வட்டமலை பாக்கியலட்சுமி பாட்டி…

.. தொன்னுாறு வயது ஏழை பாட்டி ஒருவர் எந்தவித எதர்பார்ப்பும் இல்லாமல் கடந்த பல வருடங்களாக வளர்த்த நுாற்றுக்கணக்கான மரங்களால் இன்று அரசும் மக்களும் பயன் அடைந்துவருகின்றனர்.

ஈரோட்டில் இருந்து 46 கிலோமீட்டர் பயணம் செய்தால் காங்கேயம் வரும்,காங்கேயத்தில் இருந்து பழனி போகும் பாதையில் எட்டாவது கிலோமீட்டரில் இருக்கிறது வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில்.
இங்கு சென்றால் அவசியம் தரிசிக்கவேண்டியவர்கள் இரண்டு பேர் ஒன்று முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அருள்புரியும் முருகன் இரண்டாவது பாக்கியலட்சுமி என்ற 90 வயது பாட்டி.

ஏழு வயதில் திக்கு தெரியாமல் எப்படியோ இங்கு வந்து சேர்ந்த இவருக்கு உலகமே இந்த வட்டமலைதான். கோவிலை கூட்டி சுத்தம் செய்து பக்தர்கள் மற்றும் ஆலய ஊழியர்கள் தரும் பணத்தில் சாப்பிட்டு வருகிறார்.கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இதுதான் நடக்கிறது,யாரிடமும் போய் கேட்கமாட்டார் , தாமாகவே கொண்டுவந்து கொடுத்தால் மறுக்கமாட்டார்.
இந்த நிலையில்தான் ஐம்பது அறுபது வருடத்திற்கு முன் கோவில் பக்கத்தில் உள்ள ஒடையில் இருந்து தண்ணீர் எடுத்துவரும் போது கூடவே ஒரு செடியும் குடத்துடன் வர அதை அந்த கரையிலேயே நட்டுவிட்டுவந்தார்.

சில நாட்கள் கழித்து ஒடைப்பக்கம் வந்த போது,’ ஏ..பாக்யா என்னைப்பாரேன்’ என்பது போல அந்த செடி செழித்து வளர்ந்து அழைத்தது.அதுவரை சொந்த பந்தம் என்று எதுவும் இல்லாதிருந்த பாக்கியாவிற்கு அந்த செடி ஏதோ தான் பெற்ற பிள்ளை போல தெரிய அதன் பக்கத்தில் போய் உட்கார்ந்து தடவிக்கொடுத்தார்,சிறிது நேரம் கண்ணீர் விட்டார் பின்னர் தொடர்ந்து தண்ணீர் விட்டார்.
அந்த செடியின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியும் பாக்கியாவிற்கு மகிழ்ச்சி தர அதைப்போலவே இன்னும் பல செடிகளை விதைகளை கொண்டுவந்து அந்த பகுதியெங்கும் வளர்த்தார்.

எப்படி வளர்க்கணும் எந்த மரத்திற்கு எவ்வளவு குழி வெட்டணும் எப்படி உரம் போடணும் என்று எதுவுமே தெரியாது அவ்வளவு ஏன் நட்டுவைத்த செடிகூட என்ன செடி என்று தெரியாது, கிடைச்ச இடத்தில் செடியை நடணும் விடாம தண்ணீர் ஊற்றணும் இது மட்டுமே பாக்கியாவிற்கு தெரிந்திருந்து, பாக்கியாவின் அன்பும் அந்த செடிகளுக்கு புரிந்திருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு செடியும் வேப்பமரம்,
இலுப்பைமரம்,புளியமரமாக நன்கு வளர்ந்தது.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல நுாற்றுக்கும் அதிகமான மரங்கள் வனப்புடன் வளர்ந்துள்ளது. வட்டமலை பகுதியை பசுஞ்சோலையாக்கி வைத்துள்ள இந்த மரங்களின் நிழலில்தான் இப்போது கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் இளைப்பாறி களைப்பு நீங்க பெறுகிறார்கள்.
புளியமரத்தில் இருந்து விழும் புளியங்காயை பாக்கிலட்சுமி பொறுக்கியெடுப்பதன் மூலம் சொற்ப வருமானம் கிடைத்து வந்தது பின்னர் அரசாங்கம் அந்த மரத்திற்கு எல்லாம் எண் போட்டு அரசுக்கு சொந்தமாக்கிவிட்டதால் இப்போது புளியமரத்து பலன் மட்டுமல்ல எந்த மரத்தின் பலனும் பாக்கியலட்சுமிக்கு கிடையாது.
ஆனால் அதைப்பற்றி இவருக்கு சிறிதும் கவலை இல்லை எம் பிள்ளை(மரம்) எனக்கு வருமானம் தந்திட்டு இருந்தான், இப்ப அரசாங்கத்திற்கே வருமானம் தர்ரான் சந்தோஷம்தான் என்கிறார் சிரிப்பு குறையாமல்.
பிள்ளை என்றதும் நினைவு வருகிறது குடும்பம் சொந்த பந்தம் என்று கேட்டபோது எல்லாமே இதுங்கதான் என்று கைகாட்டுகிறார், அவர் கைகாட்டிய திசையில் அவர் வளர்த்த மரங்கள் இவர் சொல்வதை ஆமோதிப்பது போல இலை கிளை அசைக்கின்றன.

தற்போது கோவில் நிர்வாகம் சாமான்கள் போட்டுவைக்கும் அறையில் சாமான்களோடு சாமான்களாக வாழ்ந்துவரும் இவர் மரங்களின் மீது கொண்ட பாசம் காரணமாக அவைகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய நேசம் காரணம் வட்டமலையைத்தாண்டி எங்கும் போனதில்லை இனி போகப்போவதும் இல்லை.
பொதுப்பார்வையில் இவர் ஒரு அப்பாவி பாட்டியாக தென்படலாம் ஆனால் உண்மையில் மரங்கள் வளர்ப்பு என்பதற்கான நாட்டின் உயர்ந்த விருதை எல்லாம் கொடுத்து இனியும் கையேந்தவிடாமல் கவுரமாக வாழ வழிசெய்யவேண்டும், அது அவருக்கு கவுரவத்தை சேர்க்கும் என்பதற்காக அல்ல நமக்கு புண்ணியத்தை தரும் என்பதால்.

போயிட்டு வர்ரேன் தாயி என்று மரங்களை பெற்ற அந்த மாதரசி மகராசியின் கால்களில் விழுந்து ஆசிபெற்று வரும்போது திரும்பி பார்க்கிறேன், வட்டமலையைவிட வட்டமலையின் மீதுள்ள முத்துக்குமாரசாமி கோபுரத்தைவிட உயரமாக பாக்கியலட்சுமி பாட்டி விசுவரூபமெடுத்து நிற்கிறார்.
(நன்றி:தணிகைச்செல்வி,காங்கேயம் நல்லதம்பி)

Source…..எல்.முருகராஜ்….in http://www.dinamalar.com

“இறைவன் சிவபிரானை தீபமங்கள ஜோதியாக வழிபடும் பெருவிழா…கார்த்திகைதீபத் திருவிழா “

கார்த்திகை தீபத்திருநாளாவது தமிழ் மாதமான கார்த்திகைமாத பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில், தமிழர்கள் தமது கோவில்களிலும் வீடுகளிலும் நூற்றுக்கணக்கான தீபங்களை அடுக்கடுக்காக ஏற்றி, இறைவன் சிவபிரானை தீபமங்கள ஜோதியாக வழிபடும் பெருவிழாவாகும்.

