Divinity of Kanda Sashti ….

271

Kanda Sashti which falls in the Tamil month of Aippasi (Oct-Nov) is a very auspicious day in the calendar of Muruga devotees. The significance of Sashti is that it falls on the 6th day (thidi) of the lunar month, starting from Ammavasya (full moon day); the number six signaling the six faces of Muruga.  In 2014, Kanda Sashti falls on 29th October.  Skanda Sashti marks the triumph of good over evil.  It was on this day; Lord Kanda, pronounced as Skanda in Sanskrit, destroyed the demon Sooran who represented ego in its full measure. Kanda Sashti gives us the message that the Lord of Tiruchendur would spontaneously reach out those who follow the path of truth, devotion and humility and grace them.

As a result of the extreme penance undertaken by Soorapadman, Lord Siva appeared before him and granted him the boon of life for 108 yugas or eons, or one full age among the four age cycle.  Armed with this power, he and his brothers, Tarakasura and Simhasura started terrorizing the Devas.  Soorapadman had received the boon that no one born to any human or even divine personality could destroy him.  It therefore became necessary to create a bigger power, not naturally born, to be able to annihilate Sooran.

Thus, six sparks of fire came from the third eye of Lord Siva.  These flames were deposited in the marshy lake called Saravana Poigai.  Goddess Parvati came to Saravana Poigai along with Lord Siva and saw her son, Kumara.  The face of the child was brilliant like a thousand rising suns.  As she embraced the six children, they merged into one and transformed into one beautiful child. The word Skanda means ‘integrated into one’.  As the six babies were integrated into one, He became known as Skanda.

Having received the powerful Vel (lance) from his mother Parvati, Kanda waged a fierce battle with Soorapadman.  Soorapadman adopted deceitful methods by taking different forms like mountain and trees.  Ultimately, Kanda vanquished Sooran by hurling His Vel (lance) into the tree in which form Sooran was fighting.  As the Vel pierced the tree, it was split into two parts.  But Muruga, the Lord of infinite compassion, pardoned Sooran.  The Lord took one half of the tree, transformed it into a peacock and accepted it as His transport, and transformed the other half into a rooster and accepted it as his banner or ensign. It was victory day for all the Devas.  They celebrated the day as the day of victory of right over wrong, victory of light over darkness and victory of truth over deceit. This victory day is celebrated as Kanda Sashti.

The Kanda Sashti celebrations start six days in advance.  Some devotees start observing austerities, penance and strict discipline in conduct.  While some devotees follow the practice of silence, others engage themselves in rituals and worship.  Most of the people observe fast during this period. There is no doubt that those who worship the Lord after observing the austerities would get the benign blessings of Lord Muruga.  There were many instances of those deprived of the joy of having children being blessed with children after observing fast during Sashti and worshipping Lord Senthil Andavar.

There is a popular saying in Tamil Chattiyil Irundhal Aappayil Varum. (chattiyil = in earthern pot, irunthal = if available, aappayil =  the hand instrument by which one draws the contents from the vessel, varum = could get).  If the pot has some contents then only one will be able to draw from it. This is said in order to highlight the fact that there should be a deposit before one tries to withdraw.  Now Muruga devotees have given a new interpretation to it.  They said: “Sashtiyil (vridham – assumed) Irundhal Agappayil Varum (sashtiyil = during Sashti, irunthal = if abstinence is observed’, agapayil varum = life will come in the internal cavity of the belly).

This means that if the women aspiring to become mother undergo penance during Sashti they would soon find their pot (womb) brimming with life. By worshipping Muruga, the women’s aspiration of motherhood would soon be fulfilled.  But it is not just the grace of motherhood that Lord Kanda grants to those aspiring for it by observing Sashti ritual (vritam). Devotees observing Sashti Vritam with devotion and dedication would be free from all consequences of karma and elevated to a state of peace, prosperity and happiness.

Devaraya Swamigal, an enlightened saint, has given beautiful expression to the importance of Kanda Sashti in his hymn, Kanda Sashti Kavacham.  While Devarayar was engaged in business at Bangalore, he happened to meet Sri Meenakshi Sundaram Pillai, an erudite scholar in Tamil.  Association with Pillai transformed Devarayar into a great poet.  When the inherent devotion in Devarayar got combined with his literary knowledge, it gave birth to beautiful verses of hymns in praise of Lord Muruga.  Residing at Palani, he used to worship Palani Andavar daily.

Once, on his way to the hill, he was pained to notice a group of persons suffering from various ailments in a medical camp.  He then went to the shrine, bitterly poured out his emotion and prayed for their recovery.  Lord Muruga then appeared in his vision and said: “Your prayer is heard and it would be fulfilled.  Compose your songs in your beautiful Tamil in a way that would be acclaimed by all.”

Devarayar then started composing his songs. He then proceeded to Tiruchendur.  As he saw Tiruchendur Muruga in His splendour and glory, he was deeply moved and songs started coming from him spontaneously and effortlessly.  He composed his remarkable works, Kanda Shasti Kavacham in six chapters.  The song beinning with the wordsThudhipporkku Val Vinai Pom describes the different types of Vel and the way it protects devotees from different adverse influences.  Sashti Kavacham also describes the magnificence of Muruga, His infinite grace, His compassion and beauty.  The Soorasamharam is also described in vivid details.  In the passage: Ethanai Kuraigal the poet says:

There may be wrongs, shortcomings on my part,                                
Misdeeds I would have committed out of ignorance
It is your duty, Oh Lord Muruga, to pardon me and forgive me
Just as a loving mother would do to her children
And lead me to the correct path. 

Going through Kandar Sashti Kavacham, one admires literature and devotion blending beautifully.  Going through the range and depth of the song, it is clear that no ordinary mortal could have composed such an outstanding work and only one who has been blessed by Muruga could achieve this feat.

The word kavacham means shield.  To those who chant Kanda Sashti Kavacham, the grace of Kanda serves as a shield against all possible threats, all diseases and evil effects.  Neither the effects of karma nor any adverse effects arising out of planetary influence can harm these devotees.  The Kanda Sashti Kavacham not only shields them from all possible dangers but also gives them confidence, strength, courage and power to sail through this turbulent ocean of life.

A sea of humanity converges in Tiruchendur on the occasion of Kanda Sashti to witness enactment of the scene of Soorapadman being defeated.  Here, there is no difference of caste, class or creed.  All those congregated on the seashore are united in their devotion towards Muruga.  They have all come from far and near to witness this rare event called Soorasamharam.  The wedding of Lord Muruga (Tiru Kalyanam) is also solemnized on the next day after the Soorasamharam.  After the worship, they all return with the supreme satisfaction of having the blessings of Muruga.  They have full faith that the Lord they worship with reverence would always stand by them, provide them guidance and grace and ensure them happiness and prosperity.

SOURCE:::: www.thiruppugazh.org   ….Murugan Bhakthi

Natarajan

Sundar Pichai Takes Control of Key Google Products….

In a major move by Google CEO Larry Page, Sundar Pichai, the Google executive responsible for Android, Chrome, and Google Apps will now also be seen looking after other key Google products, according to recode.net.

 

Page had sent out a memo to the staff on Friday on the change in the leadership of certain areas of Google’s business.

Pichai will be in charge of research, search, maps, Google+, commerce and ad products, and infrastructure, apart from his existing responsibilities. Six executives for Google’s newly added products who were directly reporting to Page will now be reporting to Pichai.

According to recode.net, this move was taken due to Page’s concern that Google may become less innovative as time progressed. Page believes that it would reduce bottleneck and he will be free to be able to expand existing business. It would help him focus on the ‘bigger picture’, reported recode.net.

For Pichai who’s initial role was to manage Chrome and later the OS and a line of netbooks, this new responsibility is a big accomplishment.

His previous promotion was in March 2012 when he took control of Google Apps and later in March 2013, when Android too came his way.

