” பறித்ததா ….கொறித்ததா …” ?

கட்டுரையாளர்-இந்திரா சௌந்தரராஜன்.

பறித்ததா, கொறித்ததா?’ என்று பெரியவர் கேட்ட கேள்வியில் இலக்கிய நயம் மட்டுமில்லை. இதயத்தின் நயமும் இருந்தது என்பது போகப்போக விளங்கத் தொடங்கியது. கடலையை முறத்தில் வைத்து எடுத்து வந்த அந்த நபர், பெரியவர் முன் திணறியபடி நின்றார். பின் அந்த கடலையை வயலில் உள்ள எலி வளைகளில் இருந்து எடுத்து வந்ததை மிகுந்த பயத்துடன் கூறினார்.

பெரியவர் முகத்தில் மெல்லிய சலனம்.

ஒரு துறவிக்கு ஆசையே கூடாது. அது அற்ப கடலைப்பயிர் மீதுதான் என்றாலும், அதிலும் சில சமயங்களில் இது போல சோதனைகள் ஏற்பட்டு விடுகின்றன.

எலி ஒரு பிராணி! வளைகளில் கடலைகளை சேமித்து வைத்துக் கொண்டு, அறுவடைக்குப் பிறகான நாட்களில், அது அதைச் சாப்பிட்டே உயிர் வாழ்ந்தாக வேண்டும். வயலுக்கு சொந்தக்காரனுக்கு வேண்டுமானால், அது எலியுடைய கள்ளத்தனமாக இருக்கலாம். அதற்காக எலிகளுக்கு பாஷாணம் வைத்து கொல்லவும் முற்படலாம். ஆனால், அன்பே வடிவான துறவி, எலியை ஒரு கள்ளப் பிராணியாகவா கருதுவார்? அதிலும், எலி எனப்படுவது கணபதியாகிய பிள்ளையாரின் வாகனம். அவரை வணங்கும்போது, நம் வணக்கம் எலிக்கும் சேர்த்துத்தான் செல்கிறது. இப்படி, வணங்கவேண்டிய ஒரு ஜீவனின் சேமிப்பில் இருந்து எடுத்து வந்திருந்த கடலையை பெரியவரால் சாப்பிட முடியவில்லை. மாறாக அந்த மனிதரிடம்,இதை எந்த வளையில் இருந்து எடுத்துண்டு வந்தீங்க? அந்த இடம் ஞாபகம் இருக்கா?” என்றுதான் கேட்டார். அவரும் ஆமோதித்தார். அடுத்த சில நிமிடங்களில், ஒரு முறத்தில் அந்த கடலையோடும் இன்னொரு முறத்தில் வெல்லப் பொரியோடும் அந்த இடத்துக்கு பெரியவரே போய் நின்றதுதான் ஆச்சரியம்.

வளை துவாரத்துக்கு முன்னாலே, அங்கிருந்து எடுத்ததோடு கொண்டு வந்திருந்த வெல்லப்பொரியையும் வைத்து விட்டு, மன உருக்கமுடன் அவர் பிரார்த்தனை செய்யவும், உள்ளிருக்கும் எலிகள் வெளியே தைரியமாய் வந்து, பெரியவர் படைத்த விருந்தை அனுபவிக்கத் தொடங்கின!

சூழ்ந்து நின்ற நிலையில் பார்த்த வர்களுக்கெல்லாம் ஒரே பரவசம். மெய்சிலிர்ப்பு!

‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம் சொல்லாமல் சொல்லி விட்டதே!

இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட நான், இதை ஒரு மிஸ்ட்ரியாக கருதுவதா, இல்லை மிக சகஜமான ஹிஸ்டரியாக எடுத்துக் கொள்வதா என்பதில் சற்று குழம்பிப் போனேன்.

பெரியவரைத் தவிர, எவராலும் இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்த முடியாது என்றும் நம்பினேன். இப்படி ஒரு கருணையை ஒரு தெரு நாயிடமும் அவர் காட்டிய சம்பவம் ஒன்றையும், இதைத் தொடர்ந்து நான் அறிய நேரிட்டது.

