November….Aviation History Month …A Look @ Oldest Airlines in the World !!!

November has arrived, which means it is Aviation History Month!

Oldest Airlines in the World - Aviation History Month

To coincide with the event, Routesonline delved into the history of some of the world’s oldest airlines, and chose some of our favourite historical photos. Beginning with one of the first ever airlines (KLM), we took a look at the first 20 years of commercial aviation, and some of the airlines that were founded between 1920 and 1940.

KLM

KLM is the oldest running airline still operating under its original name. The airline was founded on October 7, 1919 as ‘Dutch Royal Airlines for the Netherlands and its Colonies’ (Koninklijke Luchtvaart Maatschappij voor Nederland en Koloniën) – KLM. The first flight by the airline was piloted by Jerry Shaw and it flew from Croydon Airport, London to Amsterdam on May 7, 1920 in a leased De Havilland DH-16.

PH-AJU KLM Royal Dutch Airlines Douglas DC-2  [Image by KLM]

Qantas

Qantas is Australia’s largest airline, and the second oldest airline in the world, founded in November 1920. In 1921, the airlines’ fleet consisted of two biplanes, one Avro 504K with a 100 horsepower water-cooled engine and a Royal Aircraft Factory BE2E with a 90 horsepower air-cooled engine. Qantas began to operate a scheduled airmail service in November 1922 between Charleville and Cloncurry, and this became the first scheduled air service for the airline. Qantas operated its first overseas passenger flight in February 1935 from Brisbane to Singapore using its four-engine DH86 aircraft.

Economy class cabin of a Qantas Boeing 747B in the early 1970s. [Image by Qantas]

Finnair

Finnair, which was founded in 1923, is the fifth oldest airline in the world with continuous operation. The airline was originally founded under the name ‘Aero Yhtiö’ (Aero Company) which is where the airlines’ code ‘AY’ originates from. Aero took delivery of its first aircraft, a German-registered Junkers F 13 D-335, on 14 March 1924, and its maiden commercial flight was on 20 March 1924, when it carried 162 kilos of mail from Helsinki to Tallinn.

Finnair inauguration flight to London Heathrow airport August 29th, 1954. [Image byFinnair]

Czech Airlines

Czech Airlines was founded in 1923 as Czechoslovak State Airlines and completed its first transport from Prague to Bratislava on October 29 of the same year. On the 1st July 1930, CSA operated its first international flight with a Ford 5AT plane on from Prague to the Croatian capital, Zagreb. It was in 1937 when Czech Airlines introduced cabin attendants on board to improve the passenger experience.

Czech Airlines Tupolev Tu-104. [Image by Czech Airlines]

Icelandair

Icelandair was originally founded in 1937 under the name Flugfélag Akureyrar, before becoming grounded again in 1939 after a capsizing accident destroyed the airlines’ only aircraft. The airline was re-launched in 1940 under the name ‘Flugfélag Íslands’ but was often referred to as Iceland Airways for international purposes. The airline did not adopt its current name until 1979 when it merged with Loftleiðir.

Icelandair Pilots 1942. [Image by Icelandair]

SOURCE::::Poppy Marello, in http://www.routesonline.com

Natarajan

 

” ஐப்பசி 20…இன்று அன்னாபிஷேகம்…ஒரு பிடி அரிசி ஆனாலும் …”

இன்று அன்னாபிஷேகம்-பெரியவா போஸ்ட்
சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

Source::::www.periva.proboards.com

Natarajan

கங்கை கொண்ட சோழபுரம் அன்னாபிஷேகத்துக்கு

என்று ஒரு கமிட்டி அமைத்தார்கள்,பெரியவா.

அப்போதைய ரயில்வேத்துறை அமைச்சர்,

கமிட்டியின் தலைவர். நான் செயலாளர்-என்று,

காஞ்சியில் பெரியவா அறிவித்தார்கள்.

1234201_315112848661397_4724600860700186658_n.jpg

ஆறு ஆண்டுகள்,மிகவும் பிரமாதமாக அன்னாபிஷேக

தெய்வப் பணியை நான் நடத்துவதற்கு பெரியவாளின்

கருணை துணை நின்றது.

ஸ்ரீ பி.என். ராகவேந்திர ராவ் என்பவர், ஓர் ஆண்டு,

ஆந்திரா முதல் தரமான அரிசி நூற்றெட்டு மூட்டை

அனுப்பிவிட்டார்.

“அபிஷேகம்,அன்னதானத்துக்கு அதை வைத்துக்

கொள்ளலாமா?” என்று மகா சுவாமிகளிடம் கேட்டோம்.

“ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி

வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்னு நினைச்சேன்.

போகட்டும். அவர் வேண்டுகோளின்படி இந்த வருஷம்

அவர் அனுப்பியுள்ள அரிசியை உபயோகப் படுத்திக்கோ”

என்றார்கள்.

நிகழ்ச்சியெல்லாம் முடிந்தவுடன் பார்த்தால்,

முப்பத்திரண்டு மூட்டை அரிசி மிகுந்திருந்தது.

“உன் இஷ்டம் போல், கோவில்களுக்குக் கொடுத்து விடு”

என்று சொல்லிவிட்டார் ,ராவ். காஞ்சிபுரம் சென்று

மகா சுவாமிகளிடம் தெரிவித்தேன்.

“அவர் எதற்காக உன்னிடம் கொடுத்தார்?

அதைச் செய்தது போக, மீதி உள்ளதை விற்று, பாங்க்

டிராப்ட் எடுத்து அவருக்கு அனுப்புவதுதான் முறை.”

இருபத்திரண்டாயிரத்து நானூறு ரூபாய்க்கு

டிராப்ட் எடுத்தேன். ஒரு சால்வை, ஸ்ரீ மடத்துப்

பிரசாதம்,டிராப்ட் முதலியவைகளுடன்

ஸ்ரீமடம் சிஷ்யர் ஒருவரை ஸ்ரீ ராவ் அவர்களிடம்

கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்த மகான்

மகாசுவாமிகள்.

