| Four women share a birthday and always celebrate it together.
For their 40th birthday they go to the Lakeview restaurant because the waiters are cute and wear tight pants. For their 50th birthday they go to the Lakeview restaurant because the prices are reasonable and it has a good wine list.
For their 60th birthday they go to the Lakeview restaurant because its quiet and has a nice view. For their 70th birthday they go to the Lakeview restaurant because its wheelchair accessible. For their 80th birthday they go to the Lakeview restaurant because they’ve never been there before.!!! Source……www.ba-bamail.com Natarajan |
environment
Mongolia”s Reindeer People…. Amazing !!!


Living in northern Mongolia, the Dukha use the completely domesticated reindeer for primarily for transport, as the nomadic tribe changes camp locations between five and eight times per year.
They also use the reindeer for clothing, tools and increasingly trade. Dukha sell reindeer antlers and penises to Chinese traders, who pay a high price for the incredibly rare items. The Dukha use the money to purchase items that they are unable to acquire out in the vast countryside, including electronics.




However, their lifestyles–and understanding of them–are in a state of transition. Regional forests and reindeer populations are diminishing, and since Mongolia’s democratization no governmental programs have been established to bring in any more reindeer from Siberia, which threatens the basic fabric of Dukha livelihoods.
The Dukha have also started to use reindeer revenues (increasingly from tourism) to purchase solar panels, satellite antennas and cell phones, gradually abandoning their “traditional” devices for more modern sources of heat and entertainment.
Increased mining activities are encroaching upon the areas the Dukha call home, leaving some–primarily elder members of the tribe–grasping for their nomadic identity as it is slowly vanishes amid an urbanizing Mongolia and nearby China.







காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா…

சட்டத்தை மீறக் கூடாது என்ற உணர்வு ஹாங்காங் கல்விமுறையின் அடிப்படை போதனைகளுள் ஒன்று!
கடந்த வாரம் ஹாங்காங்கில் ஓர் இந்திய அங்காடிக்குப் போயிருந்தேன். பொருட்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் ஓர் இளம்பெண். கைபேசியில் தனது மூன்று வயது மகனின் குறும்புகளைப் பற்றிப் பெருமையாக அலுத்துக்கொண்டிருந்தார்- ஆங்கிலத்தில். கடைக்காரர் அந்தப் பெண் வாங்கியிருந்த காய்கறிகள், மளிகைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், தின்பண்டங்கள் முதலானவற்றைத் தனித்தனி பிளாஸ்டிக் பைகளில் போட்டார். பின் அவற்றை இரண்டு பெரிய பிளாஸ்டிக் பைகளில் அடுக்கிக் கொடுத்தார்.
ஹாங்காங்கில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதற்கொண்டு அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகள் கொடுக்கப்படக் கூடாது; வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் மட்டும், பையொன்றுக்குக் குறைந்தபட்சம் 50 சதம் (ரூ. 4) கட்டணமாக வசூலித்துக்கொண்டு வழங்கலாம். என் முறை வந்தபோது கடைக்காரரிடம் கேட்டேன்: “அந்தப் பெண்ணிடம் பைகளுக்குக் கட்டணம் வாங்கினீர்களா?”. அவர் தலையைச் சரித்து என்னைப் பார்த்துக் கமுக்கமாகச் சிரித்தார். ஹாங்காங்கின் ஒரு லட்சம் அங்காடிகளில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு சட்டம், ஓர் இந்திய அங்காடியில் வணிகராலும் பயனராலும் எவ்வித உறுத்தலுமின்றி மீறப்படுகிறது.
கிராமங்களில் சிலர் கேட்பார்கள்- ‘படித்தவன் மாதிரியா நடந்துகொள்கிறான்?’. படிப்பு பண்பைத் தர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. நான் சந்தித்த கடைக்காரரும் இளம் பெண்ணும் படித்தவர்கள்தான். ஆனால், சட்டத்தை மதிப்பதும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் இருப்பதும் படித்தவர்கள் பின்பற்ற வேண்டிய பண்புகளாக அவர்களுக்குத் தெரியவில்லை.
