ஐங்கரனைத் தொழுவோம் – அச்சமின்றி வாழ்வோம்!….

வழிபாட்டில் மிகவும் சிறப்பானதும் இன்றியமையாததும்  விநாயகர் வழிபாடே. ஓர் ஊரின் குளக்கரையிலும் ஏரிக்கரையிலும் நம் கண்ணுக்கு  தெரிவது முதலில் விநாயகர் சிலைதான்.

இவ்விநாயகரைப் பற்றிக் கூறும்பொழுது, தன் தாயாரைப் போன்றே மனைவி தனக்கும் வேண்டும் என்பதற்காக, ஏரிக்கரையிலும் குளக்கரையிலும் அவர் காத்திருப்பதாகக் கூறுவர்.

இந்த விநாயகர் வழிபாடும், இவர் தமிழகத்துக்கு வந்த விதமும் ஒரு பெரிய  வரலாற்றைக் கொண்டுள்ளது. இவரை காவல் தெய்வம் என்றும், கானகத் தலைவன் என்றும் குறிப்பர். தலைப்பகுதி யானை முகமும், உடல் பகுதி மனித வடிவமும்  கொண்டு அமைந்த இவரை, விநாயக மூர்த்தி என்றே அழைப்பர்.

முழுமுதற் கடவுள்  விநாயகர். இவர் இல்லாத  ஊரே இல்லையென்று சொல்வது சரியாக இருக்கும். கணபதி என்பதற்குப்  பூதகணங்களின் தலைவன் என்று பொருள். சிற்ப அமைதிப்படி, பதினெட்டுக்கும் மேற்பட்ட உருவ வேற்றுமைகளில் கணபதி காணப்படுகிறார்.

முதலாம் இராசராசனால் எடுக்கப்பட்ட தஞ்சை இராசராசேச்சுரம் எனும் பெரியகோயிலில் காணப்படும் தேவகோட்டச் சிற்பம் – விநாயகர்.

பொதுவாக, கணபதியின் இரண்டு கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருக்கும். அவை,  பாசமும் அங்குசமும் ஆகும்.  இந்த அடையாளங்கள்,  தாருண கணபதி, வீர விக்னேஷ்வர கணபதி, லட்சுமண கணபதி, பிரசன்ன கணபதி, நிருத்த கணபதி  ஆகிய உருவங்களில் காணப்படுகின்றன. இவரை, வேட்டுவர்களின் தலைவன், கடவுள் என்றும் சிலர் குறிப்பர்.

பிரம்ம வைவார்த்த புராணம், கணபதியின் பிற பெயர்களாகக் குறிக்கும்பொழுது  ஏகதந்த, லம்போதரா, சூர்ப்பனா, கஜநான, குகராஜா எனக் குறிக்கின்றது. கணபதி என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளும்பொழுது, முதல் எழுத்து மதிநுட்பத்தையும், இரண்டாம் எழுத்து தடங்கலுக்குப் பாதுகாப்பு அளிப்பவன் என்றும் ஏழைப் பங்காளன் என்றும், பதி என்ற இறுதி எழுத்துகள் இறைவனாகிய பரபிரம்மத்தையும் குறிப்பதாகும்.

கணபதி வரலாறு

விநாயகர் சிற்பத்தை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில், வாதாபியில் இருந்து சிறுத்தொண்டர் கொண்டுவந்த பிறகுதான், விநாயகர் வழிபாடு தமிழகத்துக்கு வந்தது என்று கருதியதால்தான்,  கணபதியைப் பற்றி பாடும்பொழுது  வாதாபி கணபதியே எனப் பாடினர்.

அக்கருத்துக்கு மாறாக, தமிழகத்தில் காணப்படும் பிள்ளையார்பட்டி  விநாயகர், காலத்தால் கி.பி. ஐந்தாம் நுற்றாண்டைச் சார்ந்தது என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் அதன் சிற்ப அமைதியும் தெளிவுபடுத்துகின்றன. பரஞ்சோதி முனிவருக்கு முன்பே  தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்து வந்துள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

திருச்சி மலைக்கோட்டையின்  கீழே காணப்படும் பல்லவர் காலக் குடவரையில், பாறையில்  செதுக்கப்பட்டுள்ள  விநாயகர் உருவம், பரஞ்சோதி முனிவருக்கு  முன் வந்தது. அதாவது, நரசிம்ம பல்லவரின் தந்தை மகேந்திர பல்லவரின் காலத்தைச் சார்ந்தது.

ஆக, வாதாபி கணபதிக்கு முன்பே தமிழகத்தில் வழிபாட்டில் விநாயகர் இருந்துள்ளார் என்பதற்கு, திருச்சி குடவரையில் காணப்படும் விநாயகர் சான்றாகும். மேலும், சங்க காலச் சோர்களும் கணபதியை வழிபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக, காஞ்சிபுரத்தில் கரிகாலச் சோழப் பிள்ளையார் எனும் கோயில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. இது, கரிகாலச் சோழனால் எழுப்பப்பட்டதாக இருக்கலாம்.

வழிபாட்டில் முதலில் வணங்கப்படும் கடவுள் கணபதிதான். தனிவழிபாடாக இருப்பினும், கோயில் அமைப்பிலும், கணபதியையே முதலில் வழிபாடு செய்வது வழக்கம்.

உற்சவ மூர்த்திகளை அமைக்கும்பொழுது, பஞ்ச மூர்த்திகளை ஊர்வலமாக அமைப்பர். அவற்றிலும்,  விநாயகரே முதன்மை வகிப்பார். இவரை, சிவனின் 24 மூர்த்தங்களில் ஒன்றாகவே கருதுவர். புராணங்களிலும், பாடல்களிலும், நூல்களிலும், கணபதி பாடலையே முதலில் அமைத்து, அவரை வணங்கிய பிறகே  காரியங்களைத் துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

முதலாம் இராசேந்திர சோழன், தனது போரினால் பெற்ற வெற்றிப் பரிசாக சாளுக்கிய நாட்டில் இருந்து கொண்டுவந்து, தன்னால் நிறுவப்பட்ட சோழர்களின் இரண்டாவது தலைநகரமான கங்கைகொண்டசோழபுரத்தில் வைத்து வணங்கிய பிள்ளையார்.

‘ஓம், சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் தியாயோத் சர்வ விக்னோப சாந்தேயத்’ – என்று, வைணவர்வளின் விஷ்ணு சகஸ்ரநாமம் துவங்குகிறது. எனவே, முழுமுதல் கடவுளாக கணபதிதான் உள்ளார்.

இலக்கியங்களில் கணபதி

சங்க இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இரண்டும் சிறப்பு பெற்றவை. அவற்றில், கணபதியை நேரடியாக குறிப்பவை எதுவும் இல்லை. இருப்பினும், பத்துப்பாட்டில் முதல் பாடலான திருமுருகாற்றுப்படையில் கணபதி பற்றிய குறிப்பு வருகிறது. ‘ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை’ என்று இருக்கிறது. இந்த ஐங்கரன் குறிப்பை பிற்சேர்க்கை என்பர்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின் வந்த இலக்கியங்களிலும், சைவ ஆசாரியர்களும், விநாயகர் துதி பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், அப்பர், இவர்களின் பாடல்களில் விநாயகர் பற்றிய குறிப்புகளைக் காணலாம். நம்பியாண்டார் நம்பி அவர்கள், ‘விநாயகர் திரு இரட்டை மணிமாலை’ என்ற நூலைப் படைத்துள்ளார். சைவ ஆசாரியர்களான திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர், நரசிம்ம பல்லவன், பாண்டியன் அரிகேசரி, மாறவர்மன் மற்றும் மகேந்திரவர்மன், ராஜசிம்மன் போன்ற பல்லவ, பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்த காலத்தில் வாழ்ந்தவர்கள்.

சம்பந்தர் பாடிய துதியில் மிகவும் சிறப்பு  வாய்ந்த பாடல் –

‘படியதன் உரு உமைகொள மிக கரியது,
வடிகொடு, தனதடி வழிபடும் அவரிடம்
கடிகண பதிவர அருளினன் மிகு கொடை
வடிவினா; பயில்வலி வல முறை இறையே’

என்பது ஆகும். அப்பர், கணபதியைக் குறிக்கும்பொழுது, விநாயகர், விக்னேஷ்வரர், விக்னவிநாயகர் என்றே குறித்துள்ளார்.

விநாயகன் என்றால் தடைகளை நீக்குபவன். கணேசன் என்றால் தலைவன் என்று பவிஷ்ய புராணம், வாமன புராணம் போன்றவற்றில் விநாயகர் பற்றிய விளக்கத்தைக் காணமுடிகிறது.

நல்லோரைச் செம்மைப்படுத்தும் கருவியாகத் திகழ்பவன்; இத்தகு பெருமை வாய்ந்த விநாயகப் பெருமான், தமிழர்களுக்கு விநாயக சதுர்த்தித் திருநாளில் அனைத்தும் வழங்கி  அருள வேண்டுகிறேன்.  இவன் திருவடிகளை நாமும்  இந்த நன்நாளில் போற்றித் துதிப்போமாக.