According to recode.net, Pichai is known to be ‘well-liked exec is seen as an ambassador and partnership maker’. However it adds that this move does not mean he is being considered as Google’s heir apparent.

Pichai is an Indian citizen born in Chennai in 1972. He joined Google 2004. Before that he worked at Applied Materials and at McKinsey & Co.

He is an alumnus of the Wharton School at the University of Pennsylvania, Stanford University and the Indian Institute of Technology Kharagpur.

SOURCE::::  http://www.dnaindia.com/

Natarajan

 

” படித்து ரசித்தது …சத்ரு சம்ஹார வேல்…”

திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமியையும், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியையும் தரிசிக்கலாம். அவர்கள் இருவரையும் ஒரே தலத்தில் தரிசித்து, அந்த இரு தலங்களுக்கும் சென்று வந்த புண்ணிய பலனை ஒருசேரப் பெற விரும்புகிறீர்களா?
அப்படியென்றால், நீங்கள் செல்ல வேண்டிய தலம் பெருவயல்.
ராமநாதபுரத்தில் பெரிய வயல்கள் சூழ்ந்த கிராமமாக இவ்வூர் திகழ்வதால் பெருவயல் என்றே அழைக்கப்படுகிற. ஒரு காலத்தில் இவ்வூரில் மிகப் பெரிய நெற்களஞ்சியம் இருந்துள்ளது.
இத்தலத்தில் மூலவராக வள்ள-தேவசேனா சமேதராக அருள்பாலிக்கிறார். ரணபலி முருகன் என்ற சிவ சுப்பிரமணியசுவாமி. பிராகாரத்தில் ராமநாதசுவாமியும், பர்வதவர்த்தினியும் எழுந்தருளியுள்ளார்கள்.
பெருவயல் தலத்தின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்ப்பது இங்குள்ள சத்ரு சம்ஹார வேல்.
நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன் என்று திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில் இங்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டிருக்கிறார். அதோடு தன சொற்பொழிவுகளில் எல்லாம் அந்த வேலின் சிறப்பையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த அருள் வாசகத்தை கோயிலில் அவர் புகைப்படத்தோடு பிரேம் போட்டு மாட்டி வைத்திருப்பதை இன்றும் காணலாம்.
திருச்செந்தூர் முருகப் பெருமானின் அருளாலும், அவரது தீவிர பக்தர் ஒருவரின் முயற்சியாலும் கட்டப்பட்ட கோயில்.
ராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் கிழவன் சேதுபதி ஆண்டு வந்த சமயம், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக பவிளங்கியவர், சாத்தப்பன் என்கிற காத்த வீர தளவா வயிரவன் சேர்வை.
முருக பக்தரான அவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணாமுனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி-தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார்.
இதோபோன்ற கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள்.
பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள். கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையையும் வேலையும் எடுத்து வந்தார்.
விஷயம் அறிந்த மன்னர், தன் அரண்மனையில் “ராமலிங்க விலாசம்’ என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு ஆலயம் அமைக்க நிலங்களையும் இறையிலியாகக் கொடுத்து உதவினார்.
அதன்பின்னர் ஆலயத்திருப்பணிகள் விரைவாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டின் அடிப்படையில் பெருவயல் கோயிலிலும் பூஜைகளும், விழாக்களும் நடைபெறுகின்றன.
வயிரவன் சேர்வை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மீதும் அதிக பக்தி வைத்திருந்ததால், ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளும் பெருவயல் தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால், மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி, ரணபலி முருகன் என்றே அழைக்கப்படுகிறார்.
பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன்,பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து, அவர்களுக்கு சகல நண்மைகளும் அருள்வதால், “ரணபலி முருகன்’ என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தமே!
இக்கோயிலில் கி.பி. 1741-ம் ஆண்டு, ராமநாதபுரம் மன்னர் குமாரமுத்து விஜய ரெகுநாத சேதுபதி காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டும், செப்பேடகளும் உள்ளன. அவை இக்கிராமத்தின் பெயரை, பெருவல் கலையனூர் என்றும், மூலவரை, சிவசுப்பிரமணியசுவாமி என்ற ரணபலி முருகய்யா எனவும் குறிப்பிடுகிறது.
குருக்களையே கிரையத்திற்கு வாங்கி, நித்ய பூஜை செய்வதற்காக அவர்களுக்கு நிலங்கள் கொடுத்து, கொல்லர், தச்சர் போன்றவர்களுக்கும் நிலங்களை கொடுத்து, நிர்வாகம், கணக்கு, முத்திரைக் கணக்கு, தான கணக்கு சரி பார்த்து கோயில் கைங்கரியம் தொடர்ந்து நடந்து வர வேண்டும் என்பதை அந்த சாசனங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்றும் கைங்கரியம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கிய கிழக்கு நோக்கிய ஆலயம். கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு குதிரை சிலைகளைக் காணலாம்.
ஒரு குதிரையில், பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்களும், அதற்கு எதிரேயுள்ள இன்னொரு குதிரையில் பத்ரகாளி அம்மன் திருவுருவமும் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான காட்சி. காலசந்தி மற்றும் சாரட்சை பூஜையின்போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்கு செய்யப்படுகிறது.
ஜெயங்கொண்ட விநாயகரை தரிசித்துவிட்டு பலிபீடம், கொடிமரம், மயில் வாகனம், அர்த்தமண்டபம் கடந்தால் கருவறை. உள்ளே வள்ளி-தேவசேனா சமேதராக ரணபலி முருகன் என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை பொங்கும் முகத்துடன் காட்சி தருகிறார். திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இவரை வழிபட்டாலே கிடைக்கிறதாம்.
பிரகாரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி, சண்முக சக்கரம், நாகரை தரிசிக்கலாம். கோயிலுக்கு வடக்கே தளவா வயிரவர் சேர்வைக்காரரின் சமாதி கோயில் உள்ளது. அங்கு சுப்பிரமணிய யந்திரமும், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.
உற்சவர்களாக விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் அருள்கிறார்கள். இவர்களையும், முருகன் உருவம் பொறித்த அதிசய வேலையும் பிரம்மோற்சவ நாட்களிலும், சூரசம்ஹாரத்தன்றுமே பக்தர்களால் தரிசிக்கமுடியும். மற்ற நாட்களில், பாதுகாப்பாக வேறு இடத்தில் இருக்கும் சத்ரு சம்ஹார வேலை சிறப்பு அனுமதியின் பேரில் ஆலயத்திற்குக் கொண்டு வந்து, அதற்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்வதும் உண்டு. சத்ரு சம்ஹார வேலை வழிபடுவோருக்கு எதிரிகள் தொல்லை விலகி, சகல பேறுகளும் கிட்டும் என்பது நம்பிக்கை.
வெளி பிராகாரத்தில், யாகசாலையின் மேல் பகுதியில் கோயில் தலபுராணமும், கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.
தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இவ்வாலயத்தில் முருகனுக்குரிய முக்கிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மாசியில் நடைபெறும் பிரம்மோற்சவமும், கந்த சஷ்டி விழாவும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
பதினொரு நாள் நடைபெறும் மாசிமாத பிரம்மோற்சவத்தில் 7ம் நாள் திருச்செந்தூரைப் போல் சண்முகர் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மூன்று காலங்களில் எழுந்தருள்வார். இது இறைவனின் ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய செயல்களைக் குறிக்கும். 10ம் நாள் தேரோட்டமும், 11ம் நாள் ஆலய தீர்த்தமான சரவண பொய்கையில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
ஏழுநாள் உற்சவமாகக் கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழாபவில் 6ம் நாள் பிரசித்தி பெற்ற சூரசம்ஹாரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். அப்போது, கடலில் கண்டெடுக்கப்பட்ட அரிய சத்ரு சம்ஹார வேலைக் கொண்டு சூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் அற்புதக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைவார்கள்.