துறவிகள் வருடத்துக்கு ஒருமுறை, ஒரு நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரதம் எனும் விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு. என்னதான் அது பொன்னாகவே இருந்தாலும், அதை துலக்கத் துலக்கத் தான் அதன் பிரகாசம் அதிகரிக்கும்.

துறவிகள் விஷயத்தில் இப்படிப்பட்ட விரதங்களும் அப்படித்தான்! மகா பெரியவரும் ஒரு கிராமத்தில் தங்கி, இந்த விரதத்தை மேற்கொண்டார்கள். இதனால் தவசிவமானது அந்த கிராமத்தைச் சுற்றிலும் பரவிடும். அதன் விளைவுகளை காலத்தால்தான் நாம் உணர முடியும்.

எவ்வளவோ பெரிய அறிஞர்களும், ஞானிகளும் மின் விளக்குக்குக்கூட விதியில்லாத கிராமப்புறங்களில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். அவர்களின் பிறப்புக்கு பின்னாலே, துறவியர்கள் மேற்கொள்ளும் இப்படிப்பட்ட தவசிவங்கள் பெரிதும் காரணங்களாய் உள்ளன.

பெரியவர் அந்த கிராமத்தில் விரத மிருந்த சமயம், தினப்படி பூஜைகள் மற்றும் சம்பிரதாய சடங்குகளும் குறைவின்றி நடந்தன. முடிவில் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அன்று பங்கேற்றவர்களுக்கும் மடத்திலேயே போஜனம் அளிக்கப்படும். அதை பிரசாதமாக கருதி உண்பது சான்றோர் வழக்கம்.

ஊருக்குப் பொதுவான தர்மத்தால் வந்த அன்னம் அது. மந்திரம் சேர்ந்து சாப்பிடக் கிடைப்பது ஒரு விசேஷம். அதைச் சாப்பிடப் போய், ஒரு துளி ரத்தம் அதனால் நமக்குள் பெருகினாலும் அது போதும். உடம்பால் இன்றைய வாழ்க்கை முறையில் நமக்கு ஏற்படும் தோஷங்கள் அடிபட்டுப் போய்விடும்.

இந்த அன்னத்துக்காக ஒரு தெருநாய் கூட தவமிருந்ததுதான் விந்தை! தினமும் மதியம் எல்லோரும் சாப்பிட்ட உடன், எடுத்து எறியப்படும் எச்சில் இலைகளைத் தேடிச் சென்று, அந்த நாய் சாப்பிடத் தொடங்கிவிடும். இலையைப் போடச் செல்லும்போதே பாய்ந்துவரும். குலைக்கும். அதன் பசி அதற்கு!

இந்த சப்தம் தினமும் பெரியவர் காதிலும் விழுந்தது. அதன் பசிக்குரல், அவர் மனத்தை உருக்கிவிட்டதாம். அப்போது, ஒரு தையல் இலையில் அவர் சாப்பிட ஒரு கைப்பிடி அவலோ, இல்லை உப்பில்லாத தயிரன்னமோ அவருக்கும் அளிக்கப்படுவது வழக்கம். தனக்கு தரப்பட்ட அந்த இலைப் பிரசாதத்தை, அப்படியே குலைக்கும் நாய்க்கு வைக்கச் சொல்லிவிட்டார் பெரியவர். அதற்கும் சோறு வைக்கச் சொல்லாமல், தன் சோற்றையே அவர் தரச் சொன்னதன் பின்னே, பல நுட்பமான விஷயங்கள் ஒளிந்துள்ளன.

நாயின் குலைப்பு பசி உணர்வை பெரியவருக்கு உணர்த்துகிறது. இதை வெல்வது கடினம். இந்த பாழாப்போன பசி, எச்சில் இலை என்றுகூட பார்க்காமல் நாயைத் தூண்டுகிறது.

இதுதான் மனிதர்களையும் ஆட்டிப் படைக்கிறது. இதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள், ‘ஒரு சாண் வயிறே இல்லாட்டா – இந்த உலகத்தில் ஏது கலாட்டா?’ என்று பாடவும் காரணமாகிறது.

