human
சஷ்டி கவசம் பிறந்த கதையை தெரிஞ்சுக்கோங்க! …
Source.. Valaiyapettai R. Krishnan in http://www.vikatan.com
Natarajan
உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிந்த பெரும்பாலான இந்து மக்கள் இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் தினமும் ஒலிக்கும் திருமுருகனின் தெய்வீகத் தமிழ்ப்பாடல் அது. படிப்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் மந்திர மறை நூல்! அது என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே!
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட…
என்று தொடங்கி கேட்கும் இடங்களிலெல்லாம் நம்மைத் திரும்ப உச்சரிக்கவைக்கும்; உள்ளத்திலும் உடலிலும் அதிர்வு தரும் ஆற்றல் மிக்க அழகு முருகனின் அருந்தமிழ்ப் பாமாலை. அதுதான் அனைவரும் அறிந்த கந்தர் சஷ்டி கவசம். இதனைப் பாடியவர் தேவராய சுவாமிகள் என்னும் அருளாளர். அவர் இக்கவசத்தைப் பாடிய பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.
ஒருமுறை, பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் சென்றார் தேவராயர். மலையைச் சுற்றி கிரிவலம் வந்தார். அங்குள்ள மண்டபங்களில் உடல்நோயால் பீடிக்கப்பட்டவர்கள். மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற் றோர் எனப் பலர் அழுவதும் அரற்றுவதும் கண்டு மனம் வருந்தினார். அவர்கள் அனைவரும் நலம்பெற ஞானபண்டிதன் வழிகாட்ட வேண்டும் என்று மனத்தில் உறுதிகொண்டார். பழநியாண்டவர் கோயில் மண்டபத்தில் துயில் கொண்டார். அன்றிரவு அவரது கனவில் பழநியப்பரமன் பிரசன்னமானார்.
‘உன் எண்ணம் ஈடேற அருளினோம்.பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகிலுள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு!’’ என்று ஆசியளித்து கந்தவேள் மறைந்தார்.
உடனே பரவசத்துடன் எழுந்தார் தேவராயர். ‘‘அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!’’ என்று ஆடிப்பாடி மகிழ்ந்தார். மயில்மேல் வலம் வரும் அயில் வேலனைப் போற்றுவோர்பால் மறலியும் அணுகமாட்டான் என்று முருகன் திருவருளை வியந்து போற்றி பாமாலை சூட்டியருளினார். அதுதான் 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம் என்னும் புகழ்பெற்ற தோத்திரம்.
பாலதேவராய சுவாமிகள்
கந்தர் சஷ்டி கவசம் பாடிய தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர், அவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை என்றும், அவர் கணக்கர் வேலை பார்த்தவர் என்றும் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.
வீராசாமிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாமல் முருகன் திருவருளால் தேவராயர் பிறந்தார். நன்கு கல்வி கற்று வியாபார நிமித்தமாக பெங்களூரு சென்று அங்கு தமது வணிகத் தொழிலை மேற்கொண்டார். திருவாவடுதுறை ஆதினத்தில் பெரும் புலவராகத் திகழ்ந்த திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பெங்களூர் வந்தபோது தேவராயர் அவரைத் தமது இல்லத்துக்கு அழைத்து உபசரித்து மகிழ்ந்தார்.
பிள்ளையவர்களிடம் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாம் இயற்றிய கவிதைகளை மகாவித்வானிடம் காட்டி பிழை திருத்தம் செய்துகொள்வாராம். தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேட மலை மாலை முதலிய நூல்களை தேவராயர் இயற்றியதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் எழுதியுள்ள மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வரலாற்றில் தேவராயர் அவரது மாணவர் என்பதற்கான குறிப்பு எதுவும் காணப்பெறவில்லை.
சஷ்டிக்கவசம் பாடப்பட்டது எந்த ஊரில்?
தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார் என அறிய முடிகிறது. தற்போது அனைவரும் பாராயணம் செய்யும் கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது என்று கூறிகிறார்கள். ஆயினும் இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் ‘பழநிமலையின் மீது’ கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறு குழந்தை வடிவாகிய முருகப் பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்’ (பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்று பாடியுள்ளார். எனவே இக்கவசம் பழநியில் பாடப்பெற்றது என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றையும், இவ்வரிகளையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.
மேலும் ‘எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய் (156, 157) மைந்தன் என்மீது உன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்! (198, 199) எனைத்தடுத்து ஆட்கொள் எந்தனது உள்ளம் மேவிய வடிவுறும் ‘வேலவா போற்றி’ (227,228) என்ற வரிகள் மூலம் பழநிப் பரமன் ஆட்கொண்டு இக்கவசம் பாட வைத்ததை உறுதியாகக் கூறலாம். இப்பாமாலையை சிரகிரி எனப்படும் சென்னிமலையில் அரங்கேற்றியதாகச் சிலர் கூறுவர். ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் காணப்பெறவில்லை.
கவலைகள் தீர்க்கும் கந்தசஷ்டி கவசம்
இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறு முறை ஓதி ஜபம் செய்து திருநீறணிய எல்லா நோயும் நீங்கும்; நவக்கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்வர்; என்றும் இன்பமுடன் வாழ்வர் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் தேவராயர்.
‘சரவணபவ’ எனும் திருநாமம் இந்த கந்தர்சஷ்டி கவசத்தின் மூல மந்திரமாகும். இந்நூலின் முதல், இடை, கடை (1, 16, 162, 237) பகுதிகளில் இந்த மூலமந்திரத்தைப் பொருத்தி இதனைப் பாடியுள்ளார் என்று கருத முடிகிறது. முருகனடியார்கள் அனைவரும் விரும்பிப் படிக்க வேண்டும் என்பதற்காக வள்ளியம்மையாரின் குழந்தையாகிய தேவராயன் இயற்றியதாகக் (கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை) குறிப்பிடுகிறார். கவசத்தின் ஒவ்வோர் அடியும் கந்தசுவாமியின் திருக்கையிலுள்ள வேலைப் போன்றது.