SOURCE:::: – மு. வெங்கடேசன்  IN  www.dinamalar.com  ….Kumudam Bhakthi

Natarajan

Happy Birthday ‘ People’s President ‘… DR. Abdul Kalam Turns 83 Today !!!

APJ Abdul Kalam turns 82 today

Indians, let’s wish ‘happy birthday’ to one of the most popular Rashtrapati the country every had – Dr APJ Abdul Kalam ! Kalam, also known as ‘missile man of India’, is celebrating his 83rd birthday today. He assumed the office as India’s 11th president in 2002. During his tenure, he made the highest office in India accessible to the common man in the country and was affectionately called ‘people’s president’. Kalam was a gentle, amiable, approachable president, known for his simplicity. Before his term as the country’s Rashtapati, Kalam worked as an aerospace engineer with Defence Research and Development Organisation (DRDO) and Indian Space Research Organisation (ISRO). Kalam was born into a family of Tamil Muslims in Rameswaram, a small temple town located in the southern most edge of India in 1931. A brilliant student, Kalam graduated from Madras Institute of Technology and joined DRDO and later, ISRO. “After observing my teacher teaching me how birds fly…I aimed something to fly…Then I pursued my studies in Physics and aerospace,” he said recently at an event attended by students. There are many missions to the credit of this ‘missile man’. Kalam is well-known for his work on the development of ballistic missile and launch vehicle technology and he played a pivotal role in India’s Pokhran-II nuclear tests in 1998, the first since the original nuclear test by India in 1974. Kalam was the project director of India’s first indigenous Satellite Launch Vehicle (SLV-III) which successfully deployed the Rohini satellite in earth’s orbit in July 1980. In a poll conducted by news channel CNN-IBN, he was selected as India’s Best President. The country has conferred on him the prestigious Bharat Ratna, Padma Vibhushan and Padma Bhushan. During his term as Rashtrapati, Kalam visited universities and schools across the country, interacted with children. No wonder, his 79th birthday was recognised as World Student’s Day by United Nations. Kalam has also received honorary doctoral degrees from 36 unversities and institutions worldwide. Kalam has penned a number of books including ‘The Wings of Fire’, his autobiography, which has been translated and published in 13 languages so far. His books are largely popular among the student community in the country. “For the last one decade when I became President and after it, I had one dream and that was when can I in my lifetime see smile on a billion faces,” he recently told a boy who asked him what kept him motivated all the time. More power to this great visionary !

SOURCE::::news.oneindia.in

Natarajan

Read more at: http://news.oneindia.in/india/happy-birthday-people-s-president-apj-abdul-kalam-tur-1540924.html

10 Clean Cities That Make India Proud !!!

Chandigarh has emerged as the cleanest city in India as per a study conducted by the ministry of urban development.

 

Dancers perform during the Republic Day celebrations in the northern Indian city of Chandigarh January 26, 2011. India celebrated its 62nd Republic Day on Wednesday.Ajay Verma/Reuters

Prime Minister Narendra Modi’s nationwide ‘Clean India campaign’ or Swachh Bharat Abhiyan is very well received by the masses and celebrities alike.

Be it celebrities like actor Aamir Khan, BSF Jawans or the aam junta – most have joined hands to make this mission a success by 2019. However, according to data available with the Ministry of Urban Development, there are ten cities which are very clean and these are:

Chandigarh

State: Chandigarh

The city has emerged as the cleanest city in India as per a study conducted by the ministry of urban development.

In order to keep its ranking and reputation as the greenest and cleanest city in India, the administration of Chandigarh along with The Energy and Resources Institute to working towards environment-friendly including use of natural construction material and lower energy consumption.

Chandigarh is also on the way to become the country’s first solar city by 2016.


Image: Temple tank in Shravanabelagola. Photograph: Courtesy, Dinesh Kannambadi/Wikimedia Commons

Mysore

State:Karnataka

In 2008, a citizen group in Mysore started a movement called Let’s do it! campaign to clean up not only the city but the entire country.

The response to this campaign has been huge. The youth in the city are spreading awareness on what each one of them can do individually and collectively to keep Mysore clean.


Image: Vehicles move over a bridge built over the river Tapi at Surat, in Gujarat. Photographs: Amit Dave/Reuters

Surat

State: Gujarat

The diamond city of Gujarat follows high standard of cleanliness at public places. The civic authority in the city is very strict about cleanliness on roads and public places.


Image: Prime Minister Narendra Modi launching the cleanliness drive for Swacch Bharat Mission from Valmiki Basti, in New Delhi. Photograph: PIB photos

New Delhi Municipal Council (NDMC)

State: Delhi

NDMC has intensified its cleaning operations after the launch of Swach Bharat campaign. Volunteers have even identified highly populated belts where they can spread their cleanliness drive.

NMDC is also keen to clean the backlanes of crowded colonies.



Image: Sports enthusiasts exercising on a clean road in New Delhi. Photograph: Reuters

Delhi Cantt

State: Delhi

Delhi is also considered a clean city due to the presence of various citizen forums that are actively involved in various cleanliness drives across the city.


Image: Mukkombu, a famous tourist spot in Tiruchirappalli. Photograph: Courtesy, Tiruchirappalli Tourism

Tiruchirappalli

State: Tamil Nadu

Tiruchirappalli is a city with amazing tourist spots. The citizens surely know how to keep their city clean. Tourists who have visited the city will tell you about clean habits that each one in the city follows.


 

Image:XLRI, Jamshedpur. Photograph: Rediff archives

Jamshedpur

State: Jharkhand

Jamshedpur adheres to a high standard on sanitation and cleanliness.

The steel city is totally sanitised and citizens here believe that healthy living is utmost important and for this purpose they must adapt to cleaner habits.


Image: Mangalore Town Hall. Photograph: Courtesy, Premkudva/Wikimedia Commons

Mangalore

State: Karnataka

In Mangalore, the popular Nirmala Nagara Yojana is a very effective scheme to implement cleanliness in the city.

Volunteers of this scheme arranges for collection of garbage in a segregated manner from every household, the garbage so collected is later classified into different categories which can be used as a landfill material or used for making compost.


Image: Bandstand, Rajkot. Photograph: Courtesy, Jadia Gaurand/Wikimedia Commons.

Rajkot

State: Gujarat

Rajkot is the fastest growing city in the country. The city’s civic body, resident forums are actively involved in keeping the city clean.


Kanpur

State: Uttar Pradesh

Kanpur is the biggest city in Uttar Pradesh with high industrial growth rate.

The city was not so clean few year ago, but currently, the city had made it to the list of clean cities in the country.

The credit for maintaining cleanliness goes to the local authorities and citizens who follow strict civic rules.

SOURCE:::: Rediff.com

Natarajan

பொற்காலத்தின் பொம்மைகள்….

பால பருவத்தில் நவராத்திரி என்றாலே விசேஷம்தான். ஒன்பது நாள் விடுமுறைக் கொண்டாட்டமாயிற்றே! நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று விதவிதமாகக் கொலு அமைக்க வேலை பார்ப்பேன். மணல், மண் கலந்து பரப்பிக் கடுகு தூவி தண்ணீர் தெளித்தால் புல் புல்லாகச் செடிகள் துளிர் விடும். அந்தத் தோட்டத்தில் பினாகா பற்பசையுடன் இலவச இணைப்பாகக் கிடைக்கும் குரங்கு, புலி, கரடி, மான் பொம்மைகள் மற்றும் ரப்பர் பாம்பு, பூரான், தேள், பல்லி எல்லாம் சேர்ந்து வரிசையாக நடப்பட்ட தீக்குச்சி வேலிக்குள் அட்டகாசமான ‘ஆஃப்ரிக்கன் சஃபாரி’யாகச் சுதந்திரமாக உலா வரும். இந்த இயற்கைத் தோட்டத்திலேயே இன்னொரு தீக்குச்சி வேலி அடைப்புக்குள் மரச் சறுக்கு மரம், சீசாப் பலகை, ஊஞ்சல் ஆகியவை நிறைந்த விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவார்கள்.

