Chennai floods have passed, but this city crew continues its clean up …

Image: Chennai Trekking Club volunteers

More than 30 young people were assembled on the banks of the Adyar River next to Surya Nagar in Kotturpuram early in the morning on March 2. Armed with orange gloves and white rags, they were on a cleaning mission as part of the Chennai Trekking Club’s efforts to clear the area of all non-biodegradable waste.

According to Peter Van Geit (44), the founder of the Chennai Trekking Club, “This is the 14th session of the cleanliness drive that we are carrying out in the city. The waste that is seen on these banks has not been dumped by the locals but has been washed in during the floods. There were thick layers of garbage here but now it has reduced as we have been cleaning this place for the past two weeks.”

On the other side of the river, heaps of garbage still dot the bank, and the river runs an alarming black colour. “We can reach the other side of the river but the land is too steep for us to clean it up. The water is black in color as many illegal sewage connections are connected to the river,” said Peter.

Most of the waste that can be seen on the slope consist of cloth, glass bottles, plastic bags and other household trash. Peter and his team of volunteers have been gathering together all the non-biodegradable waste for transportation to the common dumping ground in Pallikaranai by trucks of the Chennai Corporation. –

The Chennai Trekking Club began the cleaning drive in the city two months ago, in the aftermath of the Chennai floods. “We started the relief work in different places like Cuddalore and Pulicat. Many slums were in a very bad condition and all the drainage water was inside their homes. We were helping them out in Cuddalore and Pulicat. Later, we decided to start cleaning near the Adyar and Cooum rivers in Chennai.”

The cleaning drive came about as a result of a shared passion among the club’s members for the environment, says Peter. “The Chennai Trekking club carries out trekking trips to beautiful natural locations like virgin forests, mountain ranges, rivers or lakes. Nature is very close to our hearts. So that’s where we started. It also helps to create awareness and reach out to thousands of people and sensitizing people about the issues.”

Building awareness, Peter feels, is an urgent task, as waste disposal is a crucial problem for Chennai. “There are 6000 tonnes of garbage which leaves the city every single day. Most of it ends up in water bodies, rivers and the ocean, which are our lifelines. Chennai has the highest per capita waste generation in the country. There is no segregation of waste in the city and all of it is accumulated in Pallikaranai, one of the few wetlands remaining in India. 90% of our garbage footprint can be reduced immediately by segregating dry (recyclable) and wet (compostable) waste at our home.” –

For the volunteers, many different reasons have drawn them to the initiative. Roopa, a doctor said, “I joined this initiative to help people in cleaning the place but it has changed many things for me. Now, I go home and try keeping the place clean and segregate the waste.”

Bensh, an engineer, said that he comes from an agriculture background and was drawn to an earlier tree plantation initiative. He later joined the cleanliness drive as he thinks it is the social responsibility of the people to do such things. For Mohan, it is about making new friends and enjoying time spent usefully in cleaning such places.

In the past, the group has carried out cleanliness drives in Chitra Nagar, Thiruvanmiyur, Pallaikarnai and few tree parks.

Peter Van Geit began the Chennai Trekking Club about eight years ago. “I’m a very active person in sports. I wanted a platform to connect. I set up a website and started sharing stories and images of trips and in some time people started joining me for cycling, swimming, running and trekking trips.” Now, the Chennai Trekking Club has more than 27000 members.

Besides their current cleanliness drives, the Club also carries out tree-planting initiatives, an annual coastal clean-up drive, workshops on nature, restoration of historical sites and organic farming. It also organizes trekking trips on weekends, swimming classes, triathlons and marathons.

Inspired by their example? Surely a task as large as cleaning up the city could use many more volunteers.

Source…..www.thenewsminute.com

Natarajan

 

இந்த வாரக் கவிதை….”காத்திருப்பு” ..!!!

 

காத்திருப்பு ….
……….
அன்னையின் கருவறையில் காத்திருந்து  இந்த மண்ணில்
பிறந்த நேரம் முதல்  முடியாத ஒரு தொடர்கதை  மனிதனின்  காத்திருப்பு !
நம் வாழ்வின் ஒவ்வொரு திருப்புமுனையும்  காத்திருப்பின் முடிவில்
அரும்பும் புது மலர்களே … புன்னகைப் பூக்களே !!!
நல்லதே நடக்கும்  நாளைக்கு என எதிர் வரும் நாளுக்கு
 நல்வரவு சொல்லி நம்பிக்கை யுடன் காத்திருக்கும் நமக்கு
இன்றைய பொழுதின் இன்னல் யாவும் பகலவன் முன் பனி போல்
மறையும் !
நாளை நமதே …இது   நம் நம்பிக்கை!  காத்திருப்போம் நாம்
ஒரு வளமான ஒளி மிகு பாரதம்  காண !
இந்த காத்திருப்பு நிச்சயம் ஒரு சுமையல்ல நமக்கு…அது ஒரு
சுகமான  சுவையான முன்னோட்டமே !
Natarajan

The Extraordinary Story of Janarthanan, a Mouth Painter Who Exemplifies Grit and Determination…

Janarthanan is a 24-year-old mouth artist. He lost both his hands in a devastating accident at the age of eight and has been facing each day like a challenge since then. He has won more than 150 prizes in painting competitions since 2003, including two national awards. This is his story of determination and grit, narrated with his beautiful art.

“People always feel that they can’t do something or the other because they concentrate on a lot of negativity. But remember how we used to play many different games as children? We would focus on something – a puzzle to solve or a game to finish, and be completely positive that we will be able to achieve success. If we could think that way as kids, why can’t we have the same attitude as adults? One just has to feel positive,” says Janarthanan, a young man who lost both his hands and a leg after an accident when he was 8 years old.

Today, this Chennai resident is an accomplished mouth painter and has won over 150 prizes at different painting competitions

Mouth Painting

Janarthanan

It was March 4, 2000 – just another day for young Janarthanan who returned home after school and went to the terrace to play with his friends.

“I found a seven feet long iron rod on the terrace and started playing with it. I was spinning it while standing near the edge of the terrace and didn’t notice a high tension electric line adjacent to the building. The rod suddenly came in contact with the line,” recounts Janarthanan.