ஞானாசாரியார் ஒருவரின் மூலம் அந்த அடிகளின் உண்மைப் பொருள்களைத் தெளிவாக உணரலாம். உடல், உள்ளம், உயிர் அனைத்துக்கும் வேலே கவசமாக உள்ளது. கந்தர் சஷ்டி கவசம் மந்திர மறை நூல் என்பது, பாராயணம் செய்து பலன் அடைந்தவர்களது அனுபவ உண்மையாகும்.
படித்து ரசித்தது ….நீங்களும் படித்து ரசிக்க …!
Music composer Shri K.V. Mahadevan’s son was missing for quite some time. His wife asked Tamil Poet Vaali whether he can can take her to Kanchi Mahaswamigal for Darshan. Vaali took them both to Thenambakkam where Periyava was camping. Smt Mahadevan fell at Paramacharya’s feet and cried, “Will I ever see my son again?”.
Periyava looked at her for less than a minute and then turned His attention to other devotees. Smt Mahadevan was disappointed that Swamigal did not tell her anything about her son. Vaali consoled her and they returned to Madras.
ஆண்டுகள் முன்னம்
ஆரியாம்பாள் ஈன்றனள் — ஓர்
அழகு மதலை; அவள் –
அவ்வாறு ஈன்றெடுத்தது — அவ்
ஆதிமுதலை; அதைத்தான்
ஆதிசங்கரர் ஆக்கியது — ஓர்
ஆற்று முதலை!
காலடி பிறந்தவன்
காலடி பதிந்திடாத
நாலடி — இந்த
நாட்டினில் இல்லை; திரு –
மாலடி போற்றி — அவன்
மொழிந்த பஜகோவிந்தம் போல்
நூலடியொன்று — பிற
நூலோர் ஏட்டினில் இல்லை !
‘அவன்தான் –
இவன்;
இவன்தான்
அவன்!’
எனும்படி — இங்கு
எழுந்தருளினான்….
காஞ்சி –
காமகோடி — ஸ்ரீ
சந்திர சேகரேந்திர –
சரஸ்வதி; அந்த
இமயநதிக்கு இணையான — ஒரு
சமய நதி!
துவராடை தரித்த
திருவாசகத்தை; இரு
கால்கொண்டு — ஒற்றைக்
கோல்கொண்டு — இப்
படிமிசை உலவிய — அத்வைதப்
பெருவாசகத்தை;
கயிலைநீங்கி காஞ்சிவந்த — ஞான
வெயிலை; மன்பதையின் –
அவத்தைப் போக்க
பவத்தைப் போக்க –
தவத்தைப் புரிந்த சிவத்தை;
அரிசிப் பொறி
அருந்தி –
அஞ்சு பொறி
அவித்த….
நுழைபுலம் மிக்க — ஒரு
நூற்றாண்டுக் கிழவனை; நம்
நெஞ்சை — ஒரு
நஞ்சை நிலமாக்க — விழி
நாஞ்சில் கொண்டு
நாளும் உழுத உழவனை;
அரசுமுதல் ஆண்டிவரை –
அறியும் ‘பெரியவாள்’ என்று;
அழுக்கு மனங்களில்
அப்பிக் கிடக்கும் –
அவலப் புதர்களை
அரியும் பெரிய வாள் என்று!
– கவிஞர் வாலி
Source…input from a friend of mine
Natarajan
மீனாட்சி அம்மாள்: சமையல் குறிப்புகளின் முன்னோடிக் கலைஞர்!
இது என்ன அநியாயம்? சமையல் கலையைப் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்ள வேண்டுமா? சமையல், பெண்களின் இயல்பான குணங்களில் ஒன்று என்றுதானே நினைத்திருந்தோம். சமையல் தெரியாத பெண்களும் இருக்கிறார்களா என்று அதிர்ந்துபோனார்கள் அன்றைய மக்கள். 70 ஆண்டுகளுக்கு முன்பு சொப்பு வைத்து விளையாடும் பருவத்திலேயே சிறுமிகள், சமையலைக் கற்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படிச் சமையலைக் கற்றவரில் ஒருவர்தான் மீனாட்சி அம்மாள்.
19 வயதில் திருமணம். 22 வயதில் கணவரை இழந்தார். தனியாளாகக் கைக்குழந்தை, மச்சினர், மாமியார் என்று குடும்பத்தைப் பராமரித்துவந்தவர், சமையலிலும் பிரமாதப் படுத்தினார். மீனாட்சி அம்மாளின் கைப்பக்குவத்துக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் இருந்தது. இந்தியாவின் வெவ்வேறு பாகங்களில் பரவியிருந்த அவரது உறவினர்கள், மீனாட்சி அம்மாளிடம் சமையல் குறிப்புகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் சளைக்காமல் எழுதிக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
இவரது உறவினர் கே.வி.கிருஷ்ண சாமி ஐயர், இப்படி ஒவ்வொருவருக்கும் சமையல் குறிப்பு எழுதிக் கொடுப்பதற்குப் பதில், ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால் எல்லோருக்கும் பயன்படுமே என்று ஆலோசனை வழங்கினார். மீனாட்சி அம்மாளும் புத்தகம் எழுதினார். சமையல் புத்தகம் என்றதும் பலரும் இதை யார் வாங்கப்போகிறார்கள் என்று கிண்டல் செய்தார்கள். பதிப்பகங்கள் எதுவும் புத்தகம் வெளியிட முன்வரவில்லை. தானே புத்தகத்தைக் கொண்டுவர முடிவு செய்தார் மீனாட்சி அம்மாள். தன் நகைகளை விற்றார். தானே புத்தகத்தைப் பதிப்பித்தார்.