நடராஜன்
Read more: http://periva.proboards.com/thread/8260/#ixzz3IGv4CfqN

October 24 1946…. This Date in Science…First Ever Photo of Earth From Space !!!

This date in science: First-ever photo of Earth from space

White Sands Missile Range/Applied Physics Laboratory
White Sands Missile Range/Applied Physics Laboratory
On October 24, 1946, a movie camera on board the V-2 rocket captured the first photo of Earth from outer space.

October 24, 1946. Were you alive at a time when we’d never seen Earth from space? Not many of us were, and it’s hard to imagine. But if you can imagine it, think how you’d have felt seeing this first-ever photograph of Earth from outer space, taken on today’s date in 1946. On this date, a group of soldiers and scientists in the New Mexico desert launched a V-2 rocket – fitted with a 35-millimeter motion picture camera – to a suborbital altitude of 105 kilometers (65 mi). The camera was destroyed after being dropped back to Earth, but the film survived.

Photo credit: White Sands Missile Range/Applied Physics Laboratory

First photo of Earth from space, October 24, 1946  via White Sands Missile Range/Applied Physics Laboratory
Air & Space magazine tells the story of this major event in space history:

Snapping a new frame every second and a half, the rocket-borne camera climbed straight up, then fell back to Earth minutes later, slamming into the ground at 500 feet per second. The camera itself was smashed, but the film, protected in a steel cassette, was unharmed.

Fred Rulli was a 19-year-old enlisted man assigned to the recovery team that drove into the desert to retrieve film from those early V-2 shots. When the scientists found the cassette in good shape, he recalls, “They were ecstatic, they were jumping up and down like kids.” Later, back at the launch site, “when they first projected [the photos] onto the screen, the scientists just went nuts.”

Before 1946, the highest pictures ever taken of the Earth’s surface were from the Explorer II balloon, which had ascended 13.7 miles in 1935, high enough to discern the curvature of the Earth. The V-2 cameras reached more than five times that altitude, where they clearly showed the planet set against the blackness of space. When the movie frames were stitched together, Clyde Holliday, the engineer who developed the camera, wrote in National Geographic in 1950, the V-2 photos showed for the first time “how our Earth would look to visitors from another planet coming in on a space ship.”

.

V-2 #21, launched on March 7, 1947, took this picture from 101 miles up. The dark area at the upper left is the Gulf of California. White Sands Missile Range/Naval Research Laboratory.

V-2 #21, launched on March 7, 1947, took this picture from 101 miles up. The dark area at the upper left is the Gulf of California. White Sands Missile Range/Naval Research Laboratory.
Scientists quickly got better at taking Earth’s picture. Here’s one from about six months later, taken from V-2 #21, launched on March 7, 1947. This picture is also from 101 miles up. The dark area at the upper left is the Gulf of California. Image via White Sands Missile Range/Naval Research Laboratory.
Bottom line: On October 24, 1946, a movie camera on board the V-2 rocket captured the first photo of Earth from outer space.

 

SOURCE::::::EARTH SKY NEWS SITE

Natarajan

” படித்து ரசித்தது …சத்ரு சம்ஹார வேல்…”

திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமியையும், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியையும் தரிசிக்கலாம். அவர்கள் இருவரையும் ஒரே தலத்தில் தரிசித்து, அந்த இரு தலங்களுக்கும் சென்று வந்த புண்ணிய பலனை ஒருசேரப் பெற விரும்புகிறீர்களா?
அப்படியென்றால், நீங்கள் செல்ல வேண்டிய தலம் பெருவயல்.
ராமநாதபுரத்தில் பெரிய வயல்கள் சூழ்ந்த கிராமமாக இவ்வூர் திகழ்வதால் பெருவயல் என்றே அழைக்கப்படுகிற. ஒரு காலத்தில் இவ்வூரில் மிகப் பெரிய நெற்களஞ்சியம் இருந்துள்ளது.
இத்தலத்தில் மூலவராக வள்ள-தேவசேனா சமேதராக அருள்பாலிக்கிறார். ரணபலி முருகன் என்ற சிவ சுப்பிரமணியசுவாமி. பிராகாரத்தில் ராமநாதசுவாமியும், பர்வதவர்த்தினியும் எழுந்தருளியுள்ளார்கள்.
பெருவயல் தலத்தின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்ப்பது இங்குள்ள சத்ரு சம்ஹார வேல்.
நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன் என்று திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில் இங்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டிருக்கிறார். அதோடு தன சொற்பொழிவுகளில் எல்லாம் அந்த வேலின் சிறப்பையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த அருள் வாசகத்தை கோயிலில் அவர் புகைப்படத்தோடு பிரேம் போட்டு மாட்டி வைத்திருப்பதை இன்றும் காணலாம்.
திருச்செந்தூர் முருகப் பெருமானின் அருளாலும், அவரது தீவிர பக்தர் ஒருவரின் முயற்சியாலும் கட்டப்பட்ட கோயில்.
ராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் கிழவன் சேதுபதி ஆண்டு வந்த சமயம், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக பவிளங்கியவர், சாத்தப்பன் என்கிற காத்த வீர தளவா வயிரவன் சேர்வை.
முருக பக்தரான அவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணாமுனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி-தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார்.
இதோபோன்ற கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள்.
பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள். கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையையும் வேலையும் எடுத்து வந்தார்.
விஷயம் அறிந்த மன்னர், தன் அரண்மனையில் “ராமலிங்க விலாசம்’ என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு ஆலயம் அமைக்க நிலங்களையும் இறையிலியாகக் கொடுத்து உதவினார்.
அதன்பின்னர் ஆலயத்திருப்பணிகள் விரைவாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டின் அடிப்படையில் பெருவயல் கோயிலிலும் பூஜைகளும், விழாக்களும் நடைபெறுகின்றன.
வயிரவன் சேர்வை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மீதும் அதிக பக்தி வைத்திருந்ததால், ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளும் பெருவயல் தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால், மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி, ரணபலி முருகன் என்றே அழைக்கப்படுகிறார்.
பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன்,பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து, அவர்களுக்கு சகல நண்மைகளும் அருள்வதால், “ரணபலி முருகன்’ என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தமே!
இக்கோயிலில் கி.பி. 1741-ம் ஆண்டு, ராமநாதபுரம் மன்னர் குமாரமுத்து விஜய ரெகுநாத சேதுபதி காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டும், செப்பேடகளும் உள்ளன. அவை இக்கிராமத்தின் பெயரை, பெருவல் கலையனூர் என்றும், மூலவரை, சிவசுப்பிரமணியசுவாமி என்ற ரணபலி முருகய்யா எனவும் குறிப்பிடுகிறது.
குருக்களையே கிரையத்திற்கு வாங்கி, நித்ய பூஜை செய்வதற்காக அவர்களுக்கு நிலங்கள் கொடுத்து, கொல்லர், தச்சர் போன்றவர்களுக்கும் நிலங்களை கொடுத்து, நிர்வாகம், கணக்கு, முத்திரைக் கணக்கு, தான கணக்கு சரி பார்த்து கோயில் கைங்கரியம் தொடர்ந்து நடந்து வர வேண்டும் என்பதை அந்த சாசனங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்றும் கைங்கரியம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கிய கிழக்கு நோக்கிய ஆலயம். கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு குதிரை சிலைகளைக் காணலாம்.
ஒரு குதிரையில், பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்களும், அதற்கு எதிரேயுள்ள இன்னொரு குதிரையில் பத்ரகாளி அம்மன் திருவுருவமும் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான காட்சி. காலசந்தி மற்றும் சாரட்சை பூஜையின்போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்கு செய்யப்படுகிறது.
ஜெயங்கொண்ட விநாயகரை தரிசித்துவிட்டு பலிபீடம், கொடிமரம், மயில் வாகனம், அர்த்தமண்டபம் கடந்தால் கருவறை. உள்ளே வள்ளி-தேவசேனா சமேதராக ரணபலி முருகன் என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை பொங்கும் முகத்துடன் காட்சி தருகிறார். திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இவரை வழிபட்டாலே கிடைக்கிறதாம்.
பிரகாரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி, சண்முக சக்கரம், நாகரை தரிசிக்கலாம். கோயிலுக்கு வடக்கே தளவா வயிரவர் சேர்வைக்காரரின் சமாதி கோயில் உள்ளது. அங்கு சுப்பிரமணிய யந்திரமும், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.
உற்சவர்களாக விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் அருள்கிறார்கள். இவர்களையும், முருகன் உருவம் பொறித்த அதிசய வேலையும் பிரம்மோற்சவ நாட்களிலும், சூரசம்ஹாரத்தன்றுமே பக்தர்களால் தரிசிக்கமுடியும். மற்ற நாட்களில், பாதுகாப்பாக வேறு இடத்தில் இருக்கும் சத்ரு சம்ஹார வேலை சிறப்பு அனுமதியின் பேரில் ஆலயத்திற்குக் கொண்டு வந்து, அதற்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்வதும் உண்டு. சத்ரு சம்ஹார வேலை வழிபடுவோருக்கு எதிரிகள் தொல்லை விலகி, சகல பேறுகளும் கிட்டும் என்பது நம்பிக்கை.
வெளி பிராகாரத்தில், யாகசாலையின் மேல் பகுதியில் கோயில் தலபுராணமும், கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.
தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இவ்வாலயத்தில் முருகனுக்குரிய முக்கிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மாசியில் நடைபெறும் பிரம்மோற்சவமும், கந்த சஷ்டி விழாவும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
பதினொரு நாள் நடைபெறும் மாசிமாத பிரம்மோற்சவத்தில் 7ம் நாள் திருச்செந்தூரைப் போல் சண்முகர் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மூன்று காலங்களில் எழுந்தருள்வார். இது இறைவனின் ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய செயல்களைக் குறிக்கும். 10ம் நாள் தேரோட்டமும், 11ம் நாள் ஆலய தீர்த்தமான சரவண பொய்கையில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
ஏழுநாள் உற்சவமாகக் கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழாபவில் 6ம் நாள் பிரசித்தி பெற்ற சூரசம்ஹாரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். அப்போது, கடலில் கண்டெடுக்கப்பட்ட அரிய சத்ரு சம்ஹார வேலைக் கொண்டு சூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் அற்புதக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைவார்கள்.

SOURCE:::: – மு. வெங்கடேசன்  IN  www.dinamalar.com  ….Kumudam Bhakthi

Natarajan

தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம் ….

பக்தவத்சலம் பிறந்த நாள்: 09.10.1897

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தலைவர்களுள் பக்தவத்சலமும் ஒருவர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் பிறந்தது புரட்டாசி உத்திரட்டாதியில். 90 ஆண்டுகள் வாழ்ந்தவரோடு இறுதி 13 ஆண்டுகள் எனக்குப் பழக்கமுண்டு. அது எனக்கு மீண்டும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்தது போலாயிற்று. அன்றைய தலைவர்களோடு இன்றைய தலைவர்களை வைத்துப் பார்த்தால், பகல் சுருங்கி இரவு கவிந்ததாகத் தெரியும்.

பக்தவத்சலம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலுமே நல்ல புலமையையும் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டை யும் கொண்டிருந்தார். “எனது தமிழாசிரியர் உ. வே. சாமிநாத ஐயர். ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்” என்பார்.

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர்

முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.வி. அளகேசன் 1978-ல் பக்தவத்சலத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில், “பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும் என்னும் உண்மையை வாழ்ந்து காட்டுபவர் பக்தவத்சலம்” என்று சொல்லியிருந்தார் அளகேசன்.