He fainted due to the electric shock and the nearest transformer burst into flames. Hearing the noise, his parents and neighbours rushed to the spot to find the little boy burnt and unconscious. He was immediately taken to a nearby private hospital but the doctors there had never seen such a case. Janarthanan had suffered 99% burns and they didn’t know how to treat him. So his father was advised to take him to the Government Stanley Hospital. A group of 13 doctors, headed by a child specialist named Dr. Seeniraj, treated Janarthanan.

As the injuries were very deep, they had to amputate his right hand up to his shoulders, left hand up to the elbow, his left leg till the knee, and the toes of his right foot.

Mouth Painting

His family

“I was cured after eight months and eight operations. Dr. Seeniraj told my father that this child has got a second chance and it means that he will achieve something great in life. It gave my parents a lot of hope,” smiles Janarthanan.

He asked his doctor a simple question during the recovery period – “How will I go to school after all this? How will I go normally, like I used to go earlier?” And the even simpler answer to this question changed his life.

“The doctor just told me that he knows many people who write with their mouth, and I should also try. I started trying that evening only. And kept practicing for days till I finally succeeded,” he says.

Mouth Painting

After his treatment, Janarthanan went to the Government Institute of Rehabilitation Medicine in Chennai to get a prosthetic leg. His family had spent a lot of money on his treatment by then, and this was the maximum they could afford. Soon, he started walking, after fighting immense pain with his unbeatable determination during the practice sessions.

All this while, Janarthanan also continued to practice writing with his mouth. One day, he saw his mother drawing some flowers in a notebook. It struck him then that he could try drawing and painting as well. So he did.

And after several days of hard work, he succeeded at that too – painting with poster and water colours.

Mouth Painting

This was when some people at the rehabilitation centre advised him that he should participate in painting competitions because his work was so impressive.

Mouth Painting

He writes, draws and paints with his mouth

“Earlier, I used to feel very shy and bad about going out. But when I did finally participate in one competition, I ended up winning the first prize. It really encouraged me. Everyone was talking about my victory and there were posters about my recovery at the hospital to encourage other patients like me. Every time I saw those posters, I used to get motivated to participate in more competitions,” says Janarthanan.

He practiced his art himself and never joined any training centre to learn painting or drawing. Since his first victory, he has participated in many big and small events, winning in most of them.

Mouth Painting

The first time he participated in a national level competition was in 2005, through Bal Bhawan in Chennai. The competition was held at three levels – zonal, district and state.

Janarthanan went on qualifying at each level to finally reach the finals, which were organized in Delhi.

Mouth Painting

“I didn’t participate with children with physical disabilities. The competition was for everyone, and it was really tough. A few months after the event they sent me a letter saying that I was selected for the National Award and had to go to the Rashtrapati Bhavan to receive it. I didn’t expect anything like that, and it was a priceless moment. I met Dr. APJ Abdul Kalam. ‘You should be a role model for others,’ he told me. I am still living by his words,” the artist remembers.

He has won more than 150 awards since 2003, and received a recent one from musician A. R. Rahman.

Mouth Painting

Receiving an award from A.R. Rahman

Janarthanan wrote all his exams with his mouth, including his class 10 board exams for which he was granted some extra time.

Mouth Painting

With his desire to become a computer graphics designer, Janarthanan did a course in multimedia, followed by a visual effects course from Loyola College.

After that, he joined a media channel and worked there for three years.

Mouth Painting

With Dr. APJ Abdul Kalam

Currently, 24-year-old Janarthanan is working as a freelancer in the field of film editing and is concentrating on learning more about film direction.

Mouth Painting

He is exploring the filed of film direction

“I face each day like a challenge, and without the support of my parents and sister, I would not have reached so far. I just want to continue being positive and do what I love,” he concludes.

Janarthanan, you really are an inspiration for many. Here’s wishing you the very best for all your future projects.

Source….Tanaya singh in http://www.the betterindia.com

Natarajan

இந்த வாரக் கவிதை ….” ஏழ்மையின் எதிர்பார்ப்பு “

ஏழ்மையின்  எதிர்பார்ப்பு …
……………………
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது …அதனிலும்
அரிது வறுமை இல்லாத  ஒரு நல்ல வாழ்க்கை … பிறக்கும் போது
தெரிவதில்லை  பொருளின் அருமை … பிறந்து வளரும்போது
புரியுதே   வறுமையின் கொடுமை …ஏங்குதே மனசு
புரியாத புதிரான ஏழ்மையை நினைத்து நினைத்து !
பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லையெனில் இங்கு
பிறந்தது என் தவறா ? இது இந்த ஏழையின்  கேள்வி …நானும்
 வாழப் பிறந்தவன்தானே இந்த உலகில்?  …விடை இல்லா வினாவா
 இது ?
பொன்னும் மணியும் வேண்டாம் … “ஒரு பிடி அன்னம் போறும்
எனக்கும் என் பிள்ளைக்கும்” இது ஒன்றுதானே என் அன்றாட தேவை !
தன்  தேவைக்கு மேல் பொருள் தேடி அலையும் மனிதர் பலருக்கும்
அந்த ஆண்டவனுக்கே சிறு பொருள் கொடுத்து பெரும் பொருள் கேட்கும்
மாந்தர் சிலருக்கும்   இந்த ஏழையின் சிறிய தேவை ஒரு
பெரிய கோரிக்கை !
ஒரு பிடி அன்னமே ஏழ்மையின் பெரிய எதிர்பார்ப்பு எனில்
இந்த ஏழை தன் பசிப்பிணி நீங்கி  முகம் மலர்ந்து சிரிப்பது எப்போது ?
அந்த சிரிப்பில் இறைவனை மனிதன்  பார்ப்பது எப்போது ?
Natarajan

This Auto Driver Mortgaged His Auto to Pay for the Medical Expenses of a Passenger…

K Ravichandran, a 48-year-old auto driver from Chennai, mortgaged his auto to pay for the medical expenses of his passenger who suffered a cardiac arrest during the ride.

