” When a Problem Arises , Become the Captain of the Problem and Defeat it…” Dr. A P J Abdul Kalam

From the Archives of Rediff.com …. This   Article dates back to 6 NOV 2014….

Once, during his Presidency, President A P J Abdul Kalam received a letter from a student shocked with his class 12th mark-sheet.

He had secured 10 per cent in Maths and Physics, whereas throughout his school career, he had always scored 90 per cent and above.

In utter dismay, he wrote to the President of India, asking for his help.

President Kalam referred his case to the authorities and two weeks later got a reply that indeed there was a mistake in the evaluation and a rectification had been done.

APJ Abdul Kalam

In the last 15 years, President Kalam — arguably India’s most popular President and among the founders of the country’s space programme — has interacted with 18 million young Indians, face-to-face, through e-mail and over Facebook.

He receives 300 e-mails everyday.

Some of these letters have been turned into his latest book Forge Your Future, which provides an insight into the issues which concern and engage the minds of young Indians today. President Kalam’s replies are based on his personal experiences, his reading and his interactions with political and spiritual leaders.

The title of the book was selected after an online public vote.

In his quiet bungalow in Lutyens’ Delhi, President Kalam speaks to Archana Masih/Rediff.com about India becoming a developed country by 2020-2022, the heroes he admires, how 90 per cent of India’s space programme is intended for the people and the individual’s potential to become unique.

Photographs: Rajesh Karkera/Rediff.com

Dr Kalam, please can you tell me a little about your daily schedule? What’s it like 

The garden here has a 107-year old tree. Edwin Lutyens himself built and stayed in this house — so he maybe somewhere here (laughs).

His relatives had come to see this building.

The 107-year-old tree is beautiful. Parrots and various other birds live at the top and at the bottom live peacocks. Every year there are baby peacocks. I have a very bioactive tree.

I walk for 1 hour and 15 minutes every day. I spend time in my library.

In a month, I spend 15 days travelling in India. For ten days in a year, I go abroad. I am an honorary professor at the University of Beijing.

Every month, I meet a minimum of 100,000 young people. A million people in a year. So far I have met 18 million young people below the age of 25 in my country.

You get 300 e-mails everyday and spend two hours answering them. When did this process begin? When did you start actively engaging with young people?

It all started when I wrote Wings of Fire, in which I conveyed my life, how I had lived it, how I got myself educated, how I started meeting youth…

I was also teaching at Anna University at that time. After my work as scientific advisor, then projector director SLV 3, programme director AGNI — after all that I went in 2001 to Anna University as a professor.

I also get some handwritten letters. I consider them very important and I love to reply to them because they come from people from the grassroots who do not have access to the Internet. They come with unique questions and I have to give unique answers.

APJ Abdul Kalam

You mention what President Mandela told you about courage in your book — who are some of the most inspiring world leaders you have met?

Two world leaders exclusively come to my mind — Mahatma Gandhi and his unique life. Similarly, Nelson Mandela. I went to the prison where Mandela lived.

Where there is righteousness in the heart, there is beauty in the character. That’s the example of Mahatma Gandhi throughout his life.

In 2006, I travelled in the same kind of train with a steam engine from Durban to Pietermaritzburg. I could imagine the courage which Gandhiji showed in that cold winter.

Ahimsa dharma came after the battle of Kalinga. It transformed King Ashoka. The second time ahimsa dharma was put into action was by Mahatma Gandhi at Pietermaritzburg.

This book gives three messages. First: You can become a unique personality. Mahatma Gandhi and Nelson Mandela were unique.

The other important thing about this book is about continuously acquiring knowledge. Thirdly, when the problem arises — become the captain of the problem and defeat it.

You envisioned a growth plan for India called Vision 2020. How close are we to achieving that vision, in view of that deadline being six years away?

Actually India 2020 is a vision for an economically developed India by 2020. Up to 2008 our GDP was 8 to 9 per cent. Then there was a problem across the Atlantic Ocean, and our GDP crashed to 6 to 7 per cent, then to 5.5 and then to 5 per cent.

So in the 2008-2014 period, we had a slack in our development programme.

Six years is a long period in a nation like India with 600 million youth, nowhere in the democratic world there exists this strength.

We also have a natural way of life. Our agriculture is doing well. We have 250 to 260 million tons of food. Our IT, small scale and pharma industries are doing very well.

Of course, we have to do lots in the development of the rural area. We have 600,000 villages where 700 million people live. We have to Provide Urban Amenities to Rural Areas (PURA). Seven thousand PURAS are needed to lift 600,000 villages.

Even now it is not too late. Fortunately, I understand the present government is taking a priority for PURAS. If they push it along with small scale industry and smart waterways, then definitely 2020 — plus or minus 2 years — we can get there.

So you are confident by 2022, that we may be able to do it?

We can do it, provided we have a national vision.

Do we have that national vision?

From 1930 to 1947, we wanted Freedom. Our caste system vanished, our religions vanished, our differences vanished and we were fighting only for Independence. I call that the first mission that India had.

The second vision: Economic development. If you work like that and declare that mission in Parliament and people and government work for it, irrespective of whichever party they belong to, it is possible. Because our resources are youth power and our natural resources.

The Book Cover

Image: President Kalam’s latest book Forge Your Future

In your book, you say ‘The orientation must turn from the past to the future and focus on how India can become a developed nation. The real issue is that we are not to see ourselves as a nation and because of that there is no national vision.’

Why do you think we have not been able to see ourselves as a nation?

When we see the types of conflicts all around — religious conflict, caste system, language problems — any big nation will have such types of problems but the nation can be united for a big cause.

Independence was a big cause that united us. That’s why I am pushing this idea that the tool for India Vision 2020 is Providing Urban Amenities to Rural Areas. This way we can enhance village development. I have talked about all this in my book.

Independence was a common goal that united people, but some would say that India today is more divided than what it was then.

Any nation goes through a number of problems in various decades, but India has the experience of bringing together people on a big cause.

I am a believer.

The second great movement that India needs is India 2020 Vision and this will make people come together. Plus if the economic programme grows, the poverty level will come down.

Only a national vision can lift 300 million — that’s one third of the population — below the poverty line out of poverty.

As one of the co-founders of India’s space programme, you must be very proud of our Mars achievement. But at the same time when you say that we have to lift the large masses that remain poor, should not basic needs like healthcare, education, infrastructure precede loftier goals or at least go hand in hand?

The space programme is targeted at uplifting the people. In geosynchronised orbit, more than 200 transponders are communicating to the Indian earth station.

These transponders transmit communication, weather reports, 24 hour TV broadcast, the path of cyclones.

All the recent major cyclones have been forecast by various satellites. 90 per cent of the space programme is for remote sensing and communication. You can remote sense what is the kind of wealth we have on earth like water, minerals etc — so it is intended for the people. 90 per cent of the space programme is intended for the people. It is a people’s programme.

You asked about the Moon and Mars programme. We are spending less than 10 per cent of our space programme for finding and research on Moon and Mars so that we are partners in the research and no one can claim that it belongs to them. I don’t want to see Moon and Mars as the property of some other nation. It should be international property.

Ours is the lowest cost of going to the Moon or Mars and we found trace of water also on the moon. From Mars we don’t know… some revolutionary ideas will come from our Mars programme.

What kind of a leader was Vikram Sarabhai, the founder of India’s Space programme?

When you read this book Forge Your Future, you will know how to become a unique person. It contains the experience of great thinkers and doers. Dr Vikram Sarabhai was a unique personality.

He was a visionary. In 1970 he gave a report about what the nation’s space programme should be for the next 20 years.

What according to you are India’s greatest strengths?

One is our farmer community. Whatever weather condition, whatever shortfall — they will give us 200 million tones of food.

Hats off to our farmers and our agriculture scientists!

Second is youth power. No other democratic nation has 600 million youth. The ignited mind of the youth is the most powerful resource — on the earth, above the earth, under the earth — and we have that.

Third, just like every family asks the government for an economically developed nation; every family has the responsibility to give a great citizen to the nation.

We have 200 million families. Parents have the responsibility to make their children righteous — where there is righteousness in the heart, there is beauty in the character.

Only three people can give a good citizen before s/he turns 17. Father, mother, the spiritual environment and the primary school teacher.

You mention women like Marie Curie and Sister Antonia as role models. Who are some contemporary Indian women role models you admire?

I have great respect for Dr V Shanta, for her contribution towards cancer diagnosis, treatment and teaching how to avoid cancer. I admire the mission of Ela Bhatt, founder of the Self-Employed Women’s Association of India and, of course my favourite, whom I respect because I like Carnatic music — M S Subbulakshmi. I love her music.