1951-ம் ஆண்டு தமிழின் முன்னோடி சமையல் புத்தகம், ‘சமைத்துப் பார்’ வெளிவந்தது. புத்தகத்துக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று மீனாட்சி அம்மாளே எதிர்பார்க்கவில்லை. புத்தகம் குறித்துப் பலரும் சிலாகித்துப் பேச ஆரம்பித்தனர். விற்பனை பெருகியது. திருமணமாகி வெளிநாடு செல்லும் பெண்கள், விசாவை மறந்தாலும் மீனாட்சி அம்மாள் புத்தகத்தை மறக்கவில்லை. ஐந்தே ஆண்டுகளில் தன் புத்தக வருமானத்தை வைத்து, மயிலாப்பூரில் ஒரு வீட்டை வாங்கினார் மீனாட்சி அம்மாள்.
மிளகாய்த் தூள், சாம்பார்ப் பொடி என்று சொன்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்குவத்தில் வைத்திருப்பார்கள். அவற்றால் மீனாட்சி அம்மாளின் சுவையைக் கொடுக்க முடியாது. அதனால் பொடி வகைகள் எல்லாவற்றையும் சேர்த்து அடுத்த புத்தகத்தைக் கொண்டுவந்தார். அதற்கும் அமோக வரவேற்பு! விழாக்கள், திருமணம் போன்றவற்றுக்கு எப்படித் தயாராவது, பண்டிகைக் கால உணவுகள் போன்ற பல விஷயங்களை வைத்து, அவர் மறைவுக்குப் பின்பு மூன்றாவது புத்தகம் வெளிவந்தது.
அதற்குப் பிறகு சமையல் புத்தகங்களைப் பலரும் எழுத ஆரம்பித்தனர். விதவிதமான சமையல் புத்தகங்கள் வெளிவந்தன. சைவச் சமையல், அசைவச் சமையல், வட்டாரச் சமையல், கிராமத்துச் சமையல், மாநிலச் சமையல், அயல்நாட்டுச் சமையல், மைக்ரோவேவ் சமையல், சிறுதானியச் சமையல் என்றெல்லாம் தினுசு தினுசாக உணவு வகைகள் உருவாகிக்கொண்டும், புத்தகங்கள் வெளிவந்துகொண்டும் இருக்கின்றன.
இன்றளவும் ‘சமையல் புத்தகமா?’ என்று இளக்காரமாகப் பார்க்கப்பட்டாலும் விற்பனையில் முதலிடம் சமையல் புத்தகங்களுக்குத்தான். சமையல் குறிப்புகளை இணைப்புப் புத்தகங்களாக வழங்கும்போது பத்திரிகைகளின் விற்பனை கணிசமாக அதிகரிப்பதால் சமையலுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துவருகிறார்கள். தொலைக்காட்சி, யூ டியூப், ஃபேஸ்புக் என்று சமையல் கலை அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்துவருகிறது. அதே போல மீனாட்சி அம்மாளின் புத்தகங்களும் மாற்றத்தை ஏற்று, நவீனமாகிக்கொண்டே வருகின்றன.
மீனாட்சி அம்மாள் காலத்தில் கூட்டுக் குடித்தனமாக இருந்தனர். ஒரு வீட்டில் ஏராளமானவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்ப அளவுகளை அவர் கொடுத்திருக்கிறார். கொட்டைப் பாக்கு அளவு புளி, குழிக் கரண்டி எண்ணெய், ஓர் ஆழாக்கு அரிசி போன்ற பதங்கள் எல்லாம் இப்போது வழக்கில் இல்லை. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கான அளவுகள், தற்காலத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்தி, புத்தகங்களை நவீனப்படுத்தி, கொண்டுவந்திருக்கிறார் அவரது பேத்தி ப்ரியா ராம்குமார்.
“சமைத்துப் பார் ஆங்கிலத்தில் வெளிவந்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ், ஆங்கிலம் தவிர, மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் புத்தகங்கள் கொண்டுவந்தோம். நாங்கள் விளம்பரம் எதுவும் செய்வதில்லை. வாங்கிப் பயன்படுத்தியவர்களின் வாய்மொழி மூலமாகவே 65 ஆண்டுகளாக விற்பனையில் முன்னிலையில் இருக்கின்றன. இதுவரை 45 பதிப்புகளைக் கண்டுவிட்டன. அடுத்து மின்புத்தகங்களாகக் கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறோம்” என்கிறார் ப்ரியா ராம்குமார்.
“சித்திரம், சிற்பம், சங்கீதம் போல சமையலும் உயரிய கலை. பல வண்ணங்களைக் குழைத்து, அற்புதமான சித்திரத்தைத் தீட்டுவது போல பல பொருட்களைச் சேர்த்து, பக்குவப்படுத்தி, ஒப்பற்ற உணவுப் பண்டத்தை உருவாக்குகிறார்கள் சமையல் கலை வல்லுனர்கள்” என்று சொன்ன மீனாட்சி அம்மாள், சமையல் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பதிப்பாளராwகவும் வெற்றி பெற்று, பிறருக்கும் வழிகாட்டியிருக்கிறார்.
மனிதர்களுக்குப் பசியும் ருசிக்கான தேடுதலும் இருக்கும் வரை சமையல் கலைக்கான தேவையும் இருந்துகொண்டே இருக்கும். காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டுவரும் மீனாட்சி அம்மாளின் புத்தகங்கள், இன்னும் பல தலைமுறை களுக்குச் சமையல் கலையைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்!
Source….S.Sujatha…in http://www.tamil.thehindu.com
Natarajan
டிரான்ஸ் சைபீரியன் ரயில்வேயின் நூறு வயது….!!!

இந்த ஆண்டு (2016) டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே பயன்பாட்டுக்கு வந்த நூறாவது ஆண்டாகும். இந்தியாவிற்குக் கடல் வழி கண்டறிந்தது, அமெரிக்காவைக் கண்டறிந்தது, சூயல் கால்வாய் வெட்டப்பட்டது போலவே டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே உருவாக்கப்பட்டதும் மிக முக்கியமான நிகழ்வாகும்!
