் கார்த்தி.
முதலில் விஷயத்துக்கு வருகிறேன்.

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வியாழன் அன்று எனது ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் பாரதிய வித்யா பவன் அரங்கில் துவங்கியது (ஒவ்வொரு ஆங்கில மாதமும் இரண்டாவது வியாழன் அன்று). அன்றைய தினம் எனது நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது.

இதற்கான அழைப்பிதழை ‘க்ளேரியன் காஸ்மடிக்ஸ்’ நிறுவனத்தார் தயார் செய்திருந்தார்கள். என் தொடர்புடைய எந்த ஒரு அழைப்பிதழாக இருந்தாலும் சரி… நல்ல நிகழ்வாக இருந்தாலும் சரி… காஞ்சி ஸ்ரீமடம் போய் மகா பெரியவா அதிஷ்டானத்தில் வைத்து ஆசி பெற்று அதன் பின் பணிகளைத் துவங்குவது வழக்கம். ஆனால், இந்த அழைப்பிதழ் வந்தும், உடன் நான் காஞ்சிக்குப் போக முடியவில்லை. என்ன ஒரு சமாதானம் என்றால், எப்படியும் இன்னும் நான்கைந்து நாட்களில் வெளியிடப்பட வேண்டிய புத்தகங்களின் பிரதிகள் வந்து விடும். அவற்றைக் கொண்டு போய் அதிஷ்டானத்தில் வைக்கலாம் என்று நேரம் கருதி எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

அழைப்பிதழின் பிரதிகளை கூரியர் மூலம் அனுப்பத் தொடங்கி விட்டோம். சிறப்பு அழைப்பாளரான மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலய இணை இயக்குநர் திருமதி. காவேரி மேடத்துக்குக் கொடுக்கலாம் என்று மயிலை போனேன். நேரில் கொடுத்தேன். அங்கிருந்து இன்னொரு நண்பர் மூலமாக திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை தரிசிக்கலாம் என்று என் மனைவி, மகளோடு புறப்பட்டு விட்டேன்.

அன்று சனிக்கிழமை (5.4.2014). ஸ்ரீபார்த்தசாரதி ஆலயத்தில் கூட்டமான கூட்டம். நண்பர் உதவியால் சிறப்பு தரிசனம் முடித்த பின் இதர சந்நிதிகளைத் தரிசித்துக் கொண்டு வரும்போது பின்பக்கம் உள்ள ஸ்ரீநரசிம்மரை தரிசிக்கப் போனேன். திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதிக்கு எவ்வளவு மரியாதையோ, அந்த அளவுக்கு ஸ்ரீநரசிம்மருக்கும் உண்டு. இந்த ஸ்ரீநரசிம்மர் ஆழ்வாரால் பாடல் பெற்றவர். தனி கொடி மரம், வைபவங்கள் எல்லாமே உண்டு. எப்போதும் இவர் சந்நிதியிலும் கூட்டம் இருக்கும்.

நரசிம்மரைத் தரிசிக்கப் போனோம். கூட்டமான கூட்டம். உள்ளே சந்நிதியில் இருந்த பட்டாச்சார்யர் ஆரத்தி காண்பித்து விட்டு வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். என்னிடம் காண்பிக்கும்போது ‘பெரியவாளைப் பாக்க நாளைக்குப் போவேளா?’ என்று கேட்டார். அவரை அதிசயமாகப் பார்த்தேன். இருவருக்கும் அறிமுகம் இல்லை.

‘பெரியவா’ என்றால், என்னைப் பொறுத்தவரை ‘மகா பெரியவா’தான் என்றாலும், ஒரு வைணவ ஆலயத்தில் உள்ள பட்டாச்சார்யர் யாரை பெரியவா என நம்மிடம் குறிப்பிடுகிறார் என்று குழம்பி, ‘‘புரியல’’ என்று சொன்னேன்.

பிறகு தெளிவாக, ‘‘மகா பெரியவா அதிஷ்டானத்துக்கு நாளைக்குப் போவேளானு கேட்டேன்’’ என்றார்.

தூக்கி வாரிப் போட்டது. ‘இவர் ஏன் கேட்கிறார்? காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கா என்ன?’.

பிறகு சொன்னேன்: ‘‘நாளைக்குப் போற ஐடியா இல்லே. இன்னும் மூணு, நாள் கழிச்சுப் போவேன்’’ (புது புத்தகம் அப்போதுதான் அச்சகத்தில் இருந்து வரும். அதை வைக்கும் எண்ணத்தில் சொன்னேன்).