It happened a few months ago when a passenger boarded his auto to go from Ramapuram to Triplicane. They had reached Mount Road, when the passenger, who was about 57 years old, complained of chest pains. The Good Samaritan took the passenger to a nearby clinic, where he was referred to the Rajiv Gandhi Government General Hospital.

Doctors there informed Ravichandran that the patient had three blocks in his heart’s blood vessels, and they would have to place a pace-maker for his recovery.

chennai auto

PIcture for representation only. Source: Angus/Flickr

On informing his family, the passenger’s son arrived from Kolkata that night. The cost of treatment was about Rs. 1 lakh. They spoke with the hospital’s Dean and got the cost reduced to Rs. 47,000. But his son was left with Rs. 15,000 only after spending on flight tickets.

“I decided to pledge my auto rickshaw, the only property I owned and managed to pay the balance,” Ravichandran told The New Indian Express.

This Sunday, Ravichandran was rewarded by the Anna Auto Welfare Trust – an organisation that was started to motivate auto rickshaw drivers and acknowledge them for such laudable deeds. 16 other auto drivers including three women were also awarded.

Anil Khicha founded Anna Auto Trust with the view that people who visit Chennai, meet auto rickshaw drivers first. And the kind of behaviour they experience, forms their impression about the city. If the good work of drivers is appreciated, it will encourage them to do better.

According to the report, the trust has printed stickers asking passengers to send their feedback to 9243000111. Based on this feedback, they call drivers who have behaved well and honour them every month.

Featured image credit: The New Indian Express

Source…..Tanaya Singh in http://www.the better india .com

natarajan

படித்ததில் பிடித்தது ….” அழுது உழும் உழவன் வாழ்வு உயர வேண்டும்!”

உண்பது நாழி; உடுப்பது இரண்டே என்ற நிலையில் நிம்மதியாக வாழ்பவர்கள். தினையளவு இருந்தாலும் பனையளவாகக் கருதி பகிர்ந்து உண்ணும் பாட்டாளி மக்கள். வெற்றிலை போட்டக் காவிப் பல்லிலும் அவர்களின் கடமை உணர்ச்சி தெரியும். உழைப்பின் களைப்பால் காப்புக் காய்ச்சுப் போன கைகளை உடையவர்கள், வெள்ளை உள்ளம் கொண்ட நல்ல மனிதர்கள்.
பங்காளிச் சண்டையிலும் தங்கள் பங்களிப்பு என்ன என்பதை பறைசாற்றும் போராளிகள். எளிமையே அவர்களிடம் இனிமையாகக் குடியிருக்கும்.தகப்பன்- மகன் உறவில் தெரியும் வீரம். பெண் குழந்தை பிறப்பில் குலதெய்வம் கண்ட குதுாகலம் இருக்கும். அவர்கள், அடிமனதில் ஆழப் பதிந்து போன வறுமைக்கு, வாக்கப்பட்டவர்கள். என்றாலும் சங்கடங்களை எல்லாம்
சாதனையாக மாற்றி விடுவர்.உலகில் வாழும் மக்களுக்கு எல்லாம் உணவளிக்கும் உத்தமர்கள். எதையும் நாசுக்காகப் பேசும் நயவஞ்சகமில்லா நாக்கிற்குச் சொந்தக்காரர்கள். இவற்றிற்கெல்லாம் சொந்தக்காரர்கள் கிராமங்களில் வசிக்கும் விவசாயப் பெருமக்களே! அவர்கள் மண்வாசனை மாறாது. மனதிற்கு இனிய கதைகள், பாடல்கள் மூலம் நல்ல விஷயங்களை நாட்டிற்குக் கூறிய புத்தி
சாலிகள்.சிந்தனை துாண்டுபவர்கள் பகலெல்லாம் உடல் உழைப்பு; மாலையில் உடல் ஓய்வெடுக்க, அறிவு செயல்பட ஆரம்பிக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு சிறுசிறு விளையாட்டுக்களைச் சொல்லிக் கொடுத்து மகிழ்வர். அந்தவகையில் நாட்டுப்புற விவசாய பெருமக்கள் கூறும் அழிப்பாங்கதைகள் (விடுகதைகள்) சிந்தனைகளைத் துாண்டக்கூடியது. குழந்தைகள் யோசித்து பதில் சொல்லும் போது, தானாகவே அவர்கள் மூளைக்கு ஒரு பயிற்சி கொடுக்கப்படுகிறது.

தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணைப் பார்த்து ஒரு வழிப்போக்கன் கேட்கிறான்.’பூ மேலே பூ வைத்துப் போற பெண்ணே மானாமதுரைக்குப் போற வழி எது?’இவன் நம் குறையை அல்லவா சுட்டிக்காட்டுகின்றான் என்று, அப்பெண்ணிற்கு கோபம் வருகிறது. உடனே அவன் பாணியிலே அவள் வழி சொல்கிறாள்.
‘அட பட்ட மரத்தில போறகெட்ட மனுசா! இது தான் மானாமதுரைக்குப் போற வழி’எவ்வளவு அழகான விடுகதை. அதற்கான விடையைப் படியுங்களேன். அவர்கள் அதிமேதாவியா? அல்லது படித்த நாமா? என்பது புரிந்து விடும். தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு கண்ணின் கருவிழி கொஞ்சம் வெள்ளையாக
இருக்கிறது. அதனைக் கிராமத்தில் கண்ணுல பூ விழுந்திருக்கு என்று கூறுவர். அதைக் குறையாகக் கூறாது. மாரியாத்தா மகிமை; ராசிக்காரப் பொண்ணு என்று குறையை நிறைவாகக் கூறுவர்.
அதை இந்தவழிப்போக்கன் கேலி செய்கிறான். கண்ணில் பூ விழுந்திருக்கு; தலையில் பூச்சூடி இருக்கின்றாள். அதைத் தான் (கண்ணில்) பூ; மேலே (தலையில்) பூ வைத்திருக்கும் பெண்ணே என்கிறான். அதற்கு அவள் கூறும் பதில்.
அவனுடைய கால் ஊனம். கட்டை மாட்டியிருக்கின்றான். அதனைக் கட்டக்கால் என்பர். அதைப் பார்த்துத்தான் அவள் கட்டையில போற கெட்ட மனுஷா (என்னைக் கேலி செய்பவனே) இது தான் வழி என்று கூறுவதாக
இவ்விடுகதை அமைகிறது. இது போல இன்னும் எத்தனை? எத்தனை?நாக்கு பயிற்சி விடுகதை ‘கோணல் மாணல் (வளைந்த நெளிந்த) புளியங்கா கொங்கு நாட்டுப் புளியங்கா. எங்க நாட்டுல இருந்து உங்க நாட்டுக்கு வருகின்றது’என்று பாதையைப் (வழி) பற்றிக் கூறும் விடுகதை. அடுத்ததாக நாக்கிற்கு பயிற்சி கொடுக்கும் பாங்கு அனைவரும் அறிந்ததே.
‘நாலு சோளத்துக்கு ஏழு சோளத் தோசைஅதில ஒரு தோசை தீஞ்ச (கருகிப் போனது) தோசை”(இதை விரைவாகச் சொல்லனும்)ஆறு அரளி விளாருல
ஒரு அரளி விளாருஒடஞ்ச விளாரு – (இதை விரைவாகவும் சரியாகவும் சொல்ல வேண்டும்)இப்படி பயிற்சியளிக்கும் பொழுதாக அன்றைய மாலைப் பொழுது, கிராமத்து விவசாயிக்கு அமைந்தது.வெள்ளந்தி மனிதர்கள் சில நேரங்களில் முகத்துக்கு முன்னால், பல நேரங்களில் முதுகுக்குப் பின்னால், வார்த்தை விமர்சனங்கள் வெடித்தாலும் எதையும் கண்டுகொள்ளாத வெள்ளந்தி மனிதர்கள். ஒரு நேரம் கூர்மையான விமர்சனமாகவும், மற்றொரு நேரம் கெட்டிதட்டிப் போன விரத்தியாகவும், இருமுகங்களோடு மறுப்பும் எதிர்ப்புமாகிப் போன வாழ்க்கையில் உறுதியோடு மனதிடமாக வாழ்க்கையைச் சந்திப்பவர்கள். சொலவடைகளால் வாழ்க்கையை சுகமாக்கிக் கொண்டவர்கள்.

குத்துப்பட்டவன் துாங்கினாலும் கொற வயித்துக்காரன் துாங்கமாட்டான்”ஆடுகுட்டி இல்லாதவன்அடைமழைக்கு ராஜா; புள்ள குட்டி இல்லாதவன் பஞ்சத்துக்கு ராஜா’இப்படி எல்லாம் பேசி சமாதானமாகி விடுபவர்கள். பொருள் ஏவலுக்கேற்றாற் போல் வீட்டுக்குள்ளே ஒரு வியாக்கியானத்தைநடத்துபவர்கள் அவர்கள். இயற்கை பொய்த்துப் போனாலும் தன் மண்ணோடு மல்லுக்கட்டி பூமித்தாயை வளமாக்குபவர்கள் விவசாயிகள்.அழிந்த ஆவணங்கள் ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம்” என்றார் வள்ளுவர். இந்த மகானுடையவாக்கு, நாட்டை ஆண்ட, ஆளும் மகான்களுக்குத் தெரியவில்லை. இன்று விவசாயம் மெல்ல மெல்ல அழிய, விவசாயியின் சிந்தனைத்திறனும் குறைந்து போயிற்று. அன்றாட வாழ்விற்காக விவசாயி போராடுகின்ற நிலை. விவசாயம் மட்டும் அழியவில்லை.

அவர்களுடைய வாழ்வியலோடு கலந்த கலாசாரமும், அவர்கள் நமக்குத் தந்து விட்டுப் போன அறிவு சார்ந்த ஆவணங்களும் அழிந்து கொண்டே வருகின்றன.
அவற்றை இனியாவது பாதுகாப்பது நம் கடமை. நம் முயற்சிகள் எல்லாம் அவர்கள் வாழ்வில் சுடராகி வெளிச்சம் தர வேண்டும். உழவன் அழுதாலும் உழுது கொண்டு இருப்பவன். அவன் வாழ்வு உயர வேண்டும். விவசாயத்தை காப்போம்; விவசாயியை காப்போம்! நம் பழம் பெருமையை மீட்டெடுப்போம்!’அறிவின் உழைப்பால் அகிலம் உயரும்உடல் உழைப்பால் ஆரோக்கியம் வளரும்”.

முனைவர் கே.செல்லத்தாய்தமிழ்த்துறை தலைவர்எஸ்.பி.கே. கல்லுாரி,
அருப்புக்கோட்டை

source……www.dinamalar.com

natarajan

படித்து ரசித்தது ….பூவிலே சிறந்த பூ ‘ சிரிப்பூ ‘ …!

இலக்கியச் சுவைகளுள் மோனையைப் போல் முதலில் நிற்பது நகைச்சுவை. “அது மனித குலத்திற்கு வாய்த்த வரம், அந்தரங்கத்தைப் புலப்படுத்தும் ஒளிச்சரம்” என்பார் தெலுங்குக் கவிஞர் சி.நாராயண ரெட்டி.“பற்கள் என்ற முட்களே பூக்கும் மலர் புன்னகை” என்று கவிக்கோ அப்துல் ரகுமானும், “பவளக் கொடியில் முத்துக்கள் பூத்தால் புன்னகை என்று பேராகும்” எனக் காவியக் கவிஞர் வாலியும் புன்னகையைச் சொல்லோவியமாக வடிப்பர். “ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் இதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது” எனச் சிரிப்புக்குப் புகழாரம் சூட்டுவார் கவிப்பேரரசு வைரமுத்து.

“என்னைப் பொறுத்த வரை பிரார்த்தனை எவ்வளவு புனிதமானதோ அதே போல் சிரிப்பும் புனிதமானதாகும்” எனச் சிரிப்பின் சிறப்பினைப் பறைசாற்றுவார் ஓஷோ.