Source…..ச.செல்வராஜ், தொல்லியல் துறை…www.dinamani.com

Natarajan

தெய்வீக இசையின் நூற்றாண்டு!….“சூரிய-சந்திரர்கள் உள்ளவரை உன் புகழ் இருக்கும்.”

இசையோடு பிறந்து, இசையில் வளர்ந்து, இசையில் மூழ்கி முத்துக்கள் எடுத்து இணையற்ற சரித்திரம் படைத்தவர் இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி. அவருடைய நூற்றாண்டு வருடம் ஆரம்பமாகும் இந்நாளில், அவரது நினைவில் சற்று லயித்திருப்போம்!

தன் இசையைக் கேட்கும் ஒவ்வொருவரையும் புனிதப் பயணம் அழைத்துச் சென்று ஆலயங்களைத் தரிசிக்க வைத்த இசையரசி அவர். தியாகராஜரின் கீர்த்தனைகளைப் பாடும்போது, கருணையே வடிவமான ராமனைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவார். முத்துஸ்வாமி தீட்சிதரின் ‘துவஜாவந்தி’ ராகக் கீர்த்தனை மூலம் அனைத்து கலைகளுக்கும் இருப்பிடமான திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியைத் தரிசிக்க வைப்பார். சியாமா சாஸ்திரியின் பாடல்களை எம்.எஸ். இசைக்கும்போது, காஞ்சி காமாட்சியும் மதுரை மீனாட்சியும் அலங்கார தேவதைகளாக அணிவகுத்து நிற்பார்கள்.

1916 செப். 16-ம் தேதி மதுரையில் பிறந்தார் எம்.எஸ். தந்தை சுப்பிரமணிய ஐயர், பிரபல வழக்கறிஞர். தாய் சண்முகவடிவு, வீணை இசைக் கலைஞர். வீட்டில் குஞ்சம்மா என்று செல்லமாக அழைக்கப்பட்டார் எம்.எஸ். 5-வது படிக்கும்போது, ஒருநாள் ஆசிரியர் அடித்துவிட, குஞ்சம்மா மயக்கமாகிவிட்டார். சில நாட்களில் உடல்நிலை சரியான பிறகும், குஞ்சம்மாவை இடைவிடாத இருமல் வாட்டியது. அம்மா சண்முகவடிவின் முடிவுப்படி பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

ஒரு சமயம், சண்முகவடிவுக்கு வெளியூரில் கச்சேரி. குஞ்சம்மாவையும் அழைத்துச் சென்றார். மேடையில் அம்மா வீணை வாசித்துக்கொண்டிருக்க, மகள் வெளியே மணலில் வீடுகட்டி விளையாடிக்கொண்டிருந்தார். கண்திறந்து பார்த்தபோது, குஞ்சம்மா இல்லாததைக் கண்டு பதற்றம் அடைந்தார் சண்முகவடிவு. தேடிப் பார்த்து அழைத்துவரும்படி பக்கத்தில் இருந்தவரைப் பணித்தார். குஞ்சம்மா கண்டுபிடித்து அழைத்துவரப்பட்டார். மேடையில், அந்த 8 வயதுக் குழந்தையைப் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டதும், மகளை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார் சண்முகவடிவு. ‘மராத்தி’பஜன் ஒன்றைக் குஞ்சம்மா பாட, அந்த இனிய குரலில் அங்கிருந்தவர்கள் சொக்கிப்போனார்கள்.

எவரிமாட எம்.எஸ். சுப்புலட்சுமி

குஞ்சம்மாவின் திறமையைக் கண்டறிந்த ரசிகர் ஒருவரின் சிபாரிசின் பேரில், அவருடைய குரலை ஹெச்.எம்.வி. நிறுவனம் பதிவுசெய்து வெளியிட்டது. ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, ‘மரகத வடிவு’ பாடியபோது குஞ்சம்மாவுக்கு வயது 10. ‘மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி’ என்று கிராமபோன் ரெக்கார்டு லேபிளில் பெயர் அச்சிடப்பட்டது. பிறகு, எம்.எஸ்.எஸ். என்பது சுருங்கி, உலகமே இன்றும் என்றும் உச்சரிக்கும் ‘எம்.எஸ்’ ஆனது!

டீன் ஏஜ் பருவத்தை நெருங்குவதற்கு முன்பாகவே எம்.எஸ்ஸின் திருமணம் குறித்து சண்முக வடிவுக்குக் கவலை வந்துவிட்டது. மகளிடம் இதுபற்றிப் பேசினார்.

“எனக்கு இப்போ கல்யாணத்துக்கு அவசரமில்லேம்மா. சங்கீதத்துல நிறைய சாதிக்கணும்னு எனக்கு ஆசை…” என்று தன் எண்ணத்தை உறுதியுடன் தெரிவித்தார் குஞ்சம்மா.

எம்.எஸ். தன் இசைப் பயணத்தைத் தொடரும்பொருட்டு சென்னைக்குப் பயணமானார். “மதுரைலேர்ந்து வந்திருக்கிற சுப்புலட்சுமிங்கிற சின்னப் பொண்ணு ரொம்ப நல்லாப் பாடறாளாமே…” – சென்னை ரசிகர்களின் வாய்மொழி விளம்பரம் மூலமாகப் பிரபலம் அடையத் தொடங்கினார் எம்.எஸ். சென்னையின் சங்கீத சூழ்நிலை, பிறருடன் பழகும் விதத்தில் எம்.எஸ்ஸிடம் மாற்றங்களை ஏற்படுத்தின. கூச்ச சுபாவம் மெல்ல மெல்ல விலகியது.

‘கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியா’வில் இருந்து அழைப்புகள் வந்தன. ‘கோகிலகான எம்.எஸ்.சுப்புலட்சுமி’ என்று கிராமபோன் தட்டில் பெயரை அச்சிட்டார்கள். எம்.எஸ். பாடிய தியாகராஜரின் ‘காம்போதி’ ராகக் கிருதியான ‘எவரிமாட…’ இசைத் தட்டு விற்பனையில் சாதனை படைக்க, ‘எவரிமாட எம்.எஸ்.சுப்புலட்சுமி’ என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டார் எம்.எஸ்!

ஜவாகர்லால் நேருவுடன் எம்.எஸ். சுப்புலட்சுமி.

மியூசிக் அகாடமியில் ஏற்பாடாகியிருந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் கச்சேரி கடைசி நிமிடத்தில் ரத்தாகிவிட்டது. 16 வயதே நிரம்பிய எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு அன்று அரியக்குடியின் மேடையைக் கொடுத்தது அகாடமி. இங்கே மேடையேறிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார் எம்.எஸ்.

பாமரர்கள் மட்டுமல்ல; அன்றைய இசை மேதைகளும் வயது வித்தியாசம் பாராமல் இந்தப் புது வரவை நல்வரவாக ஏற்றுக்கொண்டார்கள். நாகஸ்வர சிம்மம் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, செம்பை வைத்தியநாத பாகவதர், வயலின் மேதை மைசூர் டி.சவுடையா போன்றவர்கள் எம்.எஸ்ஸின் பாட்டுத் திறனை வியந்து பாராட்டினார்கள். கச்சேரியைக் கேட்ட வீணை காரைக்குடி சாம்பசிவ ஐயர், ‘‘குழந்தே… உன் தொண்டைக்குள்ளே நீ வீணையை ஒளிச்சுவெச்சுருக்கே…’’ என்றார்.

அதன் பின்னர், படிப்படியாக மேலேறிச் சென்று உயரம் தொட்டார் அவர். காஞ்சி மாமுனிவரின் அருள் கிடைக்கப் பெற்றார். கடல் கடந்து சென்று கலாச்சாரத் தூதுவரானார். விருதுகள் இவரைத் தேடி வந்தன. ‘பாரத ரத்னா’ வரை உயரிய விருதுகளைப் பெற்றாலும் பணிவின் உறைவிடமாகத் திகழ்ந்து சங்கீத உலகில் கோலோச்சினார் எம்.எஸ். இவையெல்லாம் சாத்தியமானது எப்படி?

1902 செப்டம்பர் 4-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த டி.சதாசிவம், எம்.எஸ். வாழ்க்கையில் இணைந்தது, பின்னவருக்கு மிக முக்கியமான அத்தியாயம். ரயில் பயணம் ஒன்றில் நடந்த இவர்களது முதல் சந்திப்பு, எம்.எஸ். என்கிற மந்திரச் சொல் உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் உச்சரிக்கப்படுவதற்கு வித்திட்டது.

மதுரையில் பிறந்த வீட்டுச் சூழலிலிருந்து சுப்புலட்சுமியை மீட்டெடுத்து, இசை உலகில் யாரும் எட்டாத உயரத்துக்கு விஸ்வரூபம் எடுக்க வைக்கும் பொறுப்பைத் தன் வாழ்க்கையின் குறிக்கோளாகவே அமைத்துக்கொண்டவர் சதாசிவம்.

1940, ஜூலை 10 அன்று சென்னையை அடுத்த திருநீர்மலை கோயிலில் எம்.எஸ்ஸை வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார் சதாசிவம். கல்யாண ஏற்பாடுகள் அனைத்தையும் கவனித்துக்கொண்டவர், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசன்.