இந்த ரயில்வே லைன் “ரஷ்யாவின் இரும்பு பெல்ட்’ (IRON BELT OF RUSSIA) என்று அழைக்கப்படுகிறது. ரஷ்யாவை ஆண்ட ஜார்ஜ் மன்னர் இரண்டாம் நிகோலஸ் (TSAR NICHOLAS-II) ரஷ்யாவின் மேற்கு எல்லையிலிருந்து கிழக்குக் கோடி வரை ஜார் மன்னர்கள் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிரத்யேகமாகப் பயணிக்க “ஜார் டிரெயின் சேவை’ ஒன்றைத் துவக்க விரும்பினார். ஏனெனில் பெரும்பாலான ரஷ்யர்கள் தங்கள் நாட்டின் கிழக்கு எல்லைக்கு வந்ததே இல்லை! கிழக்கில் வசிப்போர் மேற்கு எல்லைக்கு வந்ததே இல்லை!
காரணம்…,அதன் நீண்ட தொலைவுதான்!
அதையும்விட மிக முக்கிய காரணம் ஒன்று இருந்தது! ஜப்பான், சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஆசியாவை ஒட்டி இருந்த ரஷ்யப் பகுதியை ஆக்கிரமிக்க விரும்பின! எனவே ரஷ்யா ரயில்வே லைன் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! எனவே ரஷ்யப் புவியியல் கூறுகள் அனைத்தும் சர்வே செய்யப்பட்டன.
பிறகு 9-7-1891 ஆம் ஆண்டு ரயில்வே லைன் அமைக்கும் பணி துவங்கப்பட்டது! மாஸ்கோவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் ஆரம்பித்து மேற்கிலிருந்து கிழக்கில் ஒரு கட்டுமானமும், “விளாடிவாஸ்டாக்’கில் இருந்து “கிழக்கிலிருந்து மேற்கு’ நோக்கி ஒரு கட்டுமானமும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன.
ஜார் அரசர் இரண்டாம் நிகோலஸ் அமெரிக்க, மற்றும் இத்தாலி பொறியியல் வல்லுனர்களின் உதவியைக் கோரினார். எண்ணிலடங்கா சிறைக்கைதிகள், மற்றும் உள்ளூர் மக்கள் இம்மாபெரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான “பைகால்’ ஏரியைத் தாண்டி இருப்புப் பாதை அமைப்பது மிகப் பெரும் சவாலாக இருந்தது! ஏனெனில் இது 636 கிலோ மீட்டர் நீளமும் கி.மீ 744மீ ஆழமும் கொண்ட மிகப் பெரிய ஏரியாகும். இந்த ஏரியைச் சுற்றி இருப்புப்பாதை அமைத்தல் என்பது மிகவும் கடினமாகும். எனவே அதிகாரிகள் மற்றொரு யோசனையை செயல்படுத்தினர். ஃபெர்ரீஸ் (FERRIES) எனப்படும் பனியில் செல்லும் படகில் ரயில் பெட்டிகளுடன் மக்களையும் ஏற்றிக் கொண்டு ஏரியின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்வதுதான் அது! கடினமான பனிக்கட்டிகளைக் கூட உடைத்துச் செல்லும் இத்தகைய படகுகள் கடும்பனிக்காலத்தில் (PERMA FROST) காலத்தில் உறைந்து போயின.
எனவே வடகிழக்குச் சைனாவின் மன்சூரியாவில் இருந்து விளாடிவாஸ்டாக்கை அடையும் மற்றொரு வழியைத் தேர்ந்தெடுத்தனர். மன்சூரியாவில் உள்ள “ஹார்பின்’ என்ற நகரத்தின் வழியாக இந்த ரயில் சேவை தொடரப்பட்டது. இந்த ரயில் சேவையின் கட்டுமானம் 1901ஆம் ஆண்டு நிறைவுற்றது.
1904ஆம் ஆண்டு ரஷ்ய ஜப்பானியப் போர் துவங்கும் வரை அனைத்தும் சுமுகமாய் இருந்தன. போர் தொடங்கிய அடுத்த நிமிடமே மன்சூரிய இருப்புப் பாதையின் தடம் ஜப்பானியர்களால் சேதப்படுத்தப்படும் என்பதை ரஷ்ய அரசு தெரிந்து கொண்டது.
எனவே பைகால் ஏரியைச் சுற்றி இருப்புப்பாதை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. உலகக் கட்டுமான வரலாற்றிலேயே சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாக அதிக மக்களை பலியாகக் கொண்டது இந்தப் பணியாகத்தான் இருக்கும்! இந்தக் கட்டுமானத்தில் எத்தனை பேர் பங்கு கொண்டனர் என்பதும் எத்தனை பேர் பலியாயினர் என்பதும் பதிவு செய்யப்படவில்லை! காரணம்…,அத்தனை பேரும் சிறைக்கைதிகள்…,மற்றும் நாடு கடத்தப்பட்டோர் என்பதுதான்!
அட்டைப் பூச்சிகள், கொசுக்கள், வனவிலங்குகள், கடும் குளிர் ஆகிய அனைத்தையும் எதிர் கொண்டு அவர்கள் 33 குகை வழிகளையும் (TUNNELS) 200 பாலங்களையும் அமைத்தனர். இந்த வழித்தடப் பணிகள் 1905ஆம் ஆண்டு நிறைவு பெற்றன. இன்றும் கூட மனிதக் கட்டுமானத்தில் பைகால் ஏரியைச் சுற்றுயுள்ள இந்த வழித்தடம் மிகவும் சிக்கல் நிறைந்ததாகும்! (MOST COMPLICATED DUE TO INHOSPITABLE TERRAIN) ரஷ்யப் பொறியியல் வல்லுனர்களுக்கு அடுத்த சவால் “ஆமுர்’ நதி (AMUR RIVER) வடிவில் வந்தது. அந்நதியின் மேல் பாலம் அமைக்கும் பணி 1908ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் உயரம் 79அடிகள் ஆகும்! மொத்தம் நீளம் 4709 அடிகள். எத்தனையோ இடர்பாடுகளையும், உயிர் பலிகளையும் தாண்டி 1916ஆம் ஆண்டு இப்பணி முழுமையடைந்தது!