இலகு ரயில்
ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, நான் ஹாங்காங் வந்த புதிதில், இருபதாண்டுகளுக்கு முன்னால், புறநகர் ஒன்றில் உள்ள கட்டிடப் பணித்தலத்துக்கு உடன் பணியாற்றும் இளைஞன் என்னை அழைத்துச் சென்றான். மெட்ரோ ரயிலிலிருந்து இலகு ரயிலில் மாறிச் செல்ல வேண்டும். இலகு ரயில் புறநகர்களில் மட்டும் ஓடும், இரண்டு பெட்டிகள் மட்டுமே இருக்கும். தண்டவாளங்களும் நடைமேடையும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் நிலையங்களைப் போல பொது வெளியோ கட்டணக் கதவுகளோ இராது. பயணச்சீட்டு வாங்க சிறிய இயந்திரம் இருக்கும்.
சீட்டு இல்லாமலும் ரயிலில் ஏற முடியும், இறங்கவும் முடியும். நான் பணித்தலத்துக்குப் போகும்போதும் திரும்ப வரும்போதும் கவனித்துக்கொண்டே இருந்தேன். சீட்டு இல்லாமல் யாரும் பயணிக்கவில்லை. உடன் வந்த இளைஞனிடம் “இது உங்களுக்கு எப்படிச் சாத்தியமானது?” என்று கேட்டேன். “நாங்கள் இதைப் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்துவிடுவோம்” என்று பதிலளித்தான். அதாவது சட்டங்களை மதிக்க வேண்டும் என்று ஹாங்காங் பள்ளிகளில் சொல்லித்தருகிறார்கள்.
கல்வியும் சமூகமும்
நமது இந்நாளையக் கல்வித் திட்டத்தில் இப்படியான போதனைகளுக்கு இடமில்லை. கல்வி வணிகமயமாகி விட்டது. இந்தத் திட்டத்தில் படிக்கிறவர்கள் பண்பாளர்களாக வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் என்பது கல்வியாளர்கள் சிலர் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை. ஆனால், கூடவே இன்னொரு கேள்வியும் எழுகிறது. கல்வி வியாபாரமாவதற்கு முன்னால் படித்தவர்கள் எல்லாம் பண்பாளர்களாக இருந்தார்களா?
1916-ல் நடந்த காசி காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய காந்தியடிகள் மக்கள் பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில்லை என்று வருத்தப்படுகிறார். மாணவர்கள் ரயில் பெட்டிகளிலேறி அனைத்து இருக்கைகளையும் ஆக்கிரமித்துக்கொள்வது குறித்துக் கவலைப்படுகிறார். மாணவர்களைப் பற்றிக் கைப்புடனும் வசைப்பாங்குடனும் சொல்கிறார்: ‘அவர்கள் ஆங்கிலம் படித்திருக்கிறார்கள்’. தொடர்ந்து முயற்சித்தால் சுதந்திரத்துக்கு முன்னால் நமது பண்பு நலன்களை மேம்படுத்திக்கொண்டுவிடலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
‘மதுவையும் தீண்டாமையையும் ஒழிக்க வேண்டும், கதர் அணிய வேண்டும், புறத்தில் தூய்மையும் அகத்தில் நேர்மையும் வேண்டும்’ போன்ற போதனைகள் அவருக்கு அரசியல் விடுதலையைவிட முக்கியமானவையாக இருந்தன. காந்தியடிகள் சட்டத்தை மீறினார். அது எதிர்ப்பைக் காட்டுகிற அவரது போராட்ட வடிவம். சத்யாக்கிரகிகளிடம் அவர் வலியுறுத்திச் சொன்னார்: ‘பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்காதீர்கள்; போலீஸ் கைதுசெய்ய வந்தால் உடனே கீழடங்குங்கள்’. ஒரு நல்ல சிவில் சமூகம் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.