“பொதுவாகவே, அறிவைத் துலக்க, ஆன்மாவை உயர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள, உடம்பில் வியாதிகள் வராமல் தடுத்துக் கொள்ள நகைத்தல் நல்லது” என மூதறிஞர் வெ.சாமிநாத சர்மா கூறியிருக்கிறார். நகைச்சுவையின் தனிச்சிறப்பு ஒரு கருத்தை நகைச்சுவையோடு சொல்லும் போது அந்தக் கருத்து கேட்பவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். நகைச்சுவைக்கு உள்ள தனிச்சிறப்பு அது.

நேர்காணல் ஒன்றில் இக்கருத்தினை விளக்க எழுத்தாளர் சாவி காட்டிய உதாரணம்

சாப்பிட வந்தவர் ஓட்டல் சர்வரிடம் கேட்கிறார். ‘இதோ பார்! நீ கொண்டு வந்து வைத்த கோழி பிரியாணியில் ஒரு ஈ செத்துக் கிடக்குது!”இவ்வளவு பெரிய கோழி செத்துக் கிடக்குதே, அது உங்க கண்ணில் படலே. சின்ன ஈ செத்துக் கிடப்பது மட்டும் பெரிசாத் தெரியுதாக்கும்!’ என்றார் சர்வர். ‘எப்போதோ படித்த இந்த நகைச்சுவையைத் துணுக்கை நினைத்துச் சிரிக்கும் போதெல்லாம் கூடவே அதில் பொதிந்துள்ள கருத்தும் என்னைச் சிந்திக்க வைக்கும்’ என்றார் சாவி. ஒரு தடவை திருக்குறளார் வீ.முனிசாமியும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு ரயில்வே ‘கேட்’டருகே டிரைவர் காரை நிறுத்தினார்.

கலைவாணர், “என்னப்பா ஆச்சு?” என்று கேட்டார். “’கேட்டு’ சாத்தியிருக்கிறான் ஐயா!” என்று டிரைவர் சொன்னார். உடனே கலைவாணர் திருக்குறளாரைப் பார்த்து, “பொய் சொல்லுகிறான்,

பார்த்தீர்களா? ‘கேட்டு’ சாத்தினான் என்று சொல்லுகிறானே, நம்மைக் கேட்டா சாத்தினான்?” இயல்பான நகைச்சுவை என்பது இது தான்! சொல் விளையாட்டின் மூலம் கலைவாணர் இங்கே நயமான நகைச்சுவையை தந்தார்.

மூவகை நகைச்சுவைகள் நகைச்சுவையில் முறுவலித்தல், அளவே சிரித்தல், பெருகச் சிரித்தல் என மூன்று வகைகள் உண்டு. முதலாவது புன்முறுவல்; அதாவது, குமிண் சிரிப்பு. இடைப்பட்டது அளவான சிரிப்பு; மூன்றாவது வெடிச் சிரிப்பு. 1925-ல் பெர்னார்ட் ஷாவிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போதும் வழக்கமான நகைச்சுவை உணர்வோடு ஷா கூறினார்

“இந்த ஆண்டில் நான் நுால் ஒன்றும் எழுதவில்லை. உலகம் அதைக் கண்டு மகிழ்ந்து, எனக்கு நன்றி பாராட்டிச் செய்த செயல் இது.” படிப்பவர் இதழ்களில் குமிண் சிரிப்பைத்

தோற்றுவிக்கும் நகைச்சுவை இது. முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்து சொற்பொழிவின் இடையே சொன்ன நகைச்சுவை“ஒருவன் ‘நான் என்ன பிராணி என்றே எனக்கு தெரியவில்லை’ என்று நண்பனிடம் கூறினான்.

‘ஏன்?’ என்று நண்பன் கேட்டான். அதற்கு அவன் சொன்ன பதில்… ‘பூனையைப் பார்த்து எலி பயப்படுகிறது; எலியைப் பார்த்து கரப்பான் பூச்சி பயப்படுகிறது; கரப்பான் பூச்சியைப் பார்த்து என் மனைவி பயப்படுகிறாள்; மனைவியைப் பார்த்து நான் பயப்படுகிறேன். நான் என்ன பிராணி என்றே தெரியவில்லை!’” கேட்பவர் இடையே அளவான சிரிப்பைத் தோற்றுவிக்கும் நகைச்சுவை இது. அறிஞர் அண்ணாதுரை பேசிய கூட்டத்தில் சில முரட்டு இளைஞர்கள் அவருக்கு முன் வந்து, “ஆணையிடுங்கள் அண்ணா, எங்கள் தலையையே உங்களுக்குத் தருகிறோம்” என்றார்கள். “தம்பிகளே! உங்கள் தலைகள் வேண்டாம்; இதயங்கள் தாருங்கள் போதும்!” என்றார் அண்ணாதுரை.

காரில் திரும்பி வரும் போது நண்பர்கள் கேட்டார்கள்: “இதயங்கள் தாருங்கள், தலைகள் வேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்?” “ஆமாம், அவர்கள் தலைகளில் என்ன இருக்கிறது? அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என்று அண்ணாதுரை சொன்னதும் நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். வெடிச் சிரிப்பை எழுப்பும் அற்புதமான நகைச்சுவை இது! ‘வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்’- சிரிப்போம், மகிழ்வுடன் வாழ்வோம்.

-பேராசிரியர் இரா.மோகன்

எழுத்தாளர், -பேச்சாளர்

மதுரை.   

Source…….www.dinamalar.com

படித்தது ….மனதை தொட்டது …”வேர்களை இழந்து விட வேண்டாம்….”