When she was alive, I used to go to her music festival.

President A P J Abdul Kalam

You say in the book that India needs to cast off its inferiority complex vis-a-vis China and work towards coming together to become a master civilisation because together they constitute 37% of the world’s population.

How can this be achieved in the background of the tension, hostility and border incursions?

I remember in April 2007, I addressed the European Parliament. There were around 800 parliament members from 23 nations.

I told them when I see you all — for hundreds of years you were fighting each other and you generated two World Wars, so a billion Indian people congratulate you. Forgetting all your wars, forgetting the difference of society, you formed a European Union for prosperity and peace.

This should be an example. I had composed a poem and recited it there. They gave a standing ovation.

That is not the issue, the issue is that such nations that created World War I and II, when they came together, we — China and India — are a people of great civilisation, in spite of all the differences, there are some great philosophy that is common.

Buddha and Confucius are common to us.

I believe we have to have a great mission. I suggested when the Chinese president came here that we have a World Knowledge Platform. I teach at the University of Beijing, I told them the time has come that both nations should combine our core competence, our 60 billion dollar business, should become 250 billion dollars.

The border issue we should sort out once for all. People of the European Union fought for hundreds of years, a people who generated two World Wars and Hitler and lost millions of people are a union today for economic growth and peace and it happened in front of our eyes.

So for me the differences between nations can be solved by mutual discussions.

Both sides should decide what we can give and what we cannot. It should be an intensive one month discussion with experts and we should sort it out. I hope the present governments in India and China will do that.

What are your thoughts on the present government?

We are getting into politics, next question!

I just asked your thoughts…

Any elected government will perform in five years. We have to give time.

You believe social media affected the results in 30 to 40 per cent Lok Sabha constituencies. How will social media and the Internet affect future elections?

Social media and the type of information flow should have credibility. It reaches fast. It connects people. It is one of the important mediums for putting forth ideas, thoughts and discussing problems.

In India, we also need contact on the ground, but in the future I see that you can sit in your home with a biometric signature and security approved and you can vote. That way you will have 100 per cent voting. It is a long way off, but I visualise it.

Selection of the candidates will also follow an electronic process — to determine if s/he is a good or bad candidate, how many cases s/he has etc. This will happen, it is only a question of time.

Archana Masih/Rediff.com in New Delhi 

Source….From The Archives of  www.rediff.com

Natarajan

” காஞ்சி மஹிமை ….”

‘கச்சி மூதூர்’ என்று சங்க இலக்கியமான ‘பெரும் பாணாற்றுப்படை‘ முதலியவற்றிலேயே சொல்லப்படும் அந்தப் புராதனமான நகரம் மகாக்ஷேத்ரம் என்பதாக மட்டுமின்றி பெரிய வித்யா ராஜதானியாகவும் இருந்திருக்கிறது.

வடக்கே காசி மாதிரி தெற்கே காஞ்சி. “சான்றோர் உடைத்து” என்று சிறப்பிக்கப்படும் ‘தொண்டை நன்னாட்டின்‘ தலைநகரம் அதுதான். “கடிகா ஸ்தானம்” எனப்படும் சமஸ்கிருத யுனிவர்சிடி இருந்த நகரம் அது. அப்பர் சுவாமிகள் “கல்வியைக் கரையில்லாத காஞ்சி மாநகர்” என்கிறார். பல மத சித்தாந்திகளும் கூடியிருந்த இடம் அது என்று ‘மணிமேகலை‘யிலிருந்து தெரிகிறது.

பௌத்தம், ஜைனம், காபாலிகம் முதலான எல்லா மதங்களும் அங்கே பிற்காலத்தில் இருந்ததென்று மகேந்திர பல்லவனின் ‘மத்த விலாஸ ப்ரஹஸன‘ நாடகத்திலிருந்து தெரிகிறது. சரித்திரத்தில் சக்கரம் ஒரு முழு சுற்றுச் சுற்றிப் பழையபடியே மறுபடி நடக்கும்போது எந்த வட்டாரத்தில் எப்படியிருந்ததோ அப்படித்தான் திரும்பவும் நடக்கும்.

அதனால் ஆசார்யாள் காலத்திலும் அங்கே பல மதங்கள் இருந்திருக்க வேண்டும். இப்போதும் பௌத்த சிற்பங்கள் பல அங்கே அகப்படுகின்றன. காஞ்சி மண்டலத்துக்குள்ளேயே இருக்கும் திருப்பருத்திக்குன்றம் ஜைனகாஞ்சி என்கிற சமண தலமாகப் பேர் பெற்றிருக்கிறது.

க்ஷேத்ரம் என்று பார்க்கும்போது, ‘ரத்ன த்ரயம்‘ என்கிற ஈச்வரன், அம்பாள், பெருமாள் ஆகிய மூன்று பேருக்கும் முக்கியமான தலமாயிருப்பது அது. எண்ணி முடியாத கோவில்கள் சகல தெய்வங்களுக்கும் அங்கே இருப்பதில் ஏகம்பம் பரமேச்வரனின் பஞ்சபூத தலங்களில் ப்ருத்வீ க்ஷேத்ரமாயிருக்கிறது.

அம்பாள் காமாக்ஷியின் காமகோஷ்டம் – ‘காமகோட்டம்‘ என்பது- அத்தனை அம்மன் சந்நிதிகளுக்கும் மூல சக்தி பீடமாயிருக்கிற பெருமாள் வரதராஜாவாக உள்ள விஷ்ணு காஞ்சியை – ‘அத்தியூர்‘ என்று வைஷ்ணவர்களின் திவ்ய தேசங்களில் சொல்வது. அதை மூன்று முக்கியமான க்ஷேத்ரங்களில் ஒன்றாகச் சொல்கிறார்கள். ரங்கமும், திருப்பதியும் மற்ற இரண்டு.

விஷ்ணு காஞ்சியைத் தற்போது சின்ன காஞ்சிபுரம் என்கிறோம். பெரிய காஞ்சிபுரம் என்பது சிவகாஞ்சி. கச்சி ஏகம்பமும் காமகோட்டமும் உள்ள இடம். ரத்ன த்ரயம் மட்டுமில்லாமல் ஷண்மத தெய்வங்களுக்குமே முக்கியமான க்ஷேத்ரம் காஞ்சி.

 

பிள்ளையார் கோவில்கள் இல்லாத ஊரே தமிழ்நாட்டில் கிடையாது. அப்படிக் காஞ்சிபுரத்திலும் அநேகம் உண்டு. அங்கே ஒரு பேட்டைக்கே பிள்ளையார் பாளையம் என்று பேர். காமாக்ஷி ஆலயத்திலேயே ஆறு, ஏழு விக்நேச்வர மூர்த்திகள் உண்டு.

கஞ்சி வரதர்

காஞ்சீபுரத்தில் வரதராஜா ‘பேரருளாளப் பெருமாள்‘ என்று விசேஷமாக, விளங்கிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி ரசித்தமாக இரு சொல்லலங்கார ஹாஸ்யத் துணுக்கு இருக்கிறது.

“கஞ்சி வரதப்பா!” என்று காஞ்சீபுர வரதராஜாவை நினைத்து, வியாதியில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒருத்தர் வாய்விட்டு அரற்றினாராம்.

பக்கத்திலே ஒரு சாப்பாட்டு ராமன் இருந்தான். அவனுக்குக் கொஞ்ச நாளாக ஜ்வரம். டாக்டர், ‘சாதம் சாப்பிடக்கூடாது. கஞ்சி வேண்டுமானால் கொஞ்சம் குடிக்கலாம்‘ என்று கண்டிப்புப் பண்ணியிருந்தார். “கஞ்சி எப்போ வரும்? எப்போ வரும்?” என்று அவன் தவித்துக் கொண்டிருந்தான்.

அதனாலே, பக்கத்திலே இருந்தவர், “கஞ்சி வரதப்பா” என்று சொன்னதை, “கஞ்சி வருகிறது அப்பா” என்று அவர் சொல்லுகிறாரென்று நினைத்துவிட்டான். ஆள் யாரும் வரக்காணோமே என்பதால், “எங்கே வரதப்பா?” என்றானாம்.

பிள்ளையார் கோவில்கள் இல்லாத ஊரே தமிழ்நாட்டில் கிடையாது. அப்படிக் காஞ்சிபுரத்திலும் அநேகம் உண்டு. அங்கே ஒரு பேட்டைக்கே பிள்ளையார் பாளையம் என்று பேர். காமாக்ஷி ஆலயத்திலேயே ஆறு, ஏழு விக்நேச்வர மூர்த்திகள் உண்டு.

