“ஆட்டோ ஓட்டுவது வருமானம்… பசியாற்றுவது சந்தோஷம்”..! கோவையில் ஓர் அன்னபூரணன்!!!

 

சித்த ஏழை ஒருவனுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து வயிற்றை நிரப்புவதைவிட பெருங்கொடை ஏதேனும் இருக்க முடியுமா? ஒரு சான் வயிற்றுக்காகத்தானே இவ்வளவு பாடும்?! கோவையைச் சேர்ந்த ராஜா சேது முரளி, ஏழைகளுக்கு சோறு போடுவதையே தன் வாழ்க்கையாகக்கொண்டிருக்கும் அற்புத மனிதர்! ‘சிகிச்சைக்காக வெளியூர்களிலிருந்து வந்து கோவை அரசு மருத்துவமனையில் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு, ‘பசியாற சோறு’ என்ற பெயரில் இலவசமாக மதிய உணவு கொடுத்து உதவுகிறார் ராஜா சேது முரளி’ என்ற தகவல் அறிந்து அவரைத் தொடர்புகொண்டோம்…

நான் சாப்பாடு கலெக்ட் பண்றதுக்காக வடவள்ளி வரைக்கும் வந்திருக்கேன். மதியம் 12 மணிக்கு ஜி.ஹெச் வந்திருங்க, பார்க்கலாம். அங்கேதான் சோறு போட்டுக்கிட்டு இருப்பேன்” என்று  தகவல் சொன்னார். அவர் சொன்ன நேரத்துக்குச் சென்றோம். ‘பசியாற சோறு’ என்ற பெயர் தாங்கிய ஆட்டோவின் முன்னால் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள் மக்கள். சிலர் கையில் பாத்திரங்களும், சிலர் கையில் பாலித்தீன் பைகளும் இருந்தன. அனைவரின் முகத்திலும் பசியின் கொடுமையும் வறுமையும் தெரிந்தன.

தான் வைத்திருந்த பாலித்தீன் பையில் சோறு வாங்கிய ஒரு பெண்மணி, “இன்னும் கொஞ்சம்  கிடைக்குமா சார்?” என்று தயக்கத்துடன் கேட்க, “எவ்வளவு வேணும்னாலும் வாங்கிக்கங்கம்மா… ரசத்துக்குத் தனியா கவர் வெச்சிருக்கீங்களா?” என்றபடி இன்னும் இரண்டு கரண்டி சேர்த்து அள்ளிப்போட்டுவிட்டு, “போதும்மாம்மா..?”  என்றார் ராஜா சேது முரளி. பதில் சொல்ல வார்த்தை கிடைக்காமல் வாய் நிறைய புன்னகை உதிர்த்து,  தலையை ஆட்டிய அந்தப் பெண்மணியின் முகம்,  பசியின் சித்திரம். இப்படி எத்தனையோ மனிதர்கள் சோற்றுக்கு வழி இல்லாமல் அரசு மருத்துவமனை வாயில்களிலும், கோயில்களிலும், பஸ்ஸ்டாண்ட் பிளாட்பாரத்திலும் ஒட்டிய வயிற்றுடன், `யாரோ ஒருவர் பசியாற்றுவார்’ என்ற நம்பிக்கையில் காத்துக்கிடக்கிறார்கள். புதிய இந்தியா பிறந்தும் பழைய காட்சிகள் மாறாததுதான் இங்கு எவ்வளவு பெரிய துயரம்!

சோறு கிடைத்த சந்தோஷத்தில் பகைவென்ற வீராங்கனைபோல் வந்த அந்த அம்மாவிடம் பேசினேன். “என் பேரு சுசிலா. ஊரு கூடலூர். எனக்கு ஒரே மகன். என் வீட்டுக்காரர், என் மகன் சின்ன வயசா இருக்கும்போதே செத்துப்போயிட்டார். நான் படிச்சது அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. அங்கன்வாடியில வேலைபார்த்துக்கிட்டிருந்தேன். மாசம் 2,500 ரூபா சம்பளம். பஸ்ஸுக்கே அதுல பாதி காசு போயிரும். அதனால, அந்த வேலை வேணாம்னு எழுதிக் கொடுத்துட்டு, லோக்கல்ல கிடைக்கிற கூலி வேலைகளைச் செய்து குடும்பத்தை ஓட்டினேன்.

எம் மகன், மேஸ்திரி வேலைக்குப் போயிக்கிட்டிருந்தான். குடும்பத்தை ஓட்டுற அளவுக்கு வருமானம் வந்தது. அவனுக்குக் கல்யாணம் பண்ணிவெச்சேன். என் மகனுக்கு திடீர்னு மூலம் வந்திருச்சு. அதனால, பொண்டாட்டி அவனை விட்டுட்டு ஓடிட்டா. குடும்பம் சிதைஞ்சிருச்சு. டாக்டருங்க, `அவனுக்கு ஆபரேஷன் பண்ணாத்தான் குணமாகும்’னு சொல்லிட்டாங்க. சேர்த்துவெச்சிருந்த 4,000 ரூபாயோடு இங்கே வந்து 15 நாளாச்சு. மூணு வேளையும் கடையில சாப்பாடு வாங்கி கட்டுப்படியாகலை. இருந்த காசு எல்லாம் தீர்ந்துடுச்சு. இங்கே ஃப்ரீயா சோறு போடுறாங்கனு இன்னிக்குதான் தெரியும். அதான் ராத்திரிக்கும் சேர்த்து வாங்கிவெச்சுக்கிட்டேன். இதுவும் இல்லைன்னா பட்டினிதான்” என்று அவர் சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை. இதுபோன்று வரிசையில் நின்ற ஒவ்வொருவருக்கும் இருக்கும்  துயரக்கதையை நினைத்து உடல் வெடவெடத்துப்போனது.

எல்லோருக்கும் சோறு போட்டு முடித்த பிறகு ராஜா சேது முரளியிடம் பேசினோம். “நான் சின்ன வயசுல அனுபவிச்ச கஷ்டம்தாங்க, என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. என்கூட பொறந்தது மொத்தம் அஞ்சு பேர். அப்பா, பயங்கர குடிகாரர். அம்மா, கூலி வேலை செய்துதான் எங்களுக்கு சோறு போடுவாங்க. பல நாள்  சாப்பாடு இல்லாம பசியில தண்ணியைக் குடிச்சுட்டுப் படுத்திருக்கேன். பசியின் அவஸ்தை எனக்கு நல்லாத் தெரியும். பெரிய ஆளாகி வேலைக்குப் போனதும், கஷ்டப்படுறவங்களுக்கு என்னால் ஆன சின்னச் சின்ன உதவிகளைச் செய்து திருப்தியடைஞ்சுக்குவேன். கருத்துவேறுபாட்டால் என் மனைவி என்னைவிட்டு பிரிஞ்சுட்டாங்க. என்கூட பிறந்தவங்களும் அவங்கவங்க தனித்தனியா வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. நானும் அம்மாவும் மட்டும்தான் ஒண்ணா இருக்கோம்

ஆட்டோ ஓட்டுறதுதான் என் தொழிலா இருந்துச்சு. வாழ்க்கை, எதை நோக்கிப் போகுதுனு தெரியாம சுற்றிக்கிட்டிருந்த சமயத்துல, ஒருநாள் கோவையில் இருக்கும் ‘சிநேகாலயா ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டோர் காப்பகத்துல திவ்யானு ஒரு குழந்தை சீரியஸா இருக்கு’னு சொன்னாங்க. ஆட்டோ எடுத்துட்டுப் போனேன். அங்கே அடிக்கடி இதுமாதிரி உதவிக்குப் போறது வழக்கம். அந்த குழந்தையைக் காப்பாற்ற முடியலை. கோவை ஜி.ஹெச்-லதான் பத்து நாளைக்குமேல வெச்சிருந்தோம். நான்தான் பக்கத்துலேயே இருந்து கவனிச்சுக்கிட்டேன். அப்போதான் இங்கே வர்றவங்க சாப்பாட்டுக்காகப் படுற கஷ்டத்தைப் பார்த்தேன். என்னோட சின்ன வயசு பசி, எனக்கு ஞாபகத்துக்கு வந்திருச்சு. அரசு மருத்துவமனைக்கு ஏதோதோ பிரச்னைகளோடு வரும் ஏழைகளுக்கு உதவணும்னு முடிவுபண்ணேன். என் ஆட்டோவுல ஏறுகிற எல்லார்கிட்டயும் இதைப் பற்றிச் சொல்லி, `உங்க வீட்டுல ஏதாவது விசேஷம் நடந்தா, அப்போ மிச்சமாகும் சாப்பாட்டைக் கொடுங்க’னு கேட்டேன். கொஞ்ச கொஞ்சமா ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆரம்பிச்சது.  கல்யாண வீட்டுச் சோறோ, கருமாதி வீட்டுச் சோறோ… எந்தப் பாகுபாடும் கிடையாது. எந்த விசேஷங்கள்ல மிச்சமானாலும் எனக்கு போன் வர ஆரம்பிச்சது. அன்னூர் வடவெள்ளினு கோவையைச் சுற்றி எங்கிருந்து போன் வந்தாலும் போயிடுவேன். சாதம், ரசம்னு இருக்கிறதை வாங்கிக்கிட்டு மதியானம் இங்கே ரீச் ஆகிடுவேன்.  பல இடங்கள்ல பெட்ரோல் காசையும் அவங்களே கொடுத்திருவாங்க.