1916ஆம் ஆண்டு ஆக்டோபர் 5ஆம் நாள் ஜார் மன்னர் இரண்டாம் நிக்கோலஸ் இந்த வழித்தடத்தை முறைப்படி திறந்து வைத்தார். இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா?
ரஷ்யா கம்யூனிஸ்டுகள் வசம் வந்த பிறகு இதே வழித்தடத்திலேயே, இதே சைபீரியன் ரயிலிலேயே அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்க அழைத்துச் செல்லப்பட்டார்!
டிரான்ஸ் சைபீரியன் ரயில் இறுதியாக நிற்கும் இடம் “விளாடிவாஸ்டாக்’ ஆகும்! ரஷ்யாவின் மிகப் பெரிய துறைமுகமும் இதுவே!
இந்த ரயில்கள் 485 பாலங்களையும், 33 குகைப்பாதைகளையும் கடந்து செல்கின்றன! ஆசியாவையும் ஐரோப்பாவையும் தரை வழியாக இணைக்கும் ஒரே கருவி டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே ஆகும்.
மாஸ்கோவில் தொடங்கி விளாடிவாஸ்டாக் வரை உள்ள மொத்த தூரம் 9288 கிலோ மீட்டர்கள் ஆகும்! மொத்தப் பயண நாட்கள் 7 ஆகும்!
இந்த ரயில் கடந்து செல்லும் ஆமுர் நதிப் பாலம் உலகிலேயே இரண்டாவது நீளமான பாலம் ஆகும்! முதலாம் இடத்தைப் பெறுவது மிசிசிபி நதியின் மீது கட்டப்பட்டுள்ளது.
இதன் வழியில் உலகின் மிக நீளமான குகைப் பாதை ஒன்று உள்ளது. இதன் நீளம் 2.3கி.மீ ஆகும் மற்ற 32 குகைப்பாதைகளைவிட இதுவே மிக நீளமானதாகும்.
Source………www.dinamani.com
Natarajan
“” Burn Ego…Not just Crackers…Be Sweet …not just eat Sweets …Wear New Values…not just new clothes…”
Meet and greet Hearts..Not just People…
Wear new Values ..Not just clothes …
Experience Joy and Peace..Not just Play and Fun…
Light Self Knowledge..Not just Lamps…
BE HAPPY…HAVE A GREAT DAY!
source::::http://debu7370.blogspot.com/
natarajan
பெர்முடா முக்கோண மர்மம்… இதுதான் காரணமா?…
பெர்முடா முக்கோண மர்மம்… இதுதான் காரணமா?
இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் மூலம் அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன. ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது.
பெர்முடா முக்கோணம் என்றால் என்ன ?
வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர் தான் பெர்முடா முக்கோணம். இதை சாத்தானின் முக்கோணம் என்றும் மக்கள் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போவதுதான். பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும் போது திசை காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாகக் கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். அந்தப் பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தைக் கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதன்பின் 1872-ம் ஆண்டு ‘மேரி செலஸ்டி’என்கிற கப்பலும், 1918-ம் ஆண்டு ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்கிற கப்பலும் சில நூறு பயணிகளுடன் காணாமல் போனது.
1945-ம் ஆண்டு பிளைட் 19 வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும்போது காணாமல் போயின. 1949-ல் ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமானது. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிகழ்ந்ததாகப் பதிவாகி இருப்பதால், அது மர்மப் பிரதேசமாகவே திகழ்கிறது.
விமானியின் அனுபவம்
இதுவரை அந்தப் பகுதியில் காணாமல் போன விமானங்களோ, கப்பல்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. அந்தப்பகுதியில் இருந்து தப்பி வந்த புரூஸ் ஹெனன் என்கிற விமானி சொன்ன அனுபவம் தான் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆராய்ச்சிக்கு விதையாக அமைந்தது. அவர் ஒருமுறை மியாமியிலிருந்து பனாமா கால்வாய் வழியாகத் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது தீடீரென்று அவரைச் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றிக் கொண்டே இருந்தது. அவரால் திசையைத் தீர்மானிக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து விமானத்தை இயக்கியவர், மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியைக் கண்டார். 16 கிலோமீட்டர் நீளமான அந்தக்குகை போன்ற மேகக்கூட்டத்தை 20 நொடிகளில் கடந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுதான் ஆராய்ச்சியாளர்களை மேலும் சிந்திக்க வைத்தது.
காரணம் கண்டுபிடிப்பு
சமீபத்தில் பெர்முடா முக்கோணத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு புதிய தியரியை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி, அந்தப் பகுதியில் நீடிக்கும் அதிகப்படியான காற்றும், பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் அழுத்தமும், அறுங்கோண வடிவில் சுழலும் மேகங்கள் 170 மைல் வேகத்தில் ஏற்படுத்தும் காற்று அழுத்தமும்தான் அதற்குக் காரணம் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்தக் காற்றுப்படிமங்கள் கப்பல்களையும், விமானங்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் சக்திவாய்ந்ததாக இருப்பதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து, வானியல் ஆராய்ச்சியாளர் ராண்டி சேர்வெனி குறிப்பிடும்போது, ‘செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், இந்தக் காற்று வடிவங்கள் மிகவும் வினோதமான வடிவில் இருக்கின்றன. இவை ஏற்படுத்தும் வெடிப்புதான் அழுத்தத்துக்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது’ என்றிருக்கிறார்
எப்படியோ இத்தனை ஆண்டு கால மர்மம் ஒருவழியாகத் தெளிவாகி இருக்கிறது.
Source…..மா.அ.மோகன் பிரபாகரன் in http://www.vikatan.com
Natarajan
மார்னிங் டூ ஈவினிங் : சர்வம் டிஜிட்டல்மயம்…!!!