கார்த்திகைத் தீபத்தன்று திருவண்ணாமலைதனில் ஏற்றப்படும் தீபமானது சைவ இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான விழாவாகும். எல்லாம்வல்ல பரம்பொருளான அண்ணல் சிவபிரான், அன்று ஜோதி வடிவில் காட்சியளிக்கிறான். அயனாலும் திருமாலாலும் அடிமுடி காணவொண்ணாத அவ்விறைவனைப் போற்றும்வண்ணம் பக்தர்கள் மலைமீது மங்களஜோதியை ஏற்றி வழிபடுகின்றனர்.

தொல்காப்பியர்

கார்த்திகைதீபத் திருவிழா மிகப்பழமையான திருவிழாவாகும். கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தில் ஏற்றப்படும் தீபத்திருவிளக்கைப்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. சங்கம் மருவிய கால இலக்கியமான கார்நாற்பதில் காணும்

நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட

     தலைநாள்  விளக்கின் தகையுடையவாகி

     புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி

     தூதொடு வந்த மழை

எனும் இந்தப் பாடல் கார்த்திகைத் திருநாளில் ஏற்றப்படும் தீபத்தினைக் குறிக்கின்றது.

‘கார்கால விழாக்களில் ஒன்றான கார்த்திகைதீபத் திருநாளில் மக்கள் ஏற்றி வைத்துள்ள முந்தைய நாளின் விளக்குகளைப்போன்று தோன்றி, மலர்கள் அழகாகப் பூத்துள்ளன. தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதனாக மழை வந்துள்ளது,’ என்பது பொருள்.

இதேபோன்று களவழிநாற்பதிலும் போர்க்களக் காட்சிகளை வர்ணிக்கும்போது, ‘போரிடும் வீரர்களின் உடலிலிருந்து பெருகும் குருதியானது கார்த்திகைத் திருவிழாவில் கூட்டம்கூட்டமாக ஏற்றப்பட்ட விளக்குகளைப்போலக் காட்சியளிக்கின்றது,’ என்கிறார் புலவர்.

கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்குப் போன்றனவே.’

(சாறு- திருவிழா; கழி- கூட்டம்)

இத்தகையதொரு பழமையான திருவிழாவைக் கொண்டாடும் போதில், இதைப்பற்றி  மிகவும் நயம்பட தமிழ்ச்சுவை நிரம்ப எழுதப்பட்டதொரு நூலினை நாம் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும். சோணாசலம், சோணகிரி எனும் பழம்பெருநகரமாகிய திருவண்ணாமலையில் உறையும் இறைவனின் புகழாக சோணாசல முதலியார் (பாரதியார்) எனும் பெரும்புலமை வாய்ந்த பக்தர்கார்த்திகைத் தீபவெண்பாஎனும் நூறுபாடல்கள்கொண்ட நூலினை இயற்றியுள்ளார். இப்பாடல்கள் அனைத்திலும் ஈசனின் திருவிளையாடல் பற்றிய தொன்மங்களையும், அவன் மகிமைகளையும்பற்றிக் கூறி, அவனையே திருக்கார்த்திகைத் தீபம் என இனிதாக வர்ணனைசெய்துள்ளார்.

‘திருவண்ணாமலை அன்பர் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை’ எனப்படும். அருணாசலத்தின் பெருமை பக்தர்களையும் புலவர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது எனலாம்.  இதனால்தானோ என்னவோ இம்மலையில் தங்கியிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றினர்.  இதனாலேயே குரு நமச்சிவாய சுவாமிகள்,

நண்பாக் குகையில் நமச்சிவா யன்கருத்தில்

வெண்பாப் பயிராய் விளையுமலை,’

எனக்கூறினார்.

karthikaideepam1

திருவண்ணாமலையில் வெண்பாவே பயிராக விளைகிறது என்றார். இம்மலையில் தங்கி வாழ்ந்தவர்களுள் ஒருவரே சோணாசல பாரதியார்.

கார்த்திகைதீப ஒளியைக் கற்பனை நயம்படக் கூறுவது மிகவும் ரசிக்கத்தக்கதாகும். பொருளும், நயமும், கருத்தாழமும் செறிந்த பாடல்கள் இவை. கார்த்திகைதீபக் காட்சியை பல்வேறு விதங்களில் பகிர்கின்றது கார்த்திகைத்தீபவெண்பா. உதாரணமாக ஒரு வெண்பா,

கற்றலுடன் கேட்டுணர்ந்து காதலுடன் சிந்தித்தோர்க்(கு)

உற்றதுணையாய் உறுதீபம்சொற்றகதிக்(கு)

ஏணிநிகர் சோணகிரி ஏர்முடிமேல் அஞ்சலெனும்

பணிநிகர் கார்த்திகைத் தீபம். (43)

என்கின்றது.

கற்று, கேட்டு, இறைவன் பெருமைகளை உணர்ந்து அன்புடன் வழிபடுவோருக்கு, அவனே அத்தீபம்போல உறுதுணையாய் நிற்கின்றான். சோணகிரியின் அழகிய உச்சியில் அஞ்சேல் என அபயமளித்தபடி கார்த்திகைத் தீபமாக விளங்குகிறான் ஈசன். அண்ணாமலையே ஈசன் – அவனே கார்த்திகைத் திருத்தீபம்.  எத்தனை உண்மை பொதிந்த சொற்கள்!

சோணாசல பாரதியார் காலம் 1858- 1925 ஆகும்.

முதற்பாடல் அயனும் திருமாலும் இறைவனது அடிமுடியைத் தேடிய நிகழ்வை அழகுறச் சித்தரித்து, நூலின் முதற்பாடலாக அமைந்துள்ளது.

கங்கையணிதீபம் கற்பூர தீபமலை

மங்கையொருபங்கில் வளர்தீபம்பங்கயன்மால்

விண்பாரு நேடும்வண மேவியவண்ணாமலையிற்

பண்பாருங் கார்த்திகைத்தீ பம். (1)

கங்கையணிந்தவனும் மலைமங்கையின் பங்கில் வளர்வதுமான தீபம்; ஈண்டு தீபம் எனும் சொல் இறைவன் எனும் சொல்லாக ஆளப்பட்டுள்ளது. நூல் முழுமையுமே இவ்வண்ணமே சொல்லாட்சியைக் காண்கிறோம்.

அரியும், அயனும் அய்யன் அடிமுடி தேடல்

இன்னொருபாடலில் மதுரை வீதியில் இறைவன் வளையல் வியாபாரியாகச் சென்ற கதை கூறப்படுகின்றது.

பந்துமுலைப் பாவையர்க்காம் பாங்காரும்கூடலிலே

வந்து வளையல் விற்ற மாதீபம்கொது

மலர் மலியும் சோணமலைத் தீபம் போற்றிப்

பலர் மலியும் கார்த்திகைத் தீபம். (4)

கற்பிற்சிறந்த மனையாளொடு வாழ்ந்த நீலகண்டரிடம், கொடுத்துவைத்த திருவோட்டைக் கவர்ந்து ,அவரை ஆட்கொண்ட கதை வேறொரு பாடலில் கூறப்படுகிறது. இங்கு அண்ணாமலையின் இயற்கைவளமும் அழகுற விளக்கப்படுகின்றது: ஆடுகின்ற மயில்களின் ஆட்டத்திற்கொப்ப வண்டினம் இசை பாடும்;  அத்தகு அருணைமலையின்மீது ஒளிரும் கார்த்திகைதீபம் என்று ஈசனை ஏத்துகிறார்.

