This Tiny Australian Village Spawned a New Language….!!!

Lajamanu

In 2002, University of Michigan linguistics professor Carmel O’Shannessy was visiting Lajamanu, a remote aboriginal community in Australia’s Northern Territory, when she discovered the village’s younger people were speaking a different language from the older generation.

The community, composed of about 700 people, lies hundreds of miles away from commercial centers and cities. It’s one of the several Australian villages that speaks the endangered Warlpiri language.

However, O’Shannessy was surprised to find an even more unique language, one that had never been observed, spoken by the generation who were younger than 35 at the time.

This different language wasn’t a new dialect of Warlpiri, or a combination of Warlpiri with English and Creole, two languages the villagers also spoke. Though many of the words were drawn from the three foundational languages, the new one had a unique grammatical structure

The stark linguistically differences, including the addition of a new tense in the younger generation’s speech, told O’Shannessy that she had stumbled upon a treasure: a new language. She soon dubbed it Light Warlpiri.

So, how did a new language evolve in Lajamanu? According to The New York Times,

The development of the language, Dr. O’Shannessy says, was a two-step process. It began with parents using baby talk with their children in a combination of the three languages. But then the children took that language as their native tongue by adding radical innovations to the syntax, especially in the use of verb structures, that are not present in any of the source languages.

Though O’Shannessey has studied Warlpiri and Light Warlpiri for over a decade, she still remains puzzled as to why the language developed in the first place. After all, the people could already easily communicate. The development is something she continues to research, though she now believes it popped up around the 1970s and ’80s. She and other linguists continue to marvel at the language’s growth, as no one has been able to document or observe the development of a young, new language.

h/t The New York Times)

Read the original article on Modern Notion. Copyright 2015. Follow Modern Notion on Twitter.

Source….

http://www.businessinsider.com

Natarajan

Joke For the Day…” Where should we go for our Birthday…” ?

Four women share a birthday and always celebrate it together.

For their 40th birthday they go to the Lakeview restaurant because the waiters are cute and wear tight pants.

For their 50th birthday they go to the Lakeview restaurant because the prices are reasonable and it has a good wine list.

restaurant

For their 60th birthday they go to the Lakeview restaurant because its quiet and has a nice view.

For their 70th birthday they go to the Lakeview restaurant because its wheelchair accessible.

For their 80th birthday they go to the Lakeview restaurant because they’ve never been there before.!!!

Source……www.ba-bamail.com

Natarajan

Message For the Day…” What is Ultimate…” ?

In Taittiriya Upanishad, Varuna directed his son Bhrigu to enter upon spiritual exercises that would ultimately reveal the Truth. Brighu, with full faith in his father’s words, immersed himself in concentrated spiritual practices. When he returned and declared what he had come to know, that food was Brahman, his father told him that his answer was not right. So Brighu continued the spiritual practices and came back with deeper answers, that Prana or vital air is Brahman, then the Mind, and later that the Intellect (Vijnana) is. But each time he was sent back by his father to search deeper. After undergoing a fifth course of spiritual practices, he became aware that spiritual bliss (ananda) was Brahman. Brighu stayed in the bliss of that awareness and never needed to consult his father again. The father then, himself sought Bhrigu, and congratulated him and said, “Son! You have merged in that vision.” Every being must march on to the goal, from food to bliss.

Sathya Sai Baba

Mongolia”s Reindeer People…. Amazing !!!

 

reindeer people rolling hills

Mongolia is twice the size of Texas, but home to only 2.6 million people. The sparse, desolate lands are difficult to live on and the frigid winters are harsh and overbearing, which is why the country’s Dukha people have relied heavily on reindeer in nearly every facet of their lives for thousands of years.

reindeer people frightened deer

Living in northern Mongolia, the Dukha use the completely domesticated reindeer for primarily for transport, as the nomadic tribe changes camp locations between five and eight times per year.

They also use the reindeer for clothing, tools and increasingly trade. Dukha sell reindeer antlers and penises to Chinese traders, who pay a high price for the incredibly rare items. The Dukha use the money to purchase items that they are unable to acquire out in the vast countryside, including electronics.

reindeer people sleeping child

Given the fact that the Dukhas’ very survival is inextricably linked to the animals, it’s no wonder that they treat them with such reverence (which perhaps also explains why they refrain from eating the reindeer meat). Their relationship is mutually beneficial: where the reindeer provide the Dukha with many basic needs, the Dukha provide the reindeer with protection from natural predators. Without each other, their continued existence is questionable.

reindeer people riding man
Winter temperatures in the tiga reach 60 degrees below zero Fahrenheit, making food scarce and conditions dangerous. A nomadic tribe and traveling caravan which uses teepees (known as ortz) for shelters, the Dukha are a strong and tenacious people with a heritage as long as it is rich.

reindeer people elderly woman
reindeer people herd leader

However, their lifestyles–and understanding of them–are in a state of transition. Regional forests and reindeer populations are diminishing, and since Mongolia’s democratization no governmental programs have been established to bring in any more reindeer from Siberia, which threatens the basic fabric of Dukha livelihoods.

The Dukha have also started to use reindeer revenues (increasingly from tourism) to purchase solar panels, satellite antennas and cell phones, gradually abandoning their “traditional” devices for more modern sources of heat and entertainment.

Increased mining activities are encroaching upon the areas the Dukha call home, leaving some–primarily elder members of the tribe–grasping for their nomadic identity as it is slowly vanishes amid an urbanizing Mongolia and nearby China.

reindeer people huge smile

reindeer people young girl
Currently only 44 Dukha families remain in the region, with an estimated population of between 200 and 400 people. Perhaps hoping to eternalize the Dukha before they disappear, Dr. Hamid Sardar-Afkhami, who holds a Ph. D. in Sanskrit and Tibetan Studies from Harvard, ventured out to their homes to snap these amazing shots. Sardar-Afkhami has since created a documentary film about the Dukha called The Reindeer People.

reindeer people large antlers
reindeer people deer milking
reindeer people frozen tundra
reindeer people hill top
reindeer people mongolian drummer
Source…bored panda and  www.all that is interesting.com
Natarajan

அரசுப் பள்ளி > ஐ.ஐ.எம். > விப்ரோ – ஒரு நிகழ்கால சாதனைக் கதை…

அரசுப் பள்ளிகள் குறித்து இப்போது பேசினாலே ‘அதெல்லாம் அந்தக் காலக் கதை. சுகமான நினைவுகள். இப்போதெல்லாம் அரசுப் பள்ளிகள் எப்படி இருக்கின்றன என்பது நமக்குத் தெரியாதா?’ என்பது போன்ற விமர்சனங்களே அதிகம் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் நிகழ்கால உதாரணம்தான் எர்நெஸ்டோ திலீபனின் சாதனைக் கதை.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பள்ளியுடன் போராடி, ‘இனியும் தனியார் பள்ளியில் விட்டால் மகனின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்’ என்று அரசுப் பள்ளியில் தங்கள் மகன் எர்நெஸ்டோ திலீபனை சேர்த்தார்கள் அவரது பெற்றோர் காளிதாசனும் கலைச்செல்வியும். கலைச்செல்வி, அரசுப் பள்ளி ஆசிரியை என்பது கவனிக்கத்தக்கது. அவர்களது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.