முழுக்க டிஜிட்டல்மயமான இந்த கலர்ஃபுல் யுகத்தில் செல்போனும், இன்டர்நெட்டும் இல்லாமல் ஒரு நாளை ஓட்டுவதுதான் இப்போது ஒருவனுக்கு உச்சபட்சத் தண்டனையாக இருக்கும். இன்றைய ட்ரெண்டி சமூகத்தின் மக்களிடம் டெக்னாலஜியின் வெளிப்பாடு எப்படி இருக்கிறது……………..
என் போனுக்குக் காசு போடணும்’னு பத்து வருசத்துக்கு முன்னாடி யாராவது சொன்னால், நூறு ரூபாய்த் தாளை குறுக்குவாட்டில் மடிச்சு போனுக்குள்ள திணிக்கணும் போலன்னு நினைச்சுருப்போம். போன் லாக் ஓப்பன் ஆக மாட்டேங்குதுனு சொன்னதுக்காக, அதை அப்படியே வாங்கிக் கால் இடுக்கில் உட்கார வெச்சு சுத்தியலால் அடிச்சு பல துண்டாக்கிக் கொடுப்பாரே வடிவேலு. அந்த மாதிரி பேட்டரியைக் கழட்டுவதற்கு, ரெண்டு கையாலும் தூக்குச்சட்டி மூடியைக் கழட்ட முயற்சிப்பது போல போனை இழுத்துக்கொண்டு கிடப்பதும் ஒருகாலத்தில் நமக்கு நடந்திருக்கும். இப்போதெல்லாம் நிகழ்வு அப்படியே தலைகீழ். சின்னக் குழந்தைகளும் கேண்டி க்ரஷ் முதல் க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் வரை வருடக்கணக்காக விளையாடி விளையாடி டயர்டாகிப் போய்க் கிடக்கிறார்கள்.
* முன்னொரு காலத்தில் கம்ப்யூட்டரில், ‘ ஃபைல்ஸ் அனுப்பியாச்சா?’னு யாரிடமாவது கேட்கும்போது ‘பீரோவில் பத்திரமா வெச்சுருக்கேன். எடுத்துட்டு வரவா’னு கேட்டுக் கிச்சுக்கிச்சு மூட்டிய அப்பாவிச் சமூகத்துக்கும், இப்போ ‘வீட்டு விண்டோஸை க்ளோஸ் பண்ணிரும்மா’னு சொன்னாலே ‘அப்பவே சிஸ்டம் ஷட் டவுன் பண்ணிட்டேனே’ எனச் சொல்லும் டெக்னிக்கல் சமூகத்திற்கும் இடையே இருக்கும் ஈஃபிள் டவர் உயர வித்தியாசமே இந்தக் காலம் டிஜிட்டல் யுகமாகிப் போனதற்கான சான்று. கையகலக் கைபேசிக்குள் உலகமே ஒளிந்திருக்கும் விந்தைகள் தெளிவான பின்பு ‘இத்துனூண்டு போனுக்குள்ளேயா இம்புட்டு இருக்கு?’ எனச் சொல்லியபடியே பல் போன கிழவிகளும் காதில் செல்வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
* தனியாக இருப்பதாக நினைப்பதே இப்போதெல்லாம் கையில் மொபைல் இல்லாத தருணங்களிலும், மொபைல் இருந்தும் சார்ஜ் இல்லாத கையறுநிலைகளிலும்தான். யார் எவ்வளவு தொலைவில் இருந்தால் என்ன? கண்காணாத இடத்துக்குக் கண்ணைக்கட்டி கொரியரில் அனுப்பப்பட்டாலும் ‘யாமிருக்க பயமேன்’ எனத் துணை நிற்கின்றன தொலைத்தொடர்பு சாதனங்கள். நவீன கருவிகள் மனிதனைச் சோம்பேறியாக்குகின்றன என ஆங்காங்கே ஆய்வறிக்கைகளில் சொல்லப்பட்டாலும், பள்ளிக்கூடம் போகும் சிறுவர்கள் மெசேஜ் டைப் செய்யும் வேகத்தைப் பார்த்தாலே அந்தக் கருத்து நம் மனதில் ஒரு நிமிடத்தில் உடைபட்டுப் போகும். முடியும்ம்மா…?
பிள்ளையாருக்கு எலி வாகனமானது போல இப்போது நம்மில் பலருக்குப் பேருதவி புரிந்துகொண்டிருப்பது மவுஸோ, ஸ்மார்ட்போனோதான். தூங்கி விழிக்கும்போதே மொபைல் போன், நோட்டிஃபிகேஷன் சத்தத்தோடு வெளிச்ச நட்சத்திரங்களைத் தூவி வரவேற்கின்றன. பல்லைக்கூட விலக்காமல் பெட் காபி சாப்பிடுவது போல் பெட்ஷீட்டுக்குள் புகுந்தபடி, வந்திருக்கும் வாட்ஸ்-அப், ஹைக் மெசேஜ்களுக்கு ரிப்ளைகளைத் தெறிக்கவிடுகிறோம். முதல்நாள் நள்ளிரவில் போட்ட செல்ஃபிக்கு வந்திருக்கும் போட்டோ கமென்ட்ஸ்களுக்கு பதில் கமென்ட்கள் இட்டு மனசைத் தேற்றிக்கொள்கிறோம். பத்து ‘ப்ப்பா..’ கமென்ட்களுக்கு மத்தியில் ஒற்றை ‘ஆசம்’ கமென்ட் தரும் பேரின்பம் ஃபேஸ்புக் வாழ் மக்களுக்கு மட்டுமே புரியும்.