சென்னை ராஜாஜி மண்டபத்தில் 1987 மார்ச் 13-ம் நாள் பக்தவத்சலத்துக்கு நினைவுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசும்போது, “மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மனிதர். ஆனால், விமர்சனம் அவரை வருத்தாது” என்றார் கேரளத்தின் முன்னாள் ஆளுநர் பா. ராமச்சந்திரன். பக்தவத்சலத்தின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையையும் சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடிய இரு குறிப்புகளாக இவற்றைச் சொல்லலாம்.

சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு பக்தவத்சலம்தான் இலக்கணம். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் பக்தவத்சலம் வல்லவர் என்றும் சொல்வார்கள். கேள்வி களுக்குச் சட்டமன்றத்தில் ராஜாஜி பதில் சொல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், பதில் சொல்லும்படி தன்னைத்தான் அவர் தூண்டுவார் என்று சொல்லி, ராஜாஜி தன்மேல் வைத்த நம்பிக்கையைக் குறித்து பக்தவத்சலம் பெருமைப்பட்டுக்கொள்வார்.

மாற்றுக் கட்சியானாலும் நண்பர்தான்

அந்நாட்களில் பக்தவத்சலத்தின் பிறந்த நாளன்று காலையிலேயே வீட்டுக்கு வந்து, அவருக்கு நேரில் வாழ்த்து சொல்பவர்கள் பட்டியல் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பட்டியலில் முக்கியமானவர் திமுக தலைவர் கருணாநிதி. அப்படி வருபவரை அங்கு கூடியிருக்கும் பக்தவத்சலத்தின் நண்பர்கள் சற்று நேரம் உரையாற்றச் சொல்லி அவர் பேசுவதை ஆர்வமாகக் கேட்பார்கள். சொந்த ஊரிலிருந்த தனது பூர்வீக வீட்டை ஒரு நூலகமாக மாற்ற கருணாநிதி முடிவெடுத்தபோது, அதைத் திறந்துவைக்க அவர் அழைத்ததும் பக்தவத் சலத்தைத்தான். பக்தவத்சலம் சந்தோஷமாகச் சென்று திறந்துவைத்தார். பக்தவத்சலத்தின் கடைசிக் காலத்தில், மதுரையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தார் பி.டி.ராஜன். “இந்தத் தள்ளாத வயதில், உடல் நலமும் சரியில்லாத நிலையில், மதுரைக்குச் செல்ல வேண்டாம்” என்று எவ்வளவோ கூறினார்கள் பக்தவத்சலத்தின் உடனிருந்தோர். எதையும் பொருட்படுத்தாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தனக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவரின் பிறந்த நாள் விழாவுக்கு காரிலேயே சென்று, விழாவில் உரையாற்றிவிட்டுத் திரும்பினார் பக்தவத்சலம்.

ஐந்து லட்சம் கொடுத்தால் கல்லூரி

ஐந்து லட்சம் கொடுத்தால் கொடுப்பவர் பெயரால் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்று பக்தவத்சலம் காலத் தில் ஒரு திட்டம் இருந்தது. பெரியார் பார்த்தார், “இது நல்ல திட்டம். ஆனால், பணத்துக்கு நான் எங்கே போவேன்? திருச்சியில் எனக்கு இருக்கும் நிலத்தைத் தருகிறேன். ஒரு கல்லூரி தொடங்குங்கள்” என்று கொடுத்தார். அப்படிப் பிறந்த கல்லூரிதான் திருச்சி ஈ.வெ.ரா. அரசுக் கலைக் கல்லூரி.

தன்னிடம் வரும் எந்தக் கோப்பிலும், அதற்கான முடிவைத் தானே எடுத்து, குறிப்பு அனுப்புவது பக்தவத்சலத்தின் வழக்கம். “ஐரோப்பிய ஐ.சி.எஸ். அதிகாரிகள் நிறைய பேர் என்னிடம் பணியாற்றியிருக் கிறார்கள்; ஆனால், நான் ஒருபோதும் என்ன செய்யலாம் என்கிற முடிவை அவர்களிடம் கேட்டதில்லை” என்று பக்தவத்சலம் ஒருமுறை என்னிடம் கூறினார். கக்கனும் அப்படித்தான். “கக்கனிடமிருந்து ஏதேனும் வந்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும்; எங்களுக்குச் சங்கடம் ஏதும் இருக்காது” என்று முன்னாள் தலைமைச் செயலர் கார்த்திகேயன் சொல்வதுண்டு. ‘பரிசீலித்துப் பார்வைக்கு வைக்கவும்’ என்று மட்டுமே அமைச்சர்கள் குறித்து வைப்பதைத்தானே பின்னாட்களில் பார்க்கிறோம்?

பக்தி பழமைவாதியாக்கிவிடவில்லை

இறைப்பற்றாளர் பக்தவத்சலம். ஆனாலும், பக்தியை எங்கே நிறுத்திவைக்க வேண்டும் என்பதை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நாட்களில், “கோயிலில் இருக்கும் தங்கக் குடங்களை நாட்டுக்குத் தரக் கூடாதா?” என்று கேட்டவர் அவர். கோயில்களுக்கு நிலச்சொத்து ஒத்துவராது. குத்தகை, பண்ணைச் சாகுபடியெல்லாம் பார்த்தாகிவிட்டது. பலனில்லை. காணி நிலத்துக்கு பாரதியார் ஏங்கவில்லையா? ஆண்டவனுக்கே நிவேதனம் என்ப தெல்லாம் அகம்பாவம். எனவே, நான்கு லட்சம் ஏக்கர் கோயில் நிலத்தை வைத்திருப்பவர்களிடமே விற்று முதலீடு செய்து, வட்டிப் பணத்தில் கோயில் களைப் பராமரிக்கலாம் என்பது 1976-ல் அவரது திட்டம். அதற்கு எழுந்த எதிர்ப்புக்கு, மயிலாப்பூர் அகாடமி கூட்டத்தில் பதில் சொன்னார், “நானேதான் நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து கோயில்களுக்கு விலக்களித்தேன். நானேதான் கோயில்களுக்கு நிலச் சொத்து சரிவராது என்றும் சொல்கிறேன்.”