அந்த அரசுப் பள்ளிதான் திலீபனுக்கு புதிய உலகைத் திறந்து காட்டியது. அந்த அரசுப் பள்ளிதான் இந்திய மாணவர்களின் கனவான ஐ.ஐ.எம்முக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்துச்சென்றது. படிப்பை முடிக்கும் முன்பே ஆறு இலக்க ஊதியத்தில் வேலை கிடைக்கக் காரணமாக அமைந்தது.

இப்போது சென்னையில் விப்ரோ நிறுவனத்தின் வணிக ஆய்வியல் நிபுணராக இருக்கிறார் திலீபன். “கோவையில் பிரபலமான தனியார் பள்ளியில் என்னை சேர்த்தனர். 10-ம் வகுப்பு வரை படித்தேன். ஏனோ தெரியவில்லை பள்ளி செல்லவே அப்போது எனக்குப் பிடிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு வரைக்கும் மக்குப் பிள்ளை நான் – ஆம், பள்ளியில் அப்படித்தான் என்னை அழைத்தார்கள். ரேங்க் பட்டியலில் கடைசியில் இருப்பேன். ஆறாவதுக்கு மேல்தான் ஓரளவு படித்தேன். தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் வறுத்தெடுப்பார்கள், அடிப்பார்கள் என்பதற்காகப் படித்தேன்.

பள்ளியே சிறையானது. காலையில் எட்டரை மணிக்குப் பள்ளிக்குச் சென்றால் சிறப்பு வகுப்புகள் எல்லாம் முடித்துவிட்டு மாலை 7 மணிக்குதான் வீடு திரும்ப முடியும். அரட்டை கிடையாது, விளையாட்டு கிடையாது, முழுக்க முழுக்கப் புத்தகம், நோட்ஸ் இவையே உலகமானது.

‘சொன்னதைச் செய்’

புத்தகத்தைத் தாண்டி எதுவுமே தெரியவில்லை. தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது? பறவை எப்படிப் பறக்கிறது? என்பது போன்ற சிறு பொது அறிவு விஷயங்கள்கூடத் தெரியாது. பள்ளியில் கேள்வி கேட்க முடியாது. ‘சொன்னதைச் செய்’ என்பார்கள். அங்குள்ள ஆசிரியர்களையும் குறை சொல்ல முடியாது என்பதை பின்னாட்களில் உணர்ந்தேன். மதிப்பெண் எடுப்பது தொடர்பாக அவர்களும் நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தில் இருந்தார்கள்.

மொத்தத்தில் பள்ளிப் பிராயத்துக்கே உரிய சுட்டித்தனம் சுத்தமாக இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் பேச்சே குறைந்தது. யாருடனும் சகஜமாக பேச மாட்டேன். பயங்கரக் கூச்சம், தயக்கம், இனம் புரியாத பயம்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பத்தாம் வகுப்புப் பாடம் எடுத்தார்கள். இயந்திரத்தை விட மோசமாக மாறியது வாழ்க்கைச் சூழல். பள்ளிக்கூடம் செல்வதை நினைத்தாலே காய்ச்சல் அடிப்பதுபோல இருந்தது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் என்னை 90.5% மதிப்பெண் எடுக்க வைத்துவிட்டார்கள். பள்ளியில் மூன்றாவது இடம். புகைப் படம் எடுத்தார்கள். செய்தித்தாளில் போட்டார்கள். ஆனால், துளியும் மகிழ்ச்சி இல்லை அப்போது. அந்தப் பள்ளியை விட்டு சென்றால் போதும் என்றாகிவிட்டது. அங்கு செல்லவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தேன்.

தேசிய வங்கியொன்று நடத்தும் பிரபலமான பள்ளியில் இடம் கிடைத்தது. அட்மிஷன் போட்டாயிற்று. அங்கும் கடுமையான கட்டுப்பாடுகள் என்றார்கள். கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல ஆகிவிட்டது. படிப்பே வேண்டாம் என்றேன். என் மனவோட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவர் என் அம்மா. “நீ வாடா, நான் வேலை பார்க்கும் அரசுப் பள்ளியில் உன்னைச் சேர்க்கிறேன்’ என்றார்.

‘அய்யே அரசுப் பள்ளியா? தனியார் பள்ளியே இந்த லட்சணம் என்றால் அரசுப் பள்ளி எப்படி இருக்கும்?’ என்றேன். நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர் என எல்லோரும் ‘உங்களுக்குப் பைத்தியமா? சாதாரணமாக இடமே கிடைக்காது என்று கருதப்படும் தனியார் பள்ளியிலே இடம் கிடைத்திருக்கிறது, போயும் போயும் அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டுமா’ என்று அம்மாவைத் திட்டினார்கள்.

அம்மா என்னிடம் கேட்டார், ‘என் மீது நம்பிக்கை இருந்தால் வா. அரசுப் பள்ளி என்றால் என்னவென்று காட்டுகிறேன், அரசு ஆசிரியர்கள் என்றால் யார் என்று காட்டுகிறேன். அரசுப் பள்ளி என்றால் அவமானம் இல்லை என்று காட்டுகிறேன்…’ என்றார். அம்மா அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதை முதல்முறையாகப் பார்த்தேன். அம்மாவுக்காகச் சென்றேன்.

சுற்றுலா வந்ததுபோல் இருந்தது!

கோவை அசோகபுரம் அரசுப் பள்ளி. முதல் நாள்… பையன்கள் கிழிந்த, அழுக்கு சட்டையோடு வருவார்கள், பள்ளிக்கூடம் குப்பையாக இருக்கும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன். எல்லாமே நினைத்ததற்கு மாறாக இருந்தது. பெரிய மைதானம். சுற்றிலும் மரங்கள். குறிப்பாக, யாரோடும் பேசலாம், அரட்டை அடிக்கலாம் என்ற சூழல்.