இதுக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கணும்னு சமீபத்துலதான் ‘பசியாற சோறு’னு பேருவெச்சேன். ஹாஸ்பிட்டல்ல  என் போன் நம்பர் இருக்கு. அங்கே டிஸ்சார்ச் ஆனாலும், அடுத்து வர்றவங்ககிட்ட தகவலைச் சொல்லி, என் நம்பரைக் கொடுத்திருவாங்க. ‘இன்னைக்கு சோறு இருக்கானு?’ தினமும் போன் பண்ணிடுவாங்க. பல நாள் சோறு இருக்கும்; சில நாள் சோறு இருக்காது. இல்லாதபோது ‘இல்லை’னு சொல்றதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். தயங்கித் தயங்கித்தான் சொல்லுவேன். பிறந்தநாள், நினைவு நாளுக்கெல்லாம்கூட என்கிட்ட ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்து சோறு போடச் சொல்றாங்க. அது மாதிரியான நேரத்துல, நானே ஆள்வெச்சு சமைச்சுக் கொண்டு வந்து போட்ருவேன்” என்று சொல்லும் ராஜா சேது முரளியிடம், “உங்க வாழ்க்கைக்கான பணத்துக்கு என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டால், “பல நல்ல உள்ளங்கள் இருக்காங்க. ஒருத்தர் மாசத்துல ஒரு நாள் பெட்ரோல் ஃபுல் பண்ணி கொடுத்திருவார். கிடைக்கிற நேரத்துக்கு வாடகைக்கு ஆட்டோ ஓட்டி, அதுல வர்ற வருமானத்துலதான் வாழ்க்கையை ஓட்டுறேன்” என்கிறார். இதுமட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்தவர்களிடம் நிதி திரட்டி, நன்றாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் 150 பேரைத் தேர்வுசெய்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார் ராஜா சேது முரளி.

விடைபெறும்போது, “பசியைவிட பெரிய கொடுமை வேற இல்லீங்க. உங்களால முடிஞ்சா சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறவங்களுக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கிக் கொடுத்துப்பாருங்க. அதுல கிடைக்கிற திருப்தியே தனி” என்றார் மனநிறைவுடன்.

Source…..Punniyamurthy  in http://www.vikatan.com

Natarajan

” நவராத்திரி கொலு வைக்கணுமாம் ……”

 

நவராத்திரி கொலு

(Thanks to the Original Uploader. சம்பவத்தின் கடைசிப் பகுதியை படித்து அழாதவர்கள் இருக்க முடியாது)

காவேரிக் கரையில் உள்ள மண், மக்கள், ஆடு மாடு அத்தனையுமே செழிப்புதான் !

கும்பகோணம், திருச்சி அதைச் சுற்றிய க்ராமங்கள்…..பசுமையை வாரித் தெளித்திருக்கும்.

இந்த மாதிரி ஒரு அழகான, ப சுமையான க்ராமம்தான் களத்தூர் !

அந்த ஊரில் உள்ள துர்க்கா பரமேஶ்வரியின் கோவில் மிகவும் அழகானது. சிறிய கோவில் என்றாலும், பூஜைக்கு குறைவில்லாமல் இருந்தது.

அந்தக் கோவிலின் தர்மகர்த்தா அம்பாளின் கைங்கர்யமே வாழ்வாகக் கொண்டவர். மிக மிக நல்ல மனுஷ்யன். நவராத்ரி வந்துவிட்டால், கோவிலா, வீடா என்று போட்டி போட்டுக் கொண்டு அம்பாளுக்கு ஒன்பது நாளும் அலங்காரம், நைவேத்யம், என்று ஏகமாக செலவழித்து அப்படிக் கொண்டாடுவார்.

அண்டா அண்டாவாக சுண்டலும், இனிப்பும் ஒரு பக்கம் தயாராகி, நைவேத்யமாகி, ப்ரஸாதமாகி அக்கம்பக்கம் இருக்கும் க்ராமங்களில் இருந்தெல்லாம் பசியோடு வருபவர்களுடைய குக்ஷியில் போய்ச் சேரும்.

தர்மகர்த்தாவுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். ஐந்து பிள்ளைகள்; மூணு பெண்கள். ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகவில்லை. கடைக்குட்டியான ரமணி ரொம்பச் சின்னப் பையன். நாம் எல்லாருமே பிறக்கும் போதே, பிடரியில் மஹிஷவாஹனனை உட்கார வைத்துக் கொண்டுதானே பிறக்கிறோம்?
அந்த ஜன்மத்தில் வந்த பந்தபாஶங்களை அறுத்து, இருப்போர், போனவர் எல்லாரையும் நிலைகுலையச் செய்து, அடுத்த பிறவியில் தள்ளும், பாஶக் கயிற்றை, எந்த க்ஷணத்தில் நம் கழுத்தில் இறுக்குவான் என்பதே தெரியாதே !

மஹிஷாஸுர மர்த்தினியான லலிதாம்பிகையின் அம்புஜ ஶரணங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், அவளுடைய இடது கரத்தில் உள்ள பாஶமானது, மஹிஷவாஹனனின் பாஶக் கயிற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றி, பிறவா பெருநிலையை அனாயாஸமாக அளித்துவிடுமே !

தர்மகர்த்தா இப்படித்தான் ‘பட்’டென்று ஒரு க்ஷணத்தில் காலமாகிவிட்டார் ! கட்டாயம் துர்க்கையின் மலரடியில் புஷ்பமாகப் போய்ச் சேர்ந்திருப்பார். பாவம். குடும்பமே நிலைகுலைந்தது ! ஆனால், அவர் மனைவி, எட்டு குழந்தைகளை தன் பொறுப்பில், அந்த அம்பாளே விட்டிருப்பதாக நினைத்தாள்.

தர்மகர்த்தா உயிரோடு இருக்கும்போது, “ஒங்காத்துப் பொண்ணுதான் எங்காத்து நாட்டுப்பொண்” என்று பேசியவர்கள், அவர் போனதும், வசனமும் அவரோடு போச்சு ! என்பதாக காணாமல் போனார்கள்.
கொஞ்சமும் மனஸை தளரவிடாமல், வீட்டிலிருந்த அண்டான், குண்டான் கொஞ்ச நஞ்சமிருந்த தங்கம், வெள்ளி, பித்தளை ஸாமான்களை விற்றுக் காஸாக்கி, தன்னுடைய ஶக்திக்கு ஏற்றவாறு மூன்று பெண்களுக்கும் எளியமுறையில் கல்யாணம் செய்து வைத்தாள். பையன்கள் நாலு பேரையும் காலேஜ் வரை படிக்க வைத்தாள்.

பையன்களில் மூத்தவன் காலேஜ் முடித்ததும், “அம்மா! இனிமே நீயும், தம்பிகளும் என்னோட பொறுப்பு !…” என்று சொல்லுவதாக
கனவெல்லாம் கண்டாள். அது கனவில்தான் முடிந்தது !

படிப்பை முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு, அந்த குச்சு வீட்டில், அம்மாவின் ஏழ்மைக் கைகள், அன்போடு போட்ட மோர் ஸாதத்தை, அதிலுள்ள அன்பின் ருசி அறியாமல், வேண்டா வெறுப்பாக ஸாப்பிட்டுக் கொண்டிருந்தான். படிப்பு முடிந்ததோ இல்லையோ, ‘நீயாச்சு! உன் பிள்ளைகளாச்சு !’ என்று ‘டாடா’ காட்டிவிட்டு எங்கோ சென்றுவிட்டான் ! தன் வாழ்க்கையை தான் பார்த்துக் கொண்டான்.

அண்ணாவுக்கு ஏற்ற தம்பிகளாக, தர்மத்தை கடைப்பிடித்தது ஸ்ரீராமனின் தம்பிகள்தான் !
இப்போது, கலியில், அண்ணாவைப் போல் ‘அதர்மத்தை’ கடைப்பிடித்து, அவன் போன மாதிரியே, அம்மாவையும், கடைசி தம்பி ரமணியையும் அதோகதியாக்கிவிட்டு, மற்ற மூன்று பிள்ளைகளும் நடையைக் கட்டினர்!

