Subramanya Temple, Saluvankuppam….Ancient Sangam period Murugan temple unearthed !

The Subramanya Temple at SaluvankuppamTamil Nadu, is a shrine dedicated to the Hindu deity Murugan. Archaeologists believe that the shrine, unearthed in 2005, consists of two layers: a brick temple constructed during the Sangam period (the 3rd century BC to the 3rd century AD) and a granite Pallava temple dating from the 8th century AD and constructed on top of the brick shrine. The Archaeological Survey of India (ASI) team which conducted the excavation believes that brick temple could be the oldest of its kind to be discovered in Tamil Nadu. However, noted Indian archaeologist R. Nagaswamy is critical of this claim owing to lack of references to the shrine in the popular literature of the period.

The temple was discovered by a team of archaeologists from the ASI based on clues found in a rock inscription left exposed by the 2004 Indian Ocean tsunami. Initially, excavations revealed an 8th-century Pallava-era shrine. Further excavations revealed that the 8th-century shrine had been built on the brick foundation of an earlier shrine. The brick shrine has been dated to the Sangam period.
The temple faces north, unlike most Hindu temples. Artifacts from two phases, the Sangam phase as well as the Pallava phase, have been found. The temple is Tamil Nadu’s oldest shrine to Murugan. It is also believed to be one of only two pre-Pallava temples to be discovered in the state, the other being the Veetrirundha Perumal Temple at Veppathur.
Discovery
After the 2004 Indian Ocean tsunami had subsided, archaeologists discovered rock inscriptions which had been exposed by the tsunami waves close to the hamlet of Saluvankuppam, near the UNESCO-designated World Heritage Site of Mahabalipuram. The inscriptions by the Rashtrakuta king Krishna III and the Chola kings Parantaka I and Kulothunga Chola I spoke of a Subramanya Temple at Thiruvizhchil (the present day Saluvankuppam). S. Rajavelu, epigraphist with the Archaeological Survey of India (ASI), identified a nearby mound as the site of the temple. In 2005, archaeologists unearthed an 8th-century Pallava temple under the mound. G. Thirumoorthy, ASI Assistant Archaeologist, believed that the shrine could be the oldest Subramanya temple to be excavated in Tamil Nadu. There were speculations on whether the temple could be one of the “Seven Pagodas“.

However, further excavations revealed that the 8th-century temple was constructed over the remains of an older brick temple. According to Thirumoorthy, the garbhagriha or sanctum Sanctorum of the brick temple was filled with sand and covered with granite slabs upon which the newer temple was constructed. Sathyamurthy, Superintendent, ASI Chennai Circle, said that the brick temple could be dated to the Sangam period as the shrine faced north unlike modern temples which face either east or west. This proved conclusively that the temple was constructed before the 6th or 7th century AD when the shilpa shastras, the canonical texts of temple architecture, were written. It has been estimated that the age of the brick shrine range from 1700 to 2200 years.
Archaeologists believe that the brick shrine was destroyed either by a cyclone or a tsunami which took place 2,200 years ago. The Pallavas built a granite temple on the brick foundation in the 8th century AD, which also was likely to have been destroyed by a tsunami. Archaeologists believe that the second tsunami must have occurred in the 13th century AD as the latest inscriptions which speak of the shrine have been dated to 1215.
The remains of a brick temple, dating back to the late Tamil Sangam period [circa 1st century B.C. to 2nd century A.D.], have been discovered on the seafront near the Tiger Cave at Saluvankuppam, a few km ahead of the world-famous Mamallapuram monuments.
“The brick temple is the most ancient temple discovered so far in Tamil Nadu. There is no doubt that it is about 2,000 years old,” said T. Sathyamurthy, Superintending Archaeologist, ASI, Chennai Circle. Twenty-seven courses of bricks with a square garbha griha (sanctum sanctorum) that made the Sangam age temple form the center piece of the discovery. The temple is dedicated to Muruga, the presiding deity of “Kurinji” [hill] tracts. The sanctum measures 2 metres by 2.2 metres. The bricks measure 40 cm x 20 cm x 7 cm. They are still sturdy.
The big-sized bricks are typical of the period and are similar to those found at Kaveripoompattinam near Thanjavur; Uraiyur in Tiruchi district — Uraiyur was the capital of the Cholas of the Sangam age; Mangudi near Tirunelveli; and Arikkamedu near Pondicherry.
Dr. Sathyamurthy was sure the brick temple was built before the canonical period because it faced north. “Agama” texts, which came into existence in the sixth or seventh century A.D., and “shilpa shastras”, had prescribed rules for construction of temples including the directions they should face. Normally, temples faced east or west. But this one did not follow “agama” texts and hence looked north. Tsunami or tidal waves that occurred twice had pulled down the entire temple complex. There is telltale evidence of wave action from the excavation. Deposits of shells and debris of the temple have been found on the eastern side of the complex, towards the shoreline. “What is interesting is not the discovery of the brick temple but that we can record stratigraphically the remains of palaeo-tsunami deposits. The impact of the tidal wave is seen on the eastern side of the temple, close to the sea. Such a feature is absent on the western side,” Dr. Sathyamurthy said.
G. Thirumoorthy, Assistant Archaeologist, ASI, said the temple belonged to two periods: the late Sangam age and the Pallava period. After the brick temple collapsed, the Pallava kings of the 8th and 9th century A.D., built another temple over it, using granite slabs. This temple too collapsed.
Artifacts found at the site include broken stucco figurines, obviously under worship; a painted hand portion with a bangle of a stucco figurine, simple-looking terracotta lamps, beads, roofing tiles made of terracotta, spinning whorls, a broken animal terracotta figurine and hop-scotches. A “prakara” (compound) wall of the same period has been excavated.
Archaeologists’ conclusions are:
From the evidences like temple orientation, brick size and artifacts collected from this site, the ASI team concluded that this structure immediately antedates the Pallavas. They are also of the opinion that this one is the earliest brick temple in Tamil Nadu identified as of now. Further to this they also infer that no other temple of such nature is reported from south India.
Presence two evidences granite spear and the plaque depicting women dancing ‘Kuravai Koothu’ allow the ASI experts to conclude this one as Lord Subramanya temple.
The Reach foundation, Chennai conducted carbon – 14 dating on the paleo-tsunami evidences (sea shells and other debris) proved that they got deposited in different periods between 405 A.D. and 564 A.D. and between 1019 A.D. and 1161 A.D.
According to T.Sathyamurthy, Superintendent, ASI Chennai Circle, (now Reach foundation trustee) conclude that the shrine belongs to Sangam period since it faces northwards. The modern temples built according to Shilpa Shastras (written between 6th or 7th century A.D.) are facing either east or west. This fact encouraged him to conclude that the temple was constructed before the 6th or 7th century A.D. He also estimated the age of the brick shrine ranging between 1700 and 2200 years.
However, noted Indian archaeologist R. Nagaswamy is critical of this claim due to lack of references to the shrine in the popular literature of the period.
Historical background
Although the city of Mahabalipuram was constructed by the Pallava king Narasimhavarman I in the 7th century AD, there is evidence that a small port might have functioned at the site even earlier. Megalithic burial urns dating to the very dawn of the Christian era have been discovered near Mahabalipuram. The Sangam age poem Perumpānattuppadai describes a port called Nirppeyyaru which some scholars identify with the present-day Mahabalipuram. Sadras near Mahabalipuram has been identified as the site of the port of Sopatma mentioned in the Periplus of the Erythraean Sea.
Inscriptions
Number of rock inscriptions is found near the shrine. The specific three granite pillars, which lead for the discovery of the shrine, bears inscriptions of grants offered to this shrine (Ref. 1-3). Later five more inscriptions discovered (Ref. 4-8). Now three more inscriptions identified Ref. (9-11).
Ø Kirarpiriyan of Mamallapuram made grants of ten ‘kazhanjus’ (small sized gold balls) First pillar inscription
Ø Vasanthanar, a Brahmin woman offered a grant of 16 kazhanjus Second pillar inscription which can be dated back to 813 A.D.
Ø Raja Raja Chola I (985–1014 A.D.) Third pillar inscription is about the grant
Ø Pallava king Dantivarman (795 to 846 A.D.) Fourth pillar inscriptions which can be dated back to 813 A.D.
Ø Pallava kings Nandivarman III (846 to 869 A.D.) Fifth pillar inscriptions which can be dated back to 858 A.D.
Ø Pallava kings Kambavarman (9th century A.D) sixth pillar inscriptions
7. Krishna III (939-68 A.D) Rashtrakuta king Seventh pillar inscriptions which can be dated back to 976 AD,
Ø Pallava king Kambavarman (9th century A.D) Eighth  pillar inscriptions
Ø Krishna III (939-68 A.D) Rashtrakuta king Ninth pillar which can be dated back to 971 A.D.   in his 21st regnal year
Ø Rajendra III Chola (1216–1256 A.D) Tenth pillar inscriptions
Ø Kulothunga Chola III (1178–1218 A.D.) which can be dated back to 1215 A.D.
All the inscriptions in ancient Tamil script record about the donations of land and gold for the maintenance of the Subramanya temple at Thiruvizhchil and it continuously received grants. All these inscriptions mention the village as Thiruvizhchil.
Architecture
While the thin, tabular bricks at the top were laid by the Pallavas, the larger bricks underneath date from the Sangam period
The temple is dedicated to the Hindu deity Murugan and faces north. The garbhagriha or sanctum sanctorum is 2 metres long and 2.2 metres wide and is made of 27 courses of bricks. The bricks used are similar to the ones used in other Sangam age sites such as PuharUraiyur, Mangudi and Arikkamedu.
A stone Vel is positioned at the entrance of the shrine. During the excavations, a terracotta plaque depicting a Kuravai Koothu, a dance which is mentioned in the 1st century AD Tamil epic Silappadikaram, was discovered. Sathyamurthy feels that there may not have been any idol in the square garbhagriha as it is too small to house one. The temple is surrounded by a prakara or a compound wall dating from the Sangam period. According to Thirumoorthy, the shrine is “the biggest brick temple complex dating to the pre-Pallava period”.
The temple is built on a cushion of alluvium on which a layer of man-made bricks were laid. On top of this were another four layers of man-made bricks separated by four layers of laterite. There were two types of bricks used: large-sized laterite bricks of the Sangam period and thin, tabular bricks of a later age. The bricks were plastered together with lime.
Artifacts unearthed
A terracotta Nandi (the bull of the god Shiva – father of Murugan), head of a woman, terracotta lamps, potsherds and a shivalinga (aniconic symbol of Shiva) made of green stone are some of the important artifacts found at the site. The Nandi is the first one made of terracotta to be found. While most of the items unearthed belong to the Sangam period, artifacts of a later period including a Chola copper coin have also been found.