முதல்முறையாக ஐந்தாறு மாணவர்களுடன் அமர்ந்து சாப்பாட்டைப் பகிர்ந்துகொண்டு சாப்பிட்டேன். ஏதோ சுற்றுலாவுக்கு வந்ததுபோல இருந்தது. ஒரு பீரியடில் மணி அடிக்க… ‘எல்லோரும் மைதானத்துக்கு ஓடுங்க’ என்றார்கள். வாழ்க்கையில் முதல்முறையாக மைதானத்தில் ஓடினேன். ‘யாருக்கு என்ன விளையாட்டு பிடிக்கும்?’ என்று கேட்டார்கள். பேட்மின்ட்டன் கற்றேன். அங்கு விளையாடிதான் மாவட்ட அளவில் பரிசுகள் வாங்கினேன்.

சகஜமாகப் பேசவே தயங்கிய நான் பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்குவேன் என்றெல்லாம் ஒருபோதும் நினைத்ததே இல்லை. வினாடி-வினா போட்டி, ராமானுஜம் கணிதப் போட்டி, அறிவியல் கண்காட்சி, தமிழ், ஆங்கிலம் கிளப் போட்டிகள் என அனைத்திலும் பரிசுகள். அந்த ஓர் ஆண்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான ஆண்டு. பாடங்களைக்கூட மாணவர்களை வைத்தே எடுத்தார்கள். அதாவது, கணிதத்தில் முதல் ஸ்டெப் ஆசிரியர் போடுவார்.

இரண்டாவது ஸ்டெப்பை ஒரு மாணவர் சொல்ல ஆசிரியர் போடுவார். மூன்றாவது ஸ்டெப்பை இன்னொரு மாணவர் சொல்லுவார். விளையாட்டாக எல்லாம் கற்றோம். பாடங்களைப் புரிந்துகொண்டு படித்தோம். பன்னிரெண்டாம் வகுப்பில் கொஞ்சம் அக்கறை எடுத்துப் படிக்கச் சொன்னார்கள். அப்போதும்கூட சிறப்பு வகுப்புகள் இல்லை. ஆசிரியர்களிடம் எப்போது வேண்டுமானாலும் தயங்காமல் சந்தேகம் கேட்கலாம். நண்பர்களைப் போல பழகினார்கள். பொதுத்தேர்வில் 90% மதிப்பெண் எடுத்தேன்.

அனைத்திந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதினேன். திருச்சி என்.ஐ.டி-யில் இடம் கிடைத்தது. மாநில அளவிலான நுழைவுத் தேர்வில் கிண்டி – அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அந்த நான்கு ஆண்டுகளும் வேறு ஓர் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தின. அடுத்து, கேட் (CAT) தேர்வு எழுதினேன். தேசிய அளவில் கடும் போட்டி அது. மேகாலய மாநிலம், ஷில்லாங் ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ. படிக்க இடம் கிடைத்தது.

எனது வகுப்பில் ஐ.ஐ.எம்முக்குத் தேர்வான ஒரே மாணவன் நான். அங்கு தேசிய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதச் சொல்லி போட்டிகள் வைத்தார்கள். நான்கு போட்டிகளில் தேசிய அளவில் தங்கம் வென்றேன். படிக்கும்போதே விப்ரோ நிறுவனத்தினரின் முதல் நேர்காணலிலேயே வேலை கிடைத்தது. படிப்பை முடித்த கையுடன் கடந்தாண்டு ஜூன் மாதம் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். இப்போது மற்றுமொரு உலகத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் காரணம் கோவை அசோகபுரம் அரசுப் பள்ளியும் அதன் அத்தனை ஆசிரியர்களும்தான்!” என்று முடித்தார் திலீபன்.

அசோகபுரம் அரசுப் பள்ளியைப் பொறுத்தவரை திலீபன் ஒரு தொடக்கப் புள்ளி! திலீபனைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் வேதியியல் ஆசிரியர் குழந்தைவேல் மகன் நவீன் அங்கு வந்து சேர்ந்தார். இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.

திலீபன் இந்தப் பள்ளியில் சேர்ந்த அதே ஆண்டில், தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு முடித்த ஏழு மாணவர்கள் அசோகபுரம் அரசுப் பள்ளியில் வந்து சேர்ந்தனர். இப்போதும் இது தொடர்கிறது. பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் இவர்களின் ஒருங்கிணைந்த நம்பிக்கைதான் அரசுப் பள்ளிகளையும் மேலே மேலே கொண்டுசெல்லும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன!

– டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

Source….www/tamil.thehindu.com

Natarajan

காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா…

சட்டத்தை மீறக் கூடாது என்ற உணர்வு ஹாங்காங் கல்விமுறையின் அடிப்படை போதனைகளுள் ஒன்று!

கடந்த வாரம் ஹாங்காங்கில் ஓர் இந்திய அங்காடிக்குப் போயிருந்தேன். பொருட்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் ஓர் இளம்பெண். கைபேசியில் தனது மூன்று வயது மகனின் குறும்புகளைப் பற்றிப் பெருமையாக அலுத்துக்கொண்டிருந்தார்- ஆங்கிலத்தில். கடைக்காரர் அந்தப் பெண் வாங்கியிருந்த காய்கறிகள், மளிகைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், தின்பண்டங்கள் முதலானவற்றைத் தனித்தனி பிளாஸ்டிக் பைகளில் போட்டார். பின் அவற்றை இரண்டு பெரிய பிளாஸ்டிக் பைகளில் அடுக்கிக் கொடுத்தார்.

ஹாங்காங்கில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதற்கொண்டு அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகள் கொடுக்கப்படக் கூடாது; வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் மட்டும், பையொன்றுக்குக் குறைந்தபட்சம் 50 சதம் (ரூ. 4) கட்டணமாக வசூலித்துக்கொண்டு வழங்கலாம். என் முறை வந்தபோது கடைக்காரரிடம் கேட்டேன்: “அந்தப் பெண்ணிடம் பைகளுக்குக் கட்டணம் வாங்கினீர்களா?”. அவர் தலையைச் சரித்து என்னைப் பார்த்துக் கமுக்கமாகச் சிரித்தார். ஹாங்காங்கின் ஒரு லட்சம் அங்காடிகளில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு சட்டம், ஓர் இந்திய அங்காடியில் வணிகராலும் பயனராலும் எவ்வித உறுத்தலுமின்றி மீறப்படுகிறது.

கிராமங்களில் சிலர் கேட்பார்கள்- ‘படித்தவன் மாதிரியா நடந்துகொள்கிறான்?’. படிப்பு பண்பைத் தர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. நான் சந்தித்த கடைக்காரரும் இளம் பெண்ணும் படித்தவர்கள்தான். ஆனால், சட்டத்தை மதிப்பதும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் இருப்பதும் படித்தவர்கள் பின்பற்ற வேண்டிய பண்புகளாக அவர்களுக்குத் தெரியவில்லை.

