Nine Indians Who have Planets Named after Them….

Viswanathan Anand just had a planet named after him. The Chess Grandmaster, once nicknamed the “Lightning Kid”, famous for his rapid tactical calculations has been immortalized with planet Vishyanand, the main asteroid belt minor planet between the orbits of Mars and Jupiter.

But Indians are no strangers to having planetary bodies named after them – these whiz kids have had their own planets for a while now.

Hamsa Padmanabhan

hamsa planet

At 16, Hamsa Padmanabhan had a minor planet 21575 named ‘Hamsa’, after her. She was then a second-year B.Sc student of Fergusson College, when she made a presentation at the Massachusetts Institute of Technology’s (MIT) Lincoln lab for the Intel International Science and Engineering Fir (ISEF) in 2006. Today at 21, she is doing her post graduation in Physics from Pune University, after which she plans to do her doctoral research in theoretical physics.

Sainudeen Pattazhy

sainuddin planet

NASA named a minor planet (5178 No CD4) after Kerala zoology professor Sainudeen Pattazhy for his environmental research and campaigns, including red rain, health hazard of mobile phone towers, biological control of mosquitoes and the eco-biology of trees of religious importance.

Vishnu Jayaprakash

vishnu fuel cell

In 2010, Vishnu Jayaprakash, then a Chennai Class XII student of Chettinad Vidyashram demonstrated a microbial fuel cell that runs on cow dung and inexpensive graphite electrodes. The minor planet named after him is called 25620 Jayaprakash. He aimed to reduce power costs for India’s 700,000 villages. Today, he has done extensive research on renewable energy technologies, and is now focussing on Microbial Fuel Cell (MFC) technology.

Anish Mukherjee

anish intel award planet

When Anish Mukherjee and Debarghya Sarkar were only 16 years old, they noticed the large scale bottle tampering rampant in India. They took the idea of autodisposable syringes—which, once used, cannot be used again—and implemented that for one-time use bottle cap. Their design enabled customers to know if the the bottle had been tampered with. For this, planet 2000 AH52 he was renamed 25629 Mukherjee.

Debarghya Sarkar

sarkar intel award planet

In 2010, Sarkar and his school classmate Anish Mukherjee worked on an innovative design that would make bottle-caps completely tamper proof. For his contribution to electrical and mechanical engineering, 25630 Sarkar (previously 2000 AT53) is named after him. Debarghya Sarkar is currently a Ph.D. student at the University of Southern California. He plans to take his interest in bottle cap design towards a larger goal – design, fabrication and integration of devices that modulate photons and electrons.

Hetal Vaishnav

hetal planet

When class X student Hetal Vaishnav saw that ragpickers were not picking up waste packets made up of multilayer plastic, she found that recycling companies avoided buying multilayer film plastic waste from them as it cannot be reused or recycled. Hetal then spent months to innovate upon a process to deliver an innovative material that is “sustainable to water, has good nail- and screw-holding capacity, and has features that are better than MDF (Medium-density fibreboard) and plywood.”. This let her use multilayered and metallised plastic used for packaging wafers and chewing tobacco. “I got a certificate from Lincoln Lab a few days ago,” Hetal said on telephone from Rajkot. Planet 25636 Vaishnav was named for her contribution to the environment.

Akshat Singhal

akshat planet

After Akshat found how annoying it was to index documents in a computer, he developed a system to automatically categorise documents, and also find relations between them, using artificial intelligence. The planet named after him, 12599 Singhal, is in the same region of planets that has 8749 Beatles, 2001 Einstein and 7000 Curie.

Madhav Pathak

madhav pathak

Madhav Pathak has changed the conventional Braille slate, making writing easier for the visually impaired. After Madhav Pathak found that his uncle could not easily write in Braille, the system of six raised dots, he decided to change it. Braille  has a steep learning curve: Blind children have to memorise more than 300 combinations of dots, since they need one set of combinations for reading, and another set for writing! Madhav has modified the Braille slate (used for writing the language), which lets students easily read and write the language. For this, he has 12509 Pathak named after him.

Viswanathan Anand

vishwanatan anand

Named Vishyanand, the main belt minor planet is between the orbits of planets Mars and Jupiter. The planet was discovered in 1988 by Kenzo Suzuki in Toyota, Japan and was nameless until now. A minor planet is usually named after the person who discovered it but if it remains nameless, then it’s in the hands of the committee members to name it. Hence Micahel Rudenko, a minor planet committee member and an ardent fan of Viswanathan Anand’s knack for chess decided to name the planet ‘Vishyanand’. He is only the third chess player in the world after Alexander Alekhine and Anatoly Karpov to be honored in this fashion.

With inputs from Mensxp.com

Source…..www.indiatimes.com

Natarajan

படித்து வியந்தது ….”தெய்வத்தின் நிழல் ரா.கணபதி”….