வாரம் ஒரு கவிதை …..” தொலைந்து போன கடிதம் ” !!!

 

தொலைந்து  போன  கடிதம்
……………………….
நம் முகவரி தேடி  நம்மை  நாடி    ஒரு கடிதம் வந்து  நாம் அதை
பிரிக்கும் நேரம்
பிறந்த குழந்தை ஒன்று நம் கைகளிலே தவழ்வதற்கு சமமான
பெருமித  நேரம் ! ஒரு பொன்னான நேரம் !
“நலம்  நலம் அறிய  ஆவல்”…..  கடிதத்தின் இதமான நுழை
வாயில்  இதில்  நம் கால் பதிக்கும்  நேரம் …  இளம்
 காலை இனிய தென்றல் நம்மை தொட்டு நடனமாடும்
புத்துணர்வு ஒரு ஊற்றாய் சுரக்கும் நம்முள் !
தகவல் தொழில் நுட்ப புரட்சியில் பிறந்த  புது முகம் தன்
முழு முகத்தையும்  காட்டும் முன்னர் , நம் கடித
பரிமாற்றம் எல்லாம் அடங்கின ஒரு அஞ்சல் அட்டையில் !
கிடைக்கும்  இடம் எல்லாம் எழுதி எழுதி கடிதம் அதை
திரும்பத் திரும்ப படிக்க வைக்கும் திறன் சிலருக்கு மட்டுமே
கை வந்த கலை !
கைப்பட எழதிய கடிதம் தொடுவது  நம் கைகளை மட்டுமல்ல ..நம்
உள்ளத்தையும்  உணர்வுகளையும்  சேர்த்துதான் ! இன்றைய
கைபேசியும், காண்  ஒளியும் ஒரு அஞ்சல் அட்டைக்கு இணையாகுமா ?
வலையின் அலையில் நாம் தொலைத்து  மறந்த  கடித பரிமாற்றம்
அதே வலையின் அலையால் மீண்டும் ஒரு நாள் கரை வந்து சேரும் !
காத்திருப்போம்  நாம் கரையில்  அதுவரை !
” மாற்றம் ஒன்றுதான் நிரந்தரம் ஒருவர் வாழ்வில் ” என்னும்
  கூற்றை  மறக்காமல் , மறுக்காமல் !!!
K .Natarajan

” உன்னால் முடியும்” : உணவு தேடலில் உருவான தொழில் வாய்ப்பு ….

படித்து முடித்ததும் வேலை தேடி சென்னை வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவராக சென்னை வந்தவர் வினோத். சொந்த ஊர் திருப் பத்தூர் அருகில் உள்ள கிராமம். படித்தது எம்டெக் பயோ டெக்னாலஜி. வீட்டு உணவு சாப்பிட்டே பழகியவருக்கு, தங்குமிடத்துக்கு அருகில் உள்ள ஓட்டல் உணவு சரி யில்லாததால் பல அவஸ்தைகள். அதன் பிறகு யோசித்ததுதான் வீட்டில் சமைக்கும் உணவுகளை தேவைப்படுபவர்களுக்கு ஒருங்கிணைக்கும் இணையதளம்.

ஒரு வருட திட்டமிடலுக்குப் பிறகு, உணவு சமைத்து தரும் வீடுகளையும், தேவைப்படும் வாடிக்கையாளர்களையும் ஒருங்கிணைத்து வெற்றி பெற்றுள்ளார். வளரும் தொழில்முனைவோரான இவர் தனது அனுபவத்தை இந்த வாரம் பகிர்ந்து கொள்கிறார்.

வேலை தேடி வந்த புதிதில் மேடவாக்கத்தில் தங்கினேன். வீட்டு சாப்பாட்டுக்கு பழகிய எனக்கு அங்கிருந்த ஓட்டல் உணவை சாப்பிட முடியவில்லை. அந்த பகுதியில் சிறிய ஓட்டல்கள்தான் இருந்தன. தரமான பெரிய ஓட்டல்களும் கிடையாது. பெரிய ஓட்டல்கள் இருந்தாலும் சாப்பிடும் வசதி இல்லை.

ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பல பேச்சிலர்களும் இந்த ஓட்டல்களில்தான் சாப்பிடுவார்கள். சப்பாத்தி சரியில்லை என்று புகார் செய்தால் நாளைக்கு சரி பண்ணிடுறோம் தம்பி என்று அனுப்பி விடுவார்கள், அடுத்த நாளும் அதே போல் இருக்கும். திரும்ப புகார் செய் தால் இஷ்டம் இருந்தால் சாப்பிடுங்கள் என்று முகத்தில் அடித்ததுபோல பதில் வரும். இவர்களை விட்டால் வேறு வழியும் இல்லை. சொந்தமாக சமைத்து சாப்பிடலாம் என்று முயற்சி செய்தால், எல்லோருக்கும் நேரம் ஒத்துழைக்க வில்லை.

தங்கியிருந்த பிளாட்டின் ஐந்து வீடுகளில் நாங்கள் மட்டும்தான் பேச்சிலர்கள். நான்கு குடும்பங்கள் ஆளுக்கு ஒரு நாள் எங்களுக்காக எக்ஸ்ட்ராவாக சமைத்து கொடுத்தால் நிம்மதியாக இருக்கலாம் என அவ்வப்போது நண்பர்களுக்குள் பேசிக்கொள்வோம். ஆனால் இந்த யோசனை சரியான தீர்வாக இருக்கும் என்று எனக்குப் பட்டது.