ரமணி அப்போது ஒன்பதாம் க்ளாஸ் படித்துக் கொண்டிருந்தான். இப்படிப்பட்ட புத்ர ரத்னங்களை படிக்க வைக்க, அம்மாக்காரி வாங்கிய கடனோ கழுத்தை நெரித்தது ! வீட்டில் அவளும், ரமணியும் மட்டுந்தானே! மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு, ஸொல்ப பணத்தில் கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு, மீதியை கடனுக்கு செலுத்தி வந்தாள்.

சிறுவன் ரமணி, பேருக்கேற்றபடி ரமணீயமான குணம். படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூர் மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்து, தன் ஸம்பாத்யத்தையும் அம்மாவின் கடனை அடைக்க குடுத்தான் ! இவர்கள் குடுக்கும் பணம், கடலில் கரைத்த பெருங்காயம் போல், கடன் அடையக்கூடியதாக இல்லை!

கடன்காரர்கள் வாயில் வந்ததைப் பேசும்போது, தன்னுடைய அம்மாவின் நல்லகுணத்துக்கு இப்படியெல்லாம் நடக்கிறதே ! என்று தாங்காமல், அம்மாவின் மடியில் தலையை வைத்துக் கொண்டு அழுதான், குழந்தை ரமணி.
அம்பாளுக்கு எவ்வளவு ஆசை ஆசையாய் செய்திருப்பார் தர்மகர்த்தா !

கைவிடுவாளா அம்பிகை? கஷ்டத்தைக் குடுத்து, மிச்சம் மீதி இருக்கும் கர்மாவை [அதுவே கடைசி பிறவி என்பதால்] கழிக்கவிட்டு, தன்னுடைய அதிரடிக் காருண்யத்தை ஒரேயடியாக சொரிந்து விடுவாளே!

ரமணியின் அம்மாவுக்கு அன்று இரவு ஒரு ஸொப்பனம்…..அதில், கரும்புவில்லுக்கு பதில் கருணை தண்டமேந்திய நம்முடைய பெரியவா அவளிடம்,

” ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு அப்றம் நீ……நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே.
அதோட, என்னையும் மறந்துட்டே! ரமணிய ஒடனே எங்கிட்ட அனுப்பு…” என்றதும், அப்படியே மனஸ் படபடக்க எழுந்து உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள்.

“ரமணி….கண்ணு…..பெரியவா வந்தாடா ஸொப்பனத்ல ! நவராத்ரி கொலு வெக்கணுமாம்….. ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றாடா!..”

“அம்மா…பெரியவா இப்போ எங்கியோ வடக்குல இருக்கார்ம்மா..அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே?….”

இருவருமே இது வெறும் கனவுதான்! என்று துளிகூட ஒதுக்கவில்லை. இருண்ட குகையில் இருப்பவர்களுக்கு, எங்கோ குட்டியாக வெளிச்சம் தெரிந்தால் போறுமே ! விடுவிடுவென்று வெளிச்சத்தை நோக்கி நடையைக் கட்ட வேண்டியதுதானே?

“பெரியவாதானே கூப்டிருக்கா? கவலைப்படாத! அவரே வழி காட்டுவார்…”

விடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஶர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும், அனுஸரணையோடும் இருப்பார்கள்.

“அம்மா….நானும், எங்காத்துக்காரியும் நாளான்னிக்கி நார்த் இண்டியா யாத்ரை கெளம்பறோம். திரும்பி வரதுக்கு எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம். ஒன்னோட ரெண்டு மாஸ வாடகையை ஒங்கிட்ட அட்வான்ஸாவே குடுத்துடறேன்……இல்லேன்னா நீ ரொம்ப ஸ்ரமப்படுவே. இந்தாத்துக்கு வந்தப்றம்
எங்களுக்கு மனஸ்ல ஒரு நிம்மதி கெடச்சிருக்கு. அதுனால, கடைசி வரைக்கும், ஒனக்கு வாடகை குடுத்துண்டு, இங்கியேதான் இருக்கப் போறோம் ! செரியா?….” சிரித்துக் கொண்டே பணத்தைக் குடுத்தார்.

கரகரவென கண்ணீர் வழிந்தோட,
“மாமா…..பெரியவா தன்னோட லீலையை ஆரம்பிச்சுட்டார்! இன்னிக்கி காலேலதான் பெரியவா கனவுல வந்து நவராத்ரி கொலு வெக்கச் சொல்லிட்டு, ரமணியை ஒடனே அவர்கிட்ட அனுப்பச் சொன்னா…..பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். பாருங்கோ! ஒங்க மூலமா, அதுக்கும் வழி பண்ணிட்டார் !… எனக்கு, பெரியவா எங்க தங்கியிருக்கான்னு கொஞ்சம் விஜாரிச்சு சொல்றேளா?….”

ஶர்மா மாடியை நோக்கி..”வேம்பு! சித்த கீழ எறங்கி வாப்பா…..” என்றதும் “இதோ வரேன் சித்தப்பா!…” என்றபடி ஒருவர் அங்கே ஆஜரானார்.

“அம்மா….இவன் என்னோட அண்ணா பிள்ளை! ரொம்ப வர்ஷமா, பெரியவாகிட்டயே இருக்கான். மடத்லேயே தங்கிண்டு பெரியவாளுக்கு ஸுஸ்ரூஷை பண்ணிண்டு இருக்கான். என்னிக்காவுது இப்டீ…..ஊர் பக்கம் வருவான். நேத்திக்கித்தான் வந்தான். இன்னிக்கி ஸாயங்காலம் அஞ்சுமணி ட்ரெயின்ல
கெளம்பி, பெரியவா இருக்கற எடத்துக்குப் போறான். நீ வேணா…ரமணியை இவனோட அனுப்பி வை! பத்ரமா அழைச்சிண்டு போய் பெரியவாளை தர்ஶனம் பண்ணிவெச்சுட்டு, பத்ரமா திருப்பி அனுப்பி வெக்கச் சொல்றேன்”
அம்மாவும் பிள்ளையும் அழுதே விட்டனர் !
இது பெரியவா போட்ட அடுத்த “ஆனந்த குண்டு” !

“அனுப்பி வை! “என்றதோடு நிற்காமல், அதற்கான பணத்தை ஏற்பாடு பண்ணி, பந்தோபஸ்து பண்ணி, அழைத்துப் போக தகுந்த துணையையும் முன்னாடியே அனுப்பி வைத்து…..”அதான் பெரியவா…!” என்றார் வேம்பு சிரித்துக் கொண்டே!

பூனா பக்கத்தில் ஒரு சின்ன ஊரில் இருந்த பெரியவாளுடைய முகாமுக்கு வேம்புவோடு போனான் ரமணி. நல்ல கூட்டம் !

ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, அந்த ‘க்யூ’வில் ரமணியை நிற்க வைத்துவிட்டு “இங்க பாரு ரமணி ! இப்டியே கூட்டத்தோட போய்ண்டே இரு…ஒன்னோட டர்ன் வரும். பெரியவாகிட்ட, ஒன்னோட மனஸ்ல இருக்கற எல்லாத்தையும் கொட்டிடு! பயப்படாதே…எனக்கு உள்ள வேலையிருக்கு…..பெரியவாளை
தர்ஶனம் பண்ணினதும், இங்கியே இரு. நா….வந்து ஒன்னை அழைச்சிண்டு போறேன். பயப்படாதே, என்ன?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

சின்னப்பையனான ரமணிக்கோ அங்கிருந்த கூட்டத்தை கண்டதும், “இந்த ‘க்யூ’ எப்போ நகந்து, எப்போ நா…பெரியவாளைப் பாக்கறது!” என்ற மலைப்போடு, ஏதாவது இண்டு இடுக்கு வழியாக பெரியவாளைப் பார்க்க முடியுமா என்று முயற்சி பண்ணினான். ம்ஹூம்! இவன் குனிந்து, நிமிர்ந்து, குதித்ததுதான் மிச்சம்!

“செரி ….வேம்பு மாமா இங்கியே இருக்கச் சொல்லியிருக்கா. கட்டாயம் பெரியவாளை பாப்பேன்” என்று தனக்குத்தானே முடிவு செய்துகொண்டு
“ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர” என்று கண்களை மூடியபடி சொல்லிக் கொண்டிருந்தான்.

யாரோ அவனை லேஸாக தட்டியதும், கண்களைத் திறந்தான்…..

“நீதானே ரமணி? வா….எங்கூட ! பெரியவா ஒன்னைக் கூப்பட்றா !…..”

முழித்தான்!”

இந்த அலைமோதற கூட்டத்ல, பெரியவா என்னை மட்டும் கூப்ட்டாரா?.. ”

ரமணிக்கு இது “மூணாவது ஆனந்த குண்டு”

“என்னடா? வேம்பு மாதிரி நானும் பெரியவாகிட்ட கைங்கர்யம் பண்றேன். பெரியவா சொல்லாம, நானா வந்து கூப்டுவேனா? வா…..” என்று சொல்லி, அவனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கூட்டத்தை விலக்கிக்கொண்டு, அவனை பெரியவா முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்,
ஒரு பாரிஷதர்.