எம்.எஸ்ஸின் கற்பனை வளத்துக்குக் கொஞ்சமும் சிக்கல் இல்லாமல் அவருடைய கச்சேரிகளைத் திட்டமிட்டுக் கொடுத்தார் சதாசிவம். ஒரு கச்சேரியில் மெயின் ராகம் எது, சப்-மெயின் ராகம் எது என்று சகலத்தையும் முடிவுசெய்து கொடுத்ததும் அவரே!

எம்.எஸ். பாடிவரும் பக்தி ததும்பும் பஜனைப் பாடல்கள் அனைவரையும் கவர்ந்திழுப்பதைக் கண்ட சதாசிவம், எம்.எஸ்ஸின் பாட்டுத் திறனை முழுவதும் வெளிக்கொண்டுவரும் வகையில், எழுத்தாளர் ‘கல்கி’யுடன் விவாதித்து ‘மீரா’ திரைப்படத்தை உருவாக்கினார். வெள்ளி விழா கொண்டாடிய அப்படத்தில், எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைப்பில் எம்.எஸ். பாடிய பாடல்கள் பெரிய அளவில் வெற்றிபெற்றன. அதில் ‘கல்கி’ எழுதிய ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடல் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கீதமானது!

1947 அக்டோபர் 2.

காந்தியின் பிறந்த நாளில் பாடுவதற்கு எம்.எஸ். அழைக்கப்பட்டார். தவிர்க்க இயலாத காரணங்களால் அவரால் டெல்லி செல்ல இயலவில்லை. சென்னையில் பாடலைப் பதிவுசெய்து ஒலி நாடாவை டெல்லிக்கு அனுப்பிவைத்தார் சதாசிவம்.

அக்டோபர் முதல் தேதியன்று டெல்லியிலிருந்து தகவல் வந்தது. “மேடம்… ‘ஹரி தும் ஹரோ’ என்ற மீராவின் பாடலை நீங்கள் பாடிக் கேட்க வேண்டும் என்று காந்தி விரும்புகிறார். பாடலுக்கு டியூன் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, எந்த ராகமாக இருந்தாலும் உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்பது காந்தியின் விருப்பம்…”

ஆனால், எம்.எஸ். அதற்கு உடன்படவில்லை. அந்தப் பாடலுக்கு இசையமைக்க ஆர்கெஸ்ட்ராவினர் அழைக்கப் பட்டனர். வெவ்வேறு விதமான டியூன்கள் அலசப்பட்டன. அவற்றில் ஒரு டியூன் ஓரளவுக்குத் திருப்திகரமாக இருக்க, ஆல் இந்தியா ரேடியோ அலுவலகம் விரைந்தார் எம்.எஸ். அந்தப் பாடலைப் பாடிப் பதிவுசெய்தார். மறுநாள் காலை விமானம் மூலம் ஒலிநாடா டெல்லிக்குப் பறந்தது!

அக்டோபர் 2-ம் தேதி மாலை, பிரார்த்தனைக் கூட்டத்தில் தான் மிகவும் விரும்பிய பாடலைக் கண்கள் மூடிக் கேட்டு ரசித்தார் காந்தி.

ஜனவரி 30,1948 அன்று மாலை காந்தி சுடப்பட்டார் என்கிற சோகத் தகவல் வானொலியில் கசிந்தது. தேசமே துக்கத்தில் மூழ்க, அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பான பாடல், காந்தியின் பிறந்த நாளுக்கென்று எம்.எஸ். பாடிப் பதிவுசெய்து அனுப்பிய ‘ஹரி தும் ஹரோ’!

விருதுகள் எம்.எஸ்ஸைத் தேடி வந்தன. அதிலும் ஒரு பெரிய விருது அவரது வீடு தேடியே வந்தது. நாட்டின் குடியரசுத் தலைவரே நேரில் கொண்டுவந்து கொடுத்தார்.

2002-ம் ஆண்டு எம்.எஸ்., பண்டிட் ரவிசங்கர், செம்மங்குடி, டி.கே.பட்டம்மாள் ஆகிய நால்வருக்கு மியூசிக் அகாடமியின் பிளாட்டினம் ஜூப்ளி விருது வழங்க அப்துல் கலாம் வந்திருந்தார். உடல் நலக் குறைவு காரணமாக விழாவுக்கு எம்.எஸ்ஸால் செல்ல இயலவில்லை.

விவரம் அறிந்த குடியசுத் தலைவர், விழா முடிந்ததும் எம்.எஸ்-ஸின் கோட்டூர்புரம் வீட்டுக்குச் சென்று, அகாடமியின் விருதையும் பதக்கத்தையும் நேரில் கொடுத்துவிட்டு விமான நிலையம் சென்றார்.

எம்.எஸ்ஸின் பார்வையில் சாதனை

“வாழ்க்கையில் உங்களுக்குப் பூரண திருப்தி கொடுத்தது எதுவென்று நினைக்கிறீர்கள்?” என்று ஒருசமயம் எம்.எஸ்ஸிடம் கேட்கப்பட்டபோது, முதலில் கொஞ்சம் தயங்கிவிட்டு, பிறகு அழுத்தம் திருத்தமாக அவர் சொன்னது:

“நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு திறமையைக் கொடுத்தனுப்புகிறார். நம்மால் இயன்றவரை அந்தத் திறமையைப் பயன்படுத்திக்கொள்கிறோம். என்னைப் பொறுத்தவரை யாருக்கும் நான் எந்தத் தீங்கும் மனசால்கூட நினைத்ததில்லை. அது மட்டும்தான் இன்னிக்கு வரைக்கும் நான் திருப்திப்பட்டுக்கொள்கிற விஷயம். என்னோட சாதனைன்னு நான் நினைக்கிறதும் இதைத்தான்!”

எம்.எஸ். ஆத்ம திருப்திக்காகவும் உலக அமைதிக்காகவும் பாடியவர். கச்சேரிகள் மூலம் வந்த சன்மானத்தைக் கொண்டு நிறைய சொத்துக்களை அவர் வாங்கியிருக்க முடியும். ஆனால், சங்கீதம் தனக்குக் கொடுத்ததைத் தர்ம காரியங்களுக்குத் திருப்பிக் கொடுத்து மன நிறைவு அடைந்தார். ஒரு புள்ளிவிவரத்தின்படி, தர்மமாக எம்.எஸ். கொடுத்த தொகை கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்!

நிறைவாக…

72 ராகங்களில் தொகுக்கப்பட்ட மகா வைத்தியநாத சிவனின் ‘மேள ராகமாலிகை’ பாடலை, காஞ்சி மகா பெரியவரின் வேண்டுகோளின்பேரில் எம்.எஸ். பாடினார்.

“மேள ராகமாலிகையின் வார்த்தைகள், அர்த்தங்களைப் பொதித்துப் பொதித்து அடக்கிய அமைப்பில் இருக்கும். ‘கௌரி மனோஹரி தம்பர சத்தம்’ என்று வந்தால், அதில் கௌரி மனோஹரி என்பது ராகத்தைக் குறிக்கும். ‘ஹரிதம்பர சத்தம்’ என்பது பரமேஸ்வரனைக் குறிக்கும். இந்த இடத்தில், ஒரு கணத்துக்கும் குறைவாக இடைவெளி கொடுத்து இரண்டு அர்த்தங்களும் விளங்கும்படி பாட வேண்டும்” என்று ஆணையிட்ட மகா பெரியவரிடம், “இது எப்படிச் சாத்தியம்?” என்று தன் இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார் எம்.எஸ்.

“நீயா பாடப்போறே? அவ பாடிடுவா, நீ ஏன் கவலைப்படறே?” என்று சொல்லியிருக்கிறார் பெரியவர். அதே மாதிரி, அந்த இடத்தில் உரிய முறையில் துல்லியமாகப் பாடினார் எம்.எஸ்.

ஒலிப்பதிவு முடிந்து ஒலிநாடா வெளியான தருணத்தில் எம்.எஸ்ஸிடம் மகா பெரியவர் சொன்னார்:

“சூரிய-சந்திரர்கள் உள்ளவரை உன் புகழ் இருக்கும்.”

அது சத்திய வாக்கு. பொய்க்காது!

– வீயெஸ்வி

தொடர்புக்கு: vsv1946@gmail.com

 Source….www.tamil.thehindu.com
 Natarajan

” என்னால் பேச முடியுமா …எழுதுவது வேறு ..பேசுவது வேறு….”

எத்தனையோ விஷயங்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையில் – பத்திரிகைகளில் பணி புரியும்போதும், சொற்பொழிவு துறைக்கு வந்த பிறகும் மிகவும் ஆச்சரியப்படத் தக்க வகையில் நடந்திருக்கின்றன… நடந்து வருகின்றன… எல்லாம் நம்மையும் தாண்டிய ஒரு சக்தியின் அருள்தான்!