1935 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் பிறந்து 2012ஆம் வருடம் பிப்ரவரியில் சிவராத்திரியன்று மஹா பெரியவருடன் சங்கமமான ரா.கணபதியைப் பார்த்தால் 35 புத்தகங்கள்

எழுதியவர் போல் தெரியாது. எலும்பும் தோலுமாய் இருப்பார். சிறு வயதில் பிடித்த காச நோயின் வடு இறுதிவரை இருந்தது. பேசிக்கொண்டே இருப்பார். திடீரென்று மெளனத்திற்குப் போய் விடுவார். அப்படி இருந்ததால் தான் அவர் எழுத்தும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். ஆரியாம்பாள் இறப்பின் போது சங்கரர் பட்ட துயரத்தை இவர் வர்ணித்ததை அறிஞர் அண்ணா ரொம்பப் பாராட்டினாராம். அவர் தாயாரும் அந்தச் சமயத்தில் மறைந்ததால் அவர் மன நிலையும் அப்படி இருந்ததாகச் சொன்னாராம்.

இடை இடையே கர்நாடக கீர்த்தனைகளையும் பஜனைப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

பெரியவர் கட்டளைப் படிதான் ஆதி சங்கரர் வரலாற்றையும் கணபதி எழுதினார். இவருடைய “ஜய ஜய சங்கர’ தொடர் கல்கியில் 1962ஆம் ஆண்டு வெளிவந்தது. 10 ஆண்டுகள் கல்கியில் பணிபுரிந்தார். mail நாளேட்டில் கொஞ்சம் காலம். 25 ஆண்டுகள் எந்தப் பத்திரிகையையும் சாராமல் எழுதினார். புட்டபர்த்தியில் தங்கலாம் என்று சென்ற போது ஸ்ரீ சாய் பாபா “”உன் வேலை இங்கே இல்லை. தெய்வத்தின் குரல் எழுது. அதுவே உன் பிறவிப் பணி” என்றாராம்.

பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், சத்ய சாய்பாபா பற்றி, ஸ்ரீ ராம கிருஷ்ணர் – ஸ்வாமி விவேகானந்தர், ஸ்ரீ சாரதா தேவி பற்றி, மீரா பாய், பகவான் ரமணர் பற்றி என்று பல மஹான்களைப் பற்றி அவர் எழுதியிருந்தாலும் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர் உபன்யாசங்களையும், சம்பாஷணைகளையும் தொகுத்து அவர் ஏழு புத்தகங்களாக வானதி பதிப்பகம் மூலம் கொண்டு வந்த “தெய்வத்தின் குரல்’ தான் அவர் எழுத்துக்களுக்கு மகுடம் போல் திகழ்கிறது. “தெய்வத்தின் குரல்’தொகுப்பிற்காக ரா.க. ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. காரணம் பெரியவர் ஒரு விஷயத்தை ஓர் இடத்தில் ஆரம்பிப்பார். வேறு இடத்தில் முடிப்பார். ஒவ்வொரு விஷயத்தையும் அலசும்போது முன்னர் விட்டுப் போன விளக்கங்களை வேறு இடத்தில் சொல்வார். கணபதி அனைத்தையும் செவிமடுத்துக் கேட்டு சந்தேகம் இருந்தால் வேறு புத்தகங்களையோ நபர்களையோ பார்த்துத் தெரிந்து கொண்டு அப்படியும் குழப்பம் இருந்தால் பெரியவரிடமே கேட்டு குறிப்பு எடுத்துக் கொள்வார். அதுவும் பெரியவரின் சம்பாஷணைப் பாணியிலேயே இவரும் குறிப்பு எடுத்து எழுதினார். அந்த நூல் “ஸ்ர்ண்ஸ்ரீங் ர்ச் ஞ்ர்க்’ என்று ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் (ஹிந்தியில் மூன்று தொகுப்புகள் வந்துள்ளன) மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் போன்றவர்கள் அந்த நூலை “ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி உபநிடதம்’ என்று புகழ்ந்திருக்கிறார்கள்.

மஹா பெரியவர் மிகச் சில சமயங்களில் ஆன்மீகம் தவிர இதர விஷயங்களைப் பேசியதும் உண்டு. அந்த நேரங்களில் ஹாஸ்ய நொடிகளும் உண்டு. அதிலும் பலப் பல விஷயங்கள் வெளி வரும் என்பார் கணபதி. அவரே பெரியவரை சமயம் வாய்த்தபோது ஒருமுறை “”ஏன் உங்களை பெரியவான்னு கூப்பிடறா” என்று கேட்டாராம். அவர் நமுட்டுச் சிரிப்புடன் “”பெரிய வாய். ஓயாம பேசறேன் இல்லயா, அதனாலோ என்னவோ” என்றாராம். “”இல்லை. மஹா வாக்கியங்களை உபதேசம் பண்ற வாய்”என்றார் இவர்.