துணியின் இழைகளைப் பிரிக்கலாமா?

இந்திய ஓர்மையில் தளராத நம்பிக்கையுள்ளவர் பக்தவத்சலம். இனவழி அரசியலைக் குறிப்பிட்டு “வடக்கத்தியர் எல்லோரும் ஆரியர்களா? அல்லது பிராமணர்கள் அல்லாத எல்லோரும் திராவிடர்களா? இனங்களும் பண்பாடுகளும் மதங்களும் சாதி களும்கூட கலந்து, நெருக்கி நெய்த துணியாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் இழைகளைப் பிரித்துக் குலைக்க வேண்டாம்” என்றார். “புஷ்கரம், பிருந்தாவனத்தில் உள்ள கோயில்களும் வழிபாடும் காஞ்சிபுரத்தில் உள்ளதுபோல் இருக்கும். ராஜஸ்தானில் நம்மைப் போன்றே பொங்கல் கொண்டாடுவார்கள். முற்கால வரலாற்றில் இந்தப் பிரிவுகள் இருந்திருக்கலாம். பின்னர் எல்லாம் ஒன்றாகிப்போனதும் வரலாறுதானே?” இப்படியெல்லாம் இந்திய ஒற்றுமையை விளக்குவார்.

நான் தனியாக நின்றேன்

காங்கிரஸ் வழியிலான அவரது மொழிக் கொள்கை, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அவர் கையாண்ட விதம், இவை இரண்டையும் குறைகூறுவார்கள். 1965 முதலாகவே மாறிவந்த அரசியல் சூழலை பக்தவத்சலம் கவனமாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் சொல்வார்கள். இந்த விமர் சனங்களுக்கு அவர் பதில் என்னவாக இருந்திருக்கும்?

1950 முதல் 15 ஆண்டுகளுக்கு இந்தியோடு ஆங்கிலமும் தொடர்வதை அரசியல் சாசனம் உறுதி செய்தது. அந்த ஏற்பாடு தற்போது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இருப்பவர்கள் இந்தியில் ஒரு அட்சரம்கூடக் கற்க வேண்டிய கட்டாயம் இல்லை. தமிழகத்தின் இருமொழிக் கொள்கை என்பது மூன்றாவதாக ஒரு மொழியையும் கற்கக் கூடாது என்பதல்ல. 1937-ல் நடந்ததைப் பார்த்திருந்ததால் இங்கே இந்திக்கு மாணவரிடையே ஒரு ஒவ்வாமை இருப்பது தெரிந்தது. எனவே, விரும்பினால் அந்த மொழியைக் கற்கலாம் என்பதாக மட்டுமே இருந்தது. எதற்கும் வழுக்கலாகப் பதில் சொல்லி அறியாத பக்தவத்சலத்தின் பதில் இதுவேதான்.

தன் கட்சிக்காரர்களே குறை சொல்வதைப் பற்றிக் கேட்டால், “இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இவர்கள் என்ன செய்தார்கள்? சூழ்நிலையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. நான் தனியாக நின்றேன்” என்பார். சரியா, தவறா என்பதெல்லாம் வரலாற்றுப் பொருளாக விவாதிக்கப்படும். ஆனால், இவர் கட்சியைக் கைவிட மறுத்தார், கட்சி இவரைக் கை விட்டது என்றுதான் எனக்குத் தோன்றியது.

– தங்க. ஜெயராமன்,  in The Hindu…Tamil

ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்,

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

Natarajan

” ஒன்று ஏன் ஒரு கோடு வடிவில் உள்ளது …” ?

ஒன்று என்பது ஏன் ஒரு கோடு போட்டது போல ஒரு வடிவத்தில் இருக்கிறது? அது ஏன் வேறு வடிவத்தில் இருந்திருக்க கூடாது?

இப்படி எல்லாம் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கக் கூடாது என்கிறீர்களா?

எண்கள் இல்லா காலம்

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்களுக்கு ஒண்ணு, ரெண்டு, மூணு என எண்ண வேண்டிய தேவை ஏற்படவில்லை. சாப்பிட என்ன கிடைக்கும் என அலைவதே அவர்களுக்கு முழுநாள் வேலை.

வயிற்றுக்குப் போதுமானதாக இல்லாமல் இருந்தாலும் கிடைத்ததைச் சாப்பிட்டு, வாழ்ந்த காலம். அந்த காலம் வரைக்கும் மனிதர்களுக்கு எண்கள் தேவைப்படவில்லை. தேவைக்கும் மேலாக மிஞ்சிப்போனால்தான் கூடுதலாக இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்? அதற்கான அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், காலம் மெல்ல மாறியது.

கால்நடைகளை வளர்த்து தங்கள் பிடியில் வைத்துக்கொண்டால் அவற்றால் கிடைக்கும் பொருள்களைச் சேமித்து வைத்திருந்து சாப்பிடலாம் என மனிதர்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்தனர். சேர்த்து வைத்துள்ள கால்நடைகளை எண்ணிப் பார்க்க வேண்டிய நெருக்கடி வந்தது.

எண்களின் பிரசவம்

அப்போது மனிதர்களின் மூளையிலிருந்து எண்கள் பிரசவமாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனிதரின் மூளையிலிருந்து கைவிரல்கள் வழியாக எண்கள் பிரசவமாகின.

கைவிரல்களைப் பயன் படுத்தித்தான் மனிதர்கள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிப் பார்க்க தொடங்கி னார்கள்.

அதனால்தான் ஒன்று என்பது ஒரு விரலின் வடிவத்தில் இருக்கிறது.

குண்டக்க மண்டக்க கேட்கிற கேள்விகளுக்கு உள்ளேதான் விஞ்ஞானம் இருக்கிறது.