காந்தி தேசத்தின் இன்றைய நிலை என்ன? தாம்பரத்தில் அதிகாலை நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நான் கண்ட காட்சி எடுத்துக்காட்டாக அமையலாம். தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்த பேருந்திலிருந்து அந்தக் குடும்பம் இறங்கியது. சாலையைக் குறுக்காகக் கடந்து மையத்தை அடைந்தது. அங்கே சாலையைப் பிரிக்கும் கட்டைச் சுவரின் மீது நான்கடி உயரத்துக்கு இரும்புக் கிராதி கட்டப்பட்டிருந்தது. நடுத்தர வயதிலிருந்த தந்தை முதலில் கிராதியிலேறி மறுபக்கம் குதித்தார். அடுத்து ஏழெட்டு வயதிலிருந்த மகன் உற்சாகமாகத் தாண்டிக் குதித்தான்.
தொடர்ந்து பதின்பருவத்திலிருந்த மகள் பயணப் பொதிகளை எடுத்துக்கொடுக்க மறுபக்கத்திலிருந்த தந்தையும் மகனும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். அடுத்தடுத்துத் தாயும் மகளும் மறுபுறம் தாவினார்கள். பிறகு மொத்தக் குடும்பமும் சாலையின் அடுத்த பாதியை குறுக்காகக் கடந்து சென்றது. ஏன் இத்தனை பிரயாசை? பேருந்து நிறுத்திய இடத்திலிருந்து சிறிது தொலைவில் பாதசாரிகள் கடப்பதற்கான வெள்ளைக்கோட்டுப் பாதை இருந்தது. அவ்வளவு தூரம் நடப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. இந்தக் குடும்பத்தில் வளர்கிற சிறுவனுக்குச் சட்டத்தைக் குறித்து என்னவிதமான மதிப்பீடுகள் உருவாகும்?
ஹாங்காங் பள்ளிகளில் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சொல்லித்தருகிறார்கள். அதே வேளையில் மொத்த சமூகமும் சட்டத்தின் மாட்சிமையை (ரூல் ஆப் லா) பேணுவதைக் கடமையாகக் கொண்டிருக்கிறது. பிள்ளைகள் பள்ளியிலிருந்தும் கற்கிறார்கள், சமூகத்திட மிருந்தும் கற்கிறார்கள்.
காந்தி ஏமாந்தார்
இந்த இடத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். அதிகாலை நேரம். நல்ல கூட்டம். மற்ற நகரங்களில் அலுவலகங்கள் திறக்கிற நேரத்திற்குள் போய்ச்சேர்கிற அவசரத்தில் கார்பரேட் கனவான்கள் வரிசைகளில் நின்றிருந்தார்கள். ஒரு இளைஞன் வரிசையை முறித்துச் சோதனை வாயிலை நோக்கி முன்னேறினான். நான் தடுத்தேன். தன்னிடத்தில் மடிக்கணினி இருக்கிறது, அதைத் தனியாகச் சோதிப்பார்கள், அதனால் முன்னால் செல்ல வேண்டும் என்றான். அந்நேரம் வரிசையில் நின்றவர்களில் பாதிப் பேர்களின் தோள்பட்டைகளில் மடிக்கணினிப் பைகள் தொங்குவதைச் சுட்டிக்காட்டினேன்.
தன்னுடைய விமானம் புறப்படுவதற்கு அதிக அவகாசமில்லை என்றான். வரிசையில் நிற்கும் பலருக்கும் அப்படியே என்றேன். இதற்கு மேல் என்னுடன் வாதிடுவது தன்னுடைய நேரத்தை வீணாக்குகிற செயல் என்று அவன் கருதியிருக்க வேண்டும். அவனது அடுத்த செய்கை நான் முற்றிலும் எதிர்பாராதது. ஏர்-இந்தியா விளம்பரத்தில் வரும் மகாராஜாவைப் போல் சிரம் தாழ்த்தி ‘ ஐயா, செல்லுங்கள்’ என்பதுபோல் கையை முன்னோக்கிக் காட்டினான். என்னை அவமானப்படுத்துவது அவன் நோக்கமாக இருக்கலாம். இந்த இளைஞனுக்கு இவ்வளவு சூழ்ச்சியைக் கற்றுத்தந்தது எது? அவன் கற்ற கல்வியா? அவன் வாழும் சமூகமா?