நீடுகற்பி னாளுடன்வாழ் நீலகண்டர் தம்மிடம்வந்

தோடுகவர்ந்த தாண்ட வொருதீபமாடுமயிற்

கொக்கவிசைவண்டினம்பாடோங் கருணைவெற்பின்மிசைப்

பகீகமிகுங் கார்த்திகைத்தீ பம். (7)

இறைவனை உண்டென்று கூறும் நல்மனத்தோருக்கு உள்ளதாகவும், இல்லை எனும் கள்ளமனத்தோர்க்கு இல்லையென்பதாகவும் ஆகிவிளங்கும் தீபவடிவானவன். சடைமுடிகொண்டு அருணாசலத்தில் திகழும் கார்த்திகைத்தீபம்.

சிவன் மதுரையில் வளையல் விற்ற திருவிளையாடல்

உள்ளதென்னு நல்லோர்கட் குள்ளதா வில்லதெனுங்

கள்ளமனத் தோர்க்கின்பதாக் காண்தீபம்வெள்ளமதி

மேவுசடைத் தீபம் வியன்கொளரு ணாசலத்திற்

பாவுபுகழ்க் கார்த்திகைத்தீ பம். (13)

இப்பாடல்களில் இடையிடையே தொன்மங்கள் (அயனும் மாலும் அடிமுடி தேடியது, நீலகண்ட நாயனாருக்கு அருளியது, வளையல் விற்றது) பின் இறைவனின் கருணை, அவன் அடியார்களுக்கருளும் முறைமை இவற்றினையும் கூறி, நமது இருவினைகளும் ஒழிய அவனை ஏத்துவதால் விளையும் இன்பம், ஆனந்தம் ஆகிய இவற்றை, அருணையின் இயற்கைவளத்தினோடும் கலந்து விரவி, அழகான கதம்ப மலர்மாலையாக இவ்வெண்பா நூல் அழகுற விளங்குவது மிகுந்த வியப்பினை உண்டுபண்ணுகின்றது.

‘அவனைப் போற்றுவோர்க்கருளும் புண்ணிய தீபம்;  நாம்செய்த வினைகளுக்கு மாற்றுமருந்தான மணித்தீபம்;  வேதங்கள் போற்றுவதும் எண்ணுதற்கரியதுமான சோணமலையில் உயர்ந்து ஓங்கிவளர்ந்து காணும் தீபம்;  புகழ்வதற்கும் சொற்களற்ற அரியதான கார்த்திகைத் தீபம்,’ என்கிறார்.

போற்றுமடி யார்க்கருளும் புண்ணியதீ பம்வினையை

மாற்றுமருந் தாகு மணித்தீபஞ்சாற்றுமறை

யுன்னரிய சோணமலை யோங்கிவள ருந்தீபம்

பன்னரிய கார்த்திகைத்தீ பம்.  (15)

திருநீலகண்ட நாயனாருக்கு மீண்டும் இளமையளித்தல்

இடையே ஒரு திருவிளையாடல் கதை:

பாணபத்திரர்

மதுரையின் ஆஸ்தான பாடகனான பாணபத்திரனுக்குச் சத்துருவாக வந்த ஏமநாதன் எனும் வடக்கத்திப் பாடகனை, அவன் நாணமுற்று ஓடுமாறு தான் பாடியருளிய தீபம்;  அயனும் அரியும் காணாத அண்ணாமலையில் மாந்தர் செய்தவத்தின் பயனாய் விளங்கும் கார்த்திகைதீபம்.

பாணனுக்கோர் சத்துருவாம்பாடகனைக் கூடலிலே

நாணமுற்றோ டப்பாடு நற்றீபம்பேணி

அயனுமரி யும்காணா அண்ணாமலையிற்

பயனுருவாங் கார்த்திகைத்தீ பம். (23)

நமது அறியாமைதனைப் போக்கியருளும் தீபம்; போக்கியது மட்டுமின்றி, ஆனந்தமயமாகிய மெய்ஞானத்தினை நமக்குக் காட்டியபடி மிளிர்கின்ற தீபம்: சோணகிரி சித்தர்கள் நிறைந்த மலை. அச்சித்தர் பெருமக்கள் மகிழும் வண்ணம்  ஒளிரும் சோணகிரித் தீபம்; பணிந்து வணங்கும் பக்தர்கள் மகிழும் கார்த்திகைத் தீபம்,” என்கிறார்.

அஞ்ஞானம் போக்கி யருடீபமானந்த

மெய்ஞ்ஞானங் காட்டி மிளிர்தீபம்எஞ்ஞான்றுஞ்

சித்தர்மகிழ் சோணக்கிரித்தீபம் பணிந்தேத்தும்

பத்தர்மகிழ் கார்த்திகைத்தீ பம். (27)

‘அடியார்களின் பிறவிப்பிணியைத்தீர்க்கும் தீபம்; செய்த கொடிய கர்மவினைகளைப் போக்கியருளும் தீபம்; மன்மதனை அங்கமிலாத அனங்கனாக்கிய ஈசனெனும் தீபம்; அண்ணாமலைத் தீபம்; குறையொன்றுமில்லாத திருக்கார்த்திகைத்தீபம்.’

சென்மப் பிணிதீர்க்குந் தீபமடி யார்செய்கொடுங்

கன்மவினை போக்குங் கனதீபமன்பதனை

அங்கமிலா தாக்கியரு ளண்ணா மலைத்தீபம்

பங்கமிலாக் கார்த்திகைத்தீ பம். (31)

இரு குழந்தைக் கடவுள்களைத் தந்தருளிய தீபம்; கந்தன் ஒருவன்; இன்னொருவன் காரானை மாமுகத்து தந்தம்கொண்ட வேழமுகத்து கணபதி.  எம்மை என்றென்றும் கண்களால் நோக்கி அருள்புரியும் சோணமலைத் தீபம்;  தொழும் அன்பர்களுக்கு நல்வாழ்வுதரும் கார்த்திகைத் தீபம்.

கந்தனையு ஞானமதக் காரானை மாமுகத்தோர்

தந்தனையுஞ் சேயாத் தருதீபமெந்தமைக்க

ணோக்கியருள் சோணமலை நோன்றீப மன்பருக்குப்

பாக்கிமாங் கார்த்திகைத்தீ பம். (39)

இசைப்பண்ணுடன் தேவாரம் பாடியருளிய மூவரான சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு இமவான்மகளான பார்வதியுடன் தோன்றித் தரிசனம்தரும் தீபம்.  விண்ணளாவப் பொருந்த ஆகாயத்திற்கும் பூமிக்குமாக நிற்கும் அண்ணாமலையைப்போல் ஓங்கிவிளங்கும் கருணைகொண்ட கார்த்திகைத் தீபம்.

பண்ணுடனே தேவாரம் பாடுமு வர்க்கிமவான்

பெண்ணுடனே தோன்றும் பெருந்தீபம்விண்ணுடனே

சேரமலை வான்புவிக்காச் செல்வதுபோ லோங்கருணைப்

பாரமலைக் கார்த்திகைத்தீ பம். (43)

அகந்தைகொண்ட தாருகாவனத்து முனிவர்கள் தன்மீது ஏவிய வேங்கைதன்னைக் கூரான தனது நகத்தினாலுரித்துத் தோலினை அணிந்துகொண்ட தெய்வம். ஓங்கி உயர்ந்த மேருமலை, மேலும் எட்டுத்திக்குகளிலும் உயர்ந்த மற்றமலைகளினும் உயர்ந்து, அருணையில் பாங்குடன் ஒளிரும் கார்த்திகைத் தீபம்.