எழுதப் படிக்கத் தெரியாத பால்காரம்மாக்கள் இன்னமும் கூடப் பால்கணக்கைச் சுவரில் ஒத்தை ஒத்தை விரல்கள் மாதிரி கோடு கோடாகக் கீறி வைத்து கணக்கிட்டுப் பிறகு மொத்தமாகக் கூட்டிக் கணக்கு பார்ப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

பத்துக்களின் ஆரம்பம்

கையில் உள்ள பத்து விரல்கள்தான் உலகின் முதல் கால்குலேட்டர். பத்து வரைக்கும் எண்ணிப் பார்த்த பிறகு அடுத்து என்ன செய்யலாம் என முட்டிக்கொண்டு எண்கள் நின்றன.

ஆரம்ப எண்களைப் பிறந்த குழந்தையாக நினைத்துக் கொண்டால் 10- களின் ஆரம்பத்தை எண்களின் தவழும் காலகட்டமாக வைத்துக்கொள்ளலாம்.

பத்து விரல்களையும் எண்ணி முடித்த பிறகு ஒரு பத்துக்கு ஒரு கூழாங்கல் எனக் கற்களை வைத்து பழங்கால மனிதர்கள் கணக்கை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினர். முதல் பத்து, இரண்டாவது பத்து, என எண்ணி எண்ணி பத்து பத்துக்கு நூறு எனப் பெயர் வைத்து எண்கள் மேலும் வளர்ச்சி அடைந்தன.

இன்னமும்..

ஆங்கிலத்தின் கால வழக்கில் ஒரு பத்தாண்டு என்று பேசப்படுவதை கவனியுங்கள். என்ன காரணத்தாலோ இந்திய கால வழக்கில் ஒரு பத்தாண்டு எனும் முறை ஆங்கில கால வழக்கு அளவுக்கு அவ்வளவு ஆதிக்கமாக இல்லை. ஆனால் பத்து பத்தாகக் கூட்டும் முறை இன்னமும் நவீன கார்கள் உள்ளிட்ட எல்லா தானியங்கி வாகனங்களிலும் தொடர்வதைப் பாருங்கள்.

அபாகஸ்

ஒரு பத்துக்கு ஒரு கல் என்று எடுத்து வைத்த முறைதான் ஒரு மரச்சட்டத்தில் கற்களுக்குப் பதிலாக மணிகளைக் கோத்து அவற்றைக் கொண்டு கணக்கிடும் அபாகஸ் மணிச்சட்டக் கருவியாக வளர்ந்தது.

ஒன்று எனும் எண்ணுக்கும் முன்பாகவும் பின்பாகவும் பல எண்களைக் கொண்ட பெரும் பிரபஞ்சமாய் கணிதம் வளர்வதற்கான மையமாக ஒன்று எனும் எண் நிற்கிறது. அதனைப் பெற்றெடுத்த விரலை நினைவுபடுத்தும் விதமாகவே ஒன்று விரலின் வடிவத்தில் இருக்கிறது.

Source:::: த.நீதிராஜன்  in The Hindu…Tamil
Natarajan

Image of the Day… This Date in Science…Launch Of SPUTNIK…

This date in science: Launch of Sputnik

Sputnik’s unassuming beep was a symbol not only of Russia’s remarkable accomplishment, but also of what many believed was Soviet superiority in space.

October 4, 1957. On this date, the Soviet Union launched Sputnik I, the first artificial satellite to orbit the Earth. According to many space historians, the Space Age began on this date.

It was a polished metal sphere, made of aluminum alloy. It was 58 centimeters (23 inches) in diameter – about the size of a beach ball – and weighed just 184 pounds. Its four external radio antennae were meant to broadcast radio pulses. And broadcast they did. For 21 days in 1957, people around the globe heard Sputnik’s unassuming beep beep on the radio.

Photo credit: NASA

The pressurized sphere had five primary science objectives: test a process for placing an artificial “moon” into Earth orbit; provide information on the density of Earth’s atmosphere, calculated from Sputnik’s lifetime in orbit; test radio and optical methods of orbital tracking; determine the effects of radio wave propagation though Earth’s atmosphere; and check principles of pressurization that could be used on Earth-orbiting satellites. Clearly, the next step was to place living things in space.

Sputnik’s beeping was a symbol not only of Soviet Russia’s remarkable accomplishment, but also of what many immediately assumed was Russia’s superiority in space. The American public feared that the Soviets’ ability to launch satellites also translated into the capability to launch ballistic missiles that could carry nuclear weapons from Europe to the U.S.

This historic image shows a technician putting the finishing touches on Sputnik 1, humanity's first artificial satellite. The pressurized sphere made of aluminum alloy had five primary scientific objectives: Test the method of placing an artificial satellite into Earth orbit; provide information on the density of the atmosphere by calculating its lifetime in orbit; test radio and optical methods of orbital tracking; determine the effects of radio wave propagation though the atmosphere; and, check principles of pressurization used on the satellites.  Image Credit: NASA/Asif A. Siddiqi

Then the Soviets struck again. On November 3, 1957, they launched Sputnik II, this time carrying a much heavier payload, including a dog named Laika.

Sputnik I and Sputnik II sent shockwaves around the world. American political leadership scrambled to catch up. Ultimately, that extra push resulted in the United States sending the first astronauts to walk on the moon, on July 20, 1969.

Bottom line: On October 4, 1957, the Soviet Union launched the Sputnik 1 satellite into Earth orbit, and the Space Age began.

SOURCE::::: earth sky news

Natarajan

 

How The City KOROMO in Japan was Renamed as TOYOTA City !!!

Toyota
Japan

Toyota Predicts First-Ever Operating Loss For Fiscal Year 2009

Cities are more often named after mythological beings, local terrain features, or historical figures. Very rarely do cities get named after actual companies. One hilarious story involves Topeka, Kansas, which changed its name to “Google” during March 2010 in an effort to bring the company’s fiber-optic technology to the city. Google, of course, jokingly renamed itself “Topeka” for one day—April 1, naturally.