இதை வெற்றி கொள்ளாமல், துறவை வெற்றி கொள்வதும் கடினம் என்பதுதான், அவர் உணர்ந்த, உணர்த்த விரும்பிய உண்மை.

பெரியவர், தன் இலையையே தரவும், ஆடிப்போன மடத்து ஊழியர்கள், அதன்பின் நாய்க்கு முதலில் உணவு வைத்துவிட்டு, பிறகுதான் போஜனத்தை தொடங்கினர்.

அதன்பின், பெரியவர் முன் இலை வைக்கும்போது நாய் குலைக்கவில்லை. அந்த ஒரு நாயின் பசிக்கு வழி செய்தாகி விட்டது. ஆனால், உலகத்தில் கோடி கோடி உயிர்கள்… ஒரு உயிரும் உணவில்லை என்று வருந்தக்கூடாதே…?

Read more: http://periva.proboards.com/thread/9687/#ixzz3g9D8AVVn

Source…www.periva.proboards.com

Natarajan

 

 

Message for the Day…” When this World will bask in Peace and Joy …” ?

Sathya Sai Baba

Police and law-makers can defeat only external foes; they have no power to destroy internal enemies. They will find the task impossible, for they are not the authorities for that. The internal foes, six enemies(arishadvarga) that operate within a person, can be uprooted only with the teachings of great saints, love for God, and the company of the noble and holy. The world suffers harm at the hands of wicked people when the law-makers responsible for apprehending thieves themselves become entangled with them. Equally, the world becomes enveloped in darker ignorance when righteousness (dharma) is destroyed and those contemplating on the Brahman incessantly and the ‘great’ spiritual aspirants give up the path of well-being of the world and become victims of sense enjoyment or ambition to earn name and fame. Then suffering will increase every single day. The whole world will bask in peace and joy only when everyone — leaders of countries and spiritual aspirants alike — realize the righteous path and ponder the omnipotence of the Lord.

 

Message for the Day….” You are very much part of the Divine…”

Everyone is proud of their body, mind and intellect, forgetting the indwelling Atma, which is the real basis. The Atma has no birth or death. It is akin to the root of a tree, which sustains its branches, leaves, flowers and fruits. Atma is the basis on which the superstructure of life rests. Human life is noble, sacred and precious. Every human body is constituted by the five elements(Pancha Bhutas) and you are enclosed by the five sheaths(Pancha koshas) — food (Annamaya), life-force (Pranamaya),mind (Manomaya), intelligence (Vijnanamaya) and the sheath of Bliss (Anandamaya). While all other living species have only the first three sheaths, human beings alone have all the five. Hence, embodiments of Divine, it is everyone’s primary duty to strive and experience that Divine reality. The surest and easiest way is to begin every day with the feeling that you are very much a part of the Divine.

Sathya Sai Baba

 

“கடி”த்தாலும், படித்தால் சிரிப்பு வரும் ….!!!!!

 

தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
.

மாவை தோசைக் கல்லுல ஊத்தறப்ப “சை”னு ஒரு சவுண்ட் எஃபெக்ட் வரும்.
அதை திருப்பிப் போடறப்போ இன்னொரு “சை” வரும்.
மொத்தம் 2 சை. ஹிந்தில 2க்கு தோ
ஸோ, 2 சை = தோசை.

தோசையை பற்றிய இந்த அறிய தகவலை அனைத்து நண்பர்களும் பகிரவும்.


எங்க டிவி கோடு கோடா தெரியுது டா?

இப்ப சொல்லி என்ன பண்றது? வாங்குரப்பவே அன்ரூல்டு டிவியா வாங்கி இருக்கணும்……….


விடிய விடிய

டீவி ஓடினாலும்

அதால ஒரு இன்ச் நகர முடியுமா?

 

சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசியில காச கரியாக்குவாங்க!

நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!
_________________________________________________________________________________________________
சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.

ஆனா,

முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.

அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!
_________________________________________________________________________________________________
Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!

ஆனா,

பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!

கொஞ்சம் யோசிங்க!!!

…………….

ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.

அப்ப,

பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
_________________________________________________________________________________________________
ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.