‘‘ஜீ தமிழ்ல தெய்வத்தின் குரல் டெய்லி பாக்கறேன். நன்னாருக்கு’’ என்றவர், ‘‘ஒரு நிமிஷம் இருங்கோ’’ என்று கருவறைக்குள்ளே போய் விட்டு ஸ்ரீநரசிம்மரின் பின்னால் இருந்து ஒரு பெரிய சம்பங்கி மாலையை எடுத்து வந்தார். என்னிடம் கொடுத்து விட்டு, ‘‘நீங்க எப்ப காஞ்சிபுரம் அதிஷ்டானம் போறேளோ, அப்ப இதை அவருக்கு சமர்ப்பிச்சிடுங்கோ’’ என்றார். ஸ்தம்பித்துப் போனேன்.

‘புத்தக ரிலீஸுக்குப் பத்திரிகை அடிச்சு எல்லோருக்கும் கொடுத்துண்டு இருக்கே… எனக்கு இன்னும் கொடுக்கலையேடா’ என்று மகா பெரியவாளே கேட்பது போல் ஒரு எண்ணம் அந்த வேளையில் வந்தது.

புத்தம் புது மாலையை பவ்யமாகக் கைகளில் வாங்கிக் கொண்டேன். ‘‘நிச்சயம் சமர்ப்பிச்சிடறேன்’’ என்று புறப்பட்டேன்.

பயணத் திட்டத்தை மகா பெரியவா ஏற்படுத்திக் கொடுக்கிறார். ‘மலர் மாலையோட பத்திரிகையும் கொண்டு வாடா’ என்று சொல்றார் போலிருக்கு.

அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து சம்பங்கி மாலையுடனும், புத்தக ரிலீஸ் பத்திரிகையுடனும் காஞ்சிக்கு ஒரு டிராவல்ஸ் வண்டியில் புறப்பட்டு விட்டேன்.
………………………………………………..
இதில் பெங்களூரு கார்த்தி நாகரத்தினம் எங்கே வந்தார்?

பெரியவா மகிமை பற்றி அவர் ஓர் அனுபவத்தை எடுத்துச் சொல்ல… நான் இந்த திருவல்லிக்கேணி ஸ்ரீநரசிம்மர் அனுபவத்தைச் சொன்னேன். அப்போது நரசிம்மருக்கும் பெரியவாளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துச் சொல்லி, ‘எல்லாம் அவரது விளையாடல்தான்’ என்றார். அதன் விளைவுதான் இந்தப் பதிவு.
…………………………………………………
இந்த நேரத்தில் இன்னொரு நரசிம்மர் அனுபவமும் என் நினைவுக்கு வருகிறது. நான் ‘மகா பெரியவா மகிமை’ பற்றிப் பேச வந்த நேரம் அது… 2012-ஆம் வருடம் ஒரு புரட்டாசி சனி என்று நினைக்கிறேன். கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மஹராஜ் அவர்கள் சென்னை தி.நகர் பாண்டி பஜார் பாலாஜி திருமண மண்டபத்தில் தங்கி இருந்தார். சனி காலை 9.30 மணிக்கு அவர் சொற்பொழிவுக்கு முன்னால் என்னை அரை மணி நேரம் பேசுமாறு – அதாவது 9.00 – 9.30 வரை பேசுமாறு பணித்திருந்தார். அன்று காலை இல்லத்தில் இருந்து சீக்கிரமாகக் கிளம்பினேன்.

மகா பெரியவா தொடர்பாக என்னென்ன சம்பவம் சொல்லலாம் என்று தீர்மானித்திருந்தேன். இடையே, நேரம் இருந்தால் – ஒரு நரசிம்மர் அனுபவத்தைச் சொல்லலாமா வேண்டாம என்று யோசித்தேன். ஆனாலும், நரசிம்மர் அனுபவத்தை சொல்வது அநேகமாக என் திட்டத்தில் இல்லை (ஒரு பெண்மணிக்குப் பிரசவ காலத்தில் கனவில் நரசிம்மர் வந்து ‘என் பெயர் வை’ என்று சொன்ன சம்பவம் அது)

ஏனோ, தொடர்பே இல்லாமல் சிவா விஷ்ணு கோயில் வழியாகப் போக நேர்ந்தது. கோயிலுக்குள் போகாமல் செல்ல மனமில்லை. உள்ளே போனோம். விறுவிறுவென்று சுற்றி விட்டு வெளியே வருவதாகத் திட்டம். வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து பாலாஜி திருமண மண்டபம் போக வேண்டும். மணி இங்கேயே 9 ஆகப் போகிறது. எனக்குள் பதட்டம், தாமதம் ஆகி விடுமோ என்று.