இலகு ரயில்

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, நான் ஹாங்காங் வந்த புதிதில், இருபதாண்டுகளுக்கு முன்னால், புறநகர் ஒன்றில் உள்ள கட்டிடப் பணித்தலத்துக்கு உடன் பணியாற்றும் இளைஞன் என்னை அழைத்துச் சென்றான். மெட்ரோ ரயிலிலிருந்து இலகு ரயிலில் மாறிச் செல்ல வேண்டும். இலகு ரயில் புறநகர்களில் மட்டும் ஓடும், இரண்டு பெட்டிகள் மட்டுமே இருக்கும். தண்டவாளங்களும் நடைமேடையும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் நிலையங்களைப் போல பொது வெளியோ கட்டணக் கதவுகளோ இராது. பயணச்சீட்டு வாங்க சிறிய இயந்திரம் இருக்கும்.

சீட்டு இல்லாமலும் ரயிலில் ஏற முடியும், இறங்கவும் முடியும். நான் பணித்தலத்துக்குப் போகும்போதும் திரும்ப வரும்போதும் கவனித்துக்கொண்டே இருந்தேன். சீட்டு இல்லாமல் யாரும் பயணிக்கவில்லை. உடன் வந்த இளைஞனிடம் “இது உங்களுக்கு எப்படிச் சாத்தியமானது?” என்று கேட்டேன். “நாங்கள் இதைப் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்துவிடுவோம்” என்று பதிலளித்தான். அதாவது சட்டங்களை மதிக்க வேண்டும் என்று ஹாங்காங் பள்ளிகளில் சொல்லித்தருகிறார்கள்.

கல்வியும் சமூகமும்

நமது இந்நாளையக் கல்வித் திட்டத்தில் இப்படியான போதனைகளுக்கு இடமில்லை. கல்வி வணிகமயமாகி விட்டது. இந்தத் திட்டத்தில் படிக்கிறவர்கள் பண்பாளர்களாக வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் என்பது கல்வியாளர்கள் சிலர் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை. ஆனால், கூடவே இன்னொரு கேள்வியும் எழுகிறது. கல்வி வியாபாரமாவதற்கு முன்னால் படித்தவர்கள் எல்லாம் பண்பாளர்களாக இருந்தார்களா?

1916-ல் நடந்த காசி காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய காந்தியடிகள் மக்கள் பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில்லை என்று வருத்தப்படுகிறார். மாணவர்கள் ரயில் பெட்டிகளிலேறி அனைத்து இருக்கைகளையும் ஆக்கிரமித்துக்கொள்வது குறித்துக் கவலைப்படுகிறார். மாணவர்களைப் பற்றிக் கைப்புடனும் வசைப்பாங்குடனும் சொல்கிறார்: ‘அவர்கள் ஆங்கிலம் படித்திருக்கிறார்கள்’. தொடர்ந்து முயற்சித்தால் சுதந்திரத்துக்கு முன்னால் நமது பண்பு நலன்களை மேம்படுத்திக்கொண்டுவிடலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

‘மதுவையும் தீண்டாமையையும் ஒழிக்க வேண்டும், கதர் அணிய வேண்டும், புறத்தில் தூய்மையும் அகத்தில் நேர்மையும் வேண்டும்’ போன்ற போதனைகள் அவருக்கு அரசியல் விடுதலையைவிட முக்கியமானவையாக இருந்தன. காந்தியடிகள் சட்டத்தை மீறினார். அது எதிர்ப்பைக் காட்டுகிற அவரது போராட்ட வடிவம். சத்யாக்கிரகிகளிடம் அவர் வலியுறுத்திச் சொன்னார்: ‘பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்காதீர்கள்; போலீஸ் கைதுசெய்ய வந்தால் உடனே கீழடங்குங்கள்’. ஒரு நல்ல சிவில் சமூகம் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.

காந்தி தேசத்தின் இன்றைய நிலை என்ன? தாம்பரத்தில் அதிகாலை நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நான் கண்ட காட்சி எடுத்துக்காட்டாக அமையலாம். தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்த பேருந்திலிருந்து அந்தக் குடும்பம் இறங்கியது. சாலையைக் குறுக்காகக் கடந்து மையத்தை அடைந்தது. அங்கே சாலையைப் பிரிக்கும் கட்டைச் சுவரின் மீது நான்கடி உயரத்துக்கு இரும்புக் கிராதி கட்டப்பட்டிருந்தது. நடுத்தர வயதிலிருந்த தந்தை முதலில் கிராதியிலேறி மறுபக்கம் குதித்தார். அடுத்து ஏழெட்டு வயதிலிருந்த மகன் உற்சாகமாகத் தாண்டிக் குதித்தான்.

தொடர்ந்து பதின்பருவத்திலிருந்த மகள் பயணப் பொதிகளை எடுத்துக்கொடுக்க மறுபக்கத்திலிருந்த தந்தையும் மகனும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். அடுத்தடுத்துத் தாயும் மகளும் மறுபுறம் தாவினார்கள். பிறகு மொத்தக் குடும்பமும் சாலையின் அடுத்த பாதியை குறுக்காகக் கடந்து சென்றது. ஏன் இத்தனை பிரயாசை? பேருந்து நிறுத்திய இடத்திலிருந்து சிறிது தொலைவில் பாதசாரிகள் கடப்பதற்கான வெள்ளைக்கோட்டுப் பாதை இருந்தது. அவ்வளவு தூரம் நடப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. இந்தக் குடும்பத்தில் வளர்கிற சிறுவனுக்குச் சட்டத்தைக் குறித்து என்னவிதமான மதிப்பீடுகள் உருவாகும்?

ஹாங்காங் பள்ளிகளில் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சொல்லித்தருகிறார்கள். அதே வேளையில் மொத்த சமூகமும் சட்டத்தின் மாட்சிமையை (ரூல் ஆப் லா) பேணுவதைக் கடமையாகக் கொண்டிருக்கிறது. பிள்ளைகள் பள்ளியிலிருந்தும் கற்கிறார்கள், சமூகத்திட மிருந்தும் கற்கிறார்கள்.

காந்தி ஏமாந்தார்

இந்த இடத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். அதிகாலை நேரம். நல்ல கூட்டம். மற்ற நகரங்களில் அலுவலகங்கள் திறக்கிற நேரத்திற்குள் போய்ச்சேர்கிற அவசரத்தில் கார்பரேட் கனவான்கள் வரிசைகளில் நின்றிருந்தார்கள். ஒரு இளைஞன் வரிசையை முறித்துச் சோதனை வாயிலை நோக்கி முன்னேறினான். நான் தடுத்தேன். தன்னிடத்தில் மடிக்கணினி இருக்கிறது, அதைத் தனியாகச் சோதிப்பார்கள், அதனால் முன்னால் செல்ல வேண்டும் என்றான். அந்நேரம் வரிசையில் நின்றவர்களில் பாதிப் பேர்களின் தோள்பட்டைகளில் மடிக்கணினிப் பைகள் தொங்குவதைச் சுட்டிக்காட்டினேன்.