ஆனா

Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?
_________________________________________________________________________________________________
வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துன்பம் வரலாம்.

ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!

1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1

தெரிஞ்சுகிட்டியா?
_____________________

……………

எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

: மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார்.. நான் ‘ மேனேஜர் நாயைக் காணோம்’னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..

………………..

நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்

என் இதய துடிப்பு அதிகரிக்கிறது

ஆயிரம் மடங்கு!

ஏன் தெரியுமா?
சாதரணமா பேய் கடந்து போனா அப்படிதான் ஆகும்.


நெப்பொலியன் : ‘முடியாது’ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

: அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை.

அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.

_________________________________________________________________________________________________
டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,

எப்படி எப்படி விளையாடுவார்?

கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ , கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, ………

……………

தத்துவம் சொல்லி நாளாச்சி…

தண்ணீர் மேல
படகு போனா உல்லாசம்.
ஆனா,
படகு மேல தண்ணீர்
போனா கைலாசம்.

நெக்ஸ்டு


Back
வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
Front வீல ஓவர்டேக் பண்ண
முடியாது.


டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம்
வரும்.
10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,
தூக்க ஆள் வரும்.

பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன்
ஆயிடும்
ஆனா,
பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம்
ஆகுமா?


என்னதான் MBBS படிச்சி டாக்டர்
ஆனாலும் எந்த கம்ப்யுட்டர்ல
இருக்கற வைரசுக்கும் மாத்திரை குடுக்க
முடியுமா? ,,, யோசிப்பா, யோசி,

last ஆ ஒண்ணு சொல்லிக்கறேன்.


பரிட்சைல பெயில் ஆனா திரும்ப
படிச்சி பாஸ் பண்ணலாம்.
ஆனா,

பாஸ் ஆயிட்டா. திரும்ப
படிச்சி பெயில் ஆக முடியாது. ‘

நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா ????

Source….unknown….input from a friend of mine…

Natarajan

 

Identical Baby Animals ….Amazing !!!

Two heads are better than one, and the same logic also dictates that two adorable animals are better than one. Their rarity (and cuteness) makes animal twins truly special, which is why we decided to collect a list of the cutest identical baby animals (and a few equally cute adults) we’ve ever seen.

Twins are rare in most species, but not all – twins or even triplets form the majority of births among Clawed New World monkeys, or Callitrichines. Of course, not all of the animals here are twins. Some are probably just similar members of the same species that we can’t tell apart. We don’t mind, though – they’re still adorable!

cute-animals-twins-18

Image credits: ermagerdrerdert

cute-animals-twins-15

Source: trukhina.livejournal.com

cute-animals-twins-10

Image credits: Christopher G

animal-twins-two-similar-lookalikes-205

Image credits: Ilia Shalamaev

cute-animals-twins-6

Image credits: Vinay Visanth

animal-twins-two-similar-lookalikes-100

Source: 1ms.net

cute-animals-twins-16

Source: Facebook

animal-twins-two-similar-lookalikes-206

Image credits: Pete Foley

animal-twins-two-similar-lookalikes-208

Image credits: ruthinea

cute-animals-twins-11

Image credits: Teddy n TJ Ruled The World

animal-twins-two-similar-lookalikes-209

Image credits: Simonsnapz

cute-animals-twins-2

Image credits: gerrybuiltcomputer

cute-animals-twins-8

Image credits: whatgetsyouoff

animal-twins-two-similar-lookalikes-52

Image credits: Dave Kiddle

animal-twins-two-similar-lookalikes-221

Image credits: Mari Ward-Foster

cute-animals-twins-17

Image credits: unknown

animal-twins-two-similar-lookalikes-203

Image credits: Etienne Oosthuizen

cute-animals-twins-24

Image credits: Robert Canis

cute-animals-twins-26

Image credits: Andre Villeneuve

Source…..www.ba-bamail.com

Natarajan

” விஸ்வ நாதம் ….” ஒரு முடிவு இல்லை அவரது இசைக்கு …”

தலைமுறைகளைத் தாண்டி நினைவில் நிற்கும் பாடல்களைத் தந்த மாபெரும் இசைக்கலைஞர் எம்.எஸ்.வி.

