தன்னுடைய பால்ய காலத்தில் கிடைக்காத ஒன்றை தன் பிள்ளைகளுக்கு அளிப்பது அன்பின், பிரியத்தின் ஒருவகையென்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அப்படியான பொருட்கள் அந்தக் குழந்தைகளை ஒருவிதத்தில் மகிழ்ச்சியூட்டினாலும், விதவிதமான பிரச்சனைகளைக் கொண்டு வந்து சேர்க்கவும் தவறுவதில்லை.
கிட்டத்தட்ட கோடை விடுமுறை துவங்கிவிட்டது. குடியிருப்பு பகுதிகளின் வீதிகளிலிருந்து பத்து பனிரெண்டு வயதுப் பிள்ளைகள் ஹோண்டா ஆக்டிவா (அ) ஹீரோ ப்ளெஸ்ரை வண்டிகளில் சாலைகளில் வந்து நுழைகின்றன. சாலையில் நிதானமாய்ச் செல்லவேண்டும், இடது பக்கம் செல்ல வேண்டும், பின்பக்கக் கண்ணாடி பார்க்க வேண்டும், திருப்பங்களில் ஒலியெழுப்ப வேண்டும், திரும்பும்போது பகல் நேரங்களில் கை காட்ட வேண்டும் எனும் எந்தவிதத் தெளிவும், அறிவும் இல்லாத அந்தப் பிள்ளைகள் வளைந்து நெளிந்து பட்டாம்பூச்சி போலச் செல்வதையெல்லாம் ரசிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. குப்பென அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது. அவர்களில் பலர் தரையின் இரண்டு பக்கமும் கால் ஊன்றும் அளவுக்குக்கூட உயரமாக இருப்பதில்லை.
அதே சாலைகளில்தான், இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கப் போட்டவாறு எவ்வித பேலன்ஸும் இல்லாமல், தடுமாறியபடி ஏதோ ஒரு நிதானத்தில், புதிதாக வண்டி ஓட்டும் நடுத்தர வயதுப் பெண்மணிகள் சென்று கொண்டிருக்கின்றனர். நம்ம ஊர் சாலை அமைப்புகளுக்கு எவ்விதமும் பொருந்தாத எருமைக்கிடாய் அளவும், சிறுத்தையின் பாய்ச்சலும் கொண்ட பெரிய பைக்குகளில், ஒல்லியாய் ஒரு தலைமுறை எதையோ நோக்கி ‘விர்..விர்’ரென சீறலோடு பாய்ந்து கொண்டிருக்கிறது. சைக்கிள் கேப்பில் ஆட்டோ என்பது மறைந்து, பைக் கேப்பில் மினிடோர் என ஆம்புலன்ஸ்க்கு நிகரான அவசரத்தில் மினிடோர்காரர்கள் பறக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் ஒலிப்பான்களில் அகிலமே அதிர்கிறது.
இந்த ஆக்டிவா, ப்ளெஸ்ஸர் பிள்ளைகளின் அப்பா / அம்மாவையோ, தாத்தா/ பாட்டியையோ சந்திக்கையில் “எங்க அஸ்வினு / சுவாதி இப்பவே வண்டில என்ன போடு போடுது தெரியும்ங்ளா!?” எனச் சொல்லும்போது அவர்களிடம் வழிந்தோடும் பெருமையை நொய்யல் ஆற்றில் திருப்பிவிட்டால் அத்தனை கழிவுகளையும் கடலுக்கே அடித்துச் சென்றுவிடும்.
வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் சார்பாக, அவர்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்… எல்லாப் பாய்ச்சல்களும், பெருமைப் பீற்றல்களும் எந்தவொரு தீங்கும் நடக்காதவரைதான்… ஒற்றைச் சிறு கவனப்பிசகில், எல்லா ஒளியும் பொய்த்து இருள் சூழும் கொடுங்கணத்தில்… பெருமையாகவும், பொறாமையாகவும் பார்த்த அத்தனை உறவும் நட்பும் ஒத்த குரலில், “விரலுக்கு தவுந்த வீக்கம் வேணும்…. இந்த வயசுல இந்தப் புள்ளைக்கு எதுக்கு வண்டி” எனச் சொல்லும். அந்நிலையில் அவர்கள் அப்படிச் சொல்வது சரியா தவறா என நீதிபரிபாலனை செய்யும் மனநிலையில் நீங்க இருக்கச் சாத்தியமில்லை. காரணம், சூன்யமான வாழ்வின் மிகக் கசப்பான காலகட்டத்தில் இருப்பீர்கள்.