பளபள கோயில்

சரிவாக மண்மேடு அமைத்து உச்சியில் அருகருகே இரு குன்றுகளை உருவாக்கி அதன் ஒரு பக்கம் ஓடைக்கான குழிவுப் பாதை. உயரத்தில் திரைமறைவில் தகர வாளியிலிருந்து ரப்பர் குழாய் வழியாக ஓடையில் சலசலவென்று நீர். அதற்கு அருகிலேயே மலைப் பாதை. மனித பொம்மைகள் மேலேறும். உச்சிக் குன்றுகளுக்கு இடையில் காவிப் பட்டையும் வெள்ளைப் பட்டையும் அடிக்கப்பட்ட மதிலுடன் கூடிய பளபள கோயில்.

அடுத்த நாள் மாப்பிள்ளை காரைத் தூக்கிவிட்டு அங்கே பல்லக்கை வைத்து விட்டால் சுவாமி திருவீதி உலா. அதற்கும் அடுத்த நாள் பல்லக்குக்குப் பதிலாக வடம் பிடித்து இழுக்கும் மனிதர்களுடன் தேரை வைத்தால் தேர்த் திருவிழா. கலைடாஸ்கோப் காட்சிபோல் இந்த பொம்மைக் குழு தினம் தினம் உருமாறும்.

செட்டியார் பொம்மையும் செந்தேளும்

சின்ன வயதில் வறுமை. அதனால் வீட்டில் கொலு இல்லை. ஒவ்வொரு நவராத்திரியின் போதும் ஊரிலிருந்து பெரியம்மா பெண், சித்தி பெண் என்று யாராவது ஒரு டிக்கெட் ஆஜராகும். மாலையானவுடன் அந்த ‘அக்கா’வைச் சீவிச் சிங்காரித்து ‘போய் வெத்தலை பாக்கு வாங்கிட்டு வா…’ என்று அனுப்புவார்கள். துணைக்கு, சாணளவு ஆண்களான நான், சித்தி பையன் ராஜூ, அத்தை பையன் சத்யா.

தெருவில் காலை வைக்கும்முன் எங்கள் கைகளில் ஆளுக்கொரு மஞ்சப்பை தொங்க விடப்படும். புதுத்தெரு, நடுத்தெரு, கடலங்குடி தெரு என்று ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு வீடாகச் சென்று, அப்போது பிரபலமான ‘புன்னகை மன்னன் பூ விழிக் கண்ணன் ருக்மணிக்காக’ கொலுப் பாட்டைத் தேய் தேய் என்று தேய்த்துக் காகிதச் சுண்டல் பொட்டலங்களை மஞ்சப்பைகளில் சேகரித்து வருவோம்.

ஒரு நவராத்திரியின்போது மூன்று வயதுப் பெண் குழந்தை ஒன்றை அவ்வாறு மணையில் உட்கார வைத்து இந்தச் சடங்குகளையெல்லாம் செய்தார்கள். அதற்குச் சடங்குகளில் எல்லாம் பிரியம் இல்லை. கொலுவில் வைத்திருந்த செட்டியார் பொம்மை மீதே கண்ணாக இருந்தது. “மாமி இந்தப் பொம்மையை நானே வச்சிக்கவா?” என்று கேட்டுக்கொண்டே பொம்மையைக் கையில் எடுத்துவிட்டது. அந்த செட்டியார் பொம்மையின் அடிப்பாகத்தில் ஒற்றை ரூபாய் நாணயம் அளவுக்கு ஓட்டை. குழந்தை பொம்மையைக் கையில் எடுத்தவுடன் ஓட்டையிலிருந்து ஒரு ஜீவராசி தலை நீட்டியது. தொப்பென்று கீழே குதித்தது.

கொடுக்கை உயரத் தூக்கியபடி விரல் நீளத்துக்கு ஒரு செந்தேள். முன்னே பின்னே அந்தக் குழந்தை தேளைப் பார்த்ததில்லையாதலால், அதற்கு அந்தத் தேள் ஒரு காட்சிப் பொருளாகத் தோன்றியது. என்னவோ விளையாட்டுப் பொம்மை என்று தனது சின்ன உள்ளங்கையை அதன் மேல் வைக்கப் போக, சுற்றி நின்று பார்த்துப் பதைத்துக்கொண்டிருந்தவர்களெல்லாம் ‘ஐயோ’ என்று அலற, தேளோ பரபரவென்று அங்கே இருந்த சரஸ்வதி பொம்மையைச் சுற்றிவிட்டு வாசலைத் தாண்டி தெருவில் இறங்கி ஓடி மறைந்தது.

“மஹா பெரியவா சொன்னார்ங்கறதுக்காக நாங்க இந்த மாதிரி செய்ய ஆரம்பிச்சோம். இப்பவும் அவர்தான் கொழந்தையையும் தேளையும் காப்பாத்தியிருக்கார்…” என்று அந்த வீட்டு மாமி குரல் தழுதழுக்கக் கூறிவிட்டுக் குழந்தையை வாரி அணைத்துக்கொண்ட காட்சியை மறக்க முடியுமா?

துக்கத்தை மாற்றிய கொலு

ஒவ்வொரு கொலுவுக்கும் அய்யம்பேட்டையில் ஒரு ஜமீன்தார் வீட்டின் கிரிக்கெட் மைதானம் போன்ற முன் கூடத்தில் படிகள் அமைத்து முழுக்க பொம்மைகளாக அடுக்கி வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். கொலுவை வேடிக்கை பார்க்க வீட்டின் உள்ளே நுழைவதற்கு எங்களுக்குத் தைரியம் பத்தாது. அதனால் திண்ணையில் இருக்கும் ஜன்னல் வழியாகப் பத்துப் பதினைந்து பேர் முட்டி, மோதிக்கொண்டு வேடிக்கை பார்ப்போம். அங்கே நின்று வேடிக்கை பார்க்கும் ஐந்து, பத்து நிமிடங்களும் சொர்க்கம்!

அப்படி எதிர்பார்த்துதான் அந்த வருஷமும் திண்ணை ஏறினோம். ஜன்னல் வழியே தெரிந்த கூடம் வெறிச்சோடி இருந்தது. ஏமாற்றமென்றால் ஏமாற்றம் ஜமீன்தார் வெளியே வந்தார்.

“வளர்ந்த பையனைப் பறிகொடுத்துட்டு பரிதவிக்கிற வீட்ல கொலுவாவது இன்னொண்ணாவது. போங்கடா.. போங்க’’ என்று எங்களைப் பார்த்து தொண்டை அடைக்கக் கூறினார். எங்களில் ஒரு பையன் தைரியமாக அவர் முன்னால் சென்றான். “உங்க பையன் சாமிகிட்டத்தானே போயிருக்கான்? சாமி பொம்மைக்குப் பக்கத்திலேயே உங்க பையனோட பொம்மையையும் வெச்சுக் கொலு வைக்கலாம் இல்ல..?” என்று துடுக்குத்தனமாகக் கேட்டான். ஜமீன்தார் அவனை ஆழமாகப் பார்த்தார். சில விநாடிகள் தர்மசங்கடமான மவுனம். பின் அவரே மவுனத்தை உடைத்து, “அப்படியாடா… அப்ப நீங்க எல்லாம் நாளைக்கு வாங்க. தவறாம வரணும், என்ன?” என்றார்.

மறுநாள் ஜமீன்தார் வாசலிலேயே நின்றிருந்தார். எங்களைக் கைப்பிடித்து உள்ளே கூட்டிச் சென்றார். கூடத்தில் அமர்க்களமாகக் கொலு பொம்மைகள். கலர் கலராக சீரியல் பல்புகள் மின்னி மின்னி ஒளிர்ந்தன. அமர்க்களமான கொலு. படிகளின் நட்ட நடுவே, சாமி பொம்மைகளுக்கு இடையில் எங்கள் வயதொத்த ஒரு சிறுவனின் புகைப்படம் வைக்கப்பட்டு அதற்கு பொட்டு, மாலை அலங்காரம். எங்கள் எல்லோருக்கும் அன்றிரவு வயிறாரச் சாப்பாடு. அப்போது குஷியாக இருந்தது. இப்போது நெகிழ்வாக இருக்கிறது. மறக்க முடியுமா?