தமிழ்த் திரையிசையின் பொற்காலத்தைக் கண்ணதா சனுடன் இணைந்து ஆட்சிசெய்த மாமன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் காலமானார் என்ற தகவல் வந்தததும், சமூக வலைதளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவியத் தொடங்கின. தங்களுக்குப் பிடித்தமான எம்.எஸ்.வி-யின் பாடல்களைப் பலரும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். தலைமுறைகளையும் காலத்தின் வீச்சையும் கடந்து அவரது படைப்புகள் நிலைபெற்றிருப்பதை உணர முடிந்தது. 1950-களின் தொடக்கத்திலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்தியத் திரையிசையில் கோலோச்சியவர் எம்.எஸ்.வி. உண்மையில், பழைய பாடல்கள் என்ற பொதுப் பெயரில் அடங்கியிருப்பவற்றில் பெரும்பாலானவை அவரது ஆயிரக் கணக்கான பாடல்கள்தானே!

தொடக்கத்தில் நாடகங்களின் திரைவடிவமாக இருந்த தமிழ்த் திரைப்படங்களில் நிரம்பித் ததும்பிய பாடல்கள், சாஸ்திரிய இசையின் அடிப்படையில் அமைந்தவையாகவே இருந்தன. 1950-களில்தான் ஜனரஞ்சகமான இசையில் அமைந்த பாடல்களுக்கு தமிழ்த் திரையிசையில் இடம் கிடைக்கத் தொடங்கியது. காலம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள புதுப்புது திறமைசாலிகளைத் தன் பிரதிநிதிகளாக அறிமுகப்படுத்துவது உண்டு. அப்படி, 1950-களில் தமிழ்த் திரையிசையின் போக்கை மாற்றியமைத்த இசைக் கலைஞராகக் காலத்தால் முன்னிறுத்தப்பட்டவர் எம்.எஸ்.வி. 1950-ல் வெளியான ‘மந்திரிகுமாரி’ படத்தின் மூலம் திருப்புமுனையைக் கண்ட எம்.ஜி.ஆர்., 1952-ல் வெளியான பராசக்தி படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசன் ஆகியோர் தமிழ்த் திரையின் வணிக வளர்ச்சிக்கும் தரத்துக்கும் தந்த பங்களிப்பைப் போல், தமிழ்த் திரையிசையின் வளர்ச்சியில் எம்.எஸ்.வி-யின் பங்கு அளவீடுகளுக்கு அப்பாற்பட்டது. அதே காலகட்டத்தில்தான், அவரது ஆஸ்தான பாடகர்களான டி.எம். சவுந்தரராஜன், பி.சுசீலாவின் சகாப்தமும் தொடங்குகிறது.

அறுபதுகளின் அரசன்!

சக இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தியுடன் இணைந்து அவர் வழங்கத் தொடங்கிய பாடல்கள் பல தலைமுறைகளின் வாழ்வுடன் கலந்துவிட்டவை. 1950-களில் ‘பணம்’, ‘ஜெனோவா’, ‘குலேபகாவலி’, ‘மாலையிட்ட மங்கை’ போன்ற படங்களின் மூலம் சாம்ராஜ்ஜியத்தை விரிக்கத் தொடங்கிய ‘விஸ்வநாதன் – ராமமூர்த்தி’ ஜோடியின் இசை, 1960-களில் தனது படைப்பாற்றலின் உச்சத்தை அடைந்தது. பின்னாட்களில் டி.கே. ராமமூர்த்தியைப் பிரியும் சூழல் ஏற்பட்டாலும் அவரது பாடல்களின் வெற்றி பாதிக்கப்படவில்லை. டி.எம்.எஸ். பாடிய ‘யார் அந்த நிலவு’ (சாந்தி-1965), பி. சுசீலா பாடிய ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’(புதிய பறவை) என்று மேற்கத்திய இசையின் அடிப்படையிலான பாடல்கள், ‘ஆறோடும் மண்ணில் எங்கும்’(பழனி-1965) என்று கிராமியக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல்கள், ‘கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே’ (கர்ணன்), ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ (தவப்புதல்வன்) போன்ற சாஸ்திரிய இசை அடிப்படையிலான பாடல்கள் என்று அத்தனை வகைப் பாடல்களையும் தந்தவர் எம்.எஸ்.வி. காதல், சோகம், நகைச்சுவை, கிண்டல், சவால் என்று எத்தனையோ வகையான சூழல்களுக்கும் இசையமைக்கும் அளவுக்கு இசை வளமும், படைப்பாற்றலும், வேகமும் அவருக்குள் சுரந்துகொண்டே இருந்தன.