தேவைக்கும், தகுதிக்கும் மீறிய ஒரு பொருளை பெருமையென வாங்கிக் கொடுப்பது அல்லது இயக்கக் கொடுப்பது பாசம், பிரியம், கௌரவம், அந்தஸ்து என நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் உலகில் வேறெதுவும் இல்லை. அப்படி அளிக்கும் ஒன்றின் மூலம் உருவாகும் தீங்கின் அத்தனை பாவமும் கொடுத்தவர்களையே சாரும்!
ஈரோடு கதிர் – எழுத்தாளர், அவரது வலைதளம் http://maaruthal.blogspot.in/
Source…….. http://www.tamil.thehindu.com
Natarajan

‘உலக மகா எத்தர்கள்’ நூலிலிருந்து ………….
:பாரிஸ் நகர இரும்பு வியாபாரிகளான அந்த ஐந்து பேரும், அந்நகர பொதுக் கட்டடங்களைப் பராமரிக்கும் அரசு அதிகாரியான விக்டர் லஸ்ட்விக் சொல்வதை, வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். ‘பாரிஸ் நகரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் சின்னமான, ‘ஈபில் டவர்’ விலைக்கு வருகிறது. அதைப் பராமரிக்க ஆகும் செலவு அதிகமாவதால், அரசு கஷ்டப்படுகிறது. எனவே, அதை அடியோடு இடித்து அப்புறப்படுத்த முடிவெடுத்துள்ளது. அதற்கு குத்தகை எடுப்பவர்கள் தங்கள், ‘டெண்டர்’களை முத்திரையிட்ட உறைகளில், தனித்தனியே கொடுத்து விட வேண்டும்…’ என்றார் லஸ்ட்விக்.
ஐந்து வியாபாரிகளும், மனக் கணக்குப் போட்டனர். ‘ஈபில் டவரை உடைத்தால், மிக உயர் ரக இரும்பு, 7,000 டன் கிடைக்குமே… என்ன ஒரு அதிர்ஷ்டம்!’ என நினைத்து மகிழ்ந்து, ஐந்து வியாபாரிகளும், ‘டெண்டர்’ அனுப்பி வைத்தனர். மறுநாளே, ஆண்ட்ரி பாஸன் என்பரின் டெண்டர் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், பணத்தைக் கட்ட வேண்டும் என்றும் தகவல் சொல்லப்பட்டது.
பணத்தை தயார் செய்து விட்டார் பாஸன். ஆனால், அவருக்கு ஒரு சந்தேகம்… ஈபில் டவரை இடிப்பது, டெண்டர் எடுப்பது போன்ற மிக முக்கியமான விஷயத்தை ஒரு அரசு அலுவலகத்தில் கூப்பிட்டுப் பேசாமல், ஓட்டல் அறையில் ஏன் பேசுகிறார் என்று!
மறுநாள், விக்டர் லஸ்ட்விக்கை அவரது அரசு அலுவலகத்தில் சந்தித்த போது, இச்சந்தேகத்தைக் கேட்டார் பாஸன். உடனே விக்டர், தன் உதவியாளரை வெளியே அனுப்பி விட்டு, ‘ஒரு அரசு ஊழியன் வாழ்க்கை இருக்கிறதே… அது ரொம்ப மோசம்; இதுபோன்ற பெரிய, ‘டெண்டர்’ விஷயங்களில், நாங்கள் பல கோடீஸ்வரர்களைக் கூப்பிட்டு, விருந்து கொடுக்க வேண்டும்; அன்றைக்கு பிரமாதமாக ஆடை அணிந்து, ஓடி ஓடி உபசரிக்க வேண்டும்; இவற்றை எல்லாம் இந்த அரசு கொடுக்கும் பிச்சைக் காசிலேயே முடிக்க வேண்டும். முடிகிற காரியமா? அது தான், இந்த மாதிரி, குத்தகை விடும்போது…’ என்று கூறி, ‘ஹி… ஹி…’ என்று சிரித்தார்.
புரிந்து கொண்ட பாஸன், ‘டெண்டர்’ கொடுத்ததற்காக அதிகாரிக்கு, ஒரு பெரிய தொகையைக் கொடுத்து விட்டு, ராஜநடையில் வெளியேறினார்.
ஒரு மணி நேரத்தில், ‘செக்’கைப் பணமாக்கிக் கொண்டு தலைமறைவாகி விட்ட விக்டர், அதன் பின், இன்று வரை போலீசிடம் பிடிபடவே இல்லை. !!!
Source………www.dinamalar.com
Natarajan