தாருவன மாதவர்க டாம்விடுத்த வேங்கைதனை

கூருகிரினா லுரித்துக் கொள்தீபமேருமுக

லோங்குமலை யெட்டினுமிக் கோங்குமருணாசலத்திற்

பாங்குமலி கார்த்திகைத் தீபம். (52)

இடையிடையே  திருவிளையாடல் புராணத்தினின்றும் கதைகளை இணைத்துப் பாடியுள்ளார் சோணாசல பாரதியார்.

நன்மைகளைச் செய்துவந்தவளான பொன்னனையாள் எனும் பெண் குடியிருந்த திருப்பூவணம் எனும் ஊரில் ரசவாத வித்தையைச் செய்த தீபம்;  வழிப்போக்கர்கள் எவ்வாறு தம் வண்டிமாடுகளை இச்சோணகிரியில் இளைப்பாற்றிக்கொண்டனர் எனப் பாங்குற விவரிக்கிறார்.  சோணமலையில் அழகிய சுனைகள் – அவற்றில் வண்டிமாடுகளையும் கன்றுகளையும் நீரருந்தி இளைப்பாறச்செய்து போகும்படி அருளும் கார்த்திகைத்தீபம்.

நன்றுபுரி பொன்னனையா னண்*ணுதிருப் பூவணத்திற்

சென்றுரச வாதமது செய்தீபங்கன்றுகளுக்

கம்பிடிகை யாலருத்தி யாடுசுனைச் சோணமலைப்

பம்பிவளர் கார்த்திகைத் தீபம். (53)

ஞானசம்பந்தப் பெருமானுக்கு முத்துச் சிவிகையும் சின்னமும் அளித்த தீபம்.

செந்நெல் விளையும் கழனிகள் சூழ்ந்த அருணாசலமலைமீது ஒளிரும் பழநிமலைக் கார்த்திகைத்தீபம். இங்கு பழனிமலை முருகன் அண்ணலின் மைந்தனானதால் அவனையும் குறிப்பிட்டாரோ?

பன்னருஞ்சம் பந்தருக்குப் பத்தருநற் பல்லக்குஞ்

சின்னமுமுத் தாலளித்த சீர்த்தீபஞ்செந்நெற்

கழனிபுடை சூழருணைக் காமர்மலை மீது

பழநிமலைக் கார்த்திகைத்தீ பம். (63)

கல்லால மரத்தடியில் சின்முத்திரைகாட்டி, நான்கு முனிவர்களுக்கும் மௌனத்தால் பொருளுணர்த்தும் தீபம்.  கொல்லாவிரதத்தினைக் கைக்கொண்டு தென்னருணாசலத்தில் உறையும் தொண்டர்கள் உள்ளத்தில் ஆனந்த நடனமிடும்  கார்த்திகைத்தீபம்.

கல்லா லடியிற் கரங்காட்டி நல்வருங்குஞ்

சொல்லா லுணர்த்துஞ் சுபதீபங்கொல்லா

விரதமொடு தென்னருணை மேவினருள் ளத்திற்

பரதமிடுங் கார்த்திகைத்தீ பம். (85)

அடுத்த பாடல் அத்தனின் அழகு வர்ணனையுடன் அவனாகவே நிற்கும் அருணாசலமலையையும் ஏற்றுகின்றது. பாம்புகளை ஆபரணங்களாக அணிந்த தீபம்;  பத்திநெறிகொண்டு வாழ்வோர்கள்  ஏத்தி வழிபடும் தீபம்; தனித்துவிளங்கும் தீபம். அல்லிமலர்கள் பொலியும் நீர்நிலைகளைக் கொண்டுள்ள அருணையில் வாழ்கின்ற கற்பகத்தருவாகிய கார்த்திகைத்தீபம்

பாம்பணியுந் தீபம் பத்திநெ றிசேரடியார்

தாம்பணியுந் தீபந் தனித்தீபமாம்பல்

விகசிக்கும் வாவி மிளிரருணை வாழ்கற்

பகமொக்குங் கார்த்திகைத்தீ பம். (91)

தனது பாதமெனும் தாமரைகளை நாளும் தொழும் அடியவர்க்கு ஆதாரமாக விளங்கி அருளுகின்றதீபம்.  மலர்கள் நிறைந்து விளங்கும் தேன்மிகுந்த சோலைகள் கொண்ட அருணைமலையின் கண்ணும் என் உள்ளத்திலும் வாழும் கார்த்திகைத்தீபம்.

பாதார விந்தம் பரவுந் தொழும்பருக்கோ

ராதார மாகி யருடீபம்போதாருங்

கொங்கிலங்குஞ் சோலை குலவருணை வெற்பினுமென்

பங்கினும்வாழ் கார்த்திகைத்தீ பம். (94)

நல்ல சிந்தனைகளைத் தரும் தீபம்;  நன்மக்களையும் (புத்திர சம்பத்து) மேலும் சித்திகளையும் தரும் தீபம்; சிவதீபம்; அன்னை சக்தியாம் உண்ணாமுலைக்கு உயிராகி, சோணமலையில் ஓங்கி வளரும் ஞானப்பயிராக நிற்கும் கார்த்திகைத்தீபம்.

புத்திதருந் தீபநல்ல புத்திரசம் பத்துமுதல்

சித்திதருந் தீபஞ்சிவதீபஞ்சத்திக்

குயிராகுஞ் சோணமலை யோங்கிவளர் ஞானப்

பயிராகுங் கார்த்திகைத்தீ பம். (100)

இந்தக் கடைசி வெண்பாவில்தான் சிவதீபம் எனும் சொல்லைக் காண்கிறோம். மற்றபடி சிவபிரானே அத்தீபம்; தெய்வம் எனக்கொண்டே இந்நூல் முழுமையும் பாடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வெண்பாவிலும் தீபம் எனும் சொல் இரண்டு, மூன்று, நான்கு அல்லது ஐந்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளுறைப் பொருள் தீபங்களுக்கு இடப்படும் திரிகளின் முகங்களோ என எண்ண இடமுள்ளது.  தெரிந்த புலவர் பெருமக்கள் யாரேனும் விளக்கியருளலாம்.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

விளக்கின் முன்னே வேதனை மாறும்

விளக்கினை விளக்கும் விளக்குடையார்கள்

விளக்கிடின் விளங்கும் விளக்கவர் தாமே. (திருமந்திரம்)

தீபத்தின்முன் அதன் ஒளியில் நமது கவலைகள் மாறும்; பாவங்கள் அழியும். மனம் ஈசனிடம் ஒருமைப்படும். இத்தகைய விளக்கத்தினை அருளிய பெரியார்கள் நமக்கு வழிகாட்டும் விளக்கினைப் போன்றவர்களே!

தென்னாடுடைய சிவனே போற்றி;  என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.

திருச்சிற்றம்பலம்.