அவரது சமகாலத்தில் ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், வி. குமார் என்று புகழ்பெற்ற இசையமைப் பாளர்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும் பெருவாரியான படங்கள் எம்.எஸ்.வி-யிடமே குவிந்தன. ‘மன்னாதி மன்னன்’, ‘பாசமலர்’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ராமு’, ‘தெய்வ மகன்’ என்று அந்தக் காலகட்டத்தில் அவர் இசையமைத்த வெற்றிப்படங் களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. தனது வாழ்நாளில் 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் அவர். சிவாஜி படங்களுக்கு உணர்ச்சிகரமான இசை, எம்.ஜி.ஆர். படங்களுக்கு உற்சாகமான சவால் இசை, பீம்சிங், தர், பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் படங்களுக்குப் பரீட்சார்த்த மான இசை என்று அவர் தொடாத இசை வகைமையே இல்லை. பாலியல் பலாத்காரக் காட்சிக்குக் கூடத் தன்னிடம் பாடல் கேட்ட கே. பாலசந்தரின் சவாலையும் ஏற்றுப் பாடல் தந்தவர் அவர்.

தாக்கம் தந்த இசை

எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் திருமணம் முதலான சுபகாரியங்கள் நடக்கும் இடங்கள், திருவிழாக்கள் முதல் துக்க வீடுகள் வரை என்று பல்வேறு இடங்களிலும் ஒலிக்கும் பாடல்கள் எம்.எஸ்.வி-யினுடையவைதான். அந்த அளவுக்கு அவரது பாடல்களின் தாக்கம், தலைமுறைகளையும் தாண்டி இன்றும் வியாபித்திருக்கிறது. அதேபோல், இசையமைப்பின்போது தனக்கு யோசனை சொல்பவர் யாராக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அபூர்வ குணம் அவரிடம் இருந்தது. திரையிசையில் ஜனரஞ்சக ரசனையைப் புரிந்துகொள்ளவும் அதை வளர்த்தெடுக்கவும் அது அவருக்கு உதவியது. அவரது இசையால் தாக்கம் பெற்ற கலைஞர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவரது ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடல் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இளையராஜா பல முறை குறிப்பிட்டிருக்கிறார். ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ என்ற பாடலின் தாக்கத்திலேயே ‘புது மாப்பிள்ளைக்கு’ பாடலை உருவாக்கியதாகவும் இளையராஜா குறிப்பிட்டிருக்கிறார். பாடகர் வாய்ப்புக்கான குரல் தேர்வின்போது எஸ்.பி.பி. பாடிக்காட்டியது எம்.எஸ்.வி-யின் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலைத்தான். எம்.எஸ்.வி-யின் ‘யார் அந்த நிலவு’ பாடல், இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் ‘யாத் ஆ ரஹி ஹை’ பாடலின் மூலம். இன்றும் பாடகர் களுக்கான போட்டிகளில் அதிகம் பாடப் படுபவை அவருடைய பாடல்கள்தான்.

1970-களின் மத்தியில் காலமாற்றத்தின் தாக்கத்தில் அவரது இசையும் வேறு பரிமாணம் எடுத்தது. 1960-களில் டி.எம்.எஸ்., பி. சுசீலா போன்ற கலைஞர் களின் கூட்டணியுடன் பாடல்களைத் தந்துவந்த எம்.எஸ்.வி., 70-களில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து அளித்த பாடல்கள் தனிரகம். ‘அவர்கள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘பட்டினப் பிரவேசம்’ போன்ற படங்களில் இந்த ஜோடியின் பாடல்கள் ரசிகர்களின் சேமிப்புகளில் உயர்ந்த இடத்தை வகிப்பவை. ‘முத்தான முத்தல்லவோ’(1976) படத்தில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து எம்.எஸ்.வி. பாடும் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ பாடல் இசை மீதான அவரது காதலைச் சொல்லிவிடும். ‘தேன் சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம் நான் தரும் பாடல் அவள் தந்தாள்’ எனும் வரியில் எம்.எஸ்.வி. குறிப்பிடும் ‘அவள்’ யாருமல்ல, இசை தேவதை தான்!