“”சரி அப்ப ஏன் பெரியவாள்னு சொல்றா” என்று பீடாதிபதி கேட்டதற்கு “”எங்க காம க்ரோதத்தை நீங்க வாளால் அறுத்து எரியறதாலே” என்று சட்டென்று கணபதி சொன்னாராம். தான் சார்ந்துள்ள “காமகோடி’ என்கிற பீடத்திற்கான பெயர்ப் பொருத்தத்தைப் பெரியவர் ஒருமுறை சொன்னாராம். “”காமகோடின்னா தர்மார்த்த காமகோடின்னுஅர்த்தம். காமத்தின் கோடியிலே என்ன இருக்கும்? மோஷம்”என்றாராம்.

ரா.கணபதியின் “மைத்ரீம் பஜத’ புத்தகத்திலிருந்து மஹா பெரியவர் சம்பந்தமான ஒரு சம்பவம்: சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் ஸ்ரீ மஹா பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். ஒரு சின்ன பெண் ஸ்ரீ ராம ஜயம் எழுதிய நோட்டு கொடுத்து வெள்ளிக் காசு பெரியவரிடம் கேட்டது. அப்போது ஒரு லட்சம் நாமம் எழுதினால் தங்கக் காசும் 12,500 எழுதினால் வெள்ளிக் காசும் பெரியவர் தந்த சமயம். வெள்ளிக் காசு கேட்டவுடன் மலர்ந்த முகத்துடன் நோட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுத்து அனுப்பினார். சற்று நேரத்திலேயே கண்ணைக் கசக்கிக் கொண்டு அவள் திரும்ப இவரிடம் வந்து நின்றாள். “”காசு எங்கேயோ தொலைந்து போய்விட்டது” என்று அழுதாள்.

“”நீ எவ்வளவு எழுதினாய்” என்று பெரியவர் கேட்டார்.

“”8,500 நாமம் எழுதினேன்”.

“”பின்னே ஏன் 12,500 எழுதினது போல் வெள்ளிக் காசு கேட்டாய்?”

“”பொய் சொன்னேன்”.

“”அது தப்பு இல்லயா, அப்படிச் செய்யலாமா?”

என்று அவளைக் கேட்டவர் அங்கிருந்த பக்தர்களைக் கேட்டார்.

“”இந்தச் சிறுமி பாவம் அறியாமல் 12,500 ராம நாமாக்களுக்குப் பதில் 8,500 நாமா எழுதியுள்ளது.  இன்னொரு 4,000 நாமா குறைகிறது. நீங்க எழுதி சரி செய்ய முடியுமா”?

அங்கேயே கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் தாளும் எழுது கோலும் வழங்கப்பட்டன. 4000 பூர்த்தியானதும் அந்தச் சிறுமியிடம் அவர் சொன்னார்:

“”நீ 8500 தான் எழுதினதா நிஜத்தைச் சொன்னதால இவங்களை வெச்சு மீதியை எழுதிட்டேன். கணக்கு சரியாப் போயிடுத்து. வெள்ளிக் காசு தரலாம்னாலும் நீ உண்மையைச் சொன்னதுக்கு உனக்கு தங்கக் காசே தரேன்” என்று தங்கம் எடுத்துக் கொடுத்தார்.

என்ன அற்புதமான பேரம் பாருங்கள். சிறுமி செய்த தவறுக்குப் பரிகாரமாக 4000 நாமம் எழுதும் புண்ணியம் பக்தர்களுக்கு. தவறை ஒப்புக் கொண்டதால் சிறுமிக்கு வெள்ளிக்குப் பதில் தங்கக் காசு கருணா சாகரம் என்று இதனால் தான் அவருக்குப் பெயரோ?

“கருணைக் கடலில் சில அலைகள்’ என்ற அவர் புத்தகத்திலிருந்து இன்னொரு சம்பவம்: ஓர் இளைஞன் “”தான் படித்து இரண்டரை வருஷம் ஆகியும் வேலை கிடைக்கலை,

ஏழ்மையான குடும்பம், சகோதரி வேறு கல்யாணத்திற்கு நிற்கிறாள், எல்லோரும் அவனை  “தண்டச் சோறு’ என்று திட்டுகிறார்கள்” என்று சொல்லி அவரிடம் அழுதான்.

அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு தன் முக்கிய பணிகளை அவர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளராக இருந்த ஓர் அதிகாரி தரிசனத்திற்கு வந்தார். அவரிடம்

மஹா பெரியவர் தன் துறவுக் கோலைச்சுட்டிக் காட்டி “”இந்த தண்டத்துக்கு ஒரு வேலை போட்டுத் தருவீங்களா” என்று கேட்க அவர் அதிர்கிறார். “”ரெண்டரை வருஷம் ஆச்சாம். வேலை கிடைக்கலையாம். படிச்ச பையன். ஏழ்மையான குடும்பம். ஒரு வேலை கிடைக்குமா? எல்லாரும் அவனை தண்டம்னு திட்டறாங்களாம்”.

“”உத்தரவு பெரியவா”.

அந்த இளைஞனைக் கூப்பிட்டு அந்த சந்தோஷ செய்தியைச் சொல்லியபடி தன் துறவுக் கோலை சுவரில் சார்த்துகிறார். “”உம். ஒரு தண்டத்துக்கு வேலை கிடைச்சாச்சு.