அந்த இளைஞனின் கண்களைப் பார்த்தேன். அதில் களிப்பு இருந்தது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு அதே களிப்பை ஹாங்காங் இந்திய அங்காடி வணிகரின் கண்களிலும் பார்த்தேன். அது ஆங்கிலக் கல்வி தந்த களிப்பு, சட்டத்தை மீறுவதால் உண்டாகிற களிப்பு, நூறாண்டுகளாகக் காந்தியை ஏமாற்றிவருகிற களிப்பு.
மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
Source….www.tamil.thehindu.com
Natarajan
நம் கல்வி… நம் உரிமை!- அரசுப் பள்ளிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தும்!

அரசுப் பள்ளியால் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்விக்கு நாகேந்திரனை (வயது 24) விடச் சிறந்த உதாரணத்தைக் காட்டுவது கடினம். அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை மேலும் மேலும் துலக்கமாக்கிக் காட்டுவதுதான் நாகேந்திரனின், அதாவது டாக்டர் நாகேந்திரனின் கதை.
மதுரையில் மர வியாபாரம் செய்துகொண்டிருந்தவர் கண்ணன். எதிர்பாராத விதமாகத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் சுமைகளைச் சமாளிக்க முடியாமல் காரைக்குடிக்கு இடம்பெயர்ந்தார். அப்போது அவரது மகன் நாகேந்திரன் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அடுத்த வேளை சாப்பாடுகூட நிச்சயமற்ற சூழலில் இருந்த இந்தக் குடும்பத்துக்கு உறவுகள் கைகொடுத்துப் பட்டினி இல்லாமல் பார்த்துக்கொண்டன. காரைக்குடியில் உள்ள பிரபல மளிகைக் கடை ஒன்றில் மளிகைச் சிட்டை எழுதும் வேலை கண்ணனுக்கு. அவரது மனைவி லதாவுக்கு அந்தக் கடையிலேயே கணக்கு எழுதும் வேலை. இருவரது மாதச் சம்பளத்தைக் கூட்டினாலும் மூவாயிரம்கூட இருக்காது. ஆனாலும், சராசரி பெற்றோரைப் போல இவர்களும் தங்கள் மகன் நாகேந்திரனை ஆங்கில வழியில் படிக்க வைக்க பிரயாசைப்பட்டு, தனியார் பள்ளியில் சேர்த்தார்கள். பொருளாதாரச் சூழல், ஐந்தாம் வகுப்புக்கு மேல் நாகேந்திரனை அங்கே அனுமதிக்கவில்லை. ஆறாம் வகுப்புக்கு, அரசு உதவி பெறும் எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
பருத்திப் பால் விற்றபின் பள்ளிக்கூடம்
பிறகு நடந்தவற்றை நாகேந்திரனின் அம்மா லதா விவரிக்கிறார். “அந்த வயசுலயே குடும்பச் சூழலை நாகேந்திரன் நல்லா புரிஞ்சுக்கிட்டான். பாதி நாள் பள்ளிக் கூடத்துல சத்துணவு சாப்பிடப் பழகிக்கிட்டான். எங்க அண்ணன் எங்களுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காங்க. இவனையும் பொம்பளப் பிள்ளையையும் (நாகேந்திரனின் தங்கை) படிக்க வைக்கக் கூடுதலா கொஞ்சம் பணம் தேவைப்பட்டுச்சு. அதுக்காக பால் பாக்கெட் வாங்கி வீடு வீடா போட்டோம். தினமும் காலையில பருத்திப் பால் காய்ச்சி கேன்ல ஊத்திக் குடுப்பேன். அதை நாகேந்திரன்தான் ரெண்டு மூணு தெருவுக்குப் போயி வித்துட்டு வந்து பள்ளிக்கூடத்துக்குப் போவான். அதேமாதிரி, சாயந்திரம் வந்ததும் பக்கோடா போட்டுக் கொடுப்பேன். அதையும் வித்துட்டு வந்துதான் படிக்க உக்காருவான்.”