-சுபா, எழுத்தாளர், தொடர்புக்கு: dsuresh.subha@gmail.com

கல கல என்று கலக்கும் பொம்மை கொலு… நவராத்திரி திருவிழா !!!

ஆன்மிக அர்த்தங்களுக்குள் நுழைந்து அதன் ஆதாரங்களைத் தேடாமல், புராணக் கதைகளுடன் அதை முடிச்சுப் போடாமல், வெறும் பொம்மை விளையாட்டாகவே கற்பித்துக் கொண்டாலும் கூடப் பரவாயில்லை.

நவராத்திரி ஓர் உன்னதமான திருவிழா தான்.

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புதத் தருணம்தான் இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அது மிகையாகாது.

பொம்மைகள் குழந்தைகளுக்கு மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்பதில்லை. பெரியவர்களுக்கும் பிடிக்கும். பிடித்துத்தான் தீர வேண்டும்.

ஆதி சங்கரரின் அன்புக்கு இலக்காகிய ஸ்ரீ மூகாம்பிகையும், ஸ்ரீ ராமானுஜரின் பாசத்திற்கு வசப்பட்ட ராமப்ரியனாகிய மேல்கோட்டை சம்பத்குமாரனும், சத்குரு ஸ்ரீ ராகவேந்திரரை வசப்படுத்திய ஸ்ரீ மூலராமரும், ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை இன்றும் கூட சூடிக்களிக்கின்ற ஸ்ரீ வேங்கடாசலபதியும், நாயன்மார்களும் இன்னும் பலரும் பாடிப்பரவிய தில்லை நடராஜரும் கூட அர்ர்ச்சாவதார மூர்த்திகளாய் விளங்கும் ஆன்மிக பொம்மைகள்தாம்.

இன்று திருமலையில் மட்டுமின்றி, தேசம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகின்ற ஸ்ரீ ஸ்ரீநிவார் திருக்கல்யாணமும் கூட பக்தர்களின் மனம் கவரும் ஓர் உயர்தர ஆன்மீக பொம்மை விளையாட்டுத்தான்.

திருக்கோயில்களில் பிரம்மோத்வ காலங்களில் பல்வேறு பெரிய பொம்மைகளாகிய வாகனங்களிலும், பல்லக்குகளிலும், சிவிகைகளிலும், தேர்களிலும் தெய்வங்களின்  பஞ்சலோக உருவத்தை அமர்த்தி, அலங்கரித்து, வீதிவலம் செய்வித்து, அத்திருக்காட்சியை பக்தர்கள் வணங்கிப் பரவசம் அடைவதும் கூட ஓர் உன்னதமான பொம்மை விளையாட்டுத்தான்.

குழந்தைகள் சிறுவயதில் விளையாடும் பொம்மை விளையாட்டுதான், பெரியவர்களான பின்பு, திருக்கோயில்களில் வருடம் முழுவதும் திருவிழாக்களாகவும், வீடுகளில் வருடத்தில் ஒன்பது நாள் நவராத்திரி பொம்மைக்கொலுவாகவும் பரிணமித்திருக்கிறது என்று நம்புவதற்கு எல்லா நியாயமும் இருக்கின்றது.

பொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளைப் பொறுத்தவரையில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக்காட்டிலும் நீண்ட நாட்கள் கொண்டாடப் படுவதும், அந்தக்கொண்டாட்டத்திற்கென  அதிகமான முன் தயாரிப்புகள் செய்யப்படுவதும் இந்த நவராத்திரிக்கு மட்டும்தான்.

kolu_2பொம்மைக் கொலு வைப்பதற்குச் சில நாட்கள் முன்பாகவே வீடுகளின் மூலை முடுக்களிலெல்லாம் ஒட்டடை அடிக்கப்படுவதும்,  பரணிலிருக்கும்  பெட்டிகளிலிருந்து பொம்மைகள் வெளியே எடுத்துத் துடைத்துச் சுத்தம் செய்யப்படுவதும், கொலுப்படிகள் நிறுவுவதற்கான திட்டமிடுதலும் ஏற்பாடுகளும் நடைபெறுவதும், வண்ணக் காகிதங்களால் தோரணங்கள் அமைத்து வீடு முழுவதும் அலங்கரிக்கப் படுவதும், வசதியிருந்தால் மின்விளக்குகள் கொண்டு அலங்கரிப்பதும் என, பொம்மைக்கொலு வைப்பது ஒரு திருமணத்துக்கு நிகரான உற்சாகச் செயல்பாடல்லவா
வீட்டின் ஆகப்பெரிய வயதான உறுப்பினர்கள் அறிவுறை கூற, அடுத்தநிலை பெரியவர்கள் ஆலோசனை வழங்க, இளைய தலைமுறையினர் அதை நிறைவேற்றப் பாடுபடுவதுமாக, முன்னேற்பாடுகள் பரபரக்கும். விழா தொடங்கிய  பின்பு, அந்த ஒன்பது நாட்களும், உறவினர்களும், தெரிந்தவர்களும் சாரி சாரியாய் வந்து நம் வீட்டுக் கொலுவைப் பார்த்துவிட்டுப் பாராட்டுவதும், கொலு இன்னும் சிறப்பாக மிளிர்ந்திட ஆலோசனைகள் பலவும் சொல்வதுமாக, ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக நகரும்.

வித்தியாசமான கருத்தோட்டங்களைப் பிரதிபலிக்கும் புதிய பொம்மைகளை விலை கொடுத்து வாங்கிக் கொலுவில் வைப்பதும், வருபவர்களுக்கு அதைப் பற்றி விளக்குவதும் கூட ஓர் அற்புத அனுபவம்தான்.

கொலுவைப்பார்க்க வரும் வரும் குழந்தைகள் தங்களது விழிகள் விரிய வியப்பதும், அவர்களில் சிலர், பொம்மைகளைக் கையில் எடுத்துப்பார்க்கத் துடிப்பதும், பெரியவர்கள் அவர்களைத் தடுத்துச் சமாதானம் செய்வதும் பொம்மைக்கொலு வைத்துள்ள வீட்டில் அன்றாடம் அரங்கேறும் அழகிய காவியமாகும். கொலுவுடன் இசையும் சேருமானால் அவ்விடம் கந்தர்வலோகம் ஆகிவிடும்.

அவரவர் வசதிக்கேற்ப, கொலுவைக் காண வருபவர்களுக்குத் தாம்பூலத்துடன் ஏதாவது சிறு பரிசுப்பொருளை வழங்குவதும், குழந்தைகளுக்கு சுண்டல் அல்லது இனிப்புகளை வழங்கி அவர்களை முகம் மலர வைப்பதும், திருமணங்களைத் தவிர்த்து, நவராத்திரி நாட்களில்  மட்டுமே சாத்தியம்.

இதையெல்லாம் விடுங்கள்.

பொம்மைக் கொலுவுக்கென பரணிலிருந்து இறக்கிவைக்கப்படும் பொம்மைகளைப் பார்க்கும் போதே, பள்ளி விட்டவுடன் வீடு திரும்ப ஆவலாகக் குதித்தோடத் தயாராகும் குழந்தைகளைப் பார்ப்பது போல் இருக்கும்.

இது மட்டுமா.
நவராத்திரி முடிந்தவுடன் பழையபடி பொம்மைகளைப் பரணில் ஏற்றும் போது, நெருங்கிய உறவினர்களை வழியனுப்ப இரயிலடியில் நிற்பது போன்ற ஓர் உணர்வு நமக்குள் பீறிடுவதைத் தவிர்க்கவே முடியாது.