சுப்ரமண்யருக்கு குமரக் கோட்டம் என்று தனிக் கோயில் இருக்கிறது. கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணம் எழுதி அரங்கேற்றியதே அங்கேதான்.

கச்சபேச்வரர் கோவிலில் சூரியன் சந்நிதியில் “மயூர சதகம்” என்று நூறு சுலோகம் கொண்ட சூரிய துதி கல்வெட்டில் பொறித்திருப்பதிலிருந்து அது ஒரு முக்கியமான சூரிய க்ஷேத்ரமாகத் தெரிகிறது.

 

இப்படி ஷண்மதங்களுக்கும் முக்கியம் வாய்ந்ததாகக் காஞ்சிபுரம் இருக்கிறது. ஆசார்யாளுக்கு முந்தியே அப்படியிருந்து அவர் அதனாலேயே அங்கே வந்து தங்கியிருக்கலாம். அல்லது ஷண்மத ஸ்தாபனா சார்யாளாகிய அவர் வந்து தங்கியதாலேயே அது இப்படிப் பெருமை பெற்றிருக்கலாம்.

சப்த மோக்ஷபுரிகளில் தக்ஷிணத்தில் உள்ள ஒன்றே ஒன்று காஞ்சீபுரம்தான் என்பது அதன் தலையாய சிறப்பாகும். சமய முக்கியத்துவம், வித்யா ஸ்தான முக்கியத்துவம், ராஜரீக முக்கியத்துவம், வியாபார முக்கியத்துவம் எல்லாமே அந்த ஊருக்கு இருந்ததால்தான் “நகரேஷு காஞ்சி” என்று புகழப்பட்டிருக்கிறது.

– தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி

(ஸ்ரீ சங்கர சரிதம்)

Source….www.tamil.thehindu.com

Natarajan

“டெல்டா மார்ட்:”…. விவசாயிகளின் வாழ்வில் ஒரு சின்ன ஒளிக்கீற்று !!!

வால்ட் மார்ட்’க்கு எதிராக போராட்டங்களை நடத்திய காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், 1000 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனமான ‘டெல்டா மார்ட்’ என்ற நிறுவனத்தைதிறந்திருக்கிறார்கள்.

இயக்குநர்குழு, ஆலோசனைக்குழு, மையக்குழு ஆகிய மூன்று அடுக்கு நிர்வாக முறையை கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்ப வணிகக் காப்பகத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் செயல்படுகிறது.

வேளாண்மைத் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்துதல், மண்வளம் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாத்தல், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மதிப்புக் கூட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளை தருதல், விவசாயி உற்பத்தி செய்யும் பொருளை இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயியே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கியிருக்கிறார்கள்.

 

“டெல்டா மார்ட்டை நாங்கள் உருவாக்கியதன் நோக்கம், விவசாயிகளிடையே உற்பத்தி செய்கின்ற பொருளை, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக நாங்களே குறைந்த விலையில் நுகர்வோருக்கு கொடுக்க வேண்டுமென்பதே. அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களையும் வெளிமார்க்கெட் விலையைவிட மிகக் குறைவாக கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். ‘நம்மால் முடியும்!’ என்ற தன்னம்பிக்கையை ஒவ்வொரு விவசாயிடமும் உருவாக்கவேண்டும் என்பதும்  எங்கள் டெல்டா மார்ட் துவக்கத்தின் முக்கிய நோக்கம்.

இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கின்ற உழவர்கள், தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருளை விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது. சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், விவசாயி இடைத் தரகர்களாலும், அரசுகளாலும் இன்னும் அடிமைப்பட்டுத்தான் கிடக்கின்றான். அதை களைந்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், பிறகு ஒவ்வொரு ஒன்றியத்திலும் நிறுவ திட்டமிட்டிருக்கிறோம்.

விவசாயத்தை மட்டுமே செய்து வந்த விவசாயிகளுக்கு சந்தையை பற்றி தெரியாது. கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருளை, இடைத்தரகர்கள் எப்படியெல்லாம் விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, உற்பத்தி செய்வதோடு சந்தைபடுத்துவதிலும் அவர்களை தேர்ந்தவர்களாக்குவதற்கு இந்த அமைப்பு வழிசெய்யும்.

விவசாயிகள் பிள்ளைகள் விவசாய தொழிலில் ஈடுபடுவதில்லை. காரணம் போதிய வருமானம் இல் லாதது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நவீனத்தன்மை இல்லாததால், ஆர்வம் இல்லாமல் மாற்று வேலைக்கு செல்கிறார்கள். அவர்களையெல்லாம் விவசாயத்தின் பக்கம் திருப்பும் வகையில் இந்த நிறுவனம் விவசாயிகளுக்காகவும், நுகர்வோர்களுக்காகவும் பாடுபடும்” என்கிறார் காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பாண்டியன்.

மற்றொரு செயல் இயக்குநர் பன்னீர்செல்வம் கூறுகையில், “120 விவசாயிகள் தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்யும் பொருட்களை இங்கு விற்பனை செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்களின் பொருட்களை மட்டுமல்ல மற்ற விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களையும் நாங்கள் கொள்முதல் செய்கிறோம். எங்களின் நோக்கம் இடைத்தரகர்கள் இல்லாமல் கொள்முதல் செய்து, உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக லாபம் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

உழவர் சந்தை, மார்க்கெட்டுகளைவிட எங்கள் டெல்டா மார்க்கெட்டில் விலை குறைவாக கிடைக்கும். அதாவது  வாழைப்பழ தாரை ரூபாய் 250க்கு விவசாயிகளிடமிருந்து வாங்கும் வியாபாரிகள், அதை விற்பனை செய்யும்போது ஒரு பழம் 5 முதல் 7 ரூபாய் வரை விற்கிறார்கள்.

அதே வாழைப்பழ தாரை டெல்டா மார்க்கெட் விவசாயிடம் ரூ.400 க்கு வாங்கி 5 ரூபாய்க்குள் விற்கலாம். இதில் நுகர்வோருக்கும் லாபம். டெல்டா மார்ட்டுக்கும் லாபம். விவசாயிகளுக்கும் லாபம் தரும்.

அதுதான் எங்கள் டெல்டா மார்ட்டின் நோக்கம். இயற்கை விவசாயம் செய்த தேங்காய் 30 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதே தேங்காயை 20 ரூபாய்க்கு நாங் கள் தருகிறோம். சாதாரண தேங்காய் வெளிமார்க்கெட்டில் 15 ரூபாய் என் றால், எங்களிடம் 12 ரூபாய்க்கு கிடைக்கும்.

இதுமட்டுமில்லாமல் விவசாய இயந்திரங்களை நாங்களே கம்பெனிகளி டமிருந்து வாங்கி, அதை விவசாயிகளிடம் விற்பனை செய்யவும் முயற்சி எடுத்து வருகிறோம். ஒரு டிராக்டரை வாங்கி விற்பனை செய்தால் 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.

 

இதிலிருந்து கிடைக்கின்ற லாபத்தை, ஆயிரம் உறுப்பினர்களுக்கும் அவர்கள் செலுத்தியிருக்கிற முதலீட்டுக்கு தக்கபடி  லாபத்தை பிரித்துக்கொடுப்போம். எங்களின் அடுத்த இலக்கு ஆயிரம் டெல்டா மார்ட்டை டெல்டா மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்பதே” என முடித்தார்.

நலிந்து போன விவசாயத்தின் இருள்படர்ந்த நிலப்பரப்பில் ‘டெல்டா மார்ட்’ என்ற சின்ன ஒளிக்கீற்று தென்படுகிறது. ஆயிரம் விவசாயிகளின் கூட்டு முயற்சி அடுத்த தலைமுறையினரை காக்கட்டும்.

வாழ்த்துவோம் விவசாயிகளை!