ஒரு க்ஷணம்! குழந்தை த்ருவனுக்கு முன்னால் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணு ஶங்குசக்ரதாரியாக நின்றபோது அவன் என்ன ஒரு ஸ்திதியில் இருந்தானோ, கிட்டத்தட்ட ரமணியும் பெரியவாளை அவ்வளவு அருகில் தர்ஶனம் பண்ணியதும், அப்படியொரு அநிர்வசநீயமான நிலைக்குத் தள்ளப்பட்டான்.

பெரிய கூட்டத்தில் அம்மாவின் கையைவிட்டு விட்டு, தொலைந்து போன குழந்தை, கதறி அழுது, மறுபடியும் தன் அம்மாவைப் பார்த்ததும், முதலில் சிரிக்காது, ஸந்தோஷப்படாது. மேலும் பலமாக அழும் ! அம்மா,அதைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு, கட்டிக்கொண்டு, தட்டிக் கொடுத்து ஸமாதானம் பண்ணினாலும், அதன் அழுகை ஓய நேரமெடுக்கும்.

இப்போது ரமணி த்ருவனாகவும், கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை போலவும், இரண்டும் கலந்த மனநிலையில், பெரியவாளைப் பார்த்ததும்,
“பெரியவா!……ஓ!….என்னோட பெரியவா!” என்று வாய்விட்டு அலறிக்கொண்டு, ஸாஷ்டாங்கமாக அவர் முன் விழுந்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்…..

“ரமணி!….அழாதேப்பா…எந்திரு. ஒனக்கு என்னடா கொறை? என்னடா வேணும்?…”

தாயின் குரலைக் கேட்டதும் அழுகை ஜாஸ்தியாகி, திக்கித் திக்கி எல்லாவற்றையும் சொன்னான்.

“பெரியவா……எங்கப்பா தர்மகர்த்தா…. அம்பாள்கிட்ட ரொம்ப பக்தியா இருப்பார். திடீர்னு செத்துப் போய்ட்டார்…..என்னோட நாலு அண்ணாக்களையும் அம்மா கஷ்டப்பட்டு படிக்க வெச்சாலும், எங்களை விட்டுட்டு அவாவா பிச்சிண்டு போய்ட்டா பெரியவா….. மூணு அக்காக்களும் கல்யாணம் ஆய்ட்டாலும், சீர், செனத்தி, ப்ரஸவம்ன்னு பிச்சு எடுக்கறா பெரியவா…..

……பாவம் அம்மா! எங்க போவா பணத்துக்கு? பத்தாததுக்கு பழைய கடனே 80,000 இருக்கு! எங்காத்தை வித்து கடனை அடைக்கலாம்-னா, கஷ்டத்ல விக்கறோம்-ன்னு தெரிஞ்சுண்டு, அடிமாட்டு வெலையா 10,000த்துக்கு பேசறா! நா…..படிப்பை நிறுத்திட்டு மளிகைக் கடேல வேலை பாக்கறேன்….. அம்மாவை என்னால ஸந்தோஷமா வெச்சுக்க முடியலியேன்னு இருக்கு பெரியவா……”

அத்தனை வர்ஷங்கள் குழந்தையிலிருந்தே பட்ட கஷ்டத்தை, கொட்டித் தீர்த்து கதறிவிட்டான் !
பொங்கும் பரிவோடு அவனைப் பார்த்த பெரியவா…..

“அழாதே……கண்ணைத் தொடச்சுக்கோ! நா…..சொல்றதக் கேளு…..

நாலாவது “ஆனந்த குண்டு”……

“….இப்போ ஒங்காத்ல கொலு வெக்கறதில்ல ;
நவராத்ரி பூஜையும்பண்றதில்ல…அப்டித்தானே?”

“அம்மாவுக்கு கனவுல வந்து சொன்னதை ‘ஸத்யம்’-னு நிரூபிச்சுட்டாரே!” அதிர்ந்து போனான் ரமணி.

“ஆமா…….பெரியவா. அப்பா போனதுக்கப்றம் அம்மா எல்லாத்தையும் நிறுத்திட்டா! வஸதியும் இல்ல…..”

“கொழந்தே!….ஒங்கப்பா பண்ணின மாதிரி தடபுடலா ஊரைக்கூட்டி, அண்டா அண்டாவா சுண்டலும், ஸொஜ்ஜியும் பண்ணி விநியோகம் பண்ண வேணாம். அழகா, சின்னதா கொலு வெச்சு, மனஸார ஒம்போது நாளும் அம்பாளுக்கு பூஜை பண்ணினாலே போறும்! சுண்டல் பண்ணனும்னு கூட அவஸ்யமில்ல….”
என்று சொல்லிக்கொண்டே தன் முன்னால் மூங்கில் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பாக்கெட் கல்கண்டையும், பேரீச்சம் பழத்தையும் தொட்டுவிட்டு, பாரிஷதரை
விட்டு ரமணியிடம் குடுக்கச் சொன்னார்.

“ரமணி…..இது ரெண்டையும் அம்மாகிட்ட குடுத்து, நவராத்ரிக்கு அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணச் சொல்லு. நாளன்னிக்கி நவராத்ரி ஆரம்பிக்கறதே! நீ…இன்னிக்கி ஸாயங்காலம் பொறப்டாத்தான், நாளக்கி ஸாயங்காலம் ஊர் போய்ச் சேருவே! மறுநா…காலம்பர கொலு வெக்கறதுக்கு தோதா இருக்கும்…”
என்று சொல்லிவிட்டு, பாரிஷதரிடம் ஏதோ சொன்னார்.

அவரும் ரமணியிடம்,
“ரமணி….பெரியவாளை நமஸ்காரம் பண்ணிக்கோ! இந்தா இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்தை எடுத்துக்கோ!…” என்றதும், சின்னப் பையன்தானே! அதே ஜோரில் பெரியவாளிடம், “என்ன பெரியவா இது! ஒங்கள பாக்கணும்ன்னு எவ்ளோவ் ஆசையோட வந்தேன்? நீங்க என்னடான்னா….இன்னிக்கே கெளம்பிப் போயி, ஆத்துல கொலு வெக்கச் சொல்றேளே ! இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரவழைச்சேள்?…” அழுகையும், ஏமாற்றமும் கலந்து லேஸாக ஒரு பாந்தவ்யமான கோபத்தின் ரேக்குகளை அதன் மேல் பரப்பி, கண்கலங்க கேட்டான்.

அவனைப் பார்த்து லேஸாக புன்னகைத்துவிட்டு, பாரிஷதரிடம் அவனை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார். ப்ரஸாதங்களை எடுத்துக் கொண்டு, அழுகையோடேயே வேம்பு ஐயரிடம் சென்றான். நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டதும் வேம்பு, ரமணியிடம்
“கொழந்தே ரமணி! பெரியவாகிட்ட இப்டியா கேக்கறது? ‘இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரச் சொன்னேள்?’-ன்னு கேட்டியாமே !
அந்த “இதுக்குத்தானா” குள்ள எத்தனை ரஹஸ்யங்கள், அர்த்தங்கள் ஒளிஞ்சிண்டு இருக்குன்னு ஒனக்கு மட்டுமில்லடா, யாருக்குமே தெரியாது. பெரியவா சொன்னதோட அர்த்தங்களை போகப் போக நீயே புரிஞ்சுப்ப…..செரி செரி ….ஸீக்ரம் ஸாப்ட்டுட்டு கெளம்பு….பாரு! பெரியவா ஒனக்கு ரெண்டு ஜோடி புது வேஷ்டி ஆஸிர்வாதம் பண்ணிக் குடுத்திருக்கா! ”

பெரியவாளுடைய அன்பை, வேம்பு ஐயர் சொல்லச் சொல்ல, இப்பேர்ப்பட்ட பெரியவாளுடன் இருக்க முடியாமல், ஊருக்குப் போகணுமே! என்று அழுது கொண்டே ஸாப்பிட்டுவிட்டு கிளம்பியவனிடம்
“பெரியவா குடுத்த கல்கண்டு பேரீச்சம்பழம், வேஷ்டி எல்லாம் இந்தப் பையில வெச்சிருக்கேன். இந்தா….இதைக் கை செலவுக்கு வெச்சுக்கோ! [ஒரு கவரில் சில நூறு ரூபாய் நோட்டுக்களை போட்டுக் குடுத்தார்] ரயில்ல ஒன்னை ஏத்திவிட நானே வரேன். ரொம்ப பாக்யஸாலிடா நீ! பெரியவாளோட முழூ ஆஸீர்வாதத்தையும் அப்டியே அள்ளிண்டுட்டே! இனிமே ஒனக்கு ஒரு கொறையும் வராது. ஒன்னோட ரயில்ல வர்றவர் என்னோட ஸொந்தக்காரர்தான் … பெரியவா ஒனக்கு எப்டி பந்தோபஸ்து பண்ணி அனுப்பறார் பாரு! ஒன்னை ஒங்காத்துல அவர் கொண்டு விட்டுடுவார். பெரியவா சொன்னபடி, ஒடன்னே அம்மாவை கொலு வெக்கச் சொல்லிடு….”