The story of the town of Koromo is neither a spur-of-the-moment decision nor an April Fools’ joke; rather, it shares a long history with the Japanese automobile manufacturer Toyota. Koromo had been an agricultural village for centuries. During the late 1800s, Koromo had seen a boom in the silk manufacturing industry. When the MARKET for raw silk collapsed during the 1930s, Toyoda Automatic Loom Works, Ltd. bought 2 million square meters (21.5 million ft2) of undeveloped land in Koromo to build factories for their NEW BUSINESS venture—automobiles.

The plants in Koromo manufactured vehicles under the “Toyoda” brand and family name. However, some found that a change was necessary. The Toyoda family agreed to rename its company “Toyota”—which, when written in Katakana, would require eight brush strokes (the number eight was considered lucky). Similarly, “Toyota” just sounded a lot more modern than “Toyoda” (which meant “fertile rice paddies“). Business boomed for the company despite the devastation of World War II. As a result of their local and nationwide contributions, Koromo was renamed “Toyota City” on January 1, 1959. A year later, owing to its place in the industry, Toyota became a sister city to Detroit.

SOURCE:::: listverse.com

Natarajan

” ஐப்பசி மாதத்தில்… காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள்.

photo (19)

புண்ணிய நதிகள் ஏழு. அவற்றில் முதலாவது- கங்கை; 7-வது நதி- காவிரி. இந்த நதியில் பொன் எனும் உலோகமும் கலந்திருப்பதால், ‘பொன்னி’ என்றும் பெயர் உண்டு காவிரிக்கு!


புண்ணிய நதிகளான கங்கையையும் காவிரியையும் இணைத்தால், இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்னையே இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த இரண்டு நதிகளையும் என்றைக்கோ இணைத்து விட்டது புராணம்!

என்ன… ஆச்சரியமாக இருக்கிறதா?

துலா மாதம் எனப்படும் ஐப்பசியில், அதிகாலை வேளையில் எழுந்து வீட்டில் நீராடுவது நல்லது. நதியில் நீராடுவது மிகச் சிறப்பு. அதிலும் குறிப்பாக காவிரியில் அல்லது அதன் உற்பத்தி ஸ்தானமான தலைக்காவிரியில் நீராட வேண்டுமாம். முக்கியமாக, மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடுவது வெகு விசேஷம்!

துலா புராணப்படி, ஐப்பசி மாதத்தில்… காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள்! ஐப்பசி மாதக் கடைசி நாளில், இங்கே நீராடுவதற்கு ‘கடை முழுக்கு’ என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர்!

வான் நதியாம் கங்கையை பூமிக்கு அழைத்தான் பகீரதன்.

”எண்ணற்ற பாவங்களைச் செய்துவிட்டு, எல்லோரும் அதனை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நான் வரமாட்டேன்” என்று தயங்கி மறுத்தாள் கங்காதேவி.

உடனே பகீரதன், ”பாவம் செய்பவர்களை ஏன் சிந்திக்கிறாய்? எத்தனையோ மகான்கள் நீராடுவார்களே…” என்று சொல்ல, பூமிக்கு வர சந்தோஷத்துடன் சம்மதித்தாளாம் கங்காதேவி! அதன்படியே வடக்கே குடிகொண்டாள். அதுமட்டுமா? தென்னக மக்களும் பயனுறும் வகையில், இங்கே… ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் வாசம் செய்கிறாள்!

இதையறிந்த பக்கத்து ஊர்க்காரர் ஒருவர்… பாவம், அவருக்கு கால் ஊனம்… கடைமுழுக்கு நாளன்று மிகவும் கஷ்டப்பட்டு நடந்து வந்தார். கடைமுழுக்கின் மறுநாள்தான் அவரால் துலா கட்டத்துக்கு வந்து சேர முடிந்தது. இதையறிந்து வருந்திய கங்காதேவி, அந்த நாளிலும் காவிரியில் இருந்தாள். இதனால், கடைமுழுக்குக்கு அடுத்த நாளை (கார்த்திகை முதல் நாள்) ‘முடவன் முழுக்கு’ என்பர்!

Maha Periyava 30

காஞ்சி பெரியவாள் ஒருமுறை மயிலாடுதுறையில் முகாமிட்டிருந்தார். காவிரி ஸ்நானம் செய்வதில் லயித்துப் போவார் ஸ்வாமிகள். இந்த வேளையில், கோயில் திருப்பணி விஷயமாக மடத்து ஊழியர் ஒருவரை அழைத்த ஸ்வாமிகள், ஊரில் உள்ள பிரமுகர் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு, அவரிடம் ஆலயத்துக்கான கைங்கர்யத்தைச் செய்ய முடியுமா என்று கேட்டுவரும்படி பணித்தார்.

மடத்தில் இருந்து எந்தவொரு வேலையாக வெளியே கிளம்பினாலும், விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைத்து வணங்கிவிட்டுச் செல்வதே வழக்கம். இதனை அந்த சிப்பந்தியிடம் நினைவுபடுத்தினார் ஸ்வாமிகள். அப்படியே செய்தார் ஊழியர்!

சிறிது நேரம் கழிந்தது. பிரமுகரைப் பார்த்து விட்டு வந்த மடத்தின் ஊழியர், ”போன காரியம் நிறைவேறவில்லை. அதுமட்டுமின்றி, விக்ன விநாயகருக்கு தேங்காய் உடைத்தேன்; அவர் விக்னத்தைப் போக்குவதற்கு பதிலாக விக்னத்தை உண்டு பண்ணி விட்டார்!” என்று சொல்ல, மகாபெரியவாளின் முகம் மாறியது. எவருடனும் எதுவும் பேசாமல், அன்றைய பூஜை அனுஷ்டானங்களில் மூழ்கிப்போனார் ஸ்வாமிகள்.