காமராஜரின் இல்லத்தில் ஈ.வி.கே.சம்பத், குமரி அனந்தன் இருவரும் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காமராஜர், “ஏம்பா…இந்த கோயில் கோபுரங்களை எல்லாம் ஏன் உசரமா கட்டியிருக்காங்க?” என்று கேட்டார். ஒருவர் சொல்லின் செல்வர், மற்றொருவர் இலக்கியச் செல்வர். கேட்கவா வேண்டும்…“அது நமது ஆன்மிக, கலை, கலாசாரப் பண்பாட்டுப் பெருமை, அழகு, அடையாளம்” என இருவரும் காரணங்களை அடுக்குகின்றனர்.
“அட… அதுக்கெல்லாம் இல்லைப்பா” என்று மறுத்த காமராஜர் கூறினார், “அந்த காலத்தில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போகணும்னா நடந்துதான் போகணும், சாலை வசதி, வாகன வசதியெல்லாம் கிடையாது. அப்படி போகிறவர்கள் தாகத்தோடும், பசியோடும் போவார்கள். எங்காவது கோபுரம் கண்ணுல தென்பட்டதுண்ணா… கோபுரம் இருந்தா கோயில் இருக்கும், கோயில் இருந்தா மக்கள் இருப்பார்கள், மக்கள் இருந்தால் நம் பசியும், தாகமும் தீர்வதற்கு வழி பிறக்கும் என்பதை அடையாளப்படுத்தத்தான் கோயில் கோபுரத்தை உசரமா கட்டியிருக்காங்க!” என்று பதில் அளித்தாராம்.
எனக்கும், உங்களுக்கும் கோயில் கோபுரத்தைப் பார்க்கும் போது இந்த எண்ணம் தோன்றியதுண்டா? பெருந்தலைவருக்கு மட்டும் தோன்றியது என்றால் என்ன காரணம்? அவர் எப்பொழுதும் மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த தலைவர் என்பதால்தான்.
மேற்கண்ட தகவல், தமிழகப்பண்பாட்டின் உச்சத்தைத் தொட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. விருந்து முதலான நம் பாரம்பரிய மரபுகள் அனைத்தும் மனிதத்துவம் சார்ந்தவை. இத்தகைய நம் பாரம்பரிய பண்பாடுகள் பலவற்றை இன்று நாம் இழந்து வருவதோடு,
இலக்கிய வாசிப்பின்மையால் அது குறித்த சிந்தனைகளையும் இழந்து வருகிறோம்.கவிதை சொல்லும் சேதி பூதை தேசிகன் பாடிய கவிதை ஒன்று.
‘என் பாட்டியின் மாமியார்
என் பாட்டியிடம் சொன்னாளாம்…

இந்தப் பானையில் அரிசி
இருக்கிறது
இந்தப் பானையில் உளுந்து இருக்கிறது
இந்தப் பானையில் புளி இருக்கிறது’
என்பாட்டி என் அம்மாவிடம் சொன்னாளாம்…
‘இது அரிசி இருந்த பானை
இது உளுந்து இருந்த பானை
இது புளி இருந்த பானை’
இப்போது என் அம்மா
என் மனைவியிடம் சொல்கிறாள்…
இது அரிசிப்பானை இருந்த இடம்
இது உளுந்துப் பானை இருந்த இடம்
இது புளிப்பானை இருந்த இடம்’
அரிசி போய், அரிசி பானை போய், அரிசி பானை இருந்த இடம் மட்டும் இன்று காலியாக இருக்கிறது. இந்தக் கவிதை, நமது பாரம்பரிய பண்பாட்டுச் சரிவை மிகச் சரியாக அடையாளப்படுத்தி உள்ளது.
விரிந்து கிடந்த திண்ணைகள்
ஒரு காலத்தில் திறந்த மனசு போல வீட்டு வாசல் கதவு திறந்திருக்க… வருகின்றவர்களை அரவணைப்பதற்கு விரியும் கரங்கள் போல வீட்டின் முன் இருபக்கமும் திண்ணைகள் விரிந்து கிடந்தன. ஒரு யாசகனோ, வழிப் போக்கனோ அதில் அமர்ந்தால் தாகமும், பசியும் நீங்கிச் செல்வதற்கு உத்தரவாதம் இருந்தது. இன்று கிராமங்களில் கூட வீடுகளின் முன் திண்ணைகளைக் காண முடியவில்லை.
அதனால்தான், “அன்றைக்குத் தமிழர்கள், முன்பின் தெரியாத மனுசாள உபசரிக்க, வீடுகளுக்கு முன்னால் திண்ணைகளைக் கட்டி வைத்தார்கள். இன்றைக்கோ நாய்களைக் கட்டி வைக்கிறார்கள்” என்றார் திருமுருக கிருபானந்த வாரியார்.
வேர்களை இழந்துவிட்டு விழுதுகளின் பலத்தில், நிழல் தேடும் சமூகமாக நாம் மாறிவருகிறோம். நமது பண்பாடு வளர்த்தெடுத்த அர்த்தமுள்ள வாழ்வியல் மரபுகளை, மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மாறிய காட்சிகள் அதிகாலையில் வீடுகளுக்கு முன்னால் சாணம் மெழுகி, தண்ணீர் தெளித்து, மாக்கோலம் இட்ட காட்சிகளை இன்று கிராமங்களில் மட்டுமே காணமுடிகிறது. நகரியப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைபட்டுக் கொண்ட தமிழர்கள் ஸ்டிக்கர் கோலம், பெயின்ட் கோலத்தில் திருப்தி அடைந்து விடுகின்றனர். மண் முற்றத்திற்கு எங்கே செல்வது?
வீடுகளுக்கு முன்னால் அடுப்பு கூட்டி, கரும்புகள் நட்டு, அறுவடை நெல்லின் புத்தரிசியை புதுப்பானையில் சர்க்கரையுடன் இட்டு, முந்திரி, ஏலம் மணக்கப் பொங்கலிட்டனர். பொங்கி வழியும் வெண்நுரையில் வாழ்வின் வசந்த அபிவிருத்தியைக் கண்டு, ‘பொங்கலோ! பொங்கல்!’ என்று ஆனந்தக் குரல் எழுப்பினர். இத்தகைய குடும்பங்களில் ஒருவராக இருக்கும் பேறு, இன்று எத்தனைத் தமிழர்களின் வாரிசுகளுக்கு வாய்த்திருக்கிறது?
எங்கள் வீட்டில் புது மண்பானையில் புது அரிசிப் பொங்கலிட்டது உண்டு. மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி அவற்றை போசித்தது உண்டு. இன்று வீட்டில் மாடுகளும் இல்லை, பொங்கலைக் கொண்டாடிய மூத்த தலைமுறையின் மனசும் இல்லை.
இன்றும் பொங்கல் பானையின் தலையில் வெண்நுரை பொங்கி நிற்கும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம், என் பாட்டன், தமிழ் அடையாளத்துடன் தலையில் தொப்பியோ, தலைப்பாகையோ அணிந்திருந்த கம்பீரத் தோற்றம்தான் நினைவிற்கு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, தமிழர்களை ஒருங்கிணைத்த கூடிக் குதுாகலிக்கச் செய்த பொங்கல் விளையாட்டுக்களும் அருகிவிட்டனவே. பொங்கலின் கொண்டாட்டங்களான உறி அடித்தல், சடுகுடு, மாடு பிடித்தல், சிலம்பம் போன்ற வீர விளையாட்டுக்களை அரிதாகவே சில கிராமங்களில் நடந்ததை பார்க்க முடிந்தது. இந்த வீர விளையாட்டுக்கள் எல்லாம், கிராமங்களின் அசல் முகம் என்பதற்கு இனி திரைப்படங்களின் பதிவுகள் மட்டுமே சாட்சிகளாகி விடுமோ?
தேசபாதுகாப்பு என்னவாகும் ஜல்லிக்கட்டு கூட இன்று விமர்சனத்துக்கும், சட்ட ரீதியான தடைக்கும் உள்ளாகி நிற்கிறது. ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்களைத் தடை செய்து விட்டால், தேசத்தின் வருங்காலப் பாதுகாப்பே கேள்விக் குறியாகி விடும்! தேசப் பாதுகாப்பிற்காக ராணுவத்திற்கு ஆள் எடுத்தால், நம் கிராமங்களில் இருந்து தான் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் செல்வார்கள். ஏனென்றால், இயல்பான ஆற்றலை, முனை முகத்து நிற்கும் துணிச்சலை வீர விளையாட்டுக்கள் மூலம் அவர்கள் பெற்றுள்ளதுதான் காரணம்.
ஜல்லிக்கட்டு போன்றவை தடை செய்யப்பட்டால், வீரம் சார்ந்த விளையாட்டுக்கள் முக்கியத்துவம் இழந்தால், அது தேசத்தின் பாதுகாப்பையே உறுதியில்லாமல் ஆக்கிவிடாதா?
எனவே இயற்கையைப் போற்றல்! வேளாண்மையைக் கொண்டாடுதல்! உழவுக்கும் தொழிலுக்கும் உடன் உழைக்கும் ஜீவன் மாடுகளைச் சிறப்பித்தல்! வீரத்தை விளையாட்டுக்கள் மூலம் வளர்த்தெடுத்து அதனை சமூகப் பாதுகாப்புக்கு உரியதாக்கல்! ஜாதி, சமய அடையாளங்களைக் கடந்து, பண்டிகைகள் மூலம் ஒன்றுபடுதல் என தமிழனது பண்பாட்டு மரபுகளைப் போற்றுவோம்!