இன்னொரு தண்டம் பார்த்துக் கொடுத்திருக்கு. தண்டம் தான் எங்களுக்கு ரக்ûக்ஷ. ப்ரஹ்மசாரிகளுக்கும் தண்டம் ரக்ûக்ஷ. ராஜ தண்டத்துக்கு அடங்கித் தான் நீதி, நியாயம்.

இந்த லோகத்திலே எதுவும் தண்டமில்லை” என்று திருவாய் மலர்ந்தருளினார் பெரியவர்.

ரா.கணபதியின் ஏழாவது “தெய்வத்தின் குரல்’ தொகுப்பை மஹா பெரியவர் பார்க்கவில்லை. அது வெளி வந்த ஆண்டு 2000. அதற்குப் பிறகு இரண்டு தொகுப்புகளுக்கு கணபதியிடம் விஷயம் இருந்ததாம். “ஆனால் என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. என்னாலே இனி எழுத முடியாது” என்று நிறுத்திக் கொண்டுவிட்டார். “”அது என்னவோ வந்து ஆட்டம் காட்டிட்டுப் போயிட்டா பெரியவா” என்று மஹாசுவாமிகளின் வாழ்க்கையைப் பற்றி முத்தாய்ப்பாய் சொல்கிறார் ரா.க.

ஆட்டம் போட்டது பெரியவர் மட்டுமா? ரா.கணபதியும் தான்.

source…..ஸ்ரீதர் சாமா in http://www.dinamani.com

Natarajan

Message for the Day…” Scripture [ shastra] is like a Mother; She does not Giveup…”

People yield to delusion and become one with the darkness caused by false values and attachment to the unreal, the ‘me’ and ‘mine’. But the scripture (Shastra) is like a mother; she does not give up. She persists and pursues; she reminds you of your goal so that you will be saved. The scriptures are to be considered as the cause of the awareness of the incomprehensible, immeasurable and inexpressible Brahman. The scriptures are numberless, and a lifetime is too short. Aspirants are plenty; doubts and hesitations are numerous; steadfastness is meager. As a result, no one can claim full mastery. But you need not drink the entire ocean to know its taste; one drop is enough. Similarly, it is impossible to understand all the contents of the scriptures. But it is enough to grasp the important lesson that it teaches and put it into practice. The lesson is: constant remembrance of the Divine.

Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது …”ஒன்றை இழக்காமல் மற்றொன்றை அடைய முடியாது …”!!!

ஒன்றை இழக்காமல், மற்றொன்றை அடைய முடியாது என்பர். இது தெரிந்திருந்தும், கையில் உள்ளதை இழக்க விரும்பாமலும், அதேசமயம் எதிர்பார்ப்பை விட முடியாமலும், மனித மனம் அல்லாடுகிறது. ஆனால், யாருக்கு எதை, எப்போது தர வேண்டும் என்பது கடவுளுக்கு தெரியும்.


வயது முதிர்ந்த ஒருவர், வாத நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அது, குணமாவதற்காக குருவாயூர் சென்று, 48 நாட்கள் விரதமிருப்பதாக வேண்டி, பக்தியோடு குருவாயூரப்பனை வழிபட்டு வந்தார்.
தினமும் மூன்று வேளை குளத்தில் குளிப்பதும், குருவாயூரப்பனைத் தரிசனம் செய்வதுமாக இருந்தார். அவ்வாறு அவர் குளத்தில் குளிக்கும்போது, தன் சேமிப்பு பணமான, 2,000 ரூபாயை ஒரு துணியில் மூட்டையாக கட்டி, கரையில் வைத்து விட்டுக் குளிப்பார்.
அவர், எட்டு வயது சிறுவனை தன் உதவிக்காக வைத்திருந்தார். அவன், இப்பெரியவரை அழைத்துச் சென்று குளிக்க வைத்து, சாமி தரிசனமும் செய்ய வைப்பான். அதற்காக, அவனுக்குச் சம்பளமும் உண்டு. அப்பையனும், தன் கடமைகளை ஒழுங்காக செய்து வந்தான்.
கடைசி நாளான, 48வது நாள், தன் பண மூட்டையைக் கரையில் வைத்து, சிறுவனைக் காவலுக்கு இருக்கச் செய்து, குளத்தில் மூழ்கினார் பெரியவர். அவர் மனதில் ஏமாற்ற உணர்ச்சி ஏற்பட்டு, ‘என்ன குருவாயூர் இது… ஒரு மண்டலமாக விரதம் இருந்து வழிபாடு செய்றேன்; துளிக்கூட முன்னேற்றம் இல்ல. சரியாக நடக்க கூட முடியலயே…’ என்று வெறுப்போடு மூழ்கி எழுந்தார்.
அதே நேரம், கரையில் பண மூட்டைக்குக் காவலாக இருந்த பையன், பண மூட்டையை தூக்கியபடி ஓடத் துவங்கினான்.