“இவன் நல்லா படிக்கிறான்னதும் பள்ளிக்கூட ஆசிரியர்கள்லாம் அவனை நல்லாவே
ஊக்கப்படுத்துனாங்க. எங்களால முடியாதப்ப இவனுக்கு அப்பப்ப பண உதவியும் செஞ்சுருக்காங்க. பத்தாம் வகுப்புல 461 மார்க் எடுத்தான். பன்னிரண்டாம் வகுப்புல 1,151 மார்க் எடுத்துப் பள்ளியின் முதல் மாணவனா தேர்வானான். அப்பெல்லாம் இவன டாக்டருக்குப் படிக்க வைக்கணும்கிற எண்ணம் எங்களுக்கு இல்ல. புள்ள நாலு வருசம் இன்ஜினீயரிங் படிச்சுட்டு ஏதாச்சும் ஒரு வேலையில உக்காந்தான்னா, அவன் தலையில குடும்ப பாரத்த எறக்கி வெசுட்டு நாம அக்கடான்னு இருக்கலாம்னுதான் நினைச்சிருந்தோம். ஆனா, நல்ல மார்க் எடுத்ததால மெடிக்கல் காலேஜ்ல சேர்க்க வேண்டியதாப் போச்சு’’ என்று பெருமிதம் பொங்கச் சொன்னார் லதா.
தொடரும் வெற்றிப் பயணம்
2009-ல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நாகேந்திரனுக்கு இடம் கிடைத்தது. ஆனாலும், அரசு நிர்ணயித்த சொற்பமான கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத கஷ்டத்தில் இருந்தார் கண்ணன். விஷயத்தைக் கேள்விப்பட்ட நாகேந்திரனின் ஆசிரியர்கள், தங்களுக்குள் நிதி திரட்டி மொத்தமாய்ப் பதினைந்தாயிரம் ரூபாயை நாகேந்திரனிடம் கொடுத்தார்கள். அதேசமயம், நாகேந்திரனின் நிலைமையை அறிந்த தேனி ரேணுகா மில்ஸ் நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது. மருத்துவக் கல்வியை முடிக்கும் வரை அவருக்கான விடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை ரேணுகா மில்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இத்தனை பேரின் உதவிக்கரங்களைப் பற்றிக்கொண்டு மருத்துவக் கல்லூரிக்குள் கால் பதித்த நாகேந்திரன், முதல் ஆண்டிலேயே ஒரு பாடத்தில் தங்கப் பதக்கம் வாங்கினார். 80% மதிப்பெண்ணுடன் இந்த ஆண்டு தனது மருத்துவக் கல்வியை முடித்திருக்கும் நாகேந்திரன், இறுதி ஆண்டிலும் இரண்டு தங்கப் பதக்கங்களைத் தட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.
குடும்ப நிலையைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்!
தற்போது பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நாகேந்திரன், “எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் பெற்றோரும் கோயில் கட்டிக் கும்பிடப்பட வேண்டியவர்கள்.