அடுத்த நவராத்திரி எப்போது வரும் என்று அந்த பொம்மைகள் நம்மைக் கேட்பது போலவே இருக்கும். ஆம்.பொம்மைகள் நம்முடன் பேசும். நம்பினால் நம்புங்கள். நமக்கும் அவற்றுடன் பேசவேண்டும் போல் இருக்கும். இதுதான் நவராத்திரி பொம்மைக்கொலுவின் சிறப்பு.

kolu_4நம்மில் பலரது வீடுகளில் பொம்மைக்கொலு வைப்பதில்லை. வழக்கமில்லை, வசதியில்லை, இடமில்லை, நேரமில்லை. இப்படிப் பல காரணங்கள்.

காரணம் எதுவாக இருந்தாலும் சரி
கொஞ்சமே கொஞ்சம் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். பொம்மை கொலு வைக்கப் பழகுங்கள். உங்கள் மனசு மகிழ்ச்சியால் நிறையும். உங்களின் உறவு வட்டம் பெரிதாகும். பொம்மைகள் உங்களின் விருந்தினர்கள் ஆகும். உங்களுக்குள்ளிருக்கும் கலையார்வம் மறுபிறவி எடுக்கும். நீங்களும் குழந்தைகளாவீர்கள்.

கொலு வைக்க வசதியோ, வாய்ப்போ இல்லாதவர்கள் நிச்சயம் ஒவ்வொரு நவராத்திரி பண்டிகை அன்றும், ஒவ்வொரு இடங்களில் வைக்கப்படும் கொலுவுக்குச் சென்று பார்த்து ரசிக்கலாம். நிச்சயமாக முக்கியக் கோயில்களில் கொலு வைக்கப்பட்டிருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டியது.

 

SOURCE:::Vanisri Sivakumar in dinamani.com

Natarajan

ஆட்சியாளர்கள் …. காமராஜர் மட்டும் ஒரு விதிவிலக்கு …

ஆட்சியாளர்கள் எப்போதுமே அப்படித்தான்!

அ.கா. பெருமாள்  in The Hindu …Tamil

காமராஜர் போன்ற வெகு சில ஆட்சியாளர்களை மட்டுமே மக்கள் எளிதில் சந்திக்க முடிந்தது.

தெக்கன் திருவிதாங்கூர் என்னும் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த புதிது. காமராஜர்தான் அப்போது தமிழக முதலமைச்சர். புதிய மாவட்டத்தின் மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகள் கேட்டார். காமராஜரை யார் வேண்டுமானாலும் நேரடியாகச் சந்திக்கலாம் என்ற செய்திகூட நாளிதழில் வந்தது. திருவிதாங்கூர் அரசருக்குக் கீழே பணியாற்றிய அதிகாரிகளுக்கு இது புதிய அனுபவம்.

காமராஜர் கரடுமுரடான சாலைகளில் செல்லத் தோதான வருவாய்த் துறை ஜீப்பில் வந்தார். முக்கிய சாலையில் ஜீப்பை நிறுத்திவிட்டு நடந்துவந்த சமயம்தான் எங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடத்தைப் பார்த்தார். 19-ம் நூற்றாண்டுக் கட்டிடம். ஆசிரியர்கள் முன்னே நிற்க, மாணவர்கள் கூடி நின்றோம். திட்டமிடப்படாத வரவேற்பு. யாரும் தடுக்கவில்லை. போலீஸ் கெடுபிடி இல்லை.

எங்களைப் பார்த்ததும் முதலமைச்சர் நின்றார். அவருடன் மிகக் குறைவான போலீஸார்; இரண்டோ மூன்றோ அதிகாரிகள்; அமைச்சர் கக்கனும் மாவட்ட ஆட்சியர் அம்பா சங்கரும் இருந்தனர். யாரும் யாரையும் விலக்கவில்லை. போலீஸ் அதிகாரிகூட அவருக்குப் பாதுகாப்பாக முன்னே வரவில்லை. மூத்த ஆசிரியர் கதர் நூல் மாலையைக் காமராஜர் கழுத்தில் போட்டார். அவர் அதற்கு வாகாகத் தலையைத் தாழ்த்திக்கொடுத்தார். ஆஜானு பாகுவான உருவம்; முழங்கால் வரை எட்டும் தொளதொள சட்டை; சாதாரண செருப்பு; பாதங்கள் தெரியும்படி கட்டப்பட்ட வேட்டி.

நல்லாப் படிக்கணும்

காமராஜர் எங்கள் அருகில் வந்தார். சுற்றிலும் பார்த்தார். நாங்கள் இரண்டு கைகளைக் கூப்பியபடி நின்றோம். கூட்டத்தில் கிழிந்த சட்டையுடன் கூடிய மாணவர்கள் நாலைந்து பேர் இருந்தனர். காமராஜர் ஒருவன் தலையைத் தடவிவிட்டார். “என்ன படிக்கிறே” என்றார். அவன் “மூணாப்பு” என்றான்.

எங்களைப் பார்த்துப் பொதுவாகச் சொன்னார்: “நல்லாப் படிக்கணும்; அப்பா, அம்மா சொன்னா கேக்கணும்; நல்ல பேரு வாங்கணும்; உழைச்சு முன்னுக்கு வரணும்.” ஒரு ஆசிரியர், காமராஜர் முன்னே தயங்கித் தயங்கி வந்து நின்றார். “என்ன விஷயம்?” என்று காமராஜர் கேட்டார். “இப்போ 30 குழந்தைகளுக்கு உச்ச நேரம் (நண்பகல்) கஞ்சி ஊத்துறோம். அது பத்தல்ல. 50 பேருக்குக் கஞ்சி ஊத்த திருமனசு தயவு பண்ணணும்” என்றார். பழக்கதோஷம்; ஆசிரியர் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியிலும் இருந்தவர்; திவான் பேஷ்காரிடம் விண்ணப்பம் செய்யும் பாணியில் பேசினார். காம ராஜருக்கு அவரது பேச்சு முழுவதும் புரியவில்லை. என்றாலும் ஆசிரியருடன் பேசினார்; பக்கத்தில் நின்ற அதிகாரிகளுடன் பேசினார்.

இந்த நிகழ்ச்சி நடந்து 30 ஆண்டுகள் கழிந்து வகுப்பில் என் மாணவர்களிடம் அதைப் பற்றிச் சொன்னேன். மாணவர்கள் நம்பவில்லை; மாணவிகள் நமட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள். ஒரு மாணவி “கேட்க நல்லா இருக்கு சார். உண்மையா நடந்ததா?” என்று கேட்டாள். இதுபோன்ற செய்திகள் இன்றைய தலைமுறையினருக்குக் கற்பனைதான்!

ராமாயண காலம்

எல்லாக் காலத்திலும் ஆட்சியாளர்கள் எப்படி இருந்தார்கள். குடிமக்கள் நெருங்கும்படியான சூழ்நிலையில் இருந்தார்களா? இதற்கெல்லாம் சரியான பதிவுகள் இல்லை. ராமாயண ராமனைக் குடிமக்கள் காண அதிகாரிகள் தடையாய் இருந் தார்கள் என்று ஒரு நாட்டார் கதை உண்டு. இந்தக் கதை, பார்வதிக்குப் பரமசிவன் சொல்வது மாதிரி அமைந்தது.

பரமசிவன் சொன்ன கதை

“ராமன், ராவணாதிகளை ஒழித்துவிட்டான்; பட்டாபிஷேகம் நடந்துவிட்டது. இப்போது எப்படி இருக்கிறான்?” என்று பரமசிவனிடம் கேட்டார் பார்வதி. பரமசிவன் கண்களை மூடிக்கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துப் பேசினார். “ராமன் ராமனாக இருக்கிறான். அதிகாரிகள்தான் அவனிடம் குடிமக்களை நெருங்கவிடாமல் தடுக்கிறார்கள். லட்சுமணன் இதைக் கண்டும் காணாமல் இருக்கிறான்” என்று சொல்லிவிட்டு, அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியையும் கூறினார்.