Source………

    http://www.tamilhindu.com/
Natarajan

 

 

” பேய் ” என பெய்யும் மழை …

சிந்திப்போம் ….சாதிப்போம்
………………………………………………..
நம்ம ஊரில் மழை பெய்யுமா  என தினம் தினம் ஒரு கேள்வி
சும்மா இல்லாம வருண பகவானுக்கும் நித்தமும்  ஒரு ” அர்ச்சனை ” …இப்போ சொல்லுங்க
நம்ம சென்னை மக்களே …இந்த மழை போதுமா இன்னும் கொஞ்சம்
வேணுமா …இப்போ   கேட்பது  வருணன் … ரமணன் அல்ல !!!
கொஞ்சம் யோசிங்க மக்களே … நாம் அழைத்து
நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளி வருணன் …
 ஆனா அவர்  வந்து தங்க
நாம கொடுக்கலியே இடம் அவருக்கு … அவர் வரும்போது தங்கும்
மனையும் அவர் இடமும் இப்ப நம்ம பிடியிலே ..நம் வேதனை நீக்க
நாம் கருணை மனு கொடுத்து நம்மிடை வந்த வருணனுக்கே   இந்த சோதனை ..
தன் மன வேதனை பொறுக்காமல்   வருணன் வடிக்கும் கண்ணீர் அல்லவா
இப்போ “பேய் என பெய்யும் மழை” …இந்த நிலை
மாறி “பெய் என பெய்யும் மழை” சக்தி  மீண்டும்
நம்மிடை உருவாக நாம் முதலில் மாற வேண்டாமா ?
சிந்திப்போம் ….சாதிப்போம் …!!!
2b979-newsam7-6
*சென்னை  மற்றும்  தமிழக நகரங்களில்  பெய்து வரும் மழையின்  பின்னணியில்  உருவான  ஒரு  ஏக்க  கவிதை …
நடராஜன்
25 Nov 2015

 

வானவில் பெண்கள்: இயற்கை வழியில் செல்லும் பேராசிரியர்….

விஜயலட்சுமி, படம்: கண்ணன்

விஜயலட்சுமி, படம்: கண்ணன்

இப்போது மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ரசாயன உரங்களின் பாதிப்பு குறித்தும் பற்றியும் நம் பாரம்பரிய விவசாய முறைகளைக் குறித்தும் மக்கள் ஆர்வம் காட்டாத எண்பதுகளிலேயே மண்புழு வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியவர் பேராசிரியர் ஜி.எஸ்.விஜயலட்சுமி. தென்னிந்தியாவில் மண்புழு வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை அடிமட்டம்வரை எடுத்துச்சென்றவர்களில் முதன்மையானவர். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 49 மண்புழு வளர்ப்பு தொட்டிகளை அமைத்திருக்கிறார். தமிழக அரசின் பசுமைப் படை சார்பாகக் கழிவு மேலாண்மையை முக்கியக் கடமையாக எடுத்துச் செயல்படுத்தி வருகிறார்; திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டிருக்கிறார். கடல்வாழ் உயிரினப் படிப்பில் இந்தியாவில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆஸ்திரேலியாவில் 1981-ல் நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் அவர் அளித்த ஆய்வுக் கட்டுரைக்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருக்கிறார். 1975-ல் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த அவர் அன்று முதல் இன்றுவரை காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, மரம் நடுதல் எனச் சுற்றுச்சூழல் சார்ந்த பல செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

பணி நிறைவு பெற்றுவிட்ட பிறகும் விஜயலட்சுமி ஓய்வாக அமரவில்லை. இப்போதும் அதே சுறுசுறுப்புடன் செயல்பட்டுவருகிறார். “பராசக்தி கல்லூரியில் கிடைத்த ஊக்கத்தால் கழிவுப் பொருள்கள் உதவியுடன் காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டேன்” என்று சொல்லும் அவர், 1962-லேயே இந்தியாவிலேயே முதன்முறையாகக் கல்லூரி அளவில் பராசக்தி கல்லூரியில் சாண எரிவாயு அமைப்பு நிறுவப்பட்டிருந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். அப்போது அமைத்த சாண எரிவாயு அமைப்பு இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் தெரிவிக்கிறார்.

பராசக்தி கல்லூரியில் சாண எரிவாயு அமைப்பிலிருந்து கிடைத்த கழிவுப் பொருள்கள் மூலம் மீன் வளர்த்திருக்கிறார். சாதாரண நீரில் மீன் வளர்ப்பதைவிட இந்தக் கழிவுப் பொருள் நீரில் மீன் வளர்ப்பதால் பத்துப் பதினைந்து நாட்களுக்குள் மீன் உணவான மிதவை உயிரிகள் மிகவும் விரைவாக உற்பத்தியாகிவிடும் என்கிறார் பேராசிரியர் விஜயலட்சுமி. மீன் வளர்ப்பில் கிடைத்த உற்சாகத்தால் கழிவு நீரில் காளான் வளர்க்கத் தொடங்கியதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

“செயற்கையாகக் காளான் வளர்க்கலாம் என்னும் உத்தி இப்போது நன்கு பரவி திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமே இந்தக் காளான் வளர்ப்பு பலன் தரத் தொடங்கியிருக்கிறது” என்கிறார் விஜயலட்சுமி. தென்காசி அருகே இருக்கும் வல்லம் கிராமத்தை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.

1980-ல் மதுரை விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, அவர் சந்தித்த பல்கலைக்கழக டீன் கிருஷ்ணமூர்த்தி என்பவர்தான் காளான் வளர்ப்பில் கிடைக்கும் வைக்கோல் கழிவிலிருந்து மண்புழுவை வளர்க்கலாம் என்ற திட்டத்தைச் சொல்லியிருக்கிறார். அதுதான் பேராசிரியர் விஜயலட்சுமிக்கு உந்துதலாக இருந்துள்ளது. ‘மண் புழு மண்ணிலேயே இருக்கிறதே அதை ஏன் செயற்கையாக வளர்க்க வேண்டும்?’ என விஜயலட்சுமி கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த கிருஷ்ணமூர்த்தி, ‘நீங்கள் நினைப்பது போல் அல்ல, இப்போதெல்லாம் மண்ணைத் தோண்டினால் மண்தான் வரும், மண்புழு வராது’ என்று சொல்லியிருக்கிறார். அந்தப் பதில்தான் மண்புழு வளர்ப்பை நோக்கி விஜயலட்சுமியைத் திருப்பியது. மண்புழு வளர்ப்பு தொடர்பாக பெங்களூர் விவசாயக் கல்லூரியில் பணியாற்றிய முனைவர் ராதா அவருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இயற்கையான எல்லாக் கழிவுகளிலும் மண்புழுவை வளர்க்கலாம் என முனைவர் ராதா தெரிவித்துள்ளார்.

“இந்திய மண்புழு, ஆப்பிரிக்க மண்புழு, சீன மண்புழு ஆகிய மூன்று வகைகளை நான் வளர்த்திருக்கிறேன். சீன மண்புழுவையும், ஆப்பிரிக்க மண்புழுவையும் வளர்க்க மண்ணே தேவையில்லை, வெறும் இலையிலும் கழிவுகளிலுமே அவை வளரும்” என்கிறார் பேராசிரியர் விஜயலட்சுமி. மேலும், “சீன மண்புழு ஒன்றரை அங்குலம் நீளமே இருக்கும். எனவே அதிக இடம்கூடத் தேவையில்லை. இலை, தழைகளை மட்டுமே அவை சாப்பிடும். தினசரி சாணிப்பால் மட்டும் தெளிக்க வேண்டும். நாற்பத்தி ஐந்து நாட்களில் உரம் தயாராகிவிடும்” என்கிறார் அவர்.

இப்போதும் குற்றாலம் அருகே இருக்கும் தனது வீட்டின் அருகே செயல் விளக்கம் செய்து காட்டுவதற்காக மண்புழு உரக் கூடம் ஒன்றை நடத்திவருகிறார். இவரது செயல் விளக்கப் பயிற்சியின் மூலம் சிறு சிறு தொழிற்சாலைகளில் தங்களுக்குக் கிடைக்கும் கழிவுப் பொருளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கல்லூரி மாணவிகளுக்கு மண்புழு வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கிவருகிறார்.