பிராகாரம் சுற்றி வரும்போது ஸ்ரீநரசிம்மர் சந்நிதியில் இருந்த ஒரு பட்டாச்சார்யர் (அறிமுகம் இல்லை) எங்களைப் பார்த்து, ‘ஒரு ரெண்டு நிமிஷம் இங்க வாங்கோ. அபிஷேகம் பண்ணிட்டு, ஆரத்தி காண்பிக்கறேன். பாத்துட்டுப் பிரசாதம் வாங்கிண்டு போங்கோ. எல்லாமே ரெடியா இருக்கு’’ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தார்.

திவ்ய தரிசனம். நரசிம்மரைப் பத்தி மொதல்ல சொல்லு என்று மகா பெரியவாளே எனக்கு அறிவுறுத்துவதாக எண்ணி, அந்த சம்பவத்தைதான் பாலாஜி திருமண மண்டபத்தில் முதலாவதாகச் சொன்னேன்.
……………………………………
அன்புடன்,
பி. சுவாமிநாதன்

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

source:::: Experience of Shri. Swaminathan, my Friend thro email

natarajan

” குழப்பம் வேண்டாம் ….இனிமேல் கவலை இல்லை … “

 



காஞ்சி சங்கர மடத்தில், ஒரு மாலை வேளை…மகா பெரியவரைத் தரிசிக்க ஏகக்கூட்டம் கூடியிருந்தது.

அப்போது, அவரது பார்வையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் தென்பட்டார்.

அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், தனக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த ராமு என்ற இளைஞரை அழைத்து, “”கியூவிலே பதினைந்தாவது ஆசாமியா நிக்கிறானே ஒரு புள்ளையாண்டான்! அவன் சைசுக்கு சரியா இருக்கிறாப்லே ஒரு சட்டை, பேண்ட்துணி வாங்கிட்டு வா! அதுக்குரிய பணத்தை ஆபீசிலே வாங்கிண்டு போ! பக்கத்திலே இருக்கிற முதலியார் ஜவுளிக்கடையில் துணி எடுத்துண்டு வா!” என்றார்.

ராமுவுக்கு பெரியவர் ஏன் இப்படி சொல்கிறார் என்ற விபரம் புரியவில்லை. ஆனாலும், 15 நிமிடங்களுக்குள் துணிமணியுடன் வந்து நின்றார். துணிமணிகளைப் பார்த்த பெரியவர், “”பேஷ்! பேஷ்! நன்னா இருக்குடா!” என்று பாராட்டி விட்டு, “”நீ உடனே போய், ஒரு மூங்கில் தட்டில் நெறயபழங்கள், பூர்ண பலம் (மட்டைத் தேங்காய்) எல்லாம் எடுத்து வச்சுண்டு, இந்த துணிமணிகளை அதுமேலே வச்சுடு. நான் சொன்னேன்னு சொல்லி, மடத்து மேனேஜர் கிட்டே 6250 ரூபாயை ஒரு கவர்ல போட்டு, அதையும் தட்டுலே வச்சுடு. என்ன பண்ணணுங்கிறதே அப்புறமா சொல்றேன்!” என்றார்.

இதற்குள் அந்த இளைஞர் சுவாமிகள் முன் வந்து விட்டார். பெரியவர் அவனை ஏறிட்டுப் பார்த்தார். ராமுவை அழைத்து, “”அந்த மூங்கில் தட்டை அவன் கையிலே கொடு.

அந்தப் பையனுக்கும், அவன் குடும்பத்துக்கும் நான் பூர்ண ஆசிர்வாதம் பண்றதா சொல்லு,” என்று இன்முகத்துடன் கட்டளையிட்டார்.

அதன்படி, தட்டை அவன் கையில் ராமு கொடுக்க, அவன் குழப்பத்துடன் நின்றான்.

“”ராமு! அவன் ரொம்ப குழம்பியிருக்கான். குழப்பம் ஏதும் வேண்டாம். அவன் வீட்டிலே பணத்தை பத்திரமா ஒப்படைக்கச் சொல்லு!” என்றார் பெரியவர்.

இளைஞரும் ஏதும் புரியாமல் தட்டுடன் கிளம்பி விட்டார்.

அவரைப் போல குழம்பி நின்ற ராமுவிடம் பெரியவர்,””ராமு! ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. அப்போ, நம்ம மடத்துக்கு ரொம்ப சிரமமான காலம். அப்போ, ஒரு ஆறுமாசம் நான் வடதேசத்துக்கு யாத்திரை கிளம்பினேன். மடத்து வாசலுக்கு வந்தேன். எதிர்த்தாப்புலே ஒரு செட்டியார் மளிகைக்கடை வச்சிருந்தார். மடத்துக்கு அங்க தான் மளிகை சாமான்கள் பற்று வரவு கணக்கு. வாசல்ல என்னைப் பார்த்ததும், செட்டியார் வேகமா ஓடி வந்தார்.