* நல்ல விஷயங்களைப் பகிர வேண்டும்னு நமக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்த விஷயத்தை ‘இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்’ங்கிற பார்த்திபன்-வடிவேலு காமெடிக் கதையாகிக் கடைசியில் ‘பகிரப்படும்’ எனும் வார்த்தையை மட்டும் கப்பெனப் பிடித்துக்கொண்டு நல்ல சேதி, கெட்ட சேதி, நாலு வருசத்துக்கு முன்னாடியே குழிதோண்டிப் புதைச்ச சேதினு எல்லாத்தையும் தோண்டியெடுத்துப் பகிரோ ‘பகீர்’னு ஷேர் பண்ணிக்கிட்டு இருக்கோம். வாய்க்கு வந்த எதையாவது சொல்லிட்டு விவேகானந்தரையும், ஐன்ஸ்டீனையும் இழுத்துத் தெருவில் விட்டுக்கிட்டு இருக்கோம்.
* போஸ்ட் பிடிக்கலைனா கம்முனு அடுத்த பேஜை ஸ்க்ரோல் பண்ணிப் பார்த்துப் போய்க்கிட்டே இருப்போம்ல, வாழ்க்கையிலும் அதே மாதிரி நல்லது, கெட்டதுனு தினந்தினம் ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடக்கும். நமக்குப் பிடிச்ச விஷயங்களை மட்டும் சிம்பிளா லைக் பண்ணிட்டு, சில நேரங்களில் ஹார்ட்டின் சிம்பள் போட்டு அபரிமிதமான விருப்பத்தைத் தெரிவிச்சுக்கிட்டு மகிழ்ச்சியாக வாழப் பழகிக்கணும். விரும்பத்தகாத நிகழ்வுகளை நிறுத்தி நிதானமாகப் பார்த்து உணர்ச்சிவசப்படுறதுக்குப் பதிலா அப்படியே அப்பீட்டாகி அடுத்த நல்ல நிகழ்வுக்கு ‘கிருட்டுக் கிருட்டு’னு ஜம்ப் பண்ணி ட்ராவல் ஆகிட்டே இருக்கணும்னு சுவாமி மார்க்கானந்தா தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற தன்னோட டைம்லைன்ல எழுதி வெச்சுருக்கிறதா ஒரு ஷேரிங் ஸ்டேட்டஸ் சொல்லுது.
* ஒரு டேப்லட் அளவு மூஞ்சியில் ஒன்பது ஃபில்டர் அப்ளிகேஷன்களைப் போட்டுப் படுத்தியெடுத்து ப்ரொஃபைல் பிக்சரை மாத்திட்டு அதை லைக் பண்ணச் சொல்லி ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இருக்கும் மூவாயிரம் பேருக்கும் ப்ரைவேட் சாட்டில் லிங்க் அனுப்பி ‘ஆதரவு தாரீர்!’ எனக் காலில் விழுந்து போட்டோக்கள் போட்டாலும் தானாகக் கிடைக்கிற முப்பது லைக்தான் நம்ம டைம்லைன்ல ஒட்டும். நாம் செய்யும் சில பல நல்ல விஷயங்களுக்கு ( நல்ல விஷயமா அப்படின்னா…?) ப்ரோமோஷன் கொடுத்து அடுத்தவர்களையும் அதைச் செய்யுமாறு ஊக்குவிக்கணும். அதுக்குக் கிடைக்கிற வெகுமதியை எப்படி இருந்தாலும் மனதார ஏத்துக்கணும். பில்டப் பண்றமோ, பீலா விட்றமோ… அது முக்கியமில்லை. நாம என்ன பண்ணினாலும் இந்த உலகம் நம்மை உத்துப் பார்க்கணும். அவ்ளோதான்.
சங்ககாலத்துல புறா விடு தூது, நாரை விடு தூதுன்னு பறக்கிற ஒரே காரணத்துக்காக பறவைகளோட காலில் லெட்டரைச் செருகி நாடுவிட்டு நாடு இதயங்களை அனுப்பி வாயில்லா ஜீவன்களை வதக்கி, வெயிலில் பறக்கச் சொல்லிப் பாடாய்ப்படுத்தியதெல்லாம் பழைய கதை. போகிறபோக்கில் பொண்ணைப் பார்த்தோமா பெயரைக் கேட்டோமா?, ஃபேஸ்புக் ஐடியைத் தேடினோமா? ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தோமா? ப்ரோபோஸ் பண்ணினோமா?னு பலகட்டப் பரிமாற்றங்களையும் ஓவர் நைட்டிலேயே முடிச்சு அடுத்த நாள் பிக்கப் ஆகி, அதற்கடுத்த நாள் ப்ரேக்-அப் ஆனாலும் அசால்ட்டா அன்ஃப்ரெண்ட் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிடுவான் டிஜிட்டல் உலகத்து இளைஞன்.
* 4ஜி போன் இருக்கு. வீடியோ காலிங் ஆப்ஷனும் இருக்கு. பிறகென்ன, எல்லோருக்கும் கான்ஃபரன்ஸ் கால்ல மீட்டிங்கைப் போட்டுப் பத்துமணிக்கு மேல் சியர்ஸ் சொல்லிப் பார்ட்டியை ஆரம்பிக்க வேண்டியதுதான். தூரத்து நண்பனின் அருகில் இருக்கும் கடலை பர்பியையும், மிக்சர் பாக்கெட்டிலும்தான் நினைத்தவுடன் கைவைத்து அள்ள முடியாது. மற்றபடி, ஸ்கைப்பிருக்க ஜாலிக்கும் அரட்டைக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. வெட்டியாய்க் கிடக்கும் வாட்ஸ்-அப் குரூப்பில் அவ்வப்போது பழங்கதை பேசி சாவடிக்குபோது, மகான் சசிகுமார் ‘மூடிக்கிட்டுப் படுங்கடா நொன்னைகளா…’ எனச் சொன்னதைப்போல… ‘குரூப்பைக் கலைச்சுத் தொலைங்கடா…’ எனக் கதறும் தூரம் தொலைவில் இல்லை.