– ஏ. ராம்
படங்கள்:
கே. குணசீலன்

Source…www.vkalathurseithi.com

Natarajan

” இது துவைக்கற கல் இல்லை….லிங்கம் …சிவலிங்கம் …”

 

இது துவக்கற கல் இல்லே… சிவலிங்கம்! — மகாபெரியவா
clip_image001
சென்னை மீனம்பாக்கம் பகுதிக்கு வரும்போதெல்லாம், பழவந்தாங்கலில் தான் முகாமிடுவார் காஞ்சி மகாபெரியவா. அப்படித் தங்குகிறபோது, அந்த ஊரின் மையத்தில் உள்ள குளத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள்… அதிகாலைப் பொழுதில், குளத்தில் ஸ்நானம் செய்வதற்கு மகாபெரியவா வந்தபோது, அங்கே சிலர் துணி துவைத்துக் கொண் டிருந்தனர். அவர்களில் ஒருவர், அங்கேயிருந்த கல்லில் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட காஞ்சி மகான் நெக்குருகியவராய், ‘இது துவைக்கற கல் இல்லே; லிங்கம்… சிவ லிங்கம். இதுல துவைக்காதீங்கோ’ என்று சொன்னார்.
அவ்வளவுதான்… குளத்தைச் சுற்றியிருந்தவர்கள் தபதபவெனக் கூடினர்; சிவலிங்கத் திருமேனியைச் சுற்றி நின்றனர். இதையறிந்த ஊர் மக்கள் பலரும் விழுந்தடித்துக்கொண்டு, குளக்கரைக்கு வந்தனர். அடுத்து காஞ்சி மகான் என்ன சொல்லப்போகிறார் என்று அவரையே மிகுந்த பவ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மெள்ளக் கண்மூடியபடி இருந்த மகாபெரியவா, விறுவிறுவெனக் குளத்தில் இறங்கிக் குளித்தார். அங்கேயே ஜபத்தில் ஈடுபட்டார். பிறகு கரைக்கு வந்தவர், சிவலிங்கத்துக்கு அருகில் வந்தார். “இது அர்த்த நாரீஸ்வர சொரூபம். சின்னதா கோயில் கட்டி, அபிஷேகம் பண்ணி, புஷ்பத்தால அர்ச்சனை பண்ணுங்கோ! இந்த ஊர் இன்னும் செழிக்கப் போறது” என்று கைதூக்கி ஆசீர்வதித்துச் சென்றார்.
clip_image002
clip_image003
பெரியவாளின் திருவுளப்படி, குளத்துக்கு அருகில் சின்னதாகக் குடிசை அமைத்து, சிவலிங்க பூஜை செய்யப்பட்டது. பிறகு கோயில் வளர வளர… ஊரும் வளர்ந்தது. பழவந்தாங்கலின் ஒரு பகுதி, இன்னொரு ஊராயிற்று. அந்த ஊர் நங்கைநல்லூர் எனப்பட்டு, தற்போது நங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது.
சென்னை, பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். காஞ்சி மகாபெரியவாள் சுட்டிக்காட்டிய இடத்தில் அற்புதமாக அமைந் திருக்கிறது ஆலயம். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, பெரியவா அருளியதால் உருவான இந்தக் கோயில், இன்றைக்கு ஸ்ரீநடராஜர் சந்நிதி, பட்டீஸ்வரத்தைப் போலவே அமைந்துள்ள ஸ்ரீதுர்கை, அர்த்த நாரீஸ்வர மூர்த்தத்துக்கு இணையாக, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரி திருவிக்கிரகம் எனச் சிறப்புற அமைந்துள்ளது.
பிரதோஷம், சிவராத்திரியில் நவக்கிரக ஹோமம், புஷ்ப ஊஞ்சல், சுமங்கலிகளுக்கு மஞ்சள் சரடு, வசந்த நவராத்திரி விழா, சிறப்பு ஹோமங்கள், விஜயதசமியில் சண்டி ஹோமம் என ஆலயத்தில் கொண்டாட்டங்களுக்கும் வைபவங்களுக்கும் குறைவில்லை! இன்னொரு சிறப்பு… மகாபெரியவாளின் திருநட்சத்திரமான அனுஷ நட்சத்திர நாளில் (மாதந்தோறும்) சிறப்பு பஜனைகள், ஜயந்தியின் போது பிரமாண்ட பூஜை மற்றும் பஜனைகள் ஆகியன விமரிசையாக நடைபெறுகின்றன. நங்கநல்லூருக்கு வந்து ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வணங்குங்கள்; குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்!
–நன்றி சக்தி விகடன்
Source…..www.knramesh.blogspot.in
Natarajan

” தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை சிந்தனை …”

இன்று உலகெங்கிலும் பரவலாகப் பேசப்பட்டு வருவது உடன்பாட்டுச் சிந்தனை. இந்த நேர்மறை சிந்தனையை புலப்படுத்தும் விதத்தில் ஆங்கிலத்தில் பல நுால்கள் வெளிவந்துள்ளன. எதையும்

உடன்பாட்டு நோக்கில் பார்ப்பது, நம்பிக்கையோடு அணுகுவது என்பது தமிழ் மண்ணுக்குப் புதியது அல்ல.

தொல்காப்பியர் முதல் இன்றைய ஹைகூ கவிஞர் வரை தமிழைப் பொறுத்த வரையில் பெரும்

பாலானோர் உடன்பாட்டுச் சிந்தனையாளர்களாகவே விளங்குகின்றனர்.தொல்காப்பியமே தமிழில் முழுமையாகக் கிடைக்கும் பழைய இலக்கண நுால். இந்நுாலில் கூட உடன்பாட்டுச் சிந்தனையின் பதிவை ஆங்காங்கே காணமுடிகிறது.

சங்க இலக்கியத்தில் தமிழில் தொன்மையான இலக்கியம் சங்க இலக்கியம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பதினெட்டு நுால்களின் தொகுப்பு அது.பக்குடுக்கை நன்கணியார் என்ற புறநானுாற்றுப் புலவரின் உலகப் பார்வை இங்கே கவனிக்கதக்கது.

இன்னாது அம்ம, இவ் வுலகம்;இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே”என்பது அவரது வாக்கு.’இந்த உலகம் கொடியது தான்’ எனினும் இதன் இயல்பினை உணர்ந்தவர்கள் இதிலும் இனிமையைக் காணக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்பது அருமையான உடன்பாட்டுச் சிந்தனையின் எதிரொலி ஆகும்.

‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!’ என்றனர் சங்கச் சான்றோர். திருக்குறளில்

ஆல்பர்ட் சுவைட்சரில் இருந்து அப்துல் கலாம் வரை திருவள்ளுவரை வானளாவப் போற்றிப் புகழ்வதற்குக் காரணம் அவரது உடன்பாட்டுச் சிந்தனையே. வள்ளுவர் எங்கும் உலகையோ, வாழ்க்கையையோ, இல்லறத்தையோ, பெண்மையையோ மருந்துக்குக் கூட இழித்தோ பழித்தோ பேசவில்லை; எதிர்மறையான சிந்தனைகளை மொழியவில்லை; உயர்த்தியும் போற்றியுமே உரைத்துள்ளார். ‘அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை’, ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள?’ என்கிறது குறள்.

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்”என வள்ளுவர் ஊழ்வினையைப் புறந்தள்ளி, மனித முயற்சிக்கு மகுடம் சூட்டியிருக்கிறார். சிலப்பதிகாரத்தில்

தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். அவலக் காப்பியமான சிலப்பதிகாரம் மங்கல நிகழ்ச்சியான கோவலன்-கண்ணகி திருமணத்தில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. இது, இளங்கோவடிகளின் உடன்பாட்டுச் சிந்தனையை காட்டுகிறது.

கணிகையர் குலத்தைச் சார்ந்த மாதவிக்குக் காப்பியத்தில் கண்ணகிக்கு நிகரான ஓர் இடத்தி னைத் தந்திருப்பதும், இல்லறத்தைப் புகழ்ந்து கண்ணகியின் கற்பு வாழ்வை உயர்த்திக் கூறி

யிருப்பதும், கொடியவன் என எவரும் இல்லாமலே காப்பியத்தைச் சுவையாக நடத்திச் சென்றிருப்பதும் ஒரு வகையில் பார்த்தால் உடன்பாட்டுச் சிந்தனையின் தாக்கமே எனலாம்.

பக்தி இயக்கக் காலத்தில் :பக்தி இயக்கத்தின் முன்னோடியான திருமூலர் திருமந்திரத்தில் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று தாயுள்ளத்தோடு பாடியுள்ளார். உடம்பினை இழித்தும் பழித்தும் பாடாமல்- ‘உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன்’ என்றும், ‘உடம்பினை யான் இருந்து ஓம்புகிறேன்’ என்றும் உடம்பின் இன்றியமையாமையை உணர்த்தும் வகையில் பாடியிருக்கிறார்.

ஆதிசங்கரரால் ‘திராவிட சிசு’ எனப் பாராட்டப் பெற்றவர் திருஞானசம்பந்தர். குழந்தை

ஞானியான அவருடைய பாடல்களில் சோர்வையோ, கலக்கத்தையோ, துயரத்தையோ

காண்பது அரிது; ஊக்கமும் நம்பிக்கையும் எழுச்சியுமே ததும்பி நிற்கும்.உதாரணமாக

“மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்லதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே” என பாடினார்.

“ நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”

என்னும் அப்பர் பெருமானின் வாக்கு.

ஏழாம் நுாற்றாண்டில் பிறந்த அழகிய உடன்பாட்டுச் சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.

பாரதியாரின் சிந்தனை :இருபதாம் நுாற்றாண்டின் விடியலில் தமிழால் தகுதி பெற்று, தமிழுக்குத் தகுதி சேர்த்த தனிப்பெருங் கவிஞர் பாரதியார். வாழ்ந்த காலமெல்லாம் வறுமைத் துன்பத்தில் வாடினாலும், ‘ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள், உலகு இன்பக் கேணி’ என்றே நம்பிக்கையுடன் முழங்கினார் அவர்; ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள் இறைவா! இறைவா! இறைவா!’ என்றே மூன்று முறை இறைவனை விளித்துப் பாடினார் அவர்;

‘நம்பினார் கெடுவதில்லை, நான்குமறைத் தீர்ப்பு; அம்பிகையைச் சரண் புகுந்தால், அதிக வரம் பெறலாம்’ என்று தன்னம்பிக்கை சிந்தனையை வெளிப்படுத்தினார்.

“ இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!”

‘காட்சி’ என்னும் தலைப்பில் பாரதியார் எழுதிய வசன கவிதையிலும் அவரது உடன்பாட்டுச் சிந்தனை அழகுற வெளிப்பட்டிருக்கிறது.

“இவ்வுலகம் இனியது… மனிதர் மிகவும் இனியர்.

ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று. உயிர் நன்று. சாதல் இனிது”இவ்வுலகில் பிறப்புத் தொடங்கி மனிதனுடைய மூச்சுத் தொடரின் முற்றுப் புள்ளியான மரணம் வரைக்கும் அனைத்திலும் இனிமையைக் காணும், -நன்மையை நாடும் – அற்புதமான மனநிலையின் ஆற்றல் மிக்க வெளிப்பாடு இக்கவிதை.

புதிய தமிழ்க் கவிதையில் இருபதாம் நுாற்றாண்டுக் கவிதை வடிவங்களான புதுக்கவிதை, ஹைகூ ஆகியவற்றிலும் ஆங்காங்கே உடன்பாட்டுச் சிந்தனைகள் தலைகாட்டுகின்றன. படிப்பவர் நெஞ்சில் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்ச வல்ல இத்தகைய கவிதைகள் ஒன்றிரண்டை இங்கே காண்போம்.

“இளம்பிறையே! உனது ஏழைமையை

நினைத்து வருந்தாதே! ஏனென்றால்

உன்னுள்ளேதான் பூர்ணசந்திரன்

புதைந்து கிடக்கிறான்”

என்பது இக்பால் படைத்துள்ள புதுக்கவிதை.

ஈரோடு தமிழன்பனின் கவிதையில்

“பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு

முத்தமிட்டுச் சொன்னது பூமி:

ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ?”

‘ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தவறி விழுவது என்பது அவ்வளவு முக்கியம் அன்று; விழும் போதெல்லாம் அவன் விடாமல் எழ நினைப்பதும், முயல்வதும் தான் முக்கியம்’ என்று தன்னம்பிக்கை விதை துாவுகிறார் கவிஞர்.

இங்ஙனம் தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் உடன்பாட்டுச் சிந்தனையின் தாக்கத்தினைக் காண முடிகிறது.

– முனைவர் நிர்மலா மோகன்

தகைசால் பேராசிரியர்

காந்திகிராமம் கிராமியப்

பல்கலைக்கழகம்

காந்திகிராமம்

Source….www.dinamalar.com

Natarajan

” நேற்று ராத்திரி வந்து ஒரு கொய்யாப் பழம் வேணுன்னு கேட்டேனே …”

பரமாசார்யா காஞ்சி மடத்துல இருக்கற சமயத்துல அவரை தரிசனம் பண்ண பல ஊர்கள்ல இருந்தும் நிறையப்பேர் தினமும் வருவா. அதுவும் விசேஷ நாள்னா கேட்கவே வேண்டாம். கூட்டம் திமிலோகப்படும். மடத்து சிப்பந்திகள் இங்கேயும் அங்கேயுமா நின்னுண்டு வரிசையை கட்டுப்படுத்திண்டு இருப்பா.

20683_671948076266709_3512172854606087227_n.jpg  

ஒரு சமயம் மகரசங்கராந்தி அன்னிக்கு அதே மாதிரி ஆயிரக்கணக்கானபேர் பெரியவாளை தரிசனம் பண்றதுக்காக மடத்துல குவிஞ்சிருந்தா! அனுமார் வால் மாதிரி நீண்டு இருந்த வரிசையை, மடத்து சிப்பந்திகள் கிரமப்படுத்தி, உள்ளே அனுப்பிண்டு இருந்தா.

அந்த கூட்டத்துல ஒரு தம்பதி நின்னுண்டு இருந்தா. அவாளைப் பார்த்தாலே முகம் முழுக்க ஏதோ ஒரு சோகம் நிரந்தரமா அப்பிண்டு இருக்கறது தெரிஞ்சது. ஆமையா நகர்ந்துண்டு இருந்த வரிசை கொஞ்சம் வேகமா நகராதா, சீக்கிரமா ஆசார்யாளை தரிசிக்க மாட்டோமாங்கற ஏக்கம் அப்பப்போ அவாகிட்டே எட்டிப் பார்க்கறதையும் உணர முடிஞ்சது.

கூட்டம் நகர, நகர நேரமும் சேர்ந்து நகர்ந்து உச்சிக்காலத்தை நெருங்கித்து. அந்த சமயத்துல அந்தத் தம்பதிகள் கிட்டே ஏதோ ஒர பரபரப்பு தொத்திண்டுது. ரெண்டுபேரும் எதையோ முணுமுணுத்துக்கறதும், குறுக்குல போயாவது பெரியவாளை தரிசிக்க ஏதாவது வழி இருக்குமான்னு அங்கேயும் இங்கேயுமா எட்டி எட்டிப் பார்க்கிறதுமா நிலைகொள்ளாம தவிச்சாங்க.

அந்த சமயத்துல அங்கே இருந்த மடத்து சிப்பந்தி, அவாளை ஒழுங்கா நில்லுங்கோ… இப்படி நகர்ந்து நகர்ந்து மத்தவாளுக்கு இடைஞ்சல் பண்ணாதீங்கோன்னு மென்மையா சொன்னார்.

சட்டுன்னு தன்னோட கையில் இருந்த மஞ்சப்பையை உயர்த்தி அந்த சிப்பந்திகிட்டே காட்டினார் அந்த ஆசாமி. “பெரியவா எங்கிட்டே கேட்டதை எடுத்துண்டு வந்திருக்கோம். அவர் பிட்சாவந்தனத்துக்கு போறதுக்கு முன்னால குடுத்துடணும்னு தான் பரபரப்பா இருக்கோம். நீங்க கொஞ்சம் தயசு வைச்சா, கொஞ்சம் முன்னால போய் அவர்கிட்டே குடுத்துடறோம்..’ சொன்னார்.

அவர் காடிடன பைக்கு உள்ளே உருண்டையா ஏதோ இருக்கறது தெரிஞ்சுது. “என்ன கூட்டம் நெறைய இருக்கறதால சுலபமா பார்க்கறதுக்கு வழி தேடறேளா… பெரியவா கேட்டதை எடுத்துண்டு வந்திருக்கோம்னு சொல்லி ஏமாத்தப்பார்க்கறேளா? அதெல்லாம் விடமுடியாது..’ கண்டிப்பாகவே சொன்னார் மடத்து சிப்பந்தி.

“இல்லை.. பொய் சொல்லலை… ஆசார்யா நேத்து எங்க ரெண்டுபேரோட கனவுலயும் வந்து கேட்டார்! அதனாலதான் இந்தக் கொய்யாப்பழத்தை எடுத்துண்டு வந்திரக்கோம்!’ கெஞ்சலா சொன்னா, அந்த தம்பதி.

“யார்கிட்டே கதைவிடறேள்? பெரியவா ஒரு வார்த்தை சொன்னா வண்டிவண்டியா பழத்தைக் கொண்டு வந்து குவிக்க பல பெரிய மனுஷா தயாரா இருக்கா. அப்படி இருக்கறச்சே.. அவர் உங்ககிட்டே கேட்டாரா? அதுவும் கனவுல வந்து இந்த ஒரே ஒரு கொய்யாப்பழத்தை

எடுத்துண்டு வரச்சொன்னாராக்கும்?