தெய்வமாகட்டும்; மகான் ஆகட்டும். நமக்கு ஒரு அனுக்ரஹம் இருந்தால்தான், சில நல்லதுகளைப் பண்ண விடும். இல்லாவிட்டால், நாம்பாட்டுக்கு ஏதோ ஒரு வேலையைப் பண்ணிக் கொண்டிருப்போம் – எதைப் பற்றியும் சிந்திக்காமல்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உத்தியோகம்.

கணக்கு எழுதிக் கொண்டிருப்போம். கம்ப்யூட்டர் தட்டிக் கொண்டிருப்போம். ஆட்களை மேய்த்துக் கொண்டிருப்போம். இல்லை நம்மை யாராவது மேய்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், பகவானுக்கே சேவை செய்வது எப்பேர்ப்பட்ட ஒரு உத்தியோகம்.

பகவான் பேரையே சொல்லிக் கொண்டு வாழ்வது, பிழைப்பு நடத்துவது எப்பேர்ப்பட்ட உத்தமமான பணி..

விகடனிலும், திரிசக்தியிலும் சில காலம் இது எனக்கு வாய்த்தது. அதைத் தொடர்ந்து சொற்பொழிவு துறையில்…

திடீரென்று பழைய சம்பவம் ஒன்று என் மனதில் ஏதோ ஒரு ஃப்ளாஷ் பேக் போல் தோன்றும். என் வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை மீண்டும் அசை போட்டால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். அப்படி நிறைய இருக்கு.

‘எப்படியும் இந்த விஷயத்தை இன்று இரவு பதிவு செய்து விட வேண்டும்’ என்று வெளியில் எங்கோ ஒரு ஷூட்டிங்கிலோ, சபாவிலோ இருக்கும்போது தீர்மானம் செய்வேன். வீட்டுக்கு வந்ததும், ஒரு ஆகாரத்தை உள்ளே தள்ளி விட்டு, முகநூல் மற்றும் ஜிமெயிலை கொஞ்ச நேரம் மேய்ந்து விட்டு, ஒரு சில தொடர்களுக்கும், உபன்யாசத்துக்கும் தகவல்களை சேகரித்து வைத்து விட்டுப் படுக்கப் போய் விடுவேன்.

இதை சோம்பேறித்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். 24 மணி நேரத்தில் என்னால் பலதுகளை பண்ண முடியவில்லை.

இருந்தாலும், அவ்வப்போது சில வேளைகளில் பதிவிடுகிறேன்.

அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இன்று மதியம் பெங்களூர் நண்பரும் மகா பெரியவா பக்தருமான திரு கார்த்தி நாகரத்தினம் அவர்கள் எனக்கு நினைவுபடுத்தினார்.

நான் கிட்டத்தட்ட மறந்து விட்டேன். அவர் சொன்ன பிறகுதான் எனக்கு அப்படியே நினைவுக்கு வந்தது.

எப்படி நினைவுபடுத்தினார் தெரியுமா?

மகா பெரியவா சொன்ன பொன்னான ஒரு செய்தியை எனக்கு இன்பாக்ஸில் மெஸேஜ் பண்ணி விட்டு, ‘அண்ணா… நினைவிருக்கா… 2012 அக்டோபர்ல பெங்களூர் வந்தேள்… அப்ப, இந்த உபன்யாசத் துறைக்கு எப்படி வந்தேள்னு சொன்னேளே… இப்ப நான் உங்களுக்கு அனுச்சிருக்கற இந்த பெரியவா வாக்கியத்தையும் படிச்சுப் பாருங்கோ… பெரியவா கருணை புரியும்’ என்றார்.

இத்தகைய ஜனங்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுக்கு விலை இல்லை. ஆத்மார்த்தம் மட்டுமே தெரிகிறது.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

கார்த்தி எனக்கு அனுப்பிய மகா பெரியவா திருவாக்கை இங்கே அப்படியே போட்டிருக்கிறேன். இதைப் படித்து விட்டு, அதன் பின் தொடருங்கள்…

…………………………

“அநுஷ்டானமில்லாதபோது இந்திரியம் ஓடுகிறபடி ஓடவேண்டுமென்று தோன்றுகிறது. ‘ஜனங்கள் இப்படிப்பட்ட சரக்குதான் கேட்கிறார்கள்’ என்று அவர்கள் தலையில் பழியைப் போட்டுவிட்டு, கன்னா பின்னாப் பாட்டுப் பாடுகிறார்கள், புலன் வெறியைத் தூண்டிவிடுகிற ரீதியிலேயே எழுதுகிறார்கள், ஸினிமா எடுக்கிறார்கள், சித்திரம் போடுகிறார்கள். ஜனங்களும் அவர்கள் தலையில் பழியைத் திருப்பிப் போட்டு அவர்கள் இப்படிப்பட்ட சரக்குகளைத்தான் தருவதால் தாங்கள் அதையே எடுத்துக் கொள்ளும்படி இருக்கிறது என்கிறார்கள்.

இதிலே ஜனங்களைவிடக் கலைஞர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களாக இந்தக் கலைகளை அப்யஸித்துக் கொண்டிருக்கிறவர்களுக்குத்தான் அதிகம் பொறுப்பிருக்கிறது. இப்போது கண்டதை எழுதியும், பாடியும், நடித்தும், படம் பிடித்தும் கீர்த்தி, தனம் எல்லாம் ஸம்பாதித்து விடலாம். ஆனால், ‘இத்தனை ஜனங்களைக் கெடுத்ததற்கான தோஷத்தையும் கண்ணுக்குத் தெரியாமல் ஸம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு இதற்காக நாம் ஒருத்தனுக்குப் பதில் சொல்லியாக

வேண்டும்’என்ற நினைப்பு அவர்களுக்கு இருக்க வேண்டும்.

மளிகை ஸாமானில் கலப்படம் பண்ணினால் குற்றம்;குடி தண்ணீரைக் கெடுத்தால் குற்றம் என்றால் நேரே மநுஷ்யனின் ஆத்மாவையே கெடுப்பது இவற்றைவிடக் குற்றம்தானே? கலப்படத்துக்காக தண்டிக்கிறவன் நம் மாதிரி ஒருத்தன்தான். அவனிடமிருந்து தப்பியும் விடலாம். அல்லது லஞ்சம் கொடுத்து ஸரிப்படுத்திடலாம். ஆனால் தன் ஆத்மாவையும் கெடுத்துக் கொண்டு, மற்றவர்களையும் கெடுத்ததற்காக ஒருத்தனைச் சிக்ஷிக்கிறானே, அவனிடமிருந்து தப்பவே முடியாது! அவனை நாம் வசியம் பண்ணிக் கொள்ளவும் முடியாது! இந்த நினைப்பு இருந்து விட்டால் கலைகளில் ஈடுபட்டவர்கள் தப்பு வழிக்குப் போக மாட்டார்கள்.

தெய்வ நினைப்பு, பய பக்தி அநுஷ்டானம் இவை போனதில்தான் அடக்கம் போய்விட்டது; இந்திரியங்களின் வேகம் குறைவதால் ஏற்படுகிற பக்வம் வராமலே போகிறது. இதோடுகூடக் ‘கலைஞர்கள்’ என்று தாங்களாகவே தங்களுக்குக் கௌரவம் கொடுத்துக் கொண்டு பொதுஜனங்களும் அதில் மயங்கி இவர்களைக் கொண்டாடி முகஸ்துதி பண்ணுவதில் அஹம்பாவம் ஜாஸ்தியாகிவிடுகிறது.

பழைய காலத்தில் போல, வித்வான்களைக் கூட்டி ‘அரங்கேற்றம்’ என்று செய்து, அவர்கள் ஒப்புக் கொண்டால்தான் ஒரு புஸ்தகத்தையோ, நாடகத்தையோ பிரசாரம் பண்ணலாம் என்றுமில்லாமல், ‘கருத்து ஸ்வதந்திரம், எழுத்து ஸ்வதந்திரம், பேச்சு ஸ்வதந்திரம்’ என்று வேறு ஏற்பட்டிருப்பதால், எதை வேண்டுமானாலும் ஆடிப் பாடி ஊரை வளைக்கலாமென்று நடந்து வருகிறது.

சின்ன வயதிலிருந்தே மதக் கல்வி, மதாநுஷ்டானங்கள் இருந்தால் தான் ஸாத்விகம் ஏற்படும். அப்போதுதான் எத்தனை ஆட்டம், பாட்டம் இருந்தாலும் அதுகளும் முடிவில் உயர்ந்த ஸாத்விக லக்ஷ்யத்தில் சேர்ப்பதாக இருக்கும். முற்காலங்களில் இப்படித்தானிருந்தது. அநுஷ்டான ஸம்பந்தம் துண்டித்துப் போனபின்தான் ராஜஸ, தாமஸப் போக்குகளையே தூண்டிவிடுவதாக இந்தக் காந்தர்வ கலைகள் ஆகியிருக்கின்றன.”

……………..

கார்த்தி அனுப்பிய செய்தியைப் படித்து விட்டீர்களா?

2012 அக்டோபரில் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக நண்பர்கள் கார்த்தி மற்றும் ஸ்ரீதர் சுவாமிநாதன் என்னை பெங்களூருக்கு அழைத்தார்கள். அப்போதுதான் இந்தத் துறையில் நான் நுழைந்திருந்தேன்.