அதிலும், குறிப்பாக சுந்தர்ராமன் சாரையும் ஹென்றி பாஸ்கர் சாரையும் சொல்லியே ஆக வேண்டும். எனது ஆசான்களைப் போலவே ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் நல்ல ஆசான்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். லட்சங்களைக் கொட்டிக் கொடுத்துப் படித்தால்தான் லட்சியத்தை அடைய முடியும் என்பது போலியான மாயை. எனது குடும்பத்தின் கஷ்ட நிலைமை எனக்குக் கண்கூடாகத் தெரிந்தது. அதுதான், எப்பாடு பட்டாலும் முன்னுக்கு வர வேண்டும் என்கிற உந்துதலை எனக்குள்ளே வளர்த்தது. எனவே, குடும்பத்தின் நிலைமையைப் பிள்ளைகளுக்குப் புரியவைத்தால் தானாகப் படித்து முன்னுக்கு வந்துவிடுவார்கள்’’ என்று சொன்னவர், “விரைவில் மருத்துவப் பணியைத் தொடங்கப்போகும் நான் என் வாழ்நாளில் எந்த ஆசிரியர் வந்தாலும் கட்டணமின்றி வைத்தியம் பார்ப்பது என்ற தீர்மானத்தை எனக்குள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்’’ என்றும் சொன்னார்.
கைதூக்கி விட நாங்கள் தயார்
நாகேந்திரனின் அப்பா கண்ணனிடம், “உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்டதுதான் தாமதம். பொலபொலவெனக் கண்ணீரைக் கொட்டினார். “எங்களுக்குக் கடவுள் கொடுத்த வரம்தான் அவன்’’ என்று சொன்னவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நாகேந்திரன்குறித்துப் பேசும்போது, “பத்தாம் வகுப்பிலேயே ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர முடியலைன்னு அழுதவன், பன்னிரண்டாம் வகுப்பில் அதைச் சாதிச்சுட்டான். இந்த வெறி எல்லா பிள்ளைகளுக்கும் இருக்கணும். அப்பதான் முன்னுக்கு வர முடியும். நாகேந்திரனால் எங்கள் பள்ளிக்குப் பெருமை. இவனைப் போலவே இன்னும் நான்கைந்து பசங்களுக்கு மேல்படிப்புக்கு நாங்க உதவி செஞ்சிருக்கோம். ஆர்வமுள்ள பசங்க எத்தனை பேர் வந்தாலும் கைதூக்கி விட நாங்க தயாரா இருக்கோம்’’ என்று சொன்னார்கள்.
அண்ணன் காட்டிய வழியில் நாகேந்திரனின் தங்கை சொர்ணமுகியும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்று, இப்போது மதுரை தியாகராஜா கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறார்.
தனியார் பள்ளிகளில் ஒருபோதும் நிகழாது இந்த அதிசயம். ஏனெனில், பணம்தான் அவற்றைப் பின்னின்று இயக்கும் சக்தி. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை சமூக நீதிதான் அவற்றைச் செலுத்தும் சக்தி. அரசாலும் மக்களாலும் கைவிடப்பட்டுக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகள்தான் கடந்த காலத்தில் எண்ணற்ற நாகேந்திரன்களை உருவாக்கியிருக்கின்றன. நாகேந்திரன்கள் இனி உருவாவதும் அரசுப் பள்ளிகளின் கையில்தான் இருக்கிறது.
– குள. சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in
Doomed Russian Spacecraft about to fall….
Progress 59 re-supply craft, launched April 28, quickly lost control. Soon it will fall from space and may produce a fiery streak in our sky

Progress is a series of unmanned cargo craft used to resupply the International Space Station.
A unpiloted Russian re-supply ship – carrying 6,000 pounds of food, fuel, and supplies for International Space Station – was declared lost when, shortly after its April 28 launch, it began spinning out of control. This craft will reenter Earth’s atmosphere between May 7 and May 9 and may produce a bright meteor – or fiery streak – across Earth’s sky. But where will it fall, and who will see it? No one knows. Look below for information on what observers might see when the spacecraft re-enters.
The reentry will not be controlled, which means its exact time and location is unknown. Scientists that predict the reentry of orbital objects like this one – damaged satellites and other space debris – have calculated that the Progress 59 may reenter around May 8, but the time uncertainty of some predictions may be +/- 24 hours.