வழியில சாப்பிடறதுக்கு வாங்கி வைச்சதை பெரியவா கேட்டான்னு சொல்லிட்டு முன்னால போகலாம்னு பார்க்கறேளோ?’ முன்னால பின்னால இருந்த யாரோ குரல் எழுப்பினா.

அவ்வளவுதான், பேசாம தலையைக் குனிஞ்சுண்டு நின்னுட்டா அந்த தம்பதி. “அவர்தானே கேட்டார்? அதை எப்ப வாங்கிக்கணும்னு அவருக்கே தெரியும்.. நாம் ஏன் அவசரப்படணும்?’ மெதுவா முணுமுணுத்தார் அந்தப் பெண்மணி.

ஆச்சு, மெதுவா நகர்ந்து நகர்ந்து பெரியவாளை அந்தத் தம்பதி தரிசிக்கிற முறை வந்தது. ஆம்படையானும், பொண்டாட்டியுமா ஆசார்யா கால்ல விழுந்தா, பிரசாதத்தை வாங்கிக்கறதுக்காக கையை நீட்டினா.

பிரசாதத்தைக் குடுக்கறக்கு பதிலா, “என்னைப் பார்த்ததும் வந்த வேலையை மறந்துட்டியா? நேத்து ராத்திரி வந்து ஒரு கொய்யாப்பழம் வேணும்னு கேட்டேனே.. கொண்டு வந்தியோ?’ பெரியவா கேட்க, எல்லாரும் அதிர்ந்துபோனா. அவா பொய் சொல்றதா குரல் எழுப்பினவா தலையை குனிஞ்சுண்டா.

அவசர அவசரமா, மஞ்சப்பையில இருந்த கொய்யாப் பழத்தை எடுத்து நீட்டினார் அந்த ஆசாமி. ஆசார்யா தன் பக்கத்துல இருந்த சீடரைப் பார்த்தார். அதோட அர்தத்தை புரிஞ்சுண்ட அந்த சீடர் சட்டுன்னு ஒர மூங்கில் தட்டை நீட்டி அந்தப் பழத்தை வாங்கி, கொஞ்சம் ஜலம் விட்டு அலம்பிட்டு ஆசார்யா பக்கத்துல வைச்சார்.

கனிஞ்சிருந்த அந்தக் கனியை கனிவோட எடுத்து பெரியவா மென்மையா ஒரு அழுத்து அழுத்தினார்.

கிருஷ்ணரோட கால் படறதுக்காவே காத்துண்டு இருந்த யமுனை அவரோட பாதம் பட்டதும் பட்டுனு விலகி வசுதேவருக்கு வழிவிட்ட மாதிர, பரமாசார்யாளோட கரம் படறதுக்காகவே காத்துண்டு இருந்த மாதிரி அந்தக் கொய்யாப்பழம் சட்டுன்னு இரண்டு விள்ளலா பிளந்துண்டுது.

அடுத்து யாருமே எதிர்பார்க்காதபடி, செவேல்னு இருந்த அந்தப் பழத்துல ஒரு பாதியை அப்படியே வாயில போட்டுண்டுட்டார், பெரியவா. இனனொரு பாதியை அந்தத் தம்பதிகிட்டே கொடுத்தார். “நீயும் உன் ஆம்படையாளும் சாப்பிடுங்கோ.. எதை நினைச்சு ஏங்கறேளோ அது கிடைக்கும்!’ ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்.

எல்லாருக்கும் இப்போ அந்த தம்பதிமேல தனி மரியாதை வந்துது. எது மேலயுமே பற்றோ ஆசையோ வைக்காத ஆசார்யா, இவா கொண்டு வந்த பழத்தை வாங்கி, உடனே சாப்பிடறார். மீதியை பிரசாதமாவும் தர்றார்னா, இவா எவ்வளவு பெரிய பாக்யம் பண்ணியிருக்கணும்னு பேசிண்டா.

அவா செஞ்ச பாக்யம் என்ன? பெரியவா அவாளுக்குத் தந்த வரம் என்னங்கறது, சரியா ஒரு வருஷம் கழிச்சு அதே தம்பதி மறுபடியும் ஆசார்யாளை தரிசனம் பண்ண வந்தப்போ தெரிஞ்சுது. ஆமா, இப்போ அவா கையில, பிறந்து ஒண்ணு ரெண்டு மாசமே ஆன குழந்தையும் இருந்துது. தழுதழுப்போட குழந்தையை பெரிவா காலண்டையில போட்டுட்டு ரெண்டுபேரும் நமஸ்காரம் பண்ணினா.

“என்ன உங்க கோரிக்கை நிறைவேறிடுத்தா?’ கேட்கலை மகா பெரியவா.. அவரோட புன்னகையே அதை எல்லாருக்கும் உணர்த்தித்து.

ஆசையே இல்லாத மகான், ஆசையா கேட்கறாப்புல ஒரு கொய்யாப்பழத்தைக் கேட்டு, அதையே ஆசிர்வாதமா தந்து அந்தத் தம்பதியோட ஆசையை பூர்த்தி செஞ்சிருக்கார்னா, அவரை பகவானோட அவதாரம்னுதானே சொல்லணும்

Read more: http://periva.proboards.com/thread/9707/#ixzz3gPdJELlL

1996…ஜூலை 17….மெட்ராஸ் சென்னை என மாறிய நாள் …

அடுத்த மாதம் தனது 376-வது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் ‘சென்னை’ மாநகரம் 17 ஜூலை 1996 வரை ‘மெட்ராஸ்’ என்றே அழைக்கப்பட்டது. தென்னிந்தியாவின் வாசல் என்று அழைக்கப்படும் சென்னைக்கு நெடிய வரலாறு உண்டு. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு முதல் உலகெங்கிலும் இருந்து வர்த்தகர்கள் சென்னையைத் தேடி வந்துள்ளனர்.

17-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால்பதித்த பின்னர், இந்நகருக்கு வேறு விதமான அடையாளங்கள் உருவாகத் தொடங்கின.

 

1639-ல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் செயின்ட் ஜார்ஜ் கோட்டை இப்போது உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன் நாயக்கர், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக, கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னைப் பட்டினம் என்று பெயரிடப்பட்டது. இதற்கு முன்னர் 16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர் சென்னைப் பகுதிக்கு வந்தனர். 1522-ல் சாந்தோம் என்ற துறைமுகத்தை நிறுவினர். அப்போது அவர்கள்தான் சென்னையை ‘மெட்றாஸ்’ என அழைத்தனர்.

அதன் பின்னர் 1688-ல் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர், மதறாஸ் நகரை முதல் நகரசபையாக அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை மதறாஸ் பெற்றது. ராபர்ட் கிளைவ் தனது ராணுவத் தளமாக மதறாஸைத் தேர்ந்தெடுத்தபோது பிரிட்டிஷ் அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த நான்கு மாகாணங்களில் ஒன்றாக அறிவித்து, ‘மதறாஸ் மாகாணம்’ எனும் பெயர் சூட்டியது. ஆனால், 1746-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் மதறாஸ் மாகாணத்தையும் பிரெஞ்சு அரசு கைப்பற்றியது. மீண்டும் 1749-ல் மதறாஸை ஆங்கிலேயர் கைப்பற்றினர். அதனை அடுத்து திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் சென்னைப் பட்டினத்துடன் இணைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. இப்படியாக ஐரோப்பியர்களின் வருகையால் பொருளாதாரத் தலைமைப் பீடமாக வளர்ந்தது மதறாஸ். சுதந்திரத்துக்குப் பின்னர், 1947-ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் தேர்வானது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதுவரை மதறாஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட மாநிலம் 1969-ல் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றப்பட்டது. மெட்ராஸ், சென்னை என்று இரண்டு பெயர்களில் இந்நகரம் அழைக்கப்பட்டுவந்தது. அந்தக் காலகட்டத்தில் முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவந்தன. 1991-ல் திருவேந்திரம் நகரின் பெயர் திருவனந்தபுரம் என்று  அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது. 1995-ல் மும்பை என்று பெயர் மாற்றம் கண்டது பாம்பே. 1996 ஜூலை 17-ல், மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், ‘மெட்ராஸ்’ அதிகாரபூர்வமாக ‘சென்னை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Source…..www.tamil.the hindu.com

Natarajan

It is the Rumani Semiya for Eid….in Triplicane , Chennai …

CHENNAI, TAMIL NADU, 14/07/2015: Rumani Semiya, a Ramzan speciality made of maida, being prepared at a household in Royapettah in Chennai. The finished product is sold on the streets of Triplicane. Photo: R. Ragu

CHENNAI, TAMIL NADU, 14/07/2015: Rumani Semiya, a Ramzan speciality made of maida, being prepared at a household in Royapettah in Chennai. The finished product is sold on the streets of Triplicane. Photo: R. Ragu

For 200 years now, Mushtaba’s family has been making rumani semiya, an Eid special. Here’s what goes into it

In a tiny flat in the bowels of Royapettah, Mushtaba’s family is carrying out a 200-year-old tradition. Seated on the floor, she kneads the maida dough, calling out instructions to her husband Barkath Ali. She has been waiting all year for the month of Ramzan. This is her chance to earn and contribute to the family. Every year, hundreds of Muslim women in Triplicane and Royapettah, start preparing the rumani semiya weeks ahead of Ramzan. The vermicelli will be sold by their husbands and sons and sometimes, by themselves, in the streets of Triplicane.