தன்னுடைய விமானம் புறப்படுவதற்கு அதிக அவகாசமில்லை என்றான். வரிசையில் நிற்கும் பலருக்கும் அப்படியே என்றேன். இதற்கு மேல் என்னுடன் வாதிடுவது தன்னுடைய நேரத்தை வீணாக்குகிற செயல் என்று அவன் கருதியிருக்க வேண்டும். அவனது அடுத்த செய்கை நான் முற்றிலும் எதிர்பாராதது. ஏர்-இந்தியா விளம்பரத்தில் வரும் மகாராஜாவைப் போல் சிரம் தாழ்த்தி ‘ ஐயா, செல்லுங்கள்’ என்பதுபோல் கையை முன்னோக்கிக் காட்டினான். என்னை அவமானப்படுத்துவது அவன் நோக்கமாக இருக்கலாம். இந்த இளைஞனுக்கு இவ்வளவு சூழ்ச்சியைக் கற்றுத்தந்தது எது? அவன் கற்ற கல்வியா? அவன் வாழும் சமூகமா?

அந்த இளைஞனின் கண்களைப் பார்த்தேன். அதில் களிப்பு இருந்தது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு அதே களிப்பை ஹாங்காங் இந்திய அங்காடி வணிகரின் கண்களிலும் பார்த்தேன். அது ஆங்கிலக் கல்வி தந்த களிப்பு, சட்டத்தை மீறுவதால் உண்டாகிற களிப்பு, நூறாண்டுகளாகக் காந்தியை ஏமாற்றிவருகிற களிப்பு.

மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Source….www.tamil.thehindu.com

Natarajan

” Maa ka Pyaar and Ghar ka Khaana …” !!!

This Ad Will Make You Miss Your Maa Ke Haath Ka Khaana. And Cry

Screengrab taken from YouTube video uploaded by @FortuneFoods

The video below isn’t just about a simple recipe swap. It’s also an exchange of stories, and with the happiest of endings.

Those who have left home to study or work in other cities will know that this always involves leaving behind a part of their soul. For most, home is anywhere there is maa ka pyaar and ghar ka khaana. And just how wonderful would it be if you could have that familiar love and food away from home too?

This video, posted by Best Ads on Facebook and already shared over 18,000 times in two days, will not only show that this is possible but also warm your heart and bring a huge smile to your face.

The ad shows two mothers, one in Chennai and the other in Jodhpur, talking about their sons and how much they miss them. “I always ask him whether he ate well and what he ate,” says one mother in Tamil.

Their sons have travelled across the country to study – Chennai resident Santosh in IIT Jodhpur and Jodhpur’s Vivek in IIT Chennai. Santosh and Vivek talk about their exciting new lives away from home. “But still I miss my home,” says Santosh, adding that he misses his mum’s food the most.
What happens next is nothing short of brilliant. The mothers, through a ‘Mothers Exchange Programme,’ get in touch with each other, discuss their sons’ favourite dishes, share recipes and teach each other how to make them.

After many phone calls, ingredient-hunting and video chats, both mothers manage to almost-perfect each other’s dishes for their ‘new’ sons.

Watch the sons reacting to their maa ke haath ka swaad in the video below. And don’t be surprised if you tear up a little, or a lot.

Source……..www.ndtv.com and http://www.you tube.com

Natarajan

நம் கல்வி… நம் உரிமை!- அரசுப் பள்ளிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தும்!

அரசுப் பள்ளியால் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்விக்கு நாகேந்திரனை (வயது 24) விடச் சிறந்த உதாரணத்தைக் காட்டுவது கடினம். அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை மேலும் மேலும் துலக்கமாக்கிக் காட்டுவதுதான் நாகேந்திரனின், அதாவது டாக்டர் நாகேந்திரனின் கதை.

மதுரையில் மர வியாபாரம் செய்துகொண்டிருந்தவர் கண்ணன். எதிர்பாராத விதமாகத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் சுமைகளைச் சமாளிக்க முடியாமல் காரைக்குடிக்கு இடம்பெயர்ந்தார். அப்போது அவரது மகன் நாகேந்திரன் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அடுத்த வேளை சாப்பாடுகூட நிச்சயமற்ற சூழலில் இருந்த இந்தக் குடும்பத்துக்கு உறவுகள் கைகொடுத்துப் பட்டினி இல்லாமல் பார்த்துக்கொண்டன. காரைக்குடியில் உள்ள பிரபல மளிகைக் கடை ஒன்றில் மளிகைச் சிட்டை எழுதும் வேலை கண்ணனுக்கு. அவரது மனைவி லதாவுக்கு அந்தக் கடையிலேயே கணக்கு எழுதும் வேலை. இருவரது மாதச் சம்பளத்தைக் கூட்டினாலும் மூவாயிரம்கூட இருக்காது. ஆனாலும், சராசரி பெற்றோரைப் போல இவர்களும் தங்கள் மகன் நாகேந்திரனை ஆங்கில வழியில் படிக்க வைக்க பிரயாசைப்பட்டு, தனியார் பள்ளியில் சேர்த்தார்கள். பொருளாதாரச் சூழல், ஐந்தாம் வகுப்புக்கு மேல் நாகேந்திரனை அங்கே அனுமதிக்கவில்லை. ஆறாம் வகுப்புக்கு, அரசு உதவி பெறும் எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

பருத்திப் பால் விற்றபின் பள்ளிக்கூடம்

பிறகு நடந்தவற்றை நாகேந்திரனின் அம்மா லதா விவரிக்கிறார். “அந்த வயசுலயே குடும்பச் சூழலை நாகேந்திரன் நல்லா புரிஞ்சுக்கிட்டான். பாதி நாள் பள்ளிக் கூடத்துல சத்துணவு சாப்பிடப் பழகிக்கிட்டான். எங்க அண்ணன் எங்களுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காங்க. இவனையும் பொம்பளப் பிள்ளையையும் (நாகேந்திரனின் தங்கை) படிக்க வைக்கக் கூடுதலா கொஞ்சம் பணம் தேவைப்பட்டுச்சு. அதுக்காக பால் பாக்கெட் வாங்கி வீடு வீடா போட்டோம். தினமும் காலையில பருத்திப் பால் காய்ச்சி கேன்ல ஊத்திக் குடுப்பேன். அதை நாகேந்திரன்தான் ரெண்டு மூணு தெருவுக்குப் போயி வித்துட்டு வந்து பள்ளிக்கூடத்துக்குப் போவான். அதேமாதிரி, சாயந்திரம் வந்ததும் பக்கோடா போட்டுக் கொடுப்பேன். அதையும் வித்துட்டு வந்துதான் படிக்க உக்காருவான்.”