ஆகவே மக்களே… எல்லாவற்றையும் டிஜிட்டல் யுகத்திற்கேற்றார்போல் மாற்றிக்கொண்டு ஆண்ட்ராய்டு, விண்டோஸ் ஜெட்களில் பறந்துகொண்டிருக்கும் நாம் எதிரில் வருபவர்களை எனிமிகளாய்ப் பார்த்து எரிக்கும் சிவப்பு மூஞ்சி எமோட்டிகான் போட்டுத்தான் கடந்து செல்வோம் என அடாவடித் திட்டங்களாகவே வைத்திருந்தால் எப்படி? சின்னதாய் ஒரு ஸ்மைலி போடலாமே ஃப்ரெண்ட்ஸ்!
– விக்கி….www.vikatan.com
Natarajan
வாரம் ஒரு கவிதை … “மனம் என்னும் மாயப் பேய் !!!”
A train journey and two names to remember….
Of two co-travellers who surprised the writer with their graciousness, 24 years ago
It was the summer of 1990. As Indian Railway (Traffic) Service probationers, my friend and I travelled by train from Lucknow to Delhi. Two MPs were also travelling in the same bogie. That was fine, but the behaviour of some 12 people who were travelling with them without reservation was terrifying. They forced us to vacate our reserved berths and sit on the luggage, and passed obscene and abusive comments. We cowered in fright and squirmed with rage. It was a harrowing night in the company of an unruly battalion; we were on edge, on the thin line between honour and dishonour. All other passengers seemed to have vanished, along with the Travelling Ticket Examiner.
We reached Delhi the next morning without being physically harmed by the goons, though we were emotionally wrecked. My friend was so traumatised she decided to skip the next phase of training in Ahmedabad and stayed back in Delhi. I decided to carry on since another batchmate was joining me. (She is Utpalparna Hazarika, now Executive Director, Railway Board.) We boarded an overnight train to Gujarat’s capital, this time without reservations as there wasn’t enough time to arrange for them. We had been wait-listed.
We met the TTE of the first class bogie, and told him how we had to get to Ahmedabad. The train was heavily booked, but he politely led us to a coupe to sit as he tried to help us. I looked at the two potential co-travellers, two politicians, as could be discerned from their white khadi attire, and panicked. “They’re decent people, regular travellers on this route, nothing to worry,” the TTE assured us. One of them was in his mid-forties with a normal, affectionate face, and the other in his late-thirties with a warm but somewhat impervious expression. They readily made space for us by almost squeezing themselves to one corner.
They introduced themselves: two BJP leaders from Gujarat. The names were told but quickly forgotten as names of co-passengers were inconsequential at that moment. We also introduced ourselves, two Railway service probationers from Assam. The conversation turned to different topics, particularly in the areas of History and the Polity. My friend, a post-graduate in History from Delhi University and very intelligent, took part. I too chipped in. The discussion veered around to the formation of the Hindu Mahasabha and the Muslim League.
The senior one was an enthusiastic participant. The younger one mostly remained quiet, but his body language conveyed his total mental involvement in what was being discussed, though he hardly contributed. Then I mentioned Syama Prasad Mookerjee’s death, why it was still considered a mystery by many. He suddenly asked: “How do you know about Syama Prasad Mookerjee?” I had to tell him that when my father was a post-graduate student in Calcutta University, as its Vice-Chancellor he had arranged a scholarship for the young man from Assam. My father often reminisced about that and regretted his untimely death [in June 1953 at the age of 51].
The younger man then almost looked away and spoke in a hushed tone almost to himself: “It’s good they know so many things …”
Suddenly the senior man proposed: “Why don’t you join our party in Gujarat?” We both laughed it off, saying we were not from Gujarat. The younger man then forcefully interjected: “So what? We don’t have any problem on that. We welcome talent in our State.” I could see a sudden spark in his calm demeanour.
The food arrived, four vegetarian thalis. We ate in silence. When the pantry-car manager came to take the payment, the younger man paid for all of us. I muttered a feeble ‘thank you’, but he almost dismissed that as something utterly trivial. I observed at that moment that he had a different kind of glow in his eyes, which one could hardly miss. He rarely spoke, mostly listened.
The TTE then came and informed us the train was packed and he couldn’t arrange berths for us. Both men immediately stood up and said: “It’s okay, we’ll manage.” They swiftly spread a cloth on the floor and went to sleep, while we occupied the berths.
What a contrast! The previous night we had felt very insecure travelling with a bunch of politicians, and here we were travelling with two politicians in a coupe, with no fear.
The next morning, when the train neared Ahmedabad, both of them asked us about our lodging arrangements in the city. The senior one told us that in case of any problem, the doors of his house were open for us. There was some kind of genuine concern in the voice or the facial contours of the otherwise apparently inscrutable younger one, and he told us: “I’m like a nomad, I don’t have a proper home to invite you but you can accept his offer of safe shelter in this new place.”
We thanked them for that invitation and assured them that accommodation was not going to be a problem for us.
Before the train came to a stop, I pulled out my diary and asked them for their names again. I didn’t want to forget the names of two large-hearted fellow passengers who almost forced me to revise my opinion about politicians in general. I scribbled down the names quickly as the train was about to stop:Shankersinh Vaghela and Narendra Modi.
I wrote on this episode in an Assamese newspaper in 1995. It was a tribute to two unknown politicians from Gujarat for giving up their comfort ungrudgingly for the sake of two bens from Assam. When I wrote that, I didn’t have the faintest idea that these two people were going to become so prominent, or that I would hear more about them later. When Mr. Vaghela became Chief Minister of Gujarat in 1996, I was glad. When Mr. Modi took office as Chief Minister in 2001, I felt elated. (A few months later, another Assamese daily reproduced my 1995 piece.) And now, he is the Prime Minister of India.
Every time I see him on TV, I remember that warm meal, that gentle courtesy, caring and sense of security that we got that night far from home in a train, and bow my head.
(The author is General Manager of the Centre for Railway Information System, Indian Railways, New Delhi. leenasarma@rediffmail.com)
Keywords: Indian Railways, Shankersinh Vaghela, Narendra Modi, memories of Narendra Modi, Modi travelling by train
Source….
- LEENA SARMA in http://www.thehindu.com
- Natarajan