டேய்… திருடன் திருடன்…’ என்று கத்தியவாறு, அவனைத் துரத்தினார் முதியவர்.
பையன் ஓட, பின்னாலேயே முதியவர் ஓட, இருவருமாக மூன்று முறை கோவிலை வலம் வந்தனர். அதன்பின், கோவிலுக்குள் நுழைந்து, கொடிமரத்தைக் கடந்து, கருவறைக்குள் மறைந்த சிறுவன், குருவாயூரப்பனாக தரிசனம் தந்தார்.
திகைத்துப் போன முதியவர், ‘குருவாயூரப்பா… என்ன நியாயம் இது… என் வாத நோயையும் குணமாக்கல; பணத்தையும் கொள்ளையடிச் சுட்டீங்களே..’ என்று கண்ணீர் விட்டார்.
உடனே, குருவாயூரப்பன், ‘பக்தா… உன் நோயை தீர்க்கவில்லை என்றால், நீ, எப்படி இவ்வளவு தூரம் என்னைத் துரத்தி ஓடி வந்திருக்க முடியும்…’ என்றார்.
முதியவருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. தன் வாதநோய் குணமாகி, கால்கள் நன்றாக இருப்பதை உணர்ந்தார். ஆனாலும், தன் பண மூட்டை போனது வருத்தத்தை கொடுத்ததால், ‘பகவானே… என் கால்கள் குணமாகி விட்டது; ஆனால், என் பணம் போய் விட்டதே…’ என்றார்.
‘நீ ரோகம் போய், ஆரோக்கியம் வேண்டுமென்று கேட்டாய்; ஆரோக்கியம் கொடுத்தேன். உன்னைப் போலவே, ஓர் ஏழை, தன் மகள் திருமணத்திற்குப் பணம் வேண்டுமென்று, என்னை வேண்டிக் காத்திருந்தான். உன் பணத்தை, அவனிடம் கொடுத்தேன்…’ என்றார் பகவான். உண்மையை உணர்ந்தார் முதியவர்.
இறைவனுக்குத் தெரியும். யாருக்கு, எப்போது, எதைக் கொடுக்க வேண்டுமோ, அப்போது அதைக் கொடுப்பார். அதனால், இறைவனை நினைப்போம்; இன்னல்கள் விலகி, சுகமாக இருப்போம்!
திருமந்திரம்!
சன் மார்க்கச் சற்குரு சந்நிதி பொய்வரின்
நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது
தொன் மார்க்கம் மாய துறையும் மறந்திட்டுப்
பன் மார்க்கமும் கெட்டுப் பஞ்சமும் ஆமே
கருத்து: ஞானத்தைப் போதிக்கும் சத்குருவின் முன் பொய் சொல்லக் கூடாது. சொன்னால், அதுவரை, குருநாதர் காட்டிய நல்வழியெல்லாம் குன்றி, ஞானமும் தங்காது. குருவை அடைவதற்கு முன், ஏதேனும் நல்வழியை அறிந்திருந்தாலும், அதுவும் மறைந்து விடும். வழி தெரியாமல், பல திசைகளிலும் திகைப்பே மிஞ்சும். வறுமை, தானே வந்து சேரும்.

Source…..பி.என்.பரசுராமன்  in http://www.dinamalar.com

Natarajan

This Flight Attendant “goes the extra mile ” to Help a Sick Pax ….

A FLIGHT attendant has been praised for “going the extra mile” to help a passenger.

Approximately three hours into a Turkish Airlines flight from Osaka to Istanbul, a Japanese passenger fainted, hitting her head. Her glasses shattered, cutting her cheek.

That’s when crew member Burcu Kirmaci sprung into action, according to local news site Bgnnews.com.

She applied first aid and looked after the passenger until the flight landed in Istanbul 10 hours later, but didn’t stop there. Ms Kirmaci escorted the passenger to hospital to get stitches, after realising the difficulty she would have

experienced there without knowing the local language.

“I knew I was the only one who could fully help the passenger given that I speak Japanese,” Ms Kirmaci said.

The woman was injured on a Turkish Airways flight.

The woman was injured on a Turkish Airways flight. Source: Getty Images

She liaised with the Turkish doctor and the passenger, and took charge of the rest of the injured woman’s itinerary. She refused to leave her side, accompanying the passenger back to her final destination at approximately 10.30pm that night.

Fellow Japanese passengers from the flight voiced their appreciation and tried to offer Ms Kirmaci gifts.

She said her decision “was not an act of responsibility but rather an act of empathy”.

news.com.au has contacted Turkish Airlines for comment.