அவரைப் போய்ப் பாரு!

ஒரு சம்சாரி தனது விளைச்சல் நிலத்தில் மேய்ந்த மாட்டை விரட்டினார். அது அந்த வழியாக வந்த வயதான பெண்ணின் மேல் போய் மோத, அவளுக்குக் காயம் ஏற்பட்டது. இதற்காக அரசனிடம் முறையிடப் போனாள். “ராமனை நேரில் சந்திக்க முடியாது, லட்சுமணனிடம் சொல்லு” என்றான் ஒரு காவலன். அவள் லட்சுமணனைக் கண்டு நியாயம் கேட்டாள். லட்சுமணன் “பரந்த சாம்ராஜ்யத்தை ஆட்சிசெய்பவன் இதைக் கவனிக்க முடியுமா? உன் ஊர்த் தலைவனிடம் போய்ச் சொல்” என்றான்.

வசிட்டர் சொன்ன கதை

இந்த நிகழ்ச்சியை வசிட்டர் அறிந்தார். லட்சுமணனை அழைத்தார். அவனது மூதாதையரான ரூபகன் என்ற அரசனின் கதையைச் சொன்னார். ரூபகன் நீதி தவறாமல் ஆட்சி செய்தான். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது: நண்பர்கள் புடைசூழ எப்போதும் சூது விளையாடுவான். அதனால், குடிமக்களைச் சந்திப்பதைத் தவிர்த்தான். ஒருமுறை ரூபகன் தன் தந்தையின் திதியை நடத்தினான். அன்று அரண்மனைத் தொழுவத்திலிருந்து நல்ல கொழுத்த பசு ஒன்றைப் பிராமணர் ஒருவருக்குத் தானம் செய்தான்.

அந்தப் பசு அரசரின் தொழுவத்தில் பிறந்து வளர்ந்தது. அதற்கு வேறு இடம் பிடிக்கவில்லை. பிராமணர் வீட்டில் கயிற்றை அறுத்துக்கொண்டு அரண்மனைத் தொழுவத்துக்குச் வந்துவிட்டது. இதை அறியாத வேலைக்காரர்களும் பசுவைத் தொழுவத்தில் கட்டி வைத்தார்கள். யாரோ தன் பசுவைத் திருடிவிட்டார்கள் என்று நினைத்து, பிராமணர் அரசனிடம் முறையிடப் போனார்; முடிய வில்லை. அரசனின் தம்பியைச் சந்தித்துத் தன் பசு திருடுபோனதைச் சொன்னார். அவன், காவலரை அனுப்பிப் பசுவைத் தேடச் சொல்கிறேன் என்றான்.

சில நாட்கள் கழித்து ரூபகனின் அம்மாவின் திதி. ஏற்கெனவே தானம் கொடுக்கப்பட்டுத் திரும்பி வந்த பசு என்று தெரியாமல், அரண்மனைப் பசுவை அரசன் இன்னொரு பிராமணருக்குத் தானம் கொடுத்தான். பிராமணர் அதை வீட்டுக்குக் கொண்டுசெல்லும்போது ஏற்கெனவே பசுவை இழந்த பிராமணர் தற்செயலாக அங்கே வந்தார். பசு தன்னுடையது என்று கண்டுகொண்டார். புதிய பிராமணரைப் பிடித்து, “திருடனே! வா அரசனிடம்” என்றார். அவரோ “அரசனின் அம்மாவின் திதியில் இந்தப் பசு எனக்குத் தானமாகக் கிடைத்தது. என்னையா திருடன் எனப் பழித்தாய்! உன்னைச் சும்மா விட மாட்டேன்” என்றார்.

காத்திருந்து காத்திருந்து…

சண்டை பெரிதான பிறகு, அரசனை நாடிச் சென்றனர். அரசனைச் சந்திக்க வேண்டும் என்று காவலனிடம் சொன்னார்கள். காவலன் அவர்களைக் காத்திருக்கச் சொன்னான். அவர்கள் காத்திருந்தனர். வேறு சிலரும் அரசனைச் சந்திக்கக் காத்திருந்தனர். அரசன் வரவில்லை. அடுத்த நாளும் சென்றார்கள்; காத்திருந்தனர். இப்படியே பல நாட்கள். பிராமணர்கள் இருவரும் அலுத்துப்போனார்கள். அவர்கள் தங்களுக்குள் சமாதானம் ஆனார்கள். இரண்டாவதாக தானம் பெற்ற பிராமணரே பசுவை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தனர்.

பிராமணர்களின் கோபம் அரசன் பக்கம் திரும்பியது. அரண்மனையைப் பார்த்துப் பிராமணர் இருவரும் “ரூபகனே – குடிமக்களை அலைக்கழிக்கும் நீ அரசனே அல்ல; நீ ஓணானாகச் சிம்மாசனத்தில் அமர்வாய். இது எங்கள் சாபம்” என்றனர். அரசன் உடனே ஓணானாகிவிட்டான். இதை அறியாத காவலர்கள் சிம்மாசனத்திலிருந்து ஓணானை விரட்டிவிட்டார்கள்.

இப்படியாகக் கதைக்குள் கதை என்று சொல்லப்பட்ட இந்தக் கதைகள் சொல்லும் உண்மை இதுதான்: ஆட்சியாளர்கள் எப்போதும் ஒரே மாதிரிதான். இதில், காமராஜர் போன்றவர்கள் அரிதான விதிவிலக்கே!

– அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்,  


‘சடங்கில் கரைந்த கலைகள்’, ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

” ஸ்வாமிதான் உன்னைக் காப்பாத்தி இருக்கார் …” !!!

Post Options
“ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்….
உண்மைதான். ஆனால் “எந்த ஸ்வாமி”?.

Featured Image -- 11217

கார்வேட் நகரில் ஸ்ரீமடம் முகாம்.சென்னையிலிருந்து காரில் வந்த ஒரு குடும்பத்தினர் சாயங்காலமாகத் திரும்புவதற்கு முடிவு செய்திருந்தார்கள்.
எல்லாம் ரெடி. பெரியவாளிடம் உத்தரவு பெற்றுக் கொண்டால்,அடுத்த நிமிஷமே புறப்பட்டு விடலாம். பெரியவா ஒரு வில்வ மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள்.

சபேசன் குடும்பத்தினர் வந்தனம் செய்து பிரசாதத்துக்காக நின்றார்கள்.

அவர்களுக்குப் பிரசாதம் கொடுக்கப்பட்டது.

சபேசன் காரை நோக்கித் திரும்பினார்.

விரல்களால் ஒரு சொடுக்கல்.

சபேசன் திரும்பி வந்தார். ஆவலுடன்.

சற்று தூரத்தில் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது.

பெரியவாள் அதைக் காட்டி,

“இதில் கொஞ்சம் சாக்கில் கட்டி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போ” என்றார்கள்.

எல்லோருக்குமே திகைப்பு. கருங்கல் ஜல்லியை கார்வேட்

நகரிலிருந்து சென்னைக்கு எடுத்துக் கொண்டு போவானேன்?

அந்த ஜல்லியில் அப்படி என்ன சிறப்பு?.

பெரியவாளிடம் விளக்கம் கேட்க முடியாது. எனவே

உத்திரவுப்படி ஒரு சாக்கில் கொஞ்சம் ஜல்லியை மூட்டையாகக் கட்டி கார் டிக்கியில் வைத்துக்கொண்டு புறப்பட்டார் சபேசன்.

மலைப் பாறைகள் நிறைந்த புத்தூர் வழி.

இரவு.நாலைந்து நபர்கள் நடுச்சாலையில் நின்று காரை மறித்தார்கள்.கொள்ளைக்காரர்கள் என்பதில் சந்தேகமில்லை.

எல்லோரையும் காரிலிருந்து இறங்கிச் சொல்லி, உட்புறம் அலசிப் பார்த்தார்கள். ஒரு பெட்டி – பையைக் கூடக் காணோம்.