“இவன் நல்லா படிக்கிறான்னதும் பள்ளிக்கூட ஆசிரியர்கள்லாம் அவனை நல்லாவே

ஊக்கப்படுத்துனாங்க. எங்களால முடியாதப்ப இவனுக்கு அப்பப்ப பண உதவியும் செஞ்சுருக்காங்க. பத்தாம் வகுப்புல 461 மார்க் எடுத்தான். பன்னிரண்டாம் வகுப்புல 1,151 மார்க் எடுத்துப் பள்ளியின் முதல் மாணவனா தேர்வானான். அப்பெல்லாம் இவன டாக்டருக்குப் படிக்க வைக்கணும்கிற எண்ணம் எங்களுக்கு இல்ல. புள்ள நாலு வருசம் இன்ஜினீயரிங் படிச்சுட்டு ஏதாச்சும் ஒரு வேலையில உக்காந்தான்னா, அவன் தலையில குடும்ப பாரத்த எறக்கி வெசுட்டு நாம அக்கடான்னு இருக்கலாம்னுதான் நினைச்சிருந்தோம். ஆனா, நல்ல மார்க் எடுத்ததால மெடிக்கல் காலேஜ்ல சேர்க்க வேண்டியதாப் போச்சு’’ என்று பெருமிதம் பொங்கச் சொன்னார் லதா.

தொடரும் வெற்றிப் பயணம்

2009-ல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நாகேந்திரனுக்கு இடம் கிடைத்தது. ஆனாலும், அரசு நிர்ணயித்த சொற்பமான கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத கஷ்டத்தில் இருந்தார் கண்ணன். விஷயத்தைக் கேள்விப்பட்ட நாகேந்திரனின் ஆசிரியர்கள், தங்களுக்குள் நிதி திரட்டி மொத்தமாய்ப் பதினைந்தாயிரம் ரூபாயை நாகேந்திரனிடம் கொடுத்தார்கள். அதேசமயம், நாகேந்திரனின் நிலைமையை அறிந்த தேனி ரேணுகா மில்ஸ் நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது. மருத்துவக் கல்வியை முடிக்கும் வரை அவருக்கான விடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை ரேணுகா மில்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இத்தனை பேரின் உதவிக்கரங்களைப் பற்றிக்கொண்டு மருத்துவக் கல்லூரிக்குள் கால் பதித்த நாகேந்திரன், முதல் ஆண்டிலேயே ஒரு பாடத்தில் தங்கப் பதக்கம் வாங்கினார். 80% மதிப்பெண்ணுடன் இந்த ஆண்டு தனது மருத்துவக் கல்வியை முடித்திருக்கும் நாகேந்திரன், இறுதி ஆண்டிலும் இரண்டு தங்கப் பதக்கங்களைத் தட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

குடும்ப நிலையைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்!

தற்போது பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நாகேந்திரன், “எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் பெற்றோரும் கோயில் கட்டிக் கும்பிடப்பட வேண்டியவர்கள்.

அதிலும், குறிப்பாக சுந்தர்ராமன் சாரையும் ஹென்றி பாஸ்கர் சாரையும் சொல்லியே ஆக வேண்டும். எனது ஆசான்களைப் போலவே ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் நல்ல ஆசான்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். லட்சங்களைக் கொட்டிக் கொடுத்துப் படித்தால்தான் லட்சியத்தை அடைய முடியும் என்பது போலியான மாயை. எனது குடும்பத்தின் கஷ்ட நிலைமை எனக்குக் கண்கூடாகத் தெரிந்தது. அதுதான், எப்பாடு பட்டாலும் முன்னுக்கு வர வேண்டும் என்கிற உந்துதலை எனக்குள்ளே வளர்த்தது. எனவே, குடும்பத்தின் நிலைமையைப் பிள்ளைகளுக்குப் புரியவைத்தால் தானாகப் படித்து முன்னுக்கு வந்துவிடுவார்கள்’’ என்று சொன்னவர், “விரைவில் மருத்துவப் பணியைத் தொடங்கப்போகும் நான் என் வாழ்நாளில் எந்த ஆசிரியர் வந்தாலும் கட்டணமின்றி வைத்தியம் பார்ப்பது என்ற தீர்மானத்தை எனக்குள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்’’ என்றும் சொன்னார்.

கைதூக்கி விட நாங்கள் தயார்

நாகேந்திரனின் அப்பா கண்ணனிடம், “உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்டதுதான் தாமதம். பொலபொலவெனக் கண்ணீரைக் கொட்டினார். “எங்களுக்குக் கடவுள் கொடுத்த வரம்தான் அவன்’’ என்று சொன்னவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நாகேந்திரன்குறித்துப் பேசும்போது, “பத்தாம் வகுப்பிலேயே ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர முடியலைன்னு அழுதவன், பன்னிரண்டாம் வகுப்பில் அதைச் சாதிச்சுட்டான். இந்த வெறி எல்லா பிள்ளைகளுக்கும் இருக்கணும். அப்பதான் முன்னுக்கு வர முடியும். நாகேந்திரனால் எங்கள் பள்ளிக்குப் பெருமை. இவனைப் போலவே இன்னும் நான்கைந்து பசங்களுக்கு மேல்படிப்புக்கு நாங்க உதவி செஞ்சிருக்கோம். ஆர்வமுள்ள பசங்க எத்தனை பேர் வந்தாலும் கைதூக்கி விட நாங்க தயாரா இருக்கோம்’’ என்று சொன்னார்கள்.

அண்ணன் காட்டிய வழியில் நாகேந்திரனின் தங்கை சொர்ணமுகியும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்று, இப்போது மதுரை தியாகராஜா கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறார்.

தனியார் பள்ளிகளில் ஒருபோதும் நிகழாது இந்த அதிசயம். ஏனெனில், பணம்தான் அவற்றைப் பின்னின்று இயக்கும் சக்தி. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை சமூக நீதிதான் அவற்றைச் செலுத்தும் சக்தி. அரசாலும் மக்களாலும் கைவிடப்பட்டுக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகள்தான் கடந்த காலத்தில் எண்ணற்ற நாகேந்திரன்களை உருவாக்கியிருக்கின்றன. நாகேந்திரன்கள் இனி உருவாவதும் அரசுப் பள்ளிகளின் கையில்தான் இருக்கிறது.