Flight attendant’s extraordinary act

Ms Kirmaci was empathetic. Source: Facebook 

Source……..www.news.com.au

Natarajan

Message For the Day….”Value and Significance of Image Worship”

Many people slander image worship, but its basis is really one’s capacity to see the macrocosm in the microcosm. The value of image worship is testified by experience; it doesn’t depend on one’s imaginative faculty. What is found in the form of the Lord (Virat-swarupa) is also found, undiminished and unalloyed, in the image form (Swarupa). Images serve the same purpose as metaphors and similes in poetry. They illustrate, amplify, and clarify. Joy comes not through the shape of things but through the relationship established. Not any child but her child makes the mother happy. So it is with each one and all things! With each and every thing in the universe, if one establishes that kinship, that Godly love(Iswara prema), then truly an overpowering joy can be experienced! Only those who have felt it can understand.

Sathya Sai Baba

” கக்கனின் வேட்டி அழுக்கு …ஆனால் அவர் கை சுத்தம் …”

முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலை
முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலை

காமராஜர் ஆட்சியில் பொதுப்பணி அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும், பணியாற்றியவர் கக்கன். அவரது எளிமைப் பண்புகளையும் நிகழ்வுகளையும் தியாகசீலர் கக்கன் எனும் நூல் மூலம் நூறு அத்தியாயங்களில் எழுதி தொகுத்திருக்கிறார் முனைவர் இளசை சுந்தரம்.

கக்கன் வரலாற்றை அலசி ஆராய்ந்து கூறுவதற்காக அவரது குடும்பத்தாரைச் சந்தித்து பேசி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கக்கன் அவர்களது மகள் திருமதி கஸ்தூரிபாய் அவர்களின் நினைவலைகள் இந்நூல் எங்கும் விரிவாக நினைவுகூரப்பட்டுள்ளது. இதுவரை அறியாத அரிய பல செய்திகள் இதில் உண்டு.

கக்கன் அவர்களோடு தங்களது அனுபவங்களை அரசுச் செயலாளராக பணியாற்றிய அ.பத்மநாபன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பலரும் சுவைபட கூறியுள்ளனர். பத்திரிகைச் செய்திகளும் இணைத்து ஓரளவுக்கு முழுமையான வரலாறாக தொகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் ஊழலுக்காக சிறைசென்றவர்களின் வரலாறு விக்கிபிடியாவில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டுவரும் இக்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் காண்பது அரிதாயிருக்கிறது.

ஆனால் நம் நாட்டில் நல்ல பல தலைவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவேண்டியுள்ளது. காலத்தின் தேவை கருதி நூலை கொண்டுவருவதோடு அதை சிறப்பாக வெளியிட்டுள்ள மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலனை மனமாரப் பாராட்டலாம்.

இந்நூலிலிருந்து சிலபகுதிகள் இங்கே பகிரப்படுகின்றன:

ஒருமுறை புதுக்கோட்டை மாவட்டத்தில் கக்கன் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். சுற்றுப்பயண நாள்களைக் கணக்கிட்டு உடைகளை எடுத்துச் செல்வது வழக்கம்.

குளியலறைக்குள் சென்ற அமைச்சர் என்ன ஆனார்?

ஒரு குறிப்பிட்ட நாளில் சுற்றுப்பயணம் முடிந்து வீட்டிற்குத் திரும்ப வேண்டும். அன்று உடுத்த வேண்டிய வேட்டியை எடுதது உடுத்திக்கொள்ள முற்பட்டார். கட்டிக் கொள்ள முடியாத அளவுக்குக் கிழிந்திருந்ததைக் கண்டு மனம் சலனம் அடையவில்லை. உடனே அழுக்காயிருந்த ஒரு வேட்டியை எடுத்துச் சோப்புப் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தார்.

குளியலறைக்குள் சென்ற அமைச்சரை வெளியில் நீண்ட நேரமாகக் காணோமே என்று காவலர்கள் கதவைத் தட்டினர். அமைச்சர் துணி துவைப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். அமைச்சரின் இந்த நிலை தெரிந்திருந்தால் பணியாளரே துவைத்துக் கொடுத்திருப்பார்.

அல்லது அதிகாரிகளே ஒரு புதுவேட்டியை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் தாமே துவைத்து வெயிலில் உலர்த்திக் கொண்டு நின்ற அமைச்சரைப்பார்த்த அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் புன்னகைத்தனர். கக்கனோ அமைச்சராக இல்லாமல் கக்கன்

என்ற தனிமனிதனாக நின்று புன்னகைத்தார். அந்த வேட்டி உலர்ந்த பின் உடுத்திக்கொண்டு சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார். அந்நாளைய செய்தித்தாள்கள் இச்செய்தியை வெளியிட்டன.

ஆலயப் பிரவேசத்தில் கக்கன்

1920ஆம் ஆண்டு வாக்கில் வைத்தியநாதய்யர் அவர்களுக்குக் கக்கன் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கக்கன் கல்வியில் கொண்டிருந்த ஆர்வமும், அவர் பொதுத்தொண்டில் காட்டும் நேர்மையும் ஐயரை மிகவும் கவர்ந்தது. அதனால், தமது வீட்டிலேயே தங்க இடம் கொடுத்தார். கக்கனின் பழக்க வழக்கங்களைக் கண்டு வியந்து போன ஐயர் தமது வீட்டிலேயே உணவு கொடுத்தார்.