வீட்டு சாப்பாடு வழங்குகிறோம் என பல உணவகங்கள் ஏற்கெனவே ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுக்கின்றன. ஆனால் இவர் களும் கிட்டத்தட்ட ஒட்டல் போலவே ஒரு இடத்தில் சமைத்து ஆர்டர்களுக்கு ஏற்ப டெலிவரி செய்கின்றனர்.

ஆனால் எனது திட்டம் வீடுகளில் சமைப்பதையே வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது. அதாவது ஒரு வீட்டில் தினசரி ஐந்து சாப்பாடு சமைத்து தர முடியும் என்றால் அதை வாங்கி வாடிக் கையாளர்களுக்குக் கொடுப்பது. பல குடும்பங்கள் இப்படி இணைந்தால் பேச்சிலர்களில் உணவு சிக்கல் தீரும் என்பது எனது எண்ணம். இதற்காக வேலையிலிருந்து விலகி ஒரு வருடம் ஆய்வு, ஆரம்ப வேலைகளில் இறங் கினேன்.

இணையதள உருவாக்கம், மார்க் கெட்டிங், ஒருங்கிணைப்பது போன்ற வேலைகளோடு நிறுவனத்தை பதிவு செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ப்ரம்எஹோம் இணையதளத்தை அறிமுகப்படுத்தினேன்.

எங்களது இணையதளத்தில் உணவுகளை ஆர்டர் கொடுப்பதற்கு என்று தனியாக உணவு பட்டியலோ, விலையோ கிடையாது. குடும்பத் தலைவிகள் தாங்களால் என்ன சமைக்க முடியும், அதற்கான விலை என்ன என்பதை முன்கூட்டியே பதிவு செய்து விடுவார்கள். வாடிக்கையாளர்கள் அவரது மெனுவை பார்த்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் கேரள குடும்பம் இணைந்தால் கேரள உணவும், பெங்காலி குடும்பம் இணைந்தால் பெங்காலி உணவும் அவர்களது பாரம்பரிய முறைப்படியே கிடைக்கும்.

குடும்பத் தலைவிகள் தாங்கள் சிறப்பு உணவுகள் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும்.

உணவு சமைத்து தர விரும்புவோரின் சமையல் திறன், வீடுகளின் கிச்சன், அவர்களது வாழ்க்கைதரம், சமைக்கப் பயன்படுத்தும் தண்ணீர் ஏரியா என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மேற்கொள்கிறோம். இவர்களுக்கு கிடைக் கும் ஆர்டர்களிலிருந்து கிடைக்கும் கமிஷன் தான் எங்களது வருமானம்.

ஆரம்பத்தில் பேச்சிலர்களை குறி வைத்தே இதை தொடங்கினேன். ஆனால் தற்போது வயதானவர்கள்தான் அதிக வாடிக்கையாளர்களாக இருக்கின் றனர். தற்போது நேரடியாக எட்டு பேர் வேலைபார்க்கிறார்கள்.

சுமார் 15-க்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகள் சுயமாக சம்பாதிக்க வைத்துள்ளேன். உணவு சார்ந்த தொழில் என்பதால் மிகுந்த கவனமும் பொறுப்பும் இருப்பதை உணர்கிறேன்.

தவிர நானே தொழில்முனைவோராக இருந்து, குடும்பத்தலைவிகள் பலரும் சுயமாக சம்பாதிக்க பாலமாக இருக்கி றேன் என்கிறபோது பொறுப்பு பல மடங்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றார். இவருக்கு ஏற்பட்டது உணவு பசி மட்டுமல்ல… அதுக்கு மேலே என்கிறது அனுபவம்.

maheswaran.p@thehindutamil.co.in

Source …….நீரை மகேந்திரன்  in http://www.tamil.thehindu.com

Natarajan

இந்த வாரக் கவிதை …..” புதுமை பொங்கல் ” !!!

புதுமை பொங்கல்
…………….
தை பிறந்தால் நல் வழி பிறக்கும் …வாழ்வு சிறக்கும்  !
பிறக்கும் தை மாதமதை நாம்  கை தட்டி வரவேற்போம் !
இரு கரம் கூப்பி  தை தாய்க்கு வந்தனமும்  செய்வோம்
நம் வாழ்வு சிறக்க ..  நாடு செழிக்க வேண்டி !
புதுப் பானையில்  மஞ்சள் கொத்துடன் ,செங்கரும்பு சூழ
 நம் வீட்டில் பொங்கல்  பொங்கும் நேரம்
நமக்கு பொன்னான நேரம் !…நாம் தொடுவதெல்லாம்
பொன்னாக மாற  இதுவே  அச்சாரம் !
பொங்கலுடன் சேர்ந்து மங்களமும்   பொங்கட்டும் …பொங்கும்
மங்களம் தங்கட்டும் நம் எல்லோர்  இல்லத்திலும் உள்ளத்திலும் !
பொங்கல் வாழ்த்து பிறருக்கு நாம் சொல்லும் அதே நேரம்
மறக்காமல்  சொல்லவேண்டும்  பல்லாயிரம்   நன்றி …
புத்தரிசி கொடுத்த பெருமகன் , வேளாண் குடிமகன் அவனுக்கு !
சேற்றில் கால் வைக்க அவன் மறுத்தால்  , பொங்கல் சோற்றில்
கை வைக்க முடியுமா நம்மால் ? மறுக்க முடியாது  இந்த உண்மையை !
உன்ன உணவு கொடுக்க உழைக்கும்  உழவனவன் இறைவனே நமக்கு!
வரும் தை பொங்கல் நன்னாளில் நம் வீட்டு பொங்கலை உழவர்
 குடும்பம் ஒன்றுடன் சேர்ந்து அமர்ந்து பகிர்ந்து நாம் உண்ணும்
தருணம் நம் வீட்டு பொங்கலுக்கு பெருமை சேர்க்கும் !
தித்திக்கும் பொங்கல் நன்னாளில் புதுமை இதை
நாம் செய்தால் நம் வீட்டு பொங்கலின் தித்திப்பு மேலும் கூடும் !
Credit……. My kavithai  published in http://www.dinamani.com  on 18 Jan 2016
natarajan

படித்து வியந்த செய்தி …” மணி …தங்க மணி ” !!!

தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகில் உள்ள கீழ்தும்பலஹள்ளி கிராமத்து சாலையில் சென்று கொண்டிருந்தோர், அங்கே நடப்பதை பார்த்து, சில நிமிடம் நின்று, ரசித்து, வியந்தபடி சென்றனர்.
அப்படி என்ன சாலையில் நடந்தது… மலர்களால் வேயப்பட்ட சிறிய வண்டி ஒன்றை இழுத்தபடி சென்றது ஒரு நாய். வண்டியின் மேல் மாவிளக்கு வைக்கப்பட்டிருந்தது.
‘மெள்ள வா ராசா…’ என்று அதை, அன்புடன் வழி நடத்தி, அழைத்துச் சென்றார் ஒருவர். அவரிடம் இது குறித்து விசாரித்த போது, நெகிழ்ச்சியுடன், மகிழ்ச்சியாக அவர் பகிர்ந்து கொண்ட அன்பின் கதையிது:
என் பெயர் தங்கவேலுங்க; அந்தக் காலத்து 10ம் வகுப்பு. மனைவி பெயர் கோவிந்தம்மாள். தமிழ் மொழி மீது இருக்கும் பற்று, பாசத்தால், என் ரெண்டு பொம்பளப் பிள்ளைகளுக்கும், இலக்கியா, குறளரசி என்று பேர் வைச்சுருக்கேன்.
வீட்டில் நாலு மாடுக இருக்கு; பால் கறந்து சொசைட்டிக்கு ஊற்றி, அதன் மூலம் வரக்கூடிய வருமானத்தில் வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.
ஒருமுறை, சந்தைக்கு போயிருந்த போது, இவன் சின்னக்குட்டியா இங்கேயும், அங்கேயுமா ஓடிட்டு இருந்தான். பார்த்ததுமே பிடிச்சுப் போச்சு. வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டேன். ஏற்கனவே எனக்கு ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க இருக்கிறதாலே, இவனுக்கு, மணின்னு பேர் வச்சு, பையனா நினைச்சு வளர்த்துட்டு வர்றேன். எங்க குடும்பத்துல ரொம்ப முக்கியமான ஆளு இவன்.
எனக்கு மணியும், மணிக்கு நானுமா இருந்தா போதும்; வேறே எதுவும் வேணாம். எங்களுக்குள்ள அப்படி ஒரு பாசம் ஏற்பட்டு போச்சு. அவன் இல்லாம எனக்கு பொழுது விடியவே செய்யாது.
வீட்டுலயிருந்து பால் கேனை தூக்கிட்டு, 1 கி.மீ., தூரத்திலுள்ள சொசைட்டிக்கு நடந்து போவேன். அப்ப, மணியும் கூடவே வருவான். நான் பால் கேன் தூக்கிட்டு சிரமப்பட்டு நடக்கிறேன்னு நினைச்சானோ என்னவோ… என்னை தூக்க விடாம, அவன் வாயில் கவ்வி நடக்க ஆரம்பிச்சான். என்ன சொன்னாலும், கேனை தர மாட்டான். ஆனா, அவனாலும் கேனை தூக்கிட்டு நடக்க முடியாம, கேன் தரையில் தட்டுச்சு. அப்புறம் தான், 1,500 ரூபாய் செலவு செய்து, ஒரு சின்ன வண்டி தயார் செய்து, அதுல பால் கேனை வச்சதும், உற்சாகமாக இழுத்துட்டு நடக்க ஆரம்பிச்சான்.
ஒரு கட்டத்துல, கேனை வண்டியில வச்சுட்டா போதும், கரெக்டா கொண்டு போய், சொசைட்டியில சேர்த்துருவான். நான் போக வேண்டிய தேவையே இல்ல. அவங்க பாலை எடுத்துட்டு காலி கேனை வச்சதும், பத்திரமா திரும்ப கொண்டு வந்துடுவான்.
எம் புள்ளைகள யாரும் நெருங்க முடியாது. ஒரு உறுமல்லயே ஓட வச்சுருவான். ஆறு மாசத்திற்கு முன் கொஞ்சமும் எதிர்பாராம அந்த விபத்து நடந்து போச்சு.

வழக்கம் போல வண்டியில போய் பாலைக் கொடுத்துட்டு, திரும்ப வரும் போது, தாறுமாறா வந்த டெம்போ வாகனம் மணி மேலே மோதிருச்சு. ரத்த வெள்ளத்துல கிடந்தவனை பார்த்துட்டு, எனக்கு தகவல் கொடுத்தாங்க. அழுது, அடுச்சு புடிச்சு ஓடிப் போய் பார்த்தேன். வலியில எழுந்திருக்க முடியாம முனகிக்கிட்டே படுத்திருந்தான்.
அவனை அள்ளித் தூக்கிட்டு கால்நடை ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். அவனுக்கு முதலுதவி செஞ்ச டாக்டர், ‘இடுப்பு எலும்பு முறிஞ்சு போச்சு. பிழைக்கிறது கஷ்டம்; அப்படியே பிழைச்சாலும் நடக்கிறது சிரமம். போற வழியில குப்பையில வீசிட்டுப் போ’ன்னு சொல்லிட்டார்.
என் மணியைப் பார்த்து, டாக்டரு இப்படி சொல்லிட்டாரேன்னு எனக்கு மனசே ஆறலை. ஆனாலும் அவனுக்கு எதுவும் நடக்காதுன்னு என் மனசு சொல்லிட்டே இருந்துச்சு. வர்ற வழியில தண்ணி தொட்டியில இறக்கி விட்டேன். கொஞ்சம் சிரமப்பட்டாலும், அவனால காலை உதைச்சு, நீந்த முடிஞ்சது.
இதைப் பார்த்ததும், இனி மணியை காப்பாத்திடலாம்ன்னு எனக்குள்ளே நம்பிக்கை வந்து, வேற டாக்டரை போய் பார்த்தேன். அவர், ‘நாயை காப்பாத்திடலாம்; ஆனா, கொஞ்சம் செலவாகும்’ன்னு சொன்னார்.
‘பரவாயில்ல… என் மணிக்காக நான் எதுவும் செய்வேன்…’ என்றதும், ‘ஒரு நாளைக்கு மூணு முறை வெந்நீரால் மெதுவாக நீவி, குளிப்பாட்டணும். தினமும் ரெண்டு ஊசி போடணும்; ஊசி விலை கொஞ்சம் கூடுதல். நிக்க, நடக்க பொறுமையா பயிற்சி கொடுக்கணும். நேரத்துக்கு மருந்து மாத்திரை கொடுக்கணும். பச்சைக்குழந்தையை பாத்துக்கிறது மாதிரி பாத்துக்கணும்…’ என்று கூறி மருந்து, மாத்திரை எழுதி கொடுத்தார்.
டாக்டர் சொன்னபடியெல்லாம் செய்தேன். அதோட, எங்க ஊர் மாரியம்மனிடம், ‘என் மணி பழையபடி நடந்தா, அவனே நடந்து வந்து மாவிளக்கு போடுவான்’னு வேண்டிகிட்டேன்.
மூணு மாசம் மணியை கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டதன் பலன், இப்போ, மணி, பழையபடி கம்பீரமாக வலம் வர்றான்.
மாரியம்மன் கோவில் திருவிழா அன்று, பக்தர்கள் எல்லாம் அம்மனுக்கு மாவிளக்கு போட ஊர்வலமாக சென்ற போது, அந்த ஊர்வலத்தில மணியும் ஒரு பக்தனாக தன் வண்டியில் மாவிளக்கு எடுத்துப் போய், அம்மன் காலடியில் வைத்தான். இதைப் பார்த்து நிறைய பேர் பாராட்டினர்.
‘என் புள்ளைய காப்பத்தறது என் கடமைங்க; இதுக்கு எதுக்குங்க எனக்கு பாராட்டு…’ என்றார் தங்கவேல் அடக்கமாக!
வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நாய் என்று சில இடங்களில் கூறியுள்ளேன். ஆனால், தங்கவேல் பேசும் போது, ‘எம் பையன் மணி…’ என்று குறிப்பிட்டாரே தவிர, நாய் என்ற வார்த்தையே அவரிடம் இருந்து வரவில்லை.
அத்துடன், அவரிடம் நாம் போனில் பேசினால் கூட, ‘ஒரு வார்த்தை மணிகிட்டேயும் பேசிருங்க…’ என்று போனை அதன் வாயருகே கொண்டு செல்வார். அதுவும் பெரிய மனுஷன் மாதிரி, அதன் மொழியில் நம்மை நலம் விசாரிக்கும்.
இருவரிடமும் பேச ஆசையா? 98423 48790 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்!

Source…..Hariharan in http://www.dinamalar.com

Natarajan

“கம்பீரப் பார்வையும் சிலிர்த்து நிற்கும் திமிலும்: தமிழக மாட்டினங்களின் மரபும் பெருமையும்”

நம்ம ஊர் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அடுத்த கணம் நம் மனதில் தோன்றி மறைபவை துள்ளி ஓடும் காளைகளே. அவை எதுவும் சாதாரணக் காளைகள் அல்ல, கம்பீரப் பார்வையும் மேலெழுந்த திமிலுடனும் சிலிர்த்து நிற்கும் காங்கேயம் காளைகள்.

எந்தச் சந்தேகமும் இல்லாமல் காங்கேயம் காளை, நம் மண்ணின் பெருமிதம்தான். காங்கேயம் மட்டுமின்றி உம்பளச்சேரி, புளியகுளம், பர்கூர் மலை மாடு, தேனி மலை மாடு போன்றவையும் நம் மரபின் பெருமைகளைத் தூக்கிப் பிடிப்பவையே. தமிழ் மண்ணின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஆறு மரபார்ந்த மாட்டினங்களில் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.