“என்ன செட்டியார்வாள்! சவுக்கியமா? வியாபாரம் எல்லாம் எப்படி போகுதுன்னு விசாரிச்சேன்! அவர் வாயைப் பொத்திண்டு பவ்யமா, “சுமாரா போறது சுவாமி! கஷ்டமாத்தான் இருக்கு! பெரியவா வடதேசம் போவதாவும், திரும்ப அஞ்சாறு மாசம் ஆகும்னும் சொன்னாங்க!’ என்று மென்னு விழுங்கினார். பிறகு, “நாலஞ்சு மாசமா மடத்து மளிகை பாக்கி அப்படியே நிலுவைல இருக்கு! எனக்கும் கஷ்டம்! அதனாலே, உங்ககிட்ட குறையைச் சொல்லிக்கிறேன்,’ என்றார்.

ஆறுமாதம் கழித்து வந்து பார்த்தால் கடை பூட்டியிருந்துச்சு! விசாரித்ததிலே, செட்டியார் மூணு மாசத்துக்கு முன்னாடி திடீர்னு காலகதி அடைஞ்சுட்டதா சொன்னா! அவரோட மனுஷாள்ளாம் எங்கே இருக்கான்னும் தெரியலே. அதற்கப்புறம் பாக்கி எவ்வளவுன்னு தெரிஞ்சு வச்சுண்டேன்! எண்ணூத்தி எழுபத்தஞ்சு முக்கால் ரூவா! அந்த பாக்கியை இன்னைக்கு தான் வட்டியும் முதலுமா தீர்த்து வச்சேன்! அந்த பையன் வேறு யாருமில்லே!

செட்டியாரோட பிள்ளை வயித்து பேரன். தாத்தாவுக்கு சேர வேண்டியதை, பேரன் கிட்ட அசலும் வட்டியுமா சேர்ப்பித்தாச்சு!

இனிமே கவலை இல்லை!” என்றார்.

பெரியவர் செய்த இந்த கைங்கர்யம் நம் எல்லாருக்கும் ஒரு பாடம். யாருக்காவது கடன் கொடுக்க இருந்து, அவருக்கு கொடுக்க இயலாமல் போனால், அவர்களின் வாரிசைத் தேடிப்பிடித்து கொடுத்து விட வேண்டும்.   

 

source::::www.periva.proboards.com

natarajan

When Madras First Voted !!!

 

S Satyamurti

S Satyamurti

Chennai has just voted, along with the rest of Tamil Nadu. Waiting for the results may be a good time to think of the first mass-based election – in 1937, when over 35 million or about 25 per cent of the adult population voted in all British-ruled provinces of India, for the local legislatures. In Madras Presidency, that meant elections to the newly created Madras Legislative Assembly.

Our city was the capital of this vast Presidency, which extended from Andhra to Kanyakumari and so the atmosphere was electric. Adding to the excitement was the Congress party, contesting elections for the first time. Leading the campaign effort was S Satyamurti, veteran freedom-fighter, lawyer, theatre personality, patron of music and a magnificent orator. Under Satyamurti, the campaign was to be a colourful one.

He had for long been using theatre and (from 1931) film artistes, to attract crowds for his public meetings. In the 1937 campaign he was to press them once again into service. Chief among these were KB Sundarambal and ‘Avvai’ TK Shanmugam. Those were polls when in place of symbols, each party was identified by a ballot box of a certain colour and the voter had to push his paper into the box of his/her choice. The Congress party was assigned the colour yellow. At each public meeting, Sundarambal and Shanmugam would sing song hits from their plays and when a sizeable crowd had collected, would speak about the Congress. Then Sundarambal would wax eloquent on the good and auspicious qualities of turmeric and therefore the colour yellow. They would then depart after asking everyone assembled to vote for the yellow box. The Devadasi campaigner Tanjavur Kamukannammal would give the colour a different twist. She would speak about snuff and then ask everyone to vote in the ‘snuff box’! A special gramophone record containing the songs of Sundarambal and Musiri Subramania Iyer along with Congress appeals carried the message into households.

Such was the Congress juggernaut that some opposing candidates opted to withdraw rather than fight the polls. The first unopposed return to the Assembly was announced a month before the election – a certain K Kamaraj Nadar (!!) was declared elected from the Sattur-Aruppukottai rural constituency.