தனது ஆன்மாவை இசையின் மூலமாகக் காற்றில் கலக்கவிட்டிருக்கும் எம்.எஸ்.வி-க்கு மரணம் என்பது உடல்ரீதியான ஒன்றுதான். அவரது இசைக்கு வயதும் இல்லை, மரணமும் இல்லை!

வெ.சந்திரமோகன்

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

சம்ஸ்கிருதத்தில்விஸ்வம்’ என்றால், பிரபஞ்சம் என்று பொருள்

Source….www.tamil.the hindu.com

Natarajan

” Have a Cheerful Day…”

Nature

Finch

Nature

Humming Bird

 

 

 

Nature

Doing Rounds

Nature

Silent Song

Nature

A babbling brooke

Nature

The majestic Tufted Coquette 

Nature

Butterfly Flutter

Nature

Nothing to do on a Rainy day

Nature

Leap of Faith

Nature

Ducklings in a Row

Nature

Natural Replenishing

Nature

Water Collector

Nature

The Perfection

Source…..www.ba-bamail.com

Natarajan

 

 

 

 

 

 

 

Message for the Day….” Let there be constant effort to do Good to others…’

Sathya Sai Baba

Those who yearn to establish themselves in contemplation of Divinity must seek solitude, practice meditation and repeat Lord’s name at specified times, and acquire one-pointedness through spiritual exercises. They must always be anxious to do deeds that will bring about the welfare of all beings. They must always be engaged in performing work without any concern for the fruit thereof. Sacrifice your selfish needs. Your desire should be to establish the welfare of the world. Let there be constant effort to do good to others. With all these feelings filling the heart, meditate on the Lord. This is the right path. If everyone is thus engaged in the service of humanity and in promoting the welfare of the world, the thieves of passion, hatred, pride, envy, jealousy, and conceit won’t invade people’s minds and divine possessions, like dharma, mercy, truth, love, knowledge, and wisdom, will be safe from harm.

Striking Images Around the World … Will Make You to Say ” Cheers “…!!!

Powerful Images of the World

I love powerful images. They transport me to other parts of the world I might otherwise never see. These striking images show the world from all different angles, walks of life and distances. Every one of them offers a different kind of beauty, telling a unique story.

The light of Earth

inspiring photos

Pedestrian crossing trompe l’oeil

inspiring photos

This pup will grow up to be a guide dog

inspiring photos

Yoga on the edge, in Trolltunga, Norway

inspiring photos

When snow happens to the Grand Canyon

inspiring photos

Penguin pool party

inspiring photos

The snow’s artful gift: ice grill

inspiring photos

On the left, Earth from Mars and on the right, Mars from Earth

inspiring photos

The lights of Rio at night

inspiring photos

Iceland’s Dynjandi Waterfalls

inspiring photos

Rare sight: a quadruple rainbow

inspiring photos

Typical winter day on the Canadian railway

inspiring photos

Hard to tell: Is it a pirate ship or a kite of a pirate ship?

inspiring photos

Turtle hitches a ride on the back of a crocodile

inspiring photos

Cypress tree lined avenue in Point Reyes, California

inspiring photos

Nature loves a contrast

inspiring photos

Banyan: fig strangling tree

inspiring photos

A wet water walkway in Croatia

inspiring photos

Trick of the eye or the biggest puppy ever?

inspiring photos

Strawberry up close

inspiring photos

George Peabody Library in Baltimore

inspiring photos

China’s Guangxi Province

inspiring photos

H/T: twistedsifter.com

Source….www.ba-bamail.com

Natarajan