மற்ற உள்ளூர் மாட்டினங்களின் நிலையும் மகிழ்ச்சி யடைய வைக்கும் நிலையில் இல்லை. நம்முடைய மாட்டினங்கள் வேகமாக அழிந்துவருவதற்கு, அவற்றின் பெருமைகள் சரியாக உணரப்படாததே முக்கியக் காரணம். உள்ளூர் மாட்டினங்களின் இனப்பெருக்க நடைமுறைகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு ஒருபுறம் கண்மூடித்தனமாக எதிர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் காலம்காலமாகக் கிடைத்துவந்த ஆதரவையும் பராமரிப்பையும் வேகமாக இழந்துவரும் உள்ளூர் மாட்டினங்கள் அழிவை நோக்கி நகர்ந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் காங்கேயம் அருகே குட்டப்பாளையத்தில் செயல்பட்டுவரும் சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி, நம் மாடுகளின் பெருமைகளை பகிர்ந்துகொள்கிறார்:

காங்கேயம்: கம்பீரமும் அழகும்

ஆங்கிலேய கவர்னர் ஒருவர் காங்கேயம் அருகேயுள்ள பழையக்கோட்டை கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, ராவ் பகதூர் சர்க்கரை மன்றாடியாரின் பண்ணையில் இருந்த காங்கேயம் காளைகளைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பண்ணையின் அழகு’ (Beauty of the farm) என்று அவற்றை பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப் பலராலும் பாராட்டப்பட்ட காங்கேயம் மாட்டினமே, தமிழக மாட்டினங்களின் தாய் இனம்.

 

காங்கேயம் காளைகள் சாதாரணமாக 4,000-5,000 கிலோ வண்டிபாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை. எந்தக் காலநிலையையும் சமாளித்து வாழும் திறன் பெற்றவை, உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து வாழக்கூடியவை. எல்லாம் நன்றாக இருக்கும் சூழ்நிலையில் மட்டுமல்லாமல் கடுமையான வெயில், பஞ்ச காலத்திலும் நொடித்துப் போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை.

காங்கேயம் மாட்டினம் என்றாலே காளைகள் மட்டும்தான் என்று நம்புகிறோம். பால் கொடுக்கும் பசுக்களும் காங்கேயம் வகையில் உண்டு. இறைச்சி உண்ணும் நம்முடைய பண்பாட்டில் பாலுக்கான தேவை அதிகமாக இல்லாததால், உழைப்புக்குப் பெயர் பெற்ற காளைகளே பிரபலமடைந்தன.

நமது உள்ளூர் மாட்டினங்கள் உழைப்புக்காகவே பெரிதும் அறியப்பட்டவை. ஆனால், ‘வெள்ளைப் புரட்சி’க்குப் பிறகு உழைக்கும் காளைகளைத் தாழ்வாகப் பார்க்கும் குணம் உருவாகி, இன்றைக்கு அந்தப் பார்வை பெரிதாகப் பரவலாகிவிட்டதே உள்ளூர் மாட்டினங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.

தமிழகத்தில் 1990-ல் 11 லட்சத்து 74 ஆயிரம் காங்கேயம் மாடுகள் இருந்தன. 2000-ல் அது நான்கு லட்சம் மாடுகளாகக் குறைந்து, 2015-ல் ஒரு லட்சம் மாடுகள்கூட இல்லை என்று சொல்லும் நிலைக்குச் சரிந்திருக்கின்றன.

தமிழக மாட்டினங்களின் தாய் இனம், காங்கேயம் என்று கூறப்படுவதற்குக் காரணம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட காங்கேயம் மாடுகள், அந்தந்த பகுதிக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டதால் பின்னர் தனித்தனி மாட்டினங்களாகப் பரிணமித்துள்ளன.

வாழிடம்: கொங்கு, கோவை, கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகள்.

தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.

உம்பளச்சேரி: உறுதிமிக்க கால்கள்

உம்பளச்சேரி மாடுகள் குட்டையானவை என்றாலும், கால்கள் மிகவும் உறுதியானவை. காவிரி பாசனப் பகுதி வயல்களில் உழ வேண்டுமென்றால், ஆழமான சேற்றில் மாடுகள் இறங்கியாக வேண்டும். அதற்கு ஏற்ப சிறந்த தகவமைப்பைப் பெற்றவை உம்பளச்சேரி மாடுகள். நன்கு உழக்கூடிய இவை, தஞ்சை டெல்டா பகுதியில் பரிணமித்தவை.

வாழிடம்: தஞ்சை, திருவாரூர், நாகை எனப்படும் பழைய தஞ்சை மாவட்டம்.

பர்கூர் மலை மாடு: கெட்டியான குளம்புகள்

இதற்கு செம்மறை என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த மாட்டினத்தின் பாதங்களை வலுப்படுத்துவதற்கு லாடம் அடிக்கத் தேவையில்லை. அவற்றின் குளம்பே லாடத்தைப் போல கெட்டியாகவும் உறுதியாகவும் இருக்கும். காட்டில் அதிகம் மேயக்கூடிய மாட்டினம் இது. மத்திய அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டத்தைத் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் இன்னும் சட்டமாக ஏற்றுக்கொண்டு அறிவிக்காததால், இந்த மாட்டை வைத்திருக்கும் பழங்குடிகள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். வயலில் பட்டி போடுவதற்காக இந்த மாட்டினம் அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

வாழிடம்: ஈரோடு, அந்தியூர் 

புளியகுளம்: நிலம் காக்கும் பட்டி மாடு

புளியகுளம் மாட்டின் பெயரே ‘பட்டி மாடு’தான். ‘நிலம் தரிசாதல் அதிகரித்துவருகிறது என்றும், அதைத் தடுக்கும் சக்தி ஆடு-மாடு பட்டி போடுதலில் அடங்கியிருக்கிறது’ என்றும் குறிப்பிடுகிறார் ஸிம்பாப்வே சூழலியலாளர் ஆலன் சேவரி. ஒரு வயலில் ஒரு நாள் இரவு முழுக்க ஆடு அல்லது மாடுகளைப் பட்டிபோட்டுத் தங்கவைப்பதால் அவற்றின் சிறுநீர், புளுக்கை, சாணம் போன்றவை நிலத்தில் விழும்.

இயற்கையான, இந்த உடனடி உரம் மூலம் நிலம் வளமாகும். புளியகுளம் மாடு பட்டிபோட்டால் மூன்று ஆண்டுகளுக்கு உரம் தேவையில்லை என்கிறார்கள். பட்டி போடுபவருக்கு ஒரு மாட்டுக்கு ரூ. 10-ம், ஆட்டுக்கு ரூ. 5 ம் கிடைக்கிறது. கேரளப் பகுதியில் இயற்கை வேளாண் முறையில் மேற்கொள்ளப்படும் திராட்சை சாகுபடிக்குப் புளியகுளம் மாடுகளே பேருதவி புரிந்துவருகின்றன. ஜல்லிக்கட்டிலும் இந்த மாட்டினம் அதிகமாக ஈடுபடுத்தப்படுகிறது.

வாழிடம்: புளியகுளம், சிவகங்கை, பழைய மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகள். தேனி பகுதியில் இருப்பது தேனி மலை மாடு.

காங்கேயம் பசு (பெண் மாடு) கன்றுடன் - காங்கேயம் காளையுடன் கார்த்திகேய சிவசேனாபதி

காங்கேயம் பசு (பெண் மாடு) கன்றுடன் – காங்கேயம் காளையுடன் கார்த்திகேய சிவசேனாபதி

பர்கூர் மலையினக் காளை

பர்கூர் மலையினக் காளை

கம்பீரம் நிறைந்த காங்கேயம் காளை

கம்பீரம் நிறைந்த காங்கேயம் காளை

வண்டியிழுக்கும் உம்பளச்சேரி காளைகள்

வண்டியிழுக்கும் உம்பளச்சேரி காளைகள்

புளியகுளம் மாடுகள்

புளியகுளம் மாடுகள்

தொடர்புக்கு: 04257 294234, 96295 28888
‘தி இந்து’ 2016 பொங்கல் மலரில் வெளியாகியுள்ள படத்தொகுப்பின் ஒரு பகுதி

Source……தொகுப்பு: ஆதி  in http://www.tamil.thehindu.com

Natarajan

ஜனவரி 8 1994….பெரியவா மஹா சமாதி அடைந்த நாள் …

1994 ஜனவரி 8 ஆம் தேதி ஐயன் மஹா சமாதி அடைந்த பின், வெளி வந்த ஆனந்த விகடனில், அப்போது தொடராக வந்து கொண்டிருந்த ‘அன்பே அருளே’ கட்டுரையின் 8 ஆவது அத்தியாயம். ஸ்ரீ பரணீதரன் மாமா அவர்கள் கைவண்ணம்…

சாக்கியர் கூத்தை பற்றி தொடர்வதற்குள் ஒரு பிரளய கால ஊழிக்கூத்தே நடந்து முடிந்து விட்டது.