Source…….
-பேராசிரியர்.மு.அப்துல்சமது,தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லுாரி,உத்தமபாளையம்.93642 66001

http://www.dinamalar.com

வானவில் பெண்கள்: “எழுபதுக்குப் பிறகும் சாதிக்கலாம்!”

விளையாட்டுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்பதைத் தனது வெற்றிகள் மூலம் நிரூபித்துவருகிறார் எழுபது வயது லட்சுமி லோகநாதன். கோவையைச் சேர்ந்த இவர், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்துவருகிறார்.

உள்ளூர் முதல் ஒலிம்பிக் வரை

கோவை ஹோப் காலேஜ் ஸ்ரீநகரில் இருக்கும் லட்சுமியின் வீடு முழுக்க பதக்கங்களும் கோப்பைகளும் நிரம்பிவழிகின்றன. மூத்தோர் தடகளப் போட்டிகளில் ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், போல்வால்ட் ஆகிய விளையாட்டுகள் எங்கு நடந்தாலும் அங்கே லட்சுமியைப் பார்க்கலாம். பங்கேற்கும் போட்டிகள் அனைத்திலும் பதக்கங்கள் வெல்வது இவரது சிறப்பு.

கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கியது இவரது இந்தத் தடகளப் பயணம். கடந்த 13 ஆண்டுகளில் மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று 83 பதக்கங்களை வசப்படுத்தியுள்ளார். குறிப்பாக, கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டுவரை நடந்த ஆறு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுத் தொடர்ச்சியாக 16 பதக்கங்களை வென்றுள்ளார். இதில், ஆறு தங்கப் பதக்கங்களும், மூன்று வெள்ளிப் பதக்கங்களும், ஏழு வெண்கலப் பதக்கங்களும் அடங்கும். இதைவிட கூடுதல் சிறப்பாக, 2009-ம் ஆண்டு பின்லாந்தில் நடைபெற்ற உலக மூத்தோர் ஒலிம்பிக் போட்டியில் கழியூன்றித் தாண்டுதல் (போல்வால்ட்) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பயிற்சிக்காக தினமும் இரண்டு மணி நேரத்தை ஒதுக்கிவிடும் லட்சுமி, இத்தனை வெற்றிக்கும் முக்கியமான காரணம் தனது கணவர் லோகநாதன் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

துணை நிற்கும் துணை

“கோவை வெள்ளலூர்தான் சொந்த ஊர். திருமணத்தின்போது பி.யு.சி. வரை மட்டுமே படித்திருந்தேன். அது 1965 காலகட்டம். திருமணம் முடிந்ததும் என்னை வீட்டிலேயே முடக்கிவிட எனது கணவர் விரும்பவில்லை. எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் இருந்ததை அறிந்துகொண்ட அவர், உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி வகுப்பில் என்னைச் சேர்த்தார்.

அதை முடித்தவுடன் சில ஆண்டுகளில் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணி கிடைத்தது. பணிக் காலத்தில் தடகளப் போட்டிகள் எதிலும் பங்கு கொள்ளவில்லை. ஆனால், நிறைய விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளேன்” என்று சொல்லும் லட்சுமி, கடந்த 2001-ம் ஆண்டு விருப்ப ஓய்வில் பணியை விட்டு விலகினார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் வீட்டில் இருந்தார். இவரது கணவர் லோகநாதனும் ஓட்டப் பந்தயம், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் ஆர்வம் கொண்டவர்.