அப்போது நண்பர்கள் கார்த்தி மற்றும் ஸ்ரீதரிடம், ‘நான் இந்த உபன்யாசத் துறைக்கு வராவிட்டால், தமிழ் தொலைக்காட்சி சீரியல்களுக்கு வசனம் எழுதப் போயிருப்பேன்’ என்று சொன்னேன்.

ஆம்! 2012 ஏப்ரல் வாக்கில் பணியில் இருந்து வெளியே வந்தபோது அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன்.

எழுத்தைத் தவிர, எதுவும் தெரியாது! மீண்டும் பத்திரிகைக்குத்தான் போக வேண்டும் என்று முயற்சித்தேன். ஆனால், சரிவரவில்லை.

அப்போதுதான் என் பத்திரிகைத் துறை நண்பர் ஒருவர், ‘பத்திரிகைகள்ல வேலை செஞ்சது போதும் சுவாமீ… டிவி சீரியல்களுக்கு வசனம் எழுத வாங்க… மாசம் நல்லாவே சம்பாதிக்கலாம்’ என்று புள்ளிவிவரத்துடன் பேசினார்.

அவர் சொன்ன தொகையும், விவரித்த விதமும் என்னைக் கவர்ந்தது.

ஒரே ஒரு தர்மசங்கடம் – கடந்த பத்து வருடங்களாக பல கோயில்களுக்கும் மகான்களின் அதிஷ்டானங்களுக்கும் போய் தரிசித்து ஏராளமான ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன்.

திடீரென சீரியல்களுக்கு வசனம் எழுதப் போனால்… என்னை பலவாறு மாற்றிக் கொள்ள வேண்டுமே என்று தயங்கினேன்.

ஆனாலும், ஜீவனம்தான் அவ்வப்போது கண்களை மறைத்தது.

அப்போது மகா பெரியவாளிடம் ஒரே ஒரு கோரிக்கை வைத்தேன். ‘பெரியவா… இத்தனை வருடமா ஆன்மிகத்துல இருந்துட்டேன். நிறைய எழுதிட்டேன். இனி தொடரப் போகிற எனது பணி ஆன்மிகத்துக்கா, டிவி. சீரியல்களுக்கா? நீங்களே முடிவு பண்ணுங்கோ’ என்று வேண்டினேன்.

பெரியவா கண் திறந்தார்.

அடுத்து ஒரு சில நாட்களிலேயே மகா பெரியவாளின் பரிபூரண அருளோடு என் வாழ்க்கைப் பாதை மாறியது.

எழுத்தில் இருந்து பேச்சுக்குப் பாதை திரும்பியது.

என்னால் பேச முடியுமா?

எழுதுவது வேறு. பேசுவது வேறு.

எழுத்து என்றால், திரும்பத் திரும்ப எடிட் செய்து ஒரு கட்டுரையை வெளியிடலாம். ஆனால், பேச்சு அப்படி இல்லை. பேசினால் அது ‘லைவ்’.

பெரியவாதான் இதை சாதித்துக் கொடுத்தார்.

கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த தெய்வம் சத்தியமாக இருந்து என்னைக் காப்பாற்றிய விதம் என் நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும்.

பேசவே தெரியாத ஒருவனை பேசவும் வைக்கிறார்.

கார்த்தி இன்று மதியம் இதைத்தான் சொன்னார்: ‘அண்ணா… சொற்பொழிவுத் துறைக்கு வந்து நேற்றோடு மூன்று வருடம் பூர்த்தி ஆகிறது. இந்த பெரியவா போஸ்ட்டிங்கைப் பார்த்ததும், மூன்று வருடங்களுக்கு முன் பெங்களூரில் நீங்கள் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. எல்லாம் பெரியவா கருணை’

மகா பெரியவா சத்தியம்!

என்னைத் தடம் புரள விடவில்லை.

தன் பணிக்கே பயன்படுத்திக் கொண்டார்.

இன்று எத்தனையோ சேனல்கள், மேடைகள், வெளிநாடுகள் என்றெல்லாம் சென்றாலும், எல்லா புகழும் மகா பெரியவாளுக்கே!

வெகு சாதாரண மக்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுதான் எனக்குப் பெரும் பலம் – ‘சாமீ… எங்களுக்குப் புரியும்படியா எளிமையா சொல்றீங்க… நாங்களும் இப்ப காஞ்சிபுரம் போக ஆரம்பிச்சிருக்கோம்.’

இத்தகைய ஜனங்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுக்கு விலை இல்லை. ஆத்மார்த்தம் மட்டுமே தெரிகிறது.

பெரியவா சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

Source ….A Mail from my Friend Shri. Swaminathan  to me this Morning…

Natarajan

How Savithri Has Been Playing Mother to Destitute Elderly Women for 37 Years …

In 1978, Savithri Vaithi started an old age home, Vishranthi, for abandoned and destitute elderly women in Chennai. Thirty-seven years later, and at the age of over 80 now, Savithri still spends her time taking care of these women who have no one else to rely on. Here’s her story.

Savithri Vaithi’s wrinkled face hides hundreds of stories about the homeless elderly women she has taken care of and their painful days that she has tried to ease. With no family to take care of them, these destitute women have landed up at Savithri’s doorstep and she has taken them in, with kindness and compassion, one by one.

“It is not an old age home where kids can drop their mothers off. It is a home only for those who have no one and nowhere to go,” explains Srilekha, Savithri’s niece, brought up by her.

Several hundred women have knocked on the doors of Vishranthi in all these years, looking for some help and rest in their twilight years. Savithri has given them the dignity they deserve.

Savithri (center) along with Srilekha (right) at the CNN IBN awards.

Savithri is 80 and not in very good health now. “But she is still worried about all those ladies living in Vishranthi. She still has the final say and she will always be the soul behind this initiative,” says Srilekha.

Savithri started working in the social sector when she was just 16. She worked in the slums of Choolai in Chennai, as part of a group called ‘Barefoot Walkers’ who would take care of the health, education and other needs of the slum dwellers.

Later, she started a book bank, educated underprivileged kids, and worked for the homeless and needy.

Savithri with one of the earliest Governor of Tamil Nadu Late Shri Prabhudas Patwari who laid the foundation of Vishranthi for the buidling on which it stands tough to this day

Savithri with one of the earliest Governors of Tamil Nadu, Late Shri Prabhudas Patwari, who laid the foundation of the building on which Vishranthi stands to this day –

But it was Vishranthi that gave Savithri’s life a new purpose. She started it in the late 70s with support from Help Age India and Dr. Natrajan, a geriatrist at the General Hospital in Chennai.

“The idea was to bring together some housewives who wanted to do something in their free time and leverage their energy to do something good for the elderly. Savithri started identifying abandoned women at the railway stations, roadside, etc., and bringing them to her old age home. Gradually, the news spread and hundreds of women started coming to Vishranthi,” says Srilekha.

Wife of A.V. Meiappa Chettiyar donated an acre of land in Palavakkam and Help Age India raised funds for the construction of the building. And this is how Vishranthi moved from a small rented house to bigger premises that now house over 150 elderly women and a staff of about 50.

For all of them now, Savithri is the family that they had once hoped would give them respect and peace in their old age.

From providing them with healthy food to having them undergo regular medical checkups, Savithri makes sure that they lack for little. And eventually, she performs their last rites with the dignity and grace they deserve.

Savithri is a new family for the abandoned destitute women.

We have welcomed new women here and even seen their deaths. We get attached to all of these ladies. It is very difficult to see them die,” says Srilekha.

“In earlier times, women were not allowed to go to the cremation ground. But Savithri went there every time one of the ladies from our old age home was taken there. She received strong opposition but she stood against that boldly. Thanks to her, those challenges are not being faced by us now because she raised her voice against them back then,” she adds.

After a woman dies in the old age home, the staff at Vishranthi arrange to donate the organs of the deceased. They try to trace the family to participate in the last rituals. But if the family cannot be found, the women are cremated with due respect.

“These old age homes are full of stories of hundreds of women — each one more heartbreaking and thought provoking than the other,” says Srilekha.

Though Savithri is very sick and immobile to take care of the home by herself now, the administration of Vishranthi is being ably carried out in the same standard that she had set, by a Board of Trustees which changes every two years.

She is leaving behind a legacy that we all will cherish. Her dream is our dream now and we will make sure we keep growing and taking care of these needy women,” concludes Srilekha.

To know more about their work, contact them at – vishranthi.trust@yahoo.com or lekha.shri@gmail.com

Source…www.the betterindia.com

Natarajan

There Is Something Unique at This Year’s Global Investors Meet. And You Must Check It Out….

The Global Investors Meet in Chennai has begun, and this time, it has something unique. Some great products made by jail inmates of Tamil Nadu will also be at display during the event to showcase the amazing talent of the inmates.

The two-day long Global Investors Meet (GIM) in Chennai kick-started on Wednesday, Sept. 9, and is expected to attract investments of about Rs. 1 lakh crore for Tamil Nadu.