நூற்றாண்டு பிறந்த தின வைபவமாக கடந்த மே மாதம் கனகாபிஷேக காட்சியருளி, கோடிக்கணக்கான பக்தர்களின் நெஞ்சங்களை குளிர்வித்த பெரியவா, ஒரே நொடியில் தமது சரீர உடையை உதறிவிட்டு நம் கண்ணிலிருந்து மறைந்து விட்டார்.

1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி – சனிக்கிழமை பிற்பகல் 2.58 மணிக்கு துவாதசியன்று பெரியவா மகா சமாதி அடைந்து விட்ட செய்தி ஊரெங்கும், நகரங்கள் என்றும், கிராமங்கள் தோறும், நாடு முழுவதும், உலகம் பூராவும், எட்டி விடுகிறது. கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்கள் பதறி துடித்தன. கண்ணீர் பொங்கி பொங்கி பெருகியது. பாசத்தை வளர்த்து கொண்டு விட்ட பக்தர்கள் குமுறி குமுறி அழுதார்கள்.

‘பெரியவா என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டாளே…’

‘திடீர்ன்னு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரே…’

‘இனிமே பெரியவாளை தரிசனம் பண்ண முடியாதே..அந்த கருணை வடிவத்தை காண முடியாதே…அன்பு சிரிப்பை பார்க்க முடியாதே… அமுத பேச்சை கேட்க முடியாதே…’

அப்பா அம்மா போனப்ப ஆறுதலுக்கு, பெரியவா கிட்டே ஓடி வந்தேன். இப்ப பெரியவாளே போயிட்டாளே யாருகிட்டே போவேன்?

‘பெரியவாளுக்கு முன்னாலே நான் போயிடணும் ன்னு பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தேன். என்னாலே யாருக்கு என்ன பிரயோஜனம்?

பெரியவா இருந்தா உலகத்துக்கே க்ஷேமமாச்சே…’

‘நான் கொடுத்து வெச்சவன் சார், பெரியவா மௌனவிரதம் ஏற்பதற்கு முன்னே ஒரு நாள் தரிசனத்துக்கு போயி இருந்தேன். நிறைய பேசினார் அமோகமா அனுக்கிரகம் பண்ணினா…இப்படியே பேசாம ரொம்ப நாள் உக்காந்திருப்பார் ன்னு நெனைச்சனே… மோசம் போயிட்டேனே…’

‘பெரியவாளை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாதே..நாற்பது வருஷமா பெரியவா கூட இருந்து தொண்டு பண்ணினேன்…எவ்வளவு பேசி இருக்கா…ஒரு தரம் என்னை கோவிச்சிண்டுட்டா…ஏண்டா, உன்னை ரொம்ப கோவிச்சிண்டுட்டேனா? வருத்தமா இருந்ததா ன்னு அடுத்த நிமிஷமே குழந்தை மாதிரி விசாரிச்சாளே…எப்பு கோவிச்சிக்க இப்ப பெரியவா இல்லியே…’

‘பெரிய எசமான் உள்ளே படுத்துண்டு இருக்காங்க ன்னு ஒரு தைரியம் இருந்துதுங்க. எட்டி பார்த்தா அவங்க இருக்க மாட்டாங்களே…’

‘தெய்வம் என்னை தனியா விட்டுட்டு போயிடுச்சுங்க…உலகமே இருளோன்னு இருக்குதே..’

இப்படி பல்வேறு தரப்பட்ட பக்தர்கள் கதறி கதறி தீர்த்துவிட்டனர். தன் தாய், தந்தை, குழந்தை, நெருங்கிய உறவினர் இவர்களை இழந்து விட்டவர்கள் போல் என்னிடம் தேம்பி தேம்பி அழுதனர். என் சொந்த துயரத்தை உள்ளடக்கி பொங்கிய கண்ணீரை தேக்கி நிறுத்தி, அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றிக்கொண்டு இருந்தேன்.

என்னால் தேற்ற முடியாமல் போனது அந்த ஆறு வயது சிறுமியைத்தான்.

‘எனக்கு மூணு வயசு இருக்கறப்போ பெரியவா கல்கண்டு கொடுத்தா. அதுக்கப்பறம் பெரியவாளை நான் பார்க்கவே இல்லை. அழைச்சிண்டு போ ன்னு அப்பா கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அழைச்சிண்டு போகலே. இப்போ சாமி கிட்டே போயிட்டாரே.நான் இனிமே பெரியவாளை எப்படி பார்க்கிறது?’ என்று அந்த சிறுமி கண்கலங்கிய போது, எப்படி தேற்றுவது என்று கலங்கி போனேன் நான்.

ஜனவரி முதல் தேதியன்று பத்து நிமிடங்கள் மட்டுமே பெரியவா தரிசனம் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு பொது தரிசனமே இல்லை. உடல்நிலை சரியில்லை. வைத்தியர்கள் அருகிலேயே இருந்து தேவையான சிகிச்சைகள் அளித்து கொண்டு இருந்தார்கள்.

8-ஆம் தேதி சனிக்கிழமை அன்று உடல் நிலை தேறியது. ஈச்சங்குடியில் வாங்கியுள்ள பெரியவாளின் பூர்வாச்ரம தாயாரின் இல்லத்தில் வைப்பதற்காக தயாரான அப்பா அம்மா படங்கள் அவரிடம் காட்டப்பட்டது. அதை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தார்.

பாலுவிடம், ‘நீ கலவை பார்த்திருக்கியோ அங்கே போயிருக்கியோ?’ என்று கேட்டிருக்கிறார்.

எதற்கு திடீர் என்று கலவையை நினைத்துக்கொண்டாரோ?

யாரோ ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். ‘சௌக்கியமா இருக்கேளா?’ என்று உரத்த குரலில் கேட்டிருக்கிறார்.

‘பெரியவாளோட பழைய குரல் மாதிரி இருந்தது. எங்களுக்கெல்லாம் ஆச்சிரியமாக போய்விட்டது…’ என்றார் திருக்காளாவூர் ராமமூர்த்தி.

‘பிரும்ம ஸ்ரீ சாஸ்த்ரிகள்’ என்று பெரியவா பெயரிட்ட வேதபுரியை பார்த்து ‘கையில் என்ன?’ என்று கேட்டாராம். ‘பெரியவாளோட மரக்குவளை…அலம்ப எடுத்துண்டு போறேன்…’ என்று பதில் கூறி விட்டு போயிருக்கிறார்.

பெரியவா சாதாரணமாக இருப்பதை அறிந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிக்ஷையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். பிறகு படுக்க வைத்து இருக்கிறார்கள். அரை நொடியில்…அனாயாசமாக அப்போது மணி 2.58…

அல்லும் பகலும் ஒவ்வொரு கணமும் கண்ணிமை போல் பாதுகாத்து வந்த திவ்ய சரீரத்தை பார்த்து கதறி தீர்த்து விட்டார்கள் அந்த புண்ணியசாலிகள். மஹா சுவாமிகளுக்கு கைங்கர்யம் செய்தவர்கள் அத்தனை பெரும் பாக்கியசாலிகள். யார் பெயராவது விட்டு போய் விடுமோ என்பதால் அவர்களது பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.