“மண்புழு உரம், மற்ற உரங்களைவிட சிறப்பானது. தீங்கிழைக்கக்கூடிய பாக்டீரியாக்கள் மண்புழு உரத்தை நெருங்காது. ஒரு ஏக்கருக்கு இரண்டு டன் மண்புழு உரம் போதுமானது. இதனுடன் மேல் உரம், அடி உரம் போட்டால் போதும்” என்று சொல்லும் விஜயலட்சுமி, மண்புழு உரத் தயாரிப்பை லாப நோக்கில் செயல்படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார்.

Source……ரிஷி…. http://www.tamil.thehindu.com
Natarajan

படகு சவாரி முன்னே… பாசனம் பின்னே……

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

பழந்தமிழர் ஏரிகளைப் பராமரிக்க தனி வாரியம் அமைத்தனர். குடவோலை முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். கரை பராமரிப்பு, கலுங்கு பராமரிப்பு, காவல், நீர் பங்கீடு இவையெல்லாம் ஏரி வாரியத்தின் பணி. ஏரி வாரியத்தினர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஏரிகளில் மேடிட்ட மண்ணை தூர் வாரினர். இது ‘குழி குத்துதல்’ என்று அழைக்கப்பட்டது. ஏரி வாரியம் மட்டுமின்றி பாசனத்தைப் பராமரிக்க கழனி வாரியம், வயல் வழிகளைப் பராமரிக்க தடிவழி வாரியம், வரி வசூலைப் பராமரிக்க பஞ்ச வாரியம் என்றெல்லாம் குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஏரிகளைப் பராமரிப்பதற்கான செலவுகள், தானம் மற்றும் மானியமாக வழங்கப்பட்ட நிலங்களின் பாசன வருவாயில் இருந்து பெறப்பட்டது. இந்த நிலங்கள் ‘குளப்பட்டி’, ‘குளப்புறம்’, ‘ஏரிப்பட்டி’ என்று அழைக்கப்பட்டன. ஏரியில் மீன் பிடிப்போர் தங்கள் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ஏரி பராமரிப்புக்காக அளிக்க வேண்டும். இது ‘பாசிப் பட்டம்’ என்று அழைக்கப்பட்டது. மீன் பிடிப்போர், சலவைத் தொழில் செய்வோர் பகலில் ஏரியை காவல் காத்தனர். இரவு காவலுக்கு தனி ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இதை அகநானூறு (252),

‘துய்யகிழ் பனிமலர் உதிர வீசித்

தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

எறிதரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்

பெருங்குளம் காவலன் போல

அருங்கடி அன்னையும் துயின் மறந்தனளே’

என்கிறது. அதாவது, ‘அடர்ந்த பனியிலும் அடைமழையிலும் நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல ஓர் அன்னை தன் தூக்கத்தை மறந்தாள்’ என்கிறது பாடல். ஏரியின் காவலனைத் தாயுடன் ஒப்பிட்டுப் பெருமை சேர்க்கும் வரிகள் இவை. அப்படியெனில் ஏரிக் காவலர்கள் எவ்வளவு விழிப்போடு இருந்திருப்பார்கள்!

நிகழ்காலத்துக்கு வருவோம். பாலுட்டி வளர்த்த அன்னையைக் கைவிட்டதுபோல ஏரிகளைக் கைவிட்டு விட்டோம். ஊருக்கெல்லாம் சோறிட்ட ஏரிகள் அநாதைகளாகப் பரிதவிக் கின்றன. தாய் மடி எங்கும் கருவேல முட்செடிகளின் வேர்கள் ஊடுருவி ரத்தம் உறிஞ்சுகின்றன. ஏரிக்கு காவல் யாருமில்லை. ஏரிகளைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் பொதுப் பணித் துறையிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏரியைப் பராமரிக்க என்று தனியாக ஒரு பணியாளர்கூட கிடையாது. கூடுதல் பொறுப்பாகதான் ஏரிகளை உதவிப் பொறியாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் சராசரியாக 30 ஏரிகளுக்கு ஒரு பொறியாளர் மட்டுமே இருக்கிறார். மைல் கணக்கில் ஊர், ஊராக நீளும் ஏரிகளை வைத்துக்கொண்டு ஒரு பணியாளர் எத்தனை ஊர்களுக்குதான் செல்வார்?

ஏனோ தெரியவில்லை, ஏரிகள் விஷயத்தில் அரசுக்கு ஏக குழப்பம். ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றுமில்லை. ஒற்றை ஏரியை எத்தனை துறைகள் கூறு போடுகின்றன தெரியுமா? ஏரிக்குள் இருக்கும் மண் கனிம வளத்துறையின் பொறுப்பு. ஏரிக்குள் இருக்கும் மீன்கள் மீன் வளத்துறையின் பொறுப்பு. ஏரியின் அடிநிலம் வருவாய்த் துறையின் பொறுப்பு. சிறிய ஏரிகளின் கரை மற்றும் கலுங்குகள் உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பு. பெரிய ஏரிகளின் கரை, கங்குகள் பொதுப்பணித்துறையின் பொறுப்பு. ஏரியிலும் அதன் சுற்றிலும் வளரும் மரங்கள் வனத்துறையின் பொறுப்பு. ஆனால், ஏரிக்கு ஒரு பிரச் சினை என்றால் மட்டும் எந்தத் துறையும் பொறுப்பு இல்லை. ஆனால், நாட்டின் இதர மாநிலங்கள் பலவும் ஏரிகளை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பாதுகாக்கின்றன தெரியுமா?

கர்நாடகம் ஏரி அபிவிருத்தி ஆணை யத்தை உருவாக்கி கர்நாடகா சொசைட் டிஸ் பதிவுச் சட்டம் 1959-ன் கீழ் அதனை ஒரு சொசைட்டியாக பதிவு செய்துள்ளது. அரசியல் குறுக்கீடுகள் ஏதுவும் இல்லாத தன்னாட்சி பெற்ற அமைப்பு அது. ஆட்சிகள் மாறினாலும் ஏரி பாதுகாப்பு, மறு சீரமைப்பு, மீட் டெடுப்பு, மீள் உருவாக்கம், கொள்கை வகுத்தல் எனப் பணிகள் தொடர்கின்றன.

மத்தியப்பிரதேசத்தில் 2004-ம் ஆண்டு ‘ஏரி பாதுகாப்பு ஆணையம்’ அமைத்து ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் உதவியுடன் ஏரிகளைப் பாதுகாக்கிறது. ஒடிசாவின் ‘சிலிகா அபிவிருத்தி ஆணையம்’ இந்தியாவின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்றான சிலிகா ஏரிக்கும் வங்காள விரிகுடா வுக்கும் இடையே பாதையை ஆழ மாக்கி, அதன் நீரியல் மற்றும் உவர்ப்பு அமைப்பை மேம்படுத்தியது. இதன் மூலம் அங்கு மீன்பிடித் தொழில் பல மடங்கு மேம்பட்டுள்ளது. இதற்காக அந்த ஆணையம் நீர் நிலை மேம் பாட்டுக்காக உலகளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘ராம்சர்’ விருதை 2003-ம் ஆண்டு இந்தி யாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது. மகாராஷ்டிரா அரசு பல்வேறு தனியார் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஏரி களைப் பராமரிக்கிறது. மணிப்பூரில் ‘லோகாக் ஏரி அபிவிருத்தி ஆணையம்’, ஜம்மு காஷ்மீரில் ‘ஏரி மற்றும் நீர்வழிகள் அபிவிருத்தி ஆணையம்’, உத்தரகாண்டில் ‘நைனிடால் ஏரிகள் பாதுகாப்புத் திட்டம்’, ராஜஸ்தானில் ‘ஏரி, நதி அபிவிருத்தி திட்டங்களுக்கான கொள்கை நிலைக்குழு’ என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஏரிகளைப் பாதுகாக்கின்றன. அதேபோல பல மாநிலங்களில் ஏரிகளைப் பாதுகாப் பதற்கென்றே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. கேரளா வின் ‘லிம்னாலஜி’ சங்கம், ராஜஸ் தானில் ‘ஜில் சன்ரக்‌ஷன் சமிதி’, இமாச் சலப்பிரதேசத்தில் ‘சேவ்’ (Social of appeal for vanishing environment), ஹைதராபாத்தில் ‘இந்திய நீர் நிலை உயிரியலாளர்கள் சங்கம்’ ஆகியவை ஏரிகளைப் பாதுகாக்கின்றன.