Those were days when newspapers could get away by being blatantly partisan (or patriotic depending on how you looked at it). The Hindu, carried a headline instructing its readers to “Fill the Yellow Boxes”. “Voters should require little persuasion at this time of the day to vote for the Congress,” it said. On the eve of polling day (February 14) NS Varadachari, a Congress candidate, was roughed by hired thugs in the Triplicane area. The Hindu carried a column on this and also had a photograph of Varadachari leading a procession, with bandaged head!

The results, when announced on February 24, were well worth the effort. The Congress had cornered 74 per cent of the seats in the Assembly, the best performance by the party anywhere in India.

Keywords: hidden histories columnS SatyamurtiMadras voting

SRIRAM.V in The Hindu …MetroPlus

natarajan

முள்ளும் குறடும் ….முருகன் கருணை …!!!

இதிகாசம் மற்றும் புராணங்களில், தெய்வமே மனிதர்களுக்கு உதவி செய்து, துயரத்தில் இருந்து காப்பாற்றியதாக படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.
‘அதெல்லாம் அந்தக் காலம்; இப்ப அதெல்லாம் நடக்காது; இது கலிகாலம்’ என்ற எதிர்மறையான புலம்பலும் உண்டு.
தெய்வத்திற்கு, காலக் கணக்கோ எல்லையோ கிடையாது. தெய்வம் என்றும் நின்று அருள் புரியும்.
கலியுகத்தில், அதுவும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஒருவருக்காக, முருகப் பெருமான் நடத்திய அருளாடல் இது.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பாம்பன் ஸ்வாமிகள். இவர், கனவிலும், நனவிலும் முருகனைத் தரிசித்தவர்.
ஒரு நாள் அவர், தென்னந்தோப்பிற்குள் நடந்து கொண்டிருந்தார். கடும் வெயில், தலைக்கு மேலே சூரியன் சுட்டது. தரையோ, கீழிருந்து கால்களைத் தாக்கியது.
கடும் வெயிலில் நடந்து கொண்டிருந்த பாம்பன் சுவாமிகளின் காலில், முள் தைத்து விட்டது. சுவாமிகள் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே, தரையில் இருந்த கொதிப்பும் அவரைத் துன்புறுத்தியது.
முள் குத்திய காலைத் தூக்கி, தொடையின் மீது மல்லாத்தி வைத்து, முள்ளைப் பிடுங்க முயற்சித்தார். ஆழமாகவும், முழுமையாகவும் பதிந்திருந்த முள்ளை, பிடுங்க முடியவில்லை.
கையால் அசைக்க அசைக்க, ரத்தம் வந்து, வலி தான் அதிகமாயிற்றே தவிர, முள்ளை எடுக்க முடியவில்லை.
‘முருகா இந்த முள்ளைப் பிடுங்கும் போதே, இவ்வளவு வலிக்கிறதே… உடம்பில் இருந்து, உயிரைப் பிடுங்கும் போது, எவ்வளவு வலி இருக்கும்…’ என்று, கண்ணீர் சிந்தினார் பாம்பன் சுவாமிகள். கண்ணீர் முள்ளின் மீது விழுந்தது.
அதன் காரணமாக, முள், சற்று நெகிழ்ந்து கொடுத்தது. முள்ளைப் பிடுங்கி எறிந்து விட்டு, சுவாமிகள் திரும்பி விட்டார்.
இந்த விஷயத்தை சுவாமிகள், யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், அடியார் மனம் வருந்த, ஆறுமுகன் பொறுப்பாரா!
அன்றிரவே, தச்சு வேலை செய்யும் ஒருவர் கனவில், கந்தக் கடவுள் தோன்றி, ‘என் அடிமையான அந்த இளைஞனுக்கு, நீ ஒரு பாதக்குறடு (மரத்தாலான பாதுகைகள்)செய்து கொடு…’ என்று, கட்டளையிட்டார்.
மறுநாள், தச்சு வேலை செய்பவர், முருகப் பெருமானின் உத்தரவுப்படியே பாதக்குறடுகள் செய்து வந்து, பாம்பன் சுவாமிகளிடம் தந்து, முருகப் பெருமானின் உத்தரவையும் கூறினார்.
பாம்பன் சுவாமிகளுக்கு மெய் சிலிர்த்தது; அவர், முருகனின் கருணையை எண்ணி உருகினார்.
அடியார்கள் மனம் வருந்த, ஆண்டவன் பொறுக்க மாட்டார் என்பதை, விளக்கும் நிகழ்ச்சி இது. 


பி.என்.பரசுராமன்   IN dINAMALAR….Vara malar…

natarajan