But this year, GIM is bringing a lot more to the table than just crores of investments. The global meet is also displaying products manufactured by jail inmates in Tamil Nadu.

The meet which is being organised at the Chennai Trade Centre has textile products, soaps, phenyl, tags, wax, boots and other products which have been manufactured by the prison inmates, on display.

gim1

Photo for representation only. Source: www.prisons.tn.nic.in

The prisoners in the Tamil Nadu jails are given training in many things. These include LED bulb making, candle making, bread making, four-wheeler and two-wheeler repair, computer hardware training, sanitary napkin making, music, information and communication vocational technology, paper manufacturing, fashion designing, tailoring, cooking, carpentry, screen painting, drawing, wiring and much more.

Additional director-general of police, J K Tripathy talked about the amazing products made by the jail inmates at the event.

He also said that the products are competitive and cheaper when compared with those of other leading manufacturers.

In case you are in Chennai, and want to check out these awesome products, be a part of GIM. Read more about the event here.

Source….Shreya Pareek….www.the betterindia.com

Natarajan

 

” முப்பாட்டன் முண்டாசு கவிஞன் பாரதிக்கு …”

முப்பாட்டன் முண்டாசுக்காரனுக்கு!

‘தனியொரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்’
என்று மிரட்டினாய்
அரசு பயந்து அமைத்தது
அம்மா உணவகம்!

‘ஓடி விளையாடு பாப்பா’ என்றாய்
ஓயாமல் விளையாடுகிறோம்
வீடியோ கேம்!

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்றாய்
ஜாதிகள் இல்லாமல் போகவே செய்கிறோம்
கவுரவக் கொலைகளால்!

‘ஆடுவோமே
பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று’என்றாய்
ஆட்டமாய் ஆடி
பாடாய் படுத்துகின்றனர்
ஆட்சி, அதிகாரத்திலிருப்பவர்கள்!

‘மனதில் உறுதி வேண்டும்’ என்றாய்
நான்கு குவார்ட்டர் அடித்தாலும்
தள்ளாடாமல் நிற்பதற்கு தான்
டாஸ்மாக்கில் பயிற்சி எடுக்கிறோம்!

காணி நிலம் வேண்டும்’ என்று
ஆசை படச் சொன்னாய்…
புறம்போக்கு நிலங்களையும்
வளைத்து விட்டோம்!

‘சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்’
என்றதை செய்து பார்த்து
சேது சமுத்திரத் திட்டத்தில்
பைசா பார்த்து விட்டோம்!

‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று
பாடத் தான் முடிகிறது
பாலியல் வன்முறைகளைப் பார்த்து!

‘சொல்லடி சிவசக்தி…
எனை சுடர் விடும்
அறிவுடன்
ஏன் படைத்தாய்’ என்று
உன்னோடு சேர்ந்து
பாடி அழத் தான் முடிகிறது
வேறு வழியற்று!

அ. யாழினி பர்வதம்,
சென்னை.

Source…www.dinamalar.com

Natarajan

பிரதமரிடம் மாணவி கேட்ட கேள்வி ….

“என்னால் எந்த வகையில் நாட்டுக்கு சேவை செய்ய முடியும்? என்பதை சொல்லுங்கள்!”  என கலந்துரையாடலின்போது பிரதமர் மோடியிடம் நெல்லை மாணவி விசாலினி கேள்வி எழுப்பினார்.

நாடு முழுவதும் ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேரடியாக உரையாடும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக தமிழகத்தில் இருந்து நெல்லை மாணவி விசாலினி தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சங்கர் காலனியைச் சேர்ந்த மாணவி விசாலினி, 15 வயது நிரம்பியவர். தற்போது ஐ.ஐ.பி. லஷ்மிராமன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவரும் விசாலினியின் நுண்ணறிவுத் திறன் (ஐ.க்யூ) 225.

இது  மிகவும் அதிகம் என்பதால், சர்வதேச சாதனைப் புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்று உள்ளது. என்ஜீனியரிங் முடித்த மாணவர்கள் எழுதும் கணினி தேர்வை, தனது 10வது வயதிலேயே எழுதி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். 10வது சர்வ தேச கணினி மாநாட்டினை துவக்கி வைக்கும் பேச்சாளராக அண்மையில் அழைக்கப்பட்டு, அதில் பங்கேற்று உரையாற்றினார்.

அத்துடன், கூகுள் நிறுவனம் நடத்திய சர்வதேச உச்சி மாநாட்டிலும் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்ட விசாலினி, அதில் ஒரு மணி நேரம் பேசினார். அவரது திறமையின் மூலம் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) நேரடியாகப் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இந்த நிலையில் பிரதமருடன் உரையாட,  மத்திய மனித வள மேம்பாட்டு துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரதமரிடம் கேள்வி கேட்கும் 10 பேர் கொண்ட மாணவர்கள் பட்டியலில் விசாலினி பெயர் இடம் பெற்று இருந்தது.

இதற்கான நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. டெல்லி, மணிப்பூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட விசாலினி, ”எனக்கு நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற ஆசையும், ஆர்வமும் அதிகமாக உள்ளது. மாணவியாகிய நான் எந்த வகையில் நாட்டுக்கு சேவை செய்ய முடியும்? என்பதை சொல்லுங்கள் சார்” என ஆங்கிலத்தில் கேட்டார்.

அவரது கேள்வியை கேட்டதும் வியப்படைந்த பிரதமர் மோடி, ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியில் பதில் அளித்தார். ”இந்த வயதிலேயே நாட்டுக்கு சேவை செய்ய ஆர்வமா? நாட்டுக்கு சேவையாற்ற அரசு ஊழியராகவோ, அரசியல்வாதியாகவோ, ராணுவத்தில் சேர்ந்தோ சேவை செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை.

ஒவ்வொருவரும் அவரவர்க்கு முடிந்த வகையில் நாட்டுக்கு சேவை செய்யலாம். நீங்கள் உங்கள் வீட்டில் தேவை இல்லாமல் மின்சாரம் இயங்குவதை நிறுத்தினாலே நாட்டுக்கு ஆற்றும் சேவைதான். ஸ்கூட்டரில் செல்லும்போது போன் வந்தால் வாகனத்தை நிறுத்தி விட்டு பேசினால் எரிபொருள் மிச்சமாகும். கல்வி அறிவு இல்லாத மக்களுக்கு கற்றுக் கொடுப்பது மிகப்பெரிய சேவை. இது போன்ற சிறிய செயல்களை செய்வதன் மூலமாகவே கூட நாட்டுக்கு சேவை ஆற்ற முடியும்” என்றார்.

Source….www.vikatan.com

Natarajan

வணக்கம் ஆயிரம் என் அன்பு ஆசிரியருக்கு …

A Tribute to my Dear Teacher BRO.ANSELM  on TEACHERS DAY…5th September

Natarajan

Bro.Anselm ….My Teacher ….a Friend , Philosopher and Guide to me ….

Image

Dear Brother..

Every year , on this DAY..5 SEP….Teachers Day… i used to talk to you over Phone and seek your  Blessings …. For the third year in a row , I miss that call today .  I MISS YOU … Brother…

I send my Regards and Respests  to You on this TEACHERS DAY, …. thro ” this Blog Post .  I am sure  Your Blessings and Good Wishes are  always available in plenty to me  and my family  on this Day …and for many more days to come ….

with affectionate Regards,

Your “Raja’ ….Natarajan.

 

BRO.ANSELM … My Teacher

….In 1965 at my age of 15 he handed over my SSLC BOOK in person to me and wished me well….The bond between me and my teacher however  continued  further… I was so emotionally attached to him that we used to be in touch with each other till the  Christmas in 2012. …When i talked to him after receiving his affectionate Christmas card in DEC2012, he was telling me that he would be meeting me  in Feb 2013, at chennai when he  comes down to Chennai from Yercaud for his medical checkup.

 

Perhaps this is the first time , he was not able to keep up his words ….One of Santhome Montford Brothers called me on the night of 7 Jan2013  and told me that our affectionate BRO.ANSELM has  left all of us in lurch and merged with JESUS on 7th evening at Yearcud Montford School.

He was not only my Teacher….but a Good Friend, Philosopher and Guide at all times ….I am sure many of his students would miss him a lot like me.. on this DAY….

 

Here is a Poetical Tribute to that Great Personality.