– குள. சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in

Natarajan

+2 தேர்வு: முன்னாள் ஸ்டேட் டாப்பர்கள், இப்போது என்ன செய்கிறார்கள்?….

+2வில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் பலருக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அடித்தளமாக உள்ளது. +2வில் ஸ்டேட் டாப்பர்களாக வந்த மாணவர்கள், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? வாழ்க்கையில் எவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார்கள்?

சென்ற வருடம், ஒரு வார இதழுக்காக ஸ்டேட் டாப்பர்கள் சிலரைப் பேட்டி கண்டேன். அதன் முழு வடிவம் இது.

ஐஸ்வர்யா மீனாட்சி:

(2002-ம் வருடம் 1188 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)

பத்தாவதில், மூன்று மதிப்பெண்கள் குறைவாகப் போனதால் என்னால் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்கமுடியவில்லை. +2வில், டிஏவி பள்ளிக்கு மாறினேன். இந்த மாற்றம் நல்ல பலனை அளித்தது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் என்கிற இலக்கை அடைந்தேன்.

பிட்ஸ் பிலானியில் சீட் கிடைத்தது. ஆனால், மேற்படிப்புக்கு யு.எஸ் போவதாகத் திட்டம் இருந்ததால் பெற்றோருடன் இருக்கவேண்டும் என்பதற்காக வெங்கடேஸ்வராவில் பி.இ. பண்ணினேன். பல்கலைக்கழக அளவில், ஐந்தாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு, அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அரசின் ஸ்காலர்ஷிப் உதவியுடன் எம்.எஸ். முடித்தேன். அங்கேயே பகுதிநேரமாக வேலை செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.

நான் படிக்கும் காலத்தில் எனக்காக அமெரிக்க அரசு 20,000 டாலர் செலவழித்திருக்கும். கூடவே வேலை செய்ததற்காக சம்பளமும் கிடைத்தது (ஒரு வாரத்துக்கு குறைந்தது 20 மணி நேரம் வேலை.) நடுவில் மூன்று மாதம், ஐபிஎம்-மில் இண்டர்ன்ஷிப்பும் கிடைத்தது. ஐபிஎம்-மில் என்னை ஒரு மாணவர்போல நடத்தவில்லை. ஐபிஎம்-மில் வேலை செய்கிறவருக்குண்டான பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. இந்த நல்ல அனுபவத்துடன் படிப்பை முடித்தபிறகு, தாம்சன் ராய்ட்டரில் வேலை கிடைத்தது. 2009ல், பாரிஸில் நடந்த சர்வதேச கணினி மாநாட்டில் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளிருந்து தேர்வான இருபது கட்டுரைகளில் என்னுடையதும் ஒன்று. பிறகு, தொழில்நுட்ப ரீதியாக வேலை செய்யவேண்டும் என்பதற்காக மைக்ரோசாஃப்டில் விண்ணப்பித்தேன். +2வில் மாநில அளவில் முதலில் வந்தால் எந்த வேலைக்கு விண்ணப்பித்தாலும் அது தனிக்கவனத்தை ஏற்படுத்தும். மைக்ரோசாஃப்டில் தேர்வாகி, 2010லிருந்து அங்கு பணிபுரிகிறேன். இப்போது, சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் என்ஜினியர் – லெவல் 3 என்கிற நிலையில் இருக்கிறேன்.

+2வில் முதலிடம் வந்ததால் கிடைத்த ஸ்காலர்ஷிப் தொகையே எப்படியும் ரூ. 75,000 வரை இருக்கும். கூடவே 9 விருதுகளும் கிடைத்தன. ஒரு ஐஐடி மாணவர் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை. ஆனால், கடுமையான உழைப்பினால் எந்த வேலையையும் சிறப்பாக செய்யமுடியும். +2வில் பல லட்சம் மாணவர்களுடன் மோதி, முதலிடத்தைப் பிடித்ததால் அது தந்த தன்னம்பிக்கைக்கு ஈடே கிடையாது.

வித்யா சாகர்:

(2000-ம் வருடம் 1181 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)

டிஏவியில் படித்தேன். ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நிறைய மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்கிற குறிக்கோள்தான் இருந்தது. +2வில் மாநில அளவில் முதலிடம் வந்தது, என் அப்பாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. தேர்வு முடிவுகளைக் கேள்விப்பட்டு பள்ளிக்குச் சென்றபோது, வாசலிலேயே 100 பேருக்கு மேல் வாழ்த்தி வரவேற்றதை மறக்கவேமுடியாது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்ததால் நிறைய ஸ்காலர்ஷிப்களும் பல தொடர்புகளும் கிடைத்தன.

பிட்ஸ் பிலானியில் பி.இ. முடித்து, சென்னையிலுள்ள அமெரிக்கன் மெகாடிரெண்ட்ஸ் என்கிற அமெரிக்க நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். 2005ல், சிங்கப்பூரில், நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் எம்.எஸ் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்தேன். அதே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பகுதி நேரமாக வேலை செய்தேன். 2007 முதல் அங்கேயே காண்டினெண்டல் என்கிற ஜெர்மன் நிறுவனத்தில் 2013 வரை பணிபுரிந்தேன். சீனியர் சாஃப்ட்வேர் என்ஜினியர் பதவி வரை வேலை பார்த்தாலும் அடுத்ததாக மேனேஜ்மெண்ட் பிரிவில் நுழைய ஆர்வம் ஏற்பட்டது.

வேலை செய்துகொண்டிருக்கும்போது எம்.பி.ஏ படிக்க ஆரம்பித்தேன். படிப்பு, வேலை என இரண்டையும் சமாளிப்பது ஒருகட்டத்தில் சவாலாக இருந்தது. படிப்புக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக என் வேலையை ராஜினாமா செய்தேன். எம்.பி.ஏ முடித்தபிறகு, 2014ல் சிங்கப்பூரில் உள்ள எமர்சன் பிராசஸ் மேனேஜ்மெண்ட் என்கிற அமெரிக்க நிறுவனத்தில் என் விருப்பத்துக்கேற்ற மார்க்கெட்டிங் மேனேஜர் வேலை கிடைத்திருக்கிறது. என்ஜினியரிங் பேக்ரவுண்ட் உள்ள நிறுவனம் என்பதால் எனக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது.

கல்லூரி பாரதி:

(2003-ம் வருடம் 1188 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)

மாநிலத்தில் முதலாவதாக வரவேண்டும் என்று நினைத்துதான் படித்தேன். 10வதில் ஆரம்பித்து அடுத்த மூன்று வருடங்களுக்கு சென்னையைத் தாண்டி எங்குமே போகவில்லை. ஒரே படிப்பு மயமாகத்தான் இருந்தேன். டிவி, பாட்டு வகுப்புகள் என என் விருப்பங்களை சிலகாலம் ஒதுக்கிவைத்தேன். +2வில் நினைத்ததைச் சாதித்தவுடன், பிட்ஸ் பிலானியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். பிறகு, ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் வேலை செய்தேன்.