“வீட்ல சும்மா இருப்பதற்கு பதிலாக ஏதாவது ஒரு விளையாட்டில் கலந்து கொள், பதக்கம்கூட முக்கியமில்லை என்று சொல்லி என்னை அவர் அழைத்துச் சென்றார். அவருடன் சென்று ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றேன். அதுதான் எனது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது. அந்த போட்டியைத் தொடர்ந்து மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றேன். பின்னர், தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக 2004-ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய போட்டிக்குள் நுழைந்தேன்” என்று சொல்கிறார் லட்சுமி லோகநாதன்.

யோகா பயிற்சியில் பெரும்பாலான ஆசனங்களையும் எளிதாகச் செய்யும் இவர், சமையலிலும் கலக்குகிறார். ஆறு ஆண்டுகளாக முயற்சித்து, கடந்த டிசம்பர் மாதம் உடற்கல்வி மற்றும் யோகா பயிற்சி என்ற பாடப்பிரிவில் பி.எச்டி. முடித்துள்ளார். எம்.ஏ., எம்.பி.எட்., பி.எட்., எம்.ஃபில்., பி.எச்டி., என இவரது கல்வித் தகுதி நீள்கிறது. பல்வேறு விஷயங்களில் சிறப்பாகச் செயல்படுவதற்கு நேர மேலாண்மையே கைகொடுக்கிறது என்கிறார் லட்சுமி.

சாதனைகள் சாத்தியமே

இத்தனை உயரத்தை இவர் மிக எளிதில் எட்டிப்பிடித்துவிடவில்லை. மூத்தோர் தடகளப் பிரிவில் 2011-ம் ஆண்டு சண்டீகரில் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றபோது வலது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ஓர் ஆண்டுவரை நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. விளையாட்டுக்கு முழுக்குப் போட்டுவிடுமாறு மருத்துவர்கள் எச்சரித்த பிறகும் தன்னம்பிக்கையைத் தளரவிடவில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார். சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது ஆகும் செலவுதான் பெரிய இடையூறாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

“போக்குவரத்துச் செலவை நாங்கள்தான் சமாளித்துக்கொள்ள வேண்டும். போட்டியில் பதக்கம் வென்றால் மட்டும் அரசு சார்பில் 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆனால், வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பினால் குறைந்தபட்சம் 2 லட்சம்வரை ஆகிறது. இதைவிட, அந்த நாடுகளில் உள்ள சீதோஷ்ண நிலை எங்களை வாட்டி வதைத்துவிடும். பின்லாந்து உலகப் போட்டியில் கலந்து கொண்டபோது அங்கு 6 மாதம் தொடர்ச்சியாக, பகல் மட்டுமே இருந்த காலம்.

அந்த சீதோஷ்ண நிலையை 20 நாட்கள் எதிர்கொள்வதற்கு எனது தள்ளாத வயதில் மிகவும் சிரமப்பட்டேன்” என்று வெளிநாட்டுப் பயணம் சார்ந்த தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் லட்சுமிக்கு சைவ உணவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டதாம்.

“எத்தனை கஷ்டம் இருந்தாலும் பதக்கம் வெல்கிற அந்த நொடி, அத்தனை துயரங்களையும் மறக்கடித்துவிடுகிறது” என்று கை உயர்த்திப் புன்னகைக்கிறார் லட்சுமி.

Source…..ம. சரவணன் in http://www.tamil.thehindu.com

Natarajan

இந்த வாரக் கவிதை ….” என் தேசம் …என் சுவாசம் …” !

 

என் தேசம் …என் சுவாசம்
…………………………
திரைகடலோடி திரவியம் தேடும் நம் வீட்டுப் பிள்ளைக்கு
“யாதும் ஊரே யாவரும் கேளிர் ” !
மறு கரையில் இருக்கும் தாய் வீடும் நாடும் ஒரு போதும்
மறப்பதில்லை நம் பிள்ளைக்கு ! ..அக்கரை சீமையில்
எக்கரையில் இருந்தாலும் அவருக்கு ஒரு தனி செல்வாக்கு …அது
“நான் ஒரு இந்தியன்” என்னும் அவர் சொல் வாக்கு !
ஆனால் நாம் பிறந்த  மண்ணில் மட்டும் இன்னும் நம்மை அடையாளம்
காட்டுவது  மொழியும் , மதமும் மட்டுமே ! தேசிய நீரோட்டம் வெறும்
ஏட்டில் மட்டும் பூத்திருக்கும்  ஒரு அத்திப் பூ !
ஒரு வேளை கங்கையும்  காவிரியும் இணைந்தால் மட்டுமே
சாத்தியமாகுமா  தேசிய நீரோட்டம் ?
“நான் ஒரு இந்தியன்  பாரதம் என் தேசம் …எம்மதமும் எனக்கு
 சம்மதம் ..நாம் காண்போம் வேற்றுமையில்  ஒற்றுமை “..இதுவே
  நாம் பேசும் ஒரே இந்திய மொழியாகட்டும் இனி …ஒரு
 தேசிய கீதமாக இசைக்கட்டும் இம்மொழியை  நம் சுவாசக்காற்று !
சுவாசம் இசைக்கும் இந்த இசை மழையில் நம்
இதயங்கள் நனைந்தால்  தன்னால் இணையும் நீரும் நதியும் !
இமயம் முதல் குமரி வரை உருவாகும் ஒரு அருமையான புது
பந்தம் …அதில் மலரும் சொந்தங்கள் நிச்சயம் உச்சரிக்கும் மந்திர
சொல் ” என் தேசம் …என் சுவாசம் …” ! இந்த சொல் வாக்கால்
நம் செல்வாக்கும் சிகரம் தொடும் நாம் பிறந்த மண்ணில் !
” நான் ஒரு இந்தியன் ” என்னும் ஒரே ஒரு அடையாள அட்டையுடன் !
Natarajan