அந்த ஊழியர் ஆடிப்போனார். ‘எல்லோரிடமும் பேசுவது போலபெரியவாளிடம் பேசியது தவறுதானே?’ என்று வருத்தப்பட்டார். ‘குருநாதரின் மனம் நோகும்படி நடந்து கொண்டோமே…’ என்று தவித்து மருகினார். சாப்பிடவும் முடியவில்லை; வேறு வேலைகளில் ஈடுபடவும் மனம் ஒத்துழைக்கவில்லை.

ஒருகட்டத்தில், விறுவிறுவென ஸ்வாமிகளிடம் சென்று, அவரை விழுந்து நமஸ்கரித்து மன்னிப்பு கேட்டார் ஊழியர். ஆனால் பெரியவாள், ”ஒரு தப்பும் செய்யலியே நீ? வருத்தப்படாதே! என்ன… ‘விக்னத்தை களையறதுக்கு பதிலா உண்டு பண்ணிட்டார்’னு நீ சொன்னதுதான் தப்பு. இன்னொரு விஷயம்… நீ தேங்காயை உடைச்சதுமே, ‘இந்த வேலை இந்த பிரமுகரால நடக்காது; வேற ஒரு பிரமுகரை அனுப்பி வைக்கிறேன்’னு பிள்ளையாரே சொல்லிட்டார். அப்படியிருக்க, விக்னத்தை உண்டு பண்ணிட்டதா சொல்லிட்டியே… அவ்ளோதான்!” என்று மெள்ள புன்னகைத்தார் ஸ்வாமிகள்.

தெய்வத்திடம் நாம் வைக்கிற நியாயமான பிரார்த்தனைகள் ஒருநாளும் வீண் போகாது! நாம் எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்தபடி நடக்காவிட்டாலும்கூட, ஏதோவொரு நாளில்… நிறைவேறியே தீரும்! இதை உணர்ந்து, தெளிந்து வணங்கும் நாளெல்லாம் திருநாள்தான்!

மஹா பெரியவா அருள்வாக்கு : –

தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும் அடையாவிட்டாலும் நம்முடைய மனஸின் அஹங்காரம் குறையும். எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் ஜலம் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே அது பரமாத்ம ஸ்வரூபத்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும்.

SOURCE CREDIT:::: balhanuman”s blog …balhanuman@wordpress.com

Natarajan

லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று…. OCT 2….

வரலாற்று நாயகர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

# மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது கங்கைக் கரையில் தொலைந்து போனார். இடையர்களால் மீட்கப்பட்டு அவர்களால் சிலகாலம் வளர்க்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டார். ஒன்றரை வயதில் தந்தை இறந்துவிட, மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார்.

# ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றபோது மைனராக இருந்தும் சிறை புகுந்தார். பின்னர் உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டார். ஒன்பது வருடங்களை சிறையில் கழித்தார்.

# உடல் நலமில்லாத மகளைப் பார்க்க பரோலில் வந்தார்; மகள் இறந்துவிடவே மீண்டும் சிறை புகுந்தார். பிரதமராக இருந்தபோது தனது மகன், கல்லூரியில் சேர பரிந்துரை தர மறுத்துவிட்டார்.

# சாதி அடையாளம் அற்றவர். பெயருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரைத் துறந்து ஹரிஜன சேவையில் தீவிரமாக ஈடுபட்டார். ‘சாஸ்திரி’ என்கிற பட்டம் அவர் காசி, வித்யா பீடத்தில் படித்துப் பெற்றது.

# சிறந்த நிர்வாகி. ஜி.பி.பந்த் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பெண் நடத்துநர்களை கொண்டு வந்தார். உள்துறை அமைச்சராக இருந்தபோது லோக்பாலை அமல்படுத்த அப்போதே அவர் ஆசைப்பட்டார்.

# எளிமையின் உச்சம். காமராஜர் திட்டத்தால் பதவி விலகிய பின்னர் பருப்பு, காய்கறிகளை உணவில் குறைக்கச் சொன்னார். சேமிக்கிற அளவுக்கு சம்பளம் வருவது தெரிந்ததும் சம்பளத்தை குறைத்துக்கொண்டார். ஒருமுறை காஷ்மீர் பயணத்தின்போது சொந்தமாக ஸ்வெட்டர்கூட இல்லாமல் இருந்தார். அவர் இறந்தபோது காருக்கு கட்ட வேண்டிய கடன் பாக்கி இருந்தது.

# போர்க்காலத்தில் ‘ஜெய் ஜவான் ஜெய் கிஸான்’ (வீரர்களுக்கு வெற்றி! வேளாண்மைக்கு வெற்றி!) என்கிற கோஷத்தை தந்தார். தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறையை உண்டாக்கி வெண்மைப் புரட்சிக்கான அடித்தளமிட்டார்.

# நேருவின் மறைவுக்குப் பின்னர் இந்தியாவின் பிரதமர் ஆனார். இந்தித் திணிப்பு, மலையகத் தமிழர்களை அகதிகளாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஆகியவை இவர் மீதான விமர்சனங்கள்.

# கட்ச் பகுதியில் பாகிஸ்தானுடன் நிலத்தகராறில் அமைதி யாக ஒப்பந்தம் செய்துகொண்டார். சீனப்போரில் இந்தியா தோற்றிருந்தது வேறு பாகிஸ்தானுக்கு உத்வேகம் தந்திருந்தது. காஷ்மீரில் கலவரங்கள் சூடு பிடித்தன. சாஸ்திரி தீரத்தோடு வழிகாட்டினார். சர்வதேச எல்லைக் கோட்டை கடந்து லாகூர்வரை இந்திய ராணுவம் பாய்ந்த போது சாஸ்திரியை உலகம் அண்ணாந்து பார்த்தது.

# தாஷ்கண்ட்டில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் மர்மமான முறையில் இறந்து போனார். 20 மாதங்களே இந்தியாவை ஆண்டாலும் எளியவர்களின் தலைவராக திகழ்ந்த அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது!

SOURCE::::: பூ.கொ.சரவணன்  in The Hindu ….Tamil
Natarajan