Because over 70% of the surface of Earth is covered by water, there is a high probability that the Progress 59P, also known as Progress M-27M, will reenter over an ocean. But the spacecraft’s orbital inclination also causes it to pass over land areas, so this may slightly increase the chance of reentry over populated areas. The European Space Agency (ESA), which is in close contact with Russian and U.S. authorities regarding the Progress M-27M / 59P mission situation, said on April 30:
In an uncontrolled reentry, the vessel in principle could reenter over any point of land or sea between approximately 51 deg N and 51 deg S latitudes, corresponding to its current orbit.
… We cannot exclude the chance that some portion of (Progress 59) structure, for example the heavy docking mechanism or tanks and thrusters, could survive reentry to reach the surface.
However, according to ESA, disintegration over the oceans is still the most likely scenario.

Progress 59 launch on April 28, via ESA
The Progress 59 spacecraft was launched from Kazakhstan on April 28 and was heading to the International Space Station (ISS) with food, fuel and supplies. An unexpected incident occurred during the spacecraft separation, and video sent back by the spacecraft showed it was spinning out of control.
Russian officials declared on April 29 that they were unable to regain the spacecraft control. It was clear that the doomed spacecraft would return fall back into Earth’s atmosphere. Normally, after delivering its cargo to the ISS, Progress spacecraft would be undocked from the orbital laboratory and then a command is sent to purposely send it to reenter the atmosphere and disintegrate over the South Pacific area, so that any surviving debris would not pose a danger to populated areas.
What observers might see when the spacecraft re-enters. You can track the location of Progress 59 as its orbits is decaying, and even verify predictions to see if it the spacecraft can be seen on its final orbits from your location. Track Progress 59 prior to reentry here.
Or just keep an eye on your skies in the next few days, just in case you happen to be in the spacecraft’s reentry area. The Russian cargo spacecraft should disintegrate around May 8 (+/- 24 hours), as soon as it enters the densest part of our atmosphere, about 70 – 75 miles (112-120 km) high.
A disintegrating spacecraft will look like a spectacular meteor, or fiery streak, across Earth’s sky. It may be visible in daytime. One way of identifying it as a possible manmade object, and not a natural meteor, is that reentering manmade objects appear considerably slower upon reentry than natural space rocks. The re-entry might appear slow enough to allow you to quickly grab a camera and take pictures or video, something that usually is very difficult with much faster natural meteors.
Also, reentering spacecraft have shown significant fragmentation. It is possible to see chunks – possibly in varying colors – creating bursts of light as they fly off the main meteor.
A reentry trajectory from southwest to northeast – as well as from northwest to southeast – is consistent with the orbit of this type of spacecraft.
Before the Progress vehicle reenters the atmosphere, the spacecraft may be visible to the unaided eye from some (unknown) locations as it is still orbiting Earth. Remember that orbiting objects and satellites appear as slowly “moving stars” in our sky. During the last days of the Progress M-27M / 59P mission, the craft should appear to move somewhat faster than other satellites – faster than the apparent speed of ISS – because you are looking at an object that is more than twice as close as other orbiting objects.
While still in orbit, it may show show variations of brightness, which would confirm the object is still tumbling in space and thus reflecting sunlight intermittently.
If you see a slow and bright, fragmenting “meteor” as described here, please share your sighting reports and location in the comments below, or visit EarthSky communities on Facebook, Twitteror Google+.
By the way, according to NASA, the ISS crew is not in danger of running out of food or supplies. SpaceX already had a scheduled launch to bring more supplies to the ISS on June 19.
Bottom line: A Progress 59 re-supply craft, launched from Kazakhstan on April 28, quickly lost control. Soon it will fall from space and may produce a fiery streak in our sky. ESA, NASA and Russian authorities cannot rule out the possibility that some portion of the craft survive reentry to reach Earth’s surface. This post contains information on how to track the spacecraft before re-entry, and on what you might see if you are in the reentry area.
Source….www.earthsky.org
Natarajan