திருமணத்துக்குப் பிறகு புனேவில் ஒருவருடம் வேலை பார்த்துவிட்டு, 2011ல், எம்.எஸ் படிக்க அமெரிக்கா சென்றேன். பி.இ. முடித்தபிறகு எம்.எஸ் படிக்காததற்குக் காரணம், வேலை அனுபவம் வேண்டும் என்று நினைத்தேன். சம்பாதித்தால்தான் மேற்படிப்புக்காகப் பணம் சேமித்து, அப்பாவைத் தொந்தரவு பண்ணாமல் இருக்கமுடியும் என்று எண்ணினேன். நான், என் கணவர் இருவருமே எம்.எஸ் படிப்பை அமெரிக்காவில் முடித்தோம். பிறகு, இருவருக்கும் அங்கேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

+2வில் முதலிடம் வந்ததால் நிறைய பலன்கள். பிலானியில் 30,000 ரூபாய்க்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. பிலானியில் முதல் நாளன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், எல்லா மாநில ஸ்டேட் டாப்பர்களுக்கும் துணை வேந்தர் தனியாக மரியாதை அளித்தார். தமிழ்நாட்டிலிருந்து பிலானியில் சேர்ந்தவர்களுக்கு என்னை நன்றாகத் தெரிந்திருந்தது.

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, ஸ்டேட் டாப்பர் என்பதற்கு ஒரு தனி மதிப்பு இருக்கத்தான் செய்தது. +2வில் முதலிடம் பெற்று சாதனை செய்ததால் மற்ற வேலைகளிலும் நீ பொறுப்பாக இருப்பாய் என்று நம்பினோம், உன்மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது என்று என்னை நேர்காணல் செய்தவர்கள் பிறகு கூறினார்கள். அதேசமயம் ஸ்டேட் டாப்பர் என்பதன் மதிப்பு, பெருமையெல்லாம் நாள் போகப்போக குறையத்தான் செய்யும். அதன்பிறகு வேலையில் நீங்கள் காட்டும் ஈடுபாடு, பங்களிப்புதான் உரிய பலனைக் கொடுக்கும்.

ஸ்டேட் டாப்பர் ஆனதால் +2 தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு என்னால் அறிவுரை சொல்லமுடிந்தது. முதலிடம் வந்ததால் கடவுள் மீதும் அதிக நம்பிக்கை வந்தது. என்னைப் போலவே பல லட்சம் பேர் +2வில் உழைத்துப் படித்தார்கள். ஆனால், நான் மட்டும் முதலிடம் வந்ததற்கு கடவுளின் கருணையும் ஒரு காரணம் என்று எண்ணுகிறேன்.

சுஜனா :

(2005-ம் வருடம் மாநிலத்தில் முதலிடம். +2 தேர்வில், முதல்முறையாக 1190 மதிப்பெண்கள் எடுத்தவர்)

+2 வில் ஸ்டேட் டாப்பர் ஆனபிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் கிடைத்தது. எனக்கு இயற்பியல், கணிதத்தில் ஆர்வம் அதிகம். அதற்கு மெக்கானிக்கல்தான் சரிவரும் என்று நினைத்தேன். பிறகு, அமெரிக்காவில் எம்.எஸ் படித்தேன். இப்போது இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினியராகப் பணியாற்றுகிறேன்.

ஸ்டேட் டாப்பராக வந்ததால் என்னுடைய அணுகுமுறை மாறிப்போனது. எதையும் கேள்வி கேட்டுப் பழகவேண்டும், புரிதலுடன் ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்கிற மனப்பான்மை உருவானது. +2 முடிவுகள் வந்த தினத்தை மறக்கமுடியாது. பாராட்டுகள், மீடியா பேட்டிகள் என பரபரப்பாக இருந்தேன். மீடியாவில் வந்ததால் வெளியே சிலர் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார்கள். அந்தப் புகழெல்லாம் சில நாள்கள்தான். அதன்பிறகும் அதே பெருமையை வைத்து எல்லா இடங்களிலும் சலுகை கிடைக்காது.

இப்போது எல்லோரும் என்ஜினியரிங்தான் படிக்கிறார்கள். நமக்கு என்ன விருப்பம் என்று கண்டுபிடித்து அதில் ஈடுபாடு காட்டவேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரே நேரத்தில் முயற்சி செய்வதற்குப் பதிலாக, எது உங்கள் விருப்பம், எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்து உங்கள் முயற்சிகளை ஓர் இலக்கு நோக்கி நகர்த்தவேண்டும். உதாரணமாக, +2 சமயத்தில், ஐஐடி அல்லது அரசுத் தேர்வு போன்றவற்றில் எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதில் சரியாக முடிவெடுக்கவேண்டும்.

Source….ச.ந. கண்ணன் in http://www.dinamani.com

Natarajan

This Day …May 6 1968…in Science…Neil Armstrong’s Close Call…

 

May 6, 1968. More than a year before he became the first human to set foot on the moon, Neil Armstrong had a narrow escape in the Lunar Landing Research Vehicle (LLRV) at Ellington Air Force Base near Houston. The LLRV had been designed to simulate a descent to the moon’s surface, and all the lunar astronauts trained in it. That day, while Armstrong was piloting, a leaking propellant caused a total failure of his flight controls and forced an ejection.

Armstrong was fine. He bit his tongue hard during his landing by parachute, but otherwise was uninjured. Airspacemag.com described this encounter between Armstrong and another astronaut later that day:

… astronaut Alan Bean saw Armstrong that afternoon at his desk in the astronaut office. Bean then heard colleagues in the hall talking about the accident, and asked them, ‘When did this happen?’ About an hour ago, they replied.

Bean returned to Armstrong and said, ‘I just heard the funniest story!’ Armstrong said, ‘What?’

‘I heard that you bailed out of the LLTV an hour ago.’

‘Yeah, I did,’ replied Armstrong. ‘I lost control and had to bail out of the darn thing.’

Bean later recalled: ‘I can’t think of another person, let alone another astronaut, who would have just gone back to his office after ejecting a fraction of a second before getting killed.’

No doubt … Armstrong had the right stuff!

Bottom line: On May 6, 1968 – more than a year before his famous first moonwalk – Neil Armstrong narrowly escaped disaster while training in the Lunar Landing Research Vehicle (LLRV).

source….www.earthsky.org

Natarajan