பத்ரமாக ஊர் வந்து சேர்ந்தான். போன ஜோரில் திரும்ப வந்த குழந்தையைக் கண்டதும் அம்மாவுக்கு ஒரே பதைபதைப்பு !

“என்னடா ஆச்சு? பெரியவாளைப் பாத்தியா? என்ன சொன்னார்?…..” இப்படியாக ஒரே கேள்வி மயம்!

” அம்மா…அம்மா! பயங்கரக் கூட்டம்! அத்தனை கூட்டத்லயும் என்னை அழைச்சிண்டு வரச் சொல்லி, நன்னா கிட்டக்க தர்ஶனம் பண்ணினேன். நம்மளோட கஷ்டம் எல்லாத்தையும் அவர்கிட்ட கொட்டித் தீத்துட்டேன்! பெரியவாளோடேயே இருந்துட மாட்டேனான்னு இருந்துது…ஆனா, ஆஸ்சர்யம் பாரேன்! ஒனக்கு வந்த கனவு நெஜந்தாம்மா ! பெரியவாளே “நீ ஒடனே ஊருக்கு
போயி, அம்மாகிட்ட நா சொன்னேன்னு, கொலு வெக்கச் சொல்லு ! ஒங்கப்பா இருந்தப்போ பண்ணின மாதிரி, பெருஸ்ஸா ஊரைக் கூட்டி தடபுடல் பண்ணாம, ஆத்துமட்டோட சின்னதா, அழகா பொம்மைகளை வெச்சு, சுண்டல் கூட வேணாம்…இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்த தெனோமும் கொஞ்சமா அம்பாளுக்கு
நைவேத்யம் பண்ணினாப் போறுன்னுட்டார்’-ம்மா!”

“பெரியவா சொல்லிட்டான்னா வேற என்ன வேணும்? ஒடனே பரண் மேல வெச்சிருக்கே! அந்த கொலுபொம்மைப் பொட்டியை கீழ எறக்கு….அப்டியே அந்த சின்ன கொலுப்படியையும் எறக்கு… வேற என்னடா சொன்னா? நம்ம கஷ்டத்துக்கு எதாவுது விடிவு பொறக்குன்னாரா ?…

“பெரியவாளை பாத்ததுமே ரொம்ப அழுதுட்டேம்மா! எனக்குத் தாங்கல….இத்தனை வர்ஷமா நீயும், நானும் மட்டுந்தான் வாய்விட்டு பேசிண்டோம்…நமக்கு சொல்லி அழறதுக்குக் கூட யாருமே காது குடுக்கலியேம்மா! அவர் வேற எதுவுமே சொல்லாட்டாலும், எல்லாத்தையும் கேட்டுண்டு, என்னை அழாதேப்பா-னார்ம்மா!
கொலு வெச்சுட்டு ஒம்போது நாளும் அம்பாளுக்கு ஶ்ரத்தையா பூஜை பண்ணச் சொல்லுன்னு மட்டும் சொன்னார்……”

ஸீதையை லங்கையில் தர்ஶனம் பண்ணியதை திரும்பத்திரும்ப சொல்லியும், கேட்டும், ‘போறாது, போறாது’ என்பது போல் ஆனந்தமாய் பேசிப் பேசி அனுபவித்த ஆஞ்சநேயரும், அவருடன் சென்ற வானரக்கூட்டமும் போல், அம்மாவும், பிள்ளையும் பெரியவாளைப் பற்றி பேசித் தீர்த்தபாடில்லை!

பரணில் இருந்து பொம்மைகள் இறக்கப்பட்டு, பெரியவா சொன்ன மாதிரி, நவராத்ரி ஆரம்பித்ததும், வீட்டில் மாக்கோலம் போட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, விளக்கை ஏற்றி வைத்து, அம்பிகையை ஶ்ரத்தையாக பூஜித்தாள். கல்கண்டு, பேரீச்சம்பழம் நைவேத்யம். என்னவோ, அத்தனை வர்ஷங்கள் இல்லாத நிம்மதியும், லக்ஷ்மிகரமும் அவர்கள் வீட்டிலும், மனஸிலும் புகுந்தது.

“ரமணி, பெரியவா சொன்னதைப் பண்ண ஆரம்பிச்சதுமே நமக்குள்ள ஒரு அமைதி வந்துடுத்து பாத்தியா….!”

அம்மாவுக்கு கிடைத்த நிம்மதி ரமணிக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

காரணம்?

“நேத்திக்கி பரண்ல ஏறி கொலுப் பொட்டியை எடுக்கறச்சே…..வேறே எதையோ பாத்தேனே……”
இதே சிந்தனைதான் நிம்மதிக்கு குறுக்கே வந்தது. கிடுகிடுவென்று ஏணியைப் போட்டு, பரணில் ஏறினான்.

அதோ…..மூலையில் ஒரு நசுங்கிப் போன தகரப் பொட்டி!”

அம்மா! இங்க இன்னொரு பொட்டி இருக்கும்மா! அதையும் எறக்கறேன்….எதாவுது பொம்மை இருந்தா அதையும் கொலுல சேத்துக்கலாம்”
அம்மா அதை வாங்கி கீழே வைத்து திறந்தால்……
அதில் பொம்மை இல்லை! ஆனால்…..இதென்ன?

ஏதோ பட்டுத் துணியில் சுத்தியிருந்தது!
பயமும் பக்தியும் ஒருசேர, அந்தப் பட்டுத் துணியை மெல்ல பிரித்தால், உள்ளே நாலைந்து ஓலைச்சுவடிக் கட்டுகள்! மஹா அரதப்பழஸு என்பதைப் பார்த்தாலே புரிந்தது.

“என்னடா ரமணி இது! அப்பா, இத இவ்ளோ பத்ரமா பட்டுத் துணில சுத்தி வெச்சிருக்கான்னா….இது ரொம்ப முக்யமான விஷயமா இருக்குமோ?”

“அம்மா! நா……இன்னிக்கி ஸாயங்கால டிரெயின்ல போயி, பெரியவாகிட்ட இந்த சுவடிகளை பட்டுத் துணியோட குடுத்துட்டு வந்துடறேன்…”

“உங்கள் பாரம் எனதே! ” என்று பெரியவா ஸதா சொல்லிக் கொண்டிருப்பதை, நம்மைப் போலில்லாமல், ரமணியும் அவன் அம்மாவும் கேட்கத் தொடங்கியதால்
, “ஓடு! பெரியவாளிடம்!..” என்று சுவடிகளோடு மறுநாளே பெரியவா முன் ஆஜராகிவிட்டான்!

முதல்முறை வந்தபோது இருந்த அழுகையும், குழப்பமும், பயமும், ஸந்தேஹமும் இந்தத் தடவை ரமணியிடம் இல்லை! அவனுடைய வாழ்வில் ரெண்டு நாளைக்கு முன்பிருந்த அதே பணமுடைதான் இப்போதும் இருந்தது. பின், எப்படி இந்த அமைதி? தெளிவு?

” நம் ஹ்ருதய குகைக்குள் ஸதா மஹாநடனம் புரிந்து வரும் நம்முடைய மஹா மஹா பெரியவாளை அப்படியே மனஸில் கட்டிக் கொண்டுவிட்டான், மார்கண்டேயன் பரமேஶ்வரனை கட்டிக் கொண்டது போல்!”

“என் அப்பன், என் அம்மை இருக்கையில் எனக்கென்ன குறை? பயம்?……ஆனந்தமோ ஆனந்தம் மட்டுமே!”

இது பெரியவா அவனுக்குத் தராமல் தந்த ஸர்வகால ஸஹவாஸ வாக்குறுதியால் வந்த த்ருட விஶ்வாஸம்! வேறு எதுவுமே இல்லை!

பெரியவா எல்லாருக்குமே இப்படியொரு பாக்யத்தை அருளிக் கொண்டிருக்கிறார். ரமணி பிடித்துக் கொண்டான்! நாம்…?

ரமணி பெரியவா இருந்த இடத்துக்குப் போனபோது, தனியான ஒரு இடத்தில் பெரியவா அமர்ந்திருந்தார்.சில பாரிஷதர்களைத் தவிர, ஜாஸ்தி கூட்டமே இல்லை!