அன்பும்  அறிவும் பண்புடன் பாசமும்
 ஒன்றுக்கு  ஒன்று குறையாமல்
 என்றும்  எங்க வாழ்வில் இருக்க
 அன்றே வழி காட்டிய ஆசான்  அய்யா  நீ !!!
 பள்ளி கணக்கில் கூட்டலும் கழித்தலும் உண்டு
 ஆனால் வாழ்க்கையின் ஒழுக்க  கணக்கில் கூட்டலும்
  பெருக்கலும்  மட்டுமே என்று   சொன்னவன் அய்யா நீ !!!!
 உன் மாணவன் நான் …இன்றும் உன் மாணவன்தான் !!!!
 நீ சொல்லி கொடுத்த ஒழுக்க கணக்கில் இருந்து  சிறிதும்
 வழுக்காமல் நான் இருக்க நீதானே காரணம் அய்யா !!!!!
 அழகான உன் கையெழுத்து   எவ்வளவு  பேர்
  தலை எழுத்தை  மாற்றி இருக்கு …உனக்கு தெரியுமா அய்யா !!!
  எந்த வயசிலும் உன் கண்டிப்பும் கனிவும் உனக்கு ஒரு அடையாளம் !!!!
  வருடம் தப்பாமல் எனக்கு கிடைக்கும் உன்னுடைய கிறிஸ்துமஸ்
  வாழ்த்து அட்டை , எனக்கு ஆண்டவன்  பிரசாதம் !!!!
  ‘ராஜா  ..ராஜா ” என்று  நீ என்னை கூப்பிடும்போது  உன்
  அன்பு  சாம்ராஜ்யத்தின் ராஜாவாக  நான் இருப்பேனே அய்யா !!!!
   உன்னுடைய   Presence   எப்போதும்  இருக்கும் என்று நான்
   எண்ணிய  வேளையில்  காலத்தின் கரும்பலகை சொல்கிறது
   எண்ணிய  வேளையில்  காலத்தின் கரும்பலகை சொல்கிறது
   எனக்கு…   நீ    ABSENT     என்று   !!!!!
  நீ  இல்லாத இந்த உலகம்   வெறுமை  வெறுமை ..இது
  நிச்சயம்  கொடுமை  கொடுமை !!!!
  பளிச்சென்று  ஒரு பதில் வேண்டும்  எனக்கு ….நீ
  எப்போ மீண்டும்    PRESENT       ஆவாய்  அய்யா!!!!!
Natarajan

அன்பாசிரியர் 2 – தர்மராஜ்: ஊராட்சிப் பள்ளி ஹை-டெக் ஆசான்!

 

ஆசிரியர் எஸ்.தர்மராஜ் | படம்: எம்.சத்யமூர்த்தி

ஆசிரியர் எஸ்.தர்மராஜ் | படம்: எம்.சத்யமூர்த்தி

| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல் அடையாள அணிவகுப்புத் தொடர் இது. |

நீலகிரி மாவட்டத்தின் மூலையொன்றில் இருக்கும் தேனாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர், தேசிய அளவில் புதுமையான கற்பித்தல் முறை போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார். மத்திய மனிதவள அமைச்சகம் நடத்திய அப்போட்டியில் கலந்து கொள்ளத் தமிழகத்தில் இருந்து தேர்வான ஆறு பேரில் ஆசிரியர் தர்மராஜும் ஒருவர். தகவல் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில், புதுமையான முறையில் கற்பித்ததற்கான பரிசு அது. தொழில்நுட்பம் வழியாக மட்டுமே பயணிக்காமல் பழங்குடி இன மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பாடுபடுபவர்.

ஆசிரியர் தர்மராஜின் பயணத்தை, அவர் வழியாகவே கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

“என்னுடைய சொந்த ஊர் கோத்தகிரி. படித்து முடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில், முதுகுளம் என்ற ஊரில் ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில், கிராமத்திலிருக்கும் பள்ளியில் சேர்ந்துவிட்டோமே என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால் அங்கு படித்த மாணவர்களின் ஆர்வம், என் ஆதங்கத்தைத் தூக்கியெறிந்தது.

வழக்கமான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைப் புதுமையான முறையில் கற்பிக்க எண்ணினேன். தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்தித்தாள்கள் வாங்கப்பட்டன. மாணவர்கள் தினமும் படித்துவிட்டு, காலை பிரேயரில் அதனை வாசிக்க வேண்டும். இதனால் அவர்கள் நாட்டு நடப்புகளை அறிந்து கொண்டதோடு, மொழியறிவும் வளர்ந்தது. ஓவிய வகுப்புகளின்போது, பத்திரிகைகளில் வரும் கேலிச் சித்திரங்களை மாணவர்கள் கரும்பலகைகளில் வரைய வேண்டும்.

வேதியியல் பாடத்தில் தனிம அட்டவணைகளில் இருக்கும் தனிமங்களின் அணு எண், நிறை எண், அணு எடை ஆகியவற்றை எண் வரிசை அடிப்படையில் கற்றுக்கொடுத்தேன். ஆர்வமாய்க் கற்றவர்கள், நாட்கள் செல்லச் செல்ல, அப்படியே அதை ஒப்பிக்க ஆரம்பித்தனர்.

விளையாட்டு மைதானத்தில் சமூக அறிவியல்

அதுபோக சமூக அறிவியலையும் ஆர்வத்துடன் படிக்க, செயல்முறைகளோடு கற்பிக்கலாம் என்று தோன்றியது. இந்திய வரைபடத்தைக் கருப்பொருளாக எடுத்து, பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வரையும் எண்ணம் வந்தது. ஊருக்குப் போகும்போது, ஊட்டியில் இருந்து புல் கொண்டு வந்தேன்; அதை மைதானத்தில் வளர்க்கத் தொடங்கினோம். புற்கள் புல்வெளியாய் மாறத் தொடங்கியதும், இந்திய எல்லைகளுக்கு ஏற்றவாறு, புல்வெளியைச் சீர்ப்படுத்தினோம்.

இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா ஆகிய நீர்நிலைப் பகுதிகளை ஏற்படுத்த, சுமார் நான்கரை அடிக்குப் பள்ளம் தோண்டினோம். தண்ணீர் வற்றாதவாறு அதில் கான்கிரீட் தளம் போட்டு, தண்ணீர் பாய்ச்சினோம். மேலே இமயமலை, பர்வதை மலைகளுக்குக் கற்கள் இட்டு நிரப்பினோம். வெளியிலிருந்து யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், ஆசிரியர்களும் மாணவர்களுமே இதை செய்து முடித்தோம். மாநில எல்லைகள், தலைநகரங்கள், தொழில்பேட்டைகள் ஆகியவற்றையும் அதில் குறித்தோம். மாணவர்கள் சலிக்காமல் இந்தியா குறித்த கேள்வி- பதில்களைக் கற்றுக்கொண்டே இருந்தனர்.

2002- 2003-ம் ஆண்டுவாக்கில், தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எங்கள் பள்ளியிலே முதல்முறையாக அதை ஏற்படுத்தினோம்.

பாடம் தாண்டி…

வழக்கமான பாடத்திட்டங்களோடு நின்றுவிடாமல், கல்வி தாண்டி, வேறு தளங்களிலும் பயணிக்கத் தோன்றியது. கூடுதல் கல்விசார் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தோம். மாவட்ட அளவில் நடக்கும் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் எங்கள் பள்ளி தனித்துப் பேசப்பட்டது. அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் கருத்தரங்குகள் நடைபெறும் இடங்களில் மாணவர்களால் வரையப்பட்ட ஓவியக் கண்காட்சிகளை நடத்தினோம்.

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை இலக்கியக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாடகம், விவாத மேடை, சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், மேடைப்பேச்சு ஆகியவை நடத்தப்பட்டன. மாணவர்கள் வெகு விரைவிலேயே எல்லாத் துறைகளிலும் கற்றுத்தேர்ந்தனர். எட்டாம் வகுப்பு முடித்து, உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள மாணவர்கள் இவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

இயற்கை மீதான அக்கறையை வளர்த்தெடுக்கும் பொருட்டு, மொட்டை மாடித் தோட்டத்தை வைத்தோம். தொட்டிகளில் செடிகள் வைக்காமல், மண் கொண்டுபோய், பாத்தி கட்டினோம். ஊட்டியில் இருந்து பூச்செடிகள் எடுத்து வந்து, மாடியில் நட்டோம். மாணவர்களின் முறையான பராமரிப்புக்குப் பிறகு, பள்ளியே நந்தவனமாகப் பூத்துக் குலுங்கியது” என்கிறார்.

மாணவர்களே இல்லாத பள்ளிக்கு வந்த மாற்றல்

கோத்தகிரி மாவட்டத்தில் தேனாடு என்னும் ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளி ஒன்று, 4 மாணவர்களுடன் மூடப்படும் நிலையில் இருந்தது. அங்கிருந்த ஆசிரியர், 4 மாணவர்களுக்கும் டிசி கொடுத்து, வேறு பள்ளிக்கு மாறச் சொல்லிவிட்டார். இந்நிலையில் மாற்றலாகி, தேனாடு வந்து சேர்ந்தார் ஆசிரியர் தர்மராஜ்.

அங்கிருந்த பள்ளியின் சுவர்களில் விலங்குகள், தாவர வகைகள், நிலங்களின் வேறுபாடுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை ஓவியங்களாக வரைந்தார். அந்த நான்கு மாணவர்களையும் அழைத்துக் கொண்டு, வீடு வீடாகச் சென்று, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மெல்ல மெல்ல அப்பள்ளியின் மீது மக்களுக்கு ஈடுபாடு வர ஆரம்பித்தது. மாணவர்கள் சேர ஆரம்பித்து, கல்வியும் கற்கத் தொடங்கினர்.