Making the rumani semiya is a back-breaking task and yet, families look forward to it. “It’s been the same routine as long as I can remember,” says Mushtaba, punching a medium-sized ball of dough. “I would knead three to five kilograms of maida with water and salt the previous night and wake up early in the morning to prepare the semiya.”

The fine vermicelli is made entirely by hand. It’s a fascinating process. Mushtaba pinches bits of dough from a clump in her hand, sticks it back and repeats till the mass is almost elastic. She then pulls it apart, holding the length with both hands, folding it in and out, in and out, till she achieves 12 uniform strips. She entwines them and pulls it like a rubber band — in less than 30 seconds, following a series of elastic tugs, the fine, hair-thin vermicelli emerge, which she drapes on a wooden rod that her husband hangs out to dry under a fan. In a few minutes, he rolls it on his palm and places it on a cot to dry further. The vermicelli can be made with rava as well, but even the most experienced makers of rumani semiya tend to falter if rava is mixed to the dough.

“It’s a lot of work,” sighs Mushtaba. “I sometimes count the days for Eid so I can rest, although I enjoy doing this.” There are certain unwritten rules when it comes to the making of the rumani semiya. “The dough should never change hands,” warns Mushtaba. “I remember my mother would never let me touch it when I was a little girl,” she explains. “She would say that every hand lent a unique touch to the dough and that it should never be disturbed. I would take a blob of dough and lock myself in a room and practise,” she laughs. The consistency of the dough is everything, so is the temperament of the person handling it. “If one is angry, for instance, and sits to make it, the semiya will never come out well. I’ve thrown sway several kilos of dough when they didn’t cooperate,” she observes.

CHENNAI, TAMIL NADU, 14/07/2015: Rumani Semiya, a Ramzan speciality made of maida, being prepared at a household in Royapettah in Chennai. The finished product is sold on the streets of Triplicane. Photo: R. Ragu

During the last week of Ramzan, thousands of rumani semiya circles are sold in Triplicane; a kilogram is priced at Rs.180 to 250, depending on the size and density of the vermicelli.

“We mostly sell out every year,” says Barkath, who puts his tyres business on hold to help his wife’s vermicelli venture every year. He knows that she has a gift, which, however, has not been passed on to his daughter Heena. “I’ve just come to watch,” shrugs the 28-year-old and adds, “There’s no way I can do what mother does.” Mushtaba chuckles: “This one doesn’t have the patience.”

CHENNAI, TAMIL NADU, 14/07/2015: Rumani Semiya, a Ramzan speciality made of maida, being prepared at a household in Royapettah in Chennai. The finished product is sold on the streets of Triplicane. Photo: R. Ragu

Mushtaba earns around Rs.20,000 every year from the business. “I use it to buy something for the kids for Ramzan,” she smiles. “Shoes, clothes… It feels nice to buy whatever they ask for.”

The vermicelli goes into making the sheer khurma, which is used to break the fast on Eid. Mushtaba recalls the recipe. “We deep fry the semiya in ghee or dalda and set aside. It’s added to a pan of milk, that’s simmered with sugar and khoa. A mix of crushed nuts such as cashews and pista is added to the dish,” she explains. “It’s delicious; makes all the hard work worth it.”

Keywords: Mushtabarumani semiyaTriplicane

Source…..akila Kannadasan in http://www.the hindu.com

” பறித்ததா ….கொறித்ததா …” ?

கட்டுரையாளர்-இந்திரா சௌந்தரராஜன்.

பறித்ததா, கொறித்ததா?’ என்று பெரியவர் கேட்ட கேள்வியில் இலக்கிய நயம் மட்டுமில்லை. இதயத்தின் நயமும் இருந்தது என்பது போகப்போக விளங்கத் தொடங்கியது. கடலையை முறத்தில் வைத்து எடுத்து வந்த அந்த நபர், பெரியவர் முன் திணறியபடி நின்றார். பின் அந்த கடலையை வயலில் உள்ள எலி வளைகளில் இருந்து எடுத்து வந்ததை மிகுந்த பயத்துடன் கூறினார்.

பெரியவர் முகத்தில் மெல்லிய சலனம்.

ஒரு துறவிக்கு ஆசையே கூடாது. அது அற்ப கடலைப்பயிர் மீதுதான் என்றாலும், அதிலும் சில சமயங்களில் இது போல சோதனைகள் ஏற்பட்டு விடுகின்றன.

எலி ஒரு பிராணி! வளைகளில் கடலைகளை சேமித்து வைத்துக் கொண்டு, அறுவடைக்குப் பிறகான நாட்களில், அது அதைச் சாப்பிட்டே உயிர் வாழ்ந்தாக வேண்டும். வயலுக்கு சொந்தக்காரனுக்கு வேண்டுமானால், அது எலியுடைய கள்ளத்தனமாக இருக்கலாம். அதற்காக எலிகளுக்கு பாஷாணம் வைத்து கொல்லவும் முற்படலாம். ஆனால், அன்பே வடிவான துறவி, எலியை ஒரு கள்ளப் பிராணியாகவா கருதுவார்? அதிலும், எலி எனப்படுவது கணபதியாகிய பிள்ளையாரின் வாகனம். அவரை வணங்கும்போது, நம் வணக்கம் எலிக்கும் சேர்த்துத்தான் செல்கிறது. இப்படி, வணங்கவேண்டிய ஒரு ஜீவனின் சேமிப்பில் இருந்து எடுத்து வந்திருந்த கடலையை பெரியவரால் சாப்பிட முடியவில்லை. மாறாக அந்த மனிதரிடம்,இதை எந்த வளையில் இருந்து எடுத்துண்டு வந்தீங்க? அந்த இடம் ஞாபகம் இருக்கா?” என்றுதான் கேட்டார். அவரும் ஆமோதித்தார். அடுத்த சில நிமிடங்களில், ஒரு முறத்தில் அந்த கடலையோடும் இன்னொரு முறத்தில் வெல்லப் பொரியோடும் அந்த இடத்துக்கு பெரியவரே போய் நின்றதுதான் ஆச்சரியம்.

வளை துவாரத்துக்கு முன்னாலே, அங்கிருந்து எடுத்ததோடு கொண்டு வந்திருந்த வெல்லப்பொரியையும் வைத்து விட்டு, மன உருக்கமுடன் அவர் பிரார்த்தனை செய்யவும், உள்ளிருக்கும் எலிகள் வெளியே தைரியமாய் வந்து, பெரியவர் படைத்த விருந்தை அனுபவிக்கத் தொடங்கின!

சூழ்ந்து நின்ற நிலையில் பார்த்த வர்களுக்கெல்லாம் ஒரே பரவசம். மெய்சிலிர்ப்பு!

‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம் சொல்லாமல் சொல்லி விட்டதே!

இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட நான், இதை ஒரு மிஸ்ட்ரியாக கருதுவதா, இல்லை மிக சகஜமான ஹிஸ்டரியாக எடுத்துக் கொள்வதா என்பதில் சற்று குழம்பிப் போனேன்.

பெரியவரைத் தவிர, எவராலும் இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்த முடியாது என்றும் நம்பினேன். இப்படி ஒரு கருணையை ஒரு தெரு நாயிடமும் அவர் காட்டிய சம்பவம் ஒன்றையும், இதைத் தொடர்ந்து நான் அறிய நேரிட்டது.

துறவிகள் வருடத்துக்கு ஒருமுறை, ஒரு நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரதம் எனும் விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு. என்னதான் அது பொன்னாகவே இருந்தாலும், அதை துலக்கத் துலக்கத் தான் அதன் பிரகாசம் அதிகரிக்கும்.