பெரியவா முன்னால் ஸுமார் 60 வயஸு மதிக்கத்தக்க ஒரு பெரியவர் பவ்யமாக கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார். பெரியவாளிடம்
ஏதோ ஸீரியஸ்ஸான விஷயத்தை ப்ரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்.
“ஸரஸ்வதி மஹால்…அங்கெல்லாம் விஜாரிச்சியோ?..”

“எல்லா எடமும் சல்லடை போட்டு சலிச்சாச்சு பெரியவா! இந்தியால இருக்கற famous ஜோஸ்யக்காரா, உபன்யாஸக்காரா, ஏன்?ஆர்க்கியாலஜிகாராளைக் கூட
விடலை பெரியவா! எங்கியாவுது, யார் மூலமாவுது, எதாவுது, தெரியாதான்னு அலைஞ்சாச்சு பெரியவா…..அதை யாரு, எங்க ஒளிச்சு வெச்சிருக்காளா, இல்லே, அதோட அருமை தெரியாம எரிச்சோ, தூக்கியோ போட்டுட்டாளோன்னு ரொம்ப பதட்டமா இருக்கு…. எங்கியாவுது அது இருக்கற சின்ன clue கெடச்சாக்கூட போறும்! எப்டியாவுது அவா கைல கால்ல விழுந்தாவுது கெஞ்சிக் கூத்தாடி வாங்கிண்டு வந்துடுவேன்…..எத்தன லக்ஷங்கள் ஆனாலும் பரவாயில்ல பெரியவா!
ஆனா, அதோட மதிப்புத் தெரியாம, எங்கியோ ஒரு மூலேல அது மக்கிப் போய்டக்கூடாது…. இதான் என்னோட ப்ரார்த்தனை!….”
கண்களில் வழிந்த கண்ணீரை அவர் துடைத்துக் கொண்டிருக்கும்போதுதான், ரமணி உள்ளே எட்டிப் பார்த்தான்.

பெரியவா அவனைத் திரும்பிப் பார்த்து,
“வாடா! கொழந்தே! வா….வா” என்றதும், ஸரியாகச் சொல்ல வேண்டுமென்றால், தகரடப்பாவும், கையுமாக குதித்துக் கொண்டு ரெண்டே எட்டில் பெரியவா முன்னால் நின்றான்.

தகரடப்பாவை ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.

“பெரியவா! நீங்க சொன்னமாரியே அம்மா ஆத்துல கொலு வெச்சுட்டா! ஆனா, மேல பரண்ல கொலுப் பொட்டியோட, இந்த தகரடப்பாவும் இருந்துது பெரியவா! பிரிச்சா… “என்று பேசிக்கொண்டே அவன் தகரடப்பாவை திறந்ததும், “ம்ம்….நல்லதாச்சு போ! அந்த டப்பால இருக்கறதை அப்டியே பட்டுத்துணியோட அந்த மாமாகிட்ட குடுத்துடு! ”

இது ஐந்தாம் ஆனந்த குண்டு!

” இதுக்குள்ள ஏதோ ஓலைச்சுவடி இருக்கு பெரியவா…… நீங்க படிக்க வேணாமா?…” என்று கேட்டுக்கொண்டே, பட்டுத்துணியோடு அந்த ஓலைச்சுவடியை அந்த பெரியவரிடம் குடுத்தான். பணிவோடு வாங்கிக் கொண்டார்.”

“நீ…இத்தன வர்ஷமா இந்தியா முழுக்க தேடி அலஞ்சுண்டு இருந்தியே! இதான்…..அது! ”
என்னது! அவரோ வாய்விட்டு அழுதேவிட்டார்!

“ஓ ….பெரியவா! என் தெய்வமே! க்ருபா ஸாகரா! பெரியவாகிட்ட இதப்பத்தி பேசி பத்து நிமிஷம் கூட ஆகல……அதுக்குள்ள இப்டியொரு கருணா வர்ஷமா? இது கெடைக்கும்னு கனவுல கூட நா…..நெனைக்கல பெரியவா…!” இந்தக் கொழந்தைக்கு நா….வயஸ்ல பெரியவங்கறதால நமஸ்காரம் பண்ண முடியாத நெலேல இருக்கேன்……” என்று சொல்லிக்கொண்டே, தன் bag ஐ திறந்து உள்ளேயிருந்ததை அப்படியே எடுத்து பெரியவா முன் இருந்த மூங்கில் தட்டில் வைத்தார், கனகதாரா மாதிரி
கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்!

“பெரியவா…..மஹாப்ரபோ! இன்னதுதான் வெலை-ன்னு நிர்ணயிக்க முடியாத இந்த அபூர்வமான பொக்கிஷத்துக்கு, என்னால முடிஞ்ச சின்ன ஸமர்ப்பணம்….. அனுக்ரஹம் பண்ணி ஸ்வீகரிச்சுக்க சொல்லணும்…”

அழகாக சிரித்துக் கொண்டே….” ஏது? ஒனக்கு ஊருக்கு போய்ச்சேர நடராஜா ஸர்வீஸ்தானா? காலணா வெச்சுக்காம, எல்லாத்தையும் குடுத்துட்டியே!…” என்று சொல்லிவிட்டு, ரமணியிடம், “இதோ பாருடா! நீ குடுத்த ஓலைச்சுவடிக்காக, இந்த மாமா ஒனக்கு ரெண்டுலக்ஷ ரூவா குடுத்திருக்கார்!…. இப்போ நீதான் இவருக்கு ஊருக்குத் திரும்பிப்
போறதுக்கு, டிக்கெட் காஸு குடுக்கணும்! இந்தக் கட்டுலேர்ந்து ஒரு அம்பது ரூவா எடுத்து அந்த மாமாகிட்ட குடுத்துட்டு, அவரை நமஸ்காரம் பண்ணிக்கோ!…”

“ஹா……!! பெரியவா…! நா…ரெண்டுலக்ஷ ரூவா கொண்டுவந்திருக்கேன்னு எப்டி கரெக்டா சொல்லிட்டேள் பெரியவா?…”

கூடவே ரமணியும் கபடில்லாமல் “அதான! எப்டி பெரியவா? எண்ணிப்பாக்காம சொன்னேள்?…”
பெரியவாளிடமிருந்து வெறும் புன்னகைதான் இதற்கு பதிலாக வந்தது!

“செரி செரி ஊருக்கு கெளம்பற வழியைப் பாரு! ஒங்கூட இந்த பணத்தை எடுத்துண்டு வேம்பு மாமாவும் ஊருக்கு வருவார். எல்லாத்தையும் அவர் பாத்துப்பார். ரெண்டு பேரும் ஸாப்ட்டுட்டு கெளம்புங்கோ!…”

அனுக்ரஹம் பண்ண மட்டுமே தெரிந்த கரங்களை உயர்த்தி ஆஸிர்வாதம் பண்ணி, ப்ரஸாதம் குடுத்தார்.

ஊருக்கு வந்த மறுநாளே, வேம்பு ஐயரிடம் பெரியவா குடுத்திருந்த instruction படி, 80,000 ரூபாய் கடன், “ப்பூ!…” என்று ஊதித் தள்ளப்பட்டது !
நவராத்ரி ஆரம்பித்த நாலாம் நாளே, துர்க்கையாக அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, மஹாலக்ஷ்மியாக செல்வத்தையும் அருளிவிட்டாள் அம்பிகையான “ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர” ஸரஸ்வதி !

ஶர்மா தம்பதி நல்லபடி யாத்ரை முடித்துக் கொண்டு வந்ததும், ரமணியின் க்ருஹமும் “ஶங்கரா” என்ற நாமத்தைத் தாங்கியபடி புனர்ஜன்மாவை பெற்றது!

வாஸலிலேயே ஒரு பக்கத்தில் நல்ல தரமான மளிகைப் பொருட்களை, ஞாயமான விலையில் விற்க ஆரம்பித்தான் ரமணி!

அவ்வீட்டில், எந்தக் கார்யமுமே, பெரியவா அனுக்ரஹம் என்ற பிள்ளையார் சுழியோடுதான் ஆரம்பிக்கும்! நல்ல வருமானம்! நல்ல பேர்! பின்னாளில், பெரியவா சொன்னபடியே, ஶர்மாவின் பெண்ணை ரமணி கல்யாணம் பண்ணிக்கொண்டான்.

கஷ்டமில்லாத, கடனில்லாத வாழ்க்கை, அடிக்கடி பெரியவா தர்ஶனம்!

வேறு என்ன வேண்டும்? பெரியவா சொன்னபடி, தங்கள் வாழ்க்கையின் தேவைகளை எளிமையாக ஆக்கிக்கொண்டு, எதையும் அபரிமிதமாக சேர்த்து வைத்துக்
கொள்ளாமல், பல பேருக்கு அன்னதானம் செய்யும் அளவு, ரமணியின் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், ஸமுத்ரமாகவும்
இருந்தார்.