முளைத்த கணிப்பொறி ஆர்வம்

ஆசிரியர் தர்மராஜ், 2005-ம் ஆண்டு வரைக்கும் கணிப்பொறி என்றால் என்னவென்றே தெரியாமல்தான் இருந்திருக்கிறார். பாடப் புத்தகங்களை வைத்து மட்டுமே கற்பித்தார். 2006-ல் சென்னையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கணிப்பொறி குறித்த பயிற்சி எடுத்தவர், அங்குதான் முதன்முதலில் மடிக்கணினியையே கண்டிருக்கிறார்.

அது குறித்து ஆர்வமாகப் பேசுபவர், “அப்போதுதான் முதன்முதலாக அந்தக் கறுப்பு நிறத் தோஷிபாவைப் பார்த்தேன். அபூர்வப் பொருளாகக் காட்சி கொடுத்தது அது. அங்கிருந்த அதிகாரியிடம், இதைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்டேன். உடனே அவர், அதை உயிர்ப்பித்து, அடிப்படைச் செயல்பாடுகளைக் கற்றுக் கொடுத்தார்” என்கிறார்.

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்திறங்கிய ஆசிரியர் தர்மராஜ், நண்பர்கள் சிலரின் உதவியுடன் மடிக்கணினி ஒன்றை வாங்கிய பின்னரே, வீடு திரும்பினார். மறுநாள் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகூட இல்லாத தேனாடு பள்ளிக்கு, அக்கணினியை எடுத்துச் சென்றார். காலையில் வீட்டிலேயே சார்ஜ் செய்து பள்ளிக்கு எடுத்து வந்து, மதியம் வரை தனக்குத் தெரிந்த அடிப்படை விஷயங்களை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். மதிய உணவு இடைவேளைகளில் அருகிலிருக்கும் வீடுகளில் சார்ஜ் செய்து, திரும்பவும் கற்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தேசிய அளவில் தேனாடு பள்ளி

2009-ம் ஆண்டு இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் தொடங்கிய ஓவியப் போட்டியில், மாணவர்களைக் கலந்துகொள்ள வைத்தார். எரிசக்தியின் பயன்பாடுகள் என்ன? அவற்றை எப்படி மிச்சப்படுத்துவது? இயற்கை வளங்களின் முக்கியத்துவம் உள்ளிட்டவைகளைத் தன் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து மாணவர்களைத் தயார் செய்தார். 2009-ல் இருந்து, 12 வருடங்களாகத் தேசிய அளவில் நடந்து வரும் இப்போட்டியில், ஆயிரக்கணக்கான மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகளுடன் போட்டி போட்டு, 7 முறை முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறது தேனாடு பள்ளி.

பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலோடு, செயல்வழிக் கற்றல் முறையைக் கணிணிவழிப்படுத்தி இருக்கிறார். ஆறாம் வகுப்பில் தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடவகைகளுக்கு அது தொடர்பான இடங்களுக்குச் சென்று படம்பிடித்து, காணொளியாக்கி, அதன் பின்னணியில் தமிழில் குரல் விளக்கங்களையும் கொடுத்திருக்கிறார்.

உதாரணமாக, காடு மற்றும் விலங்கு வகைகள் என்னும் தலைப்பில் இருக்கும் காணொளியில் இந்தியா முழுக்க உள்ள காடுகள், அதன் வகைகள், இருப்பிடங்கள், பயன்பாடுகள், மழைப்பொழிவுகள், வளர்ச்சி, காடுகளின் பரப்பளவு உள்ளிட்ட தகவல்களை, நேரடியாகச் சென்று படம்படித்து, தொகுப்பாக்கி, பின்னணி இசை சேர்த்து, உள்ளடக்கத்துக்கான குரல் கொடுத்திருக்கிறார். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதலுக்குப் பின்னரான வெளியீட்டுக்காகக் காணொளித் தொகுப்புகள் காத்து நிற்கின்றன.

காண: http://denadschool.blogspot.in/

சமூக சேவையிலும் சாதனை

கற்பித்தல் தாண்டி, சமூக ரீதியான செயல்பாடுகளிலும், ஆசிரியர் தர்மராஜ் அதிக அக்கறை காட்டி வருகிறார். வருடந்தோறும் எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தில் விழிப்புணர்வுப் பேரணி நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர், பழங்குடி மக்களுக்காக ஹெச்ஐவி எதிர்ப்பு, இரத்த தானம், கண் தானம், உடல்நலம் தொடர்பான முகாம்களையும் நடத்தி வருகிறார்.

அத்தோடு பழங்குடி இன மக்களின் குழந்தைகளுக்காகவே, தனியாக பள்ளியொன்றையும் நிர்வகித்து வருகிறார் ஆசிரியர் தர்மராஜ். அரசின் உதவியோடு 13 வருடங்களாக இயங்கும் இப்பள்ளியில் இருந்து, இதுவரை 824 பழங்குடி மாணவர்கள் கல்வி கற்று அடுத்த நிலைக்கு உயர்ந்திருக்கின்றனர்.

எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் ஆர்வமாய்ப் பேசுகிறார். ” எங்களின் ஆரம்பப் பள்ளி மாணவர்களை வைத்து, ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்பு நீலகிரியின் நிலை என்ன, இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து நீலகிரி எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பேசும் படமாக அது இருக்கும். அதற்காக மாணவர்களுக்கு கேமரா பயிற்சியளித்து வருகிறோம். அரசுப் பள்ளி மாணவர்களால் எடுக்கப்படும் அப்படம், மாறி வரும் நீலகிரி மாவட்டம் குறித்த வேதனையை உரக்கப்பேசும். நிலத்தடி நீர்க் குறைவு, மழைநீர்ப் பற்றாக்குறை, நிலச்சரிவு உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகளை வலிமையாக எடுத்துரைக்கும்.

ஆசிரியப்பணி குறித்து என்றுமே எனக்குப் பெருமிதம்தான். ஒரு முறை, கோவையில் இருந்து கோத்தகிரி திரும்பிக் கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதில், இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருக்க நேரிட்டது. அப்போது எனக்கு அடிபட்ட சம்பவம், தேனாடு மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. கோவிலில் எனக்காகச் சிறப்பு பூஜைகள் செய்து, நான் குணமாக வேண்டுமென்று பலவித வேண்டுதல்களை வைத்திருக்கின்றனர். எதையும் அறியாமலே, குணமானவுடன் பள்ளிக்குச் சென்றேன். அங்கே நான் கண்டது அழுகையோடு கூடிய ஆனந்தக் கண்ணீரை உதிர்த்த அன்புள்ளங்களை!

கல்வியை கற்றுக் கொடுத்ததற்காக, ஓர் ஊரே அழுது புலம்பி, பிரார்த்தனைகள் செய்தது. இதைவிட ஒரு ஆசிரியனுக்கு, வேறு என்ன தேவைப்பட்டுவிடும்?

க.சே. ரமணி பிரபா தேவி – தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

Source…..www.tamil.the hindu.com

Natarajan

A Full Meal That Costs Just Re One. Meet the Man Behind it….

A Full Meal That Costs Just Re One. Meet the Man Behind it

Venkataraman, owner of AMV Homely Mess has been providing the Re one meal for the past eight years.

ERODE:  What can Re one get you in these days of escalating costs?

A full meal no less, at a mess run by a service-minded man for the attenders of poor patients at the Government Headquarters Hospital in Erode.

Venkataraman, owner of AMV Homely Mess has been providing the Re one meal for the past eight years, besides the regular “tiffin” in the morning and night.

He recalls an incident in 2007 which moved him to make this decision. An old woman came to his mess to buy idlis for her ailing husband when there were none available.

He suggested she buy three dosas for Rs. 10. She however, said it was costly for her. Even if she did manage to do buy them, she would have to share it equally with her husband and it would be inadequate for both of them.

Venkatraman said he immediately gave her six dosas for the same price, and since then started offering tiffin and meals at low rates to the attenders of patients at the hospital.

“In 2007, I visited Government Headquarters Hospital and enquired about patients with the incharge nurse there. I  was told by their attenders that almost all patients there were from poor families and could not afford food daily; only tea or bread at noon and night.”

He then decided to offer food at lower rates to such attenders of patients.

He visited the Government Hospital the next day, met nurses and senior doctors and told them he would provide meals at Re one to an attender. From that day on, he and his wife began visiting the hospital daily to offer 10 tokens to attenders.

“Now for the past few months the number has increased from 10 to 70 per day. In the morning I give 10 tokens, for which three dosas and two idlis are given. In the afternoon, 40 attenders are given meals comprising five items and at night 20 attenders are given dosa and chapati, every meal for just Re one.

“We have decided to increase the number from 70 to 100 in the coming years,” he says.

His wife said they charge Rs. 50 per meal from the public, but are planning to continue the Re one meal scheme, despite incurring heavy losses.

Venkatraman employs eight workers at his mess and there is no service on Sundays.
“I am ready to grant the food free of cost, but if I collect at least Re one, the buyer will not waste it. The food is given in packets and no one is allowed to eat inside the mess, but are advised to take it to the hospital, where others can also share the food.”

The couple have two girl children, one of whom is married and the other an engineering student.

Source…www.ndtv.com
Natarajan