அன்று மதியம் இரண்டரை மணி அளவில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பால சுவாமிகளுடன் தாம்பரம் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று வர, பெரியவாளிடம் உத்தரவு பெற்று சென்றதை கண் கலங்கியவாறு கூறினார். சென்னைக்கு செய்தி சென்று, தாம்பரத்தை அடைவதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டு, இரு சுவாமிகளும் மாலை ஐந்து மணியளவில் ஸ்ரீ மடத்துக்கு வந்திருக்கிறார்கள்.

துறவியேனும் நாற்பது ஆண்டு கால தொடர்பின் பின்னணியும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நினைவில் அலைமோத ஸ்ரீ ஜெயேந்திரர் நெஞ்சம் குமுறி கண்ணீர் வடித்ததில் வியப்பென்ன? ஒப்புயர்வற்ற குருவின் உபதேசம் பெற்றதற்கும், பிரம்ம ஞானியிடம் பாடம் பயின்றதற்கும், மகானிடம் அறிவுரை கேட்டதற்கும் முற்பிறவியின் நற்பேறு அன்றோ காரணம் என்ற நன்றி கண்ணீர் அல்லவா அது!

அத்தருணம் உள்ளத்தில் எழுந்த சிந்தனைகள் எல்லாம் கூற முடியாமல் துயரமே உருவாக சோகமே வடிவாக அமர்ந்திருந்தாலும் – மறுநாள் நடக்க வேண்டிய சடங்குகளில் தீவிர கவனம் செலுத்தி, பக்தர்களிடம் ஆணைகள் பிறப்பித்துக்கொண்டு இருந்தார்.

பால சுவாமிகள் அங்கும் இங்கும் எங்கும் காணப்பட்டார். ஒரு கணம் தரிசித்து ஆறுதல் பெற காத்திருக்கும் பக்தர்களை சந்தித்தவாறே, தேவையான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தார்.

என்னை கண்டதும் தனியே அழைத்து சென்று, ‘ஏமாந்து போயிட்டோம்…இன்னிக்கு நன்னா தான் இருந்தா. பேசினா, சிரிச்சா, பிக்ஷை பண்ணினா…தைரியமா இருந்தது. தாம்பரம் போயிட்டு வந்துடலாம் ன்னு புறப்பட்டோம்…எதிர்பார்க்காம சேதி வந்தது.’என்று நடந்தவற்றை கூற தொடங்கினார். நடந்து சென்றவாறே ஒருவருக்கு கையசைப்பு, ஒருவரை அருகில் வரசொல்வது, இன்னொருவரை பார்த்து, ‘ஒ, வந்திருக்கேளா?’ என்று கேட்பது. ‘உங்களுக்கு எப்போ தெரியும்?’ என்று பரிவுடன் விசாரிப்பது…’பிருந்தாவன வேலை வேகமா நடந்து கொண்டு இருக்கிறதா?’என்று பார்வையிடுவது… பம்பரமாக சுற்றி சுழன்று கொண்டிருந்தார் பால பெரியவர்.

பக்தர்கள் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது. வேகமாக நகர்ந்த க்யு இரண்டு கிலோ மீட்டர் வரை நீண்டது. வெகு விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவலர்கள் பணி போற்றத்தக்கதாய் இருந்தது.

மேடையில் பெரியவாளின் திருமேனி ஒளிர்ந்து கொண்டு இருந்தது. நான்கு ஆண்டுகளாக நாம் கண்ட தரிசனம். ஒரே ஒரு வித்தியாசம்…எவ்வித அசைவும் இல்லை…மூலவராகிவிட்ட நிலையில், தெய்வீக சாந்நித்யம் நிலவியது. சுற்றிலும் மடத்து சிப்பந்திகள். அவ்வப்போது, இரு சிஷ்ய சுவாமிகளும் வந்து உடனிருந்தார்கள்.

எதிரில் நகர்ந்த க்யூ வில் கும்பிட்டவர்கள், குமுறி அழுதவர்கள், கன்னத்தில் போட்டு கொண்டவர்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள், இஸ்லாமிய பெருமக்கள், கிறிஸ்துவ சகோதர-சகோதரிகள், வெளிநாட்டினர், பல சமயத்தினர், பல மொழியினர் பொது வாழ்வில் பலதுறை சேர்ந்தவர்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், தள்ளாடும் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர்…

ஒரு புறம் ஒலிப்பெருக்கியில் ‘ஜெய ஜெய சங்கர…ஹர ஹர சங்கர…’கோஷம், நாம சங்கீர்த்தனம், பக்தி பாடல்கள், தேவாரம், திருப்புகழ், சகஸ்ர நாம பாராயணம், வேத முழக்கம்…. மேடை நிரம்ப மணம் பரப்பும் மலர் கொத்துக்கள், வாசனை திரவியங்களின் புகை மண்டலம்…தேவலோக சூழ்நிலை…

பன்னிரண்டு மணிக்கு மேல் மகாபிஷேகம் தொடங்கியது. பிரதம சீடர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள், குருவின் திருமேனிக்கு முறைப்படி அபிஷேக, அர்ச்சனைகள் செய்வித்து, தூப தீப கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டது, ஆலயம் ஒன்றில் சிவபூஜை நடைபெற்றது போன்ற உணர்வை தோற்றுவித்தது.

இறுதியாக நான்கு மணியளவில் பிருந்தாவன பிரவேச ஊர்வலம் புறப்பட்டு அருகிலிருந்த மாளிகைக்குள் சென்றது.

வெளியே இருந்தவர்களுக்கு புனித திருமேனியின் கடைசி புண்ணிய தரிசனம் அதுவே

Read more: http://periva.proboards.com/thread/10890/06-01-2016/#ixzz3wZpAMVSV

Source…….www.periva.proboards.com

Natarajan

 

 

 

“Periva’s Miracles- Always race with the time-Living example “

Periva’s Miracles- Always race with the time-Living example 

I wish to inform to the members of Periva forum, devotees of Maha Periva and readers of my post that my son, who is at Australia with his family, has reached Chennai after floods on 10th of this month. (December 2015). This is his annual visit to Chennai to take care of us every year.

After a couple of days, my only son Mr.Bharath and his wife Sow. Lakshmi wanted to go out for lunch to some good hotel along with me and my wife. I should make special mention about my small family members and their unmatched character and attitude in a short statement.

 My only son Mr.Bharath, who Exemplify the relation-ship between parents and children and we are fortunate enough to have a son like Bharath.

 My only daughter in law Sow. Lakshmi not only Lakshmi by name but Goddess Lakshmi in real sense to our sweet home.

 We are also blessed with a granddaughter by name Kriti who equals all aishwaryam to our sweet home.

Thanks to Periva’s Grace. 

We all started, on 13th December 2015 (Sunday) after noon at 12.00 Noon and reached a well reputed and posh star hotel. We all had nice time and very good lunch. The occasion was like a get together of our family after two years. All possible selfee were taken and we could reach home at 4.00 P.M. As everyone was tired, we all retired for sleep at 9.00 P.M.

Next day morning, my son got up from sleep and he was not comfortable. He was complaining of nausea and vomiting along with stomach pain. The excruciating pain was escalating every second and he said that that the pain was unbearable and he did not feel like having his Tiffin.

The pain was too much at 8.45 A.M. Myself and my wife were mentally disturbed and we did not know what to do. I am also a paralytic stoke patient and could not go out to reach any doctor. I immediately went to Maha Periva and prayed for my son’s sufferings. I prayed and took some “Vibhuti” from Maha Periva and put some Vibhuthi in my son’s mouth and applied little on his forehead also.

He slept for 10 minitues and exactly at 9.00 A.M. he came to kitchen and asked me to prepare doshas for him. I enquired about his stomach pain and he said that he is relieved of all sufferings including stomach pain. Absolutely, no traces of pain or any sufferings from 9.00 A.M, thanks to Maha Periva for HIS instant reply to my prayer.


I am sure that the experience of mine in my son’s case is a living example for the devotees of Maha Periva. Our faith on Periva never let us down in problems and crisis. Still HE is living among us and take care of devotees at all times.

What a way Maha Periva gave relief to my son. The treatment of Maha Periva is always very much clinical in nature. Even medicines may take some time to give relief or cure a disorder But Maha Periva’s blessings out beat even time.