ஆத்திரத்துடன் டிக்கியை நெம்பித் திறந்து பார்த்தார்கள்.

மூட்டை!

“டேய், இங்கே இருக்குடா!…” கூவினான் ஒருவன்.

மூட்டையை எடுக்க முயன்றான் வேறொருவன்.முடியவில்லை. கனமாக இருந்தது. எல்லோருமாகச் சேர்ந்து மூட்டையைக் கீழே தள்ளிவிட்டு, “போ….போ…” என்று சபேசனை விரட்டினார்கள்.

சபேசன் படு வேகமாகக் காரை செலுத்திக் கொண்டு சென்று, ஒரு கிராமம் வந்ததும் காரை நிறுத்தி மூச்சு விட்டார்.

“பயந்தே போயிட்டேன்!..நகை எல்லாத்தையும் கழட்டுன்னு சொல்லுவாங்களோன்னு நடுங்கிப் போயிட்டேன்!” என்றாள் அவர் மனைவி.

“எல்லோரையும் கட்டிப் போடாமல் விட்டானே!” என்றான் பையன்.

“காரை நொறுக்காமல் விட்டானே!” என்றாள் மகள்.

சபேசன் கார்வேட் நகர் இருந்த திசை நோக்கிக் கும்பிட்டார்.

கனமான சாக்குப் பையில் நிறையப் பணம் இருக்கிறது என்று தப்புக் கணக்குப் போட்ட கொள்ளையர்கள்,

வேறு சாமானியப் பொருள் எதையும் விரும்பாமல் விட்டு விட்டார்கள் என்று அனுமானிக்க முடிந்தது.

இரண்டு நாள் சென்று அவர் மட்டும் தரிசனத்துக்கு வந்து, நடந்த நிகழ்ச்சியைப் பெரியவாளிடம் பரவசத்துடன் விண்ணப்பித்துக் கொண்டார்.

“ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்” என்றார்கள் பெரியவா.

உண்மைதான்.

ஆனால், “எந்த ஸ்வாமி?” என்று சபேசனுக்கு நன்றாக புரிந்திருந்தது. இனிமேல் ஜல்லியைப் பார்க்கிற போது, ‘ஒரு சல்லிக் காசு பெறாது’ என்று நினைக்க மாட்டார்!

Source:::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8006#ixzz3E0NCEVew

மகாத்மாவும் மதுரையும்! … செப்., 22- அரைமுடி ஆடைக்கு மகாத்மா மாறிய நாள்…

தமிழகத்தின் கலாசார தலைநகர் மதுரை என்றால் மிகையாகாது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரங்கள் இன்று அழிந்து விட்டாலும், அழியாத புகழ் கொண்டதாக மதுரை விளங்குகிறது. கீழ்திசை நாடுகளின் ‘ஏதென்ஸ் நகரம்’ என மதுரைக்கு பெயர் உண்டு.

இந்திய விடுதலை போராட்ட வரலாற்றுடனும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கையுடனும் பிரிக்க முடியாத தொடர்பை மதுரை கொண்டுள்ளது. 1915 ஜன., 9ல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது முதல் 1948 ஜன., 30 கோட்சேயால் சுடப்பட்டு, ரத்தம் சிந்தி இறந்தது வரை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக காந்திஜி பல முறை பயணித்திருக்கிறார். குஜராத்திற்கும், வங்காளத்திற்கும் கன்னியாகுமரிக்கும் ஏன் காஷ்மீரையும் தாண்டி ஆப்கன் எல்லையிலுள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களுக்கும் பல முறை அவர் பயணித்தது உண்டு. ஆனால் அவர் விரும்பி வந்து தங்கி வரலாறு படைத்து சென்ற நகரங்களுக்குள் மதுரை முக்கியமானது. முப்பது ஆண்டுகளில் ஐந்து முறை காந்திஜி மதுரை மண்ணில் காலடி வைத்துள்ளார்.


ஐம்பதாவது வயதில் முதல் முறையாக 1919ல் காந்திஜி மதுரைக்கு வந்தார். மார்ச் 26, 27, 28 தேதிகளில் வைகை வடகரையில் ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் அவர் தங்கினார். இக்கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது வேறு வடிவில் உள்ளது. ரவுலட் அடக்குமுறையை சட்டத்தை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி சத்தியாகிரகம் நடத்த முனைந்தார். ஜார்ஜ்ஜோசப் தலைமையில் தியாகி சங்கிலியாபிள்ளை உட்பட ஐந்து பேர் சத்தியாகிரகத்தில் இணைந்து போராடினர்.மகாத்மாவாக உயர்த்திய மண்1921 செப்., 20, 21, 22 தேதிகளில் காந்திஜி 2வது முறையாக வந்தது மதுரையை உலக வரைபடத்தில் சுட்டிக் காட்ட வைத்தது. மூன்று நாட்கள், மதுரை மேலமாசிவீதியில் ‘251 ஆ’ என்ற ராம்ஜி கல்யாண்ஜி இல்லத்தில் தங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தின் உச்சமாக கதர் மற்றும் சுதேசி இயக்கத்தை வலுப்படுத்திட, அன்னிய துணிகளை துாக்கி எறிந்து அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். ஏழைகளுடன் தம்மை முழுமையாக ஐக்கியப்படுத்தி கொள்ளும் வகையில் செப்., 22ல் மேலமாசி வீதியில் தன் குஜராத்தி ஆடைகளை களைந்து, அரைமுழ ஆடையினை உடுத்த துவங்கி ‘மகாத்மா’வாக மதுரை மண்ணில் உயர்ந்தார். குண்டடிபட்டு இறக்கும் வரை அவர் மேலாடை அணியவில்லை. இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்ற போதும், ஆறாம் ஜார்ஜ் மன்னரை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்த போதும், சர்வாதிகாரி முசோலினியை ரோம் நகர அரண்மனையில் சந்தித்த போதும் கூட காந்திஜி அரைமுழ ஆடையுடன் தான் சென்றார்.

 

சுதேசி இயக்கம், தீவிர கதர்துணி பிரசாரத்திற்காக 1927 செப்.,28, 29, 30ல் மதுரை வந்தார் காந்திஜி. இம்முறை அவர் சென்ற இடமெல்லாம் லட்சக்கணக்கில் மக்கள் கூடினர்.நான்காவது முறையாக 1934 ஜன., 25 முதல் 27 வரை மதுரை வந்த காந்திஜி என்.எம்.ஆர்.சுப்புராமன் இல்லத்தில் தங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாததை கண்டித்து ‘ஆலய பிரவேச இயக்கத்தை’ துவக்கி வைத்தார். வைத்தியநாதய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன் போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து, 1939 ஆக., 8ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் அனைத்து ஜாதியினருக்காக கோயில் திறந்து விடப்பட்டது. அதற்கு வித்திடுவதாக காந்திஜியின் 4வது வருகை அமைந்தது

ஐந்தாவது முறையாக காந்திஜி 1946 பிப்., 2, 3ல் மதுரை வந்து சிவகங்கை ராஜா அரண்மனையில் (தற்போது மீனாட்சி அரசு கல்லுாரி வரலாற்று துறை கட்டடம்) தங்கினார். தாழ்த்தப்பட்டோருக்காக திறந்து விடப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலை தரிசிப்பது அவரது பிரதான நோக்கமாக அமைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை வந்தது அவரது கடைசி பயணம்.மதுரைக்கு காந்திஜியின் ஒவ்வொரு வருகையும் முத்திரை பதிப்பதாக அமைந்தது என்னவோ உண்மை. அத்தனை முறையும் ரயிலில் தான் வந்தார். ஏதோ வந்தேன், சென்றேன் என்றில்லாமல், மக்களை ஆர்த்தெழச் செய்வதாக அவரது வருகை இருந்தது.

SOURCE::::Dinamalar.com

Natarajan