தொடர்ந்து தம் மக்களோடும் தம் மனைவியோடும் கக்கன் காட்டும் பாச உணர்வு ஐயரைப் பெரிதும் கவர்ந்தது. கக்கனைத் தம் மக்களில் ஒருவனாகவே கருதினார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணம் செய்துகொண்ட ஐயர் கக்கனுடன் நெருங்கிப் பழகும்போதுதான் பல உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்ததாம். 1939ஆம் ஆண்டு திருக்கோவில் நுழைவு (ஆலயப் பிரவேசம்) செய்தபோது அவ்வுணர்வுகளை மனதில் தாங்கியே ஆலயப் பிரவேசக் குழுவில் கக்கனையும் இணைத்துக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக

அதற்குப் பின்னால் கக்கன் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் நின்றபோது தாமே தேர்தலில் போட்டியிட்டது போல் செயல்பட்டதை அவர் பலமுறை சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அவ்வாறு படிப்படியாக உயர்த்தி இந்த நாட்டின் சட்டசபை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உயர்த்தி அழகு பார்த்தவர் ஐயர்.

1955ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் இருந்தார் கக்கன். உடல்நலக் குறைவாக இருந்த ஐயர் 1955ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் காலமானார். இச்செய்தி கேட்டு மதுரைக்கு விரைந்தார் கக்கன். அவரது இறுதிச் சடங்கில் கக்கனும் மொட்டையடித்துக்கொண்டார். ஐயரின் பிள்ளைகளுடன் பிள்ளையாக நின்றார். இதைப் பலரும் எதிர்த்தனர்.

வளர்ப்பால் மகனானவர்

அதற்கு அவது பிள்ளைகள் நாங்கள் பிறப்பால் மகன்களானோம். ஆனால், கக்கன் வளர்ப்பால் மகனானவர். ஆகவே எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை கக்கனுக்கும் இருக்கிறது என்று வைத்தியநாதய்யரின் மனைவியும் அவரது மக்களும் சொன்னதைக் கேட்டு ஐயர் இன சமுதாயத் தலைவர்கள் வாயடைத்துப் போயினர்.

அரசு மருத்துவமனையில் அனுமதி

1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் கக்கன் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர். அப்போது மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். கக்கன் மருத்துவமனயில் இருக்கும் செய்தியைக் கேள்வியுற்று அவரைச் சந்திக்க விரம்பினார். முன்னறிவிப்பின்றிக் கக்கனை பார்த்து நலன் விசாரிக்க மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.

எம்.ஜி.ஆர் நலம் விசாரிப்பு

ஆஸ்பத்திரியில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கக்கனின் அறையில் அவசரமாக எங்கிருந்தோ சேர்கள் கொண்டு வந்து போடப்பட்டன. உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக்கொண்டு இருந்தவரைப் பார்த்து எம்.ஜி.ஆர்.கண்கலங்கிவிட்டார். காமராஜர் ஆட்சியில் போலீஸ் மந்திரியாக பணியாற்றியவர்.

உடனே எம்.ஜி.ஆர். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்யவேண்டும்?’ எனக் கேட்க, ‘உங்கள் அன்பு இருந்தால் போதும் நீங்கள் வந்ததே சந்தோஷம்’ என்று கூறினார் கக்கன்.

எப்படி மனம் வந்தது?

‘விசேஷ வார்டுக்கு மாற்றச் சொல்லவா?’ எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘வேண்டாம்’ என மறுத்துவிட்டார் கக்கன்.

ஆனாலும் எம்ஜிஆர் மனம் பொறுக்காமல், மருத்துவமனையின் பொறுப்பாளரை அழைத்தார், ‘,இவர் யார் என்று தெரியுமா? இவரது உழைப்பால் பெற்ற சுதந்திரத்தால் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவரை இதுமாதிரி பொதுமக்களோடு மக்களாக நடத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது?’ என்று கேட்டதோடு நில்லாமல் தனியறை வசதியும் உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நூல் பெயர்: தியாகசீலர் கக்கன்

நூல் ஆசிரியர்: இளசை சுந்தரம் 

Source……www.tamil.thehindu.com

natarajan

“தமிழுக்கும் அமுதென்று பேர்”… இணையத் தமிழனையும் ஈர்க்கும் பாடல்….

தமிழுக்கும் அமுதென்று பேர். பாரதிதாசனின் இந்தப் பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

முத்துராமன் நடித்த பஞ்சவர்ணக் கிளி படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா தமிழுக்கும் அமுதென்று பேர் பாடலை பாடி இருப்பார்.மிக மிக மென்மையான இந்தப் பாடலைக் கேட்கும்போதே நம்மை மெஸ்மரிசம் செய்த உணர்வு ஏற்படும்.