Source….Ramjee .N in FB input ….Forum for World’s Brahmin Unity & Welfare

Natarajan

Legends of Onam: Let us all welcome Maveli, the righteous king!…

 

Onam is one the most anticipated festivals celebrated with much fanfare and merriment by the people in Kerala, irrespective of one’s caste or creed.

Usually coinciding with crop harvests in the region, the story behind how the festival came into being goes all the way back to Vedic and Puranic ages.

The mythical King Mahabali, considered to be one of the greatest kings to have ever ruled Kerala, is believed to ascend to Earth from the netherworld to meet his subjects once every year.

It is his homecoming that is celebrated as the festival of Onam, as we know it today.

The king remains quite popular in Kerala even to this day, as testified by the folk song, Maaveli Naadu Vannidum Kaalam (When Maveli, our King, ruled the land), that speaks of his reign being one where all were equal.

According to the traditional legend, the king’s growing popularity amidst the common people became a rising concern for the jealous gods, Indra in particular.

According to Hindu beliefs, when a king or an emperor has a considerable number of fair and just deeds to his credit, he has the power to dethrone even Indra, who is the god of the gods.

Threatened by Mahabali’s rising greatness, they decided to hatch a scheme against the king and rope in the supreme god Vishnu.

Taking the form of a poor Brahmin monk named Vamana, Vishnu approached the king and asked to be granted a boon. Mahabali, who was known for his altruistic qualities, readily agreed to the monk’s request. 

An ancient illustration depicting Vamana casting the king to netherworld. Source: Wikimedia
Vamana wished for a parcel of land that he could cover in three paces or steps. Amused by such a trivial request, the king granted his wish. However, the ‘simple’ monk soon transformed into a giant – and covered all of the king’s lands in just two steps.

Where to put the third step? The king could not go back on his word. Having nothing left that he could pledge, Mahabali offered his head to the monk as the third step. Vamana’s final step pushed the king to the netherworld, thus robbing him of his earthly commitments and his throne to heaven.

Vishnu offered the king a chance to visit his kingdom once every year, for his attachment to his subjects was well known even amidst the gods.

And thus, the festival of Onam came into being, marking the homecoming of the noble king, who is lovingly called Maaveli by his people.

Different rituals are practised even today that celebrate the reign of the king, which is considered to be a golden era in the history of Kerala.

Interestingly, despite the role that Vamana had in the banishment of Mahabali, he is not written off as a villainous character in the state.

In fact, one of the major instalments of the festivities includes statues of both figures. These are circulated in homes of people as a representation of the king’s visit as well as the god’s.

While the statue of Mahabali is known as Onathappan, Vamana’s form goes by the name of Thrikkarayappan, the lord of the land covered in three paces. And both make way into the floral arrangement of Pookalam on Pooradam, the eighth day of Onam.

And as the month of Chingam falls by year after year, the people of Kerala continue to await the visit of their beloved king and seek his blessings.

Source….LekshmiPriya .S in http://www.betterindia.com

Natarajan

 

 

 

 

Meet the Kerala family that has been creating ‘Onavillu’ for Onam for centuries …!

The Vilayil Veedu family is the only family entrusted to make the ‘Onavillu’ that is offered to the deity at Sri Padmanabhaswamy Temple.

For the Vilayil Veedu family at Karamana it is a busy time of the year. The family of traditional craftsmen is the only family entrusted to make the ‘Onavillu’, a ceremonial bow that is offered to the deity at Sri Padmanabhaswamy Temple here as part of the annual rituals during the Onam festival season.

Their house wears a festive look, as all the five male members of the family, including a 12-year-old, immerse themselves in the task of crafting these colourful bows.

“In these bows, we paint all the avatars of Vishnu. 12 of them are offered in the temple as a part of the ritual. Nowadays, even more, numbers are being offered at the temple. They consider it holy and keep it in their pooja rooms as well,” Binukumar, one of the craftsmen from the family, told TNM.

The bow is a broad piece of wood, tapering on both sides, on which miniature paintings of the Ananthasayanam, Dasavatharam, Sreerama Pattabhishekam and the Sreekrishnaleela are portrayed.

Earlier the ‘villus’ were 3.5-4.5 feet long and 4-6 inches wide. But, now the family have introduced 1.5 feet long small bows that can be used by everyone.

The making of the Onavillu is an age-old tradition that has continued over the years from the 16th century. The family members observe a 41-day penance prior to the commencement of the work.

“We have to be pure while we make this. We are vegetarians and follow certain other norms while making it. There are certain mantras to be chanted while carving and drawing each Onavillu,” he added.

Earlier the making would take place only during the Onam season but now with people buying for their home, the craftsmen work throughout the year.

The red tassels used to adorn the ‘villu’, which is known as ‘Kunjalam’, are made by the convicts of the Central Jail at Poojappura here.

Last week the jail authorities handed over this year’s required ‘Kunjalam’ to the Vilayil family.

“Kunjalam making was started decades ago by the jail inmates. There is a weaving unit in the jail.  The Kunjalam was prepared under the guidance of the instructor. We make it as per the order given by the temple,” S Santhosh, Poojappura jail superintendent told TNM.

He also says that even the prisoners observe penance before and while weaving the Kunjalam.

“They don’t take any non-vegetarian food, make themselves clean before starting the work and also do certain prayers,” he added.

Binukumar said that at prison these ‘Kunjalams’ are made by the inmates irrespective of caste or religion. “People belonging to all religion are involved in the making of Kunjalam. Surprisingly they all observe the penance so that the Onavillu’s holiness is not lost,” he added.

The ‘villus’ are first offered to the family deity at the Valiya Veedu for three days. They are then taken to Sri Padmanabhaswamy Temple on Thiru Onam day and displayed at the Natakasala before being offered to the deity.

Edited by Kannaki Deika

Source….Haritha John in http://www.thenewsminute.com

Photos : Sreekesh Raveendran Nair

வாரம் ஒரு கவிதை …” கவிக்கோவுக்கு ஒரு கவிதாஞ்சலி “

 

கவிக்கோவுக்கு கவிதாஞ்சலி
————————-
கவிஞன் என்று சொன்னாலே  அது கவிக்கோ !
கதையிலும்  கவிதை விதை விதைத்து  கவி
சொன்ன கவிஞன் அவன் ….இந்த புவி கேட்ட
கவிதை தானும் கேட்க விழைந்தானோ அந்த
இறைவன் ?  இறை அழைப்பு ஏற்று இப்புவி
துறந்து எமை  மறந்து பறந்து சென்றாயோ கவிஞனே ?
நீ பறந்து சென்ற வேகம் பார்த்து நான் வாய் மூடி
மௌனியானேன் …உன் பால் வீதி கவிதைப் பயணம்
முடித்து  உன் வீட்டு  வீதிக்கு நீ மீண்டும் திரும்பும் நாள்
வரை காத்திருப்பேன் நான் மெளனமாக !
உன் பால் வீதி பயணத்தில் என் மௌனத்தின் குரல்
உனக்கு கேட்காமல் இருக்குமா என்ன ?
Natarajan
12th June 2017

வாரம் ஒரு கவிதை ….” கை கோர்ப்போம் ” !

 

கை கோர்ப்போம் …
——————-
“பார்க்கிறேன் நான் ஒரு கை”  என்று சொல்லும்
வாய்  “கோர்க்கிறேன் என் கை உன்னுடன்” என்று
சொல்ல வேண்டும் …
கை கோர்த்து நிற்கும் மனித சங்கிலி தொடுவது
இரு ஊரின் எல்லையை  மட்டுமல்ல ! எல்லை தாண்டி
இருக்கும் இதயங்களையும் சேர்த்துதான் !
நிலவுக்கே மின்தூக்கியும்  படியும் அமைக்க
வழி சொல்லும் இன்றைய இளம் தலைமுறை
நமக்கு நினைவு படுத்தும்  பாடம்  “கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை “
இல்லை இனிமேல் எங்கள் ஊருக்கு ஒரு எல்லை
இல்லை இனிமேல் எங்கள் நதிக்கு  ஒரு எல்லை
இல்லை இனி ஒரு சாதி மத பேதம் எங்கள் நாட்டுக்குள்
இல்லை இனி ஒரு மத துவேஷம் எங்களுக்குள் !
இது எதுவும் இல்லையென்றால்  வானம்தான் எல்லை
நம் நாட்டின் மறுமலர்ச்சிக்கு…  வளர்ச்சிக்கு !
இணையும் கைகள் இணைக்கும் நம்
இதயங்களையும் ! இனித்து மலரும் புது உறவும் !
உறவுகள் ஒன்றானால்  சச்சரவு ஓடி மறையும் !
இதயங்கள் இணையும் நேரம் நதிகளும் இணையும் தன்னால் !
இன்னும் என்ன தயக்கம் நமக்கு ?  கோர்ப்போம் கைகளை
இன்றே ! நிலவுக்கு படி கட்ட நினைக்கும் நம் பிள்ளைக்கு
காட்ட  வேண்டும் பச்சைக் கொடி நாம் அனைவரும் நம்
கை கோர்த்து ! நிலவின் படிக்கட்டுக்கு நாம் அமைத்துக்
கொடுக்கும் வலுவான  அடித்தளம் இணையும் கைகளே !
கை கோர்ப்போம் …கை கொடுப்போம் …இளம்
விஞ்ஞானிகள் கனவு  நனவாக !
Natarajan
in http://www.dinamani.com dated 10th April 2017

Real story behind a King Cobra from Karnataka drinking water from a water bottle…!!!