தமிழகத்துக்கு வருவோம். மத்திய அரசின் தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டம் (1983-89) என்று ஒன்று இருந்தது. அதில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உட்பட 14 மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.1015.59 கோடியில் 60 ஏரிகள் சீரமைக்கப்பட்டன. மற்ற மாநிலங்கள் எல்லாம் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏரிகளையும் மிகப் பெரிய பாசன ஏரிகளையும் மேம்படுத்திக்கொண்டன. தமிழகமும் ரூ. 12.17 கோடியில் இரண்டு ஏரிகளை மேம்படுத்திக்கொண்டது. எந்தெந்த ஏரிகள் தெரியுமா? ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஏரிகள். விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டாலும் பரவாயில்லை, சுற்றுலாப் பயணிகள் படகில் உல்லாச சவாரி செல்ல வேண்டியது முக்கியம் அல்லவா!

Source…..டி.எல்.சஞ்சீவிகுமார்…www.tamil.thehindu.com

Natarajan

“Skanda Sashti” and Tiruchendur Murugan Temple….

Tiruchendur Utsava Murti on Kanda Sasti day

In most Murugan temples, Kanda Ṣaṣṭi festival is celebrated for six days only. In some temples it is celebrated for seven days, with the divine wedding of Lord Murugan the day after Ṣaṣṭi. But in Tiruchendur the festival is held for twelve days; the first six days of Kanda Ṣaṣṭi comprise Ṣaṣṭi vratam (the vow of Ṣaṣṭi) and Sūra Samhāram (the annihilation of the demon, Sūra), on the seventh day it is the divine wedding of Lord Murugan and Teyvānai, and in the next five days, the Lord in His wedding gear appears and blesses in the Unjal Sevai that is, sitting on the swing.

At Tiruchendur, every day nine times poojas are performed for Lord Murugan. During these poojas different naivedyams (food offerings) like dhal pongal, kanji (gruel), thosai, appam, ghee-rice, balls made of cooked green gram and jaggery are offered. Though there are many temples for Lord Murugan in Tamilnadu, six temples are specially worshipped as paṭai veeṭu(armory house). Where the Commander-in-Chief who goes for battle stays with his army is called his paṭai veeṭu. Accordingly, Tiruchendur is the only place where Lord Murugan with His army stayed, when He went to destroy Sūrapadman. But we also call as Ārupaṭai Veeṭu the other five temples also together with Tiruchendur.

Lord Murugan won and accepted Sūrapadman on Ṣaṣṭi (sixth day) of the waxing moon (bright) night (valar pirai) of the month Aippasi. This day is celebrated as Kanda Ṣaṣṭi. This incident happened at Tiruchendur and hence, the Kanda Ṣaṣṭi festival is celebrated here with all grandeur. In the Kanda Purana of Mahābhārata, two other causes are indicated for the celebration of Kanda Ṣaṣṭi festival, apart from the extermination of Sūrapadman. Once a few sages conducted a yāga (sacred fire worship) with a behest to get a son for the welfare of the world. It was begun on the New Moon day and went on for six days. From the fire erupted out of the sacrificial altar (yāga kundam), six seeds – one seed each day for six days respectively – were collected. Lord Murugan was born on the sixth day, when all these six seeds were made as one. The Mahābhārata asserts that the day of the birth of Lord Murugan is the Kanda Ṣaṣṭi Day.

In the Kanda Purana, Kachiappa Sivāchāriyar says that the Devas, in order to become powerful to challenge the asuras, carried on a vow by soliciting Lord Murugan to be in the kumbham (sacred pot) for six days. Lord Murugan blessed them likewise. This incident is remembered as Kanda Ṣaṣṭi and celebrated after Aippasi New Moon day – so says Sivāchāriyar.

Source…..www.dinamalar.com

Natarajan

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

A Boy Who Saved 850 Train Passengers. A Girl Who Saved Her Brother from Electrocution….

33 children from Karnataka were awarded for their acts of bravery by the Governor, Vajubhai Rudabhai Vala, on the occasion of Children’s Day this year. The award ceremony was held at the Jawahar Bal Bhavan in Cubbon Park, Bengaluru. These children showed exemplary courage and did not think twice before putting their lives in danger to save other people.

Two of the 33 award recipients are Siddesh Manjunath and Siya Vamanasa Khode. This is how they displayed immense courage and presence of mind in dangerous situations:

bravery_f

Siddesh Manjunath

This 10-year-old boy was conferred the Hoysala bravery award for stopping a passenger train that was about to cross a nearly two-inch wide crack on the rail track. His action saved about 850 passengers.

Siddesh is a student of class 5 at Avaregere government school in Davanagere city of Karnataka. He has a habit of watching trains pass by his father’s tea stall in their village. On March 14, 2015, he was at the tea stall and felt that something sounded wrong when two trains passed by. While his father told him that it was just the sound of stones on the track, Siddesh wanted to confirm. He went near the tracks to find a very risky gap there. On hearing about it, his father Manjunath rushed to the tracks and tried alerting other people. By that time, the Harihara-Chitradurga train was approaching and Siddesh knew that they had to do something to stop it. It was then that an idea struck the child. He took off his red t-shirt, and started waving it while running towards the train. His father and some villagers also ran behind him, thereby alerting the loco pilot from a distance. The train stopped and many lives were thus saved. Siddesh explained that he got t-shirt the idea from a movie that he had seen earlier.

Siya Vamanasa Khode

This 11-year-old girl from Hubballi saved her younger brother from electrocution. She was felicitated with the Keladi Chennamma award for bravery. She was playing with her 7-year-old brother, Yellappa, when he accidentally came in contact with a live wire.

“While we were playing, I saw my younger brother holding the iron railing, but standing still with his eyes wide open. When I tried to pull him away, I received an electric shock. That’s when I realised Yellappa was electrocuted. I tried to hold his hand, but received yet another electric shock. So I pulled him away from the railing by holding on to his shirt,” she told The Hindu.

Source….Tanaya Singh….www.the betterindia.com

Natarajan

 

India To Get Its First Transgender Sub-Inspector Of Police, Thanks To Madras High Court…

We weren’t done applauding the remarkable decision taken by West Bengal government that directed Kolkata police to include Hijras in the Civic Police Volunteer Force (CPVC), and now comes another good news that says India is set to get its first transgender sub-inspector of Police.

The news comes from Tamil Nadu, a state hailed for forming the first transgenders welfare board, which is said to be the first not only in India but probably in the world.

Following a historic decision made by Madras High Court, K. Prithika Yashini is soon to become India’s first transgender sub-inspector of Police.