துறவிகள் விஷயத்தில் இப்படிப்பட்ட விரதங்களும் அப்படித்தான்! மகா பெரியவரும் ஒரு கிராமத்தில் தங்கி, இந்த விரதத்தை மேற்கொண்டார்கள். இதனால் தவசிவமானது அந்த கிராமத்தைச் சுற்றிலும் பரவிடும். அதன் விளைவுகளை காலத்தால்தான் நாம் உணர முடியும்.

எவ்வளவோ பெரிய அறிஞர்களும், ஞானிகளும் மின் விளக்குக்குக்கூட விதியில்லாத கிராமப்புறங்களில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். அவர்களின் பிறப்புக்கு பின்னாலே, துறவியர்கள் மேற்கொள்ளும் இப்படிப்பட்ட தவசிவங்கள் பெரிதும் காரணங்களாய் உள்ளன.

பெரியவர் அந்த கிராமத்தில் விரத மிருந்த சமயம், தினப்படி பூஜைகள் மற்றும் சம்பிரதாய சடங்குகளும் குறைவின்றி நடந்தன. முடிவில் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அன்று பங்கேற்றவர்களுக்கும் மடத்திலேயே போஜனம் அளிக்கப்படும். அதை பிரசாதமாக கருதி உண்பது சான்றோர் வழக்கம்.

ஊருக்குப் பொதுவான தர்மத்தால் வந்த அன்னம் அது. மந்திரம் சேர்ந்து சாப்பிடக் கிடைப்பது ஒரு விசேஷம். அதைச் சாப்பிடப் போய், ஒரு துளி ரத்தம் அதனால் நமக்குள் பெருகினாலும் அது போதும். உடம்பால் இன்றைய வாழ்க்கை முறையில் நமக்கு ஏற்படும் தோஷங்கள் அடிபட்டுப் போய்விடும்.

இந்த அன்னத்துக்காக ஒரு தெருநாய் கூட தவமிருந்ததுதான் விந்தை! தினமும் மதியம் எல்லோரும் சாப்பிட்ட உடன், எடுத்து எறியப்படும் எச்சில் இலைகளைத் தேடிச் சென்று, அந்த நாய் சாப்பிடத் தொடங்கிவிடும். இலையைப் போடச் செல்லும்போதே பாய்ந்துவரும். குலைக்கும். அதன் பசி அதற்கு!

இந்த சப்தம் தினமும் பெரியவர் காதிலும் விழுந்தது. அதன் பசிக்குரல், அவர் மனத்தை உருக்கிவிட்டதாம். அப்போது, ஒரு தையல் இலையில் அவர் சாப்பிட ஒரு கைப்பிடி அவலோ, இல்லை உப்பில்லாத தயிரன்னமோ அவருக்கும் அளிக்கப்படுவது வழக்கம். தனக்கு தரப்பட்ட அந்த இலைப் பிரசாதத்தை, அப்படியே குலைக்கும் நாய்க்கு வைக்கச் சொல்லிவிட்டார் பெரியவர். அதற்கும் சோறு வைக்கச் சொல்லாமல், தன் சோற்றையே அவர் தரச் சொன்னதன் பின்னே, பல நுட்பமான விஷயங்கள் ஒளிந்துள்ளன.

நாயின் குலைப்பு பசி உணர்வை பெரியவருக்கு உணர்த்துகிறது. இதை வெல்வது கடினம். இந்த பாழாப்போன பசி, எச்சில் இலை என்றுகூட பார்க்காமல் நாயைத் தூண்டுகிறது.

இதுதான் மனிதர்களையும் ஆட்டிப் படைக்கிறது. இதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள், ‘ஒரு சாண் வயிறே இல்லாட்டா – இந்த உலகத்தில் ஏது கலாட்டா?’ என்று பாடவும் காரணமாகிறது.

இதை வெற்றி கொள்ளாமல், துறவை வெற்றி கொள்வதும் கடினம் என்பதுதான், அவர் உணர்ந்த, உணர்த்த விரும்பிய உண்மை.

பெரியவர், தன் இலையையே தரவும், ஆடிப்போன மடத்து ஊழியர்கள், அதன்பின் நாய்க்கு முதலில் உணவு வைத்துவிட்டு, பிறகுதான் போஜனத்தை தொடங்கினர்.

அதன்பின், பெரியவர் முன் இலை வைக்கும்போது நாய் குலைக்கவில்லை. அந்த ஒரு நாயின் பசிக்கு வழி செய்தாகி விட்டது. ஆனால், உலகத்தில் கோடி கோடி உயிர்கள்… ஒரு உயிரும் உணவில்லை என்று வருந்தக்கூடாதே…?

Read more: http://periva.proboards.com/thread/9687/#ixzz3g9D8AVVn

Source…www.periva.proboards.com

Natarajan

 

 

” சொன்னது நீதானா …விசுவே …” !!!

மகாபாரத கர்ணன் தொடங்கி, நட்புக்கு பலரை உதாரணம் சொல்வார்கள். தமிழ்த் திரையுலகில் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், கவிஞர் கண்ணதாசனும்.

இவர்களது கூட்டணியில் உரு வான பல பாடல்களின் பின்னணியில் சுவாரஸ்யங்கள் உண்டு. பாடல் கம்போஸிங் செய்யும்போது, யார் முதலில் வருகிறாரோ, அவர் லேட்டாக வருபவர் மீது செல்லமாக கோபப்படுவார். அந்தக் கோபத்தின் விளைவு, அருமையான பாடல் பிறக்கும்.

இப்படித்தான், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்கான பாடல் கம்போஸிங் நடந்தபோது, எம்எஸ்வி, இயக்குநர் ஸ்ரீதர், பாடகி சுசீலா எல்லோரும் ஆஜராகி இருக்க, கண்ணதாசன் வரவில்லை. நேரம் ஆக ஆக எம்எஸ்வி-க்கு கோபம். கவிஞரைப் பற்றி கடிந்துகொண்டார். லேட்டாக வந்த கவிஞரிடம் பாடலுக்கான சூழலை ஸ்ரீதர் சொல்ல, நான்கைந்து பல்லவிகளை எழுதிக் கொடுத்தார். இயக்குநருக்கு திருப்தி இல்லை.

அப்போது அங்கிருந்த ஒருவர், கவிஞரை எம்எஸ்வி கடிந்துகொண் டது பற்றி அவரது காதில் போட்டு விட்டார். அதைக் கேட்டு கவிஞர் கோபப்படவில்லை. ‘விசு, நீயா அப்படி பேசினாய்’ என்று சிரித்த படியே கேட்டுவிட்டு, தனக்கே உரிய பாணியில் ‘சொன்னது நீதானா சொல்.. சொல். என் விசுவே..’ என்று ராகமாக பாட, டக்கென்று பிடித் துக் கொண்டார் ஸ்ரீதர். ‘இதுதான் நான் எதிர்பார்த்தது’ என ஸ்ரீதர் சொல்ல, அந்த வரிகளையே பல்லவியாக்கி பாட்டை எழுதினார் கண்ணதாசன்.

‘சொன்னது நீதானா.. சொல்.. சொல்.. என் உயிரே.’

என்ற அந்தப் பாடல் பெண்களின் கண்களில் நீரை வரவழைத்தது.

அதேபோல, ‘பெரிய இடத்துப் பெண்’ படத்துக்கான பாடல் கம் போஸிங்.. இந்த முறை கண்ண தாசன் முன்னதாக வந்துவிட, எம்எஸ்வி வீட்டில் அயர்ந்து தூங்கிவிட்டார். லேட்டாக எழுந்த எம்எஸ்வி, அவசரம் அவசரமாக கிளம்பி செட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அங்கே கவிஞர் இல்லை. ஒரு பேப்பரில் 2 வரிகளை மட்டும் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தார்.

‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா’

தன்னை குறித்துதான் கவிஞர் இவ்வாறு எழுதி வைத்துவிட் டுப் போயிருக்கிறார் என்பது எம்எஸ்வி-க்கு புரிந்தது. ஆனாலும், அந்த வரிகளை கொஞ்சமும் மாற்றாமல் அதையே பல்லவியாக போட்டு பாட்டெழுதித் தருமாறு கேட்க, கவிஞரும் கோபத்தை மறந்து பாட்டை எழுதித் தந்தார்.

இப்படி, கண்ணதாசனுக்கும் தனக்குமான நட்பைப் பற்றியும் தங்களது கூட்டணியில் உருவான பாடல்களின் பின்னணி குறித்தும் பல மேடைகளில் எம்எஸ்வி-யே சொல்லி கண்கலங்கியுள்ளார்.

Source….www.tamil.thehindu.com
Natarajan