The media is fired up about a video showing a 12-foot-long, parched King Cobra drinking water from a water bottle. The video first uploaded by a YouTube channel called ‘Uttara Kannada News’  shows a man in khaki giving water to the snake.

Mashable India, was one of the first to put the video out and said that severe drought prevailing across Karnataka had resulted in the cobra straying into a village and desperately looking for water.

Huffington Post, in its article, Thirsty King Cobra sips water from a bottle amid debilitating drought, draws much sympathy for the poor lost snake, being offered drinking water by a sympathetic man.

One of the men seen in the video giving water to the snake is CN Naykka, the Deputy Range Forest Officer of Karwar forest range. He had rescued the cobra along with snake expert Raghavendra

Though Naykka is surprised that the video has gone viral, he refuted claims of drought in the region and also said that such instances were common during summer months.

“The Kaiga Power Plant is located near the forest range. The snake had wandered into the Kaiga Township, located near the plant sometime in the morning. We spotted the King Cobra at around 12.30 pm and it was dehydrated due to the extreme heat. Hence, I offered it some water and took it to a rescue centre,” Naykka said.

The forest officer also said that this is the mating season and cobras wandering around the area was a common occurrence, which happens almost every year.

“Whenever a snake wanders into civilian-populated areas, we first offer it water. There is nothing sensational about it. The Kali River, which runs through the Karwar Forest Range is flush with water and so are the backwaters located near the Kaiga Power Plant. During summer, many different birds and animals come for water including cobras,” Naykka added.

Source…..http://www.thenewsminute.com/

Natarajan

வாரம் ஒரு கவிதை…” வீர மங்கை “

 

வீர மங்கை
———–
முறம் கொண்டு விரட்டினாள் ஒரு புலியை  அன்று
வீர மங்கை ஒருத்தி …புலி புற முதுகு காட்டி ஓடியது
முறம் பார்த்து அல்ல !… முறம் பிடித்த
மங்கையின் முகம் பார்த்து ! மங்கையரின்
வீரம் தெரியும் அவர் முகத்தில் …செயலில் ! விண்வெளியில்
பயணித்த முதல் பெண்ணும்   அந்த விண்ணுக்கு
விண்கோள் ஏவும்  நம் பெண்மணிகள் வரை
ஒரு ஒரு மங்கையும் வீர மங்கையே !
இல்லறத்தை ஒரு நல்லறமாக உருவாக்கி
நல்ல ஒரு சந்ததியை இந்த உலகுக்கு
கொடுக்கும் ஒரு ஒரு இல்லாளும்
ஒரு வீர மங்கையே !  வீர தீர செயல்
தேவையில்லை ஒரு பெண்ணுக்கு   வீர மங்கை பட்டம் பெற !
தன் கண் முன்னே கருகும் பயிர் கண்டும்
தான் வாடாமல் தன் பிள்ளைக்கும் தன்
குடும்பத்துக்கும் அரை வயிற்று கஞ்சி
கொடுக்கும் ஒரு உழவனின் இல்லாள்
ஒரு வீர மங்கையே !
படிப்பு வாசனையே இல்லாமல் ஒரு
குடிகார கணவனுடன்  குடும்பம் நடத்தி
தான் பெற்ற குழந்தைகளை இந்த அவையத்து
முந்தி இருக்க செய்யும் இலக்கில்  நாளும் உழைக்கும்
ஒரு ஒரு தாயும்  வீர மங்கைதான் என்  பார்வையில் !
Natarajan   in http://www.dinamani.com  dated 13th march 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை …” மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு “

 

மல்லுக்கட்டும்  ஜல்லிக் கட்டு …
……………………………………………………
துள்ளி வரும் காளை …அதை அடக்கும்
துடிப்புடன்  களத்தில் இளம் காளையர் !
இது போர்க்களம் இல்லையே…ஒரு
வீர விளையாட்டுக்களம்  தானே !
ஜல்லிக்கட்டு …இந்த ஒரு பெயரே
உசுப்பிவிடுமே  தூங்கும் இளைஞரை !
காளை மாட்டுடன் மல்லுக்கட்டிய  ஒரு
வீரர் கூட்டம் இன்று ஜல்லிக்கட்டுக்காகவே
மல்லுக்கட்டும் ஒரு அவலம் !  ஜல்லிக்கட்டு
நடக்குமா நடக்காதா ..இந்த கேள்விக்குறி
ஜல்லிக்கட்டுக்கு மாத்திரம் அல்ல …ஒரு
கூட்டத்தின் குறி நம் ஜல்லிக்கட்டு மாட்டின் மீதே !
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை
படித்ததில்லையா நாம் ?  அதே கதைதான்
மீண்டும் அரங்கேற்றம் இன்று  ஜல்லிக்கட்டில் !
ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் சந்ததிக்கு
சத்தமில்லாமல் ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்
துடிக்கிறது ஒரு கூட்டம் இன்று… அவர்
ஆடும் ஆட்டம் ஒரு “சோதனை  ஓட்டம் “
இன்று… கேட்கவே வேதனை நமக்கு !
சோதனை எது  வந்தாலும்  சாதிக்க வேண்டும்
நாம் ! மல்லுக்கட்டி  மீட்க வேண்டியது வெறும்
ஜல்லிக்கட்டு போட்டியை  மட்டுமல்ல !
நம்  ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் வாழ்வையும்  அதன்
இன வளர்ச்சியையும்  சேர்த்துதான் !
மல்லுக்கட்டுவோம்  ஜல்லிக்கட்டுக்கு …ஜெயித்துக்
காட்டுவோம் இந்த  உலகுக்கு நாம் யார் என்று !
My Tamil Kavithai  as published  in  www.dinamani.com
Natarajan

Kalam’s brother turns 100, says takes life as it comes…

04th_kalam-brot_gl_3068500e

A.P.J. Mohamed Muthu Meera Maraikayar, elder brother of former president APJ Abdul Kalam.— Photo: L. Balachandar

Kalam wanted a year-long celebration after Mr. Maraikayar turned 100 years

Centenarian A.P.J. Mohamed Muthu Meera Maraikayar, elder brother of former President A.P.J. Abdul Kalam, looks at the elegantly-designed wooden casket staked with perfume bottles with a tinge of disappointment.

It was a special gift for him left behind by his younger brother.

Tears welled in his eyes as he takes a look at the wooden box of perfumes, bought by Kalam during his trip to Uttar Pradesh a couple of months before he died on July 27, 2015, as a special gift to be presented to his brother on the occasion of his 100th birthday on November 5.

Kalam never accepted gifts when he attended functions and when Uttar Pradesh Chief Minister Akilesh Yadav offered the perfumes, he accepted saying his brother was fond of perfumes and he would gift the box on his 100th birthday. Kalam paid a token sum before accepting the gift from Mr. Yadav, says Nazeema Maraikayar, daughter of the centenarian.

“We are celebrating the birthday without joy and with a sense of disappointment. It would have been joyous had my brother Abdul Kalam was around,” Mr. Maraikayar says in an interaction with the The Hindu at the ‘House of Kalam’ here on Thursday, recalling his close and affectionate association with the late president.

Kalam wanted a year-long celebration after Mr. Maraikayar turned 100 years but destiny had it that he could not celebrate the birthday at all. “God has given me the strength to overcome the absence of my brother,” he says.

Assisted by Ms. Nazeema, the centenarian recalls the grand family reunion they had in June 2014, when Kalam visited the family and celebrated his brother’s 98th birthday, five months ahead. It was a memorable event as more than 100 family members gathered and Kalam interacted with Mr. Maraikayar and other family members for more than three hours before flying back to Delhi.

Mr. Maraikayar, active, hale and healthy, is abreast with latest developments and enquires whether Chief Minister Jayalalithaa is still undergoing treatment at Apollo and whether DMK leader M. Karunanidhi has recovered from his illness. He flips through dailies and watches select programmes on television, says Ms. Nazeema.

The Chennai floods and the tsunami devastation brought him back the terrifying memories of 1964 cyclonic storm that wiped out Danushkodi, he says, recalling the devastation.

He was not awed by the latest development in science and technology. Discoveries bound to happen as long as mankind looked for changes. “I live my life as it comes and accept whatever happens,” Mr Maraikayar says, turning philosophical.

 Source….

Natarajan