Image source

Madras High Court directed the Tamil Nadu Uniformed Services Recruitment Board (TMUSRB) to appoint K. Prithika Yashini as a sub-inspector, as she is deemed perfectly entitled for the job.

Prithika was born and brought up as Pradeep Kumar. But her journey, unsurprisingly, wasn’t easy. She had to fight a long legal fight to get things going her way.

 

In the first go, her application was rejected due to the absence of  ‘third gender category’ in the state police recruitment board.

T_2

Image Source: Facebook

 

She moved the High Court. As a consequence of this, she was allowed to appear for written, physical and endurance test, and also viva-voce. While she cleared all her rounds perfectly, in a 100-metre dash, she missed out by 1 second. But, she was testified to be an SI.

According to The Hindu, Chief Justice S.K. Kaul and Justice Pushpa Sathyanarayana of the First Bench made the board realize their failure at not adding the ‘third gender category’ despite the Supreme Court’s direction.

Excited by things turning out in her favour, Prithika who also hopes to become India’s first transgender IPS Officer told NDTV, “I’m excited. It’s a new beginning for the entire transgender community,”

India has seen some significant feats this year in relevance to recognizing the talent sidelining other factors. Manabi Bandyopadhyay (India’s first transgender college principal) and Akkai Padmashali (First transgender recipient of Rajyotsava award) are a couple of notable examples.

Let’s hope more path-breaking decisions like these that give importance to talent over prejudices, are taken often. Let’s hope, people who don’t easily get socially accepted because of their choices that don’t exactly conform to social norms, get to live their dreams.

After all, it is dreams, aspirations and goals we are talking about- things that don’t have any genders or castes or religions.

Sources: NDTV , The Hindu

Cover Image Source

Ananta Sharma in http://www.storypick.com

Natarajan

 

This Kerala Man Built an Aircraft. He Now Wants a Job….

This Kerala Man Built an Aircraft. He Now Wants a Job

Saji Thomas has studied only till class 7 and has always been hooked on to electrical gadgets and their repairs

THIRUVANANTHAPURAM:  After five years of painstaking efforts, Saji Thomas has built a small aircraft – all on his own – but now this 45-year-old from Kerala, who is speech and hearing challenged, yearns for a full-time job.

His wife Maria said that they have been married for 14 years and since then, all that she saw was her husband busy tinkering with small motors and machines she didn’t have a clue about.

“Initially I tried my best to dissuade him to get work as an electrician, but when I found all my efforts were in vain, I decided to support him in all his endeavours. Today the entire village (near Thodupuzha in Idukki district) is steadfastly behind him as he built a twin-seater ultralight aircraft, which has been filmed by the Discovery Channel,” Maria told IANS.

Mr Saji has studied only till class 7 and has always been hooked on to electrical gadgets and their repairs.

“The first thing he built was the frame of an helicopter. He got in touch with (former prime minister) Rajiv Gandhi, seeking money to buy an engine for it. It did not materialise because Rajiv Gandhi was assassinated (In May 1991). Then his interest shifted to building an aircraft and after five years of hard work, he fitted the small aircraft with the engine of a two-wheeler. Later it was given to a college nearby and they still use it to teach their students,” the proud wife said.

She said he then began work on this now successful two-seater and sourced all the materials from Bangalore.

“After a marathon five years of work, last year in April, it was taken to a private airline academy in Ambasamudram near Madurai. Since this aircraft has no licence nor does Saji have a licence to fly aircraft, he could fly it for a few minutes there. Later the chief instructor, a retired air force officer, also flew it for a few minutes. The aircraft flew only at a height of 20 feet as the rules are very strict,” added Maria.

Today the couple, who has a 13-year-old son Joshua, is still hoping for the government support.

“We see the present programme of Discovery Channel which has filmed his efforts as an eye-opener and it is expected to be aired soon. Our only wish is my husband gets a stable monthly job as by now he has sold a portion of our land to complete this aircraft. We live in a small two-room home built with the help of the local village council in 2001,” Maria said.

In all, Saji has spent Rs.25 lakh for his expensive hobby in the past more than 15 years.

Source….www.ndtv.com
Natarajan

” If anyone asks me, whether I have seen God, my answer would be ‘yes’ because I have seen Periva as my Maha Vishnu.”…

A Miracle in the Life of a Devotee  Gayathri Rajagopal   .. Pl read further and get blessed

Natarajan

Periva brought life to my left leg fingers after six years ….says HIS devotee Gayathri Rajagopal 

I have experienced many Periva’s miracle which I am posting through my weekly articles in Periva forum site. I have also heard the experience of others through “Experience with Mahaperiyava” site in you tube.. But the miracle happened to me on 10th November 2014 is something huge and a medical miracle.

Yes! After six years of my paralytic stoke, my left foot fingers were dead and absolutely no movements. The fingers of my left foot folded inside (against gravity). Hence I could not walk because the folded left foot fingers were scratching on the floor while walking. Consequently there will be ulcers with blood oozing out always, whenever; I try to walk a little. This was very much painful. It is not the pain due to ulcers in the fingers but my inability to go to Kanchi to have darshan of Maha Periva at Periva Adhishtanam was my real pain and unquenchable thirst.

I was unable to wear slippers and go out and if this condition continues my ambitious plan of going to Periva Adhishtanam at Kanchi will become an unfulfilled dream till my last breath. I was really worried and always with the clouded mind and will not speak to others. The food intake was also reduced considerably, which resulted in possible another stoke because of blood pressure variation.

On 9th November 2014, before I retire for bed, I submitted my prayer with the glistened eyes that “I am prepared to undergo my karma but why you don’t, show me some consideration for my prayer. I do not want to go anywhere except “you’re Adhishtanam Periva” at Kanchi “.I submitted my prayer and retired for bed with tears in my eyes. Even during this narration, I shed tears because this miracle was instant by Periva when all my prayers were unanswered by other God and goddess. If anyone asks me, whether I have seen God, my answer would be yes because I have seen Periva as my Maha Vishnu.

On 10th at 4.30 A.M, (next day) I got up with the usual frame of mind and started my morning routine and completed my brahma Muhurtham prayer. Periva already gave life to my left hand fingers and I could light Vilaku without anyone’s help now. I have already posted my article “Periva brought life to my dead fingers after six years” which please note.

With the grace of Periva, lit the Vilaku and dropped the match stick with little fire on the floor but by mistake the match stick was fallen on my left leg fingers. Immediately the fingers started moving and stretching out. The folded left leg fingers for six years were unfolded and released on that day. From that day onwards I started wearing slippers and do walking practice. I was with watery eyes:

“Periva not only wiped my tears 
But hold my tears in his hand 
Before the tears touches the ground.” 

Now I can go to Kanchi with someone’s help. Periva is translating my dream as a reality. Virtually, I was losing mental balance to notice the dead fingers of hand and leg becomes alive instantly on submission of my prayer. Thereby,

Medical Theory was disproved by Periva 
What a way to bless his devotees. 

Periva’s blessing disproved doctor’s conclusion that I cannot show any further improvement. Periva has enabled me to show remarkable sign of improvement. This improvement has given enormous confidence to me and to my people that they can accompany me anywhere without any problem as days go on. From today onwards, I will walk more to regain my functionalities.

After so much of divine miracles happened in my life, within such a short period of time, I could not find an answer, I am heading towards what? Periva will certainly give me the answer shortly or when time is ripe. I will certainly post my experience once Periva show me the way.

Un assumed Periva 
Enabled me to  
Assume what I lost!

Hara Hara Shankara Jaya Jaya Shankara 

Gayathri Rajagopal ….in http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/10460/periva-brought-fingers-after-years#ixzz3qBe0XRQZ