இந்த தலைமுறையில் இந்தப் பாடலை கேட்பதற்கான அல்லது ரசிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்கிறீர்களா? இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அந்த வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தன் இயக்குநராக அறிமுகமான படம் ‘வானவில் வாழ்க்கை’. இதில் பாரதிதாசன் பாடல் வரிகளைக் கொண்டு கல்லூரி கலைநிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பாடுவதைப் போல காட்சிப்படுத்தி இருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தனின் டிரெண்டி இசையில், ஜித்தின், ஜனனி ஆகிய இருவரும் இப்பாடலை பாடியுள்ளனர். பாடலின் தன்மையை சிதையாமல், இசையோடு கலந்த அந்தப் பாடலை பார்த்து, கேட்டு ரசிக்க:

Source……..www.tamil.the hindu.com

Natarajan

” அடுத்த தடவை கெடைச்சுடும் …” !!!


ஒவ்வொரு ப்ரதோஷத்துக்கும் எங்கிருந்தாலும் பெரியவாளை தர்சனம் பண்ணி விடுவார் ப்ரதோஷம் மாமா. என்றைக்காவது அவர் வர சற்று தாமதமானாலோ, அல்லது
வரமுடியாமல் நிர்பந்தம் ஏற்பட்டாலோ, “ஏண்டா…ப்ரதோஷம் வந்துட்டானா?” என்று பெரியவாளே அன்போடு விஜாரிக்கும் அளவு பெரியவாளிடம் அவருக்கு அன்பு.

கடம் வித்வான் சுபாஷ் சந்தரன் மாமாவின் அத்யந்த பக்தர். ஒருநாள் வயலின் ரெட்டையர்கள் கணேஷ்,குமரேஷை மாமாவின் க்ருஹத்துக்கு அழைத்துக் கொண்டு வந்து கச்சேரி செய்ய வைத்தார் சுபாஷ் சந்தரன். மாமாவின் வீட்டில் எங்கு திரும்பினாலும் பெரியவா, பெரியவா, பெரியவாதான்!

கச்சேரி பண்ணிவிட்டு கிளம்பும்போது கணேஷ்,குமரேஷ் மாமாவிடம், “பெரியவா உருவம் பொறிச்ச காசு கெடைக்குமா மாமா?” என்று கேட்டனர். அப்போது அவரிடம்
கைவசம் காசு எதுவும் இல்லை. மாமாவுக்கு “இல்லை” என்று சொல்லிப் பழக்கமேயில்லை. எனவே “அடுத்த தடவை நீங்க ரெண்டு பேரும் வரச்சே கெடைக்கும்” என்று சொல்லிவிட்டார்.

இருந்தாலும் அவர்கள் கேட்டதை குடுக்க முடியவில்லையே என்ற உள்ளூர ரொம்ப வருந்தினார். கொஞ்சநாளில் அதை மறந்தே போய்விட்டார்.

ஒரு மாசம் கழித்து கணேஷ், குமரேஷ் இருவரும் பெரியவா முன் கச்சேரி செய்யும் பாக்யம் பெற்றார்கள். சுபாஷ் சந்திரன்தான் இதையும் ஏற்பாடு பண்ணியிருந்தார். கச்சேரி செய்தவர்களுக்கு சால்வை போர்த்தி கௌரவிப்பது மடத்தின் வழக்கம். எனவே அவர்களுக்கும் அழகான சால்வை மடத்து அதிகாரியால் போர்த்தப் பட்டது.

கூடவே இருவருக்கும் ஒரு சின்ன டப்பாவும் வழங்கப்பட்டது. திறந்து பார்த்தால்…….

பெரியவா திருவுருவம் பதித்த அழகான வெள்ளிக் காசுகள்!

“அடுத்த தடவை கெடைக்கும்” என்ற பக்தனின் வாக்கை பகவான் சத்யமாக்கினான்!

பக்தன் மேல் பகவானுக்கு எத்தனை ப்ரேமை! மாமாவிடம் இதை சொன்னபோது அவரால் பெரியவாளின் அன்பை எண்ணி எண்ணி நெகிழத்தான் முடிந்தது.

Read more: http://periva.proboards.com/thread/4892/#ixzz3YBvxjcfq

Source…..www.periva.proboards.com

Natarajan

Message For the Day…” Experience the God in His Natural Form, Natural Manner…”

God is omnipresent and is within you. The primary requisite to find Him within you is having pure and selfless love. Chant His Name with love. All living beings are bound by karma in this world. God loves the human form. Hence Avatars come in human form. You can experience His vision by following your duties (Karma marga), as declared in Bhagavad Gita. The Divine is being worshipped as a decorated idol or image, with an artificial form. You should experience the Lord in His natural form, in a natural manner. All the ornamentation a devotee resorts to does not please God. It may please the heart of other devotees, but God’s heart is not moved thereby. Only through love can God’s heart be moved and softened. Every devotee has that power. Instead of resorting to extravagant adulation of God or seeking petty favors from God, yearn for God alone and you will get everything. Endeavour to make God your intimate friend.

Sathya Sai Baba