Periva’s blessings are always  
Racing with the time, 
In serving the devotees needs. 

Read more: http://periva.proboards.com/thread/10884/periva-miracles-race-living-example#ixzz3wZkSJ99X

Source..

Gayathri Rajagopal in http://www.periva.proboards.com

Natarajan

 

” வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் …”

நவராத்ரிக்கு முந்தின வாரம். பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு தம்பதிகள், தங்கள் ஐந்து வயதுக் குழந்தையோடு வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.
“பெரியவாகிட்ட ஒரு ப்ரார்த்தனை… கொழந்தைக்கு விஜயதஸமியன்னிக்கி அக்ஷராப்யாஸம் பண்ணணும்… நவராத்ரி டைம்-ங்கறதால ஆத்தை விட்டு வரது கொஞ்சம் கஷ்டம்… கொழந்தை நன்னா படிச்சு, நன்னா வரணும்…. அதுக்கு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்…”
பெரியவா தன் முன்னால் அப்பா, அம்மாவைப் போலவே கை கூப்பிக் கொண்டு, அம்மாவையும், தன்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்கும் குழந்தையை கடாக்ஷித்தார்…
“பெரியவாளோட திருவாக்கால, கொழந்தைக்கு எதாவுது வார்த்தை சொல்லித் தரணும்….”
“இங்க வா……”
‘ஸரஸ்வதி’ அழைத்தாள்!
“நா…..சொல்றதை திருப்பி சொல்றியா?…”
“சொல்றேன்..உம்மாச்சி தாத்தா!…”
“சொல்லு….வாக்குண்டாம்!…..”
“வாகுந்தாம்…..”
“நல்ல மனமுண்டாம்”
“நல்ல மனமுந்தாம்”
“மாமலராள் ….”
“மாமலரால் ..”
“நோக்குண்டாம்….”
“நோக்குந்தாம்..”
“மேனி…”
“மேனி..”
“நுடங்காது….”
“நுங்காது…”
“பூக்கொண்டு…”
“பூக்கொந்து…”
“துப்பார்….”
“துப்பார்….”
“திருமேனி……”
“தியுமேனி….”
“தும்பிக்கையான் பாதம்”
“தும்பிக்கியான் பாதம்”
“தப்பாமல்…”
“தப்பாமல்”
“சார்வார் தமக்கு….”
“சார்வார் தமக்கு….”
குழந்தைக்கு கொள்ளை ஸந்தோஷம்! உம்மாச்சித் தாத்தா சொன்னதை, தான் அப்படியே ‘கரெக்டாக’ சொல்லிய பெருமை!
“வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது….
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு!…..”
“….ஒனக்கு ஔவைப்பாட்டி தெரியுமா?…”
“தெரியும் தாத்தா!…”
“இது….ஔவைப்பாட்டி பாடினது….தெரியுமோ? தெனோமும் சொல்லு….நன்னா படிப்பே!…”
“செரி…தாத்தா!…”
வாய்க்கு கல்கண்டும், ஞானக்கல்கண்டு மலையிலிருந்து உண்மையான நல்லறிவுக்கு கல்கண்டும், குழந்தைக்கு கிடைத்தது!
அப்போது அங்கே சில தமிழ் அறிஞர்களும் இருந்தார்கள். பெரியவா, ஸமஸ்க்ருதத்தை மட்டுந்தான் போஷிப்பார்; ஆதரிப்பார்; என்ற தவறான கருத்து அப்போது பரவியிருந்ததால், இந்த பெற்றோர் வந்து அக்ஷராப்யாஸம் செய்து வைக்க வேண்டி, பெரியவாளிடம் ப்ரார்த்தனை செய்ததும், அங்கிருந்த தமிழ் அறிஞர்கள் எதிர்பார்த்தது…..
“மூஷிக வாஹன மோதகஹஸ்தா…..” என்ற ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தைத்தான்! ஆனால், அத்தனை மொழிகளுக்கும் ஆதார ஶக்தியான ‘ஸரஸ்வதி’க்கு மொழி பேதம் ஏது?
“வாக்குண்டாம்…..” என்று பெரியவா ஆரம்பித்ததும், அவர்களுக்கு ஆஸ்சர்யம்! ஸந்தோஷம்!
“பெரியவா கொழந்தைக்கு மட்டும் உபதேஸிக்கல……எங்க எல்லாருக்குந்தான் இந்த அருமையான உபதேஸம்! இனிமே எங்க வீடுகள்ளயும், வாக்குண்டாம்-தான் மொதல் பாடம் !…”
உண்மைதான்! இன்றைய கல்வியறிவு “வாக்குண்டாம்……” ஸ்லோகத்தில் சொல்லிய ஏதாவது ஒன்றையாவது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தந்திருக்கிறதா? என்று மூளையை குடைந்து குடைந்து யோஜித்தாலும், “இல்லை” என்றுதான் ஸத்யமான பதிலாக வரும். இது பெரியவா நம் அத்தனை பேருக்குமே அனுக்ரஹித்த அக்ஷராப்யாஸம்!
இந்த புது வர்ஷத்தில், நல்ல, உயர்ந்த ஸத்யமான வார்த்தைகள், நல்ல தர்மங்களை எடுத்துக் கொண்டு கடைப்பிடிக்கும் தாராள மனது, இந்த ரெண்டையும் அனுக்ரஹிக்க “ஜகத்குரு” காட்டிய விக்னேஶ்வர மூர்த்தியின் பாதங்களை பணிவோம். குழந்தைகள் இதை தினமும் சொல்லி வந்தாலே, மனஸும் ஶுத்தமாகும், அதனால் வாக்கும் ஶுத்தமாகும், தெளிந்த நல்லறிவும் உண்டாகும்.
Source…input from a friend of mine
Natarajan

” வாரம் ஒரு கவிதை” …. ” சுடும் நினைவுகள் “….

சுடும் நினைவுகள்
…………….
…………….
தீயினால் சுட்ட புண் ஆறும் …ஆனால் ஆறாது நாவினால் சுட்ட வடு !
இது வள்ளுவன் வாக்கு !
நாவினால் சுட்ட வடு மட்டுமல்ல மறையாதது ….நம் மனசைத்  தொட்ட,
சுட்ட, சில நினைவுகளும்  அப்படித்தான் ..எப்போதும் நம்மை சுடும்
நினைவாக , ஒரு வடுவாக உருமாறும் !
நம் வாழ்வில் நாம்  சந்திக்கும் சோதனையும் பல வேதனையும்
நம்மை சுடும்
புண்ணே என்றாலும் நம்மை புடம் போட்ட தங்கமாக
மாற்றும் மருந்தும் அந்த சுடு நினைவுதான் அல்லவா !
சுட்டல்தானே பொன் சிவக்கும் … நம் வாழ்வு சிறக்க ,செழிக்க
தேவை நமக்கு ஒரு சூடு சரியான சமயத்தில் !
அது இயற்கையின் நியதியும் கூட !  இந்த நியதியை
ஒரு விதியாக விதைப்பதில் இயற்கைக்கு என்றும் இல்லை ஒரு தயக்கம்!
ஆனால் நம்மால் பிறருக்கு வரும்  சோதனையும்,  வேதனையும்
அவர்   மனத்தை முதலில் சுட்டாலும் , கட்டாயம் அவர் மீள்வார்
அந்த கட்டம் தாண்டி ….தன்   மனதில் சுட்ட புண்ணுடனும்
 சுடு நினைவுடனும் …
இதுவும் அந்த இயற்கையின் நியதியே !
பிறிதொருவர் வாழ்வில் நாம் சுட்ட புண்  நம் மனதில் ஒரு
ஆறாத , வடுவாக மாறி தினம் தினம் நம்மையே திருப்பி
சுட்டெரிக்கும் ஒரு சுடு நினைவாகும் என்பது மட்டும் உறுதி !
இது இயற்கையின் நீதி !
Credit…My Kavithai in  www.dinamani.com …Published in .Kavithai mani….on 21 dec 2015
Natarajan